மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.8.17

சினிமா: பட்டுக் கோட்டையாரின் சொல் விளையாட்டு!!!


சினிமா: பட்டுக் கோட்டையாரின் சொல் விளையாட்டு!!!

பாடல் மிகவும் எளிமையாக உள்ளதால் விளக்கம் எழுதவில்லை. எதுகை, மோனை, சந்தம், சீர் என்று என்னவொரு சொல் விளையாட்டு பாருங்கள்:

ஆடை கட்டி வந்த நிலவோ
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
இவள் ஆடை கட்டி வந்த நிலவோ
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
குளிர் ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ
நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ

துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை
சொந்தம் உள்ள ராணி இவள் நாக மங்கை(2)
எல்லையற்ற ஆசையில் ஓடி வந்தாள்
தள்ளி விட்டுப் போன பின் தேடி வந்தாள்
கிளை தான் இருந்து கனியே சுமந்து
தனியே கிடந்த கொடி தானே
கண்ணாளன் உனைக் கணாந்தனந்தமே பெற
காவினில் வாழும் கிளி நானே

துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை
சொந்தம் உள்ள ராணி இவள் நாக மங்கை

அந்தி வெய்யில் நிறத்தவளோ
குலுங்கும் அல்லி மலர் இனத்தவளோ
உந்தி உந்தி விழும் நீரலையில்
ஓடி விளையாடி மணம் சிந்தி வரும் தென்றல் தானோ
இன்பம் தந்த மயில் இவள் தானோ - ஆடைக்கட்டி

ஆஹா..ம்ம்..லாலா..
அன்பு மனம் கூடுவதில் துன்பமில்லை
அஞ்சி அஞ்சி ஓடுவதில் லாபமில்லை
வீணை மட்டும் இருந்தால் நாதமில்லை
மீட்டும் விரல் பிரிந்தால் கானமில்லை

இதயம் கனிந்து யெதையும் மறந்து
இருவர் மகிழ்ந்து உறவாட
நன் நேரமிதே மனம் மீறிடுதே
நன் நேரமிதே மனம் மீறிடுதே
மனம் மாளிகை ஓரம் ஆடிடுவோம் - ஆடை கட்டி
------------------------------
படம்: அமுதவல்லி (1959)
திரைப்படத்தின் பெயர் அமுதவல்லி
திரைப்பட நடிகர்கள் T.R.மகாலிங்கம் G. வரலக்ஷ்மி, K.A. தங்கவேலு,
இசைஅமைப்பாளர்  M.S விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடலாக்கம்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பாடியவர்கள்: TR.மகாலிங்கம் & P.சுசீலா
திரைப்படத்தின் இயக்குனர்:A.K. சேகர்
----------------------------------------------
காணொளி

-------------------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
==============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

30.8.17

கேன்சர் நோய்க்கு (புற்று நோய்க்கு) ஒரு சிறந்த மருந்து!


கேன்சர் நோய்க்கு (புற்று நோய்க்கு)  ஒரு சிறந்த மருந்து!

புற்று நோய் (கேன்சர்) ஒரு கொடுமையான நோய் என்பதில் சந்தேகமில்லை. அது வந்த பிறகு அல்லல் படுவதைவிட அதை வராமல் தடுப்பதுதான் புத்திசாலித்தனம்.

யாருக்கு, எப்போது அது வரும் என்று சொல்ல முடியாது!!! அதுதான் கொடுமை!!!

அதற்கு என்ன செய்வது?

புற்று நோய்க்கு (கேன்சர்) ஒரு அற்புதமான மருத்துவத்தை ஒரு அன்பர் கூறுகிறார். காணொளியாக உள்ளது. அனைவரும் அவசியம் பாருங்கள். உங்களுக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------------------


===================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

29.8.17


ஆன்மீகம்: கலக்கிய காணொளிகள்!

உங்களுக்காக 3 காணொளிகளைப் பதிவிட்டுள்ளேன். அனைவரும் அவசியம் பாருங்கள்!

அன்புடன்
வாத்தியார்
====================================
1
 முதலில்  திருவாசகம் பற்றிய திருவாளர் வைகோவின் உரை!!!

---------------------------------------------------------------------------
2.
நாம் பயணிக்க வேண்டிய கப்பல்கள் பற்றி
திருச்சி கல்யாணராமன் கூறியது!

-------------------------------------------------------------------------------------
3
ஒரு சிறுமி ஞானப் பழத்தை எப்படிப் பிழிகின்றார் - பாருங்கள்


==========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.8.17

Short Story: சிறுகதை: நம்பிக்கையும், இறையுணர்வும்!


சிறுகதை:

நம்பிக்கையும், இறையுணர்வும்!

அடியவன் எழுதி, சென்ற மாதம் மாத இதழ் ஒன்றில் வெளியான சிறுகதை ஒன்றை உங்களுக்குப் படிக்கத் தருவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்

அன்புடன்
வாத்தியார்

சாவியில்லாத பூட்டை, இறைவன் தயாரிப்பதில்லை!

உங்கள் பிரச்சினைகளுக்கான சாவியை, இறைவன் உங்களுக்குக் கொடுத்திருப்பார். இல்லை என்றால் ஒவ்வொரு ஜாதகத்திற்கும் உரிய மதிப்பெண்   337 என்று எப்படி வரும்? இங்கே தேர்வு எழுதியவனுக்கும் 337தான். தேர்வில் எதையும் எழுதாமல் வெறும் வெள்ளைத்தாளை மடக்கிக் கொடுத்துவிட்டு  வந்தவனுக்கும் மதிப்பெண் 337தான்!

ஆகவே சாவி உங்களிடம்தான் இருக்கும் .அதைத் தேடி எடுங்கள். பத்தாம் வீடு கெட்டிருந்தால் தொலையட்டும், பண வரவிற்கான வேறு அமைப்பு
நன்றாக இருக்கும். இல்லாவிட்டால் ஜீவனம் எப்படி நடக்கும்?கர்மகாரகன் சனீஸ்வரனும், தனகாரகன் குரு பகவானும் அந்த அவலத்திற்கான மாற்று
ஏற்பாட்டைச் செய்து கொடுத்திருப்பார்கள். அல்லது சுகாதிபதி சுக்கிரன், உங்களுக்கு ஒரு மங்கை நல்லாள் மூலம் ஜீவனத்திற்குக் கொடி
காட்டியிருப்பான். ஆகவே கவலை இன்றி இருங்கள். நடப்பது நடக்கட்டும். அது நல்லதாகவே நடக்கட்டும்

கையில் இருந்த புத்தகத்தில் இருந்த அந்த அசத்தலான வரிகளை சிகப்பி ஆச்சி எத்தனை முறைகள் படித்தாரென்று தெரியவில்லை. அதையே அவர் மனது அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தது. தனது பிரச்சினைக்கான சாவியை அவர் தேடிக்கொண்டிருந்தார்.

என்ன பிரச்சினை?

அவருடைய ஒரே மகள் சாலா என்ற விசாலாட்சி தனக்கு திருமணமே வேண்டாம்தனக்காக மாப்பிள்ளை தேடும் முயற்சியை விட்டுவிடுங்கள் என்று  சொல்லிக் கொண்டிருந்தாள்.

சொந்தக்காரர்கள், சுற்றத்தார்கள் எல்லாம் வேறு மாதிரிப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவள் யாரையோ விரும்புகிறாள் போலும், அதனால்தான் பெற்றோர்கள் பார்க்கும் வரன்களை எல்லாம் தட்டிக் கழிக்கிறாள் என்று பேசத் துவங்கி விட்டார்கள்.

சாலாவிற்கு வயது 27 தொட்டுவிட்டது. திரைப்பட நட்சத்திரம்போல அழகாக இருப்பாள். கடந்த 5 ஆண்டுகளாக பெங்களூரில்தான் வசிக்கிறாள்.
கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்த காலத்தில் படித்துத் தங்கப் பதக்கத்துடன்   பொறியாளராக தேர்வு பெற்றவள்.பன்னாட்டு நிறுவனம்
ஒன்றில் நல்ல வேலை. தற்போது வேலை பார்ப்பது மூன்றாவது நிறுவனம். மூன்று முறைகள் தாவியதில் (By Jumping) சம்பளம் மாதம் லட்ச ரூபாயைத் தாண்டிவிட்டது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருக்கு வந்த புதிதில் பி.ஜி  
(Paying-Guest-Accommodation-For women) ஒன்றில் தங்கி வேலைக்குச் சென்று வந்து கொண்டிருந்தாள், சனி மற்றும் ஞாயிறு என்று வாரம் 
இரண்டு நாள் விடுமுறைக்கும் சென்னைக்குச் சென்று தன் 
பெற்றோர்களுடன் இருந்துவிட்டு திங்கட்கிழமை காலை பெங்களூருக்குத் திரும்பி விடுவாள்.

அவ்வாறு சிரமங்கள் இன்றி இருக்க அவளுடைய தந்தையார் அவள் வேலை பார்த்து வந்த பக்மானே டெக் பார்க் ஏரியாவின் அருகில் இருந்த
பைரசந்திரா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீடு ஒன்றை வாங்கிக் கொடுத்து விட்டார், 3 படுக்கை அறைகள் கொண்ட குடியிருப்பு.
அவளுக்கு சமைத்துப் போட்டு துணையாக இருக்க அவளுடைய தாயாரும் பெங்களூருக்கே வந்துவிட்டார். வந்தவர் சும்மா இருக்காமல் அவளைத்
தினமும் திருமணம் குறித்துப் பேசி நைத்துக் கொண்டிருந்தார்.

அவள் அதைக் காதுகொடுத்துக் கேட்கமாட்டாள். “அம்மா, நான்தான் உன்னிடம் பலமுறை  சொல்லிவிட்டேனே! எனக்குத் திருமணம் வேண்டாம். வேண்டாம்....... வேண்டாம், அதைப்பற்றி இனி என்னிடம் பேசாதே!!”

நானும் அதைபோல சொல்லியிருந்தால், என்ன நடந்திருக்கும்? நீ பிறந்திருப்பாயா? உன் முடிவை மாற்றிக்கொள் ராஜாத்தி! எங்களுக்குப் பிறகு
உனக்கு ஒரு துணை வேண்டாமா?”

"துணையே வினையாகிப் போனால் என்ன செய்வதுகணவன், அவருடைய பெற்றோர்கள் என்று எல்லோரும் என்னைக் கட்டுப் படுத்துவார்கள்.
எனது சுதந்திரத்தை நான் இழக்க வேண்டியதாக இருக்கும். அதில் எனக்கு உடன்பாடில்லை! நான் சுதந்திரப் பறவையாக இருக்க விரும்புகிறேன்.
கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல் ஒன்றின் வரிகளைப் போல நான் சுதந்திரமாக இருக்க விரும்புகிறேன்.”

என்ன எழுதினார் கண்ணதாசன்?”

சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு
தென்றலே உனக்கெது சொந்தவீடு
உலகம் முழுதும் பறந்து பறந்து
ஊர்வலம் வந்து விளையாடு
மரத்தில் படரும் கொடியே
உன்னை வளர்த்தவரா இங்கு படரவிட்டார்
மண்ணில் நடக்கும் நதியே
உன்னை படைத்தவரா இந்த பாதை சொன்னார்
உங்கள் வழியே உங்கள் உலகு
இந்த வழிதான் எந்தன் கனவு

இதற்கு மேல் சிகப்பி ஆச்சி அவளுடன் வாதிடுவதை நிறுத்திக் கொள்வார்

சிகப்பி ஆச்சியின் கணவர் சின்னையாவிற்கு சாலா செல்லப்பிள்ளை. ஆகவே அவர் அவளைக் கடிந்து ஒன்றும் சொல்ல மாட்டார். சிகப்பி   ஆச்சிக்குத்தான் கடுமையான சோதனையாகி விட்டது. பழநி அப்பனைப் பிரார்த்திப்பதைத்  தவிர அவருக்கு வேறு வழியொன்றும் தோன்றவில்லை.

மயில்நட மிடுவோய் மலரடி சரணம்
சரணம் சரணம் சரவண பவ ஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்
சரணம் சரணம் சண்முகா......... சரணம்!”

என்று கந்த சஷ்டிக் கவசத்தைத்தான் அனுதினமும் பாராயணம் செய்து கொண்டிருந்தார்.

கார்த்திகை மைந்தன் கைகொடுத்தாரா?

கைகொடுக்காமல் இருப்பாரா?

என்ன செய்தார்? சாலா எப்படி மனம் மாறினாள்?

வாருங்கள் அதைப் பார்ப்போம்!!

இறைவன் நேரில் காட்சி கொடுத்து யாருக்கும் உதவ மாட்டார். சக மனிதர்கள் மூலமாகத்தான் உதவுவார். சிகப்பி ஆச்சிக்கும் அவருடைய இளைய
சகோதரி சாரதா ஆச்சி மூலமாக அந்த உதவி வந்து சேர்ந்தது.

சாரதா ஆச்சியும் அவரது கணவரும் அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் வசிப்பவர்கள். சாரதா ஆச்சி 18 நாட்கள் விடுப்பில் இந்தியாவிற்கு வந்தவர்,
தன் சகோதரியைப் பார்ப்பதற்காக பெங்களூருக்கு வந்திருந்தார்.

சிகப்பி ஆச்சி தன் மனக்குறையை அவரிடம் கொட்டித் தீர்த்தார். அவரைச் சமாதானப் படுத்திய சாரதா ஆச்சி, சாலாவுடன் நான் பேசுகிறேன் என்று
சொல்லிவிட்டுஅவளைத் தனியே அழைத்துப் பேசத்துவங்கினார்.

நான் பேசி முடிக்கும்வரை பொறுமையாகக் கேள். குறுக்கே பேசாதே
பேசி முடித்த பின் உன் சந்தேகங்களைக் கேள் என்று சொல்லி
விட்டுத்தான் பேசத்துவங்கினார்:

சாலா, உலகில் எதுவுமே தனித்து இயங்காது. ஒன்றை ஒன்று சார்ந்து தான்இயங்கும். பதினெட்டு வயது வரை பிள்ளைகளுக்கு தாய் வேண்டும்.
அறுபது வயதிற்குமேல் தாய்க்கு அவளை அரவணைக்க பிள்ளைகள் வேண்டும். விவசாயத்திலிருந்து விமானப் போக்குவரத்துவரை எல்லா
இயக்கமும் அவற்றின் பின்னணியில் பலரை, பலவற்றைச் சார்ந்துதான் இருக்கும்.

ஒரு பொருளின் மதிப்பு அதன் விலையை வைத்து அல்ல! கொலுசு என்ன விலை என்றாலும் அதைக் காலில்தான் அணிந்து கொள்கிறோம். இரண்டு
ரூபாய்க்குக் கிடைக்கும் குங்குமத்தை நெற்றியில் அணிந்து கொள்கிறோம். அது போல உலகில் உள்ள ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தது. ஒரு
பெண்ணின் முழு மதிப்பு அவள் தாய்மை ஸ்தானத்தை அடைந்த பிறகுதான் அவளுக்குக் கிடைக்கும்.

ஆனான படிப்பு நீ படித்தாலும் அதுக்கது துணை வேண்டும்என்று பெண்களுக்காக நீ போற்றிப் புகழும் கவியரசரே சொல்லியிருக்கிறார்,
 
உலகத்தோடு ஒட்ட ஒழுகல், பல கற்றும்,
கல்லார் அறிவிலாதார்.” என்று வள்ளுவப் பெருந்தகை கூறியுள்ளார். பலவற்றைக் கற்றிருந்தும், உலகத்தோடு ஒன்றி இசைந்து வாழும் ஒழுகுதலைக்   கல்லாதவர் அறிவில்லாதவர் என்பது அதன் பொருளாகும்.

உலகில் உள்ள செயல்கள் அனைத்திற்கும் விதிமுறைகள் உள்ளன. நிறுவனங்களுக்கு விதிமுறைகள் உள்ளன. அவற்றின்படிதான் அவைகள்
செயல்படும். விளையாட்டுக்களுக்கும் விதிமுறைகள் உள்ளன. கால் பந்தாட்டத்தில் உள்ள இரண்டு கோல் போஸ்ட்டுக்களையும் நீக்கி விட்டு
விளையாடுங்கள் என்று சொன்னால் எப்படி விளையாட முடியும்?

வாழ்க்கைக்கு நம்பிக்கைதான் அடிப்படை. உன் அன்னைக்குக் கிடைத்த கணவரைப் போல அல்லது எனக்குக் கிடைத்த கணவரைப் போல உனக்குக்
கிடைப்பார் என்று நம்பிக்கை வைத்து திருமணம் செய்து கொள்!!!!

நாளைக்குக் காலையில் எழுவோம் என்ற நம்பிக்கையில்தான் அனைவரும் இரவில் படுக்கின்றோம். எழுகிறோம். எழுவோம் என்பதற்கு யாராவது
கியாரண்டி தர முடியுமா? தர முடியாது. எல்லாம் இறைவனின் கருணையினால் நடக்கிறது.

நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க - அதை
        நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க!!!”

என்று கவியரசர் அற்புதமாக எழுதினார். ஆகவே நம்பிக்கையும், இறையுணர்வும் இருந்தால் போதும். வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும்  இருக்கும்

என்று சாரதா ஆச்சி அவர்கள் தொடர்ந்து பேசியவுடன், சாலாவின் மனதில் ஒரு தெளிர்ச்சி ஏற்பட்டது!!!

ஏதாவது விளக்கம் வேண்டும் என்றால் கேள்!”

ஒன்றும் வேண்டாம் சித்தி, நீங்கள் இருவரும் பார்த்து எனக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையை ஏற்பாடு செய்யுங்கள்என்று தழுதழத்த குரலில் சாலா
சொன்னாள்

அப்புறம்?

அப்புறம் என்ன? அடுத்து வந்த ஆவணி மாதத்தின் முதல் முகூர்த்தத்தில் சாலாவின் திருமணம் சிறப்பாக நடந்தது!
==================================================== 
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.8.17

Astrology: ஜோதிடம்: ஆர செளரி யோகம்!


Astrology: ஜோதிடம்: ஆர செளரி யோகம்!

யோகங்களைப் பற்றிய பாடம்!

யோகத்தைத் தெரிந்து கொள்ளும் முன் அதன் பெயர் விளக்கத்தைத் தெரிந்துகொள்வோம். ஆர என்னும் வட
மொழிச் சொல்லிற்கு நேரடி விளக்கம்  இல்லை.
ஆரண்யம் (காடு) என்பதன் சுருக்கம் என்கிறது ஒரு நூல்.

செளரி என்பதற்கு சனி என்று பொருளாம்.

சரி எப்படி எடுத்துக்கொள்வது?

எதெது எங்கே இருக்க வேண்டுமோ, அங்கே இருப்பது நல்லது. நம்மைக் கொண்டுபோய்க் காட்டில் விட்டால் என்ன ஆகும்? கிறுக்குப் பிடித்துவிடாதா?

அதுபோல காட்டில் இருக்க வேண்டிய ஒரு சிறுத்தையை
வீட்டில் கொண்டு வந்து விட்டால் என்ன ஆகும்? சும்மா விடாமல்
ஒரு கரடியுடன் சேர்த்துவிட்டால் என்ன ஆகும்?

அது போன்ற நிலைமைதான் ஆகும்போல உள்ளது, இந்த யோகத்தால்.
----------------------------------------------------------------
சனி மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு கிரகங்களின்
சேர்க்கையால் அல்லது கூட்டணியால் எற்படுவதுதான்
இந்த ஆர செளரி யோகம்!

பலன்: சொல்லும்படியாக இல்லை. ஜாதகனுக்குப் பலவிதமான கேடுகள் ஏற்படும்.

Planetary combination between Saturn and Mars. It produces serious afflictions.
-----------------------------------------------------------------
என்னவிதமான கேடுகள்?

சனி இரண்டு வீடுகளுக்கு உரியவன், செவ்வாயும் இரண்டு வீடுகளுக்கு உரியவன். இருவரும் மூன்று காரகத்துவங்களுக்கு அதிபதி (authorities for different portfolios). அவை அத்தனையும்
கெடும்.

என்னென்ன கெடும்? இது மேல் நிலைப் பாடம். ஆகவே அதை உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.

எல்லோருக்குமா?

இல்லை!

வழக்கம்போல, அவர்கள் மீது விழும் சுபக்கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை, அதோடு அவர்களின் சுயவர்க்கப்பரல்கள், இருக்கும் இடத்தின் மொத்த வர்க்கப் பரல்கள் ஆகியவற்றை வைத்து ஜாதகத்திற்கு ஜாதகம் அது வேறுபடும்.

உதாரணம்?

இது off the record உதாரணம். படித்துவிட்டு மறந்து விடுங்கள்.

ஐந்து அல்லது ஆறு லார்ஜ் விஸ்கியைக் கல்ப்’பாக அடிப்பதற்கும், தண்ணீர் அல்லது சோடா கலந்து அடிப்பதற்கும் உள்ள வித்தியாசம். அல்லது விஸ்கியை ரம் அல்லது பிராந்தியுடன் கலந்து அடிப்பதைப் போன்றது. விஸ்கி எப்படியும் கேடு செய்யும். கலக்காமல் அடித்தால் அதிகக்கேட்டைச் செய்யாதா?

உங்களுக்கு உங்கள் மொழியில் சொன்னால் புரியும் என்பதனால் இதை எழுதியுள்ளேன். மற்றபடி எனக்கு அந்தப் பழக்கம் கிடையாது என்பதை  வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்:-))))

இந்த அமைப்பு உள்ளவர்கள் கவலைப்பட வேண்டாம். நஷ்ட ஈடு வழங்கப்பெற்றிருக்கும். ஏனென்றால் ஆண்டி முதல் அரசன் வரை அல்லது ஆட்சியாளர்கள்வரை அனைவருக்கும் 337தான் மதிப்பெண். அதை நினைவில் வையுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.8.17

Humour:நகைச்சுவை: இந்த ஜென்மத்தில் உனக்கு ஞானம் வராது என்று ஏன் சொன்னார்?


Humour:நகைச்சுவை: இந்த ஜென்மத்தில் உனக்கு ஞானம் வராது என்று ஏன் சொன்னார்?

நகைச்சுவையை நகைச்சுவையாக மட்டும் பாருங்கள். வேறு விவகாரம் வேண்டாம்!
---------------------------------------------
1
*மன்னன் :* மந்திரியாரே ஏன் அவனை அடிக்கிறீங்க?
*மந்திரி :* மன்னா, நம்ம ராணுவ ரகசியத்தை வெளியில சொல்லிட்டான்.
*மன்னன் :* நம்மகிட்டதான் ராணுவமே கிடையாதே...!
*மந்திரி :* அதைத்தான் சொல்லிட்டான்...!
------------------------------------------------------------------------------
2
குருவே ஞானம் பெற என்ன செய்யணும்?
தினசரி கொஞ்சம் மந்திரம் சொல்லி கொஞ்சம் திராட்சைப்பழம் சாப்பிடு...
எத்தனை திராட்சைப்பழம் சாப்பிடணும்?
எத்தனை மந்திரம் சொல்லணும்னு கேட்டிருந்தால் உனக்கு ஞானம் வந்திருக்கும்.. உனக்கு இந்த ஜென்மத்தில் ஞானம் வராது...---
(ராமகிருஷ்ண பரமஹாம்சர்)
-------------------------------------------------------------------------
3
Hierarchy of courts, in ascending order ...

1. Sessions Court
2. District Court
3. Appellate Court
4. High Court
5. Supreme Court 
6. International Court of Justice 
7. God
8. Mother-in-law
9. Wife
----------------------------------------------------------------------
4

5
6

இந்த 6ல் எது மிக நன்றாக உள்ளது?
-------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!