மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

7.4.17

Astrology ஜோதிடம்: அலசல் பாடம்: யாரைப் போட்டுத்தள்ள வேண்டும்?


Astrology ஜோதிடம்: அலசல் பாடம்: யாரைப் போட்டுத்தள்ள வேண்டும்?

அஷ்டகவர்க்கப் பாடம்

ஆங்கில ஏகாதிபத்தியம் இந்தியாவை ஆட்சி செய்துகொண்டிருந்தபோது, இங்கே சுதந்திரப் போராட்ட எழுச்சி மக்களிடையே அதிகமாகி, நாடே
கொந்தளிப்பில் இருந்த சமயம். (ஆண்டு ஆகஸ்ட் 1942)

காந்திஜி அவர்களின் வெள்ளையனே வெளியேறு' போராட்டம் உச்சகட்டத்தை எட்டியது. அத்துடன் அடுத்துவந்த ஐந்தாவது ஆண்டில் நமக்கு
சுதந்திரமும் கிடைத்தது.

The Quit India Movement (Bharat Chhodo Andolan or the August Movement (August Kranti)) was a civil disobedience movement launched in India in August 1942 in response to Mohandas Gandhi's call for immediate independence. Gandhi hoped to bring the British government to the negotiating table. Almost the entire Indian National Congress leadership, and not just at the national level, was put into confinement less than twenty-four hours after Gandhi's speech, and the greater number of the Congress leaders were to spend the rest of World War II in jail.

அதுசமயம் (போராட்டம் உச்ச கட்டத்தில் இருந்த சமயம்), அப்போதைய பிரிட்டீஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் அவர்களிடம், அவருடைய நண்பர்
சொன்னாராம்:

“காந்தி ஒரு பக்கிரியைப் போல காணப்படுகிறார். நமது அரசுக்குத் தீராத தலைவலியாக இருக்கிறார். என்ன தயக்கம்? ஆசாமியை என்கவுன்ட்டரில்
போட்டுத் தள்ள வேண்டியதுதானே?”

அதற்கு சர்ச்சில் அசத்தலாக இப்படிப் பதில் சொன்னார். “அந்த மனிதனின் கையில் ஆயுதம் எதுவும் இல்லை.அஹிம்சை என்னும் கொள்கை மட்டுமே இருக்கிறது. ஆயுதம் ஏந்தாதவனை எப்படி ஆயுதத்தால் போட்டுத் தள்ளுவது? அதனால்தான் முழித்துக் கொண்டிருக்கிறோம்! ”

என்னவொரு தர்மமான பதில் பாருங்கள்.

அதைவிட, தர்மமான முறையில் ஒரு மிகப் பெரிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடிய நமது தேசத்தந்தை, காந்திஜி அவர்களின்
துணைச்சலையும், மனவுறுதியையும் எண்ணிப்பாருங்கள்.

அதற்கு என்ன காரணம்? அவருடைய ஜாதகம் என்ன சொல்கிறது?

அஷ்டகவர்க்கத்தை வைத்து அதை இன்று அலசுவோம்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அஷ்டகவர்க்க அட்டவணை!

1. அவருடைய ஜாதகத்தில், ஆறாம் வீட்டில் 36 பரல்களும், அதிலிருந்து ஆறாம் வீட்டில் 37 பரல்களும் இருப்பதைப் பாருங்கள். ஆறாம் வீடு
எதிரிகளுக்கான இடம். அதில் இருந்த மிக அதிகப்படியான பரல்கள் எதிரிகளுடன் போராடும் சக்தியை அவருக்குக் கொடுத்தது. பதினொன்றாம்
இடம் வெற்றிக்கான இடம். அதில் இருந்த அதிகப்படியான பரல்கள், அவருடைய போராட்டத்தில், அவருக்கு வெற்றியைத் தேடித்தந்தன!

2. அவருடைய ஜாதகத்தில் கர்மகாரகன் சனிக்கு அவனுடைய சுயவர்க்கத்தில் பரல்கள் எதுவும் இல்லை. சைபர். ஜீரோ. கோழி முட்டை. அதனால்தான் லண்டனில் தான் படித்த சட்டப் படிப்பை வைத்து வழக்குரைஞர் தொழிலை அவர் செய்யவில்லை. வேறு எந்தத் தொழிலையும் செய்யவில்லை. தேச நலனுக்காகப் போராடியதைத் தவிர.

3. அதே காரணத்தால்தான், தேசம் சுதந்திரம் அடைந்த பிறகும், அவர்
எந்தப் பதவியிலும் அமரவில்லை. அவருக்கு அந்த மன
நிலைமையையும் சனி கொடுக்கவில்லை.

4. தந்தைக்குக் காரகனான சூரியன் 12ஆம் வீட்டில் அமர்ந்ததால், அவர் தன்னுடைய தந்தையைச் சிறு வயதிலேயே இழக்க நேரிட்டாலும்,
அதே சூரியன் தன்னுடைய சுயவர்க்கத்தில் 6 பரல்களுடன் இருந்ததால்
நல்ல ஆரோக்கியமான உடல் அமைப்பைக் கொடுத்தான்.

5. சூரியன் 12ல் இருந்தால் அரசுக்கு எதிரான வேலைகளைச் செய்ய
நேரிடும். சிறை செல்ல நேரிடும். பரல்கள் இல்லாமல் இருந்தால்
கிரிமினல் வேலையைச் செய்து விட்டுச் சிறை செல்ல நேரிடும்.
ஆனால் சுயவர்க்கத்தில் 6 பரல்களுடன் இருந்த சூரியன் ஒரு
உன்னதமான காரியத்திற்காக அவரை அடிக்கடி சிறைக்குச் செல்ல வைத்தான்.

6. இரண்டாம் வீட்டில் 22 பரல்கள் மட்டுமே. 337 வகுத்தல் 12 வீடுகள்
என்னும் போது வரும் சராசரி மதிப்பான 28 பரல்களை விட 6 பரல்கள்
குறைவு. ஜாதகனுக்கு செல்வம் இருக்காது. வந்தாலும் தங்காது.
ஓட்டை அண்டா. 11ஆம் வீட்டில் இருந்த 37 பரல்கள் அவருக்குப்
பணத்தை அள்ளும் வாய்ப்பைக் கொடுத்தன. பணம் வரும் பைப்
நன்றாக இருந்தது. ஆனால் கிஞ்சித்தும் காந்திஜிக்குப் பணத்தின்
மேல் ஆசையில்லாமல் போய்விட்டது. தனகாரகன் குரு தனது சுயவர்க்கத்தில் 3 பரல்களுடன் பலவீனமாக இருப்பதைக் கவனியுங்கள்.
12ல் இருந்த சூரியனால் அவர் துறவியைப்போல வாழ்ந்தார்.

7. சுயவர்க்கத்தில் 6 பரல்களுடன் இருந்த சந்திரன், அதுவும்
பதினொன்றாம் வீட்டில் இருந்த சந்திரன், அவருக்கு மன உறுதியையும்,
 நல்ல சிந்தனைகளையும், நல்ல கொள்கைகளையும் கொடுத்தது.
அத்துடன் லட்சக்கணக்கான மக்களின் ஆதரவையும், செல்வாக்கையும் பெற்றுத்தந்தது. அதன் சிறப்பால்தான் அவர் தேசியத்தலைவரானர்.
மக்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தார்.

8. தனது சுயவர்க்கத்தில் 5 பரல்களுடன் இருக்கும் புதன், அதுவும் லக்கினத்திலேயே இருக்கும் புதன் அவருக்கு, நல்ல
பேச்சுத்திறமையையும், ஏராளமான நண்பர்களையும் பெற்றுத்தந்தது. அத்துடன் அனைவரையும் புரிந்துகொள்ளும் தன்மையையும் தந்தது.

9. துலாலக்கினத்திற்கு 2 மற்றும் 7ஆம் இடங்களுக்கு அதிபதியான
செவ்வாய், தனது சுயவர்க்கத்தில் 4 பரல்களுடன் சராசரி நிலைமையில்
இருந்ததால்,  அவருடைய குடும்ப வாழ்வில் அவருக்கு நல்லதும்
கெட்டதும் சம அளவிலேயே கலந்து கிடைத்தன!

10. லக்கினாதிபதி சுக்கிரன் தனது சுயவர்க்கத்தில் 3 பரல்களுடன் இருந்ததாலும், அவருடைய லக்கினத்திற்குப் பாபகர்த்தாரி யோகம் இருந்ததாலும்

(லக்கினத்தின் இரு புறமும் தீய கிரகங்கள்) அவருடைய வாழ்க்கை அவருக்குப் பயன்படவில்லை. தேசமக்களுக்கு, அதுவும் ஒரு உயரிய செயலுக்குப் பயன்பட்டது. சந்திர ராசியின் இருபக்கமும் தீய கிரகங்கள்.
சந்திர ராசியும் பாபகர்த்தாரி யோகத்தில். அதன் காரணமாகத் தனக்குக் கிடைத்த பெரும் செல்வாக்கை வைத்து அவர் செல்வம் சேர்க்கவில்லை. செல்வம் சேரவில்லை. அல்லது காசு பண்ணும் மனப்பான்மை அவருக்கு இல்லை. எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளுங்கள்.
---------------------------------------------------------
அஷ்டகவர்க்கத்தை வைத்து ஒரு ஜாதகத்தை எப்படி அலசுவது என்பதை உங்களுக்குச் சொல்லித்தரும் முகமாக இன்று இந்தப் பதிவை வலை
ஏற்றியுள்ளேன்.

இது பயிற்சி வகுப்பு மாணவர்களுக்காக எழுதப்பெற்ற பாடம். பயிற்சி
வகுப்புப் பாடங்கள், வகுப்பறையில், சில காரணங்களுக்காக இடம் பெறாது.
பல பொது மனிதர்களின் ஜாதகங்களை, அதுவும் அரசியல்வாதிகளின் ஜாதகங்களையும் சேர்த்து வைத்து அவைகள் எழுதப் படுவதால், இங்கே
பதிவிடும்போது பல எதிர்வினைகளச் சந்திக்க நேரிடும். அவற்றைத் தவிர்க்கும் பொருட்டு பதிவில் அவைகள் வராது. பிரச்சினைகள் வேண்டாம்
என்பதுதான் அதன் நோக்கம். அதையும் மனதில் கொள்க!

அஷ்டகவர்க்கத்தை வைத்துப் பலாபலன்களை அறியும் பாடங்களைத் தொடர்ந்து அஷ்டகவர்க்க வகுப்பில் எழுதியுள்ளேன். அவைகள் பிறகு
புத்தகமாக வரவுள்ளது, வரும்போது அனைவரும் படிக்கலாம். பயனடையலாம்.

அன்புடன்
வாத்தியார்
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8 comments:

  1. Sir, thanks for detailed Lesson.

    Few things to be noted..
    During 1947, Mr.Netaji's INA was bigger threat to British more than Gandhi. Because Mr.Netaji planned to form Big Army from several parts of World to war against British. At the same time, England was surrounded by Hitler's Army to capture. British realised that, if They fight against Mr.Netaji Army, sure they would lost their own country to Germany. So they Make sure that it should not like that British scared of Mr.Netaji and hence they made drama that they have given Independence for Gandhi's Protest and not to Mr.Netaji's approach.
    Real history can be hidden. Mr.Netaji and Mr.Bagat Singh are Real Heroes..
    Thanks
    Sathishkumar GS

    ReplyDelete
  2. Ayya vanakkam. SAV Table and point no one in the article does not match as 6th house does not have 36 paral . otherwise nice clear explanation about astavargha. thank you so much sir'with high regards, kittuswamy

    ReplyDelete
  3. 2 ம் வீடு -24
    6 ம் வீடு -33
    11 ம் வீடு -39

    ReplyDelete

  4. Lagnam: Thulam, Second , sixth& eleventh house points (paral) miss matching in the given data.
    http://classroom2007.blogspot.in/2012/08/astrology_28.html

    ReplyDelete
  5. ஐயா வணக்கம்
    அலசல் அருமை
    கண்ணன்

    ReplyDelete
  6. sir can u please teach me how to find the each graha s suyavargam points using that table... i am a lover of ashtavarga... but i dont no how to learn it

    ReplyDelete
  7. if possible please give us many more examples sir

    ReplyDelete
  8. sir, how to join in your class. I want to lwarn astrology.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com