மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

29.4.16

சட்டமன்றத் தொகுதிகளும் சுவாரசியமான பெயர்களும்!


சட்டமன்றத் தொகுதிகளும் சுவாரசியமான பெயர்களும்!

குடிகள் 8
ஆலங்குடி
மன்னார்குடி
பரமக்குடி
காரைக்குடி
தூத்துக்குடி
லால்குடி
திட்டக்குடி
குடியாத்தம்

புரங்கள் 8
காஞ்சிபுரம்
விழுப்புரம்
சங்கராபுரம்
ராசிபுரம்
தாராபுரம்
கிருஷ்ணராயபுரம்
ராமநாதபுரம்
பத்பநாமபுரம்

கோட்டைகள் 6
நிலக்கோட்டை
அருப்புகோட்டை
புதுக்கோட்டை
பாளையங்கோட்டை
பட்டுக்கோட்டை
கந்தர்வக்கோட்டை

மங்கலம் 5
கண்டமங்கலம்
தாரமங்கலம்
சேந்தமங்கலம்
சத்யமங்கலம்
திருமங்கலம்

பேட்டை 5
சைதாப்பேட்டை
ராணிப்பேட்டை
உளுந்தூர்ப்பேட்டை
உடுமலைப்பேட்டை
ஜோலார்ப்பேட்டை

பாளையம் 5
மேட்டுபாளையம்
குமாரபாளையம்
ராஜபாளையம்
கோபிசெட்டிபாளையம்
கவுண்டம்பாளையம்

நகர்கள் 5
அண்ணாநகர்
விருதுநகர்
திருவிகநகர்
தியாகராயநகர்
ராதாகிருஷணன்நகர்

நல்லூர் 5
சிங்காநல்லூர்
சோளிங்கநல்லூர்
மணச்சநல்லூர்
கடையநல்லூர்
வாசுதேவநல்லூர்

கோவில்கள் 4
வெள்ளக்கோவில்
சங்கரன்கோவில்
நாகர்கோவில்
காட்டுமன்னார்கோவில்

குளங்கள் 4
பெரியகுளம்
ஆலங்குளம்
மடத்துக்குளம்
விளாத்திகுளம்

பாக்கம் 4
சேப்பாக்கம்
அச்சரப்பாக்கம்
கலசப்பாக்கம்
விருகம்பாக்கம்

4 அறுபடைவீடு
பழநி
திருத்தணி
திருபரங்குன்றம்
திருசெந்தூர்

பாடிகள் 4
காட்பாடி
குறிஞ்சிப்பாடி
எடப்பாடி
வாணியம்பாடி

பட்டிகள் 4
ஆண்டிப்பட்டி
கோவில்பட்டி
உசிலம்பட்டி
பாப்பிரெட்டிப்பட்டி

துறைகள் 4
பெருந்துறை
மயிலாடுதுறை
துறைமுகம்
துறையூர்

கிரிகள் 3
புவனகிரி
சங்ககிரி
கிருஷ்ணகிரி

குறிச்சிகள் 3
மொடக்குறிச்சி
அரவக்குறிச்சி
கள்ளக்குறிச்சி

கோடுகள் 3
திருச்செங்கோடு
விளவங்கோடு
பாலக்கோடு

வேலூர் 3
வேலூர்
பரமத்திவேலூர்
கீழ்வேலூர்

மலைகள் 2
விராலிமலை
அண்ணாமலை

கல் 2
நாமக்கல்
திண்டுக்கல்

பாறைகள் 2
வால்பாறை
மணப்பாறை

காடுகள் 2
ஆற்காடு
ஏற்காடு

வாக்கம் 2
புரசைவாக்கம்
வில்லிவாக்கம்

கோணம் 2
கும்பகோணம்
அரக்கோணம்

பூண்டிகள் 2
திருத்துறைப்பூண்டி
கும்மிடிபூண்டி

பரங்கள் 2
சிதம்பரம்
தாம்பரம்

வரம் 2
மாதவரம்
பல்லாவரம்

வேலிகள் 2
திருநெல்வேலி
நெய்வேலி

காசி 2
தென்காசி
சிவகாசி

ஆறுகள் 2
செய்யாறு
திருவையாறு

ஏரிகள் 2
பொன்னேரி
நாங்குநேரி

குப்பம் 2
கீழ்வைத்தான்குப்பம்
நெல்லிக்குப்பம்

பவானி 2
பவானி
பவானிசாகர்

மதுரை 2
மானாமதுரை
மதுரை

ஒரே பட்டினம்
நாகபட்டினம்

ஒரே சமுத்திரம்
அம்பாசமுத்திரம்

நல்லநிலம்
நன்னிலம்

ஒரே கன்னி
கன்னியாகுமரி

ஒரே மண்டலம்
உதக மண்டலம்

ஒரே நாடு
ஒரத்தநாடு

ஒரே புரி
தர்மபுரி

ஒரே சத்திரம்
ஓட்டன் சத்திரம்

ஊர்கள் பல
திருபோரூர்
கூடலூர்
வானூர்
அரியலூர்
உளுந்தூர்
மேலூர்
தஞ்சாவூர்
சாத்தூர்
முதுகுளத்தூர்
திருவாரூர்
ஆலந்தூர்
செய்யூர்
உள்பட
40க்கு மேல்

இந்தப் பட்டியலில் 234 தொகுதிகளின் பெயர்களும் இல்லை என்பது குறிப்பிட வேண்டிய செய்தி. யோசித்து நீங்கள் எழுதலாம்!
==========================================
Name No District
Alandur 28 Kancheepuram
Alangudi 182 Pudukotttai
Alangulam 223 Tirunelveli
Ambasamudram 225 Tirunelveli
Ambattur 8 Tiruvallur
Ambur 48 Vellore
Anaikattu 44 Vellore
Andipatti 198 Theni
Anna Nagar 21 Chennai
Anthiyur 105 Erode
Arakkonam 38 Vellore
Arani 67 Tiruvannamalai
Aranthangi 183 Pudukottai
Aravakurichi 134 Karur
Arcot 42 Vellore
Ariyalur 149 Ariyalur
Aruppukottai 207 Virudhunagar
Athoor 129 Dindigul
Attur 82 Salem
Avadi 6 Tiruvallur
Avanishi (SC) 112 Tiruppur
Bargur 52 Krishnagiri
Bhavani 104 Erode
Bhavanisagar (SC) 107 Erode
Bhuvanagiri 157 Cuddalore
Bodinayakanur 200 Theni
Chengalpattu 32 Kancheepuram
Chengam (SC) 62 Tiruvannamalai
Chepauk-Thiruvallikeni 19 Chennai
Cheyyar 68 Tiruvannamalai
Cheyyar (SC) 34 Kancheepuram
Chidambaram 158 Cuddalore
Coimbatore (North) 118 Coimbatore
Coimbatore (South) 120 Coimbatore
Colachel 231 Kanniyakumari
Coonoor 110 The Nilgiris
Cuddalore 155 Cuddalore
Cumbum 201 Theni
Dharapuram (SC) 101 Tiruppur
Dharmapuri 59 Dharmapuri
Dindigul 132 Dindigul
Dr. Radhakrishnan Nagar 11 Chennai
Edappadi 86 Salem
Egmore (SC) 16 Chennai
Erode (East) 98 Erode
Erode (West) 99 Erode
Gandarvakottai (SC) 178 Pudukottai
Gangavalli (AC) 81 Salem District
Gingee 70 Villupuram
Gobichettipalayam 106 Erode
Gudalur (SC) 109 The Nilgiris
Gudiyatham (SC) 46 Vellore
Gummidipoondi 1 Tiruvallur
Harbour 18 Chennai
Harur 61 Dharmapuri
Hosur 55 Krishnagiri
Jayankondam 150 Ariyalur
Jolarpet 49 Vellore
Kadayanallur 221 Tirunelveli
Kalasapakkam 65 Tiruvannamalai
Kallakurichi (SC) 80 Villupuram
Kancheepuram 37 Kancheepuram
Kangeyam 102 Tiruppur
Kanniyakumari 229 Kanniyakumari
Karaikudi 184 Sivaganga
Karur 135 Karur
Katpadi 40 Vellore
Kattumanarkoil (SC) 159 Cuddalore
Kavundampalayam 117 Coimbatore
Killiyoor 234 Kanniyakumari
Kilpennathur 64 Tiruvannamalai
Kilvaithinankuppam (SC) 45 Vellore
Kilvelur (SC) 164 Nagapattinam
Kinathukadavu 122 Coimbatore
Kolathur 13 Chennai
Kovilpatti 218 Thoothukudi
Krishnagiri 53 Krishnagiri
Krishnarayapuram(SC) 136 Karur
Kulithalai 137 Karur
Kumarapalayam 97 Namakkal
Kumbakonam 171 Thanjavur
Kunnam 148 Perambalur
Kurinjipadi 156 Cuddalore
Lalgudi 143 Tiruchirappalli
Madathukulam 126 Tiruppur
Madhavaram 9 Tiruvallur
Madurai (Central) 193 Madurai
Madurai (East) 189 Madurai
Madurai (North) 191 Madurai
Madurai (South) 192 Madurai
Madurai (West) 194 Madurai
Madurantakam (SC) 35 Kancheepuram
Maduravoyal 7 Tiruvallur
Mailam 71 Villupuram
Manachanallur 144 Tiruchirappalli
Manamadurai (SC) 187 Sivaganga
Manapparai 138 Tiruchirappalli
Mannargudi 167 Tiruvarur
Mayiladuthurai 161 Nagapattinam
Melur 188 Madurai
Mettupalayam 111 Coimbatore
Mettur 85 Salem
Modakkurichi 100 Erode
Mudukulathur 212 Ramanathapuram
Musiri 145 Tiruchirappalli
Mylapore 25 Chennai
Nagapattinam 163 Nagapattinam
Nagercoil 230 Kanniyakumari
Namakkal 94 Namakkal
Nanguneri 227 Tirunelveli
Nannilam 169 Tiruvarur
Natham 131 Dindigul
Neyveli 153 Cuddalore
Nilakottai (SC) 130 Dindigul
Oddanchatram 128 Dindigul
Omalur 84 Salem
Orathanadu 175 Thanjavur
Ottapidaram (SC) 217 Thoothukudi
Padmanabhapuram 232 Kanniyakumari
Palacode 57 Dharmapuri
Palani 127 Dindigul
Palayamkottai 226 Tirunelveli
Palladam 115 Tiruppur
Pallavaram 30 Kancheepuram
Panruti 154 Cuddalore
Papanasam 172 Thanjavur
Pappireddipatti 60 Dharmapuri
Paramakudi (SC) 209 Ramanathapuram
Paramathi Velur 95 Namakkal
Pattukottai 176 Thajnavur
Pennagaram 58 Dharmapuri
Perambalur (SC) 147 Perambalur
Perambur 12 Chennai
Peravurani 177 Thanjavur
Periyakulam (SC) 199 Theni
Perunduraii 103 Erode
Pollachi 123 Coimbatore
Polur 66 Tiruvannamalai
Ponneri (SC) 2 Tiruvallur
Poompuhar 162 Nagapattinam
Poonamalee (SC) 5 Tiruvallur
Pudukottai 180 Pudukottai
Radhapuram 228 Tirunelveli
Rajayapalam 202 Virudhunagar
Ramanathapuram 211 Ramanathapuram
Ranipet 41 Vellore
Rasipuram (SC) 92 Namakkal
Rishivanthiyam 78 Villupuram
Royapuram 17 Chennai
Saidapet 23 Chennai
Salem (North) 89 Salem
Salem (South) 90 Salem
Salem (West) 88 Salem
Sankagiri 87 Salem
Sankarankoil (SC) 219 Tirunelveli
Sankarapuram 79 Villupuram
Sattur 204 Virudhunagar
Senthamangalam (ST) 93 Namakkal
Sholavandan (SC) 190 Madurai
Sholingur 39 Vellore
Shozhinganallur 27 Kancheepuram
Singanallur 121 Coimbatore
Sirkali (SC) 160 Nagapatinam
Sivaganga 186 Sivaganga
Sivakasi 205 Virudhunagar
Sriperumbudur (SC) 29 Kancheepuram
Srirangam 139 Tiruchirappalli
Srivaikuntam 216 Tirunelveli
Srivilliputhur (SC) 203 Virudhunagar
Sulur 116 Coimbatore
Tambaram 31 Kancheepuram
Tenkasi 222 Tirunelveli
Thalli 56 Krishnagiri
Thanjavur 174 Thanjavur
Thiru Vi.Ka.Nagar (SC) 15 Chennai
Thiruchuli 208 Virudhunagar
Thirumangalam 196 Madurai
Thirumayam 181 Pudukottai
Thiruparankundram 195 Madurai
Thiruporur 33 Kancheepuram
Thiruppathur 185 Sivaganga
Thiruthuraipoondi (SC) 166 Tiruvarur
Thiruvaiyaru 173 Thanjavur
Thiruvannamalai 63 Thiruvannamalai
Thiruverumbur 142 Tiruchirappalli
Thiruvidaimarudur (SC) 170 Thanjavur
Thiruvottiyur 10 Tiruvallur
Thiyagaraya Nagar 24 Chennai
Thondamuthur 119 Coimbatore
Thoothukudi 214 Thoothukudi
Thousand Light 20 Chennai
Thuraiyur (SC) 146 Tiruchirappalli
Tindivanam (SC) 72 Villupuram
Tiruchendur 215 Thoothukudi
Tiruchengodu 96 Namakkal
Tiruchirappalli (East) 141 Tiruchirappalli
Tiruchirappalli (West) 140 Tiruchirappalli
Tirukoilur 76 Villupuram
Tirunelveli 224 Tirunelveli
Tirupattur 50 Vellore
Tiruppur (North) 113 Tiruppur
Tiruppur (South) 114 Tiruppur
Tiruttani 3 Tiruvallur
Tiruvadanai 210 Ramanathpuram
Tiruvallur 4 Tiruvallur
Tiruvarur 168 Tiruvarur
Tittagudi (SC) 151 Cuddalore
Udhagamandalam 108 The Nilgiris
Udumalaipetai 125 Tiruppur
Ulundurpet 77 Villupuram
Usilampatti 197 Madurai
Uthangarai (SC) 51 Krishnagiri
Uthiramerur 36 Kancheepuram
Valparai (SC) 124 Coimbatore
Vandavasi (SC) 69 Tiruvannamalai
Vaniyambadi 47 Vellore
Vanur (SC) 73 Villupuram
Vasudevanallur (SC) 220 Tirunelveli
Vedaranyam 165 Nagapattinam
Vedasandur 133 Dindigul
Veerapandi 91 Salem
Velachery 26 Chennai
Vellore 43 Vellore
Veppanahalli 54 Krishnagiri
Vikkiravandi 75 Villupuram
Vilathikulam 213 Tuticorin
Vilavancode 233 Kanniyakumari
Villivakkam 14 Chennai
Villupuram 74 Villupuram
Viralimalai 179 Pudukottai
Virudhunagar 206 Virudhunagar
Virugampakkam 22 Chennai
Vridhachalam 152 Cuddalore
Yercaud (ST) 83 Salem
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.4.16

கவிதை: பிறப்பும், இறப்பும் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை!


கவிதை: பிறப்பும், இறப்பும் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை!

கவியரசரின் அசத்தலான பாடல்: அதில்தான் எத்தனை அர்த்தங்கள்!

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி

காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் வெறும்
கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்
கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம் (ஏழு)

காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி ஆ.....
காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி - அது
கையில் கிடைத்த பினனும் துடிக்குது ஆவி
கையில் கிடைத்த பினனும் துடிக்குது ஆவி

ஏனென்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும்
ஏனென்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும் - மனிதன்
இன்ப துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்
இன்ப துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும் (ஏழு)

எனக்காக நீ அழலாம் இயற்கையில் நடக்கும் ஆ.........
எனக்காக நீ அழலாம் இயற்கையில் நடக்கும் - நீ
எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை
நமக்காக நம் கையால் செய்வது நன்று
நமக்காக நம் கையால் செய்வது நன்று

ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை ஆ.........
ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை - என்றும்
அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம்
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் - அதில்
பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாபம்

நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க - அதை
நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க
நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க - அதை
நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க

வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க - எந்த
வேதனையும் மாறும் மேகத்தைப் போல
வேதனையும் மாறும் மேகத்தைப் போல

நாளையப் பொழுது என்றும் நமக்கென வாழ்க - அதை நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க” என்று எழுதினார் பார்த்தீர்களா? அவைதான் இந்தப் பாடலின் முத்தாய்ப்பான வரிகள்!

எனது உடல் நலம் தேறி வருகிறது. தற்சமயம் பரவாயில்லை!  உங்கள் அனைவரின் அன்பிற்கும் நன்றி!

அன்புடன்
வாத்தியார்
===========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.4.16

வாத்தியாரின் விண்ணப்பம்


வாத்தியாரின் விண்ணப்பம்

19-4-2016

வாத்தியாரின் விடுமுறை விண்ணப்பம்.

வாத்தியாரின் உடல்நிலை காரணமாக 2 நாட்களாக பதிவுகள் எதுவும் ஏற்றப்படவில்லை. இன்னும் 3 நாட்களுக்கும் வாத்தியாருக்கு விடுமுறை வேண்டும். முதுகில் முன்பு சர்ஜரி செய்த இடத்தில் கட்டி ஒன்று வந்து,
வீங்கிப் பெரிதாகி, உடைந்து, படுத்திக் கொண்டு உள்ளது. சிகிச்சை மேற்கொண்டுள்ளேன். மேலும் மருத்துவரின் அறிவுரைப்படி ஓய்வில் இருக்கிறேன். ஆகவே அனைவரும் பொறுத்தருளுங்கள். அடுத்த வாரம் சரியாகிவிடும் என்று நினைக்கிறேன். அதுவரை பொறுத்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
வாத்தியார்
============================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

17.4.16

Astrology: Quiz 109 Answer புதிருக்கான விடை


Astrology: Quiz 109 Answer புதிருக்கான விடை

17-4-2016

முந்தைய பதிவில் ஒரு ஜாதகத்தைக் கொடுத்து உங்களை அலசச் சொல்லியிருந்தேன்!.

ஜாதகருக்கு அவருடைய 28வது வயதில் கடுமையான பிரச்சினை உண்டானது. 1. என்ன பிரச்சினை? 2. அது சரியானதா அல்லது இல்லையா? என்று இரண்டு கேள்விகள் கேட்டிருந்தேன்.

ஒரு க்ளூவையும்  கொடுத்திருந்தேன். வயதுதான் அந்தக் க்ளூ.  வயது 28 என்றும் சொல்லியிருந்தேன்.  ஜாதகர் திருவோண நட்சத்திரக்காரர். பிறப்பு திசையில் இருப்பு 7 ஆண்டுகள் 3 மாதங்கள், 14 நாட்கள் என்பதும் கொடுக்கப்பெற்றிருந்தது. அத்துடன் அடித்து வந்த செவ்வாய் மகா திசையையும் சேர்த்தால் ஜாதகரின் 14வது வயதில் ராகு மகாதிசை ஆரம்பம். 32 வயது வரை அந்ததிசைதான். 28 வயது எனும்போது ராகுதான் நடந்து கொண்டிருந்தது. ஜாதகத்தில் ராகுவுடன் இருப்பது யார் என்று பாருங்கள் கூட்டாக இருப்பது சந்திரன். சந்திரனும் ராகுவும் கை கோர்த்தால் ஜாதகனின் மனதைப் பாதிக்கும். ஆமாம். ஜாதகருக்கு மன நோய் உண்டானது. எதனால் உண்டானது. இருவரும் 7ம் பார்வையாக ஜாதகனின் 10ம் இடத்தைப் பார்க்கிறார்கள். வேல பார்த்த இடத்தில் ஏற்பட்ட வேலைப் பளுவினால் ஜாதகனுக்கு கடுமையான மனநோய் ஏற்பட்டது. வைத்தியம் பார்த்தார்கள். ஜாதகனைப் ப்ரட்டிப் போட்டுவிட்டு 32 வயதில் ராகுதிசை முடிந்தவுடன் ஜாதகனுக்கு மனநோய் குணமானது. விடுபட்டார். அடுத்து வந்த குரு மகா திசை அதற்கு உதவியது. குரு பகவானும் தனது 9ம் பார்வையால் தொழில ஸ்தானத்தைப் பார்ப்பதைப் பாருங்கள். அவர் ஜாதகனின் வேலைப் பளுவை முற்றிலுமாகக் குறைப்பதற்கு உதவி செய்து ஜாதகனைக் காப்பாற்றினார்.

ஒரு க்ளூ நம்மை எங்கே கொண்டு போய் சேர்க்கிறது பார்த்தீர்களா?
---------------------------------------------------------------------------



மன நோய்

மனநோய் வந்துவிட்டால், அதுவும் தன்னையே மறக்கும்படியான சூழ்நிலை பாதிப்புடன் வந்து விட்டால் அது மிகவும் சிக்கலானது. அது வந்தவனுக்கு மட்டுமல்ல, அவனுடய உற்றார் உறவினருக்கும் அது துன்பத்தையே கொடுக்கும்.

மன நோயில் பல லெவல்கள் உள்ளன. சந்திரன் மனகாரகன். ஜாதகத்தில் சந்திரன் பாதிப்பிற்கு உள்ளாகும்போது அதாவது ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட தீய கிரகங்களுடன் சேர்க்கை பெற்றிருப்பது நல்லதல்ல. மன நோய் உண்டாகும்.

துலா லக்கின ஜாதகம். திருவோண நட்சத்திரம்.

ஜாதகன் உத்தியோகத்தில் இருந்தான். 32 வயதுவரை ராகு மகா திசைக் காலம். அவனுடைய 28ஆவது வயதில் வேலைப் பளுவின் காரணமாக மன நோய் ஏற்பட்டது.

சந்திரன், ராகு மற்றும் செவ்வாயால் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது. சந்திரன் பாதிப்பிற்கு உள்ளானால் மன நோய்தான் வேறென்ன?

ராகு  மகா திசையில் ஜாதகனைப் போட்டுப் பார்க்கத்துவங்கியது. ராகுவின் பார்வை பத்தாம் இடத்தில் மேல் விழுவதைப் பாருங்கள். தன் திசை முடியும் வரை ராகு தன் பிடியில் இருந்து ஜாதகனை விடவேயில்லை!

பிறகு குரு திசை ஆரம்பித்தவுடன் ஜாதகனுக்கு நல்ல காலம் துவங்கியது. குரு பகவான் தன்னுடைய விஷேசப் பார்வையால் பத்தாம் இடைத்தைப் பார்ப்பதைக் கவனியுங்கள். ஜாதகனின் மன நிலை சரியானது. வேலையில் அதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கி ஜாதகன் முற்றிலும் மனநிலை சரியாகி நிம்மதியானதுடன், உற்றார் உறவினர்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தான்.

இதுதான் சரியான விடை!

இன்றைய புதிர் போட்டியில் மொத்தம் 20 பேர்கள் கலந்து கொண்டார்கள். கலந்து கொண்டமைக்காக பாராட்டுக்கள். சரியான விடையை (அதாவது மன நோய் என்பதை) ஒருவர் கூட எழுதவில்லை. ஒட்டிய விடையை ஒருவர் மட்டும்தான் (சந்திரசேகர் சூரியநாராயணா அவர்கள்) எழுதியுள்ளார் அவருக்கு என்னுடைய மனம் நிறைந்த பாராட்டுக்கள்

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------
/////Blogger Chandrasekaran Suryanarayana said...
16/05/1971 ஆம் ஆண்டு மாலை 4:22;23 மணிக்கு ஞாயிறு கிழமை திருவோணம் நட்சத்திரத்தில் துலா லக்கினத்தில் ஜாதகர் பிறந்தார். (இடம்: சென்னை
துலா லக்கின அதிபதி சுக்கிரன். அவர் 8ம் வீட்டிற்கும் அதிபதி ஆவார். (ரிஷப ராசி)
ஜாதகருக்கு 28 வயதில் தொழிலில் பிரச்சினை ஏற்பட்டது.அதாவது 1999ஆம் அண்டு .ராகு தசை சுக்கிர புக்தியில் (19/03/1997 முதல் 17/03/2000 வரை ) கால கட்டத்தில் தொழிலில் பிரச்சினை ஏற்பட்டது.
4ம் வீட்டில் அமர்ந்து உள்ள ராகுவின் 7ம் பார்வை 10ம் விட்டின் மீது உள்ள கேதுவை பார்க்கிறார் . மோசமான அமைப்பு. சுகக் கேடுகள் நிறைந்த வாழ்க்கை.
10ம் வீட்டு அதிபதி சந்திரன் 4ம் வீட்டில் ராகுவுடன் கூட்டு சேர்ந்து 10ம் வீட்டை பார்க்கிறார். சந்திரனுடன் தீய கிரகங்கள் சேர்ந்து இருந்தால் ஜாதகன் சிறுவயதிலேயே தாயைப் பிரிய நேரிடும்.
8ம் வீடு தான் அதிக கஷ்டங்களை கொடுக்ககூடியது. 8ம் வீட்டு அதிபதி சுக்கிரன் 7ம் வீட்டில் அதாவது அந்த வீட்டிற்க்கு 12ல். நவாம்சத்தில் 8ம்வீட்டு அதிபதி சுக்கிரன் 8ம் வீட்டில் அமர்ந்துள்ளார்.அவர் கடமையை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்
8ம் வீட்டில் சூரியனும் சனியும் வந்து அமர்ந்துள்ளனர். சனியின் 3ம் பார்வை 10ம் வீட்டின் மீது உள்ளது . எட்டில் சனி அமர்ந்து தன்னுடைய மூன்றாம் பார்வையாக பத்தாம் வீட்டைப் பார்ப்பது நல்ல அமைப்பல்ல. அப்படி அமையப் பெற்ற ஜாதகன் பலவிதமான சோதனை களையும் தன்னுடைய வேலையில் சந்திக்க நேரிடும்.
இந்த லக்கினத்திற்கு யோக காரனான சனி (2 பரல்) அஸ்தங்கம் ஆகிவிட்டார்.
உடல் வலிமையை கொடுக்க கூடிய சூரியன் (2 பரல்) பலவீனமாக உள்ளார். மன வலிமையை கொடுக்க கூடிய சந்திரன் (3 பரல்) ராகுவுடன் சேர்ந்து பலவீனமாக உள்ளார்.
4ம் வீட்டில் செவ்வாயுடன் ராகு சேர்ந்து இந்த இடத்தில் இருப்பதால் ஜாதகனுக்கு வாழ்க்கை வெறுத்துவிடும். சொத்துக்கள் போன்றவைகள் கிடைக்காத அல்லது மறுக்கப்பட்டவனாக ஜாதகன் இருப்பான்.
குரு 6ம் வீட்டு அதிபதியும் ஆவார். இந்த ஜாதகத்தில் குரு வக்கிரம்.
32 வயதில் குரு தசை குரு புக்தியில் ஜாதகருக்கு பிரச்சனை நீங்கியது. காரணம் குருவின் 9ம் பார்வை 10ம் வீட்டின் மீது உள்ளது.
Saturday, April 16, 2016 7:18:00 AM Delete/////
----------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15.4.16

Astrology Quiz No.109 கொஞ்சம் கஷ்டமான கேள்வி


Astrology Quiz No.109 கொஞ்சம் கஷ்டமான கேள்வி

ஜாதகத்தைப் பாருங்கள்.



ஜாதகருக்கு அவருடைய 28வது வயதில் கடுமையான பிரச்சினை உண்டானது.

1. என்ன பிரச்சினை?
2. அது சரியானதா அல்லது இல்லையா?

பிரச்சினை என்னெவென்று சொல்லியிருந்தால் பரவாயில்லை.
சொல்லாமல் கேள்வி கேட்டால் என்ன செய்வது? கஷ்டமான கேள்விதான். உங்கள் திறமையைக் காட்டுங்கள்.

ஒரு க்ளூவைக் கொடுத்துள்ளேன். வயதுதான் அந்தக் க்ளூ. 
அதை வைத்து, பிடிக்க முடியாதா என்ன? ஜாதகத்தை அலசி
உங்கள் பதிலை எழுதுங்கள். 2 கேள்விகளுக்கும் சரியான பதிலை
எழுதினால் மட்டுமே பாஸ் மார்க்

அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

14.4.16

வாத்தியாரின் வாழ்த்துக்கள்!


வாத்தியாரின் வாழ்த்துக்கள்!

வகுப்பறை மாணவக் கண்மணிகள், வந்து செல்லும் நண்பர்கள்,
சக பதிவாளர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

13.4.16

அடடா, நாம் கற்றுக் கொள்ள வேண்டியது இத்தனை இருக்கிறதா?


அடடா, நாம் கற்றுக் கொள்ள வேண்டியது இத்தனை இருக்கிறதா?

Interviewer: How long would it take you to buy BMW?
Doctor: Well..I think at least 3 months.
MBA: It should take about 5 months of work.
Engineer: 1 year of work.

Tamilnadu politician:
I think for that.. I should work for 5 years

Interviewer:
Why sooooooooo long??

Tamilnadu politicians:
Well, BMW is quite a big company!

That is attitude! The attitude all business men should have
=================================================================
2
ஜென் துறவி ஒருவர் தன் சீடர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அவரிடம் சீடர்களுள் ஒருவன்,"குருவே, நீங்கள் இன்பத்தில் மகிழ்ச்சியோ, துன்பத்தில் சோர்வோ அடைவதில்லை. ஆனால், இரண்டையும்
தாங்கள் சமமாக எடுத்துக் கொள்கிறீர்கள் அல்லவா? இந்த குணம் உங்களுக்கு எப்படி வந்தது?" என்று கேட்டான்.

அதற்கு அந்த குரு "கழுதையிடமிருந்து தான்." என்று உடனே கூறினார். உடனே அனைத்து சீடர்களும் "என்ன கழுதையிடமிருந்தா?"என்று ஆச்சரியத்துடன் கேட்டனர்.

 "ஆமாம், அதனிடமிருந்துதான் கற்றுக் கொண்டேன். நீங்கள் கழுதையை கூர்ந்து கவனித்ததில்லையா? காலையில் அது அழுக்கு துணிகளை சுமந்து செல்லும். மாலையில் சுத்தமான துணிகளை சுமந்து செல்லும் அல்லவா! அதை வைத்து தான்" என்று சொன்னார்.

அப்போது மற்றவன் "இதில் என்ன குருவே இருக்கிறது, நீங்கள் அதனிடம் கற்று கொள்வதற்கு" என்று கேட்டான். அதற்கு குரு "ஆமாம், அது அழுக்கு துணிகளை சுமக்கும் போது வருத்தப்படுவதும் இல்லை, சுத்தமான துணிகளை சுமக்கும் போது மகிழ்வதும் இல்லை. அதைத் தான் கற்றுக் கொண்டேன்" என்று கூறினார்.
-------------------------------------------------------------
3
இந்தக் காணொளியைப் பாருங்கள்:


Our sincere thanks to the person who uploaded this video in the net

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.4.16

திருமாலின் பெருமைகளைக் கவியரசர் பாடியது!


திருமாலின் பெருமைகளைக் கவியரசர் பாடியது!

கவியரசர் கண்ணதாசன் பாடல்கள்        

பல அவதாரங்களை எடுத்தவர் திருமால். அவர் பெருமைகளைப் பாடுவதற்கு அந்தக் காலத்தில் அவரது அடியார்களான ஆழ்வார்கள்
இருந்தார்கள்

ஸ்ரீநாராயண மூர்த்தி உன்னைப் பாடிப் பரவசப்படுவதைவிட எங்களுக்குப் பெரிதாக வேறு என்ன கிடைத்துவிடப்போகிறது? ஒன்றும் வேண்டாம்
அது இந்திரலோகத்தை ஆட்சி செய்யும் வாய்ப்பாக இருந்தாலும் வேண்டாம் என்று சொன்னதோடு, அப்படியே வாழ்ந்தும் காட்டியவர்கள் அவர்கள்.

பிறகு முண்டாசுக் கவிஞர் பாரதி வந்து திருமாலின் கண்ணன் அவதாரத்தின் மேல் தீராத பக்தி கொண்டதோடு அவரைப் பலவிதமாக தன் மனதிற்கண்டு இன்புற்றுச் சிறப்பாகப் பல பாடல்களை இயற்றினார்.

1.கண்ணன் என் தோழன், 2.கண்ணன் என் தாய் 3.கண்ணன் என் தந்தை 4.கண்ணன் என் சேவகன்
5.கண்ணன் என் அரசன் 6.கண்ணன் என் சீடன் 7.கண்ணன் என் சற்குரு 8. கண்ணம்மா என் குழந்தை
9.கண்ணன் என் விளையாட்டுப் பிள்ளை 10.கண்ணன் என் காதலன் (5 பகுதிகள்)
11.கண்ணன் என் காந்தன் என்று அந்த மாயக்கண்ணனைப் பல வடிவங்களில் கண்டு இன்புற்று,உருகி உருகி எழுதியவர் அவர்.

இறைவனையே, தாயாகவும், தந்தையாகவும், குருவாகவும் கற்பனை செய்து எழுதியதோடு மட்டுமல்லாமல் தோழனாகவும், சீடனாகவும்,
ஏன் சேவகனாவும், அதற்கும் மேலே ஒரு படி சென்று காதலனாகவும் எழுதிக் களிப்புற்றதோடு பலரையும் கிறங்க வைத்தவர் அவர்.

அவருக்குப் பிறகு, கவியரசர் கண்ணதாசன் அவர்கள் தான் கண்ணனை வைத்து விதம் விதமாகப் பாடல்களை எழுதினார். அவற்றில் அற்புதமான பாடல்கள் பல உள்ளன.
------------------------------------------------------------
திருமால் பெருமைக்கு நிகரேது - உன்றன்
திருவடி நிழலுக்கு இணையேது!
பெருமானே உன்றன் திருநாமம் - பத்து
பெயர்களில் விளங்கும் அவதாரம்
(திருமால்)

கடல் நடுவே வீழ்ந்த சதுர்வேதம் - தனைக்
காப்பதற்கே கொண்ட அவதாரம்
- மச்ச அவதாரம்!

அசுரர்கள் கொடுமைக்கு முடிவாகும் - எங்கள்
அச்சுதனே உன்றன் அவதாரம்
- கூர்ம அவதாரம்!

பூமியைக் காத்திட ஒரு காலம் -நீ
புனைந்தது மற்றொரு அவதாரம்
- வராக அவதாரம்!

நாராயணா என்னும் திருநாமம் - நிலை
நாட்டிட இன்னும் ஒரு அவதாரம்
- நரசிம்ம அவதாரம்!

மாபலிச் சிரம் தன்னில் கால் வைத்து - இந்த
மண்ணும் விண்ணும் அளந்த அவதாரம்
- வாமன அவதாரம்!

தாய் தந்தை சொல்லே உயர் வேதம் - என்று
சாற்றியதும் ஒரு அவதாரம்
- பரசுராம அவதாரம்!

ஒருவனுக்கு உலகில் ஒரு தாரம் - எனும்
உயர்வினைக் காட்டிய அவதாரம்
- ராம அவதாரம்!

ரகு குலம் கொண்டது ஒரு ராமன் - பின்பு
யது குலம் கண்டது பலராமன்
- பலராமன்

அரசு முறை வழிநெறி காக்க - நீ
அடைந்தது இன்னொரு அவதாரம்
- கண்ணன் அவதாரம்

ஸ்ரீராகம்:

விதி நடந்ததென மதி முடிந்ததென
வினையின் பயனே உருவாக,
நிலைமறந்தவரும், நெறியிழந்தவரும்
உணரும் வண்ணம் தெளிவாக,
இன்னல் ஒழிந்து புவி காக்க - நீ
எடுக்க வேண்டும் ஒரு அவதாரம்
- கல்கி அவதாரம்!
(திருமால்)

படம்: திருமால் பெருமை - வருடம் 1968

பரந்தாமன் எடுத்த அவதாரங்களைப் பட்டியலிட்டவர், எடுக்க வேண்டிய அவதாரத்தையும் முத்தாய்ப்பாய்ச் சொல்லிப் பாடலை நிறைவு செய்ததுதான்
இந்தப் பாடலின் சிறப்பு
-------------------------------------------
மற்றுமொரு பாடல்:

மலர்களிலே பலநிறம் கண்டேன் - திரு
மாலவன் வடிவம் அதில் கண்டேன்
மலர்களிலே பலமணம் கண்டேன் - அதில்
மாதவன் கருணை மனம் கண்டேன்!
(மலர்)

பச்சைநிறம் அவன் திருமேனி
பவள நிறம் அவன் செவ்விதழே
மஞ்சள் முகம் அவன் தேவிமுகம்
வெண்மை நிறம் அவன் திரு உள்ளம்!
(மலர்)

பக்தி உள்ளம் என்னும் மலர் தொடுத்துப்
பாசமென்னும் சிறு நூலெடுத்துச்
சத்தியமென்னும் சரம் தொடுத்து - நான்
சாற்றுகின்றேன் உன் திருவடிக்கு!
(மலர்)

நானிலம் நாரணன் விளையாட்டு
நாயகன் பெயரில் திருப்பாட்டு
ஆயர் குலப்பிள்ளை விளையாட்டு - இந்த
அடியவர்க் கென்றும் அருள்கூட்டு!
(மலர்)

படம்: திருமால் பெருமை - வருடம் 1968

அந்தப் பரந்தாமனுக்குக் கவியரசர் எதைச் சாற்றினார் பார்த்தீர்களா?

பக்தி உள்ளம் என்னும் மலர் தொடுத்துப் பாசமென்னும் சிறு நூலெடுத்துச் சத்தியமென்னும் சரம் தொடுத்து - நான்
சாற்றுகின்றேன் உன் திருவடிக்கு!

சத்தியம் என்னும் சரத்தில் பக்தி, பாசம் எல்லாவற்றையும் தொடுத்தல்லவா சாற்றியுள்ளார்!!

அந்தப் பரந்தாமனின் அருள் கிடைக்க நாமும் அதையே சாற்றுவோம்!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

11.4.16

Astrology Q.No.108 Answer புதிருக்கான விடை!

Astrology Q.No.108 Answer புதிருக்கான விடை!

பங்கு வணிகத்தில் (share business), ஈடு பட்டுத் திறம்பட, திட்டமிட்டுப் பணியாற்றுபவர்கள் மற்றும் அதில் முதலீடு செய்திருப்பவர்களும் குறுகிய காலத்தில் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து விடுவார்கள். அதைப் பார்த்து கையில் பணம் இருப்பவர்களுக்கு அதில் ஈடு பட ஆதீத விருப்பம் இருக்கும்.

ஆனால் அதில் ஈடுபடும் எல்லோருக்குமே வெற்றி கிடைக்குமா என்ன?

வாங்கி வந்த வரம் இருந்தால் மட்டுமே (அதாவது ஜாதகத்தில் அதற்கு அமைப்பு இருந்தால் மட்டுமே) சம்பாதிக்க முடியும்.

பணத்தைக் கோட்டைவிட்டு விட்டு, தெருவிற்கு வந்தவர்கள், பலரை நான் அறிவேன். பல ஆண்டுகளுக்கு முன்பு (1990 - 1995ஆம் ஆண்டுகளில்) நான் பங்கு வணிகத்தில் சம்பாதித்தும் இருக்கிறேன். சம்பாதித்தற்கும் அதிகமாகத் தொலைத்தும் இருக்கிறேன். அந்தக் கால கட்டத்தில் ஜோதிடத்தில் எனக்கு அதிகமான பரீட்சயம் இல்லாத நிலைமை! அதனால் அப்படி ஏற்பட்டது.

இப்போது என்றால் அந்தப் பக்கம் தலை வைத்தே படுக்க மாட்டேன்.

சொந்தக்கதை போதும். சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்.

பங்கு வணிகத்தில் ஈடுபடுவதை விட, ஈடு படக்கூடாது என்பதை சில ஜாதகங்கள் தெளிவாக அறிவுறுத்தும்.

ஒரு ஜாதகத்தை வைத்து அலசுங்கள் என்று சொல்லியிருந்தேன். அது முன்பே 4 ஆண்டுகளுக்கு முன்பு அலசிய ஜாதகம்தான். 4 ஆண்டுகளுக்குள் நிறைய புது முகங்கள் வந்துள்ளதால் அவர்களும் தெரிந்து கொள்ளட்டும் என்பதற்காக மீண்டும் வலை ஏற்றினேன். முன்பே படித்துள்ளதை நினைவு படுத்தி சிலர் சரியாக பதில் எழுதியுள்ளார்கள். அவர்களுடைய நினைவாற்றல் வாழ்க!

போட்டியில் மொத்தம் 29 பேர்கள் கலந்து கொண்டார்கள்.
அவர்களில் 5 பேர்கள் சரியான விடையாக 2 கேள்விகளுக்கும் பதில் எழுதியுள்ளார்கள். அவர்களுக்கு ஸ்டார் போட்டுக் குறிப்பிட்டுள்ளேன்
24 பேர்கள் பாதி விடையைச் சரியாகச் சொல்லியுள்ளார்கள். ஆனால் பணத்தை இழந்த தசாபுத்தியைக் குறிப்பிடுவதில் தவறு செய்துள்ளார்கள்
அவர்களுக்கும் பாஸ் மார்க் போட்டு பதிவில் ஏற்றியுள்ளேன்
அனைவருக்கும் எனது மனம் உவந்த பாராட்டுக்கள்!
-------------------------------------------------------------
சரியான விடை:

ஜாதகத்தைப் பாருங்கள்!



மகர லக்கின ஜாதகம். கேட்டை நட்சத்திரம்.

பண வரவிற்கு இரண்டாம் வீடு, அதன் அதிபதி, தனகாரகன் குரு ஆகியவை முக்கியம். ஜாதகத்தில் இரண்டாம் அதிபதியும், தனகாரகனும் வலிமையாக இருக்க வேண்டும். அதுதான் முக்கிய விதி

இந்த ஜாதக்த்தில் இரண்டாம் அதிபதி 12ல் மறைந்துவிட்டார். அத்துடன் தனகாரகன் குருவும் பன்னிரெண்டில் மறைந்துவிட்டார். பன்னிரெண்டாம் வீடு விரைய ஸ்தானம் (house of loss) ஆகவே இந்த ஜாதகருக்கு speculative transactions சுத்தமாக ஒத்து வராது.

அத்துடன் நடப்பு தசா புத்தியும் முக்கியம். அதாவது மேலே சொன்ன அமைப்பு இருந்தாலும், தசா புத்தியும் முக்கியம். உதாரணத்திற்கு இந்த ஜாதகத்தில் சந்திர திசையில், சந்திரன் நீசமாகி இருப்பதால், பங்கு வணிகத்தில் எந்த முதலீடும் செய்யக்கூடாது. பணம் காணாமல் போய்விடும்.
அப்படியே அந்த தசையில் பணம் போய் விட்டது!

அதுபோல ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடக்கும் காலங்களிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இவ்வாறான ஜாதக அமைப்பு உள்ளவர்கள், கையில் பணம் அதிகமாக இருக்கும்போது, வங்கியில் போட்டு வைக்கலாம். அத்துடன் தங்கக் காசுகளை வாங்கி வைக்கலாம். அவற்றையும் வீட்டில் வைக்காமல், வங்கி லாக்கரில் வைப்பது உத்தமம்.

உங்கள் ஜாதகத்தில் பங்கு வணிகத்திற்கான அமைப்பு இம்மிகூட இல்லையென்றால், அந்தப்பக்கம் (அதாவது பங்குச் சந்தை இருக்கும் திசையில்) தலைவைத்துக் கூடப் படுக்காதீர்கள்!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
1
/////Blogger slmsanuma said...
முதல் நாள் பங்கு சந்தை பற்றிய சிறுகதை
அடுத்த நாள் பங்கு சந்தை பற்றிய புதிர்
முன்னோட்டம் அற்புதம் ஐயா
ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்ட ஜாதகம்!!!!
ஜாதகத்தை அலசிய ஐயாவின் வார்த்தைகள் அப்படியே !!!!!!
///மகர லக்கின ஜாதகம். கேட்டை நட்சத்திரம்.
பண வரவிற்கு இரண்டாம் வீடு, அதன் அதிபதி, தனகாரகன் குரு ஆகியவை முக்கியம்.
ஜாதகத்தில் இரண்டாம் அதிபதியும் தனகாரகனும் வலிமையாக இருக்க வேண்டும். அதுதான் முக்கிய விதி இந்த ஜாதக்த்தில் இரண்டாம் அதிபதி 12ல் மறைந்துவிட்டார். அத்துடன் தனகாரகன் குருவும் பன்னிரெண்டில் மறைந்துவிட்டார். பன்னிரெண்டாம் வீடு விரைய ஸ்தானம் (house of loss) ஆகவே இந்த ஜாதகருக்கு speculative transactions சுத்தமாக ஒத்து வராது.
அத்துடன் நடப்பு தசா புத்தியும் முக்கியம். அதாவது மேலே சொன்ன அமைப்பு இருந்தாலும், தசா புத்தியும் முக்கியம். உதாரணத்திற்கு இந்த ஜாதக்த்தில் சந்திர திசையில், சந்திரன் நீசமாகி இருப்பதால், பங்கு வணிகத்தில் எந்த முதலீடும் செய்யக்கூடாது. பணம் காணாமல் போய்விடும். அதுபோல ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடக்கும் காலங்களிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இவ்வாறான ஜாதக அமைப்பு உள்ளவர்கள், கையில் பணம் அதிகமாக இருக்கும்போது, வங்கியில் போட்டு வைக்கலாம். அத்துடன் தங்கக் காசுகளை வாங்கி வைக்கலாம். அவற்றையும் வீட்டில் வைக்காமல், வங்கி லாக்கரில் வைப்பது உத்தமம். உங்கள் ஜாதகத்தில் பங்கு வணிகத்திற்கான அமைப்பு இம்மிகூட இல்லையென்றால், அந்தப்பக்கம் (அதாவது பங்குச் சந்தை இருக்கும் திசையில்) தலைவைத்துக் கூடப் படுக்காதீர்கள்! ////
ஐயா நாங்கள் உங்களின் சீடர்கள் மற்றும் உங்களின் பயற்சி அப்படி
லக்கினாதிபதி வேறு 12ம் இடத்தில !!!!பன்னிரெண்டாம் வீடு விரைய ஸ்தானம்!!!
சந்தானம் சேலம்
Friday, April 08, 2016 6:47:00 AM//////
----------------------------------------------
2
/////Blogger KJ said...
Sir,
Lagnathypathy in 12th house. Kaaragar Guru also in 12.
Kethu sits in Second house with Lagnathypathy Sevvai. So every aspect regarding Money is affected here.. Dhana athipathy and Labathypathy, second house affected is reason.
Thanks
Sathishkumar GS
Friday, April 08, 2016 8:37:00 AM//////

பாதிக் கிணறைத் தாண்டியுள்ளீர்கள். எந்தத் தசா புத்தியில் பணத்தை இழந்தார் என்பதை நீங்கள் சொல்லவில்லையே!
----------------------------------------------------------
3
Blogger KARTHIKEYAN V K said...
1.12 m idathil maraintha dhana sthanathipathi sanipagavan
2.12m idathil maraintha danakaragan Gurupagavan
3.Neecham petra pagyathipathi puthan
4 lagnathipathi mattrum virayathipathiyin 12 m ida serkkai
5.10m veetirkku subar parvai illathathum 8m veetukkaran Suriyanudaya parvaium
II
Suriya dasa chevvai pukthiil jathakar panathai ezhanthiruuppar
Friday, April 08, 2016 10:25:00 AM//////

பாதிக் கிணறைத் தாண்டியுள்ளீர்கள். எந்தத் தசா புத்தியில் பணத்தை இழந்தார் என்பதில் தவறு உள்ளது!
----------------------------------------------------------
4
//////Blogger Sudharsan Dhamu said...
வாத்தியாருக்கு வணக்கம்,
1. லக்னாதிபதி மற்றும் இரண்டாம் அதிபதி சனி 12ல் விரைய ஸ்தானத்தில் உள்ளார். அம்சதிலும் சனி மாந்தியுடன் உள்ளார். பங்கு சந்தைக்கு 11ஆம் இடமான லாபஸ்தான அதிபதி செவ்வாய் மாந்தி மற்றும் கேதுவுடன் இரண்டாம் வீட்டில் உள்ளார். 9ஆம் வீட்டு அதிபதி புதன் 3ல் நீசமாகிவுள்ளார். 10ஆம் அதிபதி சுக்கிரன் அம்சத்தில் சனி, மாந்தியுடன். ஆதலால் ஜாதகருக்கு பங்கு சந்தை கைக்கொடுக்கவில்லை.
2. 2ஆம் வீட்டில் உள்ள கேது தசை, 12ஆம் அதிபதி குரு புக்தியில் தன்னுடைய 27ஆவது வயதில் பணயிழப்பு ஏற்பட்டிருக்கும்.
பழைய பாடங்களில் உள்ள half quiz பகுதி அருமை. அதையும் தொடருமாரு வேண்டிகொள்கிறேன் ஐயா.
Friday, April 08, 2016 11:19:00 AM ///////

பாதிக் கிணறைத் தாண்டியுள்ளீர்கள். எந்தத் தசா புத்தியில் பணத்தை இழந்தார் என்பதில் தவறு உள்ளது!
---------------------------------------------------
5
///////Blogger kmr.krishnan said...
1.தனஸ்தானதிபதி (2க்கு உரிய )சனைச்சரன் 12ல் மறைவு.
தன காரகன் குருவும் 12ல் மறைவு.விரைய ஸ்தானத்தில் இருவரும் இருப்பதால் ஸ்பெசுலேஷன் துறை இவருக்கு ஆகாது.
தன ஸ்தானத்தில் கேது.
யோகாதிபதி சுக்ரன் மூன்றில் உச்சம் என்றாலும், அவருக்கு அது மறைவு வீடு.
இவை ஜாதகரை பங்குச்சந்தையில் வெற்றி பெறமல் செய்த காரணங்கள்.
2. சந்திரன் நீச்சம் என்பதால் அந்த தசாவில் நஷ்டம் அடைந்து இருப்பார்.சந்திர தசா சனி புக்தியில் அதல் பாதாளத்திற்குச் சென்று இருப்பார்.சுக்கிரதசாவில் சம்பாதித்ததை சூரியதசாவில் துவங்கி,சந்திர தசாவில் இழந்திருப்பார்.
முன்னரே பார்த்த ஜாதகமோ என்ற சந்தேகம் தோன்றியது.
Friday, April 08, 2016 1:03:00 PM ///////

உங்களின் நினைவாற்றல் வாழ்க!
------------------------------------------------
6
Blogger Sathish Kumar said...
ஜாதகர் பிறந்த தேதி : 15 - 04 – 1960
1. பங்குச் சந்தை, ஜாதககப்படி, ஜாதகருக்கு ஏன் ஒத்துவரவில்லை?
பங்குச் சந்தைக்குரிய (வியாபாரத்திற்குரிய) கிரகமான புதன் நீச்சம்
லக்னாதிபதி & தனஸ்தான அதிபதி சனி விரயஸ்தானதில்
லக்னாதிபதி & தனஸ்தான அதிபதி சனியின் சுயவர்க பரல்கள் : 2
பத்தாம் வீடு அதிபதி சுக்கிரன் பாப கர்த்தாரியில்
நவாம்சத்தில் பத்தாம் வீட்டு அதிபதி சுக்கிரனுடன் சனி & மாந்தி
லக்னம் பாப கர்த்தாரியில்
தனஸ்தானத்தில் கேது
தனஸ்தானத்தில் மாந்தி
சனியின் பார்வையில் தனஸ்தானம்
விரயஸ்தான அதிபதி நவாம்சத்தில் உச்சம்
லாபஸ்தானத்தில் நீச்ச கிரகம்
லாபஸ்தான அதிபதி செவ்வாயின் சுயவர்க பரல்கள் : 3
தனகாரன் குரு 12ல் மறைவு
பத்தாம் வீட்டு அதிபதி சுக்கிரன், தனது வீட்டில் இருந்து ஆறாம் வீடான மூன்றில் அமர்வு
பத்தாம் வீட்டு அதிபதி சுக்கிரனுடன் நீச்ச புதன்
எட்டாம் வீட்டு அதிபதி சூரியனின் பார்வையில் பத்தாம் வீடு (எட்டாம் அதிபதி உச்சம் & வர்கோதமம்)
2. எந்த மகா திசை, எந்த புத்தியில் ஜாதகர்பணத்தை இழந்தார்? அதற்கான காரணம் என்ன?
சுக்கிரன் திசை சனி புத்தியில் ஜாதகர் பணத்தை இழந்தார்
பத்தாம் அதிபதி சுக்கிரன் உச்சம் பெற்று இருந்தாலும், பாப கர்த்தாரியில் சிக்கி கொண்டார். அவர் திசையில் சனியின் புத்தியில் (சனி லக்னாதிபதி + தனஸ்தான அதிபதி. அவர் விரயஸ்தானதில் மறைந்ததால் அவர் புத்தியில் பணத்தை இழந்தார்)
Friday, April 08, 2016 1:30:00 PM/////

பாதிக் கிணறைத் தாண்டியுள்ளீர்கள். எந்தத் தசா புத்தியில் பணத்தை இழந்தார் என்பதில் தவறு உள்ளது!
-------------------------------------------------------
7
Blogger Narayanan V said...
V. நாராயணன்
புதுச்சேரி
புதிர் 108 பதில்
ஜாதகத்தில் உள்ள பாதகமான விஷயங்கள்
1) லக்னாபதி விரய ஸ்தானத்தில் அதுவும் விரயாதிபதியுடன் கூட்டு
2) 2ம் இட்த்தில் வர்க்கோத்தம் பெற்ற 4/11 அதிபதி ஆனால் கேது,மாந்தி சேர்க்கை
3) 11ல் நீச சந்திரன்
4) தனக்காரகன் விரயாதிபதி ஆனாதும், நவாம்சத்தில் உச்சம் பெற்றதும்
5) 3ம் இட்த்தில் நீசபங்கராஜயோகம், இருந்தினால், பணவரவுக்கு உதவவில்லை
கேது தசையில், சனி புக்தியில் போண்டியாக்கிருக்கும்
Friday, April 08, 2016 3:00:00 PM//////

பாதிக் கிணறைத் தாண்டியுள்ளீர்கள். எந்தத் தசா புத்தியில் பணத்தை இழந்தார் என்பதில் தவறு உள்ளது!
------------------------------------------------
8
Blogger Srinivasa Rajulu.M said...
1) பங்குச் சந்தை ஒத்துவர 2,10,11 ஆகிய இடங்களுடன், லக்னம் மற்றும் 5,9 வலுவாக இருக்க வேண்டும். லக்னம் கத்தரி அவயோகத்தில் மாட்டிக் கொண்டது. லக்னாதிபன் 12-ல் மறைவு.
ஜாதகருக்கு இரண்டாம் இடமும் சுத்தமாக கெட்டுவிட்டது. பாபியான செவ்வாயுடன் மாந்தி மற்றும் கேது கூட்டு. அந்தக் கூட்டணியை சனைஸ்சரன் வேறு பார்க்கிறார். இது "ஓட்டை அண்டா யோகம்".
2) தன காரகன் குரு மற்றும் தன ஸ்தானாதிபதி சனி 12-ல் மறைவு
3) யோக காரகன் சுக்கிரன் உச்சனானாலும், ஆறாம் அதிபனான நீச்ச புதனுடன் சேர்ந்து மூன்றாம் இடத்தில் மறைந்ததால் - 30 வயதில் ஆரம்பித்து 50-வயதில் முடிந்த சுக்கிர தசையில் பங்குச் சந்தையில் பணம் இழக்க நேரிட்டது!
4) 11-ல் நீச்சனான சந்திரன்.
5) 5,9 ஆம் இடங்களை நோக்கும் செவ்வாய்! 5-ஆம் இடத்தைப் பார்க்கும் நீச்ச (தேய்பிறை) சந்திரன்.
6) எட்டாம் அதிபதி சூரியன் உச்ச பலத்துடன் 10-ஆம் இடத்தைப் பார்ப்பது!
இவை போன்ற கெட்ட அமைப்புகள் (இரண்டு கிரகங்கள் உச்சம் மற்றும் இரண்டு நீச்சம் ஆக இருந்தும்) ஜாதகருக்கு பங்குச்சந்தை இழப்பை கொடுத்தன!
Friday, April 08, 2016 3:12:00 PM///////

பாதிக் கிணறைத் தாண்டியுள்ளீர்கள். எந்தத் தசா புத்தியில் பணத்தை இழந்தார் என்பதில் தவறு உள்ளது!
------------------------------------------------
9
Blogger venkatesh r said...
அய்யா வணக்கம்,
இந்த ஜாதகம் ஏற்கனவே 19.12.12 அன்று "அந்த பக்கம் தலை வைத்து படுக்காதே" என்று தாங்கள் எச்சரித்து பதிவிட்டது. அதற்கான சுட்டி இதோ! http://classroom2007.blogspot.in/2012/12/astrology_19.html
(QUOTE)வாத்தியாரின் அலசல்.
மகர லக்கின ஜாதகம். கேட்டை நட்சத்திரம்.
பண வரவிற்கு இரண்டாம் வீடு, அதன் அதிபதி, தனகாரகன் குரு ஆகியவை முக்கியம். ஜாதகத்தில் இரண்டாம் அதிபதியும் தனகாரகனும் வலிமையாக இருக்க வேண்டும். அதுதான் முக்கிய விதி!
இந்த ஜாதகத்தில் இரண்டாம் அதிபதி 12ல் மறைந்துவிட்டார். அத்துடன் தனகாரகன் குருவும் பன்னிரெண்டில் மறைந்துவிட்டார். பன்னிரெண்டாம் வீடு விரைய ஸ்தானம் (house of loss) ஆகவே இந்த ஜாதகருக்கு speculative transactions சுத்தமாக ஒத்து வராது.
அத்துடன் நடப்பு தசா புத்தியும் முக்கியம். அதாவது மேலே சொன்ன அமைப்பு இருந்தாலும், தசா புத்தியும் முக்கியம். உதாரணத்திற்கு இந்த ஜாதகத்தில் சந்திர திசையில், சந்திரன் நீசமாகி இருப்பதால், பங்கு வணிகத்தில் எந்த முதலீடும் செய்யக்கூடாது. பணம் காணாமல் போய்விடும். அதுபோல ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடக்கும் காலங்களிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
(UNQUOTE)
இரண்டாம் கேள்விக்கான விடை.
ஜாதகருக்கு அஷ்டம சனி 2008ல், சுக்கிர தசை புதன் புத்தி நடைபெற்ற போது பங்கு சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சியில் தன் முதலீட்டு பணத்தை இழந்தார்.
வெங்கடேசன்.
Friday, April 08, 2016 4:13:00 PM///////

உங்களின் நினைவாற்றல் வாழ்க!
-----------------------------------------
10
////Blogger sundar said...
1.lagna,2nd lord saturn has joined with 3,12th lord guru and standing in 12thplace.morever
11th lord Mars has joined with kethu and manthi and sitting in 2nd place.So there is no
chance of getting more money.and his life will be keep on spend for others welfare not his welfare.Since 7th lord is Responsible for Share market related things but 7th lord is neecham
so sharemarket won't help him.
2.When surya disa ,chandra bhuthi came in the age 51-52 he will encounter huge loss.since
surya is 8th lord and moon is 7th lord which is neecham and also chandran is seated at 8th position to surya
Friday, April 08, 2016 6:11:00 PM /////

பாதிக் கிணறைத் தாண்டியுள்ளீர்கள். எந்தத் தசா புத்தியில் பணத்தை இழந்தார் என்பதில் தவறு உள்ளது!
--------------------------------------------------
11
//////Blogger Radha Sridhar said...
குரு வணக்கம்.
12ம் இடத்தில் , 1,2 கு அதிபதி சனீஸ்வரர் 12ம் அதிபதியோடு கூட்டணி.
10ம் அதிபதி 3ல் மறைவு. பங்கு சந்தை வெற்றி பெறுவது கஷ்டம்.
7ம் அதிபதி, லாப ஸ்தானமான 11ல் நீசம்
தன ஸ்தானம், 2ம் இடம், கேது, மாந்தி அமர்ந்து தோஷம்
சுக ஸ்தானத்தில், அஷ்டமதிபதி உச்சம்.
அன்புடன்,
ராதா
Friday, April 08, 2016 9:16:00 PM///////

பாதிக் கிணறைத் தாண்டியுள்ளீர்கள். எந்தத் தசா புத்தியில் பணத்தை இழந்தார் என்பதைச் சொல்லவில்லை!
--------------------------------------------------------
12
/////Blogger lrk said...
ஐயா வணக்கம்
புதிர்
108 க்கு பதில்.
லக்கினாதிபதி விரையத்தில் உள்ளார். லக்கினம் பாபகர்த்தாரி யில் உள்ளது.
போராட்டமான வாழ்க்கை.
தனஸ்தானம் 2ஆம் அதிபதி 12ல் விரையத்தில் உள்ளார்
2ஆம் இடத்தில் மாந்தி,கேது,செவ்வாய் சேர்க்கை
கையில் காசு தங்காது
11ஆம் அதிபதி உடன் கேது கூட்டணி
பண இழப்புவரும்
கேது தசா சனி புக்தியில் அது நடந்தது.
நன்றி ஐயா.
கண்ணன்
Saturday, April 09, 2016 5:50:00 AM///////

பாதிக் கிணறைத் தாண்டியுள்ளீர்கள். எந்தத் தசா புத்தியில் பணத்தை இழந்தார் என்பதில் தவறு உள்ளது!
------------------------------------------------------
13
Blogger Chandrasekaran Suryanarayana said...
QUIZ 108 வணக்கம்
15ம் தேதி ஏப்ரல் 1960 நேரம் : 02:30:28 காலை வெள்ளி கிழமை அனுஷம் நட்சத்திரத்தில் ஜாதகர் பிறந்தார். (எடுத்துக்கொண்ட இடம்: சென்னை )
1. பங்கு சந்தை ஜாதகருக்கு ஏன் ஒத்து வரவில்லை .
பதில் : லக்கினம் (4 பரல்) (பாப கர்த்தாரி தோஷம்) லக்கினாதிபதி 12ம் வீட்டு விரயத்தில் சனி (2 பரல்) 11ம் வீட்டில் வந்து அமர்ந்த கிரகம் சந்திரன் (5 பரல்) நீசம். 11ம் வீட்டு அதிபதி செவ்வாய் (3 பரல்) தீய கிரகத்துடன் 2ல் கூட்டு இவைகள் எல்லாம் பலவீனமாக ஓன்று சேர்ந்து இருப்பதால் பங்கு சந்தை ஒத்து வராது.
2. எந்த மாக தசை எந்த புக்தியில் பணத்தை இழந்தார்?
பதில் : சுக்கிர தசை புதன் புக்தி 07-05-2006 முதல் 07-03-2009 வரை அந்த காலத்தில். புதன் 6ம் வீட்டு அதிபதிஉடன் சுக்கிரன் கூட்டு அதலால் பணத்ததை இழந்தார். (47 வயதில்).
சூரிய மகா தசையில் பணத்தை இழக்க வாய்ப்பில்லை. 5ம் வீட்டில் மேஷ ராசியில் சூரியன் உச்சம். நவாம்சத்திலும் மேஷ ராசியில் சூரியன் உச்சம். ஆகையால் வர்கோத்தமம் . மேலும் குருவின் 5ம் பார்வை சூரியன் மீது இருப்பதால் பணத்தை இழக்க வாய்ப்பில்லை. சூரிய மகா தசை 50 வயதில் 07-05-2010 முதல் 07-05-2016 வரை.
30 வயதில் சுக்கிர தசை ஆரம்பம் . 07-05-1990 முதல் 07-05-2010 வரை அந்த காலகட்டத்தில். சுக்கிர தசை சனி புக்தியில் பணத்தை இழக்க வாய்ப்பில்லை. காரணம் மகர லக்கினத்திற்கு ராஜ யோகத்தை கொடுப்பவர்கள் சனியும் சுக்கிரனும். நவாம்சத்தில் சுக்கிரனும் சனியும் 11ம் வீட்டில் கூட்டு.
3. காரணம் என்ன ?
மகர லக்கினம் . லக்கினாதிபதி சனி லக்கினத்திற்கு 12ல் விரய ஸ்தானத்தில் லக்கினம் பாப கர்த்தாரி யோகம் (ஒரு பக்கம் சனி மறு பக்கம் செவ்வாய் கேது) - எப்பொழுதும் மன அழுத்தம் இருக்கும் . விபத்து நேரிடும்.
11ம்வீடு விருச்சிக ராசி லாபாதிபதி ஆவார். 11ம் வீட்டில் வந்து அமரும் கிரகம் நீசமாகி இருந்தால் ஜாதகன் குடும்ப சொத்துக்களை இழப்பார். இந்த ஜாதகத்தில் 11ல் சந்திரன் நீசம்.
சந்திரன் நீசம் அடைந்தால் எப்பொழுதும் அமைதியற்ற மனநிலை எற்படும். மன வருத்தும் இருக்கும்.
2ல் மாந்தி இருப்பதால் வறுமையில் வாட நேரிடும். தீய கிரங்கள் கூட இருந்தால் செல்வம் இருக்காது. சொத்துக்கள் கரைந்துவிடும் .
2ல் செவ்வாயும் கேதுவும் சேர்ந்து இருப்பதால் சொத்துக்கள் தீய வழிகளில் கரையும்.
3ம் வீடு 11ம் வீட்டிலிருந்து 5ம் வீடு. 3ல் சுக்கிரன் இருப்பது நல்லதல்ல. கொடுக்கல் வாங்கல் பண விகாரங்கள் சுமுகமாக இருக்காது . சிக்கல் ஏற்படும்.
6ம் வீட்டு அதிபதி புதன் 3ல் இருப்பதால் பண இழப்புகள் எற்படும்.
8ல் ராகு இருப்பதால் வாழ்க்கை மகிழ்ச்சியின்றி இருக்கும்.
Saturday, April 09, 2016 8:18:00 AM ///////

பாதிக் கிணறைத் தாண்டியுள்ளீர்கள். எந்தத் தசா புத்தியில் பணத்தை இழந்தார் என்பதில் தவறு உள்ளது!
-------------------------------------------------
14
Blogger SSS CONSTRUCTION said...
SIR, 1. THE LAGNA LORD IS IN 12TTH PLACE WITH 12TH LORD
2 THANA STHANAM IS AFFECTED BY TWO MALEFICS AND SECOND LORD IS IN 12 PLACE WITH 12TH LORD
3. SPECULATIION BUSINESS THE 5TH PLACE AND THE 5TH LORD IS IN 3RD PAACE WTH SIX LORD BUDHA AND THE 12TH LORRD ASPPECT THEE 5H LORD VENUS
4.. IIN CHANDRAN LAGNA THE 5TH PLLACE OCCUPIED BY 8TH AND 12TH LORD
5. IN KETHU DASA HE LOST HIS MONEY IN SHARE BUSINESS..
Saturday, April 09, 2016 9:33:00 AM/////

பாதிக் கிணறைத் தாண்டியுள்ளீர்கள். எந்தத் தசா புத்தியில் பணத்தை இழந்தார் என்பதில் தவறு உள்ளது!
--------------------------------------------------
15
************Blogger adithan said...
வணக்கம் ஐயா,4ல் எட்டாம் அதிபதி சூரியன் வர்கோத்தமம்.நன்கு படித்தவர் தாய் தந்தை சொத்தும் கிடைக்க பெற்றவர்.கல்விக்காரகன் புதன் நீசபங்கம்.குறைவில்லாத கல்வி.10ம் அதிபதி சுக் 3ல் உச்சம்.கை நிறைய சம்பளம்.எல்லாம் இருந்தும் 2ம் மற்றும்,லக்னாதிபதி விரையத்தில்.விரையத்திற்க்கான நேரம் வரவில்லை.11ம் அதிபதி செவ்,2ல் உடன் கேது, சனி
பார்வையுடன்.சனி சொந்த வீட்டை பார்ப்பதாலும்,அவர் லக்னாதிபதியானதாலும்,2ம் வீட்டில் உள்ள கிரகங்களால் விரயம் இல்லை.யார்தான் அந்த வில்லன்.நிச்சயம் 11ல் அமர்ந்த 7ம் அதிபதி நீச்ச சந்திரனே.முதல் தசை சனி-இளம்பிராயம்.2ம்தசை புதன் -படிப்பு,வேலை.3ம் தசை -கேது-பாண்டித்தியம்.4,5ம் தசை சுக்,சூரி-வரவு என்று போன வாழ்க்கை சந்திர தசையில் விரையத்திற்க்கு வித்திட்டு லாபஸ்தானம் என்ற 11ம் இடம் கெட்டதால் விதி எப்படி விளையாடியது என்று உணர்த்தியது.நன்றி.
Saturday, April 09, 2016 9:54:00 AM /////
-------------------------------------------
16
***********Blogger daya nidhi said...
<<< லக்னாதிபதி யும் ,தனதிபதியுமான சனி ஆட்சி பெற்ற விரயாதிபதி குருவுடன் சேர்க்கை >>>>..
<<< தன காரகன் குரு அம்சத்தில் நீசம் >>
<<<7 க்குரிய சந்திரன் பாதகஸ்தானத்தில் நீசம் >>
<<< பாதகதிபதி செவ்வாய் வர்கோதமம் பெற்று வலுவடைந்தது >>
<<< தன ஸ்தானத்தில் பதகாதி சேவையுடன் கேது சேர்கை >>
<< இரண்டு மற்றும் ஏழாம் இடங்கள் பாதிப்படைந்ததால் பங்கு
சந்தை ஒத்து வரவில்லை >>
2
<< 8 க்குரிய சூரிய தசாவில் .நீசம் பெற்ற சந்திரன் புத்தியில்
பண இழப்பு >>
நன்றி , சு . தயாநிதி , அவியனுர்.
Saturday, April 09, 2016 11:00:00 AM///////
--------------------------------------------------------
17
Blogger asbvsri said...
Quiz no: 108 Answer:
Dear Sir,
Person born on 15th April 1960. Makara lagnam. Lagnathipathi Sani in 12th house with Guru in Thanuzu. In 2nd house Sevvai (Varkothamam) with Kethu and Mahdi. In 11th house Chandran Needham. In 4th house Supriya Ucham and Varkothamam. Owner of 12th house Guru (Dhanakarakan) in 12th but Ucham in Navamsam.. Owner of 6th and 9th house Budan Needham. Since Budan is Needham he won’t be successful in share market. But Budan is Neecha bangam but won’t help. Yogathipathi Sukran Ucham.
Sukran, Supriya and Guru Ucham. Budan Neecha bangam. Chandran Neecham. The person has earned a lot during Sukra dasa from 1991 to 2010 as he is yogathipathi.
After Sukra dasa at the age of 51 Suriya dasa started and he started loosing heavily since Suriyan is the lord of 8th house and also he is Ucham. During Surya dasa Chandra bukthi as Chandran is neecham he should have lost heavily in the share market.
Best regards,
K R Ananthakrishnan
Chennai
Saturday, April 09, 2016 12:09:00 PM//////

பாதிக் கிணறைத் தாண்டியுள்ளீர்கள். எந்தத் தசா புத்தியில் பணத்தை இழந்தார் என்பதில் தவறு உள்ளது!
---------------------------------------------------
18
//////Blogger seenivasan said...
Dear sir,
During Kethu dasa he must have lost his money due to the following reasons
1. Second place for wealth and there are three villans kethu,Mars and Mandhi in that place . Kethu is meant for lottery ,suthu & vathu hence his period made him to loose all his fortunes
2.Second place lord Saturn who is also lagna lord and placed in 12 th house along with 12 th house lord from lagnam-this is not beneficial point.
Saturday, April 09, 2016 12:16:00 PM////////

பாதிக் கிணறைத் தாண்டியுள்ளீர்கள். எந்தத் தசா புத்தியில் பணத்தை இழந்தார் என்பதில் தவறு உள்ளது!
----------------------------------------------------------
19
//////Blogger amuthavel murugesan said...
ஜோதிட புதிர் 108 பதில்:
வணக்கம் ஐயா,
இவர் 15.04.1960ல் பிறந்து இருக்க வேண்டும்
1. லக்னாதிபதி விரயச்சானத்தில் விரயாதிபதி குருவுடன்.
2. 11ல் நீச்ச சந்திரன் 2 ல் செவ்வாய் மற்றும் கேது
3. லக்னம் சனி மற்றும் செவ்வாய்,கேதுவால் சுழப்பட்டு உள்ளது.
4. 50 வயதிற்கு மேல் சுரியன் மகாதிசையில் சந்திர புத்தியில் ஜாதகர்பணத்தை இழந்து இருப்பார்.
மு.சாந்தி
Saturday, April 09, 2016 1:37:00 PM///////

பாதிக் கிணறைத் தாண்டியுள்ளீர்கள். எந்தத் தசா புத்தியில் பணத்தை இழந்தார் என்பதில் தவறு உள்ளது!
--------------------------------------
20
////////Blogger sriram1114 said...
வணக்கம் ஐயா
ஜாதகர் 15 ஏப்ரல் 1960,2:30AM பிறந்தவர்.
1.லக்னாதிபதி மற்றும் தனாதிபதி சனி 12ல் மறைவு மற்றும் 12ஆம் அதிபதியுடன்
2.வர்த்தககாரகர் குரு 12ல்
3.தனஸ்தானம் 27 பரல் மற்றும் சனி 2 பரல் மட்டும்
4.2ஆம் வீட்டில் லாபாதிபதி செவ்வாய் ஆனால் பகை வீட்டில் வலுவிழந்து கேது மற்றும் மாந்தியுடன்
5.7ஆம் வீட்டவர் வியாபாரத்திற்கு உரியவர் சந்திரன் ராசியில் நீச்சம்.
கேது தசை சந்திர புக்தியில் பங்குச்
சந்தையில் பணத்தை இழந்திருக்கலாம்.
நன்றி
ஸ்ரீராம்
Sunday, April 10, 2016 1:23:00 AM //////

பாதிக் கிணறைத் தாண்டியுள்ளீர்கள். எந்தத் தசா புத்தியில் பணத்தை இழந்தார் என்பதில் தவறு உள்ளது!
---------------------------------------------
21
////////Blogger ravichandran said...
Respected Sir,
My answer for Quiz No. 108:
Reason for Question No.1:
i) Lagna lord is in twelfth house as well as alongwith twelfth lord. This is first and foremost reason for business is not suitable for him. (even speculation business).
ii) Tenth lord is in 6th house from its own house.(6/8 position)
iii) Lagna lord is alongwith house of loss (12th house) (here 12th lord also as dhana karaga) lord. Job is suitable for him. 2nd house also affected.
Reason for Question No.2:
i) In Sun dasa, Guru, Rahu and Sani bhutis he incurred heavy loss in speculation business.
With kind regards,
Ravichandran-avn
Sunday, April 10, 2016 1:58:00 AM//////

பாதிக் கிணறைத் தாண்டியுள்ளீர்கள். எந்தத் தசா புத்தியில் பணத்தை இழந்தார் என்பதில் தவறு உள்ளது!
-------------------------------------------------
22
/////Blogger Kumanan Samidurai said...
அய்யா வணக்கம்
1. குரு மற்றும் சனி 12ல் இருந்து ஷேர் மார்க்கெட் பெரிதாக சம்பாதிக்க முடியலை புதன் நீசம் ஆகையாலும்
சம்பாதிக்க முடியலை
2. சூரிய தசையால் நஷ்டம். சூரியன் 8ஆம் வீடு தசை அங்கு ராகு உள்ளார் ஆகயால்சூரிய தசை ராகு புத்தியால் நஷ்டம்
அன்புடன் சா.குமணன்.
Sunday, April 10, 2016 12:48:00 PM /////

பாதிக் கிணறைத் தாண்டியுள்ளீர்கள். எந்தத் தசா புத்தியில் பணத்தை இழந்தார் என்பதில் தவறு உள்ளது!
-------------------------------------------------
23
//////Blogger bala said...
Vanakkam Iyya,
Magara lagna kaarar.
Lagnathipathi + 2 aam idathu athipathi - Saneeswaran - Langathirku 12il (Viraya sthanathil) + Viraya sthana athipathi Guru vudan Kootani. Viraya sthanathipathi Guru aatchi balathudan.
2 il - Sevvai(Villan - Magara lagnathirku - 11 aam athipathi/Paathagathipathi) + Kethu+ Maandi
11il - Chandran neecham (Thei pirai chandran - 7aam idathu athipathium kooda)
1. Pangu chandai tholvi
Suya thozhil, pangu chandai - Ivaigaluku - Lagnathipathi+2aam idathuathipathi+10aam athipathi+11aam athipathi nandraga iruka vendum.
Intha jaathagathil - 10 aam ida athipathi matum ucham petrullar. Matra anaivarum baathipathu adainthu ullanar.
Saneeswaran (1&2 aam idam athipathi) - Virayathi pathi kootal ketttu ullar + 11aam athipathi sevvai kethu udan kootal ketttu ullar
Ivai anaithum sernthu avarku pangu chandayil tholviyai thandhathu
2. Kethu dasai - Guru/Sani buthiyil Jaathagar panathai izhandhar. Saneeswaran paarvai 2aam idathiruku irundhalum Guru vudan sernthu sella kaasaga aagivitar. Lagnathipathium, virayathipathium sernthal vaazhakai avanuku alla, vazhakai poratamaga irukum.
Nandri,
Bala
Sunday, April 10, 2016 2:24:00 PM//////

பாதிக் கிணறைத் தாண்டியுள்ளீர்கள். எந்தத் தசா புத்தியில் பணத்தை இழந்தார் என்பதில் தவறு உள்ளது!
--------------------------------------
24
/////Blogger JAWAHAR P said...
குரு வணக்கம்
பங்கு வர்தகத்திற்க்கு குரு, ராகு
2ம் இடத்து சனி குருவுடன் 12ல், ராகு 8ல்
மற்றும் 2ல் கேது
குரு, ராகு தசா மற்றும் புத்தி நடக்கும் போது தன்னிடம் இருப்பதை
பங்கு வர்தகத்தில் இழப்பார்
நன்றி
ப.ஜவஹர்
Sunday, April 10, 2016 10:48:00 PM/////

பாதிக் கிணறைத் தாண்டியுள்ளீர்கள். எந்தத் தசா புத்தியில் பணத்தை இழந்தார் என்பதில் தவறு உள்ளது!
---------------------------------------------------------------
25
Blogger mohan said...
ஆசிரியர் ஐயா வணக்கம்.
சிறு மாணவன் நான், ஆசையினால் பதில் அளிக்கின்றேன். தவறு இருந்தால் சுட்டிக்காட்டுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
புதிர் 108க்கான் பதில்:
பிறந்த தேதி: 15.4.1960,
நேரம்: 2.30 அதிகாலை
லக்னம்: மகரம்
ராசி: விருச்சிகம் மேலும் சந்திரன் நீசம்.
லக்னாதிபதி சனி 12ல் மறைவு.
குரு ஆட்சி வீட்டில் இருந்தாலும் 12ல் மறைவு.
சூரியன்: உச்சம்.
சுக்கிரன் உச்சத்தில் இருந்தாலும் நீசப் புதனுடன் கிரக யுத்தம். அதாவது புதன்:5.06 பகை, சுக்கிரன்: 13.23 பாகை. மேலும் 3ல் மறைவு.
பாபகர்தாரி யோகம்.
செவ்வாயும் சூரியனும் வர்க்கோத்தம் பெற்றுள்ளது.
10க்குரிய தொழில்பாக அதிபதி சுக்கிரன் 3ல் மறைவு அதனால் பங்குச்சந்தை ஒத்துப்போகவில்லை.
சுக்கிர தசை புதன் புத்தியில் சிரமப்பட்டிருப்பார்
நன்றி ஐயா.
அன்பன்
ந.மோகனசுந்தரம், திருநெல்வேலி
Monday, April 11, 2016 1:32:00 AM /////////

பாதிக் கிணறைத் தாண்டியுள்ளீர்கள். எந்தத் தசா புத்தியில் பணத்தை இழந்தார் என்பதில் தவறு உள்ளது!
-------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

8.4.16

Astrology: ஜோதிடப் புதிர் எண்.108 பங்குச் சந்தையில் பணத்தைப் பறிகொடுத்தவரின் ஜாதகம்!


Astrology: ஜோதிடப் புதிர் எண்.108 பங்குச் சந்தையில் பணத்தைப் பறிகொடுத்தவரின் ஜாதகம்!

8-4-2016


மேலே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.

லட்சக்கணக்கான ரூபாய்களை பங்குச் சந்தையில் இழுந்ததோடு நொந்து நூலாகிப் போனவரின் ஜாதகம் இது!

இன்றைய கேள்விகள்:

1.  பங்குச் சந்தை, ஜாதககப்படி, ஜாதகருக்கு ஏன் ஒத்துவரவில்லை?
2. எந்த மகா திசை, எந்த புத்தியில் ஜாதகர்பணத்தை இழந்தார்? அதற்கான காரணம் என்ன?

ஜாதகத்தை அலசி உங்கள் பதிலை எழுதுங்கள்

அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்!
 வளர்க நலமுடன்!