மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.1.16

Astrology - Quiz 102 Answer: தங்கமழையும் பெய்யவில்லை! குயிலும் பாடவில்லை!

Astrology - Quiz 102 Answer: தங்கமழையும் பெய்யவில்லை! குயிலும் பாடவில்லை!

தங்கமழை எப்படிப் பெய்யும்? அது கவிஞர் வைரமுத்துவின் வரி. திரைப்படம் ஒன்றில் நாயகியின் மனநிலையைக் குறிக்க அந்த வரியைப் பயன்
படுத்தினார்! சந்தோஷமான மன நிலைமையில் சாதா மழையே தங்க மழையாகத் தெரியும்! அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அது புரியும்.
---------------
சரி, அதை விடுங்கள். பாடத்திற்கு வருவோம்!

காலசர்ப்ப தோஷம் என்பது என்னவென்று உங்கள் அனைவருக்கும் தெரியும். பாடம் நடத்தியுள்ளேன்.

ராகு & கேதுவிற்குள் அத்தனை கிரகங்களும் அடங்கிவிடும் நிலைமை அது. அதன் கால அளவு பற்றி இருவேறான கருத்துக்கள் உள்ளன.

சிலர் 30 அல்லது 33 வயதுவரை காலசர்ப்ப தோஷம் இருக்கும். அதற்குப்பிறகு அந்த தோஷமே யோகமாக மாறிவிடும் என்பார்கள்.

வேறு சிலர் கால சர்ப்ப தோஷம் லக்கினத்தில் எத்தனை பரல்கள் உள்ளனவோ அத்தனை ஆண்டுகள் நீடிக்கும் என்பார்கள்.

ஆனால் கால சர்ப்ப தோஷத்தில் இரண்டு வகைகள் உள்ளன.

1. காலமிரித யோகம்: ராகு முன்னால் நின்று கொடி பிடிக்க மற்ற கிரகங்கள் அதன் பின்புறம் நின்று வரவும், கேது கடைசியாக வரும் அமைப்பு. இது
 இது நன்மை பயக்கக்கூடிய அமைப்பு.

2. விலோமா யோகம்: கேது முன்னால் நின்று கொடி பிடிக்க மற்ற கிரகங்கள் அதன் பின்புறம் நின்று வரவும், ராகு கடைசியாக வரும் அமைப்பு.
 இது தீமை பயக்கக்கூடிய அமைப்பு.

There are two types of Kala Sarpa Yogas. One is when all of the seven grahas that are caught in the axis are moving toward the mouth of the serpent, Rahu. This is called kalamrita yoga and is considered the main formation. The other is when all of the planets are moving towards the tail
Ketu and is known as viloma.

அது சம்பந்தமாக ஒரு ஜாதகத்தை அலசுவதற்கு நேற்றுக் கொடுத்திருந்தேன்.
-----------------------------------------------------------------------------------


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஜாதகத்தைப் பாருங்கள்.

இது ஒரு பெண்மணியின் ஜாதகம். திருமணவாழ்வு, அதிருப்தியுடன் துவங்கிக் கடைசியில் சோகத்தில் முடிந்தது. ஆமாம். திருமணமான சில
மாதங்களிலேயே கணவர் இறந்துவிட்டார். கணவர் உடல் நலமில்லாதவர் என்பது திருமணத்திற்குப் பிறகுதான் அம்மணிக்குத் தெரியவந்தது.

அதற்குப் பிறகு என்ன செய்வது?

மனதைத் தேற்றிக்கொண்டு அம்மணி வாழ்ந்தார். சமூக சேவைகளைச் செய்து தன் வாழ்நாட்களைப் பயன் உள்ளதாக்கிக் கொண்டார்.

என்ன காரணம்?

ஜாதகத்தைப் பாருங்கள். கேது கொடிபிடித்துக் கொண்டு செல்கிறது. மற்ற கிரகங்கள் அனைத்தும் அதன் பின்புறம் உள்ளன. ஏழுக்குரிய சுக்கிரன்
ஏழாம் இடத்திற்குப் பன்னிரெண்டில் விரையத்தில் அமர்ந்தார். உடன் ஜோடி சேர்ந்த எட்டாம் அதிபதி புதன் கணவரைக் காலி செய்து விரையத்தைப்
பூர்த்தியாக்கினார். 2ஆம் அதிபதி குரு நீசமானதால் குடும்ப வாழ்க்கையைக் கொடுக்கவில்லை.

பத்தாம் அதிபதி சூரியன் அந்த வீட்டிற்குப் பத்தில். அத்துடன் பாக்கியாதிபதி சந்திரன் அந்த வீட்டிற்கு எட்டில் அமர்ந்து ஜாதகியின்  பாக்கியங்களைக் கெடுத்தாலும், பத்தாம் இடத்தைத் தன் பார்வையில் வைத்து, ஜாதகியைச் சமூக சேவைகளில் ஈடுபட வைத்தார்.

ஆகவே காலசர்ப்ப தோஷ ஜாதகர்கள், தங்கள் ஜாதகத்தில் கொடி பிடித்துச் செல்வது யார் - ராகுவா அல்லது கேதுவா என்று பார்ப்பது அவசியம்.

விளக்கம் போதுமா?

4-12-13 அன்று இந்தப் பாடம் முன்பே வெளிவந்துள்ளது. இரண்டாண்டுகளில் நிறைய புது முகங்கள் வந்துள்ளதால் அவர்களுக்காக மீண்டும் வலை
ஏற்றினேன். அதை நினவுபடுத்தி ஒரு அன்பர் எழுதியுள்ளார். அவருக்கும் எனது பாராட்டுக்கள் உரித்தாகும்!

19 அன்பர்கள் சரியான விடையையோடு ஒத்து வரும்படியான பதிலை எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். கேது
கொடிபிடிக்கும் ஜாதகம் என்று கண்டு பிடித்து எழுதியவர்கள் மூவர். அவர்களுடைய பதிலுக்கு +++++++ என்ற குறியிட்டு அடையாளப்
படுத்தியுள்ளேன். அவர்களுக்கு விசேடமான பாராட்டுக்கள்

அன்புடன்
வாத்தியார்
======================================================
1
//////Blogger Srinivasa Rajulu.M said...
தாமதத் திருமணம்; ஆனால் நீடிக்காத திருமண வாழ்க்கை
1) களத்திர மற்றும் சயனபோக அதிபதி மற்றும் காரகன் ஆகிய சுக்கிரன் ராசியிலும் அம்ஸத்திலும் மறைவிடத்தில் இருக்கிறான்.
2) பாபிகளின் பார்வை மற்றும் இருப்பு களத்திர ஸ்தானத்தில் அமைந்தது.
3) இருப்பினும், நீசனானாலும் குருவின் பார்வை இருந்ததால் குருதசை முடிவில் (தாமதத்) திருமணம் நடந்தது.
குடும்ப-சுக ஸ்தானாதிபதி நீசம்; மறைந்துவிட்ட எட்டாம் அதிபன் புதன் மற்றும் எட்டாம் இடத்தில் செவ்வாயின் பார்வை உள்ளதால் திருமண வாழ்க்கை சீக்கிரம் முடிந்தது. சயனபோக அதிபதியும் மறைந்ததால் தங்க மழை இல்லை!
Friday, January 29, 2016 10:02:00 AM ///////
----------------------------------------------------
2
/////Blogger Jaya Prakash said...
viruchikkka lagnam....lanatipathi sevvai raaguvodu serkai...7aam athipathi sukranae kalathirakaaraganaagi 7kku 12l maraivu...thirumana vaazhvu nimmathi illai...thanga mazhaiyum illai..kuyilum paadavillai...5 aam athipathium neecham..9aaam athipathi raagu saaram..raagu dasai,gurudasai,sanidasai,bhudhn dadsai,kethudasai,sukra dasai...ena athu atduthu yogam illa dasaikall...thirumana vaazhvu sugapadaatha jathagaththukku nalla utharaanam
Friday, January 29, 2016 10:20:00 AM /////
----------------------------------------------------------
3
/////Blogger Sakthivel K said...
வணக்கம் சார்..........
ஜாதகிக்கு விருச்சகலக்னம். செவ்வாய்+ வில்லன்ராகுவுடன்!
7ஆம் இடத்தில்.கேடிகள் சூரி+கேதுவும்
7ஆம்அதிபதி 6ல். 7ஆம்இடத்திற்கு12ல்(சுக்கிரன் சுகபடவில்லை)
2ஆம்இடத்திற்கும்,7ஆம்இடத்திற்கும் யுனிவர்சல்கேடி சனியின் லேசர்பார்வை
அம்மனிக்கு30வயதுக்குமேல். ரத்தமழை+கன்னீர்மழை பெய்திருக்கும்
bye.......
Friday, January 29, 2016 10:24:00 AM/////
-----------------------------------------------------
4
//////Blogger KJ said...
Sir,
Native will not be having good Marriage life. Possibility of separation after Marriage.
Because, Kethu sits in Seventh house and Ragu in Lagnam. Karaga Sukran with 8th house owner in sixth even though Vibareeth Raja Yoga is there. 
Thanks,
Sathishkumar GS
Friday, January 29, 2016 2:11:00 PM /////
--------------------------------------------------
5
/////Blogger venkat said...
உயர்திரு வாத்தியார் ஐயா வணக்கம்,இந்த புதிர் தாங்கள் முன்பே அலசியதுதான்,http://classroom2007.blogspot.in/2013/12/astrology.html
Friday, January 29, 2016 7:13:00 PM /////
--------------------------------------------------
6
//////Blogger selvaspk said...
அம்மணியின் வாழ்வில் தங்க மழை பெய்ததா? 
தமிழில் குயில் பாடியதா? 
அதாவது அம்மணியின் திருமண வாழ்வில் அதெல்லாம் நடந்ததா? 
I am not clear on question. But I guess you ask about marriage life, wealth of the person.
Marriage
1. 7th house on strong kalathira dosam with all natural malefic aspects (Saturn, Mars, sun, Raghu). With 10 lord with kethu, Venus sitting on 12th from 7th house, debilitated Jupiter, Mars and confirms MARRIAGE DENIAL. Though Jupiter aspects, not strong enough getting a marriage, she should have decided to go on public service.
2. She should be a govt servant, possibly police or military official making her shine among all her peers or male coworkers. Debilitated mars with aspect of Saturn make her stubborn and disciplined nature. Keen intelligence planet Kethu in 7th with Sun the lord of 10th house & bakyathipathi getting jupiter saturn and mars aspects notes she is incorruptible, go high positions on carrier with commanding superior position.
3. Monetary wise, she should be good. Debilitated Mars and Jupiter and aspect of strong Saturn on 2nd house from lagna, moon, navamsa denotes continuous and surplus flow of money through her job. She may even be doing charitable works for social welfare.
Friday, January 29, 2016 10:07:00 PM //////
-------------------------------------------------
7
//////Blogger Rajam Anand said...
அன்புள்ள வாத்தியாரிற்கு வணக்கங்கள்,
முதலாவதாக, time extension தந்ததிற்கு மிக்க நன்றி. போனவாரத்தான் கேள்விக்கு பதிலெழுதியபின் upload பண்ணவந்தபோது உங்கள் விடை காத்திருந்தது.
இந்த வாரத்தான் கேள்விக்கு பிறந்த திகதி கணிக்க முடியவில்லை, எனினும்...........
செவ்வாய் லக்கினத்தில், சொந்த வீடும் கூட, ஆனால் அம்சத்தில் செவ்வாய் நீசம். லக்கினத்தில் ராகுவும் கூட.
சனி அம்சத்தில் உச்சம். சனியும் குருவும் பரிவரத்தனை யோகம் ராசியில்.
சூரியனும் கேதுவும் ஒன்றுசேர்ந்திருப்பது நல்லதல்ல, அதுமட்டுமல்லாமல் 7ம் வீட்டிலும். 7ம் வீட்டதிபதியாகிய சுக்கிரன் 6ம் வீட்டில் மறைந்துவிட்டார், மற்றையது பாபகர்த்தரி யோகத்திலும் இருக்கின்றார். செவ்வாயும் சனியும் 7ம் வீட்டை 7ம் பார்வையாகவும் 3ம் பார்வையாகவும் பார்க்கின்றார்கள். 7ம் வீட்டில் கேதுவும் கூட.
குரு 7ம் வீட்டை, 5ம் பார்வையாக பாரத்தாலும், சனி 10ம் பார்வையாக குருவை பார்க்கின்றது. ஆகவே குருவின் பார்வையாலும் நன்மையில்லை.
மொத்தமாக ஜாதகி ராகு தசையில் திருமணம் செய்து, ராகு திசையிலே முடிந்திருக்கலாம். 5ல் சனியிருப்பதனால் பிள்ளைகளாலும் பலனில்லை.
அன்புடன்
ராஜம் ஆனந்த்
Saturday, January 30, 2016 4:32:00 AM/////
--------------------------------------------------
8
++++++++++//////Blogger kmr.krishnan said...
'முன்னால் பார்த்தால் ராவுத்தர் குதிரை;பின்னால் பார்த்தால் செட்டியார் குதிரை' என்பது போலத்தான் இந்த ஜாதகம் உள்ளது.
ஜாதகி 1 ஜூன் 1937; மாலை 6 மணி 33 நிமிடம்,50 வினாடிக்குப் பிறந்தவர்.
பிறந்த் இடம் சென்னை என்று எடுத்துக் கொண்டேன்.
1.ஏழாம் அதிபன் சுக்ரன் ஆறில் மறைந்து எட்டாம் அதிபன் புதனுடன் தன் வீட்டிற்கு 12ல் நின்றது திருமண வாழ்வுக்குப் பெரிய பாதகம்.
2. ஏழாம் வீடு சனி, செவ்வாய், ராகுவால் பார்க்கப்பட்டும், சூரியன் கேதுவால் ஆக்கிரமிக்கப்பட்டும் உள்ளதால் மண வாழ்க்கைக்கு பாதிப்பு.
3. கேது கொடிபிடித்துச் செல்லும் சர்ப தோஷம்.
4.ராசி நவாம்சம் இரண்டிலும் ஏழாம் இடத்திற்குக் குருவின் பார்வை என்பதே ஒரு ஆறுதலான செய்தி.ஆனாலும் வலிமையற்ற குரு.
கால சர்பதோஷத்தால் 30 வயதுவரை திருமணம் ஆகவில்லை. பின்னர் சனிதசா வந்துவிட்டது.
இவர் திருமணம் ஆகாமல் காலத்தைக்கழித்தார் என்று கணிக்கிறேன்.
Saturday, January 30, 2016 12:26:00 PM//////
----------------------------------------------
9
/////Blogger SSS CONSTRUCTION said...
SIR, THE ABOVE LADY LOSE HER HUSBAND IN EARLY AGE BECAUSE FIRST,
1. THE LAGANA LORD IS IN 6TH PLACE 
2. THE 2ND LORD GURU IS IN NEECHAM AND THE 7TH LORD IS IN 6TH PLACE WITH 8TH LORD BUDHAN 
3. THE MANGALA STHANAM 8TH LORD BUDHAN IS IN 6TH PLACE WITH 12TH LORD
4. IN NAVAMASA 7TH LORD IS IN 12TH PLACE AND RAGU IS IN SECOND PLACE
5. IN NAVAMASA THE 12TH LORD MARS IS IN 8TH PLACE 
SO THESE INDICATION TO SHOW US HER FIRST MARRIAGE LIFE END EARLY BUT THE SECOND MARIAGE HOPE IS THERE IN RASI 7TH AND 11TH LORD IN CONJUCTION INDICATES HER SECOND MARRIAGE
Saturday, January 30, 2016 12:47:00 PM /////
-----------------------------------------------
10
/////Blogger Mrs Anpalagan N said...
குயில் கூவி என்ன, தங்க மழை பெய்தென்ன? காதும் அவுட்டாகி, கண்ணும் அவுட்டாகினால், எதுவும் உபயோகமில்லை! 
லக்கினாதிபதி ராகுவுடன் லக்கினத்தில்! எழில் சூரியனும் கேதுவும். 
ஏழாம் அதிபதி வெள்ளி, ஆறில்! கூடவே எட்டாம் அதிபதியுடன்! 
ஏழுக்கு வியாழ பார்வை உண்டென்பதால் திருமணமாகி இருக்கும். ஆனால் அது திருப்தியை தரவோ, நீடித்திருக்கவோ வழியில்லாத கிரக நிலைகள்.
Saturday, January 30, 2016 1:37:00 PM//////
------------------------------------------------
11
/////Blogger bala said...
Vanakkam Iyya,
Viruchiga lagna jathagi
Lagnathipathi - Sevai lagnathil + raagu vudan kootani (Sevvai balam izhandhu ullar - Navamsathil neecham)
Thirumana vaazhkai patri paarpathrku 2 + 7 aam idam paarka pada vendum
7 aam idathu athipathi sukran antha veetiruku 12 il ullar + 8aam athipathi budhan udan kootani (lagnathiruku 6il)
3 aam idathil amarndha neecha guru (Navamsathil - sama veetil ullar) 5 aam paarvaiaaga 7aam idathai paarkirar + 7 aam veetiruku saniswaranin 3 aam paarvaiyum ullathu + 7 aam & 8 aam veetin mel sevvai yin paarvai um ullathu
Neecha guru aanalum, guru dasayil jaathagiku thirumanathai nadathi veithaar
lagnathirku 6 aam idathil 7+8 athipathi kootaniyinal jathagi kanavarai pirinthu vaazhvar (Husband would have died or divorced her)
2 aam idathu athipathi neecham petru + 2 aam idathirku saniswaranin 10aam paarvai um ullathu - Ithanal kudumba vaazhkai nandraga irukaathu...
Chandra lagnathil irundhu 2 aam idathirku uriyavanum guru bhagavan thaan. 
Avar neecham petru 12il(chandra lagnathirku) poi irundhadhum jathagiyin thirumana vaazhkai nandraga illai enbayathai solgirathu.
Nandri,
Bala
Saturday, January 30, 2016 2:03:00 PM //////
---------------------------------------------
12
/////Blogger selvam velusamy said...
வணக்கம் குரு,
இப்பெண்ணிற்கு ஏழாமிடதில் சூரியன், கேது சேர்க்கை, சனி பார்வை, ராகு பார்வை, செவ்வாய் பார்வை, கலத்திர காரகனும் ஏழுக்குடையவனுமாகிய சுக்கிரன் மாங்கல்ய ஸ்தானாதிபதி புதனுடன் ஆறில் மறைந்து விதவை தோசம் இருந்தாலும் ஏழாமிடத்திற்கு குரு பார்வை உள்ளதால் திருமணம் நடந்திருக்க வாய்ப்பு உள்ளது.ஆனாலும் இவர் கணவரை பிரிந்தோ அல்லது இழந்தோ அல்லது விவாகரத்து பெற்றோ இருப்பார்.
நன்றி
செல்வம்
Saturday, January 30, 2016 2:35:00 PM//////
--------------------------------------------
13
//////Blogger Spalaniappan Palaniappan said...
அய்யா வணக்கம் 30/01/2016
ஜோதிட புதிர் -102. கால தாமத திருமணம் - திருமண வாழ்க்கை சுகமில்லை. 
ஜாதகி விருச்சிக லக்னம், கும்ப ராசி.
லக்னாதிபதி செவ்வாய் (வக்ரம்) & நவாம்சத்தில் நீசம்.
லக்னத்தில் ராகு உச்சம். 7ல் கேது நீசம். மாந்தி தவிர்த்து எல்லா கோள்களும் ராகு - கேதுவுக்குள் இருப்பதால் சர்ப்ப தோஷம்.
தனம் / பூர்வபுண்ணிய காரகன் குரு ராசியில் நீசம் & நவாம்சத்தில் குரு+மாந்தி சேர்க்கை.
களத்திரகாரகன் & களத்திர ஸ்தானதிபதி சுக்கிரன் தன் வீட்டிற்கு 12 ல் விரயத்தில். 
அச்டமாதிபதி & லாபாதிபதி புதன் 12ல் விரயத்தில். 
7ம் அதிபதி சுக்கிரன் நின்ற வீட்டிற்க்கு 2ல் நீச கேது. 
செவ்வாயும் சுக்கிரனும் 6/8 ஸ்தானத்தில், மேலும் 7 & 8ம் அதிபதிக்கு பாபகர்தாரி யோக அமைப்பு இருப்பதாலும் திருமண தடை & கால தாமத திருமண அமைப்பை காட்டுகிறது.
4ம் அதிபதி சனி 5ல் இருப்பதும் குரு நீசம் பெற்றதால் சுகம் குறைவு & இல்லறம் சிறப்பாக அமையவில்லை.
களத்திர & ஆயுள் ஸ்தானதிபதி 6ல் மறைவு பெறுவதும் சனி,செவ்வாய் பார்வை 7, 8 க்கு கிடைப்பதும் திருமண வாழ்வை சிறக்க செய்யவில்லை. 
குரு திசை ராகு புத்தியில் திருமணம் நடந்தது . ஜாதகியின் கணவருக்கு ஆயுள் பலம் சிறப்பாக இல்லாதலால் குரு திசை நிறைவில் இல்லற வாழ்க்கையில் கசப்பான நிகழ்வுகள் நடந்தது. (மாங்கல்ய ஸ்தானம் பலம் இல்லை) பின்னர் சனி திசை பிற்பகுதியில் ஓரளவு வாழ்க்கை பாதை சீரானது என்றாலும் ஜாதகியின் அடுத்தடுத்த திருமணங்கள் தோல்வியில் தான் முடிந்திருக்க வேண்டும்.
அன்புடன் 
சோமசுந்தரம் பழனியப்பன், மஸ்கட் 
Saturday, January 30, 2016 3:42:00 PM /////
----------------------------------------------
14
///////Blogger hamaragana said...
அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
ஜாதகி .லக்னம் விருசிகம் .
லக்னத்தில் லக்னாதிபதி உடன் உச்சமாக ராஹு ...அடுத்து கேது 7ல் ஆஹா கடிகார சுற்றில் கேது கோடி பிடிக்க எல்லா கிரகங்களும் உள்ளடங்கி **விலோமா *** யோகம் அதாவது கால சர்ப்ப தோஷம்.
அலசியாச்சு ..அய்யா ..ஏற்கெனெவே பாடம் 461 ல் மாதிரி ஜாதகம் எண் 21.
திருமணம் ஆகி விதவை ..பொருளாதார ரீதியாக பரவா இல்லாமல் இருக்கும் ஏனென்றால் 11ல் ஜிகஜாண்டிக் வில்லன் மாந்தி .
Saturday, January 30, 2016 4:23:00 PM //////
---------------------------------------------------
15
++++++++++///////Blogger venkatesh r said...
அம்மணியின் திருமண வாழ்வில் புயல் வீசியது. 
அலசல்:
கேது கொடி பிடிக்கும் கால சர்ப்ப தோஷமுள்ள ஜாதகம். லக்கினாதிபதி செவ்வாய் வக்கிரகதியில் ராகுவுடன் சேர்ந்து நவாம்சத்தில் நீசம் அடைந்து வலுவிழந்துள்ளார். தனாதிபதியும் குடும்ப ஸ்தானாதிபதியுமான குரு பகவான் 3மிடத்தில் வக்கிரகதியுடன் நீசமடைந்து விட்டார்.களத்திராதிபதியும், களத்திரகாரகனுமான சுக்கிர பகவான் ஆறில் அட்டமாதிபதி புதனுடன் சேர்ந்து மறைந்து விட்டார். தவிர அபகர்த்தாரியின் பிடியில் உள்ளார். களத்திர ஸ்தானத்தில் சூரியன் மற்றும் கேதுவின் கூட்டணி வேறு. சனி பகவான் தன் 3ம் தனிப்பார்வயில் 7மிடத்தை பார்க்கிறார். இவ்வளவு கெட்ட பலன்கள் இருந்தும், குரு பகவானின் 5ம் தனிப்பார்வை 7ம் இடத்தில் விழுகிற ஒரே காரணத்தினால் அம்மணிக்கு குரு தசையில் திருமணம் நடந்தது. ஆனால் திருமணம் நடந்த சில வருடங்களில் சனி தசையில் கணவரை இழந்து தனிமரமானார்.
Saturday, January 30, 2016 6:33:00 PM//////
-----------------------------------------------------
16
///////Blogger GOWDA PONNUSAMY said...
அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
க்விஸ் 102க்கான அலசல்.
திருமண வாழ்வு நோயாளிக் கணவனால் சோகத்தில் முடிந்திருக்கும்!
கேது பகவான் கொடி பிடித்துச் செல்லும் காலசர்ப்ப தோஷ ஜாதகம்!
மகர லக்கின ஜாதகம்.லக்கினாதிபதி செவ்வாய் லக்கினத்தில் ஆட்சி பலத்துடன் இருந்தாலும் ராகுவுடன் கூட்டணி. 7மிடத்தில் அமர்ந்த சூரியன் மற்றும் கேதுவின் பார்வையால் கெட்டுள்ளார்.செவ்வாய் 6மிடத்துக்கும் அதிபதியாக, வில்லனுமாகி லக்கினத்தில் ராகுவுடன் சேர்ந்து கெட்டுள்ளார்.மூர்க்கத்தனம் மிகுந்தவராயிருப்பார்
2,5 க்கான அதிபதி குரு பகவான் 3ல் மறைந்து,நீச்சம் பெற்று கெட்டுள்ளதால் குடும்பவாழ்க்கை இல்லை. 3ம் பதி சனியும் 5ம் பதி குருவும் பகை பெற்ற பரிவர்த்தனை.
7மிட அதிபதி சுக்கிரன், 8ம் பதி புதனுடன் சேர்க்கை பெற்று 6மிடத்தில் அமர்வு.
களத்திராதிபதி சுக்கிரன் 6ல் மறைந்ததால் கணவன் நோயாளியாகி, சுக்கிரன் தன் வீட்டிற்க்கு 12ல் மறைந்ததால், ஜாதகி கணவனை இழந்திருப்பார்.
பாக்கியாதிபதி சந்திரன், பாதகாதிபதியாகி லக்கினத்திற்க்கு 4ல் பகை வீட்டில் அமர்ந்து திக் பலம் பெற்றாலும், தன் வீட்டிற்க்கு 8ல் அமர்ந்ததால் பலம் இழந்துவிட்டார்.தேய்பிறைச் சந்திரன் பாவியாகிறார்.
கும்ப ராசிக்கு 7ம் பதி சூரியன்,ராசிக்கு 4ல் அமர்ந்தாலும், கேதுவின் சேர்க்கையால் கிரகண தோஷம் அடைந்து, லக்கினத்திற்க்கு 7மிட மாகி களத்திர தோஷமளித்துள்ளது.
எந்த கிரகமும் நண்மை செய்யும் அமைப்பில் இல்லாதது துரதிர்ஷ்டமே!!!.
மொத்தத்தில் “தங்க மழை பெய்தும் நிலைக்கவில்லை - தமிழில் குயில் பாடவுமில்லை”.
அன்புடன்,
-பொன்னுசாமி.
Saturday, January 30, 2016 8:22:00 PM//////
----------------------------------------------------
17
///////Blogger Chandrasekaran Suryanarayana said...
வணக்கம் . இது ஏற்கனவே 03/12/2013ல் கேட்கப்பட்ட கேள்வி (QUIZ-26)
கேள்வியில் மாற்றத்துடன் கேள்வி கேட்கப்பட்டுள்ளது .ஜாதகி 02/06/1937ல் 6.30.35 மணிக்கு பிறந்தவர்.
பதில்: 1. தங்க மழை பெய்யவில்லை . 
2. குயில் பாடவில்லை 
3. திருமண வாழ்வு அதிருப்தியுடன் துவங்கி கடைசியில் சோகத்தில் முடிந்தது.
1. விருச்சிக இலக்கின ஜாதகி. இலக்கினாதிபதி செவ்வாய் இலக்கினத்தில் அமர்ந்திருக்கிறார். யோககாரகர்கள் குரு நீசம் (3ம் இடம்), சந்திரன் (4ம் இடம்).
2. கால சர்ப்ப தோஷம் உள்ள ஜாதகம். கேது கொடிபிடித்து செல்கிறது.7ல் கேது சூரியனுடன் கூட்டு சூரிய சண்டாள யோகம். மகிழ்ச்சியில்லாத வாழ்க்கை அமையும். ஜாதகி கோபக்காரர்.
3. லக்கினாதிபதி செவ்வாய் நவாம்சத்தில் நீசம் (கடகத்தில் உள்ளார்) . சுக்கிரன் பாபகர்த்தாரி தோஷம். குயில் பாட வேண்டும் என்றால் செவ்வாய், சுக்கிரன் நன்றாக இருக்கவேண்டும் .
4. 7ம் வீட்டிற்குரிய சுக்கிரன் அந்த வீட்டிற்கு 12ல் அமர்ந்து விட்டார்.அது 6ம் வீடு. அயனம் சயனம் போகம் இல்லாமல் செய்து விட்டார்.8ம் வீட்டு அதிபதி புதன் சுக்கிரனுடன் கூட்டு சேர்ந்து கணவர் இல்லாமல் செய்து விட்டார்.
5. 2ம் அதிபதி குரு மகர ராசியில் நீசம் - குடும்ப வாழ்கையில்லாமல் செய்து விட்டார் . 
6. பாக்கியாதிபதி சந்திரன் அந்த வீட்டிற்க்கு 8ல் அமர்ந்து ஜாதகியன் பாக்கியத்தை கெடுத்து விட்டார் .
7. திருமணமான சில மாதங்களிலேயே கணவர் இறந்துவிட்டார். கணவர் உடல் நலமில்லாதவர் என்பது திருமணத்திற்குப் பிறகுதான் அம்மணிக்குத் தெரியவந்தது. சமூக சேவைகளைச் செய்து தன் வாழ் நாட்களைப் பயன் உள்ளதாக்கிக் கொண்டார். 
8. தங்க மழைக்கு 2ம் வீடு, 5ம் வீடு , 11ம் வீடு நன்றாக இருக்க வேண்டும். 2ம் வீடு நீசம், (36 பரல்) 11ம் வீட்டின்மீது சனியின் பார்வை (33 பரல்) 11ல் மாந்தி, 5ம் வீடு பாபகர்த்தாரி தோஷம் (25 பரல்)
சந்திரசேகரன் சூரியநாரயணன்
Saturday, January 30, 2016 11:42:00 PM////// 
-------------------------------------------------
18
//////Blogger Dallas Kannan said...
Respected Sir
Sorry for the late response.
1. She is married because of Guru's look and Sukra in its own place in Navamsa.
2. Late marriage because of Sani's look and Kethu in 7th house, kalasrabha dosam and Sukra and Budha in Papakarthari yogam.
Marraied life is not that great because of the 2nd point.
Sunday, January 31, 2016 9:12:00 AM /////
-----------------------------------------------
19
++++++++++//////trmprakaash@gmail.com said...
ayya, thirumanam guru paarvai 7m veettilnmel padhivadhaal nadandhirukkum. aanaal nilaithirukkaadhu. kaaranam, 7m athibathy matrum kalathira kaaragar Sukkiran 7rkku 12il, 8m athibathiyudan. matrum lagnam, lagnathbathy and 7m veedu raahu -kethuvin pidiyil. kethu kodi pidithu sellum avayogam.Thanks. Mu.Prakaash.
Sunday, January 31, 2016 4:59:00 PM//////
========================================================


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

6 comments:

  1. ஐயா ஒரு விபரத்தை ஊர்ஜிதப்படுத்த விரும்புகிறேன்.
    திருமணம் வியாழ தசை வெள்ளி புத்தி வெள்ளி அந்தரத்தில் நிகழ்ந்து, சூரிய அந்தரத்தில் முடிந்ததா?
    (சில நாட்களாக இங்கு நேரம் செலவழிக்க நேரம் போதவில்லை. அதனாலும், இரண்டாவது நாளே இந்த புதிரை கவனித்ததாலும், அவசரமாக கண்ணில் பட்டதை மட்டும் உடனே எழுதினேன். முழுதாக பார்த்து எழுதவில்லை. மன்னிக்கவும்.)

    மேலும், எனது தாயார், மற்றும் எனது சிநேகிதியின் ஜாதகங்களும் கால சர்ப்ப தோஷ ஜாதகங்களே. அம்மாவினது ராகு கொடி பிடித்த ஜாதகம். 40 வயதின் மேல் இழந்தவை போக, சுயமாக நன்றாக இருந்தவர்.
    சிநேகிதியினது கேது கொடி பிடிக்கும் ஜாதகம் தான் எனினும், பாதி வயது வரை சிற்பிக்குள் இருந்த முத்தாகவே சிறப்புகள் தெரியாது இருந்து விட்டாலும், தற்போது நீண்ட விடாமுயற்சியின் பின் (அதுவும் கிரக பலனோ!), வெற்றி தேடியுள்ளதாக தெரிகிறது. தற்போது ராசிக்கு சனி 11இல், பொங்கு சனி ஆரம்பிக்க போகும் காலம்.
    கேது கொடி பிடிக்கும் விடயங்களை நான் சொல்வதில்லை. இனி முன்னேற்றமாக இருக்கும் என்று மாத்திரமே சொல்வது. அதன்படி தற்போது முயற்சிகள் கைகொடுப்பதாகவே அவரின் மனநிலையும்.
    இந்த நிலையில் கேது கோடி பிடிக்கும் கதையை எடுக்க முடியவில்லை. ஏன்?
    (சிநேகிதிக்கு அந்த பலன் வேண்டாம். ஆனால், என்னால் இதை காலசர்ப்பதோஷ ஜாதகங்களில் அவ்வளவாக இன்னும் அவதானிக்க முடியவில்லை என்று கூறுகிறேன்.)

    ReplyDelete





  2. விதி...


    மதி...

    இறைவன் விளையாட்டு...

    அவனடி பணிவோம்...

    அருளது கிடைக்கும்...

    ReplyDelete
  3. Dear Sir

    6th Kethu
    7th guru
    8il Moon
    9il Sani
    10il Sun, Budha, Sukkiran
    11 il Guja
    12 il Rahu

    Idhu Kethu Kodi pidithu selkiradha or Rahau.

    please answer sir.

    thanks & regards
    Arul Kumar Rajaraman

    ReplyDelete
  4. //////Blogger Mrs Anpalagan N said...
    ஐயா ஒரு விபரத்தை ஊர்ஜிதப்படுத்த விரும்புகிறேன்.
    திருமணம் வியாழ தசை வெள்ளி புத்தி வெள்ளி அந்தரத்தில் நிகழ்ந்து, சூரிய அந்தரத்தில் முடிந்ததா?
    (சில நாட்களாக இங்கு நேரம் செலவழிக்க நேரம் போதவில்லை. அதனாலும், இரண்டாவது நாளே இந்த புதிரை கவனித்ததாலும், அவசரமாக கண்ணில் பட்டதை மட்டும் உடனே எழுதினேன். முழுதாக பார்த்து எழுதவில்லை. மன்னிக்கவும்.)
    மேலும், எனது தாயார், மற்றும் எனது சிநேகிதியின் ஜாதகங்களும் கால சர்ப்ப தோஷ ஜாதகங்களே. அம்மாவினது ராகு கொடி பிடித்த ஜாதகம். 40 வயதின் மேல் இழந்தவை போக, சுயமாக நன்றாக இருந்தவர்.
    சிநேகிதியினது கேது கொடி பிடிக்கும் ஜாதகம் தான் எனினும், பாதி வயது வரை சிற்பிக்குள் இருந்த முத்தாகவே சிறப்புகள் தெரியாது இருந்து விட்டாலும், தற்போது நீண்ட விடாமுயற்சியின் பின் (அதுவும் கிரக பலனோ!), வெற்றி தேடியுள்ளதாக தெரிகிறது. தற்போது ராசிக்கு சனி 11இல், பொங்கு சனி ஆரம்பிக்க போகும் காலம்.
    கேது கொடி பிடிக்கும் விடயங்களை நான் சொல்வதில்லை. இனி முன்னேற்றமாக இருக்கும் என்று மாத்திரமே சொல்வது. அதன்படி தற்போது முயற்சிகள் கைகொடுப்பதாகவே அவரின் மனநிலையும்.
    இந்த நிலையில் கேது கோடி பிடிக்கும் கதையை எடுக்க முடியவில்லை. ஏன்?
    (சிநேகிதிக்கு அந்த பலன் வேண்டாம். ஆனால், என்னால் இதை காலசர்ப்பதோஷ ஜாதகங்களில் அவ்வளவாக இன்னும் அவதானிக்க முடியவில்லை என்று கூறுகிறேன்.)//////

    கேது கொடி பிடித்தாலும் தனிப்பட்ட ஜாதக அமைப்பின் காரணமாக அவதியான பலன்களின் அளவுகள் மாறும். உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  5. //////Blogger A. Anitha said...
    விதி...
    மதி...
    இறைவன் விளையாட்டு...
    அவனடி பணிவோம்...
    அருளது கிடைக்கும்.../////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  6. //////Blogger Arul said...
    Dear Sir
    6th Kethu
    7th guru
    8il Moon
    9il Sani
    10il Sun, Budha, Sukkiran
    11 il Guja
    12 il Rahu
    Idhu Kethu Kodi pidithu selkiradha or Rahau.
    please answer sir.
    thanks & regards
    Arul Kumar Rajaraman/////

    ராகுதான் முன்னனியில் இருக்கிறது!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com