மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.7.15

நகைச்சுவை: சினம் தவிர்த்தல்!


நகைச்சுவை: சினம் தவிர்த்தல்!

சினம் என்றால் தெரியும். கோப உணர்வு. சரி அது வரும்போது அதை எப்படி வராமல் தவிர்ப்பது? மிகவும் சிரமமான செயல் அது. உணர்ச்சி வசப்படுவதால் சட்டென்று வருவது கோபம். அதைத் தவிர்ப்பதற்கு சிலர் மனவள வகுப்பு எல்லாம் எடுக்கிறார்கள்.

ஆனால் தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள் சுலபமான வழி ஒன்றைச் சொல்லித் தருகிறார். அவர் சொல்வது காணொளி வடிவில் இருக்கிறது. பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். அவசியம் பாருங்கள் மிகவும் சிறிய காணொளிதான் அது.

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------------------------------------------


Our sincere thanks to the person who uploaded this clipping 
in the net
=============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

30.7.15

கலாமின் வாத்தியார் கற்ற பாடம்!


கலாமின் வாத்தியார் கற்ற பாடம்!

கலாமின் வாத்தியார் என்ன பாடத்தை அவரிடமிருந்து கற்றார் என்கிறீர்களா? கீழே உள்ள காணொளியைப் பாருங்கள்

அன்புடன்
வாத்தியார்
===============================

Our sincere thanks to the person who uploaded this video in the net

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

29.7.15

நமது அஞ்சலி!


நமது அஞ்சலி!

நமது முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான அப்துல் கலாம் அவர்கள் இயற்கை எய்திவிட்டார். அவருடைய ஆன்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம். அத்துடன் நம்
வகுப்பறையின் சார்பில் கண்ணீர் அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்வோம்

அன்புடன்
வாத்தியார்
===================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

28.7.15

எது நடக்காது?


எது நடக்காது?

பக்தி மலர்

இன்றைய பக்திமலரை பத்மஸ்ரீ டி. எம். செளந்தரராஜன் அவர்கள் பாடிப் பரவசப் படுத்திய முருகப் பெருமானின் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
--------------------------------------------------------
பழநிக்குச் சென்று ... அழகனைப் பார்த்து
உருகிய மேனி உலகிலே
தன் ... வீட்டுக்கு வரவும் நினைக்குமா?
யார் கூப்பிட்டப்போதும் நடக்குமா?
(பழநிக்குச் சென்று ... )

தன் ... வீட்டுக்கு வரவும் நினைக்குமா?
யார் கூப்பிட்டப்போதும் நடக்குமா?

தணிகைக்கு வந்து ... தலைவனைக் கண்டு
வணங்கியப் பின்னால் வாழ்விலே 
அன்பில் ... கும்பிட்ட கைகள் விலகுமா?
பொன் கோடி தந்தாலும் தீண்டுமா?
(பழநிக்குச் சென்று ... )

அறுபடை வீடும் ... அடியவரோடு
நடந்திடும் கால்கள் புவியிலே 
இனி ... வேரொருப் பாதையில் செல்லுமா?
வடிவேலவன் உறவைத் தள்ளுமா?
(பழநிக்குச் சென்று ... )

காவடிக் கொள்ளும் ... பூவடி நிழலில்
கலந்தப்பின் உள்ளம் கனவிலும் 
நாம் ... வாவென அழைத்தால் திரும்புமா?
அது வானுலகாயினும் விரும்புமா?
(பழநிக்குச் சென்று ... )

தன் ... வீட்டுக்கு வரவும் நினைக்குமா?
யார் கூப்பிட்டப்போதும் நடக்குமா?
 --------------பத்மஸ்ரீ டி. எம். செளந்தரராஜன் 
==========================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

27.7.15

நகைச்சுவை: "தியேட்டரில் இருந்து எதற்குடா ஓடி வந்தாய்?”


நகைச்சுவை: "தியேட்டரில் இருந்து எதற்குடா ஓடி வந்தாய்?”

------------------------------------------------------------------------------------
1
எதற்குத்தான் அவசரம் என்பது கணக்கில் இல்லையா?

கணவர் தில்லியில் இருந்து சண்டிகரில் இருக்கும் மனைவிக்கு போன் போடுகிறார். எதிர் முனையில் வேலைக்காரர்தான் போனில் தொடர்பு
கொள்கிறார். இருவருக்கும் நடந்த உரையாடல்:

கணவர்: போனை என் மனைவியிடம் கொடு!


வேலையாள்: அவர் தன் கணவருடன் உள் அறையில் இருக்கிறார்


கணவர்: நான்தானப்பா கணவன்


வேலையாள்: நான் இப்போது என்ன செய்யட்டும் அய்யா?


கணவர்: இரண்டு பேரையும் இரக்கமில்லாமல் கொன்று விடு. உனக்கு நான் ஐம்பது லட்ச ரூபாய் பணம் தருகிறேன். சொன்னதை உடனே செய்!


அதை உடனே செய்து முடித்துவிட்டு வந்த வேலையாள் தொடர்ந்து பேசுகிறார்: செத்துக் கிடக்கும் உடல்களை என்ன செய்ய வேண்டும்?


கணவர்: வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் அவைகளை வீசிவிட்டு, நீ உன் சொந்த ஊருக்கு ஓடி விடு!


வேலையாள்: நம் வீட்டில் நீச்சல்குளம் எதுவும் இல்லையே அய்யா!


கணவர்: இது 45678922 என்ற எண்தானே?

வேலையாள்: இல்லை. 45688922

கணவர்: Oh Sorry, Wrong Number
😂😂😂😂

-------------------------------
2
”ஆஃபரேசன் தியேட்டரில் இருந்து எதற்குடா ஓடி வந்தாய்?”

”நர்ஸ் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தாள். உணர்ச்சி வசப் படாதீர்கள். பயப்படாதீர்கள். தைரியமாக இருங்கள். இது சிறு அறுவை
சிகிச்சைதான்”

”ஆமாம், அவள் சொன்னதில் என்ன தவறு? உனக்கு ஏன் இத்தனை பயம்?”

”அவள் சொன்னது டாக்டரிடம்”
---------------------------------------------
3
கொஞ்ச நேரம் சிரிப்போம்

Sundar: வாழ்க்கையிலே ஒருவருக்கு சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் வேண்டும்.

Jayakumar: சகிப்புத் தன்மைக்கும் சாமர்த்தியத்துக்கும் என்ன சம்பந்தம்?

Sundar: நான் புரிய வைக்கிறேன்.ஒரு தம்ளரிலே கொஞ்சம் சாக்கடைத்
தண்ணீர் கொண்டு வாருங்களேன்.

Jayakumar: இதோ இருக்கு சார்,நீங்கள் கேட்ட சாக்கடைத்தண்ணீர்.

Sundar: இப்படி வைங்க.நான் என்ன செய்றேன்னு கவனிங்க.இந்த
சாக்கடைத் தண்ணீரை என் விரலால் தொட்டு கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் இதோ என் நாக்கில வச்சுக்கிறேன்.இது தான் சகிப்புத் தன்மை.எங்கே,என்னை மாதிரி நீங்களும் செய்யுங்கள் பார்க்கலாம்!

Jayakumar: அது ஒண்ணும் கஷ்டமில்லை. இதோ பாருங்கோ,நானும்
அதைத் தொட்டு நாக்கிலே வைச்சுக்கிட்டேன்.

Sundar: சரி,இப்போ உங்களுக்கு சகிப்புத் தன்மை இருப்பது உறுதி ஆகி
விட்டது. இருந்தாலும் சாமர்த்தியம் போதாது.

Jayakumar: எப்படிச் சொல்றீங்க?

Sundar: ஒரு விஷயம் நீங்க கவனிக்கலை.நான் அந்த சாக்கடைத்
தண்ணீரை நடு விரலால் தொட்டேன்.ஆனால் வாயில வச்சது ஆள்
காட்டி விரலை.நீங்க தொட்ட விரலாலே நாக்கிலே வச்சுட்டீங்க.
இது தான் சாமர்த்தியம் போதாதுன்னு சொன்னது.

Jayakumar: நான் மறுக்கலே.இருந்தாலும் ஒண்ணுசொல்றேன்.தப்பா நினைக்காதீங்க.இந்த டம்ளரில இருக்கிறது சாக்கடைத் தண்ணீர்
இல்லை.என் மனைவி போட்ட காபி.

Sundar: பலே ஆள் சார் நீங்க!பார்க்கிறதுக்கு வித்தியாசமே தெரியலே!

Jayakumar: குடிச்சுப் பாருங்க .அப்பவும் வித்தியாசம் தெரியாது.!
---------------------------------
இந்த மூன்றில் எது மிகவும் நன்றாக உள்ளது?

அன்புடன்,
வாத்தியார்
=============================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

26.7.15

Half Quiz பாதிப் புதிர்: காலம் மாறியது. கவலையும் தீர்ந்தது!


Half Quiz பாதிப் புதிர்: காலம் மாறியது. கவலையும் தீர்ந்தது!

Quiz 92  பதில் 

26.7.2015
-----------------------------
நேற்றையப் பதிவில் அன்பர் ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து, ஜாதகருக்கு மிகுந்த பணவிரயம் ஏற்பட்டு, கடன் வலையில் சிக்கினார் (Debt Trap) என்றும், பணமும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம். சிக்கிய வலையில் இருந்து தப்பி வெளியே வந்தால் போதும் என்று அவர் கலங்காத நாள் இல்லை என்றும் எழுதியிருந்தேன். அத்துடன் ஜாதகத்தைப் பார்த்து, அவர் கடன் சுமையில் இருந்து மீண்டு வந்தாரா என்று கணித்து, காரணத்துடன் எழுதுங்கள் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.

சரியான பதில்: ராகுதிசையில் கடனில் சிக்கி சீரழிந்த ஜாதகர், ராகு திசை முடிந்து, குரு மகா திசை துவங்கியவன், படிப்படியாக கடன்கள் தீர்ந்து வெளியில் வந்து சுகப்பட்டார்.

ஜாதகத்தைப் பாருங்கள்:


சிம்ம லக்கின ஜாதகம்.
குரு பகவானின் நேரடிப் பார்வையில் பத்தாம் வீடு உள்ளது.
பத்தாம் அதிபதி சுக்கிரன் லக்கினத்தில் அமர்ந்திருக்கிறார்.
சிம்ம லக்கினத்திற்கு யோககாரகனான செவ்வாய்  இரண்டாம் வீட்டில் இருப்பதோடு, நவாம்சத்திலும் அதே கன்னி வீட்டில் அமர்ந்து வர்கோத்தமம் பெற்ரு வலிமையாக உள்ளார்.
அத்துடன் குரு பகவானுக்குப் பதினொன்றில் அவர் இருக்கிறார்.

ராகு மகா திசையில் கடன் ஏற்பட்டுக்கொண்டே வந்தது. அதுவும் கடைசி புத்தியில் (செவ்வாய் புத்தி) அதிகப் பணம் விரயம் ஏற்பட்டு ஜாதகர் சிக்கும்படி ஆகிவிட்டது. அதுதான் கடன் சுமை ஏற்படக் காரணம்.

அடுத்து வந்த குரு மகா திசை ஜாதகருக்குக் கை கொடுத்தது. கடனிலிருந்து அவர் மீள வைத்தது. யோககாரகன் செவ்வாயின் வீட்டில் குரு பகவான் இருப்பதைப் பாருங்கள். செவ்வாய் லக்கினத்திற்கு 2ல் இருப்பதுடன், குரு பகவானுக்குப் பதினொன்றில் இருப்பதாலும் மீள்வது சாத்தியமாயிற்று.

விளக்கம் போதுமா?
---------------------------------------------------------------------
இந்த அமைப்பை ஒரு சிலரே சுட்டிக் காட்டியுள்ளனர். மற்றவர்கள் ஒட்டியுள்ள பதிலை எழுதியுள்ளனர்.

கலந்து கொண்டவர்கள் 31 பேர்கள் அவர்களில் 25. பேர்கள் மட்டுமே ஜாதகர் கடன் சுமையில் இருந்து மீண்டு வருவார் என்று எழுதியுள்ளார்கள்.

அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் பாராட்டுக்கள்.

அன்புடன்
வாத்தியார்
==================================================
1
//////Blogger sundinesh1 said...
விடுபட்டார் . தனது 43-44 வயதில் விடுபட்டார். அதாவது குரு தசையில் புதன் புக்தியில்/////
------------------------------------------
2
/////Blogger Govindasamy said...
1. 12 க்கு உரிய சந்திரன் ஆறில். இது விபரீத ராஜ யோகம் என்றாலும் கடனை ஏற்படுத்தும்
2. 2 க்கு உரிய புதன் 3ல் நீச்சம். எனவே விரயத்திற்கு தகுந்த வருமானம் இல்லை.
3. 9 க்கு உடைய செவ்வாய் ராகுவோடும், லக்கினாதிபதியோடும் இரண்டாமிடத்தில். இது நல்ல யோகம்.
4. ஜாதகர் தான் சம்பாத்தியமல்லாத பரம்பரைச் சொத்தைக் கொண்டு கடனிலிருந்து மீண்டிருப்பார். இது செவ்வாய் தசை குரு புத்தியில்
நடந்திருக்கும்.//////
-----------------------------------------
3
///////Blogger Goutham Mylsamy said...
Yes they will come out of dept
Malefics in second houses especially rahu weaken the yogathipathi chevvai and lagnathipathi sun,
apart from sukran all planets hemmed between rahu and kethu from 2nd to 8th house,kulik kalasarpam dosham created financial & business 

problems
but guru in 4th house aspecting 8th,10th and 12th houses will overcome all difficulties,guru parthal kodi nanmai,guruvay sarnam//////
----------------------------------------------
4
////Blogger selvaspk said...
Jadagam came out of his debt after 38 years.
2nd house and 11th house is in malefic control without house/lagna lord aspect. Lagnathipathi is not helping, yogakaraga is combusted, 2,5,7,9,11 

arent much helpful until Jupiter pitch in with Mercury dasa. He survive all his debt with Mars special aspect, after mid age he prosper with 

Business.
Friday, July 24, 2015 9:42:00 AM //////
----------------------------------------------
5
/////Blogger KJ said...
Respected Sir,
Sure, He could have come out from his Debt problems. 
Sevvai (9th house owner aspects 6th house owner Saniwaran). In Ragu dasa, slowly he could have released form his problems. 
Thanks,
Sathishkumar GS
Friday, July 24, 2015 10:02:00 AM //////
------------------------------------------
6
////Blogger amuthavel murugesan said...
Answer to Quiz.92
கடன் வலையில் இருந்து தப்பி வந்து சுகப்பட்டு இருப்பார்.
1. 10ஆம் அதிபதி லக்கனத்தில் இருப்பதாலும் குரு 10ஆம் அதிபதியை பர்ப்பதாலும், நல்ல வேலை அல்லது தொழில் முலமாக குரு தசையில்
மீண்டு இருப்பார்.
2. லக்கனாதிபதி இரண்டில் இருப்பதால் கடன் ஒழிவதர்க்கு உதவி இருப்பார்.
நன்றி
தங்கள் மாணவி,
மு.சாந்தி
Friday, July 24, 2015 10:04:00 AM //////
---------------------------------------------------
7
////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
Quiz92 ற்கான பதில்.
வணக்கம் வாத்தியாரே!
ஜாதகர் பிறந்த நேரம் 10/Oct/1959 அதிகாலை 4:30 உத்திராட நட்சத்திரம்.
கடனிலிருந்து மீண்டார். எல்லோரும் வியக்கும் விதத்தில்.
12ம் வீடு விரையாதிபதி சந்திரன் ஆறில் அமர்ந்தது. லக்கினாதிபதி சூரியனும் ராகுவுடன் ஒரே வீட்டில் இருந்து பலம் இழந்துள்ளார். இருந்தாலும் தன

ஸ்தானத்தில் 30 பரல். 11ம் இடத்தில் யாருக்கும் கிடைக்க அறிதான 41 பரல் கை கொடுத்திருக்கும்.
6ம் அதிபதி வில்லன் சனி பார்வையில் நடந்த ராகு திசையில் ஜாதகர் கடனாளி ஆகியிருப்பார். அடுத்து வந்த தன காரகன் குருவின் திசையில்
எல்லோரும் வியக்கும் விதத்தில் கடனிலிருந்து மீண்டிருப்பார். இங்கே குரு 5,8ம் இடதிற்குரியவர், மேலும் அவர் ரகசிய உறைவிட ராசியான
விருச்சிகத்தில் இருந்து 8,10,12ம் இடங்களை பார்வையிட்டு ஜாதகரை மீட்டு கொண்டு வந்தார்.
அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.
Friday, July 24, 2015 10:12:00 AM /////
---------------------------------------------------
8
///////Blogger Suresh Kumar said...
குரு திசை சனி புத்தியில் கடன் ஆக வாய்ப்பு அதிகமாக உள்ளது, அதன் பிறகு அவர் கடனில் இருந்து விடுபட்டிருப்பார்
Friday, July 24, 2015 11:14:00 AM //////
------------------------------------------------
9
/////Blogger kothanda ramar said...
வணக்கம்,
12ம் அதிபதி சந்திரன் 6 ஆறில் நிற்க்கிறார்,
12ல் மாந்தி மேலும் வியாபார அமைப்பில் சுக்கிர புத அமைப்பால் பண விரையபட்டிருக்கும்.
5ந்து அல்லது 9ம் ஆட்சியரின் தசா புக்தியில் கடன் வலையில் இருந்து தப்பியிருப்பார்.
நன்றி
Friday, July 24, 2015 11:24:00 AM //////
------------------------------------------------
10
/////Blogger Sundararajan Rajaraghavan said...
During Guru Dasa In the year 1998 his debts released . Sundararajan
Friday, July 24, 2015 1:02:00 PM ///////
----------------------------------------------
11
//////Blogger Fact Coimbatore said...
மதிப்பிற்குரிய ஐயா !!
புதிர் எண்: 92 இற்கான பதில் !!
ஜாதகரின் ஆறாம் வீடு கெட்டுவிட்டது. பரல்:21, ஆறாம்வீட்டில் விரயாதிபதி சந்திரன் வர்கோதமம். ஆறாமதிபதி சனி அந்த வீட்டிற்கு
பன்னிரெண்டில். 21 முதல் 38 வரை நடந்ததோ ராகு திசை. ராகு இருப்பதோ தன வீட்டில். அதனால் கையில் காசு தங்கவில்லை. 38 வயதுக்கு மேல்
வந்த குரு பலமாக(6 பரல்) (தன காரகன்) இருப்பதால், 40 வயதுக்கு மேல் கடனில் இருந்து மீண்டு வர இவரால் முடியும்.
இப்படிக்கு
சிவச்சந்திரன்.பா
Friday, July 24, 2015 3:21:00 PM //////
----------------------------------------
12
/////Blogger Gajapathi Sha said...
Vanakkam sir i am of opiniin Due to pathagathi at second house these constraints . All will got relief during guru maha dasha
Friday, July 24, 2015 4:50:00 PM //////
---------------------------------------
13
/////Blogger Jaya Prakash said...
சிம்ம லக்ன ஜாதகம்..ராகு தசை 12ம் அதிபதி சாரம்,.அவர் 6ஆம் வீட்டில்..இதனால் கடன்,.பின்னர் வந்த குரு தசை சுய புத்தியில் கடன்
பிரச்சினையிலிருந்து வெளியேறி இருப்பார்,.காரணம் :6க்கு அதிபதி 6க்கு 12ல் மறைந்து அவருக்கு 12ல் 5,8க்கு அதிபதி 6க்கு உடையவன்
சாரம்..இதனால் கடன் நிவர்த்தி
Friday, July 24, 2015 5:00:00 PM //////
-------------------------------------------
14
/////Blogger Ravichandran said...
Ayya,
He should have escaped from that issue during his Guru dasa after Rahu dasa. The main reason for undergone issue is 6th house owner(Shani) is 
sitting in 12th house from 6th house.
Your Student,
Trichy Ravi
Friday, July 24, 2015 5:14:00 PM //////
-----------------------------------------------------
15
///////Blogger kmr.krishnan said...
ஜாதகர் 10 அக்டோபர் 1959 காலை 4மணி 30 நிமிட்ம் 30 வினாடிக்குப் பிறந்தவர். பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக் கொண்டேன்.
இவர் வாழ்க்கையத் துவங்கும் போது, 21 வயதில் ராகு தசாவில் சிக்கிக்கொண்டு 39 வயது வரை மீளமுடியாமல் அவதிப்பட்டார்.
எட்டாம் இடக் கேது அவருக்கு எப்படியாவது தலை குனிவை ஏற்படுத்த வேண்டும்.அது கடன் வடிவத்தில் வந்தது. இரண்டாம் இட கன்னி ராகு&
செவ்வாய், 'கன்னியில் செவ்வாய் கடலும் வற்றும்' என்பதை நிரூபித்தது. விரய ஸ்தானாதிபதி சந்திரன் ஆறில் வந்து அமர்ந்து கடன் கிடைக்க வழி
செய்தார். ஆனால் அதனை அடைக்க வழி செய்யவில்லை.இரண்டாம் முறை ஏழரைச்சனி வந்தபோது ராகுதசா கேதுபுக்தியில் மாட்டிக்கொண்டு
விழிபிதுங்கினார்.
சுமார் நாற்பது வயதுக்குப் பின்னர் குரு தசா துவங்கிய பின்னர் சிறிது சிறிதாகக் கடன் தொல்லையிலிருந்து மீண்டார்.
Friday, July 24, 2015 5:53:00 PM //////
--------------------------------------------------------------------
16
/////Blogger C Jeevanantham said...
Dear Sir,
The person relieved during his guru dasa period. 
After end of Rahu dasa in his 45 years old, his Guru Dasa started and he became relieved.
Thanking you,
Yours sincerely,
C.Jeevanantham.
Friday, July 24, 2015 6:08:00 PM //////
-----------------------------------------------------
17
/////Blogger hamaragana said...
அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
புதிர் எண் 92.
லக்கணம் சிம்மம் .லக்னாதிபதி 2ல் ..4& 9 க்குடையவன்.செவ்வாய் அவனும் 2ல் .
12ல் மாந்தி ..வறுமையில் வாடகூடிய ஜாதகர் ஆனாலும் . 4மிடத்தில் உள்ள குரு தனது திசையில்
ஜாதகரை கடன் நிவர்த்தி செய்து சற்று நிமிர வைத்திருப்பார் ..
1ல் சுக்கிரனும் 7ல் சந்திரனும் சம சப்தம பார்வை . சுபர்களுக்குள் மற்ற 6 கிரகங்களும் ..ஒரு மாதிரி சுப கர்த்தரி யோகம் போல ..{என்ன இது புதுசா
இருக்கே ..???]
**ஜாதகரை கடன் நிவர்த்தி ஆகி இருக்கும் **...
Friday, July 24, 2015 8:26:00 PM //////
--------------------------------------------------
18
/////Blogger Chandrasekharan said...
Respected Sir,
54 vayadhil vandha sani dhasavil kadanil irundhu veliyae vandhiruppar.. 6-m adhibathy sani avar veetirku 12-il (lagnathirkku 5-il).
Regards,
Chandrasekharan.A
Friday, July 24, 2015 8:38:00 PM /////
-----------------------------------------------------
19
//////Blogger selvam velusamy said...
வணக்கம் குரு,
கடனிலிருந்து மீண்டிருப்பார்.
ஜாதகர் ராகு தசை சந்திர புக்தியில் கடனாளியாகியிருப்பார்.
காரணங்கள்,
விரயாதிபதி சந்திரன் 6ல் அமர்ந்து ருன, ரோக, சத்ரு ஸ்தானத்தையும், தன் நேரடி பார்வையால் தன் வீடான விரய ஸ்தானத்தையும் வலுபடுத்தினார்.
வீடு கொடுத்த சனி பகவானோ திரிகோணத்தில் அமர்ந்து வலுவாக உள்ளார். அதே நேரம் ஏழரை சனி வேறு நடப்பில் இருந்தது. பின்னர் வந்த குரு
தசையில் கடனிலிருந்து மீண்டு வந்திருப்பார். ஏனெனில் குரு ஆராமிடத்திர்க்கு 11ல் அமர்ந்துள்ளார். அத்துடன் அவர் 6மிடத்திர்க்கு 12மிட
அதிபதியுமாவார்(6மிடத்திர்க்கு எதிர் பலனை தருமிடம் 5மிடம்).
நன்றி
செல்வம்
Friday, July 24, 2015 9:52:00 PM //////
--------------------------------------------------------------
20
////////Blogger thozhar pandian said...
கடனுக்கு உரிய‌ 6ம் வீட்டு அதிபதி சனி அந்த வீட்டிற்கு 6ல். சுகத்திற்கு உரிய 4ம் வீட்டு அதிபதி சுக்கிரன் இலக்கினத்தில். 4ம் வீட்டில் வியாழன்.
6ம் வீட்டில் சந்திரன். 6ம் வீட்டுக்கோ சனிக்கோ சுபர் பார்வை இல்லை. 4ம் வீட்டுக்காரரும் சிம்ம இலக்கினத்திற்கு யோகாதிபதியுமான செவ்வாய்
இலக்கினாதிபதி சூரியனுடன் 2ம் வீட்டில் இராகுவோடு உள்ளார். 20 வயதுக்கு மேல் ஆரம்பித்த இராகு தசையில் கடன் சிக்கல் ஏற்பட்டிருக்கும்.
அது 18 ஆண்டுகள் ஜாதகரை பாடாய் படுத்தி இருக்கும். ஜாதகருக்கு விடிவு வியாழ தசையில் உண்டு. அப்போது அவர் கடனிலிருந்து மீண்டு
சுகப்பட்டிருப்பார்.
Saturday, July 25, 2015 3:59:00 AM /////
---------------------------------------------------
21
Blogger Chandrasekaran Suryanarayana said...
QUIZ NO: 92 வணக்கம்.
10/10/1959 ஆம் ஆண்டு சனி கிழமை காலை 4.30.18 மணிக்கு உத்திராடம் நட்சத்திரத்தில் சிம்ம லக்கினத்தில் ஜாதகர் பிறந்தார். (இடம்: சென்னை)
சிம்ம லக்கினம் : யோககாரர்கள்: சூரியன், குரு, செவ்வாய்
ராஜ யோகம் : செவ்வாய் லக்கினத்தில் இருந்தால்.
பதில் : கடனிலிருந்து தப்பி வந்து சுகப்பட்டார்.
சுப கிரங்கள் குரு, சந்திரன், சுக்கிரன் நன்றாக இருந்தால் கடனிலிருந்து சுலபமாக தப்பி வரலாம்.
குருவின்(6 பரல்) 9ம் பார்வை 12ம் வீட்டின் மீது இருப்பதாலும், 12ம் வீட்டு அதிபதி சந்திரன் 6ல் அமர்ந்து 12ம் வீட்டை தன்னுடைய 7ம் பார்வையால்
பார்பதாலும்,
குரு தசை சந்திர புக்தியில் ஜாதகரின் 48 வயதில் கடனிலிருந்து தப்பி வந்து சுகப்பட்டார்.
12ம் வீடு (31பரல்) அயனம், சயனம், போகம். 4ம் வீட்டில் குரு சுகஸ்தானம். லக்கினத்தில் சுக்கிரன் (8 பரல்)
11ம் வீடு & 2ம் வீட்டு அதிபதி புதன் (6 பரல்) 3ம் வீட்டில் அமர்ந்து 7ம் பார்வையால் 9ம் வீடு பாக்கியஸ்தானத்தை பார்க்கிறார். பாக்கியஸ்தானமான 9ம் வீட்டு அதிபதி செவ்வாய் யோககாரன் இந்த ஜாதகருக்கு. 11ம் வீட்டில் 41 பரல்கள்
நிதி நிலைமை மோசமானதிற்க்கு காரணம்.
2ம் வீடு, 5ம் வீடு, 11ம் வீடு தீய கிரங்களால் சூழ பட்டுள்ளது.
2ம் வீட்டில் 2 தீய கிரங்கள் இருந்தால் செல்வம் இருக்காது. நிலைக்காது.
2ல் சூரியன் பொருள் நாசம், 2ல் ராகு தீராத பிரச்சனை செல்வம் இருக்காது, 2ல் செவ்வாய் குறைந்தளவு செல்வம்.கேதுவின் 7ம் பார்வை 2ம் வீட்டின்
மீது. சனியின் 10ம் பார்வை 2ம் வீட்டின் மீதும் உள்ளது. 2ம் வீட்டின் மீது சுப கிரங்களின் பார்வை இல்லை.
5ம் வீட்டு அதிபதி குரு 4ம் வீட்டில் அந்த வீட்டிற்க்கு 12ல், 5ம் வீட்டில் 6ம் வீட்டு அதிபதி சனி (1பரல்) அமர்ந்து 7ம் பார்வையால் 11ம் வீட்டை
பார்க்கிறார்.சனியின் 10ம் பார்வை 2ம் வீட்டின் மீதும் உள்ளது.
Saturday, July 25, 2015 8:19:00 AM ///////
----------------------------------------------------
22
/////Blogger asbvsri said...
Quiz No 92 Answer: ஜாதகர் குரு தசையில் 40 வயதிற்க்கு மேல் (ஜூன் 1999 க்கு மேல்) குரு பகவான் கோள்ச்சாரத்தில் மேஷத்திலிருந்து லக்னத்தை
பார்ப்பதால் கடன் தொல்லையிலிருந்து விடுபட்டிருப்பார். அதுவரை நடந்த தசைகளான 12ஆம் அதிபதி சந்த்ரனும், ராஹுவின் பிடியிலிருக்கும்
யோகாதிபதி கன்னிச்செவ்வாயும், ராஹுவும் உதவியிருக்கமாட்டார்கள்.
K R Ananthakrishnan - Chennai
Saturday, July 25, 2015 11:55:00 AM //////
-----------------------------------------------
23
/////Blogger lrk said...
ஐயா வணக்கம்
விடை
சுகப்பட்டார்.
தன் குரு மகாதிசையில் சுகப்பட்டார்.
கடன் வலையில் சிக்க காரணங்கள்
விரையாதிபதி 6 ல் உட்கார்ந்து தன் வீடான விரையஸ்தானத்தை பார்வையில் வைத்திருக்கிறார்
6 ம் அதிபதி தன் வீட்டுக்கு 12 ல் மறைந்து உள்ளார்
தனஸ் தான அதிபதி 3 ல் மறைவு
நன்றி
கண்ணன்.
Saturday, July 25, 2015 12:36:00 PM //////
--------------------------------------------------------------
24
/////Blogger venkatesh r said...
பாதி புதிர் விடை:
ராகு தசை முடிந்து குரு தசை ஆரம்பித்த பிறகு, புதன் புக்தியில் கடன் தொல்லையிலிருந்து விடுபட்டார்.
காரணங்கள் :
தனஸ்தானத்தில் ராகு. லக்கினாதிபதி சூரியனும், யோகாதிபதி செவ்வாயும் 2ல் ராகுவின் பிடியில் உள்ளனர்.சனியின் 10ம் பார்வை வேறு 2மிடத்தின்
மேலுள்ளது. லாபாதிபதியும், தனாதிபதியுமான புதன் 3ல் சென்று அமர்ந்து விட்டார். ஜாதகருக்கு 21 வயதில் ஆரம்பித்த ராகு தசை 39 வயது வரை
அவரை கடன் தொல்லையில் படாத பாடு படுத்தி விட்டது. அதற்கு பிறகு வந்த குரு தசை,புதன் புக்தியில் அவரை எல்லா கடன் தொல்லயில்
இருந்தும் விடிவித்தது.
Saturday, July 25, 2015 12:59:00 PM /////
------------------------------------------------------
25
//////Blogger Rajam Anand said...
Dear Sir
The native will be in debt because
• If Sun and Rahu are in the same house it is not very good. The native will acquire wealth in bad ways.
• If Mars is in the 2nd house then the native will be spending a lot and he will not be able to save any money. 
• If Rahu in the 2nd house, the native will be in debt.
Saturn is aspecting Mars (10th) and Mars is aspecting Saturn (4th). Jupiter in Kendra and 12th place to his own house Sagittarius. Saturn is in 5th house (Kendra) again 12th to his own house Capricorn. The ashtagavarga for Sagittarius and Scorpio is 25 and for Capricorn is 21.
However, Ashtagavarga for the 11th house is 41 which is Mercury’s house. His debt problem will be solved during Mercury Sub dasa.
Thanks
Rajam Anand
Sunday, July 26, 2015 2:40:00 AM /////
=====================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

24.7.15

Half Quiz: பாதி புதிர்: கடன் வலையில் சிக்கியவரின் கதி என்ன?


Half Quiz: பாதி புதிர்: கடன் வலையில் சிக்கியவரின் கதி என்ன?

Quiz.92

24.7.2015

கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.

ஜாதகருக்கு மிகுந்த பணவிரயம் ஏற்பட்டு, கடன் வலையில் சிக்கினார் (Debt Trap) பணமும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம். சிக்கிய வலையில் இருந்து தப்பி வெளியே வந்தால் போதும் என்று கலங்காத நாள் இல்லை என்னும் நிலைமை.

ஒரே ஒரு கேள்விதான். பதிலையும் ஒரே வரியில் எழுதுங்கள். ஜாதகர் கடன் வலையில் இருந்து தப்பி வந்து சுகப்பட்டாரா அல்லது இல்லையா?

பதிலை வழவழவென்று எழுதாமல் ஒரே வரியில் காரணத்துடன் எழுதுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
=============================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

23.7.15

சாதம் எப்போது பிரசாதம் ஆகும்?


சாதம் எப்போது பிரசாதம் ஆகும்?

சாதத்துடன் பக்தி இணையும்போது அது பிரசாதமாகிவிடும்
When BHAKTI enters FOOD,
FOOD becomes PRASAD,

பட்டினியுடன் பக்தி சேரும்போது அது விரதமாகிவிடும்
When BHAKTI enters HUNGER,
HUNGER becomes a FAST,

தண்ணீருடன் பக்தி சேரும்போது அது புனித நீராகிவிடும்
When BHAKTI enters WATER,
WATER becomes CHARANAMRIT,

பயணத்துடன் பக்தி சேரும்போது அது யாத்திரையாகிவிடும்.
When BHAKTI enters TRAVEL,
TRAVEL becomes a PILGRIMAGE,

இசையுடன் பக்தி சேரும்போது அது கீர்த்தனையாகிவிடும்.
When BHAKTI enters MUSIC,
MUSIC becomes KIRTAN,

பக்தியில் வீடு திளைக்கும்போது, அது கோயிலாகிவிடும்
When BHAKTI enters a HOUSE,
HOUSE becomes a TEMPLE,

செயல்களுடன் பக்தி சேரும்போது, அது சேவையாகிவிடும்
When BHAKTI enters ACTIONS,
ACTIONS become SERVICES,

வேலையுடன் பக்தி சேரும்போது, அது கர்மவினையாகிவிடும்
When BHAKTI enters in WORK,
WORK becomes KARMA,

AND

ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும்போது அவன் மனிதனாகிவிடுகிறான்
When BHAKTI enters a MAN,
MAN becomes HUMAN

படித்ததில் பிடித்தது. உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்
அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

22.7.15

கன்னியாஸ்திரியின் வாதம் என்ன ஆயிற்று?


கன்னியாஸ்திரியின் வாதம் என்ன ஆயிற்று?

போலந்து நாட்டின் இந்துக்களுக்கு எதிராக நடந்த ஒரு வழக்கு:

“இஸ்கான்” என்று அழைக்கப்படும் கிருஷ்ண பக்தி இயக்கம் உலக
முழுவதும் இந்து மதம் பரவ ஒரு காரணமாகவும் இருக்கிறது...

அப்படி இந்து மதம் உலக அளவில் பரவுவதை விரும்பாத ஒரு கிறித்துவ கன்னியாஸ்திரி சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு போலந்து நாட்டின்
தலைநகர் வார்சாவில்”இஸ்கான்” அமைப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.....

வழக்கும் விசாரணைக்கு வந்தது.....

கன்னியாஸ்திரியின் வாதம் என்னவென்றால் “இஸ்கான்” போலந்து
நாட்டில் பகவான் கிருஷ்ணரைப் பற்றி பிரச்சாரம் செய்து தங்கள் மதத்தை
பிரபலப் படுத்துகின்றனர்..... ஆனால் அவர்கள் அப்படி பிரபலப்படுத்தும் கிருஷ்ணரோ மிகவும் ஒழுக்கமற்றவராக இருந்துள்ளார்....அவர் சுமார்
16,000 கோபிகளை திருமணம் செய்துகொண்டுள்ளதாக புராணங்கள் சொல்கின்றன....அப்படிப்பட்ட ஒரு ஒழுக்கமற்றவரைப் பற்றி பிரச்சாரம்
செய்வது தடை செய்யப் பட வேண்டும்.....

”இஸ்கான்” சார்பில் எதிர்வாதம் செய்தவர் நீதிபதியிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார்...

.”தயவு செய்து வழக்கு தொடர்ந்த கன்னியாஸ்திரியிடம் அவர் கன்னியாஸ்திரியாக குருப்பட்டம் பெறும் போது எடுத்துக் கொள்ளும்
உறுதி மொழியினை இந்த நீதிமன்றத்தில் ஒருமுறை திரும்பச் சொல்ல வேண்டி உத்தரவேண்டும்” என்பதுதான்....

நீதிபதியும் அவ்வாறே அந்த கன்னியாஸ்திரியிடம் உறுதிமொழியினை ஒருமுறை நீதிமன்றத்தில் ஒப்புவிக்கச் சொன்னார்.... ஆனால் அவர்
சொல்லவில்லை.....

“இஸ்கான்” நபர் நீதிபதியிடம் தானே அந்த உறுதிமொழியினை ஒப்புவிப்பதற்கு அனுமதி கேட்டார்.... நீதிபதியும் அதற்கு சம்மதித்தார்....

அந்த உறுதி மொழியின் படி ஒருவர் கன்னியாஸ்திரி ஆனால் அவர் ஏசுநாதருடன் திருமணம் செய்து வைக்கப் பட்டவர்....

”இஸ்கான்” நபரின் வாதம்:  கனம் நீதிபதி அவர்களே...!  பகவான் கிருஷ்ணர் 16,000 பெண்களை மட்டுமே திருமணம் செய்து கொண்டுள்ளார்.....ஆனால் சுமார் இரண்டு மில்லியன் (இருபது லட்சம்) கன்னியாஸ்திரிகள் ஏசுநாதருடன் திருமணம் செய்து கொண்டுள்ளதாக உறுதிமொழி ஏற்றுள்ளனர்....அப்படி இருக்கையில் பகவான் கிருஷ்ணர் மற்றும் ஏசுநாதர் இருவருக்கிடையில் யார் அதிகமாக ஒழுக்கமற்றவர்?!....

அது தவிர அந்த கன்னியாஸ்திரிகளை என்னவென்பது....?

வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது..
--------------------------------------------------------
படித்ததில் பிடித்தது. நன்றாக இருந்ததால் உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்!

அன்புடன்,
வாத்தியார்
======================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

21.7.15

பழம் உதிர்த்த சோலை அது!


பழம் உதிர்த்த சோலை அது!

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகப் பெருமானின் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும்
படித்து மகிழுங்கள்

அன்புடன்,
வாத்தியார்
----------------------------------------------------
பழமுதிரும் சோலையிலே பழமுதிர்த்த முருகா
பட்டுக்குறத்தி வள்ளி மணவாளா 
பருவம் சிறியதாக இருந்தாலும்
ப்ரணவத்தை உபதேசம் செய்தவனே வேல் முருகா 
வேல் முருகா ... வெற்றி வேல் முருகா 

பக்தியோடு நீரணிந்து வருவோரை எல்லாம்
பற்றோடு காப்பவனே வேல் முருகா 
பச்சை மயிலேறி உலகைச் சுற்றி வலம் வந்த வேல் முருகா 
பாதத்தைப் பற்றி உன் கோயிலைச் சுற்றியே வந்தேன் வேல் முருகா 
வேல் முருகா ... வெற்றி வேல் முருகா 

பாடும் குயிலினங்களும் ஆடும் மயில் இனங்களும்
பாடிடும் குகா குகா என்றே வேல் முருகா 
பறக்கும் பறவையெல்லாம் உன் பெயர் சொன்னால் வேல் முருகா 
நான் ... பாடிடவும் வேண்டாமா
நாளும் கொண்டாடிட வேண்டாமா? 
வேல் முருகா ... வெற்றி வேல் முருகா 

பழமுதிரும் சோலையிலே பழமுதிர்த்த முருகா
பட்டுக்குறத்தி வள்ளி மணவாளா
பருவம் சிறியதாக இருந்தாலும்
ப்ரணவத்தை உபதேசம் செய்தவனே வேல் முருகா
வேல் முருகா ... வெற்றி வேல் முருகா 
- பாடிப் பரவசப் படுத்தியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள்
==================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

20.7.15

நகைச்சுவை: ஒரு மதுபான தயாரிப்பாளரின் அசத்தலான பேட்டி!


நகைச்சுவை: ஒரு மதுபான தயாரிப்பாளரின் அசத்தலான பேட்டி!

ஒரு மதுபான தயாரிப்பாளரை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்காகப் பேட்டி எடுக்கிறார்கள்:

 'வணக்கம் நேயர்களே.. இன்றைய பாருக்கு..பார்..ச்சீ.. நேருக்கு நேர் நிகழ்ச்சியில்.. மதுபான தயாரிப்பாளரும்..டாஸ்மாக் ஆலோசகர் பதவி தனக்கு தர வேண்டும்..என பல ஆண்டுகளாக தமிழக அரசை நச்சரித்து வரும்.. திரு. அஜய் புல்லையா.. அவர்கள் வந்து இருக்கிறார்கள்..! இனி அவருடன்..

 'வணக்கம் சார்..!'

 'வணக்கம் தம்பி..!'

 'சார் இப்ப.. ஆண்டுக்கு 21 ஆயிரம் கோடி வர்ற.. டாஸ்மாக் வருமானம்.. நீங்க அலோசகரா வந்தா இதை விட வருமானம்..அதிகரிக்குமா..?'

 'என்ன தம்பி இதைப் போய் வருமானம்'னு சொல்றீங்க.. அவமானம்'னு சொல்லுங்க..!'

 'சார் நீங்க சொல்றது.. புரியலையே..!'

 'தம்பி..இது அள்ள..அள்ள குறையாத அட்சய பாத்திரம்..தம்பி..! 21 ஆயிரம் கோடி ரூபாய் எல்லாம்.. ஜு.ஜு.பி..! இது வருமானம் இல்ல அவமானம்..!'

 'சார் நீங்க.. ஆலோசகரா வந்தா ஆண்டுக்கு எவ்வளவு.. வருமானம்  கிடைக்கும்..?'

 'தம்பி எழுதி வச்சுக்கோங்க.. நான் வந்தா ஒரே வருஷத்தில 50 ஆயிரம் கோடி.. வருமானம் கிடைக்கும்..!'

 '50 ஆயிரம் கோடியா..? எப்படி சார்..?'

 'அதுக்கு தான் தம்பி..5 அம்ச திட்டம் வச்சு இருக்கேன்..!'

 'சூப்பர் சார்.. எங்கே ஒவ்வொன்னா.. சொல்லுங்க..?'

 'திட்டம் 1.. ரம்.. பிராந்தி..விஸ்கி.. இதெல்லாம் சாஷே பாக்கெட்ல.. அறிமுகம்..எப்புடி..?'

 'சார் ஆரம்பமே கலக்கல்..! அப்புறம்..?

 'இனி டாஸ்மாக் மட்டுமில்லாம.. மளிகை கடை.. பெட்டி கடையில கூட நம்ம பாக்கெட் கிடைக்கும்..!'

 'ஆஹா சூப்பர்.. அப்ப பலசரக்கு கடையில கூட 'பலசரக்கு' கிடைக்கும்..! அப்படி தானே..?'

 'கரெக்ட்டு தம்பி..! இதுக்கு விளம்பர வாசகம் கூட ரெடியா.. இருக்கு தம்பி..!'

 'என்ன வாசகம் சார்.. சொல்லுங்க..?'

 'பாக்கெட்டை..கடிங்க.. படார்'னு குடிங்க..! எப்புடி..?'

 'அருமை சார்..! அருமை..!'

 'திட்டம் 2 குடிக்கிறவங்க..ஒரு SMS பண்ணா போதும்..! உடனே சரக்கு டோர் டெலிவரி..! ஆகும்..!'

 'போங்க சார்.. இதுல ஒரு ரிஸ்க் இருக்கு..! சார் போதைல இருக்கிறவன்.. சரக்கு பத்தலைனா..எப்படி சார் SMS நம்பர ஞாபகம் வச்சுக்குவான்..? இந்த திட்டம் சுமார் தான்..!'

 'தம்பி இவ்வளவு யோசிச்சவன்.. அத யோசிக்காம இருப்பேனா..? எந்த போதையிலும் மறக்காத நம்பர்.. குடிகாரங்களுக்கு பழகிய நம்பர்..
-சிக்ஸ்டி...நைன்டி.. அதாவது 6090க்கு SMS..! யாரு மறப்பா..?'

 'சார் நான் சி.எம் ஆனா இப்பவே.. பதவி தந்துயிருப்பேன்..! சூப்பரோ சூப்பர்..!'

 'திட்டம் 3 இனி டாஸ்மாக்கை தேடி மக்கள் போக வேண்டாம்..மக்களை தேடி டாஸ்மாக் வரும்..!'

 'புரியலையே சார்..?'

 'தம்பி மொபைல் கோர்ட்.. மொபைல் ஹோட்டல்..மாதிரி மொபைல் பார்..! எப்புடி..?'

 'சார் நீங்க கட்சி ஆரம்பிச்சா.. சாகுற வரைக்கும் நீங்க தான் முதல்வர்..! சூப்பர் திட்டம் சார்..!'

 'இதுக்கு கூட விளம்பர வாசகம் இருக்கு..தம்பி..!'

 'என்ன சார் அது..? சொல்லுங்க..?'

 'நாங்க நடமாடுகிறோம்.. நீங்க நடனமாடுங்க..! நல்லா இருக்கா தம்பி..?'

 'ஆஹா.. சார் பூரா பயலுகளையும் ஆட விட்டு காசை அள்ளுறிங்க போங்க..! அருமை..!'

 'திட்டம் 4 சரக்கு வெண்டிங் மிஷின்..!'

 'அப்படி'னா என்ன சார்..?'

 'தம்பி பெரிய.. பெரிய மால்..! தியேட்டர்.. இங்கெல்லாம் போனா.. பெப்ஸி.. கோக்.. காசு போட்டா வரும் பார்த்து இருக்கியலா..?'

 'ஆமா சார்..!'

 'அதே மாதிரி காசு போட்டா சரியான மிக்சிங்'ல..பெப்ஸியோட சரக்கு வரும்..! அந்த கம்பெனியோட ஒப்பந்தம் போட்டுக்கிட்டா.. மெஷின் செலவு அவனது..!' எப்புடி..??

 'சார் நீங்க எங்கேயோ போய்டிங்க..! அருமையான திட்டம் சார்..!'

 'இதுக்கு கூட விளம்பர வாசகம் இருக்கு தம்பி..!'

 'என்ன சார் அது..?

 'துட்டை போடுங்க.. மட்டை ஆகுங்க..

 'பொருத்தமான வாசகம் சார்..!'

 'திட்டம் 5 ஏழை எளியவர்களுக்கு.. ரேஷன் கடைல.. மாதம் இரு முறை மானிய விலையில் குவாட்டர் வழங்கும் திட்டம்..! எப்புடி தம்பி..?'

 'சூப்பரோ சூப்பர்..! கண்டிப்பா நீங்க வந்தா ஓரே ஆண்டுல 50 ஆயிரம் கோடிய அள்ளி விடுவிங்க..!! ரொம்ப நன்றி சார்..! வணக்கம்..!
------------------------
நகைச்சுவை எப்படி இருந்தது? நகைச்சுவையை நகைச்சுவையாக மட்டுமே பார்க்க வேண்டும்!

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------
வாழ்க வளமுடன்! 
வளர்க நலமுடன்!

19.7.15

Half Quiz பாதிப் புதிர்: நேரம் வந்தபோது நிறைவேறியது!


Half Quiz பாதிப் புதிர்: நேரம் வந்தபோது நிறைவேறியது!

Quiz 91  பதில் 

19.7.2015
-----------------------------
நேற்றையப் பதிவில் ஒரு ஜாதகத்தைக் கொடுத்து, ஜாதகத்தில் பல யோகங்கள் உள்ளன.  ஜாதகரின் பல ஆசைகள் நிறைவேறின. ஆனால் ஒரே ஒரு ஆசை மட்டும் பாக்கியுள்ளது. அது சொந்த வீடு ஒன்றை வாங்கும் ஆசை. ஜாதகரின் அந்த ஆசை (அதாவது சொந்த வீடு ஒன்றை வாங்கும் ஆசை) நிறைவேறியதா? அல்லது இல்லையா? என்று கேட்டிருந்தேன்.

சரியான பதில்: ஜாதகரின் ஆசை நிறைவேறியது. தாமதமானாலும் நிறைவேறியது.

ஜாதகத்தைப் பாருங்கள்:


நான்காம் வீடுதான் அசையாத சொத்துக்களுக்கான இடம். ஆனால் இந்த ஜாதகத்தில் நான்காம் அதிபதி சனீஷ்வரன், அந்த வீட்டிற்குப் 12ஆம் இடத்தில் அமர்ந்துள்ளார். அத்துடன் ஜாதகர் அவருடைய 40வது வயதில் ஆசைப்பட்டபோது அவருக்கு சந்திரனின் மகா திசை நடந்து கொண்டிருந்தது. தசாநாதன் 6ம் இடத்தில் அமர்ந்திருப்பதைப் பாருங்கள். அத்துடன் கேதுவின் அரவணைப்பால் அவர் கெட்டிருக்கிறார். அவரால் உடனடியாக உதவமுடியவில்லை.

தசாநாதன் சந்திரனுக்குத் திரிகோணத்தில் அமர்ந்திருக்கும் சூரியன் கை கொடுக்க, அவருடன் அமர்ந்திருக்கும் பதனுடைய புத்தியில் (sub period)
ஜாதகருக்கு வீடு வாங்கும் யோகம் உண்டானது. ஜாதகர் அவருடைய 44வது வயதில் வீடு ஒன்றை வாங்கி அங்கே குடியேறி மகிழ்ந்தார்.
---------------------------------------------------------------------
இந்த அமைப்பை ஒரு சிலரே சுட்டிக் காட்டியுள்ளனர். மற்றவர்கள் ஒட்டியுள்ள பதிலை எழுதியுள்ளனர்.

கலந்து கொண்டவர்கள் 36 பேர்களில், 19 பேர்கள் மட்டுமே வீடு வாங்குவார் என்று எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் பாராட்டுக்கள்.

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1
//////Blogger sundinesh1 said...
சொந்த வீடு வாங்கினர் .
4'ம் அதிபதி 3'ல் அமர்ந்தது வீடு வாங்குவதை தாமதம் செய்தது. அனால் பூமிகாரகன் செவ்வாய் ஆட்சி பெற்று குருவின் பார்வையுடன் உள்ளது. செவ்வாய் தசையில் அதாவது தனது 44-45 வயதில் வீடு வாங்கி இருப்பார் ///////.
----------------------------------
2
/////Blogger KJ said...
Sir,
Native wish can be fulfilled because, Sevvai in own house aspected by Guru.
Though 4th house owner sits 12th from that house, its Guru's house who sits in Lagnam and holds Sevvai in his aspect. So Own house wish is possible.
Thanks
Sathishkumar GS
Friday, July 17, 2015 9:06:00 AM//////
----------------------------------------
3
/////Blogger amuthavel murugesan said...
Answer to Quiz.91:
நிறைவேறியது.லக்கனாதிபதியும்,11 ஆம் அதிபதியும் சேர்ந்து 2 ஆம் வீட்டில் இருப்பதால் லக்கனாதிபதி திசையில் நடபெற்று இருக்கும்.
மு.சாந்தி
Friday, July 17, 2015 9:58:00 AM/////
----------------------------------------
4
////Blogger valli rajan said...
Dear Guruji,
1. 4th Lord is 12th from 4th house.
2. Mars lord for land in 7th house it is his own house with jupiter aspects.
3. Native at age of 47 he will buy a own house, in mars dasa period. This delay is attributable to kala surba dosam, except mars all planets are between rahu and ketu.
Friday, July 17, 2015 11:21:00 AM/////
--------------------------------------
5
/////Blogger mohan said...
நிறைவேறியது. நிறைவேறியது.
இடம் வாங்கி வீடு கட்டியிருப்பார். 23.11.1958 காலை 5.12க்கு பிறந்தவர். 4வது ஸ்தானம் கட்டிட ஸ்தானமாகும். அதன் அதிபதி சனியீஸ்வரர் 4க்கு 12ல் மறைந்ததினால் காலதாமதம்.
ஆனால் லக்கினத்தில் இறையருளால் அமைந்துள்ள குரு பகவான் தனது 7ஆம் பார்வையாக நேரடியாக ஆட்சி பலம் பெற்றுள்ள வலுவான செவ்வாயை பார்க்கின்றார்.
அதனால் செவ்வாய் தசை சுக்கிர புத்தியில் அதாவது 2008ல் சொந்த வீடு கட்டியிருப்பார்.
வாழ்க.
அனபன்
வேந்தன்பட்டி ந.மோகனசுந்தரம். திருநெல்வேலி./////
----------------------------------------------------
6
/////Blogger Govindasamy said...
பூமிகாரகன் மற்றும் இரண்டிற்குறிய செவ்வாய் 7ல் ஆட்சி.
ஜாதகர் சுக்கிரதசை செவ்வாய் புத்தியில் வீடு வாங்குவார்.
Friday, July 17, 2015 11:39:00 AM/////
-------------------------------------------------------
7
//////Blogger kmr.krishnan said...
பூமிகாரகன் ஆன செவ்வாய் சொந்தவிட்டில் கேந்திரத்தில் இருந்து குருவின் பார்வையையும் பெற்றதால் இவருக்கு சொந்த வீட்டு அதிர்ஷட்ம் இல்லாமல் போகவில்லை.சொந்தவீடு வாங்கினார்.சதுர்தாம்சத்திலும் இந்த நிலை உள்ளது.நாலாம் வீட்டிற்கு 33 பரல்.
ஜாதகர் 23 நவம்பர் 1958ம் ஆண்டு காலை 5 மணி 14 நிமிடம் 45 வினாடிக்குப் பிறந்தவர்.
Friday, July 17, 2015 12:21:00 PM/////
---------------------------------------
8
//////Blogger daya nidhi said...
ஆசை நிறைவேறியது. வீடு கட்டுவார்
1.
2.7 க்குரிய செவ்வாய் ஆட்சி பெற்று , லக்னம் மற்றும் 2 ஆம் வீட்டின் மீது பார்வை
2.
4 ஆம் இட அதிபதி( யோககாரகன்) சனி பூர்வஜென்மத்தையும்,பாக்கியத்தையும் பார்க்கிறார்
நன்றி,
சு.தயாநிதி, அவியனுர்
Friday, July 17, 2015 12:46:00 PM////
--------------------------------------
9
///////Blogger Sivachandran Balasubramaniam said...
மதிப்பிற்குரிய ஐயா !!!
புதிர் எண்: 91 இற்கான பதில் !!
ஜாதகர் ரேவதி நட்சத்திரம் மீன ராசி, துலா லக்கினத்தில் பிறந்தவர். லக்கினாதிபதி சுக்கிரன் இரண்டாமிடத்தில் உடன் பாக்கியாதிபதி புதன். பாதகாதிபதி சூரியனுடன். நான்காம் அதிபதி சனி அந்த வீடிற்கு 12இல். அம்சத்தில் நீசம். சுக்கிரனும் அம்சத்தில் நீசம். லக்கினத்தில் ஆறாமதிபதி குரு. குருவும் செவ்வாயும் ஒன்றுக்கொன்று கேந்திரத்தில் குருமங்கள யோகத்தில். பூமிகாரகன் செவ்வாய் அதன் சொந்த வீட்டில். ஆகையால் ஜாதகர் சுக்கிர திசை சனி புத்தியில் தனது 36ஆம் வயதில் சொந்த வீடு கட்டும் யோகம் அமைய வாய்ப்பு உண்டு !!!
சிவச்சந்திரன்.பா
Friday, July 17, 2015 12:51:00 PM//////
----------------------------------------------------
10
/////Blogger seenivasan said...
Dear sir,
He can have own house after the age of 43 during mars period .
Friday, July 17, 2015 1:42:00 PM/////
-----------------------------------------
11
/////Blogger Ramesh said...
நிச்சயம் வீடுயோகம் உண்டு,,தாமதமாக 4ம் அதிபதி அதற்க்கு 12 ல் மறைந்ததே காரணம்..செவ்வாய் திசையில் அந்த யோகமும் நிறைவேறியிருக்கும் ...
Friday, July 17, 2015 8:24:00 PM/////
-------------------------------------
12
Blogger selvam velusamy said...
வணக்கம் குரு,
45 வயதிற்கு மேல் செவ்வாய் தசையில் வீடு ஒன்றை வாங்கியிருப்பார்.
காரணங்கள்,
செவ்வாய் நான்காம் வீட்டிற்கு நான்காம் வீட்டு அதிபதி, ஆட்சியில் உள்ளதோடு குருவின் பார்வையும் பெறுகிறார் மற்றும் அவர் பூமி காரகனும் ஆவார். குருவின் பார்வை வீட்டு காரகன் சுக்கிரனுக்கு நான்காமிடம், நான்காமிடதிர்க்கு நான்காமிடம், சந்திரனுக்கு நான்காமிடம் ஆகிய இடங்களுக்கு கிடைக்கிறது.
நன்றி
செல்வம்
Friday, July 17, 2015 11:11:00 PM///////
-------------------------------------------
13
////Blogger selvaspk said...
On Mars dasa, by his 30th Birthday he should have moved to own house.
Sun as padagathipathy, hidden moon dasa didn't help and Saturn sitting on 12 th from 4th didn't give opportunity.
, but Mars the facilitator of land is strong and aspect 1,2,7 gets the person. He should have constructed two storied building and moved after he return from his travel trio outside of hometown at age of 30.
Saturday, July 18, 2015 2:02:00 AM////
-----------------------------------------
14
//////Blogger Rajam Anand said...
Dear Sir,
Assuming the native was born in Chennai, he was born on 23/11/1958. His Nakshathra is Revathi.
1. He has got following Yogas:
a. Lagna – Papa Karthiri Yoga: Lagna is shielded by Rahu and Sun
b. In Scorpio (2nd house) planets Sun, Venus and Mercury are occupying. Sun is about 22 degrees from Mercury and therefore there is no combustion and this leads to Bhudha_Adhitya Yoga in the 2nd house;
c. Venus and Mercury leads to Nipunathuva Yoga in the 2nd house;
d. Sunapha Yoga in the 2nd house from moon where Mars is occupying. Aries is Mars’s ruling house but Mars is in retrograde at birth. This indicates that the native is not short of money but, how he acquired the wealth is a question mark?;
e. Kethu and Moon are in Pisces in both Rasi chart and Navamsa and also Rahu is in Virgo in both Di and D9 chart. These 3 have attained Vargothma.
2a. Aspect of Mars which in retrograde:
i. 7th is Lagna and Jupiter
ii. 8th is Mercury, Venus and Sun
2b. Aspect of Saturn:
i. 10th is Rahu
2c. Aspect of Jupiter:
i. 7th is Mars
3. Sarva Ashtagavarga
Houses 4, 10 and 12 have 33 and 11th house is 38. This indicates that he has all comforts, doing excellent in his business and getting a good sum. 12th house is ayana sayan bogam. So, he is not doing bad at all infact he is doing extremely good.
4. Manthi
Manthi is in 10th house which is Kendra and this indicates that he will be rich and he will possess house, motor vehicle and all the comforts in life which money can buy.
The answer to the quiz is “Yes he will be able to own properties”.
Thanks
Rajam Anand
Saturday, July 18, 2015 3:23:00 AM//////
----------------------------------------
15
/////Blogger Kanda Samy said...
Vathiyaar ayya vanakkam
Sevvai is in own house & in seven position
so definitely he would have House after his marriage.
kandan
Saturday, July 18, 2015 1:43:00 PM/////
---------------------------------------------
16
//////Blogger vtselvan said...
VATHIYARUKKU VANAKKAM
குரு பார்வை இல் ஆடசி செவ்,4க்கு 4ல் செவ்,வீடு SURE ஆக உண்டு, 4க்கு 12ல் சனி OLD வீடு Chance உண்டு.(NEAR TEMPLE)(EAST Facing) Chance உண்டு
ந்ண்றீ V.T.SELVAM NEYVELI
Sunday, July 19, 2015 2:51:00 AM//////
------------------------------------------
17
/////Blogger Chandrasekaran Suryanarayana said...
23/11/1958 ஆம் ஆண்டு ஞாயிறு கிழமை காலை 5.14.45 மணிக்கு ரேவதி நட்சத்திரத்தில் துலா லக்கினத்தில் ஜாதகர் பிறந்தார். (இடம்: சென்னை)
பதில் : ஆசை நிறைவேறியது.
துலா லக்கினம் : யோககாரர்கள்: சனி புதன்
நல்ல பலனை கொடுப்பவர் : சுக்கிரன்
70 வயதில் குரு மகா தசையில் சனி புக்தியில் ஜாதகருடைய ஆசை நிறைவேறியது.
சொத்து, வீடு அதற்கான வீடு 4ம் வீடு.4ம் வீடு அதிபதி சனி 3ம் வீட்டில் இருந்து 7ம் பார்வையால் பாக்கியஸ்தானமான 9ம் வீட்டை பார்க்கிறார்.
குருவின் 9ம் பார்வை பாக்கியஸ்தாந்த்தின் மீது உள்ளது.
சந்திர ராசியிலிருந்து 4ம் வீடு பாக்கியஸ்தானமான 9ம் வீடு.
9ம் வீட்டு அதிபதி புதன் சுக்கிரனுடன் 2ம் வீட்டில் கூட்டு.
குருவின் பார்வையும், சனியின் பார்வையும் சேர்ந்து பார்க்கின்ற பார்வை ஜாதகருக்கு 70 வயதில் தான் கிடைத்தது.
இன்று எனக்கு சந்திராஷ்ட்டமம். ஆகையினால் மாற்று யோசித்து பார்தேன்.
பார்க்காலாம்…….. சரியா (அ) தவறா என்று.
Sunday, July 19, 2015 4:16:00 AM ///////
----------------------------------
18
/////Blogger Jaya Prakash said...
லக்னம் துலாம்...4ஆம் அதிபதி 3ல்....செவ்வாய் 7ல் வக்ரம்... தற்சமயம் ராகு தசை,.செவ்வாய் சாரம்..வர்க்கோத்தமம், ..எனவே சுப விரயமாக வீடு வாங்குவார்..
Sunday, July 19, 2015 9:42:00 AM/////
---------------------------------------
19
/////Blogger lrk said...
ஐயா வணக்கம்
ஜாதகரின் வீடு வாங்கும் ஆசை நிறைவேறியது.
பூமிகாரகன் செவ்வாய் 7 ல் ஆட்சி, அதை குரு பார்வையில் வைத்திருக்கிறார்.
4 க்கு அதிபதி சனி , அந்த இடத்திற்கு 12 ல் சுப விரையத்திலும்,
சந்திர ராசியில் 4 ஆம் இட அதிபதி புதன் , புதாத்திய யோகத்தில் உள்ளார்கள்.
கண்ணன்.
Sunday, July 19, 2015 3:14:00 PM/////
=======================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

17.7.15

Half Quiz: பாதி புதிர்: நிறைவேறியதா? அல்லது இல்லையா?

Half Quiz: பாதி புதிர்: நிறைவேறியதா? அல்லது இல்லையா?

Quiz.91

17.7.2015

கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.


ஜாதகத்தில் பல யோகங்கள் உள்ளன.  ஜாதகரின் பல ஆசைகள்
நிறைவேறின. ஆனால் ஒரே ஒரு ஆசை மட்டும் பாக்கியுள்ளது.
அது சொந்த வீடு ஒன்றை வாங்கும் ஆசை.

ஒரே ஒரு கேள்விதான். பதிலையும் ஒரே வரியில் எழுதுங்கள்.
ஜாதகரின் அந்த ஆசை (அதாவது சொந்த வீடு ஒன்றை வாங்கும்
ஆசை) நிறைவேறியதா? அல்லது இல்லையா?

பதிலை வழவழவென்று எழுதாமல் ஒரே வரியில் காரணத்துடன் எழுதுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
=============================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

16.7.15

ஓஹோ அதுதான் பெயர்க் காரணமா?


ஓஹோ அதுதான் பெயர்க் காரணமா?
------------------------------------------
சென்னையில் உள்ள ஏரியாக்களின் பெயர் காரணத்தை
தெரிந்துகொள்வோம் ...!

சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம், பல சிறு சிறு கிராமங்களின் இணைவு தான்... சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் பல கிராமங்கள் இணைந்து சென்னை பிரமாண்டமாய் உருவெடுத்துள்ளது...

அப்படி இணைந்த கிராமங்களின் பெயர்கள் உருவானதின் பின்னணியை தெரிந்து கொள்வது சுவாரஸ்யமான ஒன்றே...

* 108 சக்தி ஸ்தலங்களில் 51வது ஊர். ஆகையால் ஐம்பத்து ஒன்றாம் ஊர் என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் இவ்வூர் அம்பத்தூர் என மாறியது...

* Armoured Vehicles And Depot of India என்பதின் சுருக்கமே ஆவடி(AVADI)...

* chrome leather factory இப்பகுதியில் அதிக அளவில் இருந்ததால் இப்பகுதி குரோம்பேட்டை என அழைக்கப்படலாயிற்று...

* 17,18ம் நுற்றாண்டுகளில் நவாப் ஒருவரின் ட்டுப்பாட்டில் இருந்தது இப்பகுதி. அவருடைய குதிரைகளின் பசியை போக்கும் நந்தவனமாக இது விளங்கியதால், garden of horses என்னும் பொருள் படும் Ghoda bagh என்று உருது மொழியில் பெயர் வைத்தார். பின்னாளில் அதுவே கோடம்பாக்கமாக மாறியது...

* மகப்பேறு என்பதே மருவி முகப்பேர் ஆனது...

* தென்னை மரங்கள் நிரம்பிய பகுதி அது. ஆகையால் தென்னம்பேட்டை என பெயர் வைத்தார்கள். பிற்பாடு அது தேனாம்பேட்டையாக மாறிப்போனது...

* சையிது ஷா பேட்டை தான் சைதாபேட்டை என அழைக்கப்படுகிறது...

* முற்காலத்தில் வேதஸ்ரேணி என அழைக்கப்பட்டது தற்போதைய வேளச்சேரி...

* உருது வார்த்தையான che bage (six gardens என்பது இதன் பொருள்) என்பதிலிருந்து உருவானது தான் சேப்பாக்கம்...

* சௌந்தர பாண்டியன் பஜார் என்பதின் சுருக்கமே பாண்டி பஜார்...

* கலைஞர் கருணாநிதி நகரை சுருக்கி கே.கே. நகர் என அழைக்கிறோம்...

* சிவபெருமானுக்கு உகந்த வில்வமரங்கள் அதிகம் இருந்ததால் மகாவில்வம் என அழைக்கப்பட்ட இப்பகுதி, பின்பு மாவில்வம் என்றாகி, காலப்போக்கில் எப்படியோ மாம்பலமாகி விட்டது...

* பல்லவர்கள் ஆட்சி செய்ததால் பல்லவபுரம் என்றழைக்கப்பட்ட இடம் தான் பல்லாவரம்...

* சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் ராஜாவின் நினைவாக இவ்விடம் பனகல் பார்க் என அழைக்கப்படுகிறது...

* நீதி கட்சி தலைவர் சர். பி.டி.தியாகராஜன் செட்டியின் பெயராலேயே இப்பகுதி தியாகராய நகர் என அழைக்கப்படுகிறது(தி.நகர்)...

* புரசை மரங்கள் மிகுதியாக இப்பகுதியில் இருந்ததால், இப்பகுதி புரசைவாக்கம் ஆனது...

* அதிக அளவில் மல்லிகை பூக்கள்  பயிரிடப்பட்ட பகுதி இது. திருக்கச்சி நம்பி ஆழ்வார் தினமும் இங்கிருந்து பூக்களை பறித்துக்கொண்டு சென்று காஞ்சி வரதராஜபெருமாளை வழிபட்டு வந்தார். அதனால் இவ்விடம் சமஸ்கிருதத்தில் புஷ்பகவல்லி என்றும், தமிழில் பூவிருந்தவல்லி என்றும் அழைக்கப்படுகிறது. பின்னாளில் இது பூந்தமல்லியாக மாறியது. வல்லி என்பது தெய்வத்தை குறிக்கும் ஒரு பெயர்...

* 17ம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்து வந்த ஒரு முஸ்லீம் துறவி ‘குணங்குடி மஸ்தான் சாகிப்’. இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள
தொண்டி. ஆகையால் அப்பகுதி மக்கள் அவரை தொண்டியார் என அழைத்தனர். அந்த ஏரியா தான் தற்போதைய தண்டயார்பேட்டை...

* முன்பு இப்பகுதி ஆடு மாடுகள் மேயும் திறந்தவெளியாக இருந்துள்ளது. அதனாலேயே மந்தைவெளி என்றழைக்கபடுகிறது...

* மயில் ஆர்ப்பரிக்கும் ஊர் என்பதே மயிலாப்பூர் என மாறிப்போனது...

* பல்லவர்கள் காலத்தில் போர்கள் நடத்த இவ்விடத்தையே பயன்படுத்தியதால், இப்பகுதி போரூர் எனப்படுகிறது...

* சில நூறு வருடங்களுக்கு முன்பு இப்பகுதி முழுவதும் மூங்கில் மரங்கள் இருந்தது. அதனாலேயே பெரம்பூர் எனப்படுகிறது...

* திரிசூல நாதர் ஆலயம் இருப்பதால் இந்த ஏரியா திரிசூலம் என்று அழைக்கப்படுகிறது...

* பார்த்தசாரதி கோவிலின் எதிர்ப்புறம் இருக்கும் குளத்தில் நிறைய அல்லிகள் பூக்கும். அதன் காரணமாக இப்பகுதிக்கு திருஅல்லிக்கேணி என
பெயர் உருவாக்கி, பின்பு திருவல்லிக்கேணியாகி, தற்போது triplicane என மாற்றம் கண்டுள்ளது...

* தாமஸ் பாரி என்பவர் இப்பகுதில் வணிகம் செய்துவந்தார். மக்கள் மத்தியில் மிகவும் மதிப்பு பெற்றிருந்த அவரின் பெயராலேயே
இப்பகுதி பாரிமுனை (பாரிஸ் கார்னர்) ஆனது...

* வள்ளி சேரி பாக்கம் என்பதே மருவி பின்னால் வளசரவாக்கம் என மாறியது.

வாட்ஸ்அப்பில் வந்தது. படித்ததில் பிடித்தது. உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்

அன்புடன்
வாத்தியார்
=======================================================================
வாழ்க வளமுடன்! 
வளர்க நலமுடன்!

15.7.15

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் விஸ்வநாதன் புகழ் பாடுங்களேன்!


புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் விஸ்வநாதன் புகழ் பாடுங்களேன்!

மெல்லிசை மன்னருக்கு ஒரு அஞ்சலி!

சுமார் 60 ஆண்டு காலம் திரையுலகில் கோலோச்சிய திருவாளர்
M.S. விஸ்வநாதன் அவர்கள் இறைவனடி சேர்ந்து விட்டார். அவர்
ஆன்மா சாந்தியடைய நம் வகுப்பறையின் சார்பில் நமது அஞ்சலியைப்
பதிவு செய்கிறேன். எல்லாம் வல்ல இறைவனையும் பிரார்த்தனை செய்கிறேன்.

சுமார் 1,200 படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. அவற்ரில் பல பாடல்கள் நம் மனதில் தங்கியுள்ளன.

பல கவிஞர்கள் அவருடைய இசைக்கு உறுதுணையாக அற்புதமான
பல பாடல்களை எழுதிக் கொடுத்துள்ளார்கள். அவர்களில் கவியரசர்
கண்ணதாசன் அவர்களும் கவிஞர் வாலி அவர்களும் குறிப்பிடப் பட வேண்டியவர்களாகும்.

அவர்கள் எல்லாம் வாழ்ந்து பல ஆக்கங்களைக் கொடுத்து காலத்தில்
நாமும் வாழ்ந்திருந்தோம் என்பதே நாம் மகிழ்ச்சி அடையக்கூடிய விஷயமாகும்.

வாழ்க அவர்களுடைய புகழ்!

மறக்க முடியாத, மறுக்க முடியாத மேதை M.S. விஸ்வநாதன்.

அவர் இறக்கவில்லை. திரையிசை வடிவில் அவர் என்றும் நம்முடன்
வாழ்ந்து கொண்டிருப்பார்!

கவியரசர் கண்ணதாசன் இன்று இருந்தால் இப்படித்தான் சொல்வார்:

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள்
விஸ்வநாதன் புகழ் பாடுங்களேன்
வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே-எங்கள்
மெல்லிசை மன்னன் புகழ் பாடுங்களேன்!

அன்புடன்,
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

14.7.15

அவனிருக்கையில், எது வந்தாலென்ன எது போனாலென்ன?


அவனிருக்கையில், எது வந்தாலென்ன எது போனாலென்ன?

பக்தி மலர்

14.7.2015

இன்றைய பக்தி மலரை பத்மஸ்ரீ சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய முருகப்பெருமானின் பாடல் ஒன்றின் வரிகள் அலங்கரிக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
அருணகிரி பரவு திருஅடிகள் தொழும் அடியவர்க்கு
ஒரு பயமும் உலகிலில்லை மனமே 
சிவ குமரனையே வணங்கிடுனே தினமே
குமரனையே வணங்கிடுனே தினமே

அரு மறையின் ஒரு பொருளை அறுமுகத்தின் திருவருளை
பெறுபவர்க்கு பிணிகள் இல்லை நினைவாய் 
அந்தப் பேரின்பச் சோலையிலே நுழைவாய் 

(அருணகிரி பரவு திருஅடிகள் தொழும் அடியவர்க்கு
ஒரு பயமும் உலகிலில்லை மனமே
குமரனையே வணங்கிடுனே தினமே)

வளரெழிலும் மலர் மணமும் ... வழிநெடுக தேன்சுவையும் 
விருந்தாக நிறைந்து மனம் இனிக்கும்
வடிவேலுடனே மயிலும் வந்து அழைக்கும்
(அருணகிரி ... )

புதிய மனம் புதிய சுவை ... புதிய நிலை புதிய வழி 
தெறிந்தவர்க்கு திகைப்பேது பின்னே
இங்கு எதுவந்து எதுபோயின் என்னே 
(அருணகிரி ... )

அழகுவிழி பழகியபின் அமுத மழை பொழியும் அதில்
நனைந்தவர்க்கு வாய்த்ததுவே தருணம் 
குருநாதனவன் தாள் சரணம் சரணம்
(அருணகிரி ... )

குமரனையே வணங்கிடு தினமே

பாடிப்பரவசப் படுத்தியவர்: பத்மஸ்ரீ சீர்காழி கோவிந்தராஜன் 
==========================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

13.7.15

Half Quiz பாதிப் புதிர்: இல்லாமல் போவதைவிட தாமதம் ஒன்றும் மோசமில்லை!


Half Quiz பாதிப் புதிர்: இல்லாமல் போவதைவிட தாமதம் ஒன்றும் மோசமில்லை!

Quiz 90  பதில் 

12.7.2015
-----------------------------
Something is better than nothing என்பார்கள். ஒன்றும் இல்லை என்பதைவிட, கொஞ்சம் இருக்கிறது என்பது எவ்வளவோ பரவாயில்லை.
ஒரு யோகம் ஜாதகத்தில் இல்லை என்பதைவிட, இருக்கிறது ஆமால் தாமதமான பலன் (அதன் மகா திசையில்) என்பதும் பரவாயில்லை.

ஒவ்வொரு திசையிலும் லக்னாதிபதி மற்றும் இரண்டாம் அதிபதியுமான சனீஷ்வரனின் தசாபுக்தி (sub period) வருமல்லவா? அவ்வப்போதெல்லாம் அது ஜாதகனை போஷித்துவிட்டுச் செல்லுமல்லவா?

சரி விஷயத்திற்கு வருவோம்.

நேற்றைய ஜாதகத்திற்கான பதில் ஜாதகனுக்கு வியாபாரம் செய்வதற்கான வலுவான அமைப்பு ஜாதகத்தில் உள்ளது. அதனால் ஜாதகன் வியாபாரம் செய்யலாம். அதைத்தான் ஜாதகனும் செய்து மேன்மை அடைந்தான்.

ஜாதகத்தைப் பாருங்கள்:


பத்தாம் வீட்டுக்காரனும், வியாபாரத்திற்கு உரிய கிரகமான புதனும் (planet for trading) ஒன்றாகக் கை கோர்த்துக் கொண்டு 11ம் வீட்டில் இருப்பதுடன், லக்கினாதிபதியும் 2ம் அதிபதியுமான சனீஷ்வரனின் நேரடிப் பார்வையோடும் இருக்கிறார்கள். ஆகவே வியாபாரமே உகந்தது.

இந்த அமைப்பை ஒரு சிலரே சுட்டிக் காட்டியுள்ளனர். மற்றவர்கள் ஒட்டியுள்ள பதிலை எழுதியுள்ளனர்.

கலந்து கொண்டவர்கள் 33 பேர்களில், 17 பேர்கள் மட்டுமே வியாபாரத்திற்கு ஓட்டுப் போட்டுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் பாராட்டுக்கள்.

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++==
17 பேர்கள் சரியான விடை
------------------------------
1
/////Blogger slmsanuma said...
வேலைக்குச் செல்ல வேண்டுமா? 
Job going is governed by 6th place
Laknathipathy and also Karmakaraghan is in retrogradation and has 1 Bindu but in 5th Place to laknam (Trikonam).
1) Karmakaraghan is in retrogradation and has 1 Bindu but in 5th Place to laknam (Trikonam).
2) Bagavaathipathy Bhudhan has 8 bindus but has the Retrograde Saneeswaran Parvai and in 11th place to Laknam.
3) Bavagam has 28 Bindus and is with Kethu and has Suriyan and Guru Parvai but these Graghas are in 12th place to Laknam.
4) Karmakaraghan is at 5th place to Laknam but in 12th place to Bavagam.
5) Bagavaathipathy Bhudhan is at 11th place to Laknam but in 6th place to Bavagam.
வியாபாரம் செய்யலாமா?
Doing Business is governed by 10th place
Laknathipathy and also Karmakaraghan is in retrogradation and has 1 Bindu but in 5th Place to laknam (Trikonam).
1) Karmakaraghan is in retrogradation and has 1 Bindu but in 5th Place to laknam (Trikonam).
2) Bagavaathipathy Sukkiran has 4 bindus but has the Parivarthanai yokam with Sevvai.
3) Bavagam has 35 Bindus and is with Parivarthanai Sevvai and has Chandiran Parvai.
4) Karmakaraghan is at 5th place to Laknam but in 8th place to Bavagam.
5) Bagavaathipathy Sukkiran is at 11th place to Laknam but in 2nd place to Bavagam.
From the above the Native should do Business.
Friday, July 10, 2015 8:34:00 AM //////
-------------------------------------------
2
/////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
Quiz.90 ற்கான பதில்,
வணக்கம் வாத்தியாரே!
மகர லக்கினாதிபதி ஸ்திர ராசியில்(ரிஷபம்), 3ம் அதிபதி 12ல் மறைந்து விட்டார். வியாபாரம் செய்ய ஏற்ற அமைப்பு. வியாபாரம் செய்ய வேண்டிய ஜாதகம். அதுதான் வரும். 
ஒருவரியில் பதில் என்றால், வணக்கம் வாத்தியாரே! & அன்புள்ள மாணவன் ஆகியவை சேராது என்று நினைக்கிறன்.... ஹிஹி... ஹி....
அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.
Friday, July 10, 2015 8:40:00 AM //////
-------------------------------------------------
3
////Blogger ram said...
Sales viyaparam
Friday, July 10, 2015 10:38:00 AM /////
 ஜாதகப்படி என்ன அமைப்பு? அதைச் சொல்லவில்லையே நீங்கள்!
----------------------------------------------------------
4
//////Blogger Sakthivel K said...
வணக்கம் சார்......
மகரலக்னம். லக்னாதிபதி 5ல். 5+9ஆம் அதிபதிகள் பார்வையுடன்.(5ஸ்டார் ஹோட்டலில் பால்ரூம்டான்ஸ் பார்பதுபோல)
செவ்வாய் 10ல் திக்பலம். செவ்+சுக்=பரிவர்த்தனை. சந்+செவ்=நேரடிபார்வை(சந்திரமங்களயோகம்)
ஜாதகன் வியாபாரம் சுயதொழில்தான் செய்வார் !!!
Friday, July 10, 2015 10:59:00 AM ////
-----------------------------------
5
********/////Blogger daya nidhi said...
வியாபாரமே செய்யவேன்டும்.
வியாபாரத்தை குறிக்கும் 7 ஆம் வீட்டு அதிபதி சந்திரன் , சுக (4ஆம்) இடத்தில்
இருந்து , தொழில் பாவத்தில் உள்ள‌ லாபாதிபதி செவ்வாயை பார்க்கிறார்.
செவ்வாய , சந்திரனையும்.லக்கினத்தையும் ,லக்னாதிபதியையும் பார்க்கிறார்
லக்னாதிபதி சனிக்கும், வியாபார காரகன் புதனுக்கும் பார்வை.
நன்றி, தயாநிதி, அவியனுர்
Friday, July 10, 2015 11:56:00 AM //////
------------------------------------------
6
/////Blogger valli rajan said...
Dear Guruji,
Business, 10th Place Mars gives him managing abilities. 10th Lord and yogakaraka for makara lagna in the 11th house with aspect of saturn.
Friday, July 10, 2015 1:23:00 PM //////
--------------------------------------
7
/////Blogger Goutham Mylsamy said...
Native in business,
10th lord and 11 th parivarthana and 
For 10th 10th lord moon in 4th house and aspecting 10th house,9th & 10 th lord in 11th house,lagnathpathi in 5th house aspecting 11th house , but
dhana jathagam
Friday, July 10, 2015 3:12:00 PM /////
-------------------------------------
8
////Blogger kmr.krishnan said...
ஜாதகர் 17 டிசம்பர் 1972 காலை 10 மணி 9 நிமிடம் 30 வினாடிக்குப்பிறந்தவர்.
அஷ்ட வர்கப்படி வியாபாரத்திற்கு உரிய‌ மூன்றாம் இடத்திற்கு 30 பரல்.12 விரய ஸ்தானத்திற்கு 19 பரல் மட்டுமே.வியாபரத்திற்கு உரிய‌ புதனுக்கு சுயவர்கத்தில் 8க்கு எட்டு!
என் ஓட்டு அவருக்கு வியாபரத்திற்கே!
Friday, July 10, 2015 8:37:00 PM ////
----------------------------------------
9
/////Blogger C Jeevanantham said...
Dear Sir,
He will do Business. 10th lord and 11th lord exchange and encourage to do business.
Thanking you,
C.Jeevanantham.
Friday, July 10, 2015 10:09:00 PM /////
-------------------------------------------
10
/////Blogger ragav said...
He has to start a business but definitely not in Surya Dasa.
1. Lord of 10 and 11 parivardhana for the native(Those were Lord of 4 and 5 also)
2. The Labathibathi(also lard of 4th) is in 10th with Thik Bala
3. The Tenth lord is in Leo in navamsa. So he has managerial capability to run a business
4. Chandra mangal yoga also
Friday, July 10, 2015 10:09:00 PM /////
---------------------------------------
11
////Blogger Manikandan said...
1. வியாபரம் 
காரணங்கள்
1. 10ம் அதிபதி சுக்கிரன் திரிகோணத்தில் + 1-ம் அதிபதி சனி பகவானின் சப்தம பார்வையில் சம்பந்தம்.
2. லாபாதிபதி செவ்வாய் 10-ல் இருந்து , 8-ம் இட பார்வையில் லக்கினாதிபதி சனி
3. 2,5,9 ம் ஸ்தானாதிபதிகள் சேர்க்கை மற்றும் பார்வைகள்
சுக்கிரன் தசை மீதி 14 வருடம் + சந்திரன் திசை 10 வருடம் முடிந்து 24ம் வயதில் செவ்வாய் திசையில் தொழில் தொடங்க வாய்ப்பு ஏற்படுகிறது. ரியல் எஸ்டேட் அல்லது உணவு சம்பம்தம் பட்ட தொழிலாக இருக்கலாம்.
Saturday, July 11, 2015 7:07:00 AM ////
-----------------------------------------
12
/////Blogger Pethaperumal said...
வணக்கம் ஐயா:
1. ஐந்தாம் வீட்டுக்காரனும் ஒன்பதாம் வீட்டுக்காரனும் ஒன்றாக இருப்பதோடு, அவர்களை இரண்டாம் வீட்டுக்காரன் வலிமையோடு தன் பார்வையில் வைத்திருக்கிறான்.
2.10 க்கு உடைய சுக்கிரனும் 11க்கு உடைய செவ்வாயும் பரிவர்த்தனை.
3.10 ம் இடம் நன்றாக உள்ளது, சசி மங்கள யோகம், நிபுணத்துவ யோகம் போன்ற பல சுப யோகங்கள் உள்ளன.
4.சந்திர திசை சாதகமாக உள்ளது. ஜாதகர் தொழில் செய்யலாம்.
நன்றி
Saturday, July 11, 2015 1:21:00 PM ////
----------------------------------------------------
13
/////Blogger Govindasamy said...
ஜாதகர் வேலைக்குச் சென்றால் சோபிக்க மாட்டார். காரணம் சூரியன் 12ல் மற்றும் 6க்குரிய புதன் அதற்கு 6ம் இடத்தில். எனவே அரசு வேலை கிடைப்பதும் கிடைத்தாலும் அதில் சோபிப்பது அரிது.
வியாபாரம் செய்தால் பலன் உண்டு காரணம்.
1. 10 க்குரிய சுக்கிரனும் 11க்குரிய செவ்வாயும் பரிவர்த்தனை யோகத்தில்.
2. 2 க்குரிய சனி ஏழாம் பார்வையால் 11ம் இடத்தைப் பார்ப்பதால் தன வருவாய் பாக்கியமாக உண்டு. 12 க்குரியவனும் வலுத்திருப்பதால் பணப்புழக்கம் - விரயம் இருந்துகொண்டே இருக்கும். அதனால் வியாபாரம் இவருக்கு ஒத்து வரும்.
3. 10ம் இடத்தில் செவ்வாய் பரிவர்த்தனை யோகத்தில் இருப்பதால் இவருக்கு ரியல் எஸ்டேட் அல்லது construction business லாபகரமானதாக இருக்கும்.
4. 24 வயதில் சூரியதிசையில் வியாபாரம் செய்தாரானால் 6 வருடங்கள் கழித்து வரும் செவ்வாய் திசையில் மிகுந்த யோகம் உண்டு.
Saturday, July 11, 2015 3:14:00 PM //////
---------------------------------------------
14
/////Blogger Velu R said...
ஜாதகர் வேலைக்கு செல்வதைவிட businees செய்தால் நல்ல பலன் கிடைக்கும். காரனம்
1. 9ம் அதுபதி மற்றும் 10ம் அதிபதி சேர்ந்து தர்மகத்தா யொகம் அடைந்து திரிகோணம் ஏரி இருகின்றனர் அதும் லாபஸ்தானத்தில்.
2.11ம் அதிபதி (லாபஸ்தான அதிபதி) 10ல் ஆக இவருக்கு தொழிலில் நஸ்டம் வர வாய்பே இல்லை
Saturday, July 11, 2015 7:38:00 PM /////
-----------------------------------------
15
/////Blogger Gpbarathi P said...
the native should start a business. because in eleventh place fifth and nineth conjunction. it is aspected by second house. Also fourth house is aspected by guru.
Nellai padmanaban
Saturday, July 11, 2015 10:56:00 PM /////
--------------------------------------------
16
/////Blogger Rajam Anand said...
Dear Sir
The answer to the question is – yes he will venture into business which will be very successful and the reasons are 
1. As suggested by you 5th lord and 9th lord are occupying the 11th which is an important house to indicate a success in business.
2. Saneeswaran is also important (Karakan) and lord of Lagna and is aspecting the 11th house.
3. If the Lagna Lord or Lagna or moon in the sign of Taurus then this signifies the native will thrive in business. And also if sign of Taurus aspected or occupied by either Mercury or Jupiter or Venus then this gives a benefic influence to business career.
Thanks
Rajam Anand
Sunday, July 12, 2015 3:49:00 AM ////
------------------------------------------
17
/////Blogger SSS CONSTRUCTION said...
SIR, HIS JATHAGAM INDICATE HE IS SUITABLE FOR BUSINESS BECAUSE BOTH RASI AND NAVAMSA 10TH PLACE OCUUPYING MARS AND SAT 5TH IN RASI AND 11TH IN NAVAMASA, AND HE IS NOT SUITABLE FOR JOB BECAUSE 6TH PLACE OCCUPYING KATHU AND 6TH LORD BUDHA 6TH PLACE FROM THE 6TH PLACE.
Sunday, July 12, 2015 8:19:00 AM /////
=====================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

10.7.15

Half Quiz: பாதி புதிர்: தனயோகம் தாமதமாகக் கிடைத்தால் என்ன ஆகும்?



Half Quiz: பாதி புதிர்: தனயோகம் தாமதமாகக் கிடைத்தால் என்ன ஆகும்?

Quiz.90

10.7.2015

கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.


ஜாதகத்தில் தன யோகம் உள்ளது. ஐந்தாம் வீட்டுக்காரனும் ஒன்பதாம் வீட்டுக்காரனும் ஒன்றாக இருப்பதோடு, அவர்களை இரண்டாம் வீட்டுக்காரன் வலிமையோடு தன் பார்வையில் வைத்திருக்கிறான். ஆகவே தன யோகம் உள்ளது. ஆனால் லக்கினாதிபதியும், இரண்டாம் வீட்டுக்காரனுமான சனீஷ்வரனின் மகா திசை ஜாதகருக்கு வாழ்க்கையின் கடைசிப் பகுதியில்தான் வருகிறது. ஆகவே ஜாதகருக்கு யோகம் கிடைத்தும் முழுமையாக அனுபவிக்க முடியாத நிலைமை.

ஆனால் ஜாதகர் தனது 24வது வயதில் வேலைக்குச் செல்ல மறுத்து சொந்த வியாபாரம் செய்ய விரும்பினார். ஆனால் அவருடைய பெற்றோர்களுக்கு விருப்பமில்லை.

ஒரே ஒரு கேள்விதான். பதிலையும் ஒரே வரியில் எழுதுங்கள். ஜாதகர் வேலைக்குச் செல்ல வேண்டுமா? அல்லது வியாபாரம் செய்யலாமா? எது நல்லது? ஜாதகப்படி என்ன காரணம்?

கேள்வி: வேலையா அல்லது வியாபாரமா?
பதில்: ஒரே வரியில் காரணத்துடன்

ஜாதத்தை அலசி உங்கள் கணிப்பை எழுதுங்கள்.

அன்புடன்,
வாத்தியார்
=============================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

9.7.15

பக்தி என்ற ஏணியின் முதல் படிக்கட்டு!


பக்தி என்ற ஏணியின் முதல் படிக்கட்டு!

கண்ணபிரானும், அர்ஜுனனும் சென்று கொண்டிருந்தபோது, மேலே
பறந்த பறவையை அது புறா தானே, என்றார் கண்ணன்.

அர்ஜுனனும் ஆம் என்றான்.

இல்லையில்லை....கழுகு மாதிரி தெரிகிறது, என்றார் கண்ணன்.

ரொம்ப சரி...அது கழுகே தான், என்றான் அர்ஜுனன்.

மைத்துனா! சரியாகப் பார், அது கிளி மாதிரி பச்சையாக இல்லை...
என்றதும், அதிலென்ன சந்தேகம், அது கிளி தான், கிளிதான்,
கிளிதான் என்றுமூன்று முறை அடித்துச் சொன்னான் அர்ஜுனன்.

என்னடா நீ! நான் என்ன சொன்னாலும், ஆமாம் சாமி போடுகிறாயே...!
அது என்ன பறவை என தெளிவாகச் சொல்,  என்ற கண்ணனிடம்,
கண்ணா! என்பார்வையை விட உன்வார்த்தையில் எனக்கு
நம்பிக்கைஅதிகம். மேலும், அந்தப்பறவையை நான் புறா என்று
அடித்துச் சொன்னால், அதை கிளியாகவோ, கழுகாகவோ மாற்றிவிட,
உனக்கு எவ்வளவு நேரமாகி விடும்! நீயே எல்லாம் என்றான பிறகு, எந்தப்பொருளும் எப்படி வேண்டுமானாலும் மாறுமே...! உன் சக்தியை மட்டுமே நான் நம்புகிறேன், என்றான்.

பார்த்தீர்களா! பக்திக்கு தேவை நம்பிக்கை தான்! புராணங்களில்
அப்படி சொல்லியிருக்கிறதே... இப்படி சொல்லியிருக்கிறதே...
 நம்புகிற மாதிரி இல்லையே... என்று வாதம் செய்தால், பக்தி என்ற
ஏணியின், முதல் படிக்கட்டில் கூட நாம் காலை வைக்க முடியாது.

அதை உணர்ந்து கொள்ளுங்கள்
===============================================
பதிவு 2

எதெதில் என்னென்ன இருக்கிறது?

1) என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர்
""நெல்லிக்கனி.""

2) இதயத்தை வலுப்படுத்த
""செம்பருத்திப் பூ"".

3) மூட்டு வலியை போக்கும்
""முடக்கத்தான் கீரை.""

4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும்
""கற்பூரவல்லி"" (ஓமவல்லி).

5) நீரழிவு நோய் குணமாக்கும்
""அரைக்கீரை.""

6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும்
""மணத்தக்காளிகீரை"".

7) உடலை பொன்னிறமாக மாற்றும்
""பொன்னாங்கண்ணி கீரை.""

8) மாரடைப்பு நீங்கும்
""மாதுளம் பழம்.""

9) ரத்தத்தை சுத்தமாகும்
""அருகம்புல்.""

10) கான்சர் நோயை குணமாக்கும்
"" சீதா பழம்.""

11) மூளை வலிமைக்கு ஓர்
""பப்பாளி பழம்.""

12) நீரிழிவு நோயை குணமாக்கும்
"" முள்ளங்கி.""

13) வாயு தொல்லையிலிருந்து விடுபட
""வெந்தயக் கீரை.""

14) நீரிழிவு நோயை குணமாக்க
"" வில்வம்.""

15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும்
""துளசி.""

16) மார்பு சளி நீங்கும்
""சுண்டைக்காய்.""

17) சளி, ஆஸ்துமாவுக்கு
""ஆடாதொடை.""

18) ஞாபகசக்தியை கொடுக்கும்
""வல்லாரை கீரை.""

19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும்
""பசலைக்கீரை.""

20) ரத்த சோகையை நீக்கும்
"" பீட்ரூட்.""

21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்
"" அன்னாசி பழம்.""

22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை
(முள் முருங்கை)

23) கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.

24) மார்புசளி, இருமலை குணமாக்கும்
""தூதுவளை""

25) முகம் அழகுபெற
""திராட்சை பழம்.""

26) அஜீரணத்தை போக்கும்
"" புதினா.""

27) மஞ்சள் காமாலை விரட்டும்
“கீழாநெல்லி”

28) சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும்
“வாழைத்தண்டு”.

கண்டிப்பாக பகிருங்கள் மற்றவரும் அறிந்துகொள்ளட்டும்..

அன்புடன்,
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

8.7.15

புதியதை வரவேற்பவரா நீங்கள்?



புதியதை வரவேற்பவரா நீங்கள்?

புதியதை வரவேற்பவரா நீங்கள்? உங்களுக்காகத்தான் இந்தப் பதிவு!

இப்போது எத்தனையோ புது முகங்கள் திரையிசையில் கலக்குகிறார்கள். அவர்களில் நன்றாகப் பாடுகிறவர்களை நாம் ஆதரிக்க வேண்டாமா?
ஜனவர் 2014ல் வெளிவந்த ரம்மி திரைப்படத்தில் வரும் பாடலைக் கேட்க நேர்ந்தது. பாடலைப் பாடிய ஆண் மற்றும் பெண்மணியின் குரல்
அசத்தலாகவே இருந்தது.

யாரென்று தெரிந்துகொள்வதற்காக, இணையத்தைத் தோண்டினேன்:

பாடகரின் பெயர்: வி.வி.பிரசன்னா

பாடகியின் பெயர்: வந்தனா சீனிவாசன்


இசை: இமான்
பாடலின் காணொளி பதிவின் கடைசியில் உள்ளது. கேட்டுப் பாருங்கள்

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------
பாடலின் வரி வடிவம்: ஆக்கம் கவிஞர் யுகபாரதி
படத்தில் நடித்தவர்கள்: விஜய் சேதுபதி மற்றும் அஷ்வர்யா

கூட மேல கூட வச்சு கூடலூரு போறவளே
உன் கூட கொஞ்சம் நானும் வாறன்
கூட்டிகிட்டு போனா என்ன
ஒத்தையில நீயும் போனா அது ஞாயமா
உன்னுடனே நானும் வாறன் ஒரு ஓரமா
நீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா
நீ வேணான்னு சொன்னாலே போவேண்டி சேதாரமா

கூட மேல கூட வச்சு கூடலூரு போறவள
நீ கூட்டிக்கிட்டு போகச் சொன்னா
என்ன சொல்லும் ஊரு என்ன
ஒத்துமையா நாமும் போக இது நேரமா
தூபதாலே தேச்சு வச்ச கரு ஈரமா
நான் போறேன்னு சொல்லாம வாரேன்னே உன் தாரமா
நீ தாயேன்னு கேக்காம தாரேனே தாராளமா

சரணம் - 1

சாதத்துல கல்லு போல நெஞ்சுக்குள்ள நீ இருந்து
செரிக்காமல் சதி பண்ணுற

சீயக்காய போல கண்ணில் சிக்கிகிட்ட போதும் கூட
உறுத்தாம உயிர் கொல்லுற

அதிகம் பேசாமல் அளந்து நான் பேசி
எதுக்கு சட பின்னுர

சல்லி வேற ஆணி வேராக்குற
சட்ட பூவா வாசமா மாத்துற

நீ போகாத ஊருக்கு பொய்யான வழி சொல்லுறே

கூட மேல கூட வச்சு கூடலூரு போறவளே

நீ கூட்டிகிட்டு போக சொன்னா
என்ன சொல்லும் ஊரு என்ன

சரணம் - 2

எங்க வேணா போயிக்கோ நீ
என்ன விட்டு போயிடாம 
இருந்தாலே அது போதுமே

தண்ணியத் தான் விட்டுப் புட்டு
தாமரையும் போனதுன்னா
தர மேல தல சாயுமே

மறஞ்சு போனாலும் மறந்து போகாத
நெனப்பு தான் சொந்தமே

பட்ட தீட்ட தீட்ட தான் தங்கமே
உன்ன பாக்க பாக்க தான் இன்பமே

நீ பாக்காம போனாலே கெடையாது மறு சென்மமே

கூட மேல கூட வச்சு கூடலூரு 
ஹே கூடலூரு போறவளே

ம்ம் கூட்டிகிட்டு போகச் சொன்னா
என்ன சொல்லும் ஊரு என்ன

ஓ ஒத்தையில நீயும் போனா அது ஞாயமா
உன்னுடனே நானும் வாறன் ஒரு ஓரமா

நான் போறேன்னு சொல்லாம வார்னே உன் தாரமா
நீ தாயேன்னு கேக்காம தாரேனே தாராளமா

ஆஹாஹா ஆஹாஹ ஆஹாஹ ஆஹாஹ ஹா ....



Our sincere thanks to the person who uploaded this song in the net

வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!