மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.6.15

நண்பனாக வந்தவன் அவன்!


நண்பனாக வந்தவன் அவன்!

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை பத்மஸ்ரீ சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய பக்திப் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------
ஆயிரம் போற்றி பாடினும் ஆவல் ஆறுமோ முருகா
(ஆயிரம் ... )
ஆறுமுகா ...
(ஆயிரம் ... )

தாயினும் இனித்தாய் தந்தையாய் வளர்த்தாய் 
வாழ்வெல்லாம் வகுத்தாய் வரம் எனக்களித்தாய் 
(ஆயிரம் ... )

நீயே எளியேன் நெஞ்சினில் நின்றாய்
நிம்மதி தந்தே அஞ்சேல் என்றாய் 

நாயேன் பிழைகள் நாளும் பொருத்தாய் 
நண்பனாய் வந்தே துன்பம் தவிர்த்தாய் 
(ஆயிரம் ... )
ஆறுமுகா
(ஆயிரம் ... ).

பாடியவர்: பத்மஸ்ரீ சீர்காழி கோவிந்தராஜன் 
==============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

27.6.15

அறிவிப்பு: வாத்தியாரின் ஜோதிட நூல் - முதல் தொகுதி

அறிவிப்பு: வாத்தியாரின் ஜோதிட நூல் - முதல் தொகுதி

vagupparai Astrology Book - Part one

ஒருவழியாக பல சிரமங்களுக்கிடையே முதல் பகுதியின் தொகுப்பு வேலை, படிப்பதற்குத் தகுந்த முறையில் அத்தியாயங்கள் வரிசைப்படுத்தப் பெற்று Type setting for printing, எழுத்துப்பிழைகள் திருத்தம், படங்கள், அட்டவணைகள் சேர்க்கை என்று எல்லாம் முடிந்து புத்தகம் முழு வடிவம் பெற்று, அச்சிற்குத் தயாராகிவிட்டது.

ஒரு நவீன அச்சகத்தில் கொடுத்தால், printing and binding ஐ ஒரே ஸ்ட்ரோக்கில் முடித்து அவர்கள் புத்தகங்களைக் கையில் கொடுத்துவிடுவார்கள்.
இன்னும் 15 முதல் 20 நாட்களுக்குள் புத்தகங்கள் வந்துவிடும். வந்தவுடன் முன்பதிவு செய்து வைத்துள்ள அனைவருக்கும் அவைகள் முதலில் அனுப்பி வைக்கப்படும்

புத்தகம் - தொகுதி ஒன்று
அத்தியாயங்கள் - 65
பக்கங்கள் - 320
புத்தகத்தின் எடை 350 கிராம்கள்
விலை: ரு.320:00
கூரியர் செலவு: தமிழ்நாட்டிலுள்ள ஊர்களுக்கு ரூ.50:00
பிற மாநிலங்களில் உள்ள ஊர்களுக்கு சற்றுக் கூடுதலாக இருக்கும்

முன் அட்டை


பின்பக்க அட்டை
புத்தகம் நன்றாக அமைந்துள்ளது. பார்த்தால், படித்தால் மகிழ்ச்சி கொள்வீர்கள்.ஆகவே அனைவரும் இன்னும் 20 தினங்களுக்குப் பொறுத்திருங்கள்.

அன்புடன்,
வாத்தியார்
------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

வீட்டிலும் ஹெல்மெட் போட்டுக் கொள்ள வேண்டுமா?


வீட்டிலும் ஹெல்மெட் போட்டுக் கொள்ள வேண்டுமா?

ஜூலை முதல் தேதி முதல் அனைவரும் ஹெல்மெட் அணிந்துகொண்டுதான் இரண்டு சக்கர வாகனங்களில் பயணிக்க வேண்டும். ஆகவே மறக்காமல், தவறாமல் அதைச் செய்ய்ங்கள். இல்லையென்றால், பிடிபட்டால் 
ஓட்டுனர் உரிமத்தை இழக்க வேண்டிய அபாயம் உள்ளது.

வாகனத்திலேயே ஹெல்மெட்டை வைத்துப் பூட்டிக் கொள்ள, 
பூட்டுடன் கூடிய கொக்கிகள் கிடைக்கும். அதை வாங்கி வண்டியில் இணைத்துவிடுங்கள். அலுவலங்கள், வியாபார ஸ்தலங்கள், வங்கிகள் 
என்று பணிக்குச் செல்லும் இடங்களுக்கெல்லாம் அதையும் கையில் பிடித்துக்கொண்டே செல்வது கஷ்டமாக இருக்க்கலாம். ஆகவே தான் 
இந்த யோசனை.

சிலர் வீட்டில் இருக்கும்போதும் ஹெல்மெட் அணிந்து கொள்வது நல்லது. கீழே உள்ள படத்தைப் பார்த்துவிட்டு, அதை முடிவு செய்யுங்கள்


வாத்தியார் வெளியூர்ப் பயணம். ஆகவே திங்கட்கிழமை, 29.6.2015 அன்று வகுப்பறைக்கு விடுமுறை. அடுத்த வகுப்பு வழக்கம்போல் ஜூலை ஒன்றாம் தேதியன்று. அன்றைக்கு நீங்கள் வகுப்பிற்கு வந்தால் போதும்.

அன்புடன்
வாத்தியார்
========================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

26.6.15

கவிதை: பூஜியமும் ராஜியமும்

கவிதை: பூஜியமும் ராஜியமும்

என்ன தலைப்பு நெருடலாக உள்ளதா? பூஜியத்திற்கும் ராஜியத்திற்கும்
என்ன சம்பந்தம் என்கிறீர்களா?

கொடுத்துள்ள பாடலைப் படியுங்கள். பிடிபடும். அதாவது தெளிவாகும்.

பூஜ்யத்துக்குள்ளே ஒரு 
ராஜ்யத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன்
அவனை புரிந்து கொண்டால்
அவன்தான் இறைவன்

தென்னை இளநீருக்குள்ளே
தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே
தேங்காயை போல் இருப்பான் ஒருவன்
அவனை தெரிந்து கொண்டால்
அவன் தான் இறைவன்

முற்றும் கசந்ததென்று
பற்றறுத்து வந்தவருக்கு
சுற்றமென நின்றிருப்பான் ஒருவன்
அவனை தொடர்ந்து சென்றால்
அவன் தான் இறைவன்

கோழிக்குள் முட்டை வைத்து
முட்டைக்குள் கோழி வைத்து
வாழைக்கும் கன்று வைத்தான் ஒருவன்
அந்த ஏழையின் பேர்
உலகில் இறைவன்

பூஜ்யத்துக்குள்ளே ஒரு 
ராஜ்யத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன்
அவனை புரிந்து கொண்டால்
அவன்தான் இறைவன்

அவனை புரிந்து கொண்டால்
அவன்தான் இறைவன்
- இறைவனைப் பற்றிக் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் அசத்தலாகச் சொன்னது

திரைப் படம்: வளர்பிறை (1962)
நடிப்பு: சிவாஜி, சரோஜா தேவி
இயக்கம்: D யோகானந்த்
இசை: K V மகாதேவன்
பாடல்: கண்ணதாசன்
------------------------------------
என்ன பாடல் நன்றாக உள்ளதா?
அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.6.15

Humour நகைச்சுவை: கனவில் தோன்றிய பூதம் என்ன செய்தது?


Humour நகைச்சுவை: கனவில் தோன்றிய பூதம் என்ன செய்தது?

ஒரு பெண்ணின் கனவில் பூதம் தோன்றி, “உனக்கு என்ன வேண்டுமோ... அதைக் கேள்?” என்றது.

“என் கணவர் முழிச்சுக்கிட்டிருக்கும் போதேல்லாம் என் மேலே கண்ணா இருக்கணும்.”

“அப்புறம்..?”

“அவர் வாழ்க்கையில் என்னைத் தவிர வேற எதுவுமே முக்கியமா இருக்கக்கூடாது.”

“அப்புறம்?”

“அவர் தூங்கும்போது நான் பக்கத்துல இல்லாமல் தூங்கவே கூடாது.”

“அப்புறம்..?”

“அவர் காலையில் எழுந்திருக்கும்போது என் முகத்துலதான் முழிக்கணும்.”

“அப்புறம்..?”

“ அவர் நான் இல்லாம எங்கயும் போகக் கூடாது.”

“அப்புறம்..?”

“எம்மேல ஒரு கீறல் பட்டாலும் கூட அவர் வாடி வருத்தத்துல உறைஞ்சு போயிடணும்.”

“அப்புறம்..?”

“அவ்வளவுதான்.”

உடனே பூதம் அந்தப் பெண்ணை ஒரு ‘சாம்சங் s6’ ஸ்மார்ட் மொபைல் போனாக மாற்றியது!
-------------------------------------------------------------
2

நடுநிசியில் நடந்த கதை

நடுநிசியில் விழித்துப் பார்த்த மனைவிக்குத் திக்கென்றிருந்தது. பக்கத்தில் படுத்திருந்த கணவனைக் காணவில்லை.

நைட்டியை நன்றாகக் கட்டிக்கொண்டவள், படியிறங்கி வந்து வீட்டின் கீழ்த் தளத்தில் அவனைத் தேடத்துவங்கினாள்.

அவன் சமையல் அறையில் உள்ள மேஜை ஒன்றின் மீது அமர்ந்திருந்தான். சூடான காப்பி டம்ளரில் எதிரே இருந்தது.

அவன் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். எதிரில் இருந்த சுவற்றை வெரிச்சிட்டுப் பார்த்துக் கொண்டும் இருந்தான்.

கண்ணில் பொங்கிய கண்ணீரைத் துடைத்துவிட்டுக் கொண்டான். பிறகு காப்பி டம்ளரை எடுத்துக் குடிக்கத் துவங்கினான்.

சமையல் அறைக்குள் நுழைந்த மனைவி, “என்ன கண்ணா விஷயம்?” என்று மெல்லிய குரலில் கேட்டாள்.

காப்பி டம்ளரை பக்த்தில் வைத்தவன் சொன்னான்,  “இருபது ஆண்டுகளுக்கு முன்பு நாம் சந்தித்தையும், காதலிக்கத் துவங்கியதையும் நினைத்துப்
பார்த்துக் கொண்டிருக்கிறேன். அந்த சந்திப்புக்கள் உனக்கு நினைவில் இருக்கிறதா?”

மனைவி ஒரு நொடியில் உணர்ச்சி வயமானாள். நம் கணவன் எவ்வளவு சாதுவானன் என்று நினைத்ததோடு சொன்னாள்:” எப்படி மறக்க முடியும்?
எல்லாம் என் நினைவில் பசுமையாக உள்ளது!”

கணவன் மெளனமானான். வாயிலிருந்து வார்த்தைகள் வரவில்லை!

ஒரு நிமிடம் கழித்துப் பேசத்துவங்கினான்.

“எனது காரில் நாம் இருவரும் ஒன்றாக, நெருக்கமாக இருக்கும்போது உன் அப்பாவிடம் மாட்டிக்கொண்டோமே - அது நினைவில் இருக்கிறதா?”

“ஆஹா...நினைவில் இருக்கிறது!” என்று சொன்னவள் அவனுக்கு எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

அவன் தொடர்ந்து சொன்னான்: “ அப்போது உன் தந்தை என்ன செய்தார்?
என் நெற்றிப் பொட்டில் ஒரு கைத்துப்பாக்கியை வைத்து அழுத்திப்
பிடித்தவாறு, என் பெண்ணை உடனே நீ கல்யாணம் செய்துகொள்.
இல்லை என்றால் 20 வருடம் நீ ஜெயிலில் கிடக்கும்படி செய்துவிடுவேன்.
அது என்னால் முடியும் - என்று சொன்னாரில்லையா?”

”அதுவும் என் நினைவில் இருக்கிறது கண்ணா!” என்று மெல்லிய குரலில் சொன்னாள் அவள்.

கன்னத்தில் வழிந்து கொண்டிருந்த நீரைத் துடைத்துக்கொண்டு அவன் சொன்னான்:

“அப்படி அவர் செய்திருந்தால், இன்று நான் விடுதலையாகியிருப்பேன்!

(பின் குறிப்பு: இதை படிக்கும் போது உங்களுக்கு உங்கள் சொந்தக்கதை ஏதாவது நினைவிற்கு வந்தால் நான் பொறுப்பல்ல)
==============================================
இரண்டில் எது மிகவும் நன்றாக உள்ளது?

அன்புடன்,
வாத்தியார்
==========================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

24.6.15

நினைவில் வைக்க வேண்டிய நாட்கள்தான் எத்தனை நாட்கள் சாமிகளா?

நினைவில் வைக்க வேண்டிய நாட்கள்தான் எத்தனை நாட்கள் சாமிகளா?

ஆண்டு முழுவதும் எத்தனையோ நாட்கள் அர்ப்பணிக்கப்பெற்றுள்ளது.
அதன் தொகுப்பு கீழே உள்ளது. அதில் உங்களுக்கு வேண்டிய நாட்களை
நீங்கள் குறித்துவைத்துக்கொள்ளலாம். வாழ்த்துச் செய்தி அனுப்ப
வசதியாக இருக்குமல்லவா!!!!

அன்புடன்
வாத்தியார்
==================================
Important Dates To Remember

January 01 : Global family day.
January 09 : NRI Day.
January 10 : World laughter day.
January 12 : National Youth Day.
January 15 :Army Day.
January 23: Netaji Subhash Chandra bose birthday
January 26 : India's Republic Day
January 26 : International Customs day.
January 28 : Lala lajpat rai birthday
January 28 : Data protection day
January 30 : Martyrs' Day
January 30 : World leprosy eradication day
February 04 : World Cancer day
February 06 : International day
against female genital mutilation
February 12 : Darwin day
February 12 : World day of the sick.
February 13 : Sarojini Naydu's birthday
February 14 : Valentine’s day
February 20 : World day of social justice
February 21 : International mother language day
February 22 : World scout day
February 23 : World peace and understanding day
February 24 : Central Excise Day.
February 28 : National Science Day.
Also check out: list of All Countries,
their Capital and Currency
March 4 : World day of fight against
sexual exploitation, National Security
day.
March 8 : International Women's Day
March 13 : World kidney day
March 15 :World Disabled Day
March 15 : World consumer right day.
March 20 : World day of theatre for
children and young people.
March 20 : International day for
Francophonie
March 20 : World Sleep day
March 21 : World Forestry Day.
March 21 :International Day for the
Elimination of Racial Discrimination.
March 22 : World water day
March 23 :World Meteorological Day.
March 24 : World T.B. day
March 24 : International day for
achievers
March 25 : International day of
remembrance-victims of slavery and
transatlantic slave trade
March 27 : World Drama day
April 2 : World autism day
April 5 : National Maritime Day.
April 7 :World Health Day.
April 17 : World haemophilia day
April 18 :World Heritage Day.
April 22 :Earth Day.
April 23 : World book and copyright day
April 25 : World Malaria day
April 29 : International Dance day
May 1 : International Labour Day
(Workers Day)
May 3 :Press Freedom Day.
May 4 : Coal miner’s day
May (2nd Sunday) : Mother's Day
May 8 :World Red Cross Day.
May 9 : Victory day
May 11 : National Technology Day.
May 12 : International Nurses day
May 14 : World Migratory day
May 15 : International Day of the
Family.
May 17 :World Telecommunication
Day (Information society day)
May 21 : Anti-terrorism day
May 24 :Commonwealth Day.
May 31 :Anti-Tobacco Day.
June 4 :International Day of Innocent
Children Victims of Aggression.
June 5 : World Environment Day.
June 7 : International level crossing
awareness day
June 8 : World ocean day
June 12 : World day against child
labour
June(2nd Sunday) : Father’s Day.
June 14 : World blood donor day
June 17 : World day to combat
desertification and drought
June 20 : World Refugee day.
June 21 : Father's day, World Music
day.
June 23 : United Nation’s public
service day
June 23 : International Widow’s day
June 26 : International day against
Drug abuse & Illicit Trafficking.
June 27 : World Diabetes Day.
July 1 : National Doctor’s day.
July 6 :World Zoonosis Day.
July 11 : World Population Day.
July 12 : World Malala day
July 18 : Nelson Mendela
International day
July 28 : World Nature conservation
day
August 2 : International Friendship
Day.
August 3 : Independence day of Niger
August 5 : Independence day of upper
volta
August 6 :Hiroshima Day
August 9 : International day of
World’s indigenous people
August 9 :Quit India Day and
Nagasaki Day.
August 12 : International Youth day
August 15 : Independence Day of
India
August 23 : International day for the
remembrance of the slave trade and
its abolition
August 29 : National Sports Day.
September 5 : Teachers' Day (Dr.
Radhakrishnan’s birthday)
September 5 : Forgiveness day
September 8 :World Literacy Day.
September 14 : Hindi day, World first
aid day
September 16 :World Ozone Day.
Engineer's day in India
September 21 :Alzheimer's Day,
International day of peace
September 25 : Soc cial justice day
September 26 : Day of the Deaf.
September 27 : World Tourism Day.
October 1 : International day of the
Older person
October 2 : Mahatma Gandhi birthday,
International day of non-violence
October 3 :World Habitat Day, World
nature day
October 4 :World Animal Welfare Day.
October 5 : World Teacher’s day.
October 8 : Indian Air Force Day.
October 9 : World Post Office day.
October 10 : National Post Day.
October 11 : International girl child
day
October 12 : World Arthritis day.
October 13 :UN International Day for
National disaster reduction.
October 14 :World Standards Day.
October 15 : World White Cane Day
( guiding the Blind)
October 16 : World Food Day.
October 17 : International day for the
eradication of poverty.
October 20 : World statistics day
October 24 : UN Day, World
development information Day.
October 30 :World Thrift Day.
November 1 : World vegan day
November 5 : World Radiography day.
November 9 : World services day
November 14 : Children's Day in India,
Jawaharlal Nehru birthday
November 16 : International day for
Endurance
November 17 : World Student day,
National Journalism day
November 18 : World Adult day.
November 19 : World Citizen day.
November 20 : Africa Industrialization
Day, Universal children day.
November 21 : World Television day,
World Fisheries day.
November 25 : World Non-veg day.
November 26 : Law day
November 29 : International Day of
Solidarity with Palestinian People.
November 30 : Flag day.
December 1 : World Aids Day.
December 2 : World Computer literacy
day, International day of abolition of
slavery
December 3 : International day of
People with disabilities, World
conservation day
December 4 : Navy Day.
December 5 : International volunteer
day for economic and social
development.
December 7 :Armed Forces Flag Day,
International civil aviation day.
December 9 : The International day
against corruption.
December 10 :Human Right Day.
December 11 : International Mountain
day.
December 14 : International Energy
day.
December 18 : International Migrants
day.
December 19 : Goa’s liberation day.
December 20 : International Human
solidarity.
December 23 :Kisan Divas Farmer's
Day).
December 29 : International Bio-
diversity day
==========================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

23.6.15

கண்ண பெருமாளை ஒருவர் காதலிக்கும்போது முருகப் பெருமானையும் ஒருவர் காதலிக்கக்கூடாதா என்ன?


கண்ண பெருமாளை ஒருவர் காதலிக்கும்போது முருகப் பெருமானையும் ஒருவர் காதலிக்கக்கூடாதா என்ன?

பக்தி மலர்

காதல் எப்படி பக்தியாகும். பக்தியின் அதீத நிலைப்பாடுதான் காதல். கண்ணனைக் காதலானாக்கி பாரதியார் பாடலை எழுதினார். இப்போது முருகனைக் காதலானாக்கி ஒருவர் பாடலை எழுதியுள்ளார். சூடிக் கொடுத்த ஆண்டாள் கண்ணனைக் காதலிக்கவில்லையா?

ஆனால் முருகப்பெருமான் மீது காதல் கொண்டு ஒரு பெண் மயக்கத்துடன் பாடுவதைப் போல பாடலை எழுதியுள்ளார் கவிஞர் ஒருவர். இன்று அல்ல. பல ஆண்டுகளுக்கு முன்னாள். ஆனால் அதை ஒரு பெண் பாடகியை வைத்துப் பாட வைக்காமல். ஆண் பாடகர் ஒருவரை வைத்துப் பாட வைத்ததுதான் சற்று நெருடலாக உள்ளது. அதை மறந்து விட்டுப் பாடலை மட்டும் பார்ப்போம்.

இன்றைய பக்தி மலரை அந்தப் பாடலின் வரிகள் நிறைக்கிறது. அனைவரும் படித்து மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------
பாங்கி என்றால் தோழி என்று வைத்துக்கொள்ளுங்கள்

(பல்லவி)

இன்பக் கனா ஒன்று கண்டேன் ... பாங்கி 
என்னுள்ளம் மகிழ்வு கொண்டேன் ... என்பாங்கி
(இன்பக் கனா ஒன்று கண்டேன்)

அனுபல்லவி
தென்பழனி ஊரன் ... சேவற் கொடிக்காரன் 
என்னுயிர்காதாரன் ... இரவில் எனையடைய
(இன்பக் கனா)

சரணம்
1.
பன்னிரு தோளழகும் ... பரந்த விழியழகும்
மின்னொளி வேலழகும் ... மேனி அழகும் 
காதல் ...
கன்னல் மொழி அழகும் ... களிற்றின் நடையழகும் 
பொன்மயில் தன்னழகும் ... புன்னகையின் அழகும் 
(இன்பக் கனா)

பாங்கி ... என்னுள்ளம் மகிழ்வு கொண்டேன் ... என்பாங்கி
(இன்பக் கனா)

2.
தென்றல் மலர் மணத்தை ... வாரி இறைத்தெங்கும்
திங்கள் அடைந்ததெந்தன் ... தேகம் சிலிர்த்தது
அங்கு ...
தென்றல் மலர் மணத்தை ... வாரி இறைத்தெங்கும்
திங்கள் அடைந்தது எந்தன் ... தேகம் சிலிர்த்தது
அங்கு ...
அந்திப் பேடோடு நடம் ... ஆடிக்களித்தப் போது 
ஆறுமுகன் வந்தென்னை அணைந்து சுகித்ததைப் போல்
(இன்பக் கனா)

பாங்கி ... என்னுள்ளம் மகிழ்வு கொண்டேன் ... என்பாங்கி
(இன்பக் கனா)

3.
முன்னர் யான் கண்டறியா ... மோகக்கிளர்ச்சி பல
மூண்டது என்னுள்ளத்தில் ... முற்றும் எனை மறந்தேன் 
உன்னைக் கைவிடேன் என்றோர் ... உறுதி மொழியும் சொன்னான் 
ஒப்பிவிட்டேன் ஆவியை ... தப்பிதம் ஏதும் உண்டோ? 
(இன்பக் கனா)

பாங்கி ...
(இன்பக் கனா)

4.
அன்புடன் பேசி என்னை ... அணைத்துப் பிடித்துவிட்டான்
அதரம் கனிய முத்தம் ... அமுதமெனக் கொடுத்தான் 
துன்பம் பிறப்பிறப்பு ... சோகம் இல்லாதொழித்தான் 
தோகையே இதன் பயன் ... சொல்லடி நீயறிந்தால் 
(இன்பக் கனா)

பாங்கி ...
என்னுள்ளம் மகிழ்வு கொண்டேன் ... என்பாங்கி
இன்பக் கனா 
--------------------------------
பாடகர்: M.M. தண்டபாணி தேசிகர்
வரிகள்:  கு.சா. கிருஷ்ணமூர்த்தி
---------------------------


Dandapani Desikar
Vocalist
M M Dandapani Desikar was a Carnatic vocalist, actor and composer. Dandapani Desikar was born in Tiruchengattangudi, near Nannilam in Madras Presidency. He got training from Manicka Desikar and Kumbakonam Rajamanickam Pillai. Wikipedia
Born: August 27, 1908, India
Died: June 26, 1972
Parents: Muthiah Desikar
-------------------------------
கண்ணன் - என் காதலன் 
பாடலாக்கம்: மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
-------------------------------------------------
செஞ்சுருட்டி - திஸ்ர ஏக தாளம்
சிருங்கார ரசம்

தூண்டிற் புழுவினைப்போல் - வெளியே
சுடர் விளக்கினைப் போல்,
நீண்ட பொழுதாக - எனது
நெஞ்சந் துடித்த தடீ!
கூண்டுக் கிளியினைப் போல் - தனிமை
கொண்டு மிகவும் நொந்தேன்;
வேண்டும் பொருளை யெல்லாம் - மனது
வெறுத்து விட்டதடீ! . ... 1

பாயின் மிசை நானும் - தனியே
படுத் திருக்கை யிலே,
தாயினைக் கண்டாலும் - சகியே!
சலிப்பு வந்த தடீ!
வாயினில் வந்ததெல்லாம் - சகியே!
வளர்த்துப் பேசிடுவீர்;
நோயினைப் போலஞ் சினேன்; - சகியே!
நுங்க ளுறவை யெல் லாம். ... 2

உணவு செல்லவில்லை; - சகியே!
உறக்கங் கொள்ளவில்லை.
மணம் விரும்பவில்லை; - சகியே!
மலர் பிடிக்க வில்லை;
குண முறுதி யில்லை; - எதிலும்
குழப்பம் வந்த தடீ!
கணமும் உளத்திலே - சுகமே
காணக் கிடைத்ததில்லை. ... 3

பாலுங் கசந்தடீ தடீ! - சகியே!
படுக்கை நொந்த தடீ!
கோலக் கிளிமொழியும் - செவியில்
குத்த லெடுத்த தடீ!
நாலு வயித்தியரும் - இனிமேல்
நம்புதற் கில்லை யென்றார்;
பாலத்துச் சோசியனும் - கிரகம்
படுத்து மென்று விட்டான். ... 4

கனவு கண்டதிலே - ஒருநாள்
கண்ணுக்குத் தோன்றாமல்,
இனம் விளங்க வில்லை - எவனோ
என்னகந் தொட்டு விட்டான்.
வினவக் கண்விழித்தேன்; - சகியே!
மேனி மறைந்து விட்டான்;
மனதில் மட்டிலுமே - புதிதோர்
மகிழ்ச்சி கண்டதடீ! . ... 5

உச்சி குளிர்ந்ததடீ! - சகியே!
உடம்பு நேராச்சு,
மச்சிலும் வீடுமெல்லாம் - முன்னைப்போல்
மனத்துக் கொத்தடீ!
இச்சை பிறந்ததடீ! - எதிலும்
இன்பம் விளைளந்ததடீ!
அச்ச மொழிந்ததடீ! - சகியே!
அழகு வந்ததடீ! ... 6
=======================================

எண்ணும் பொழுதி லெல்லாம் - அவன்கை
இட்ட விடத்தினிலே!
தண்ணென் றிருந்ததடீ! - புதிதோர்
சாந்தி பிறந்ததடீ!
எண்ணி யெண்ணிப் பார்த்தேன்; - அவன்தான்
யாரெனச் சிந்தை செய்தேன்;
கண்ணன் திருவுருவம் - அங்ஙனே
கண்ணின் முன் நின்றதடீ! ... .7
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.6.15

நகைச்சுவை: ஜாதகத்தைப் பார்த்துவிட்டு என்ன சொன்னார் ஜோதிடர்?


நகைச்சுவை: ஜாதகத்தைப் பார்த்துவிட்டு என்ன சொன்னார் ஜோதிடர்?

நகைச்சுவையை நகைச்சுவையாக மட்டுமே பாருங்கள். வேறு விவகாரம் எதுவும் வேண்டாம்
----------------------------------------------------------------------------------------
1
கஷ்டம் எப்பவும் நம் கூடவே இருக்கும்..
ஆனால் சந்தோஷம் வந்து வந்து போகும்.
இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும் .....
.
"My Wife is With Me, But, Her Sister Comes and Goes .... !!
----------------------------------
2
சார், நீங்க எந்தக் கடவுளைக் கும்புடுவீங்க?

B: கல்யாணத்துக்கு முன்னாடியா, பின்னாடியா?

A: கல்யாணத்துக்கு முன்னாடி சொல்லுங்களேன்.

B: கல்யாணத்துக்கு முன்னாடி, முருகர் தான் ரொம்ப புடிக்கும்.

A: அப்போ பின்னாடி.

B: அது ஏன் கேக்குறீங்க, கல்யாணத்துக்கு அப்புறம் நான் வேண்டாத தெய்வம் இல்லை
-----------------------------------------
3
நீதியின் நிலை இது தான்..

காட்டிலிருந்து அலறியடித்து ஓடிய பசுவைத் தடுத்த யானை, “ஏன் இத்தனை பயத்துடன் ஓடுகிறாய்?” எனக் கேட்டது.

“காட்டில் உள்ள எல்லா எருமை மாடுகளையும் பிடிப்பதற்குஅரசாங்கம் உத்தரவு போட்டிருக்கிறது”என்றது பசு.

“நீ பசுதானே.. அப்புறம் ஏன்ஓடுகிறாய்?” என யானை கேட்க,“நான் பசுங்கிறது எனக்குத் தெரியும். ஆனா என்னை அரசாங்கம் பிடிச்சுதுன்னா நான் எருமையில்லை, பசுன்னுநிரூபிக்க 20 வருசமாயிடும்” என்றது பசு.

இப்போது பசுவுடன் சேர்ந்துயானையும் ஓட ஆரம்பித்தது....
-------------------------------------------
4

ஒரு கணவர் தன் மனைவிக்கு மொபைலில் இருந்து ஒரு மெசேஜ் அனுப்புகிறார்....)

கணவர்:- என் வாழ்க்கையை வசந்தமாக்கியத்தில் உன் பங்கு நிறைய....
இன்றைக்கு நான் இருக்கும் இந்த நல்ல நிலைக்கு நீ மட்டுமே காரணம்
என் அன்பே....
என் வாழ்வில் நீ வந்தது என் அதிர்ஷ்டம்
என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கியவள் நீ ...
நீ என் தேவதை ...
-
-
-
-
மனைவியின் பதில் மெசேஜ் :
குடிச்சிருக்கியா ..??..? அமைதியா வீட்டுக்கு வந்துடு,
பயப்படாதே....!! எதுவும் செய்ய மாட்டேன்...!!!

கணவர் : Thank You.
----------------------------------------
5
ஜோதிடர்:- தம்பி உன் ஜாதகத்துல தோஷம் இருக்கு 36 வயசு பொண்ணைk கட்டிக்கோ,,,,

இரண்டு 18வயதுகளைக் கட்டிக்கலாமா.. ?

ஜோதிடர்:- ஏன் நாலு ஒன்பதுகளைக் கட்டிக்கோயேன்
-------------------------------------------
6
தந்தையும் மகளும் ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது திடீரென்று கொள்ளைக் கூட்டம் ஒன்று புகுந்து பயணிகளிடமிருந்து எல்லாப் பொருட்களையும் திருடிச் சென்று விட்டது.

“இப்படி எல்லாப் பொருட்களையும் பறிகொடுத்து விட்டோமே” என்று புலம்பினார் அப்பா.

“கவலைப்படாதீங்க அப்பா. திருடர்களைப் பார்த்தவுடன் என்னுடைய நகைகளைக் கழற்றி வாய்க்குள் போட்டு கொண்டேன்” என்றாள்.

“அப்படியா! உங்கம்மாவைக் கூட்டி வந்திருந்தால் நம்முடைய பெட்டிகளைக் கூடக் காப்பாற்றியிருக்கலாமே” என்று பெருமூச்சுடன் சொன்னார் அப்பா.
-------------------------------------------------
இந்த ஆறில் எது மிகவும் நன்றாக உள்ளது?

அன்புடன்
வாத்தியார்
==========================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!


21.6.15

Half Quiz: பாதிப் புதிர்: பூ எதற்கு கொடி எதற்கு வாசனை எதற்கு புன்னகையே பூவாக இருக்கும்போது!!!!


Half Quiz: பாதிப் புதிர்: பூ எதற்கு கொடி எதற்கு  வாசனை எதற்கு புன்னகையே பூவாக இருக்கும்போது!!!!

Quiz 88 answer

21.6.2015

நேற்றைய புதிரில் ஒரு ஜாதகத்தைக் கொடுத்து 2 கேள்விகள் கேட்டிருந்தேன்:

1. ஜாதகியின் மன நோய்க்கு ஜாதகப்படி என்ன காரணம்?
2. ஜாதகியின் மன நோய் சரியானதா இல்லையா? சரியானது என்று நீங்கள் கணித்தால் எப்போது சரியானது என்பதைக் குறிப்பிட்டு எழுதுங்கள்.
ஜாதத்தை அலசி உங்கள் கணிப்பை எழுதுங்கள் என்று கேட்டுக் கொண்டிருந்தேன்.

சரியான பதில் கீழே உள்ளது.

1. மனகாரகன் சந்திரன் கேதுவோடு கூட்டாக இருப்பதாலும், மேலும் சனி மற்றும் ராகுவின் நேரடிப் பார்வையைப் பெற்றதாலும் மன நோய்

உண்டானது. அத்வும் ராகு திசையில் உண்டானது.
2. ஜாதகிக்கு ஏற்பட்ட மனநோய் தீவிர சிகிச்சைக்குப் பிறகு எட்டு ஆண்டுகள் கழித்துக் குணமானது.

ஜாதகத்தைப் பாருங்கள்

மகர லக்கின ஜாதகி
லக்கினத்தில் ஆறாம் அதிபதியும் எட்டாம் அதிபதியும் கூட்டாகக் கைகோர்த்து அமர்ந்துள்ளார்கள்.
லக்கினாதிபதி சனீஷ்வரன் உச்சமான ராகுவின் பிடியில்
குரு பகவான் பாக்கியஸ்தானத்தில் அமர்ந்தாலும் அவர் 12ஆம் இடத்து அதிபதி. அதனால் உரிய நேரத்தில் அவரால் உதவ முடியவில்லை
மேலும் அவர் லக்கினத்தைத் தன் பார்வையில் வைத்துள்ளார்.
குருபகவான் முதல்நிலை சுபக்கிரகம். அவர் ஜாதகத்தில் நிலையில் இருந்தாலும், தனக்கு உரிய நேரம்வரும் போது உதவிக்கரம் நீட்டுவார்
குரு திசையில் ஜாதகி மீண்டு வந்தார்
விளக்கம் போதுமா?
--------------------------------
இன்றையப் புதிருக்கு ஆச்சரியப்படும் அளவிற்கு 30 பேர்கள், சரியான பதிலை எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். 

அவர்களுடைய பதில்கள் உங்கள் பார்வைக்காக கீழே கொடுத்துள்ளென்! மேலும் கலந்து கொண்ட மற்ற நல் உள்ளங்களுக்கும் பாராட்டுக்கள்!

அன்புடன்
வாத்தியார்
===============================================
1
/////Blogger Govindasamy said...
1). லக்கினத்தில் எட்டாம் அதிபதி சூரியன் மற்றும் ஆறாம் அதிபதியாகிய புதன் கூட்டு மற்றும் லக்கினாதிபதி சனியுடன் ராகு கூட்டு. மன காரகன் சந்திரனுடன் கேது மிக முக்கிய காரணம். அதோடு சனியின் பார்வை சந்திரனுக்கு கேட்டை அதிகம் கொடுத்தது.
2).குருவின் 9ம் பார்வை ஜாதகியைக் காத்தது.குருதசை புதன் புத்தியில் ஜாதகர் குணம் பெற்றார்.
Friday, June 19, 2015 7:09:00 AM //////
---------------------------------------
2
Blogger trmprakaash@gmail.com said...
Ayya Vanakkam.
1. Rahu Dasa Kethu Buthiyil, Mana Noi erpattirukkum. Kaaranam, Manakaaragan Chandran,
Kedhuvudan. Kedhu Eriya Nakshathiram Kaarthigai, 8m athibathy suriyanin nakshathiram.
8m Athibathi, Suriyan lagnathil. Raguvin 7m Paarvai, Chandranin mel.
2. Mana Noi, Guru Dasa Guru Buthiyil Sariyaagiyirukkum. Guruvin 5m Paarvai, Lagnam matrum
5m veettil ulla Chandran matrum Keduvin mel. Guru Vakkiramaga iruppadhu, Magara
Lagnathirkku nanmai payakkum amaippu. Kaaranam, Guru Eriya Nakshathiram, 8m Athibathi
Suriyanin Nakshathiram. Guru 3-12 Athibathi Aavadhaal, Avar 8m Athibathi Suriyanin
Nakshathirathil Eri Vakkramaavadhu, nanmai seyyum amaippu. Oruvagaiyil, vipareetha
raajayoga amaippu. Thanks.
Friday, June 19, 2015 7:15:00 AM ////

ஜாதகி எப்போது குணமானார்? அதைச் சொல்லவில்லையே நீங்கள்?
----------------------------------------------------------------
3
/////Blogger Chandrasekaran Suryanarayana said...
QUIZ NO.88 வணக்கம்.
10/02/1957 ஆம் ஆண்டு ஞாயிறு கிழமை காலை 5.51.07 மணிக்கு ரோஹினி நட்சத்திரத்தில் மகர லக்கினத்தில் ஜாதகி பிறந்தவர். (இடம்: சென்னை)
1.மனநோய்க்கு காரணம்: ரிஷப ராசியில் திருக்கோணத்தில் சந்திரன் உச்சம் பெற்று கேதுவின் சேர்க்கை, ராகுவின் 7ம் பார்வையால் மனநோய்க்கு உள்ளாகியிருந்தார்.
களத்திரகாரகன் சுக்கிரன் 8ம் வீட்டுக்காரனான சூரியனுடன் கூட்டனி.
ராகு மாக தசை கேது புக்தி 17 வயதில் ஆரம்பம், ராகு தசை முடியும் வரை (24 வயது)பாதிப்புக்கு உள்ளாகியிருந்தார்.
2. அடுத்து வந்த குரு மகா தசையில் மனநிலை சரியாகி அவருக்கு 39 வயதில் திருமணம் நடைபெற்றது.
பாக்கியஸ்தானத்தில் இருக்கும் குரு பகவான், 7ம் வீட்டுக்காரனை தன்னுடைய விசேஷ பார்வையால் பார்ப்பதாலும், தன்னுடைய 5ம் பார்வையால் களத்திரகாரகன் சுக்கிரனைப் பார்ப்பதாலும், ஜாதகியின் திருமணத்தை குரு மகா திசை துவங்கியதும் நடத்தி வைத்தார்.
45ஆம் வீட்டில் கேது இருந்தால் புத்திர தோஷம்.
11ம் வீட்டில் ராகுவுடன் சனி கூட்டு இருக்ககூடாது.இருந்தால் விபத்து, அல்லது வியாதி ஏற்படும்.
12ம் வீடு பாபகர்தாரி தோஷம். மனப் போராட்டம் நிறைந்திருக்கும். மன அமைதியை இழந்து துன்பப்பட நேரிடும். 12ம் வீடு சந்திர ராசியிலிருந்து 8ம் வீடு.
Friday, June 19, 2015 8:07:00 AM /////
---------------------------------------------------
4
/////Blogger Chandrasekaran Suryanarayana said...
பதிவு எண்:88 ஜாதகம் ஏற்கனவே பார்த்த ஜாதகமாக உள்ளது.ஞாபகம் வந்தது.தேடினேன் கிடைத்தது.
" மணமாலைக்கு என்ன வழி உன் ம‌வுனம் என்ன மொழி." 07/01/2014 அன்று வேறு கேள்வியில் வந்துள்ள‌து.
Friday, June 19, 2015 8:16:00 AM /////

உங்கள் நினைவாற்றல் வாழ்க!
================================================
5
/////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
வணக்கம் வாத்தியாரே!
Quiz.88 ற்கான பதில்.
1. மகர லக்கினம், லக்கினதிற்க்கும், ராசிக்கும் ஒரு சேர சனி பார்வை உள்ளதால் மன நோய் வந்தது, மேலும் மனோகாரகன் சந்திரன் உச்சமானாலும் கேது சேர்க்கையால் பலம் இழந்து மன நோய்க்கு இடம் கொடுத்து விட்டது. அதுவும் 11ல் இருக்கும் ராகு பாதகாதிபதி ஆகி தன்னுடைய திசையில் மன நோயாளி ஆக்கினான். ராகு தலைகீழாக தொங்க விட்டு அடிப்பார் என வாத்தியார் பல முறை சொல்லி கொடுத்துள்ளீர்கள்.
2. லக்கினதிற்க்கும், ராசிக்கும் ஒரு சேர குருவின் பார்வையும் உள்ளதால் மனநோயில் இருந்து குரு திசையில் மீண்டிருப்பார்.
அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.
Friday, June 19, 2015 9:23:00 AM //////
-------------------------------------------------------
6
////Blogger kmr.krishnan said...
ஜாதகி பிறந்த தேதி 10 பிப்ரவரி 1957 நேரம் காலை 5 மணி 51 நிமிடம் 15 வினாடி; இடம் சென்னை
1. காரகன் அந்த பாவத்தில் அமர்வது ஆகாது.மனோகாரகன் சந்திரன் உச்சம் ஆனாலும் ஐந்தாம் பாவத்தில் அமர்ந்தது மனநிலையை பாதித்தது.கேதுவுடன் இணைந்தது மனோகாரகனை பாதித்தது.நோய்க்கான ஆறாம் இட அதிபதி புதன்
லக்கினத்தில் ஐந்தாம் அதிபதி சுக்கிரனுடன் கூட்டணி. இவர்களை மேலும் கெடுக்க எட்டாம் அதிபதி சூரியன் கூட்டணி அமைத்தது.சுகஸ்தான நான்காம் அதிபதி செவ்வாய் நாலிலேயே அமர்ந்தது சுகக்கேடு மட்டும் அல்லாமல் லக்கினாதிபதியை எட்டாம் பார்வையாகப்பார்த்தது.
ராகு தசா கேதுபுக்தியில் 18 வயதில் மனநிலை பாதித்து.ராகு தசா முடியும் வரை இது தொடர்ந்தது.
2.குருவின் பார்வை லக்கினத்திற்கு,5.6 அதிபதிகளுக்கு,மூன்று தைரிய இடத்திற்கு, மற்றும் ஐந்தாம் இடத்திற்குக் கிடைப்பதால் 25,26 வயதில் குரு
தசா துவங்கியதும் ஜாதகி தெளிவடைந்தார். குரு, சனி தசாக்களில் தொடர்ந்து அமைதியான வாழ்க்கை நடத்தினார்.
Friday, June 19, 2015 9:28:00 AM ///////
-----------------------------------------------------
7
//////Blogger Sakthivel K said...
வணக்கம் சார்........
அம்மனிக்கு. லக்னத்தில் சுக்+புத+சூரி (சூரி அட்டமாதிபதி)
லக்னாதிபதி பாதகஸ்தானத்தில்+ராகுவுடன்(குதிரை கீழே தள்ளியதுமட்டுமல்ல!குழியும்பறித்தகதை)
மனோகாரகன் சந்திரன்+கேதுவுடன்( பயித்தியகோலம்)
லக்னத்தை குருபார்த்தும் + ராசியை குருபார்த்தும்(ஜெயிக்கமுடியவில்லையே!!)
ராகுதிசைமுடியும்வரை அம்மனி கவலைக்கிடமாக இருந்திருப்பார்.........
குருதிசை.. குரு9ல் திரிகோணம்!! ஆனால் விரையாதிபதி+ ராஜாதிசை உயிர் பிடித்திருப்பார்........
Friday, June 19, 2015 10:17:00 AM //////
----------------------------------------------
8
/////Blogger amuthavel murugesan said...
Answer to Quiz.88
ஜாதகியின் மன நோய்க்கு காரணம்
1. உச்சமான சந்திரன் உடன் கேது மற்றும் சந்திரன் 6 ஆம் அதிபதி.
2.சனி மற்றும் ராகுவின் பார்வை சந்திரனின் மேல்.
3.பதினெட்டு வயது முதல் இருபத்தைந்து வயது வரை ராகுவின் திசை.
மன நோய் சரியானது
1.குருவின் 5 ஆம் பார்வை லக்கனத்தின் மேல் மற்றும் 9 ஆம் பார்வை சந்திரன்
மேல்
2.குரு 12ஆம் அதிபதியாக இருப்பினும் சுபர்.அடுத்து வந்த குரு திசையில் சரியாகி இருக்கும்.
மு.சாந்தி
Friday, June 19, 2015 10:18:00 AM //////
---------------------------------------------
9
//////OpenID guest2015 said...
DOB FEB 10 1957 5.40AM
Birth star - rohini
1. ஜாதகியின் மன நோய்க்கு ஜாதகப்படி என்ன காரணம்?
KETU IN 5TH HOUSE. Moon who is the karaka for mind is associated with ketu. lagna lord in 11th house. For Magara lagna 11 th house is considered as bhathakasthana. lagna lord in inimical house with rahu. 6th lord mercury and 8th lord sun in 1st house.
native is brilliant because of venus, mercury moon and jupiter in 1st 5th and 9th house.
however during rahu dasha she might have faced hard time. mars and exalted moon aspecting rahu is not a good sign. these are all the reason for her mental imbalance during that period.
2. ஜாதகியின் மன நோய் சரியானதா இல்லையா?
yes. she might have suffered from the disease from rahu dasha- ketu bhukti towards the end of rahu maha dasha. jupiter aspects 1st and 5th house. during jupiter dasha bhukti she should 've got well.
thanks
sree
Friday, June 19, 2015 10:49:00 AM //////
-------------------------------------------------------
10
//////Blogger Srinivasa Rajulu.M said...
பெண்ணின் 18-ஆவது வயதில் வந்த ராஹு தசை - கேது புத்தியில் மன நோய் ஏற்பட்டது.
காரணம் : மனோகாரகனைப் பீடித்த கேதுவும் சனியும் அதுபோல லக்னாதிபனைப் பீடித்த ராஹுவும் கைக்கோர்த்ததால் ஏற்பட்ட நோய் இது. லக்னாதிபதியைப் பீடித்த ராஹுவின் தசையில் நுண்ணறிவுக்கான ஐந்தாம் இடத்தில் நின்ற நீசனான கேதுவின் புத்தி நடக்கையில் மனம் பாதிக்கப்பட்டது.
ஐந்தாம் இடத்தைப் பார்க்கும் குருவானவர் தன் தசை ஆரம்பிக்கையில் (25ஆம் வயதளவில்), இந்த நோயை நீக்கிவைத்தார். உச்ச சந்திரன், ஆட்சியில் உள்ள செவ்வாய் (நோய் நிவர்த்தி ஸ்தானாதிபதி) ஆகியோர் ஜாதகிக்குப் பலம் சேர்த்தனர்.
Friday, June 19, 2015 11:38:00 AM ///////
---------------------------------------------------
11
//////Blogger Arul said...
Dear Sir,
Fifth place will indicate Mind. In the 5th place, Chanthiran (Karaka for Mind) was afflicted by Kethu and aspected by Rahu. And fifth lord Sukran is combust by Sun. So that was happened.
But Lagnam got aspect by Guru as well as lagna lord Sani. So in Guru Dasa, Sani pukthi might be gave the relief from that disease.
Thank you...
Regards,
Arulnithi
Friday, June 19, 2015 1:00:00 PM /////
-----------------------------------------------
12
/////Blogger Gpbarathi P said...
sir
1.The sixth lord and eighth lord in lagna so some permanent disease.
2.The chandran is conjucted with kethu so mind is disturbed
3.The lagnathipathy is conjusted with rahu in pathagasthanam.( for makara lagnam 11th place is pathagasthanam )
But in guru dasa the native could be back to normal because guru aspects lagnam.in addition chandran is escalated .
Also this is a partial kalasarpa dosham
Nellai padmanaban
Friday, June 19, 2015 1:47:00 PM //////
---------------------------------------------
13
/////Blogger Ravichandran said...
Ayya,
1. Reason for undergone stress is her mother would have expired in age of 18. This is happened due to Rahu desa and Ketu Puthi. Beacuse Rahu is neecham in horoscope and Ketu joined together with Moon(Amma planet). This problem continued till Rahu desa completes(ie, from Rahu Desa with Ketu, Sukran, Suriyan, Chandran, Cheevai puthis).
2. She would have recoveredat age of 25 due to Guru. Normally guru aspects lagna means, they will have fighting spirit and come out of any struggles from life.
Your Student,
Trichy Ravi
Friday, June 19, 2015 3:15:00 PM ////////
----------------------------------------------
14
/////Blogger Naga Raj said...
Jathakarukku manokaragan chandhiran kethuvudan sernthu ullathu.rahu sani paarvai veru ullathu .enavey rahu disai mudium varai mana viyathi undu.guru disayil gunamadaivar.sani lagnathipathi enavey avar kappatri viduvar.enavey saniyin paarvai keduthal seyyathu.
Friday, June 19, 2015 3:50:00 PM /////
----------------------------------------------------
15
/////Blogger vignesh.t Kumar said...
* சந்திரன் சர்ப கிரக கேதுவின் சேர்க்கை . தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும் நிலை, தன்னிலை மறந்து வாழகூடிய சூழ்நிலை .
* CHANDHIRAN - MANADHU KARAHAN, SANI & RAGU PARVAYAL மனநிலை பாதிக்கபட்டது.
* GURU VIN 9 AAAM PAARVAYAAL . JAADHAGI GUNAMADAINDHAR.
Friday, June 19, 2015 6:57:00 PM //////
-------------------------------------------
16
/////Blogger kothanda ramar said...
வணக்கம்,
அறிவுகாரகன் புதனயும் மன காரகன் சந்திரனையும் சனி தீய பார்வை செய்கிறார்
புதன் 6க்கு அதிபதி சந்திரன் வீட்டை செவ்வாய் தீய பார்வை செய்கிறார்
ராகு திசை சனி அல்து செவ்வாய் அல்லது புதன் புக்தியில் மன நோய் தாக்கியிருக்கும்.
உச்ச சந்திரன் மற்றும் புதன் மீது பாக்யஸ்தான குருவின் சுப பார்வை உள்ளதால் குரு தசை குரு புக்தி அல்லது புதன் புக்தியில் மன பாதிப்பின் தாக்கம் விலகியிருக்கும்.
நன்றி.
Friday, June 19, 2015 7:26:00 PM ////
-----------------------------------------------
17
////Blogger hamaragana said...
அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
புதிர் எண் .88.
மகர லக்ன ஜாதகி ..
1.லக்னத்திற்கு 5 ல் சந்திரன் உச்சம் உடன் கேது .
5ம் வீடு அறிவுகூர்மை /[intelegent ]
2..மனசுகாரகன் சந்தரனுடன் கேது கும்மியடிப்பது..??
3..ஆரம்பத்தில் சந்திர திசை ,அடுத்து செவ்வாய்
4.,அடுத்து வந்த ராஹு திசையில் கேது புக்தி [சுமார் 18 வயது ப்ரயம் ]ஆரம்பம் முதல் தன வேலை காண்பித்துள்ளான்
ராகு திசை நிறைவில் 25 வயது
5.அடுத்து வந்த குரு திசை ஜாதகிஐ நல்ல நிலைமைக்கு ஆளாக்கி விட்டான்.
6.குரு 9ம் பார்வையாக 5 மிடத்தை பார்ப்பது --5ம் பார்வையாக லக்னதையும் பார்ப்பது .உடல் நலம் மன நலம் சீராகி இருக்கும் ...
Friday, June 19, 2015 7:54:00 PM ///////
--------------------------------------------------
18
/////Blogger GOWDA PONNUSAMY said...
அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
பாதி புதிர் விடை “எதற்கும் ஒரு காலம் உண்டு, பொறுத்திறு மகளே!, இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திரு மகளே!”
1). பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்த மனது காரகன் சந்திரன் உச்சம், கேதுவுடன் கூட்டணி போட்டு அமர்ந்தார்.இதெல்லாம் போதாது என்று,11ம் இடத்தில் போய் பகை வீட்டில் அமர்ந்து கொண்டு துணைக்கு ராகு வையும் இணைத்துக் கொண்டு கொடூரப் பார்வை பார்க்கும் சனீஷ்வரன்(லக்கினாதிபதி) தன் நேர் பார்வையால் புத்தி ஸ்தானமான 5ம் இடத்தை கெடுத்தார். சனீஷ்வரன் கூட்டாளியான ராகு பகவான் தனது தசையில்,எதிரணியில் இருந்த கேதுவின் புத்தியில் மன நோயை பரிசாக கொடுத்தான்.
2).மன நோய் குணமானது.அதைத்தான் குருவும் (வாத்தியாரும்) உறுதிப் படுத்தியுள்ளார்.
3 மற்றும் 12ம் இடத்திற்கு உரியவரானாலும் குரு,குருதானே?. வாத்தியார் நினைத்தால் நடக்காததா என்ன?. 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து, வாத்தியார் போலவே, வகுப்பறையான லக்கினத்தையும், அங்கு அமர்ந்திருக்கும் மாணவர்களாகிய புத்தி ஸ்தான அதிபதியான சுக்கிரனையும், புத்தி காரகனாகிய புதனையும் தன் ஆளுமையில் வைத்திருப்பதோடு அல்லாமல் தன் விசேடப் பார்வையால் புத்தி ஸ்தானத்தையும் பார்த்து தவறுகளை திருத்தியுள்ளார். தன்னுடைய புண்ணிய தசையில் அதாவது குரு மகா தசையில் ஜாதகியின் 25வது வயதில் மன நோயை குணப்படுத்தினார்.
இதே வேலையை இதே குரு பகவான் (வாத்தியார்) தன்னுடைய Q - 35 பதிவிலும் செய்துள்ளார். 1982ல் ஆரம்பமான குரு மகா தசை ஜாதகியை குணப்படுத்தி விட்டது.
3) சரியாகவில்லை என்கிற பேச்சுக்கே இடமில்லாமல் குருவே (வாத்தியார்) குறிப்பிட்டு சொல்லியுள்ளார்,25 வயது வரை மன நோய் இருந்தது என்று.
குரு வாழ்க!!!!!!!!.
நன்றியுடன்,
-பொன்னுசாமி.
Friday, June 19, 2015 8:16:00 PM ///////
----------------------------------------------
19
////Blogger Sakthivel Duraiswamy said...
1.மனோகாரகன் சந்திரன் நீசம் பெற்று பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உடன் ஞானக்காரகன் கேதுவும் நீசத்தில் ,அவை மீது சனி & ராகு வின் நேர் பார்வை.
2 . ராகு தெசை முடிவு 25 வயது வரை பின்பு குரு தெசை ஆரம்பத்தில் குணம் பெற்றிருப்பாள்.
Friday, June 19, 2015 9:31:00 PM //////
-----------------------------------------------------
20
/////Blogger slmsanuma said...
1. ஜாதகியின் மன நோய்க்கு ஜாதகப்படி என்ன காரணம்?
புதன், செவ்வாய், கேது = மனநோய்கள், ஹிஸ்டீரியா போன்ற மன அழுத்த நோய்களும் கொடுக்கும். செவ்வாய் சனிக்கு 6ல் இருக்கும் நிலைமை மோசமான மனநிலையைக் கொடுக்கும். மூன்றாம் அதிபதி ராகு அல்லது கேதுவுடன் இருக்கும் நிலைமை பார்வையுடன் இருந்தாலும் ஜாதகனுக்கு பெரும் மன அழுத்தத்தைக் கொடுக்கும். ஆறாம் வீடு அல்லது அதிபதி ஒரு தீய கிரகத்தின் சேர்க்கை அல்லது பார்வையுடன் இருந்தாலும் மன அழுத்தங்கள் உண்டாகும். Chandran (Manakkaragan) Budhan (6th house owner), Suriyan, Sukkiran and Kethu aspected by Saneeswaran. Sevvai aspect the Saneeswaran and Raghu. Chandran (Manakkaragan) associated with Kethu and aspected by Saneeswaran and Raghu. These are the reasons why the native become lunatic.
2. ஜாதகியின் மன நோய் சரியானதா இல்லையா?
During the start of Guru Thisai after her 25th age, she recovered from the illness.
Friday, June 19, 2015 9:54:00 PM /////
-----------------------------------------
21
////Blogger rukmani said...
Respected Sir,
You have given the answer by telling 18 yrs to 25 yrs.
But still my comment
MahaBhaghyaYoga Jatakam - rare people have such combination. Rahu neecha and Ketu too, so depression starts during RAhu dasa and ketu bhukti. Most probably it should end by that bhukthi itself but since here venus is also between the 8th and 6th lords. so this dasa has to go. rahu with sun difficult , same with rahu and moon and rahu with mars will be that as rahu with ketu. So Finally comes our Jupiter dasa for rescue. JUPITER IN SIMHAASANA - Any graha with Simhaasana position will give good results so luckily this Jataki had Jupiter with Simhaasana so she escaped if not who would have saved from the aspects of such 12th lord in reverse.
Regards
G. Rukumani
Friday, June 19, 2015 10:36:00 PM ////
----------------------------------------------
22
/////Blogger selvam velusamy said...
வணக்கம் குரு,
1. ராகு தசை சுக்கிர புக்தியில் மன நோய்க்கு ஆளாகிருப்பார். காரணங்கள், 5மிடம் மனதை குறிக்கும் இடம். அந்த இடத்தில் மனக்காரகன் சந்திரன் கேதுவோடு சேர்க்கை பெற்று ராகுவின் பார்வையில் உள்ளார். ராகு, சனி அல்லது செவ்வாயுடன் சேர்க்கை பெற்றால் அவர் மிகவும் கெடு பலன்களை தருவார். ஆகவே தசா நாதன் ராகு, சனி சேர்க்கை பெற்று செவ்வாயின் பார்வையும் பெற்று 5மிடத்தையும், மனக்காரன் சந்திரனையும் பார்கிறார். புக்திநாதனாகிய சுக்கிரனோ 5மிட அதிபதியாகி 6ம் அதிபதி புதன் மற்றும் 8ம் அதிபதி சூரியனுடன் கூட்டுசேர்ந்து அமர்ந்து இந்த செயலை நடத்தினார்கள்.
2. குரு தசை சனி புக்தியில் அவருக்கு மனநிலை பாதிப்பு சரியாகி இருக்கும். காரணங்கள், தசா நாதன் குரு 9இல் அமர்ந்து லக்னம், 5ம் அதிபதி சுக்கிரன், 5மிடம் மற்றும் மனக்காரகன் சந்திரன் ஆகியவற்றை பார்க்கிறார். புக்திநாதனாகிய சனியோ லக்னாதிபதியாகி லக்னம், 5ம் அதிபதி சுக்கிரன், 5மிடம் மற்றும் மனக்காரகன் சந்திரன் ஆகியவற்றை பார்க்கிறார்.
நன்றி
செல்வம்
Friday, June 19, 2015 11:06:00 PM ////////
-------------------------------------------
23
/////Blogger Manikandan said...
கடினமான கேள்வி. பதிலளிக்க முயற்சிக்கிறேன்.
மனப் பிரசின்னைக்கான காரணங்கள் .
1. மனோகாரகன் சந்திரன் , ராகு கேது மற்றும் சனியால் பாதிக்க பட்டு உள்ளார்.
2. லக்கினத்தில் 6-ம் அதிபதி (புதன்) மற்றும் 8 (சூரியன்)ம் அதிபதி சேர்க்கை.
நீங்கள் கூறிய 18 வயதை வைத்து பார்க்கும்போது , ராகு திசையின் பிற்பகுதி. அனேகமாக கேது புக்தியில் பிரச்சினை எற்பட்டு இருக்கிறது.
பின்னர் வந்த குரு திசையில் ( அவர் 5-ம் பார்வையாக லக்கினதியும் 9-ம் பார்வையாக சந்திரனையும் பார்க்கிறார்). மனப் பிரச்சினையில் இருந்து மீண்டுருப்பர்.
Saturday, June 20, 2015 3:55:00 AM /////
-------------------------------------------------
24
////Blogger seethalrajan said...
Respected Sir,
1.Mind authority Moon afected by kety and Saturn, Ragu vision.
2.After Ragu Desai, she will be getting better because jupiter vision for Lagna and Rasi. Jupiter placed at 9th, it is very good placement. so he was helping her to all.
Thanks
Saturday, June 20, 2015 6:26:00 AM//////
-------------------------------------------
26
////Blogger sundinesh1 said...
மனகாரகன் சந்திரன் கேது ஒரு சேர இருப்பதும் , இந்த அமைப்பை சனி மற்றும் ராகு பார்ப்பது தான் மன நோய்க்கு காரணம்
ராகு தசையில், கேது பக்தி நடக்கும்போது மன பாதிப்பு ஆனது . அடுத்து வந்த குரு தசையில் அது விலகியது .
25 வயதிற்கு பிறகு குரு தசை ஆரம்பம் ஆனது. அதுமட்டும் இல்லாமல், குருவின் பார்வை 5'ம் வீட்டில் பதிகிறது.
Saturday, June 20, 2015 6:36:00 AM /////
---------------------------------------------------
26
////Blogger Dallas Kannan said...
Respected Sir
Kethu in 5th place with moon.
Sani looks at them.
Sani and Rahu at 11th place, but Mars looks at them.
The problem started Rahu Dasa and 6th lord Budha buthi and she started her recovery when Rahu dasa ended and Guru Dasa started.
Saturday, June 20, 2015 9:22:00 AM /////
----------------------------------------------------
27
/////Blogger asbvsri said...
Answer to Quiz No. 88
ஐய்யா வணக்கம்.
பெண்மணி மகர லக்னம். 7 ஆம் அதிபதி சந்த்ரன் மனோகாரகன் 5 ஆம் வீட்டில் தன் மூலத்திரிகோண வீட்டில் ஆனால் கேதுவின் பிடியில், ராஹு, சனியின் பார்வையில். நவாம்சத்திலும் ராஹு, கேதுவின் பிடியில்.
ஆதலால் ராஹு தசையில், கேதுவின் புக்தியில் மனம் தடுமறிப்போனது. அடுத்து வந்த சுக்ரன், சூரியன், சந்த்ரன், செவ்வாய் புக்திகள் உதவவில்லை.
ஆனால் குரு வக்ரமாகி கன்னியிலிருந்து மூன்றாம் இடத்தை ராசியில் பார்ப்பதாலும், 9 ஆம் பார்வையாக சந்த்ரனை பார்ப்பதாலும், 30 வயதில் பெண்மணிக்கு புக்தி தெளிந்திருக்கும்.
K R Ananthakrishnan - Chennai
Saturday, June 20, 2015 10:23:00 AM /////
-------------------------------------------------
28
////Blogger bala said...
vankkam iyya,
1. Makara lagna jathagar. Lagnathipathi 11il ragu vudan.
mana noi ku karanam, 5 aam idathil chandran+ketu (Uccha chandran+ neecha ketu). Chandran mana kaaragan. Ketu udan irupathinal manam sanjalaam adaithanthu
ragu + lagnathipathi yin paarvaiyum 5 aam idathirku.
Jathagarku ragu dasa ketu buthiyil mana noi vanthathu.
2. Jaathagar mana noiyil irundhu meendar.
Guru bagavan 9 il ullar (tri konathil ullar) avarin vishesha paarvai (9aam paarvai - 5 aam idathirku).
Guru dasa sani bukthiyil meendu irupaar. (Sani yin neradi (7aam) paarvaiyum 5 aam idathirku ullathu) Sanium + guruvum sernthu jathagarai meetanar.
Sendra vaaram velai nimithamaga veliyur sendru viten.potiyil pangu kolla mudiyavilai. manikavum.
nandri,
Bala
Saturday, June 20, 2015 10:36:00 AM ///////
-------------------------------------------------------
29
//////Blogger Sivachandran Balasubramaniam said...
மதிப்பிற்குரிய ஐயா !!!
புதிர் எண் 88 இற்கான பதில்.
ஜாதகி மகர லக்கினம், ரிஷப ராசி, ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர். லக்கினாதிபதி சனி பதினொன்றாம் வீட்டில். உடன் ராகு. லக்கினத்தில் ஷஷ்டமாதிபதி புதன், அஷ்டமாதிபதி சூரியன் இவர்களின் ஆதிக்கம். இவர்களின் பிடியில் யோகக்காரகன் மற்றும் ஐந்தாம் ஸ்தானாதிபதி சுக்கிரன். ஐந்தாம் இடத்தில் மனக்காரகன் சந்திரன் கேதுவின் ஆதிக்கத்தில். காரகன் பாவநாசம் என்ற விதியின் அடிப்படையில் ஐந்தாம் இடம், அதன் அதிபதி சுக்கிரன், காரகன் சந்திரன் இவர்கள் அனைவரும் கெட்டுவிட்டனர். 8 முதல் 26 வரை நடந்ததோ ராகு திசை. சரியாக ராகு திசை புதன் (புத்தி நாதன்) புத்தியில் (15 ஆம் வயதில் ) மனம் திடீர் இழப்புகளை தாங்க முடியாமல் தவித்து மன நோய்க்கு ஆளானார். மேலும் 15 ஆம் வயதில் 71/2 சனியின் ஆதிக்கம் வேறு. 71/2 சனி மற்றும் ராகுவின் திசை முடிந்ததும் குரு திசையில்(26 ஆம் வயதில் மனம் தெளிவாகிவிட்டார்.
இப்படிக்கு
சிவச்சந்திரன்.பா
Saturday, June 20, 2015 12:48:00 PM //////
---------------------------------------------------------
30
/////Blogger Kamban said...
வணக்கம் ஐயா !!
(just Try Answer)
1. மனகாரகன் சந்திரன் 5 ஆம் இடத்தில உச்சம் பெற்று கேது பிடியில், ரகுவின் 7 ஆம் பார்வை.
2. குரு 5ஆம் பார்வையாக லக்னத்தையும், 7ஆம் பார்வையாக சந்திரனை பார்பதால் மன நோய் குணம் அடைந்தது விட்டது.
நன்றி
Saturday, June 20, 2015 2:46:00 PM //////
-------------------------------------------
31`
//////Blogger Kirupanandan A said...
1) மனகாரகன் சந்திரன் பாப கிரகமான கேதுவுடன் புத்தி/மனம் இவற்றிற்குரிய 5ம் இடத்தில் இருப்பது, மேலும் 2 பாப கிரகங்கள் ராகு மற்றும் சனி பார்வையில் இருப்பதுதான் ஜாதகியின் மன நோய்க்கு காரணம்.
2) கொடிய ராகு தசையில் இந்த நிலைக்கு ஆளானவர், 9ல் இருக்கும் முழு சுபர் குரு தசையில் சரியானார்.
Saturday, June 20, 2015 8:57:00 PM //////

 ================================
இது உபரி:

//////Blogger mohan said...
அன்பு ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.
ஜாதகம் பற்றி அதிகம் ஆர்வம் இல்லாதிருந்தேன். தற்பொழுது எனது மகனுக்கு திருமணம் பேசி வருகின்றேன். அதனால் ஜாதகம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் வந்தது.
சரி இணைத்தில் அது பற்றி தெரிந்து கொள்ளலாம் என முயற்சித்தபோது தங்களின் வலைப்பூவியின் வாசனையை நுகரும் பாக்கியம் கிடைத்தது. ஆகா என்ன அருமையான தெளிந்த நீரோடை போன்ற எழுத்து நடை, கவர்ச்சியான தலைப்புக்கள், கண்கவரும் படங்கள், இரத்தினச் சுருக்கமான பதில்கள், கேலியும் கிண்டலுமான, பொருட்செறிவு மாறாத கருத்தை கப்பென்று கவ்விக்கொள்ளத்தக்க அழகான அற்புதான யாருக்கும் புரியும்படியான பாடங்கள் . குற்றால அருவியிலே குளித்தது போல் இருந்தது. இருக்கிறது. நன்றி! வாழ்க வளமுடன்.
அன்பன்,
வேந்தன்பட்டி என்.மோகனசுந்தரம், திருநெல்வேலி.
Saturday, June 20, 2015 12:19:00 PM ///////

பாராட்டிற்கு நன்றி. தொடர்ந்து படியுங்கள்!
=============================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.6.15

Half Quiz: பாதி புதிர்: பூவேது கொடியேது வாசனையேது புன்னகையே கண்ணீராக மாறும்போது?


Half Quiz: பாதி புதிர்: பூவேது கொடியேது வாசனையேது புன்னகையே கண்ணீராக மாறும்போது?

Quiz.88

19.06.2015

தலைப்பு: மன நோய், தனிமை

பதினெட்டு வயது முதல் இருபத்தைந்து வயது வரை மனநிலை பாதிக்கப்பெற்று நோய்வாய்ப் பட்டால் என்ன ஆகும்?

அதுவும் அழகான ஒரு இளம் பெண்னிற்கு என்றால் அவளின் நிலைமையையும், அவளுடைய பெற்றோர்களின்

நிலைமையையும், அவதியையும் சொல்லவும் வேண்டுமா?





மேலே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.

ஜாதகி அதிபுத்திசாலி. ஆனால் அவருடைய 18வது வயதில் வீட்டில் நடந்த இரண்டு துயரச் சம்பவங்களால், மன பாதிப்பு

ஏற்பட்டு, மன நோயாளியாகி விட்டார். ஜாதகத்தை அலசுங்கள். இரண்டே இரண்டு கேள்விகள்தான்:

1. ஜாதகியின் மன நோய்க்கு ஜாதகப்படி என்ன காரணம்?
2. ஜாதகியின் மன நோய் சரியானதா இல்லையா? சரியானது என்று
நீங்கள் கணித்தால் எப்போது சரியானது என்பதைக் குறிப்பிட்டு எழுதுங்கள்.சரியாகவில்லை என்று கணித்தால் அதற்கும் காரணத்தை எழுதுங்கள்!

ஜாதத்தை அலசி உங்கள் கணிப்பை எழுதுங்கள்.

அன்புடன்,
வாத்தியார்
=============================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

18.6.15

அதிரடி: அப்படிப் போடு ராசா!


அதிரடி: அப்படிப் போடு ராசா!

ஒருமுறை ராஜா விஜய் சிங் அவர்கள் இங்கிலாந்திற்குச் சென்றிருந்தார்.

காலம் அந்தக் காலம். ஆண்டு சரியாகத் தெரியவில்லை. உத்தேசமாக
1931ம் ஆண்டு என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அப்படிச் சென்றிருந்த பொழுது, சாதரண உடையில் இங்கிலாந்து
தெருவில் நடந்து போய் கொண்டு இருந்தார். வழியில் அவர்
ரோல்ஸ் ராய்ஸ் கார் ஷோரூமைப் பார்த்தார். அங்கே சென்று
கார்களின் விலையை பற்றி விசாரிக்க நினைத்தார்.
ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் மதிப்புள்ள விலை உயர்ந்த கார்களாகும்.
காரை வைத்திருப்பதே பெருமைக்குரிய விஷயமாகும்.

அந்த சமயத்தில் ஷோரூம் ஊழியர்கள் இவர் மன்னர் என்பதை
அறியாமலும், ஏன் இவரைப் பற்றிக் கவலைப் படாமலும், ஷோரூம்
வாசலில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இந்தியக்
குடிமகன் ஒருவனை அடித்து விரட்டிக் கொண்டிருந்தார்கள்.
அதைக் கண்ணுற்ற ராஜா தனது ஓட்டல் அறைக்குத் திரும்பி வந்து
விட்டார்.

பிறகு சில மணி நேரம் கழித்து முழு வியத்தகு தனது அரச
உடையில் மீண்டும் ரோல்ஸ் ராய்ஸ் ஷோரூமை அடைந்தார்.
ஷோரூம் ஊழியர்கள் அவருக்கு முழு அரச உபசாரம் செய்தனர்.
சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தனர்.

ராஜா 6 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை முழுதொகையையும்
செலுத்தி வாங்கினார்.அவருடன் கார்களும் கப்பலில் உடன் வந்தன.

இந்தியா திரும்பிய பிறகு, நகரின் கழிவுகளை சுத்தம் செய்ய அந்தக்
கார்களை பயன்படுத்துமாறு நகராட்சிக்கு உத்தரவிட்டார்.

உலகின் நம்பர் ஒன் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் நகரத்தின் கழிவு போக்குவரத்திற்காகப் பயன்படுத்தப்படும்  செய்தி ,விரைவில்
உலகம் முழுவதும் பரவி ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின்
நற்பெயர் நாறிப்போனது.


யாராவது ஐரோப்பா அல்லது அமெரிக்காவில் நான் ரோல்ஸ் ராய்
கார் வைத்துள்ளேன் என்று பெருமை பீத்திகொண்டால்.
இது இந்தியாவில் குப்பை அள்ளப் பயன்படுகிறது என்று மக்கள்
ஏளனம் செய்யும் நிலைமைக்கு ஆளானது. அதன் காரணமாக
நிறுவனத்தின் மதிப்பு கெட்டு அதன் விற்பனை சரிய தொடங்கியது.

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத் தலைவர் ராஜா விஜய் சிங்கிற்கு ஒரு
அவசர தந்தி அனுப்பினார் அதில் தாங்கள் உடனடியாக எங்கள்
கார்களை குப்பை அள்ளப் பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும்
.அதற்குப் பதிலாக நாங்கள் உங்களுக்கு மேலும் 6 கார்களை
இலவசமாக தருகிறோம் என்று குறிப்பிட்டு எழுதியிருந்தார்.

அதற்கு ராஜா விஜய் சிங் எனக்கு உங்கள் கார்கள் மேல்
வெறுப்பு இல்லை உங்கள் ஊழியர்கள் என் நாட்டவரை குப்பை
போல் வெளியே வீசினார்கள். அதற்கு பதில்தான் நான் உங்கள்
கார்களை குப்பை அல்ல உபயோகித்தேன். முதலில் மக்களை
மதியுங்கள் என்று பதில் அனுப்பினார்.


வெள்ளைக்காரனுக்கு செவிட்டில்
அறைந்ததைப் போன்றிருந்தது.

இதல்லவா மனித நேயம். அதைச் செய்த ராஜா விஜய சிங்கை (இப்போது அவர் இருந்தால்) அப்படிப் போடு ராசா’ என்று சொல்லத் தோன்றுகிறது!


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

17.6.15

தலையைச் சுற்ற வைத்த கடிதம்!

தலையைச் சுற்ற வைத்த கடிதம்!

ஓரு தந்தை தனது இளம்வயது மகளின் அறையை கடந்து செல்லும்போது அது சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருந்ததைக்கண்டு உள்ளே சென்றார்.

எல்லாப் பொருட்களும் அழகாக அடுக்கப்பட்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது.அப்போதுதான் தலையணையின் மேல் ஒரு கடிதம் இருப்பதைப் பார்த்தார்.அதை எடுத்துப் பார்த்தார்.

அதன்மேல் ”அப்பாவுக்கு” என்று எழுதியிருந்தது.பதறிய அவர் உடனே நடுங்கும் கரங்களுடன் உள்ளேயிருந்த கடிதத்தைப் படித்தார்.

அதில் இவ்வாறு எழுதியிருந்தது:

"அன்புள்ள அப்பா, மிகுந்த வருத்தத்துடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.என்னை மன்னித்து விடுங்கள். என் காதலன் டிமோத்தியுடன் நான் வீட்டை விட்டுப்போகிறேன்.உங்களுடனும் அம்மாவுடனும் சண்டைபோட்டு ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்த விரும்பவில்லை.அதனால் சொல்லாமல்போகிறேன்.

டிமோத்தியின் அன்பு என்னை அவனுக்கு அடிமையாக்கிவிட்டது.நீங்கள் டிமோத்தியைப் பார்த்தால் உங்களுக்குப் புரியும்.

உடம்பில் பல இடங்களில் பச்சை குத்தியிருந்தாலும், அவன் நல்லவன்.

அதற்கும் மேலே நான் இப்போது கர்ப்பமாக இருக்கிறேன்.அதை கலைக்க டிமோத்தி விரும்பமில்லை.

டிமோத்திக்கும் எனக்கும் நிறைய வயது வித்தியாசம் இருந்தாலும், இப்போதெல்லாம் 42 ஒரு வயதல்ல!

அவனிடம் பணமில்லாமல் இருந்தாலும் எங்கள் உறவு உறுதியானது.டிமோத்திக்கு இன்னும் பல காதலிகள் இருந்தாலும், எனக்கென்று தனது வாழ்க்கையில் ஒரு தனி இடம் கொடுத்திருக்கிறான்.

என் மூலம் நிறைய பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறான்.

டிமோத்திக்கு நதியருகே ஒரு அழகிய குடிசையிருக்கிறது.அங்கு நாங்கள் தங்கியிருப்போம்.

அவன் காட்டில் கஞ்சா பயிர் செய்வான். அதை நாங்கள் எங்கள் நண்பர்களுக்கு விற்று வாழ்க்கை நடத்துவோம்.கஞ்சாவை நானும் புகைத்தேன். ரொம்ப சுகமாயிருக்கிறது.

மருத்துவர்கள் சீக்கிரம் எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டுமென்று வேண்டிக்கொள்ளுங்கள்.ஏனென்றால் அப்போதுதான் டிமோத்தி எய்ட்சிலிருந்து விரைவில் குணமடைவான்.

அப்பா நீங்களும் அம்மாவும் என்னைப் பற்றிக் கவலைப் படாதீர்கள்.எனக்கு என்னைப் பார்த்துக் கொள்ள தெரியும்.

எனக்கு பதினைந்து வயதாகிறது.என்றாவது ஒரு நாள் உங்களையெல்லாம் உங்கள் பேரக்குழந்தைகளுடன் வந்து பார்ப்பேன்.

உங்கள் அன்பு மகள்,
லிண்டா..!

அவருக்கு உலகமே சுற்றுவது போலிருந்தது..கடிதத்தின் கீழே “பின்பக்கம் பார்க்க” என்று எழுதியிருந்தது..துடிக்கும் இதயத்துடன் கடிதத்தை திருப்பி பார்த்தார்.

அங்கே என்ன எழுதியிருந்தது?

ஸ்க்ரோல் டவுன் செய்து படியுங்கள்

V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
அங்கு இவ்வாறு எழுதியிருந்தது:

பின்குறிப்பு;

அப்பா, நான் முன்பக்கம் எழுதியது எதுவும் உண்மையில்லை.நம் வாழ்க்கையில் எவ்வளவோ மோசமான விஷயங்களெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கிறது.

இதையெல்லாம் பார்க்கும்போது நான் பத்தாம் வகுப்பு கணக்குப் பாடத்தில் தேர்ச்சி பெறாதது ஒன்றும் பெரிய விஷயமே கிடையாது.

எனது தேர்வு அட்டை எனது மேஜைமேல் இருக்கிறது.எடுத்து கையெழுத்து போடுங்கள்.நான் பக்கத்து வீட்டில்தான் இருக்கிறேன். உங்கள் கோபம் தணிந்ததும் கூப்பிடுங்கள்.
--------------------------------
எப்படியிருந்தது (கடிதத்தின் முதல் பக்கம்)?
யாராயிருந்தாலும் தலை சுற்றுமா. இல்லையா?

அன்புடன்
வாத்தியார்
============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

16.6.15

அந்த நாயகன் எப்போது கூட வந்தான்?

அந்த நாயகன் எப்போது கூட வந்தான்?

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை திருமதி பி.சுசீலா அவர்கள் பாடிய முருகன் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்

அன்புடன்,
வாத்தியார்
====================================
சரவணப் பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
சரவணப் பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
இரு கரம் நீட்டி வரம் கேட்டேன் அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான்
சரவணப் பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம்

அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை அந்த அண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை
இவ்விதம் இவர் தந்த இன்ப நிலை கண்டு எவ்விதம் நான் கண்டேன் மாறுதலை

ஓஹோஹோஹோ...ஹோஹோஹோ. ஓஹோஹோஹோ
ஓஹோஹோஹோ...ஹோஹோஹோ. ஓஹோஹோஹோ

சரவணப் பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம்

நல்லவர் என்றும் நல்லவரே உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே
நல்லவர் என்றும் நல்லவரே உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே
நல்ல இடம் நான் தேடி வந்தேன் அந்த நாயகன் என்னுடன் கூட வந்தான்

சரவணப் பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
இரு கரம் நீட்டி வரம் கேட்டேன் அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான்
சரவணப் பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம்

பாடல்: சரவணப் பொய்கையில் நீராடி
திரைப்படம்: இது சத்தியம்
பாடியவர்: பி. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
ஆண்டு: 1963
=============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

15.6.15

எங்கே? எங்கே? இதெல்லாம் எங்கே போனது ராசா?


எங்கே? எங்கே? இதெல்லாம் எங்கே போனது ராசா?

இயற்கை எங்கே?

பனையோலை விசிறி எங்கே?

பல்லாங்குழி எங்கே?

கிச்சுகிச்சு தாம்பாளம் எங்கே?

கோகோ விளையாட்டு  எங்கே?

சாக்கு பந்தயம் எங்கே?

கில்லி எங்கே?

கும்மி எங்கே?

கோலாட்டம் எங்கே?

திருடன் போலீஸ் எங்கே?

ஆலமர விழுது ஊஞ்சல் எங்கே?

மரப்பாச்சி கல்யாணம் எங்கே

 மட்டை ரெயில் எங்கே?

கமர்கட் மிட்டாய் எங்கே?

குச்சி மிட்டாய் எங்கே?

குருவி ரொட்டி எங்கே?

இஞ்சி மரப்பா எங்கே?

கோலி குண்டு எங்கே?

கோலி சோடா எங்கே?

பல் துலக்க  ஆலங்குச்சி  எங்கே

 எலந்தை பழம் எங்கே?

சீம்பால் எங்கே?

பனம் பழம் எங்கே?

பழைய சோறு எங்கே?

நுங்கு வண்டி எங்கே?

பூவரசன் பீப்பி எங்கே?

கைகளில் சுற்றிய பம்பரங்கள் எங்கே?

நடைபழக்கிய  நடை வண்டி  எங்கே ?

அரைஞான் கயிறு எங்கே?

அன்பு எங்கே?

பண்பு எங்கே?

பாசம் எங்கே?

நேசம் எங்கே?

மரியாதை எங்கே?

மருதாணி எங்கே?

சாஸ்திரம் எங்கே?

சம்பரதாயம் எங்கே?

விரதங்கள் எங்கே ?

மாட்டு வண்டி எங்கே?

மண் உழுத எருதுகள் எங்கே?

செக்கிழுத்த காளைகள் எங்கே?

எருமை மாடுகள் எங்கே?

பொதி சுமந்த கழுதைகள் எங்கே?

பொன் வண்டு எங்கே?

சிட்டுக்குருவி எங்கே?

குயில் பாடும் பாட்டு எங்கே?

குரங்கு பெடல் எங்கே?

அரிக்கேன் விளக்கு எங்கே?

விவசாயம் எங்கே?

விளை நிலம் எங்கே?

ஏர்கலப்பை எங்கே?

மண் வெட்டி எங்கே?

மண்புழு எங்கே?

வெட்டுமண் சுமந்த  பின்னல் கூடை  எங்கே ?

பனை ஓலை குடிசைகள்  எங்கே ?

தூக்கனாங் குருவி கூடுகள்  எங்கே ?

குளங்களில் குளித்த  கோவணங்கள் எங்கே?

அந்த குளங்களும் எங்கே?

தேகம் வளர்த்த  சிறுதானியம்  எங்கே?

அம்மிக்கல் எங்கே?

ஆட்டுக்கல் எங்கே?

மோர் மத்து ?

கால்கிலோ கடுக்கன்  சுமந்த காதுகள்  எங்கே ?

நல்லது கெட்டது  சுட்டிக்காட்டும் பெரியவர்கள்  எங்கே?

தோளிலும் இடுப்பிலும்  சுமந்த  பருத்தி துண்டு எங்கே ?

பிள்ளைகளை சுமந்த  அம்மாக்களும் எங்கே ?

தாய்பாலைத் தரமாய்  கொடுத்த தாய்மை  எங்கே ?

மங்கலங்கள் தந்த  மஞ்சள் பை  எங்கே ?

மாராப்பு சேலை  அணிந்த பாட்டிகள் எங்கே?

இடுப்பை சுற்றி சொருகிய  சுருக்கு பணப்பையும் எங்கே?

தாவணி அணிந்த இளசுகள்  எங்கே ?

சுத்தமான நீரும்  எங்கே ?

மாசு இல்லாத காற்று எங்கே ?

நஞ்சில்லாத காய்கறி எங்கே?

பாரம்பரிய நெல் ரகங்களும்  எங்கே?

எல்லாவற்றையும் விட நம் முன்னோர்கள்  வாழ்ந்த முழு
 ஆயுள் நமக்கு  எங்கே?

இதற்கு பாமரனாலும்,மெத்தபடித்தவனாலும்,
விஞ்ஞானியாலும்,ஏன் கணினியாலும் கூட பதில்
 சொல்ல முடியாது.

ஏனென்றால் நிம்மதியான வாழ்வை மறந்து பணம் எனும்
 காகித்தை தேடி இந்த உலகம் ஓடிக்கொண்டு இருக்கிறது.

அதுசரி அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்க நமக்கு
 நேரம் தான் எங்கே? எங்கே

படித்ததில் பிடித்தது

அன்புடன்
வாத்தியார்
==============================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

14.6.15

Half Quiz: பாதிப் புதிர்: கலங்காதிரு மனமே; காலம் மாறும் ஒரு தினமே!


Half Quiz: பாதிப் புதிர்: கலங்காதிரு மனமே; காலம் மாறும் ஒரு தினமே!

Quiz 87 Answer

14.6.2015

நேற்றைய புதிரில் ஒரு ஜாதகத்தைக் கொடுத்து 2 கேள்விகள் கேட்டிருந்தேன்:

1. ஜாதகரின் பணப் பிரச்சினைக்கு என்ன காரணம்?
2. அந்தப் பிரச்சினையில் இருந்து ஜாதகர் மீண்டாரா அல்லது இல்லையா?

ஜாதத்தை அலசி உங்கள் கணிப்பை எழுதுங்கள் என்று கேட்டுக் கொண்டிருந்தேன்.

சரியான பதில் கீழே உள்ளது.

1. ஜாதகரின் பணப்பிரச்சினைக்கு, அதாவது பண இழப்பிற்கு சின்ன வயதில் நடந்த 12ம் இடத்து அதிபதியின் மகாதிசைதான் காரணம். அத்துடன் பணத்திற்குக் காரகனான குரு பகவான் ஜாதகத்தில் நீசமாகி உள்ளார்.

2. மீண்டார். அடுத்து வந்த சனி திசை அதற்கு உதவியது.


ஜாதகத்தைப் பாருங்கள்

மகர லக்கின ஜாதகர்.
லக்கினாதிபதி சனீஷ்வரன் 5ம் வீட்டில் உடன் எட்டாம் அதிபதி சூரியன்
குரு பகவான் நீசமாகியுள்ளார். மேலும் அவர் 12ஆம் இடத்து அதிபதி.
-------------------------------------------------------------
சனீஷ்வரன் லக்கினத்திற்கு மட்டுமல்ல, இரண்டாம் இடத்திற்கும் அவர்தான் அதிபதி  (House of finance) அவர் லக்கினத்திற்கு 5ம் இடத்தில் திரிகோண ஸ்தானத்தில் வலுவாக உள்ளார்.மேலும் 2ம் வீட்டிற்கு அதிபதி என்ற கணக்கில் அந்த வீட்டிற்கு 4ல் கேந்திரத்தில் உள்ளார்.அவருடன் 9ம் அதிபதி (பாக்கியாதிபதி) புதனும், 10ம் அதிபதி சுக்கிரனும் கூட்டாக உள்ளனர்
11ம் அதிபதி (லாபாதிபதி) செவ்வாயின் பார்வையும் அவர்கள் மேல் உள்ளது.
அவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து ஜாதகனை அடுத்து வந்த சனி திசையில் மீட்டுக் கொண்டு வந்தனர்.

விளக்கம் போதுமா?
--------------------------------
மொத்தம் 28 பேர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்களில் 16 பேர்கள் மட்டும் சரியான பதிலை அல்லது ஒட்டிய பதிலை எழுதியுள்ளார்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள். அவர்களுடைய கணிப்புக்களைக் கீழேகொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்துகொள்லுங்கள்
லால்குடிக்காரரை இந்த வாரம் காணவில்லை. ஆர்வத்துடன் கலந்து கொள்வார் அவர். அதனால் குறிப்பிட்டுள்ளேன்
---------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
============================================
//////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
வணக்கம் வாத்தியாரே!
Half Quiz: பாதி புதிர்: கையில வாங்கினேன் பையில போடலை காசு போன இடம் தெரியலை!
Quiz.87 ற்கான பதில்.
1. விரையதிபதி குரு லக்கினத்தில், ஆகவே குரு திசையில் ஆரம்பித்த வியாபாரம் கடனில் சிக்கிக் கொண்டது. 2ல் மாந்தி இருந்தால் சொத்துக்கள் இருக்காது. இருந்தாலும் அவன் கண்ணேதிரேயே கரைந்துவிடும்.
2. பின்பு வந்த லக்கினாதிபதி சனியின் திசையில் ஜாதகர் கடின உழைப்பினால் கடனிலிருந்து மீண்டார். 7ம் இடத்தை சனியும் குருவும் பார்ப்பதால் ஜாதகரை ஆதித கட்டுபாடுகளை கொடுத்து அங்கே இங்கே வேடிக்கை பார்க்க விடாமல் வேலை செய்ய வைத்தனர்.
அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.
Friday, June 12, 2015 9:28:00 AM Delete/////
--------------------------------------------
2
/////Blogger graajkumar kumar said...
குரு திசைக்குபிறகு சனி திசையில் கஷ்டத்தில் இருந்து மீண்டிருப்பார்
Friday, June 12, 2015 9:54:00 AM Delete////
-----------------------------------------
3
//////Blogger amuthavel murugesan said...
Answer to Quiz.87
1, செவ்வாய் மற்றும் மாந்தி இரண்டாம் இடத்தில்,விரயதிபதி குரு பகவான்
லக்கினாதில்,அடுத்து வந்த குரு திசையில் பணப் பிரச்சினை.
2. லக்கினாதிபதி மற்றும் இரண்டாம் அதிபதி சனி 5ஆம் இடத்தில். சனி திசையில் ஜாதகர் பிரச்சினையில் இருந்து மிளூவார்.
நன்றி
மு.சாந்தி
Friday, June 12, 2015 10:03:00 AM Delete//////
------------------------------------------------
4
/////Blogger Raja R said...
iya ,
nan neenda natkalaka thankalathu padankalai padithu l.
muthan muraiyaha pudir potiyil kalanthu kolkiren
ithil 3,12-m athipathi guru lakanathil irunthu thisai nadthiya kalagalil
pana viryam nadandirukkum , sani thisail athu mudivukku vanthirukkum
Friday, June 12, 2015 11:46:00 AM Delete//////
---------------------------------------------
5
/////Blogger Govindasamy said...
1). 10க்குடைய சுக்கிரனுடன் ஆறாம் அதிபதியும் (புதன்), எட்டாம் அதிபதியும் (சூரியன்) கூட்டு. அதனால் தொழில் விருத்தியடையவில்லை.
2). 2ல் மாந்தி ஜாதகருக்கு செலவினத்தைப் பற்றிய ஒரு அக்கரையை கொடுக்கமாட்டார். எனவே செலவை கட்டுக்குள் வைக்க முடியாது. மேலும் விரயாதிபதி குரு லக்கினத்தில். ஜாதகர் செலவு செய்ய அஞ்சமாட்டார்.
3). தசா புத்தியைப் பொருத்த மட்டில் 12ல் இருக்கும் ராகு திசை முடிந்து வரும் குரு திசையும் விரயாதிபதி திசையாகிறது. ஜாதகரின் 39 வயதுக்கு மேல் சனிதசை சுக்கிர புத்தியில் பணப் பிரச்சினையிலிருந்து மீண்டு வருவார்.
Friday, June 12, 2015 12:50:00 PM Delete/////
------------------------------------------------
6
////========Blogger Sivachandran Balasubramaniam said...
மதிப்பிற்குரிய ஐயா !!!
பாதிபுதிர் எண்: 87 இற்கான பதில் !!!
ஜாதகர் கும்ப ராசி,சதயம் நட்சத்திரம், மகர லக்கினத்தில் பிறந்தவர். லக்கினாதிபதி சனி பூர்வபுண்ணிய ஸ்தானத்தில். உடன் பூர்வ புண்ணியாதிபதி மற்றும் தொழில் ஸ்தானாதிபதி சுக்கிரன். வில்லன் ஆறாமதிபதி புதன், அஷ்டமாதிபதி சூரியன். அவர்களின் பிடியில். கடுமையான கிரக யுத்தத்தில். 5 டிகிரி இடைவெளியில். கேது கொடிபிடித்து செல்லும் காலசர்ப்ப தோஷம். லக்கினத்தில் விராயதிபதி குரு. லக்கினாதிபதி, தன ஸ்தானாதிபதி, மற்றும் தொழில் காரகன் சனி, தொழில் ஸ்தானாதிபதி சுக்கிரன் இவைகள் அனைத்தும் கிரக யுத்தத்தால் கெட்டு போயுள்ளதால் (இரண்டு பரல்கள்) வேலைக்கு செல்ல வேண்டிய ஜாதகம். மேலும் லாபம் மற்றும் விரைய ஸ்தான பரல்கள் வித்தியாசம் வெறும் 1( ஒன்று மட்டுமே). மேலும் தன காரகன் குரு நீசம். ராசி அம்சத்தில் 6/8 அமைப்பில். இரண்டாமிடத்தில் மாந்தி. இவற்றின் காரணமாக ஜாதகர் கடுமையான பணபிரச்சனையில் மாட்டி இருப்பார். ஸ்டாக் trading இல் பணம் விட்டு இருக்க அதிக வாய்ப்புள்ளது .
இப்படிக்கு
சிவச்சந்திரன்.பா
Friday, June 12, 2015 1:30:00 PM Delete/////

பாதி பதில்தானே உள்ளது. எப்போது மீண்டிருப்பார்? அதைச் சொல்லவில்லையே நீங்கள்?
---------------------------------------------
7
/////Blogger Pethaperumal said...
வணக்கம் ஐயா
1. 5,10 க்கும் உடைய யோககாரகன் சுக்கிரன் 5ல் ஆச்சி பலத்துடன், ஆனாலும் 10 க்கு அவர் 8 ல்.
2. 10 ம் வீடு சுத்தமாக உள்ளது.
3. 2 ல் மாந்தி, அத்துடன் செவ்வாய் பாதகாதிபதி.
4. குரு நீசம், அத்துடன் அவர் 12, 3 க்கு உடையவர்.
5. குரு திசையில் ஜாதகருக்கு தொழில் விரையம் ஏற்பட்டிருகும்.
6. பிறகு சனி திசையில் சரியாகிருக்கும்.
நன்றி
Friday, June 12, 2015 2:38:00 PM Delete//////
---------------------------------------------
8
//////Blogger lrk said...
ஐயா வணக்கம்
1*****ஜாதகரின் பணப் பிரச்சினைக்கு என்ன காரணம்?
1 தனஸ்தானத்தில் மாந்தி உட்கார்ந்து அந்த வீட்டை கெடுத்து இருக்கிிறார் .
2 2 ஆம் இடத்து அதிபதி யை செவ்வாய் பார்வை.
3 6ஆம் இடத்து அதிபதி , அந்த இடத்துக்கு 12 ல் உள்ளார்
4. 12 ல. ராகு பகவான் உள்ளார்
.2**** அந்தப் பிரச்சினையில் இருந்து ஜாதகர் மீண்டாரா அல்லது இல்லையா?
கால சர்ப்பத்தில் உள்ளார்
30 வயதுக்கு பின் நிலமை மாறும்.ஜாதகர் மீண்டு வருவார்.
நன்றி
கண்ணன்.
Friday, June 12, 2015 10:08:00 PM Delete/////
-----------------------------------------------------
9
Blogger Chandrasekaran Suryanarayana said...
QUIZ NO. 87 வணக்கம்.
25/05/1973 ஆம் ஆண்டு வெள்ளி கிழமை மாலை 10.49.58 மணிக்கு சதய நட்சத்திரத்தில் மகர லக்கினத்தில் ஜாதகர் பிறந்தவர். (இடம்: சென்னை)
யோககாரர்கள் : புதன், சுக்கிரன் (இந்த ஜாதகத்தில் புதன் அஸ்தங்கம்).
ராஜ யோகத்தை கொடுப்பவர் : சனி, சுக்கிரனும்.
1. ஜாதகரின் பணபிரச்சனைக்கு காரணம்:
இந்த ஜாதகம் காலசர்ப தோஷம் உள்ள ஜாதகம். 6வயதில் ராகு தசை முடிந்து விடுகிறது. 30 வயதிற்கு மேல்தான் யோகங்கள் வேலை செய்யும்.
லக்கினம் பாபகர்தாரி தோஷம் (ஒரு பக்கம் ராகு, மறுபக்கம் செவ்வாய்) - ஜாதகர் அடிக்கடி நோய்வாய்ப்படுவார். ஏதாவது ஒரு மன அழுத்தம் இருந்துகொண்டே இருக்கும்.
லக்கினத்தில் குரு(5 பரல்) மகர ராசியில் நீசம். ஆனால் நீசபங்க ராஜ யோகம் பெற்றுள்ளது.
குருவின் 5ம் பார்வை 5ம் வீட்டில் உள்ள சனி, சுக்கிரன், சூரியன், புதன் மீது இருந்தும் உபயோகபடவில்லை.காரணம் குரு பாபகர்தாரி தோஷத்தில் உள்ளார். 6 வயது முதல் 22 வயது வரை குரு தசை.
2ல் இருக்கும் செவ்வாய்யின் 4ம் பார்வை 5ம் வீட்டின் மீது இருக்கும் சனி, சுக்கிரன் மீதும், 6ம் அதிபதி, 8ம் அதிபதி மீதும் இருப்பதால்.
இரண்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால் குறைந்த அளவு செல்வம் இருக்கும். கல்விக்கும், செல்வத்திற்கும் ஏற்றதல்ல.
லக்கினாதிபதி சனி(2 பரல்) 5ம் வீட்டில் திரிகோணத்தில் நட்பு வீட்டில் உள்ளார். மகர ராசிக்கு சனியும், சுக்கிரனும்(4 பரல்) சேர்ந்து இருப்பது ராஜ யோகத்தை கொடுக்ககூடியது. ஆனால் மேலும் இந்த வீட்டில் இவர்களுடன் 6ம் வீட்டு அதிபதி புதனும், 8ம் வீட்டு அதிபதி சூரியனும் சேர்ந்து ஜாதகருக்கு பண பிரச்சனை உண்டாக்கினார்கள்.(கூட இருந்து குழிபறிப்பது).
சூரியன், புதன், இவர்களின் 7ம் பார்வை 11ம் வீட்டின் மீது இருப்பதை பார்க்கலாம்.
9ம் வீட்டு பாக்கியஸ்தான அதிபதி புதன் அஸ்தங்கம் ஆகிவிட்டார்.
5ம் வீட்டில் சனி- பிரச்சினைகள் நிறைந்த வாழ்க்கையை உடையவர். 22 வயது முதல் 41 வயது வரை சனி தசை.
2. பணபிரச்சனையிலிருந்து ஜாதகர் மீண்டு வந்தார்
41 வயது முதல் 58 வயது வரை பாக்கியஸ்தான அதிபதி யோககாரருடைய புதன் தசை ஆரம்பம்.
5ம் வீட்டில் அமர்ந்துள்ள சுக்கிரன், புதன் தன்னுடைய 7ம் பார்வையால் 11ம் வீட்டை பார்க்கிறார்.
11ம் வீட்டில் 33 பரல்கள்.
11ம் வீட்டு அதிபதி செவ்வாய் 2ம் வீட்டில் அமர்ந்துள்ளார்.
லக்கினாதிபதியின் 10ம் பார்வை 2ம் வீட்டில் அமர்ந்துள்ள செவ்வாய், சந்திரனுடன் சசிமங்கள யோகத்தின்மீது.
2ம் வீட்டில் கும்ப ராசியில் சந்திரன் (4 பரல்) வர்கோதமும். நவாம்சத்திலும் கும்ப ராசியில் சந்திரன்.
2ல் சந்திரன் இருந்தால் பணக்காரன். இளவயதில் திருமணம் நடைபெறும்.
மேலும் 4ம் வீட்டு அதிபதி செவ்வாயுடன் கூட்டு சேர்ந்து சசிமங்கல யோகம்.பணதட்டுபாடு இருக்காது.
ஆகையால் ராஜ யோகத்தினால் ஜாதகரை பணபிரச்சனையில் இருந்து மீட்டு கொண்டு வந்தார்.
இந்த ஜாதத்தில் உள்ள யோகங்கள்: சசிமங்களம், மாத்ரு மூலதணம், சரஸ்வதி யோகம்.
Saturday, June 13, 2015 3:40:00 AM Delete/////
-----------------------------------------------------
10
////Blogger Manikandan said...
1. ஜாதகரின் பணப் பிரச்சினைக்கு என்ன காரணம்?
1. மகர இலக்கின விரயாதிபதி குரு பகவான் , லக்கினமேறியிருகிறார் . ( அதுவ்வும் நீசமாக)
2. தன ஸ்தானத்தில் மாந்தி.
3. தனாதிபதி + லக்கினாதிபதி சனி பகவன் 6-ம் அதிபதி புதன் உடன் சேர்க்கை.
2. அந்தப் பிரச்சினையில் இருந்து ஜாதகர் மீண்டாரா அல்லது இல்லையா?
1. யோகாதி பதி சுக்கிரன் தசையில்  பணப் பிரச்சினையில் இருந்து மீண்டுருப்பர்.
Saturday, June 13, 2015 3:44:00 AM Delete/////
--------------------------------------------
11
//////Blogger daya nidhi said...
1.தன காரகன் குரு லக்னத்தில் நீசம், அம்சத்திலும் பகை. 2 ல் மாந்தி
ஆகவே குரு தசா முழுவதும் பன விரயம்.
2.சிரமத்திலிருந்து மீண்டார்.
கேந்திர , கோண அதிபதிகளான புதன், சுக்ரன் ராஜயோகம் பெற்று, லக்னாதிபதி சனியுடன் 5 ஆம் இடத்தில் இருப்ப்தால் சனி தசா புதன் புத்தியில் 27 வது வயதில் நிலமை சரியானது
நன்றி, தயாநிதி,அவியனுர்
Saturday, June 13, 2015 3:18:00 PM Delete/////
---------------------------------------------------------
12
Blogger vignesh.t Kumar said...
dhanakarakan guru (authority of money) laknathil neecham .
12 palnet ( virayathipathi) is in laknam
all planets under raagu kethu
2 nd place sevvai & chandhiran & maandhi . paanai kula ootai pondradhu.
11 th place 4 planets been seen , in which 6 am adhipathi puthan is also been seen .
these are the reasons for the loss of money
Saturday, June 13, 2015 4:15:00 PM Delete//////

2வது கேள்விக்கான பதில் எங்கே? ஜாதகர் எப்போது மீண்டார்? அதைச் சொல்லவில்லையே நீங்கள்?
----------------------------------------------------------
13
/////Blogger Dallas Kannan said...
Respected Sir
Reason for Financial Trouble:
1.Kethu starts the Kalasharba dosam
2. Laknam is in papakarthari yogam (ragu at 12 and Mars mandi at 2)
3. Mandi and Mandi at 2nd place
4. 12th lord in laknam denots persons life is not very usefull to anyone.
Did he come out of Financial Truble:
Recovery started slowly after Sani dasa Budhan buthi and he came out of it in Sanidasa Sukra buthi.
Cheers
P.Kannan
Sunday, June 14, 2015 3:12:00 AM Delete/////
------------------------------------------------
/////Blogger kannan Seetha Raman said...
வணக்கம் வாத்தியார் ஐயா
பல வகுப்பறை மாணவர்கள் பாதயாத்திரையில் பங்கு பெரும் பொருட்டு 2015 ஆண்டு ஜூலை மாதம் ( தமிழுக்கு ஆடி மாதம்) நடைபெற உள்ள சென்னை டு திருமலா திருப்பதி (திருப்பதி) பாத யாத்திரை அழைப்பிதல் மடலை தங்களுடைய (வலையில் ) வகுப்பறையில் ஏற்றுவதக்கு சம்மதமா என்பதினை தெரிய படுத்துகின்றேன் ஐயா
Sunday, June 14, 2015 11:54:00 AM Delete///////

அனுப்புங்கள்!
---------------------------------
14
//////Blogger Kirupanandan A said...
1)லக்கினத்திற்கு 2ல் மாந்தி, செவ்வாய். ஓட்டை வாளி. பணம் எப்படி சேமிக்க முயற்சி செய்தாலும் தங்காது. உடன் இருக்கும் தேய் பிறைச் சந்திரனும் பாபர்தான். அவரும் உதவ முடியாது. அத்துடன் சந்திரனுக்கு 2ம் அதிபதி குரு. அவரும் சந்திரனுக்கு 12ல் நீசம். இதுவும் எதற்கும் உதவாது.
2) நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீண்டார் எனலாம். லக்கினத்திற்கு 2ம் அதிபதி சனி, 11ம் அதிபதி செவ்வாய் பரஸ்பர பார்வையில் இருக்கிறார்கள். பலவீனமான என்றாலும் இந்த தன யோகம் கை கொடுத்திருக்கும்.
Sunday, June 14, 2015 2:57:00 PM Delete/////
-----------------------------------------------
15
/////Blogger venkatesh r said...
மகர லக்கினம், கும்ப ராசி ஜாதகர். கேது கொடி பிடிக்கும் காலசர்ப்ப தோஷமுள்ள ஜாதகம்.
1. விரையாதிபதி நீச குருவின் தசை மற்றும் கால சர்ப்ப தோசத்தின் காரணமாக 30 வயது வரை பணப்பிரச்சினை இருந்துள்ளது.
2. லக்கினாதிபதி சனியின் தசை ஆரம்பமான பிறகு, சனிதசை, சுக்கிர புத்தியில் அதிலிருந்து மீண்டு வந்தார்.
லக்கினாதிபதி சனி 5ல் கிரக யுத்தத்திலுள்ளார். விரையாதிபதி குரு லக்கினத்தில் நீசமடைந்துள்ளார். கால சர்ப்ப தோசம் மற்றும் குருவின் தசாகாலத்தில் ஜாதகர் நிறைய பணத்தை வியாபாரத்தில் தொலைத்துவிட்டார்.
காலசர்ப்ப தோசம் 26 வயதில் (லக்கின புள்ளிகள்) முடிவிற்கு வந்தது. லக்கினாதிபதியும் தனாதிபதியுமான சனியின் தசை ஆரம்பமான பிறகு படிப்படியாக முன்னேறி 30 வயதில் சுக்கிரனின் புத்தியில் எல்லாப் பிரச்சினைகளிலும் இருந்து மீண்டு வந்தார்.
Sunday, June 14, 2015 3:03:00 PM Delete//////
-----------------------------------------------------
16
//////Blogger GOWDA PONNUSAMY said...
அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
புதிர் 87க் கான அலசல்:
1). ஜாதகரின் பணப் பிரச்னைக்கு காரணம் கேது கொடி பிடிக்கும் காலசர்ப்ப தோஷஜாதகம்,இரண்டாமிடம் தன ஸ்தானத்தில் மாந்தியும், 11ம் இடத்துக்காரனான பாதகாதிபதி செவ்வாயும் சேர்க்கை பெற்று அமர்ந்தது.லக்கினத்தில் அமர்ந்த தன காரகன் குரு நீச்சம் பெற்று அமர்ந்தது.லக்கினம் பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டிக் கொண்டது.
2).பணப் பிரச்னைகளிலிருந்து தனது 29 வயதில் அதாவது சனி தசை கேது புத்தி முடிவில் 15-07-2002க்குப் பின்னர் மீண்டு இருப்பார்.
சுருக்கமான அலசல்:
கேது கொடி பிடிக்கும் காலசர்ப்ப தோஷ ஜாதகம்.
மகர லக்கினம்.லக்கினாதிபதி சனி 5மிடமான திரிகோணம் ஏறி,நட்பு வீட்டில் அமர்ந்துள்ளார்.லக்கினத்தில் குரு நீச்சம்(ஆனாலும் சுபர்).லக்கினம் பாபகர்த்தாரி யோகத்தில்.லக்கினம் சுபர் பார்வையின்றி கெட்டுப் போயுள்ளது.
லக்கினாதிபதி சனி 5ல், அதன் அதிபதியும்,யோககாரகனுமாகிய ஆட்சி பெற்ற சுக்கிரனுடன் சேர்க்கை பெற்று மகாலட்சுமி யோகம் உண்டாகிறது.9ம் வீட்டுக்காரன் புதனுடன் சேர்க்கை.சுபகிரகம் மட்டுமின்றி லக்கினாதிபதிக்கும், 5மிடத்துக்கும்,அதன் அதிபதி சுக்கிரனுக்கும் நண்மையை செய்ய கடமைப் பட்டுள்ளார்.5மிடத்தில் 8ம் அதிபதி சூரியன் அமர்ந்து இருப்பினும்,5மிட வலிமையாலும், 5மிடத்துக்கு குரு பார்வையினாலும், ராஜ கிரகமான சூரியன் புதாத்திய யோகத்தை தருகின்றார்.5மிடம் வலுப் பெற்றுள்ளது.
2ம் வீடு தனஸ்தானம்:
2ம் அதிபதியும் சனீஷ்வரனாகி தன் வீட்டிற்கு கேந்திர வீடாகிய 4ம் வீட்டிலமர்ந்து, தன் வீடாகிய தனஸ்தானத்தை தன் பார்வையில் வைத்துள்ளார்.2ம் வீட்டில் 7ம் அதிபதி சந்திரனும்+11ம் அதிபதி செவ்வாயும்(லாப ஸ்தானாதிபதி மட்டுமல்லாமல் பாதகாதிபதியும் கூட) சேர்க்கை சந்திர மங்கள யோகம் ஏற்பட்டுள்ளது.கூடவே மாந்தியும் சேர்ந்து நின்று தன ஸ்தானத்தை கெடுத்துவிட்டது.
9ம் வீடு பாக்கியஸ்தானம்:
இரண்டாம் வீட்டிலமர்ந்த செவ்வாயின் பார்வை 9மிடத்தை கெடுக்க முயன்றாலும்,லக்கினத்திலிருந்து நம்பர் ஒன் சுபராகிய குரு 9மிடத்தையும், தனது விசேஷ பார்வையால் 9ம் அதிபதி புதனையும்(அடிதடியில் இருந்தாலும்,அஸ்தங்கத்தில் இருந்தாலும்,பாக்கியாதிபதியாயிற்றே!)பார்த்ததால் பாதிப்பிலிருந்து விடுதலை.
9மிட ஆதிபதி புதன் தன் வீட்டிற்கு உச்சத்திரிகோண வீடான (9க்கு 9மிடம்) 5ம் வீட்டிலமர்ந்ததால் நண்மை செய்ய வேண்டிய நிலை பெற்றுள்ளார்.
11ம் வீடு லாபஸ்தானம்:
11ம் அதிபதி செவ்வாய் (பாதாகாதிபதியுமாவார்) இரண்டாம் இடமான தன ஸ்தானத்தில் (தன்னுடைய வீட்டிற்கு 4 ல்) அமர்ந்து, மாந்தியையும், 7ம் அதிபதி சந்திரனையும் துணைக்கு இருத்திக்கொண்டு,அந்த இடத்தை துவம்சம் செய்கிறார். 5மிடத்தில் அடிதடியில் உள்ள 3 சுபர்களும் ராஜ கிரகமான சூரியனும் ஒரு சேர 11ம் இடத்தைப் பார்ப்பதால் அந்த இடம் பலம் அடைந்துள்ளது.
மொத்தத்தில்:
லக்கினம் கெட்டுள்ளது.
தனஸ்தானம் கெட்டாலும் இரட்சிக்கப் படுகிறது, ஸ்தானாதிபதியின் பார்னையால்.
5மிடம் பலமடைகிறது, குரு பார்வை,சுக்கிரன்+சனி சேர்க்கையால் மகாலஷ்மி யோகம்,சூரியன்+புதன் சேர்க்கையால் புதாத்திய யோகம், சனியும் செவ்வாயும் பரஸ்பர பார்வையால் சசிமங்கள யோகம்.அத்தனையையும் மீறி, அஸ்தங்கம் அடையாமல் ஆட்சி பெற்ற சுக்கிரன் பஞ்ச மஹா யோகங்களில் ஒன்றான மாளவியா யோகம் பெற்றுள்ளது.
9மிடம் பாக்கியஸ்தானம்
செவ்வாயால் பாதிப்படைந்தாலும் குருவின் பார்வையால் நண்மை அடைகிறது.
11மிடம்:
வலுவாக உள்ளது.
குரு தசை பயன் தரவில்லை.--23 வ.
சனி தசை சுக்கிர புத்தியில் 15-07-2002 இருந்து ஜாதகர் மீண்டு வந்து சாதித்திருப்பார்.
நன்றியுடன்,
-பொன்னுசாமி.
Sunday, June 14, 2015 3:04:00 PM Delete//////
------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!