மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.3.15

வாத்தியாரின் அறிவிப்பு!


வாத்தியாரின் அறிவிப்பு!

வாத்தியார் சொந்த வேலையாக வெளியூர்ப் பயணம். வகுப்பறைக்கு
2 நாட்கள் விடுமுறை. அனைவரும் கத்திக் கூச்சல்போட்டு
விளையாடாமல் இந்த இரண்டு நாட்களும் பழைய பாடங்களைப்
படிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அடுத்த வகுப்பு 1.4.2015 புதன்கிழமையன்று நடைபெறும்.

அன்புடன்
வாத்தியார்
=========================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

27.3.15

அன்பர்களுக்கு வேண்டிய நிலைப்பொருள் எது?


அன்பர்களுக்கு வேண்டிய நிலைப்பொருள் எது?

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை அருணகிரிநாதர் அருளிச் செய்த திருப்புகழ்ப் பாடல் ஒன்று நிறைக்கிறது. அனைவரும் படித்து மகிழுங்கள்.

அன்புடன்,
வாத்தியார்
-------------------------------------------
தந்ததனத் தானதனத் ...... தனதான
     தந்ததனத் தானதனத் ...... தனதான
......... பாடல் .........

உம்பர்தருத் தேநுமணிக் ...... கசிவாகி
     ஒண்கடலிற் றேனமுதத் ...... துணர்வூறி
இன்பரசத் தேபருகிப் ...... பலகாலும்
     என்றனுயிர்க் காதரவுற் ...... றருள்வாயே
தம்பிதனக் காகவனத் ...... தணைவோனே
     தந்தைவலத் தாலருள்கைக் ...... கனியோனே
அன்பர்தமக் கானநிலைப் ...... பொருளோனே
     ஐந்துகரத் தானைமுகப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........
உம்பர் தரு ... விண்ணவர் உலகிலுள்ள கற்பக மரம்
தேனுமணி ... காமதேனு, சிந்தாமணி
கசிவாகி ... (இவைகளைப் போல் ஈதற்கு) என் உள்ளம் நெகிழ்ந்து
ஒண்கடலிற் தேனமுது ... ஒளிவீசும் பாற்கடலில் தோன்றிய இனிய
அமுதம்போன்ற உணர்வூறி ... உணர்ச்சி என் உள்ளத்தில் ஊறி
இன்பரசத்தே பருகிப் பலகாலும் ... இன்பச் சாற்றினை நான்
உண்ணும்படி பலமுறை
எந்தனுயிர்க்கு ஆதரவுற்று அருள்வாயே ... என்னுயிரின் மீது
ஆதரவு வைத்து அருள்வாயாக
தம்பிதனக்காக ... தம்பியின் (முருகனின்) பொருட்டாக
வனத்(து) அணைவோனே ... தினைப்புனத்திற்கு வந்தடைவோனே
தந்தை வலத்தால் ... தந்தை சிவனை வலம் செய்ததால்
அருள்கைக் கனியோனே ... கையிலே அருளப்பெற்ற பழத்தை
உடையவனே
அன்பர்தமக் கான ... அன்பர்களுக்கு வேண்டிய
நிலைப் பொருளோனே ... நிலைத்து நிற்கும் பொருளாக
விளங்குபவனே
ஐந்து கரத்து ... ஐந்து கரங்களையும்
ஆனைமுகப் பெருமாளே. ... யானைமுகத்தையும் உடைய
பெருமானே.
=================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

26.3.15

நகைச்சுவை: ஜல்லிக்கட்டிற்கும் கல்யாணத்திற்கும் என்ன வித்தியாசம்?


நகைச்சுவை: ஜல்லிக்கட்டிற்கும் கல்யாணத்திற்கும் என்ன வித்தியாசம்?

கொஞ்சம் சிரிங்க பாஸ்...துரத்தும் நகைச்சுவை. நேற்றையப் பதிவைப்
பலரும் படித்ததால், நகைச்சுவையை இன்றும் தொடர்ந்து
பதிவிட்டுள்ளேன். இன்றும் படித்து மகிழுங்கள்.

பலரும் படித்தது எப்படித் தெரியும்? கூகிள் பளாக்கர் வந்தவர்களின் எண்ணிக்கையைச் சொல்லும் ராசா!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------
1
"நீங்க உங்க மனைவிக்கு ரொம்ப பயந்து நடப்பவரா?"

"ச்சே, ச்சே... நடக்கறப்ப அந்த பயத்தை வெளில காட்டிக்க மாட்டேன்."

#####
2
நோயாளி : டாக்டர் நீங்க ஒரு காரியம்….. செய்யணும்

டாக்டர் : நான் ஆபரேசன் மட்டும்தான் பண்ணுவேன்….. காரியம் எல்லாம்
ஐயர் தான் செய்வார்.

#####
3
நீதிபதி: ஒரே வீட்டை ஏன் பதினைந்து முறை கொள்ளை அடிச்சே?

திருடன்: ஐயா நான் அவங்க பாமிலி திருடன், எப்புவுமே விசுவாசமா இருப்பேன்.

#####
4

1:- “ காதலிக்கும் மனைவிக்கும் என்னங்க வித்தியாசம்?”

கவிஞர்:- “ காதலி கரும்பைப்போன்றவள்
மனைவி இரும்பைப்போன்றவள்”

1: - ???

#####
5
ஆவி1 :விஷம் குடிச்சி சாக போனேன்..விஷத்துல கலப்படம் பிழைச்சிக்கிட்டேன்..

ஆவி2 :அப்புறம் எப்படி செத்த?

ஆவி1 :காப்பாத்த மருந்து கொடுத்தாங்க..மருந்துல கலப்படம் செத்துட்டேன்..

####
6
டீச்சர்: நாம் பேசும் மொழியை ஏன் தாய் மொழி என்று சொல்கிறோம் ?

மாணவி : எப்போதும் அம்மாக்கள் பேசுவதாலேயும், அந்த வாய்ப்பு அப்பாக்களுக்கு குறைவாக கிடைப்பாதலேயும், நாம் பேசும் மொழி தாய் மொழி என்று அறியப்படுகிறது.

#####
7
டாக்டர்-"ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்."

நோயாளி -"ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?"

#####
8
பையன்-அம்மா எதிர் வீட்டு ஆண்டி பேரு என்னம்மா?

அம்மா-விமலாடா..

பையன்-அப்பாவிக்கு இது கூட தெரிய மாட்டேதுங்கும்மா அந்த ஆண்டிய "டார்லிங்"னு கூப்பிடுறார்.

‪#‎செத்தான்டா_சேகரு‬

#####
9
''இந்த ஒரு கீரைக்கட்டை ஐந்து ரூபாய்னு சொல்றீயே ,நேற்றுக்கூட
இரண்டு ரூபாய்னு தானே சொன்னே ?''

''இப்பவும் ஒண்ணும் மோசம் போயிடலே.. .அந்த கீரைக்கட்டு இப்பவும் இருக்கு ,ஒரு ரூபாய்க்கே தர்றேன் ,வாங்கிகிறீங்களா ?

#####
10
வாத்தியார்-டேய் முட்டாளுக்கும் அடி முட்டாளுக்கும் என்ன வித்தியாசம்?

மாணவன்-நாங்க எல்லாரும் முட்டாளுங்க சார் நீங்க எங்களை
அடிக்கிறதால அடி முட்டாள் சார்

####
11
நேத்து உன் மனைவிக்கும், உன் அம்மாவுக்கும் நடந்த சண்டைல,
யாருக்கு பின்னாடி நீ நின்ன?"

"போடா நான் பத்திரமா பீரோ பின்னாடி போய் நின்னுக்கிட்டேன்.
===============================================================
12
பையன் தன் அப்பாவிடம் கேட்டான். “அப்பா… கோபம் என்றால் என்ன, கொலைவெறி என்றால் என்ன…? இந்த ரெண்டுக்கும் எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லையே…!”

அப்பா ஒருகணம் யோசித்தார். “மகனே… நான் உனக்கு இதை விளக்குவதைவிட ஒரு செயல்முறை செய்து காட்டுகிறேன் வா…”
என்று அவனை லேண்ட்லைன் போனிடம் அழைத்துப் போனார்.

“இப்போ உனக்கு கோபம்னா என்னனு காட்டறேன்…” என்றவர் போனை எடுத்து ஏதோ ஒரு எண்ணை டயல் செய்தார். மறுமுனையில் ரிங் போய் எடுத்தவுடன் ஸ்பீக்கர் போனை ஆன் செய்துவிட்டுக் கேட்டார்.

“ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”

மறுமுனையில் அந்த நபர் பொறுமையாய் பதில் சொன்னார். “சார்..
நீங்க தப்பான நம்பரைக் கூப்பிட்டுருக்கீங்க. இங்க ராமசாமினு யாரும் இல்ல…”போன் கட்டானதும் பையன் தன் அப்பாவிடம் கேட்டான்.

“அப்பா… இதுதான் கோபமா…?’. “இல்லை மகனே… கொஞ்சம் பொறு…” என்றவர் மறுபடி அதே எண்ணை ரீடயல் செய்தார்.

ஸ்பீக்கர் போனை மறுபடி ஆன் செய்துவிட்டுக் கேட்டார். “ஹலோ…
 ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”

மறுமுனை இப்போது சற்று உஷ்ணமாகியது. “சார்.. நான் முதல்லயே சொன்னேன். இந்த நம்பர்ல ராமசாமின்னு யாரும் இல்ல. நீங்க
நம்பரைக் கொஞ்சம் சரியா பார்த்து டயல் பண்ணுங்க…”

போன் கட்டானதும் பையன் தன் அப்பாவிடம் கேட்டான். “அப்பா…
இதுதான் கோபமா…?’. “இல்லை மகனே… கொஞ்சம் பொறு…”
என்றவர் மீண்டும் அதே எண்ணை ரீடயல் செய்தார். “ஹலோ…
ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”

இப்போது மறுமுனை சற்று அதிகக் காட்டமாகவே பேசியது.
“ஏங்க… உங்களுக்கு ஒரு தடவ சொன்னாப் புரியாதா… எத்தனை
தடவ இதே நம்பருக்கு போன் பண்ணுவிங்க… தயவுசெஞ்சு நம்பரைச்
சரியாப் பாத்து போன் பண்ணுங்க…” போனின் மறுமுனை டொக்கென்று வைக்கப்பட அப்பா மகனிடம் சொன்னார்.

“மகனே… இப்பத்தான் கோபம்னா என்னனு பாக்கப்போற…” என்றவர் இப்போதும் அதே எண்ணுக்கு ரீடயல் செய்தார். “ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”

மறுமுனை இப்போது ஹை டெஸிபலில் கத்தியது. “டேய்… அறிவு கெட்டவனே… மடப்பயலே ... நீயெல்லாம் சோத்தத் திங்கறியா…
இல்ல வேற ஏதாவதத் திங்கறியா…? முண்டம்....அறிவில்ல உனக்கு…? இன்னொரு தடவ போன் வந்ததுச்சுனு வச்சிக்கோ… அப்புறம்... மவன...
நீ எங்க இருந்தாலும் தேடி வந்து வெட்டுவேன்.... பாத்துக்க… வைடா போனை…!”

மகன் அப்பாவிடம் சொன்னான். “அப்பா… கோபம்னா என்னனு
புரிஞ்சுடுச்சு… கொலைவெறின்னா என்னப்பா….?”

“இப்பக் காட்டறேன்…” என்றவர் மறுபடி அதே எண்ணை ரீடயல் செய்தார்.

ஸ்பீக்கர் போனை ஆன் செய்துவிட்டு ரிங் போய் மறுமுனையில் போனை எடுத்தவுடன்... ... லேசாய்க் குரலை மாற்றிக் கேட்டார்.

“ஹலோ… நான் ராமசாமி பேசறேன். உங்க நம்பர்ல எனக்கு எதாவது
போன் வந்துச்சா…!”😜
============================================
உபரி: 
ஜல்லிக்கட்டும் கல்யாணமும் ஒன்று. வளர்த்தவன் எஸ்கேப்பாகி
விடுவான். அடக்க வந்தவன் மாட்டிக் கொண்டுவிடுவான். உயிருக்கே ஆபத்தாகிவிடும்.
==============================================
எது நன்றாக உள்ளது? அதைச் சொல்லிவிட்டுப் போங்கள்!
=================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

25.3.15

நகைச்சுவை: பெங்களூர் ஸ்பெஷல்!


நகைச்சுவை: பெங்களூர் ஸ்பெஷல்!

நீங்கள் பெங்களூர் வாசியா? அல்லது பெங்களூரை சொந்த ஊராகக் கொண்டவரா? அப்படியென்றால் மேலே படிக்க வேண்டாம். பதிவை விட்டு விலகிக் கொள்வது நல்லது. நம் இருவருக்குமே நல்லது!

நகைச்சுவைகளை நகைச்சுவைக் கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்க வேண்டும். இது வேப்பிலை மட்டும் வாழை இலையோடு வருபவர்களுக்காக வலியுறுத்திச் சொல்லப்படுகிறது.
--------------------------------------
1. பெங்களூரில்  சும்மானாச்சிக்கும் ஒரு கல்லை எறிந்தீர்கள் என்றால் இரண்டுதான் சான்ஸ்! ஒன்று அது நாய் ஒன்றைத் தாக்கும் அல்லது ஒரு சாப்ட்வேர் இஞ்சினியரைத் தாக்கும். நாய்க்குக் கழுத்தில் பட்டை இருக்கும் அல்லது இல்லாமலும் இருக்கும், ஆனால் சாப்ட்வேர் இஞ்சினியருக்குக் கண்டிப்பாகக் கழுத்தில் பட்டை (strap) இருக்கும்

2. இந்தியாவில் வாகனங்களை நாம் இடது (Left) பக்கத்தில்தான் ஓட்டுவோம். ஆனால் பெங்களூரில் we drive on what is left of the road

3. பெங்களூரின் தெரு விபத்துக்களுக்கான முக்கிய காரணம் என்ன? போக்குவரத்து விதிப்படி வண்டி ஓட்டுவதுதான் காரணமாக இருக்கும்

4. பெங்களூரில் ஒரு ஆசாமி வாடகைக்கு வீடு தேடி அலைகின்றார். வயதான வீட்டுக்கார அம்மணியைச் சந்திக்கிறார். அந்த அம்மணி கட்டுப் பாட்டில் நிறைய வாடகை வீடுகள் உள்ளன. இருவருக்கும் நடந்த உரையாடலின் சுருக்கம் கீழே உள்ளது.

”மகனே, எங்கே நீ வேலை பார்க்கிறாய்?”

”இன்ஃபோஸிஸ் நிறுவனத்தில் அம்மா”

”ஓ அந்த பஸ் கம்பெனியிலா? சாரி, நான் நல்லதொரு ஐ.டி கம்பெனி ஊழியருக்குத்தான் வாடகைக்கு வீட்டைக் கொடுப்பதாக உள்ளேன்.”
It would appear that Infosys operates more buses than BMTC in Bangalore"

பெங்களூரில் தங்கும் விடுதிகள்தான் கொழிக்கும் பிஸினஸ். ஐ.டி நிறுவனங்களுக்கு இரண்டாவது இடம்தான்
Bangalore, where PG(Paying Guest) is the first business and IT, the second.

* When someone says Its raining in Bangalore, be sure to ask them which area,which lane 
and  which road.

* If a Bangalorean stops at a traffic light, others behind him stop too because The others
conclude that he has spotted a policeman that they themselves have not.

*Bangalore is the only city where distance is measured in units of time.

*Rickhsaw driver, grocery seller  and common shop keeper thinks that you earn at least 1 lakh p/month if you are in IT sector.

* Out of every 100 software engineers in Bangalore, 90 are utterly frustrated and 
rest have a gf/bf.

* Bus drivers use  horns instead of  brakes

* I quote : Bangalore: The City where more people know Language C than kannada".

* Universal answer in Bangalore is  "Adjust maadi"
சரி பண்ணிக்கிட்டு போப்பா!

சொந்த சரக்கல்ல! வாட்ஸப்பில் வந்தது. முடிந்தவரை சுவைகெடாமல் மொழி மாற்றம் செய்து கொடுத்துள்ளேன்

அன்புடன்
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

24.3.15

உலகத்தை நமக்கேற்ப நிர்ப்பந்தப்படுத்த முடியுமா?


உலகத்தை நமக்கேற்ப நிர்ப்பந்தப்படுத்த முடியுமா?

முடியாது.

எதிர்த்துப் போராடினால் என்ன ஆகும்?

உலகத்தை நமக்கேற்ப நிர்ப்பந்தப்படுத்த முடியாது. அதை எதிர்த்துப் போராடும்போது நாம் வெறுப்படைய நேரிடும் என்கிறார் ஒரு
சிந்தனையாளர். அத்துடன் எந்தவொரு சூழ்நிலையிலும் நாம்
ஆனந்தமாக இருக்க முடியும் என்றும் சொல்கிறார் அவர். ஓஷோ’
தான் அவர். அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம் வாருங்கள்.
----------------------------------------------------------
அந்தக் கிராமத்தின் ஓய்வு விடுதியில், ஒரு நாள் இரவு ஓஷோவும் மாநில அமைச்சர் ஒருவரும் அடுத்தடுத்த அறைகளில் தங்கி இருந்தனர். இரவு முழுவதும் முப்பது அல்லது நாற்பது நாய்கள் அந்த விடுதியைச் சுற்றி குரைத்துக் கொண்டே இருந்தன. அமைச்சரால் தூங்கவே முடியவில்லை.

அவர், அன்று காலை முழுவதும் பயணம் செய்திருந்தார்.மறுநாளும் அலைச்சல் இருக்கிறது. அதை நினைக்க நினைக்க அமைச்சருக்குக்
கோபம் அதிகமானது. நாய்களோ வெறித் தனமாகக் குரைத்து, இரவின் அமைதியைக் கெடுத்தன. ஆனால், இத்தனைக்கும் மத்தியில் ஓஷோ
அடுத்த அறையில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார்.

ஓஷோவை எழுப்பிய அமைச்சர், ''என்ன மனிதர் நீங்கள்... இவ்வளவு சத்தத்துக்கு மத்தியில் உங்களால் எப்படி உறங்க முடிகிறது?'' என்று புலம்பினார்.

ஓஷோ, தனது வழக்கமான கிண்டலுடன் கூறினார்: ''அந்த நாய்கள், உங்களுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ இங்கு கூடவில்லை; கோஷமிடவில்லை! பாவம், அந்த நாய்களுக்கு... இங்கு ஒரு மந்திரி தங்கி இருப்பது தெரியாது. அவை, பத்திரிகை படிப்பதில்லை. அவற்றுக்கு அறிவும் கிடையாது. அந்த நாய்களுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவை, தங்களுக்கே உரிய குரைக்கும் வேலையைப் பார்க்கின்றன. நீங்கள், தூங்குகிற வேலையைப் பாருங்கள்!'' என்றார்.

''நாய்கள் இப்படி ஓயாமல் குரைத்தால், நான் எப்படி தூங்க முடியும்?''
என்றார் அமைச்சர்.

உடனே ஓஷோ, ''நீங்கள், அவை குரைப்பதை எதிர்த்துப் போராடுகிறீர்கள். அப்படிப் போராடாதீர்கள். பிரச்னை குரைப்பொலி அல்ல... உங்கள் எதிர்ப்பு உணர்வு. நீங்கள், சத்தத்துக்கு எதிராக இருக்கிறீர்கள்;இந்த நாய்கள் குரைப்பதை நிறுத்தினால்தான் தூங்க முடியும் என்று ஒரு நிபந்தனை ஏற்படுத்தி விட்டீர்கள். நாய்கள் உங்களது நிபந்தனையைக் கவனிக்கப்
போவது இல்லை. நீங்களும் உங்கள் நிபந்தனையை விலக்கப் போவது இல்லை. ஆனால், நிபந்தனையை விலக்கினால் மட்டுமே நிம்மதி பெற முடியும். நடைமுறைக்குச் சாத்தியமானதும் அதுதான்! நாய்களின்
குரைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். இந்த இரவிலும் எவ்வளவு சக்தியுடன் அவை குரைக்கின்றன...பார்த்தீர்களா? ஏற்பு உணர்ச்சியுடன் கவனித்தால், குரைப்புச் சத்தமும் ஒருவகை மந்திரம்தான்!''என்றார் ஓஷோ.

'உதவாக்கரை யோசனை!' என்று மனதுக்குள் பழித்தபடி போனார் மந்திரி. ஆனால் காலையில், மிகுந்த மகிழ்ச்சியுடன் வந்து ஓஷோவைச் சந்தித்தார் அமைச்சர்!

''ஆச்சரியம்தான்! எனது எதிர்ப்பு உணர்ச்சியை விலக்கிக் கொண்டு, நாய்கள் குரைப்பதைக் கவனித்தேன். ஆழ்ந்து ரசிக்கவும் தொடங்கினேன். அப்படியே உறங்கிப் போனேன்'' என்றார் அமைச்சர்.

ஓஷோ நமக்குச் சொல்கிறார்: ''இதை, நீ ஞாபகத்தில் வைத்துக் கொள். உன்னைச் சுற்றி இருப்பவற்றால் நீ எரிச்சல் அடைந்தால், உன் முகத்தை உள்முகமாகத் திருப்பு. எரிச்சலுக்கான காரணம் நீயாகத்தான் இருப்பாய். உனது எதிர்பார்ப்பு அல்லது ஆசை வேறாக இருந்திருக்கும். அல்லது ஏதோ ஒரு நிபந்தனையை உனக்குள் நீ விதித்திருப்பாய். அதுதான் உனது எரிச்சலுக்குக் காரணம். உலகத்தை நமக்கேற்ப நிர்ப்பந்தப்படுத்த முடியாது. அதை எதிர்த்துப் போராடும்போது நீ வெறுப்படைகிறாய்'' என்கிறார்.

ஆகவே சுற்றியிருப்பதை, அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
-----------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

23.3.15

மாறியது உலகம்; மாற்றியது யாரோ?


வாட்ஸ் அப்பில் விசு அய்யர் அனுப்பியது. நன்றாக இருந்ததால் இங்கே பதிவிட்டுள்ளேன். அனைவரும் படித்துப்  பாருங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
=================================================
எங்கே? எங்கே? எங்கே?

இயற்கை எங்கே?

தென்னை ஓலை விசிறி எங்கே?

பனையோலை விசிறி எங்கே?

பல்லாங்குழி எங்கே?

கிச்சுகிச்சு தாம்பாளம் எங்கே?

தெல்லு விளையாட்டு எங்கே?

கோபிபிஸ் விளையாட்டு எங்கே?

சாக்கு பந்தயம் எங்கே?

கில்லி எங்கே?

கும்மி எங்கே?

கோலாட்டம் எங்கே?

திருடன் போலீஸ் எங்கே?

ஆலமர விழுது ஊஞ்சல் எங்கே?

மரப்பாச்சி கல்யாணம் எங்கே?

ஊனாங்கொடி ரெயில் எங்கே?

கம்பர்கட் மிட்டாய் எங்கே?

குச்சி மிட்டாய் எங்கே?

குருவி ரொட்டி எங்கே?

இஞ்சி மரப்பா எங்கே?

கோலி குண்டு எங்கே?

கோலி சோடா எங்கே?

பல் துலக்க ஆலங்குச்சி  எங்கே?

கரிப்பழம் எங்கே?

கள்ளிப்பழம் எங்கே?

இளுவான் எங்கே?

எலந்தை பழம் எங்கே?

சீம்பால் எங்கே?

ரோசம் வளர்த்த கொங்க மாட்டுப்பால் எங்கே?

பனம் பழம் எங்கே?

சூரிப்பழம் எங்கே?

இளுவான் எங்கே?

பழைய சோறு எங்கே?

நுங்கு வண்டி எங்கே?

பூவரசன் பீப்பி எங்கே?

கைகளில் சுற்றிய பம்பரங்கள் எங்கே?

நடை பழக்கிய நடை வண்டி எங்கே ?

அரைஞான் கயிறு எங்கே?

அன்பு எங்கே?

பண்பு எங்கே?

பாசம் எங்கே?

நேசம் எங்கே?

மரியாதை எங்கே?

மருதாணி எங்கே?

சாஸ்திரம் எங்கே?

சம்பரதாயம் எங்கே?

விரதங்கள் எங்கே ?

மாட்டு வண்டி எங்கே?

கூட்டு வண்டி எங்கே?

ஆழ உழுத எருதுகள் எங்கே?

செக்கிழுத்த காளைகள் எங்கே?

எருமை மாடுகள் எங்கே?

பொதி சுமந்த கழுதைகள் எங்கே?

பொன் வண்டு எங்கே?

சிட்டுக்குருவி எங்கே?

குயில் பாடும் பாட்டு  எங்கே?

குரங்கு பெடல் எங்கே?

அரிக்கேன் விளக்கு எங்கே?

விவசாயம் எங்கே?

விளை நிலம் எங்கே?

ஏர்கலப்பை எங்கே?

மண் வெட்டி எங்கே?

மண்புழு எங்கே?

வெட்டுமண் சுமந்த பின்னல் கூடை எங்கே ?

பனை ஓலை குடிசைகள்  எங்கே ?

தூக்கனாங் குருவி கூடுகள் எங்கே ?

குளங்களில் குளித்த கோவணங்கள் எங்கே?

அந்த குளங்களும் எங்கே?

தேகம் வளர்த்த சிறுதானியம் எங்கே?

அம்மிக்கல் எங்கே?

ஆட்டுக்கல் எங்கே?

மோர் சிலுப்பி எங்கே ?

கால்கிலோ கடுக்கன்  சுமந்த காதுகள் எங்கே ?

நல்லது கெட்டது சுட்டிக்காட்டும் பெரியவர்கள்  எங்கே?

வெத்திலை பாக்கு பரிசங்கள் எங்கே ?

தோளிலும் இடுப்பிலும் சுமந்த பருத்தி துண்டு எங்கே ?

பிள்ளைகளை சுமந்த அம்மாக்களும் எங்கே ?

தாய்பாலைத் தரமாய் கொடுத்த தாய்மை எங்கே ?

மங்கலங்கள் தந்த  மஞ்சள் பை எங்கே ?

மாராப்பு சேலை அணிந்த பாட்டிகள் எங்கே?

இடுப்பை சுற்றி சொருகிய சுருக்கு பணப்பையும் எங்கே?

தாவணி அணிந்த இளசுகள் எங்கே ?

சுத்தமான நீரும்  எங்கே ?

மாசு இல்லாத காற்று எங்கே ?

நஞ்சில்லாத காய்கறி எங்கே?

பாரம்பரிய நெல் ரகங்களும்  எங்கே?

எல்லாவற்றையும் விட நம் முன்னோர்கள் வாழ்ந்த முழு  ஆயுள் நமக்கு  எங்கே?

இதற்கு பாமரனாலும், மெத்தபடித்தவனாலும், விஞ்ஞானியாலும், ஏன் கணினியாலும் கூட பதில் சொல்ல முடியாது.

ஏனென்றால் நிம்மதியான வாழ்வை மறந்து  பணம் எனும் காகித்தை தேடி இந்த உலகம் ஓடிக்கொண்டு இருக்கிறது.

அதுசரி அடுத்த தலைமுறையை பற்றி  சிந்திக்க நமக்கு  நேரம் தான் எங்கே? எங்கே?

Sent by Visu Ayyar - Chennai
=========================================================

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

20.3.15

வல்லக் குறிஞ்சி நிலத்தில் வாழ்கின்றவன் அவன்!


வல்லக் குறிஞ்சி நிலத்தில் வாழ்கின்றவன் அவன்!

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை 'பத்மஸ்ரீ' சீர்காழி கோவிந்தராஜன் பாடிய’,  'உள்ளமெனும் கோயிலிலே' என்னும் பாடல் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
------------------------------------------
முருகா ... முருகா ... முருகா ...

உள்ளமெனும் கோயிலிலே, உறைகின்றாய் குமரா
உள்ளமெனும் கோயிலிலே
வள்ளியம்மைக் கணவா, வடிவேலா முருகா 
(உள்ளமெனும் கோயிலிலே)

தெள்ளமுதே தேனே ...
தெள்ளமுதே தேனே, திகட்டாத தீந்தமிழே 
சொல்லற்கரிய இன்பச் சுவையே 
சுப்ரமண்யனே
(உள்ளமெனும் கோயிலிலே)

வல்லக் குறிஞ்சி நிலம், வாழ்பவனே கந்தா
வளர் இமையோன் தந்த உமையவள் மைந்தா
அல்லும் பகலும் உன்னை எண்ணிடும் வரந்தா 
அடியனுக்கு உனது ஞானப் பதந்தா 

அடியார் தொழும் படியாய் ... இளம் வடிவத்தோடெழுந்து
வடியாக் கடலலைவாய் ... தனில் துடியாய் நிற்பவனே
அமைவாய் மிகு கனிவாய் ... முதிர் பழமாய் பழநியிலே
அருளாய் பெரும் பொருளாய் ... மன இருள் நீக்கிடும் முருகா
அறுமுகனே ... குருபரனே ... சரவணனே ... சண்முகனே
அனுதினமும் ... உனைதொழ ஓர் .... ஆலயமும் ... வேண்டிலனே
அகத்தினிலே மிகத்தெளிவாய் ... அமர்ந்துறையும் அன்பரசே
இகத்தினிலே இன்பமெல்லாம் ... என்னுயிரே நீயன்றோ

என்னுயிரே நீயன்றோ ...
என்னுயிரே நீயன்றோ ... .
========================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

19.3.15

நீங்கள் ஆசைப்பட்டது நடக்கப் போகிறது!


நீங்கள் ஆசைப்பட்டது நடக்கப் போகிறது!

வகுப்பறையில் எழுதத் துவங்கி எட்டு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. முதல் 5 ஆண்டுகள் எழுதிய ஜோதிடப் பாடங்களைத் தொகுத்து, படிப்பதற்குத் தோதாக வரிசைப் படுத்தி, புத்தகங்களாகக் கொண்டு வர கடந்த 3 ஆண்டுகளாக முயற்சி செய்கிறேன். அதில் சில தடங்கல்கள் ஏற்பட்டன. ஓயாத பணிச்சுமை. மற்றும் பத்திரிக்கைகளுக்கான ஆக்கங்கள் அதில் வந்த கதைகளைத் தொகுத்துப் புத்தகங்களாக வெளியிடும் வேலைகள் என்று விதம் விதமான, தவிர்க்க முடியாத பணிகள்.

ஜோதிடப் பாடங்கள் மொத்தம் 3,000 பக்கங்கள். அவற்றை 6  பாகங்களாக வெளியிடலாம் என்று உள்ளேன்.

அடிப்படைப் பாடங்கள், மற்றும் அஷ்டகவர்க்கப்பாடங்களை முதலில்
4 தொகுதிகளாக வெளியிட உள்ளேன்.

பதிப்பிற்கான type setting வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அச்சுப்பிழைகள் இன்றி அவற்றைச் சரி செய்வதற்கும் ஏற்பாடு செய்துள்ளேன்.அச்சிட்டு புத்தகமாகக் கொண்டு வரும் பணியை அச்சுத் தொழிலில் அனுபவம் மிக்க நண்பர் ஒருவர் செய்து தர உள்ளார்.

இறையருளால், முதல் இரண்டு தொகுதிகள் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் தயாராகிவிடும். 6.6.2015ற்குள் உங்களுக்குப் புத்தகங்கள்  கிடைத்துவிடும்.

குறைந்த அளவில்தான் புத்தகங்களை அச்சிட உள்ளேன். எத்தனை புத்தகங்கள் அச்சிட வேண்டும் என்பது எனக்குத் தெரிய வேண்டும். தெரிந்தால்தான் அதற்குத் தகுந்தாற்போல அச்சிட முடியும்.

வாத்தியாரின் ஜோதிட நூல்கள்!

1. இந்தியாவில் இருப்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை. கூரியர் சர்வீசில் புத்தகங்களை அனுப்பும் நோக்கில் இந்தக் கட்டுப்பாடு.

2. வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு இந்தியத் தொடர்பும், இந்திய முகவரியும் இருந்தால் மட்டுமே புத்தகங்கள் கிடைக்கும்.

3. உங்கள் பிரதிகளுக்குப் பதிவு செய்து கொள்ளுங்கள். பதிவு செய்ய வேண்டிய மின்னஞ்சல் முகவரி umayalpathippagam@gmail.com

4. கொடுக்கப்பட்டுள்ள அந்த முகவரிக்கு மட்டுமே கடிதம் எழுதுங்கள். எழுதும்போது உங்களின் முழுப் பெயர், முழு முகவரி (Full postal address)
மற்றும் அலை பேசி எண் ஆகியவற்றைத் தெரியப் படுத்துங்கள்.

5. பதிவுக் கட்டணம் ரூபாய் 200:00 (இரு நூறு ரூபாய்கள்: மட்டும்). இந்தப் பணம் புத்தக விலை மற்றும் கூரியர் கட்டணங்களில் கழித்துக் கொள்ளப்படும். வங்கிக் கணக்கு விபரம் மின்னஞ்சலில் தெரிவிக்கப்படும்

6. புத்தகங்களின் அளவு 1/8 size. பக்கங்களின் எண்ணிக்கையும், விலையும் புத்தகங்கள் தயாராகி வந்தவுடன் உங்களுக்குத் தெரியப் படுத்தப்படும். அதற்கான பணத்தை நீங்கள் அப்போது செலுத்தினால் போதும்.. Books will be in reasonable and affordable price

7.வெளிநாட்டுக் கண்மணிகளுக்கு என்ன செய்யலாம் என்பதைத் தபால் துறையில் முழுமையாக விசாரித்துவிட்டுப் பிறகு அறிவிக்கிறேன்

அன்புடன்,
வாத்தியார்
----------------------------------------------------------------
வாத்தியாரின் புதிய மற்றும் 11வது புத்தகம்


படத்தில் இருப்பது எங்கள் தேவகோட்டை வீட்டின் முகப்புப் பகுதி. படத்தில் இருக்கும் அன்பர் என் தந்தையார்

இதற்கு முன்பாக வந்த புத்தகங்களின் விபரம்


=================================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

18.3.15

அத்தனை பேர்களும் எழுந்து நின்று ஏன் கை தட்டினார்கள்?


அத்தனை பேர்களும் எழுந்து நின்று ஏன் கை தட்டினார்கள்?

Can anyone say the difference between 'Complete' and 'Finished'?

No dictionary has ever been able to define the difference between 'Complete' and 'Finished.'

However, in a linguistic conference, held in London England, Samsundar Balgobin, a Guyanese, was the clever winner.

His final challenge was this. Some say there is no difference between 'Complete' and 'Finished.' Please explain the difference in a way that is easy to understand.

His response was: When you marry the right woman, you are 'Complete.' If you marry the wrong woman, you are 'Finished.' And, when the right woman catches you with the wrong woman, you are 'Completely Finished.'

His answer received a five minute standing ovation.

தனித்தமிழ் ஆர்வலர்கள் பொறுத்துக் கொள்ளுங்கள்! இதை மொழிமாற்றம் செய்தால் அதன் இயற்கைச் சுவை இருக்காது

அன்புடன்
வாத்தியார்
===========================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

17.3.15

நகைச்சுவை: பணத்தின் மதிப்பும் உங்கள் மதிப்பும்


நகைச்சுவை: பணத்தின் மதிப்பும் உங்கள் மதிப்பும்

எல்லாமுமே நகைச்சுவைதான். நகைச்சுவையாக மட்டும் பாருங்கள். வேறு கற்பனை, விவகாரம், வாதம் வேண்டாம்!

1.ஆண்களின் கவனத்திற்கு (மனைவியுடன் பொது இடங்களுக்கு செல்லும்போது கவனமாக இருங்கள்)

ஒரு கணவனும் மனைவியும் லிப்ட்டில் 10 வது மாடியிலிருந்து கீழே வந்து் கொண்டிருக்கிறார்கள். 5வது மாடியில் ழகான இளம்பெண் ஒருத்தி லிப்ட்டில் ஏறி அந்த கணவன் பக்கத்தில் நிற்க, அவன் அவளின் அழகில் மயங்கி ஜொள் விடுகிறான். சிறிது நேரத்துக்குப்பின் அவள் இவனது கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு "இனி இப்படி செய்தால் செருப்பு பிஞ்சிரும்" னு சொல்லிட்டு அவனிடமிருந் விலகி நிற்கிறாள். இவனுக்கோ தன் மனைவி முன்னிலையில் அடிவாங்கிய அவமானம். லிப்ட்டில் இருந்து இறங்கி வெகுநேரமாகியும் மனைவியிடம் பேச வெட்கமாகி மெளனமாக இருந்தான். வீட்டிற்கு நடந்தார்கள்.

மனைவி : ஏங்க அதையே நினைச்சிகிட்டு. விடுங்க. ஏதாவது பேசிட்டு வாங்க.

கணவன் : இல்லடி, நான் லிப்ட்டில...

மனைவி : அட, அதைதான் விடுங்கன்னு சொன்னேன். நீங்க ஜொள் விடுறத பொறுக்காம நான்தான் அவ இடுப்பைக் கிள்ளினேன்.

கணவன் : கிர்ர்ர்...
--------------------------------
2. சிலரை சந்தோஷப்படுத்த ரொம்ப சிரமப்பட தேவையில்லை. நம்ப கஷ்டத்தைச் சொன்னாலே போதும்.

3. வீட்ல ஃப்ரிட்ஜ் வாங்கின பிறகு, தினமும் நான்கு வகையான சட்னி கிடைக்குது. காலைல வச்சது, நேற்று வச்சது, முந்தாநாள் வச்சது...

4. கொஞ்சம் படித்தால் கிராமத்தை விட்டு வெளியேறுகிறோம். நிறையப்படித்தால் சொந்த நாட்டை விட்டே வெளியேறுகிறோம்.

5. நாய் நம்மளை இழுத்துக்கிட்டுப்போனா அது வாக்கிங், தொரத்திக்கிட்டு வந்தா அது ஜாக்கிங்

6. பணத்தின் மதிப்பு தெரிய வேண்டுமென்றால் செலவு செய்யுங்க . உங்களின் மதிப்பு தெரியவேண்டுமானால் கடன் கேளுங்க

7. ஆட்டோகாரனுக்கு பக்கம் கூட தூரம்தான்; ரியல் எஸ்டேட்காரனுக்கு தூரம் கூட பக்கம்தான்,
---------------------------------
8
''மச்சான்... எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்! எதுக்கெடுத்தாலும், 'அதெல்லாம் அந்தக் காலம். அப்படீன்னு சிலர் சொல்லிட்டே இருக்காங்களே...’ அது ஏன்டா?''

''அவங்களோட வாழ்க்கை முறையைப் பற்றி சொல்றாங்கடா?''

''எனக்குப் புரியுற மாதிரி நச்சுன்னு நாலே வரியில சொல்லுடா.''

''வீட்டுக்கு ஒருத்தர் சம்பாதிச்சு டாக்டருக்கு படிக்க வெச்சது அந்தக் காலம். வீட்டுக்கு ரெண்டு பேர் சம்பாதிச்சு எல்.கே.ஜி படிக்க வெக்கிறது இந்தக் காலம். இப்போ புரியுதா?''

''இப்போ புரியுது மச்சான்!'
-----------------------------------------------
9
ஒரு குட்டி கதை!

கடவுள்: கழுதையைப் படைத்து அதனிடம் சொன்னார். "நீ கழுதையாகப் பிறந்து, நாள் முழுவதும் பொதி சுமப்பாய். உனக்கு 😰சிந்திக்கும் திறனே கிடையாது. புல்லைத் தின்று 50 ஆண்டுகள் வாழ்வாய்."

கழுதை: கழுதையாகப் பிறந்து 50 ஆண்டுகள் வாழ விருப்பமில்லை. 20 ஆண்டுகளே போதும்.

கடவுள்: அப்படியே ஆகட்டும்.

கடவுள்: நாயைப் படைத்து அதனிடம் சொன்னார். "நீ 🚶மனிதனின் வீட்டை பாதுகாத்து அவனுக்கு நல்ல நண்பனாய் இருப்பாய். மனிதன் தரும்
மிச்ச மீதிகளை உண்டு 30 ஆண்டுகள் வாழ்வாய்."

நாய்: 30 ஆண்டுகள் எனக்கு அதிகம். 15 ஆண்டுகளே போதும்.

கடவுள்: அப்படியே ஆகட்டும்.

கடவுள்: குரங்கைப் படைத்து அதனிடம் சொன்னார். "நீ மரங்களில் கிளைக்கு கிளை தாவி குழந்தைகளை மகிழ்விப்பாய். 20 ஆண்டுகள் உயிர் வாழ்வாய்."

குரங்கு: எனக்கு 10 வருடங்களே போதும் சாமி.

கடவுள்: அப்படியே ஆகட்டும்.

கடவுள்: மனிதனைப் படைத்தார். "நீ சிந்திக்கும் ஆற்றலுடன் பிறப்பாய். உன் அறிவைப் பயன்படுத்தி எல்லா உயிர்களையும் உன் கட்டுப் பாட்டுக்குள்
கொண்டுவருவாய். 20 ஆண்டுகள் உயிர் வாழ்வாய்."

மனிதன்: "சாமி. 20 வருடம் எனக்கு ரொம்ப குறைவு. கழுதை வேண்டாமென்று சொன்ன 30 வருடங்களையும், நாயின் 15 வருடங்களையும், குரங்கின் 10 வருடங்களையும் எனக்குத் தாருங்கள்."

கடவுள்: அப்படியே ஆகட்டும்.

அன்றிலிருந்து மனிதன் 20 வருடங்கள் மனிதனாகவும், பின் திருமணம் செய்து 30 ஆண்டுகள் கழுதையைப் போல குடும்பப் பாரம் சுமந்தும், குழந்தைகள் வளர்ந்த பின் 15 ஆண்டுகள் நாயைப் போல வீட்டைப் பாதுகாத்தும், கடைசிப் பத்து வருடங்கள் குரங்கைப் போல தன் ஒவ்வொரு மகன் அல்லது மகள் வீடு சென்று பேரக் குழந்தைகளை மகிழ்விக்கிறான்...!!!
======================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

16.3.15

மகிழ்ச்சிக்கான பாதை எது?

மகிழ்ச்சிக்கான பாதை எது?

வெற்றியைத் தேட ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. சந்தோஷத்தை எங்கே போய்த் தேடுவது? அது உள்ளுக்குள்ளிருந்து மலரவேண்டிய விஷயம் இல்லையா? நாமாக நம் வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக் கொள்ள வழி(கள்) ஏதேனும் உண்டா?

இந்த கேள்விகளை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு பிரபலமான புத்தகம் “The way to happiness ” இங்கிலாந்தைச் சேர்ந்த ரான் ஹப்பார்ட் என்பவர் எழுதிய இந்தப் புத்தகம் இன்றுவரை பல லட்சம் பிரதிகள் வெளியாகியுள்ளது. 70 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

“The way to happiness ‘ புத்தகத்தின் ஸ்பெஷாலிட்டி, இதில் விரிவாக்கப்பட்டுள்ள 21 வழிமுறைகள். “இவற்றை உணர்ந்து பின்பற்றத் தொடங்குவதுதான் உண்மையான சந்தோஷத்துக்கான அடித்தளம்’ என்று ஆசிரியர் ரான் ஹப்பார்ட் அடித்துச் சொல்கிறார்.

சந்தோஷத்தின் வழி’யாக அவர் முன்வைக்கும் அந்த எளிய சூத்திரங்கள், இங்கே சுருக்கமாக:

1. முதலில், உடம்பைப் பார்த்துக்கோங்க, சுவர் இருந்தால்தான் சித்திரம்.

2. உடனடி சந்தோஷத்தை மட்டும் பார்க்காதீர்கள், பின்விளைவுகளை யோசித்து மனசைக் கட்டுப்படுத்தப் பழகுங்கள்.

3. உங்களுடைய உறவுகளுக்கு, நண்பர்களுக்கு, பிஸினஸ் கூட்டாளிகளுக்கு விசுவாசமாக இருங்கள்.

4. உங்கள் வயசு எதுவானாலும் பரவாயில்லை, குழந்தைகளோடு நேரம் செலவிடுங்கள்.

5. பெற்றோரை மதியுங்கள். அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யுங்கள்.

6. “அடுத்தவர்களுக்கு நான் ஒரு நல்ல முன் உதாரணமாகத் திகழ்வேன்’ என்று உங்களுக்கு நீங்களே உறுதி சொல்லிக் கொள்ளுங்கள்.

7. உண்மை எத்தனை கசப்பானாலும் பரவாயில்லை, ஏற்றுக்கொள்ளுங்கள்.

8. யாரையும் கொல்லாதீர்கள், வார்த்தைகளால்கூட!

9. சட்டவிரோதமான எதையும் செய்யாதீர்கள், அதனால் எத்தனை லாபம் வந்தாலும் சரி!

10. பாரபட்சமின்றி சமூகத்தில் ஒரு சமநிலை வருவதற்கு உங்களால் என்ன செய்ய முடியும் என்று யோசிக்க ஆரம்பியுங்கள்.

11. ஒருவர் நல்லது செய்யும் போது, ஏதாவது சொல்லி அவரது முயற்சியைக் கெடுத்துவிடாதீர்கள்.

12. உங்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது உங்களுடைய பொறுப்பு.

13. திருடாதீர்கள்.

14. எல்லோருடைய நம்பிக்கைக்கும் உரியவராக இருங்கள்.

15. சொன்ன வாக்கை மீறாதீர்கள்.

16. “சும்மா இருப்பதே சுகம்’ என்று யாராவது சொன்னால் நம்பாதீர்கள்.

17. கல்வி என்பது முடிவற்றது, எந்நேரமும் மாணவராகவே வாழவேண்டும்!

18. அடுத்தவர்களுடைய மத உணர்வுகளை மதியுங்கள், கேலி செய்யாதீர்கள்.

19. மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்யக்கூடாது என்று நினைக்கிறீர்களோ, அதை நீங்களும் அவர்களுக்குச் செய்யாதீர்கள்.

20. அதேபோல், அவர்கள் உங்களை எப்படி நடத்தவேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அப்படியே நீங்கள் அவர்களை நடத்துங்கள்.

21. இந்த உலகம் வளங்களால் நிறைந்தது, அள்ளி எடுத்துக்கொண்டு முன்னேறுங்கள்.

படித்ததில் பிடித்தது. அறியத் தந்துள்ளேன்

அன்புடன்,
வாத்தியார்
====================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

13.3.15

முதல் வேலை என்ன வேலை?


முதல் வேலை என்ன வேலை?

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகப் பெருமான் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
-----------------------------------
முருகா உனக்கு புகழ் மாலை
சூட்டுவதே தினம் முதல் வேலை
கந்தா உன் திரு வடிவேலை
வணங்கிடத் தானே அதிகாலை
(முருகா ... )

தூவிடக் குறிஞ்சி மலருண்டு
தேன் தினையோடு கனியுண்டு 
பாதத்தில் வைத்திட மனம் உண்டு
பூஜையை ஏற்பாய் நீ வந்து
(முருகா ... )

ஆலயம் என்பதுன் நிழல்தானே
அணையா தீபம் உன் அருள் தானே 
காலமும் துணையாய் நீ தானே
கருணையைப் பொழிவதுன் விழிதானே
(முருகா ... )

தேவயானை ஒருபுறமும்
மான்மகள் வள்ளி மறுபுறமும்
தோன்றிட நீ தரும் திருக்காட்சி
மங்கலம் வழங்கிடும் அருட்காட்சி
(முருகா ... )

கந்தா உன் திரு வடிவேலை
வணங்கிடத் தானே அதிகாலை

முருகா முருகா முருகா.
========================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

12.3.15

கவிதை: நதியில் விளையாடும் தென்றல் அடுத்து என்ன செய்யும்?


கவிதை: நதியில் விளையாடும் தென்றல் அடுத்து என்ன செய்யும்?

கவியரசர் கண்ணதாசன் பாடல்கள் 

தாலாட்டுப் பாட்டு!

இதுவரை கவியரசர் அவர்கள் எழுதிய காதல், தத்துவம், சொல்விளையாட்டுப் பாடல்கள் என்று பல பாடல்களைப் பார்த்துக் கொண்டு வந்தோம். இன்று ஒரு மாறுதலுக்காகத் தாலாட்டுப் பாடல்களைப் பார்ப்போம். சுழற்சி முறையில் அந்த வகைப் பாடல்களும் மீண்டும் வரும்!

காதல் பாடல்களை எந்த முனைப்புடன் எழுதினாரோ அதே முனைப்புடன் கவியரசர் அவர்கள் பல அற்புதமான தாலாட்டுப் பாடல்களையும் எழுதியுள்ளார்.

கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் கவியரசரின் சமகாலப் பாடலாசிரியர். காதல் பாடல்களையும் தத்துவப் பாடல்களையும் அனாயசமாக எழுதியவர் அவர். ஆனால் தாலாட்டுப் பாடல்கள் என்றால், கவியரசரிடம் எழுதி வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறிவிடுவாராம். அது கண்ணதாசனுக்குதான் சிறப்பாக வரும் என்றும் மனம் உவந்து சொல்லிவிடுவராம்.

கவியரசர் அவர்கள் எழுதிய இரண்டு தாலாட்டுப் பாடல்களை இன்று பதிவிட்டிருக்கின்றேன்

படித்து மகிழுங்கள்
--------------------------------------
"முத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்த முத்தல்லவோ
கட்டான மலரல்லவோ கடவுள் தந்த பொருளல்லவோ
(முத்தான)

சின்னஞ்சிறு சிறகு கொண்ட சிங்காரச் சிட்டல்லவோ
செம்மாதுளை பிளந்து சிரித்து வரும் சிரிப்பல்லவோ
மாவடு கண்ணல்லவோ மைனாவின் மொழியல்லவோ
பூவின் மணமல்லவோ பொன் போன்ற முகமல்லவோ
(முத்தான)

காணாத மனிதரையும் காண வைக்கும் சேயல்லவோ
பேசாத தெய்வத்தையும் பேச வைக்கும் தாயல்லவோ
தாழங்குடையல்லவோ தள்ளாடும் நடையல்லவோ
மாலைப் பொழுதல்லவோ வண்டாடும் செண்டல்லவோ
(முத்தான)"

படம் : நெஞ்சில் ஓர் ஆலயம் - 1962
குரல் : பி.சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ்.வி
நடிகை : தேவிகா

முத்தான முத்து, கட்டான மலர். சின்னஞ்சிறு சிறகு உடைய சிங்காரச் சிட்டு செம்மாதுளை பிளந்த சிரிப்பு. மாவடு கண்,மைனாவின் மொழி, பூவின் மணம் பொன் போன்ற முகம் .தாழங்குடை தள்ளாடும் நடை, மாலைப் பொழுது போன்றவள்வண்டாடும் செண்டு என்று எட்டு வரிகளுக்குள்
மனதை மயக்கும் விதம் விதமான வர்ணனைகளோடு பாடலை எழுதினார் பாருங்கள். அதுதான் சிறப்பு

முத்தாய்ப்பான வரிகள் கீழே:
காணாத மனிதரையும் காண வைக்கும் சேயல்லவோ
பேசாத தெய்வத்தையும் பேச வைக்கும் தாயல்லவோ
------------------------------------
மற்றுமொரு பாடல்: பாசமலர் படத்தில் வந்த இந்தப் பாடல் சிகரம் தொட்ட பாடலாகும். இலக்கிய நயம் மிகுந்த பாடலாகும். கவியரசருக்குப் பெரும் புகழைச் சேர்த்த பாடலாகும். பாடலைப் பாருங்கள்:

பெண்:
மலர்ந்தும் மலராத பாதிமலர் போல 
வளரும் விழி வண்ணமே
வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக 
விளைந்த கலையன்னமே
நதியில் விளையாடி கொடியின் தலை சீவி 
நடந்த இளம்தென்றலே
வளர் பொதிகைமலை தோன்றி மதுரைநகர் கண்டு 
பொலிந்த தமிழ் மன்றமே
ஆண்: 
மலர்ந்தும் மலராத பாதிமலர் போல 
வளரும் விழி வண்ணமே
வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக 
விளைந்த கலையன்னமே
நதியில் விளையாடி கொடியின் தலை சீவி 
நடந்த இளம்தென்றலே
வளர் பொதிகைமலை தோன்றி மதுரைநகர் கண்டு 
பொலிந்த தமிழ் மன்றமே
ஆண்: 
யானைப் படை கொண்டு 
சேனை பல வென்று 
ஆளப் பிறந்தாயடா
புவி ஆளப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு 
வாழப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு... இளமை வழி கண்டு... 
வாழப் பிறந்தாயடா
பெண்: 
தங்கக் கடிகாரம் வைர மணியாரம் 
தந்து மணம் பேசுவார்
பொருள் தந்து மணம் பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்..உலகை விலை பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்
ஆண்: 
நதியில் விளையாடி கொடியின் தலைசீவி 
நடந்த இளம்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரைநகர் கண்டு 
பொலிந்த தமிழ் மன்றமே
பெண்: 
சிறகில் எனை மூடி அருமை மகள் போல 
வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத காலம் இடை வந்து 
பிரித்த கதை சொல்லவா..
பிரித்த கதை சொல்லவா
ஆண்: 
கண்ணில் மணி போல மணியின் நிழல் போல 
கலந்து பிறந்தோமடா
இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து 
முடிந்தாலும் மறக்க முடியாதடா
உறவைப் பிரிக்க முடியாதடா
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
பெண்:
அன்பே ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராராரிரோ
அன்பே ஆரிராரிரோ..அன்பே ஆரிராரிரோ

இந்தப் பாடலில் பல வரிகள் அற்புதமான வரிகளாகும். மலர்ந்து மலராத பாதிமலர் என்று குழந்தைக்கு உதாரணம் சொன்னதோடு விடிந்தும் விடியாத காலைப் பொழுதையும் உதாரணப் படுத்திச் சொன்னது அதி சிறப்பாகும். இளந்தென்றல் நதியில் குளித்துவிட்டு அருகில் இருக்கும் கொடிகளில் தலை சீவும் என்றதும் அருமை. புவியாளப் பிறந்தவனடா நீ என்று சொன்னதும், உனக்காக உலகை விலை பேசுவார், வாங்கித் தருவார் என்று சொன்னதும் அருமை

”கண்ணில் மணி போல மணியின் நிழல் போல கலந்து பிறந்தோமடா,
இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாதடா
உறவைப் பிரிக்க முடியாதடா”
என்ற வரிகள் பாடலின் முத்தாய்ப்பான வரிகளாகும்

நதியில் விளையாடும் தென்றல் அடுத்து என்ன செய்யும்? என்று கேட்டால் நமக்குச் சொல்லத் தெரியாது. ஆனால் கவியரசர்”அது கொடியில் தலை சீவிக் கொள்ளும் என்று அருமையாகச் சொன்னார் பாருங்கள். அதனால்தான் அவர் நம் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார்

அன்புடன், 
வாத்தியார்
=====================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

11.3.15

Quiz.no.80 Answer: தைமாத மேகம் தரையில் வாடவில்லை!


Quiz.no.80 Answer: தைமாத மேகம் தரையில் வாடவில்லை!

புதிர் எண் 80ற்கான விடை

11.3.2015
--------------------------------------
நேற்றையப் பதிவில், அம்மணி ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து 2 கேள்விகளைக் கேட்டிருந்தேன்.

கேட்கப்பெற்றிருந்த கேள்விகள்:

1. அம்மணிக்கு பார்த்த வரன்களெல்லாம் ஒன்று கூட அமையவில்லை. திருமணம் அதீத தாமதமானது. ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்?
2.அம்மணிக்குத் திருமணம் ஆனதா? அல்லது ஆகவில்லையா? ஆனது என்றால் எப்போது ஆனது? ஆகவில்லை என்றால் ஏன் ஆகவில்லை?

சரியான பதில்:
1. ஏழாம் வீடு அதீத பாதிப்பிற்கு உள்ளாகி யிருந்ததால் திருமணம் தாமதமாகியது.
2. ஜாதகிக்குத் திருமணம் அவளுடைய 32 வது வயதில் நடைபெற்றது.

ஜாதகப்படி என்ன காரணம்? வாருங்கள், பார்ப்போம்!

மகர லக்கின ஜாதகம்.
ஏழாம் வீட்டில் 12ம் வீட்டுக்காரன் குரு வந்து அமர்ந்திருக்கிறான்.
களத்திரகாரகன் சுக்கிரன் ஆறாம் வீட்டில் போய் அமர்ந்திருக்கிறான். ஏழாம் வீட்டுடனோ அல்லது லக்கினத்திடனோ அவனுக்குத் தொடர்பில்லை.
அத்துடன் சுக்கிரன் 6ம் வீட்டு அதிபதி புதனுடன் பரிவர்த்தனையாகி மேலும் கெட்டிருக்கிறான்.
ஏழாம் வீட்டு அதிபதி சந்திரன் நீசமாகியுள்ளான்.
தாமதத்திற்குக் காரணம் மேற்கூரிய அமைப்புக்கள்தான்.

ஆனால் ஒரு ஆறுதல்.ஏழாம் வீட்டுக்காரன் நீசமானாலும், ஏழில் அமர்ந்திருக்கும் குருவின் பார்வையைப் பெற்று, ஜாதகிக்குத் திருமணத்தை அமைத்துக் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி இருக்கிறான்.
ஜாதகிக்கு 18 வயதில் துவங்கி 38 வயது வரை சுக்கிர திசை.
ஜாதகியின் 31வது வயதில் சுக்கிர மகாதிசையில் சனி புத்தி துவங்கியது.
சனீஷ்வரன் லக்கினத்திற்கும் 2ம் வீட்டிற்கும் அதிபதி அவனும் சுக்கிரனும் சேர்ந்து தங்கள் தசாபுத்திகளில் ஜாதகிக்குத் திருமணத்தை நடத்தி வைத்தார்கள். உச்சமான குரு பகவான் கோச்சாரப்படி தன் நகர்வில் அதற்கு உதவி செய்தான்.
ஜாதகிக்கு அவளுடைய 32வது வயதில் திருமணம் நடந்தது

அலசல் போதுமா?
-----------------------------------------
போட்டியில் 32 பேர்கள் கலந்து கொண்டார்கள். கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். அவர்களில் 15 மட்டுமே இரண்டு கேள்விகளுக்கும் சரியான பதிலை/ஒட்டிய பதிலை எழுதியிருக்கிறார்கள். அதிலும் 3 பேர்கள் மட்டும்தான் திருமணம் நடந்த வயது அல்லது திசா புத்தியைச் சரியாகக் குறிப்பிட்டு 100/100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்கள். அவருக்கு மிகுந்த பாராட்டுக்கள். 12பேர்கள் திருமணம் ஆனதைக் குறிப்பிட்டுள்ளார்கள். திருமணம் நடந்த தசாபுத்தி அல்லது வயதில் குழம்பியிருக்கிறார்கள். அவர்களுக்கும் அவற்றிற்குரிய மதிப்பெண்களை வழங்கியிருக்கிறேன். மதிப்பெண்களைக் குறித்து யாரும் சண்டைக்கு வரவேண்டாம். அதை வாத்தியார் கொடுத்தவரை சரிதான் என்று எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன். அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்!

ஜாதகிக்குத் திருமணம் அவளுடைய 32 வது வயதில் நடைபெற்றது என்பதுதான் key answer
சுக்கிரதிசை குருபுத்தியில் திருமணம் நடந்தது என்று சிலர் எழுதியிருக்கிறார்கள். சுக்கிரதிசை சனிபுத்தியில் என்பது துல்லியமான விடையாகும்!

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1
90 marks........////////Blogger Kirupanandan A said...
    இந்த ஜாதகத்தை பார்த்த முதல் பார்வையில் நான் நினைத்தது. "என்ன ஒரு ஆச்சரியம். முழு சுபனான குரு 7ல் உச்சமாக இருந்தும் திருமணம் தாமதமானதா?"
    1) தாமதத்திற்கு காரணம்: களத்திரகாரகனும் இந்த லக்கினத்திற்கு யோககாரகனுமான சுக்கிரன் 6ல் மறைவு. களத்திரஸ்தானாதிபதி சந்திரன் நீசம். 7ல் குரு உச்சமானாலும் இந்த ஜாதகத்திற்கு 2 துர்ஸ்தானங்களுக்கு அதிபதிமாகிறார்.
    முதல் கேள்வியில் திருமணம் தாமதம் என்று குறிப்பிட்டு விட்டு 2 கேள்வியில் ஆனதா இல்லையா என்று கேட்கிறீர்கள். அடுத்த பதில் தவறானால் அதற்கு தாங்கள்தான் பொறுப்பு. (தமாஷ்).
    2) திருமணம் ஆனது. 31 வயதிற்கு மேல் சுக்கிர தசையில் புதன் புத்தியில் நடந்தது. (இதற்கு தோதான பாடல் ஞாபகத்திற்கு வரவில்லை. நீங்களே உங்களுக்கு பிடித்த சரியான பாடலை இதற்கு போட்டுக் கொள்ளுங்கள்.)
    Tuesday, March 10, 2015 8:13:00 AM//////
-------------------------------------------------
2
90 marks .....//////Blogger slmsanuma said...
    Laknathipathi Saturn is looked by Vakkira Sevvai.
    Raghu looked the Second Place. Raghu also looked Sukkaran Karagan. Karagan Sukkaran is in 6th place (hidden place) and also 12th place to 7th place.
    Bhavagapathi Chandiran is in 11th place and Neecham. 11th place is also 5th place to the Bhavagam.
    Ucha Guru in 7th place looked Laknam and 7th Bhagavathipathi Chandiran.
    1) Marriage is delayed due to Karagan Sukkaran is in 6th place (hidden place) and also 12th place to 7th place. Bhavagapathi Chandiran is in 11th place and Neecham.
    2) Ucha Guru in 7th place looked Laknam and 7th Bhagavathipathi Chandiran.
    So the native got delayed marriage in her Sukkira Thisai and Guru Bukthi at the age of 30 years.
    Tuesday, March 10, 2015 8:16:00 AM/////////
------------------------------------------------
3
100 marks......../////OpenID guest2015 said...
    1. அம்மணிக்கு பார்த்த வரன்களெல்லாம் ஒன்று கூட அமையவில்லை. திருமணம் அதீத தாமதமானது. ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்?
    Reason for delayed marriage..
    lagna lord in 3rd house (inimical house in both rasi and navamsa)
    venus karaka for marriage is in 6th house. dainya parivartan yoga between 5th and 6th lord.
    retrograded mars in 9th house. 9th house lord mercury is weak with 3 bindus.
    Neecha mars(R) in navamsa with rahu in cancer.
    7th house lord moon under rahu ketu aspect/company. (navamsa)
    12th house lord Jupiter exalted in 7th house also it is 6th to 2nd house. Jupiter is alone in the 7th house which is not good.
    Rahu and maandhi in 4th house.
    2.அம்மணிக்குத் திருமணம் ஆனதா? அல்லது ஆகவில்லையா? ஆனது என்றால் எப்போது ஆனது? ஆகவில்லை என்றால் ஏன் ஆகவில்லை?
    YES.. delayed marriage
    venus and mars aspecting 12th house, 12th lord exaltation ensures family life.
    7th lord moon is strong with 5 bindus aspecting his own house in navamsa
    exalted jupiter in 7th house. aspecting moon in navamsa.
    marriage might have happened during venus dasha- saturn or mercury sub period. that is after 1997.
    thank you!
    Tuesday, March 10, 2015 9:11:00 AM///////
-----------------------------------------------
4
90 marks....///////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
    Quiz 80க்கான பதில்.
    1.களத்திர காரகன் மற்றும் மகர லக்கின யோகாதிபதி சுக்கிரன் 6ல் மறைவு. களத்திர ஸ்தானாதிபதி சந்திரன் நீச்சம், மேலும் 7ல் குரு உச்சம். லக்கினாதிபதி சனியின் மீது வக்கிர செவ்வாய் பார்வை. ஆகவே அதீத தாமத திருமணம்.
    2. 30 வயதிற்கு மேல் சுக்கிர திசை, குரு புத்தியில் திருமணம் நடைபெற்றது. குரு சந்திர யோகம் உள்ளதால் நிச்சயம் திருமணம் நடைபெற்று இருக்கும்.
    அன்புள்ள மாணவன்,
    பா. லக்ஷ்மி நாராயணன்.
    தூத்துக்குடி.
    Tuesday, March 10, 2015 9:58:00 AM/////
------------------------------------------------
5
90.....////////Blogger Chandrasekharan said...
    Respected Sir Vanakkam,
    1.) திருமணம் அதீத தாமதமானது endru neengaley Thirumanam aanadhai confirm seidhuviteer..
    2.) Jadhagikku 34 vayadhil Sukhra dhasa and budhan bukthiyil thirumanam nadandhirukkum.
    Lagnathipathi sani 3-il. 12 & 3-m adhipathy Guru, 7-il uccham. 7-m adhipathy chandran neecham kalathira kaaragan sukran 6-il adhanal thirumanam thamadhamadhu.
    18-vadhu vayadhil sukra dhasa. shukran 5-m adhipathyaga irundhalum avar 6-m adhipathy budhanudan parivardhanai.
    Parivardhanai endraley ivargal dhasavil avarum, avaradhu dhasavil ivarum palangalai seivaargal.
    sukran dhasavil budhan palangal nadandhirukkum. budhan 6-m adhipathy (Thirumanam veetirkku 12-m veedu). budhan sukrnai pole velai seivaar adhanal sukra dhasavil budhan bukthiyil thirumanam nadandhirukkum. sukra dhasa budhan bukthi 34 vayadhil.. aagavey 34 vayadhil adhidha thamadamaga (Pengalukku adhu adhidha thamadamadhamdhan)thirumanam nadandhirukkum.
    Thank You.
    Tuesday, March 10, 2015 1:21:00 
-------------------------------------------------
6
90marks......////////Blogger amuthavel murugesan said...
    Answer to Quiz:80
    1. Married in Sukra dasa Guru pudhi.
    Guru in 7th place with ucham.He must do marriage.
    Delay reason;
    Sukran in 6th place and 12 th place guru in 7th place.
    M.Santhi
    Tuesday, March 10, 2015 1:23:00 PM//////
---------------------------------------------------
7
90marks......//////Blogger kmr.krishnan said...
    ஜாதகி 24 மே 1967, இரவு 11 மணி 18 நிமிடம் 15 விநாடிக்குப் பிறந்தவர்.
    பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக்கொண்டேன்.
    1.திருமணம் தாமதமாக ஆனதற்கான காரணங்கள்: 7ம் அதிபன் சந்திரன் 11ல் நீசமடைந்தது.7ம் அதிபன் சந்திரனுக்கு 6ம் அதிபன் புதன், 8ம் அதிபன் சூரியனின் நேர் பார்வை.களத்திரகார‌கன் சுக்கிரன் 6ல் மறைந்தது.12,3க்கு உடைய குருஜி7ல் சென்று அமர்ந்தது.5ம் இடத்தில் 6,8க்கு உடையவர்கள் அமர்ந்ததால் குழந்தை பிறப்பு பற்றிய சந்தேகம் ஏற்பட்டு வரன் வீட்டினர் பல ஆண்டுகள் விலகிப் போயினர்.நவாம்சத்திலும் அந்த லக்கினத்திற்கு 7ம் இடத்திற்கு சனி கேது இரு பக்கங்களிலும் நின்றது.
    2. திருமணம் நடந்தது. 27 வயதில் சுக்கிரதசா குருபுக்தியில் திருமணம் நட‌ந்தது.சுக்கிரன் ஜாதகிக்கு யோககாரகன். எனவே அவரது தசாவில் திருமணம் நடந்தது. ராசி நவாம்சம் இரண்டிலுமே சந்திரனை குருபார்ப்பதால் கட்டாயம் திருமணம் உண்டு.
    Tuesday, March 10, 2015 1:28:00 PM/////////
---------------------------------------------------
8
90 marks.....///////Blogger bala said...
    Vanakkam Iyya,
    1.
    7aaam veedu kalathira sthanam
    Thirumanathiruku 7aam veedu + 7aam athipathi + 7aam veetuku kidaikum paaravayai+ 7 aam veetil amarnthirukum grahangalai+ Kalathira kaaragan paarka vendum.
    Intha jaathagathil,
    7 aam athipathi - Neecham (Chandran neecham in viruchigam)
    Kalathira kaaragan + yogakaaragan (for makara lagnam) - Sukran lagnathuku 6aam veetil.
    Chandran neecham aanalum, avan amarnthirupathu lagnathuku 11 aam veetil.
    Chandran ku 8aam athipathi (Maangalya sthanathipathi sooriyan + Villan aana 6aam veetukaaranin paaravai (Budhan suryanudan sernthu 6 aam veetu porupai yetrullan)
    Chandranku 7aam veetil amaranthirukum guru paaravai.
    Pothuvana vithi : 7il guru amarnthaal nala kanavan/Manaivi amayvaargal enbathu.
    9 aam veedanana bagya sthanthil Sevvai amarnthu irukiraar. (Makara lagnathuku sevvai nallavar kidayathu) + Antha sevvai ku lagnathipathiyin paaravaiyum kooda.
    9 aam veetinil sevvai irunthu thirumana bagyathai kaalaam kadathinaar.
    Ivai ellam sernthu thirumana thaamathathiruku kaaranam aanadhu.
    2.
    Thirumanam kandipaga nadanthu irukum.
    Guruvum + Kalathira kaaragan sukkiranum sernthu - Sukra thasai Guru buthiyil thirumanthai nadathi vethirupaargal.
    Tuesday, March 10, 2015 2:47:00 PM//////
-----------------------------------------------------
9
90 marks ......///////Blogger Sivachandran Balasubramaniam said...
    அன்பிற்குரிய ஐயா !!!
    புதிர் எண்: 80 இற்கான பதில் !!!!
    குடுக்கப்பட்ட ஜாதகி மகர லக்கினத்தில் பிறந்தவர். லக்கினாதிபதி சனி மூன்றாம் வீட்டில் (குரு வீட்டில் ) அமர்ந்துள்ளார். களத்திரஸ்தானாதிபதி சந்திரன் லாபஸ்தானத்தில் நீசம். 6 மற்றும் 8 ஆம் அதிபதிகளான புதன் மற்றும் சூரியன் 5இல் (பூர்வபுண்ணியத்தில்) அமர்ந்து 7ஆம் அதிபதி சந்திரனை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதாலும், 12 ஆம் அதிபதி 7இல் குரு உச்சமாய் அமர்ந்து இருப்பதாலும் ஜாதகிக்கு திருமணம் தாமதம். குரு பார்வை சந்திரனின் மேல் 5ஆம் பார்வையாக விழுவதால் ஜாதகிக்கு தனது 37ஆம் வயதில் சுக்கர திசை குரு புத்தியில் திருமணம் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளது. இது திருமணம் மறுக்கப்பட்ட ஜாதகம் அல்ல !!!!
    சிவச்சந்திரன்.பா
    Tuesday, March 10, 2015 3:04:00 PM///////
-----------------------------------------------
10
100 marks.....////////Blogger asbvsri said...
    Quiz No: 80 – Answer
    ஐய்யா வணக்கம்.
    லக்னாதிபதி சனி மூன்றாம் இடத்தில். இரண்டுக்கு இரண்டாம் இடம். ஜன்ம பகைவன் செவ்வாயின் பார்வையில்.
    ஏழாம் இடத்ததிபதி மாரகாதிபதி சந்த்ரன் நீச்சம் – 11 ஆம் இடத்தில் – பாதகஸ்தானத்தில். நவாம்சத்தில் பகைவன் சனியின் வீட்டில், கேதுவுடன், – ராஹு, செவ்வாய் பார்வையில். மேலும் ராஹுவும் செவ்வாயும் இரண்டாம் இடத்தில் களத்திரத்தின் குடும்பஸ்தானத்தை வெகுவாக கெடுக்கிறார்கள். சுகஸ்தானாதிபதி (பாதகாதிபதி) செவ்வாய் கன்னியில், பகைவன் வீட்டில். நவாம்சட்தில் நீச்சம், ஏழாம் அதிபதி (ராசி) சந்த்ரன் வீட்டில். மேலும் சுகஸ்தானமான 4 ஆம் இடம் மாந்தியால் வேறு கெட்டிருக்கிறது.
    களத்திரகாரகன் சுக்ரன் ஆறாம் இடத்தில் இருப்பதால் சுகமில்லை.
    குரு உச்சமாக இருந்தாலும், 12 க்கும், 3 க்கும் அதிபதி, தவிர நவாம்சத்தில் பகைவன் புதன் வீட்டில் இருப்பதால் ப்ரயோஜனமில்லை.
    ஆக திருமணத்திற்கு உதவி செய்யும் சுக்ரன், குரு மற்றும் 7 ஆம் அதிபதி தீய ஸ்தானத்தில் இருப்பதால் திருமணம் தாமதமானது. யோகாதிபதி சுக்ரன் அவருடய தசையில் திருமணத்தை நடத்திவைத்தார்.
    இருப்பு தசை புதன் 10 வருடம், 7 மாதம். பிறந்த தேதி மே மாதம் 24 ஆம் தேதி 1967 வருடம். கேது தசை 1985 வரை திருமணம் நடக்கவில்லை. சுக்ர தசையில் திருமணம் லக்னாதிபதி சனிபகவான் புக்தியில் 7 ஆம் அதிபதி சந்த்ரன் அந்த்ரத்தில் திருமணத்தை 1999 / 2000 ஆண்டில் குரு பகவான் கோள்ச்சாரத்தில் மீனத்தில் இருக்கும்போது நடத்திவைத்தார்.
    K R Ananthakrishnan, Chennai
    Tuesday, March 10, 2015 3:27:00 /////////
-----------------------------------------------
11
75 marks......///////Blogger anand tamil said...
    1.அதீத தாமததிற்க்கு காரணம் 7ம் அதிபதி சந்திரன் நீசம். 7‍ம் இடத்தில் சுபர்களின் பார்வை இல்லை .களத்திரகாரன் சுக்கிரன் 6இல் மறைந்தான்.7ம் அதிபதி சந்திரன் மேல் 3,6,8,12 ம் அதிபதிகளின் பார்வை.
    2.திருமணம் நடைபெற்றது.
    காரணம்:புதன் மற்றும் சுக்கிரன் வர்கோத்தமம் பெற்றுள்ளது.யெனவே சுக்கிரதிசை‍ புதன் புத்தியில் 34 வயதில் திருமணம் நடைபெற்றது
    Tuesday, March 10, 2015 3:29:00 PM/////
-------------------------------------------------
12
75 marks......///////Blogger Palani Shanmugam said...
    மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
    மகர லக்ன ஜாதகி. லக்னாதிபதி சனி பகவான் 3ல் பகை வீட்டில், குரு பார்வையில் இருக்கிறார்.
    1. களத்திர காரகன் சுக்கிரன் 6ல் களத்திர ஸ்தானத்துக்கு 12ல் இருக்கிறார். களத்திர ஸ்தான அதிபதி சந்திரன் நீச்சம். செவ்வாயும், சனி பகவானின் நேரடிப் பார்வையில் இருக்கிறது; நவாம்சத்திலும் செவ்வாய் நீச்சம் ஆகியிருக்கிறார். அதனால் திருமணம் ஆகத்தான் செய்யும்.
    2. ஆனால் உச்சம் பெற்ற குரு 7ல் களத்திர ஸ்தானத்தில் இருந்து லக்னத்தையும், லக்னாதிபதியையும், களத்திர ஸ்தான அதிபதி சந்திரனையும் பார்க்கிறார். களத்திர காரகனும், பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதியும் பரிவர்த்தனை ஆகியிருக்கிறார்கள். அவர்களே 9, 10க்கும் அதிபதி ஆகி தர்ம கர்மாதிபதி யோகத்தையும் கொடுக்கிறார்கள். 8ம் அதிபதி சூரியனும் பூர்வ புண்ணியத்தில். எனவே ஜாதகியின் 34வது வயதில் திருமணம் நடந்திருக்கும்.
    Tuesday, March 10, 2015 3:46:00 PM//////
---------------------------------------------------
13
100marks .....///////Blogger thozhar pandian said...
    குரு இயற்கை சுப கிரகமாக இருந்தாலும் மகர இலக்கினத்திற்கு 3 மற்றும் 12 வீட்டு அதிபதி. அதனால் பாவியாகிறார். அவர் 7ம் வீட்டில் உச்சம் பெற்று அமர்ந்து இலக்கினத்தை தனது பார்வையில் வைத்திருக்கிறார். அவருக்கு வீடு கொடுத்த சந்திரன் நீசம் பெற்று குரு பார்வையில் உள்ளார். களத்திரகாரகர் சுக்கிரன் இலக்கினத்திற்கு 6ல், 7ம் வீட்டிற்கு 12ல் மறைந்தார். இந்த காரணங்களால்தான் திருமணம் தள்ளிப்போனது. தசா புக்தி படி சுக்கிர தசை 17 வயதில் இருந்து 37 வயது வரை. சுக்கிர தசையில் குரு புக்தி முடியும் வரை திருமணம் இல்லை. அதாவது 30 வயதிற்கு மேல், இலக்கினம் மற்றும் 2ம் வீட்டு அதிபதியான சனியின் புக்தியில் திருமணம் நடந்திருக்கும். குரு இயற்கை சுப கிரகமாவதாலும், சுக்கிரன் களத்திரகாரகராக மகர இலக்கினத்திற்கு யோக காரகராக இருப்பதாலும், திருமணம் அவர் தசையில் நடந்திருக்கும்.
    Tuesday, March 10, 2015 9:28:00 PM//////
--------------------------------------------
14
75 marks.....///////Blogger ravichandran said...
    Respected Sir,
    My answer for our today's Quiz No.80:
    1. Reason for late marriage is Venus placed 12th house from seventh house.
    2. She has married at her age of 34 in Venus dasa mercury sub period (bhuthi).
    Explanations:
    I. Reasons for late marriage:
    i) Seventh house lord Moon is debilitated in 11th house.
    ii) Kalathra karaga is placed 12th house from seventh house.
    iii) Kathrakaraga (Venus) is not aspecting seventh house or house lord. (6/8)
    iv) Sun is aspecting (8th house lord) moon.
    II. Reasons for Married life:
    i) Jupiter is exalted in seventh house though it is twelfth house as well as 3rd house.
    ii) Exalted Jupiter is aspecting Moon, lagna and lagna lord.
    iii) Bagyathipathi Mercury is in 5th house and aspecting Moon (seventh house lord)
    iv) Mercury and Venus are in Mutual exchange position.
    v) Second house and twelfth house are not affected.
    Vi) In astavarga also having good parals.
    Hence, She has married after delay.
    With kind regards,
    Ravichandran M.
    Tuesday, March 10, 2015 9:49:00 PM//////
------------------------------------------------
15
90 marks.....///////Blogger Prakash Kumar said...
    Vanakkam ayya
    Answer for 80th question.
    Reason for late marriage: 7th athipathi neesam, sukran in 12th place from 7. Moon is under control of bhudhan (6th Lord) suriyan 8th Lord, dasaialum moosam
    Marriage might hv happened sukura dasa guru puthi. 7IL Samantha guru Athai seithuirupar
    Tuesday, March 10, 2015 10:59:00 PM/////
==============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

10.3.15

Astrology: quiz number.80 தைமாத மேகம் அது தரையில் வாடுது!


Astrology: quiz number.80 தைமாத மேகம் அது தரையில் வாடுது!

”தைமாத மேகம் அது தரையில் ஆடுது” என்று பெண் குழந்தைகளைச் சொல்வார்கள். அதே குழந்தைக்கு உரிய வயதில் திருமணம் ஆகாமல்
தள்ளிக்கொண்டே போனால் என்ன சொல்வார்கள்: ”தைமாத மேகம் அது தரையில் வாடுது” என்றுதான் சொல்ல வேண்டும்.

Quiz No. 80

10.3.2015

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு இரண்டு கேள்விகள். அந்தக் கேள்விகளுக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!
------------------------------------
இன்றைய கேள்வி:


அட்டவணையின் மேல் கர்சரை வைத்துக் கிளிக்கினால் 
அது பெரியதாகத் தெரியும்

மேலே உள்ள ஜாதகம் ஒரு அம்மணியின் ஜாதகம்.

1. அம்மணிக்கு பார்த்த வரன்களெல்லாம் ஒன்று கூட அமையவில்லை. திருமணம் அதீத தாமதமானது. ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்?

2.அம்மணிக்குத் திருமணம் ஆனதா? அல்லது ஆகவில்லையா? ஆனது என்றால் எப்போது ஆனது? ஆகவில்லை என்றால் ஏன் ஆகவில்லை?

ஜாதகத்தை அலசி உங்கள் பதிலை எழுதுங்கள்.

அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்!

விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!
-------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

9.3.15

ஏன் கல்வி மட்டுமே வாழ்க்கை ஆகாது?


ஏன் கல்வி மட்டுமே வாழ்க்கை ஆகாது?

வாழ்க்கைக்கு‬ கல்வி அவசியம்-ஆனால் கல்வி மட்டும் வாழ்க்கை ஆகாது!

வாழ்வில் முன்னேற கடின உழைப்பு மட்டுமின்றி சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி எடுக்கும் முடிவுகளும் முக்கியம் என்பதை உணர்த்தும் சம்பவம்.

ஒரு மாணவன் முழு ஆண்டுத் தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் ஃபெயில், தலைமை ஆசிரியருக்குக் கோபம் வந்துவிட்டது. ""இந்தப் பள்ளியில் பத்துவருஷமாப் படிச்சிருக்கே; ஒரு பாடத்துல கூட பாஸாகலை. வகுப்புல பாடம் நடத்தும் போது நீ என்ன காதுல பஞ்சு வெச்சு அடைச்சுகிட்டிருந்தியா?ன்னு கோபாமாக திட்டினார்.

அந்தப் பையன் அமைதியாக நின்றிருந்தான். ""இனி நீ படிக்க லாயக்கே இல்லை என்று டி.ஸி. கொடுத்து அனுப்பி விட்டார்.

அந்தப்ப பையன் தெருவில் இறங்கி நடந்தான். ""உன் காதில் என்ன பஞ்சா அடைத்து வெச்சிருக்கே? என்ற அந்த வார்த்தை காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. உடனே தன் காதுகள் இரண்டையும் நன்றாக முடினான். அமைதியான அந்த உலகம் அவனுக்கு வித்தியாசமாகத் தெரிந்தது. ஒரு புதிய சிந்தனை உருவானது. தலைமையாசிரியர் சொன்னது போல் பஞ்சு வைத்து காதை அடைத்துப் பார்த்தான். ஒரு புது சாதனத்தை வடிவமைத்தான். அதன் பெயர் இயர் மஃப்

பரீட்சைக்குப் படிக்கிறவர்கள் தொந்தரவின்றிப் படிக்க வாங்கினார்கள். இரைச்சலான இடங்களில் வேலை செய்பவர்கள் வாங்கினார்கள். ஓரளவுக்கு வியாபாரம் நடந்தது. அந்தச் சமயம் முதல் உலகப் போர் ஆரம்பமானது. பீரங்கிச் சத்தத்தினால் காது செவிடாகாமல் தடுக்க இயர் மஃப் கட்டாயம் அணிய வேணடும் என அதிகாரி உத்தரவிட்டார். போர்வீரர்களுக்கு வசதியாக ஹெல்மட்டில் அமைத்து கொடுத்தான். கோடீஸ்வரனானார். அவர்தான் செஸ்டர் கீரின் வுட். சங்கடமான சூழ்நிலையில் கிடைத்த ஐடியாவை சரியான முறையில் பயன்படுத்தியதால் முன்னேறினார்.

நீங்களும் முயலுங்கள்!
----------------------------------------------
2
மெமரிகார்ட் பற்றிய சில தகவல்கள்

மெமரிகார்ட் என்றால் Dataக்களை பதிந்து வைக்க பயன்படும் ஒரு நினைவக அட்டை என்றும் அது 4,8,16,32,64GB என்ற அளவுகளில் கிடைக்கிறது இது மட்டும்தான் நாம் மெமரிகார்டை பற்றி தெரிந்து வைத்திருக்கும் விடயம் . சரிதானே ?

சரி அப்படியென்றால் ஏன் ஒரே அளவுள்ள மெமரிகார்ட் (4GB) பல தயாரிப்பாளர்களால் வெவ்வேறு விலைகளில் விற்கப்பட வேண்டும் என யாராவது சிந்தித்தீர்களா? (விலை கம்மியா கடச்சா வாங்கிட்டு போய்கிட்டே இருக்கனும் பாஸ் அத வச்சு ஆராய்ச்சி எல்லாம் பன்னப்படாது ) என்று ஒரு போதும் இருந்துவிடாதீர்கள் ஏனென்றால் நாம் டிஜிட்டல் உலகத்தில் இருந்து கொண்டிக்கிறோம் அதைப்பற்றிய அரிவை நாம் பெற்றிருப்பது முக்கியம்

மெமரிகார்டில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் மெமரிகார்டில் அதனிடைய தயாரிப்பு நிறுவனத்தின் பெயருக்கு கீழ் 4,6,8,10 என்ற எதாவது ஒரு எண் குறிப்பிட்டு அதில் ஒரு வட்டமிட்டு காட்டப் பட்டிருக்கும் இதுதான் இந்த விலை பட்டியலுக்கு காரணம் ஆனால் இதனை அதிகம் நபர்கள் தெரிந்து வைத்திருப்பதில்லை.இவ்வாறு வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளஎண் அந்த memory cardனுடைய class என்று குறிப்பிடப்படுகிறது அது ஒவ்வொரு மெமரிகார்டின் data transfer speedஐ குறிக்கும் code ஆகும் 4என்ற எண் எழுதப்பட்டு வட்டமிடப்பட்டு இருந்தால் அது நொடிக்கு 4MB வேகத்தில் fileஐ transfer செய்யும் தன்மையை பெற்றிருக்கும்class 6 - 6MB per secondClass 8 - 8MB per secondClass 10 - 10MB per second என்ற வேகத்தில் dataக்களை பரிமாறிக்கொள்கிறது!
------------------------------------------------
3
Best Answer given by an Indian Citizen:-

My Income Tax return form has been sent back because, In response to a question for 'Number of Dependents on you?',  I replied :--- 
"65% of population who doesn't pay taxes, 21 million illegal immigrants, 9,00,000 criminals in over 1382 prisons and above all 544+ MPs in parliament".
They said, this is not an acceptable answer.
I am still wondering..... Who the hell did I miss out!!.
---------------------------------------------
4
An old man said,
“Erasers are made for those
who make mistakes.

A youth replied,
“Erasers are made for those
who are willing to correct their mistakes!”
Attitude matters!
THOUGHT FOR THE DAY😊
---------------------------------------------
5
On his first day in office as President, when Abraham Lincoln entered to give his inaugural address, one man stood up... 
He was a rich Aristocrat. He said, “Mr. Lincoln, you should not forget that your father used to make shoes for my family.” And the whole Senate laughed; they thought they had made a fool of Lincoln.

But certain people are made of a totally different mettle. Lincoln looked at the man directly in the eye and said, 

“Sir, I know that my father used to make shoes for your family, and there will be many others here, because he made shoes the way nobody else can. He was a creator. His shoes were not just shoes; he poured his whole soul into them.I want to ask you, have you any complaint? Because I know how to make shoes myself. If you have any complaint I can make you another pair of shoes. But as far as I know, nobody has ever complained about my father’s shoes. He was a genius, a great creator and I am proud of my father”.

The whole Senate was struck dumb. They could not understand what kind of man Abraham Lincoln was.He was proud because his father did his job so well that not even a single complaint had ever been heard.

Remember: “No one can hurt you without your consent.”

“It is not what happens to us that hurts us. It is our response that hurts us.... 👌👌👌
-------------------------------------------------
வாட்ஸப்பில் வந்ததில் பிடித்தது. உங்களுக்கு அறியத் தந்திருக்கிறேன்

அன்புடன்
வாத்தியார்
===========================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

6.3.15

அவனுக்குத்தான் எத்தனை பெயர்கள்


அவனுக்குத்தான் எத்தனை பெயர்கள் 

 பக்தி மலர் 

 இன்றைய பக்தி மலரை, திரு.உன்னி கிருஷ்ணன் அவர்கள் பாடிய முருகன் பாடல் ஒன்று நிறைக்கிறது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்.

அன்புடன் 
வாத்தியார்  
==========================================


Our sincere thanks to the person who uploaded this song in the net

வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!

5.3.15

Health: எப்போதும் இளைமையாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

Health: எப்போதும் இளைமையாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.

ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள். கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது. கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?

அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம். கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்: கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். இதை பற்றி சித்தர் கூறும் பாடல்...

"காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே.-

காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்

இணையத்தில் படித்தது. உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்!

அன்புடன்,
வாத்தியார்
=====================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

4.3.15

Quiz.no.79 Answer: கனவு கலைந்தது! நிறைவேறிய ஆசை நிலைக்கவில்லை!


Quiz.no.79 Answer: கனவு கலைந்தது! நிறைவேறிய ஆசை நிலைக்கவில்லை!

புதிர் எண் 79 ற்கான விடை

4.3.2015
--------------------------------------
நேற்றையப் பதிவில், அன்பர் ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து 2 கேள்விகளைக் கேட்டிருந்தேன்.


கேட்கப்பெற்றிருந்த கேள்விகள்:

1. ஜாதகருக்குப் பிறப்பிலேயே சொத்துக்கள் (immovabale properties) உண்டா? அல்லது இல்லையா? உண்டு என்றால் எதனால் உண்டு? இல்லை
என்றால் எதனால் இல்லை?
2. மேலும் ஜாதகர் தன் சொந்தப் பணத்தில் வீடு ஒன்றைக் கட்டுவதற்கு ஆசைப்பட்டார். அது நிறைவேறியதா? அல்லது இல்லையா? நிறைவேறியது
என்றால் எந்த வயதில் நிறைவேறியது? நிறைவேறவில்லை என்றால் எதனால் நிறைவேறவில்லை?

சரியான பதில்:
1. 4ம் வீட்டில் கிரகயுத்தம். 9ல் ராகு. ஆகவே ஜாதகருக்கு பூர்வீக சொத்து இல்லை.
2. ஜாதகரின் ஆசை நிறைவேறியது. வீட்டைக் கட்டினார். ஆனால் வீடு நிலைக்கவில்லை. 31 வயதில் கட்டினார். 35 வயதில் வீட்டை 
விற்கும்படியாகிவிட்டது. நிறைவேறிய ஆசை நிலைக்கவில்லை!

ஜாதகப்படி என்ன காரணம்? வாருங்கள், பார்ப்போம்!

விருச்சிக லக்கின ஜாதகம்.
லக்கினாதிபதி செவ்வாய் உச்சம் பெற்றுள்ளார். ஆனால் சனீஷ்வரன் மற்றும் கேதுவுடன் சேர்ந்து கிரக யுத்தத்தில் மாட்டிக்கொண்டுள்ளார்.
ஜாதகருக்கு அவருடைய 23வது வயதிலிருந்து 43வது வயது வரை சுக்கிர மகா திசை. சுக்கிரன் அஸ்தனமாகியுள்ளார்.
அவர் (சுக்கிரன்) சொத்து சுகங்களுக்கான காரகன். அவர் அஸ்தமனம் பெற்றுள்ளார்.
மேலும் அவர் 12ம் இடத்திற்கும் அதிபதி அதை நினைவில் வையுங்கள்.
அவர் 4ல் அமர்ந்து அசையாத சொத்தான வீட்டைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியிருக்கிறார்.
ஆனால் 4ம் வீட்டிற்கு அதிபதியான சனீஷ்வரன் அந்த வீட்டிற்குப் பன்னிரெண்டில் உள்ளார்.
அத்துடன் அவர் (சனீஷ்வரன்) கேதுவுடன் சேர்ந்து கெட்டுப் போனதுடன் ராகுவின் பார்வையைப் பெற்று மேலும் வலுவிழந்து உள்ளார்.
அவருடன் எட்டாம் வீட்டுக்காரன் புதனும் உடன் உள்ளார்.
ஜாதகர் தனது முயற்சியில் பல சிரமங்களுக்கிடையே மிகவும் கஷ்டப்பட்டு தனது 31வ்து வயதில் வீடு ஒன்றைக் கட்டினார். ஆனால் அந்த வீட்டிற்கு
அவர் குடி போகவில்லை. மேலும் ஏற்பட்ட கஷ்டங்களினால் கட்டிய 4 ஆண்டுகளிலேயே வீட்டை விற்று விட்டார்.
காரகன் பாவநாசம் என்பது முழு வேலை செய்தது. அத்துடன் மேற்கூரிய காரணங்களால் கட்டிய வீட்டையும் இழக்க நேர்ந்தது.
அலசல் போதுமா?
-----------------------------------------
போட்டியில் 25 பேர்கள் கலந்து கொண்டார்கள். கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். அவர்களில் ஒருவர் மட்டுமே இரண்டு
கேள்விகளுக்கும் சரியான பதிலை/ஒட்டிய பதிலை எழுதி 100/100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். அவருக்கு மிகுந்த பாராட்டுக்கள். 16. பேர்கள் 2ல் ஒரு கேள்விக்கு மட்டும் சரியான சரியான பதிலை எழுதி 50/100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்கள் அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்!

சொந்த வீடு கட்டினாலும் அது நிலைக்காது. கையை விட்டுப் போய் 
விடும் என்பதுதான் key answer

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1
50 marks  /////Blogger Chandrasekaran Suryanarayana said...
QUIZ NO.79 வணக்கம்
01/03/1962 ஆம் ஆண்டு புதன் கிழமை காலை 1.30.01 மணிக்கு கேட்டை நட்சத்திரத்தில் விருச்சிக லக்கினத்தில் ஜாதகர் பிறந்தார். (இடம்:
சென்னை)
1. பிறப்பிலேயே சொத்துக்கள் இல்லை. 4ம் வீட்டு அதிபதி சனி 3ம் வீட்டில் அமர்ந்து இருப்பதால் சுய முயற்ச்சியால் தான் சொத்துக்கள் பெற
முடியும். 4ம் வீட்டில் 22 பரல்கள்.4ம் வீட்டில் வந்து அமர்ந்துள்ள சுக்கிரனும் அஸ்தங்கம் ஆகி விட்டது.//////
--------------------------------------------------
2
100 marks ///////Blogger slmsanuma said...
Laknathipathi Sevvai Ucham. Chandran is neecha Pangam in Laknam. Kethu look Laknam.
Ancestral Asset ---
Karagan Guru is in 12 place to 5th house which is for ancestral asset. 5th house looked by Sannesswaran and Kethu. Hence no ancestral asset to 
the native.
Father’s Asset ---
Karagan Suriyan is in 8th place to 9th house which is for father’s asset. Though the owner of the house chandran is in Neecha Pangam, in laknam 
and 5th place to the 9th house, Raghu is in 9th house with the Sevvai, Bhudhan, Saneeswaran parvai. Hence no father’s asset to the native.
House Construction ---
Karagan Bhudhan is in 12th place to 4th house which is for house construction. 4th house owner Saneeswaran is in 12th place to the 4th house. No 
other planets looks 4th house. So he cannot construct his own house.///////
---------------------------------------------------------------------------
3
50 marks /////Blogger Kirupanandan A said...
பிறப்பிலேயே சொத்துக்கள் என்றால் பரம்பரை சொத்தைப் பற்றி கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
1) பிறப்பிலேயே சொத்துகள் இல்லை.
காரணம். பரம்பரைச் சொத்துக்கான இடம் 9ம் வீடு. அங்கு ராகு இருக்கிறார். அந்த இடம் பாப கிரக பார்வையாலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. 9ம்

அதிபதி சந்திரன் நீசம் (நீச பங்கமா இல்லையா என்ற சர்ச்சைக்குள் செல்ல விரும்பவில்லை). 9க்கு 9ம் இடமான 5ம் வீட்டின் அதிபதி குரு அந்த

வீட்டிற்கு 12ல் இருக்கிறார். //////
--------------------------------------------
4
50 marks //////Blogger Gpbarathi P said...
1.the native has no ancestral property. because the ninet place chandran is debilated//////
Barathi//////
------------------------------------------
5
50 marks ///////Blogger SSS CONSTRUCTION said...
The person have not any assets belonging to his father because the fourth house lord is in 3rd place and the 9th house lord is in lakna and he is 
neecha //////
------------------------------------------
6
50 marks /////Blogger hamaragana said...
அன்புடன் வாத்தியார் அய்யவுக்கு வணக்கம் .
புதிர் எண் 79.
லக்னம் விரிச்சிகம் ராசி விரிச்சிகம்..
1.பூர்வீக சொத்து இருக்காது .
1.a பூர்வ புண்ணிய ஸ்தானம் 5.வீட்டுக்காரன் *குரு *4ல் அமர்ந்துள்ளான் ..அதாவது தன வீட்டுக்கு 12ல் ஆனாலும் அது கேந்திரம்
..b பாகியஸ்தானமான 9ம் வீட்டில் ராஹு அமர்ந்து கெடுத்துள்ளான் ...அது ராசியாதிபதி வீடாகிறது ..ராசியாதிபதி நீசமாகிபோனான் .. .
c .பூர்வ புண்ணிய காரகன் குருவும் ,சூரியனும் [சுக்கிரன்] சேர்ந்து .. ..அமர்ந்துள்ளனர்.அவர்களின் பார்வை .9ம் மிடத்தை பார்கவில்லை.
..d .உச்சம் பெற்ற செவ்வாய்,ஆட்சி பெற்ற சனி கேது இவர்களது கூரிய பார்வை 9ம் மிடத்தை
இந்த 4.. a b,c,d, காரணத்தால் பூர்வீக சொத்து இருக்க வாய்ப்பு இல்லை...!!//////
----------------------------------------------------------
7
50 marks ///////Blogger valli rajan said...
Dear Guruji,
1. 9th lord is neecham.
2.9th place is aspected by sani, ketu and rahu in 9th place.
3. Guru, venus in 4th house is good.
4. sun in 4th house in kumba rasi is bad.
5. Mars lord of land is exalted. 
By birth he won't have immovable property /////
-----------------------------------------------------
8
50 marks ///////Blogger Govindasamy said...
1. ஜாதகருக்கு பிறப்பிலேயே சொத்துக்கள் இல்லை. 9ம் இடத்தில் ராகு. 9க்குரிய சந்திரன் லக்கினத்தில் நீசம். மேலும் ஆறு எட்டுக்குரிய

கிரகங்களின் பார்வை 9ம் இடத்தில்.//////
-------------------------------------------------------
9
50 marks ///////Blogger saravanakumar k Kumar said...
1. பூர்வீக சொத்துக்கள் இல்லை.
1. பூர்வீக சொத்துக்கள் இல்லை.
பூர்வீக 5ம் பாவகாதிபதி 5ம் பாவகத்திற்கு 12ல் மறைவு. மற்றும் 9ம் பாக்கியஸ்தானாதிபதி சந்திரன் விருச்சிகத்தில் நீசம்//////
------------------------------------------
10
50 marks //////Blogger kumar.S said...
1) ஒன்பதில் ராகு . ஒன்பதிற்கு அதிபதி நீசம். பரம்பரை சொத்து இருக்க வாய்ப்பு இல்லை சார் .
நன்றி ,
குமார் . S//////
------------------------------------------------
11
50 marks ////////Blogger Palani Shanmugam said...
மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
லக்னாதிபதி செவ்வாய் 3ல் உச்சம். அவரை ராகு 7ம் பார்வையாக பார்க்கிறார். அதனால் மகா கோபக்கார்ர். 4ம் வீட்டு அதிபதி சனி பகவான் 3ல்

இருப்பது நல்லதல்ல. இவருக்கு சகோதர்ர்களுடன் சண்டை ச்ச்சரவு ஏற்பட்டு பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்காமல் போயிருக்கும்.//////
--------------------------------------------------
12
50 marks ///////Blogger S.Namasu said...
மதிப்பிற்குரிய அய்யா, ஜோதிட புதிர் எண் 79 க்கான எனது கணிப்பு:
1. ஜாதகருக்கு பூர்வீக சொத்து இருக்கும் ஆனால் கிடைக்காது
விருச்சிக லக்கினம், ராசி அதிபதி செவ்வாய் மகர ராசியில் (3ம் இடம் மறைவு ஸ்தானம்) உச்சம்.
பூர்வீக சொத்துக்கு காரகனான சூரியன் பகை வீடான கும்பத்தில், 9ம் வீட்டு அதிபதியான சந்திரன் நீசம் பெற்று லக்கினத்தில், 9ல் ராகு பகை

வீட்டில், 5 க்கு உரிய குரு 12ல் உள்ளதனால் ஜாதகருக்கு பூர்வீக சொத்து இருந்தும் கிடைக்காது.///////
-----------------------------------------------
13
50 marks ////////Blogger siva kumar said...
வணக்கம் ஐயா
Quiz no 79 திற்கான விடை
ஜாதகர் விருச்சக லக்கணம்
விருச்சக ராசி
லக்கண அதிபதி செவ்வாய்
1.ஜாதகருக்கு பிறப்பிலேயே சொத்துக்கள் இல்லை
ஜாதகபடி காரனங்கள்:
ஐயா விருச்சக லக்கணத்திற்கு யோககாரன் சந்திரன் நீச்சமாகி லக்கனத்தில் உல்லார்.மற்றும் பூர்வ புண்ணியதிபதி குருவும் தன் வீட்டிற்கு 12ல்

மறைவு.பாக்கியஸ்தானமான 9ம் வீட்டில் ராகு அமர்ந்து உள்ளார். மற்றும் பாவ கிரகங்களான சனி,கேது,புதன் ஆகியோரின் நேரடி பார்வை 9ம்

வீட்டிற்கு./////
-------------------------------------
14
50 marks ///////Blogger ravichandran said...
Respected Sir,
My answer for our today's Quiz No. 79:-
1. He is not blessed to get immovable properties (ancestral properties) by birth.
REASONS:
I. Properties by birth:
i) In nineth house, rahu is sitting and nineth house lord is debilitated as well as Saturn, Mars, Kethu and Mercury is aspecting nineth house. It is 

worst.
ii) There is no benefic planets aspect either nineth house or nienth house lord.
iii) Fourth house lord is sitting in twelfth house from its own house.
iv) In navamsa also, there is no good sign for having properties by birth.
v) No favorable yogas.
Hence, 9th house, 9th house lord as well as fourth house lord is affected, He is not blessed to get properties by birth.//////
-------------------------------------------------------------
15
50 marks ///////Blogger kmr.krishnan said...
ஜாதகர் 28 பிப்ரவரி 1962ல் காலை 1.30 மணிக்குப் பிறந்தவர். சென்னையைப்பிறந்த இடமாக் எடுத்துக்கொண்டேன்.
1.ஜாதகருக்கு பிறப்பிலேயே அசையாச் சொத்துக்கள் இல்லை.
நான்காம் அதிபன் சனைச்சரன் தன் வீட்டுக்கு 12ல் மறைந்தார். ஜன்மப் பகையாளர் செவ்வாயுடன் 3ல் கூட்டணியால் 4ம் அதிபன் சனி வலுவிழந்தார்.
மேலும் 8ம் அதிபன் புதனுடன் இருந்ததாலும் நான்காம் அதிபன் வலுவிழந்தார்.
கார்கன் செவ்வாயின் நிலையும் இதுவே. இவர்களுடன் கேதுவும் இருந்து சொத்துக்கள் இல்லாமல் செய்தார்.பாக்கிய ஸ்தான ராகு, 6ம் அதிபன்

செவ்வாய் 3ல், 4ம் அதிபன் சனியுடன் இருப்பது ஆகியவை பூர்வீகச்சொத்து இல்லாமல் செய்தது.//////
-------------------------------------------------------
16
50 marks //////Blogger lrk said...
ஐயா. வணக்கம்
புதிர். 79 க்கு. பதில்கள்
1) அன்பருக்கு பிறப்பிலேயே சொத்து கிடையாது .
காரணங்கள் ;
9க்கு அதிபதி நீசம்
9ஆம் இடத்தில் ராகு .பூர்வ புண்ணிய ஸ்தானம் பாதிக்கப்பட்டு உள்ளது .
நன்றி ஐயா .
கண்ணன் .//////
------------------------------------------
17
50 marks //////Blogger Manikandan said...
௧. பூர்வீக சொத்து கிடைக்காது. பாக்கியாதிபதி நீசம் + லக்கினாதிபதி செவ்வாய் சனி மற்றும் ராகு கேதுஉடன் சேர்க்கை.//////
--------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!