மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.11.15

இன்னும் ஏழு மாதங்களுக்குப் பிறகு நாம் உயிரோடு இருப்போமா? அல்லது மாட்டோமா?


இன்னும் ஏழு மாதங்களுக்குப் பிறகு நாம் உயிரோடு இருப்போமா? அல்லது மாட்டோமா?

என்ன வாத்தியார் குண்டைத் தூக்கிப் போடுகிறீர்கள் என்று சொல்லாமல், கீழே உள்ள பத்திரிக்கைச் செய்தியை முதலில் படியுங்கள். கச்சேரியைப் பிறகு வைத்துக்கொள்வோம்:


படத்தின் மீது கர்சரை வைத்துக் கிளிக்கினால் படம் பெரிதாகத் தெரியும். உங்களுக்கு படிப்பதற்கு வசதியாக இருக்கும்!
---------------------------------------------------------------------------------------------------
இந்தப் பத்திரிக்கை க்ளிப்பிங்கை சங்கரன் கோயிலுக்குப் பெருமை சேர்க்கும் நமது வகுப்பறை மாணவர் திருவாளர் கணபதி நடராஜன் அவர்கள் எனக்கு அனுப்பி வைத்திருந்தார்கள். அதை உங்கள் பார்வைக்குக் கொடுத்துள்ளேன்.

தினமலர் நாளிதழின் திருநெல்வேலி பதிப்பில் - 26-11-2015 அன்று இந்தச் செய்தி வெளிவந்திருக்கிறது. புதிய நாஸ்டர்டாமஸ் என்று பத்திரிக்கைக்காரர்களே குறிப்பிட்டு உள்ளார்கள்.

என்ன சொல்கிறார் இந்தப் புதியவர்? நடக்க உள்ளதாகக் கணித்து இரண்டு முக்கியமான செய்திகளைச் சொல்கிறார்:

1. 15-5-2016 அன்று கரீபியன் கடலில் உள்ள தீவு நாடான போர்ட்டோரீகோவில் அதிகாலை 2.20 மணிக்கு 5.6 மைல் அளவுள்ள  விண்கல் பூமி மீது வந்து மோதும். அதனால் நம் பூமி முழுவதும் அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படும். 120 கோடி பேர்கள் பலியாவார்கள்.

2. 16-6-2016 அன்று ரஷ்யா மற்றும் சீனா இரண்டும் சேர்ந்து 3ம் உலகப் போரைத் தொடங்கும். 25-10-2016 அன்று அக்கூட்டணி உலகப் போரில் வெற்றி பெறும்.
--------------------------------------
இது சம்பந்தமாக இணையத்தைத் தோண்டிய போது நிறைய செய்திகள் கிடைத்தன. இரண்டு மூன்று செய்திகளை மட்டும் கீழே கொடுத்துள்ளேன்.

அந்த புதிய நாஸ்ட்ரடாமஸ் இவர்தான். நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள்
Pastor Ricardo Salazar in a prophecy video
--------------------------------------------------------------------------


ரஷ்யா மற்றும் சீனா நாட்டு அதிபர்கள் ஒன்றாக இருக்கிறார்கள்
The pastor claims Russia and China will team up against a weaker USA


----------------------------------------------------------------------------------------------------------
அந்தப் புதிய நாஸ்ட்ரடாமஸ் கூறிய ஏதாவது இதுவரை நடந்திருக்கிறதா என்ற விவரம் எதுவும் இல்லை. இப்போது அவர் கூறியிருப்பது நடக்குமா என்பதற்குக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!

-------------------------------------------------------------
எனது கருத்து:

isis தீவிரவாதிகளின் சமீபத்திய அட்டூழியங்களை, குறிப்பாக பாரீஸ் நகரில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவங்கள், ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்திய கொடூரம் ஆகியவற்றை பார்க்கும்போது, பாதிக்கப்பட்டவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள் ஒன்று சேர்ந்து ஏதாவது செய்வார்கள் என்று உள் மனது சொல்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்! நம்மால் வேறு என்ன செய்ய முடியும்?

அதெல்லாம் ஒன்றும் நடக்காது. பழநிஅப்பன் பார்த்துக்கொள்வார்.

அத்துடன் ஒரிஜினல் நாஸ்ட்ரடாமஸ் 21ம் ஆண்டில் இந்தியா சூப்பர் பவர் ஆகும் என்று எழுதிவைத்திருக்கிறார். அது உண்மையாகாமல் போய்விடுமா என்ன? ஆகவே நம்பிக்கையோடும் துணிச்சலோடும் இருங்கள்.

நல்லதே நடக்கும்!
நல்லதே நடக்கும்!
நல்லதே நடக்கும்!

அன்புடன்
வாத்தியார்
==================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

இனி இது உங்கள் கையில்!


இனி இது உங்கள் கையில்!

1.மூன்று விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை...

👉நேரம்
👉இறப்பு
👉வாடிக்கையாளர்கள்

2.மூன்று விஷயங்கள் சகோதர சகோதரிகளையும் விரோதியாக்கும்...

👉நகை
👉பணம்
👉சொத்து

3.மூன்று விஷயங்கள் யாராலும் திருடமுடியாது...

👉புத்தி
👉கல்வி
👉நற்பண்புகள்

4.மூன்று விஷயங்கள் ஞாபகம் வைத்திருப்பது அவசியம்...

👉உண்மை
👉கடமை
👉இறப்பு

5.மூன்று விஷயங்கள் வெளிவந்து திரும்புவதில்லை...

👉வில்லிலிருந்து அம்பு
👉வாயிலிருந்து சொல்
👉உடலிலிருந்து உயிர்

6.மூன்று பொருள்கள் வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும்...

👉தாய்
👉தந்தை
👉இளமை

7.மூன்று பொருள்கள் திரை மறைவுக்கு உகந்தது...

👉சொத்து
👉ஸ்திரி
👉உணவு

8.இந்த மூன்று பேர்களுக்கும் மரியாதை கொடு...

👉தாய்
👉தந்தை
👉குரு

நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்

1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்சி-
4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செல்வத்திலும் எளிமை
7) பதவியிலும் பணிவு

வழிகாட்டும் ஏழு விஷயங்கள்

1) சிந்தித்து பேசவேண்டும்
2) உண்மையே பேசவேண்டும்
3) அன்பாக பேசவேண்டும்.
4) மெதுவாக பேசவேண்டும்
5) சமயம் அறிந்து பேசவேண்டும்
6) இனிமையாக பேசவேண்டும்
7) பேசாதிருக்க பழக வேண்டும்

நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள்

1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்
3) பிறருக்கு உதவுங்கள்
4) யாரையும் வெறுக்காதீர்கள்
5) சுறுசுறுப்பாக இருங்கள்
6) தினமும் உற்சாகமாக வரவேற்கத்தயாராகுங்கள்
7) மகிழ்ச்சியாக இருக்க முயற்சி மேற்கொள்ளுங்கள்

கவனிக்க ஏழு விஷயங்கள்

1) கவனி உன் வார்த்தைகளை
2) கவனி உன் செயல்களை
3) கவனி உன் எண்ணங்களை
4) கவனி உன் நடத்தையை
5) கவனி உன் இதயத்தை
6) கவனி உன் முதுகை
7) கவனி உன் வாழ்க்கையை..

மது நாட்டுக்கு  வீட்டுக்கு கேடு, புகைபிடித்தல் உடல்நலத்திற்கு கேடு என்று மக்களின் மீது அன்பை பொழியும் அரசு அவற்றை விற்கவும் செய்யும் அதை நீதிமன்றம் தட்டி கேட்காது.

குடிமக்கள் நன்கு குடித்துவிட்டு வண்டிகளை ஓட்டுவதாலும் வண்டிகளுக்கு குறுக்கே வந்து விழுவதாலும் விபத்துகள் நடக்கின்றன. குடித்தவர்களால் அவர்களுடன் வாழ்பவர்கள் படும் கஷ்டங்கள் சங்கடங்கள் சொல்லி மாளாது. இதை நீதிமன்றம் தட்டி கேட்காது.

ஹெல்மட் அணிவதால் மட்டுமே மக்கள் கஷ்டபடுவது போல் நீதிமன்றம் இதை மட்டும் கட்டாயப்படுத்தும்.

மக்கள் மீது அககறை காட்டும் நீதிமன்றமே உன்னால் டாஸ்க் மார்கை மூட ஆனையிட முடியுமா?

இக்கருத்தை வரவேற்போர் இப்பதிவை குறைந்தது 5 பேர்களிடமாவது பகிரவும்

அவ்வாறு செய்தால் விரைவில் தங்களுக்கு டாஸ்க் மார்கை மூட நீதிமன்றம் உத்தரவிட்ட செய்தி கிடைக்கும்

சும்மா கடவுள் படத்தை பகிர்ந்தா நல்லது நடக்கும்னு நம்பி பகிரும் நண்பர்களே இப்பதிவை நம்பி பகிர்ந்தால் கண்டிப்பாக மேற்சொன்ன நல்லது நடக்கும்

இனி உங்கள் கையில்

அன்புடன்
வாத்தியார்
=======================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

28.11.15

Humour: நகைச்சுவை: காக்காய் கத்துவதற்கும் அம்மா கத்துவதற்கும் என்ன வித்தியாசம்?

Humour: நகைச்சுவை: காக்காய் கத்துவதற்கும் அம்மா கத்துவதற்கும் என்ன வித்தியாசம்?

நகைச்சுவையை நகைச்சுவையாக மட்டும் பாருங்கள். வேறு விவகாரம் வேண்டாம்!
----------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------------
2
---------------------------------------------------------------------------------------------------------------------
3


----------------------------------------------------------------------------------------------
4
என்ன நடக்கிறது?

ரயிலை ஓட்டி வந்த டிரைவர், லெவல் கிராஸிங்கில் ரயிலை நிறுத்திவிட்டு, இறங்கிச் சென்று, அருகே இருக்கும் கடையொன்றில் மீன் வாங்கிக் கொண்டு வந்துவிட்டு, ரயிலில் ஏறி மீண்டும் தன் பயணத்தைத் தொடர்கிறார்.

காணொளியில் உள்ளது. நீங்களே பாருங்கள்!

இது தப்பில்லையா?

நம் நாட்டில் எதுவுமே தப்பில்லை! நாம்தான் சகிப்புத்தன்மையோடு இதை எல்லாம் பார்க்க வேண்டும். மேலும் எதிர்கொள்ள வேண்டும்!


எல்லாமுமே சிரிப்பதற்கு என்றால் எப்படி? கொஞ்சம் சோகத்திற்காக ஒரு செய்தி. கீழே உள்ள பதிவைப் பாருங்கள்
----------------------------------------------------------------
Week end post: சென்னையில் மெட்ரோ ரயில் மாதிரி மெட்ரோ போட் வசதி!

சென்னை நகரத்தில் போட் வசதியா? என்ன சொல்கிறீர்கள் என்று கேட்காமல் கீழே உள்ள காணொளியைப் பாருங்கள்!

--------------------------------------------------------------------------------------------------
எது நன்றாக உள்ளது?
அன்புடன்,
வாத்தியார்
==============================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

27.11.15

பிரம்மா எதற்காகத் தலையில் குட்டுப் பட்டார்? யாரிடம் குட்டுப் பட்டார்?




அருள்மிகு சுவாமிநாதர் திருக்கோயிலின் முன்புறத் தோற்றம்
---------------------------------------------------------------------------------------------------------------
பிரம்மா எதற்காகத் தலையில் குட்டுப் பட்டார்? யாரிடம் குட்டுப் பட்டார்?

பக்தி மலர்

நான்காவது படை வீடு - சுவாமிமலை முருகன் கோவில் 

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் நான்காவது படை வீடாகத் திகழ்வது திருவேரகம் என்று போற்றப்படும் சுவாமிமலை. இங்கு கதிர்வேலனாக முருகப்பெருமான் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். தஞ்சாவூரில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது.

நமது உடலில் உள்ள ஆறு சக்கரங்களில் நான்காவது சக்கரமான `அனாகதம்' எனும் சக்கரத் துடன் இந்த தலத்தை நம்முன்னோர்கள் ஒப்பிட்டு வணங்கியுள்ளனர். அனாகதம் சக்கரம் என்பது ஒருவரது உடம்பில் நெஞ்சுப்பகுதியில் இருப்பதாகும். அதாவது இருதயத்துக்கு நேர் பின்னால் முதுகுத்தண்டில் அனாகதம் சக்கரம் உள்ளது.

இந்த சக்கரம் அன்பு, பாசம், இரக்கம், சகோதரத்துவம், விசுவாசம், பக்தி போன்ற நல்ல இயல்புகளை வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. சுவாமி மலையில் வீற்றிருந்து அருளும் முருகனின் பண்புகள், செயல்பாடுகளுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் அனாகதம் சக்கரம் எந்த அளவுக்கு கச்சிதமாக பொருந்தும் என்பது தெரியும்.

முருகப்பெருமான் அன்பு மிக்கவர்.பாசத்தின் ஊற்றாகத் திகழ்கிறார். முருகப்பெருமான் தன் பக்தர்கள் மீது காட்டும் இரக்கத்துக்கு எவ்வளவோ உதாரணங்களைச் சொல்லாம். அது போல அவர் அம்மை, அப்பனிடம் பக்தியும், விசுவாசமும் கொண்டவர். இந்த நற்பண்பு காரணமாகவே அவர் சுவாமி மலையில் தன் தந்தைக்கே பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்தார்.

அது பற்றிய வரலாறு: 

படைப்புத் தொழிலில் ஆணவம் முற்றியிருந்த பிரம்மா, ஒருமுறை முருகப்பெருமானை சந்திக்க நேர்ந்தது. அப்போது பிரம்மாவிடம், படைப்புத் தொழில் செய்யும் உமக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா என்று முருகப் பெருமான் கேட்கிறார். இந்த கேள்விக்கு பிரம்மாவால் பதில் சொல்ல முடியவில்லை.

பிரணவத்தின் பொருள் தெரியாமல் திகைத்தார். அவரை தலையில் குட்டி, சிறையில் அடைத்தார் முருகப்பெருமான். ஈசனே நேரில் வந்து கேட்டுக்கொண்டதால், பிரம்மாவை அவர் விடுதலை செய்தார். பிறகு சிவபெருமான், "பிரணவத்தின் பொருள் உனக்குத் தெரியுமா?'' என்று முருகனிடம் கேட்டார்.

"ஓ நன்றாகத் தெரியுமே'' என்றார் முருகன். "அப்படியானால் அப்பொருளை எனக்குக் கூற இயலுமா?'' என்றார் ஈசன். "உரிய முறையில் கேட்டால் சொல்வேன்!'' என்றார் முருகன். அதன்படி சிவபெருமான் இந்த சுவாமிமலை தலத்தில் சிஷ்யன் நிலையில் அமர்ந்து, முருகப்பெருமானிடம் பிரணவ உபதேசம் கேட்டார்.

இவ்வாறு இறைவனான சிவபெருமானுக்கே முருகன் குருநாதனாக ஆனதால், அவரை சுவாமிநாதன் என்றும், பரமகுரு என்றும், தகப்பன்சாமி என்றும் போற்றுகிறோம். அதனாலேயே இந்த தலமும் சுவாமிமலை என்று பெயர் பெற்றுவிட்டது. இத்தலத்தில் சுவாமிநாதன் நான்கரை அடி உயரத்தில், நின்ற கோலத்தில் கம்பீரமாகக் காட்சித் தருகிறார்.

வலது கரத்தில் தண்டாயுதம் தரித்து, இடது கரத்தை இடுப்பில் வைத்து, சிரசில் ஊர்த்துவ சிகாமுடியும், மார்பில் பூணூலும் ருத்திராட்சமும் விளங்க... கருணாமூர்த்தியாக காட்சித் தருகிறார். முகத்தில் ஞானமும் சாந்தமும் தவழ்வதை கண்குளிரப் பார்க்க முடிகிறது. தத்துவத்தின் அடிப்படையில் பார்த்தால் சுவாமிமலை தலம் காற்று தலமாக உள்ளது. முருகப் பெருமான் கிரியா சக்தியாக உள்ளார்.

வடிவம் என்று எடுத்துக்கொண்டால் சுவாமி மலையில் முருகன் "சொல் வடிவு'' எனும் நிலையில் உள்ளார். அதன்படி அனாகதம் இவ்வுலக சுகத்தைக் தரும் என்பது ஐதீகமாகும். தந்தைக்கு உபதேசம் செய்த இடம் என்பதால், இத்தலத்தில் வழிபடுவர்களுக்கு ஞானம், சுகவாழ்வு, மகிழ்ச்சி எல்லாம் கிடைக்கும்.

மகாமண்டபத்தில் மயிலுக்குப் பதிலாக முருகனுக்கு இந்திரனால் வழங்கப்பட்ட ஐராவதம் என்ற யானை நிற்கிறது. கிழக்கு நோக்கி நின்று திருவருள் பாலிக்கும் சுவாமிநாதனுக்கு, தங்கக் கவசம், வைரவேல், தங்க சகஸ்ர நாம மாலை, ரத்தின கிரீடம் போன்ற பல்வேறு அணிகலன்களும் பூட்டி பக்தர்கள் அழகு பார்க்கின்றனர்.

தலவிருட்சம் நெல்லி : 

நெல்லி மரம் சுவாமிமலையின் தல விருட்சமாகும். நெல்லி மரத்தை வடமொழியில் "தாத்ரி'' என்பர். அதனால் சுவாமிமலையை "தாத்ரிகிரி'' என்றும் குறிப்பிடுகின்றனர். மேலும் சிவகிரி, குருவெற்பு, குருமலை, சுவாமி சைலம் போன்ற பெயர்களும் உண்டு. வடமொழியில் சுவாமிநாதனை "ஞானஸ்கந்தன்'' என்று போற்றுகின்றனர்.

அருணகிரிநாதர் 38 திருப்புகழ்ப் பாடல்களை இந்த சுவாமிநாதனுக்கு பாமாலையாக சூட்டியுள்ளார். சுவாமிமலையைச் சேர்ந்த கடுக்கண் தியாகராஜ தேசிகர் என்பவர் சுவாமிமலை நவரத்தின மாலை என்ற நூலை இயற்றியுள்ளார். "ஒருதரம் சரவணபவா...'' என்று தொடங்கும் நவரத்தின மாலையின் மூன்றாவது பாடல் மிகவும் பிரபலமானது. அவ்வாறே, சங்கீத மூர்த்தி ஸ்ரீமுத்துசுவாமி தீட்சிதர் இயற்றிய, "சுவாமிநாத பரிபாலயாதுமாம்" என்ற நாட்டை ராகக் கிருதியும் மிகவும் பிரபலமானது.

திருவிழாக்கள் விவரம் :   

இங்கு முக்கிய திருவிழாவாக திருக்கார்த்திகை திருவிழா 10 நாட்கள் நடைபெறுகிறது. பிற விழாக்கள் : சித்திரையில் 10 நாள் பிரம்மோற்சவம், வைகாசி விசாகப் பெருவிழா, ஆவணி மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் பவித்ரோற்சவம், புரட்டாசி மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் நவராத்திரி பெருவிழா, ஐப்பசி மாதத்தில் கந்த சஷ்டி விழா, மார்கழியில் திருவாதிரைத் திருநாள், தை மாதத்தில் தைப்பூசப் பெருவிழா, பங்குனியில் வள்ளி திருக்கல்யாணம் ஆகிய விழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
------------------------------------
திருமண வரம், குழந்தை வரம், குடும்ப ஐஸ்வர்யம், தீர்க்காயுள், கல்வி, கேள்விகளில் சிறந்த ஞானம், உயர் படிப்பு, வேலை வாய்ப்பு, உத்யோக உயர்வு என அனைத்து கோரிக்கைகளுக்கும் இவரை வேண்டி பெருமளவிலான பக்தர்கள் தம் பிராத்தனைகள் நிறைவேறிட, வணங்கிச் செல்கின்றனர்.

சுவாமிநாதனை வழிபட்டால் நமக்கு வரும் இடையூறுகள், நோய்கள், பிராணிகள், பூதம், தீ, நீர், வெள்ளம், செய்த பாவம் ஆகியவற்றால் விளையும் தீமைகள் விலகும் என்பது நிச்சயம்.

கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து ஏராளமான சிற்றுந்துகள் சுவாமி மலைக்கு இயக்கப்படுகின்றன. சிற்றுந்துகள் வழியாக சுவாமிமலை முருகன் கோயில் அருகே சென்று இறங்கி அங்கிருந்து நடந்து செல்லலாம்.

இதுவரை இத்தலத்திற்கு சென்றிருக்காதவர்கள், ஒருமுறை சென்று வாருங்கள். சுவாமிநாதனின் அருளைப் பெற்று வாருங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
--------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

26.11.15

Astrology: நீங்களும் உங்கள் நட்சத்திரமும்!


Astrology: நீங்களும் உங்கள் நட்சத்திரமும்!

27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள்

நமது மாணவக் கண்மணிகளின் நலம் கருதி , ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் உரிய திருத்தலங்களைப் பற்றிக் கீழே கொடுத்துள்ளேன். அந்த ஸ்தலங்கள் அனைத்தும் , பலப்பல யுக வரலாறுகளைக் கொண்டவை. இடையில் அழிவு ஏற்பட்டாலும், அதன் பிரதி பிம்பங்களாய் தன்னையே புதுப்பித்துக் கொண்டவை.  எத்தனையோ மகான்களும், ரிஷிகளும், தேவர்களும் வழிபட்ட, இன்றளவும் நல்ல ஆன்மீக அதிர்வுகளைக் கொண்டு, தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பவை.

அவற்றையெல்லாம் விட முக்கியமான செய்தி - அந்த நட்சத்திரங்களுக்குரிய தேவதைகள் , சூட்சும ரீதியாக இங்கே தினமும் ஒரு தடவையாவது தங்களுக்குரிய ஆலயத்திற்கு வந்து வழிபாடு செய்கின்றனவாம்.

அதற்கு ஆதாரம் கேட்டு மண்டையைப் பிய்த்துக் கொள்ளாதீர்கள். சில விஷயங்களை நம்பிக்கையின் அடிப்படையில் கடைப்பிடிக்க வேண்டியதுதான்.

மனிதராய் பிறந்த அனைவர்க்கும், அவரவர்  கர்மவினையே -  லக்கினமாகவும், ஜென்ம நட்சத்திரமாகவும், பன்னிரண்டு வீடுகளில் நவக்கிரகங்கள் அமர்ந்து -  பெற்றெடுக்கும் பெற்றோர்களையும், பிறக்கும் ஊரையும்,  வாழ்க்கை துணையையும் , அவர் வாழ்வில் நடக்கும் முக்கிய சம்பவங்களையும் , வாழ்க்கையையுமே தீர்மானிக்கிறது.

நமது பூர்வ ஜென்ம தொடர்புடைய ஆலயங்களுக்கு, நம்மை அறியாமலே நாம் சென்று வழிபடும்போது,  நமது கர்மக்கணக்கு நேராகிறது. அப்படி நிகழும்போது நம் வாழ்வில் ஏற்படும் பல தடைகளும், தீராத பிரச்னைகளும் தீர்ந்து , மனதளவில் நமக்கு பலமும், மாற்றமும் ஏற்படுகின்றன.

கீழே கொடுக்கப்பட்டுள்ள அவரவர்க்குரிய நட்சத்திர தலத்தை  -  உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் தினத்தன்று , ஆத்ம சுத்தியுடன், நம்பிக்கையுடன் வழிபட்டு வாருங்கள். அதன் பிறகு உங்கள் வாழ்வில் நிச்சயம் ஒரு புது வெளிச்சம் பிறக்கும்.

உங்களால் முடிந்தவரை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சாதாரண தினங்களில் கூட  இந்த ஆலயங்களில் சென்று வழிபட்டு வர , உங்கள் கஷ்டங்கள் வெகுவாகக் குறையும்.

செலவோடு செலவாக பணத்தைச் செலவழித்துக் கொண்டு, ஒரு முறை உங்களுக்கு உரிய ஆலயத்திற்குச் சென்று வழிபட்டுவிட்டு வாருங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
--------------------------------------------------
நட்சத்திரங்களுக்கான ஆலயங்களும், அவைகள் அமைந்த இடங்களும்:

1.அஸ்வினி.
அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில்.
இருப்பிடம்: திருவாரூரில் இருந்து 30 கி.மீ.தூரத்தில் திருத்துறைப் பூண்டி உள்ளது. பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒரு கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது.

2.பரணி.
அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்.
இருப்பிடம்: மயிலாடு துறையிலிருந்து(15 கி.மீ.)நெடுங்காடு வழியாக காரைக்கால் செல்லும் வழியில் நல்லாடை என்னும் ஊரில்  உள்ளது.

3.கார்த்திகை.
அருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்:  மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் கஞ்சாநகரம் அமைந்துள்ளது. மெயின் ரோட்டிலிருந்து பிரியும் ரோட்டில் அரை கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம்.

4.ரோஹிணி.
அருள்மிகு பாண்டவதூதப்பெருமாள் திருக்கோயில்
இருப்பிடம்: காஞ்சிபுரம் ஏகாம் பரேஸ்வரர் கோயில் எதிரில் உள்ள சாலையில் கோயில் அமைந்துள்ளது.

5.மிருக சீரிஷம்.
அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில்
இருப்பிடம் : தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் 50 கி.மீ., தூரத்தில் முகூந்தனூர் உள்ளது. இந்தஸ்டாப்பில் இருந்து, ஒரு கி.மீ. தூரம் சென்றால் கோயிலை அடையலாம்.

6.திருவாதிரை.
அருள்மிகு அபய வரதீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம் : தஞ்சாவூரில் இருந்து 70 கி.மீ., தூரத்திலுள்ளபட்டுக்கோட்டை சென்று, அங்கிருந்து 12 கி.மீ. சென்றால் அதிராம்பட்டினத்தில் உள்ள இந்த ஆலயத்தை அடையலாம்.

7.புனர்பூசம்.
அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம் : வேலூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில், 67 கி.மீ., தூரத்தில் வாணியம்பாடி உள்ளது. பஸ்ஸ்டாண்டில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள பழைய வாணியம் பாடியில் கோயில் உள்ளது.

8.பூசம்.
அருள்மிகு அட்சய புரீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: பட்டுக்கோட்டையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் 30 கி.மீ., சென்றால் விளங்குளம் விலக்கு வரும். அங்கிருந்து தெற்கே 2 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம். புதுக்கோட்டையில் இருந்து பேராவூரணி வழியாகவும் விளங்குளத்தை அடைய வழியிருக்கிறது.

9.ஆயில்யம்.
அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில்.
இருப்பிடம்: கும்பகோணத்தில் இருந்து சூரியனார் கோவில் செல்லும் ரோட்டில் 11 கி.மீ., தூரத்தில் உள்ள திருவிசநல்லூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். திருவிசநல்லூரில் இருந்து ஆட்டோ வசதி உண்டு

10.மகம்.
அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில்.
இருப்பிடம்: திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் ரோட்டில் 12 கி.மீ., தூரத்தில் விராலிப்பட்டி விலக்கு உள்ளது. இங்கிருந்து 2 கி.மீ., மினிபஸ்சில் சென்றால் கோயிலை அடையலாம். ஆட்டோ வசதியும் உண்டு.

11.பூரம்.
அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 7 கி.மீ., சென்றால் வரும் திருவரங்குளம் என்னும் ஊரில் ஆலயம் உள்ளது.

12.உத்திரம்.
அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில்.
இருப்பிடம் : திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து 22 கி.மீ. தூரத்திலுள்ள லால்குடி சென்று அங்கிருந்து 5 கி.மீ. தூரத்திலுள்ள இடையாற்று மங்கலம் என்னும் ஊரில் உள்ளது.

13.ஹஸ்தம்.
அருள்மிகு கிருபா கூபாரேச்வரர் திருக்கோயில்.
இருப்பிடம்: கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள குத்தாலத்திலிருந்து பிரியும் ரோட்டில் 8 கி.மீ. தூரத்தில் கோமல் என்னும் ஊரில் உள்ளது.குத்தாலத்திலிருந்து பஸ், ஆட்டோ வசதி உள்ளது.

14.சித்திரை.
அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்.
இருப்பிடம்: மதுரையில் இருந்து 23 கி.மீ., தூரத்திலுள்ள குருவித்துறைக்கு மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ் உள்ளது. குருவித்துறையில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. வியாழன், பவுர்ணமி தினங்களில்  கோயில் வரை பஸ்கள் செல்லும். மற்ற நாட்களில் ஆட்டோவில் செல்ல வேண்டும்.

15.சுவாதி.
அருள்மிகு தாத்திரீஸ்வரர் திருக்கோயில்.
இருப்பிடம்: சென்னை பூந்தமல்லியில் இருந்து தண்டுரை என்ற ஊருக்கு செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் சித்துக்காடு என்ற ஊரில் இத்தலம் உள்ளது. குறித்த நேரத்தில் மட்டுமே பஸ் உண்டு என்பதால், பூந்தமல்லியில் இருந்து வாகனங்களில் சென்று திரும்பலாம்.

16.விசாகம்.
அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில்.
இருப்பிடம் : மதுரையில் இருந்து 155 கி.மீ., தொலைவிலுள்ள செங்கோட்டை சென்று, அங்கிருந்து 7 கி.மீ., தூரத்திலுள்ள திருமலைக்கோவிலை பஸ் மற்றும் வேன்களில் அடையலாம். இவ்வூரைச் சுற்றி பிரபல ஐயப்ப ஸ்தலங்களான ஆரியங்காவு, அச்சன் கோவில், குளத்துப்புழை ஆகியவை உள்ளன

17.அனுஷம்.
அருள்மிகு மகாலட்சுமிபுரீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் 7 கீ.மீ. தூரத்தில் திரு நின்றியூர் என்னும் ஊரில் இத்தலம் அமைந்துள்ளது.

18.கேட்டை.
அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்
இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 13 கி.மீ., தூரத்திலுள்ள பசுபதிகோயில் பஸ் ஸ்டாப்பில் இருந்து அரை கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது.

19.மூலம்.
அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில்.
இருப்பிடம்: சென்னை கோயம்பேட்டில் இருந்து தக்கோலம் செல்லும் வழியில் 45 கி.மீ., தூரத்தில் மப்பேடு என்ற ஊரில்  உள்ளது. (பூந்தமல்லியிலிருந்து 22 கி.மீ. பேரம்பாக்கம் செல்லும் வழியில் மப்பேடு உள்ளது.)

20.பூராடம்.
அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில்.
இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து (13 கி.மீ.,) திருவையாறு சென்று, அங்கிருந்து கல்லணை செல்லும் வழியில் 4 கி.மீ., தூரம் சென்றால் கடுவெளியை அடையலாம். பஸ் ஸ்டாப் அருகிலேயே கோயில் அமைந்துள்ளது.

21.உத்திராடம்.
அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்.
இருப்பிடம்: சிவகங்கையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் உள்ள (12 கி.மீ.,) ஒக்கூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 3 கி.மீ., சென்றால் பூங்குடி என்ற ஊரில் உள்ளது. ஆட்டோ உண்டு. மதுரையில் இருந்து (45 கி.மீ.,) இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை நேரடி பஸ் வசதி உண்டு.

22.திருவோணம்.
பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில்.
இருப்பிடம்: வேலூரிலிருந்து சென்னை செல்லும் வழியில் 20 கி.மீ., தூரத்திலுள்ள காவேரிப்பாக்கத்தில் இறங்கி, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2 கி.மீ. சென்றால் திருப்பாற்கடலை அடையலாம். ஆற்காடு, வாலாஜா விலிருந்தும் பேருந்துகள் உள்ளன. இவ்வூரில் இரண்டு பெருமாள் கோயில்கள் இருப்பதால், பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் என கேட்டு செல்லவும்

23.அவிட்டம்.
அருள்மிகு பிரம்மஞான புரீஸ்வரர் திருக்கோயில்.
இருப்பிடம் : கும்பகோணம் மகாமகக்குளம் மேற்குக் கரையிலிருந்து 4 கி.மீ. தூரத்தில் கோயில்அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து தாராசுரம், முழையூர் வழியாக மருதாநல்லூர் செல்லும் பஸ்களில் கொருக்கை என்னும் இடத்தில் உள்ளது..

24.சதயம்.
அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில்.
இருப்பிடம்: திருவாரூர் மாவட்டம், நன்னிலத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 10 கி.மீ. தொலைவில் திருப்புகலூர் என்னும் ஊரில் உள்ளது.

25.பூரட்டாதி.
அருள்மிகு திருவானேஷ்வர் திருக்கோயில்.
இருப்பிடம்: திருவையாறிலிருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ள திருக் காட்டுப்பள்ளி சென்று, அங்கிருந்து அகரப் பேட்டை செல்லும் ரோட்டில் 2 கி.மீ. தூரம் சென்றால் ரங்கநாதபுரம் என்னும் ஊரில் உள்ளது.

26.உத்திரட்டாதி.
அருள்மிகு சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில்.
இருப்பிடம்: புதுக்கோட்டையில் இருந்து 40 கி.மீ.தூரத்திலுள்ள ஆவுடையார்கோவில் சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் வழியில் 21 கி.மீ தூரத்தில் தீயத்தூர் உள்ளது.  மதுரையில் இருந்து செல்பவர்கள், அறந்தாங்கி சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் பஸ்களில் சென்றால் தீயத்தூர் என்னும் இடத்தில் உள்ளது. தூரம் 120 கி.மீ.

27.ரேவதி.
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்.
இருப்பிடம்: திருச்சியிலிருந்து முசிறி (40கி.மீ)சென்று, அங்கிருந்து வேறு பஸ்களில் தாத்தய்யங்கார் பேட்டை(21 கி.மீ) செல்ல வேண்டும். இங்கிருந்து 5 கி.மீ.தூரத்திலுள்ள காருகுடி என்ற ஊரில் இக்கோயில் உள்ளது.
---------------------------------------------------------------------------------------
என்ன சரிதானா?
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.11.15

ரேஷன் கார்டையும் ஆதார் அட்டையையும் தூக்கிக்கொண்டு அலைய வேண்டாமா? இதைப் படியுங்கள்!


ரேஷன் கார்டையும் ஆதார் அட்டையையும் தூக்கிக்கொண்டு அலைய வேண்டாமா? இதைப் படியுங்கள்!

நாட்டில் எந்த செயல்பாட்டிற்கும், அடையாள அட்டை (முக்கியமாக ஓட்டுனர் உரிமம் - அதாங்க டிரைவிங் லைசென்ஸ்) மற்றும் குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) ஆகியவற்றைக் கேட்கிறார்கள். பெண்களுக்குக் கழுத்தில் தாலியும், கால்களில் மெட்டியும் அடையாளச் சின்னங்கள். ஆண்களுக்கு நான் முதல் வரியில் குறிப்பிட்டுள்ள அட்டைகள் இரண்டும் அடையாளச் சின்னங்கள். கழுத்தில் கட்டித் தொங்க விட்டுக் கொண்டால் மறக்காது.

ஆனால் அவை எல்லாம் இல்லாத பிறவிக்கு என்ன செய்வது? முக்தி அடைவதைத் தவிர வேறு வழியில்லை. சரி, முக்திக்கு என்ன செய்வது? கீழே கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள்.

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------------

திருவண்ணாமலை: 

முக்தி தரும் தலங்களில் திருவண்ணாமலை - நினைத்தாலே முக்தி தரும் என்பது சைவர்களின் நம்பிக்கையாகும். ஆகவே அண்ணாமலையாரை தினமும் 3 முறைகளாவது நினையுங்கள். முக்தி அடைவீர்கள். அடுத்த
பிறவி இருக்காது. ரேஷன் கார்டையும் ஆதார் அட்டையையும் தூக்கிக்கொண்டு அலைய வேண்டியதிருக்காது.

சொல்லிலக்கணம்
திருவண்ணாமலை -
அருணாச்சலம் -
அண்ணாமலை - அண்ணா என்ற சொல்லுக்கு நெருங்க இயலாதது என்று பொருளாகும். பிரம்மாவினாலும் திருமாலினாலும் சிவபெருமானின் அடியையும், முடியையும் நெருங்க இயலாததால் இம்மலையை அண்ணாமலை என்று அழைக்கின்றனர்.

காலம்
திருவண்ணாமலையிலுள்ள மலையானது 260 கோடி ஆண்டுகள் பழமையானது என டாக்டர் பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார். சைவர்களின் நம்பிக்கைப் படி இம்மலையானது கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் தங்க மலையாகவும், தற்போது நடைபெறும் கலி யுகத்தில் கல் மலையாகவும் இருக்கிறது.

அடடா, தங்க மலையாக இருந்த காலத்தில் நாம் இருந்தோமா என்பது தெரியவில்லையே!
========================================================
பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்ற மகா தேரோட்டம் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ள வெகு சிறப்பாக நேற்று நடைபெற்றது. ஒரே நாளில் 5 தேர்கள் பவனி வந்ததை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


நவம்பர் 25ம் தேதி மகாதீபத்திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் 8000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மகா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. பஞ்ச ரதங்களுக்கு சிறப்புப் பூஜை செய்யப்பட்டது.

முதலில், விநாயகர் தேர் காலை 6.45 மணிக்கு புறப்பட்டது. அந்த தேர், நிலைக்கு வந்து சேர்ந்ததும் முருகன் தேர் புறப்பட்டுச் சென்றது. மாடவீதியில் சுமார் 3 மணி நேரம் வலம் வந்த தேர் பின்னர் நிலையை அடைந்தது. அதன்பிறகு, உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் தேரோட்டம் நடைபெற்றது. மதியம் 2 மணிக்கு பெரிய தேர் புறப்பட்டது. மாட வீதியான தேரடி வீதி, திருவூடல் தெரு, கோபுர வீதி வழியாக பவனி வந்து, 7 மணி நேரத்துக்குப் பிறகு நிலையை சென்றடைந்தது. 5 தேர்தர்கள் பவனி பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுக்கும் பராசக்தி அம்மன் தேரோட்டமும் மற்றும் சண்டிகேஸ்வரர் தேரோட்டமும் நடைபெற்றது. ஓரேநாளில், 5 தேர்கள் பவனி வருவது கூடுதல் சிறப்பாகும்.

மகா தேரோட்டத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தேரோட்டத்தின்போது குழந்தைகளை கரும்புத் தொட்டிலில் சுமந்த பக்தர்கள், மாட வீதியை சுற்றி வந்து வேண்டுதலை நிறைவேற்றினர். கொட்டும் மழையில் தேரோட்டம் மகா தேரோட்டம் நடைபெற்ற போது கனமழை பெய்தது. கொட்டும் மழையில் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா' என்று முழக்கமிட்டு ஒவ்வொரு தேரையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

காலையில் தொடங்கிய மகா தேரோட்டம், நள்ளிரவில் நிறைவு பெற்றது.

மகாதீபம்: இதைத்தொடர்ந்து அண்ணா மலை கோயிலில் 25ம் தேதி காலை 4 மணிக்கு பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. தீபம் ஏற்றுவதற்காக 3,500 கிலோ நெய் மற்றும் ஆயிரம் மீட்டர் திரி (காடா துணி) ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தீபக் கொப்பரை சென்றது இந்நிலையில் மகாதீபம் ஏற்றப்படும் தீபக் கொப்பரைக்கு இன்று காலை அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் சுமார் 200 கிலோ எடையுள்ள தீப கொப்பரையை 15க்கும் மேற்பட்டோர் கொட்டும் மழை மலைக்கு உச்சிக்கு எடுத்து சென்றனர்.

இன்று அதிகாலை தீபம் ஏற்றுவதற்கான நெய் மற்றும் திரி ஆகியவை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்படும்.

உள்ளூர் விடுமுறை அண்ணாமலையார் கோவில் மகாதீப விழாவை முன்னிட்டு நவம்பர் 25ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக 8000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இன்றைய தினம் தமிழகம் முழுவதிலும் இருந்தும் திருவண்ணாமலைக்கு 2400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

செய்தி Source: http://tamil.oneindia.com/news/tamilnadu/karthigai-deepam Thanks to that people
----------------------------------------------------------

கார்த்திகை தீபத்தைக் காண திருவண்ணாமலைக்குப் போக முடியவில்லையா? கவலை வேண்டாம். தொலைக்காட்சியில் இன்று
மாலை நேரடி ஒளிபரப்பு இருக்கும். கண்டு இன்புறுங்கள்
============================================================
வாழ்க வளமுடன்!
 வளர்க நலமுடன்!

24.11.15

சினிமா: என்ன நக்கல்டா சாமி!



சினிமா: என்ன நக்கல்டா சாமி!

 திரைப்படப் பாடல். அதுவும் தத்துவப் பாடல். அதில் என்ன நக்கலாக சமூகத்தின் அவலங்களைக் கவிஞர் பிளந்து கட்டியிருக்கிறார் - நீங்களே பாருங்கள்!

 பாடலின் சரணத்தை இப்படித் துவக்கினார் கவிஞர்:

 ”உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு - இங்கே 
கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு 
கொண்டாடும் போது ஒரு நூறு பேரு - உயிர் 
கூடு விட்டுப் போன பின்னே கூட யாரு?” 
(உண்டாக்கி விட்டவர்கள்) 

 ஒரு மனிதன் உலகத்திற்கு வருவதற்குக் காரணம் இரண்டு பேர்கள். அதாவது அவனது பெற்றோர்கள். ஆடி முடித்து, அவன் சனீஷ்வரனிடம் போர்டிங் பாஸ் வாங்கி தன் கடைசிப் பயணத்தை நடத்துவதற்கு உதவுபவர்கள் 4 பேர்கள். அதை எளிமையாகச் சொன்ன கவிஞர், அதற்கு பிறகுதான் சாட்டையைக் கையில் எடுக்கிறார். வரிகளைப் பாருங்கள்:

 ”தீராத நோய்களையும் தீர்த்து முடித்தான் - இவன் 
தேராத வைத்தியத்தைத் தேர்ந்து படித்தான் 
படித்தான் முடித்தான் ஹோய் 
தீராத நோய்களையும் தீர்த்து முடித்தான் - இவன் 
தேராத வைத்தியத்தைத் தேர்ந்து படித்தான் - பிறர் 
நோய் தீர்க்கும் வைத்தியன் தன் 
நோய் தீர்க்க மாட்டாமல் பாய் போட்டுத் தூங்குதப்பா - உயிரும் 
பேயோடு சேர்ந்ததப்பா ஹோய்” 

 மருத்துவர். எத்தனையோ மனிதர்களின் நோய்களைத் தீர்த்தவர், அவருக்கு நோய் வந்த போது, அதைத் தீர்க்க முடியாமல் போய்ச் சேர்ந்ததைச் சொல்லி, காலம் வரும்போது, மருத்துவமாவது, மருந்தாவது - ஒன்றும் பயன்படாது என்பதை கவிஞர் தனக்கே உரிய பாணியில் சொல்கிறார்

 அத்துடன் விட்டாரா? அடுத்து பஞ்சாங்கம் பார்த்து சுப காரியங்களுக்கு நேரம் குறித்துக் கொடுக்கும் ஜோதிடரையும் ஒரு பிடி பிடிக்கிறார்: வரிகளைப் பாருங்கள்:

 கல்யாணம் செய்வதற்கும் நாள் சொல்லுவார் - எந்தக்
காரியத்தை செய்வதற்கும் தேதி குறிப்பார்
கல்யாணம் செய்வதற்கும் நாள் சொல்லுவார் - எந்தக்
காரியத்தை செய்வதற்கும் தேதி குறிப்பார் - நல்ல
சேதி சொல்லும் ஜோசியர்க்கும் நீதி சொல்லும் சாவு வந்து
தேதி வைத்து விட்டதடியோ - கணக்கில்
மீதி வைக்கவில்லையடியோ ஹோய்

 காலம் அவருக்கே தேதி குறித்துக் கொடுத்துவிட்டதை அசத்தலாகச் சொல்கிறார்!

 பிறகு பணம் பணம் என்று அலைந்து பல வழிகளிலும் பணத்தைச் சேர்த்து சொத்துக்களாக வாங்கிக் குவிக்கும் பணக்காரர்களையும் தன் சாட்டையால் ஒரு பிடி பிடிக்கிறார். பாடல் வரிகளைப் பாருங்கள்:

பட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான் - அந்தப்
பட்டயத்தில் கண்டது போல் வேலியெடுத்தான்
எடுத்தான் முடித்தான் ஹோய்
பட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான் - அந்தப்
பட்டயத்தில் கண்டது போல் வேலியெடுத்தான் - அதில்
எட்டடக்கு மாடி வைத்துக் கட்டிடத்தைக் கட்டி விட்டு
எட்டடிக்குள் வந்து படுத்தான் - மண்ணைக்
கொட்டியவன் வேலியெடுத்தான் ஹோய்

உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு - இங்கே
கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு
கொண்டாடும் போது ஒரு நூறு பேரு - உயிர்
கூடு விட்டுப் போன பின்னே கூட யாரு?

 நீ நன்றாக பணம் பதவி செல்வாக்கோடு இருக்கும்போது அதைக்
கொண்டாடி அனுபவைப்பதற்கு உன்னோடு ஒரு நூறு பேராவது இருக்கிறார்களே - நீ இறந்து இடுகாட்டுக்குப் போகும் போதும்,
அதற்குப் பின் மேல் உலகம் போகும்போதும் உன்னுடன் யார்
வருவார்கள் என்று என்றைக்காவது யோசித்துப் பார்த்தாயா என்று
நச்’சென்று கேட்டார் பார்த்தீர்களா? அதுதான் இந்தப் பாடலின்
முத்தாய்ப்பான வரி!

 படம்: முகராசி 
 பாடலை இயற்றியவர்: கவிஞர் வாலி 
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் 
இசை: கே.வி. மஹாதேவன் 
ஆண்டு: 1968 
சரி நடிப்பு யார்? பாடலின் காணொளி உள்ளது நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்!
 அன்புடன் 
வாத்தியார் 
======================================


Our sincere thanks to the person who uploaded this video in the net
===================================================
வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!

23.11.15

அறுவடைக்கும் திருமணத்திற்கும் என்ன வித்தியாசம்?

அறுவடைக்கும் திருமணத்திற்கும் என்ன வித்தியாசம்?

மனவளக் கட்டுரை! எண்ணிக்கை வடிவில்!

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்.
2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.
3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என்
நிழலே போதும்
5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.
7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக்குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்
8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்து கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.
9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.
10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.
11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்.
12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்.
13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்.
14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை.
15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்.
16. யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம்.
17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்.
18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது . பயத்தை உதறி எறிவோம்.
19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒரு வருடன் விவாதிப்பது சிறப்பாகும்.
20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்.
21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்.
22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.
23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.
24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்.
25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும். அப்போது தான் முன்னேற முடியும்.
26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்.
27. வெற்றி பெற்ற பின் தன்னை அடக்கி வைத்து கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்.
28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.
29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்.
31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்.
32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர் தான் கோழைத்தனம்.
33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.

இவற்றுள் எது அதி முக்கியமானது?
அன்புடன்
வாத்தியார்
------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

21.11.15

Week end Posts: அடப் பாவிகளா...... வாழைப்பழத்தை இப்படியா பழுக்க வைக்கிறீர்கள்?

Week end Posts: அடப் பாவிகளா...... வாழைப்பழத்தை இப்படியா பழுக்க வைக்கிறீர்கள்?

எத்தனால் என்ற இராசயனக் கலவையை 50 மில்லி லிட்டர் அளவில்
20 லிட்டர் தண்ணீரில் கலந்து அதில் பழுக்காமல் சந்தைக்கு வந்த வாழைக்காய் சீப்புக்களை முக்கி எடுத்து வைத்து விடுவார்களாம்.
15 நாட்களில் பழுக்க வேண்டிய காய்கள் ஒரே நாளில் பழுத்து விடுமாம். எங்கே நடக்கிறது இந்த அக்கிரமம் ? கர்நாடகாவில் உள்ள குல்பர்கா
நகரிலாம். செய்தி வடிவில் ஆதாரத்துடன் காணொளி உள்ளது. பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த அவலம் நம் ஊர்களிலும் பரவ எத்தனை நாள் ஆகும்? அதையும் யோசித்துப் பாருங்கள்!


-----------------------------------------------------------
2

கள்ளின் மறுபக்கம்

கள் குடிப்பதைக் கேள்விப் பட்டிருப்பீர்கள்! கள்ளின் வேறு உபயோகம்
 என்ன தெரியுமா - தெரிந்து கொள்ளுங்கள். காணொளி உள்ளது.
ஆமாம் எண்ணெய்க்குப் பதிலாக கள்ளை ஊற்றிச் சமைக்கிறார்கள்.



புதிது புதிதாக என்னென்ன செய்கிறார்கள் சாமிகளா!

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

20.11.15

பாரப்பா பழநியப்பா - உன் புகழோ பெரியதப்பா!



பாரப்பா பழநியப்பா - உன் புகழோ பெரியதப்பா!

பழனி முருகன் கோவில் முருகனது சிறப்புடைய கோவில்களில் ஒன்றாகும். இது தமிழ்நாட்டில், மதுரையில் இருந்து 115 கிமீ மேற்கே உள்ள பழனியில் அமைந்துள்ளது. இங்குள்ள முருகனது சிலை போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. முருகனது கோவில் குன்றின் உச்சியில் அமைந்துள்ளது.

கோவில் வரலாறு:

ஒருநாள் நாரதர் மிக அரிதாக கிடைக்கும் ஞானப்பழத்தை பரமசிவனுக்கு படைப்பதற்காக கொண்டு வந்தார். அப்பொழுது அருகிலிருந்த உமையாள் அந்தப் பழத்தை தனது குமாரர்களான குமரனுக்கும், விநாயகனுக்கும் பகிர்ந்து கொடுக்க விரும்பினாள். ஆனால் பரமசிவனோ பழத்தை பகிர்ந்தால் அதன் தனித்தன்மை போய்விடும் எனக்கூறி தனது மைந்தர்கள் இருவருக்கும் ஒரு போட்டியை அறிவித்தார் அதில் உலகத்தை யார் முதலில் சுற்றிவருகிறார்களோ அவர்களுக்கு அந்த ஞானப்பழத்தை பரிசாக அறிவித்தார். குமரனோ தனது மயில் வாகனத்தில் ஏறி உலகத்தை சுற்றி வந்தார். விநாயகனோ தனது பெற்றோரை உலகமாக கருதி அவர்களை சுற்றிவந்து ஞானப்பழத்தை வென்றார். இதனால் ஏமாற்றமடைந்த குமரன் அனைத்தையும் துறந்து பழனி மலையில் குடியேறினார். அன்றிலிருந்து அவரது நின்ற இடம் "பழம் நீ " (பழனி) என அழைக்கப்படுகிறது. பழனிமலை அங்கே வருவதற்கு உதவியவர் இடும்பன். அவர் பெரிய தராசின் முலம் பழனிமலையும் இடும்பமலையையும் தூக்கிக்கொண்டு வந்து வைத்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.

பழனி முருகன் கோவில் முருகனது அறுபடை வீடுகளில் மூன்றாவதாகும். இக்கோவில் மிகவும் புராதனமான கோவிலாகும். இது கடல்மட்டத்தை விட 1500 அடி உயர குன்றின் மீது அமைந்துள்ளது.இங்கு முருகன் தண்டாயுதபாணி சுவாமி என்ற பெயரில் கோவில் கொண்டுள்ளார்.


முருகன் சிலையின் சிறப்பு

முருகனின் சிலை நவபாஷாணத்தால், சித்தர்களில் ஒருவரான போகரால் வடிவமைக்கப்பட்டது. நவபாஷாணம் எனப்படுவது ஒன்பது வகையான நச்சுப்பொருட்கள் சேர்ந்தது. இந்த நவபாஷாண சிலை மீன்களை போன்று செதில்களை கொண்டதாக கூறப்படுகிறது. தற்பொழுது இந்த சிலை சிறிது பழுதுபட்டுள்ளது. இரவில் இந்த சிலையின் மீது முழுவதுமாக சந்தனம் பூசப்பட்டு (சந்தனக்காப்பு) காலையில் விசுவரூப தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் சிறு வில்லை பிரசாதமாக வழங்கப்படுகிறது இது மிகச்சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.

போகர் வரலாறு

போகர் தமிழ் நாட்டிலுள்ள பிரபலமான சித்தராவார். இவர் நவபாஷாண முருகன் சிலையை செய்ததே மிகசுவையான தகவலாகும். அகத்திய முனிவருக்கும், போகருக்கும் தொழில் ரீதியாக போட்டியிருந்து வந்தது. அகத்தியர் தன்னை நாடி வருவோர்க்கு பஸ்பம்,வில்லை போன்று மருந்துகள் அளித்து நோயை குணப்படுத்தி வந்தார். போகரோ நவபாஷாணம் கொண்டு செய்த வில்லைகளை தன்னை நாடி வருவோர்க்கு அளித்துவந்தார்.

அகத்தியரின் மருந்துகளால் சீக்கிரமாக மக்கள் குணமடைந்து வந்தனர். ஆனால் போகரின் மருந்துகளுக்கு வீரியம் அதிகமானதால் மக்கள் உயிரிழந்தனர். இது கண்ட போகர் நவபாஷணத்தால் ஒரு சிலை செய்து அதன் மீது சந்தனத்தை பூசி அதிலிருந்து ஒரு குண்டுமணி அளவுக்கு வில்லையாக தன்னை நாடி வருபவர்களுக்கு அளித்து நோயை குணப்படுத்தி வந்தார் என்பது பழனியில் வழங்கி வரும் ஒரு செவிவழி செய்தியாகும்.

கோவில் திருவிழாக்கள்

பழனி திருவிழாக்களுக்கு பெயர்பெற்ற ஊராகும். இங்கு நடக்கும் குறிப்பிடத்தக்க திருவிழாக்கள்:

முருகனுக்கு உகந்த நாட்களான பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, அக்னி நட்சத்திரம் ஆகிய விழாக்கள் முக்கியமானவையாகும். வைகாசி விசாகம், திருக்கார்த்திகை மற்றும் பிற பண்டிகைகளும் இங்கு கொண்டாடப்படுகின்றன.

சிறப்பு

பஞ்சாமிர்தம் - மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு பிரசாதம்.
தங்கத் தேர் வழிபாடு
காவடி சுமந்த பக்தர்கள்

குழந்தை வேலாயுதசாமி திருக்கோயில் (பழனி மலைக்கு கீழ்
அடிவாரத்தில் உள்ளது) உச்சியை அடைவதற்கு இரண்டு வழிகள்
உள்ளது 1.யாணை பாதை ஏறுவதற்கு இதை பயன்படுத்தினால்
எளிதாக இருக்கும் 2.நோ் பாதை இதை இறங்குவதற்கு பயன்படுத்தலாம்

பிழை

பழனி மலையின் அடிவாரத்தில் அமைந்த குழந்தை வேலாயுத சுவாமி கோயில் அறுபடை வீடுகளில் ஒன்று, இதுவே திருஆவினன்குடி மூன்றாம் படைவீடு ஆகும். பலரால் மலை மீதுள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலே அறுபடை வீடுகளில் ஒன்று என்று தவறாக எண்ணப்படுகிறது.

இழுவை ஊர்தி

பழனி மலையின் அடிவாரத்திலிருந்து மலைஉச்சி பகுதியிலுள்ள முருகன்கோவிலுக்கு செல்ல மூன்று இழுவைத் தொடருந்து ஒரு கம்பிவட இழுவை ஊர்திகள் அமைக்கப்பட்டுள்ளது.

போகர் சந்நிதி :

இந்த கோவிலின் தென்மேற்கு பிரகாரத்தில் போகர் சந்நிதி உள்ளது. முருகனின் நவபாஷான சிலையை சித்தர் போகர் வடித்து தினமும் பூஜை செய்து வந்தார் என்பது வரலாறு. அவர் கி.மு. 3000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்துள்ளார்.

போகர் ஒரு மருத்துவராக இருந்ததால், நவபாஷானங்களை கலந்து சிலை செய்ய முடிந்தது. இந்த கோவில் போகர் வழிபட்ட நவதுர்க்கா, புவனேஸ்வரி, மரகத லிங்கம் ஆகியவையும் உள்ளன. போகரின் சமாதியும் இங்கு அமைந்துள்ளது.

முருகன் ஒரு அரசரைப் போல் உயரமான கருவறையில் உள்ளார். அதனால் பக்தர்கள் அவரை மிகவும் நன்றாக காண முடியும். இங்கு பிரதான கோவில், நெல்லி மரம், நாகலிங்கப் பூ மற்றும் அருணகிரிநாதர் ஆலயம் ஆகியவை தரிசிக்க வேண்டியவை ஆகும்.

பூஜைகள் :

முருகனுக்கு தினமும் ஆறுகால பூஜை நடைபெறுகிறது. காலை 5 மணிக்கு முருகன் விஸ்வரூப தரிசனம் அளிக்கிறார். காலை 7.15 மணிக்கு விழாபூஜை நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு காலசாந்தி பூஜையும், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 6 மணிக்கு சாயரட்சையும், இரவு 8 மணிக்கு ராக்கால பூஜையும் நடைபெறுகிறது.

தங்கரதம் :

ஒவ்வொரு கிருத்திகை மற்றும் விசேஷ நாட்களிலும் இரவு 7 மணிக்கு கோவில் பிரகாரத்தைச் சுற்றி தங்கரதம், நாதஸ்வரம், திருப்புகழ் இசை மற்றும் கோவில் பரிவாரங்களுடன் வலம் வருகிறது. பக்தர்களும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற தங்கரதம் இழுக்கிறார்கள்.

தங்கரதம் இழுக்க கிருத்திகை தினங்களில் ரூ. 2000மும் மற்ற சாதாரண நாட்களில் ரூ.1500மும் கட்டணம் செலுத்த வேண்டும். தைப்பூசம், பங்குனி உத்திரம், தசரா பண்டிகையின் பத்து நாட்கள், சூரசம்ஹாரம், கார்த்திகை தீபம் ஆகிய நாட்களில் தங்கரதம் வலம் இல்லை. மயில் வாகனத்தில் முருகன் பவனி வர கட்டணம் ரூ. 300 ஆகும்.

அன்னதானம்:

கோவிலில் தினமும் மதியம் 12:30 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்னதானம் செய்ய விரும்பும் பக்தர்கள் ரூ. 25000 செலுத்தினால் அந்தப் பணத்தை முதலிடு செய்து அதன் மூலம் கிடைக்கும் வட்டிப் பணத்தில் பக்தர்கள் விரும்பும் தினத்தில் ஒவ்வொரு ஆண்டும் அவர் பெயரில் அன்னதானம் வழங்கப்படும்.

வின்ச் சேவை :

தினமும் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை வின்ச் சேவை நடைபெறுகிறது. தற்சமயம் 3 பாதைகளில் வின்ச்கள் இயக்கப்படுகின்றன. கிருத்திகை மற்றும் பிற விழா நாட்களில் காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை வின்ச் சேவை நடைபெறுகிறது.

இதற்கான கட்டணம் பெரியவர்களுக்கு ரூ. 10 மற்றும் 3 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கட்டணம் ரூ. 5 ஆகும். ரோப் கார் : தற்போது மலைக்கு செல்ல ரோப் கார் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சில விநாடிகளில் மலை உச்சிக்கு சென்று விட முடியும்.

போக்குவரத்து வசதி :

சென்னையில் இருந்து பழனிக்கு  பேருந்து வசதி உள்ளது.ரெயில் வசதியும் உள்ளது. எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து திண்டுக்கல் சென்று பின் அங்கிருந்து பேருந்து மூலம் இந்த கோவிலுக்கு செல்லலாம்.

மேலும் விவரங்களுக்கு:

இணை ஆணையர்
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி
தேவஸ்தானம்
அலுவலகம் அடிவாரம்,
பழனி - 624 601.
தொலைபேசி: +91-4545-241417 / 242236  
--------------------------------------------------------
பாரப்பா பழநியப்பா - உன் புகழோ பெரியதப்பா!
உண்மைதானே இது!
அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

19.11.15

Cinema: இசைஞானி இளையராஜாவின் இசை அமைப்பு பற்றி அறிந்ததும் அறியாததும்

Cinema: இசைஞானி இளையராஜாவின் இசை அமைப்பு பற்றி 
அறிந்ததும் அறியாததும் 

Dedicated to all music lovers and especially to Illayaraja fans 

1. ஒரு  பாடலை உருவாக்க வெளிநாட்டு பயணமோ, அழகான லொகேஷன்களோ, வார அல்லது மாதக்கணக்கில் நேரமோ இளையராஜாவுக்குத் தேவைப்பட்டதில்லை. தென்றல் வந்து
தீண்டும்போது... என்ற பாடலை உருவாக்க இசைஞானி எடுத்துக்
கொண்டது வெறும் அரை மணி  நேரம்தான்.

2. இளையராஜா வெறும் அரைநாளில் மொத்த ரீரிகார்டிங்கையும் செய்துமுடித்த படம் ''நூறுவாது நாள்"

3. சிகப்பு ரோஜாக்கள்  படத்திற்கான ரீரிகார்டிங்கிற்கு ஆன மொத்த
செலவு வெறும் பத்தாயிரம்.. மூன்றே நாளில் வெறும் ஐந்தே ஐந்து இசைக்கலைஞர்களை கொண்டு  அந்த படத்திற்கு இசை சேர்க்கப்
பட்டது

4. எல்லோரும் இசையை வாசித்துதான் காட்டுவார்கள். ஆனால் ராஜா மட்டும்தான் இசையை 'பக்கா' நோட்ஸாக இசைக் கலைஞர்களுக்கு
எழுதியே கொடுப்பவர். அவர் நோட்ஸ் எழுதும் வேகம் பார்த்து சர்வதேச
இசை விற்பன்னர்களே மிரண்டு  போனது வரலாறு.

5. அமிர்தவர்ஷினி என்ற மழையை வரவழைப்பதற்கான தனித்துவமுடைய ராகத்தை ஒரு கோடைப்பொழுதின் பிற்பகலில்  "தூங்காத விழிகள் ரெண்டு" பாடலை அமைத்து மழையையும் வரவழைத்தவர் இசைஞானி

6. பாடலின் மெட்டும் அதற்கான 100% orchestration ஐயும்  ஒருவரே செய்யும்போது கிடைக்கும் அத்தனை முழுமை! அத்தோடு ஒவ்வொரு வாத்தியத்தையும் வித்தியாசமாய் கையாளும் ஆளுமை மற்றும் பாங்கு,
அதுவும் மற்றவர்களிடமிருந்து இவரை வேறுபடுத்திக் காட்டுகிறது

7. இசைஞானி தான் முதல்மிறையாக ரீதிகௌளை என்ற ராகத்தை சினிமாவில் பயன்படுத்தினார் ."கவிக்குயில்" என்னும் படத்தில் "சின்ன கண்ணன் அழைக்கிறான்" என்ற பாடல்தான் அது.

8. Counterpoint என்ற யுக்தியை சர்வதேச இசையின் நுட்பங்களை இசைஞானி சிட்டுக்குருவி படத்தில் இடம்பெற்ற "என் கண்மணி" என்ற பாடலில் பயன்படுத்தி வெற்றி கண்டவர்.

9. இந்தியத் திரை இசையில் காயத்ரி என்ற படத்தில்தான் முதன் முதலாக இசைஞானி "எலெக்ட்ரிக் பியானோ" உபயோகபடுத்தினார்.

10. இசைஞானி செஞ்சுருட்டி ராகத்தில் இசையமைத்த ஒரே பாடல் ஆட்டுக்குட்டி முட்டையிட்டு.

11. உலகில் வேறு எந்த இசையமைப்பாளரும் முயற்சி  செய்திருக்கவே முடியாத விஷயம்., ஓர் இசையமைப்பாளர் ஏற்கனவே இசையமைத்து,
 பாடல் வரிகள் எழுதப்பட்டு, படமாக்கப்பட்டு, அந்த சவுண்ட்  ட்ராக்கை
அப்படியே நீக்கிவிட்டு, அந்தக் காட்சியை மட்டும் அப்படியே வைத்துக்கொண்டு, உதட்டசைவு, உடலசைவு, காட்சித்தேவை அனைத்துக்கும் பொருத்தமாக புதிய இசையை எழுதி வியப்பின்
உச்சிக்கு நம்மை அழைத்து சென்றவர் இசைஞானி ( ஹேராம் )

12. முன்பெல்லாம்  பின்னணி இசைச்சேர்ப்பில் ஒரு ரீல் திரையிட்டு காண்பித்ததும் இயக்குனரோ மற்றவர்களோ இசையமைப்பாளரிடம்
வந்து அமர்ந்து அந்த படத்தில் வந்ததுபோல போடுங்கள், இந்த படத்தில் வந்தது போல போடுங்கள் என்றெல்லாம் சொல்லிப் பின் இசைச்
சேர்ப்பு முடிந்து, அது சரியில்லாமல்  மறுபடி இசையமைப்பாளரே
வேறு மாதிரி இசை சேர்ப்பார். ஆனால் இளையராஜாவிடம் அப்படி
இல்லை. ஒரு ரீல் திரையில் பார்த்தால் போதும்  உடனே இசைக்
குறிப்புகளை எழுத ஆரம்பித்து விடுவார். அதை வாசித்தாலே போதும்.
இப்படி வேண்டாம், வேறுமாதிரி போடுங்கள் என்று  சொல்வதற்கான வாய்ப்பே இருக்காது.

13. இந்தியாவில் அல்ல ஆசியாவிலே முதன் முறையாக சிம்பொனி
இசை அமைத்தவர் இசைஞானி,சிம்போனி கம்போஸ் பண்ண குறைஞ்சது ஆறு மாசமாவது ஆகும். வெறும் 13 நாளில் மற்ற கம்போஸர்களை
மிரளச் செய்தவர் இசைஞானி.

14. விசிலில் டியூன் அமைத்து அதை ஒலினாடாவில் பதிவு செய்து பின்பு பாடகரை வைத்து பாடிய பாடல் "காதலின் தீபம் ஒன்று".

15. படத்தின் கதையை  கேட்காமல் பாடலுக்கான சூழ்நிலைகளை மட்டும் கேட்டு இசையமைத்த ஒரே படம், "கரகாட்டக்காரன்".

16. வசனமே இல்லாத காட்சியில் கூட,  அந்த காட்சியை இசையால், மௌனத்தால் செழுமைபடுத்தி பார்வையாளர்களுக்கு கொண்டு போய்
சேர்க்க முடியும் என்பது ராஜாவிற்கு நன்றாக தெரியும். அதில் ராஜா
கிரேட். இரண்டு பேர் மௌனமாக இருக்கும் காட்சியாக இருந்தால் கூட, அவர்களின் மன உணர்வுகளை கூட புரியாதவர்களுக்கும் புரிய வைத்துவிடுவார் ராஜா. அந்த அற்புதமான ஆற்றல் இளையராஜாவிற்கு உண்டு. இந்திய சினிமாவில் பின்னணி இசையில்  நம்பர் ஒன் ஜீனியஸ் இளையராஜா.

17. ராஜா சார் ரீ-ரெக்கார்டிங் பண்றதுக்கு முன்னாடி ஒரு முறைக்கு
இரண்டு முறை படத்தை பார்ப்பார், மூன்றாவது முறை படம் திரையில் ஆரம்பிக்கும்போது நோட்ஸ் எழுத ஆரம்பிச்சிடுவார், அவர் ஆரம்பிச்சு
முடிக்கும்போது படம் கரெக்டா முடியும்.  அந்த அளவுக்கு எந்த இசையமைபாளராலும் நோட்ஸ் எழுத முடியாது.

18. இந்தியாவிலேயே பின்னணி இசை கேசட்டாக வந்து ஹிட்டான ஒரே
படம் ‘பிள்ளை நிலா’

19. பருவமே புதிய பாடல் பாடு என்ற பாடலுக்கு தொடையில் தட்டி தாளத்திற்கு புதிய பரிமாணத்தை கொடுத்தவர் இசைஞானி

20. இந்தியாவில் முதல் முறையாக சிறந்த பிண்ணனி இசைக்கான
விருதை வாங்கியவர் இசைஞானி ( பழசிராஜா )

21. இசைஞானி  முதன் முதலாக 'ஸ்டீரியோ'' முறையில் பாடல்களை
பதிவு செய்த படம் பிரியா.

22. 137 வாத்தியங்கள் பயன்படுத்தப்பட்ட பாடல் "சுந்தரி கண்ணால்
 ஒரு சேதி"

23. இசைஞானியின் பாடலுக்காக கதை எழுதிய வெற்றிக்கண்ட படங்கள் "வைதேகி காத்திருந்தாள்", "அரண்மனைக்கிளி".

24.  இந்தியாவுக்கு கம்ப்யூட்டர் இசையை அறிமுகப்படுத்தியவர்
இசைஞானி ( புன்னகை மன்னன் )

25. “பஞ்சமுகி” என்றொரு ராகம் நமது ராகதேவனால் இயற்றப்பட்டுள்ளது.. ஆனால் இதுவரை அவர் இந்த ராகத்தினை எந்த பாடலிலும் பயன்
படுத்தாமல் ரகசியமாக வைத்துள்ளார்..

26. பொதுவாக 2 அல்லது 3 நாட்களிகல் படத்திற்கான இசையமைப்பை முடித்துவிடுவார் ராஜா, ஆனால் அதிகபட்சமாக, அதாவது 24 நாள்
பின்னணி இசைகோர்ப்புக்காக எடுத்துக்கொண்ட படம் ( காலாபாணி )
தமிழில் ( சிறைச்சாலை )

27. முன்பெல்லாம் கிட்டார், தபேலாக் கலைஞர்கள் உதவியுடன் ஆர்மோனியத்தை இசைத்து டியூன் உருவாக்குவார். அதற்கு பிறகு ஆர்மோனியத்தில் வாசித்துப் பார்ப்பதில்லை, கண்களை மூடிச்
சிந்திப்பார், இசை வடிவங்கள் அவர் மூளையில் இருந்து புறப்படும்.
அவற்றை அப்படியே இசைக் குறிப்புகளாக எழுதிவிடுவார். ஆர்மோனியம் இல்லாமல் இசை அமைக்கும் இந்த ஆற்றல், இந்திய சினிமா இசை
அமைப்பாளர்களில் இவரிடத்தில் மட்டுமே இருக்கிறது என்பது
பிரமிப்பான  உண்மை.

28. ராஜா இசை வித்தகர் மட்டுமல்ல... அற்புதமான கவிஞர். காவியக்
கவிஞர் வாலிக்கே வெண்பா கற்றுக் கொடுத்தவர். அதனால் ராஜாவை
தனது 'குரு' என்றும் கூறி மகிழ்ந்தவர் வாலி.

படித்ததில் பிடித்தது. மின்னஞ்சலில் வந்தது. நன்றாக இருந்தது. உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்
அன்புடன்
வாத்தியார்
=====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.11.15

ஜாதகத்தில் உள்ள தோஷங்களைப் போக்க என்ன செய்ய வேண்டும்?


ஜாதகத்தில் உள்ள தோஷங்களைப் போக்க என்ன செய்ய வேண்டும்?

எல்லோருக்கும் ஜாதகத்தில் ஏதாவது ஒரு தோஷம் இருக்கும். அந்த தோஷத்தினால், சிலருக்கு திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும், சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காமல் பெரும் வேதனைக்கு ஆளாவார்கள். அடுத்தவர்களுக்குப் பதில் சொல்லி மாளாது. சிலருக்கு முதல் விவாகம் ரத்தாகி, அடுத்து என்ன செய்யலாம் என்று அவதிப் பட்டுக் கொண்டு இருப்பார்கள். சிலருக்கு தொழிலில் அல்லது வியாபாரத்தில் உழைப்பிற்குத் தகுந்த பலன் இன்றி வெறுத்துப்போய் இருப்பார்கள். சிலருக்கு எப்போது பார்த்தாலும் பணபற்றாக்குறை, மேற்கொண்டு கடன் தொல்லை என்று படுத்தி எடுக்கும். சிலருக்கு நோய் நொடிகள் உபாதைகள் ஏற்பட்டு ஆளைப் புரட்டி எடுக்கும். அவற்றில் இருந்து மீள்வது எப்படி?
அதற்கான வழியை இன்றையப் பதிவில் சொல்லியிருக்கிறேன். படித்துப் பார்த்து, செயல் படுத்திப் பயனடையுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------
கந்த சஷ்டி விரதமும் கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதையும்!

பாலதேவராய சுவாமிகள் கந்த சஷ்டி கவசத்தை உருவாக்கிய சூழ்நிலை உணர்ச்சி பூர்வமானது. ஒருசமயம் அவர் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டார். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவரது வயிற்று வலி குணமாகவில்லை. வாழ்க்கையே வெறுத்துப் போனவர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூருக்கு வந்தார்.

அவர் அங்கு வந்த நேரம் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது. ஏற்கனவே பாலதேவராய சுவாமிகள் தீவிர முருக பக்தர் என்பதால் அந்த திருவிழாக் காட்சிகளைப் பார்த்து சற்று மனம் மாறினார்.

திருவிழா முடிந்த பிறகு தற்கொலை முடிவை எடுத்துக்கொள்ளலாமே.. என்று எண்ணியவர், முருகப் பெருமானை வேண்டி சஷ்டி விரதம் இருக்கத் தொடங்கினார்.

முதல் நாள் செந்தூர் கடலில் புனித நீராடி முருகனை வழிபட்ட பிறகு, கோயில் மண்டபத்தில் கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தார்.

அவருக்கு முருகப்பெருமான் காட்சி தந்து அருள் புரிந்ததோடு தனக்காக சஷ்டி கவசம் பாடும் திறனையும் அவருக்கு அளித்தார்.

அடுத்த நிமிடமே பாலதேவராய சுவாமிகள் மனதில் பக்தி வெள்ளமானது பிரவாகம் எடுத்து ஓடியது.

சஷ்டியை நோக்க சரவண பவனர்
சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்…

என்று துவங்கும் திருச்செந்தூர் திருத்தலத்திற்கான சஷ்டி கவசத்தை முதன் முதலாக எழுதி முடித்தார். அதற்கு அடுத்த 5 நாட்களுக்கு, முருகப் பெருமானின் பிற அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை திருத்தலங்களுக்கான சஷ்டி கவசங்களை இயற்றி முடித்தார்.

6 சஷ்டி கவசங்களையும் பாலதேவராய சுவாமிகள் இயற்றி முடிந்தபோது, அவரை வாட்டி வந்த வயிற்றுவலி முற்றிலும் காணாமல் போய் இருந்தது.

கந்த சஷ்டி கவசம் இயற்றுவதற்காகவே தன்னை முருகப்பெருமான் சோதித்து திருவிளையாடல் புரிந்துள்ளார் என்பதை அறிந்த சுவாமிகள் மிகுந்த
பரவசம் ஆனார்.

அழகன் முருகப்பெருமானை ஆனந்தக் கூத்தாடி தொழுதார். திருவாசகத்திற்கு மனம் உருகாதவர்கள் யாரும் இல்லை என்றால், சஷ்டி கவசத்திற்கு தங்கள் மனதை பறிகொடுக்காதவர்கள் யாரும் கிடையாது. அவ்வளவு சக்திமிக்க வரிகள் கொண்டது சஷ்டி கவசம்.

பாம்பன் சுவாமிகள் அடிக்கடி மனம் உருகி கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்து கொண்டிருப்பார். அப்படி ஒரு முறை பாராயணம் செய்தபோது தானும் இதேபோல் ஒரு கவசநூலை முருகன் மீது பாட வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

அவ்வாறு அவர் பாடியதுதான் சண்முக கவசம். இந்த சண்முக கவசமும் கந்த சஷ்டி கவசம் போன்று 6 கவசங்களை உள்ளடக்கியது என்பது
குறிப்பிடத்தக்கது.

முருகனுக்கு உகந்த விரதம் சஷ்டி. இது 6 நாட்கள் மேற்கொள்ளப்
படுகிறது. அதாவது, ஐப்பசித் திங்கள் பூர்வபட்ச பிரதமை திதியில் 
தொடங்கி, ஆறாம் நாளான சஷ்டி திதியில் இந்த விரதத்தை நிறைவு 
செய்ய வேண்டும். இதேபோல், முருகப் பெருமானுக்கு முகங்களும் 
6. முருகனின் படை வீடுகளும் 6. முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களும் 6 பேர், சரவணபவ என்ற முருகப் பெருமானின் 
திருமந்திரமும் 6 எழுத்து. ஜாதகத்தின் ஆறாம் இடம் பொதுவாக 
விரோதம், கடன், ரோகம், சத்ரு போன்றவற்றை குறிக்கும்.

இந்த தோஷங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமை கொண்டவரும் முருகப்பெருமான்தான். அதனால், நாம் வழக்கமாக பாடும் திருச்செந்தூர்
திருத்தலத்துக்கான சஷ்டி கவசத்தோடு, மற்ற 5 அறுபடை வீடுகளுக்கும் சேர்த்து பாலதேவராய சுவாமிகள் இயற்றிய சஷ்டி  கவசங்களையும் பாராயணம் செய்வது நல்லது.

சஷ்டி கவச பாராயண பலன்கள்: ஒருவர் சஷ்டி கவசத்தை நாள்தோறும் பாராயணம் செய்து வந்தால் நோய்கள் அண்டாது, மனம் வாடாது, குறைவின்றிப் பதினாறு பேறும் பெற்று நெடுநாள் வாழலாம்,

நவக்கிரகங்களும் மகிழ்ந்து நன்மை அளித்திடுவார்கள்,

குழந்தை பாக்கியம் கிட்டும்…. இப்படி பல பலன்கள் கிட்டும் என்று சஷ்டி கவசத்திலேயே சொல்லப் பட்டுள்ளது.
=====================================
விளக்கம் போதுமா சாமிகளா?
அன்புடன்,
வாத்தியார்
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.11.15

நயந்தாராவைத் தெரியும், நாயன்மார்களைத் தெரியுமா?

நயந்தாராவைத் தெரியும், நாயன்மார்களைத் தெரியுமா?

நாயன்மார் என்பவர்கள் கி.பி 400-1000 காலகட்டத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்களில் சிலராவார்கள். சுந்தரமூர்த்தி
நாயன்மார் திருத்தொண்டத் தொகையில் அறுபத்து இரண்டு நாயன்மார்களைப் பற்றி கூறியுள்ளார். அதன் பின் சேக்கிழார்
திருத்தொண்டர் தொகையில் கூறப்பட்ட அறுபத்து இரண்டு
பேருடன் சுந்தரமூர்த்தி நாயன்மாரையும் இணைத்து அறுபத்து
மூவரின் வரலாற்றை திருத்தொண்டர்  புராணம் எனும் பெரிய
புராணத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நாயன்மார்களுக்குச் சிவாலயங்களின் சுற்றுபிரகாரத்திற்குள்
கற்சிலைகள் வைக்கப்படுகின்றன. அத்துடன் அறுபத்து மூவரின்
உலோகச் சிலைகளும் ஊர்வலத்தின் பொழுது எடுத்துச் செல்லப்
படுகின்றன.

நாயன்மார்களில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரும், நாயன்மார் வரிசையில் தனியாக இல்லாத மாணிக்கவாசகர் அவர்களும்
முதன்மையானவர்கள். இந்த நால்வரும் சைவ சமய குரவர் என்று அழைக்கப்படுகிறார்கள். சைவத் திருமுறைகள் என அழைக்கப்படும்
12 திருமுறைகளின் தொகுதியில் நாயன்மாரின் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. முதல் மூன்று திருமுறைகள் திருஞான சம்பந்தராலும், திருமுறைகள் 4,5,6 திருநாவுக்கரசராலும், 7ஆம்
திருமுறை சுந்தரராலும் ஆக்கப்பட்ட பண்ணோடு அமைந்த இசைப்பாடல்களாகும். நாயன்மாரில் சிலரே சமயநூல்களில் புலமை உடையவர்கள். மற்றவர்கள் மிகச் சிறந்த பக்தர்கள் மட்டுமே. பலரும் பல்வேறு தொழில்கள் செய்து உயிர்வாழ்ந்தவர்கள். இறையருள் பெற 
பக்தி மட்டுமே போதுமானது என்பதும் எல்லோரும் இறைவன் திருவடிகளை அடையலாம் என்பதுமே இவர்கள் வாழ்க்கை தரும்  பாடமாக உள்ளது. 
(Note this point)

சிவன் கோவிலில்களில் உள்ள 63 நாயன்மார்களின் வரலாறு
சேக்கிழாரால், பெரியபுராணம் என்ற பெயரில் எழுதப்பட்டது.

நாயன்மார்களில் பெண்கள்

அறுபத்துமூன்று நாயன்மாரில் மூவர் பெண்கள். கி.பி. 3-4 ஆம்
நூற்றாண்டில் வாழ்ந்த காரைக்கால் அம்மையார் நாயன்மார்களில்
காலத்தால் மூத்தவர். தான் பிறந்து வாழ்ந்த ஊரின் பெயராலேயே அறியப்படும் காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதியார்
ஆகும். மதுரையை ஆண்ட கூன் பாண்டியன் என்ற பாண்டியமன்னன்
நின்றசீர் நெடுமாறநாயனார் என்ற அறியப்படுகிறார். அவர் மனைவி மங்கையர்க்கரசியார் என்பவர் நாயன்மார்களில் மற்றொரு பெண்
ஆவார். திருநாவலுரைச் சேர்ந்த சடையனார் என்ற நாயனாரின்
மனைவி இசைஞானியார் மூன்றாவது பெண் நாயனார் ஆவார்.
இவர்களின் மகன் சுந்தரமூர்த்தியார் சைவக்குரவர் நால்வருள்
ஒருவரும் நாயன்மாரில் ஒருவரும் ஆவார்.

நாயன்மாரின் பட்டியல்

நாயன்மார்களை அறிமுகம் செய்து வைத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார்.
அவர் பாடிய நாயன்மார்கள் 60 பேர். 63 பேர் அல்ல. சுவாமிமலைக்குப்
படி 60. ஆண்டுகள் 60. மனிதனுக்கு விழா செய்வதும் 60 வது ஆண்டு.
ஒரு நாளைக்கு நாழிகை 60. ஒரு நாழிகைக்கு வினாடி 60. ஒரு வினாடிக்கு நொடி 60. இப்படி 60 என்றுதான் கணக்கு வரும். 63 என்று வராது.
சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமான் அடி எடுத்துக் கொடுக்கப்
பாடிய நாயன்மார்கள் 60 பேர்தான். சுந்தரமூர்த்தி நாயனார் மறைவுக்குப்
பின் 100 ஆண்டுகள் கழித்து நம்பியாண்டார் நம்பி அடிகள் சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய 60 நாயன்மாரைக் கொஞ்சம் விரிவாகப் பாடுகின்றார். அப்போது 60 நாயன்மாரைப் பாடி, அந்த 60 நாயன்மாரைப் பாடிக் கொடுத்த சுந்தரர், அவரைப் பெற்றுக் கொடுத்த அப்பா (சடையனார்), அம்மா (இசைஞானியார்) ஆகியோரைச் சேர்த்து 63 ஆக ஆக்கினார்.



அவதாரத் தலங்கள்

நாயன்மார்கள் பிறந்த தலங்களை நாயன்மார் அவதாரத் தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் ஐம்பத்தி எட்டு (58) தலங்கள் |தமிழகத்தில்
அமைந்துள்ளன. மற்றவை பாண்டிச்சேரி (காரைக்கால்), ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஒன்று என்ற வீதத்திலும், கேரளா மாநிலத்தில்
இரண்டு இடங்களிலும் அமைந்துள்ளன.

முக்தி

நாயன்மார்கள் செய்த தொண்டின் காரணமாக மூன்று விதமான முறையில் முக்தி அடைந்ததாக நூல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் குருவருளால்
முக்தி பெற்றவர்கள் பதினொரு நாயன்மார்கள், சிவலிங்கத்தால் முக்தி பெற்றவர்கள் முப்பத்து ஒரு நாயன்மார்கள், அடியாரை வழிபட்டமையால் முக்தி பெற்றவர்கள் இருபத்து ஒரு நாயன்மார்கள்.

Source: wikipedia
---------------------------------------------------
விளக்கம் போதுமா?
அன்புடன்
வாத்தியார்
============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

16.11.15

கூகுள் ஆண்டவர் இருப்பது எதற்காக? எல்லாம் நமக்காக!


கூகுள் ஆண்டவர் இருப்பது எதற்காக? எல்லாம் நமக்காக!

தமிழில் தட்டச்ச கூகுள் ஆண்டவர் ஒரு புதிய மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளார். அதில் வழக்கம்போல பல சிறப்புக்கள் உள்ளன.

நீங்கள் தட்டச்சப் பழக வேண்டியது இல்லை.

ஆங்கிலதில் நீங்கள் அடிக்க அடிக்க, அதுவே தானாக தமிழுக்கு மாறிக் கொள்ளும். சமயத்தில் நீங்கள் சொல் தெரியாமல் தடுமாறும்போது, அதுவே பல வார்த்தைகளைக் காண்பித்து உங்களுக்கு உதவுகிறது.

அம்மா என்பதற்கு ammaa
அப்பா என்பதற்கு appaa
அன்புள்ள என்பதற்கு anpuLLa
என்று நீங்கள் தட்டச்சினால் போதும். அடித்து முடித்த பிறகு நீங்கள் வெட்டிக் கொண்டு போய் எங்கு வேண்டுமென்றாலும் ஒட்டிக் கொள்ளலாம். அதாவது அடித்ததை cut and paste செய்து கொள்ளலாம் சாமிகளா!





சுட்டி: http://tamil.changathi.com/
Tamil typing software by google

முயன்று பாருங்கள்.
பார்த்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்
மற்றவர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க தமிழ்! வளர்க அதன் பயன்பாடு!

அன்புடன்,
வாத்தியார்
------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

14.11.15

Week end post: இதல்லவா காதல் மயக்கம்!!!


Week end post: இதல்லவா காதல் மயக்கம்!!!

கவியரசர் கண்ணதாசனின் காதல் பாடல்கள் - பகுதி ஒன்று  

அன்பு, பாசம், நேசம், கருணை, தியாகம், மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, பரவசம், காதல், கோபம், தாபம், வருத்தம், துக்கம் என்று பல கலவையான உணர்வுகளால் ஆனதுதான் மனித மனம்!

அவற்றுள் மிகவும் சக்திவாய்ந்த உணர்வு காதல் உணர்வு என்றால் அது நிதர்சனமான உண்மை!

"காதல் வந்துவிட்டால் கண் உறங்காது" என்றார் கவியரசர். கண் மட்டுமா உறங்காது? மனதின் எல்லா செயல்பாடுகளுமே மாறிவிடும். அதையும் அவர் தன்னுடைய பல பாடல்களில் சிறப்பாக விவரித்து எழுதியுள்ளார்.

ஒரு பாடலா அல்லது இரண்டு பாடலா நூற்றுக்கணக்கான காதல் பாடல்களை அவர் எழுதியுள்ளார்.

படத்தில் காதலர்களின் தன்மைக்கேற்ப, மனநிலைமைக் கேற்ப பல அற்புதமான பாடல்களை அவர் எழுதியுள்ளார்.

காதலினால் ஏற்படும் தவிப்பு, ஏக்கம், கிறக்கம், மயக்கம், வாட்டம், (பிரிவினால் ஏற்படும்) துக்கம், மகிழ்ச்சி, நெகிழ்ச்சி என்று எல்லா
உணர்வுகளுக்கும் பாட்டு எழுதியிருக்கிறார் அந்தக் கவிமாமன்னர்.

எந்த உணர்வை மேல்நிலைப் படுத்தி இந்தக் காதல் பாட்டு அத்தியாயத்தைத் துவக்குவது என்ற சிறு மனக்குழப்பம் என் மனதில் ஏற்பட்டது!.

காதல் என்ற நந்தவனத்திற்குள் வந்தாகிவிட்டது. கவியரசர் வைத்துவிட்டுப்போன பல நறுமண மலர்கள் உள்ளன. வரிசை என்ற கட்டுப்பாட்டை உடைத்துவிட்டுக் கண்ணில் படுவதை எல்லாம், படுகின்ற விதத்தில் உங்களுக்குக் கொடுப்பது என்ற முடிவிற்கு வந்து விட்டேன்.

இதோ காதல் வரிசையில் முதல் பாடல். பலருக்கும் இது மிகவும் பிடித்த பாடல் என்பதை இன்றும் வானொலியில் ஒலிக்கும் இந்தப் பாடல் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றது!
--------------------------------------------------
“சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே
செவ்வானம் கடலினிலே கலந்திடக் கண்டேனே
மொட்டு விரிந்த மலரினிலே வண்டு மூழ்கிடக் கண்டேனே
மூங்கிலிலே காற்று வந்து மோதிடக் கண்டேனே

(சிட்டு)

பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கொரு சிறகில்லையே
பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே
எடுத்துச் சொல்ல மனமிருந்தும் வார்த்தை வரவில்லையே
என்னென்னவோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே..
ஹோய்...

(சிட்டு)

ஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனா
ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனா
இரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனா
இளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா..
ஹோய்..

(சிட்டு)

படம் : புதிய பறவை - வருடம் 1964
குரல் : சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ்.வி.
நடிகை : சரோஜாதேவி

நாயகிக்கு வந்து விட்ட காதல் உணர்வைச் சொல்ல முத்தம் கொடுத்துக் கொஞ்சும் சிட்டுக்குருவிகளையும், கடலில் கலக்கின்ற செவ்வானத்தையும் உதாரணமாகக் காட்டிப் பாடலைத் துவக்கிய கவியரசர்,
"பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கொரு சிறகில்லையே பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே!
எடுத்துச் சொல்ல மனமிருந்தும் வார்த்தை வரவில்லையே என்னென்னவோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே"
என்று தனக்கொரு காதல் துணை இன்னும் வரவில்லையே என்று ஏங்குவதைச் சிறப்பாகச் சொன்னதோடு, அவள் கனவு நாயகன் கிடைத்தும்கூட, அவனிடம் தன் காதலை எடுத்துச் சொல்ல வார்த்தைகள் வராததையும், நாணம் விடாததையும் சொன்னதுதான் இந்தப் பாடலின் சிறப்பு

அதோடு விட்டாரா?

"ஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனா
ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனா
இரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனா
இளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா.."

என்று நாயகியின் மன ஏக்கத்தையும் முத்தாய்ப்பாகச் சொல்லிப் பாடலை முடித்தார் பாருங்கள் - அதனால் இந்தப் பாடல் அமரத்துவம் பெற்றது!
-------------------------------------------------------------------------
மற்றொரு பாடல்.

“பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே!

ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே
ஆலய மணியின் இன்னிசை நீயே
தாய்மை எனக்கே தந்தவள் நீயே
தங்கக் கோபுரம் போல வந்தாயே!

புதிய உலகம் புதிய பாசம்
புதிய தீபம் கொண்டு வந்தாயே!

பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்
பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன்
அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன்
அழைத்து வந்தார் என்னிடம் உன்னை

இந்த மனமும் இந்த உலகும்
என்றும் வேண்டும் என்னுயிரே!

ஆலமரத்தின் விழுதினைப்போலே
அணைத்து நிற்கும் உறவு தந்தாயே
வாழைக்கன்று அன்னையின் நிழலில்
வாழ்வது போலே வாழ வைத்தாயே!

உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு
உள்ளம் ஒன்றே என்னுயிரே!’’

படம்: ஆலய மணி - வருடம் 1962
பாடல் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ்.வி.
குரல்: திரு. டி.எம்.செளந்தரராஜன்

கவியரசர் அவர்கள் எழுதிய பாடல்களில் மிகவும் சிறந்த நூறு பாடல்களைத் தேர்வு செய்தால், நிச்சயமாக இந்தப் பாடலும் அதில் அடங்கும்.

இந்தப் பாட்டிற்கு விளக்கம் எழுதுவது அறிவீனம் பாடலின் ஒவ்வொரு சொல்லுமே விளக்கமாக இருக்கும்.

பாடலின் முத்தாய்ப்பான வரிகள் என்ன என்கிறீர்களா?

அதைச் சொல்லாமல் இந்தப் பதிவை நிறைவு செய்வேனா? கீழே கொடுத்துள்ளேன்.

“உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு
உள்ளம் ஒன்றே என்னுயிரே!’’

காதல் பாடல்கள் அடுத்த வார இறுதியில் தொடரும்
-----------------------------------------------------
இந்த இரண்டு பாடல்களில் உங்கள் மனதை மிகவும் கவர்ந்தது எந்தப் பாடல்?
அன்புடன்,
வாத்தியார்

முதல் பாடலின் காணொளி வடிவம் கீழே உள்ளது.
our sincere thanks to the person who uploaded this song in the net



=====================================================
வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!

13.11.15

திருமணத்தடை உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும்?


திருமணத்தடை உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும்!

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய
சுவாமி கோயில் பழந்தமிழ் இலக்கியங்களிலே சேயோன் எனக்
குறிப்பிடப்படுகின்ற இந்துக் கடவுளான முருகனுக்குரிய அறுபடை
வீடுகளில் இரண்டாம் படை எனப் போற்றப்படும் மிகச் சிறப்புமிக்க கோயிலாகும்.

தூத்துக்குடி மாவட்டத்தில், மன்னார் வளைகுடாவை ஒட்டி
அமைந்துள்ள இக்கோயில் சென்னையில் இருந்து 600 கி.மீ
தொலைவில் உள்ளது. சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இக்கோயில் 2000 ஆண்டுகள் வரை பழமை
கொண்டதாகக் கருதப்படுகின்றது.

முருகப்பெருமானுக்குக் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள  கோயில் இதுவாகும். இக்கோயில் அமைந்துள்ள இடம் “திருச்சீரலைவாய்”
என முன்னர் அழைக்கப்பட்டது.

தல வரலாறு

தேவர்கள் தங்களை தொந்தரவு செய்த, சூரபத்மனை அழிக்கும்படி சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற
சிவன், தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து முருகப்பெருமான் தோன்றினார். பின், சிவபெருமானின் கட்டளையை ஏற்று, சூரபத்மனை அழிக்க இங்கு வந்தார். இவ்வேளையில் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, தேவர்களின் குருவான
வியாழ பகவான் இத்தலத்தில் தவமிருந்தார். அவருக்கு காட்சி தந்த முருகப்பெருமான், இவ்விடத்தில் தங்கினார். அவர் மூலமாக
அசுரர்களின் வரலாறையும் தெரிந்து கொண்டார். அப்போது தனது படைத்தளபதியான வீரபாகுவை, சூரபத்மனிடம் தூது அனுப்பினார். அவன் கேட்கவில்லை.

பின்பு, முருகன் தன் படைகளுடன் சென்று, அவனை வதம் செய்தார்.
வியாழ பகவான், முருகனிடம் தனக்கு காட்சி தந்த இவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டார். அதன்படியே முருகனும் இங்கே தங்கினார். பின்பு, வியாழ பகவான் விஸ்வகர்மாவை அழைத்து, இங்கு கோயில் எழுப்பினார்.

முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் இவர், "செயந்திநாதர்'
என அழைக்கப்பெற்றார். பிற்காலத்தில் இப்பெயரே "செந்தில்நாதர்' என
மருவியது. தலமும் "திருஜெயந்திபுரம்' (ஜெயந்தி - வெற்றி) என அழைக்கப்பெற்று, "திருச்செந்தூர்' என மருவியது.

கோயில் அமைப்பு

முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர் மட்டும்
கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோயிலாகவும் அமைந்துள்ளன.
150 அடி உயரம் கொண்ட இக் கோயிலின் கோபுரம், ஒன்பது தளங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது.முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்ட
பின்பு தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக சிவபூஜை செய்தார்.
இந்த கோலத்திலேயே முருகன் வலது கையில் தாமரை மலருடன் அருளுகிறார்.

தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார்.
இவருக்கு இடது பின்புற சுவரில் ஒரு லிங்கம் இருக்கிறது. இவருக்கு
முதல் தீபாராதனை காட்டியபின்பே, முருகனுக்கு தீபராதனை நடக்கும். சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்கு பின்புறம் லிங்கம் இருக்கிறது.
இவ்விரு லிங்கங்களும் இருளில் உள்ளதால், தீபாராதனை ஒளியில்
மட்டுமே காண முடியும்.

பஞ்சலிங்க தரிசனம்

இதுதவிர முருகன் சன்னதிக்கு வலப்புறத்தில் "பஞ்சலிங்க' சன்னதியும் இருக்கிறது. இவர்களை மார்கழி மாதத்தில் தேவர்கள் தரிசிக்க வருவதாக
ஐதீகம். சிவனுக்குரிய வாகனமான நந்தியும், முருகனுக்கு எதிரே இந்திர,
தேவ மயில்களும் மூலஸ்தானம் எதிரே உள்ளன.

வெளியிலிருந்தபடி முருகரை தரிசனம் செய்யும்போதே பஞ்சலிங்க
தரிசனம் செய்ய இயலாது. மூலவர் முருகரின் இடதுபுறம் உள்ள சிறு
வாயில் வழியே உள்ளே நுழைந்து சுற்றி வலது புறம் வந்து பாதாள
பஞ்சலிங்க தரிசனம் செய்ய வாரநாட்களில் இயலும்.இதற்கு கோயில்
சார்பில் ஐந்து ரூபாய் கட்டண நுழைவுச்சீட்டு உண்டு. கூட்டநெரிசல்
அதிகம் உள்ள சமயம் இந்த நுழைவுச்சீட்டு வழங்கப்படுவதில்லை.

ராஜகோபுரம்

திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி, கிழக்கு
நோக்கி காட்சியளிக்கிறார். பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில்
கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக
இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்தசஷ்டி
விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒரு நாள்
மட்டும் இந்த வாசல் திறக்கப்படும். அவ்வேளையில் பக்தர்கள் உள்ளே
செல்ல அனுமதி கிடையாது.

திறக்கும் நேரம்:

காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

பொதுத தகவல்கள்

தமிழகத்தில் முருகனுக்கு பல தலங்கள் இருந்தாலும், குறிப்பிட்ட ஆறு தலங்கள் படைவீடாகக் கருதி வழிபடப்படுகிறது. போர் புரியச் செல்லும்
தளபதி, தனது படைகளுடன் தங்கியிருக்கும் இடம் "படைவீடு' எனப்படும். அவ்வகையில் சூரபத்மனை வதம் செய்யச் சென்ற முருகப்பெருமான்,
படைகளுடன் தங்கியிருந்த தலம் திருச்செந்தூர் மட்டுமே ஆகும். ஆனால், மற்ற ஐந்து தலங்களையும் சேர்த்து, "ஆறுபடை வீடு'    என்கிறோம். வறுமையில் வாடும் ஒருவரிடம், வறுமையை வென்ற ஒரு வர்,
வள்ளல்கள் இருக்குமிடத்தைச் சுட்டிக்காட்டி, அங்கு சென்றால் அவரது
வறுமை தீரும் என்று சொல்லி அவரை ஆற்றுப்படுத்துவார். இந்த வகையில் அமைந்த நூல்கள் சங்க காலத்தில், "ஆற்றுப்படை' எனப்பட்டது. இவ்வாறு
மக்களின் குறைகளைப் போக்கி, அருள் செய்யும் முருகன் இந்த ஆறு இடங்களில் உறைகிறார். அவரிடம் சென்று சரணடைந்தால் அவரது
அருள் கிடைக்கும் என்ற பொருளில் நக்கீரர் ஒரு நூல் இயற்றினார். முருகனின் பெருமைகளைச் சொல்லும் நூல் என்பதால் இது, "திருமுருகாற்றுப்படை' (திருமுருகன் ஆற்றுப்படை) என்று பெயர்
பெற்றது. பிற்காலத்தில் இந்த ஆற்றுப்படை தலங்களே மருவி, "ஆறுபடை' என்றானது. அவர் பாடிய வரிசையிலேயே, ஆறுபடை வீடுகள்
அமைந்துள்ளது.

பிரார்த்தனை

திருமணத்தடை உள்ளவர்கள் இத்தல இறைவனிடம் வேண்டிக்கொள்ள
நல்ல வரன் அமையும் என்கிற நம்பிக்கை இந்து சமய மக்களிடம்
உள்ளது.சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். திருச்செந்தூரில் முருகனுக்கு தினமும்
9 கால பூஜை நடக்கிறது. இப்பூஜைகளின்போது சிறுபருப்பு பொங்கல், கஞ்சி, தோசை, அப்பம், நெய் சாதம், ஊறுகாய், சர்க்கரை கலந்து பொரி,
அதிரசம், தேன்குழல், அப்பம், வேக வைத்த பாசிப்பருப்பு, வெல்லம் கலந்த உருண்டை என விதவிதமான நைவேத்தியங்கள் படைக்கப்படுகிறது.
கங்கை பூஜை தினமும் உச்சிக்கால பூஜை முடிந்தபின்பு, ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக்கொண்டு மேள, தாளத்துடன் சென்று கடலில் கரைக்கின்றனர். இதனை, "கங்கை பூஜை' என்கின்றனர். இங்குள்ள சரவணப்பொய்கையில், ஆறு தாமரை மலர்களில் முருகன் ஆறு
குழந்தைகளாக தவழ, நடுவே கார்த்திகைப்பெண்கள் இருக்கும் சிற்பம் வடிக்கப்பட்டிருக்கிறது.

கந்த சஷ்டி

முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக
கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு திருச்செந்தூர் தலத்தில் நடந்தது.
எனவே, கந்தசஷ்டி விழா இத்தலத்தில் வெகு விமரிசையாகக்
கொண்டாடப்படுகிறது.

கந்தசஷ்டி கொண்டாடுவது ஏன்? சூரபத்மன் வதம் தவிர்த்து, கந்த சஷ்டி
விழா கொண்டாடப்படுவதற்கு, வேறு இரண்டு காரணங்களும் இருப்பதாக
மகாபாரதம், கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.ஒருசமயம் முனிவர்கள்
சிலர், உலக நன்மைக்காக ஒரு புத்திரன் வேண்டுமென்பதற்காக யாகம்
ஒன்று நடத்தினர். ஐப்பசி மாத அமாவாசையன்று யாகத்தை துவங்கி,
ஆறு நாட்கள் நடத்தினர். யாக குண்டத்தில் எழுந்த தீயில் இருந்து,
ஒவ்வொரு நாளும் ஒரு வித்து வீதமாக ஆறு வித்துக்கள் சேகரிக்கப்பட்டன. அந்த வித்துக்களை ஆறாம் நாளில் ஒன்றாக்கிட, முருகப்பெருமான் அவதரித்தார்.

இவ்வாறு முருகன் அவதரித்த நாளே கந்தசஷ்டி என மகாபாரதம் கூறுகிறது.கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார், தேவர்கள்,
அசுரர்களை எதிர்க்கும் வல்லமை பெறவும், அவரது அருள் வேண்டியும்
ஐப்பசி மாத வளர்பிறையிலிருந்து ஆறுநாட்கள் கும்பத்தில் முருகனை எழுந்தருளச்செய்து, நோன்பு இருந்தனர். முருகனும் அவர்களுக்கு அருள்செய்தார். இதனை நினைவுறுத்தும் விதமாகவே ஐப்பசி
அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி கொண்டாடப்படுகிறது என்கிறார்.

சஷ்டி யாகம்

திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழாவின் முதல் நாள் அதிகாலையில்,
ஹோம மண்டபத்திற்கு மூலவரின் பிரதிநிதியாக வள்ளி,
தெய்வானையுடன் ஜெயந்திநாதர் (முருகன்) எழுந்தருளுவார்.
அறுகோண வடிவில் அமைக்கப்பட்ட ஹோம குண்டத்தில் முருகனின் வெற்றிக்காக யாகம் துவங்கும்.

குண்டத்தை சுற்றிலும் சிவன், அம்பிகை, நான்கு வேதங்கள், முருகன்,
வள்ளி, தெய்வானை, மகாவிஷ்ணு, விநாயகர், சப்தகுருக்கள், வாஸ்து பிரம்மா, தேவர்கள், சூரியன், அஷ்டதிக்பாலகர்கள், துவாரபாலகர்கள்
என அனைத்து தேவதைகளையும் கும்பத்தில் எழுந்தருளச் செய்வர். உச்சிக்காலம் வரையில் நடக்கும் யாகசாலை பூஜை முடிந்தவுடன் ஜெயந்திநாதர், சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுவார். ஆறாம் நாளன்று வள்ளி, தெய்வானை இல்லாமல் தனித்து கடற்கரைக்கு எழுந்தருளி சூரனை சம்ஹாரம் செய்வார். அதன்பின், வெற்றி வேந்தராக வள்ளி, தெய்வானையுடன் யாகசாலைக்கு திரும்புவார்.

கண்ணாடிக்கு அபிஷேகம்

ஜெயந்திநாதர், சூரனை சம்ஹாரம் செய்தபின்பு பிரகாரத்திலுள்ள
மகாதேவர் சன்னதிக்கு எழுந்தருளுவார். அப்போது சுவாமியின் எதிரே
ஒரு கண்ணாடி வைக்கப்படும். அர்ச்சகர், கண்ணாடியில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்வார். இதை சாயாபிஷேகம் என்பர்.

"சாயா' என்றால் "நிழல்' எனப்பொருள். போரில் வெற்றி பெற்ற
முருகனை குளிர்விக்கும் விதமாக இந்த அபிஷேகம் நடக்கும். இதை,
முருகப்பெருமானே, கண்ணாடியில் கண்டு மகிழ்வதாக ஐதீகம். இந்நிகழ்ச்சிக்குப்பின்பு, முருகன் சன்னதிக்கு திரும்புவார். இத்துடன் சூரசம்ஹார வைபவம் நிறைவடையும்.

தெய்வானை திருக்கல்யாணம்

சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் (ஏழாவது நாள்) முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அசுரனை எதிர்த்து வெற்றி பெற்றதற்காக
இந்திரன், தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து தந்ததோடு
தேவ மயிலாகவும் மாறி சேவை செய்தார். இவர்களது திருமணம்
முதல்படைவீடான திருப்பரங்குன்றத்தில் நடந்தது. சூரனை ஆட்கொண்ட தலம் என்பதால் திருச்செந்தூரில் கந்தசஷ்டிக்கு மறுநாள் முருகன்,
தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று காலையில் தெய்வானை தபசு மண்டபம் சென்று, முருகனை மணந்து கொள்ள வேண்டி
தவமிருப்பாள். மாலையில் குமரவிடங்கர் (முருகனின் ஒரு உற்சவர்
வடிவம்), முருகனின் பிரதிநிதியாக மயில் வாகனத்தில் தபசு மண்டபம் சென்று தெய்வானைக்கு மாலை சூட்டி நிச்சயதார்த்தம் செய்து கொள்கிறார். நள்ளிரவில் இருவரும் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருள, அங்கு
திருமணம் நடக்கும். மறுநாள் சுவாமி, தெய்வானையுடன் வீதியுலா செல்கிறார். அடுத்த மூன்று நாட்களும் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில்
ஊஞ்சலில் காட்சி தருவார்.

முருகனுக்கு மஞ்சள் நீராட்டு

கிராமங்களில் திருவிழாவின்போது, கன்னிப்பெண்கள் தங்க ளது முறைப்பையனுக்கு மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்வர். இத்தலத்திலும் இவ்வாறு
முருகனுக்கு மஞ்சள் நீராட்டும் வைபவம் நடக்கும். கந்தசஷ்டி விழாவின் கடைசி நாளில் முருகன், தெய்வானையுடன் வீதியுலா செல்வார். அப்போது,
பக்தர்கள் தங்கள் ஊரில் திருமணம் செய்து கொண்ட முருகனை வரவேற்கும் விதமாகவும், போரில் வென்றதன் உக்கிரத்தைக் குறைக்கும்
விதமாகவும் அவர் மீது மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்வர்.

மும்மூர்த்தி முருகன்

திருச்செந்தூர் கோயில் யானை

முருகப்பெருமான் சிவபெருமானின் அம்சமாக அவதரித்தவர். ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருளை தந்தைக்கே குருவாக இருந்து
உபதேசித்தவர். அதே மந்திரத்தின் பொருள் தெரியாத பிரம்மாவை,
சிறையில் அடைத்தவர். சூரனை சம்ஹாரம் செய்து, பின்
மகாவிஷ்ணுவின் மகளை மணந்து கொண்டவர். மாமனான மகாவிஷ்ணுவின் பாசத்திற்கு கட்டுப்பட்டவர். இவ்வாறு முருகன், மும்மூர்த்திகளோடும் தொடர்புடையவராக இருக்கிறார். இதனை உணர்த்தும்விதமாக திருச்செந்தூரில் முருகப்பெருமான், மும்மூர்த்தி
களின் அம்சமாக காட்சி தருகிறார்.

ஆவணி மற்றும் மாசி மாத திருவிழாவின்போது சிவன், விஷ்ணு, பிரம்மா
என மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார். விழாவின் 7ம் நாளன்று
மாலையில் இவர் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி சிவபெருமானாக காட்சி தருகிறார். மறுநாள் (8ம்நாள்) அதிகாலையில் இவர் வெண்ணிற ஆடையில்
பிரம்மாவின் அம்சமாக அருளுவார். மதிய வேளையில் பச்சை வஸ்திரம் சாத்தி பெருமாள் அம்சத்தில் காட்சியளிக்கிறார்.

நான்கு உற்சவர்கள்

பொதுவாக கோயில்களில் ஒரு தெய்வத்துக்கு, ஒரு உற்சவர் சிலை
மட்டுமே இருக்கும். ஆனால், திருச்செந்தூர் கோயிலில் சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமாள் என நான்கு
உற்சவர்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்குமே தனித்தனி சன்னதிகள் இருப்பது சிறப்பு.இவர்களில் குமரவிடங்கர், "மாப்பிள்ளை
சுவாமி' என்றழைக்கின்றனர்.

சந்தனமலை

முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர் மட்டும்
கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோயிலாக அமைந்தது போலவும் தோற்றம் தெரியும். உண்மையில், திருச்செந்தூரும் மலைக்கோயிலே
ஆகும். இக்கோயில் கடற்கரையில் இருக்கும் "சந்தனமலை'யில் இருக்கிறது. எனவே இத்தலத்தை, "கந்தமாதன பர்வதம்' என்று சொல்வர். காலப்
போக்கில் இக்குன்று மறைந்து விட்டது. தற்போதும் இக்கோயிலின்
இரண்டாம் பிரகாரத்தில் பெருமாள் சன்னதி அருகிலும், வள்ளி குகைக்கு அருகிலும் சந்தன மலை சிறு குன்று போல புடைப்பாக இருப்பதைக் காணலாம்.

குருப் பெயர்ச்சி

திருச்செந்தூரில் முருகன் "ஞானகுரு'வாக அருளுகிறார். அசுரர்களை அழிக்கும் முன்பு, குருபகவான் முருகனுக்கு அசுரர் களை பற்றிய
வரலாறை இத்தலத்தில் கூறினார். எனவே இத்தலம், "குரு தலமாக' கருதப்படுகிறது. பிரகாரத்தில் உள்ள மேதா தெட்சிணாமூர்த்தி கூர்மம்,
அஷ்ட நாகங்கள் அஷ்ட யானைகள், மேதா மலை என நான்கு
ஆசனங்களின் மீது அமர்ந்திருக்கிறார். இவருக்கு பின்புறம் உள்ள
கல்லால மரத்தில் 4 வேதங்களும், கிளிகள் வடிவில் இருக்கிறது. அறிவு, ஞானம் தரும் மூர்த்தியாக அருளுவதால் இவரை, "ஞானஸ்கந்த மூர்த்தி' என்று அழைக்கிறார்கள். வழக்கமாக கைகளில் அக்னி, உடுக்கையுடன்
காட்சி தரும் தெட்சிணா மூர்த்தி, இங்கு மான், மழுவுடன் காட்சி தருகிறார். குருப் பெயர்ச்சியன்று திருச்செந்தூர் முருகனை வணங்கினால், குருவினால் உண்டாகும் தீய பலன்கள் குறையும்.

இரண்டு முருகன்

சூரனை சம்ஹாரம் செய்ய வந்த முருகன், இத்தலத்தில் சுப்பிரமணியாக நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். இவர் வலது கையில் மலர் வைத்து,
சிவபூஜை செய்தபடி தவக்கோலத்தில் இருப்பது சிறப்பான அமைப்பு. இவரது தவம் கலைந்துவிடக்கூடாது என்பதற்காக, இவருக்கு பிரகாரம்
கிடையாது. இவருக்கான பிரதான உற்சவர் சண்முகர், தெற்கு நோக்கி தனி சன்னதியில் இருக்கிறார். இவரை சுற்றி வழிபட பிரகாரம் இருக்கிறது.
மூலவருக்குரிய பூஜை மற்றும் மரியாதைகளே இவருக்குச் செய்யப்படுகிறது.

தீபாவளிக்கு புத்தாடை ஊர்வலம்

மகாவிஷ்ணு, நரகாசுரனை அழித்து மக்கள் இன்புற்ற தீபாவளி நாளில் அனைவரும் புத்தாடை உடுத்தி மகிழ்கிறோம். திருச்செந்தூர் கோயிலிலும்
அனைத்து சுவாமிகளுக்கும் தீபாவளியன்று புத்தாடை அணிவிக்கப்படுகிறது. அன்று அதிகாலையில் இக்கோயிலில் உள்ள அனைத்து பரிவார
தெய்வங்களுக்கும் சந்தன காப்பு செய்யப்படுகிறது. பின் புத்தாடைகளை வெள்ளி பல்லக்கில் வைத்து ஊர்வலமாக கொண்டு சென்று,
அணிவிக்கின்றனர். இதை, தெய்வானையை, முருகன் மணம் முடிக்க காரணமாக இருந்த தலம் என்பதால், இந்திரன் இத்தலத்தில் மருமகனுக்கும்,
அவரைச் சார்ந்தவர்களுக்கும் தீபாவளிக்கு புத்தாடை எடுத்து தருவதாக ஒரு நம்பிக்கை உள்ளது.

திருவிழா

பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, வைகாசி விசாகம், கந்த சஷ்டி முருகத்தலங்களில் கந்தசஷ்டிவிழா ஆறு நாட்களே நடக்கும். சில
தலங்களில் சஷ்டிக்கு மறுநாள் முருகன் திருக்கல்யாணத்துடன் சேர்த்து
ஏழு நாட்கள் நடத்துவர். ஆனால், திருச்செந்தூரில் கந்தசஷ்டி முதல் ஆறுநாட்கள் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம், ஏழாம் நாளில் முருகன், தெய்வானை திருக்கல்யாணம், அடுத்த 5 நாட்கள், சுவாமி திருக்கல்யாண கோலத்தில் ஊஞ்சல் சேவை. என இவ்விழா 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

தமிழ் இலக்கியங்களில்

தமிழ் இலக்கியங்களில் திருச்செந்தூர் அலைவாய், சீரலைவாய் என்கிற பெயர்களில் போற்றப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்கள்

தொல்காப்பியம்
முருகன் தீம்புனல் அலைவாய் - தொல்காப்பியம் (களவு சூத்23)

புறநானூறு
வெண்டலைப் புனரி யலைக்குஞ் செந்தில்
நெடுவேல் நிலைஇய காமர் வியன்துறை (பாடல் 55)

அகநானூறு
திருமணி விளக்கினலை வாய்ச்செரு மிகுசேஎய் (பாடல் 266)

திருமுருகாற்றுப்படை
உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர் அலைவாய்

சிலப்பதிகாரம்
சீர் கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்

தேவாரப் பதிகம்
நஞ்செந்தில் மேய வள்ளிமணாளற்குத் தாதை கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே

அருணகிரிநாதர் பாடல்
இக்கோயில் குறித்தும், முருகப்பெருமான் குறித்தும் அருணகிரிநாதரின் பாடல் இது.

அந்தண்மறை வேள்வி காவற் கார செந்தமிழ் சொல் பாவின் மாலைக் கார அண்டரூப கார சேவற் கார முடிமேலே -
அஞ்சலிசெய் வோர்கள் நேயக் காரகுன்றுருவ ஏவும் வேலைக் காரஅந்தம்வெகு வான ரூபக் கார எழிலான;
சிந்துரமின் மேவு போகக் காரவிந்தைகுற மாது வேளைக் காரசெஞ்சொலடி யார்கள் வாரக் கார எதிரான -
செஞ்சமரை மாயு மாயக் காரதுங்கரண சூர சூறைக் கார செந்திநகர் வாழு மாண்மைக் கார பெருமாளே.

Source: vikipedia
===================================================================
இன்றைய பக்தி மலர் எப்படி உள்ளது? ஒரு வார்த்தை சொல்லிவிட்டுச் செல்லுங்கள்.
அன்புடன், 
வாத்தியார்
--------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!