மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.5.15

பாதி புதிர்: Half Quiz: பொருளாக நீயிருந்தென்ன அரங்கேரும் நாள் வரவேண்டும் - வாத்தியாரின் பதில்


பாதி புதிர்: Half Quiz: பொருளாக நீயிருந்தென்ன அரங்கேரும் நாள் வரவேண்டும் - வாத்தியாரின் பதில்

Quiz 85 Answer

31.5.2015

முன் பதிவில் (29.5.2015) அம்மணி ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து உங்களை அலசச் சொல்லியிருந்தேன்.  மொத்தம் 36 பேர்கள் அலசியிருக்கிறார்கள். அனைவரும் ஓரளவிற்கு நன்றாகவே அலசியிருக்கிறார்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள்.

கேட்கப்பெற்றிருந்த கேள்வி: அம்மணிக்குத் திருமணமாக வில்லை. விளங்கச் சொன்னால் அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. கடைசிவரை கன்னியாகவே காலத்தைக் கழித்துவிட்டார். ஜாதகப்படி என்ன காரணம்? ஜாதகத்தை  அலசி உங்கள் பதிலைச் சொல்லுங்கள் என்றிருந்தேன்

சரியான பதில்:

1. அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.  திருமணத்தில் அவருக்கு நாட்டம் இல்லாமல் போய்விட்டது. 7ஆம் வீட்டுச் சனி அதைச் செய்திருக்கிறான். மீறி அவர் யாரையாவது மணந்துகொண்டிருந்த்காலும் அவரை விதவை ஆக்கியிருப்பான். அதற்கு அவர் (ஜாதகி) இடம் கொடுக்கவில்லை.

2. ஏழில் சனீஷ்வரன்.

3. களத்திரகாரகன் சுக்கிரன் 3ம் வீட்டில், சிம்ம ராசியில், பகை வீட்டில்.

4. 7ம் இடத்து அதிபதி குரு அந்த வீட்டிற்கு 6ல், இலக்கினத்திற்கு 12ல் (மறைவிடத்தில்) இந்த அமைப்பு திருமண வாழ்விற்கு எதிரானது. திருமணம் மறுக்கப்பட்டு விடும். அதுதான் நடந்திருக்கிறது.

5. 5ம் வீட்டில் கேது மற்றும் செவ்வாய்.(செவ்வாய் ஆறாம் வீட்டுக்காரன். வில்லன்) புத்திர தோஷம் உள்ளது. குழந்தை பாக்கியம் இல்லாத ஜாதகம்.
ஐந்தில் கேது இருந்தால் ஒன்று அரச யோகம் இல்லாவிட்டால் சந்நியாச யோகம் கிடைக்கும் என்பார்கள்.

6. அவருக்கு இரண்டும் கிடைத்தது. ஆமாம் அவர் இசைக்கு அரசி. அத்துடன் திரும்ணம் செய்துகொள்ளாமல் சந்நியாசினி போன்ற வாழ்க்கையும் பெற்றுள்ளார்.

இப்போது சொல்கிறேன். அது இசையரசி லதா மங்கேஷ்கரின் ஜாதகம்.
5 ஆண்டுகளுக்கு முன் விஷேச வகுப்பில் (Special Class roomல்) அலசிக் கொடுத்திருந்தேன். அதை யாராவது கவனத்தில் வைத்திருந்து சொல்கிறீர்களா என்று பார்ப்பதற்காகக் காத்திருந்தேன். வந்த முதல் பின்னூட்டத்திலேயே Chandrasekaran Suryanarayana  அவர்கள் பட்டென்று சுட்டிக் காட்டியிருந்தார். அவருக்கு விசேசமான வாழ்த்துக்கள். மற்ற யாரும் கண்டுபிடிக்கவில்லை!

கலந்து கொண்டவர்களின் பதிலில் இருந்து முக்கியமான வரிகளை எடுத்துக் கீழே கொடுத்துள்ளேன். அவர்களுக்கும் அடியேனது பாராட்டுக்கள்

அடுத்த அரைப் புதிர் 5.6.2015 வெள்ளிக்கிழமையன்று!

அன்புடன்
வாத்தியார்
===================================
1
Blogger Chandrasekaran Suryanarayana said...

28th September 1929 23.51.00 PM (age- 84 years)
இந்தூர், மத்தியபிரதேஷத்தில், ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த ஜாதகியின் பெயர் லதா மங்கேழ்கர் இந்திய நாட்டின் புகழ் பெற்ற பாடகி.
திருமணம் மறுக்கப்பட்ட ஜாதகம்.
மிதுன லக்கினம்(30 பரல்)சிவந்த மேனி அழகுடன் இருப்பார். லக்கினாதிபதி புதன் 4ல் உச்சத்தில் சூரியனுடன் புத‍-‍‍ஆதித்திய நிபுன யோகத்தில். வர்கோத்திரமான புதன் நவாம்சத்திலும் உச்சம். சங்கீத‌த்தில் உயர்ந்த நிலைக்கு சென்றதிற்க்கு இதுவும் ஒரு காரணம்.
7ம் வீட்டு அதிபதி குரு லக்கினத்திற்க்கு 12ல் பகைவீட்டில் ரிஷபத்தில். ல‌க்கினத்தில் மாந்தி, 7ம் வீட்டில் சனி(3 பரல்) அமர்ந்திருப்பதால் திருமணம் நடைபெறவில்லை. 7ம் வீட்டில் 25 பரல்கள்.
களத்திரகாரகன் சுக்கிரன் 3ம் வீட்டில் சிம்ம ராசியில் பகை வீட்டில்.நவாம்சத்திலும் சுக்கிரன் சனி, கேதுவுடன் கூட்டு.
சந்திரனிலிருந்து 4ம் வீட்டில் செவ்வாய் இருப்பதால் இந்த ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உண்டு.
இந்த ஜாதகத்தில் உள்ள யோகங்கள், பத்திர யோகம், சுனபா யோகம், சாமர யோகம், வசுமதி யோகம், நிபுன யோகம், உபயசர யோகம் என பல யோகங்கள் உள்ளன.
இந்த ஜாதகத்தை மேலும் நிறைய அலசலாம். ஆனால், கேட்ட கேள்வி திருமணம் மட்டும் என்பதால் இத்துடன் அல‌சலை நிருத்திக் கொள்கின்றேன்.
சந்திரசேகரன் சூரியநாராயணன்.
Friday, May 29, 2015 7:29:00 AM//////
-------------------------------------------
2
////Blogger slmsanuma said...
Bhavagathipathi Guru is at 12th place // aspected by Sevvai 
and 6th place to 7th house
Saneeswaran is at 7th place 
but this Bhavagam is not aspected by any other planets.
These are the reasons why the native did not get married.////
--------------------------------------------
3
//////Friday, May 29, 2015 7:30:00 AM
Blogger slmsanuma said...
Sir Please don't give the answer and let us to find the correct answer by analysing the horoscope. If we know the answer we find the reasons for that answer which is very easy but we need to find the answer with our own effort. Please don't give the answer sir.
Friday, May 29, 2015 7:33:00 AM/////

எண் 23ல் உள்ள திருமதி ராஜம் ஆனந்த் அவர்களின் பின்னூட்டத்தைப் பாருங்கள். எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில்தான் பாதி விடையுடன் புதிர் கொடுக்கப்படுகிறது. என்ன சரிதானே?
------------------------------------------
4
/////Blogger GANAMURUGU said...
Dear Sir, 
1) Though lagnam is in Subakarthari yogam, Maanthi is there.
2) Saneeswara Bagavan is in 7th place.
3) The Lord of 7th place, ie., GURU Bagavan is in 12th house.
4) Kalasthira karagan Sukran is in 3rd house, which is also a enemy house.
Due to the above reasons this jatagar has no marriage life.
G.Murugan.
Friday, May 29, 2015 7:53:00 AM/////
-------------------------------------------------
5
/////Blogger Srinivasa Rajulu.M said...
அன்புள்ள ஐயா,
1) குயிலுக்கு உதவ வேண்டிய சுக்கிரனின் தசையில் (22 வயதிலிருந்து 42 வயது வரை), பகை மற்றும் மறைவு ஸ்தானத்தில் அமர்ந்த சுக்கிரனுக்கு கையறு நிலை. என்ன செய்வார் பாவம்? நல்லோர்களின் பார்வையும் அவருக்கு இல்லை.
2) களத்திர ஸ்தானாதிபதி ஆறில் (அதுவும் பகை வீட்டில்) மறைவு மற்றும் முக்கியமாக ஞானகாரகனுடன் சம்மந்தம்.
3) களத்திர ஸ்தானம், கத்தரி (அவ)யோகத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறது. குருபார்வையும் உதவ முடியாத அளவுக்கு 'பூட்டி' வைத்த வீடு.
4) பாக்கியஸ்தானத்தைப் பார்க்கும் சனைஸ்சரன் வேறு திருமண பாக்கியத்துக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டார்.
5) சயன-போக ஸ்தானாதிபதியான சுக்கிரன் மறைவு. ஸ்தானத்தை, செவ்வாய் பார்ப்பது வேறு அம்மணிக்கு திருமண பந்தத்தில் ஆசையில்லாமல் செய்து விட்டது.
நன்றி ஐயா.
ஸ்ரீனிவாச ராஜுலு.
Friday, May 29, 2015 7:57:00 AM/////
---------------------------------------------------
6
////Blogger Dallas Kannan said...
Respected Sir
Apologize for long gap in participation. Sani dasa sua buthi still going on and working from 8:00 AM to 12:30 AM and some times go over that time too. But do not fail to read the lessions at lease at the end of week.
Answer to the puzzle:
1. Sani in 7th place. He is 8th lord (for ladys 8th place is mangalya sthanam). So 8th lord is in 12th place from 8th place.
2. The 7th lord is in 12th place. it is not only 12th place, it is 6th place from 7 and it is his enimey house.
3. Mars is looking at 8th place (mangalya sthanam) and 7th lord.
4. 7th lord and 12th place is between Rahu and Mandi.
5. Sukran is also in 3rd place/enemy place
6. Only Sani is outside of Rahi/kethu. So that is also considered part kalasharba dosam.
Hope I covered all the points.
Cheers
Kannan
Friday, May 29, 2015 8:31:00 AM/////
---------------------------------------------
7
////Blogger kmr.krishnan said...
1.7க்குரிய குருஜி 12ல் மறைவு.
2.குருஜி மாந்தி ராகுவால் சூழப்பட்டது.
3.சந்திர லக்கினத்திற்கு 8க்குரிய சனி 6ல் மறைந்தது
4.லக்கினத்திலேயே மாந்தி.
5.லக்கினத்திற்கு 7ல் சனைச்சரன்.
6.ஆயில்ய நட்சத்திரம். (சில மூட நம்பிக்கைகளால் மூலம்,ஆயில்யம் கேட்டைப் பெண்களுக்குத் திருமணம் தடை/தாமத‌ப்படுகிறது)
நாடி சோதிடப் படி செவ்வாய் கணவருக்கான கிரகமாகக் கொள்ளப்படுகிறது. அங்கே கிரகங்களுக்கான பார்வை முறையும் வேறு. இந்த ஜாதகத்தில் ராகு, கேது சனி, ஆகிய மூன்று கிரகங்கள் செவ்வாயைப் பார்ப்பதால் திருமணம் மறுக்கப்பட்ட ஜாதகம் ஆகிறது.இரண்டு தீயபார்வை இருந்தாலே திருமணம் ஆகாது என்பார்கள் அங்கே. இந்தஜாதகத்தில் மூன்று கிரகங்கள் பார்க்கிறது.
Friday, May 29, 2015 9:29:00 AM/////
-----------------------------------------------------
8
/////Blogger amuthavel murugesan said...
Respected Sir,
1. Manthi in lagnam is the main reason for not married.
2. Sani parvai from 7th place to lagnam.
3. 7th lord Guru in the 12th place.
M.Santhi
Friday, May 29, 2015 9:51:00 AM/////
---------------------------------------------------------
9
////Blogger Gpbarathi P said...
sir
For the non marriage I submit the following three points.
1. in seventh place saturan is occupied. The saturan is most malefic for mithunam lagnam.
2.Seventh place Jupiter is in 12 th place .
3.The kalathrikarakan Sukran is in 3 rd place, 
In above all no benefic aspect for seventh , seventh pava,its athipathy,for sukra.
So the native is not accommodated with marriage.
Nellai Padmanaban
Friday, May 29, 2015 9:58:00 AM/////
---------------------------------
10
/////Blogger valli rajan said...
Guruji,
1. Guru 7th Lord in 12th house
2. Saturn in 7th House viweing lagna.
3. Venus in the third house leo which is its enemy place.
4. Saturn aspecting lagna lord mercury.
7th Lord, Guru, Venus are affected this is the reason for No Marriage.
These are the reason for no marraige
Friday, May 29, 2015 10:50:00 AM//////
----------------------------------------
11
//////Blogger trmprakaash@gmail.com said...
Ayya,
1. Lagnathil Maandhi. Lagnathibathi Budhan Kendrathil Uchaam. Kaalasarpa Jathagam 
(Sani Eriya Nakshathiram Moolam).
2. 7m Athibathi Guru, Lagnathirkku 12-il, 7m veettirkku 6il. Adhumattumindri Guru matrum 12m veedu Paabakarthariyil (oru pakkam Rahu maru pakkam Maandhi). 7m veettil 8m Athibathi Sani. 
3. 7m Veettirkku Subargalin Paarvail Illai. Kalathirasthaanathibathi Sukkiran Pagai
veettil. 
4. Matrum 2m veettil Chandiran thannudaiya sondha veettil irundhaalum 7m veettirku 
8m veettil. 2m veettirkku Baadhagasthanathil 7m Athibathi Guru. Guru 6m Athi-
bathiyaana Sevvayin Paarvaiyil.
5. Mothathathil, Lagnam, 5m Veedu, 7m Veedu kettulladhu. Lagnathibathi uchamaaga
irundhum, Sukkira dhasavil thirumanam nadakkavillai. Kaaranam, Sukkiran,
Budhan Matrum 7m Athibathi Guru, Rahu Kethuvin pidiyil. Thanks.
Friday, May 29, 2015 10:52:00 AM/////
-------------------------------------
12
/////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
(Half Quiz: குயிலாக நானிருந்தென்ன குரலாக நீ வர வேண்டும்!)ற்கான பதில்.
1. ஏழில் சனி பகவான் இருப்பது திருமண தடை ஆகும்.
2. ஏழுக்க்குடைய குரு பனிரெண்டில் மறைந்து திருமணத்தை கை விட்டார்.
3. ஏழாம் அதிபதி குரு மீது செவ்வாயின் பார்வை, மேலும் சந்திரனுக்கு நாலில் செவ்வாய், குறைந்த அளவு செவ்வாய் தோஷம்.
4. பருவ வயதில் (15-22) கேது திசை, 22ற்கு மேல்வந்த சுக்கிரனும் மூன்றாம் இடத்தில மறைந்து 42 வயது வரை திருமண சிந்தனையை தடுத்து விட்டார்.
5. மேலும் லக்கினாதிபதியும், சுக்கிரனும் 1 க்கு 12ல் முறுக்கி கொண்டுள்ளனர்.
கடைசிவரை கன்னியாகவே காலத்தைக் கழித்துவிட்டார்.
அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.
Friday, May 29, 2015 11:33:00 AM/////
-------------------------------------------
13
/////Blogger OM SIVASAMY said...
dear sir
1) 7th lord Jupiter in 12th house indicating denial of that houses effects.
2) No good aspects on 7th house.
3) 8th lord Saturn occupying 7th house.
Friday, May 29, 2015 11:37:00 AM/////
-----------------------------------------
14
////Blogger kothanda ramar said...
இது என் முதல் முயற்ச்சி,
1.இரண்டில் சந்திரன் காரகன் காரகத்தில்
2.நான்கில் சூரியன்
3.ஏழாம் அதிபதி பன்னிரெண்டில்
4.ஏழில் சனி
5.ஐந்தில் கேது உள்ளதால் பித்ரு தோஷம் செவ்வாயுடன் சேர்ந்து மாங்கல்ய தோஷம் ஐந்தாமிடம் பாதிக்க பட்டதால் புத்திர தோஷம் மற்றும் குலதெய்வ வழிபாடின்மையை குறிக்கிறது.
இவைதான் குடும்ப வாழ்க்கையை எட்டாகனியாக்கியிருக்கும்.
Friday, May 29, 2015 12:32:00 PM////
--------------------------------------
15
//////Blogger murali krishna g said...
அய்யா ,
இந்த பெண்மணி மிதுன லக்னம். லக்னாதிபதி புதன் நான்கில் உச்சமாக இருந்தாலும் வக்கிரமாக உள்ளார். அதனால் நீச பலன் தான்.
1) லக்னத்தில் மாந்தி, எழில் சனி . கடும் களத்திற தோஷம்.
2) ஏழாம் அதிபதி குரு விரய ஸ்தானத்தில் 12-ல். அவரும் கை கொடுக்க வில்லை. களத்திரகாரகன் சுக்ரன் 3-ல் மறைவு.
3) பூர்வ புண்ய ஸ்தானத்தில் செவாயும் கேதுவும்.. கடும் தோஷம்.
4) சனியும் கேது சாரத்தில். சுக்ரனும் கேது சாரத்தில். சுகர தசை கை கொடுக்க வில்லை.
5) கடைசியாக பெண் ஆயில்ய நட்சத்ரம் . சிலரால் இதுவே மாமியாருக்கு ஆகாது என்று கருதபடுகிறது..
Friday, May 29, 2015 12:36:00 PM////
-------------------------------------
16
/////Blogger Govindasamy said...
ஏழாம் இடத்தில் எட்டுக்குரிய சனி. மேலும் ஏழுக்குரிய குரு 12ல் (ஏழமிடத்திற்கு ஆறாம் இடம்) இதற்கெல்லாம் மேல் சுக்கிரன் 3ல்.
Friday, May 29, 2015 1:04:00 PM/////
----------------------------------------------
17
//////Blogger sundari said...
good afternoon sirr 
she is having lagana mandhi and 7th house sani sani vision falls in lagana and 7th houseowner jupiter in 12th house that too 7th from 6th house that is why she did not get marriage
Friday, May 29, 2015 1:55:00 PM/////
------------------------------------
18
/////Blogger Pethaperumal said...
1. 5 ல் கேது
2. குரு 12 ல் மறைந்தது
3. குரு வீட்டில் 7 ல் சனி. அம்மனிக்கு திருமணம் ஆகாமல் இருந்ததே நலம். ஆகி இருந்தால் மிகவும் மோசமான துணை அமைந்திருக்கும்.
4. சுக்கிரன் பகை வீட்டில்.
நன்றி
Friday, May 29, 2015 2:32:00 PM////
----------------------------------------------
19
///////Blogger hamaragana said...
அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
பாதி புதிர் எண் 2.
மிதுன லக்னம் .கடக ராசி.
1,லக்னத்தில் மாந்தி
2. 7ம் வீடு தனுசு அதன் வீட்டதிபதி குரு [மாங்கல்யம் தரகூடியவன் ] லக்னத்திற்கு 12ல்
3.7ம் வீட்டில் சனி ...அவனின் .நேர் 7ம் பார்வை லக்னத்தை.
4.பாக்கியத்தை கொடுக்ககூடிய 9ம் வீட்டதிபதி சனி தன வீட்டிற்கு 12.ல்
5.எல்லாவற்றையும் விஞ்சும் வண்ணம் லக்னத்திற்கு 5ல் கேது ​ &செவ்வாய் ..கூட்டணி .***5ல் கேது சந்நியாசி யோகம்***
ஆகவே இந்த பெண்மணிக்கு திருமணம் என்பது மறுக்க படுகிறது.
Friday, May 29, 2015 4:18:00 PM/////
-------------------------------------
20
////Blogger SSS CONSTRUCTION said...
1. LAGNA LORD BUDHAN IS COMBUST WITH 6TH LORD MARS AND IN NAVAMASA THE LAGNA LORD SANI IS NEECHAM AND WITH SUN.
2. IN RASI THE 8TH LORD SANI IS IN 7TH PLACE AND 7TH LORD GURU IS IN 12TH PLACE
3. THE 8TH LORD MARS IS VIEWING 8TH VIEW TO GURU.
4. IN NAVAMASA KETU IS IN 2TH PLACE SO THESE FACTORS ARE AFFECTING HER MARRIAGE POSSIBILITY
Friday, May 29, 2015 8:52:00 /////
------------------------------------------
21
//////Blogger selvam velusamy said...
வணக்கம் குரு,
லக்னத்திற்கு 7குடைய குரு லக்னத்திற்கு 12ல் மறைந்ததோடு வர்கோத்தமம் பெற்ற ஆராமதிபதி சாரம் பெற்று பார்வையையும் பெற்றார். இந்து லக்னத்திற்கு 7குடைய சனி இந்து லக்னத்திற்கு 12ல் மறைந்ததோடு கேதுவின் சாரமும் பெற்றார். ஜனன லக்னத்திற்கு 7ல் சனி அமர்ந்து களத்திற பாவத்தை கெடுத்தார், அவர் அட்டமாதிபதியும்கூட. களத்திர காரகன் சுக்கிரன் ஜனன லக்னத்திற்கு 3ல் அமர்ந்ததோடு கேதுவின் சாரமும் பெற்றார். இதனால் அவருக்கு திருமண ஆசை வரவில்லை அல்லது நாட்டமில்லை.
நன்றி
செல்வம்
Friday, May 29, 2015 10:12:00 PM/////
----------------------------------------------
22
///////Udhayaganesh said...
i belive 7 th house god is in 12 th house. saturn sits in 7th house and 12 th house for his house.Both are helpless.
Friday, May 29, 2015 10:17:00 PM/////
---------------------------------------------
23
/////Blogger Rajam Anand said...
Dear Sir,
This is my first attempt.
This person must have either born in September 1989 or 1929. Since you have mentioned the term "Ammani", the lady must have born in 1929. In fact she was born in the night of 28/29 September 1929.
1. In general, the Lagna Lord is in Kendra house and also exalted. Furthermore in Navmsa too Mercury is in the same Lagna (Vargothma). So he is very powerful. This would have given the native to excel in her job.
2. Kethu is in the 5th house (Sanyasi yogam). Additionally, he is with Mars which is a malefic planet. Also Libra is 4th house from the moon. So the native has Mars dosha.
3. Kalasthirakaran Venus is occupying the enemy house of Leo. So he is weak.
4. Karakan Saturn is occupying Sagittarius which is 12th house to Capricorn.
5. Mandi is in Lagna!
6. For ladies, Mars and Moon help to pin the marriage. In Navmsa, moon is in the 12th house and also Karakan Saturn is debilitated.
In my humble opinion these factors could have contributed to the fact she remains single.
Thanks for giving everyone a chance to participate in the quiz.
Rajam Anand
Friday, May 29, 2015 10:38:00 PM///////
---------------------------------------------
24
/////Blogger vignesh.t Kumar said...
7 l sani , kalathira sthanam ketadhu
8 adhipathi 7 l, kalathira nasam
7 am adhipathi guru 12 l maraivu
poorva puniyathil kethu
all planets are under ragu kethu except sani .
this are the reasons for no marraige.
Saturday, May 30, 2015 8:07:00 AM//////
----------------------------------------------------
25
/////Blogger SELVARAJ said...
இது கேது கொடி பிடிக்க இராகு கோஷமிடும் காலஷர்ப தோஷ ஜாதகம். சனி வெளியே இருந்தாலும், கேதுவின் மூல நக்ஷ்த்திர சாரத்தால் அவரும் சிக்கி உள்ளார். 7ம் இடம் கேதுவின் கட்டுபாட்டில் உள்ளது அங்கு அமர்ந்த சனியால் பலன் கிட்டவில்லை. மேலும் 7ம் அதிபதி 12ல் மறைந்துள்ளார். மேற்கண்ட காரணமாக திருமண வாழ்வு இல்லாமல் போணது. சிறந்த சேவகராக விளங்கி இரப்பார்.
Saturday, May 30, 2015 8:31:00 AM//////
--------------------------------------------
26
////Blogger GANAMURUGU said...
Dear Sir, 
1) Though lagnam is in Subakarthari yogam, Maanthi is there.
2) Saneeswara Bagavan is in 7th place.
3) The Lord of 7th place, ie., GURU Bagavan is in 12th house.
4) Kalasthira karagan Sukran is in 3rd house, which is also a enemy house.
Due to the above reasons this jatagar has no marriage life.
G.Murugan.
Saturday, May 30, 2015 8:37:00 AM//////
--------------------------------------------------
27
//////Blogger Venkat Lakshmi said...
மதிப்பிற்க்குரிய வாத்தியார் ஐயாவுக்கு வணக்கம்,எனக்கு தெரிந்த பதில்,
1.ஏழில் சனி,அதனால் களத்திர ஸ்தானம் பாதிப்பு,
2.எட்டாம் வீட்டு அதிபதி ஏழில்,
3.ஏழாம் வீட்டு அதிபதி அந்த வீட்டிற்க்கு ஆறில்,மற்றும் லக்கணத்திற்க்கு பனிரெண்டில்,
4.களத்திரகாரகர் சுக்கிரன் பகை.
Saturday, May 30, 2015 9:46:00 AM/////
----------------------------------------------
28
//////Blogger bala said...
Vanakkam Iyya,
Thirumanthiruku Mangalya sthanam (8aam idam) + Kalathira Sthanam (7aam idam) Paarka pada vendum.
Jaathagar - Mithuna lagna kaarar.
7&10 - Athipathi - Guru - Lagnathiruku 12-il ullar. 
Kalathira kaaragan - Sukran - 3 il ullar
Kalathira kaaragan, Kalthira sthanthipathi (guruvum, sukkiranum) - Maraivu idangalil ullanar. 
Lagnathipathi uchamaga irundhalum ondrum payan illamal ponathu.Guru, sukkiran kum lagnathipathikum thodarbu illai. 
(avarudaya buthiyil thirumanam nadai permal ponathiruku ithuvum oru kaaranam).
Melum intha jaathagaruku 23 vayathu mudhal sukkira thisai, Maraivil sukiran ullathal avaraal ondrum udhava mudiyavilai.
8 aam idathiruku athipathi sani. peniruku maangalya sthanam 8 aam idam aagum
Intha jathagathil - 8aam athipathi (sani) antha idathirku 12-il ullar(lagnathiruku 7-il). Ithu oru mosamana amaipu. Ithanal avaruku thirumanam nadanthaalum avaruku athu illamal poga koodiya nilamai. athanal avaruku thirumanam nadai pera villai.
Nandri,
Bala
Saturday, May 30, 2015 11:17:00 AM//////
--------------------------------------------
29
/////Blogger Sivachandran Balasubramaniam said...
மதிப்பிற்குரிய ஐயா !!!
புதிரில் கொடுக்கப்பட்ட பெண்ணின் ஜாதகத்தில் லக்கினாதிபதி உச்ச வர்கோதமம் பெற்றாலும் அவர் கன்னி ராசியின் 29 ஆம் பாகையில் அமர்ந்ததுடன் வக்கிரமும் பெற்றுவிட்டார். உடன் மூன்றாமதிபதி சூரியன். களத்திர ஸ்தானத்தில் அஷ்டமாதிபதி சனி. அவர் அம்சத்தில் நீச்சமானாலும் அவர் இருப்பதோ ஏழிலில். களத்திர ஸ்தானாதிபதி குரு லக்கினத்திற்கு 12இல். குரு பாபகர்த்தாரி யோகத்தில். மேலும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இரண்டு அசுபர்கள், செவ்வாய் மற்றும் கேது.அதன் அதிபதி சுக்கிரன் 3 ஆம் வீட்டில் பகை வீட்டில். களத்திரஸ்தானம் 25 பரல்கள். அதன் அதிபதி குரு 7 பரல் பெற்றாலும் உதவுகிற நிலையில் இல்லை. சுக்கிரன் 6 பரல் பெற்றாலும் அவர் அம்சத்தில் ராசிக்கு 12 இல் அமர்து விட்டார். இவற்றால் இப்பெண்மணி கடைசி வரை திருமணம் செய்து கொள்ளவில்லை !!!!!
இப்படிக்கு
சிவச்சந்திரன்.பா
Saturday, May 30, 2015 11:32:00 AM//////
------------------------------------------------
30
////Blogger nareshvenus said...
வணக்கம் ஐயா,
லக்னத்தில் மாந்தி , 11 ல் ராகு, 5 ல் கேது. 7ல் சனீஷ்ரர்.
ஜயாவுடைய பழைய பாடத்தில் பார்த்த ஞயாபகம்.
இந்த ஜாதகம் திருமதி ஜெயலலிதா அம்மையாருடையது தானே.
கீழே புதிருக்கான விடையளிக்க முயன்றுள்ளேன்.
7 ஆம் அதிபதி குரு வலுவற்று விரயத்தில் .நவாம்சத்திலும் ஆட்சி / உச்சம் பெறவில்லை.
7 ல் அமர்ந்த சனீஷ்வரர்.
லக்னத்திலமர்ந்த மாந்தி
இந்த அமைப்புகள் திருமணம் தடை பெற காரணம் என நான் கருதுகிறேன்.
ஐயா வின் அலசலுக்காக காத்திருக்கிறேன்.
நன்றி.
Saturday, May 30, 2015 12:46:00 PM/////
-----------------------------------------------------
3`1
/////Blogger saravanan said...
7th house lord GURU sitting in 12th house...
SANI SITTING IN THE 7TH HOUSE & seeing lagnam along with mandhi
sukkram sitting in the third house and neesam.
5th house occupied by kethu is also a reason for not interested in the marriage.
R.Saravanan
Saturday, May 30, 2015 2:45:00 PM/////
-------------------------------------
32
////Blogger ARIMALAM said...
குருவே நமஹா
1929ம் வருடம் செப்டம்பர் மாதம் 28உ இரவு 11:58 மணி அளவில் பிறந்தவர் (ஊரை பொருத்து மாறும்).
1. 7ம் வீட்டில் 8ம் அதிபதி சனி பாதிப்பு. ராஹுவின் பார்வை 7ம் வீட்டில்.
2. 7ம் அதிபதி குரு 12ல் (7க்கு 6ல்) பாதிப்பு. கேதுவுடன் சேர்ந்த 6ம் அதிபதி செவ்வாயின் பார்வை குருவின் மேல்.
3. லக்னத்தில் மாந்தி. சனியின் பார்வை.லக்னாதிபதி/சுகஸ்தானாதி/சந்திர நட்சத்திராதிபதியுமான புதன் வக்ரம். சனியின் பார்வை பெருகிறார்.
4. புத்திஸ்தானத்தில் செவ்வாயுடன் கேது.
5. சந்திர லக்னத்தின் 7ம் பதி சனி 6ல்.
6.புதன் திசை பின் கேது திசை ஒத்துழைக்கவில்லை.
வணக்கம்
Saturday, May 30, 2015 5:55:00 PM//////
---------------------------------------
33
/////Blogger Maripandian Gani said...
Reason for not getting married:
1. 7th house lord Jupiter is in 12th house. 8th house lord Shani is in 7th house. No beneficiary aspect for the 7th house.
2. 1st house lord Mercury is in Retrograde position in 4th house. Also Shani aspect is in 4th house. 
3. 6th lord Mars is in 5th house with Ketu. No beneficiary aspect for 5th house and 5th house lord. So no children.
Saturday, May 30, 2015 8:34:00 PM/////
----------------------------------------------
34
/////Blogger kirukkal said...
வணக்கம் ஐயா,
ஜன்ம லக்னம் மற்றும் சந்திரலக்ன ரீதியாக,ராசி நவாம்சம் இரண்டிலும் லக்னாதிபதி,7ஆம் இடம்,அதன் அதிபன்,களத்திர காரகன் மட்டும் அல்லாது தாரேசன் ஆன குருவும் வலு இழந்து காணப்படுகிறது . தசா பக்தி அனுசரணையும் வேண்டப்படுகிறது.
இவை அனைத்திலும், தாரேசன் குருவின் நிலையே காலம் முழதும் கன்னியாக இருக்க காரணம் என்று கருதுகிறேன் .
ராசியில்:(1)ஜன்ம லக்னத்திற்கு, 7க்கு உடைய,தாரேசன் ஆன குரு லக்னத்திற்கு 12ல், 6க்கு உடைய செவ்வாயின் நக்ஷத்ரத்தில் அமர்ந்து , பாதகச் செவ்வாயால் பார்க்கப்படல் .
(2) சந்திர லக்னத்திற்கு 6க்கு உடையனவாகி தாரேசன் குரு அதற்கு ஆறிலும்,தன் பாக்ய ஸ்தானத்திற்கு மூன்றில் மறைந்து, சர லக்னாதிபதியான சந்திரனுக்கு பாதகமான 11 ஆம் இடத்தில் இருத்தல்.
நவாம்சத்தில்:3ல்மறைந்த லக்னாதிபனுக்கு, 6 ல் களத்திர காரகன் சுக்ரன்,7க்கு உடைய சூரியன் (கணவனைக் குறிக்கும் கிரகம் )ராஹு மற்றும் தனக்கு ராசியில் வீடு கொடுத்த புதனுடன் எட்டில்,தாரேசன் குரு, 2ல் உள்ள கேதுவின் நக்ஷத்ரத்தில்,தனக்கு உரிய 7ஆம் பாவத்தில் அமர்ந்து பாவமும் கெடச் செய்தல் .
எனவே, குடும்பம் மற்றும் கணவன் மறுக்கப்பெற்ற ஜாதகம்.
தங்கள் கருத்துரைக்கு காத்திருக்கும் மாணவன் .
Saturday, May 30, 2015 9:16:00 PM/////
--------------------------------------------
35
//////Blogger thayananthan c said...
1, ஏளாம் வீட்டு அதிபதி அந்த வீட்ற்கு ஆறில் அமர்ந்து லக்னத்திற்கு 12இல் அமர்ந்து பாப கர்தாரி யோகதினால் அகப்பட்டு உள்ளார்.
2, ஏளாம் வீட்டில் எட்டாம் அதிபதி சனிஸ்வரர் வந்து அமர்ந்து உள்ளார்.
3, 7 ம் அதிபதி குருவிற்கு இந்த லக்னத்திற்கு கெடுதலை தரகூடிய 6 ம் இட செவ்வாய் பார்வை.
Saturday, May 30, 2015 11:30:00 PM//////
-------------------------------------------
36
//////Blogger jegatha said...
ஐயா 7ஆம் அதிபதியும் 12 ல் மறைந்து,களஸ்திரக்காரகன் சுக்கிரனும் 3 ல் மறைந்து திருமண வாழ்கையை இல்லாமல் பண்ணி விடார்கள்.அதோடல்லாமல் 7 ஆம் இடத்து அதிபதி குருவே 12 ல் மறைந்து தன் இடத்தை பார்காமலும் , 8க்கு அதிபதி 7ல் இருந்து தன் உதவியையும் மிக சரியாக பண்ணி திருமண வாழ்வை இல்லாமல் செய்து விட்டார்.அடியேளின் விடையில் பிழை இருந்தால் மன்னிக்கவும்
Sunday, May 31, 2015 12:37:00 AM/////
-----------------------------------------------------
 //////Blogger வேப்பிலை said...
வெள்ளிக்கிழமை பக்தி பாடல் 
வரவில்லையே
மற்றதை விருப்பம் போல்
மாற்றினாலும் எங்களுக்காக
வெள்ளி அன்று வழக்கம் போல் 
வெளிவரும் முருகன் பாடலுக்கு தடை சொல்லாதீர்
முருகன் அருள்
முன் நிற்கும்
Saturday, May 30, 2015 2:06:00 PM//////
-----------------------------------------------
முருகப் பெருமானை வணங்குவதற்கு நாள் நட்சத்திரம் எல்லாம் ஒரு தடையில்லை. அவருக்கு உங்கந்த நாளான செவ்வாய்க் கிழமையன்று முருகன் பாடல்கள் வெளியாகும், சென்ற வாரமும் வெளியாகியிருக்கிறது. கவனித்தீர்களா? அல்லது கவனிக்கவில்லையா?
-------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

29.5.15

பாதி புதிர்: Half Quiz: குயிலாக நானிருந்தென்ன குரலாக நீ வர வேண்டும்!

பாதி புதிர்: Half Quiz: குயிலாக நானிருந்தென்ன குரலாக நீ வர வேண்டும்!

வாத்தியார் பாதி. நீங்கள் மீதி!



மேலே உள்ள ஜாதகம் ஒரு அம்மணியின் ஜாதகம்.

அம்மணிக்குத் திருமணமாக வில்லை. விளங்கச் சொன்னால் அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. கடைசிவரை கன்னியாகவே
காலத்தைக் கழித்துவிட்டார்.

ஜாதகப்படி என்ன காரணம்?

ஜாதகத்தை  அலசி உங்கள் பதிலைச் சொல்லுங்கள்.

வாத்தியாரின் பதில் ஞாயிற்றுக்கிழமை 31.5.2015 அன்று வரும். ஆமாம்
இந்த மாத பதிவுக் கணக்கை இந்த மாதமே முடிக்க வேண்டும். அதனால்
ஞாயிற்றுக் கிழமை. உங்கள் பதிலுடன் நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம். மதிப்பெண் போடும் வேலை எல்லாம் வாத்தியாருக்கு
இல்லை. நீங்களே அதையும் போட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

அன்புடன் 
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

28.5.15

ஓஹோ..சைவத்தில் இத்தனை மேட்டர்கள் இருக்கின்றனவா?



ஓஹோ..சைவத்தில் இத்தனை மேட்டர்கள் இருக்கின்றனவா?

பொறுமை...பொறுமை... பொறுமையாகப் படியுங்கள். அப்போதுதான் பிடிபடும்!

அன்புடன்
வாத்தியார்
========================
1. சமயம் என்றால் என்ன?
மனிதன் வாழ்வை வழிப்படுத்துவது சமயம்.

2. சைவம் என்றால் என்ன?
சைவம் என்றால் சிவ சம்பந்தமுடையது என்பது பொருள்.

3. சைவ சமயம் எப்போது தோன்றியது?
சைவ சமயம் அநாதியானது. அநாதி என்றால் ஆதி அற்றது (தொடக்கமில் காலம் தொட்டு) என்பது பொருள்.

4. யார் சைவர்?
சிவபெருமானை முழுமுதற் கடவுள் என உணர்ந்து வழிபடுபவரே சைவர்.

5. சைவ சமயத்தின் முக்கிய நூல்கள் யாவை?
பதினான்கு சாத்திரங்களும், பன்னிரண்டு திருமுறைகளும்.

6. சமயக் குரவர்கள் யாவர்?
1. திருஞான சம்பந்த நாயனார்
2. திருநாவுக்கரசு நாயனார்
3. சுந்தரமூர்த்தி நாயனார்
4. மாணிக்கவாசகர்

7. அகச்சந்தானக் குரவர்கள் யாவர்?
1. திருநந்தி தேவர்
2. சனற் குமாரமுனிவர்
3. சத்திய ஞான தரிசினிகள்
4. பரஞ்சோதி முனிகள்

8. புறச்சந்தானக் குரவர்கள் யாவர்?
1. ஸ்ரீ மெய்கண்டதேவ நாயனார்
2. அருள்நந்தி சிவாச்சாரியார்
3. மறைஞான சம்பந்தர் சுவாமிகள்
4. உமாபதி சிவாச்சாரியார்

9. திருமுறை மற்றும் சாத்திரங்களின் அமைப்பு எவ்வாறு உள்ளது?
திருமுறைகள் சிவபெருமானின் பெருமைகளை விளக்கும் புகழ் நூல்களாக் அமைந்திருக்கின்றன.
சாத்திரங்கள் சைவ சமயத்தின் கொள்கைகளை விளக்கும் பொருள் நூல்களாக அமைந்துள்ளன.

10. திருமுறை என்ற சொல்லுக்குப் பொருள் யாது?
முறை என்னும் சொல் நூல் என்னும் பொருளை உடையது. திருமுறை என்பது மாறாத செல்வத்தை மக்கள் எளிதாகப் பெறுவதற்கு வழிகாட்டும் நூல் என்பது பொருள்.இந்நூல் 12 பகுதிகளாக தொகுக்கப் பெற்று பன்னிரு திருமுறை என்று போற்றப்படுகிறது.

11. திருமுறைகள் பிரணவத்துள் அடங்கும் என்பதை விளக்குக?
பன்னிரு திருமுறையில் முதல் பாடல் 'தோடு' என்னும் சொல்லுடன் தொடங்கி, இறுதிப் பாடலில் 'உலகெலாம்' என்ற சொல்லுடன் முடிகிறது. தோடு என்பதில் முதல் எழுத்து ஓ உலகெலாம் என்பதில் ஈற்றெழுத்து ம் ஆகும்.

12. திருமுறைகளை முறையாக வகைப்படுத்தியவர் யாவர்?
திருநாரையூரில் பொல்லாப் பிள்ளையாருக்குப் பூசைகள் செய்து அவரிடம் நேரடியாக உபதேசம் பெற்ற நம்பியாண்டார் நம்பிகள்.
இராசராச சோழர் காலத்தில் பொல்லாப் பிள்ளையார் அருளினால் நம்பியாண்டார் நம்பிகள், மறைத்து வைக்கப்பட்டிருந்த தேவாரங்களை எடுத்து தொகுத்து அருளினார்கள்.

13. திருமுகப் பாசுரம் யார் அருளிச் செய்தது?
திருமுகப்பாசுரம் சிவபெருமானால் அருளிச் செய்யப்பட்டது. இப்பகுதி பதினொராம் திருமுறையில் அமைந்திருக்கிறது.

14. பஞ்சபுராணம் குறிப்பு தருக.
மூவர் தேவாரங்களில் ஒரு பாடலும், திருவாசகத்தில் ஒரு பாடலும், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு மற்றும் பெரியபுராணத்தில் இருந்து ஒவ்வொரு பாடலுமாக மொத்தம் ஐந்து பாடல்கள் பாடுவது பஞ்சபுராணம் எனப்படும்.

15. அகத்தியர் தேவாரத் திரட்டு - குறிப்பு தருக
அகத்திய முனிவர் 'அடங்கள் முறை' முழுவதையும் சிவாலய முனிவருக்கு உபதேசித்து. அவற்றில் இருந்து 25 பதிகங்களை திரட்டி ஒரு நூலாக செய்து அருளினார். அந்நூலே அகத்தியர் தேவாரத் திரட்டு ஆகும். இதில் 8 நிலைகள் உள்ளன.
1. குருவருள்
2. பரையின் வடிவம்
3. அஞ்செழுத்து
4. கோயில் திறம்
5. சிவன் உருவம்
6. திருவடிகள் பெருமை
7. அருச்சனைச் சிறப்பு
8. அடிமைத் திறம்

16. தேவார அருள்முறைத் திரட்டு -குறிப்பு தருக.
மூவர் பெருமக்கள் அருளிச் செய்த தேவாரங்களை திருவருட்பயன் என்னும் சாத்திர நூலில் வரும் பத்து தலைப்புகளில் உமாபதிசிவம் ஒரு நூல் அருளியுள்ளார். அந்நூலுக்கு தேவார அருள்முறைத் திரட்டு என்று பெயர். அந்நூலில் 99 தேவாரப் பாடல்கள் உள்ளன.

17. பன்னிரு திருமுறைகளில் மொத்தம் எத்தனை பாடல்கள்?
18,497 பாடல்கள்.

18. மூவர் பெருமக்கள் பாடிய மொத்த பதிகங்கள் எவ்வளவு?
மொத்தம் பாடியவை கிடைத்தவை
திருஞான சம்பந்த சுவாமிகள் 16,000 383
திருநாவுக்கரசு சுவாமிகள் 49,000 312
சுந்தரமூர்த்தி சுவாமிகள் 38,000 100
--------------------------------------------------------------------------------
மொத்தம் 1,03,000 795
--------------------------------------------------------------------------------
19. நால்வர் பெருமக்களின் அவதாரத் தலங்கள் எவை?
திருஞான சம்பந்த சுவாமிகள் - சீர்காழி
திருநாவுக்கரசு சுவாமிகள் - திருவாமூர்
சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருநாவலூர்
மாணிக்கவாசகர் - திருவாதவூர்

20. நால்வர் பெருமக்கள் இப்பூவுலகில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
திருஞான சம்பந்த சுவாமிகள் - 16 ஆண்டுகள்
திருநாவுக்கரசு சுவாமிகள் - 81 ஆண்டுகள்
சுந்தரமூர்த்தி சுவாமிகள் - 18 ஆண்டுகள்
மாணிக்கவாசகர் - 32 ஆண்டுகள்

21. திருத்தொண்டர் தொகை ஆசிரியர் யார்?
சுந்தரமூர்த்தி சுவாமிகள்.

22. நாயன்மார்கள் மொத்தம் எத்தனை பேர்?
அறுபத்து மூவர்.

23. சாத்திரத்தில் தோத்திரம், தோத்திரத்தில் ் சாத்திரம் என்று கூறப்படும் நூல்கள் எவை?
சாத்திரத்தில் தோத்திரம் - போற்றிப் ப·றொடை
தோத்திரத்தில் சாத்திரம் - திருமந்திரம்

24. மெய்கண்டாருக்கு உபதேசம் செய்தது யார்?
பரஞ்சோதி முனிகள்

25. மெய்கண்டாரின் மாணாக்கர்கள் எத்தனை பேர்?
49. அதில் தலையாய மாணவராக விளங்கியவர் சகல ஆகம பண்டிதர் என்று அழைக்கப்படும் அருள்நந்தி சிவாச்சாரியார். 'துகளறுபோதம்' என்ற நூலை அருளிச் செய்த சிற்றம்பல நாடிகளும் இவர் மாணாக்கரே.

26. சிவஞான போதத்திற்கு காலத்தால் முற்பட்ட சாத்திர நூல்கள் யாவை?
திருவுந்தியார் மற்றும் திருக்களிற்றுப்படியார்.

27. அருள்நந்தி சிவம் அருளிச் செய்த நூல்கள் யாவை?
1. சிவஞான சித்தியார்
2. இருபா இருப·து

28. சித்தாந்த அட்டகம் - விளக்குக
பதினான்கு சாத்திரங்களில் உமாபதிசிவம் அருளிச் செய்த நூல்கள். மொத்தம் எட்டு. அந்த எட்டு நூல்களே சித்தாந்த அட்டகம் என வழங்கப்படுகிறது.
1. சிவப்பிரகாசம்
2. திருவருட்பயன்
3. உண்மை நெறி விளக்கம்
4. போற்றிப் ப·றொடை
5. கொடிக்கவி
6. வினா வெண்பா
7. சங்கற்பநிராகரணம்
8. நெஞ்சு விடுதூது
என்பவையே அந்த எட்டு நூல்கள்.

29. ஞானாமிர்தம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
வாகீச முனிவர்

30. வேதங்கள் - குறிப்பு தருக.
வேதம் சிவபிரானால் அருளிச் செய்யப்பட்டது. இது கர்மகாண்டம், ஞான காண்டம் என இரு பகுதிகளை உடையது. ரிக், யசுர், சாமம், அதர்வணம் என நான்கு வேதங்கள் உள்ளன.

31. ஆகமங்கள் - குறிப்பு தருக.
ஆகமங்களும் சிவபிரானால் சிறப்பாக சைவர்களுக்கு அருளிச் செய்யப்பட்டன. சிவ ஆகமங்கள் 28 உள்ளன. சைவசமயம் வேதத்தைப் பொது எனவும், ஆகமத்தை சிறப்பு எனவும் கருதுகிறது.

32. சமயங்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
அகச்சமயம், அகப்புறச்சமயம், புறச்சமயம், புறபுறச்சமயம் என நான்கு வகைப்படும்.
அகச்சமயம் அகப்புறச்சமயம்
1. பாடாணவாத சைவம் 1. பாசுபதம்
2. பேதவாத சைவம் 2. மாவிரதம்
3. சிவசமவாத சைவம் 3. காபாலம்
4. சிவசங்கிராந்தவாத சைவம் 4. வாமம்
5. ஈசுவர அவிகாரவாத சைவம் 5. பைரவம்
6. சிவாத்துவித சைவம் 6. ஐக்கியவாத சைவம்
புறச்சமயம் புறப்புறச்சமயம்
1. நியாயம் 1. உலகாயதர்
2. சாங்கியம் 2. சமணர்
3. யோகம் 3. செளத்திராந்திகர்
4. மீமாஞ்சை 4. யோகசாரர்
5. வேதாந்தம் 5. மாத்யமிகர்
6. பாஞ்சராத்திரம் 6. வைபாடிகர்

33. சைவசித்தாந்தம் - ஒரு வார்த்தையில் விளக்கம் தருக.
முடிந்த முடிபு.

34. சைவ சித்தாந்தர் என்ற குறிப்பினைத்தரும் திருமுறை எது?
திருமந்திரம்
"கற்பனைக் கற்று கலைமன்னும் மெய்யோகம்
முற்பத ஞானம் முறைமுறை நண்ணியே
சொற்பதங் கடந்து துரிசற்று மேலான
தற்பரம் கண்டுளோர் சைவசித்தாந்தரே"

35. சைவ சித்தாந்த தத்துவத்தின் சிறப்பு யாது?
1. தர்க்க ரீதியானது (Logic)
2. அறிவியற் பூர்வமானது (Scientific)
3. வரலாற்றுத் தொன்மையுடையது (Historic)
4. நடைமுறைக்கு இயைந்தது (Easy to Adapt)
5. உலகளாவியது (Universal)
6. முற்போக்குச் சிந்தனைகளை உடையது (Optimistic)
இன்னும் பல.

36. சற்காரிய வாதம் - சிறுகுறிப்பு தருக.
'உள்ளது அழியாது, இல்லது தோன்றாது' என்ற விஞ்ஞான அடிப்படையில் தான் சைவசித்தாந்த தத்துவம் தனது கொள்கைகளை நிலைநிறுத்துகிறது.

37. அளவை - குறிப்பு தருக.
நீட்டல் அளவை, நிறுத்தல் அளவை போல உலகப் பொருள்களை அளப்பதற்கு பலவிதமான அளவை முறைகள் இருப்பவை போல சமய உலகிலும் பல அளவைகள் பேசப்படுகின்றன. குறிப்பாக மூன்று அளவைகள்.
1. காட்சி அளவை - (பிரத்தியட்சப் பிராமணம்)
2. கருதல் அளவை - (அனுமானப் பிராமணம்)
3. உரை அளவை - (ஆகமப் பிராமணம்)
மேலும் பல அளவை முறைகள் இருப்பினும் பொதுவாக அவைஎல்லாம் மேற்சொன்ன மூன்றில் அடங்கும்.

38. சைவசித்தாந்தம் கூறும் முப்பொருள்கள் யாவை?
1. இறைவன் - பதி
2. உயிர் - பசு
3. மலம் - பாசம்
இம்மூன்று பொருள்களுக்கும் உரிய தொடர்பினை கீழ்வரும் திருமந்திரப் பாடல் விளக்குகின்றது.
"பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில்
பதியினைப் போல் பசு, பாசம் அநாதி
பதியினைச் சென்று அணுகா பசு பாசம்
பதி அணுகிற் பசு பாசம் நில்லாவே"

39. முப்பொருள்களும் அறிவுடைப் பொருள்களா?
இறைவன் - தாமே அறியும் பேரறிவு உடையவன்.
உயிர்கள் - அறிவிக்க அறியும் சிற்றறிவு உடையவன்.
மலங்கள் - அறிவித்தாலும் அறியாத சடப்பொருள்கள்.

40. பொருள்களின் இரண்டு இயல்புகள் யாவை?
பொருள்களுக்கு பொது இயல்பு, சிறப்பு இயல்பு என இரண்டு இயல்புகள் உண்டு.
பொது இயல்பு
ஒரு பொருளுக்கு மற்றொரு பொருளின் சார்பால் உண்டாகி, அச்சார்பு நீங்கிவிடும் போது நீங்கி விடும் இயல்பு.
(எ.கா) நீரில் வெம்மை
சிறப்பு இயல்பு
ஒரு பொருளுக்கு எச்சார்ப்புமின்றி இயற்கையாகவே அமைந்திருக்கும் இயல்பு.
(எ.கா) நீரின் குளிர்ச்சி

41. இறைவன் செய்யும் ஐந்தொழில்கள் யாவை?
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்.

42. மும்மூர்த்திகள் யாவர்?
படைத்தல் தொழிலைச் செய்யும் - பிரமன்
காத்தல் தொழிலைச் செய்யும் - திருமால்
அழித்தல் தொழிலைச் செய்யும் - உருத்திரன்
இவர்களே மும்மூர்த்திகள். இம்மும்மூர்த்திகளின் மேம்பட்டவர் சிவபெருமான். இவர்கள் சிவபெருமான் அருளினால் இந்தத் தொழிலைச் செய்யும் உருத்திரன் குணிஉருத்திரன். சிவபெருமான் மகாஉருத்திரன். இவ்வேறுபாட்டினை சிவஞான மாபாடியத்தில் சிவஞான சுவாமிகள் தெளிவாக விளக்குகிறார்கள

43. இறைவனின் எண்குணங்கள் யாவை?
1. தன் வயம் உடைமை.
2. தூய உடம்பு உடைமை.
3. இயற்கை உணர்வு உடைமை.
4. முற்றுணர்வு உடைமை.
5. இயல்பாகவே பாசமின்மை.
6. பேரருள் உடைமை.
7. முடிவில் ஆற்றல் உடைமை.
8. வரம்பில் இன்பம் உடைமை.

44. உயிர்களைத் தோற்றுவித்தவர் யார்?
உயிர்களை யாரும் தோற்றுவிக்கவில்லை. அவை தோற்றமில் காலந்தொட்டே இருப்பவை என்று சைவசித்தாந்தம் தெளிவாக விளக்குகிறது.

45. உயிர்கள் எத்தனை வகைப்படும்?
ஆணவமலம் மட்டும் உடைய விஞ்ஞான கலர், ஆணவம் மற்றும் கன்ம மலம் உடைய பிரளயா கலர், ஆணவம், கன்மம் மற்றும் மாயை என்ற மூன்று மலங்களும் உடைய சகலர் என உயிர்கள் மூவகைப்படும்.

46. கேவலம், சகலம், சுத்தம் - குறிப்பு தருக.
கேவலம்:
உயிர்கள் தம்மையும் அறியாமல், தமக்கு மேலே இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதையும் அறியாமல், தன்னை ஆணவம் என்ற மலம் முழுமையாக மறைத்திருக்கின்றது என்பதை அறியாத உயிரின் நிலை.
சகலம்:
கேவலநிலையில் இருந்த உயிர்களுக்கு மாயை மற்றும் கன்மத் தொடர்பினால் அறியாமை சிறிது குறைந்த நிலை.
சுத்தம்:
உயிர்கள், பாச நீக்கம் பெற்று இறைவனின் திருவடிகளை அடைந்து பேரானந்தத்தை அனுபவிக்கும் நிலை.

47. உயிர்கள் அனுபவிக்கும் ஐந்து நிலைகள்(ஐந்தவத்தை) யாவை?
1. நனவு - சாக்ரம்
2. கனவு - சொப்னம்
3. உறக்கம் - கழுத்தி
4. பேருறக்கம் - துரியம்
5. உயிர்ப்பு அடங்கல் - துரியாதீதம்

48. மலங்கள் எத்தனை வகை? அவை யாவை?
ஆணவம், கன்மம், மாயை என்று மூன்று வகைப்படும். மாயேயம், திரோதாயி என்று இரண்டையும் சேர்த்து மலங்கள் ஐந்து என்றும் விரித்துச் சொல்வார்கள்.

49. ஆணவ மலத்தின் வேறு பெயர்கள் யாவை?
இருள்மலம், மூலமலம், சகசமலம் என்று எல்லாம் ஆணவமலம் நூல்களில் பேசப்படுகின்றன. சாத்திர நூல்களில் 'இருள்' என்ற சொல்லால் பேசப்படும்.

50. கன்ம மலத்தின் காரியங்கள் யாவை?
சஞ்சிதம், பிரார்த்தம், ஆகாமியம் என மூன்றாகும்.
சஞ்சிதம்: (பழவினை)
பலபிறவிகளில் சேர்த்த வினைக்குவியல்
பிரார்த்தம்: (நுகர்வினை)
இப்பிறவியில் அனுபவிப்பதற்காக இறைவனால் நமக்குத் தரப்பட்ட வினைகள் (நம்மால் முன்செய்த வினைகளின் ஒரு பகுதி)
ஆகாமியம்: (வருவினை)
இப்பிறவியில் நாம் புதிதாக செய்யும் வினைகள்.

51. வினை என்றால் என்ன?
நாம் செய்யும் செயல்களே வினை எனப்படும். வினைகள் நல்வினை, தீவினை என இரண்டு வகைப்படும்.

52. இன்ப துன்பத்திற்கான காரணம் என்ன?
முந்தைய பிறவிகளில் நாம் செய்த செயல்களுக்குத் தகுந்தவாறு பலன்களை இப்பிறவியில் அனுபவிக்கின்றோம். இறைவன் பெருங்கருணையின் காரணமாக நாம் செய்துள்ள மொத்த வினைகளையும் ஒரே பிறவியில் அனுபவிக்கத் தருவதில்லை. இப்பிறவியில் அனுபவிப்பதற்கு எனக் கொடுக்கப்பட்ட பிரார்த்த வினையின் வழி இப்பிறவியில் இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றோம். நாம் அனுபவிக்கும் இன்பதுன்பத்திற்குக் காரணம் நாம் முன்பு செய்த செயல்கள் தான் என சைவ சித்தாந்தம் தெளிவாக விளக்குகிறது.

53. வினைக்குத் தகுந்தவாறு பலன்களை யார் நமக்குத் தருகிறார்கள்?
வினைக்குத் தகுந்த பலன்களை வினைகளின் காரணமாகிய கன்மம் தர முடியாது. ஏனென்றால் அது சடப்பொருள். உயிர் தாமே சென்று வினைகளுக்குத் தகுந்த பலன்களை நுகர்வதில்லை. இறைவனே அந்த அந்த உயிர்கள் செய்த வினைக்குத் தகுந்த பலன்களைக் கூட்டி வைக்கிறான்.

54. நாம் வாழும் இவ்வுலகைத் தோற்றுவித்தவர் யார்?
மாயை என்னும் மலத்திலிருந்து உயிர்கள் நன்மை பெறும் பொருட்டு இறைவன் உலகத்தைப் படைத்தார்.

55. மாயை - குறிப்பு தருக.
மாயை என்பது மும்மலங்களில் ஒன்று. இம்மாயையின் காரியங்கள் 36 தத்துவங்களாக் விளங்குகின்றன. இம்மாயை சுத்தமாயை, அசுத்தமாயை என இரண்டு பகுதிகளாக நிற்கும். பிரகிருதி மாயை என்பது அசுத்தமாயைக்குள் அடங்கி நிற்கும். சுத்தமாயை, அசுத்தமாயை மற்றும் பிரகிருதி மாயை என மூன்றாகவும் கொள்வர். நாம் வாழும் இவ்வுலகம் பிரகிருதி மாயையில் இருந்து தோற்றுவிக்கப்பட்டது.

56. சைவ சித்தாந்த சாத்திரங்களில் மணிமுடி நூலாக விளங்குவது எது?
சிவஞான போதம், சிவஞான சித்தியார் இதனுடைய வழிநூல் எனவும், சிவப்பிரகாசம் இதனுடைய சார்பு நூல் எனவும் போற்றப்படும்.

57. கடவுளுக்கும், உயிருக்கும் உள்ள தொடர்பு சைவ நூல்களில் எவ்வாறு சொல்லப்படுகிறது?
'அத்துவிதம்' என்ற சொல்லினால் குறிக்கிறார்கள்.

58. சைவ சித்தாந்தம் காட்டும் அத்துவிதம் யாது?
இறைவன் ஒன்றாய், வேறாய் மற்றும் உடனாய் உயிர்களோடு கலந்து இருக்கின்றான். அந்தந்தப் பொருளுக்கு அந்தந்த பொருளாய் - அதுஅதுவாய் நிற்பதுவே ஒன்றாய் நிற்றல் ஆகும். இறைவன் உயிர்களுக்கு அறிவிக்கும் பொருட்டு உயிர்களின் வேறாய் நிற்கின்றான்.
உயிர்கள் தாம் விரும்பியவற்றை செய்வதற்கு இறைவனுடைய துணை தேவைப்படுகிறது. எனவே, உயிர்களோடு உடனாய் கூடி நிற்கின்றான்.

59. சைவ சமயம் கூறும் வழிபாட்டு முறைகள் யாவை?
குரு, லிங்க, சங்கம, வழிபாடு.
குரு வழிபாடு: நம்மிடம் உள்ள அறியாமையைப் போக்கும் ஞான ஆசிரியரையே சிவமாகவே கருதி வழிபடுவதாகும்.
லிங்க வழிபாடு: திருக்கோயிலுக்குச் சென்று சிவபெருமானை லிங்க திருமேனியில் வழிபடுதல்.
சங்கம வழிபாடு: சிவனடியார்களை சிவமாகவே கருதி வழிபடுவது.

60. சரியை, கிரியை, யோகம், ஞானம் - விளக்குக
சரியை: உடலால் வழிபடுவது.
கிரியை: உடலாலும், உள்ளத்தாலும் வழிபடுவது.
யோகம்: உள்ளத்தால் வழிபடுவது.
ஞானம்: எங்கும் எதிலும் இறையருளையே காண்பது.

61. திருவைந்தெழுத்து விளக்கம் தருக.
திருவைந்தெழுத்து என்பது சிவாயநம என்னும் மந்திரமாகும்.
சி-சிவன்
வ-சக்தி(அருள்)
ய-உயிர்
ந-மறைப் பாற்றல்
ம-ஆணவ மலம்
என்று ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு பொருளைக் குறித்து நிற்கிறது.
திருவைந்தெழுத்து மூவகைப்படும். நமசிவாய, சிவாய நம, சிவயசிவ என்பவை. இம்மந்திரமே பஞ்சாட்சர மந்திரம் என்று கூறப்படும்.

62. தீக்கை என்றால் என்ன?
தீக்கை என்பது தீட்சை என்னும் வடமொழி சொல்லின் திரிபு ஆகும்.
தீ-கெடுத்தல் ஷை-கொடுத்தல்
பாசப்பற்றைக் கெடுத்து மோட்சத்தை கொடுப்பது தீட்சை எனப்படும்.
இது மூன்று வகைப்படும் அவை
1. சமயம் 2. விசேடம் 3. நிருவாணம்

63. இருவினை ஒப்பு என்றால் என்ன?
நல்வினையின் பயனாகிய இன்பத்தில் விருப்பும், தீவினையின் பயனாகிய துன்பத்தில் வெறுப்பும் கொள்ளாது. அவற்றால் உள்ளம் வேறுபடாது, இரண்டையும் ஒன்றுபோல் கருதி அவற்றின்மேல் பற்று இல்லாமல் நிற்கும் நிலையே இருவினை ஒப்பு எனப்படும்.

64. மலபரிபாகம் என்றால் என்ன?
கணக்கற்ற பிறவிகளில் ஆணவமலத்தின் சக்தி உயிர் அறிவை தடைப்படுத்தியும் திரிபுபடுத்தியும் செயல்படுவதால் படிப்படியே மெலிவடைந்து பின் மறைத்தலை செய்யமாட்டாத நிலையை அடையும். உயிர் அறிவை தடுத்து வைத்திருந்த அதன் பிணிப்பு நெகிழ்ந்து நீங்கும் நிலை அடையும். இந்நிலையே மலபரிபாகம் எனப்படும்.

65. சத்திநிபாதம் என்றால் என்ன?
மலரிபாகம் சிறிது, சிறிதாக நிகழ, நிகழ அதற்கு ஏற்ப இதுகாறும் உயிரில் மறைத்து இருந்து பக்குவப்படுத்தி வந்த இறைவனது திரோதான சக்தியும் சிறிது, சிறிதாக தன் தன்மை மாறி அருள் சக்தியாக உயிரின் கண் விளங்கித் தோன்றும். அந்நிகழ்ச்சியே சத்திநிபாதம் எனப்படும்.

66. சத்திநிபாதத்தின் வகைகள் யாவை?
மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என நான்கு வகைப்படும்.

67. முத்தி என்றால் என்ன?
ஒவ்வொரு சமயமும் அதன் வழிபடு தெய்வம், வழிபாட்டு முறைகள் மற்றும் அடிப்படை நூல்கள் போன்ற சில அடிப்படைக் கருத்துக்களை சொல்கிறார்கள். அவற்றில் இன்ப, துன்பங்களை அனுபவிக்கும் உயிரின் முடிவான நிலை முக்தி என்று சொல்லப்படுகிறது.

68. சைவ சித்தாந்தம் காட்டும் முக்தி யாது?
உயிர்கள், மலநீக்கம் பெற்று இறைவனுடைய திருவடிகளில் ஒன்றாய் கலந்து பேரானந்தத்தை அனுபவித்தல். இந்நிலைக்கு சிவமாம் தன்மை என்று பெயர். சிவமாம் தன்மை என்று சொன்னாலும் சிவனோடு சமமாய் நிற்றல் என்பது பொருள் அல்ல. இறைவனுக்கு அடிமையாய் ஐந்தொழில்கள் செய்யும் ஆற்றல் அற்றதாய் என்றும் பேரானந்தத்தை மட்டுமே அனுபவித்துக் கொண்டு இருக்கும். முக்தி பெற்ற உயிர்கள் மீண்டும் பிறவிக்கு வருவதில்லை.

69. சீவன் முக்தர் - குறிப்பு தருக.
முக்தி பெற்றும் இவ்வுடலோடு இவ்வுலகில் வாழும் ஆன்மாக்களுக்கு சீவன் முக்தர்கள் என்று பெயர்.

70. தசகாரியம் என்றால் என்ன?
ஞான சாதனையில் முன்னேறும் ஆன்மாக்களிடத்து நிகழும் பத்து வகை செயல்பாடுகளாகும்.
தத்துவரூபம்
தத்துவ தரிசனம்
தத்துவ சுத்தி
ஆன்ம ரூபம்
ஆன்ம தரிசனம்
ஆன்ம சுத்தி
சிவ ரூபம்
சிவ தரிசனம்
சிவயோகம்
சிவபோகம்
திருச்சிற்றம்பலம்
நன்றி : சைவ சித்தாந்த சபை சங்கரன்கோவில்
=======================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

27.5.15

கவிதை: கூட்டுக் களிப்புப் பாடல்கள்.


கவிதை: கூட்டுக் களிப்புப் பாடல்கள்.

அதென்ன கூட்டுக் களிப்புப் பாடல்கள் என்கிறீர்களா?

ஒரு பண்பலை வானொலி அறிவிப்பாளர்தான் அந்தச் சொல்லை எனக்கு அறிமுகப்படுத்தினார். அதாவது காதலன், காதலி இருவரும் சேர்ந்து பாடும் பாடலைத்தான் (Duet Songs) அவர் அப்படிச் சொன்னார்.

கவியரசர் இந்த டூயட் எனப்படும் இருவர் பாடும் பாடல்களைக் குழலும், யாழும் பாடும் பாடல்கள் என்று சொல்வாராம். ஆண் மகனைக் குழலுக்கும் பெண் மகளை யாழிற்கும் உதாரணப் படுத்தி அவ்விதம் சொல்லியிருக்கிறார்.

இன்று இந்தத் தலைப்பில் மிகவும் அற்புதமான பாடல் ஒன்றைப் பதிவு செய்துள்ளேன். கிராம வாசிகள் உட்பட ஒட்டு மொத்த தமிழகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்த பாடல் இந்தப் பாடல். இந்தப் பாடலிற்குப் பிறகுதான், இலக்கியவாதிகளும், கல்லூரிப் பேராசிரியர்களும், மெத்தப் படித்த தமிழ் அறிஞர்களும் கண்ணதாசன் அவர்களுடைய ரசிகர்களானார்கள்.

இதற்கு முன்பேயே, கவியரசர் அவர்கள், மதுரைவீரன், மகாதேவி போன்ற படங்களில் சிறப்பாகப் பல பாடல்களை எழுதியிருந்தாலும், இந்தப் பாடல் அமைந்த 'பாகப் பிரிவினை' படத்திற்குப் பிறகுதான் அவருடைய பெருமை தமிழக மக்களுக்குத் தெரிய ஆரம்பித்தது.

வாருங்கள் பாடலைப் பார்ப்போம்:
---------------------------------------
"ஆண்:
தாழையாம் பூமுடிச்சி
தடம் பார்த்து நடை நடந்து....
பெண்: நடை நடந்து....
ஆண்:
வாழை இலை போல வந்த பொன்னம்மா
பெண்: பொன்னம்மா
ஆண்:
என் வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா
பெண்: என்னம்மா
(தாழையாம்)
பெண்:
பாளைபோல் சிரிப்பிருக்கு -
பக்குவமாய் குணமிருக்கு
ஆண்: குணமிருக்கு
பெண்: ஆளழகும் சேர்ந்திருக்கு கண்ணையா
ஆண்: கண்ணையா
பெண்: இந்த ஏழைகளுக்கு என்ன வேணும் சொல்லையா
ஆண்: சொல்லையா
பெண்: (பாளைபோல்) தந்தானத்தானத் தானனே

ஆண்:
தாயாரின் சீதனமும்
தம்பிமார் பெரும் பொருளும்
மாமியார் வீடு வந்தால் போதுமா - அது
மானாபிமானங்களைக் காக்குமா?
தன்னதாதனன் (தாழையாம்)

பெண்:
மானமே ஆடைகளாம்
மரியாதை பொன்னகையாம்
நாணமாம் துணையிருந்தால் போதுமே - எங்கள்
நாட்டு மக்கள் குலப் பெருமை தோன்றுமே
(பாளைபோல்)

ஆண்:
அங்கம் குறைந்தவனை
அழகில்லா ஆண்மகனை
மங்கையர்கள் நினைப்பதுண்டோ பொன்னம்மா - வீட்டில்
மணம் பேசி முடிப்பதுண்டோ சொல்லம்மா

பெண்:
மண் பார்த்து விளைவிதில்லை
மரம் பார்த்துப் படர்வதில்லை
கன்னியரும் பூங்கொடியும் கண்ணையா - அவர்
கண்ணிலே களங்கமுண்டோ சொல்லையா
(தாழையாம்)

ஆண்:(தாழையாம்) தன்னனே

படம்: பாகப் பிரிவினை - வருடம் 1959
-----------------------------
பெண்ணிற்குப் தென்னம் பாளை போன்ற் சிரிப்பும், நல்ல  குணமும், அழகும் இருந்தால் போதுமென்று சொன்னதோடு,  மானமென்ற ஆடைகளும், மரியாதை என்ற பொன்னகையையும்,  நாணத்தையும் ஒரு பெண் சீராகக் கொண்டுவந்தால் போதும்  என்று எழுதியதும், எங்கள் நாட்டு மக்கள்
குலப் பெருமையும்  அதுதான் என்று தமிழக மக்களின் கலாச்சாரத்தை உயர்வாகச்  சொன்னதும் தான் இந்தப் பாடலின் சிறப்புக்களாகும்.

தமிழக இலக்கியவாதிகளைத் திரும்பிப் பார்க்க வைத்த வரிகளைக் கீழே கொடுத்துள்ளேன்.

"மண் பார்த்து விளைவிதில்ல
மரம் பார்த்துப் படர்வதில்லை
கன்னியரும் பூங்கொடியும் கண்ணையா - அவர்
கண்ணிலே களங்கமுண்டோ சொல்லையா"

செடி, கொடி எல்லாம் வைப்பவன் வைக்குமிடத்திலேயே வளரும். இந்த மண் அந்த மண் என்று அவைகளுக்குக் கிடையாது. அதுபோல
படரும் கொம்புகளும் அது மூங்கில் அல்லது வேறு எந்தக் குச்சியானாலும் அல்லது இரும்புக் கம்பியானாலும் பின்னிப் படர்ந்து கொள்ளும்.
அது போலத்தான் நமது பெண்களும் கட்டிக்கொடுக்கப் பெறும் இடத்தில் பின்னிப் பிணைந்து கொள்வார்கள்.

ஆகவே கன்னியும், பூங்கொடியும் ஒன்று. அவர்களிடம் ஏது களங்கம் என்று பெண்மையின் பெருமையைச் சொல்லிப் பாட்டை முத்தாய்ப்பாய்
முடித்தார் பாருங்கள் - இந்த நான்கு வரிகளால்தான் அவருடைய கவி மகத்துவம் இலக்கியவாதிளுக்கும் தெரிந்தது!

அன்புடன்,
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

26.5.15

வேறு துணை எனக்கெதற்கு வேண்டும்?


வேறு துணை எனக்கெதற்கு வேண்டும்?

பக்தி மலர்

26.5.2015

செவ்வாய்க் கிழமை முருகனுக்கு உகந்த நாள். இன்றைய பக்தி மலரை பத்மஸ்ரீ திரு சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய முருகப் பெருமானின்
பாடல் வரிகள் நிறைக்கின்றது. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
-------------------------------------------------------
ஆறுமுகம் இருக்க ... அவன் கை வேலிருக்க
வேறு துணை யாரெனக்கு வேண்டும்
வெற்றி வேலன் அவன் தாள் பணிய வேண்டும்
வெற்றி வேலன் அவன் தாள் பணிய வேண்டும்

ஆறுமுகம் இருக்க ... அவன் கை வேலிருக்க
(ஆறுமுகம் இருக்க ... )

நீரணிந்த நெற்றியுடன் ... நீங்காத பக்தியுடன்
காவடிகள் தூக்கி வர வேண்டும்
முருகன் சேவடியில் மாலையிட வேண்டும் 
... வேண்டும்
(ஆறுமுகம் இருக்க ... )

ஏறுமயில் ஏறிவரும் ... வீரமகன் திருப்புகழை
காலமெல்லாம் பாடும் நிலை வேண்டும் 
பழநி கந்தன் அவன் கருணை செய்ய வேண்டும் 
... வேண்டும்
(ஆறுமுகம் இருக்க ... )

எப்போது நினைத்தாலும் ... பக்கத்திலே இருந்தே
என்னை அவன் பார்த்திருக்கவேண்டும்
என் அன்னையென காத்திருக்க வேண்டும் 
... வேண்டும்
(ஆறுமுகம் இருக்க ... ).
====================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

25.5.15

பாதி புதிர்: Half Quiz: வாத்தியாரின் பதில்


பாதி புதிர்: Half Quiz: வாத்தியாரின் பதில்

Quiz 84 Answer

25.5.2015

நேற்றையைப் பதிவில் (22.5.2015) அன்பர் ஒருவரின் ஜாதகத்தைக்
கொடுத்து உங்களை அலசச் சொல்லியிருந்தேன்.  மொத்தம் 17 பேர்கள்
அலசியிருக்கிறார்கள். அனைவரும் ஓரளவிற்கு நன்றாகவே

22.5.15

பாதி புதிர்: Half Quiz: வாத்தியார் பாதி. நீங்கள் மீதி!


பாதி புதிர்: Half Quiz: வாத்தியார் பாதி. நீங்கள் மீதி!

Quiz No.84

22.5.2015


மேலே உள்ள ஜாதகம் ஒரு அன்பரின் ஜாதகம்.

ஜாதகர் எந்த வேலைக்குப் போனாலும் அதில் நிலைத்து இருக்க மாட்டார். திரும்பி வந்து விடுவார். பெற்றோர்களுக்கு ஒரே கவலை. சுமார் எட்டு ஆண்டு காலம் கண்ணாம்பூச்சி ஆடிக்கொண்டிருந்தார்.

ஒரு ஜோதிடரைப் போய்ப் பார்த்தார்கள். ஒரு நல்ல பதிலைச் சொல்லியனுப்பினார். அவர் சொல்லியபடியே ஜாதகருக்கு அவரது 30ஆவது வயதில் ஒரு நல்ல வேலை கிடைத்தது. அதில் நிலைத்து இருந்து விட்டார். கடைசிவரை அந்த வேலையிலேயே நிலையாக இருந்து விட்டார்.

அவ்விரண்டு நிலைப் பாடுகளுக்கும், அதாவது முதலில் கண்ணாம் பூச்சி ஆடியதற்கும் பிறகு ஆட்டத்தை விட்டு விட்டு வேலையில் நிலை பெற்றதற்கும் ஜாதகப்படி என்ன காரணம்?

மூன்று (3) முக்கியமான காரணங்கள் உள்ளன. அவைகள் என்ன என்பதை அலசி உங்கள் பதிலில் சொல்லுங்கள்.

வாத்தியாரின் பதில் திங்கட்கிழமை 25.5.2015 அன்று வரும். உங்கள் பதிலுடன் நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம். மதிப்பெண் போடும் வேலை எல்லாம் வாத்தியாருக்கு இல்லை. நீங்களே அதையும் போட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

அன்புடன் 
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

21.5.15

பட்டுக்கோட்டையார் இன்று இருந்தால் என்ன சொல்லுவார்?



பட்டுக்கோட்டையார் இன்று இருந்தால் என்ன சொல்லுவார்?

தூங்காதே தம்பி தூங்காதே
சோம்பேறி என்றபெயர் வாங்காதே”

என்று அன்று எழுதிய பட்டுக்கோட்டையார் இன்று என்ன எழுதுவார்?

தூங்குடா தம்பி தூங்குடா - முறைப்படி
தூங்குடா தம்பி தூங்குடா

தூக்கத்தின் அவசியத்தைப் பற்றி நம் சித்தர்கள் சொன்னவற்றைத்
தொகுத்துக் கொடுத்துள்ளேன். படித்து, செயல் படுத்திப் பயனடையுங்கள்

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது:

மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும்.

இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் தான் கழிகின்றது.

உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும்,
உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும், உடல்வளர்ச்சி [குறிப்பிட்ட
வயது வரை ] பெறவும், தூக்கம் இன்றியமையாததாக உள்ளது.

இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்று இன்றைய அறிவியலாளர்கள்  கூறுகின்றனர்.

தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும்
சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.

தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று.

பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய
சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.

இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் என்ன தீமைகள் விளையும்
என்பது பற்றி சித்தர்பாடல் ஒன்று.

சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க 
மெத்தனுக் கமைந்த மென்பவை 
களித்தமுற வண்டுஞ் சிலரைநாயாய்ப் பன்னோய் 
கவ்வுமிராக் கண்டுஞ் சிலரைநம்பிக் காண் .  

இதன் விளக்கம் :- இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில்[உடலில்]சோர்வு,பயம், படபடப்பு, அக்னி
மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.

எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.

உத்தமம் கிழக்கு
ஓங்குயிர் தெற்கு
மத்திமம் மேற்கு
மரணம் வடக்கு 

கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.
தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்.
மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும்.
வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது. இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து

வரும் காந்தசக்திதலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன்,இதயக் கோளாறுகள்,
நரம்புத்தளர்ச்சி உண்டாகும்.

மேலும் மல்லாந்து கால்களையும்,கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது.இதனால்இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் (பிராண
வாயு) உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும்.

குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது. இடக்கை கீழாகவும்,
வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக
ஒருக்களித்துபடுத்து தூங்கவேண்டும். இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம்
வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால்
உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும்.
இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.

வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும். இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம்
வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும். இரவில்
உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்

சித்தர்கள் கூறியது அனைத்துமே நம் அனைவரின் நன்மைக்கே, இதை
நாமும் பின்பற்றி பயன் பெறுவோம்.
==========================================
வாட்ஸப்பில் எனக்கு வந்தது. நன்றாக இருந்ததால், உங்களுக்கு அறியத் தந்திருக்கிறேன்!

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

20.5.15

படித்ததில் பிடித்தது: உறவுகளில் எந்த உறவு அதி முக்கியமானது?

படித்ததில் பிடித்தது: உறவுகளில் எந்த உறவு அதி முக்கியமானது?

The Teacher asked one of the students to volunteer. A lady named Aliza came 
forward.

The Teacher asked her to write about 30 names of most important people in her life 
on blackboard. Aliza wrote her family members names and relatives names, friends names, her colleagues names and her neighbors names.

The Teacher told her “Please erase 3 names from the list that you consider most unimportant”. Aliza erased names of her colleagues. The Teacher again told her 
to delete 5 more names. Aliza did as the Teacher instructed and this time she 
erased her neighbor's names. This went on until there were just four names left 
on the blackboard.

Aliza now hesitated as the names left were of her mother, father, husband and 
her son... The entire class became silent and they realized that this wasn't a 
game anymore for Aliza. She had to make the difficult choice.

The Teacher told her to delete two more names. Eliza unwillingly deleted her 
parents names. “Please delete one more” said the professor. Aliza became very 
nervous and with trembling hands she deleted her son’s name. Aliza cried out 
painfully...

The Teacher told Aliza to take her seat. And after a while asked her why she didn't 
choose her parents or her son instead of her husband as the parents are the ones that nurtured her and the son is the one she gave birth to while she could find another husband. “Why is your husband the most important for you?” He asked.

It was totally quiet in the class, everyone was curious to know her response. Aliza 
calmly and slowly said, “One day my parents will pass away before me. Surely, 
my son will also leave me when he grows old for his studies or business or whatever reason. The only one who I truly share my entire life with, is my Husband”. All the students stood up and applauded for her in a great excitement.

We meet many people in our lives. They come and they go. Some stay for a while, 
some stay forever. Respect every relation, but know the priorities.

உண்மைதான். நம் வாழ்க்கையில் எத்தனையோ உறவுகள், நண்பர்கள் என்று வருவார்கள் உடன் இருப்பார்கள். சிலகாலம் இருப்பார்கள். பிறகு போய் விடுவார்கள். ஆகவே உறவுகளை மதித்து நடந்து கொள்ளுங்கள். அதிலும் சிலருக்கு முன்னுரிமை கொடுத்துப் பழகுங்கள்!
==========================================================================
அடிக்குறிப்பு: ஜோதிடப் புத்தகம் அச்சிடும் வேலை முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது. அதன் காரணமாக 2 நாட்களாக வகுப்பறைப் பக்கம் வரமுடியவில்லை. அனைவரும் மன்னிக்கவும். அதை ஈடு கட்டும் விதமாகக் கூடுதல் பதிவுகள் இந்த வாரம் வெளியாகும். அதில் ஒன்று முக்கியமான ஜோதிடக் கட்டுரை. இன்னொன்று ஜோதிடப் புதிர். ஆமாம் அறிவித்ததுபோல அரைப் புதிர்.

அன்புடன்,
வாத்தியார்
----------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

15.5.15

வருபவை எல்லாம் அவன் விரும்பி தருபவை தானே!


வருபவை எல்லாம் அவன் விரும்பி தருபவை தானே!

பக்தி மலர்

இன்றைய பக்திமலரை பத்மஸ்ரீ டி. எம். செளந்தரராஜன்  அவர்கள் பாடிய பாடல் ஒன்று நிறைவு செய்கிறது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
=====================================================
எனக்கென்ன முருகா ... வருவது வரட்டும்
எல்லாம் உந்தன் மனம்போலே
இங்கு வருபவை எல்லாம் ... நீயே விரும்பி
தருபவை தானே அதனாலே
தருபவை தானே அதனாலே
(எனக்கென்ன முருகா ... )

நடக்கட்டும் குமரா ... உன் புகழ் இசைத்தால்
நான்கு திசைகளில் வரவேற்பு 
என்னை படைத்தவன் உன்னை ... மீண்டும் மீண்டும்
பாடுவதொன்றே என் பிழைப்பு 
(எனக்கென்ன முருகா ... )

ஆகட்டும் அழகா ... எங்கே போவாய்
என்முன் ஒருநாள் வாராமல் 
நான் அதுநாள் வரையில் ... எது நேர்ந்தாலும்
அன்பை வளர்ப்பேன் மாறாமல் 
(எனக்கென்ன முருகா ... )

இங்கு வருபவை எல்லாம் ... நீயே விரும்பி
தருபவை தானே அதனாலே
தருபவை தானே அதனாலே.
================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

14.5.15

நகைச்சுவை: பாதை போகுமா? போகாதா?

நகைச்சுவை: பாதை போகுமா? போகாதா?

இந்திய தேசம் காலம் காலமாக தன் நினைவில் செதுக்கி வைத்திருக்கும் மூன்று மாமன்னர்களின் பெயர்கள் அகரத்தில்தான் துவங்கும். அதுதான் அதிசயம்

அசோகர், அலெக்ஸாண்டர், அக்பர் ஆகிய மன்னர்கள்தான் அவர்கள்.ஒவ்வொரு வருக்கும் ஒரு அற்புதச்சிறப்பு உண்டு. அவர்களில் இப்போது அக்பரைப் பற்றிப் பார்ப்போம்.

அக்பர் பிறந்தது 15.10.1542ல். தனது பதின்மூன்றாவது வயதிலேயே அரியணையில் ஏறியவர் அவர். அவருடைய தந்தை ஹுமாயூன் திடீரென்று காலமாகிவிட ஆட்சியைக் கட்டிக்காக்கும் பொறுப்பு இவர்மேல் சுமத்தப்பட்டது. இறக்கும்வரை அவர் பேரரசராக ஆட்சி செய்த காலம்
சுமார் 50 ஆண்டுகள் (1556 முதல் 1605ஆம் ஆண்டு வரை)

மிகவும் துணிச்சலானவர்.நகைச்சுவை உணர்வு மேலோங்கியவர். மத நல்லிணக்கம் கொண்டவர். அவருடைய அமைச்சரவையில்
9 பேர்களில் நான்கு பேர்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

ஆக்ராவிற்கு அருகில் உள்ள அடர்ந்த காடுகளுக்குச் சென்று வேட்டையாடுவதில் அக்பருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. ஒரு சமயம் அவ்வாறு வேட்டைக்குச் சென்றுவிட்டுத் திரும்பும் வழியில் வழி தவறி காட்டுக்குள்ளே சற்று நேரம் சுற்றும்படி ஆகிவிட்டது.

களைப்பு, பசி, தாகம் எல்லாம் கூட்டணி அமைத்துப் படுத்தி எடுக்க அவருடன் உடன் வந்த வீரர்கள் ஒன்றும் சொல்ல முடியாமல், பேசாமல் தொடர்ந்து வந்தார்கள்.

இளைஞரான அக்பர் அவற்றைப் பொறுத்துக் கொண்டு வந்தார். நான்கு பாதைகள் ஒன்று சேரும் இடத்திற்கு அவர்கள் வந்தார்கள். தாங்கள் வந்த வழியை விடுத்து மற்ற மூன்றில் எதில் சென்றால் ஆக்ரா நகருக்குப் போய்ச் சேரலாம் என்பது பிடிபடவில்லை.

அப்போது அங்கே இளைஞன் ஒருவன் வந்து கொண்டிருந்தான்.

அக்பர் தன்னுடைய படைத்தலைவனைக் கூப்பிட்டு, அந்த இளைஞனிடம் வழி கேட்கச் சொன்னார்.

அவனும் கேட்டான்," ஏம்ப்பா, இந்தப் பாதை ஆக்ராவிற்குப் போகுமா?"

இளைஞன் சட்டென்று சொன்னான்,"பாதை எப்படிப் போகும்? நாம்தான் போக வேண்டும்!"

அக்பர் உட்பட மற்ற அனைவரும் சிரித்து விட்டனர். படைத்தலைவனுக்குக் கோபம் வந்து விட்டது."யாருக்காகக் கேட்கிறேன் என்பதைத் தெரிந்து பேசு.குதிரையில் அமர்ந்திருப்பவர் இந்த தேசத்தின் மன்னர்"

அந்த இளைஞன் அதிராமல் மீண்டும் சொன்னன்,"மன்னரென்றாலும் பாதை போகாது. அவர்தான் போக வேண்டும்"

அவனுடைய துணிச்சலையும், நகைச்சுவை உணர்வையும் கண்டு அசந்து போன அக்பர்,அவனை அருகில் அழைத்து அன்புடன் விசாரித்தார்.

"நீ சொல்வதுதான் சரி, பாதை எப்படி பயணிக்கும்?  நாம்தான் பயணிக்க வேண்டும்! நன்றாகச் சொன்னாய்.
உன் பெயரென்ன?"

"மகேஷ் தாஸ்" என்றான் அந்த இளைஞன்

"உன் போன்று துணிச்சலையும், புத்திசாலித்தனத்தையும், நகைச்சுவை உணர்வையும் உள்ளடக்கிய இளைஞனைத்தான் நான் தேடிக் கொண்டிருக்கிறேன். நாளை என்னுடைய அரண்மனைக்கு வா - நல்ல வேலை போட்டுத் தருகிறேன்" என்று சொன்னதோடு தன்னுடைய முத்திரை மோதிரத்தையும் கழற்றி அவனிடம் கொடுத்தார்.

அந்த இளைஞனும் அவ்வாறே செய்தான். அக்பர் என்ன வேலை கொடுத்தார் தெரியுமா? அமைச்சர் பதவி.

அவன் தன்னுடைய புத்திசாலித்தனத்தால் அக்பரின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்ததோடு முதல் அமைச்சராகவும்  ஆகிவிட்டான்.

அந்த 'மகேஷ் தாஸ்' என்னும் இளைஞன்தான் பின்நாளில் பீர்பால் என்று அனைவராலும் அழைக்கப்பட்ட மதியூகியாவார். தன்னுடைய புத்திசாலித்தனத்தாலும், நகைச்சுவை உணர்வாலும்  நூற்றுக்கணக்கான நிகழ்வுகளை ஏற்படுத்தியவர் அவர்.

தன்னைப் பற்றிய பல கதைகளால் இன்றளவும் பல இந்தியக் குழந்தைகள், பெரியவர்கள் என்று வயது வித்தியாசமின்றி அனைவராலும் போற்றப்படுபவர் அவர். அவருடைய கதைகள் புத்தக வடிவில் ஏராளமாக - தாராளமாகக் கிடைக்கிறது.

வாங்கிப் படித்து மகிழுங்கள்.

அன்புடன்,
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

13.5.15

Half Quiz; பாதிப் புதிர்: அலசலை நீங்கள் செய்யுங்கள். கசக்கிப் பிழிந்து காயப் போடுவதை நான் செய்கிறேன்


Half Quiz; பாதிப் புதிர்: அலசலை நீங்கள் செய்யுங்கள். கசக்கிப் பிழிந்து காயப் போடுவதை நான் செய்கிறேன்

வகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவரான திருவாளர் லால்குடி கே.முத்துராமகிருஷ்ணன் (KMRK) அவர்கள் நல்ல யோசனை ஒன்றைச் சொல்லியிருந்தார். அவருடைய யோசனை  கீழே உள்ளது. அதைப் படித்துப் பாருங்கள். அவருக்கும் என் நன்றியைச் சொல்லிக் கொள்கிறேன்!
---------------------------------------------------------------------------------
Blogger kmr.krishnan said...
சரியான பதில் அளித்தவர்கள் பட்டியலில் என் பெயர் இருப்பதில் மகிழ்ச்சி ஐயா!
மிக்க நன்றி ஐயா!
புதிர் பாடத்தை நிறுத்த வேண்டாம் என்பதே என் வேண்டுகோள். நேற்று வெள்ளிக்கிழமை. சாதாரணமாக நீங்கள் முருகன் பாடலைத்தான் வெளியிடுவீர்கள். எனவே பலரும் அதை அனுமானித்தும், மேலும் இரண்டு நாட்களாக பதிவு இலாததாலும் பலரும் புதிரைப் பார்த்து இருக்க மாட்டார்கள்.அதனால் பங்கு பெற்ற‌வர் எண்ணிக்கை குறைந்திருக்கலாம்.
மேலும் போட்டியில் தவறான பதில் கொடுப்பதை அவமானமாக நினைப்பவர்கள் பலரும் இருக்கலாம். எனவே ஏற்கனவே நான் கூறியதைப் போல ஜாதகருக்கு நேர்ந்ததை நீங்களே கூறி, எதனால் அப்படி நேர்ந்தது
என்று கேட்கலாம்.அதில் சிறந்த பதில் என்றெல்லாம் கூறாமல் உங்கள் அலசலைக் கொடுத்து அதனுடன் 'உங்கள் பதிலை ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்' என்று கூறி விடலாம். இதன் மூலம் பலபேரும் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். இது என் ஆலோசனைதான். முடிவு உங்கள் கையில்.
kmrk1949@gmail.com
Saturday, May 09, 2015 6:41:00 AM
----------------------------------------------------------
ஆகவே இனி புதிர்கள் வேறு விதமாக வரும். ஜாதகரின் நிலைப் பாட்டை நான் கூறிவிடுவேன். ஜாதகப்படி என்ன காரணமாக இருக்கலாம் என்பதை அவரவர் தங்களுக்குத் தோன்றும் விதத்தில் எழுதலாம். அடுத்த நாள் ஜாதகப்படி உண்மையான காரணம் என்ன என்பதை நான் எழுதுகிறேன்.

நீங்கள் உங்கள் பதிலுடன் அதை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம்

பலபேரும் கலந்து கொள்ள வாய்ப்பு உண்டாக்கும் நோக்கில் இந்த மாற்றம்!

என்ன சரிதானே?

உங்கள் கருத்தை எழுதுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
----------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

Laws of life வாழ்க்கைக்கான நியதிகள்


Laws of life வாழ்க்கைக்கான நியதிகள்
Without you, God will not. Without God, you cannot. When it is God plus you, the possibilities are limitless.
Quote by T.T.Rangarajan (aged 50)

T.T.ரங்கராஜனின் உரை.காணொளி வடிவில் அவசியம் பாருங்கள்.
அளவில் சிறிய காணொளிதான். அவசியம் பாருங்கள்
(சுமார் 4 நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடியது)

அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள கீழே உள்ள சுட்டியைப் பயன்படுத்துங்கள்
http://lifepositive.com/making-of-a-mentor/



Our sincere thanks to the person who uploaded this video in the net

அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!

12.5.15

கவிதை: பெண்ணிற்கு வந்த காதல் மயக்கம்

கவிதை: பெண்ணிற்கு வந்த காதல் மயக்கம்

பெண்ணிற்கு காதல் மயக்கம் வந்தால் என்ன ஆகும்?

தன் மனதிற்குள் வைத்து உருகுவாள்.

சரி திரைப்படங்களில், அந்த உருக்கத்தை எப்படிக் காட்ட முடியும்?

அவள் உணர்வுகளைக் கவிஞர் ஒருவர் அற்புதமாகக் கவிதை
வரிகளால் எழுதிக் கொடுக்க, தேன் குரலால் சுசிலா அவர்களைப்
போன்ற சிறந்த பாடகி ஒருவர் நல்ல பாவத்துடன் அந்தப் பாடலைப்
பாட, நாயகியும் காட்சிக்கு ஏற்றார்ப்போல முக பாவம் மற்றும்
நளினம் காட்டி நடிக்க - அருமையாகக் காட்சி அமைத்துக் காட்டி
விடுவார்கள். (அதெல்லாம் ஒரு காலம் )

அப்படிக் கவியரசர் கண்ணதாசன் எழுதிய - பெண் மயங்கிப் பாடும்
காதல் பாடல்கள் இரண்டினை இன்று பதிவிட்டுள்ளேன்.படித்து
மகிழுங்கள்!
-----------------------------
"நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்
நினைவு தராமல் நீயிருந்தால்
கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்
(நெஞ்சத்திலே)

நூலிடை மீதொரு மேகலையாட
மாலைக் கனிகள் ஆசையில் வாட
ஏலப் பூங்குழல் இன்னிசை பாட
எண்ணம் யாவும் எங்கோ ஓட
காலையில் உறங்கி மாலையில் எழுந்தால்
கண்க ளிரண்டில் நிம்மதி ஏது?
(நெஞ்சத்திலே)

காவிரி ஆறென நீர் விளயாட
கன்னி மலர்கள் தேன் மழையாகப்
பாதி விழிகள் காதலில் மூட
பாலில் விழுந்த பழம்போல் ஆட
நீ தரவேண்டும் நான் பெறவேண்டும்
நிலவினில் ஆடும் நிம்மதி வேண்டும்
(நெஞ்சத்திலே)"

பட்ம்: சாந்தி - வருடம் 1965

நினைவு தராமல் நீயிருந்தால், கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்
என்ற வரிகளும், காலையில் உறங்கி மாலையில் எழுந்தால்,
கண்களிரண்டில் நிம்மதி ஏது? என்ற வரிகளும் சிறந்த வரிகளாகும்

காவிரி ஆறென நீர் விளயாட, கன்னி மலர்கள் தேன் மழையாகப்
பாதி விழிகள் காதலில் மூட பாலில் விழுந்த பழம்போல்
ஆட - நீ தரவேண்டும் - நான் பெறவேண்டும் - நிலவினில் ஆடும்
நிம்மதி வேண்டும் - என்று எழுதிய வரிகளும் சிறந்த
வரிகளாகும்
--------------------------
மற்றுமொரு பாடல்:

"மயங்குகிறாள் ஒரு மாது - தன்
மனதுக்கும் செயலுக்கும் உறவுமில்லாது
மயங்குகிறாள் ஒரு மாது
திருவாய் மொழியாலே
அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா?
மயங்குகிறாள் ஒரு மாது
(மயங்கு)

தோழியர் கதை சொல்லித் தரவில்லையா
துணிவில்லையா பயம் விடவில்லையா
நாழிகை செல்வதும் நினைவில்லையா
அன்பே அன்பே அன்பே அன்பே
அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா?
(மயங்கு)

பார்வையில் ஆயிரம் கதை சொல்லுவாள்
படித்தவள் தான் அதை மறந்து விட்டாள்
காதலை நாணத்தில் மறைத்து விட்டாள்
அன்பே அன்பே அன்பே அன்பே
அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா?
(மயங்கு)"

படம்: பாச மலர் - வருடம் 1961

மனதிற்கும், செயலுக்கும் உறவில்லாத நிலை என்று எப்படித் தன்
பாடலைத் துவங்கினார் பார்த்தீர்களா? ஒரு மயக்க நிலையை
இதைவிடச் சிறப்பாக எப்படிச் சொல்ல முடியும்? அதுதான் கவியரசர்!

"தோழியர் கதை சொல்லித் தரவில்லையா துணிவில்லையா பயம் விடவில்லையா நாழிகை செல்வதும் நினைவில்லையா"
- என்ற வரிகளும்

 "பார்வையில் ஆயிரம் கதை சொல்லுவாள் படித்தவள் தான் அதை
மறந்து விட்டாள் காதலை நாணத்தில் மறைத்து விட்டாள்"
- என்ற வரிகளும் சிறப்பான வரிகளாகும்.

காதலை அவள் நாணத்தில் மறைத்து விட்டாள் என்று சொன்னதுதான் முத்தாய்ப்பான வரியாகும்

அன்புடன்,
வாத்தியார்
======================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

9.5.15

கண்ணான கண்ணனுக்கு அவசரமா?


Cover page of the book (Wrapper)

கண்ணான கண்ணனுக்கு அவசரமா?

கண்ணான கண்ணனுக்கு அவசரமா 
கொஞ்சம் பின்னாலே பார்க்கவும் முடியலையா 
-கவியரசர் கண்ணதாசன்

வாத்தியாரின் ஜோதிட நூல் அச்சில் உள்ளது. அச்சில் பல நிலைகள்
உள்ளன. முதலில் தட்டச்சுவது, பிறகு பக்கம் சேர்ப்பது, பிழை திருத்தம்,
அச்சிடல், பைண்டிங் என்று பல நிலைகள் உள்ளன.

நான் இதுவரை 11 புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளதால் அச்சிடும் சிரமங்கள் எனக்கு நன்கு தெரியும்.

நாம் கணினியில் எழுதும் எழுத்துருக்களும் அச்சகங்களில் உள்ள எழுத்துருக்களும் ஒன்றுக்கொன்று முரணானவை

நமக்கு unicode Fonts
அவர்களுக்கு Senthamiz  அல்லது Vanavil   DTP எழுத்துருக்கள்

ஒன்றுக்கொன்று உதவாது. நான் அப்படியே எனது கணினியில் உள்ளதை எடுத்துக் கொடுத்தாலும், அவர்கள் அதைப் பார்த்துப் புதிதாக தட்டச்சியாக
வேண்டும்.

வெள்ளைக்காரனும் தமிழ்ப் பெண்ணும் கல்யாணம் செய்து கொண்ட கதைதான். ஒரே சாப்பாட்டை இருவரும் சாப்பிட முடியாது.

நமக்கு தயிர் சாதம், மாங்காய் ஊறுகாய்
அவருக்கு, பிஸ்ஸா, பர்கர்

ஆகவே சிரமங்களைப் புரிந்து கொண்டு சற்றுப் பொறுமையாக இருங்கள்.

முதல் புத்தகம் நான் சொல்லியபடி 6.6.2015 அன்று வெளியாகும்.
ஒவ்வொரு மாத இடைவெளியிலும் மேலும் ஒவ்வொரு புத்தகத்தைக் கோண்டுவர முயற்சிக்கிறேன்
------------------------------------------------------------
இதுவரை பதிவு செய்துள்ளவர்கள் மிகவும் குறைவானவர்களே அவர்கள் அனைவருக்கும் கண்டிப்பாகப் பிரதிகள் உண்டு

அவர்கள் இருநூறு ரூபாய்கள் முன் பணம் அனுப்பியதோடு அல்லாமல். மின்னஞ்சல் மூலம் பல கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுடைய மின்னஞ்சல்களுக்கெல்லாம் தனித்தனியாகப் பதில்
எழுத நேரமில்லை.

பணம் வந்ததைத் தெரியப் படுத்துங்கள் என்று தொடர்ந்து மின்னஞ்சல்கள் வருகின்றன.  ஆகவே 6.6.2015 வரை பொறுமையாக இருங்கள்.

இது என்னுடைய கனிவான வேண்டுகோள்

அன்புடன்
வாத்தியார்
-----------------------

மார்ச் 19ம் தேதியன்று எழுதியது. மீண்டும் உங்கள் பார்வைக்கு

நீங்கள் ஆசைப்பட்டது நடக்கப் போகிறது!

வகுப்பறையில் எழுதத் துவங்கி எட்டு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. முதல் 5 ஆண்டுகள் எழுதிய ஜோதிடப் பாடங்களைத் தொகுத்து,

படிப்பதற்குத் தோதாக வரிசைப் படுத்தி, புத்தகங்களாகக் கொண்டு வர கடந்த 3 ஆண்டுகளாக முயற்சி செய்கிறேன். அதில் சில தடங்கல்கள்

ஏற்பட்டன. ஓயாத பணிச்சுமை. மற்றும் பத்திரிக்கைகளுக்கான ஆக்கங்கள் அதில் வந்த கதைகளைத் தொகுத்துப் புத்தகங்களாக வெளியிடும்

வேலைகள் என்று விதம் விதமான, தவிர்க்க முடியாத பணிகள்.

ஜோதிடப் பாடங்கள் மொத்தம் 3,000 பக்கங்கள். அவற்றை 6  பாகங்களாக வெளியிடலாம் என்று உள்ளேன். அடிப்படைப் பாடங்கள், மற்றும்

அஷ்டகவர்க்கப்பாடங்களை முதலில் 4 தொகுதிகளாக வெளியிட உள்ளேன்.

பதிப்பிற்கான type setting வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அச்சுப்பிழைகள் இன்றி அவற்றைச் சரி செய்வதற்கும் ஏற்பாடு

செய்துள்ளேன்.அச்சிட்டு புத்தகமாகக் கொண்டு வரும் பணியை அச்சுத் தொழிலில் அனுபவம் மிக்க நண்பர் ஒருவர் செய்து தர உள்ளார்.

இறையருளால், முதல் இரண்டு தொகுதிகள் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் தயாராகிவிடும். 6.6.2015ற்குள் உங்களுக்குப் புத்தகங்கள்

கிடைத்துவிடும்.

குறைந்த அளவில்தான் புத்தகங்களை அச்சிட உள்ளேன். எத்தனை புத்தக்கங்கள் அச்சிட வேண்டும் என்பது எனக்குத் தெரிய வேண்டும்.

தெரிந்தால்தான் அதற்குத் தகுந்தாற்போல அச்சிட முடியும்.

வாத்தியாரின் ஜோதிட நூல்கள்!

1. இந்தியாவில் இருப்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை. கூரியர் சர்வீசில் புத்தகங்களை அனுப்பும் நோக்கில் இந்தக் கட்டுப்பாடு.

2. வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு இந்தியத் தொடர்பும், இந்திய முகவரியும் இருந்தால் மட்டுமே புத்தகங்கள் கிடைக்கும்.

3. உங்கள் பிரதிகளுக்குப் பதிவு செய்து கொள்ளுங்கள். பதிவு செய்ய வேண்டிய மின்னஞ்சல் முகவரி umayalpathippagam@gmail.com

4. கொடுக்கப்பட்டுள்ள அந்த முகவரிக்கு மட்டுமே கடிதம் எழுதுங்கள். எழுதும்போது உங்களின் முழுப் பெயர், முழு முகவரி (Full postal address)
மற்றும் அலை பேசி எண் ஆகியவற்றைத் தெரியப் படுத்துங்கள்.

5. பதிவுக் கட்டணம் ரூபாய் 200:00 (இரு நூறு ரூபாய்கள்: மட்டும்). இந்தப் பணம் புத்தக விலை மற்றும் கூரியர் கட்டணங்களில் கழித்துக்

கொள்ளப்படும். வங்கிக் கணக்கு விபரம் மின்னஞ்சலில் தெரிவிக்கப்படும்

6. புத்தகங்களின் அளவு 1/8 size. பக்கங்களின் எண்ணிக்கையும், விலையும் புத்தகங்கள் தயாராகி வந்தவுடன் உங்களுக்குத் தெரியப் படுத்தப்படும்.

அதற்கான பணத்தை நீங்கள் அப்போது செலுத்தினால் போதும். Books will be in reasonable and affordable price

7.வெளிநாட்டுக் கண்மணிகளுக்கு என்ன செய்யலாம் என்பதைத் தபால் துறையில் முழுமையாக விசாரித்துவிட்டுப் பிறகு அறிவிக்கிறேன்

அன்புடன்,
வாத்தியார்
----------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!