வேறு துணை எனக்கெதுக்கு வேண்டும்?
பக்தி மலர்
இன்றைய பக்தி மலரை பத்மஸ்ரீ சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய முருகப் பெருமானின் பகழைப் பாடும் பாடல் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்
அன்புடன்,
வாத்தியார்
-----------------------------------------------
ஆறுமுகம் இருக்க ... அவன் கை வேலிருக்க
வேறு துணை யாரெனக்கு வேண்டும்
வெற்றி வேலன் அவன் தாள் பணிய வேண்டும்
வெற்றி வேலன் அவன் தாள் பணிய வேண்டும்
ஆறுமுகம் இருக்க ... அவன் கை வேலிருக்க
(ஆறுமுகம் இருக்க ... )
நீரணிந்த நெற்றியுடன் ... நீங்காத பக்தியுடன்
காவடிகள் தூக்கி வர வேண்டும்
முருகன் சேவடியில் மாலையிட வேண்டும்
... வேண்டும்
(ஆறுமுகம் இருக்க ... )
ஏறுமயில் ஏறிவரும் ... வீரமகன் திருப்புகழை
காலமெல்லாம் பாடும் நிலை வேண்டும்
பழநி கந்தன் அவன் கருணை செய்ய வேண்டும்
... வேண்டும்
(ஆறுமுகம் இருக்க ... )
எப்போது நினைத்தாலும் ... பக்கத்திலே இருந்தே
என்னை அவன் பார்த்திருக்கவேண்டும்
என் அன்னையென காத்திருக்க வேண்டும்
... வேண்டும்
(ஆறுமுகம் இருக்க ... ).
பாடிப் பரவசப் படுத்தியவர் பத்மஸ்ரீ சீர்காழி கோவிந்தராஜன்
=======================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
4 comments:
முருகா நீ இருக்க பயம் ஏன்
முருகா
முருகா
Veti vel vera vel
Om saravanabava
Post a Comment