மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.1.15

தேனினும் இனிய குரலில் ஒரு பாடல்


தேனினும் இனிய குரலில் ஒரு பாடல்

Harivarasanam Viswamohanam Lyrics

ஹரிவராசனம் விஸ்வமோஹனம் பாடல், அதன் பொருளுடன்

Harivarasanam the most famous song dedicated to Lord Ayyappa is recited just prior to closing of the Sabarimala Ayyappa Temple doors at

night. Here is the Harivarasanam lyrics (text) in Malayalam and English. The lyrics was provided by Mr. Pramod Vittal Rao. Thanks so much for

the same.

Harivarasanam Viswamohanam
Haridadhiswaram Aaradhyapadhukam
Arivimardhanam Nithyanarthanam
Hariharatmajam Devamashreye
Saranam Ayyappa Swamy Saranam Ayyappa
Saranam Ayyappa Swamy Saranam Ayyappa
Saranakirtanam Bakhtamanasam
Bharanalolupam Narthanalasam
Arunabhasuram Bhoothanayakam
Hariharatmajam Devamashreye
Saranam Ayyappa Swamy Saranam Ayyappa
Saranam Ayyappa Swamy Saranam Ayyappa
Pranayasathyakam Praananayakam
Pranathakalpakam Suprabhanjitham
Pranavamanidram Keerthanapriyam
Hariharatmajam Devamashreye
Saranam Ayyappa Swamy Saranam Ayyappa
Saranam Ayyappa Swamy Saranam Ayyappa
Thuragavahanam Sundarananam
Varagadhayudham Vedavavarnitham
Gurukrupakaram Keerthanapriyam
Hariharatmajam Devamashreye
Saranam Ayyappa Swamy Saranam Ayyappa
Saranam Ayyappa Swamy Saranam Ayyappa
Tribuvanarchitam Devathathmakam
Trinayanam Prabhum Divyadeshikam
Tridashapoojitham Chinthithapradam
Hariharatmajam Devamashreye
Saranam Ayyappa Swamy Saranam Ayyappa
Saranam Ayyappa Swamy Saranam Ayyappa
Bhavabhayapaham Bhavukavaham
Bhuvanamohanam Bhoothibhooshanam
Dhavalavahanam Divyavaranam
Hariharatmajam Devamashreye
Saranam Ayyappa Swamy Saranam Ayyappa
Saranam Ayyappa Swamy Saranam Ayyappa
Kalamrudusmitham Sundarananam
Kalabhakomalam Gathramohanam
Kalabhakesari Vajivahanam
Hariharatmajam Devamashreye
Saranam Ayyappa Swamy Saranam Ayyappa
Saranam Ayyappa Swamy Saranam Ayyappa
Srithajanapriyam Chinthithapradam
Sruthivibhushanam Sadhujeevanam
Sruthimanoharam Geethalalasam
Hariharatmajam Devamashreye
Saranam Ayyappa Swamy Saranam Ayyappa
Saranam Ayyappa Swamy Saranam Ayyappa
---------------------------------------------------
Jesudas - Harivarasanam. lyrics and meaning below.

Harivarasanam Viswamohanam
Haridadhiswaram Aaradhyapadhukam
Arivimardhanam Nithyanarthanam
Hariharathmajam Devamashraye
Saranam Ayyappa Swamy Saranam Ayyappa
Saranam Ayyappa Swamy Saranam Ayyappa

Repository of Hari's boons,
Enchanter of universe,
Essence of Hari's grace,
He whose holy feet is worshipped,
He who kills enemies of good thought,
He who daily dances the cosmic dance,
Son of Hari and Hara,
I take refuge in thee God.
My refuge is in you Ayyappa,
My refuge is in you Ayyappa.


Saranakirtanam Bakhtamanasam
Bharanalolupam Narthanalasam
Arunabhasuram Bhoothanayakam
Hariharathmajam Devamashraye
Saranam Ayyappa Swamy Saranam Ayyappa
Saranam Ayyappa Swamy Saranam Ayyappa

He who likes song of refuge,
He who is in the mind of devotees,
He who is the great ruler,
He who loves to dance,
He who shines like the rising sun,
He who is king of all beings,
Son of Hari and Hara,
I take refuge in thee God.
My refuge is in you Ayyappa,
My refuge is in you Ayyappa.


Pranayasathyakam Praananayakam
Pranathakalpakam Suprabhanjitham
Pranavamanidram Keerthanapriyam
Hariharathmajam Devamashraye
Saranam Ayyappa Swamy Saranam Ayyappa
Saranam Ayyappa Swamy Saranam Ayyappa

He whose soul is truth,
He who is the darling of all souls,
He who created universe,
He who shines with a glittering Halo,
He who is the temple of 'OM',
He who loves songs,
Son of Hari and Hara,
I take refuge in thee God.
My refuge is in you Ayyappa,
My refuge is in you Ayyappa.


Thuragavahanam Sundarananam
Varagadhayudham Vedavavarnitham
Gurukrupakaram Keerthanapriyam
Hariharathmajam Devamashraye
Saranam Ayyappa Swamy Saranam Ayyappa
Saranam Ayyappa Swamy Saranam Ayyappa

He who rides a horse,
He who has a pretty face,
He who has the blessed mace as weapon,
He who bestows grace like a teacher,
He who loves songs,
Son of Hari and Hara,
I take refuge in thee God.
My refuge is in you Ayyappa,
My refuge is in you Ayyappa.


Tribuvanarchitam Devathathmakam
Trinayanam Prabhum Divyadeshikam
Tridashapoojitham Chinthithapradam
Hariharathmajam Devamashraye
Saranam Ayyappa Swamy Saranam Ayyappa
Saranam Ayyappa Swamy Saranam Ayyappa

He who is worshiped by the three worlds,
He who is the soul of all gods,
He who is Lord Shiva,
He who is worshipped by devas,
He who is who is worshipped three times a day,
He whose thought is fulfilling,
Son of Hari and Hara,
I take refuge in thee God.
My refuge is in you Ayyappa,
My refuge is in you Ayyappa.


Bhavabhayapaham Bhavukavaham
Bhuvanamohanam Bhoothibhooshanam
Dhavalavahanam Divyavaranam
Hariharathmajam Devamashraye
Saranam Ayyappa Swamy Saranam Ayyappa
Saranam Ayyappa Swamy Saranam Ayyappa

He who destroys fear,
He who brings prosperity,
He who is enchanter of universe,
He who wears holy ash as ornament,
He who rides a white elephant,
Son of Hari and Hara,
I take refuge in thee God.
My refuge is in you Ayyappa,
My refuge is in you Ayyappa.


Kalamrudusmitham Sundarananam
Kalabhakomalam Gathramohanam
Kalabhakesari Vajivahanam
Hariharathmajam Devamashraye
Saranam Ayyappa Swamy Saranam Ayyappa
Saranam Ayyappa Swamy Saranam Ayyappa

He who blesses with enchanting smile,
He who has is very pretty,
He who is adorned by sandal paste,
He who has a pretty mien,
He who is a like a lion to the elephants,
He who rides on a tiger,
Son of Hari and Hara,
I take refuge in thee God.
My refuge is in you Ayyappa,
My refuge is in you Ayyappa.


Srithajanapriyam Chinthithapradam
Sruthivibhushanam Sadhujeevanam
Sruthimanoharam Geethalalasam
Hariharathmajam Devamashraye
Saranam Ayyappa Swamy Saranam Ayyappa
Saranam Ayyappa Swamy Saranam Ayyappa

He who is dear to his devotees,
He who fulfills wishes,
He who is praised by Vedas,
He who blesses life of ascetics,
He who is the essence of Vedas,
He who enjoys divine music,
Son of Hari and Hara,
I take refuge in thee God.
My refuge is in you Ayyappa,
My refuge is in you Ayyappa.
================================================
அன்புடன்
வாத்தியார்



Our sincere thanks to the person who uploaded this song in the net
வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!

29.1.15

உங்களுக்கு என்ன நோய்?


உங்களுக்கு என்ன நோய்?

உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்:-

1. கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி?
சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.
டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.

2. கண் இமைகளில் வலி.. என்ன வியாதி?
அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில்
வலி உண்டாகிறது.
டிப்ஸ்: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக்
கொள்ள வேண்டும்.

3. கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம் என்ன வியாதி?
அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.
டிப்ஸ்: எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்..

4. கண்கள் உலர்ந்து போவது.. என்ன வியாதி?
நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள்
உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.
டிப்ஸ்: குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும்_கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல்
போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.

5. தோலில் தடிப்புகள் ஏற்படுதல் என்ன வியாதி?
இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள்.
டிப்ஸ்: அதிகப்படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.

6. முகம் வீக்கமாக இருப்பது என்ன வியாதி?
உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.
டிப்ஸ்:ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால் தண்ணீர்
அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.

7. தோல் இளம் மஞ்சளாக மாறுவது என்ன வியாதி?
கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும் பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது.
டிப்ஸ்: அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.

8. பாதம் கை கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல் என்ன வியாதி?
சீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.
டிப்ஸ்: வைட்டமின் நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண்டும்.

9. பாதம் மட்டும் மரத்துப் போதல் என்ன வியாதி?
நீரிழிவு நோயின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும் செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. இதன்
விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ வலியையோகூட உணர்ந்து கொள்ள முடியாது.
டிப்ஸ்: பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூட டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

10. பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள் என்ன வியாதி?
தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். இந்த தைராய்டு சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கிறது. இந்த தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது, நம் பாதங்களின் தோல் உலர்ந்துபோகும். பாதங்களை சரிவரபாராமரிக்காமல் இருந்தால் அதிக அளவில் பாதிப்படைந்துவிடும்.
டிப்ஸ்: தைராய்டு பிரச்சினையின் வேறு சில அறிகுறிகள், அதிக சோர்வும் உடல்எடை அதிகமாதலும் இதில் எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.

11. சிவந்த உள்ளங்கை என்ன வியாதி?
கல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால், நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும்.
அதனால் உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக சிகப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை, அதிக சிவப்பான உள்ளங்கைகள் தான் சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்ற பாகங்களைவிட உள்ளங்கையின் தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான்.
டிப்ஸ்: கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம் சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்தன்மையை மாதம் ஒரு முறையாவது போக்க,
ஒரு நாள் பழம் மட்டும் சாப்பிடுங்கள்.

12. வெளுத்த நகங்கள் என்ன வியாதி?
இரத்த சோகை இருக்கிறது. இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்! ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.
டிப்ஸ்: இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள  சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். ஈரல், கீரைவகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அல்லது டாக்டரின் ஆலோசனையின்படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி_12
மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.

13. விரல் முட்டிகளில் வலி என்ன வியாதி?
ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி இருக்கிறது. இதனால் விரல் முட்டிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி அதிகமாக விரல் முட்டிகளில்தான் காணப்படும். அவை வடிவத்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உடனே வர வாய்ப்புண்டு. வயதானவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டுவலி வருவதில்லை. எந்த வயதுக்காரர்களுக்கும் வரலாம்.
டிப்ஸ்: உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் ஙி சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறைக்கலாம். ஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல்பருமனைக் குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கும்.

14. நகங்களில் குழி விழுதல் என்ன வியாதி?
சோரியாஸிஸ் இருக்கிறது.இது ஒரு மோசமான தோல் வியாதி. இதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்களில் குழிகள் வரக்கூடும்.
டிப்ஸ்: உடனடியாக சரும வியாதி நிபுணரைக் கலந்தாலோசிக்கவும். ஸ்டிரெஸ்ஸைக் குறைத்துக் கொண்டாலே வியாதி அதிகமாவதைத்
தடுக்கலாம்.

15. வாய்ஈறுகளில் இரத்தம் வடிதல் என்ன வியாதி?
பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.
டிப்ஸ்: தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத்வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.

16. சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல் என்ன வியாதி?
வாய்ப்புண் இருக்கிறது. அதிகமாக  ஸ்டிரெஸ் செய்து கொள்வதாலும் வாய்ப்புண் வரலாம். உடலில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற்றும்,
இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி_12ன் குறைவினாலும் இப்படி ஏற்படுகிறது.
டிப்ஸ்: ‘மல்டி_விட்டமின்’ மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் ஸ்டிரெஸ்ஸைக் குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் இன்பெக்ஷன் குறைந்து வாய்ப்புண் ஆறும்.

17. வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது. என்ன வியாதி?
உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது. உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த டீஹைடிரேஷன் ஏற்படுகிறது.
மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும்.
டிப்ஸ்: நிறைய திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும். தினமும் குறைந்தது ஒன்றரைலிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன்கூடவே பழங்களையோ பழச்சாறோ அருந்துதலும் நல்ல பலன் தரும்.

படித்ததில் பிடித்தது. ஆகவே அறியத் தந்துள்ளேன்.
அன்புடன்
வாத்தியார்
===========================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

27.1.15

அறிவின் உன்னத நிலை!

 

அறிவின் உன்னத நிலை!

பேச்சு, செயல், அறிவு என்று எல்லா நிலைகளிலும் புத்திசாலித் தனத்தோடு இருப்பது ஒரு உன்னதமான நிலை. அதை வெளிப்படுத்தும் முகமாக சில சம்பவங்களைக் கீழே கொடுத்துள்ளேன். படித்து மகிழுங்கள்!

கிணற்றுத் தண்ணீர் யாருக்குச் சொந்தம்? விற்றவனுக்கா அல்லது வாங்கியவனுக்கா?

ஒருவன் தனது கிணற்றை ஒரு விவசாயிக்கு விலைக்கு விற்றான். கிணற்றை விலைக்கு வாங்கிய விவசாயி, அடுத்த நாள் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க ஆவலுடன் கிணற்றுக்கு வந்தார்.

அங்கு கிணற்றை விற்றவன் நின்று கொண்டிருந்தான். அவன் விவசாயியைத் தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்தான்.

விவசாயிக்குக் கோபம் வந்தது. “எனக்குக் கிணற்றை விற்று விட்டு அதிலிருந்து தண்ணீர் எடுக்க விடாமல் செய்கிறாயே? இது நியாயமா?” என்று கிணறு விற்றவனைப் பார்த்துக் கோபத்துடன் கேட்டான்.

கிணறு விற்றவன், “நான் உனக்குக் கிணற்றை மட்டும்தான் விற்றேன். அதிலிருக்கும் தண்ணீரை இல்லை. எனவே நீ தண்ணீரை இங்கிருந்து எடுக்கக் கூடாது” என்று வாதம் செய்யத் தொடங்கினான்.

விவசாயி குழப்பத்துடனும் கோபத்துடனும் உள்ளூர் நீதிபதியிடம் சென்று முறையிட்டான்.

நீதிபதி இருவரையும் அழைத்து இருவர் பக்கத்து நியாயத்தையும் விசாரித்தார்.

பின்னர் கிணற்றை விற்றவனிடம் “நீ கிணற்றை இந்த விவசாயிக்கு விற்றுவிட்டதால் கிணறு உன்னுடையதல்ல. அதில் உனது தண்ணீரை இன்னமும் வைத்திருப்பது தவறு. உனக்கு அதில்தான் தண்ணீரைச் சேமித்து வைக்க வேண்டுமென்று விரும்பினால், விவசாயிக்கு அதற்கான வாடகையைத் தினமும் கொடுத்து விடு. இல்லையென்றால் கிணற்றிலிருந்து உனது தண்ணீரை எடுத்துக் கொண்டு உடனே வெளியேற வேண்டும்” என்று தீர்ப்புக் கூறினார்.

கிணறு விற்றவன், தனது தவறுக்கு மன்னிப்புக் கோரியதுடன் கிணற்றின் முழுப் பயனையும் விவசாயி அனுபவிக்கலாம் என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து சென்றான்.

எப்படி உள்ளது இந்த அதிரடித் தீர்ப்பு?
-----------------------------------------------------
2

இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் - ஆண்டு 1947 - இடைக்காலப் பிரதமராகப் பதவி ஏற்ற the de-facto prime minister of India திரு. ஜவஹர்லால் நேரு அவர்கள், இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகளின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து அவர்களிடையே பேசத் துவங்கினார்.

“நமது ராணுவத்திற்குத் தலைமை தாங்க ஒரு பிரிஷ்காரரை நியமிக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். நமக்கு ராணுவத்தை வழி நடத்தும் அனுபவம் இல்லாததால் அதுதான் சரியாக இருக்குமென்று நினைக்கிறேன். உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்” என்றார்.

அதுவரை பிரிட்டீஷ் ராணுவத்திடம்  பணியாற்றிக் கொண்டிருந்த இந்திய ராணுவத்தைச் சேர்ந்த சிலர், அதுதான் சரி என்பதைப் போல தலையை அசைத்தார்கள்.

நாது சிங் ராத்தோர் என்ற மூத்த அதிகாரி எழுந்து தன் கருத்தைச் சொல்வதற்கு அனுமதி கேட்டார். அந்த அதிகாரியின் குறுக்கீட்டை விரும்பாவிட்டாலும், சிறிது  யோசனைக்குப் பிறகு, நேரு அவர்கள், அவரைப் பேசுவதற்கு அனுமதித்தார்.

"நீங்கள் பாருங்கள் சார், அதே போல இந்த நாட்டை வழி நடத்துவதிலும் நமக்கு அனுபவமில்லை. ஆகவே, ஒரு பிரிட்டீஷ்காரரை முதல் பிரதம மந்திரியாக நாம் நியமிக்க வேண்டும். செய்வீர்களா” என்று கேட்டார்.

சபையில் மாயான அமைதி நிலவியது. நேர் அவர்களும் அதிர்ச்சியில் உறைந்து போனார். ஆனாலும் சதாகரித்துக் கொண்டு அவரைப் பார்த்துக் கேட்டார்.

“ராணுவத்தலைமையை ஏற்றுக் கொள்வதற்கு நீங்கள் தயாரா?”

அதற்கு ஒப்புக்கொள்ளாத அந்த அதிகாரி தொடர்ந்து சொன்னார்,” என்னைவிடத் திறமையுள்ள எனது மூத்த அதிகாரி லெப்டினண்ட் ஜெனரல் திரு.
கரியப்பா அவர்கள் அதற்குத் தகுதியானவர். அவரை நியமிக்கலாம்”

நேரு அவர்களும் அதையே செய்தார்.

மிகவும் திறமை வாய்ந்த திரு.கரியப்பா அவர்கள் இந்தியாவின் முதல் ராணுவத் தலைமை தளபதியானது அப்படித்தான். ரத்தோர்? அவர் முதல் லெப்டினண்ட் ஜெனரலானார்
===============================================
இணையத்தில் படித்தது. நன்றாக இருந்ததால், அதை மொழிமாற்றம் செய்து உங்களுக்குப் படிக்கத்தந்துள்ளேன்!

இரண்டில் எது மிகவும் நன்றாக உள்ளது?

அன்புடன்
வாத்தியார்

========================================  
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

26.1.15

Humour: நகைச்சுவை: ஹீரோவுக்கும் தயாரிப்பாளருக்கும் என்ன வித்தியாசம்?


Humour: நகைச்சுவை: ஹீரோவுக்கும் தயாரிப்பாளருக்கும் என்ன வித்தியாசம்?

1
"இப்பதானே தேள் கொட்டிடுச்சினு மருந்து வாங்கிட்டுப் போனீங்க...மறுபடி வந்து இருக்கீங்களே, எதற்கு?"

"இப்ப மருந்து கொட்டிடுச்சி."

#####
2
"என் மனைவிக்கு தெரியாம நான் அவ பீரோவை திறந்ததை அவ பார்த்திட்டா..."

"அய்யோ...! அப்பறம்?"

“சாத்திட்டா”!!!!

#####
3
கடல்ல மூழ்கி தற்கொலை பண்ணிக்கப்போன பொண்ணைக் காப்பாத்தினியே, அவ இபோ எப்படி இருக்கா?

"முழுகாம இருக்கா....."

#####
4
DOCTOR : கண் ஆபரேஷனுக்கு அப்புறம் உங்களுக்கு எப்படி இருக்கு?

போயும் போயும் இந்த நர்ஸையா சைட் அடிச்சோம்னு தோணுது டாக்டர்…!

#####
5
"எம்பிளாய்மெண்ட் ஆபிசிலே நீ பதியறதுக்கு, உன்னோட அப்பா, தாத்தாவையும் கூட்டிட்டு வந்திருக்கியே! ஏன்?"

"அப்பாவுக்குப் புதுப்பிக்கணும்... எங்க தாத்தாவுக்கு முதல் இண்டர்வியூ வந்திருக்கு!"

#####
6
வரதட்சணையே வாங்கிட்டு கல்யாணம் செஞ்சது என் மனசை உறுத்திக்கிட்டே இருக்குது!

அதனால…?

வரதட்சணையே வாங்காம இன்னொரு கல்யாணம் செய்துகிட்டு பிராயச்சித்தம் செய்யப் போறேன்!

#####
7
"தம்பி உங்க பக்கத்து வீட்டு பெண் பாமாவை எங்க பையனுக்கு கேட்கலாம்னு இருக்கோம், பொண்ணு எப்பிடி?"

"நான் காதலிச்ச வரைக்கும் அந்த பொண்ணு நல்ல பொண்ணுதான் சார்"

#####
8
ஹீரோவுக்கும் தயாரிப்பாளருக்கும் என்ன வித்தியாசம்?

ஏழையா இருந்த ஹீரோ க்ளைமாக்ஸில் கோடீஸ்வரனாகி விடுவான், கோடீஸ்வரனா இருந்த தயாரிப்பாளர், க்ளைமாக்ஸி’ல ஏழையாயிடுவாரு…!

#####
9
"தினமும் காலையும், மாலையும் வந்து ஸ்டேசன்ல கையெழுத்து போட்டுட்டு போகணும் தெரியுதா?"

"சரிங்கய்யா, அப்புறம் வழக்கம் போலத் திருடப் போகலாமில்லே ஐயா?"

####
10
உங்க மனைவிய அடிக்கடி சினிமா பார்க்க தியேட்டருக்குக் கூட்டிக்கிட்டுப் போறீங்களே…..? அவங்க மேல அவ்வளவு பிரியமா .. .. ?

அட நீங்க ஒண்ணு .. .. ஒரு மூணு மணி நேரம் அவ பேசாம இருப்பாள்ல
####

இந்த 10 ல் எது மிகவும் நன்றாக உள்ளது?

அன்புடன்.
வாத்தியார்
=====================================================
வாழ்க வளமுடன்!
 வளர்க நலமுடன்!

23.1.15

எதைத் தினமும் சிந்தனை செய்ய வேண்டும்?


எதைத் தினமும் சிந்தனை செய்ய வேண்டும்?

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை திரு. டி.எம்.எஸ் அவர்கள் பாடிய முருகப் பெருமானின் பாடல் ஒன்றின் வரிகள்  நிறைக்கின்றன. கேட்டு
மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
---------------------------------
சிந்தனை செய் மனமே, தினமே
சிந்தனை செய் மனமே!

சிந்தனை செய் மனமே, செய்தால்
தீவினை அகன்றிடுமே!
சிவகாமி மகனை, சண்முகனை
சிந்தனை செய் மனமே!

செந்தமிழ் தரும் ஞான தேசிகனை,
செந்தில் கந்தனை, வானவர் காவலனை, குகனை
சிந்தனை செய் மனமே!

சந்ததம் மூவாசை சகதியில் உழன்றனை!
சமரச சன்மார்க்க நெறிதனை மறந்தனை!
அந்தகன் வரும்போது அவனியில் யார் துணை?
ஆதலினால் இன்றே...

அருமறை பரவிய
சரவண பவ குகனை
சிந்தனை செய் மனமே!

படம்: அம்பிகாபதி
பாடலைப் பாடியவர்: டி எம் எஸ்
இசை: ஜி ராமநாதன் 
பாடலாக்கம்: KD சந்தானம்




Our sincere thanks to the person who uploaded this song in the net

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
==================================================

22.1.15

Short story: சிறுகதை: சாமியார் சம்சாரியான கதை!

அருள்மிகு நெல்லையப்பர் கோயில்

சிறுகதை: சாமியார் சம்சாரியான கதை!

அப்பச்சி சொன்ன கதைகள் - பகுதி 11
                   
(எங்கள் அப்பச்சி சொன்ன கதைகள் வரிசையில் இது பதினோராவது
கதை. கதையின் கரு மட்டும் அவருடையது. அதை விரிவு படுத்தி
எனது நடையில் நான் எழுதியுள்ளேன்)

சாமியார் சம்சாரியான கதை’ என்று தலைப்பில் கொடுத்துள்ளேன்.
ஆனால் எங்கள் அப்பச்சி இந்தக் கதையை சாமியார் பூனை வளர்த்த
கதை’ என்றுதான் சொல்வார்கள். அவர்கள் என்னிடம் சொல்லிய
கதை அல்ல இது. மற்றவர்களிடம் சொல்லியபோது, அருகில்
இருந்து கேட்கும் வாய்ப்பைப் பெற்றேன்
--------------------------------------------------
ஆவுடையப்பன். நமது நாயகரின் பெயர் அதுதான். வயது 51. கதை
நடந்த காலம் 1921ம் ஆண்டு. நெல்லையப்பரும், காந்திமதி அம்மனும்
ஆட்சி செய்யும் திருநெல்வேலியை சொந்த ஊராகக் கொண்டவர்
அவர்.

அந்தக் காலத்தில் திருநெல்வேலி அமைதியாகவும், அற்புதமாகவும்
இருக்கும். பரபரப்பு இல்லாமல் இருக்கும். ஒருமுறை சென்றவர்களுக்கு
அந்த ஊரைவிட்டுத் திரும்பிவர மனமிருக்காது. எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று வயல் வெளிகளும், வாகை மரங்களும் சூழ்ந்த ஊர் அது.பல இடங்களில் வீடுகளுக்குப் பின்னால் தண்ணீர் ஓட்டத்துடன் கூடிய வாய்க்கால்கள் இருக்கும். வீட்டுக்காரர்களே படிகளைக் கட்டி வைத்திருப்பார்கள். வீட்டுப் பெண்கள் எல்லாம் பாத்திரங்களைக் கழுவிச் சுத்தம் செய்வதற்கும், துணிகளைத் துவைப்பதற்கும், ஏன் குளிப்பதற்கும்
அந்த வாய்க்கால் நீரைத்தான் பயன் படுத்துவார்கள். நீர் ஓட்டத்துடன் இருந்ததால் சுத்தமாக இருக்கும்.

ஆவுடையப்பரின் வீடு, தெற்குப் புதுத் தெருவில் இருந்தது. வாகையடி முக்கில் இருந்து கிழக்கு திசையில் இருக்கும். பூர்வீக வீடு. பெரிய வீடு.
திருநெல்வேலிக்கு அருகில் மேலப்பாளையம் கிராமத்தில், தாமிரபரணி ஆற்றையொட்டிய பகுதிகளில் அவருக்கு நிறைய விளை நிலங்கள்
இருந்தன.ஆறு கிலோமீட்டர் தொலைவுதான். அவருடைய தந்தையார் காலத்தில் அவர்களே விவசாயத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆவுடையயப்பர் தலையெடுத்ததும் நிலைங்களைப் பிரித்து குத்தகைக்குக் கொடுத்துவிட்டார். அவருக்கு விவசாயத்தில் ஆர்வம் இல்லாமல் போனதுதான் அதற்குக் காரணம். அந்தக் காலத்தில் மனிதர்கள்
தர்மத்திற்குக் கட்டுப் பட்டு நடந்ததால், குத்தகைக்காரர்களே நெல்,
பணம் என்று குத்தகைத் தொகையை ஒழுங்காகக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். வாழ்க்கை பணக்கஷ்டமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தது.

கர்மகாரகன் எல்லாக் கதவுகளையுமே திறந்து விட மாட்டான்.
ஒரு கதவைத் திறந்து விட்டால், இன்னொரு கதவை அடைத்து வைத்திருப்பான். அந்த நியதியின்படி, ஆவுடையப்பருக்கு பணம்
வரும் வழியைத் திறந்துவிட்டவன், நிம்மதி மற்றும் மகிழ்ச்சி வரும்
வழியை அடைத்து வைத்துவிட்டான்.

மனிதர் அனுதினமும் நிம்மதியில்லாமல் தவிர்த்தார். அதற்குக்
காரணம் அவருக்கு இரண்டு மனைவிகள் 12 பிள்ளைகள். விடிந்தால், எழுந்திரித்தால் சண்டை சச்சரவுகள். அவருக்கு அக்கா, தங்கை என்று
இரண்டு சகோதரிகளே மனைவிகளாக வாழ்க்கைப்பட்டிருந்தார்கள்.

அவருக்கு முதல் திருமணமாகி, ஐந்தாண்டுகளுக்குக் குழந்தையே பிறக்காததினால், அவருடைய மாமனாரே உவந்து தனது அடுத்த
மகளையும் அவருக்குக் திருமணம் செய்து வைத்தார். இருதாரச்
சட்டம் எல்லாம் இல்லாத காலம் அது!

அதில் வேடிக்கை என்னவென்றால், இறையருளால் அவருக்கு
இரண்டாவது திருமணம் நடந்ததற்கு மறு ஆண்டே, இரண்டு
மனைவிகளும் உண்டாகி இருந்தார்கள். இருவருக்குமே அடுதடுத்து
ஆண் குழந்தைகளைப் பெற்றுக் கொடுத்தார்கள். அந்த சமயத்தில் ஆவுடையப்பர் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

தாமிரபரணி ஆற்றின் நடுவில் இருக்கும் குறுக்குத்துறை முருகனின்
அருள் என்பார் அதை!

அடுத்தடுத்து பத்து ஆண்டுகளுக்குள் அவருக்குப் பன்னிரெண்டு
பிள்ளைகள் பிறந்துவிட்டன.

மனைவிகள் இருவரும் அவருக்குப் போட்டி போட்டுக் கொண்டு
சமையல் செய்து பறிமாறினார்கள். இருவருமே கிராமத்துப் பெண்க
ளாதலால் அற்புதமாக சமையல் செய்வார்கள். நெல்லைப் பிரதேசத்தின் பாரம்பரிய உணவுகளான கூட்டாஞ்சோறு, உளுந்தஞ்சோறு, வடைகறி தோசை, உளுந்தங்களி என்று அசத்திவிடுவார்கள்.

ஆரம்பத்தில் ஒற்றுமையாக இருந்த சகோதரிகளுக்குள், பின்னால் பிள்ளைகளை வைத்தும், பணத்தை வைத்தும் பல பிரச்சினைகள் வந்துவிட்டன!

உங்களுடைய நாத்தச் சண்டைகளை என்னிடம் கொண்டு வராதீர்கள்
என்று சொல்லித் தப்பித்து வந்தார். இருவரையும் தனித்தனியாக
வெவ்வேறு வீடுகளில் வைக்கும்படி உறவினர்கள் அவருக்கு
யோசனை சொன்னார்கள். அது நிறைவேறவில்லை.சின்னவளை
அனுப்பச் சொல்லிப் பெரியவளும், அந்தக் களவாணியையே
அனுப்புங்கள் என்று சின்னவளும் சொல்லி, வீட்டைவிட்டுப் போக மறுத்துவிட்டார்கள்.

வீட்டின் மேல் பகுதியில் ஒரு பெரிய அறை காலியாக இருந்தது. பகல் நேரங்களில் அவருடைய நண்பர்கள் வந்து விடுவார்கள். தினமும்
சீட்டாட்டம் நடக்கும். பாயிண்டிற்கு காலணா என்று நிர்ணயித்து
ஆடுவார்கள். யாருக்கும் அதில் பெரிய நஷ்டமோ அல்லது லாபமோ இருக்காது. வந்து சென்றவர்கள் எல்லோருமே செல்வந்தர் வீட்டு
வாரிசுகள் என்பதால், அதையே மும்மரமாகச் செய்து கொண்டிருந்தார்கள்.

தாமிரபரணி ஆற்றைப்போல காலம் சுறுசுறுப்பாக ஓடியதில் 20
ஆண்டுகள் போனதே தெரியவில்லை. ஆவுடையப்பருக்கும் வயது
ஐம்பதைக் கடந்தது. அவருடைய மகன்களில் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டிய நேரம் வந்தது. அத்துடன் அவருடைய வீட்டில் சண்டை வடிவில் பூகம்பமும் வந்தது.

அவருடைய தங்கை மகள் அலம்பிவிட்ட மொசைக் தரையைப் போல
பளிச் சென்று அழகாக இருப்பாள். அத்துடன் அவளுக்கு பத்து ஏக்கர்
பூமியும், 100 பவுன் நகையும் சீர்வரிசையாக வர இருந்தது. யாருக்குத்தான் அதை இழக்க மனம் வரும்? அதை வைத்து வீட்டில் ஆவுடையப்பரின் மனைவிகள் இருவருக்கும் பெரிய சக்களத்தி சண்டை. கடைசியில் கைகலப்பில் முடிந்தது. ஆவுடையப்பர்தான் இருவரையும் பிரித்து
விட்டார். பெரியவளைக் கிராமத்திற்குப் போய் 10 நாட்கள் இருக்கும்படி கேட்டுக் கொண்டார். அதற்கு அவள் செவிசாய்க்கவில்லை. தங்கை
மகளை யாருக்குக் கட்டினாலும் பொல்லாப்பு என்பதனால், தன்
தங்கையிடம், “உன் மகளை வெளியே கட்டிக்கொடுத்துவிடு” என்று
அவர் சொல்லி விட்டார்.

அது வீட்டினருக்குத் தெரிந்தபோது, வீட்டில் பெரிய கலவரமாகி
விட்டது. ஆளாளுக்கு அவருடன் சண்டைக்கு வந்து விட்டார்கள்.
வாய் வார்த்தைகள் முற்றிய நிலையில், அவருடைய மூத்த மகன்
யாரும் எதிர்பார்க்காத செயலைச் செய்துவிட்டான். செய்யக்கூடாத செயலைச் செய்துவிட்டான். ஆமாம், தன் தந்தையை ஓங்கி அறைந்த
தோடு, பிடித்துக் கீழேயும் தள்ளி விட்டு விட்டான். அவன் ஆத்திரம்
அவனுக்கு. ஆத்திரத்தில் புத்தி வேலை செய்யாது என்பது உண்மை யாகிவிட்டது.

கீழே விழுந்த அவருக்கு இடுப்பில் அடிபட்டுவிட்டது. அத்துடன் பலத்த அதிர்ச்சிக்கும் ஆளாகிவிட்டார். எழுந்து நிற்கவே சில மணித்துளிகள் ஆகிவிட்டது. அதற்குள் வீட்டினர் போட்ட காட்டுக் கூச்சலில் தெருவே, அவர்கள் வீட்டின் முன்பாகக் கூடி விட்டது. எதிர் வீட்டுக்காரர் வந்து அனைவரையும் சமாதானம் செய்தார்.

அப்போதுதான், அந்தக் கணத்தில்தான் அவுடையா பிள்ளை முடிவு
செய்தார். தனக்கு மதிப்பில்லாத அந்த வீட்டில் இனிமேல் இருக்கக்
கூடாது என்று முடிவு செய்ததோடு, அதைச் செயல் படுத்தவும்
செய்தார்.

என்ன செய்தார்?

தனக்கு மதிப்பில்லாத வீட்டில் இனிமேல் இருக்கக்கூடாது என்று
முடிவு செய்த ஆவுடையா பிள்ளை, அதைச் செயல் படுத்தும் முகமாகக் களத்தில் இறங்கினார். தன் நில புலன்களை இரண்டு பங்காக்கித் தன் மனைவிகள் இருவர் பெயருக்கும் எழுதி அதைப் பதிவு செய்து
அவர்களிடம் கொடுத்ததோடு, தன் பங்கிற்காக வங்கியில் இருந்த
மூன்று லட்ச ரூபாய்கள் பணத்தைத் தன் பாதுகாப்பிற்காக வைத்துக் கொண்டார். மூன்று லட்ச ரூபாய்கள் என்பது அந்தக் காலத்தில் மிகப்
பெரிய தொகை.

பத்து நாட்கள் மெளனம் காத்துப் பொறுமையாக இருந்தவர், ஒரு நாள்
கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு, வீட்டைவிட்டுக் கிளம்பி விட்டார்.
தூர தேசங்களுக்குச் செல்வதாகவும், திரும்பி வரமாட்டேன் - என்னைத்
தேட வேண்டாம் என்றும் எழுதி வைத்தவர், தான் வளர்ந்து ஆளாகிய நெல்லையை விட்டுக் கிளம்பி விட்டார்.

சாமியாராகி ஏதாவது மடத்தில் சேர்ந்து தங்கிவிடலாம் என்று நினைத்தார். ராமகிருஷ்ணா மடத்தில் சேர்ந்து விடலாம் என்று முதலில் நினைத்தார்.
அங்கெல்லாம் சுகமாக இருக்க முடியாது. உழைக்க வேண்டும்.
இறைவனைப் பற்றி முழுமையாக அறிந்து கொண்டு மக்களிடம் இறையுணர்வை முழுமையாக்க வேண்டும். மக்களுக்குச் சேவை
செய்ய வேண்டும். அங்கேயுள்ள சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட
வேண்டும். யோசிக்க யோசிக்க மலைப்பாக இருந்தது. ஆகவே அந்த நினைப்பைக் கைவிட்டார்.

திருச்செந்தூர் சென்று சண்முகநாதனை வழிபட்டவர், அங்கேயே ஒரு விடுதியில் தங்கி விடலாம் என்று நினைத்தார். ஆனால் நெல்லை மாவட்டத்துக்காரர்கள் அடிக்கடி வந்துபோகும் இடமாதலால், தன்னை அறிந்தவர்கள் மூலம், தான் அங்கே இருப்பதை அறிந்து தன் வீட்டினர், தன்னைத் தேடிவரும் அபாயம் உண்டு என்று நினைத்தவர், திருச்செந்தூரைவிட்டுக் கிளம்பிவிட்டார்.

கிளம்புமுன், காவி வேஷ்டியும், காவித்துண்டும் வாங்கி முருகன் சந்நிதானத்திலேயே வைத்து, வணங்கி, உடுத்திக்கொண்டார். சுமார்
ஒரு மாத காலம் சவரம் செய்யப்படாத முகத்துடன் பார்ப்பதற்கு அசல் சாமியாரைப் போலவே தோற்றமளித்தார். ஆண்டவன் கட்டளை திரைப்படத்தில்’ ஆறு மனமே ஆறு, அந்த ஆண்டவன் கட்டளை ஆறு’
என்று பாடிக்கொண்டு, திருச்செந்தூர் கோயிலின் முன்பாக நிற்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் போலவே அவர் தோற்றமளித்தார்.

தஞ்சை மாவட்டத்தில் நிறையக் கிராமங்களும், கோவில்களும்
இருப்பதால் அங்கே ஒரு ஊருக்குச் சென்று தங்கிவிடலாம் என்று
முடிவு செய்து, கடைசியில் நாகபட்டிணம் அருகில் உள்ள சிக்கல்
என்ற ஊருக்கு வந்து சேர்ந்தார். முருகப் பெருமான் சிங்காரவேலனாக உறைந்திருக்கும் ஊர் அது. சுற்றுப்புறம் பச்சைப் பசேல் என்று
பசுமையாக இருந்தது. அங்கேயே தங்கிவிட முடிவு செய்தார்.

சூரனை அழிக்க புறப்பட்ட முருகனுக்கு சிவனும், பார்வதியும் ஆயுதம் கொடுத்த ஸ்தலம் அது. பார்வதி தேவி முருகனுக்கு வேல் கொடுத்தார். தாயிடம் இருந்து வேல் பெற்ற முருகன் சிங்கார வேலன் என்ற ழைக்கப்பட்டார். அந்த நிகழ்வு நடந்த இடம் சிக்கல் என்ற தலமாகும்.
சிறப்பு மிகுந்த அந்த ஸ்தலம் பழைய தஞ்சை மாவட்டத்தில்,
இப்போதைய நாகை மாவட்டத்தில், நாகை - திருவாரூர் வழித்
தடத்தில் நாகையில் இருந்து சுமார்  8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

உண்மையில் இத்தலம் நவநீதிஸ்வரரை  மூலவராகக்  கொண்ட சிவாலயமாகும். இத்தலத்தில் வசிஷ்ட முனிவர், காமதேனுவின் வெண்ணையால் சிவலிங்கம் அமைத்து வழிபட்டார். பிறகு அந்த
லிங்கத்தை எடுக்க முயன்றார். ஆனால் அந்த லிங்கம் எடுக்க
முடியாதபடி  சிக்கிக் கொண்டது. அதன் காரணமாக இந்த ஊருக்கு
சிக்கல் என்ற பெயர் ஏற்பட்டதாம்.

தன் சிக்கல்களை மறப்பதற்கு சிக்கல்தான் சரியான ஊர் என்று முடிவு செய்தவர், கோயில் தர்மகர்த்தாவைப் பார்த்துப் பேசித் தன்னை
அறிமுகம் செய்து கொண்டதோடு, தான் அந்த ஊரிலேயே தங்க இருப்பதாகவும், தனக்கு ஒரு சிறு வீடு ஒன்றைப் பிடித்துத் தருமாறு
கேட்டுக் கொண்டார்.

சற்று யோசனையில் ஆழ்ந்த தர்மகர்த்தா, கடையில் தீர்க்கமாகப்
பதில் சொன்னார்: “இது சின்ன கிராமம். இங்கே உள்ள மக்கள் கட்டுப் பெட்டியானவர்கள், சாமியார்களுக்கும், பிரம்மச்சாரிகளுக்கும் வீட்டை வாடகைக்குத் தரமாட்டார்கள். வேண்டுமென்றால் ஒன்று செய்யுங்கள். கிராமத்திற்கு ஒதுக்குப்புறத்தில் பத்து ஏக்கர் பூமி ஒன்று வீட்டுடன்
விலைக்கு வருகிறது. உங்களிடம்தான் பணம் இருக்கிறது என்கிறீர்களே, அதை சல்லிசாக வாங்கித் தருகிறேன். நீங்கள் அங்கேயே தங்கிக் கொள்ளலாம்” என்றார்.

அப்போதெல்லாம் ஏக்கர் ஐநூறு ரூபாயிற்கே கிடைக்கும். பவுன்
பதிமூன்று ரூபாய்க்கு விற்ற காலம் அது. ஆவுடையாபிள்ளை சரி
என்று தன் சம்மதத்தைச் சொல்ல, எல்லாம் மளமளவென்று நடந்தன.
ஓட்டு வீடுதான். பின்பக்கம் கிணற்றுடன் செளகரியமாக இருந்தது.
அத்துடன் பின்பக்கம் தென்னை மரங்களுடன் கூடிய நெல்வயல்.

தர்மகர்த்தா, நாகபட்டிணத்திற்கு ஆள் அனுப்பி, அவருக்கு வேண்டிய
கயிற்றுக் கட்டில், பாய், தலையணை, உட்காரும் மர நாற்காலி,
அவசியமான தட்டுமுட்டுச் சாமான்கள் அனைத்தையும் வாங்கிக்
கொடுத்து உதவினார்.

மூன்று நாட்கள் தர்மகர்த்தாவின் வீட்டில் தங்கியிருந்தவர், நான்காம்
நாள் தன் சொந்த வீட்டில் பால் காய்ச்சிக் குடியேறினார்.

சில மாதங்களுக்குள்ளாகவே தனக்கு ஏற்படப் போகின்ற சிக்கல் என்னவென்று தெரியாமலேயே அங்கே குடியேறினார்.

என்ன சிக்கல்?

தொடர்ந்து படியுங்கள்!

                          ******************************

சிக்கல்களும், சந்தோஷங்களும் சொல்லிவிட்டு வருவதில்லை.
நாம் செய்யும் செயல்களின் விளைவுகளே அவைகள். திணை
விதைத்தால் திணை விளையும், விணை விதைத்தால் விணைதான் விளையும்.

ஆவுடையா பிள்ளைக்குப் புது வீட்டில் தனிமைதான் பெரிய குறையாக இருந்தது. அதனால் பாதி நேரத்தைக் கோயில் வளாகத்திலேயே கழித்தார்.
சின்ன ஊர் என்பதால் கோயிலுக்கு வருபவர்கள் எல்லாம் அவருக்குப் பழக்கமாகி விட்டார்கள்.

அந்தக் காலத்தில் எல்லாக் கோயில்களிலும் மடப்பள்ளி இருந்தது.
இருந்தது மட்டுமல்ல, அதில் காலையில், பிரசாதம் செய்து
இறைவனுக்குப் படைப்பதோடு, கூடுதலாகச் செய்து கேட்கும்
பக்தர்களுக்கு, விலைக்கும் கொடுப்பார்கள். பெரும்பாலும்
சம்பாசாதம், வெண்பொங்கல் அல்லது புளியோதரை போன்ற
சாதங்கள்தான் பிரசாதமாக இருக்கும்.

அவற்றுள் சம்பா சாதம் சூப்பராக இருக்கும். சிவ ஆலயங்களில்
சிவனுக்கு உகந்த பிரசாதமாக, சம்பா சாதத்தைத்தான் வடித்து
நிவேதனமாகப் படைப்பார்கள். அரிசியைக் களைந்து, தண்ணீர்,
உப்புச் சேர்த்து உதிரியாக வடித்து, பெரிய இருப்புச் சட்டியில்,
நெய் விட்டு, சூடானதும் மிளகுத் தூள், சீரகத் தூள்,  கறிவேப்பிலை
போட்டுத் தாளித்து, அதைச் சாதத்தில் கொட்டிக் கிளறிவிடுவார்கள்.
அதுதான் சுவையான சம்பாசாதப் பிரசாதம் ஆகும். சிதம்பரம்
நடராஜர் கோயிலின் நித்தியப் பிரசாதம் அது!. ஒரு நபர் சாப்பிடக்கூடிய சாதத்தின் அன்றைய விலை ஒரு அணா. ஆவுடையா பிள்ளைக்குக்
காலைப் பலகாரம் கோயில் பிரசாதத்தில் முடிந்து விடும். மதிய
உணவை உள்ளூரில் இருந்த சைவப் பிள்ளைமார் வீட்டுக்காரர்கள்
செய்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.  இட்லி , சாம்பாருடன்
அவர்களே இரவு உணவையும் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

தலைச் சுமையாகக் கூடையில் பாத்திரம் வைத்துப் பால் கொண்டு
வந்து விற்கும்  பெண்மணியிடம் இருந்து ஒரு உழக்குப் பாலை வாங்கி வைத்துக் கொள்வார். வேண்டும்போது, காப்பி அல்லது டீ போட்டுக்
குடித்துக் கொள்வார். விறகு அடுப்பு. அடுப்பைப் பற்றவைத்து காப்பி
அல்லது டீ போடுவதும், பாத்திரங்களைக் கொண்டுபோய்க் கிணற்றடியில் போட்டுக் கழுவதும்தான் சற்றுக் கடுமையான வேலையாக அவருக்குத் தோன்றியது. டீக்கடை, பெட்டிக்கடை எல்லாம் அந்தக் கிராமத்தில்
இல்லாத காலம் அது!

அப்படியே பத்து நாள் பொழுது ஓடிவிட்டிருந்தது. அதற்குப் பிறகுதான் பிரச்சினை ஆரம்பித்தது.

ஆள் நடமாட்டம் இருப்பது தெரிந்து, பக்கத்து வயல்களில் இருந்து
எலிகள் வர ஆரம்பித்துவிட்டன. வந்த எலிகள் சும்மா இருக்காமல்
வீட்டில் இருந்த கெளபீணம், வேஷ்டி, துண்டுகள் எல்லாவற்றையும்
கடித்துக் குதறிவிட்டுப் போயிருந்தன.

எலிகள் மட்டும் அல்ல, இரண்டொரு சமயம் பாம்பும் வர ஆரம்பித்து
விட்டது. ஆவுடையா பிள்ளைக்குப் பழக்கமில்லாத சமாச்சாரங்கள்
அவைகள்.

கோவில் தர்மகர்த்தாவிடம் அதைக் குறையாகச் சொல்லி, என்ன
செய்யலாம் என்று கேட்டபோது, அதற்கு அவர் ஒரு தீர்வைச்
சொன்னார். ஒரு பூனையை வாங்கிக் கொடுத்து, அதை வைத்துக்
கொள்ளச் சொன்னார்.

வந்த பூனைக்கு நேரம் சரியில்லை போலிருக்கிறது. வந்த இரண்டாவது
நாளே வீட்டிற்குப் பின்பக்கம் இருந்த தோட்டத்தில், நாகப் பாம்புடன்
அது போராடிய போது, நாகப்பாம்பு அதைப் போட்டுத் தள்ளிவிட்டுப் போய்விட்டது.

மீண்டும் ஒரு பூனையைப் பிடித்துக் கொடுத்த தர்மகர்த்தா, கூடவே
நாய் ஒன்றையும் வாங்கிக் கொடுத்தார். ஆனால் அவை இரண்டும்
அதிசயமாக ஒன்றுக் கொன்று ஒற்றுமையாக இருந்தன. எலிக்காகப்
 பூனை. பாம்பிற்காக நாய்.

அவைகளுக்கு உணவு, பால் ஆகியவற்றிற்கும் அவர் ஏற்பாடு
செய்தார். இப்போது சற்றுப் பாதுகாப்பாக இருந்தது.

இப்போது ஒரு உழக்குக்கிற்குப் பதிலாக 4 உழக்குப் பால் வாங்க
வேண்டியதாக இருந்தது. காசைப் பற்றிய கவலை இல்லாததால்
வாங்கத் துவங்கினார். அவை இரண்டையும் பராமரிப்பதிலும் சற்றுப்
பொழுது கழிந்தது.

ஆனால் பால் ஊற்றும் பால்கார அம்மணி சில நாட்கள் வராமல் விட்டு, அவரைத் திண்டாட வைத்தாள். அதற்கும் ஒரு தீர்வைச் சொல்லி,
தர்மகர்த்தா குறைந்த விலையில் ஒரு பசுமாட்டைக் கன்றுடன்
வாங்கிக் கொடுத்தார். அவற்றிற்குத் தீவனப் பயிர்களான வைக்கோல், சோளத்தட்டை, புண்ணாக்கு, கழனித் தண்ணீர் என்று வேலைப் பளு
சற்று அதிகரித்தது. அத்துடன்  மாட்டைக் கழுவிக் குளிப்பாட்டுவது,
மாட்டுக் கொட்டகையில் சாணத்தை அள்ளித் தரையைச் சுத்தம்
செய்வது போன்ற வேலைகளும் ஏற்பட்டன.

அதற்கு என்னடா செய்யலாம்? என்று அவர் நொந்துபோனபோது,
தர்மகர்த்தா அதற்கும் ஒரு தீர்வைச் சொன்னார்.

பக்கத்து கிராமத்தில் இருந்து தெரிந்த பெண் ஒருத்தியைக் கூட்டிக்
கொண்டு வந்து காட்டி, ”இன்று ஒரு நாள் வேலை செய்யச் சொல்லிப் பாருங்கள், உங்களுக்குப்பிடித்தால், இந்தப் பெண்ணை வேலைக்கு
வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்” என்றார்.

வந்த பெண் அம்சமாக இருந்தாள். வயது 28 இருக்கும். சற்று
விளக்கமாகச்  சொல்ல வேண்டும் என்றால், கல்யாணப் பரிசு படத்தில்
வரும் நடிகை சரோஜாதேவியைப் போன்று இருந்தாள். கறுப்பு
நிறம்தான் ஆனால் ஈர்க்கும் விதமாக வசீகரமாக இருந்தாள்.
அத்துடன் சுறுசுறுப்பாகவும் இருந்தாள். ஒரே ஒரு சோகம். அவள்
விதவைப் பெண். திருமணமான மறு ஆண்டிலேயே தன்னுடைய
கணவனைப் பறிகொடுத்தவள். குழந்தை இல்லை. தன் அன்னையோடு தங்கியிருக்கிறாள். காலையில் 7 மணிக்கு வந்தால் மாலை 6 மணி
வரைக்கும் வேலை பார்க்கிறேன் என்றாள்.அவளுடைய கிராமம்
பக்கத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. கூலி வேலைக்
குத்தான் சென்று கொண்டிருக்கிறாளாம்.

பெயரைக் கேட்டார். கண்ணம்மா’ என்று சொன்னாள்.

இனி கூலி வேலைக்கெல்லாம் நீ செல்ல வேண்டாம். இங்கே வந்து வேலைகளைப் பார். வேண்டிய சம்பளத்தை நான் தருகிறேன் என்று ஆவுடையா பிள்ளை சொல்லிவிட்டார்.

காலையில் காப்பி போட்டுக் கொடுப்பதில் துவங்கி, மூன்று
வேளைக்குமான சமையலையும் அவளே செய்து கொடுத்தாள்.
வீட்டையும், வீட்டிலுள்ள மற்ற ஜீவன்களையும் அவளே பார்த்துக் கொள்ளத் துவங்கினாள்.

ஒரு மாதம் சென்றது. கிட்டத்தட்ட ஒரு மனைவி செய்வதைப் போன்று
எல்லா வேலைகளையும் அவள் ஈடுபாட்டுடன் செய்ததால், ஆவுடையா பிள்ளைக்கு அவளை மிகவும் பிடித்துப் போய்விட்டது.

அத்துடன், எல்லாம் அப்படி சுமூகமாகவே நடந்து கொண்டிருந்தால்
கதையில் என்ன சுவாரசியம் இருக்கப்போகிறது?

விதி எப்போதும் எதிரணியில்தான் விளையாடும். விதி தன்
ஆட்டத்தைத் துவங்கியது. ஆவுடையா பிள்ளையைக் கண்ணம்மாவிடம் நெருக்கிக் கொண்டு சென்றது.

கண்ணம்மா நடுக்கட்டில் வேலை செய்யும்போது, கட்டிலில் அமர்ந்தவாறு அவளுடைய அழகை ரசிக்கத் துவங்கினார்.

ஒரு கவிஞன் கவிதையொன்றில் நச்சென்று குறிப்பிட்டதைப் போல நடக்கத்துவங்கியது.

”அவள்
குனிந்து, நிமிர்ந்து வீட்டைக்
கூட்டினாள்
வீடு சுத்தமானது
மனம் குப்பையானது!”

ஆவுடையா பிள்ளையின் மனம் குப்பையாகிப் போனது. ரசனை உணர்வு
காம உணர்வாக மாறியது.

ஒரு அடை மழை நாளில், வேலைக்கு வந்த அவள் திரும்பிப் போக முடியாமல், அன்று இரவு ஆவுடையா பிள்ளையின் வீட்டில் தங்கும்படியானது. தங்கியவளைத் தாரமாக்கித் தன் இச்சைகளைத்
தீர்த்துக் கொண்டுவிட்டார் ஆவுடையா பிள்ளை. கண்ணம்மாவும், ஏழு ஆண்டுகளாக உள்ளே உறங்கிக் கொண்டிருந்த விரகதாபத்திற்கு
தன்னைப் பலி கொடுத்து விட்டாள்.

அந்தப் பாவ உணர்வு தொடர இருவரும் அந்நியோன்யமானார்கள்.
அந்த அந்நியோன்யம் மூன்றே மாதங்களில் கண்ணம்மா கர்ப்பமடைந்
ததில் வந்து திகைப்புடன் நின்றது.

அதற்குப் பிறகு?

அதற்குப் பிறகு நடந்ததெல்லாம் முக்கியமில்லை. விஷயம் ஊர்
முழுக்கத் தெரிய, பஞ்சாயத்தை வைத்துக் கண்ணம்மாவை,
ஆவுடையா பிள்ளைக்கே திருமணம் செய்து வைத்துவிட்டார்கள்.

ஆவுடையா பிள்ளையாவின் சந்நியாசம் அதிரடியாக முடிவிற்கு
வந்தது. அவர் மீண்டும் சம்சாரியானார்.

எல்லோரும் சாமியாராக, துறவியாக  முடியுமா? அதற்குக்
கொடுப்பினை வேண்டும்!

துறவு என்றால் எல்லாவற்றையும் துறக்க வேண்டும். முதலில்
ஆசைகளைத் துறக்க வேண்டும். மனச் சலனங்களைத் துறக்க
வேண்டும். மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை அறவே
கூடாது. ஆவுடைய பிள்ளை துறவறம் பூண நினைத்தவருக்குப்
பணம் எதற்கு? ஊரை விட்டுக் கிளம்பியவர் பெரும்தொகையை வைப்புநிதியாக உடன் கொண்டு வந்தது முதல் தவறு. மடங்களில்
சேராமல் வீட்டைப் பிடித்துத் தங்கியது இரண்டாவது தவறு. எலிக்குப்
பூனை, பாம்பிற்கு நாய், பிறகு பாலுக்காக பசுமாடு, பிறகு அவற்றைக்
கவனிக்க வேலைக்காரப் பெண் என்று அடுக்கடுக்காகத் தவறான செய்கைகளைச் செய்தது, தொடர்ந்து மீளமுடியாத நிலைக்குப்
போன தவறுகளாகும். அதற்கு ஈடாகத்தான் துறவறத்தையே அவர் பலிகொடுக்க நேர்ந்தது.

என்ன இன்னொரு பெண்ணும் இங்கே அவர் வாழ்க்கையில்
குறுக்கிடாமல் இருக்க வேண்டும். சிக்கல் சிங்கார வேலன்தான்
அதற்கு அருள் புரிய வேண்டும்!

(ஒரு தவறுக்கு, அந்தத் தவறை மறைக்க முயன்று அடுத்தடுத்து
செய்யும் தவறுகளுக்காக சாமியார் பூனை வளர்த்த கதை என்று இந்தக் கதையை என் தந்தையார் சொல்வார்கள். என்னிடம் சொன்னதில்லை. அடுத்தவர்களிடம் சொல்லும்போது கேட்டு என் மனதில் நிறுத்தியதாகும். அதை இன்று உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்)

சென்ற மாதம், மாத இதழ் ஒன்றில் வெளிவந்து பலரது பாராட்டையும்
பெற்ற கதை இது!

எப்படியுள்ளது கதை? ஒரு வரி பின்னூட்டத்தில் சொல்லுங்கள்

அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

21.1.15

Quiz.no.75 Answer: உழுக வேண்டிய மாடு, அதைத்தான் செய்ய வேண்டும்.


Quiz.no.75 Answer: உழுக வேண்டிய மாடு, அதைத்தான் செய்ய வேண்டும்.

உங்களுக்குத் தெரியும். மாடுகளில் பால்கொடுக்கும் பசு மாடு,
உழவிற்குப் பயன் படும் மாடு, வண்டி இழுக்கும் காளை மாடு,
கோயில் காளை என்று வகைப் படுத்தி வைத்திருக்கின்றனர்.
கோயில் மாடு, அதாவது கோயிலுக்கு நேர்ந்துவிடப்பட்ட மாடு சுகஜீவனத்திற்கு உதாரணமாகத் திகழும்.

அதுபோல மாடு (செல்வம்)கள் உள்ள மனிதர்களும் சுகஜீவனமாக
வேலை எதுவும் செய்யாமல் வீட்டிலேயே சுகமாக இருக்கலாம்.
மற்றவர்கள் எல்லாம் உழைத்துத்தான் ஜீவனம் செய்ய வேண்டும்!

செல்வம் உள்ளவர்களும், குன்றித் தின்றால் குன்றும் கரையும்
என்று, வேலைக்குச் சென்று பொருள் ஈட்டுவார்கள். அதில் ஒரு
மனத் திருப்தி இருக்கும். அது ஜாதக அமைப்பு. செல்வமும்
இருக்கும். வேலைக்கும் செல்வார்கள்.

சிலர் செல்வம் இல்லாமலேயே, மற்றவர்களின் உழைப்பில்
சுகமாக இருப்பார்கள். அதுவும் ஜாதக அமைப்புத்தான்!

புதிர் எண் 75 ற்கான விடை

21.1.2015
--------------------------------------
நேற்றையப் பதிவில், அப்பன் ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து
4 கேள்விகளைக் கேட்டிருந்தேன்.

கேட்கப்பெற்றிருந்த கேள்விகள்:

ஜாதகர் ஜீவனத்திற்கு என்ன செய்ய வேண்டும்?

1. சுகஜீவனமாக வீட்டிலேயே இருந்து விடலாமா?
2. சுயதொழில் செய்யலாமா
3. அல்லது வியாபாரம் செய்யலாமா?
4. அல்லது வேலைக்குப் போனால் நல்லதா?

சரியான பதில்:

வேலைக்குச் செல்லும் ஜாதகம்!!

ஜாதகப்படி என்ன காரணம்?

வாருங்கள், பார்ப்போம்!

1. ஜாதகர் தனுசு லக்கினக்காரர். லக்கினாதிபதி குரு பகவான்
திரிகோணம் பெற்றிருக்கிறார்.
2. ஒன்பதாம் வீட்டுக்காரர் சூரியனும் உச்சம் பெற்று , அதாவது பாக்கியாதிபதியும் உச்சம் பெற்று லக்கினாதிபதியுடன் கூட்டாக
உள்ளார்.
3. ஜாதகர் ஓரளவிற்கு செல்வம் உள்ள வீட்டில் எல்லா பாக்கியங்
களுடனும் பிறந்தார்.
4. நான்காம் வீட்டில் ஆறாம் வீட்டுக்காரன் சுக்கிரன் உச்சம் 
பெற்றுள்ளான். அத்துடன் சனீஷ்வரனின் நேரடிப்பார்வையும் 
அந்த வீட்டின் மேல்.இருவரும் சேர்ந்து சுகஜீவனத்தைதைக் கொடுக்கமாட்டார்கள்
5. வியாபாரம் செய்யலாம் என்றால் 12ம் வீட்டுக்காரன் செவ்வாய் லாபஸ்தனத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு விட்டான். 
லாப ஸ்தானம்  கெட்டிருக்கிறது. அத்துடன் அந்த வீட்டுக்காரன் 
சுக்கிரன் அந்த வீட்டிற்கு ஆறில். அவனும் சாதகமாக இல்லை. 
ஆகவே வியாபரம் செய்தால் சிறப்படையக்கூடிய அமைப்பு 
இல்லை.
6. ஜாதகர் வேலைக்குச் செல்ல வேண்டியவர். அதில்தான் அவர் மேன்மையடைய முடியும். 10ல் கர்மகாரகன் சனி. அத்துடன் அந்த வீட்டுக்காரன் புதனின் பார்வையும் அந்த வீட்டின் மேல் உள்ளது.
சனி மகா திசையின் துவக்கத்திலேயே அவருக்கு நல்ல வேலை
கிடைத்தது. அதில் சேர்ந்து விட்டார்.அதிலேயே தொடர்ந்து
மேன்மையுடன் இருந்தார்.

இரண்டாம் வீட்டுக்காரன் சனியும், 11ம் வீட்டுக்காரன் சுக்கிரனும்
பரஸ்பர பார்வையில் உள்ளார்கள்.பத்தாம் வீடு பாபகர்த்தாரி
யோகத்தில் உள்ளது. ஒரு பக்கம் கேது, மறுபக்கம் செவ்வாய்.

வியாபாரம் செய்திருந்தால், பெரும் நஷ்டத்தை அடைந்து விட்டு, வேலைக்குச் சென்றிருக்க வேண்டும். ஆனால் ஐந்தாம் வீட்டில்
இருக்கும் குருவும் சூரியனும் அவரைக் காப்பாற்றிவிட்டார்கள்.

அலசல் போதுமா?
-----------------------------------------
போட்டியில் 30 பேர்கள் கலந்து கொண்டார்கள். கலந்து
கொண்டவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். அவர்களில்
9 பேர்கள் மட்டுமே சரியான பதிலை அல்லது ஒட்டிய பதிலை எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்
மற்றும் வாழ்த்துக்கள்!

இரண்டு அன்பர்கள் கிணற்றைத் தாண்டி கைப்பிடி சுவர் வரை
வந்து விட்டார்கள். ஆனால் தாண்டி வெளியே வரவில்லை.
அவர்கள் இருவருடைய பதில்களையும் கீழே கொடுத்துள்ளேன்.

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1
/////Blogger selvaspk said...
This is above average Jadagam. Born with silver spoon. He dont need to study, but he will as Budhan, Sukran on 4th in good shape.
1. Ucha Bagyathipathi veetil lagnathipathi, Sukran and Budhan Ucham. 
2. 8'm athipathi 6'il (V.RajaYoam)
3. Tholil, kalvi - Sani 10'il__ Velai undu
4. Punyathipathiy, 12'm athipathi 11'il irunthu 5'i paarkiraar.
1. சுகஜீவனமாக வீட்டிலேயே இருந்து விடலாமா?
- Irunthu irukalaam, but he didnt
2. சுயதொழில் செய்யலாமா
- Vidyatharan, Tholil karahan and Sani seeing each other with Ucha Sukran - he should be employed in Media field,he is singer or cine artist.
3. அல்லது வியாபாரம் செய்யலாமா?
- He make money out of his entertaining talent, yes he is selling his stuff.
4. அல்லது வேலைக்குப் போனால் நல்லதா?
- He will be outstanding on whatever he takes.
Tuesday, January 20, 2015 6:56:00 AM/////
---------------------------------------------
2
/////Blogger Chandrasekharan said...
மதிபிற்குரிய ஐயா வணக்கம்,
1.) 7-ம் அதிபதி புதன் நீசபங்கம் & சனி பார்வை. அதனால் வியபாரம் இல்லை.
2.) 6-ல் உச்சம்பெற்ற சந்திரன்,
6-ம் அதிபதி சுக்ரன் உச்சம், 12-ம் அதிபதி செவ்வாய் பார்வை 6-ம் இடம் அதனால் வேலைக்கு செல்வதுதான் சிறப்பானது.
3.) மருத்துவ துறையில் ஒரு உயர்ந்த பணியை செய்திருப்பார்.
நன்றி.
Tuesday, January 20, 2015 9:46:00 AM/////
------------------------------------------
3
/////Blogger trmprakaash@gmail.com said...
Ayya,
1. Ivar Sugajeevanamaaga veetileya irukka mudiyadhu. Kaaranam 2m adhipathy sani vakram matrum vakram petra saniyin paarvai 
subagrahangalaana budhan matrum sukkiran mel. Matrum 4m veedu Paapakarthari yogathil. 4m veettil 4-m veettirkku paadhagaathibathiyaana 
budhan matrum 4-rkku 8m adhibadhiyaana sukkiran ucham. 
2. Ivar suyathozhil matrum vyabaaram seyya iyalaadhu. Kaaranam 10il vakram petra sani. Vyabarakaaragaraana budhan 10rkku 7il neesabangam 
adaindhirundhaalum 6m adhibadhiyudan koottu. Iruvarum paapakarthari yogathil.
3. Idhu velaikku sellum jaadhagam. Matravarin keezh panipuriyum amaippu. Ivar Teacher-aaga irundhirukka vaaippu irukkiradhu. Kaarnam vakku 
sthaanam balamaaga ulladhu. Vaaku Staanathibathi Budhan Neesabangathil. Papakarthaari yogathil irundhaalum 2-irkku 3-il vetri sthaanathil. 
Thanks.
Mu.Prakaash
Tuesday, January 20, 2015 10:41:00 AM////
--------------------------------------------------
4
////Blogger Govindasamy said...
10க்கு உரிய புதன் 4ல் கேந்திரத்தில் 11ம் அதிபதி சுக்கிரனுடன்.
2க்கு உரிய சனி 10ம் இடத்தில்.
சூரியன் உச்சம்.
இவருக்கு அரசு உத்தியோகம் நிச்சயம். மிகவும் அதிகாரத்தில் இருப்பார் என்பது உறுதி.
குரு திசையில் சனி புத்தியில் அல்லது புதன் புத்தியில் வேலை நிச்சயம்.
கும்ப ராகு. ராகு திசை நடக்கும் போதே செல்வம் குவிய ஆரம்பித்துவிடும். மிகப் பெரிய செல்வச் செழிப்புடன் இருப்பார்.
Tuesday, January 20, 2015 10:58:00 AM////
-----------------------------------------
5
////Blogger bg said...
Dear Sir,
4 th house 
Neechapanga Yogam
Happy comfortable life – 
Suga Jeevanam.
10 th house
Thozhil Karagan Saturn is in Papakarthari yoga and also 10 th house in Papakarthari yoga ( surrounded by MA & KE on either side) 
In 11 th house, owner of 12 th house Mars is sitting which is not advisible to do any business. Profit from the business is difficult.
SUN – exaltation 5 th house
MOON – exaltation 6 th house
VENUS – exaltation 4 th hose
Rajayoga formed in the 5 th house.
Better suggestion to go for any job ( less risky business)
Best Reg
Balamurugan
Tuesday, January 20, 2015 12:43:00 PM////
-------------------------------------------
6
/////Blogger Spalaniappan Palaniappan said...
அய்யா இனிய வணக்கம் .
புதிர் போட்டி எண் : 75 க்கான பதில் .
1 . லக்னாதிபதி குரு பஞ்சம ஸ்தானத்தில் பாக்கியாதிபதி சூரியனுடன் உச்ச பலம் பெற்று இருக்கிறார் . இது தன ஜாதக அமைப்பு.
2. லக்னத்தில் மாந்தி . பிடிவாத குணம் கொண்டவர்
3.தனாதிபதி / சகாய ஸ்தானதிபதி சனி லக்னத்திற்கு வலுத்த கேந்திரத்தில்( 10 ) இருந்து புதன் & சுக்கிரன் சமசப்தம பார்வை பெறுகிறார்.
4. கல்விகாரகன் புதன் நீச பங்க ராஜ யோகம் . 7/10 ம் அதிபதியான புதன் லக்னத்திற்கு 4இல் இருப்பது கேந்திராதித்ய தோஷம் .
5. 6/11ம் அதிபதி சுக்கிரன் உச்சம் . மனோகாரகன் சந்திரன் உச்சம்.
6 . 8ம் அதிபதி சந்திரன் 6இல் விபரீத ராஜ யோகம் பெறுகிறார் .
7. தைரிய & கீர்த்தி ஸ்தானத்தில் ராகு . 3/9 இல் ராகு/கேது இருப்பது பித்ருதோஷம்.
8. சூரியன் & குரு, செவ்வாய் சம சப்தம பார்வை பலம். பரஸ்பர நட்பு கிரக பார்வை. வேலைக்கு செல்வது உசிதமானது
லக்னாதிபதி குரு +சூரியன் பலம் பெற்று மேஷ செவ்வாய் வீட்டில் இருப்பதாலும் , ஜீவனகாரகன் சனி, நட்பு வீடான புதன் வீட்டில் இருப்பதாலும்,
தொழில் ஸ்தான அதிபதி புதன் கேந்திரத்தில் நீச பங்க ராஜயோகம் பெற்று உச்ச சுக்கிரனுடன் கேந்திரத்தில் 4 இல் இருப்பதாலும் சுக்கிரன்
,சூரியன், குருவின் சுப பார்வை லாப ஸ்தானத்திற்கு கிடைப்பதாலும் சொந்த ஊரை விட்டு வெளிநாட்டில் வேலை செய்து பொருள் சம்பாதிப்பார் 
.( சுக்கிரன் ஜலராசியில் இருப்பதால் வெளிநாட்டு வாசம் உண்டு ) சுக்கிரன் - செவ்வாய் 8/6 அமைப்பில் இருப்பதால் குடும்பத்தை விட்டு விலகி இருந்து
வேலை செய்யும் அமைப்பு.
வியாபாரம் செய்ய ஏதுவான அமைப்பு குறைவு .
தனஸ்தான அதிபதியான சனி கேது செவ்வாய்க்கு மத்தியில் அமைந்து பாவகர்தாரி யோகம் பெறுவதாலும் விரயாதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் இருப்பதாலும் வித்தை காரகன் கேந்திராதித்ய தோஷம். லக்னத்தில் மாந்தி. பிடிவாதம், ஆணவம் , அகங்காரம் கொண்டவர் ஆதலால் வியாபார செய்ய அனுகூலமான அமைப்பு இல்லை .
என்றும் அன்புடன்
சோம பழனியப்பன்
மஸ்கட் ( காரைக்குடி- இந்தியா )
Tuesday, January 20, 2015 6:12:00 PM//////
--------------------------------------------
7
////Blogger Palani Shanmugam said...
மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
தனுசு லக்ன ஜாதகர். லக்னாதிபதி குரு, 4ம் வீட்டுக்கும் அதிபதியாகி,
5ம் இடத்தில் உச்சம் பெற்ற பாக்கிய ஸ்தான அதிபதியான சூரியனுடன்
சேர்ந்து அமர்ந்து லக்னத்தை தன் பார்வையில் வைத்திருக்கிறார். அதனால் ஜாதகர் அதிர்ஷ்டம் மிக்கவர்.
சந்திரன் 6ல் உச்சமாகி, 6ம் அதிபதியான சுக்கிரன் சுக ஸ்தானத்தில் உச்சம் பெற்று இருப்பதாலும், அவருடன் பத்தாம் வீட்டு அதிபதியான நீச்ச
பங்கம் பெற்ற புதன் சேர்ந்து இருப்பதாலும் அவர்கள் இருவரையும் 2ம் அதிபதி சனி 10ல் அமர்ந்து தன் பார்வையில் வைத்திருபதாலும், ஜாதகர்
ஜீவனத்திற்காக கண்டிப்பாக வேலைக்கு போவார். அதனால் வசதியான மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
Tuesday, January 20, 2015 6:34:00 PM/////
----------------------------------------------
8
////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
வணக்கம் வாத்தியாரே!!!
Quiz 75ற்கான பதில்
1. சுக ஜீவனம் உண்டு.
2. சுய தொழில் இல்லை.
3. வியாபாரத்தில் லாபம் இல்லை.
4. வேலைக்கே செல்லலாம்.
1. 7ம் அதிபதி புதன் 4ல் நீச பங்கம், அத்துடன் சுக்கிரன் 4ல் உச்சம், சுக ஜீவனம் உண்டு.
2. 10ம் இடத்தில் சனி, மேலும் 10ம் இடம் பாவ கர்த்தாரி யோகத்தில், சுய தொழில் இல்லை.
3. வியாபாரம் செய்ய புதன் பலம் பெற வேண்டும். 7ம் இடத்தையும், 7க்கு அதிபதி புதனையும் சனி பார்கிறார். வியாபாரத்தில் லாபம் இல்லை.
4. வேலையை குறிக்கும் 9ற்கு அதிபதி சூரியன் 5ல் உச்சம், மேலும் 9ம் இடத்தை குரு பார்க்கிறார். 5ம் இடம் சுப கர்தாரி யோகத்தில். 8ற்கு
உடைய சந்திரன் இங்கே வளர்பிறை சுபராக 6ல் மறைந்ததால் வேலை செய்யும் இடத்தில போட்டி பொறாமைகள் இருந்தாலும், அதை முறியடிக்கும்
வல்லமை அப்பனுக்கு உண்டு.
அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி
Tuesday, January 20, 2015 7:07:00 PM//////
--------------------------------------------
இடைச் சேர்க்கை (விடுபட்டது) இதைச் சுட்டிக்காட்டிய நமது வகுப்பறை மூத்த மாணவர் கே.எம்.ஆர்.கே அவர்களுக்கு நன்றி!
9.
Blogger Prasanna said...
Namasthey sir,
Answer for the quiz number 75.
1. He can’t be a sukha Jeevi , means he can’t remain idle at home .
2. No Independent business or self-employment is possible.
3. He can’t be a Business man.
4. He must be an employee to earn his livelihood. 

Reasons and explanations :
FEW THINGS TO DECIDE WHETHER INDEPENDENT BUSINESS OR JOB:
• Planets from the seventh to twelfth houses support the tenth house in the birth-chart. Similarly, planets in the tenth to the third house make the Ascendant strong. The opportunities for a free business may be high when the ascendant or the tenth house is strong. To start a career as a business man, one should have a strong determination, far-thinking and intelligence of a businessman and the capability to take risks. If there are five or more than five planets in these houses, it can increase the potentials of independent business.
In this given chart 7th and 10th lord mercury is in Neecha position in Meenam. Mars being the 12th lord is placed in 11th house in vakra state. 9th house, Bhagya sthanam is corrupted due to the presence of kethu there. 10th house is occupied by Shani the 2nd & 3rd lord and is receiving the ASPECT OF EXALTED 6TH LORD SUKRA and the NEECHA BUDHA. So his 10th house is not that strong to promote individual business. If we see planets from 10th to 3rd, we are seeing 3rd lord Shani placed in10th and 12th lord Mars is placed in 11th house and aspecting the 2nd house, the house of income and 3rd house is occupied by Rahu .So the above mentioned conditions do not suit well with this native's chart to be a business man.
Reasons for being an employee:
If Saturn becomes strong in the birth-chart and effects the Sun, Moon and the 10th house then the native may choose independent business as a career. However, if Saturn is weak and effected by Sun, Moon, 10th house or its lord, then the native may choose job as his occupation. Saturn is considered a kaarak of job. Here Saturn occupied 10th house so he is fit to be a person to do a job. Exalted Surya in 5th house in Bharani star denotes he can be well placed with a Govt Job. Mars being the 5th lord, i.e. the Jeevana sthanadhipathi is placed in the 11th house and is aspected by Guru, i.e.the 4th lord as well as lagna lord and receiving the aspect of 9th lord Surya that too in exaltation which denotes he must be an employee only.
Saturn in the 10th house makes its native hard working. With this the native may achieve success in tourism, iron, wooden furniture, cement and chemical industry.
The 2nd house of horoscope gives an idea about the financial position and the success of an individual. Profit from corporation business, trading are also calculated from this house. Here 2nd house is receiving the aspect of 12th lord Mars so the native can’t enjoy more wealth. He will suffer loses .So he can’t own any business in his name at all.
• The 4th house of the horoscope determines paternal wealth. The 5th house gives quick wealth to its native. The native may get money from lottery as this house usually has dignified planet. Position of partnership in business and wealth from marital relationship that can be determined from the 7th house. Here 7th & 10th lord mercury is neecham so he can’t get money through business or through his spouse after marriage and so can’t lead a life of a sukha Jeevi( enjoying the wealth of in- laws). Moreover the 12th lord is sitting in the 11th house which hints this facts .
4th house has both Neecha panga Raja yog and Ucha bhanga Neecha yogam. Hence he can’t live as Suka Jeevi.He has to work hard for his livelihood.
Conclusion:
if there is any weak planet in the 2nd, 5th, 9th,10th or 11th house of a horoscope, then the native should resort to employment only. However business may be a good choice for a native if the above mentioned houses have strong planets.
Thanks and regards,
Prasanna.
Dubai.
http://devarshivedicastrology.freeforums.org.
Tuesday, January 20, 2015 11:36:00 PM
-==========================================
1
//////Blogger hamaragana said...
அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
புதிர் எண் .75
1.தனுசு லக்னம் ..லக்னாதிபதி திரிகோணத்தில் 5ல் உடன் உச்சம் பெற்ற சூரியன் ..9ம் வீட்டுக்காரன் .பேஷ்..!! பேஷ்..!!
2..4ல் சுக்கிரன் உச்சம் உடன் 10ம் வீட்டுக்காரன் புதன் இருவரின் பார்வை 10ம் வீட்டை .அருமை ..!!
3..ரிஷபத்தில் சந்திர மூலதிரிகோணம் .சபாஷ் ..!!! 6ம் வீட்டில் இருந்து 12ம் வீட்டை பார்ப்பது ஒரு வகையில் பணம் விரையம் ஆவது தடுக்க படும். .
4..10ல் மகாராஜன் சனி .....இரண்டு பக்கமும் வில்லன்களான கேது செவ்வாய் .ஐயோ ..அய்ய...ய்... யோ ..!!
5..சுய தொழில் செய்வதற்கு வாய்ப்பில்லை ...
6..உச்சம் பெற்ற சுக்கிரனும் புதனும் சேர்ந்து 10 மிடத்தை பார்ப்பதால் கலை துறை சினிமாவில் பிரகாசிக்க வாய்ப்புக்கள் அரசியலில் இருந்து
சாதிக்கலாம் .!!!...
7.லக்னத்தில் மாந்தி இருப்பதால் பிடிவாத குணம் எதையும் சாதிக்க வேண்டும் தனித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்ற குணம் .
8..2ம் வீட்டுக்காரன் சனி 10ல் அமர்ந்து சுபர் பார்வை .நல்ல மனைவி .குடும்பம் அமையும் .குழைந்தைகள் உண்டு .செல்வங்களும் சேரும் ...
Tuesday, January 20, 2015 4:40:00 PM////

கலைத் துறை என்றால், அதில் சுய தொழிலா அல்லது வேலையா? அதை நீங்கள் குறிப்பிட வேண்டாமா?
-------------------------------------
2
//////Blogger Kirupanandan A said...
இந்த ஜாதகத்தில் 3 கிரகங்கள் உச்சம். 10ல் கர்மகாரகன் சனி இருக்கிறார். அவரை 10ம் அதிபதி புதன் உச்ச சுக்கிரனுடன் பார்வையிடுகிறார்.
லக்கினாதிபதி குரு உச்ச சூரியனுடன் 5ல் இருக்கிறார். இப்படிப்பட்ட சிறப்பம்சங்கள் இருக்கும் போது இந்த ஜாதகர் சுக ஜீவனமாக வீட்டில்
இருக்க முடியாது. இந்த கிரக நிலைகள் இருக்க விடாது. செய்யும் தொழிலில் மேன் மேலும் முன்னேறக்கூடிய அமைப்பு. தனக்குக் கீழ் பலர் வேலை
செய்யக்கூடிய சுய தொழில் அமைப்பு காணப்படுகிறது
Tuesday, January 20, 2015 9:15:00 PM//////

செய்யும் தொழில் என்றால் சுய தொழிலா அல்லது வேலையா? அதை நீங்கள் குறிப்பிட வேண்டாமா?
========================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

20.1.15

Astrology: quiz number.75 வேலையா, வியாபாரமா அல்லது வீட்டில் சுகஜீவனமா?


Astrology: quiz number.75  வேலையா, வியாபாரமா அல்லது வீட்டில் சுகஜீவனமா?

Quiz No. 75

புதிர் போட்டி எண்.75 விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று
யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

20.1.2015

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு மூன்று கேள்விகள். அந்தக் கேள்விகளுக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் ஒரு அப்பனின் ஜாதகம்.


அம்மணிக்கு எதிர்ப்பதம் அப்பன் என்று எழுத வேண்டும். வேறு வார்த்தையைச் சொன்னால் அது மறைமுகமாக வேறு ஒரு
அர்த்தத்தையும் கொடுக்கும். ஆகவே வம்பெதற்கு என்று அப்பன்
என்றே எழுதியுள்ளேன்.

அப்பனின் 2, 4 மற்றும் 10ம் வீடுகளை அலசி உங்கள் பதிலை எழுதுங்கள்

கேள்விகள்:

ஜாதகர் ஜீவனத்திற்கு என்ன செய்ய வேண்டும்?

1. சுகஜீவனமாக வீட்டிலேயே இருந்து விடலாமா?
2. சுயதொழில் செய்யலாமா
3. அல்லது வியாபாரம் செய்யலாமா?
4. அல்லது வேலைக்குப் போனால் நல்லதா?

அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!
-------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

16.1.15

சிங்கார மயிலாட என்ன உண்டு?


சிங்கார மயிலாட என்ன உண்டு? 

 பக்தி மலர் 

 இன்றைய பக்தி மலரை, சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகப்பெருமானின் பாடல் வரிகள் நிறைக்கின்றன.
 கேட்டு மகிழுங்கள்!

அன்புடன் 
வாத்தியார்
----------------------------------------
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் -  முருகா 
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும் 
திருச் செந்தூரிலே வேலாடும் 
திருப்புகழ் பாடியே கடலாடும் 
(திருப்பரங்குன்றத்தில்) 

 பழநியிலே இருக்கும் கந்தப் பழம் - நீ 
பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம் 
பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம் - 
பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம் 
(திருப்பரங்குன்றத்தில்) 

சென்னையிலும் கந்த கோட்டம் உண்டு - உன் 
சிங்கார மயிலாடத் தோட்டம் உண்டு 
உனக்கான மனக்கோயில் கொஞ்சமில்லை - அங்கு 
உருவாகும் அன்புக்கோர் பஞ்சமில்லை! 
(திருப்பரங்குன்றத்தில்) 

 பாடலாக்கம்: பூவை செங்குட்டுவன் 
இசை: குன்னக்குடி வைத்தியநாதன் 
பாடியவர்கள்: சூலமங்கலம் ராஜலட்சுமி-பி.சுசீலா 
திரைப்படம்: கந்தன் கருணை



Our sincere thanks to the person who uploaded this video in the net

வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!

15.1.15

வாத்தியாரின் வாழ்த்துக்கள்!

வாத்தியாரின் வாழ்த்துக்கள்!

வகுப்பறைக் கண்மணிகள், வந்து போகும் நண்பர்கள், சக பதிவர்கள் அனைவருக்கும் வாத்தியாரின் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

14.1.15

கேட்கப்படாத பிரார்த்தனைகள் என்று எதுவுமே இல்லை!


கேட்கப்படாத பிரார்த்தனைகள் என்று எதுவுமே இல்லை!

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும், சுவாமி விவேகானந்தருக்கும் நடைபெற்ற உரையாடல்...

உங்கள் பல சந்தேகங்களுக்கு இதில் தீர்வு ஒளிந்திருக்கக்கூடும்.
படியுங்கள்… மீண்டும் மீண்டும் படியுங்கள்… பல வரிகள் மிக மிக
ஆழமான பரந்த பொருளை கொண்டவை.

சுவாமி விவேகானந்தர் : "நாம் ஏன் எப்போதும் மகிழ்ச்சியில்லாமல் இருக்கிறோம்?"

இராமகிருஷ்ண பரமஹம்சர் : "துன்பத்தையே நினைத்து கற்பனை செய்துகொண்டிருப்பது உன் வழக்கமாகிவிட்டது. அதனால் உன்னால் மகிழ்ச்சியுடன் இருக்க முடியவில்லை."

சுவாமி விவேகானந்தர் :" நல்லவர்களுக்கு மட்டும் எப்போதும்
துன்பம் ஏன்?"

இராமகிருஷ்ண பரமஹம்சர் : "உரசாமல் வைரத்தை பட்டை தீட்ட
முடியாது. நெருப்பிலிடாமல் தங்கத்தை தூய்மைப்படுத்த முடியாது. நல்லவர்கள் சோதனைக்குள்ளாவார்கள். ஆனால் அவர்கள் பாதிப்புக்குள்ளாகமாட்டார்கள். அந்த சோதனையின் மூலம் அவர்கள் மேன்மையடைவார்களே தவிர கீழே செல்ல மாட்டார்கள்.
(By experience their life becomes better, not bitter!)"

சுவாமி விவேகானந்தர் : "அப்போது, சோதனைகள் நன்மைக்கு
என்று சொல்கிறீர்களா?"

இராமகிருஷ்ண பரமஹம்சர் : "ஆம். அனுபவத்தை விட பெரிய
ஆசிரியர் வேறு யாருமில்லை. அது முதலில் சோதனையை
கொடுத்துவிட்டு பிறகு தான் பாடத்தை போதிக்கும்."

சுவாமி விவேகானந்தர் : "கணக்கற்ற பிரச்னைகளில் மூழ்கித்
தவிப்பதால் நாங்கள் எங்கே போகிறோம் தெரியவில்லை"….

இராமகிருஷ்ண பரமஹம்சர் : "வெளியே பார்த்தால் எங்கே
போகிறோம் என்று உனக்கு புரியாது. உனக்குள்ளே பார். புரியும்.
கண்களால் பார்க்கத் தான் முடியும். ஆனால் உள்ளத்தால் தான்
வழியை காட்ட முடியும். (Eyes provide sight. Heart provides the way.)"

சுவாமி விவேகானந்தர் : "சரியான பாதையில் போகும்போதும்
தோல்வி அடிக்கடி ஏற்படுகிறதே?"

இராமகிருஷ்ண பரமஹம்சர் : "செல்லும் பாதையில் வெற்றி என்பது
பிறரால் அளக்கப்படுவது. ஆனால் அதில் கிடைக்கும் திருப்தி என்பது உன்னால் உன்னால் மட்டுமே உணரப்படுவது."

சுவாமி விவேகானந்தர் : "கடினமான சூழ்நிலைகளில் எப்படி நீங்கள்
உற்சாகம் குறையாமல் உத்வேகத்துடன் இருக்கிறீர்கள்?"

இராமகிருஷ்ண பரமஹம்சர் : "எப்பொழுதும், இனி எப்படி போகப்
போகிறோம் என்று அச்சப்படுவதைவிட இதுவரை நீ எப்படி
வந்திருக்கிறாய், எதையெல்லாம் கடந்து வந்திருக்கிறாய் என்று பார்.
உனக்கு கிடைத்த வரங்களை எண்ணிக்கொள். இழந்தவைகளை
அல்ல".

சுவாமி விவேகானந்தர் : "இந்த மக்களை நினைத்து நீங்கள் வியக்கும் விஷயம் எது?"

இராமகிருஷ்ண பரமஹம்சர் : "துன்பப்படும்போது “எனக்கு ஏன்?
என்னை மட்டும் ஏன்??” என்று கேட்பவர்கள் இன்பத்தின் போது
அந்தக் கேள்வியை கேட்பதில்லை. அதை நினைத்து தான்
வியக்கிறேன்”.

சுவாமி விவேகானந்தர் : ”வாழ்க்கையில் மிகச் சிறந்தவைகளை நான் அடைவது எப்படி?”

இராமகிருஷ்ண பரமஹம்சர் : ”உன் கடந்த காலத்தை வருத்தமின்றி ஏற்றுக்கொள். நிகழ்காலத்தை நம்பிக்கையோடு கைக்கொள்.
எதிர்காலத்தை அச்சமின்றி எதிர்நோக்கு. இதுவே வாழ்க்கையில் சிறந்தவைகளை பெற கடைபிடிக்கவேண்டிய நியதி.”

சுவாமி விவேகானந்தர் :” கடைசியாக ஒரே ஒரு கேள்வி. சில
நேரங்களில் என்னுடைய பிரார்த்தனைகளை இறைவன்
கேட்கவில்லையோ என்று தோன்றுகிறது.”

இராமகிருஷ்ண பரமஹம்சர் : ”கேட்கப்படாத பிரார்த்தனைகள்
என்று எதுவுமே இல்லை. (There are no unanswered prayers!)
அச்சத்தை விடு.நம்பிக்கை கொள். வாழ்க்கை என்பது தீர்வு காணப்படவேண்டிய ஒரு புதிர் தானே தவிர பிரச்னை அல்ல.
எப்படி வாழவேண்டும் என்று மட்டும் நாம் அறிந்து கொண்டால்
வாழ்க்கை மிக மிக இனிமையாக மாறிவிடும். என்னை நம்பு.”

இணையத்தில் படித்தது. நன்றாக இருந்ததால் உங்களுக்கு அறியத் தந்திருக்கிறேன்

அன்புடன்,
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

13.1.15

Quiz.no.74 Answer: சொர்க்கமே மறந்து விட்டேன் உன்னால் இன்று!

Quiz.no.74 Answer: சொர்க்கமே மறந்து விட்டேன் உன்னால் இன்று!

புதிர் எண் 74 ற்கான விடை

13.1.2015
--------------------------------------
நேற்றையப் பதிவில், அம்மணி ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து 3 கேள்விகளைக் கேட்டிருந்தேன்.

கேட்கப்பெற்றிருந்த கேள்விகள்:

1. ஜாதகிக்குத் திருமணம் ஆயிற்றா? அல்லது ஆகவில்லையா?
2. ஒரு வேளை ஆகியிருந்தால் எந்த வயதில் திருமணம் ஆகியிருக்கலாம்? ஆகவில்லை என்றால் இனிமேல் ஆகுமா? வாய்ப்பு உள்ளதா?
3. திருமணம் ஆனாலும் அவருக்கு குழந்தை பாக்கியம் உள்ளதா அல்லது இல்லையா?

சரியான பதில்கள்:

1. ஜாதகிக்குத் அவருடைய இளம் வயதிலேயே திருமணம் நடந்தது.
2. அதாவது 23வது வயதில் திருமணம் நடந்தது.
3. ஜாதகிக்கு அவருடைய 25வது வயதில் குழந்தை பிறந்தது.

ஜாதகப்படி என்ன காரணம்?


வாருங்கள், பார்ப்போம்!

1. ஜாதகி சிம்ம லக்கினக்காரர். லக்கினாதிபதி சூரியன் கேந்திரத்தில் உள்ளார். நல்ல அமைப்பு.
2. ஏழாம் வீட்டில் சுபக்கிரகமான சந்திரன். அவர் 12ஆம் வீட்டு அதிபதி என்றாலும் யோககாரகன் செவ்வாயுடன் சேர்ந்ததால் நன்மை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
3. ஏழாம் வீட்டுக்காரன் சனீஷ்வரன் முக்கிய கேந்திரத்தில். அத்துடன் அவர் தன்னுடிய வீட்டிற்கு 4ல் நல்ல நிலைமையில் உள்ளார்.
4. மேலும் அவர் மீது குரு பகவானின் பரிபூரண பார்வை. நேரடிப் பார்வை.
5. களத்திரகாரகன் சுக்கிரன் திரிகோணம் பெற்றுள்ளார்
6. அத்துடன் லாபாதியான புதனின் கூட்டில் உள்ளார்.
ஆகவே மேற்கூஉரிய காரணங்களால், ஜாதகிக்கு உரிய வயதில் திருமணம் நடைபெற்றது. குரு மகா திசையில் சுக்கிர புத்தி துவங்கியவுடன் திருமணம் (23வது வயதில்) நடைபெற்றது.

அடுத்து குழந்தை பாக்கியத்தைப் பார்ப்போம்:
1. ஐந்தாம் வீட்டு அதிபதி குரு அந்த வீட்டிற்குப் 12ல்
2. லக்கினாதிபதி சூரியனுடன் சேர்க்கை.
3.ஆனால் ஐந்தாம் வீட்டுக்காரரின் மேல் சனீஷ்வரனின் பார்வை. குழந்தைப் பேறு தாமதப்படும் என்பது விதி (Rule)
4. ஐந்தாம் வீட்டில் சுபகிரகமான சுக்கிரனும், லாபாதிபதி புதனும் வலுவாக அமர்ந்துள்ளார்கள்.
5. சந்திர லக்கினத்தில் இருந்து ஐந்தாம் வீட்டின் மேல், அந்த வீட்டுக்காரன் புதனின் பார்வை. அத்துடன் சுபக்கிரகமான சுக்கிரனின் பார்வை
இது நல்ல அமைப்பாகும்
ஜாதகிக்குக் குரு திசை சுக்கிர புத்தி முடியும் தருவாயில் குழந்தை பாக்கியம் கிட்டியது. அவருடைய 25வது வயதில்.

அலசல் போதுமா?
-----------------------------------------
போட்டில் 27 பேர்கள் கலந்து கொண்டார்கள். கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். அவர்களில் 18 பேர்கள் மட்டுமே சரியான
பதிலை அல்லது ஒட்டிய பதிலை எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்! அந்த  18 பேர்களில் ஒருவரைத் தவிர மற்றவர்கள், திருமணமாகியிருக்கும், குழந்தை பிறந்திருக்கும் என்று எழுதியுள்ளார்களே தவிர கால நேரத்தைச் சரியாகக் குறிப்பிடாமல் லேசாகக் குழப்பியிருக்கிறார்கள்

லால்குடி திரு.KMRK மட்டும் பதிலை சிறப்பாக எழுதியுள்ளார்.
அவருக்கு எனது விஷேசமான பாராட்டுக்கள். அவரின் பதில்களுக்கு
நட்சத்திரக்குறியிடு (ஸ்டார்) போட்டிருக்கிறேன்.

மீதமுள்ளவர்கள் இரண்டில் ஒன்றிற்குத்தான் சரியான பதிலை எழுதியுள்ளார்கள். அல்லது இரண்டிற்கும் சரியான பதிலை எழுதவில்லை. அவர்களை விட்டுவிட்டேன். அவர்கள் அடுத்த முறை சரியான பதிலை எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1
//////Blogger selvaspk said...
1. ஜாதகிக்குத் திருமணம் ஆயிற்றா? அல்லது ஆகவில்லையா?
Married, Lately. 
Delay due to
1. Simma lagnam 
2. Sevvai dosam (some say Simma lagnam doesnt have)
3. Mandi in 2nd house of family
4. Saturn special view on 7th house.
Married due to
1. Bagyathipathi in 7th, looking Lagnam and 2nd house 
2. Guru, lagnathipathi, sukran havent gone bad. 
They will give married life, but it will not sustain.
2. ஒரு வேளை ஆகியிருந்தால் எந்த வயதில் திருமணம் ஆகியிருக்கலாம்? ஆகவில்லை என்றால் இனிமேல் ஆகுமா? வாய்ப்பு உள்ளதா?
She may married around 33
3. திருமணம் ஆனாலும் அவருக்கு குழந்தை பாக்கியம் உள்ளதா அல்லது இல்லையா?
She will have kids
2nd house lord sitting in 5th with Subha graham in subha house. Karahan Guru with Ravi with Saturn conjuction.
-- Though it looked like Marriage denial horoscope (Kethu in 12 with Saturn 12th lord in 7th) but I believe she got late married due to family issues 
and her marriage life will not be happy and may be broke post children birth.
Monday, January 12, 2015 7:11:00 AM//////
-------------------------------------------
2
/////Blogger Ravi Sankar said...
Good Morning Sir, She definitely got married and has the children (might be 2 girls). 4th, 7th and 10th rasis are in mukona parivarthanani. Venus 
also with Lagna.
Monday, January 12, 2015 7:39:00 AM////
------------------------------------------
3
****** /////Blogger kmr.krishnan said...
1. ஏழாம் வீட்டு அதிபதி சனைச்சரனுக்கு குருவின் பார்வை.ஏழாம் வீட்டில் யோககாரகன் செவ்வாய் இருந்து ஏழாம் வீட்டுக்காரனை நான்காம்
பார்வையாகப் பார்ப்பது.எழாம் அதிபதி தன் வீட்டுக்கு நான்காம் இட்ம் ஏறி நட்பு வீட்டில் இருப்பது.லக்னாதிபதி சூரியனும் ஏழாம் அதிபனைப்
பார்ப்பது. இவையெல்லாம் ஜாதகிக்குத் திருமணம் ஆனதைக் குறிக்கிறது.
2. குருதசா சுக்ரபுக்தியில் 1995ல் 24 வயதில் திருமணம் நடந்தது.
3.ஐந்தாம் அதிபதி குரு 4ல் லக்கினாதிபதி சூரியனுடன் கூடியிருப்பதாலும்,
ஐந்தில் 2,11 அதிபதி புதனும்,3,10 அதிபதிசுக்ரனும் கூடி நின்றது,கஜகேசரியோகம், சசிமங்கள யோகம் ஆகியவைஉடைய ஜாதகிக்கு
இரண்டு குழந்தைகள் உண்டு.
Monday, January 12, 2015 7:51:00 AM/////
-----------------------------------------------
4
///////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
வணக்கம் வாத்தியாரே!!!
Quiz 74ற்கான பதில்.
1. ஜாதகிக்கு திருமணம் ஆனது.
2. அவரது 18 வயதில்,
3. குழந்தைகள் உண்டு
1. ஜாதகிக்கு திருமணம் ஆனது.
சிம்ம லக்கினதிற்க்கு யோகாதிபதியான செவ்வாய் 7ல், மேலும் வளர்பிறை சந்திரனுடன் கூட்டு, ஆகவே திருமணம் இனிதே இளம் வயதிலேயே
நடந்தது. 7ம் இடத்தை வக்கிர சனி பார்த்தாலும், வக்கிர சனியின் மீது சூரியனுடன் கூடிய குரு பார்வை, வக்கிர சனியால் திருமணத்தை
தாமதப்படுத்த முடியவில்லை..
2. அவரது 18 வயதில்,
குரு திசையில் வந்த புத புத்தியில் திருமணம் நடந்தது.
3. குழந்தைகள் உண்டு 
5ல் புதன் மற்றும் சுக்கிரன் கூட்டு. மேலும் 4ல் சூரியன், 6ல் ராகு என 5ம் இடம் பாவ கர்த்தாரி யோகத்தில். எனவே தாமதமான குழந்தை பாக்கியம்.
சில வருடம் காக்க வைத்து 23 வயதிற்கு முன்பே குழந்தை பாக்கியத்தை கொடுத்தான்.
அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.
Monday, January 12, 2015 9:44:00 AM/////
--------------------------------------------
5
//////Blogger Sakthivel K said...
வணக்கம் சார்...
1.அம்மனிக்கு திருமணம் நடந்திருக்கும்
குருதிசையில் நடந்திருக்கும்!
2. 7ஆம் இடத்தில் பாக்யாதிபதி செவ்வாய் இருப்பதாலும்.
7ஆம்அதிபதி சனி10ல்.குருபார்வையில்
இருப்பதும்.சுக்கிரன் 5ல் இருப்பதும்
திருமணயோகத்தை தரும் !!!
3. 5ல் புத+சுக் இருப்பதும்
குரு4ல் லக்னாதிபதி சூரியனுடன்
நட்பு வீட்டில் இருப்பதும்.
குழந்தைபாக்கியம் உண்டு,உண்டு...
Monday, January 12, 2015 10:28:00 AM/////
----------------------------------------------
6
/////Blogger sundari said...
சார் வணக்கம்
1.ஜாதகிக்கு திருமணமாயிற்று 7ஆம் அதிபதி சனி அந்த வீட்டிற்கு 4ல் சனி குருவின்,யோககிரகம் செவ்வாயின் பார்வையை பெற்றிருக்கிறார் மேலும்
செவ்வாய் 7ல் இருகிறார். குருதிசையில் திறுமணமாகியிருக்கும் ஜாதகிக்கு ராகு 6ல் இருகிறது அப்புறம் 4ல் சூரியன் பாபகத்தரி குரு 5ந்துக்கு 12ல்
இருந்தாலும் 5ல் புதன் சுக்கிரன் இருக்கிறது அதனால் இவருக்கு பெண்குழந்தையிருக்கும்
Monday, January 12, 2015 12:24:00 PM//////
---------------------------------------------------
7
////Blogger bg said...
அய்யா,
வணக்கம்.
7 இல் சந்ந்திரன் ( விரையாதிபதி) மற்றும் உடன் யோகாதிபதி செவ்வாய்.
7 ஆம் அதிபதி சனி பத்தில் இருந்து 10 ஆம் பார்வையாக தன் வீட்டை பார்க்கிறார்.
காரகன் சுக்கிரன் 5 ஆம் இடத்தில் திரிகோணத்தில் உள்ளார்.
ஆகவே திருமணம் நடைபெறும்.
குரு திசையில் நடைபெறும்.
காதல் திருமணமாகவும் இருக்க வாய்ப்பு உண்டு.
5 ஆம் அதிபதியும் 7 ஆம் அதிபதியும் பரஸ்பர பார்வை பெறுகிறார்கள்.
5 ஆம் அதிபதி மற்றும் குழந்தை பாக்கிய காரகன் குரு லக்கினாதிபதி சூரியன் உடன் கூட்டணி சேர்ந்து கேந்திர இடத்தில் நல்ல வலுவான
நிலையில் உள்ளார்.
ஆகவே குழந்தை பாக்கியம் உண்டு.
இப்படிக்கு
பாலமுருகன்
Monday, January 12, 2015 12:58:00 PM/////
---------------------------------------------
8
/////OpenID guest2015 said...
SATURN ASPECTS MOON- PUNARPHOO DOSHA
LEO ASCENDANT ALSO SUN IN KENDRA TO MOON AND SATURN- SO THIS DOSHA GOT CANCELLED.
LAGNATHIPATHI SUN in KENDRA IN MAR'S HOUSE- friendly sign
JUPITER 5TH AND 8TH LORD IN 4TH HOUSE -KENDRA. also with lagna lord. this will reduce the saturn's 7th aspect evil effects
YOGAKARAKA MARS IN 7TH HOUSE - KENDRA
also with 12th lord Moon
7TH LORD SATURN IN TAURUS (FRIENDLY SIGN) ALSO IN KENDRA
MOON AND JUPITER IN KENRA GIVES GAJAKESARI YOGA
SATURN AND VENUS ARE POSITIONED 6 - 8 FROM 5TH HOUSE SAME WITH MERCURY. WHICH IS NOT GOOD.
Also 3rd lord venus in 5th house.
maandhi in 2nd house.
marriage might have happened in saturn dasha or jupiter dasha guru bhukti.
there will be some delay for child birth till saturn dasha - jupiter bhukti.
thanks 
sree
Monday, January 12, 2015 1:27:00 PM/////
-------------------------------------------------
9
/////Blogger venkatesh r said...
புதிர் எண் : 74 க்கான அலசல் :
சிம்ம லக்கினம், கும்ப ராசி, புனர்பூ தோஷமுள்ள ஜாதகம். அவருக்கு,
1. 26 வயதிற்கு மேல் திருமணம் நடந்திருக்கும்
2. குழந்தை பேற்றில் தாமதம்.
காரணங்கள் :
1. லக்னாதிபதி சூரியன் 4ல் வலுவுடன் உள்ளார்.
2. 7ல் யோகாதிபதி செவ்வாய் மற்றும் சந்திரன் உள்ளனர்.
3. 7க்கு அதிபதி சனி ரிஷபத்தில் லக்கினாதிபதி சூரியன் குரு பார்வையுடன் உள்ளார். யோகாதிபதியின் 4ம் தனிப் பார்வையும் உள்ளது.
4. களத்திரகாரகர் சுக்கிரன் 5மிடமான தனுசில்.
26 வயதில் குரு தசை, சந்திரன் (அ) செவ்வாய் புத்தியில் திருமணம் ஆகியிருக்கும்.
5. 5ம் அதிபதி மற்றும் புத்திர காரகன் 5க்கு 12ல் நான்கில் மறைவு. அவர் மேல் 6ம் அதிபதி வில்லன் சனியின் பார்வை. குரு அம்சத்தில் நீசமாகி
வலுவிழந்துள்ளார்.
6. 5மிடத்தில் இரண்டு சுப கிரகங்கள் இருந்தாலும் அந்த பாவம் பாபகர்த்தாரியின் பிடியில் உள்ளது. காரகன் குருவும் அந்த பிடியிலுள்ளார்.
7. வில்லன் சனியின் 10ம் பார்வை சந்திரன் மேல். புனர்பூ தோசம்.
இவை எல்லாம் சேர்ந்து ஜாதகிக்கு தாம்பத்தியத்திலும், குழந்தை பேற்றிலும் சற்றே தாமதம் ஏற்படித்தியிருக்கும். 30 வயதிற்கு மேல் பெண்
குழந்தைக்கு தாயாகியிருப்பார்.
Monday, January 12, 2015 4:41:00 PM/////
-----------------------------------------------------
10
/////Blogger Regunathan Srinivasan said...
வணக்கம் அய்யா,
ஜாதகிக்கு சிம்ம லக்னம்.7ஆம் அதிபதி சனி 10 ஆம் வீட்டில் உள்ளார்.7 ஆம் அதிபதிக்கு குருவின் 7 ஆம் பார்வை உள்ளது.குரு பார்க்க கோடி
நன்மை என்று சொல்வார்கள்.கண்டிப்பாக திருமணம் நடை பெற்று இருக்கும்.சனி தசை சனி புத்தியில் ஆதாவது 29 வயதிற்கு மேல் நடந்து
இருக்கும்.குழந்தை பேறும் உள்ளது.5 ஆம் அதிபதி குரு லக்னாதிபதியுடன் 4 ஆம் வீட்டில் உள்ளார்.மேலும் 5 ஆம் வீட்டில் இரண்டு சுபர்கள்
உள்ளனர்..அதனால் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் உண்டு.மேலும் 6 ஆம் வீடு ராகு ஜாதகிக்கு நல்ல துணிச்சலை கொடுப்பார்.எதிரிகளை
பந்தாடும் குணத்தை கொடுத்திருப்பர்.
உங்கள் மாணவன்,
S . ரகுநாதன்
Monday, January 12, 2015 5:38:00 PM/////
--------------------------------------------
11
////Blogger Palani Shanmugam said...
மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
1. ஜாதகி சிம்ம லக்னம். லக்னாதிபதி சூரியன் 4ல் குருவுடன் சேர்ந்து 7ம் அதிபதி சனியின் பார்வையைப் பெறுகிறார். ரிஷபத்தில் சனி இருப்பதாலும்,
களத்திரகாரகன் சுக்கிரன் 5ல் இருப்பதாலும் நிச்சயம் திருமணம் நடந்திருக்கும்.
2. ஆனால் சுக்கிரன் பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டி இருக்கிறார். மேலும் செவ்வாய் 7ல் அமர்ந்து 7ம் அதிபதி சனியைப் பார்க்கிறார். இந்த
அமைப்பு திருமணத்தை தாமதப் படுத்தும். அதனால் தாமதமாக ஜாதகியின் 33 வது வயதில் திருமணம் ஆகியிருக்கும்.
3. லக்னாதிபதி சூரியனும், புத்திரகாரகனும், புத்திர ஸ்தான அதிபதியுமான குருவும் சேர்ந்து 4ல் இருப்பதாலும், புத்திர ஸ்தானத்தில்
சுபக்கிரகங்களான சுக்கிரனும், புதனும் சேர்ந்து இருப்பதாலும் நிச்சயம் குழந்தைப் பாக்கியம் உண்டு.
Monday, January 12, 2015 7:10:00 PM/////
------------------------------------------------
12
Blogger lrk said...
ஐயா வணக்கம் .
புதிர்.74க்கு விடை
1) ஜாதகிக்கு உரிய வயதில் 21 to. 26 திருமணம் நடந்தது .
காரணம்
லக்கினாதிபதியும்( சூரியன் கேந்திரத்தில் குரு சேர்கை. ) 7ம். அதிபதி யும் ( சனி கேந்திரத்தில், மற்றும் குரு பார்வை. ) நல்ல நிலை யில் உள்ளதால்
திருமணயோகம் உண்டு.
களத்திரகாரகன் 5 ல் கோணத்திலும் சந்திர ராசி க்கு லாப ஸ்தானத்திலும் நன்றாக உள்ளார் .
2 ஆம் அதிபதி திரிகோணத்தில் உள்ளார் .
2 ல் மாந்தி இருந்தாலும் , சிம்ம லக்கின யோக்காரகன் செவ்வாய் பார்வை பட்டு நீங்கி விட்டது.
லக்கினத்தை யோக்காரகன் தன் பார்வையில் வைத்து உள்ளார் .
2) குழந்தை பாக்கியம் உண்டு. பெண் குழந்தை உண்டு .
காரணம்
5ஆம் வீட்டுக்கு அதிபதி மற்றும் புத்திரகாரகன் 4ல் உள்ளார் .
5ஆம் வீட்டில் புத சுக்கிரன் நிபுணத்துவ யோகம் உள்ளன.
5ஆம் வீட்டு அதிபதி மீது சனி பார்வை மற்றும் சூரியனின் சேர்க்கையால் பெண் குழந்தை யாக உள்ளது .
புத்திரகாரகன் குரு 5ஆம் வீட்டுக்கு 12ல் , மறைந்து உள்ளார் . அதனால் குழந்தை தாமதமாக பிறக்கும் .
கண்ணன்
Monday, January 12, 2015 9:12:00 PM/////
------------------------------------------
13
////Blogger Sundaravadivel K said...
குரு திருவடி சரணம்.....
அம்மணியின் ஜாதகத்தில் அலசியதில்...
(*) 7-ம் வீட்டு அதிபதி கேந்திரத்தில் இருந்து அவரின் பார்வை முறையே
லக்கினம்,4ம் வீடு மற்றும் களத்திரஸ்தானத்தில்....
(**) 7-ம் வீட்டில் சசிமங்கள யோகம்... 7-ம் வீட்டு அதிபதியின் விசேஷ பார்வையும் விழுகிறது...
(***) லக்கனாதிபதி, பஞ்சமஸ்தானாதிபதி சேர்க்கை 4ல் 7-ம் வீட்டு அதிபதியின் நேரடி பார்வையும் விழுகிறது...
(****) 5-ல் புதன் மற்றும் சுக்கிரன் கூட்டனி..
என்னுடய பதில்கள்...
1. அம்மணிக்கு அவரின் 25 வது வயதில் அதாவது குரு திசை சந்திர புத்தியில் திருமணம் இனிதே நடைபெற்றது... ஆனால்
2.7ல் இனைந்த சந்திரனும் செவ்வாயும் தன் பங்கிற்கு சில வயிற்று உபாதைகளை கொடுத்து புத்திர பாக்கியதை தாமதபடுத்தினர்..இருப்பினும்
3.சனி மகா தசையில் புதனின் புத்தியில் கரு உருவானது.
4.அம்மணிக்கு 2 ஆண் குழந்தைகள்
நன்றி குருவே....
Monday, January 12, 2015 9:17:00 PM/////
-----------------------------------------
14
////Blogger Ravichandran said...
Ayya,
1. She must be marriaed.
2. Marriage would have happened during age of 29(ie Shani mahadesai starting period). Because 7th house owner shani aspecting his house from 
10th house and due to Shasi Mangala yogam as well.
3. First kid would have expired or aborted. There is chance of getting second kid. The reason for first kid expire is 5th house owner sitting in 12th 
house from his house.
Your Student,
Trichy Ravi
Monday, January 12, 2015 9:40:00 PM/////
---------------------------------------------
15
////Blogger Udhayaganesh said...
She is married may be after age 30.
she has children but late, the reason is 5th god house is guru and it is in 12 house.
Monday, January 12, 2015 10:06:00 PM/////
-------------------------------------------
16
////Blogger selvam velusamy said...
வணக்கம் குரு,
இந்த ஜாதகிக்கு தனது 27வது வயதில் திருமணம் நடந்திருக்கும். அதாவது குரு தசை செவ்வாய் புக்தி கோட்சார குரு ராசிக்கு லாப ஸ்தானத்தில்
சஞ்சாரித்தபோது நடந்திருக்கும். அந்த வருடமே அவர் கர்ப்பம் தரித்திருப்பார். காரணங்கள் 7க்குடைய சனி பகவான் 10இல் அது 7ம் வீட்டிற்க்கு
கேந்திரம் அத்துடன் பூர்வ புண்ணியாதிபதி குரு மற்றும் லக்னாதிபதி சூரியன் பார்வையை அவர் பெற்றுள்ளார். களத்திரகாரகன் சுக்கிரன் மற்றும்
குடும்பாதியும் லாபதிபதியுமாகிய புதனும் பஞ்சம ஸ்தானத்தில் உள்ளார்கள். பெண்களுக்கு புத்திர ஸ்தானமாகிய பாக்கிய ஸ்தான அதிபதி செவ்வாய்
7இல். அந்த இடம் பாக்கிய ஸ்தானத்திற்கு லாப ஸ்தானமாகும் மற்றும் இயற்க்கை சுப கிரகமாகிய சந்திரனுடன் இணைவு. அத்துடன் புத்திர காரகன்
குருவும் கேந்திரதிளுமுள்ளார் சசி மங்கள, குரு சந்திர, நிபுனதுவா போன்ற யோகங்களும் உள்ளன.
நன்றி
செல்வம்
Monday, January 12, 2015 11:22:00 PM//////
-------------------------------------------
17
/////Blogger Chandrasekharan said...
Respected sir,
1.) She got married in her 26 th age. Gurudhasa, chevvai bukthi.
2.) She has child.. baby would born in her 33rd age. Sani dhasa, budhan bukthi.
Thank you.
Monday, January 12, 2015 11:50:00 PM/////
-----------------------------------------------
18
/////Blogger ravichandran said...
Respected Sir,
My answer for our Quiz no.74:
1. She has married.
2. She married at her age of 23 to 25.
3. She got child after delay.
REASONS:
I) MARRIAGE:
i)Seventh lord in kendra and aspecting lagna lord (Mutual aspect) and guru.
ii) In seventh house, Yogathipathi Mars is sitting and aspects lagna.
iii). Kalathrakaraga also sitting in kendra. 
Hence, Marriage has not denied.
II) Age of married:
i) Saturn aspects Jupiter,Sun and Vice versa. 
Therefore, In jupiter dasa, Sun puthi period, Marriage has happened.
III) Child:
i) Fifth house is in babha kathri yoga and fifth house lord Jupiter is in 12th place from his own house.
ii) Saturn aspects Jupiter. So. it indicates there will be delay in getting child. In Navamsha, there is possibility to get child even asta varga too.
iii) But, as per moon rasi, fifth house lord is in good position.
So, she got child after delay for certain period of time from marriage.
With kind regards,
Ravichandran M
Tuesday, January 13, 2015 1:12:00 AM//////
================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!