மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

2.12.14

ஆத்தாப் பொண்ணும் சீத்தாப் பழமும்!


ஆத்தாப் பொண்ணும் சீத்தாப் பழமும்!

எங்கள் பகுதியில் அம்மாவை ஆத்தாள் என்று அழைப்பார்கள். அகத்தில் (வீட்டில், உள்ளத்தில்) இருக்கும் அன்னையை ஆத்தாள் என்பார்கள்.
வீட்டில் இருக்கும் குட்டிப் பெண்களை ஆத்தாப் பொண்ணு என்று
செல்லமாக அழைப்பார்கள்,

ஆத்தாப் பெண்ணே சீத்தாப் பழமே என்று ரைமிங்கோடு சொல்லி அழைப்பார்கள். அத்துடன் குட்டிப் பெண்களுக்கு, அதாவது மழலை
மாறாத குட்டிப் பெண்களுக்கு 4 வரிப் பாடல் ஒன்றைச் சொல்லிக்
கொடுத்து திரும்ப அவர்களைச் சொல்லச் சொல்லிக் கேட்டு
மகிழ்வார்கள். அந்த மழலைகளும் பாடலின் பொருள் தெரியாமல்
குரல் கொடுத்துப் பாடலாகத் திரும்பச் சொல்வார்கள்.

அந்த 4 வரிப் பாடல் கீழே உள்ளது. நீங்களும் பாருங்கள்:

"ஆத்தாப் பொண்ணுக்குக் கல்யாணமாம்
அவுக அவுக வீட்டில சாப்பாடாம்
கொட்டு மேளம் கோயில்லையாம்
வெத்தலை பாக்கு கடையிலையாம்!"

எப்படி உள்ளது பாட்டு? அர்த்தமானதா?
-----------------------------------------------
சரி சொல்ல வந்த மேட்டருக்கு வருகிறேன்:

சீத்தாபழத்தின் பெருமையை அறிவீர்களா...?

இது இந்தியாவை சேர்ந்த பழம் இல்லை. அமெரிக்காவில் கண்டு
பிடிக்கப்பட்டு 100 ஆண்டுகள் கழித்து இந்தியாவிற்கு வந்ததாக
மொகாலய அரசர் அக்பர் தனது ஆவணங்களில் குறித்து
வைத்துள்ளார்.

சீத்தாபழம் நோய் எதிர்ப்பு சக்தியான வைட்டமின்சி'யைக்
கொண்டிருக்கிறது. ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு போதுமான
கால்சியம் ஒரு பழம் உண்பதாலேயே கிடைக்கும்.

அல்சர் உள்ளவர்கள் அல்லது வயிற்றில் அதிகபடியான அமிலத்
தன்மை உடையவர்களுக்கு இப்பழம் சிறந்தது. இதன் விதை பூச்சி
கொல்லி மருந்தாகவும், இதன் பொடியானது தலை முடியில் உள்ள
பேன் பொடுகு போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாகும்.

இதில் 16.5 சதவிகிதம் சர்க்கரை உள்ளது. கொழுத்த சதை உள்ளவர்கள்
இதை சாப்பிடுவதை தவிர்க்கலாம். எடைகுறைவாக உள்ளவர்கள்
எடையை அதிகப்படுத்த இப்பழத்தை தினமும் சாப்பிடலாம்.

இதில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் கொண்டுள்ளதால் நமது இதயத்தை இதய நோயிலிருந்து இப்பழம் பாதுகாக்கிறது. உங்களுக்கு மாறிகொண்டே இருக்கும் இரத்தஅழுத்தம் இருந்தால் தினமும்
இப்பழத்தை சாப்பிடுவதன் மூலம் இரத்தஅழுத்தத்தை கட்டுபாட்டில் வைத்துக்கொள்ளலாம்.

நோய்க்கு மருந்தாவதோடு மட்டுமல்லாமல் அழகுக்கும் உதவுகிறது.
இதை தொடர்ந்து சாப்பிட்டால் முகம் மற்றம் தோல் பளபளப்பாக மாறும்.

இதில் மெக்னீசியத்தின் அளவை அதிகம் கொண்டிருப்பதால் உடலில்
நீர் இருப்பு நிலையை பராமரிக்கிறது. சீத்தாபழத்தின் தோல் பற்சிதைவு, ஈறுகளில் ஏற்படும் வலிகளுக்கு மருந்தாகும்.

இணையத்தில் படித்தது. உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்
--------------------------------------------------------------------------------------
2

ஒரே நாளில் சிறுநீரகக்கற்களைக் கரைக்கும் பீன்ஸ் வைத்தியம்....

ஆஃபரேசன் செய்து கொண்டால் இந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு
ஏற்படும் என்று நமது உடலில் தோன்றும் பல பிரச்சனைகளுக்கு மருத்துவர்கள் அதைப் பரிந்துரை செய்கிறார்கள். இதற்கு சிறு
நீரகத்தில் உருவாகும் கற்களும் விதிவிலக்கல்ல. அவ்வாறு
ஆஃபரேசன் செய்து நீக்கிவிட்டாலும் இதுவரை ஆப்பரேசன் செய்து கொண்டவர்களுக்கும் திரும்ப கற்கள் உருவாவதும் மீண்டும் அதற்கு
சிகிச்சை எடுத்துக்கொள்வதும் வழக்கமாக நடந்து கொண்டுதான்
இருக்கிறது.

எனக்கு மூன்று முறை சிறுநீரகக் கற்கள் நீக்கப்பட்டுள்ளது. நான்கு
முறை சிறுநீரகக் கற்கள் நீக்கப்பட்டன என்று கணக்குச் சொல்பவர்கள்
தான் அதிகம்.

ஏன் இத்தனை முறை ஆஃபரேசன் செய்ய வேண்டி வந்தது? என்ற
கேள்விக்கு யாரிடமும் பதிலில்லை.

முதல்முறை கற்கள் உருவான பொழுதே அதற்குக் காரணம் என்ன
வென்று கண்டுபிடித்து அதை சரிசெய்திருந்தால் இரண்டாவது முறை
கற்கள் உருவாகி இருக்காது. அதைவிட்டுவிட்டு அப்ரேசன் செய்து
கற்களை அகற்றுவதனால் அந்த மனிதன் செய்யும் தவறுகளால்
மீண்டும் கற்கள் உருவாகிறது. பிறகு மீண்டும் ஆஃபரேசன் செய்வதே தொடர்கதையாகிப் போய்க் கொண்டே எனவே நிரந்தரமாக சிறுநீரகக் கற்களை நீ ஆஃபரேசன் இன்றிக் கரைப்பதற்கு ஒரு வழி இருக்கிறது.
அது மிக எளிமையான வழியும் கூட. அதற்கு பீன்ஸ் வைத்தியம்
என்று பெயர். பீன்ஸ் என்றால் சோயா பீன்ஸ் என்று புரிந்து கொள்ள வேண்டாம். ஆங்கிலக் காய்கறி என்று சொல்லக்கூடிய பீன்ஸ்.

சிறுநீரகத்தில் கற்கள் இருப்பதாக கூறுபவர்கள் கீழ்கண்டவாறு நாம் சொல்வதைக் கடைபிடித்தால் ஓரே நாளில் கற்கள் கரைந்து குண
மடைந்து விடுவார்கள். பின்னர் ஸ்கேன் செய்து பார்த்தால் கூட
அங்கு கற்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

என்ன செய்ய வேண்டும்?

அரைக்கிலோ பீன்சை எடுத்துக் கொண்டு அதில் உள்ள விதைகளை
எல்லாம் நீக்கிவிட்டு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் இரண்டு லிட்டர் தண்ணீரை எடுத்துக் கொண்டு நறுக்கிய
பீன்சை அதில் போட்டு அடுப்பில் வைக்கவேண்டும். இளம் தீயாக
எரிய விடவேண்டும். கேஸ் அடுப்பு எனில் சிம்மில் வைத்து அதை
வேக வைக்க வேண்டும். அதாவது தீ கொஞ்சம் தான் எரிய வேண்டும்.
விறகு அடுப்பாக இருந்தாலும் நெருப்பு மிதமாக அதிலிருந்து
வெளிப்படுமாறு வைத்துக்கொண்டு பீன்சை வேகவைக்க வேண்டும். சீக்கிரமாக அதுவேகாமல் இவ்வாறு இரண்டு மணிநேரம் கழித்து வெந்திருக்கக் கூடிய பீன்ஸையும், நீரையும் சேர்த்து மிக்சியில்
போட்டு நன்கு கூல்போல் அரைத்துக் கொண்டு ஆறியபின் குடித்துவிடவேண்டும். இந்த பீன்ஸ் கூலைக் குடித்தவுடன் அந்தக் கணத்திலிருந்து மூன்று மணி நேரத்திற்குள் மூன்று லிட்டர்
தண்ணீரைக் குடித்துவிடவேண்டும். ஒரு மணி நேரத்திற்கு ஒரு
லிட்டர் என்கிற அளவில் சிறிதளவு அதக் குடித்து விடவேண்டும்.
இவ்வாறு 3 மணிநேரத்திற்குள்ளாக 3 லிட்டர் தண்ணீரைக் குடித்து முடிக்கவேண்டும்.

அதன் பின்னர் சிறுநீர் கழிக்கும் பொழுதெல்லாம் அதை ஒரு
டப்பாவில் சேகரித்து வைத்துக் கொண்டு கற்கள் அதில்
வந்திருக்கிறதா? எனப் பார்க்கவேண்டும். எப்படியும் அன்று
இரவுக்குள் சிறுநீரக கற்கள் வெளியேவந்துவிடும். அதுவரை
வேறு எந்த உணவுகளும் எடுத்துக்கொள்ள கூடாது. அதன் பிறகு
மூன்று மணி நேரத்திற்குப் பின் சாதரணமாய் குடிக்கும் நீரைவிட
சற்று அதிகமாகக் குடித்துக் கொண்டே இருக்கவேண்டும். இந்த
சிகிச்சையை மேற்கொள்ளும் பொழுது அன்று முழுவதும் ஓய்வாக இருக்கவேண்டும். வேறு எந்த வேலையும் பார்க்கக் கூடாது.
கண்களை மூடிப்படுத்துக் கொண்டு நன்கு ஓய்வாகவும் உடலும்,
மனதும் தளர்வாக இருக்கும்படியும் பார்த்துக்கொள்ளவேண்டும்.

இப்படிப்பட்ட வழிமுறைகளுடன் செய்தால் சிறுநீரகக்கற்கள்
கண்டிப்பாக கரையும். இந்த வழிமுறைகளைப் பயன்படுத்தி
நிறையப்பேர் குணமடைந்திருக்கிறார்கள். ஒரே நாளில் சிறுநீரகக்
கற்கள் கரைந்துவிட்டது என பலரும் என்னைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கிறார்கள். ஸ்கேன் ரிப்போர்ட் படி கிட்னி கற்கள் கரைந்து
விட்டது என்றும் அவை இருப்பதற்கான அறிகுறியே இல்லை
என்றும் தங்களுடைய மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டு உள்ளனர்.

எனவே சிறுநீரகக் கற்களைக் கரைப்பதற்கு இந்த வழிமுறையைக்
கையாண்டு ஆரோக்கியம் பெறலாம். சிறுநீரகக்கற்களைக்
கரைப்பதற்கான வழிமுறைகளைப் பார்த்தோம். ஆனால் இதை
விடவும் சிறந்த வைத்தியம் ஒன்று உள்ளது. அது என்னவென்றால்
சிறுநீரகக் கற்கள் ஏன் உருவாகிறது. அது உருவாகாமல் தடுப்பதற்கு
என்ன வழி என்பது தான் அது.

நமது அனாடமிக் செவிவழித் தொடுசிகிச்சை என்ற புத்தகத்திலும், டிவிடியிலும் இதுகுறித்து விளக்கமாகக் கூறி இருக்கிறோம்.
இருப்பினும் அதுபற்றி இங்கு சுருக்கமாக பார்த்துவிடலாம்.

சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கான காரணங்கள்.
1. உப்பு அதிகம் சாப்பிட்டால் வரும்.
2. உப்பு குறைவாக சாப்பிட்டாலும் வரும்.
3. தண்ணீர் அதிகமாகக் குடித்தால் வரும்.
4. தண்ணீர் குறைவாக குடித்தால் வரும்.
5. மனதில் பயம் இருந்தால் வரும்.
6. காற்றோட்டம் இல்லாத இடத்தில் உறங்கினால் வரும்.
7. கொசுவர்த்திச் சுருள், மேட், லிக்யூடு போன்றவை பயன்படுத்தினால்
வரும்.
8. ஏசி, ரூமில் இருப்பவர்களுக்கு வரும்.

மேற்சொன்ன காரணங்களைக் கவனமாக படித்துகொண்டு அதன்படி
நடந்து வரவேண்டும். ஏசியைப் பயன்படுத்தவே கூடாது. கொசுவர்த்திச் சுருளில் உள்ள இரசாயான நச்சுக்கள் சுவாசத்தின் வழியே உள்ளே நுரையீரலுக்கு சென்று சிறுநீரகத்தில் கல்லாய் மாறுகிறது. எனவே கொசுவர்த்தியைப் பயன்படுத்தவே கூடாது.

மனதில் பயம் இருந்தால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும். எனவே
மனதில் உள்ள பயத்தைப் போக்கி சிறுநீரகக் கற்களைக் கரைத்துவிட
முடியும். அது எப்படி என்பதை இந்த இதழில் வெளியாகி கட்டுரையைப் படிக்கும் பொழுது புரிந்துகொள்வீர்கள்.

அடுத்ததாக நம் நாவிற்கு எந்தளவிற்கு உப்புச் சுவை தேவைப்
படுகிறதோ அந்த அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.
உப்பினைக் குறைவாகவும் எடுத்துக்கொள்ள கூடாது. கூடுதலாகவும்
எடுத்துக் கொள்ளக் கூடாது. உப்பில் தற்பொழுது பாக்கெட்டுகளில்
வரும் போடி உப்பினைப் பயன்படுத்த வேண்டாம். அதற்குப் பதில்
கல் உப்பினைப் பொடி செய்து பயன்படுத்தலாம். கல் உப்பினை பயன்படுத்துவதே முன்னர் சட்டியில் போட்டு வறுத்துப் பயன்
படுத்துவது மிகமிக சிறந்தது.

தண்ணீரின் தேவை நமது தாகத்தைப் பொறுத்து மாறுபடும். நாம்
செய்யும் வேலை, தட்ப வெப்பநிலை போன்றவற்றைப் பொறுத்து
தண்ணீரின் தாகம் நமக்கு இருக்கும். எனவே தண்ணீரை தினசரி
இவ்வளவு லிட்டர் தான் குடிக்கவேண்டும். என்று கணக்கு வைத்துக்
கொண்டு தாகம் எடுக்காமல் தண்ணீர் குறைவாகவும் குடிக்கக் கூடாது? அதிகமாகவும் குடிக்கக் கூடாது. ஆடு, மாடு போன்ற விலங்கினங்கள் எப்பொழுது குடிக்கின்றன. எவ்வளவு தேவையோ அவ்வளவு
குடிக்கின்றன. நாமும் அதைக் கடைப்பிடிப்போம்.

பொதுவாக சிறுநீரகத்தில் கற்கள் தோன்றுவதற்கு இந்த எட்டு
காரணங்கள் இல்லாமல் இன்னொரு முக்கியமான விசயமும்
இருக்கிறது. அது என்ன தெரியுமா?

அதிகமாக பேசினால் சிறுநீரகத்தில் கற்கள் வரும். ஆசிரியர்கள்,
பேச்சாளர்கள், சொற்பொழிவாளர்கள், தொலைபேசி அழைப்பாளர்கள் போன்றோருக்கு சிறுநீரகத்தில் கற்கள் தோன்றும் வாய்ப்புகள்
அதிகம். எவ்வளவு நேரம் அதிகளவு பேசிக்கொண்டு இருக்கிறோமோ சிறுநீரகத்தில் அவ்வளவு விரைவில் கற்கள் தோன்றும்.

அதிகநேரம் பேசிக் கொண்டிருப்பதை தொழிலாகச் செய்பவர்கள்
இனிமேல் பேசுவதைக் குறைத்துக் கொள்ளுங்கள் இந்தக் கட்டுரையின்
மூலம் இரண்டு விசயங்களை நாம் தெளிவுபடுத்தி இருக்கிறோம்.

1. சிறுநீரகக் கற்களை எவ்வாறு கரைப்பது?
2. சிறுநீரகக் கற்கள் வராமல் தடுப்பது எப்படி?

எனவே சிறுநீரகக் கற்கள் இனிவராமல் எப்படி பார்த்துக் கொள்வது
என்பதும், இருக்கும் சிறுநீரகக் கற்களைக் கரைப்பது எப்படி என்பதையும் பார்த்திருக்கிறோம். இவற்றைப் பயன்படுத்திக் கொண்டு என்றும் ஆரோக்கியமாக வாழ்வோம்.

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன் !!
இந்தக் கட்டுரையை எழுதியவர்:
www.amaidhiyumaarokiyamum.com 
Contact: (+91) 8883805456.

அடியவன் இணையத்தில் படித்தேன். உங்களூக்குப் பயன்படும் 
என்று தோன்றியதால் அறியத் தந்திருக்கிறேன்
=====================================
3
நீரழிவு உபாதைக்கு வெண்டைக்காய் வைத்தியம் 



இதையும் அடியவன் இணையத்தில் படித்தேன். உங்களூக்குப் 
பயன்படும் என்று தோன்றியதால் அறியத் தந்திருக்கிறேன்
=====================================
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

9 comments:

  1. சீத்தா பழம் சரி...
    சீத்தா இது என்றால் ராமர் எங்கே

    இப்படி இந்த பழத்திற்கு
    இந்த பெயர் வர காரணம் என்னவோ

    சுண்டை என நினைத்வருக்கு வெண்டையை பற்றி சொன்னது சரி

    ஆரோக்கியம் காப்பதால் தான்
    அதற்கு லேடீஸ் விரல்கள் என

    பெயர் வந்ததோ...
    பெயர் வைப்பதில்

    தைரியமாக சொல்லுங்கள்
    தமிழர்கள் புத்திசாலிகள்

    ReplyDelete
  2. Hi Sir,

    Useful messages, Thank you.

    One dobut, Oru Jathagatthai paarthu eppo vedu kattalam/vaganam vangalam endru kannipathu. please guide me...

    ReplyDelete
  3. ++++++ ஒரு ஜாதகனுக்கு அவன் பார்க்கும் தொழிலில் அல்லது
    வேலையில் பிரச்சினை என்றால். அது ஏன்? எப்போது அந்த நிலை
    மாறும் என்பதைப் பார்க்க ஒரு ஃபார்முலா உள்ளது.

    10ஆம் வீட்டை, லக்கினமாக எடுத்துக் கொண்டு, அன்றையத்
    தேதியில் கோச்சார சனீஷ்வரன் அந்த வீட்டிலிருந்து எங்கே
    இருக்கிறான் என்று பாருங்கள். அந்த வீட்டிற்கு 6, 8,12ஆம் வீடுகளில்
    அவன் சஞ்சாரம் செய்தால், பிரச்சினைதான். அந்த வீட்டை விட்டு
    நகரும் வரை பிரச்சினை தீராது. பதவி நீக்கம், பதவி பறிமுதல், பதவியிலிருந்து கீழ் நிலைக்குத் தள்ளப்படுதல், தண்ணீர் இல்லாக்
    காட்டிற்கு மாற்றப்படுதல் என்று எது வேண்டுமென்றாலும் நடக்கும்.

    Sir, In this above note.. for all kataga lagana , mesham is 10th house and sani bhagavan is going to 8th place from Mesham. so for all Kataga lagna natives, will get down/problems in their work? am I right ?

    again this based on their dasa/bhudhi and yogam right ?
    sorry for disturbing again

    ReplyDelete
  4. வணக்கம்.
    வாத்தியாரின் எழுத்து நடை நம்மை காரைக்குடிக்கே நேரில் அழைத்து செல்கின்றது. பயன் உள்ள பதிவு.
    தங்கள் மாணவனாக இருப்பதில் மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  5. அன்புடன வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் .
    இந்த பீன்ஸ் வையித்தியம் எனது நண்பருக்கு செய்து 5mm சிறு கற்களாக 4 எண்ணம் வெளி வந்தது ..நண்பர் நலம் பெற்றார் 10 ரூ . செலவில் மிகவும் பயனுள்ள தகவல் ..நன்றி ,

    ReplyDelete
  6. அன்புடன வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் .
    இந்த பீன்ஸ் வையித்தியம் எனது நண்பருக்கு செய்து 5mm சிறு கற்களாக 4 எண்ணம் வெளி வந்தது ..நண்பர் நலம் பெற்றார் 10 ரூ . செலவில் மிகவும் பயனுள்ள தகவல் ..நன்றி ,

    ReplyDelete
  7. ஆஹா... நம்ம பக்கத்துப் பாட்டு...
    மருத்தும் மருந்தாகும் பழங்கள் குறித்த பகிர்வு... அருமை...

    ReplyDelete
  8. பீன்ஸ் வைத்தியம் புதுமைதான்.

    வெண்டைக்காய் வைத்தியத்தில் 250 மில்லி நீரில் வெண்டைத் துண்டுகளை 15 நிமிடம் கொதிக்க வைத்து அந்தக் கொதி நீரை அருந்தினாலும் பலன் தரும்.
    இது சன் டீவி நாட்டு வைத்தியம் நிகழ்ச்சியில் சக்திசுப்ரமணி ஐயா அவர்கள் கூறியது.

    ReplyDelete
  9. பயனுள்ள தகவல்கள். பகிர்ந்துக் கொண்டமைக்கு நன்றி.

    படத்தில் உள்ள பழத்தை எங்கள் ஊரில் ஆத்தா பழம் என்று கூறுவார்கள். சீத்தாப் பழம் இன்னும் சிறிது பச்சையாக சிறிய முட்களுடன் இருக்கும். எதை என்னவென்று அழைப்பது என்ற சிறு குழப்பம்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com