மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.10.14

இறைவனுக்கே அவன் இறைவன்!


இறைவனுக்கே அவன் இறைவன்!

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகப்பெருமானின் பாடல் ஒன்றின் வரிகள் அலங்கரிக்கின்றன. அனைவரும் படித்து இன்புறுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
----------------------------------------------------
'சூலமங்கலம்' சகோதரிகள்  பாடிய -  'இறைவனுக்கே நீ இறைவனப்பா'


இறைவனுக்கே நீ இறைவனப்பா
எனக்கருள வேண்டும் பழநியப்பா
(இறைவனுக்கே ... )
அப்பா ...
(இறைவனுக்கே ... )

அப்பா ... இறைவனுக்கே நீ இறைவனப்பா
குறைவில்லா வாழ்வு தரும் குமரனப்பா 
ஈசனுக்கு நீ தகப்பன் சாமியப்பா 
அம்மையப்பா ... பழநியப்பா
இறைவனுக்கே நீ இறைவனப்பா

வா என்று அழைக்குமுன்னே
வருகை தரும் வரதனப்பா 
வா வா என்று அழைக்குமுன்னே
வருகை தரும் வரதனப்பா

தாவென்று கேட்குமுன்னே
வரம் தரும் குமரனப்பா 
கூவுகின்ற சேவற் கொடி
தாங்கி நிற்கும் கந்தனப்பா 

குன்றுதோரும் ஆடுகின்ற
சிங்கார வேலனப்பா 
அம்மையப்பா ... பழநியப்பா
(இறைவனுக்கே ... )

அப்பா ... இறைவனுக்கே நீ இறைவனப்பா.
===================================================
'பாடியவர்கள்: சூலமங்கலம்' சகோதரிகள் 

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

30.10.14

நீங்களும் நிலத்தில் விளையும் நிலக்கடலையும்!


நீங்களும் நிலத்தில் விளையும் நிலக்கடலையும்!

நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது.

நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில்
அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு
எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம்.
 நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே
சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது
இதற்கு நல்ல உதாரணம்.

நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன்
உண்டாகும்.

நீரழிவு நோயை தடுக்கும்:

நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய
பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது
உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்
கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய்
வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

பித்தப் பை கல்லைக் கரைக்கும்:

நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு
வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம்
தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

இதயம் காக்கும்:

நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும்
என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.

இளமையை பராமரிக்கும்

இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.

ஞாபக சக்தி அதிகரிக்கும்:

நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்
கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின்
உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

மன அழுத்தம் போக்கும்:

நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது.
மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது.

கொழுப்பை குறைக்கும்:

தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால்
அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து
அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால்
அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும்
கொழுப்பு தான் நிலக்கடலையில் உள்ளது. நிலக்கடலையில் உள்ள
தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது.
100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட்
வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது.

இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும்
கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3
சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை:

உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை
அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும்.
இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனை
 வாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது
மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து
தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலை
எண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள்.

இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.

கடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரிய
மாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்
படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து
சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம்  நிலக்கடலை
குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.

கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி:

பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை
சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டா
வதையும் தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக்
அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது.
இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

நிறைந்துள்ள சத்துக்கள்:

100 கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.


கார்போஹைட்ரேட்- 21 மி.கி.
நார்சத்து- 9 மி.கி.
கரையும் கொழுப்பு – 40 மி.கி.
புரதம்- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் – 0.85 கி
ஐசோலூசின் – 0.85 மி.கி.
லூசின் – 1.625 மி.கி.
லைசின் – 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.
காப்பர் – 11.44 மி.கி.
இரும்புச்சத்து – 4.58 மி.கி.
மெக்னீசியம் – 168.00 மி.கி.
மேங்கனீஸ் – 1.934 மி.கி.
பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
பொட்டாசியம் – 705.00 மி.கி.
சோடியம் – 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.
போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.

பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:

நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில்தான் சத்து
அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில்
தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன.
நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான்
உண்டு
----------------------------------------------
இணையத்தில் படித்தது. செய்தி பயன்தரும் என்று கருதியதால்,
உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்

அன்புடன், 
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்! 
வளர்க நலமுடன்!

29.10.14

Interesting News: மாடுகளே தேவையில்லை: வருகிறது செயற்கைப் பால்


மாடுகளே தேவையில்லை: வருகிறது செயற்கைப் பால்

மாடுகள் வேண்டாம். பண்ணைகள் வேண்டாம். செயற்கையாகப் பால் தயாரிக்க முடியும் என்று அமெரிக்காவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ஒரு நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து சென்று அமெரிக்காவில் ஆராய்ச்சியை மேற்கொண்ட  பெருமாள் காந்தி, ரையான் பாண்டியா,இஷா தத்தார் ஆகிய மூவர்
அணியினர் செய்ற்கைப் பால் தயாரிப்புக்காக மூபிரீ (Muufri) என்ற பெயரில் ஒரு கம்பெனியைத் தொடங்கியுள்ளனர். அடுத்த ஆண்டு ஜூலை வாக்கில் தங்களது பால் அறிமுகப்படுத்தப்படும்  என்று அவர்கள் கூறியுள்ளனர்.


பெருமாள் காந்தி

ஈஸ்ட் போதும். அதை அடிப்படையாக வைத்து  பயோ-எஞ்சினீரிங் முறையில் செயற்கைப் பால் தயாரிக்கப் போகிறோம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

அடிப்படையில் பால் என்பது என்ன? ஆறு வகைப் புரதங்கள். எட்டு வகையான கொழுப்புப் பொருட்கள், அவ்வளவுதான் என்று அவர்கள் கூறுகின்றனர்.

செயற்கைப் பால் தயாரிப்பு முறையில்  சிறிது மாற்றங்களைச் செய்வதன் மூலம் பசும் பால், எருமைப் பால், ஆட்டுப் பால் என பலவகையான பால்களைத் தயாரிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரையான் பாண்டியா
செயற்கைப் பால் பார்வைக்கு அசல் பாலைப் போலவே இருக்கும்.
அத்துடன் அசல் பாலைப் போலவே அடர்த்தி கொண்டதாக, ருசி
கொண்டதாக சத்து கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இஷா தத்தார்

செயற்கைப் பாலில் சில சாதகங்களும் உள்ளன. அசல் பாலில் லாக்டோஸ் இருக்கும். இது பலருக்கும் ஒத்துக்கொள்ளாது. செயற்கைப் பாலில் லாக்டோஸ் இராது. அத்துடன் கெட்ட  கொலஸ்ட்ராலும் இராது.

செயற்கைப் பால் கெட்டுப் போகாதது. பல நாட்கள் கெடாமல் இருக்கும் என்று கூறப்படுகிறது. அசல் பால் மூலம் தயாரிப்பது போலவே செயற்கைப் பாலிலிருந்தும் பால் பொருட்களைத் தயாரிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


செயற்கைப் பால் அடங்கிய பாட்டிலுடன் பெருமாள் காந்தி
இந்த மூவர் கூட்டணியில் ஒருவரான பெருமாள் காந்தி சென்னையில் 
உள்ள ஒரு பல்கலையில் உயிரி தொழில் நுட்பம் படித்து பட்டம் பெற்றவர். முமபையில் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி விட்டு அமெரிக்கா சென்று மேல்படிப்பு படித்து வருபவர். மற்ற இருவரும் உயிரி தொழில் 
நுட்பப் படிப்பு படித்தவர்களே.

இவர்கள் தொடங்கியுள்ள நிறுவனத்துக்கு ரையான் பாண்டியா CEO. 
பெருமாள் காந்தி தலைமை தொழில் நுட்ப அதிகாரி. இஷா தலைமை 
கல்ச்சர் அதிகாரி.

இவர்களது திட்டம் வெற்றி பெறுமானால் செயற்கைப் பாலானது பெரிய ஆலைகளில் உற்பத்தி செய்யப்படுவதாக இருக்கும். மருந்து ஆலைகள் மாதிரியில் உயர்ந்த தரத்திலான தயாரிப்பு முறைகள் பின்பற்றப்படும் 
என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் மக்கள் தொகை பெருத்து வருகிறது. எதிர்காலத்தில் மக்கள் செயற்கைப் பாலைத்தான் பயன்படுத்துபவர்களாக இருப்பர் என்று 
அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

செயற்கைப் பால் இப்போது எப்படி சாத்தியமாகியது என்று கேட்டதற்கு இதுவரை யாரும் இதற்கு முயலவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.

Source: http://www.ariviyal.in/2014/10/blog-post_28.html
------------------------------------------------------------------------------------------------
இணையத்தில் படித்தேன். செய்தி சுவையாக இருந்ததால் உங்களுக்கு அறியத்தந்துள்ளேன்

அன்புடன்,
வாத்தியார்
============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

Quiz.no.69 Answer: நல்ல நேரம் வரும்போது, நல்லதே நடக்கும்!

Quiz.no.69 Answer: நல்ல நேரம் வரும்போது, நல்லதே நடக்கும்!

புதிர் எண் 70ற்கான விடை

29.10.2014
--------------------------------------
நேற்றையப் பதிவில், அன்பர் ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து 3 கேள்விகளைக் கேட்டிருந்தேன். கேளிகள்தான் மூன்றே தவிர அலச
வேண்டிய வீடு ஒன்றுதான்!

கேட்கப்பெற்றிருந்த கேள்விகள்:

கேள்விகள்:
1. எந்த வயதில் நோய் வந்தது?
2. எத்தனை காலம் அது படுத்தி எடுத்தது?
3. ஜாதகர் அதிலிருந்து குணமாகி மீண்டு வந்தாரா அல்லது வரவில்லையா?

சரியான பதில்:

1. ஜாதகரின் 54வது வயதில் கடுமையான நோய் ஏற்பட்டது.
2. ஏழு ஆண்டுகாலம் அது படுத்தி எடுத்தது.
3. அடுத்துவந்த மகாதிசை சுயபுத்தியில் அவர் மீண்டு வந்தார். பிறகு நலமுடன் இருந்தார்

மிகச் சரியாக இரண்டு கேள்விகளுக்கான பதிலை நமது வகுப்பறையின்
மூத்த மாணவர்களில் ஒருவரான திரு. கே.முத்துராமகிருஷ்ணன்  
(KMRK) அவர்கள் மட்டும் எழுதியுள்ளார். அவருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவ்ருடைய பதில் கிழே உள்ளது

கலந்துகொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்!
---------------------------------------------------------------


மிதுன லக்கின ஜாதகர்.
லக்கினாதிபதி 12ல் மறைந்துவிட்டார்.
ஆனாலும் ஜாதகத்தில் சுக்கிரனும், சூரியனும் உச்சம்
பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி உச்சம் அத்துடன் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் சுபக்கிரகமான சந்திரன்.
ஆறாம் வீட்டில் அதன் அதிபதி செவ்வாய் ஆட்சி பலத்துடன். அது பெரிய மைனஸ் பாயிண்ட்

54 வயதில் கேது மகா திசை ஆரம்பித்த போது நோய் உண்டானது.
தசா அதிபதி கேது லக்கின அதிபதி புதனுடன் கூட்டு - அதுவும்
12ம் வீட்டில்.6ம் அதிபதி செவ்வாயின் நேரடிப் பார்வை அவர்களின்
மேல். அத்துடன் சனியின் பார்வையும் அவர்கள் மேல். மேலும் 8ல்
அமர்ந்த குரு பகவானின் பார்வையும் அவர்கள் மேல். இந்த அமைப்பு அவருக்கு நோயை உண்டாக்கியது.உடல் நோயோடு, மன நோயையும் உண்டாக்கியது.

Ketu dasa started at the age of 54 and it gave all the health problems to the native
Venus Dasa which started at the age of 62 set right everything

சுக்கிரன் உச்சமானதுடன், கேந்திர வீட்டிலும் இருக்கிறார். அவர் தனது
மகா திசையில் நன்மை செய்யத் துவங்கி, ஜாதகரைக் காப்பாற்றி,
நோய்களில் இருந்து ந் மீண்டு வரச் செய்தார்

தசா/தசா புத்திகள்தான் பலனை அளிக்கக்கூடியவை. அளிக்க வல்லவை!

அன்புடன்,
வாத்தியார்
----------------------------------------------------------------
////Blogger kmr.krishnan said...
    ஜாதகர் 26 ஏப்ரல் 1937ல் காலை 10மணி 9 நிமிடம் 30 வினாடிக்குப்பிற‌ந்தவர்.
    உஷ்ண‌ ச‌மபந்தமான, குருதி நோய்;ரத்த‌ அழுத்தம்,இதய‌ சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டார். இவை துவங்கிய போது அவர் வயது 54.
    60 வயது வரை நோயால் 6 வருடங்கள் துன்பம்.
    செரிபரல் ஹெமரேஜால் 60 வயதில் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
    வீடு மாற்றம் செய்து கொண்டுள்ள சூழலில் அவசரமாக எழுதுகிறேன்.முழுதும் கவனம் செலுத்த முடியவில்லை. மன்னிக்கவும்./////
================================================================
வாழ்க வளமுடன்! 
வளர்க நலமுடன்!

28.10.14

Astrology: quiz number.70 : எப்போது நோய் வந்தது? வந்த நோய் என்ன செய்தது?


Astrology: quiz number.70 : எப்போது நோய் வந்தது? வந்த நோய் என்ன செய்தது?

Quiz No.70

புதிர் போட்டி எண்.70 விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

28.10.2014

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு மூன்று கேள்விகள். அந்தக் கேள்விகளுக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!
------------------------------------
இன்றைய கேள்விகள்:

கீழே உள்ள ஜாதகம் ஒரு அன்பரின் ஜாதகம்.

ஜாதகரின் 6ஆம் வீட்டை அலசிப் பதில் எழுதுங்கள். அவருக்கு கடுமையான உடல் உபாதைகள் உண்டாகின. அது எந்த வயதில் உண்டானது? எத்தனை காலம் அவதிப்பட்டார். அதில் இருந்து, அதாவது உடல் நோய்களில் இருந்து மீண்டு வந்தாரா? அல்லது வரவில்லையா? என்பதை அலசி பதிலை எழுதி அனுப்புங்கள். கேள்விகளுக்கு உரிய பதிலை மட்டும் எழுதுங்கள்.

கேள்விகள்:
1. எந்த வயதில் நோய் வந்தது?
2. எத்தனை காலம் அது படுத்தி எடுத்தது?
3. ஜாதகர் அதிலிருந்து குணமாகி மீண்டு வந்தாரா அல்லது வரவில்லையா?

திருமணத்தை வைத்தே கேள்விகள் எதற்கு? என்று மாணவர் ஒருவர் கேட்டுக்கொண்டே இருந்தார். அவருக்காக இன்றையை அலசலை வேறு பக்கம் திருப்பியிருக்கிறேன்.


 நவாம்ச சக்கரம்

அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!
-------------------------------------------------------------------
எனது மோடத்திற்கு காய்ச்சல் வந்து, நேற்று படுத்துக்கொண்டு விட்டது. WIFI வேலை செய்யவில்லை. அதனால் நேற்று வகுப்பறையில் பதிவை வலை ஏற்ற முடியவில்லை. கவலை வேண்டாம். அந்த ஒரு நாள் இழப்பை இந்த வாரம் வெள்ளிக்கிழமைக்குள் கூடுதலாக பதிவுகளை ஏற்றி சரி செய்து விடுகிறேன்
-------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

24.10.14

எனக்கும் இடம் உண்டு

எனக்கும் இடம் உண்டு

பக்திப் பாடல்

இன்றைய பக்தி மலரை 'பத்மஸ்ரீ' டி. எம். செளந்தரராஜன் பாடிய
முருகப் பெருமானின் பாடல் வரிகள் அலங்கரிக்கின்றன. அனைவரும்
படித்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
------------------------------------------
பாடலின் தலைப்பு: எனக்கும் இடம் உண்டு

எனக்கும் இடம் உண்டு
அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்
எனக்கும் இடம் உண்டு

அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்
எனக்கும் இடம் உண்டு

கார்த்திகை விளக்கு பெண்களுடன்
திருக் காவடி சுமக்கும் தொண்டருடன் 

தினம் பூத்திடும் ஞான மலர்களுடன்
ஒரு புல்லாய் முளைத்து தடுமாறும்
புல்லாய் முளைத்து தடுமாறும்
(எனக்கும் ... )

நேற்றைய வாழ்வு அலங்கோலம்
அருள் நெஞ்சில் கொடுத்தது நிகழ்காலம் 

வரும் காற்றில் அணையா சுடர்போலும்
இனி கந்தன் தருவான் எதிர்காலம்
கந்தன் தருவான் எதிர்காலம்
(எனக்கும் ... )

ஆடும் மயிலே என்மேனி
அதில் அழகிய தோகை என் உள்ளம் 

நான் உள்ளம் என்னும் தோகையினால்
கந்தன் உறவு கண்டேன் ஆகையினால்
உறவு கண்டேன் ஆகையினால்
(எனக்கும் ... ).

பாடியவர் - பத்மஸ்ரீ' டி. எம். செளந்தரராஜன் 
===========================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

23.10.14

மனிதனால் எதைத் தாங்கிக் கொள்ள முடிவதில்லை?


மனிதனால் எதைத் தாங்கிக் கொள்ள முடிவதில்லை?

சோதனை மேல் சோதனையால் வந்த சோகத்தில் பூத்த மலர்

"சுற்றும்வரை பூமி
எரியும்வரை நெருப்பு
போராடும்வரை மனிதன்"
என்று எழுதினான் ஒரு கவிஞன்

உண்மை!
சுற்றுவதை பூமி நிறுத்திவிட்டால் என்ன ஆகும்?
நெருப்பு நீர்த்துவிட்டால் என்ன ஆகும்?
மனிதன் போராடுவதை நிறுத்திவிட்டால் என்ன ஆகும்?
எல்லாம் முடிந்து விடும்!

மனிதன் ஆதிமுதல் போராடுவதை என்று நிறுத்தினான்?
விதை முட்டிமோதிப் பூமியிலிருந்து வெளிவந்து விருட்சமாவதைப்
போல மனிதன் பிறந்ததிலிருந்து மண்ணோடு மண்ணாகும்வரை முட்டிமோதிப் போராடிக் கொண்டுதான் இருக்கிறான்.

அவனுடைய ஈறாறு வயதிற்குப் பிறகு இந்தப் போராட்டம் எல்லை
யின்றி பல களங்களில் விரிந்து அவனை மென்மேலும் போராட வைக்கின்றது!

படித்தல்,பணிக்குச் செல்லுதல்,பணிதல், ஈட்டல், காத்தல், ஈதல், சமூகவாழ்க்கை,பதவி, புகழ், அந்தஸ்த்து என்று இந்த மாயவாழ்க்கை
காட்டும் ஜாலங்களில் அவன் அடைந்தது பாதி, தொலைந்தது மீதி
என்று போராடிவிட்டு இறுதியில் சாம்பாலாகிக் கரைந்து போகிறான்.

வெற்றி, தோல்வி, இன்பம், துன்பம், உறவு, பகைமை, வறுமை,
செழுமை, பெருமை, சிறுமை என்று மாறி மாறி வாழ்க்கைச் சுழல்
அவனைப் புரட்டிப் போடும் போதெல்லாம் உணர்வுகள் அவனை
அடித்து உட்காரவைத்தாலும், அறிவு ஆறவைத்து அவனை எழுந்து உடகாரவைத்து, "உன் பிரச்சினைகளவிட நீ பெரியவன்" என்று
மீண்டும், மீண்டும் போராட வைத்துவிடுகிறது!

"தங்கபஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ளே,
கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ளே!"
என்று வாழ்க்கையின் பிறப்பு, இறப்பிலுள்ள சமத்துவத்தைச் சொல்லி
அறிவு மனதைச் சமாதானப் படுத்தி விடுகிறது.

எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ளும் மனிதனால் இரண்டை மற்றும் தாங்கிக் கொள்ள முடிவதில்லை

ஒன்று அவன் நம்பியிருந்தவன் அல்லது இருந்தவள் செய்யும்
துரோகம். இரண்டாவது அவன் யாருக்காகத் தன் வாழ்க்கையை அர்பபணித்துப் பல பணிகள் செய்தானோ, அந்தப் பயனை
அடைந்தவர்கள், செய்நன்றியை மறப்பதோடு அவனை அலைக்
கழிப்பதால் உண்டாகும் நிலைமை

அதைவிட ஒருவனுக்கு, அதிகமான துன்பத்தைத் தருவது, அவன்
பெற்று, ஆசையாய், அருமை பெருமைகளோடு வளர்த்த அவனுடைய பிள்ளையே, அவனுடைய நம்பிக்கையையும், உணர்வுகளையும் சிதைக்கும்போது!

அந்தக்கணங்களில் அவன், தன் தலையில் இடி விழுந்ததுபோல
நொடிந்து உட்கார்ந்து விடுகிறான். மனதில் துக்கம் வெள்ளமாய்
பிரவாகம் எடுக்கும்.

அதே துக்கம், திரைப்படம் ஒன்றில் வரும் நாயகனுக்கும் ஏற்படுகிறது.
அந்தத் துக்கத்தைப் பாட்டில் வடிக்கக் கவியரசரை அழைத்தார்கள்.

வந்தார் கவியரசர், வாங்கிக் கொண்டார் சூழ்நிலையை அவர்
வாயிலிருந்து கருத்தும், சொல்லும் கலந்த பாட்டொன்று சட்டனெ வெள்ளமாய்வர, உடனிருந்த கவியரசரின் உதவியாளர் எழுதி
முடித்தார்

'நன்றிகெட்ட மாந்தரடா: நானறிந்த பாடமடா' என்று ஒரு பாட்டில்
அவர் எழுதியதைப் போல அவர் செய்த உதவிகளை மறந்து,
நன்றியின்றி நடந்து கொண்டவர்கள் அவர் வாழ்வில் அனேகம்
பேர்கள். அதுபோல அவர் சந்தித்த துரோகச் செயல்களும் பல் உண்டு!

அவர் சிறப்பாக அனுபவித்துப் பாடல் எழுத வேண்டும்
என்பதற்காகவே, இறைவன் அந்த நல்ல மனிதரின் வாழ்வில்
பல சோகங்களை வைத்தான் போலும்

அதனால், கொடுக்கப்பட்ட அந்த சூழ்நிலைக்கு அற்புதமான பாடல்
ஒன்றைக் கொடுக்க முடிந்தது அவரால்!

அந்தமாதிரியொரு நிலை ஏற்படும் மனிதன் ஒவ்வொருவனின்
மனதையும் வருடிக் கொடுக்கும் பாடல் அது!

வாருங்கள் பாடலைப் பார்ப்போம்
------------------------------------
"சோதனைமேல் சோதனை போதுமடா சாமி
வேதனைதான் வாழ்க்கையென்றால் தாங்காது பூமி
(சோதனைமேல்)

சொந்தம் ஒரு கைவிலங்கு நீ போட்டது - அதில்
பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது
(சோதனைமேல்)

ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல - நான்
அவதாரமில்லையம்மா தத்துவம் சொல்ல
பரிகாரம் தேடீ நான் எவ்விடம் செல்ல - எனக்கு
அதிகாரமில்லையம்மா வானகம் செல்ல
ஒரு நாளும் நான் இதுபோல் அழுதவனல்ல - அந்தத்
திருநாளை மகன் கொடுத்தான் யாரிடம் சொல்ல!
(சோதனைமேல்)

பெண் (மருமகளாக படத்தில் வரும் பிரமிளா தன் குரலில் வசன நடையில் சொல்வது )

மாமா, காஞ்சுபோன பூமியெல்லாம் வத்தாத நதியைப் பார்த்து ஆறுதல் அடையும் அந்த நதியே காஞ்சி போயிட்டா.... துன்பப் படுற்வங்க எல்லாம்
அவங்க கவலையை தெய்வத்துக்கிட்ட முறையிடுவாங்க, ஆனா, தெய்வமே கலங்கிநின்னா - அந்த தெய்வத்துக்கு யாராலே ஆறுதல் சொல்ல முடியும்?

பாட்டு தொடர்கிறது:

தானாடவில்லையம்மா சதையாடுது - அது
தந்தை என்றும் பிள்ளை என்றும் விளையாடுது
பூவாக வைத்திருந்தேன் மனமென்பது - அதில்
பூநாகம் புகுந்து கொண்டு உறவென்றது
அடிதாங்கும் உள்ளமிது இடி தாங்குமா?
இடி போல பிள்ளை வந்தால் மடி தாங்குமா?
(சோதனை மேல் சோதனை)"

படம்: தங்கப் பதக்கம் - வருடம்: 1974
பாடலை எழுதியவர்: கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்: திரு.T.M.S,
இசை: திரு.M.S விஸ்வநாதன்
இயக்கம்: திரு. P.மாதவன்
நடிப்பு: நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகை.பிரமிளா

சோதனைமேல் சோதனை போதுமடா சாமி
வேதனைதான் வாழ்க்கையென்றால் தாங்காது பூமி
என்று பாடலுக்குச் சிறப்பான துவக்கத்தைக் கொடுத்தவர், சொந்தம்
என்பது இறைவன் கொடுத்தது, அந்த சொந்தத்தை பந்த பாசமாக்கி அவதிப்படுவது மனிதன்தான் என்பதை, சொந்தம் ஒரு கைவிலங்கு
நீ போட்டது - அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது என்று சொன்னது அற்புதம்.

அடுத்து வரும் ஆறு வரிகளில் உள்ள சொல் விளையாட்டைப்
பாருங்கள் – எல்லா வரிகளுமே சொல்ல, செல்ல, அல்ல என்று
எதுகையில்,அமரத்துவமான கருத்துக்களுக்கு அளவெடுத்துத்
தைதத ஆடைபோல அருமையாகப் பொருந்தி நிற்கும்

"ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல - நான்
அவதாரமில்லையம்மா தத்துவம் சொல்ல
பரிகாரம் தேடீ நான் எவ்விடம் செல்ல - எனக்கு
அதிகாரமில்லையம்மா வானகம் செல்ல
ஒரு நாளும் நான் இதுபோல் அழுதவனல்ல - அந்தத்
திருநாளை மகன் கொடுத்தான் யாரிடம் சொல்ல!"

பூவாக வைத்திருந்தேன் மனதை - அதில் உறவென்று சொல்லிக்
கொண்டு ஒரு பூநாகம் புகுந்து கொண்டது என்று சொல்வதற்காக
அடுத்து எழுதிய ஆறு வரிகளுமே பாடலின் முத்தாய்ப்பான
வரிகளாகும்.

தானாடவில்லையம்மா சதையாடுது - அது
தந்தை என்றும் பிள்ளை என்றும் விளையாடுது
பூவாக வைத்திருந்தேன் மனமென்பது - அதில்
பூநாகம் புகுந்து கொண்டு உறவென்றது
அடிதாங்கும் உள்ளமிது இடி தாங்குமா?
இடி போல பிள்ளை வந்தால் மடி தாங்குமா?

என்னவொரு அற்புதமான சிந்தனை வெளிப்பாடு பாருங்கள். அதனால்தான் அவரைக் கவியரசர் என்கிறோம்

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

21.10.14

வாத்தியாரின் தீபாவளி வாழ்த்துக்கள்!


வாத்தியாரின் தீபாவளி வாழ்த்துக்கள்!

மாணவக் கண்மணிகளுக்கும், வகுப்பறைக்கு வந்து செல்லும் நண்பர்களுக்கும், சக வலைப்பதிவாளர்கள் அனைவருக்கும் வாத்தியாரின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

அன்புடன்,
வாத்தியார்
---------------------------------------------------------
Diwali also known as Deepavali and the "festival of lights", is an ancient 
Hindu festival celebrated in autumn every year. The festival spiritually 
signifies the victory of light over darkness, knowledge over ignorance, 
good over evil, and hope over despair. The festival preparations and rituals 
typically extend over a five day period, but the main festival night of Diwali
 coincides with the darkest, new moon night of the Hindu Lunisolar month 
Kartika. In the Gregorian calendar, Diwali night falls between mid-October 
and mid-November.

The Origin of Diwali

Diwali can be traced back to ancient India, when it was probably an important 
harvest festival . However, there are various legends pointing to the origin of 
Diwali or 'Deepawali.' Some believe it to be the celebration of the marriage of 
Lakshmi with Lord Vishnu. Whereas in Bengal the festival is dedicated to the 
worship of Mother Kali , the dark goddess of strength. Lord Ganesha , the 
elephant-headed God, the symbol of auspiciousness and wisdom, is also 
worshiped in most Hindu homes on this day. In Jainism , Deepawali has an 
added significance to the great event of Lord Mahavira attaining the eternal 
bliss of nirvana . Diwali also commemorates the return of Lord Rama along 
with Sita and Lakshman from his fourteen year long exile and vanquishing the 
demon-king Ravana. In joyous celebration of the return of their king, the 
people of Ayodhya, the Capital of Rama, illuminated the kingdom with earthen 
diyas (oil lamps) and burst crackers.

Source: wikipedia
-------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

Astrology: நாளும், கோளும் நம்மை என்ன செய்யும்?


Astrology: நாளும், கோளும் நம்மை என்ன செய்யும்?

நாள் என்பது நட்சத்திரங்களையும் கோள் என்பது நவக்கிரகங்களையும் குறிப்பதாகும். இறைபக்தி மிகுந்தவர்களுக்கு அவைகளால் எந்தத்
துன்பமும் ஏற்படாது என்பது செய்தி. அதை வலியுறுத்திச் சொல்லும் விதமாகக் கந்தரலங்காரத்தில் ஒரு பாடல் உள்ளது. அதைக் கீழே கொடுத்துள்ளேன்.

நாளென் செயும், வினைதான் என் செயும் எனை நாடி வந்த
கோளென் செயும், கொடுங்கூற்று என் செயும் குமரேசர் இரு
தாளும், சிலம்பும் சதங்கையும், தண்டையும் சண்முகமும்
தோளும், கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே”
- அருணகிரியார் அருளிய கந்தர் அலங்காரப் பாடல்களில் ஒரு
முக்கியமான பாடல் இது!

நல்லவனுக்கு நாளும் கோளும் எவ்வித தீங்கும் செய்யாது
என்பதையே அவர் அப்படி குறிப்பிடுகிறார். அருணகிரிநாதர்,
நாளென்செயும் வினைதான் என்செயும் எனை நாடி வந்த கோள்
என் செய்யும் என்று அடித்துச் சொல்கிறார். முருகன் அருள் முன்,
கிரகங்கள் வலிமை இழந்து போகும் என்பதே அதன் பொருள்.

சரி, நாளையும் கோளையும் நாம் பார்க்க வேண்டாமா?

பார்க்க வேண்டும்.

நாமென்ன அருணகிரியார் போல, அல்லது குமரகுருபரர் போல
முழுமையாக முருகனருள் பெற்றவர்களா? முருகனை நேரில் சந்தித்தவர்களா? இல்லையே! நாம் முருக பக்தர்கள் என்பது
மட்டுமே உண்மை. மற்றபடி நாம் சாதாரண மனிதர்கள்தான்.

நம் ஜாதகப்படிதான் நம் வாழ்க்கை!
Lord Muruga will give us withstanding power. 
தாக்குப்பிடிக்கும் சக்தியைக் கொடுப்பார்!

எல்லோருக்குமே இறையருள் கிடைத்துள்ளதா? இறையருள்
கிடைத்தவர்கள் கோடியில் ஒருவரே! அவர்களை நாம் மகான்கள்
என்கிறோம்.

திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்?
அவைகள் சுப நாட்கள் என்பதால் அவற்றைத் தேர்வு செய்து
அதில் செய்கிறார்கள். ஒரு ஆண்டில் 55 முதல் 60 நாட்கள் வரைதான்
முகூர்த்த நாட்கள் இருக்கும். மற்ற நாட்கள் எல்லாம் சுப நாட்கள் இல்லை.

எந்த முகூர்த்த நாளாவது செவ்வாய்க்கிழமை அல்லது சனிக்கிழமை
யில் வருகிறதா, பாருங்கள்? வராது. அதாவது எந்தத் திருமணமாவது செவ்வாய்க் கிழமை அல்லது சனிக்கிழமைகளில் செய்கிறார்களா
என்று பாருங்கள். செய்ய மாட்டார்கள். அவைகள், அதாவது அந்த
இரண்டு கிரகங்களுக்கு உரிய நாட்களும் திருமணங்களுக்கு ஆகாத நாட்களாகும்.

ராகுகாலங்களில், கேது காலங்களில் (எமகண்டங்களில்)
சுப காரியங்களைச் செய்ய மாட்டார்கள். முகூர்த்த நாட்களில்கூட
அந்த நேரத்தைத் தவிர்த்து விடுவார்கள்.

ஏன்? அந்த நேரத்தில் செய்தால், செய்யும் காரியம் முழுமை பெறாது.
உங்கள் மொழியில் சொன்னால் ஊற்றிக் கொண்டுவிடும். அதே போல அஷ்டமியன்று (எட்டாவது திதியன்று) எந்த சுபகாரியங்களையும்
செய்ய மாட்டார்கள்.

திருமணம் மட்டும்தான் சுபகாரியமா? வீடு வாங்குதல், பிறந்த
குழந்தையை அதன் பாட்டி வீட்டில் இருந்து (அதாவது அது பிறந்த
வீட்டில் இருந்து) நம் வீட்டிற்கு முதன் முதலில் அழைத்து வருதல்
போன்று பலவிதமான சுபகாரியங்கள் நம் வாழ்க்கையில் உள்ளன.

அனுபவப் பட்டவர்களுக்கு அதெல்லாம் தெரியும்.

சரி, எததெற்கு நாளையும் நேரத்தையும் பார்க்க வேண்டாம்?

சாப்பிடுவதற்கும் தூங்குவதற்கும் தினசரி வேலைக்குச் செல்வதற்கு
அதை எல்லாம் பார்க்க வேண்டாம். பசிக்கும்போது சாப்பிட
வேண்டியதுதான். கண் அயர்ச்சி கொள்ளும்போது தூங்க
வேண்டியதுதான். குறிப்பிட்ட நேரத்தில் தினமும் பணிக்குச்
செல்ல வேண்டியதுதான்.

அதுபோல தண்ணியடிக்கும் பழக்கம் இருப்பவர்கள், டாஸ்மாக்
கடைக்குப் போவதற்கெல்லாம் நேரம் காலம் பார்க்க வேண்டாம்.
செட் சேர்ந்தால், அதாவது தோழமைகள் அழைத்தால் போக
வேண்டியதுதான்!

தந்தை இறந்துவிட்டால்,ஒரு ஆண்டிற்கும், தாய் இறந்துவிட்டால்,
ஆறு மாதங்களுக்கும், மனைவி இறந்துவிட்டால்,மூன்று
மாதங்களுக்கும்  சுபகாரியங்களைச் செய்யக்கூடாது!

அதுபோல ஜென்ம நட்சத்திரத்தில் (அதாவது ஒருவருடைய
பிறந்த நட்சத்திரத்தன்று) அவருக்கு திருமணத்தை செய்யக்கூடாது.
இது ஆண், பெண் இருவருக்குமே பொருந்தும். அது சுபநாளாக
இருந்தாலும், அந்த நாளின் நட்சத்திரத்தையும் பார்க்க வேண்டும்.

கூடாத நாட்களையும், ஆகாத நட்சத்திரங்களையும் பட்டியலிட்ட பாடல் ஒன்று உள்ளது. அதைக் கீழே கொடுத்துள்ளேன்.

ஆதிரை பரணி கார்த்திகை
   ஆயில்யம் முப்பூரங் கேட்டை
தீதிரு விசாகஞ் சோதி
   சித்திரை மகமீ ராறும்
மாதங் கொண்டார் தாரார்
   வழிநடைப் பட்டார் மீளார்
பாய்தனிற் படுத்தார் தேறார்
   பாம்பின் வாய்த் தேரைதானே!

பாடலுக்கான விளக்கம்:

1. பரணி
2. கார்த்திகை
3. திருவாதிரை
4. ஆயில்யம்
5. மகம்
6. பூரம்
7. சித்திரை
8. சுவாதி
9. விசாகம்
10. கேட்டை
11. பூராடம்
12. பூரட்டாதி

ஆகிய 12 நட்சத்திர நாட்களிலும் நம்மிடம் கடன் வாங்கிச் சென்றவர்கள் திருப்பித் தரமாட்டார்களாம். நெடுந்தூரப் பயணம் சென்றவர்கள் (உரிய நேரத்தில்) திரும்ப மாட்டார்களாம்.நோயில் படுத்தவர்கள் குணமாகித் திரும்புவதும் தமதமாகுமாம்

”என்னிடம் பணம் வாங்கிச் சென்ற கடன்காரன் எப்படித் திருப்பித்
தரமாட்டான்? சட்டையைப் பிடித்து அல்லது கழுத்தில் துண்டைப்
போட்டுப் பிடித்து திருப்பி வாங்கிவட மாட்டேனா?” என்று
தெனாவட்டாக யாரும் கேட்காதீர்கள். உங்களிடம் கடன் வாங்கிச்
சென்றவன் நன்றாக இருந்தால் தானே சுவாமி உங்களுக்குத் திரும்பத் தருவான். அதே நட்சத்திர நீயூட்டன் விதி அவனுக்கும் உண்டல்லவா?
கெட்ட நாளில் வாங்கிய அவன் கெட்டுப் போய் இருந்தால் என்ன
செய்வீர்கள்? . செலவு கணக்கில் எழுத வேண்டியதுதான்.
அதை நினைவில் வையுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
====================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

20.10.14

மாமனிதர்களுக்கு மரணமில்லை!


மாமனிதர்களுக்கு மரணமில்லை!

நாச்சிமுத்து மகாலிங்கம் என்ற பெயரை அறியாத கோவை வாசிகள்
இருக்க மாட்டார்கள். அத்துடன் தமிழகம் முழுமையும்
அறிந்த பெயர் அது!

பல அரிய சாதனைகளைச் செய்த மாமனிதர் அவர்!

21.3.1923 அன்று பொள்ளாச்சியில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த
அவர், சென்னை லயோலா கல்லூரியிலும் பிறகு கிண்டி பொறியியற் கல்லூரியிலும் படித்துப் பொறியாளரானவர் அவர்.

அவருடைய தந்தையார் பொள்ளாச்சி நகராட்சி தலைவராக
இருந்தமையால், மகாலிங்கம் அவர்களும் அரசியல் வாழ்க்கையில்  ஈர்க்கப்பெற்று அன்றைய காங்கிரஸ் இயக்கத்தின் மூலம் சட்டமன்ற உறுப்பினராகி, மூன்று முறை தொடர்ந்து வெற்றி பெற்று சுமார்
15 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராக விளங்கினார்.
(1952 முதல் 1967வரை)

பரம்பிக்குளம் ஆளியார் அணைத் திட்டம் உருவாகக் காரணமாக
இருந்தவர் அவர்.

முன்னாள் அமைச்சர்கள் திரு.கே. காமராஜர், திரு.சி.சுப்பிரமணியம்,
திரு வெங்கட்ராமன் என்று அத்தனை தலைவர்களுடனும் நட்பாக
இருந்தவர் அவர்.

1967ம் ஆண்டில் வங்கிகள் தேசியமான பிறகு வங்கிகள் உதவியுடன்
பல தொழில்களைத் துவங்கி அவற்றை தன்னுடைய அயராத
உழைப்பால் விரிவு படுத்தினார்.

இன்று அவருடைய சக்தி குழுமத்தில் நிறைய நிறுவனங்கள் செயல்
பாட்டில் உள்ளன (Sakthi Group of Companies is a name to reckon with as
 it has forayed into sugar, distilling, automobiles, finance, etc.)

வள்ளலார் (ராமலிங்க சுவாமிகள்) மீது அதீத பற்று உடையவர்.
அதுபோல வேதாத்ரி மகரிஷி சுவாமிகளிடமும் பற்றுடையவராக
இருந்தவர். ஆன்மீகத்தில் மிகவும் ஈடுபாடு உடையவர். பல
பதிகங்களை புத்தக வடிவில் வெளிவர ஏராளமான பொருள் உதவி
செய்தவர்.

இப்படி அவரைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

அப்படிப்பட்ட மாமனிதர் 2.10.2014 அன்று இயற்கை எய்தி விட்டார்
(91 வயது)

மாமனிதர்களுக்கு மரணமில்லை. மக்களின் மனதில் அவர்கள்
என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்!

அவரைப் பற்றிய மேலதிக விபரங்களுக்கான சுட்டி
URL: http://en.wikipedia.org/wiki/N._Mahalingam

அவருக்காக சக்தி குழுமத்தின் மாத இதழில் ஒரு விசேட அஞ்சலி
சிறப்பிதழ் ஒன்றை அவருடைய 13ம் நாள் கிரியைகள் நடைபெற்ற
அன்று வெளியிட்டார்கள்  (14.10.2014)

அந்த இதழில் அடியவன் எழுதிய அஞ்சலி கட்டுரை ஒன்றும்
வெளியாகி உள்ளது.

உங்கள் பார்வைக்காக அதைக் கீழே கொடுத்துள்ளேன்.

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------



வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

18.10.14

வானத்தையே கூரையாக்கிக் கொண்ட சனீஷ்வரன்!


திருநள்ளாற்றில் உறையும் சனீஷ்வரர்

வானத்தையே கூரையாக்கிக் கொண்ட சனீஷ்வரன்!

கிரகங்களில் சனீஷ்வரன் ஒருவனுக்குத்தான் ஈஸ்வர பட்டம். வேறு எந்த கிரகத்திற்கும் அந்தப் பட்டம் கிடையாது! அரச கிரகங்களான சூரியனுக்கும், சந்திரனுக்கும்கூடக் கிடையாது.

சனீஷ்வரனுக்காக யாரும் யோசிக்காதீர்கள்! சனீஷ்வரனுக்காக யாரும் பயப்படாதீர்கள். அவன்தான் நம் ஆயுள்காரகன். அத்துடன் அவன்தான் நமது கர்மகாரகன். நாம் என்ன வேலை செய்ய வேண்டும் என்று நிர்ணயிப்பவன் அவன்தான்!

நீங்கள் மாவட்ட ஆட்சியாளராக வேண்டுமா? அல்லது அமைச்சராக வேண்டுமா? அல்லது பெரிய தொழிலதிபராக வேண்டுமா? அவன் அருள் இருந்தால்தான் அது நடக்கும். இல்லை என்றால் நடக்காது.

ஒரு ஜாதகன், ஜாதகப்படி மாடு மேய்க்க வேண்டுமென்றால், அவன் மாடுகளைத்தான் மேய்க்க வேண்டும். அவற்றை வைத்துத்தான் பிழைப்பு நடத்த வேண்டும். அதற்காக மாடு மேய்ப்பதைக் கேவலமாக நினைக்காதீர்கள். நகரங்களில் அல்லல்படும் ஒரு கணினிப் பொறியாளனைவிட மாடு மேய்ப்பவன் சுகமாக, நிம்மதியாக இருக்கிறான். பால் லிட்டர் ரூ 46:00 ற்கு விற்கிறது. அதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்

ஒருவனுக்கு அற்ப ஆயுளா? அல்லது மத்திம ஆயுளா? அல்லது தீர்க்கமான பூரண ஆயுளா என்பதைத் தீர்மானிப்பவனும் அவன் தான். சிலர் 50 வயதைத் தாண்டு முன்பாகவே, விடை பெறாமலேயே, வானகம், அதாவது போட்டது போட்டபடி உலகைவிட்டுச்  சென்று விடுவார்கள். அதெல்லாம் நிர்ணயிக்கப்பெற்ற ஆயுளின்படிதான் நடந்திருக்கும்!

எனக்கு சனீஷ்வரனை மிகவும் பிடிக்கும். என் ராசி நாதன் அவன் தான். ராசி நாதன் என்பதற்காக அவன் என்னைச் சும்மா விடவில்லை. அவனுடைய மகாதிசையில் என்னைப் பலமுறை புரட்டிப் போட்டிருக்கிறான். மொத்தம்  19 ஆண்டுகள். அதில் சுயபுத்தி நீங்களாக மீதமுள்ள 16 வருடங்களும் பலவிதமான கஷ்டங்களுக்கு ஆளாகியுள்ளேன். என்னை எழுத்தாளனாக்கியதும் அவன்தான் அதே சனி திசையின் பின் பகுதியில்தான் நான் எழுதத் துவங்கினேன். எனக்கு ஏற்பட்ட கஷ்டங்களும், துன்பங்களும், சோதனைகளும், எதிர்கொண்ட துரோகங்களும் பலவிதமான அனுபவங்களைக் கொடுத்தது. அந்த அனுபவங்கள்தான் என்னுடைய எழுத்துக்களில் பிரதிபலிக்கின்றன! எனது சிறுகதைகளில் வருகின்றன!

சரி சொல்ல வந்த செய்திக்கு வருகிறேன்:

திருநள்ளாறுதான் சனீஷ்வரனுக்கான ஸ்தலம். திருநள்ளாறைப் பற்றியும், சனீஷ்வரனைப் பற்றியும் ஏராளமான செய்திகள் உள்ளன. அவற்றை இன்னொருநாள் விரிவாகப் பார்ப்போம். இப்போது ஒரே ஒரு செய்தியை மட்டும் சொல்கிறேன்.

ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்தர் சைவமதத்திற்குப் பெரும் தோண்டாற்றினார். அவர்காலத்தில் ஜைனர்கள் எல்லா திசைகளும் ஊடுருவிக் கொண்டிருந்தார்கள். அவர்களைத் தடுத்து நிறுத்தி சைவத்தை மேலோங்கச் செய்தது திருஞானசம்பந்தப் பெருமான்தான் என்றால் அது மிகையல்ல!

மதுரையில் நடந்த விவாதத்தில் ஜைனர்கள் விட்ட சவாலை ஏற்றுக்கொண்டு சைவத்தின் மேன்மையை நிலை நிறுத்தினார் அந்த மகான்.

ஜைனர்கள் தங்கள் மதத்தின் முக்கியமான மந்திரம் ஒன்றை ஒரு பனை ஓலையில் எழுதிக் கொடுத்தார்கள். திருஞானசம்பந்தர் தேவாரத்தில்
உள்ள 49ஆவது பாடலை எழுதிக்கொடுத்தார். அது திருநள்ளாற்றில்
உறையும் சிவபெருமானுக்காக உள்ள பதிகம். இரண்டு ஓலைகளையும்
தீயில் இட்டார்கள். அவர்கள் கொடுத்த ஓலை நொடியில் வெந்து சாம்பலாகிவிட்டது. ஆனால் ஞானசம்பந்தர் எழுதிக் கொடுத்த ஓலை அப்படியே மீண்டு வெளியில் வந்தது. அதற்கு ஒன்றும் நேரவில்லை. திருநள்ளாற்றில் உறையும் சிவனாருக்கும் சனீஷ்வரனுக்கும் அத்தனை
சக்தி. அதனால்தான் நாம் திருநள்ளாற்றைப் பக்தியுடன் வணங்கவேண்டும்.

அதே போல நாம் அறியாத இன்னொரு ஸ்தலமும் உள்ளது.

மஹாராஷ்ட்டிரா மாநிலத்தில், நாசிக்கிற்கு அருகே உள்ள சனி சிக்னாபூர் என்னும் கிராமத்தில் உறையும் சனி பகவான் கோயில்தான் அது.
சனி பகவான் சுயம்புவாக அங்கே எழுந்தருளியுள்ளார்.

காலம் யாருக்கும் தெரியாது. கலியுக துவக்கத்தில் இருந்து அங்கே அவர் இருப்பதாக அந்தப் பகுதி மக்கள் சொல்கிறார்கள்.

காலம் காலமாக பல பக்தர்கள் ஒன்றுகூடி சனி பகவானுக்கு அங்கே கோயில் ஒன்றை எழுப்ப முயன்றார்கள். சனீஷ்வரன் பக்தர்களின் கனவில் வந்து, எனக்கு கூரையுடன் (with Roof) கூடிய கோயிலைக் கட்டாதீர்கள். வானம்தான் எனக்குக் கூரை என்று கூறிவிட்டார்.

இன்றுவரை அவர் திறந்த வெளியில் நின்றுதான் அவர் நமக்குக் காட்சி தருகிறார்.

சிலர் சொல்லக் கேட்காமல் கட்டங்களை (கோயிலை) கட்ட முயன்றபோது அவை இடிந்து, விழுந்து விட்டன.

சனி பகவான் வெய்யிலையும் மழையையும் தாங்குவார். ஆனால் அங்கே வசிக்கும் மக்களால் முடியுமா? முடியாதல்லவா? ஆகவே அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் வீடுகளில்தான், வீட்டைக் கட்டிக்கொண்டுதான் வசிக்கிறார்கள், ஆனால் எந்த வீட்டிற்கும் கதவுகள் இல்லை. பூட்டுக்களும் இல்லை. சனீஷ்வரன்மேல் அவ்வளவு நம்பிக்கை அவர்களுக்கு. யாராவது நுழைந்து திருட முயன்றால் சனீஷ்வரன் தண்டிப்பார் என்கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த ஊரில், தேசிய வங்கி ஒன்றின் கிளையைத் திறந்தார்கள். (யுகோ பேங்க்) அந்த வங்கிக்கும் கதவுகள் இல்லை.

அதுதான் ஆச்சரியமான விஷயம்.

வாய்ப்பிருந்தால் ஒருமுறை அங்கே சென்று சனீஷ்வரனை தரிசித்துவிட்டு வாருங்கள். அந்த சனீஷ்வரன் கோயிலைப் பற்றிய சில படங்களை உங்கள் பார்வைக்காகக் கீழே கொடுத்துள்ளேன்.

1

2
3


4
5

6
-------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------

மேலதிக விவரங்களுக்கு இந்த சுட்டியைத் தட்டிப் பாருங்கள்:
URL: http://en.wikipedia.org/wiki/Shani_Shingnapur

20.10.2014 திங்கட்கிழமையன்று வகுப்பறைக்கு விடுமுறை. அன்று வரவேண்டிய பாடம்தான் இன்று வந்துள்ளது. அதை மனதில் வையுங்கள்

அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

17.10.14

இருவிழிகளால் முழுமையாகக் காண்பதற்கு இயலாதது எது?


இருவிழிகளால் முழுமையாகக் காண்பதற்கு இயலாதது எது?

பக்தி மலர்

17.10.2014

இன்றைய பக்தி மலரை 'பத்மஸ்ரீ' சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய பாடல் ஒன்று அலங்கரிக்கின்றது. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
----------------------------------------------
உன்னுடைய வேல் ஒன்றே
உறுதுணையாய் வருகிறது!
(உன்னுடைய ... )

கும்மிருட்டுப் பாதையிலும்
கோலாகத் தெரிகிறது!
(உன்னுடைய ... )

வருகிறது ... வேல் வருகிறது

என்னுடைய ஆட்டமெல்லாம் 
நீ அமைத்த மேடையிலே
என்னுடைய ஆட்டமெல்லாம்
நீ அமைத்த மேடையிலே

இசைவதுவும் ... அசைவதுவும்
இசைவதுவும் அசைவதுவும்
நீ காட்டும் ஜாடையிலே
(உன்னுடைய ... )

பன்னிரெண்டு தோள்களெனும்
பரந்தவெளி பறந்துவர
சின்னமனச் சிறகதுதான்
சிறிதேனும் பயின்றிடுமோ

தென்பழநி ஷண்முகத்தின்
தேன் முகத்தைக் காண்பதற்கு 
என்முகத்தில் அமைந்திருக்கும்
இருவிழியால் இயன்றிடுமோ
(உன்னுடைய ... )

சூழ்ந்திருக்கும் இயற்கையெல்லாம்
சொல்லுதய்யா திருப்புகழை
சுற்றி வரும் உலகமெல்லாம்
துதிக்குதய்யா உன் பெயரை

வாழ்ந்திருக்கும் காலமெல்லாம்
வணங்கிடுவேன் திருவடியை 
வர இருக்கும் பிறவியிலும்
வாழ்த்திடுவேன் நின் அருளை
(உன்னுடைய ... )

கும்மிருட்டுப் பாதையிலும்
கோலாகத் தெரிகிறது 
(உன்னுடைய ... )

வருகிறது ... துணையாய் வருகிறது.

பாடிப் பரவசப்படுத்தியவர்: 'பத்மஸ்ரீ' சீர்காழி கோவிந்தராஜன் 
=============================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

16.10.14

Quiz.no.69 Answer: நாளைப் பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு!


Quiz.no.69 Answer: நாளைப் பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு!

புதிர் எண் 69ற்கான விடை

16.10.2014
--------------------------------------
நேற்றையப் பதிவில், அம்மணி ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து, அதை அலசி, ஒரு கேள்விகளுக்கான பதிலை எழுதும்படி கேட்டிருந்தேன்.

கேட்கப்பெற்றிருந்த கேள்வி:

”ஜாதகியின் 7ஆம் வீட்டை அலசிப் பதில் எழுதுங்கள். அவருக்கு திருமணம் நடைபெற்றதா? அல்லது திருமணமாகவில்லையா? திருமணம் நடைபெற்றது என்றால் எப்போது நடைபெற்றது? திருமணமே ஆகவில்லை என்றால், ஏன் ஆகவில்லை என்பதை அலசி பதிலை எழுதி அனுப்புங்கள். கேள்விக்கு உரிய பதிலை மட்டும் எழுதுங்கள்.” என்று கூறியிருந்தேன்.

சரியான பதில்:

1.  ஜாதகிக்குத் திருமணம் ஆனது.
2. அதீதத் தாமதத்துடன் அவருடைய 37வது வயதில் அவருக்குத் திருமணம் நடைபெற்றது.
3. சனி திசை, குரு புத்தியில் ஜாதகிக்குத் திருமணம் நடைபெற்றது.

மிகச் சரியான பதிலை ஒருவரும் எழுதவில்லை. ஆனால் ஒட்டிய பதிலை,  தங்களுடைய அலசலை எழுதியவர்கள் மொத்தம் 10 பேர்கள். அவர்களின் பெயரைக் கீழே கொடுத்துள்ளேன். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

எந்த வயது என்பதை ஒருவரும் எழுதவில்லை. அத்துடன் எழுதியவர்கள் சனி திசை என்று குறிப்பிட்டுள்ளார்கள். சனி திசை குரு புத்தி என்று குறிப்பிடவில்லை. ஆகவே யாருக்கும் 100 மதிப்பெண்கள் இல்லை. அந்தப் பத்துபேர்களுக்கும் 60 மதிப்பெண்கள் (பொதுவாகக் கொடுத்துள்ளேன்)

தசா/தசா புத்திகள்தான் பலனை அளிக்கக்கூடியவை. அளிக்க வல்லவை!
இந்த ஜாதகியின் திருமணம் அதீத தாமதம் ஆனதற்குக் காரணம் அடுத்தடுத்து வந்த மகா திசைகள்தான்!

1. ஏழாம் அதிபதி குரு நீசம். அத்துடன் வக்கிரமாகியும் உள்ளார். நீசபங்கமும் ஆகியுள்ளார்
2. அவர், அதாவது குரு பகவான், சனியுடன் சேர்ந்துள்ளார். சனி எட்டாம் அதிபதி. அத்துடன் அவரும் வக்கிரகதியில் உள்ளார்
ஆகவே அந்த இரண்டு கிரகங்களின் திசைகளும் ஜாதகியின் திருமணத்திற்குச் சாதகமாக இல்லை.

அந்த இரண்டு கிரகங்களும் வக்கிரம் பெற்றுள்ளதைச் சுட்டிக் காட்டும் விதமாக அட்டவணை ஒன்றைக் கொடுத்திருந்தேன். அதை எத்தனை பேர்கள் கவனித்தார்கள் என்பது தெரியவில்லை!

ஜாதகியின் 37வது வயதில் சனி திசை, குரு புத்தியில்  ஜாதகிக்குத் திருமணம் நடந்தது.

சனி திசை முடிந்து, அடுத்து வந்தது புதன் மகா திசை. புதன் லக்கினாதிபதி. அவர் நல்ல நிலைமையில் லக்கினத்திலேயே உள்ளார். அத்துடன் அவர் ஏழாம் வீட்டை நேரடியாகப் பார்க்கிறார். ஆகவே அவருடைய திசையில் ஜாதகியின் வாழ்க்கை திருமண யோகத்துடன் இருக்க வேண்டும். திருமணமும் நடைபெற்றது. அதற்கு உதவும் விதமாக சனி திசையின் கடைசி புத்தியான குரு புத்தியில், அதாவது ஏழாம் வீட்டுக்காரன் குருவின் புத்தியில் (sub period) திருமணத்தைக் குரு பகவான் நடத்திவைத்தார்

அன்புடன்,
வாத்தியார்
=====================================================================
1
/////Blogger Sakthivel K said...
வணக்கம் சார்...
அம்மனிக்கு திருமணம்!!!
சனி திசையில் நடந்திருக்கும்.
அதேசனிதிசையில்
பிரிவினையும் நடந்திருக்கும்.
புதனும்,சுக்கிரனும் கைகொடுப்பார்கள்./////
-------------------------------------------------------
2
/////Blogger valli rajan said...
Dear Guruji,
1.Guru is neecham but it become neechabanga raja yogam because it is with lord eight lord. eight lord in its own house. 
2.Venus in 12 house but has jupiter aspect.
3.Strong Lagna lord and it's view on 7th house.
4.Guru view on 2nd house.
5.Guru in its own house and form gajakesari yogam in navamsa.
6.Venus is also well placed in navamsa.
Definitely there is marriage, it should have been on saturn dasa mercury sub period./////
-----------------------------------------------------
3
/////Blogger Dallas Kannan said...
Respected Sir
Here is my quick analysis.
Definitly Married: 
1. Laknathipathi Budha in laknam and looks 7th house.
2. 7th lord Guru is in 8th house and neecham, but in own house in navamsam
3. Sukra is in 12th house, but its own house.
Mariage is delayed due to Guru in 8th house with Sani and Sun looks at it. She married in the mid sani dasa, Sani dasa/Chandra Budhi/////
-------------------------------------------------------
4
/////Blogger Palani Shanmugam said...
மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
மிதுன லக்ன ஜாதகிக்கு, லக்னாதிபதி புதன் லக்னத்திலேயே ஆட்சி பெற்று இருக்கிறார். அவருக்கு தீயவர்கள் பார்வை இல்லை. குடும்ப ஸ்தான அதிபதி சந்திரன் திரிகோணத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து சனியின் 10ம் பார்வையை பெறுகிறது. அதனால் புனர்பூ தோஷம் ஏற்படுகிறது. எனவே திருமணம் தாமதமாகும்.
ஏழாம் அதிபதியான குரு நீச்சம் அடைந்திருந்தாலும் சந்திரனுக்கு கேந்திரத்தில் இருப்பதால் நீசபங்க ராஜ யோகமாகி விடுகிறது. இந்த அமைப்பு கஜகேசரி யோகத்தையும் ஏற்படுத்துகிறது. நவாம்சத்திலும் குரு மீனத்தில் ஆட்சி பெற்று சந்திரன் சேர்க்கை பெற்றுள்ளது.
இத்துடன் செவ்வாயும் சுக்கிரனும் 6 மற்றும் 5ம் வீடுகளுக்கு அதிபதிகளாகி பரஸ்பர கேந்திரங்களில் இருப்பதாலும் ஜாதகிக்கு திருமணம் நடைபெற்று இருக்கும். அதிலும் யோக்காரகனான சுக்கிரன் ரிஷபத்தில் ஆட்சி பெற்று அமர்ந்து குருவின் பார்வையைப் பெறுகிறது. எனவே ஜாதகிக்கு 1989 ல் அவருடைய 28 வது வயதில் சனி திசை சுக்கிர புக்தியில் திருமணம் நடைபெற்று இருக்கும்.//////
---------------------------------------------------------
5
/////Blogger GOWDA PONNUSAMY said...
அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
கொடுக்கப் பட்டுள்ள புதிருக்கான விடை:
ஜாதகிக்கு திருமணம் தனது 31வது வயதில் சனி தசை சூரியன் புத்தியில் நடந்திருக்க வேண்டும்.
அலசல்:
1) மிதுன லக்கினத்தில் லக்கினாதிபதியும், சுகாதிபதியுமான புதன் சுப பலத்தில் இருந்து களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டையும் பார்வை செய்கிறார். லக்கினமும்,4 மற்றும் 7ம் இடமும் சுப பலம் பெற்றுள்ளன.
2) குடும்பாதிபதி சந்திரன் பூர்வபுன்னிய ஸ்தானத்தில் அமர்வு, ஸ்தானாதிபதி சுக்கிரன் 12ல் உச்சம்.
சுக்கிரனுக்கு 12மிடம் மறைவு இல்லை என்பது ஜோதிட விதி.
3) ஏழாமதிபதி குரு எட்டில் மறைவுடன் நீச்சமடைகிறார். ஆயினும் எட்டாம் அதிபதி சனியுடன் கூட்டு ஆனதால் நீச்ச பங்க ராஜயோகம் பெற்றுள்ளார்.
சனி,குரு இருவருமே உத்திராடம் நட்சத்திரத்தில்.குடும்ப ஸ்தானத்தில் உள்ள சூரியன்,ஆட்சி பெற்ற சனியின் நட்சத்திரமான பூசத்தில்.
நட்சத்திர பரிவர்த்த்னையால் 8ம் இடம் கெடவில்லை.
ஆக, திருமணத்தை குறிப்பிடும் 2,4,7,8 மற்றும் 12ம் இடங்கள் சுப பலம் பெற்றுள்ளதால் திருமணம் கட்டாயமாக நடந்திருக்க வேண்டும்,
நன்றியுடன்,
-பொன்னுசாமி./////
--------------------------------------------------------
6
////Blogger selvam velusamy said...
வணக்கம் குரு,
புதிர் போட்டி வேண்டுகோளை நிறைவேற்றியமைக்கு முதலில் நன்றி.
ஜாதகிக்கு இருதார யோகம் அமைப்பு உள்ளது. காரணம் இரண்டில் சூரியன், எட்டில் சனி, பன்னிரண்டில் மாந்தி மற்றும் காலத்திற காரகன் சுக்கிரன். இருப்பினும் எட்டில் அமர்ந்த குரு பகவான் இரண்டாம் வீட்டையும், பனிரண்டாம் வீட்டையும் பார்வை செய்கிறார். எனவே 28 வயதில் சனி திசையில் சுக்கிர புக்தியில் கோட்சார குரு 9இல் இருந்தபோது திருமணம் நடந்திருக்கும்.
நன்றி
செல்வம்/////
--------------------------------------------------------
7
////Blogger C Jeevanantham said...
Dear Sir,
1. Lagna lord mercury in power aspects 7th place.
2. Marriage karaka venus in 12th place, but own place.
3. 2nd lord in 5th place Lakshmi sthanam.
4. Jupiter 7th lord in 8th aspects 2nd. but neecham. join with sani. 8th lord in 8th.
5. Sani made the marriage late.
The Person got married late.////
------------------------------------------------------
8
////Blogger Narayanan V said...
லக்னாதிபதி லக்னத்தில் இருந்தாலும், லக்னம் பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கி உள்ளது, களத்திரகாரகன் 12ம் வீட்டில், அதுவும் மாந்தியுடன். ஆயினும் லக்னாதிபதி புதன் நேராக 7ம் இடத்தை பார்பதால், அவர் புக்தியில் கல்யாணம் ஆகி இருக்கும்.
V.Narayanan, pondicherry/////
-------------------------------------------------------
9
////Blogger Radha Sridhar said...
வணக்கம். 7ம் வீட்டை லக்கினதிலேயே ஆட்சி புரியும் சுப கிரகம் புதன் பார்க்கிறார். நன்மை.
7ம் அதிபன் 8ல் நீச பங்கம் அடைந்துள்ளார். அங்கு சனி ஆட்சி அதனால். சுக்கிரன் 12ல் மாந்திஉடன் அமர்ந்தாலும், குரு பார்வை, சுக்கிரன் ரிஷபத்தில் ஆட்சி பெறுவதால் தோஷம் நிவர்த்தி.
குடும்ப ஸ்தானத்தில் சூரியன் இருந்தாலும், குரு பார்வை இருப்பதால், நிவர்த்தி.
ஆதலின் தாமதமாக திருமணம் நடக்கும். குடும்பம் அமையும்.
அன்புடன்////
-------------------------------------------------------
10
Blogger Kirupanandan A said...
தாமதமாக 30 வயதிற்கு மேல் திருமணம் ஆனவர். 7ம் அதிபதி 8ல் நீசமாகி மறைவு. ஆயினும் நீச பங்கமாகியிருக்கிறார். களத்திரகாரகன் சுக்கிரன் 12ல் மறைந்தாலும் ஆட்சியானதால் திருமணம் உண்டு. அடுத்து லக்கினாதிபதி புதன் ஆட்சியாகி 7ம் இடத்தைப் பார்க்கிறார்./////
-----------------------------------------------------
================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

15.10.14

Astrology: quiz number.69 : மயக்கமா, கலக்கமா, மனதிலே குழப்பமா?


Astrology: quiz number.69 : மயக்கமா, கலக்கமா, மனதிலே குழப்பமா?

Quiz No.69

புதிர் போட்டி எண்.69 விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

15.10.2014

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு ஒரே ஒரு கேள்வி மட்டுமே! அந்தக் கேள்விக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!
------------------------------------
இன்றைய கேள்விகள்:

கீழே உள்ள ஜாதகம் ஒரு அம்மணியின் ஜாதகம்.






ஜாதகியின் 7ஆம் வீட்டை அலசிப் பதில் எழுதுங்கள். அவருக்கு திருமணம் நடைபெற்றதா? அல்லது திருமணமாகவில்லையா? திருமணம் நடைபெற்றது என்றால் எப்போது நடைபெற்றது? திருமணமே ஆகவில்லை என்றால், ஏன் ஆகவில்லை என்பதை அலசி பதிலை எழுதி அனுப்புங்கள். கேள்விக்கு உரிய பதிலை மட்டும் எழுதுங்கள்.

அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

14.10.14

Humour: நகைச்சுவை: ஒற்றைவரி நகைச்சுவைகள்!

Humour: நகைச்சுவை: ஒற்றைவரி நகைச்சுவைகள்!

டக்’ டக்’ கென்று ஒற்றைவரிகளில் கேட்கப்படும் கேள்வி, பதிலைப் போல, இன்று ஒற்றைவரி நகைச்சுவைகளை வழங்கியிருக்கிறேன். படித்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
----------------------------------------
*டாக்டர்! எனக்கு பல் ஆடுது!
   எந்த பாட்டுக்கு?

*ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும்?
   நோயோடதான்!

*தாத்தா! இனிமே கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்!
   அப்ப..... நீ படிச்சா கிடைக்காதா?

*டேய்! நாளைக்கு ஒரு பெண் பார்க்கப் போறேன்! நீயும் வந்துவிடு!
   கண்டிப்பா! உனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா?

*டாக்டர்! தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிட சொன்னீங்க! ஆனால் எங்கள் கோழி
  வெள்ளை முட்டைதான் போடுது! என்ன செய்ய?

*என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்!
   பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?

*படிச்சி முடிச்சப்புறம் என்ன செய்ய போறே?
   புக்கை மூடிடுவேன்!

*காலில் என்ன காயம்?
  செருப்பு கடித்து விட்டது!
   பின்ன அதை மிதிச்சா அது சும்மா இருக்குமா?

*குளிச்ச பிறகு எதுக்கு தலையை துவட்டுறோம்?
   தெரியல! குளிக்கும் போதே துவட்ட முடியாதே!

*இரண்டு இட்லியைக் கூட முழுசா சாப்பிட முடியல டாக்டர்..!!?
  என்னாலையும் முழுசா இரண்டு இட்லி சாப்பிட முடியாது!
  புட்டு புட்டுதான் சாப்பிடனும்!

*டேய்! ஒரு 10 ருபாய் இருந்தா கொடு!
  என்னிடம் சுத்தமா இல்ல! பரவாயில்லை!
  கொடு, நான் சுத்தம் பண்ணிக்கிறேன்!

*இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..?
   கிடைக்காது! கூரை வீடு, ஓட்டு வீடு, மாடி வீடுதான் கிடைக்கும்!

*சர்தார்: தம்பி நீ என்ன படிச்சிருக்க?
  பையன்: பி.எ.
  சர்தார்: அடப்பாவி! படிச்சதே ரெண்டு எழுத்து! அதையும் தலை கீழா படிச்சிருக்கே!

*சேல்ஸ் மேனேஜர்: உங்களுக்கு எதாவது விற்பனை அனுபவம் இருக்கிறதா?
  இன்டெர்வியுக்கு சென்றவர்: ஒ! நிறைய! என் வீடு, கார் மற்றும் என்னுடைய
  மனைவியின் அனைத்து நகைகளுமே விற்றிருக்கிறேன்!

*மனைவி: ஏங்க! நீங்களாவது உங்கள் நண்பரிடம் சொல்லக் கூடாதா? அவருக்குப்
  பார்த்த பெண் நல்லாவே இல்ல!
  கணவன்: நான் ஏன் சொல்ல வேண்டும்! பாவிப்பயல் எனக்கு அவன் சொன்னா

இவைகள் மின்னஞ்சலில் வந்தவை. ஓரளவிற்கு நன்றாக இருந்தன. அதனால் உங்களுக்கு அறியத் தந்துள்ளேன். மொத்தம் 15 உள்ளன. இவற்றில் எது மிகவும் நன்றாக உள்ளது. அதைச் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்
--------------------------------------
செய்தியின் மூலம் ஒரு வேண்டுகோள்!:

சீனத்து பட்டாசுகளை புறக்கணிப்போம்.
....
தீபாவளிக்கு சீனப்
  பட்டாசுகளை வாங்காதீர்கள்.
  சிவகாசிப்
  பட்டாசுகளை மட்டுமே வாங்கி 5
  இலட்சம் தமிழ் குடும்பங்களை வாழ
  வையுங்கள்....
வெளியுறவுக் கொள்கையின்
ஒரே காரணத்தால்
இந்தியா சீனத்துப்
பொருட்களை இங்குள்ள
வியாபாரிகள் இறக்குமதி செய்ய
அனுமதி கேட்டால் அரசாங்கத்தால்
தடை சொல்ல முடியாது.
ஆகவேதான்
வடநாட்டு வியாபாரிகள் சீனாவில்
இருந்து மலிவு விலையில்
ரூ 2000
கோடிக்கு பட்டாசுகளை இறக்குமதி செய்து
தமிழன் தலையில் கொளுத்திப் போடப்
பார்க்கிறார்கள்.
அரசாங்கத்தால் தடை செய்ய
முடியாததை தமிழர்களாகிய நாம்
செய்வோம். சீனத்துப்
பட்டாசுகளை நீங்கள்
வாங்கவில்லை என்றால் அடுத்த
வருடம் அதை இறக்குமதி செய்ய
அந்த சுயநல வணிகர்கள்
தயங்குவார்கள்.
வியாபாரம் குறையும். மெல்ல மெல்ல சீனப்
பொருட்கள் நம்மை விட்டு விலகும்.
தமிழர்களே... விழித்தெழுங்கள்....
சீனா உங்கள் தேசமல்ல, சீனப்
பொருட்கள் உங்கள் உள்நாட்டுத் தயாரிப்பல்ல....
சிவகாசி உங்கள் ஊர்...
சிவகாசிக்காரர்கள் நம் மக்கள்...
தமிழர்கள்.... அவர்களது பரம்பரைத்
தொழிலை நசிக்கப் பார்க்கும்
சீனாவை நாம் உள்ளே நுழைய விடலாமா?
நீங்கள் சிவகாசிப்
பட்டாசு வாங்கவில்லை என்றாலும் பரவாயில்லை !... ஆனால்
சீனத்து பட்டாசு வாங்கி வெடித்து அனைத்து தமிழர்களின்
தலையிலும் தயவுசெய்து தீ வைக்க வேண்டாம்....
அதுமட்டும் இல்லை.... ஒருவருடம்
இந்த தீபாவளிக்காக,
உங்களுக்காகவே உழைத்து,
வெடிவிபத்தில் சிக்கி சீரழிந்து,
தினம் செததுப் பிழைக்கும்
சிவகாசிப் பட்டாசுத் தொழிலில்
ஈடுபட்டுள்ள 5 இலட்சம் தமிழ்க் குடும்பமும்
உங்களை காலமெல்லாம் வாழ்த்தும்.....
இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிருங்கள்...
=========================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!