மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.5.14

Astrology: Quiz 56: answer செல்லக்கிளி மழலை மொழி சிந்திட வேணும்!

 
Astrology: Quiz 56: answer செல்லக்கிளி மழலை மொழி சிந்திட வேணும்

செல்லக்கிளி மழலை மொழி சிந்திட வேணும்
நாம் செவியாற அதைக் கேட்டு மகிழ்ந்திட வேணும்
கள்ளமில்லா அன்பை, கன்னித்தமிழ் பண்பை
கலந்துணவாய் நாம் அதற்கு ஊட்டிட வேணும்

(பிள்ளைக் கனியமுது)

தெள்ளுதமிழ்க் கலைகளிலே தேர்ந்திட வேணும்
பொது சேவையிலே முன்னணியில் திகழ்ந்திட வேணும்
உள்ளம் ஒன்று கூடும், உறவின் பலன் நாடும்
நம் கனவும் நினைவாகி நலம் தர வேணும்

பிள்ளைக் கனியமுது ஒண்ணு பிறந்திட வேணும்
அதை அள்ளிக் கையால் அணைத்து இன்பம் அடைந்திட வேணும்

- பாடலாக்கம்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
திரைப்படம்: பிள்ளைக்கனியமுது (1958)
பாடியவர்: P சுசீலா, சீர்காழி S கோவிந்தராஜன்
இசை: கே.வி. மஹாதேவன்

-----------------------------------------------------------
நேற்றையப் பதிவில் ஒரு பெண்மணியின் ஜாதகத்தைக் கொடுத்து, ”அந்த ஜாதகிக்கு குழந்தை பாக்கியம் கிடைத்ததா? அல்லது கிடைக்க
வில்லையா? கிடைக்காவிட்டால் ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்? கிடைத்திருந்தால் அதற்கும் ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்?”
என்று அலசி எழுதுங்கள் என்று சொல்லியிருந்தேன்.

முதலில் சரியான விடை என்ன என்று பார்ப்போம்:

ஜாதகிக்கு மிகுந்த சிரமங்களுக்கு இடையே ஒரு பெண் குழந்தை பிறந்தது.
1, தனுசு லக்கின ஜாதகம். லக்கினாதிபதி குரு நீசம்
2.லக்கினத்தில் மாந்தி
3.லக்கினத்தில் ராகு, அத்துடன் 7ல் உள்ள சனீஷ்வரனின் பார்வை லக்கினத்தின் மேல்
4.பாக்கியாதிபதி சூரியன் நீசம்

மேற்கூரிய அவல நிலைமைகள் ஒன்று சேர்ந்து ஜாதகிக்குக் குழந்தை இல்லாமல் செய்யப் பார்த்தன. ஆனால் ஆட்சி பலத்துடன் இருக்கும் ஐந்தாம் வீட்டு அதிபதி செவ்வாய், தனது சொந்த செல்வாக்கில், ஜாதகிக்குக் குழந்தையைக் கொடுத்தான்.

ஆனால் திரு.கே. முத்துராமகிருஷ்ணன் அவர்கள் கூறியதைப் போல செவ்வாய் வக்கிர கதியில் உள்ளார். அதனால் பெண் குழந்தையே பிறந்தது.
அதற்குப் பிறகு ஏற்பட்ட கர்ப்பப்பை கோளாறுகளால் ஜாதகிக்கு அடுத்துக் குழந்தை ஏதும் பிறக்கவில்லை. ஆனாலும் பாக்கியாதிபதியும், அரச கிரகமுமான சூரியனின் பார்வை ஐந்தாம் வீட்டின் மேல். அவரும் ஜாதகிக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்க உதவி செய்தார்

அன்புடன்
வாத்தியார்

---------------------------------------------------------------------
மொத்தம் 14 பேர்கள் அதற்குச் சரியான விடையை எழுதி உள்ளீர்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனம் உவந்த பாராட்டுக்கள். அத்துடன்
போட்டியில் கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். Better luck next time for them! 



1
/////Blogger thozhar pandian said...
    இலக்கினாதிபதியும், இராசியாதிபதியும், குழந்தைகாரகருமான குரு பகவான் நீசம். உடல்காரகர் சூரியன் நீசம். இலக்கினத்தில் இராகு, மாந்தி
என இரு பாப கிரகங்கள். 5ம் வீட்டிற்கோ, 5ம் வீட்டுக்காரருக்கோ எந்த சுப கிரக பார்வையும் இல்லை. இலக்கினத்தை 7ம் வீட்டில் இருக்கும் சனி
தனது நேரடி பார்வையில் வைத்துள்ளார். இவை அனைத்தும் இருந்தாலும் 5ம் வீட்டுக்காரர் தனது சொந்த வீட்டில் மூல திரிகோணத்தில் இருப்பதால்

குழந்தை பாக்கியம் உண்டு. என்ன, சற்று தாமதமாக குழந்தை பிறந்திருக்கும்.
    Thursday, May 29, 2014 6:11:00 AM////
------------------------------------------------------------
2
//////Uma, Delhi
12:01 (16 hours ago)
to me
Uma has left a new comment on your post "Astrology: quiz.56: பிள்ளைக் கனியமுது
ஒண்ணு பிறந்த...":
இந்தப் பெண்மணிக்கு நிச்சயம் குழந்தை இருக்கும். காரகன் குரு நீச்சமாக இருந்தாலும் ஐந்தாம் அதி செவ் சொந்த வீட்டில் வலுவாக இருக்கிறார்.
ஐந்தில் செவ் என்பதால் ஆண் குழந்தையாக இருக்க வாய்ப்பு அதிகம்.//////
------------------------------------------------------------
3
/////Blogger renga said...
    குருவிற்கு வணக்கங்கள்,
    ஜாதகி 8/11/1973 ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர். 2ல் நீச குரு ஆனாலும் சுயவர்க்கத்தில் 7 பரல்கள். நிச்சயம் குழந்தை பாக்கியம் உண்டு.
தாமதமாக கிடைக்கும். அஷ்டகவர்க்கத்தில் 5மிடம் குறைவான பரல்கள் பெற்றிருந்தாலும் மிக குறைவு இல்லை. மற்றும் 9,11மிடங்கள் அதிக
பரல்களை பெற்றுள்ளன.
    Thursday, May 29, 2014 8:54:00 AM/////
--------------------------------------------------------
4
/////Blogger Dallas Kannan said...
    Respected Sir
    1. Laknathipathi/Puthira karaha Guru is neecham. But in 2nd place. Guru will do good even if it is neecham, may be delayed. Guru has 7 parals.
    2. For ladies, 9th place is very important. Sani looks at 9th place and 9 the lord is neecham. but in 11th place and 9th place has more than 30 parals.
    3. 5th lord is in 5th place itself.
    4. Laknam has mandhi, rahu and 6th lord Sukra so Laknam is also spoiled.
    5. 2nd lord sani is in kendram, but with Kethu.
    So part of me wants to say, no baby because of laknathipathi/puthriakarakan Guru is neecham, 9th lord is neecham and sani looks at 9th place, laknam is also spoiled.
    But based on Guru's 7 paral and 5th lord in 5th place itself and 9th lord look at 5th house, I am going to say she will have baby.
    Thursday, May 29, 2014 10:45:00 AM/////

-------------------------------------------------------
5
/////Blogger SIVA said...
    ஐயா அவர்களுக்கு காலை வணக்கம்.,
    ஜகதகியின் பிறப்பு 8/nov/1973 : 10:24 AM.,
    இவரது ஜாதகத்தில் ஐந்தாம் அதிபதி செவ்வாய் ஆட்சி வக்கிரம் அடைந்திருப்பதாலும் , ., புத்திரகாரகன் குரு நீசம், 4 ம் இடத்தில அஸ்டமாதிபதி , பாக்கியஷ்தானாதிபதி நீசம்., இருப்பினும் சுக்கிரன் லக்கினத்தில் இருப்பதால் அவர் நீசபங்கம் ஆகின்றார் , லக்கினாதிபதியும் ,புத்திரகாரகனும் நீசபங்கம் ஆனாலும் சுய பரலில் 7 பெற்று வழுவாக இருப்பதா சூரிய திசை அல்லது சுக்கிரதிசை குரு புத்தியில் அவருக்கு குழந்தை பிறக்கும் ..,
வக்கிரம் பெற்ற புதிரஷ்தனம் இருந்தால் அவர் காலம் தாழ்ந்த பாக்கியம் பெறுவார் ., மேலும் 5 மற்றும் 9 அதிபதிகள் சப்தஷ்தானத்தில் இருப்பதாலும் 9,1௦ ம் அதிபதிகளின் சேர்க்கையும் பலம் சேர்க்கிறது
    Thursday, May 29, 2014 10:48:00 AM/////
--------------------------------------------------------
6
/////Blogger Palani Shanmugam said...
    மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
    புதிர் பகுதி 56 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி,
    தனுசு லக்னம், மீன ராசியில் பிறந்த இந்த ஜாதகியின் லக்னாதிபதியான குரு, குடும்பஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு 10ம்
கேந்திரத்தில் அதாவது லாபஸ்தானத்தில் பாக்யாதிபதி சூரியன் அமர்ந்திருக்கிறார். உடன் களத்திரஸ்தான அதிபதி புதனும் அமர்ந்து, பூர்வ
புண்ணியஸ்தான அதிபதியான ஆட்சி பெற்ற செவ்வாயின் நேரடிப் பார்வையில் இருக்கிறார்கள். லாபஸ்தான அதிபதி சுக்கிரனும் லக்னத்தில்.
    எனவே இந்தப் பெண்மணிக்கு கண்டிப்பாக குழந்தை பாக்கியம் உண்டு.
    Thursday, May 29, 2014 10:49:00 AM//////
------------------------------------------------------
7
////Blogger கலையரசி said...
    The native should be blessed with kids. Strong 5th lord, possibility of male child. Lagna lord guru occupying 2nd position though neesam he gives family. Strong 10th lord occupying sukran's house,gets 5th lord paarvai. so the native would be blessed with female children. henceforth native must be blessed with male and female children.
    Thursday, May 29, 2014 10:54:00 AM/////

-------------------------------------------------------
8
/////Blogger hamaragana said...
    அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
    புதிர் போட்டி என் 56.
    பெண் ஜாதகம் .
    தனுசு லக்னம் .மீனா ராசி.
    லக்னாதிபதி 2ல் குடும்பத்தில் .5ல் செவ்வாய் தனது வீட்டில் ஆட்சி ..
    குழைந்தைகள் உண்டு .ஆண் குழைந்தைகள் இருக்க வாய்ப்பில்லை..
    பெண் குழந்தைகள் .உண்டு உண்டு உண்டு ..
    Thursday, May 29, 2014 11:04:00 AM/////
---------------------------------------------------------------
9
/////Blogger ravichandran said...
    Respected Sir,
    My answer for our today's Quiz No.56:
    The Native of the horoscope has blessed to get children.
    Reasons:
    1. Fifth house is in good position.
    2. Fifth house lord is in the same house as well as it is mola trikona house for it.
    3. Though bhutra karaga (Jupiter) is debilitated, it has seven parals and the house has thirty parals.
    4. Dhasa period and sub period also supported.
    5. In Navamsa, Jupiter (bhutra karaga) is in good position.
    In short, Marriage may be delayed but she has blessed to get children.
    With kind regards,
    Ravichandran M.
    Thursday, May 29, 2014 11:27:00 AM//////

------------------------------------------------------------- 
10 
/////Blogger KJ said...
    5th house owner in 5ht house. Guru in second place. There must be some delay but getting child is possible.
    Thursday, May 29, 2014 1:50:00 PM////

-----------------------------------------------------
11   
////Blogger Selvam Velusamy said...
    வணக்கம் குரு,
    இந்த ஜாதகிக்கு களத்திர தோஷம், புனர்பூ தோஷம் மற்றும் களத்திர ஸ்தானாதிபதி புதன் அஷ்தங்கம் போன்ற குறைகள் உள்ளது எனவே
இவருக்கு சற்று தாமதமாக 26 வயதுக்கு மேல் திருமணம் நடந்திருக்கும். இவருக்கு கண்டிப்பாக குழந்தை பாக்கியம் உண்டு. காரணம்
ஐந்துக்குடைய செவ்வாய் ராசியில் ஆட்சி & நாம்சதில் சம வீட்டில், பாக்கியாதிபதி சூரியன் ராசியில் நீச்சமாகி லாப ஸ்தானத்தில் இருந்தாலும்
நவாம்சத்தில் உச்சமாக உள்ளார் மற்றும் புத்திர காரகன் குரு ராசியில் நீட்சமானாலும் நவாம்சத்தில் உச்சமான சூரியனுடன் நட்பு வீட்டில் & நட்பு
கிரகமான சூரியனுடன் உள்ளார்.
    நன்றி
    செல்வம்
    Thursday, May 29, 2014 3:27:00 PM/////
-------------------------------------------------------------
12
////Blogger janani murugesan said...
    ஐயா,
    இந்த ஜாதகிக்கு 5ல் செவ்வாய் இருப்பினும் ஆட்சி பலம் பெற்றுள்ளது. புத்திரகாரகன் குரு நீசம் அடைந்தாலும் நீசபங்கம் பெற்றுள்ளது
ஆகையால் தாமதமாக பெண் குழந்தை பிறந்து இருக்கும்.
    Thursday, May 29, 2014 4:38:00 PM/////
-------------------------------------------------------------
13
//////Blogger venkatesh r said...
    ஐயா வணக்கம்,
    கொடுக்கப்பட்டுள்ள புதிர் :56 க்கான விடை ‍‍‍‍:தாமதத்திருமணம், அதனால் தாமத புத்திர பாக்கியம். அதற்கான ஜாதக ரீதியான அலசல் :
    1. தனுசு லக்ன ஜாதகி. லக்னாதிபதி குரு இரண்டில் நீசம்.
    2. 7மிடமான களத்திரத்தில் சனியும், கேதுவும் டென்ட் அடித்துள்ளனர்.
    3. களத்திராதிபதி புதன், லக்னத்திற்கு 11ல், செவ்வாயின் நேரடிப் பார்வையில், பாக்யதிபதியான நீச சூரியனுடன் வலுவிழந்து உள்ளார்.
    4. களத்திரகாரகரான சுக்கிரன் லக்னத்தில் ராகுவின் பிடியில் உள்ளார். ஆனால் களத்திர வீட்டை, மற்றும் சனி+கேது கூட்டணியை பார்க்கிறார
    5. ஜாதகிக்கு இளமையில் வந்த புதனின் தசை 12 வருடம், கேதுவின் தசை 7 வருடம் கழிந்து, 6ம் அதிபதியான சுக்கிர தசை, குரு புத்தியில்
கிட்டத்தட்ட 32 வருடம் வரை திருமண பாக்கியத்திற்கு காக்க வேண்டி வந்துள்ளது. திருமணத்திற்கு பிறகு வந்த சனி தசை சாதகமாக‌ இல்லை. பின்
வந்த புத புக்தியில் ஒரு அழகான மகனை/மகளை பெற்று இருப்பார். காரணங்கள் இதோ!
    1. ஐந்தாமிடத்தில் செவ்வாய் இருந்தாலும் மேட ராசி அவருக்கு சொந்த இடம். அதனால் ஸ்தான பலம் உண்டு.
    2.பாக்யாதிபதி நீச‌ சூரியன் 7ல் இருந்து புதனுடன் சேர்ந்து புத்திர ஸ்தானத்தை பார்க்கிறார்.
    அதனால் ஜாதகிக்கு 35 வயதிற்கு மேல்" காலம் கடந்து பிள்ளைக் கனியமுது ஒண்ணு " பிறந்திருக்கும்.
    Thursday, May 29, 2014 5:33:00 PM/////
------------------------------------------------------------
14
////Blogger Ramkumar KG said...
    அய்யா,
    காரகன் குரு கெட்டாலும், 5ஆம் அதிபதி ஆட்சி, 9,7,10 அதிபதி பார்வை உண்டு. பிரசவத்தில் தொல்லை ஏற்பட்டாலும் குழந்தை பாக்கியம்
உண்டு.

    Thursday, May 29, 2014 8:40:00 PM/////
-----------------------------------------------
====================================================================================

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

4 comments:

  1. ஐந்தாம் இடத்தில் சூரியன் இருந்தால் குழந்தை பாக்கியம் பாதிப்பு. அதே சூரியன்
    ஐந்தாம் இடத்தினை நேர்பார்வையாக வைத்திருந்தால் குழந்தை பாக்கியம் உண்டா?

    இந்த ஜாதகருக்கு குழந்தை பாக்கியம் மிகமிகக் குறைவுதான். கணவருடைய ஜாதகத்தில் குழந்தை பாக்கியம் நன்றாக இருந்திருக்கும். அது வேலை செய்து இருக்கலாம்.

    ஜாதக விதிகளை மீறிய இறையாற்றலே வேலை செய்துள்ளது.

    தங்களுடைய கேள்வி முறையே ஆலோசனையாகவும், யூகிக்க வைப்பதாகவும் உள்ளது.

    கேள்வி பதிலை விட இந்த 'க்விஸ்' மிகவும் பயனுள்ளது. மிக்க நன்றி ஐயா!

    ReplyDelete
  2. தங்கள் சிறந்த பாடல் பகிர்வை வரவேற்கிறேன்

    ReplyDelete
  3. //////Blogger kmr.krishnan said...
    ஐந்தாம் இடத்தில் சூரியன் இருந்தால் குழந்தை பாக்கியம் பாதிப்பு. அதே சூரியன்
    ஐந்தாம் இடத்தினை நேர்பார்வையாக வைத்திருந்தால் குழந்தை பாக்கியம் உண்டா?
    இந்த ஜாதகருக்கு குழந்தை பாக்கியம் மிகமிகக் குறைவுதான். கணவருடைய ஜாதகத்தில் குழந்தை பாக்கியம் நன்றாக இருந்திருக்கும். அது வேலை செய்து இருக்கலாம்.
    ஜாதக விதிகளை மீறிய இறையாற்றலே வேலை செய்துள்ளது.
    தங்களுடைய கேள்வி முறையே ஆலோசனையாகவும், யூகிக்க வைப்பதாகவும் உள்ளது.
    கேள்வி பதிலை விட இந்த 'க்விஸ்' மிகவும் பயனுள்ளது. மிக்க நன்றி ஐயா!/////

    உண்மைதான். ஆனால் இந்த ஜாதகிக்கு, சூரியன் பாக்கியஸ்தானத்திற்கு உரியவர். அவர் நீசம் பெற்றிருந்தாலும், தனது நேரடிப்பார்வையால், ஐந்தாம் வீட்டைப் பார்க்கிறார். அதுவும் ஒரு காரணம். உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  4. ////Blogger Jeevalingam Kasirajalingam said...
    தங்கள் சிறந்த பாடல் பகிர்வை வரவேற்கிறேன்////

    நல்லது. நன்றி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com