மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.5.14

Astrology: Quiz 56: answer செல்லக்கிளி மழலை மொழி சிந்திட வேணும்!

 
Astrology: Quiz 56: answer செல்லக்கிளி மழலை மொழி சிந்திட வேணும்

செல்லக்கிளி மழலை மொழி சிந்திட வேணும்
நாம் செவியாற அதைக் கேட்டு மகிழ்ந்திட வேணும்
கள்ளமில்லா அன்பை, கன்னித்தமிழ் பண்பை
கலந்துணவாய் நாம் அதற்கு ஊட்டிட வேணும்

(பிள்ளைக் கனியமுது)

தெள்ளுதமிழ்க் கலைகளிலே தேர்ந்திட வேணும்
பொது சேவையிலே முன்னணியில் திகழ்ந்திட வேணும்
உள்ளம் ஒன்று கூடும், உறவின் பலன் நாடும்
நம் கனவும் நினைவாகி நலம் தர வேணும்

பிள்ளைக் கனியமுது ஒண்ணு பிறந்திட வேணும்
அதை அள்ளிக் கையால் அணைத்து இன்பம் அடைந்திட வேணும்

- பாடலாக்கம்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
திரைப்படம்: பிள்ளைக்கனியமுது (1958)
பாடியவர்: P சுசீலா, சீர்காழி S கோவிந்தராஜன்
இசை: கே.வி. மஹாதேவன்

-----------------------------------------------------------
நேற்றையப் பதிவில் ஒரு பெண்மணியின் ஜாதகத்தைக் கொடுத்து, ”அந்த ஜாதகிக்கு குழந்தை பாக்கியம் கிடைத்ததா? அல்லது கிடைக்க
வில்லையா? கிடைக்காவிட்டால் ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்? கிடைத்திருந்தால் அதற்கும் ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்?”
என்று அலசி எழுதுங்கள் என்று சொல்லியிருந்தேன்.

முதலில் சரியான விடை என்ன என்று பார்ப்போம்:

ஜாதகிக்கு மிகுந்த சிரமங்களுக்கு இடையே ஒரு பெண் குழந்தை பிறந்தது.
1, தனுசு லக்கின ஜாதகம். லக்கினாதிபதி குரு நீசம்
2.லக்கினத்தில் மாந்தி
3.லக்கினத்தில் ராகு, அத்துடன் 7ல் உள்ள சனீஷ்வரனின் பார்வை லக்கினத்தின் மேல்
4.பாக்கியாதிபதி சூரியன் நீசம்

மேற்கூரிய அவல நிலைமைகள் ஒன்று சேர்ந்து ஜாதகிக்குக் குழந்தை இல்லாமல் செய்யப் பார்த்தன. ஆனால் ஆட்சி பலத்துடன் இருக்கும் ஐந்தாம் வீட்டு அதிபதி செவ்வாய், தனது சொந்த செல்வாக்கில், ஜாதகிக்குக் குழந்தையைக் கொடுத்தான்.

ஆனால் திரு.கே. முத்துராமகிருஷ்ணன் அவர்கள் கூறியதைப் போல செவ்வாய் வக்கிர கதியில் உள்ளார். அதனால் பெண் குழந்தையே பிறந்தது.
அதற்குப் பிறகு ஏற்பட்ட கர்ப்பப்பை கோளாறுகளால் ஜாதகிக்கு அடுத்துக் குழந்தை ஏதும் பிறக்கவில்லை. ஆனாலும் பாக்கியாதிபதியும், அரச கிரகமுமான சூரியனின் பார்வை ஐந்தாம் வீட்டின் மேல். அவரும் ஜாதகிக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்க உதவி செய்தார்

அன்புடன்
வாத்தியார்

---------------------------------------------------------------------
மொத்தம் 14 பேர்கள் அதற்குச் சரியான விடையை எழுதி உள்ளீர்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனம் உவந்த பாராட்டுக்கள். அத்துடன்
போட்டியில் கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். Better luck next time for them! 



1
/////Blogger thozhar pandian said...
    இலக்கினாதிபதியும், இராசியாதிபதியும், குழந்தைகாரகருமான குரு பகவான் நீசம். உடல்காரகர் சூரியன் நீசம். இலக்கினத்தில் இராகு, மாந்தி
என இரு பாப கிரகங்கள். 5ம் வீட்டிற்கோ, 5ம் வீட்டுக்காரருக்கோ எந்த சுப கிரக பார்வையும் இல்லை. இலக்கினத்தை 7ம் வீட்டில் இருக்கும் சனி
தனது நேரடி பார்வையில் வைத்துள்ளார். இவை அனைத்தும் இருந்தாலும் 5ம் வீட்டுக்காரர் தனது சொந்த வீட்டில் மூல திரிகோணத்தில் இருப்பதால்

குழந்தை பாக்கியம் உண்டு. என்ன, சற்று தாமதமாக குழந்தை பிறந்திருக்கும்.
    Thursday, May 29, 2014 6:11:00 AM////
------------------------------------------------------------
2
//////Uma, Delhi
12:01 (16 hours ago)
to me
Uma has left a new comment on your post "Astrology: quiz.56: பிள்ளைக் கனியமுது
ஒண்ணு பிறந்த...":
இந்தப் பெண்மணிக்கு நிச்சயம் குழந்தை இருக்கும். காரகன் குரு நீச்சமாக இருந்தாலும் ஐந்தாம் அதி செவ் சொந்த வீட்டில் வலுவாக இருக்கிறார்.
ஐந்தில் செவ் என்பதால் ஆண் குழந்தையாக இருக்க வாய்ப்பு அதிகம்.//////
------------------------------------------------------------
3
/////Blogger renga said...
    குருவிற்கு வணக்கங்கள்,
    ஜாதகி 8/11/1973 ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர். 2ல் நீச குரு ஆனாலும் சுயவர்க்கத்தில் 7 பரல்கள். நிச்சயம் குழந்தை பாக்கியம் உண்டு.
தாமதமாக கிடைக்கும். அஷ்டகவர்க்கத்தில் 5மிடம் குறைவான பரல்கள் பெற்றிருந்தாலும் மிக குறைவு இல்லை. மற்றும் 9,11மிடங்கள் அதிக
பரல்களை பெற்றுள்ளன.
    Thursday, May 29, 2014 8:54:00 AM/////
--------------------------------------------------------
4
/////Blogger Dallas Kannan said...
    Respected Sir
    1. Laknathipathi/Puthira karaha Guru is neecham. But in 2nd place. Guru will do good even if it is neecham, may be delayed. Guru has 7 parals.
    2. For ladies, 9th place is very important. Sani looks at 9th place and 9 the lord is neecham. but in 11th place and 9th place has more than 30 parals.
    3. 5th lord is in 5th place itself.
    4. Laknam has mandhi, rahu and 6th lord Sukra so Laknam is also spoiled.
    5. 2nd lord sani is in kendram, but with Kethu.
    So part of me wants to say, no baby because of laknathipathi/puthriakarakan Guru is neecham, 9th lord is neecham and sani looks at 9th place, laknam is also spoiled.
    But based on Guru's 7 paral and 5th lord in 5th place itself and 9th lord look at 5th house, I am going to say she will have baby.
    Thursday, May 29, 2014 10:45:00 AM/////

-------------------------------------------------------
5
/////Blogger SIVA said...
    ஐயா அவர்களுக்கு காலை வணக்கம்.,
    ஜகதகியின் பிறப்பு 8/nov/1973 : 10:24 AM.,
    இவரது ஜாதகத்தில் ஐந்தாம் அதிபதி செவ்வாய் ஆட்சி வக்கிரம் அடைந்திருப்பதாலும் , ., புத்திரகாரகன் குரு நீசம், 4 ம் இடத்தில அஸ்டமாதிபதி , பாக்கியஷ்தானாதிபதி நீசம்., இருப்பினும் சுக்கிரன் லக்கினத்தில் இருப்பதால் அவர் நீசபங்கம் ஆகின்றார் , லக்கினாதிபதியும் ,புத்திரகாரகனும் நீசபங்கம் ஆனாலும் சுய பரலில் 7 பெற்று வழுவாக இருப்பதா சூரிய திசை அல்லது சுக்கிரதிசை குரு புத்தியில் அவருக்கு குழந்தை பிறக்கும் ..,
வக்கிரம் பெற்ற புதிரஷ்தனம் இருந்தால் அவர் காலம் தாழ்ந்த பாக்கியம் பெறுவார் ., மேலும் 5 மற்றும் 9 அதிபதிகள் சப்தஷ்தானத்தில் இருப்பதாலும் 9,1௦ ம் அதிபதிகளின் சேர்க்கையும் பலம் சேர்க்கிறது
    Thursday, May 29, 2014 10:48:00 AM/////
--------------------------------------------------------
6
/////Blogger Palani Shanmugam said...
    மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
    புதிர் பகுதி 56 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி,
    தனுசு லக்னம், மீன ராசியில் பிறந்த இந்த ஜாதகியின் லக்னாதிபதியான குரு, குடும்பஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு 10ம்
கேந்திரத்தில் அதாவது லாபஸ்தானத்தில் பாக்யாதிபதி சூரியன் அமர்ந்திருக்கிறார். உடன் களத்திரஸ்தான அதிபதி புதனும் அமர்ந்து, பூர்வ
புண்ணியஸ்தான அதிபதியான ஆட்சி பெற்ற செவ்வாயின் நேரடிப் பார்வையில் இருக்கிறார்கள். லாபஸ்தான அதிபதி சுக்கிரனும் லக்னத்தில்.
    எனவே இந்தப் பெண்மணிக்கு கண்டிப்பாக குழந்தை பாக்கியம் உண்டு.
    Thursday, May 29, 2014 10:49:00 AM//////
------------------------------------------------------
7
////Blogger கலையரசி said...
    The native should be blessed with kids. Strong 5th lord, possibility of male child. Lagna lord guru occupying 2nd position though neesam he gives family. Strong 10th lord occupying sukran's house,gets 5th lord paarvai. so the native would be blessed with female children. henceforth native must be blessed with male and female children.
    Thursday, May 29, 2014 10:54:00 AM/////

-------------------------------------------------------
8
/////Blogger hamaragana said...
    அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
    புதிர் போட்டி என் 56.
    பெண் ஜாதகம் .
    தனுசு லக்னம் .மீனா ராசி.
    லக்னாதிபதி 2ல் குடும்பத்தில் .5ல் செவ்வாய் தனது வீட்டில் ஆட்சி ..
    குழைந்தைகள் உண்டு .ஆண் குழைந்தைகள் இருக்க வாய்ப்பில்லை..
    பெண் குழந்தைகள் .உண்டு உண்டு உண்டு ..
    Thursday, May 29, 2014 11:04:00 AM/////
---------------------------------------------------------------
9
/////Blogger ravichandran said...
    Respected Sir,
    My answer for our today's Quiz No.56:
    The Native of the horoscope has blessed to get children.
    Reasons:
    1. Fifth house is in good position.
    2. Fifth house lord is in the same house as well as it is mola trikona house for it.
    3. Though bhutra karaga (Jupiter) is debilitated, it has seven parals and the house has thirty parals.
    4. Dhasa period and sub period also supported.
    5. In Navamsa, Jupiter (bhutra karaga) is in good position.
    In short, Marriage may be delayed but she has blessed to get children.
    With kind regards,
    Ravichandran M.
    Thursday, May 29, 2014 11:27:00 AM//////

------------------------------------------------------------- 
10 
/////Blogger KJ said...
    5th house owner in 5ht house. Guru in second place. There must be some delay but getting child is possible.
    Thursday, May 29, 2014 1:50:00 PM////

-----------------------------------------------------
11   
////Blogger Selvam Velusamy said...
    வணக்கம் குரு,
    இந்த ஜாதகிக்கு களத்திர தோஷம், புனர்பூ தோஷம் மற்றும் களத்திர ஸ்தானாதிபதி புதன் அஷ்தங்கம் போன்ற குறைகள் உள்ளது எனவே
இவருக்கு சற்று தாமதமாக 26 வயதுக்கு மேல் திருமணம் நடந்திருக்கும். இவருக்கு கண்டிப்பாக குழந்தை பாக்கியம் உண்டு. காரணம்
ஐந்துக்குடைய செவ்வாய் ராசியில் ஆட்சி & நாம்சதில் சம வீட்டில், பாக்கியாதிபதி சூரியன் ராசியில் நீச்சமாகி லாப ஸ்தானத்தில் இருந்தாலும்
நவாம்சத்தில் உச்சமாக உள்ளார் மற்றும் புத்திர காரகன் குரு ராசியில் நீட்சமானாலும் நவாம்சத்தில் உச்சமான சூரியனுடன் நட்பு வீட்டில் & நட்பு
கிரகமான சூரியனுடன் உள்ளார்.
    நன்றி
    செல்வம்
    Thursday, May 29, 2014 3:27:00 PM/////
-------------------------------------------------------------
12
////Blogger janani murugesan said...
    ஐயா,
    இந்த ஜாதகிக்கு 5ல் செவ்வாய் இருப்பினும் ஆட்சி பலம் பெற்றுள்ளது. புத்திரகாரகன் குரு நீசம் அடைந்தாலும் நீசபங்கம் பெற்றுள்ளது
ஆகையால் தாமதமாக பெண் குழந்தை பிறந்து இருக்கும்.
    Thursday, May 29, 2014 4:38:00 PM/////
-------------------------------------------------------------
13
//////Blogger venkatesh r said...
    ஐயா வணக்கம்,
    கொடுக்கப்பட்டுள்ள புதிர் :56 க்கான விடை ‍‍‍‍:தாமதத்திருமணம், அதனால் தாமத புத்திர பாக்கியம். அதற்கான ஜாதக ரீதியான அலசல் :
    1. தனுசு லக்ன ஜாதகி. லக்னாதிபதி குரு இரண்டில் நீசம்.
    2. 7மிடமான களத்திரத்தில் சனியும், கேதுவும் டென்ட் அடித்துள்ளனர்.
    3. களத்திராதிபதி புதன், லக்னத்திற்கு 11ல், செவ்வாயின் நேரடிப் பார்வையில், பாக்யதிபதியான நீச சூரியனுடன் வலுவிழந்து உள்ளார்.
    4. களத்திரகாரகரான சுக்கிரன் லக்னத்தில் ராகுவின் பிடியில் உள்ளார். ஆனால் களத்திர வீட்டை, மற்றும் சனி+கேது கூட்டணியை பார்க்கிறார
    5. ஜாதகிக்கு இளமையில் வந்த புதனின் தசை 12 வருடம், கேதுவின் தசை 7 வருடம் கழிந்து, 6ம் அதிபதியான சுக்கிர தசை, குரு புத்தியில்
கிட்டத்தட்ட 32 வருடம் வரை திருமண பாக்கியத்திற்கு காக்க வேண்டி வந்துள்ளது. திருமணத்திற்கு பிறகு வந்த சனி தசை சாதகமாக‌ இல்லை. பின்
வந்த புத புக்தியில் ஒரு அழகான மகனை/மகளை பெற்று இருப்பார். காரணங்கள் இதோ!
    1. ஐந்தாமிடத்தில் செவ்வாய் இருந்தாலும் மேட ராசி அவருக்கு சொந்த இடம். அதனால் ஸ்தான பலம் உண்டு.
    2.பாக்யாதிபதி நீச‌ சூரியன் 7ல் இருந்து புதனுடன் சேர்ந்து புத்திர ஸ்தானத்தை பார்க்கிறார்.
    அதனால் ஜாதகிக்கு 35 வயதிற்கு மேல்" காலம் கடந்து பிள்ளைக் கனியமுது ஒண்ணு " பிறந்திருக்கும்.
    Thursday, May 29, 2014 5:33:00 PM/////
------------------------------------------------------------
14
////Blogger Ramkumar KG said...
    அய்யா,
    காரகன் குரு கெட்டாலும், 5ஆம் அதிபதி ஆட்சி, 9,7,10 அதிபதி பார்வை உண்டு. பிரசவத்தில் தொல்லை ஏற்பட்டாலும் குழந்தை பாக்கியம்
உண்டு.

    Thursday, May 29, 2014 8:40:00 PM/////
-----------------------------------------------
====================================================================================

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

29.5.14

Astrology: quiz.56: பிள்ளைக் கனியமுது ஒண்ணு பிறந்திட வேணும்!

 
 Astrology: quiz.56: பிள்ளைக் கனியமுது ஒண்ணு பிறந்திட வேணும்!

பிள்ளைக் கனியமுது ஒண்ணு பிறந்திட வேணும் - அதை
அள்ளிக் கையால் அணைத்து இன்பம் அடைந்திட வேணும்
- பாடல் வரிகள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம்

Quiz No.56: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

பகுதி ஐம்பத்தியாறு

29.5.2014

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு ஒரே ஒரு கேள்வி. அந்தக் கேள்விக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!
------------------------------------
இன்றைய கேள்விகள்:

மேலே உள்ள ஜாதகம் ஒரு பெண்மணியின் ஜாதகம்.

ஜாதகிக்கு குழந்தை பாக்கியம் கிடைத்ததா? அல்லது கிடைக்க வில்லையா? கிடைக்காவிட்டால் ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்? கிடைத்திருந்தால் அதற்கும் ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்?

சரியான பதில்களை எழுதினால் மட்டுமே 100 மதிப்பெண்கள் கிடைக்கும்.

அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்

===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

28.5.14

Short story: சிறுகதை: சம அறிவுத் திட்டம்

 

Short story: சிறுகதை: சம அறிவுத் திட்டம்

2108ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஒரு ஞாயிற்றுக் கிழமை! அதை மனதில் வைத்துக் கொண்டு மேலே படிக்கவும்.

கதிரவன் வரலாமா வேண்டாமா என்ற பலத்த சிந்தனையுடன், மேக மூட்டங்களுக்கு நடுவே எட்டிப்பார்த்துக் கொண்டிருந்த அதிகாலை நேரம்.

சென்னையின் 2253 0440 வது தெரு.

அது என்ன தெரு என்று தெரிந்து கொள்ள உங்கள் பாக்கெட் கணினி அல்லது உங்கள் வீட்டுப் படுக்கை அறையில் சுவற்றில் பதிக்கப் பெற்றுள்ள பத்துக்குப் பத்தடி தொடுதிரை டிஜிடல் ஸ்கிரீனைத் தொட்டுப் பார்க்க வேண்டாம்.

நானே சொல்லி விடுகிறேன். முதல் நான்கு எண்கள் சென்னையின் பகுதிகளையும், அடுத்த நான்கு எண்கள் சாலையின் பெயரையும் குறிக்குமல்லவா? அது அம்பத்தூர் முருகப்ப ரெட்டி தெரு.

முதுகு வின்னெண்று வலிக்க சரவணன் எழுந்து உட்கார்ந்தான். 120 நிமிடத் தூக்கம் மிச்சம் இருப்பது கண்களில் தெரிந்தது. அதோடு திரும்பிப் பார்த்தான்.

அவன் மனைவி ஸ்டெல்லா நின்று கொண்டிருந்தாள்.

“என்னடி செல்லம்?”

“டாக்டரிடம் போய் வரவேண்டாமா? எட்டு மணிக்கு முதல் அப்பாய்ன்ட்மெண்ட். அது உங்களுடையது. விட்டால், இன்றும் மூன்று மாதங்களுக்கு அவரைப் பார்க்க முடியாது!”

“பொசகெட்ட டாக்டர்! எவனாவது ஞாயிற்றுக் கிழமை - அதுவும் காலை எட்டு மணிக்கு, கன்சல்ட்டிங் ரூமைத் திறுந்து வச்சிகிட்டு உக்கார்ந்திருப்பானா சொல்லு!”

“உளராதீர்கள். உங்களுக்கு என்ன தெரியும்? ஹி ஈஸ் சச் எ டெடிக்கேட்டட் பெர்சன். நான் எவ்வளவு கஷ்டப்பட்டு அவரிடம் நேரம் வாங்கியிருக்கிறேன் தெரியுமா? ராத்திரி எத்தனை மாத்திரைகள் போட்டீர்கள்”

இனிமேலும் உட்கார்ந்திருந்தால் தனது குடிப்பழக்கத்திற்குக் கேடு வந்துவிடும் என்பதை உணர்ந்த சரவணன் விருட்டென்று எழுந்தவன் அடுத்து இருந்த கழிவு,குளியல், மேக்கப் மூன்றையும் ஒருமிக்க செய்துகொள்ளும் ரிஃப்ரெஷ் அறைக்குள் நுழைந்து எஸ்கேப் ஆனான்.

மனைவி மாத்திரைகள் என்று கேட்டது விஸ்கி மாத்திரகளை. அறுபது எம்.ஜி என்பது ஒரு லார்ஜ் அளவு. முப்பது எம்.ஜி என்பது ஒரு ஸ்மால். மற்றதை நீங்களே கணக்குப் பண்ணிக் கொள்ளுங்கள்.

அவற்றை எப்படிச் சாப்பிடுவதா?குடிப்பழக்கம் இல்லாதவரா?

ஒரு டம்ப்ளர் தண்ணீரில் போட்டால் கண் இமைக்கும் நேரத்தில் கிடைக்கும் கலவையைச் சிப்பி சிப்பி மெதுவாகக் குடித்து உரம் ஏற்றிக் கொள்ளலாம் அல்லது வாய்க்குள் போட்டு ஒரு டம்ப்ளர் தண்ணீரோடு விழுங்கியும் விடலாம்.

நான்கு லார்ஜ்களுக்கான மாத்திரைகள் உத்தமம். ஜிவ்'வென்று இருக்கும். ஆறு சாப்பிட்டால் எதிரில் இருப்பவன் இரண்டாகத் தெரிவான். அதற்கு மேல் ஒரு மாத்திரை சாப்பிட்டாலும் வாந்தி இன்னபிற இத்தியாதிகள்.ஹேங்கோவர் தீர பன்னிரெண்டுமணி நேரம் ஆகும். எத்தனை டம்ப்ளர் மோர் மாத்திரைகள் சாப்பிட்டாலும் பலன் இருக்காது.

பால்,தயிர், எல்லாம் மாத்திரைகள்தானென்று உங்களுக்குத் தெரியாதா?

நானோ டெக் படுத்தும்பாடு!
-------------------------------------------------------------------------------------------------------
திரைப்பட நடிகர் ஜி.பி ஹாசனைப் போன்ற தோற்றத்துடன் டாக்டர் டக்கராக இருந்தார்.

ஜி.பி ஹாசனின் முழுப்பெயர் கோவிந்தராஜப் பெருமாள் ஹாசன்.

சரவணன் அமர்ந்தவுடன், மெல்லிய குரலில் கேட்டார்:

”சொல்லுங்கள் என்ன வேண்டும் உங்களுக்கு?”

“என் பையனுக்கு, மண்டையில் 'மாக்ரோ சிப்' பொருத்த வேண்டும்!”

“வயது என்ன?”

‘இந்த ஆகஸ்ட்டுடன் பத்து வயது முடிகிறது.”

“நோ ப்ராப்ளம் பொருத்தி விடலாம். பன்னிரெண்டு வயதிற்கு மேலென்றால்தான் முடியாது”

“எத்தனை நாட்கள் ஆகும் டாக்டர்”

“பத்தே நாட்களில் முடிந்து விடும். ஆனால் நாங்கள் கண்காணிப்பில் வைத்திருந்து அவனைத் திருப்பியனுப்ப மேலும் இருபது நாட்களாகும். மொத்தத்தில் ஒரு மாதம் என்று வைத்துக் கொள்ளுங்களேன்”

“எவ்வளவு செலவாகும் டாக்டர்?”

“டோட்டல் பாக்கேஜ் உள்ளது. இருபத்தைந்து கோடி செலவாகும். பெற்றோர்கள் உடன் இருக்க வேண்டிய அவசியம் இல்லை! எல்லாவற்றையும் எங்களுடைய அசோசியேட்ஸ் கம்பெனி பார்த்துக்கொள்ளும். அலையன்ஸ் கம்பெனிபற்றி உங்களுக்குத் தெரியும் அல்லவா? அவர்கள் தான் எங்களுடைய அசோசியேட்ஸ்”

“எனக்குத் தாங்காது சார். எனக்கும் என் மனைவிக்கும் சேர்த்து மாதம் இருபத்தைந்து லட்ச ரூபாய்தான் சம்பளம் வருகிறது. லோ பட்ஜெட்டில் வேறு ஏதாவது ஸ்கீம் உள்ளதா?”

"இப்போதைக்கு இல்லை! எதிர்காலத்தில் வரலாம்.எங்களிடம் பதினைந்து துறைகளுக்கான பாடங்கள் உள்ளன! பொறியியல் மருத்துவம், நிர்வாகம் என்று எந்தத் துறையை வேண்டுமென்றாலும் நீங்கள் தெரிவு செய்யலாம். பொறியியல் என்றால் அதன் 27 உட்பிரிவுகளுக்கும் சேர்த்து ஒரே பாடம்தான். அதேபோல மருத்துவம் என்றால் அதன் 30 உட்பிரிவுகளுக்கும் சேர்த்து ஒரே பாடம்தான்." டாக்டர் சொல்லிக் கொண்டே போனார்.

சரவணனுக்குக் கேட்கக் கேட்கப் பிரம்மிப்பாக இருந்தது. பையனைப் பள்ளிக்கூடம், கல்லூரி முதுநிலைக் கல்லூரி என்று படிக்க வைத்தால், ஐந்து கோடிகள் வரை செலவாகும்.12 வருடங்கள் பாடு பட வேண்டும். படித்துத் தேறுவான் என்பதற்கு உறுதி இல்லை. ஆனால் இந்த மாக்ரோ சிப் டெக்கில் ஒரே மாதத்தில் பையன் தலை சிறந்த மருத்துவர் ஆகிவிடுவான். இந்த நினைப்பில் ஒரு பொறி தட்ட, சரவணன் திடீரென்று கேட்டான்.

"சிப் பொறுத்திய நிலையில், அது எத்தனை நாட்களில் வேலை செய்யும்? பையன் எப்போதிருந்து வேலைக்குப் போகலாம்?"

"நீங்கள் குறிப்பிடும் பாடத்தை சிப்பில் முழுமையாக ஏற்றி, ஒரு சிறு சர்ஜரி மூலம் மண்டைக்குள் வைத்துவிடுவோம். அது பையனின் மூளையுடன் இணந்து யதார்த்தமாகச் செயல்பட இரண்டு மாதங்கள் ஆகும். அதோடு மூன்று மொழிகளுக்கான மென்பொருட்கள், கலைக்களஞ்சியம், செஸ் உட்பட பலவிதமான விளையாட்டுக்களுக்கான மென் பொருட்களையும் உள்ளே ஏற்றி விடுவோம். அதெல்லாம் இலவசம். பையன் மூன்று மொழிகள் பேசுவதோடு, அறிவு ஜீவியாகவும் இருப்பான். ஜாதிப் பிரச்சினனகளை ஒழித்து விட்டோம். ஆனால் இப்போதைய பிரச்சினை சமஅறிவு இல்லாமை! அதை ஒழிக்க விஞ்ஞானி கோவி.மன்னன் கண்டுபிடித்ததுதான். இந்த மாக்ரோ சிப். இதுவரை மூன்று லட்சம் குழந்தைகளுக்குப் பொருத்தியிருக்கிறோம். இன்னும் பத்து ஆண்டுகளுக்குள் பள்ளிக்கூடம், கல்லூரிகளே இல்லாமல் செய்து விடலாம்."

"சரி டாக்டர், அந்தத்துறையில் இருப்பவர்களுக்கெல்லாம் வேலை இல்லாமல் போய் விடுமே?"

"நோ, அது நம்முடைய வேலை அல்ல! அதை அரசு பார்த்துக் கொள்ளும். இப்போது விவசாயத்துக்கு ஆள் இல்லை. அந்தத்துறைக்கு யார் வேண்டுமென்றாலும் செல்லலாம். யூசர் ப்ரெண்ட்லி டெக்னாலஜியெல்லாம் வந்து விட்டது. ஒரு சிறு தொட்டியை வைத்து இரண்டே மாதங்களில் ஒரு மூட்டை நெல்லை உற்பத்தி செய்யலாம். அதைக் கொண்டு போய் மிஷினில் கொட்டினால் அவித்துப் பிழிந்து மாத்திரைகளாக்கிக் கொடுக்க
ஏராளமான மிஷின்கள் வந்துவிட்டன. வீட்டில் இருந்தபடியே விவசாயம் செய்யலாம்"

"அது கிடக்கட்டும் டாக்டர்! நீங்கள் என் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்.பையன் எப்போது வேலைக்குப் போகலாம்? வேலை கிடைக்குமா?

"பதினெட்டு வயது வரை காத்திருக்க வேண்டும். அதற்குள் வேலைக்குச் செல்வதை அரசு சட்டங்கள் அனுமதிக்காது!"

"அதுவரை அவன் என்ன செய்வான் டாக்டர்?"

"அவன் ஆன் லைனில் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். இணையம் எண் எட்டில் எராளமான பயிற்சித் தளங்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. கோடிக்கணக்கான சிகிச்சைக் கிளிப்பிங்குகள் காணக் கிடைக்கின்றன. தினமும் ஒரு ஆறு மணி நேரம் அதைப் பார்த்து அவன் தன் திறமையை வளர்த்துக் கொள்ளவேண்டும். பயிற்சி வகுப்பு என்று வைத்துக் கொள்ளுங்கள்.

"சரி டாக்டர், பணத்திற்கு என்ன செய்வது டாக்டர்? எங்கள் இருவர் கம்பெனியிலும் சேர்த்து அதிக பட்சம் பத்துக் கோடிக்கு மேல் கடன் வாங்க முடியாது டாக்டர்!"

"அதெல்லாம் கவலைப் படாதீர்கள், எங்கள் அலையன்ஸ் நிறுவனத்தின் சார்பு நிதி நிறுவனம் உங்களுக்கு வட்டியில்லாக் கடனுக்கு ஏற்பாடு செய்யும். அதற்கான பேப்பர்களை மட்டும் நீங்கள் கொடுத்தால் போதும்!"

"என் மனைவியைக் கலந்தாலோசித்துவிட்டு மீண்டும் வருகிறேன். நன்றி டாக்டர்!"

என்று சொன்ன சரவணன் எழுந்துவிட்டான்

++++++++++++++++++++++++++++++++++++++++++++
சரவணனின் மனைவி ஸ்டெல்லாவின் ஏற்பாட்டில் எல்லாம் கச்சிதமாக நடந்தது.

தம்பதிகளுக்குப் பரம சந்தோஷம்.

மருத்துவமனையில் இருந்து தங்கள் மகன் திரும்பிய நாளன்று, தங்கள் குடியிருப்பில் இருப்பவர்களுக்கும், நெருங்கிய நண்பர்களுக்கும் ஒரு சிறு விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.குடிக்கான மாத்திரைகள்தான் அதிகம் செலவாகியது. பஃபே உணவிற்காக கண்டாமினேஷன் ஃப்ரீ பேக்கிலிருந்து உடைத்து வைக்கப்பட்டிருந்த விதம் விதமான உணவு மாத்திரைகள் மிஞ்சி விட்டன. ஆறு மணி நேரத்திற்குப் பிறகு அவற்றை உபயோகிக்க முடியாது. அத்தனையும் வீட்டிலிருந்த சிறு க்ரஷ்சர் மூலம் உடைக்கப்பட்டு குப்பைக்குப் போயின!

அவர்களுடைய குமாரன் ஜூனியர் சரவணன் முன்னைவிட சுறுசுறுப்பாக இருந்தான்.

மண்டையில் மட்டும் அறுவை சிகிச்சை செய்த இடத்தில் சோடா மூடி அளவிற்குத் தழும்பு இருந்தது. அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் சொல்லியிருந்தார்கள் மூன்று மாதங்களுக்குள் முடி முளைத்து அந்தத் தழும்பு மறைந்து விடுமாம்.
+++++++++++++++++++++++++++++++++++++++

மூன்று மாதங்கள் ஓடிப்போனதே தெரியவில்லை!

தம்பதிகள் இருவரில் ஒருவருக்கு வெளி வேலை. ஒருவர் வீட்டிலிருந்தே அலுவலக வேலைகளைக் கணினியில் செய்ய வேண்டும்.

அலுவலகத்தில் இருந்து திரும்பிய சரவணனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அவன் மனைவி ஸ்டெல்லா கலவரத்துடன் இருந்தாள். தலையில் அடிபட்டிருந்த இடத்தில் போடப்பட்டிருந்த ப்ளஸ் 2xy பிளாஸ்த்ரி அவளுடைய கலவரத்தை அதிகப் படுத்திக் காட்டியது!

சரவணன் தன்னுடைய பதட்டத்தைக் காட்டிக்கொள்ளாமல், மெதுவாகக் கேட்டான்,

"என்னடி செல்லம்? என்ன நடந்தது? ஒய் யூ ஆர் பானிக் ?"

"எனக்குப் பயமாக இருக்கிறது டியர்?"

"ஏன் என்ன நடந்தது?"

"நமது பையன் வயலண்ட்டாகி விட்டான். பேச்சு வார்த்தையில் தகறாறு முற்றி, ஒரு கட்டையை எடுத்து என்னை அடித்து விட்டான்."

"அய்யோ, அப்புறம் என்ன ஆயிற்று?"

"நான் போட்ட சத்தத்தில், கட்டடத்தில் குடியிருப்பவர்கள் எல்லாம் கூடிவிட்டார்கள். எல்லோருமாக ஒன்று சேர்ந்து அவனைக் கட்டுப் படுத்த வேண்டியதாகி விட்டது."

"இப்போது அவன் எங்கே?"

"செடேட்டிவ் கொடுத்து அவனைத் தூங்க வைத்திருக்கிறோம்"

"பிரச்சினை என்ன? என்ன தகறாறு?"

"எனக்கு செக்ஸ் வேண்டும். ஒரு பெண் வேண்டும். பணம் கொடு. அல்லது பெண்ணை ஏற்பாடு செய்து கொடு என்கிறான்"

"அய்யோ அந்த அளவிற்கு எப்படிப் போனான்?"

"பத்து நாட்களாக அவன் மருத்துவப் பயிற்சிப்பாடங்களை எல்லாம் ஆன்லைனில் படிக்கவில்லை. போர்னோ படமாகப் பார்த்திருக்கிறான். அதனால் வந்த விளைவு தான் இது!"

"பாஸ் வேர்டு போட்டு இணையம் பதிமூன்றைப் பார்க்க முடியாமல் செய்து வைத்திருந்தேனே?"

"அதையெல்லாம் டீகோடு செய்து அவன் தகர்த்திருக்கிறான்"

"டாக்டரிம் கேட்டாயா?"

"கேட்டேன். அந்த நாதாரி, பத்துப் பையன்களில் ஒருவருக்கு இப்படியாகும் என்று கூலாகச் சொல்கிறார்?"

"என்ன தீர்வு என்று கேட்டாயா?"

"கேட்டேன். கவுன்சிலிங் செய்தால் சரியாகிவிடும் என்கிறார்?"

"கவுன்சிலிங்கா? அந்தக் கருமத்தை எங்கே போய்ச் செய்வது?'

"அவர்களிடமே அதற்கான நிபுணர்கள் உள்ளார்களாம். மூன்று மாதக் கோர்ஸாம்

ஆனால் கொஞ்சம் அதிகமாகச் செலவாகும் என்கிறார்?"

"அய்யோ, இனியும் செலவு என்றால் தாங்காதே!"

"வேறு வழியில்லை. செய்துதான் ஆகவேண்டும்!"

"எவ்வளவு ஆகுமாம்?"

சலனமின்றி அவள் பதில் சொன்னாள்.

"இரண்டு கோடிகள் ஆகுமாம்!"

தடாலென்ற சத்ததுடன் சரவணன் இன்ஸ்டண்ட்டாக மயங்கி விழுந்தான்.

எப்போது எழுந்தான் என்பது பற்றிய தகவல் இல்லை!
-------------------------
சம அறிவுத் திட்டம்! அறிவியல் போட்டிக்கான சிறுகதை இது! 18.7.2008 அன்று எழுதி என்னுடைய பல்சுவைப் பதிவில் பதிந்த கதை. அதை நீங்கள் அறிந்து கொள்ள இன்று வலையில் ஏற்றியுள்ளேன்

========================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

27.5.14

Astrology: Quiz 55 யாரென்று கண்டுபிடியுங்கள்!

 
Astrology: Quiz 55 யாரென்று கண்டுபிடியுங்கள்!

பகுதி ஐம்பத்தி ஐந்து

26.5.2014

Find out the native of the horoscope. ஜாதகத்திற்கு உரியவர் யார் என்பதைக் கண்டுபிடியுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள்.முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன Okay யா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?


நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்.விக்கி பீடியா, கூகுள் தேடு பொறி என்று எல்லா வசதியும் உள்ளதே! பிறகென்ன கஷ்டம்?

க்ளூ வேண்டுமா?

தமிழ்நாட்டுக்காரர் அல்ல. பிரபலமானவர்.

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
================================================== 


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

26.5.14

புத்தக விமர்சனம்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு!

 

புத்தக விமர்சனம்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு!

நேர்த்தியான வடிவமைப்பு, அத்தனை பக்கங்களும் வண்ணங்களில், ஏராளமான தகவல்கள், வண்ணப் படங்கள், என்று புத்தகம் அருமையாக
இருக்கிறது. அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய நூல்!

கவிஞர் வைரமுத்துவின் வைரவரிகளிலான அணிந்துரை புத்தகத்திற்கு மேலும் அணி சேர்க்கிறது!

’ரஜினிகாந்த்’ தமிழ்நாட்டு ரேஷன்கார்டுகளில் எழுதப்படாத ஒரு குடும்பப் பெயர் என்று ரஜினிகாந்தின் பெருமையை ஒற்றைவரியில் சொல்லிவிடுகிறார்அவர். சுருங்கச் சொல்லி மனதைத் தொடும்படியாக எழுதுவதுதான் கவிஞர்களுக்கே உரிய சிறப்பு. மேலும் இப்படிக் குறிப்பிடுகிறார்:

”இந்தியாவின் ஒரு கலை அடையாளம். இந்தியாவிற்கு வெளியிலும் இந்தியத் திரைப்படக் குறியீடு.”

தினத்தந்தி நாளிதழின் வரலாற்றுச் சுவடுகள் பகுதியில் பல வாரங்கள் வெளிவந்து படித்தவர்கள் அனைவரையும் பரவசப்படுத்திய தொடர்
கட்டுரைகளின் தொகுப்புத்தான் இப்போது நூல் வடிவம் பெற்றுள்ளது.

”என்னுடைய முழு வாழ்க்கையையும் சரியானபடி பிரதிபலிக்கும் விதத்தில் இந்த நூல் அமைந்துள்ளது” என்று ரஜினிகாந்த் அவர்களே பாராட்டியபடி
நூல் அமைந்துள்ளது என்பது குறிப்பிட வேண்டிய செய்தியாகும்.

தினத்தந்தி நாளிதழின் இயக்குனர் திரு. சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன் அவர்களின் முன்னுரை நூலிற்கு மேலும் ஒரு அணியைச் சேர்க்கிறது
என்றால் அது மிகையல்ல!

101 அத்தியாயங்கள் உள்ள இந்தப் புத்தகத்தைக் கையில் எடுத்துவிட்டால், தொடர்ந்து படிக்கும்படி விறுவிறுப்பான நடையில் உள்ளது.

ரஜினிகாந்த் அவர்களின் பெற்றோர்களான தந்தையார் திரு. நானோஜிராவ், தாயார் திருமதி.ராம்பாய் ஆகியவர்களைப் பற்றிய செய்தியுடன் துவங்கி,
அவருடைய இளமைக்கால வாழ்க்கை முதல் 10 அத்தியாயங்களில் சிறப்பாகப் பதிவு செய்யப்பெற்றுள்ளது. திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து அவர் படித்ததில் இருந்து, அங்கே அவர் இயக்குனர் திரு.பாலச்சந்தர் அவர்களின் கவனத்தைப் பெற்றதுவரையிலான காலகட்டமும் சுவையாக அலசப் பெற்றுள்ளது.

15.8.1975ஆம் தேதியன்று வெளிவந்த ரஜினிகாந்த் அவர்களின் முதல் படமான ‘அபூர்வ ராகங்களில்’ ஆரம்பித்து 23.5.2014 அன்று வெளியான கோச்சடையான் வரை மொத்தம் 157 படங்களைப் பற்றிய தகவல்கள் விரிவாக உள்ளன.

இதுவரை அவர் நடித்த படங்கள் வகைப்படுத்தப் பெற்றுள்ளன:

தமிழ் மொழியில் 107 படங்கள்.
கன்னடம் (15), தெலுங்கு (11) மலையாளம் (9) இந்தி (13) வங்காளம் (1) ஆங்கிலம் (1) என்று பிறமொழிகளில் அவர் நடித்த படங்கள் 50.
ஆக மொத்தம் உள்ள 157 படங்களுமே, வெளிவந்த தேதியுடன் பட்டியலிடப் பட்டிருக்கிறது.

அவரைத் திரையுலகிற்கு அறிமுகம் செய்த இயக்குனர் திரு.கே.பாலச்சந்தர் அவர்கள், அவரை வைத்து 9 படங்களை இயக்கி உள்ளார்.
அவரை  வைத்து மிக அதிகமான படங்களை இயக்கியவர் என்ற
பெருமையை இயக்குனர் திரு.SP. முத்துராமன் அவர்கள் பெறுகின்றார். மொத்தம் 25படங்கள். அவர்கள் இருவரைப் பற்றியும் உள்ள செய்திகள் வண்ணப் படங்களுடன் புத்தகத்தில் சிறப்பாகப் பதிவு
செய்யப்பெற்றுள்ளது.

தினத்தந்தி நாளிதழின் ஆஸ்தான ஜோதிடரான கவிஞர் திரு.சிவல்புரி சிங்காரம் அவர்கள், ராஜின்காந்தின் ஜாதகத்தை அலசிப்
பதிவிட்டிருக்கிறார். அதுவும் சிறப்பாக உள்ளது.

சுப வருடம் கார்த்திகை மாதம் 27ஆம் தேதி (12.12.1950) இரவு 11.45 மணிக்கு ரஜினிகாந்த் பிறந்துள்ளார். செவ்வாய்க்கிழமை. சிம்ம லக்கினம்.
திருவோண நட்சத்திரம். மகர ராசி. பிறந்த ஊர் குறிப்பிடப் படவில்லை. ரஜினிகாந்தின் தந்தையார் பெங்களூர் காவல்துறையில் பணி செய்து
கொண்டிருந்தார் என்பதை வைத்து பெங்களுர்தான் அவருடைய பிறந்த ஊர் என்று நாம் முடிவு செய்துகொள்ள வேண்டியதுதான்.

ராஜயோகம் பற்றிக் குறிப்பிடும்போது, கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் - 12ஆம் இடத்து விரையச் சந்திரன் ஜாதகரின் ஆறாம் வீட்டில்
அமர்ந்து பெருத்த ராஜ யோகத்தைக் கொடுத்தான் என்று குறிப்பிட்டுள்ளார் அவர்.

ராகு கொடிப் பிடிக்கும் காலசர்ப்ப தோஷ/யோக ஜாதகம். அதனால்தான் ரஜினிகாந்த் இளமைக் காலத்தில் பல சிரமங்களுக்கு ஆளாகியிருக்கிறார்.
பின்னால் அத்தனையும் யோகமாக மாற்றிக் கொடுத்திருக்கிறான் 7ல் இருந்து லக்கினத்தைத் தன் பார்வையில் வைத்திருக்கும் ராகு.

அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய நூல். ஆகவே காசு கொடுத்து வாங்கிப் படியுங்கள்

24.5.2014 சனிக்கிழமை மாலையில்தான் புத்தகம் கடைகளில் கிடைத்தது. புத்தகம் வெளிவந்தவுடனேயே நான் அதை வாங்கிப் படித்துவிட்டேன்.
நீங்களும் படிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அதற்கு நல்லதொரு விமர்சனம் எழுதி இன்று பதிவிட்டுள்ளேன்

நூலின் தலைப்பு: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு
விலை: ரூ.200:00
பக்கங்கள்: 400 (1/8 சைஸில்)
வெளியீடு: தந்தி பதிப்பகம்
86, ஈ.வி.கே சம்பத் சாலை
வேப்பேரி
சென்னை - 600 007
போன்: 044 - 2661 8661
மின்னஞ்சல்:  support@dt.co.in
இணையதள முகவரி: WWW.dailythanthi.com
அச்சிட்டோர்: ஈகிள் பிரஸ்
சென்னை - 600 013

அன்புடன்
SP.VR.சுப்பையா
கோயம்புத்தூர்

=====================================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

23.5.14

தென்றல் வந்து எதைத் தேடும்?

 
தென்றல் வந்து எதைத் தேடும்?

பக்தி மலர்

23.5.2014

இன்றையப் பக்தி மலரை 'சூலமங்கலம்' சகோதரிகள் பாடிய பக்திப் பாடல் ஒன்று அலங்கரிக்கின்றது. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்

---------------------------------------------
கோபுர வாசலிலே - குமரா உன்
கோலம் தெரியுதய்யா
(கோபுர வாசலிலே ... )

கொஞ்சும் தமிழ் கேட்டு - உன் முகம்
குறுநகை புரியுதய்யா
ஐயா ...
(கோபுர வாசலிலே ... )

காவிரி நீர் பெருக்கு - உன் மீது
கவிதைகள் பாடுதய்யா

பூவிரி சோலை எல்லாம் - தென்றல் வந்துன்
பூமுகம் தேடுதய்யா
முருகா ...
(கோபுர வாசலிலே ... )

குன்று மலைகளெல்லாம் - நீ வாழும்
கோவில்கள் ஆகுமய்யா

குமரிக் கடலலைகள் - உன்னை வந்து
கும்பிட்டு போகுமய்யா
முருகா ...
(கோபுர வாசலிலே ... )

கொஞ்சும் தமிழ் கேட்டு - உன் முகம்
குறுநகை புரியுதய்யா
ஐயா ...
(கோபுர வாசலிலே ... )   


பாடலைப் பாடியவர்கள்: 'சூலமங்கலம்' சகோதரிகள்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
===============================================

22.5.14

Astrology: Quiz 54: காலம் போகும் பாதையை இங்கே...........யார் காணுவார்?

 
Astrology: Quiz 54: காலம் போகும் பாதையை இங்கே...........யார் காணுவார்?

புதிர் எண் 54ற்கான விடை:
---------------------------------------------
யோகத்தின் முக்கியத்துவம்.

காலசர்ப்ப தோஷம் உள்ள ஜாதகக்காரர்கள். சின்ன வயதில் மிகவும் கஷ்டப்படுவார்கள். அவதிக்கு உள்ளாவார்கள். ஆனால் அதன் காலம்  முடிந்த பிறகு, அதாவது 32 அல்லது 33 வயதிற்குப் பிறகு நன்றாக வந்தால் போதாதா? அப்படி ஏற்பட்டால், அதற்காக மகிழ்ச்சி கொள்ள வேண்டும். அதைப் பின் யோக ஜாதகம் என்று கூறுவார்கள்.  That is the second part of the life will be better.

அப்படி அதே ஜாதகம் யோகம் உள்ளதாக மாற வேண்டுமென்றால், ஜாதகத்தில் நல்ல யோகங்கள் ஒன்றோ அல்லது இரண்டோ நிச்சயம் இருக்க வேண்டும். அந்த யோகங்களால் நிச்சயம் நல்ல பலன்கள் உண்டாகும்

ஒரு உதாரண ஜாதகத்தின் மூலம் அதை அலசுவோம்

மகர லக்கின ஜாதகம். உத்திராட நட்சத்திரம்.

1. சச யோகம் உள்ளது. சனி லக்கினத்தில் இருப்பதால் அந்த யோகம். உடன் சுபக்கிரகங்களான சந்திரனும் குருவும் சனியுடன் சேர்ந்து இருப்பதால் அந்த யோகம் வலிமை பெற்று விளங்குகிறது.

2. சனி பத்தாம் பார்வையாக ஜாதகத்தின் பத்தாம் இடத்தைப் பார்க்கிறது. சனி திசையில் ஜாதகன் அதீதமான உத்தியோக உயர்வுகளைப் பெற்று தான் பார்த்த உத்தியோகத்தில் உச்சத்தைத் தொட்டான்.

3. கஜ கேசரி யோகம் உள்ளது. மகர லக்கினத்திற்கு குரு 3 மற்றும் 12ஆம் இடங்களுக்கு உரியவன். அதனால் அந்த யோகம் பயனில்லாமல் போய்விட்டது. யோகத்தில் கிரகம் அமர்ந்திருக்கும் இடம் போல ஆதிபத்தியம் கொண்ட இடமும் முக்கியம். அதை மனதில் கொள்க!

4. ஆனால் அந்த் கஜகேசரி யோகத்தால் ஒரு பயனும் இல்லாமல் போகாது. குடும்ப வாழ்க்கையில் ஜாதகனுக்கு அது மகிழ்ச்சியைக் கொடுத்தது.

5. ஜாதகத்தில் காலசர்ப்ப தோஷம் உள்ளது. ஆனால் அதை ஒரு நல்ல யோகம் என்று சொல்ல முடியாது. சின்னச் சின்ன வெற்றிகள் எல்லாம் வாழ்க்கையின் பின் பகுதியிலேயே கிடைக்கும்!

Success if any is said to come late in life!
--------------------------------------------------------

கேட்கப்பெற்ற கேள்விகள்:

1. ஜாதகருக்கு காலசர்ப்ப தோஷம் உள்ளது. எத்தனை வயதில் நிமிர்ந்து உட்கார்ந்தார்?
2.பார்த்த வேலை ஸ்திரமாகி நிம்மதி கிடைத்ததா? அல்லது கிடைக்கவில்லையா?


சரியான விடைகள்:
1. ஜாதகனுக்கு 38 வயதிற்குப் பிற்கு, அதாவது ராகு திசை முடிந்து குரு மகா திசை ஆரம்பித்தவுடன் நல்ல காலம் பிறந்தது. அப்போதுதான் அவரால் நிமிர்ந்து உட்கார முடிந்தது.

2.சனி ஸ்திரமாக இருந்ததால், நல்ல வேலை கிடைத்தது. ஆனால் 38 வயதிற்குப் பிறகு தான் படிப்படியாக உயர்வுகள் கிடைத்தது. சனி திசையில் ஜாதகன் அதீதமான உத்தியோக உயர்வுகளைப் பெற்று தான் பார்த்த உத்தியோகத்தில் உச்சத்தைத் தொட்டான்.

------------------------------------------------------
இரண்டு விடைகளையும் சரியாக அல்லது ஒட்டி எழுதியவர்களின் பெயர்களைக் கீழே கொடுத்துள்ளேன். மொத்தம் 10 பேர்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள் உரித்தாகுக! ஒரு விடையை மட்டும் சரியாக எழுதியவர்களை நான் கணக்கில் சேர்த்துக்கொள்ளவில்லை. அதை மனதில் கொள்ளவும். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்!

அன்புடன்
வாத்தியார்

---------------------------------------------------
1
/////Blogger Dallas Kannan said...
    Respected Sir
    Here is my answer.
    1. After 36 (in sani Dasa)
    20 to 36 Guru dasa. Guru is 3rd and 12th lord and neecham.
    2. His will have stable job as he has dharma karmathipathi yogam (Sukra/Budha parivarthanai) and guru looks at 10th lord Sukra.
    Kethu starts the Kala sharba dosa. But Guru, Sukra, Butha and Chandran have more tan 5 parals.
    Wednesday, May 21, 2014 9:14:00 AM////
---------------------------------------------------------------
2  
/////Blogger Palani Shanmugam said...
    மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
    புதிர் பகுதி 54 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி,
    6 மற்றும் 9ம் பதியான புதன் 10ல், செவ்வாய் மற்றும் நீச்ச சூரியனுடன் சேர்க்கை பெற்றிருந்தாலும், 10ம் பதியான சுக்கிரனுடன் பரிவர்த்தனை ஆகியிருப்பதால், தர்ம கர்மாதிபதி யோகம் ஏற்பட்டு வலுப்பெற்று இருப்பதாலும், சுக்கிரனுக்கு குரு பார்வை கிடைப்பதாலும் ஜாதகருக்கு பார்த்த வேலை ஸ்திரமாகி இருக்கும்.
    ஆனாலும் கால சர்ப்ப தோஷம் இருப்பதால் ராகு திசை முடிந்து குரு திசையில்தான் அதாவது அவருடைய 39வது வயதுக்குப் பிறகே நிம்மதிப் பெருமூச்சு விட்டிருப்பார்.
    Wednesday, May 21, 2014 10:42:00 AM/////
--------------------------------------------------------------
3
//////Blogger SIVA said...
    வாத்தியார் அய்யா அவர்களுக்கு வணக்கம் ..
    17/OCT/61 2:15 PM பிறந்த இந்த ஜாதகர் , அஷ்டமா & அஷ்டமதிலுள்ள கிரகங்கள் மற்றும் மாரகதிபதிகளின் திசையை கடந்து தனது குரு திசையில் இப்போது இருக்கின்றார் பத்தில் புதன் ஆதித்ய யோகம் கேந்திரமாகிய பத்தில் இந்த யோகம் இருந்தால் தொழிலில் திறமையாக செயல்படலாம் .ஆகவே குரு திசையில் இவர் தொழிலில் நிமிர்ந்து நிற்பார்., இவருக்கு மூன்று கிரகங்கள் நீச பங்கம் ஆகின்றது .. குரு ,சுக்கிரன் , சூரியன் . இதில் முக்கியமானது என்னவென்றால் சுக்கிரனும் புதனும் தர்மகர்மாபதி யோகத்தில் பரிவர்தனை . மேலும் லக்கினத்தில் உள்ள தொழில்காரகன் சனி பார்வை பத்தில்., தனகாரகன் குரு பார்வை ஒன்பதாமிடதிற்கு ., பரல் கணக்கில் மிகவும் பலமான சுக்கிரன் மற்றும் குரு,
    இரண்டு மற்றும் ஏழாம் அதிபதிகளின் சேர்க்கை , சஸமகா மற்றும் கஜகேசரி யோகத்தால் திடமான மற்றும் நன்மையான குணாதிசயங்கள் இவருக்கு உண்டு., ..   
    எனது இந்த கணிப்பிற்கு தங்களது மேலான ஆலோசனைகளை எதிர்பார்கிறேன்...
    Wednesday, May 21, 2014 11:37:00 AM//////
----------------------------------------------------------------------

/////Blogger C Jeevanantham said...
    Dear Sir,
    This person have kaala sarpa dosam leading by Kethu.
    Placement of neecha sukran in 9th help the native in later stage of life.
    1. After the age of 39 when guru dasa start , the native got improvement in the life. Even though guru is neecham, since it is placed in lagna it will do good to him.
    2. Until the age 39, he could not stand in one job, because Sun in neecham in 10th place, 10th lord sukran also neecham.
    But the lagna lord sani made him to work hard after the age of 39.
    Thanking you.
    C.Jeevanantham.
    Wednesday, May 21, 2014 12:07:00 PM/////
------------------------------------------------------------------------

/////Blogger Sivachandran Balasubramaniam said...
    மதிப்பிற்குரிய ஐயா,
    புதிர் எண் 54 இற்கான விடை:
    1) ஜாதகருக்கு ஒரு 26 வயது வரை காலசர்பதோசம் உண்டு. இளம் வயதில் கஷ்ட ஜீவனம்.
    2) தர்மகர்மாதிபதி யோகம். மகர லக்கினத்திற்கு சுக்கரனும், புதனும் யோகக்காரர்கள். அவர்கள் இருவரும் பரிவர்த்தனை பெற்று இருப்பதுடன் சுக்கரன் நீசம் பெற்றாலும் 7 பரல்கள், புதனும் 6 பரல்களுடன் பலத்துடன் இருப்பதுடன் ராகு திசை 21 வயதில் தொடக்கம். ராகுவில் ராகுவும், குருவும் முடிந்த பின்னர் ஜாதகர் அசுர வளர்ச்சி பெற்று இருப்பார். ராகு திசை வரை எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் குரு திசையில் பல விரயங்கள் உண்டு.
    Wednesday, May 21, 2014 12:33:00 PM//////
---------------------------------------------------------------------------
6
/////Blogger kmr.krishnan said...
    1. ஜாதகரின் 36 வயது வரை கால சர்பதோஷம் படுத்தி வைத்தது. ராகு தசா சந்திர புக்தி ஜுலை 1997 முதல் தான் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது.
    2.குருதசா பிப்ரவரி 2000 முதல் துவக்கம்.அதாவது 40 வயது போல பார்த்த வேலையில் உறுதித்த‌னமை ஏற்படடது.
    Wednesday, May 21, 2014 1:48:00 PM/////
------------------------------------------------------------------------- 
7
//////Blogger venkatesh r said...
    வணக்கம் ஐயா!
    கொடுத்து உள்ள ஜாதக அன்பர் மகர ராசி, மகர லக்னத்தில் பிறந்து உள்ளார். ஜாதகப்படி அவரின் 10மிடத்திற்கான அலசல் :
    1. கேது கொடி பிடிக்கும் கால சர்ப்ப தோஷ ஜாதகர்.
    2. 21 வயதில் வேலைக்குச் செல்லும் சமயத்தில் ராகு தசை ஆரம்பித்து உள்ளது.
    2.10மிடத்தில் அஷ்டமாதிபதி சூரியனும், ஜாதக வில்லன் புதனும், செவ்வாயுடன் கூட்டு வைத்து உள்ளனர்.
    3.10மிட அதிபதி மற்றும் யோகாதிபதியான சுக்கிரன் 9ல், அதாவது 10மிடத்திற்கு 12ல் அமர்ந்து, பாபகர்த்தாரியின் பிடியில் நீசமடைந்து உள்ளார்.ஆனாலும் புதனுடன் பரிவர்த்தனையில் உள்ளார்.
    4.ஜாதகத்தில் இரண்டு சுபகிரங்கள் நீசமடைந்து உள்ளனர்.
    இவை எல்லாம் சேர்ந்து கொண்டு, ஜாதகரை கிட்டதட்ட 38 வயது வரை நிமிர்ந்து உட்கார இயலாமல் செய்து விட்டன. மனதிற்கு பிடித்த வேலை கிடைக்காமலும், கிடைத்த சில வேலைகளில் பணி நிரந்தரமாகாமலும் மன‌ நிம்மதி இழந்திருப்பார்.
    அதற்கு பிறகு 38 வயதிற்கு மேல், குரு தசையில் ஜாதகர் ஒரு ஸ்திரமான சுய தொழிலை தொடங்கி அதில் வெற்றியும் பெற்று பணக்காரராகி இருப்பார்.
    அதற்கான காரணங்கள்:
    1)லக்னாதிபதி லக்னத்தில் இரண்டு சுபகிரகங்களுடன் அமர்ந்து உள்ளார்.
    2)10மிடத்திற்கு லக்னாதிபதியும், கர்மகாரகனுமான ச‌னியின் பார்வை உள்ளது.
    3) குருவின் 9ம் தனிப்பார்வை 10மிட‌ அதிபதியான‌ சுக்கிரனின் மேல்.
    4)10ல் புதனும், செவ்வாயும் சேர்ந்து தங்களின் இன்னொரு ஆதிபத்தியத்தின் காரணமாக (4,9) ராஜ யோகத்தை ஏற்படுத்தி உள்ளனர்.
    4)9மிடமும், 10மிடமும் பரிவர்த்தனை பெற்று உள்ளன.
    தங்களின் மேலான அலசலுக்கு காத்திருக்கிறேன்.
    Wednesday, May 21, 2014 3:10:00 PM//////
------------------------------------------------------------------------------
8
Blogger Ramkumar KG said...
    இந்த ஜாதகத்தில் உள்ள
    சாதகங்கள்
    --------------------
    1) லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி
    2) ஏழாம் அதிபதி லக்னத்தில்
    3) இரண்டம் அதிபதி லக்னத்தில்
    4) 11ஆம் அதிபதி பத்தில்
    5) 9ஆம் அதிபதி பத்தில்
    6) யோகாதிபதி சுக்ரன் 9இல் குருவின் பார்வையில்
    7) குரு லக்னத்தில் நீசபங்கம்
    8) குரு பார்வையில் 5,9 இடங்கள்
    பாதகங்கள்
    -------------------
    1) லக்னத்தில் மாந்தி
    2) லக்னத்தில் 12ஆம் அதிபதி
    3) இரண்டில் கேது
    4) 10இல் 6,8ஆம் அதிபதிகளின் அட்டகாசம்
    5) காலசர்ப்ப தோசம்
    ரகு திசையின் முடிவில் 38 வயதிற்கு மேல் மேம்படுவர் .
    தொழிலில் சில பிரச்சினைகள் இருந்தாலும் அனைத்தையும் சமாளித்து முன்னேறுவார்.

    Wednesday, May 21, 2014 8:08:00 PM//////
-----------------------------------------------------------------
9
////Blogger raghupathi lakshman said...
    மதிப்பிற்குரிய ஐயா வணக்கம்.
    இன்றைய புதிருக்கான விடை:
    1.33ம்வயதிற்க்கு மேல் நிமிர்ந்து உட்கார்ந்து இருப்பார்.
    2.ராகுத‌சை சுக்கிர புத்தியில் ஸ்திரமான வேலையை அடைந்து இருப்பார்.

    * மகர லக்கினம்,மகர ராசி லக்கினாதிபதி ஆட்சி.உடன் 12க்குரிய நீச்சகுரு.
    *கால‌ சர்பதோச ஜாதகம்.லக்கினம் செவ்வாயின் பார்வையில், இளமையில் போராட்டமான வாழ்க்கை.
    *5,10க்குரிய சுக்கிரன் யோகாதிபதியாகி 9க்குரிய புதனுடன் பரிவர்தனையாகி
    உள்ளார்.தர்மகர்மாதிபதி யோகம்.
    *அத்துடன் குருவின் பார்வை சுக்கிரன் மீது விழுவது நன்மையான அமைப்பு.இதனால் வேலை ஸ்திரமாக வாய்ப்பு உண்டு.
    நன்றி ஐயா. விடையினை சரியா என தெரிந்து கொள்ள ஆவல்.
    ல ரகுபதி
    Wednesday, May 21, 2014 9:23:00 PM/////
-------------------------------------------------------------------
10 
/////Blogger ravichandran said...
    Respected sir,
    My answer for our today's Quiz No.54:
    1. He has relieved from Kala sharpa dhosa at the age of 38.
    2. He has settled in his job at the age of 40 (Guru dasa,Saturn sub period).

    Answer no.1:
    He has affected Viloma kala sharpa dhosa. It's very bad. Lakna having 26 parals but Ragu dasa was continued during that period. So he relieved from Kala sarpa dhosa at his age of 38.(at the end of Ragu dhasa)
    2. Tenth lord venus debiliated as well as baba kathiri yoga and tenth house affected by Sixth and Eigth lord. So business is not suitable for him. lagna lord also along with twelfth house lord.
    He has some what comfort in his job at the age of 40 (Jupiter dhasa sub period of Saturn)since Guru is aspecting Venus as well as Saturn aspecting tenth house.
    In Navamsa, Saturn is Varkothmam.
    With kind regards,
    Ravichandran M.
    Thursday, May 22, 2014 3:15:00 AM//////
-------------------------------------------------------------------------
இது உதிரியான/ உபரியான  பதில்

////Blogger வேப்பிலை said...
    என்னுடைய ஜாதகத்தை அலசலுக்கு
    எடுத்துக் கொள்ளும் வரை
    புதிர்களில் கலந்து கொள்வதில்லை
    புரிந்து கொண்டுபடி பதிவேற்றி
    உயிருடன் இருக்கும் போதே
    உறுப்பு தானம் என்பது போல்
    அலசலுக்கு ஆட்படுத்துங்கள்
    அதுவரை அன்புடன்
    Wednesday, May 21, 2014 8:46:00 AM/////

வகுப்பறைக் கண்மணிகளின் ஜாதகத்தை வகுப்பறையில் அலசலுக்கு எடுத்துக்கொள்வதில்லை. அதில் சில பிரச்சினைகள் உள்ளன. விவரிக்க முடியாது. மன்னிக்கவும்!


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

21.5.14

Astrology: quiz.54: ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே!

 

Astrology: quiz.54: ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே!

Quiz No.54: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

பகுதி ஐம்பத்தி நான்கு

21.5.2014

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு இரண்டு கேள்வி. அந்த இரண்டு கேள்விகளுக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!
------------------------------------
இன்றைய கேள்விகள்:

கீழே உள்ள ஜாதகம் ஒரு அன்பரின் ஜாதகம்.

1. ஜாதகருக்கு காலசர்ப்ப தோஷம் உள்ளது. எத்தனை வயதில் நிமிர்ந்து உட்கார்ந்தார்?
2.பார்த்த வேலை ஸ்திரமாகி நிம்மதி கிடைத்ததா? அல்லது கிடைக்கவில்லையா?

இரண்டு கேள்விகளுக்கும் சரியான பதில்களை எழுதினால் மட்டுமே 100 மதிப்பெண்கள் கிடைக்கும்.


அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்

===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

20.5.14

Astrology: Quiz 53 யாரென்று கண்டுபிடியுங்கள்!

 
Astrology: Quiz 53 யாரென்று கண்டுபிடியுங்கள்!

பகுதி ஐம்பத்தி மூன்று

20.5.2014

Find out the native of the horoscope. ஜாதகத்திற்கு உரியவர் யார் என்பதைக் கண்டுபிடியுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள்.முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன Okay யா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?



நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்.விக்கி பீடியா, கூகுள் தேடு பொறி என்று எல்லா வசதியும் உள்ளதே! பிறகென்ன கஷ்டம்?

க்ளூ வேண்டுமா?

தமிழ்நாட்டுக்காரர். பிரபலமானவர்.

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்

--------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

19.5.14

சாதித்துக் காட்டிய மோடியும் லேடியும்!

 
சாதித்துக் காட்டிய மோடியும் லேடியும்!

நமது தேசத்தின் புதிய பிரதமராகப் பதவி ஏற்க உள்ள திரு.நரேந்திர மோடி அவர்களை நமது வகுப்பறையின் சார்பில் வரவேற்போம். இறையருளுடன் அவர் நல்லாட்சி புரிந்து, நாட்டு மக்கள் விரும்பும் மாற்றங்களைக் கொண்டு வரட்டும்!

வாழ்க மோடி! வளர்க மோடி!
-------------------------------------------------------------

தனித்து நின்று அமோக வெற்றிபெற்ற நமது தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்களையும் நமது வகுப்பறையின் சார்பில் வாழ்த்துவோம்!

தமிழகத்தில் என்ன நடந்தது? ஒரு பார்வை:

 அன்புடன்,
வாத்தியார்

-------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

16.5.14

Devotional: வினையைத் தீர்ப்பது யாருடைய வேலை?

 
Devotional: வினையைத் தீர்ப்பது யாருடைய வேலை?

பக்தி மலர்

இன்றையப் பக்தி மலரை திருமதி சூலமங்கலம் சகோதரிகள் பாடிய பாடல் ஒன்று அலங்கரிக்கின்றது. அனைவரும் பாடலைப் படித்து/பாராயணம் செய்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்

-----------------------------------------------------------------
கருணை ... முகங்கள் ... ஓராறு
காக்கும் கரங்களோ ... ஈராறு
முருகன் ... வாழும் ... வீடாறு
முகம் பார்த்து ... இரங்க வேறாரு

கந்தன் ...
கருணை ... முகங்கள் ... ஓராறு

துணை என்று ... ஐயனின் வடிவேலை
தொழுவதன்றி வேறென்ன வேலை
வினையை ... தீர்ப்பது ... குகன் வேலை
வேலைப் போற்றுதல் ... நாவின் வேலை

கருணை ... முகங்கள் ... ஓராறு

அடியார்கள் ... அகமே அவன் கோயில்
அன்பே ... ஆலயத் தலைவாயில்
குடியாய் ... இருப்பான் ... குறை தீர்ப்பான்
குமரன் நம் குடியை வாழவைப்பான்

கந்தன் ...

கருணை ... முகங்கள் ... ஓராறு
காக்கும் கரங்களோ ... ஈராறு
முருகன் ... வாழும் ... வீடாறு
முகம் பார்த்து ... இரங்க வேறாரு

கந்தன் ...
கருணை ... முகங்கள் ... ஓராறு.

பக்திப் பரவசத்துடன் பாடலைப் பாடியவர்கள்: 'சூலமங்கலம்' சகோதரிகள் 
 ---------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

15.5.14

Humour: நகைச்சுவை: காணொளி நேரம்

Humour: நகைச்சுவை காணொளி நேரம்

எனக்கு மின்னஞ்சலில் வந்த வீடியோ க்ளிப்புகளில் இரண்டை உங்கள் பார்வைக்காகக் கீழே கொடுத்துள்ளேன். பார்த்து ரசியுங்கள்

அன்புடன் 
வாத்தியார் 
-------------------------------------------------------



இந்தக் காணொளிகளை வலை ஏற்றிய அன்பர்களுக்கு நம் நன்றியைத் தெரிவித்துக்கொள்வோம்!
-------------------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

14.5.14

Astrology: கண்ணுக்குள் ராகம் நெஞ்சுக்குள் தாளம் என்னென்று சொல் தோழி!

 

Astrology: கண்ணுக்குள் ராகம் நெஞ்சுக்குள் தாளம் என்னென்று சொல் தோழி!

பொதுவாக அலசல் பாடங்களுக்குத் தெரியாத, பிரபலமில்லாதவர்களின் ஜாதகத்தைக் கொடுப்பதுதான் வழக்கம். பிரபலங்களின் ஜாதகங்களைக்
கொடுக்கும்போது, வழக்கம்போல அது யாருடைய ஜாதகம் என்று கண்டு பிடித்துப் பதில் எழுதிவிடுகிறார்கள்.  

அலசலின் நோக்கம் கெட்டுவிடுகிறது.அப்படித்தான் நேற்றுக்
கொடுத்திருந்த ஜாதகமும், ஒரு பிரபலத்தின் ஜாதகம்தான். சிலர்
அதைக் கண்டு பிடித்துப் பதில் எழுதியிருக்கிறார்கள்.

யார் அந்தப் பிரபலம்?

மறைந்த செல்வந்தர் திருபாய் அம்பாணியின் ஜாதகம்தான் அது!

ஜாதகரின் நிதி நிலைமையை அலசச் சொல்லியிருந்தேன். ஜாதகர்
யாரென்று தெரிந்த பின்பு அவருடைய நிதி நிலைமையைச் சொல்வதா கஷ்டம்? விக்கி மஹாராஜா இருக்கிறாரே! அவர் முழுத் தகவலையும் தருவாரே!
-------------------------------------------------------
சரி இப்போது பாடத்திற்கு வருவோம்.


ஜாதகர் பிறவிப் பணக்காரர் அல்ல.

Dhirajlal Hirachand Ambani என்பது அவருடைய முழுப் பெயர்
28 டிஸம்பர் 1932ஆம் தேதியன்று பிறந்தவர் அவர்.
1977ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீசைத் துவங்கியவர்
25 ஆண்டுகளில், அதாவது 2002ல் அதை ஆசியாவின் மிகப் பெரிய நிறுவனமாகமாற்றினார். பெரும் செல்வந்தரானார்.
அத்துடன் அவர் 2.6.2002 ல் காலமும் ஆகிவிட்டார்.
இப்போது அந்நிறுவனத்தை அவருடைய குமாரர்கள்திறம்பட
நிர்வகித்து வருகிறார்கள்.

அம்பாணி ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர். அவர் தந்தை ஒரு பள்ளிக்கூட வாத்தியார். 1950ல் ஏமன் நாட்டில் ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தவர். 1958ல் மும்பைக்கு வந்து சேர்ந்தார். ஒரு
அடுக்கு மாடிக் குடியிருப்பில் வாடகை வீட்டில் குடியிருந்தார்.
1966ல் ரிலையன்ஸ்நிறுவனத்தைத் துவங்கிய பிறகுதான் அவர் வாழ்க்கையில் வசந்தம் வந்தது. அசுர வளர்ச்சியும் வந்தது.

காலசர்ப்ப தோஷ மற்றும் யோக ஜாதகம் 33 வயதுவரை அவரை
அமுக்கிப் பிடித்திருந்த ராகு பிறகு அவரை விட்டுவிட்டதோடு,
தனது மகா திசையில்அவருக்குப் பலத்த யோகத்தையும் கொடுத்தான்.
ராகு அவருடைய ஜாதகத்தில் 3ஆம் இடமான வெற்றி ஸ்தானத்தில் இருப்பதைக் கவனியுங்கள்.

1. பாக்கிய ஸ்தான அதிபதி சூரியன் லக்கினத்தில் அமர்ந்தது மிகவும் சிறப்பாகும். எல்லா பாக்கியங்களையும் வழங்கினான்
2. அரச கிரகங்களான சூரியனும், சந்திரனும் ஒன்று சேர்ந்து லக்கினத்தில் அமர்ந்தது மேலும் சிறப்புக்குரியதாகும்
3. லக்கினநாதன் குரு முக்கிய கேந்திரமான பத்தில் அமர்ந்ததும்
சிறப்புக் குரியதாகும்
4. 2ல் அமர்ந்திருக்கும் சனிக்கு அது சொந்த வீடாகும். அத்துடன்
தனகாரகனாக குரு பகவானின் பார்வை அந்த வீட்டின் மேல்
விழுவதையும்கவனியுங்கள். இருவரும் கூடணி போட்டுத்தான்
அவரைப் பெரும் செல்வந்தராக்கினார்கள். குரு திசையில்
அது கைகூடியது.

விரிவான அலசலை கேலக்ஸி2007 வகுப்பில் வைத்துக்கொள்வோம்!

கேது கொடிபிடிக்கும் ஜாதகம் என்று இரண்டொருவர் எழுதியுள்ளீர்கள்.
அது தவறு. ராகு மற்றும் கேதுவைத் தவிர எல்லா கிரகங்களும்
கெடிகாரச் சுற்றில்சுழலுபவை. அதைத்தான் கணக்கில் எடுத்துக்
கொள்ள வேண்டும். மற்ற கிரகங்களுக்கு முன்பு ராகு முதலில்
(கெடிகாரச் சுற்றில்) இருப்பதைப்பாருங்கள்

கணிப்பை ஓரளவிற்கு சரியாக எழுதியவர்கள். ஐந்து பேர்கள். 
அவர்களின் பெயர்களைக் கீழே கொடுத்துள்ளேன். அவர்களுக்கு
எனது மனம் உவந்தபாராட்டுக்கள்.
போட்டியில் கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் எனது பாராட்டுக்கள்!

அன்புடன்
வாத்தியார்

--------------------------------------------------------------
1
/////Blogger thozhar pandian said...
    இலக்கினாதிபதி மற்றும் தனகாரகர் குரு பகவான் இலக்கினத்திற்கு கேந்திரத்திலும், இரண்டாம் வீட்டிற்கு திரிகோணத்திலும் அம்சமாக
அமர்ந்துள்ளார். சனி பகவான் இரண்டாம் வீட்டில் இருந்தாலும் அது அவரது சொந்த வீடு. அதோடு இரண்டாம் வீட்டின் மேலும் அதில்
அமர்ந்திருக்கும் இரண்டாம் வீட்டுக்காரர் சனி பகவான் மேலும் தனகாரகர் குரு பகவானின் விசேஷ பார்வை உள்ளது. இதனால் இரண்டாம் வீடு
வலுவாகவே உள்ளது என்றாலும் இரண்டாம் வீடு பாபகர்த்தாரி யோகத்தில் உள்ளது ஒரு குறைதான். ஒருபுறம் சூரியன், மறுபுறம் இராகு. இலாப
வீடான 11ம் வீட்டுக்காரர் சுக்கிரன் விரயத்தில். பாக்கியஸ்தானத்தில் கேதுவும், செவ்வாயும். காலசர்ப்ப தோஷ ஜாதகம். ஜாதகர் ஏழையாக பிறந்தார்.
ஆனாலும் இராகு கொடி பிடித்து செல்லும் காலசர்ப்ப தோஷ ஜாதகம் என்பதால் தனது உழைப்பால் உயர்ந்து நடு வயதிற்கு பிறகு, அதாவது 35
அல்லது 40 வயதிற்கு பிறகு பெரும் பொருள் ஈட்டினார்.
இந்த அன்பருக்கு 32வது வயதில் இராகு தசை வந்திருக்கும். இராகு இலக்கினத்திற்கு 3ல்
இருப்பது நல்லதே. இராகு தசை முற்பாதியில் சில சோதனைகளையும் பிற்பாதியில் நல்ல உயர்வையும் கொடுத்திருக்கும். அடுத்து வந்த வியாழ
தசையில் அன்பர் மிகவும் சிறப்பாக வாழ்ந்திருப்பார்.

    Tuesday, May 13, 2014 6:46:00 AM/////
-------------------------------------------------------
2
/////Blogger Senthil Nathan said...
    ஐயா
    இந்த ஜாதகர் 28.12.1932 06.50 AM
    அன்று பிறந்தவர், இவரின் பெயர் கார்த்திகேயன் என்று இருக்கலாம்.
    கால சர்ப்பதோசத்தில் பிறந்த இவர், சாதாரண குடுப்பத்தில் பிறந்தவராவார்.,
    30 ஆண்டுகள் கழித்து 1962 ஜனவரிக்கு பிறகு இவரின் பொருளாதார நிலைமை நல்ல நிலைக்கு வர தொடங்கியிருக்கும்., பின்பு வந்த இராகு,
குரு மற்றும் சனி தசைகளில் அதிக பணக்காரராக மாறியிருப்பார்,

    இரண்டாம் அதிபதி இரண்டில் பலமாக உள்ளார்-குரு பார்வையுடன், இலாபாதிபதி சுக்கிரன் வர்க்கோத்தமம் அடைந்துள்ளார்.,-அய்யன்
இசைஞானி அவர்களுக்கு தாங்கள் சொன்னதைப்போல அதாவது பாவ, சூரிய & சந்திர மூன்று இலக்கினங்களும் ஒன்றாக இருப்பது யோக
நிலையாகும்.

    Tuesday, May 13, 2014 2:27:00 PM/////
---------------------------------------------------------------------------
3
/////Blogger kmr.krishnan said...
    சுக்கிரதசாவும், பாக்கிய ஸ்தானதிபதி சூர்யனின் தசாவும் 15 வயதுவரை ஓர‌ளவு
    வசதியைக் கொடுத்து இருக்கும்.
    அதன் பின்னர் 10 ஆண்டுகள் சந்திர தசாவில் (எட்டாம் அதிபன் தசா) அதிக சிரமம்.சந்திரன் அஸ்தங்க‌தம்.லக்கினத்தில் எட்டாம் அதிபன்
சந்திரன் அமர்ந்தது
    லக்கினத்தைப் பாழாக்கியது.
    கால சர்பதோஷ ஜாதகம் கேது கொடி பிடித்து முன் செல்கிறார். ஆகவே மிகவும் கஷ்ட ஜீவனம்.
    செவ்வாய் தசா முடிவில் 32 வயதிற்குப்பின்னர் சிறிது தலை தூக்கினார். ராகு தசா காலம் முழுவதும் 50 வயதுவரை தடங்கல்களுக்கு இடையே
முன்னேறினார்.
    குருதசாவில் நன்றாகத் த‌ன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.

    அஷ்ட வர்கத்தில் 10 11 இடங்களுக்கு 38, 35 பரல்கள் இருப்பதும் ,
    கஜகேசரியோகம் இருப்பதலும் , சுய வர்கத்தில் குரு 5 பரல் பெறுவதாலும் பிற்கால வாழ்க்கை நன்றாக அமைந்தது.
    Tuesday, May 13, 2014 4:17:00 PM/////
--------------------------------------------------------------------------
4
//////Blogger Kirupanandan A said...
    சம்பாதித்து பணக்காரர் ஆனவர். சனி பாப கிரகம் ஆனாலும் 2ம் அதிபதி 2ல் ஆட்சியாகி இருப்பது நல்ல யோகம். லக்னாதிபதியும் தன
காரகனுமான குரு 10ல் இருப்பது சுயமாக நிறைய சம்பாதித்து சொத்து சேர்ப்பதற்கான யோகம்.
லக்கினாதிபதி 10ல் இருக்கும் சில ஜாதகங்களில்
இதை கவனித்திருக்கிறேன். அதாவது சுயமாக சம்பாதித்து சொத்து சேர்ப்பது. 9ம் அதிபதி லக்கினத்தில் இருப்பதும் ராஜயோகம் தரக்கூடிய
அமைப்பு.

    Tuesday, May 13, 2014 8:07:00 PM/////
-------------------------------------------------------
5
/////Blogger venkatesh r said...
    தனுசு லக்னம், தனுசு ராசி ஜாதகர். கேது கொடி பிடித்து செல்லும் கால சர்ப்ப தோஷம் உள்ள ஜாதகம்.
    ஜாதகர் பிறவியில் பணத்திற்காக‌ மிகவும் கஷ்டப்பட்டு, பிறகு படிப்படியாக சம்பாதித்து பணக்காரனானவர். அதற்கான காரணங்கள்.
    1) இரண்டாம் இடமான தன ஸ்தானம், மற்றும் அதன் அதிபதி சனி பாப கர்த்தாரியின் பிடியில். அதனால் இளமையில் வறுமை.
    2)லக்னாதிபதி/ராசியாதிபதி மற்றும் தனகாரகனுமான‌ குரு 10ல் வலுவாக உள்ளார். அதனால் அவருக்கு நல்ல வேலை அமைந்தது. தவிர அவர் 2ம்
இடமான தன ஸ்தானத்தை தன் 5ம் விஷேச பார்வையில் வைத்து உள்ளார்.
    3)லாப ஸ்தானமான 11மிடம் சுப கர்த்தாரி யோகத்திலும் கர்மகாரகன் சனீஸ்வரனின் 10ம் பார்வையிலும் உள்ளது.
    எனவே ஜாதகர், தான் செய்து வந்த தொழிலில் படிப்படியாக முன்னேறி ஒரு செல்வந்தராக ஆகியிருப்பார்.
    Tuesday, May 13, 2014 10:09:00 PM/////
---------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

13.5.14

Astrology: நாளெல்லாம் திருநாளாகும், நடையெல்லாம் நாட்டியமாகும்!

 

Astrology: நாளெல்லாம் திருநாளாகும், நடையெல்லாம் நாட்டியமாகும்!  
Quiz No.52: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

பகுதி ஐம்பத்தியிரெண்டு!

13.5.2014

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு ஒரே ஒரு கேள்விதான்.
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் ஒரு அன்பரின் ஜாதகம்.

கேள்வி இதுதான்: ஜாதகரின் நிதி நிலைமை பற்றி ஆராய்ந்து எழுதுங்கள்! வேறு ஒன்றையும் நீங்கள் எழுத வேண்டாம்! அதாவது ஜாதகர் பிறவியிலேயே பணக்காரரா? அல்லது சம்பாதித்துப் பணக்காரர் ஆனவரா? அல்லது பணத்துக்கு கஷ்டப்பட்டு அல்லாடியவரா? அப்படி அல்லாடியிருந்தால், கடைசி வரை கஷ்டப்பட்டாரா? அல்லது மீண்டு வந்தாரா? அனைத்தையும் அலசி எழுதுங்கள்!

ஜாதகரின் இரண்டாம் வீட்டில் சனீஷ்வரன் டென்ட் அடித்துக் குடியிருக்கிறான். அதைக் கவனத்தில் கொண்டு உங்கள் ஆய்வைத் தொடருங்கள்!



அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்

===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

12.5.14

Astrology: Quiz 51 யாரென்று கண்டுபிடியுங்கள்!

 
Astrology: Quiz 51 யாரென்று கண்டுபிடியுங்கள்!

பகுதி ஐம்பத்தி ஒன்று

Find out the native of the horoscope. ஜாதகத்திற்கு உரியவர் யார் என்பதைக் கண்டுபிடியுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள்.முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன Okay யா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?


நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்.விக்கி பீடியா, கூகுள் தேடு பொறி என்று எல்லா வசதியும் உள்ளதே! பிறகென்ன கஷ்டம்?

க்ளூ வேண்டுமா?

தமிழ்நாட்டுக்காரர் அல்ல. பிரபலமானவர்.

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
============================================================

9.5.14

மனதிற்கு எப்போது ஆறுதல் கிடைக்கும்?

 
மனதிற்கு எப்போது ஆறுதல் கிடைக்கும்?

பக்திமலர்

இன்றைய பக்தி மலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய பாடலொன்று அலங்கரிக்கின்றது. அனைவரும் படித்து/பாராயணம் செய்து மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்

-----------------------------------------------------------
சுட்ட திருநீறெடுத்து ... தொட்டகையில் வேலெடுத்து
தோகைமயில் மீதமர்ந்த சுந்தரம் ...
அந்தக் கட்டழகு கொண்டதொரு கந்த வடிவேலவனைக்
காட்டுவது ஆறெழுத்து மந்திரம்

(சுட்ட திருநீறெடுத்து ... )

ஆறெழுத்து மந்திரத்துள் ஆடும் ஒரு சுந்தரத்தை
அந்திப் பகல் சிந்தனை செய் நெஞ்சமே
அந்திப் பகல் சிந்தனை செய் நெஞ்சமே

அந்த ஆறெழுத்து மந்திரத்தை யாரெடுத்து ஓதினாலும்
ஆறுமுகம் வந்து நிற்கும் முன்னமே
ஆறுமுகம் வந்து நிற்கும் முன்னமே

(சுட்ட திருநீறெடுத்து ... )

கந்தனடியே நினைந்து சங்கத்தமிழ் மாலை கொண்டு
வந்தனை செய்வோர்கள் மனம் ஆறுமே
வந்தனை செய்வோர்கள் மனம் ஆறுமே (2)

பரங் குன்றுவளர் இந்ததொரு கன்றுவழங்கும் நமக்கு
நின்றுவளர் செல்வம் பதினாறுமே
நின்றுவளர் செல்வம் பதினாறுமே

(சுட்ட திருநீறெடுத்து ... )

அந்தக் கட்டழகு கொண்டதொரு கந்தவடி வேலவனைக்
காட்டுவது ஆறெழுத்து மந்திரம்.

- பாடியவர்கள் சூலமங்கலம் சகோதரிகள்
-------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

நல்ல மனம் வாழ்க!

 


நல்ல மனம் வாழ்க!

இன்றைய மனிதன் பணத்தைத்தான் பிரதானமாகக் கருதுகிறான். சொத்து வேண்டும். செல்வம் வேண்டும். வாழ்க்கை வசதிகள் அனைத்தும்
வேண்டும். அதுதான் அவனுடைய ஆசை. அவனுடைய ஒரே
குறிக்கோள். அதற்காகத்தான் பாடுபடுகிறான்.

அதற்கு அடுத்தபடியாக, பதவி, மற்றும் புகழுக்கு ஆசைப் படுகிறான்.

ஆனால் அவற்றை எல்லாம்விட முக்கியமானது ஒன்று இருக்கிறது.

அதுதான் நல்ல மனம். சக மனிதனை நேசிக்கும் மனம். சக மனிதனுக்கு உதவும் மனம்.

அப்படிப்பட்ட மனம் கொண்ட மனிதர் ஒருவரைப் பற்றிக் கேள்விப்பட நேர்ந்தது. வாய்ப்புக் கிடைக்கும்போது அவரை நேரில் சந்திக்க இருக்கிறேன்.

தான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று அவர் தான் படித்த கோத்தகிரியில் ஒரு டீ எஸ்டேட்டையும், அதனுடன் ஒரு விருந்தினர் மாளிகையும் (Guest House) வாங்கிப் பராமரித்து வருவதோடு தன்னுடைய நண்பர்களுக்கும் அங்கே சென்று தங்குவதற்கு அனுமதியளித்து வருகிறார். அவர் ஈரோட்டைச் சேர்ந்தவர். என் நண்பர் ஒருவர் மூலமாக அந்த கெஸ்ட் ஹவுசின் சாவி கிடைத்தது.  பதினைந்து பேர்கள் சென்றோம். 4 நாட்கள் அங்கே தங்கினோம்.

அந்த guest house பார்ப்பதற்கு (தோற்றத்தில்) எளிமையாக இருந்தாலும் உள்ளே சகல வசதிகளும் உள்ளன.

Two master bedrooms with attached bath rooms. 2 main halls, full pledged kitchen, water heaters, room heaters, TV with dish antenna, DVD player, medicines for urgent needs என்று எல்லாம் உள்ளன. பின்புறம் பணியாட்களுக்கான குடில்கள் உள்ளன. 4 பசுமாடுகள் உள்ளன. கறந்தபால் கிடைக்கிறது. கறந்த பாலில் காப்பி சாப்பிட்டுப் பாருங்கள். அற்புதமாக இருக்கும்.

அந்தக் குளிருக்கு எல்லாமே அற்புதமாக உள்ளன.

அந்த இடம் கோத்தகிரியில் இருந்து 18 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சோலூர்மட்டம் என்ற கிராமத்தில் உள்ளது. ஒரே ஒரு கஷ்டம் அங்கே எந்தக் கம்பெனி சிம் கார்டாக இருந்தாலும் சிக்னல் கிடைக்காது. செல்போன்கள் வேலை செய்யாது. டவர்கள் இல்லை. இணைய வசதிகள் இல்லை. எதிர்காலத்தில் வரலாம்.

கோத்தகிரியில் இருந்து 18 கிலோ மீட்டர் தூரம் கிழக்கில் பயணித்தால் கொடநாடு உள்ளது. ஆமாம் செல்வி ஜெயலலிதா அவர்களின் பிரம்மாண்டமான டீ எஸ்டேட்டும், மாளிகையும் அந்தப் பகுதியில் தான் உள்ளது. அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் பயணித்தான் கொடநாடு காட்சி முனை என்ற இடம் உள்ளது. அதுவும் பார்க்க வேண்டிய இடம்

கோத்தகிரியில் ஏராளமான தங்கும் விடுதிகளும் உணவு விடுதிகளும் (Lodges, Hotels & Restaurents) உள்ளன. யார் வேண்டுமென்றாலும் சென்று வரலாம். கோவையில் இருந்து கோத்தகிரி 70 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

The trip was enjoyable and memorable.

நல்ல மனம் கொண்ட அந்த மனிதர், நீண்ட நாட்கள் நலத்துடன் வாழ வேண்டும்!

அந்தப் பயணத்தைப் பற்றி இன்னொரு நாள் விரிவாக எழுதுகிறேன். இப்போது படங்களுடன் சில செய்திகள்

அன்புடன்
வாத்தியார்

--------------------------------------------------------

எத்தனை விதமான பூக்கள் பாருங்கள். 

ஒரே இடம். ஒரே மண். ஒரே நீர், ஒரே சூரிய வெளிச்சம், ஒரே காற்று. ஆனால் வடிவங்களும் நிறங்களும் மாறுபடுகின்றன.

இந்தப் பூக்களுக்கெல்லாம் வண்ணம் எங்கேயிருந்து கிடைக்கிறது? 

அதை மட்டும் சொல்லுங்கள். தெரியாவிட்டால் ஒரு விஞ்ஞானியிடம் கேட்டுச் சொல்லுங்கள்
---------------------------------------------------------------------------







Kotagiri is a panchayat town in The Nilgiris District in the Indian state of Tamil Nadu. Kotagiri is situated at an elevation of around 1793m above sea level and is one of the three popular hill stations located in the Nilgiris. This picturesque hill station is bounded by verdant green tea estates and offers a number of trekking options.

This old hill station has been developed around innumerable knolls and valleys. The Doddabetta Range is 22 km away. Catherine Falls, Elk Falls and Rangaswami Pillar are the major attractions near Kotagiri and you can trek to these places. Kodanad View Point offers a spectacular view of the gentle sloping hills and blue hills. There is another jungle trekking trail that leads you to a small stream of water.

The three popular trekking trails are Kotagiri - Kodanad; Kotagiri - St. Catherine Falls and Kotagiri - Longwood Shola. The Kotagiri - Kodanad trail leads you through splendid views of lush-green tea estates and the magnificent Moyar River. One has to cross through meadows to reach Kodanad.

Kodanad View point is a tourist spot near Kotagiri town, Nilgiri District, Tamil Nadu state, South India.[1] It is located about 18 km east of Kotagiri on the eastern edges of Nilgiris at 11°31′29″N 76°54′57″E. Due to the location it is also called the Terminus Country


Source: Wiki Maharaja
--------------------------------------------------------  
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

4.5.14

கோடை விடுமுறை!

 

கோடை விடுமுறை!

வாத்தியார் வெளியூர்ப் பயணம். ஆகவே மே 5, 6 & 7 ஆகிய தேதிகளில் வகுப்பறைக்கு விடுமுறை. ஜோதிடம், வகுப்பறை இத்தியாதிகளை மறந்துவிட்டு அனைவரும் மகிழ்ச்சியோடு இருங்கள்!

அன்புடன்
வாத்தியார்

--------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

2.5.14

Devotional: தரணியைக் காத்தருளும் தவமணி!

 
Devotional: தரணியைக் காத்தருளும் தவமணி
பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை 'சூலமங்கலம்' சகோதரிகள்  பாடிய -  'சிவமணியால் வந்த தவமணி' என்ற பாடல் அலங்கரிக்கின்றது. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்

---------------------------------------------------------
சிவமணியால் வந்த தவமணி
(சிவமணியால் வந்த தவமணி ... அவன்தான்
சிங்காரத் தேமதுரத் தமிழ்மணி)
(சிவமணியால் வந்த ... )
செங்கமலம் பூமேலே தவழ்ந்த மணி

அன்னை சேர்த்தணைத்த பின்னால்
ஒன்று சேர்ந்த மணி
ஆறுமுகமான மணி ... அழகு தெய்வமணி

(சிவமணியால் வந்த ... )

கரந்தன்னில் வேல்பிடித்த வேலுமணி ... அவன்தான்
கருணை முகங்கள் கொண்ட அருள் மணி

தந்தைக்கு ப்ரணவம் சொன்ன குருமணி
அவன்தான் ...
தரணியைக் காத்தருளும் தனயன் சுப்ரமணி
தரணியைக் காத்தருளும் தனயன் சிவசுப்ரமணி
(சிவமணியால் வந்த ... )

சூரனை வெற்றிக்கொண்ட வீரமணி ... உலகை
சுற்றி வந்து தண்டு கொண்டு நிற்கும் ஞானமணி
ஒளவையை சோதித்து பார்த்த செல்வமணி
அவன்தான் ...
அருமறைகள் போற்றும் ... உலகின் கண்மணி
(சிவமணியால் வந்த ... )

இசையோடு கலந்திருக்கும் இசைமாமணி
இருமங்கையரை மணந்த கலைமாமணி
திருப்புகழ் பாடியப் புலவனை ... திருத்திய திருமணி
திருச்செந்தில் விசாக ... திருவிழாவின் ஷண்முகமணி
(சிவமணியால் வந்த ... )
சிவமணியால் வந்த தவமணி.   

'சூலமங்கலம்' சகோதரிகள் - 'சிவமணியால் வந்த தவமணி'
------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

1.5.14

Humour: நகைச்சுவை: கஷ்டமர் கேர் 2020

 
Humour: நகைச்சுவை: கஷ்டமர் கேர் 2020

தலைப்பில் கஷ்டமர் கேர் என்றிருப்பதைப் பார்த்துப் பயந்து விடாதீர்கள் வாடிக்கையாளர்களுக்கு உதவி என்பதை விட உபத்திரவம்தான் அதிகம்!
அதனால்தான் கஸ்டமர் கேர் என்பது கஷ்டமர் கேர் ஆகிவிட்டது.

வினையாகு பெயர்!

முதலில் உங்களுக்கு இணைப்புக் கிடைத்தவுடன் என்ன நடக்கிறது பாருங்கள்:

“வணக்கம், எங்கள் சேவையைத் தமிழில் பெற எண் ஒன்றை அழுத்தவும், ஆங்கிலத்தில் பெற எண் இரண்டை அழுத்தவும்”

“.....”

நீங்கள் புது வாடிக்கையாளர் என்றால் எண் ஒன்றை அழுத்தவும், இல்லை பழைய வாடிக்கையாளர் என்றால் எண் இரண்டை அழுத்தவும்”

“....”

உங்களுக்கு தகவல்கள் வேண்டுமென்றால் எண் ஒன்றை அழுத்தவும், பில்களுக்கு எண் இரண்டை அழுத்தவும். புகார்களுக்கு எண் மூன்றை
அழுத்தவும்

இப்படியே அவர்கள் சொல்கின்றபடி எழு கடல்கள், ஏழு மலைகளைக் கடந்து விட்டீர்கள் என்றால் நீங்கள் அதிஷ்டசாலி. இல்லை, ப்ளட் பிரசஷர் வந்தால் அவர்களைக் குறை சொல்ல முடியாது. விதியை நொந்துகொள்ள வேண்டியதுதான்!

பெரிய பெரிய நிறுவனங்கள் எல்லாம் வேலைக்கு ஆட்கள் வைத்து அல்லாடாமல் இருக்க தங்கள் வேலைகள் எல்லாவற்றையும் கால் சென்ட்டர் சேவை மையங்களுக்குக் கொடுத்துவிட்டார்கள்.

இப்படியே போய்க் கொண்டிருந்தால் 2,020ல் என்ன ஆகும்?

ஒரு கற்பனை!
-----------------------------------------------------------------------------------------------
பசியோடு இருக்கும் கஸ்டமர் ஒருவர் ஒரு பிஸ்ஸா உணவகத்திற்குப் போன் செய்கிறார்:

“வணக்கம் சார், பிஸ்ஸா பாயின்டை அழைத்ததற்கு நன்றி! உங்கள்.....”

“என்னுடைய ஆர்டரை எழுதிக் கொள்ளுங்கள்!”

“முதலில் உங்களுடைய என்.எம்.பி.ஐ.ஸி (National Multi Purpose Identity Card) எண்ணைச் சொல்லுங்கள் சார்!”

“ஹி, ஹி..இருங்கள்...ஒன் மினிட்...ம்...இதோ..910 025 001 43536375”

“ஓக்கே சார்..உங்கள் பெயர் சோகநாதன், முகவரி, 6090 வளசரவாக்கம் இரண்டாவது அவென்யூ, உங்கள் வீட்டுத் தொலைபேசி எண் 225 4099 2266, உங்கள் அலுவலக எண் 230 2131 3388 உங்களுடைய மொபைல் எண் 999440 55664, இப்போது எந்த எண்ணில் இருந்து அழைக்கிறீர்கள்?”

“வீட்டிலிருந்து! என்னுடைய அத்தனை போன் நம்பர்களும் உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“தேசிய இணைப்பின் மூலம் எங்களுக்கு அத்தனையும் தெரியும் சார்!”

“ஓஹோ..! எனக்கு ஃபாமிலி பேக் சீஃபுட் பிஸ்ஸா ஒன்று உடனே வேண்டும். அனுப்பி வையுங்கள்”

“ஸாரி சார், அது உங்களுக்கு உகந்தது அல்ல!”

“எப்படிச் சொல்கிறீர்கள்?”

“உங்களுடைய மருத்துவ ரிப்போர்ட்டின்படி உங்களுக்கு ஹை பிளட் பிரஷர் மற்றும் கொலஸ்ட்ரால் உள்ளது. ஆகவே அது உங்களுக்குச் சரிப் படாது!”

“சரி, வேறு என்ன சாப்பிடலாம் என்கிறீர்கள்? பசி உயிர் போகிறது.சீக்கிரம் சொல்லுங்கள்”

“அகத்திக்கீரை பொதினா லீஃப் மிக்ஸட் பிஸ்ஸா இருக்கிறது சார். அது உங்களைப்போன்றவர்களுக்கு மிகவும் நல்லது. அதுவும் இல்லாமல் அதை
நீங்கள் மிகவும் விரும்புவீர்கள்”

“இதை எப்படிச் சொல்கிறீர்கள்?”

“கன்னிமாரா நூலகத்தில் இருந்து The advantage of Herbal Foods என்ற புத்தகத்தைச் சென்ற வாரம் எடுத்துக்கொண்டு போய் உள்ளீர்கள். அதை வைத்துச் சொல்கிறேன்.

“சரி, சரி அதிலேயே இரண்டு ஃபாமிலி சைஸ் பேக் அனுப்பி வையுங்கள். விலை என்ன ஆகும்?”

“அது நான்கு பேர்கள் உள்ள குடும்பத்திற்குத் தாராளமாகப் போதும் சார். விலை, உள்ளூர் வரி, மற்றும் டெலிவரி சார்ஜ் எல்லாம் சேர்த்து ஆயிரத்து
அறுநூற்றைம்பது ரூபாய் ( ரூ1,650:00 ) ஆகும் சார்!”

“கிரிடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாமா?”

“இல்லை, முடியாது என்று நினைக்கிறேன், நீங்கள் பணமாகத்தான் கொடுக்க வேண்டியதிருக்கும். உங்கள் கிரிடிட் கார்டின் கடன் அளவான ரூபாய் இரண்டு லட்சத்தை நீங்கள் தாண்டிவிட்டீர்கள். மேலும் இரண்டு மாதங்களாகத் தவணைத் தொகையையும் நீங்கள் செலுத்தவில்லை! ஹவுஸிங் லோன் கணக்குத் தனியாக உள்ளது!”

“சரி, பரவாயில்லை. எங்கள் பகுதியில் உள்ள ஏ.டி.எம் ஒன்றில் பணத்தை எடுத்து வைக்கிறேன். நீங்கள் பிஸ்ஸாவை அனுப்பி வையுங்கள்!”

“அது சாத்தியமில்லை. ஏ.டி.எம் மில் நம்பர் ஆஃப் வித்டிராயல் அளவை நீங்கள் தாண்டியுள்ளீர்கள்...”

“அதைப்பற்றி நீங்கள் கவலைப் படாதீர்கள்! பணம் தயாராக இருக்கும். உங்கள் ஆசாமி வர எவ்வளவு நேரம் பிடிக்கும்?”

“நாற்பத்தைந்து நிமிடங்கள் ஆகும் சார். அதற்குள் அவசரம் என்றால் நீங்கள் உங்கள் மோட்டார் சைக்கிளில் வந்து டெலிவரி எடுத்துக் கொள்ளலாம்.”

“என்ன சொல்கிறீர்கள்?”

“இணைப்பில் உள்ள விவரப்படி உங்களிடம் மோட்டார் சைக்கிள் ஒன்று இருக்க வேண்டுமே? இருக்கிறதல்லவா? அதன் எண்கூட 1188”

“............................”

“வேறு ஏதாவது வேண்டுமா சார்?”

“ஒன்றுமில்லை. ஆர்டருடன், உங்கள் கம்பெனி விளம்பரப்படி மூன்று இலவச கோக் பாட்டில்களையும் கொடுப்பீர்கள் இல்லையா? அவற்றையும் எடுத்து வையுங்கள்!”

“வழக்கமாகக் கொடுப்போம் சார். ஆனால் உங்களுக்குத்தர இயலாது. உங்கள் மருத்துவ ரிப்போர்ட்டின் படி நீங்கள் டயாபெட்டிக் பேஷண்டாயிற்றே!”

“?? $$**??”

“சார், மரியாதைகயாகப் பேசுங்கள். தரத் தணிக்கைக்காக நமது உரையாடல் பதிவாகிக்கொண்டிருக்கிறது!.நான் புகார் கொடுத்தால் என்ன ஆகும் தெரியுமா? சென்ற மாதம் இதுபோல பஸ் நடத்துனரிடம் தகாத வார்த்தைகள் பேசிச் சண்டை யிட்டதற்காக ஒரு நாள் முழுவதும் காவல் நிலையத்தில் சிறைப்பட்டதோடு, ரூபாய் ஐயாயிரம் வேறு அபராதமாகச் செலுத்தியுள்ளீர்கள். நினைவில் இருக்கிறதா?”

கஸ்டமர் இந்தப் பக்கம் தடால் என்ற பெருத்த ஓசையுடன் மயங்கிக் கீழே விழுகிறார். ஆனால் அது பசியினால் ஏற்பட்ட மயக்கம் அல்ல!

(மின்னஞ்சலில் வந்ததை மொழிமாற்றம் செய்து எனது நடையில் விரிவாக எழுதி, சில ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய இன்னொரு பதிவான பல்சுவைப் பதிவில் வெளிவந்ததை, இப்போது நீங்கள் அறியத்தந்துள்ளேன்)

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!