மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.8.13

Devotional: வேல் முருகா வேல்!வெற்றிவேல் முருகா வேல்!

 
Devotional: வேல் முருகா வேல்!வெற்றிவேல் முருகா வேல்!

பக்தி மலர்

பக்தர்கள் ஆட்டம் பாட்டத்துடனும் பக்திப் பரவசத்துடனும் பாடும் முருகன் பாடல் ஒன்று இன்றைய பக்தி மலரை அலங்கரிக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்.

அன்புடன்
வாத்தியார்


பாடலின் காணொளி வடிவம்
http://youtu.be/3qvT6A7NHD4
Our sincere thanks to the person who uploaded this song in the net!



-----------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

29.8.13

தாங்கிப்பிடிக்கும் தத்துவப் பாடல்கள் - பகுதி 2

 

தாங்கிப்பிடிக்கும் தத்துவப் பாடல்கள் - பகுதி 2

புதிய தொடர் - பகுதி இரண்டு

ஏங்கித் தவிக்கும் நம்மைத் தத்துவப்பாடல்கள்தான் தாங்கிப் பிடிக்கின்றது! ஒவ்வொரு  சூழ்நிலைக்கும் ஒவ்வொரு பாடல் என்று ஏராளமான பாடல்கள் இருக்கின்றன!

இன்றைய வாழ்க்கை சூழலில் சிக்கித் தவிக்கும் எண்ணற்றவர்களைத் தாங்கிப் பிடிக்கும் தத்துவப் பாடல்களை வாரம் ஒரு பாடல்வீதம் அடையாளப் படுத்தும் முகமாக இத்தொடர்பதிவு. தொடர்ந்து படியுங்கள்
-------------------------------------------------------------------------------------
அந்தக் காலத்தில் இருந்த தர்மம், நியாயம் எல்லாம் காலப்போக்கில் குறைந்து கொண்டே வருகிறது. அதுபோல நன்றி, விசுவாசம் எல்லாம் இப்போது மிகவும் குறைந்து போய்விட்டது.

ஒருவர் நமக்குச் செய்த உதவியை மறக்கலாமா? அவருக்கு நன்றி செலுத்த வேண்டாமா? நன்றியோடு இருக்க வேண்டாமா?  உதவி செய்தவர் உறவினர் ஆக இருக்கட்டும் அல்லது நண்பராக இருக்கட்டும் அல்லது மூன்றாவது மனிதராக இருக்கட்டும், செய்த நன்றியை நாம் மறக்கலாமா?

அது பொருள் உதவி அல்லது உடல் உழைப்பால் செய்த உதவி என்று எப்படி வேண்டுமென்றாலும் இருக்கட்டும் உதவி உதவிதானே?

படிப்பதற்கு உதவி செய்தவர், அல்லது வேலை கிடைப்பதற்கு உதவி செய்தவர் அல்லது நமக்கு வேண்டிய ஊருக்கு இடமாற்றம் பெறுவதற்கு உதவி செய்தவர் அல்லது மருத்துவ சிகிச்சைக்கு உதவி செய்தவர் என்று நூற்றுக் கணக்கான விதங்களில் உதவி கிடைத்திருக்கலாம். அது சின்ன உதவியோ அல்லது பெரிய உதவியோ - அளவு முக்கியமில்லை. உதவி உதவிதானே? மறப்பது எப்படி நியாயம்?

”என்நன்றி கொண்டார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொண்ட மகற்கு”


என்று வள்ளுவப் பருந்தகை எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறாரே - படித்திருக்கிறோம் அல்லவா? அதனால் நாம் நன்றி உணர்வோடு இருப்பது முக்கியமில்லையா?

ஏறிவந்த ஏணியை மறக்கலாமா? இன்று சிலர் ஏறிவந்த ஏணியை, ஏறியபிறகு. எட்டி உதைத்துவிட்டுச் செல்லும் வேலையையும் செய்கிறார்கள்.

அதைக் கவியரசரும் வாழ்க்கையில் பலமுறை அனுபவித்திருக்கிறார். பல நன்றி கெட்டவர்களை அவர் சந்தித்திருக்கிறார். ஒரு பாடலில் அதை அழகாகப் பதிவு செய்தும் இருக்கிறார். அந்தப் பாடலை இன்று பார்ப்போம். சில நன்றி கெட்டவர்களால் நாம் நொந்து போயிருக்கும் போது ஆறுதல் தருவதாக இருக்கும் அந்தப் பாடல்!

மனிதர்களின் உள் மனதை அப்படியே இரண்டே வரிகளில் இப்படிப் படம் பிடித்துக் காட்டுகிறார்:

”பூப்போன்ற நெஞ்சினிலும் முள்ளிருக்கும் பூமியடா.....
பொல்லாத கண்களடா புன்னகையும் வேஷமடா.......”


குழந்தைப் பருவத்தில் மனிதன் எப்படியிருக்கிறான் என்பதை, ஒரு குழந்தையைக் கையில் வைத்துக்கொண்டு நாயகன் பாடுவதைப் போன்ற சூழலில் இப்படி எழுதுகிறார்

”பால் மணக்கும் பருவத்திலே
உன்னைப் போல் நானிருந்தேன்
பட்டாடை தொட்டிலிலே
பித்துப் போல் படுத்திருந்தேன்
அன்னாளை நினைக்கையிலே என் வயது மாறுதடா
உன்னுடன் ஆடி வர உள்ளமே தாவுதடா
கண்ணிரண்டும் தாமரையோ
கன்னம் மின்னும் எந்தன் கண்ணா
சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ”


அத்துடன் விட்டாரா? குழந்தையின் மனப்பாங்கை அப்படியே அசத்தலாகவும் சொல்கிறார்!

”ஈரேழு மொழிகளிலே என்ன மொழி பிள்ளை மொழி
கள்ளமற்ற வெள்ளை மொழி
தேவன் தந்த தெய்வமொழி
கண்ணிரண்டும் தாமரையோ
கன்னம் மின்னும் எந்தன் கண்ணா
சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ”


நன்றிகெட்ட மக்களைப் பற்றி அழுத்தமாக இரண்டு வரிகளில் இப்படி சொல்கிறார்:

”நன்றி கெட்ட மாந்தரடா
நானறிந்த பாடமடா”


வழக்கம்போல. ஒரு தீர்வையும் சொல்கிறார் அவர். நன்றி கெட்டவர்களை மறந்து விட்டு நாம் நிம்மதியாக இருப்பதற்கு இதைத்தான் செய்ய வேண்டுமாம்!

”நன்றி கெட்ட மாந்தரடா
நானறிந்த பாடமடா
பிள்ளையாய் இருந்து விட்டால்
இல்லை ஒரு துன்பமடா”


அதெப்படி பிள்ளையாய் இருக்க முடியும் என்று கேட்காதீர்கள் - எத்தனை வயதானால் என்ன? ஒரு குழந்தையின் மனதோடு, குழந்தை நடந்ததை அந்தக் கணமே மறந்து விட்டு இருப்பதைப் போல இருங்கள் என்கிறார். பாடல் குழந்தைக்குச் சொல்வது போல நமக்குச் சொல்லப்பட்ட பாடல் அதை மனதில் வையுங்கள்.

முழுப்பாடலையும் ஒலி, ஒளியுடன் கேட்க வேண்டுமா? இந்த சுட்டியில் பாருங்கள்

அன்புடன்
வாத்தியார்

+++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

28.8.13

Astrology: ஓஹோ அவரின் ஜாதகமா இது?

 

 Astrology: ஓஹோ அவரின் ஜாதகமா இது?

நேற்று வெளியிட்ட புதிர் போட்டியில் நிறையப் பேர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். பலர் பின்னூட்டங்கள் மூலமும், மேலும் பலர்
மின்னஞ்சல் மூலமும் தங்கள் பதிலை அனுப்பியுள்ளார்கள். அனைவருக்கும் வாத்தியாரின் பாராட்டுக்கள் மற்றும் நன்றி உரித்தாகுக!

சிலர் நான்கு கேள்விகளுக்கும் சரியான பதிலை சொல்லி அசத்தியிருக் கிறார்கள். அத்துடன் அதிலும் சிலர் விக்கி மஹராஜா துணையுடன், ஜாதகரின் பெயரையும் எழுதியிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் வாழ்த்து! அவர்கள் அனைவருக்கும் 100/100 மதிப்பெண்கள்.

சிலர் முதல் கேள்விக்கு மட்டும் சரியான பதிலை எழுதவில்லை. ஆனால் மற்ற மூன்று கேள்விகளுக்கும் சரியான பதிலை எழுதியிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் 75 மதிப்பெண்கள்.

பங்கு கொண்டவர்கள் அனைவருக்குமே 35 மதிப்பெண்கள்:-)))))
------------------------------------------------------------------

அது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தலைவர் பில் கேட்ஸின் ஜாதகம்

உலகின் மிகப் பெரிய செல்வந்தர்கள் 10 பேர்களில் அவரும் ஒருவர்



அவரைத் தெரியாதவர்கள் கணினி உலகில் எவரும் இருக்க முடியாது. மேலதிகத் தகவல்களுக்கு இந்தச் சுட்டிக்குச் சென்று பாருங்கள்.

http://en.wikipedia.org/wiki/Bill_Gates

பிராட்பாண்ட் கனெக்சன் படுத்தி எடுக்கிறது. இருந்தாலும் சமாளித்து இந்தப் பதிவை வலை ஏற்றுகிறேன்

அவருடையா ஜாதகத்தில் பல சிறப்புக்கள் உள்ளன. அதை விவரமாக அலசி இன்னொரு நாள் முழுப் பதிவாக வெளியிடுகிறேன். பொறுத்துக்கொள்ளுங்கள்

அவர் தன்னுடைய கல்லூரிப் படிப்பைப் பாதியில் விட்டு விட்டு வெளியே வந்து தொழிலைத் துவங்கியவர். 4ஆம் வீட்டில் இருக்கும் செவ்வாய் அதைச் செய்தது. அதாவது முழுமையாகப் படித்து முடிக்கவிடாமல் செய்தது. இந்த ஜாதகத்திற்கு செவ்வாய் லாபாதிபதி  மட்டும் அல்ல. ஆறாம் வீட்டுக்காரனும் அவன்தான் (வில்லன்) அதை மனதில் கொள்க.

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

27.8.13

Astrology: Quiz புதிர் - பகுதி 3 - சற்று வித்தியாசமான கேள்விகளுடன்


Astrology: Quiz புதிர் - பகுதி 3 - சற்று வித்தியாசமான கேள்விகளுடன்

உட்தலைப்பு: எனது கேள்வியும் உங்கள் பதிலும்

தொடர் - பகுதி மூன்று

இந்தத் தொடரின் முதல் பகுதியை 19.8.2013 திங்கட்கிழமையன்றும் அடுத்த பகுதியை நேற்றும் (26.8.2013) கொடுத்திருந்தேன். ஏராளமான பேர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு என்னைத் திகைக்க வைத்து விட்டீர்கள். தொடரின் அடுத்த பகுதி இது.

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான புதிய பகுதி இது! அனைவரையும் பங்கு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

வாரம் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் வெளிவரும் இப்பதிவில் இன்று வித்தியாசமான கேள்விகளைக் கேட்டுள்ளேன். இதுவரை கடந்த ஆறரை ஆண்டுகளில் சுமார் 700 பாடங்களின் மூலம் ஜோதிடத்தை உங்களுக்கு நன்கு சொல்லிக் கொடுத்துள்ளேன். ஜாதகத்தை அலசும் முறை பற்றிய பாடங்களையும் நிறையக் கொடுத்துள்ளேன். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள். முயற்சி செய்யுங்கள். மனதிற்குப்பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer
என்ன சரியா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகத்திற்கு உரியவர்:

1. பட்டப் படிப்பு படித்தவரா அல்லது பட்டப் படிப்பு படிக்காதவரா?
2. ஜாதகர் ஏழையா? அல்லது நடுத்தரப் பணக்காரரா? அல்லது செல்வந்தரா?
3. திருமணம் ஆனவரா அல்லது திருமணம் ஆகாதவரா?
4. வேலையில் இருப்பவரா அல்லது வேலை எதுவும் செய்யாமல் சுகஜீவனத்  துடன் இருப்பவரா?

நடத்தப் பெற்ற பாடங்களில் இருந்து, கேள்விக்கு சம்பந்தப்பட்ட வீடுகளையும், அதன் அதிபதிகளையும் காரகர்களையும் வைத்து அலசி உங்கள் பதிலை எழுதுங்கள்

க்ளூ வேண்டுமா?

எதற்கு க்ளூ? அலசலுக்கு அதெல்லாம் வேண்டாம். சர்ஃப் எக்செல் வாஷிங் பவுடர் மட்டும் போதும். நன்றாக அலசுங்கள். கிடைக்கின்ற பதிலை எழுதுங்கள்

கேள்விக்கான ஜாதகம்:



உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++

26.8.13

Astrology: Quiz புதிர் - பகுதி 2

 
Astrology: Quiz புதிர் - பகுதி 2

உட்தலைப்பு: எனது கேள்வியும் உங்கள் பதிலும்

தொடர் - பகுதி இரண்டு

இந்தத் தொடரின் முதல் பகுதியை 19.8.2013 திங்கட்கிழமையன்று கொடுத்திருந்தேன். ஏராளமான பேர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு என்னைத் திகைக்க வைத்து விட்டீர்கள். தொடரின் அடுத்த பகுதி இது.

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான புதிய பகுதி இது! அனைவரையும் பங்கு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

வாரம் ஒருநாள் வெளிவரும் இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள். முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன சரியா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?


நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

க்ளூ வேண்டுமா?

எதற்கு க்ளூ? மீண்டும் சொல்கிறேன், படித்த பாடத்தை வைத்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடியுங்கள். நெட்டின் மூலம் பல உபாயங்கள் உள்ளன/கிடைக்கும் (அதை நான் சொல்ல மாட்டேன்) அதை வைத்து ஜாதகரின் பெயரைக் கண்டு பிடியுங்கள்

சரி கடைசி பெஞ்ச் கண்மணிகளுக்காக ஒரு சின்ன க்ளூவைக் கொடுக்கிறேன்

ஜாதகர் மிகவும் பிரபலமானவர். தமிழ் நாட்டுக்காரர்.

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

23.8.13

Devotional: திருப்புகழைப் பாடுங்கள்; பிறகு பாருங்கள்!

 

Devotional: திருப்புகழைப் பாடுங்கள்; பிறகு பாருங்கள்
பக்தி மலர்

திருப்புகழ் பாடும் வேளையிலே சிறப்புகள் கூடும் வாழ்வினிலே’ என்ற பல்லவியுடன் சீர்காழி சிவசிதம்பரம் அவர்கள் முருகப் பெருமானின் புகழைப் பாடும் பாடல் ஒன்று இன்றைய பக்தி மலரை அலங்கரிக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்.

அன்புடன்
வாத்தியார்

------------------------------
பாடலின் காணொளி வடிவம்
http://youtu.be/aUxoM8L42wQ
Our sincere thanks to the person who uploaded this song in the net



வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

22.8.13

தாங்கிப்பிடிக்கும் தத்துவப் பாடல்கள்

 

தாங்கிப்பிடிக்கும் தத்துவப் பாடல்கள்

புதிய தொடர் - பகுதி ஒன்று

ஏங்கித் தவிக்கும் நம்மைத் தத்துவப்பாடல்கள்தான் தாங்கிப் பிடிக்கின்றது! ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஒவ்வொரு பாடல் என்று  ஏராளமான பாடல்கள் இருக்கின்றன!

இன்றையப் பொருளாதாரச் சூழலில் சிக்கித் தவிக்கும் எண்ணற்றவர்களைத் தாங்கிப் பிடிக்கும் தத்துவப் பாடல்களை வாரம் ஒரு  பாடல்வீதம் அடையாளப் படுத்தும் முகமாக இத்தொடர்பதிவு. தொடர்ந்து படியுங்கள்
-------------------------------------------------------------------------------------
ஒரு பெண், தன் குழந்தையைப் பறிகொடுத்ததும் மாளாத துயரத்தில் சிக்கித் தவிப்பாள். கடவுள் வரமாகக் கொடுத்த தூக்கமும் மறதியும், போகப் போக கொஞ்சம் கொஞ்சமாக அவளுடைய துயரத்தைப் போக்கி விடும். ஒரு ஆண்டு கழிந்து, தன் குழந்தையின் மறைவு தினத்தன்று அதை எண்ணி மீண்டும் துயரத்திற்கு ஆளாவாள். மீண்டும் தூக்கமும் மறதியும் அவளுடைய மனக்காயங்களுக்கு மருந்து போட்டு அவளைக் குணப்படுத்தும்.

ஆனால் ஐந்தறிவு உள்ள பிராணிகள், பறி கொடுத்த அன்று வேண்டுமென்றால் துக்கப்பட்டு அங்கும் இங்கும் அலைமோதும். ஆனால் இரண்டொரு நாட்களில் அதை அவைகள் அறவே மறந்துவிடும். சிந்திக்கும் தன்மையும் நினைவில் வைத்துக்கொள்ளும் மேன்மையும் அவற்றிற்குக் கிடையாது.

அந்த நிலைப்பாட்டைக் கவியரசர் கண்ணதாசன் தன்னுடைய பாடல் வரிகளில் இப்படிச் சொல்வார்

பெட்டைக் கோழிக்கு கட்டுச் சேவலை
கட்டி வைத்தவன் யாரடா..
அவை எட்டுக் குஞ்சுகள் பெற்றெடுத்ததும்
சோறு போட்டவன் யாரடா..
வளர்ந்த குஞ்சுகள் பிரிந்த போதும்
வருந்தவில்லையே தாயடா..
மனித ஜாதியில் துயரம் யாவுமே
மனதினால் வந்த நோயடா..


மனிதனுக்கு ஏற்படும் துன்பம் எல்லாம் பாழாய்ப் போன மனதினால்தான் என்று அடித்துச் சொல்லுவார் அவர்! விளங்கும்படி எடுத்துச் சொல்வார் அவர்

காசில்லாமல் தவிக்கும் மனிதனை அவனுடைய உறவுகளும் நேசிக்காது. உதவி செய்ய முன்வராது என்பதை அதே பாடலில் இப்படிச் சொல்வார்:

தாயும் பிள்ளையும் ஆனபோதிலும் வாயும்
வயிறும் வேறடா
சந்தைக் கூட்டத்தில் வந்த மந்தையில்
சொந்தம் என்பதும் ஏதடா..
வாழும் நாளிலே கூட்டம் கூட்டமாய்
வந்து சேர்கிறார் பாரடா
கை வறண்ட வீட்டிலே உடைந்த பானையை
மதித்து வந்தவர் யாரடா..
பணத்தின்மீதுதான் பக்தி என்றபின்
பந்தபாசமே ஏனடா..


உடன்பிறப்புக்களும் இதற்கு விதிவிலக்கில்லை என்பதை இப்படி சுட்டிக்காட்டுகின்றார்:

அண்ணன் என்னடா தம்பி என்னடா
அவசரமான உலகத்திலே
ஆசைகொள்வதில் அர்த்தம் என்னடா
காசில்லாதவன் குடும்பத்திலே..


சரி, இதற்கெல்லாம் தீர்வு என்ன? அவர் ஒரு மாபெரும் கவிஞர். நல்ல தீர்வைச் சொல்லாமல் எந்தப் பாடலையும் அவர் நிறைவு  செய்ததில்லை. இந்தப் பிரச்சினைக்கும் அவர்  ஒரு அருமையான தீர்வைச் சொல்கிறார்:

பதைக்கும் நெஞ்சினை அனைக்கும் யாவரும்
அண்ணன் தம்பிகள் தானடா..!!!!!!


ஆமாம்! உன் நிலைமை தெரிந்து உனக்குக் கை கொடுத்து, உன்னை அனைக்கும் எவருமே உனக்கு உடன் பிறப்பு தானடா! உனக்கு உறவுதானடா என்று ஆறுதலாய்ப் பாட்டை முடிக்கின்றார். உண்மைதான். நமக்குக் கை கொடுக்கும், நமக்குத் தோள்கொடுக்கும்  அனைவருமே நம் உடன் பிறந்தவர்கள்தான். அதை நினைவில் வைப்போம்! மனதில் கொள்வோம்!

முழுப்பாடலும் வேண்டுமா? வாத்தியாரின் புதிய தளம் இங்கே உள்ளது. அங்கே சென்று பாருங்கள்:

அதற்கான சுட்டி: http://kaviarasarkannadasan.blogspot.in/2013/08/blog-post_21.html

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++

21.8.13

Astrology: விதியே தன் கை நீட்டி வலை வீசும்போது!

 

Astrology: விதியே தன் கை நீட்டி வலை வீசும்போது!
விதியை மதியால் வெல்ல முடியுமா?

வெல்ல முடியாது!

இறை நம்பிக்கை இல்லாதவன் காலம் காலமாகக் கையில் வைத்திருக்கும் ஆயுதம்தான் விதியை மதியால் வெல்லலாம் எனும் ஆயுதம். அந்த ஆயுதத்தை வைத்து அப்படிச் சொன்ன மேதாவி எவனாலேயுமே அவனுடைய விதியையே அவனால் வெல்ல முடியவில்லை!

வென்றிருந்தால், அப்படிச் சொன்னவன் அத்தனை பேரும் இன்று உயிருடன் இருந்திக்க வேண்டும்!

அவனவனுக்கு விதிக்கப்பெற்ற காலம் முடிந்தவுடன், வலுக்கட்டாயமாகக் கையில் போர்டிங் பாஸைத் திணித்து, விதி அத்தனை பேர்களையும்
அள்ளிக் கொண்டு போயிருக்கிறது.

அய்யன் வள்ளுவரே சொல்லியிருக்கிறார்."விதியை விட வலியது எதுவும் கிடையாது"

Nothing is stronger than destiny!

மூச்சுக்கு முன்னூறு முறை, வள்ளுவரைப் பற்றிப் பேசும் மதிவாணர்கள் அனைவரும், குறளில் இரண்டு அதிகாரங்களைப் பற்றிப் பேசவே
மாட்டார்கள். அந்த இரண்டு அதிகாரங்களிலும் மொத்தம் 20 குறள்கள் உள்ளன.

ஒன்று அறத்துப்பாலின் துவக்க அதிகாரம். மற்றொன்று அறத்துப்பாலின் முடிவில் உள்ள அதிகாரம் திருக்குறளின் அறத்துப்பாலில் மொத்தம் 38 அதிகாரங்கள் உள்ளன.

கடவுள் வாழ்த்தில் துவங்கிய வள்ளுவர் பெருந்தகை அறத்தின் கடைசி அதிகாரமாக எழுதியது ஊழ்வினை என்ற அதிகாரம்.

ஊழ் (destiny) என்பதற்கு ஒரு உரையாசிரியர் இப்படி விளக்கம் கொடுத்துள்ளார்.

முற்பிறப்புக்களில் செய்யப்பட்ட இருவினைப் பயன்கள் செய்தவனையே சென்றடையும் இயற்கை ஒழுங்கு என்கிறார் அவர்.

அந்த அதிகாரத்தில் உள்ள அற்புதமான் குறள்:

"வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது!"

---குறள் எண் 377

அவரவர்க்கு இன்பமும் துன்பமும் இறைவன் வகுத்தபடிதான். கோடிக்கணக்கில் பொருளை வருத்திச் சேர்த்தவர்க்கும் அப்பொருளால் அவற்றை அனுபவிக்கும் பாக்கியம் விதிக்கப்பட வில்லையென்றால் அப்பொருளால் இன்பத்தை அனுபவிக்க முடியாது.

சிலபேர் பணத்தையும், செல்வத்தையும் சொத்துக்களையும் சேர்ப்பதற்கென்றே பிறப்பான். அவன் சேர்த்து வைத்ததை அடித்துத் தூள் கிளப்பிச் செலவழிப்பதற்கென்றே சிலபேர் பிறவி எடுப்பான். சைக்கிளில் போய் அப்பன் பல வழிகளிலும் கஷ்டப்பட்டுச் சேர்த்ததை, அவனுடைய பிள்ளையோ
அல்லது மாப்பிள்ளையோ ஹோண்டா சிட்டி ஏ.ஸிக் காரில் சென்று அனுபவிப்பான் அல்லது செலவளிப்பான். விதி அங்கேதான் வேறு படுகிறது.
ஒருவனுக்குச் சேர்க்கும் பாக்கியம். ஒருவனுக்கு அனுபவிக்கும் பாக்கியம்

"ஊழிற் பெருவலி யாஉள மற்றுஒன்று
சுழினும் தான்முந்நுறும்"

...குறள் எண். 380

ஊழைப்போல மிகுந்த வலிமை உள்ளவை வேறு எவை உள்ளன? அந்த ஊழை விலக்கும் பொருட்டு அல்லது தவிர்க்கும் பொருட்டு, வேறு ஒரு வழியை
ஆராய்ந்து எண்ணினாலும், அது அவ்வழியையே தனக்கும் வழியாக்கி முந்திக் கொண்டு வந்து நிற்கும்

What is stronger than fate (destiny)? If we think of an expedient
to avert it, It will itself be with us (before the thought)


"பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை"

...குறள் எண்.372

பொருள் போவதற்கு அல்லது பறி போவதற்குக் காரணமான தீய ஊழ் வரும்போது - ஒருவன் எவ்வளவு பேரறிஞனாக இருந்தாலும் அது அவனைப்
பேதமைப் படுத்தும் - அதாவது முட்டாளாக்கி விடும். இதற்கு மாறாக பொருள் சேர்வதற்குக் காரணமான நல்ல ஊழ் வரும்போது - ஒருவன் எவ்வளவு
பேதமையாயிருந்தாலும் அல்லது முட்டாளாக இருந்தாலும் அது அவனைப் பேரறிஞனாக்கும்!

An adverse fate produces folly, and a prosperous fate produces enlarged
knowledge.


இறைவணக்க அதிகாரத்துடன் (Chapter) தன்னுடைய அந்த அற்புதமான நூலை எழுதத் துவங்கிய வள்ளுவர், ஏன் அறத்துப் பாலின் கடைசி  அதிகாரமாக ஊழ்வினையை வைத்தார்.

அய்யன் வள்ளுவனுக்கே தெரியும். ஒருவன் என்னதான் ஜால்ரா போட்டு இறைவனைத் துதித்தாலும், நடக்கப் போவது என்னவோ விதிப்படிதான்.
அதனால்தான் கடவுள் வாழ்த்தில் துவங்கியவர், விதியில் கொண்டு வந்து முடித்தார்.

மனிதன் என்னதான் கடவுளை வணங்கிக் கதறினாலும், எல்லாம் ஊழ்வினைப் படிதான் நடக்கும்!

அவ்வளவு பெரிய மேதைக்கு - ஞானிக்கு அது தெரியாமல் இருந்திருக்குமா என்ன?

சரி கடவுளை ஏன் வணங்க வேண்டும்?

ஊழினால் ஏற்படும் துன்பங்களைத் தாங்கும் சக்தியை அவர் கொடுப்பார்.    The Almighty will give withstanding power!
தாக்குப் பிடிக்கும் சக்தியை அவர் கொடுப்பார். அதற்கு உதாரணம் கேரளாவில் மிகவும் பிரசித்தமான நாராயண குருவின் சரித்திரம் (அதைப் பற்றி
வேறு ஒரு சமயம் எழுதுகிறேன்)
-----------------------------------------------------------------------------------------------------
1
விதியை வெல்லலாம் என்று சொல்பவன் எவனாவது வந்து, நான் என்னுடைய மதியை வைத்து ஒரு நூறு ஆண்டு காலம் வாழ்ந்து காட்டுகிறேன் என்று சொல்லட்டும் பார்க்கலாம்.

முடியாது!

2
விஞ்ஞானம் அல்லது கையில் இருக்கும் இதர புண்ணாக்குகளை வைத்து, இந்த உடலில் உயிர் என்பது எங்கே இருக்கிறது என்று சொல்லட்டும்
பார்க்கலாம்.

முடியாது!

ஒரு லட்சம் கோடி இரண்டு லட்சம் கோடியென்று பணத்தைச் செலவழித்து, வான்வெளியை ஆராய்கிறான். பூமியைத் தோண்டிக் கடவுளின்
துகள்களைத் தேடுகிறான். அதில் ஒரு பாதியையாவது செலவழித்து மனிதனின் உடலில் உயிர் என்பது எங்கே இருக்கிறது? இருக்கும்வரை அது

எப்படி இயங்குகிறது? உடலை விட்டுப் போகும்போது அது எப்படிப்போகிறது? என்று கண்டுபிடிக்கலாம் இல்லையா? இந்த மதிவாணர்கள் ஏன்
அதைச் செய்யவில்லை?

விதியைப் பற்றி விதிக்கப்பட்டதைப் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதலாம்.

அய்யன் வள்ளூவன் நறுக்குத் தெரித்தாற்போல பதினேழரை வரிகளில் எழுதியதை விடவா வேறு எவரும் எழுதிவிட முடியும்?

ஒரு குறளின் அளவு ஒன்னே முக்கால் வரிதான்!

அதைப் படியுங்கள்!

என்னை எதிர்க்கேள்வி கேட்க விரும்புபவர்களும் அதை ஒரு முறைக்கு நான்கு முறை படித்துவிட்டு வந்தே என்னைக் கேள்வி கேளுங்கள்
ஆகவே விதியைப் பற்றி எழுதியதை, பதிவின் நீளம் கருதி இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்
------------------------------------------------------------------------------------------------------
மாடுகளை வைத்து நீ பிழைப்பு நடத்துவாய் என்று ஒருவனுக்கு விதிக்கப் பட்டிருந்தால் - எத்தனை மாடுகள் என்ற எண்ணிக்கையை இறைவன்
எழுதுவதில்லை. 4 மாடுகளா அல்லது 400 மாடுகளா என்பது அவனது முயற்சியும் உழைப்பும்தான் நிர்ணயம் செய்கின்றன!

அதற்கு மிகவும் அருமையான உதாரணம் கவியரசர் கண்ணதாசன் அவர்கள். எட்டாம் வகுப்பும் வரையே படித்த அவர், அதுவும் 54 வயது வரையே
வாழ்ந்த அவர், எத்தனை கவிதைகளை எழுதிவிட்டுச் சென்றார் - எத்தனை இலட்சம் தமிழ் உள்ளங்களை நிறைத்து விட்டுச்சென்றார்! அவர் எழுதிச்

சென்ற கவிதைகளை எத்தனை பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்விற்காக எடுத்துப் படித்துக் கொண்டிருக்கிறார்கள்! இதை வெறும் அதிர்ஷ்டக்
கணக்கில் எப்படி எடுத்துக் கொள்ள முடியும்? அவருக்கிருந்த தன்னம்பிக்கையும்,விடாமுயற்சியும், கடின உழைப்பும்தான் அவரைச் சாதனை செய்ய  வைத்தன!

இந்த இடத்தில்தான் முயற்சி நிற்கும். அதைத்தான் முயற்சி திருவினையாக்கும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்
விதியை மதியால் வெல்லலாம் என்று சொல்லிவைத்தார்கள்.
----------------------------------------------------------------------------------------
ஞானி ஒருவர் இருந்தார். அவரிடம் ஒருவன் கேட்டான்.

"அழகு ஏன் மயக்குகிறது?"

அவர் பதில் சொன்னார்.

"அது எங்கே மயக்குகிறது? நீயல்லவா மயங்குகிறாய்?"

"சரி, அழகானது - அழகில்லாதது என்ற இரண்டு நிலைப்பாடுகள் ஏன்?

"அது படைப்பின் ரகசியம். எல்லாமே அழகானதுதான் என்றால் - நீ எங்கே அதை உணரப் போகிறாய்? அதனால்தான் இரண்டு நிலைப்பாடுகள்.
வறுமை, செழுமை, பெருமை, சிறுமை என்று அனைத்தும் இரண்டு வகைப் படும்!"

"உண்மையான அழகிற்கும் - பொய்யான அழகிற்கும் என்ன வித்தியாசம்?"

"பொய்யான அழகு தற்காலிகமானது. அழிந்துவிடும். உண்மையான அழகு காலத்தாலும் நிற்கும் பலராலும் போற்றப்படும். பெருமை வாய்ந்ததாக

இருக்கும்!"

"உதாரணம் சொல்லுங்கள்"

"மீனாட்சி அம்மன் கோவில், ஸ்ரீரங்கநாதர் கோவில், ராமேஸ்வரம் கோவில்"

"அவைகள் தெய்வங்களின் உறைவிடம் - அதனால் அழகாகத்தோன்றலாம். வேறு இடங்களைச் சொல்லுங்கள்"

"எல்லா இடங்களிலும்தான் ஆண்டவன் இருக்கிறார். நான் சொன்ன அந்த இடங்கள் மனிதனால் கட்டப்பட்டவைதான்.மேலும் சில இடங்களைச்
சொல்கிறேன் பார்.
திருவாரூர் தேரழகு
மன்னார்குடி மதில் அழகு
வேதாரண்யம் விளக்கழகு
கண்ணதாசன் பாட்டழகு
காளையார்கோவில் குளம் அழகு
சரி, உனக்குப் புரியும்படியாக ஒரு இடத்தைச் சொல்கிறேன். தாஜ்மகால்."

அதற்குப் பிறகு அவன் கேள்வி கேட்கவில்லை. போய்விட்டான்.

அதே இரண்டுவித நிலைப்பாடுகள்தான் வாழ்க்கைக்கும். எல்லோருமே செல்வந்தர்களாக இருந்துவிட்டால், பசியின் அருமை எப்படித் தெரியும்?
உழைப்பின் அருமை எப்படித் தெரியும்? பணத்தின் அருமை எப்படித் தெரியும்?
--------------------------------------------------------------------------------------------------
The Road to Success is not straight:

There is a curve called failure, a loop called confusion, speed bumps called friends, caution lights called family, and you will have flats called jobs.

But, if you have a spare called determination, an engine called perseverance, insurance called faith, and a driver called God,you will make it to a place called success!

Do good, and leave behind you a monument of virtue that the storms of time can never destroy.

---------------------------------------------------------------------------------------------
"வாத்தியாரே, ஒரே ஒரு கேள்வி மட்டும் பாக்கியுள்ளது. ஆசைப்படலாமா? ஆசைப்படக்கூடாதா?!"

"நியாயமான ஆசைகளில் தவறில்லை!"

"எது நியாயமான ஆசை?"

"சைக்கிளில் செல்பவன், ஒரு மொப்ட் வண்டிக்கு ஆசைப்பட்டால் அது நியாயமான ஆசை. அவனே பென்ஸ் காருக்கு ஆசைப்படலாமா?"

"நியாயமில்லாத ஆசை எது?"

"குருவி, அதன் அளவிற்குத்தான் பறக்க ஆசைப்பட வேண்டும். கழுகைப்போல பறக்க ஆசைப்படக்கூடாது. கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துவிட்டு அதற்குத் தகுந்த பெண்ணின் மீதுதான் ஒருவன் ஆசைப்பட வேண்டும். ஓமக்குச்சி நரசிம்மன்போல் இருந்து கொண்டு, நமீதா போன்ற அல்லது நயன்தாரா போன்ற பெண்ணின் மீது ஒருவன் ஆசைப்படக்கூடாது! காக்காய் புறாவிற்கு ஆசைப்படலாமா? குயில் மயிலுக்கு ஆசைப்படலாமா? அது நியாயமில்லாத ஆசை!"
--------------------------------------------------------------------------------------------
புதிய கீதை

எது கிடைத்ததோ அது நன்றாகவே கிடைத்தது
எது கிடைக்கவில்லையோ
அது உன் நன்மைக்காகக கிடைக்கவில்லை!
எது கிடைக்க வேண்டுமோ
அது கிடைக்கவேண்டிய நேரத்தில் கிடைக்கும்

எதை நீ கேட்காமலிருந்தாய்?
உன் நோக்கப்படி கிடைப்பதற்கு?
எதற்கு நீ ஆசைப்படாமலிருந்தாய்?
அது நியாமாகக் கிடைப்பதற்கு?

எது இன்று கிடைத்ததோ
அது நாளையே உனக்கு அலுத்து விடும்
அடுத்த நாள் உனக்கு
அது வெறுத்து விடும்!

கிடைப்பதன் அருமை
அது கிடைக்கும் நொடி வரைதான்
அடுத்த நொடி
நீ வேறொன்றிற்கு ஆசைப் படுவாய்!

ஆகவே கேட்காமல் இரு!
இருப்பதைக் கொண்டு சந்தோஷப்படு!

இதுவே கிடைப்பதின் நியதியும்
பெறுவதின் சாரம்சமும் ஆகும்!

சம்பவாமி யுகே! யுகே!

அன்புடன்
வாத்தியார்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

20.8.13

Astrology: பாடலுடன் பாடத்தைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம்!

 
--------------------------------------------------------------------------------------------
Astrology: பாடலுடன் பாடத்தைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம்!

புதிய தொடர் - பகுதி 1

ஜோதிடத்தைக் கணித்த அல்லது வகுத்த முனிவர்கள் தாங்கள் எழுதியதை எல்லாம் பாடலாக அல்லது வடமொழியில் இரண்டு வரி  ஸ்லோகங்களாக எழுதிவைத்துள்ளார்கள். காகிதம், பேனா போன்ற எழுது சாதனங்கள் இல்லாத காலம். பனை ஓலைகளில், எழுத்தாணிகளைக் கொண்டு எழுதிவைத்துள் ளார்கள். சிறிய பனை ஓலைகளில் எழுதியதால் உரை நடையில் எழுதாமல் பாட்டாகவே எழுதிவைத்துள்ளார்கள். அத்துடன் அவர்கள் வாழ்ந்த காலத்துத் தமிழ். அல்லது அவர்களுடைய வடமொழி

அவற்றில் நிறைய ஜோதிட விதிகள் மற்றும் ஜோதிடச் செய்திகள் நறுக்குத் தெரித்தாற்போல உள்ளன.

அவற்றை சம்பந்தப் பட்ட பாடல், அதற்கான விளக்கம் ஆகியவற்றுடன் தருவதுதான் இத்தொடரின் நோக்கம். உங்கள் ஜோதிட அறிவு மேம்பட இந்தத் தொடரைத் தொடர்ந்து படித்துக் கொண்டு வாருங்கள். வாரம் ஒருமுறை பதிவாகும்
----------------------------------------------------------------------------------------------------
கிராமத்தில் ஒரு நல்லவன் கெட்டவனுடன் சேர்ந்து சுற்றினால் இப்படிச் சொல்வார்கள். “பன்றியோடு பசுவும் சேர்ந்து சுத்துதுடா. எல்லாம் கேடுதான்”

அதனால் நல்லதும் கெட்டதும் கலந்ததுதான் வாழ்க்கை என்றாலும், நல்ல விஷயங்கள் எப்போதும் கெட்டவற்றுடன் கலக்கக்கூடாது.

ஐந்தாம் அதிபதி திரிகோண வீட்டிற்குச் சொந்தக்காரன். பூர்வ புண்ணியாதிபதி, குழந்தை பாக்கியத்திற்குச் சொந்தக்காரன். அவன் வில்லனான ஆறாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்தால் என்ன ஆகும்?

பாடலைப் பாருங்கள்

“ஆரப்பா அயன்விதியை அறையக் கேளு
      அப்பனே ஐந்துள்ளோன் ஆறோன் கூடில்
சீரப்பா ஜென்மனுக்கு புத்திர தோஷம்
      சிவாசிவ்வா யிது மூன்றில் சேர்ந்து நிற்க
கூறப்பா கொடியோர்கள் கண்ணுற்றாலும்
      கொற்றவனே கொள்ளிக்குப் பிள்ளையில்லை
பாரப்பா பரமகுரு கண்ணுற்றாலும்
      பலனுண்டு பல தீர்த்தமாடச் சொல்லே!

.....................புலிப்பாணி முனிவர்

ஆமாம். அவர்கள் இருவரின் சேர்க்கையால் ஜாதகனுக்கு அல்லது ஜாதகிக்குக் குழந்தை பிறப்பது தள்ளிக்கொண்டு போகும். அதாவது தாமதமாகும். அத்துடன் அவர்கள் ஒரு தீய கிரகத்தின் பார்வையைப் பெற்று மூன்றாம் வீட்டில் குடியிருந்தால், குழந்தை இல்லாமல் போகும் அபாயம் உண்டு.

தோஷத்தைப் போக்க என்ன வழி?

புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று தீர்த்தமாடி, அங்கே உறையும் இறைவனை வணங்கிவிட்டு வருவதுதான் பரிகாரமாகும்!

இராமேஸ்வரம்தான் சிறந்த பரிகார ஸ்தலம்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

19.8.13

Astrology: Quiz புதிர் - பகுதி 1

 
---------------------------------------------------------------------------------------------------------------
Astrology: Quiz புதிர் - பகுதி 1

உட்தலைப்பு: எனது கேள்வியும் உங்கள் பதிலும்

புதிய தொடர் - பகுதி ஒன்று

இதுவரை சுமார் ஆறரை ஆண்டுகளாக 700 பாடங்களுக்கு மேல் நடத்தியுள் ளேன். வகுப்பறைக்கு சுமார் ஐயாயிரம் பேர்கள் வந்து செல்கிறீர்கள். எத்தனை  பேர்கள் ஆர்வத்துடன் படிக்கிறீர்கள்? எத்தனை பேர்கள் படித்தவற்றை மனதில் தக்க வைத்துக்கொள்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியாது. பழநிஅப்பனுக்கு மட்டும்தான் தெரியும். அதாவது இறைவனுக்கு மட்டும்தான் தெரியும்.

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான புதிய பகுதி இது! அனைவரையும் பங்கு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

வாரம் ஒருநாள் இப்பகுதி வெளிவரும். ஒவ்வொரு பதிவிலும் ஒரு கேள்வி தான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள். முயற்சி செய்யுங் கள்.  மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன சரியா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்ல லாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

க்ளூ வேண்டுமா? ஆஹா தருகிறேன்.

இது ஒரு பிரபலமான அரசியல்வாதியின் ஜாதகம்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++

16.8.13

கும்மிப் பாடல்

 

கும்மிப் பாடல்

பக்தி மலர்

இராமயணத்தின் பட்டாபிஷேகப் பதிகத்தில் உள்ள எளிய கும்மிப் பாடல் ஒன்றை திருமதி விசாகா ஹரி அவர்கள் தன் இனியகுரலால் பாடும் நிகழ்வு இன்று நமது பக்தி மலரை அலங்கரிக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்

------------------------------------
பாடலின் காணொளி வடிவம்
http://youtu.be/HdXhhAN19lA
Our sincere thanks to the person who uploaded this song in the net



---------------------------------------------------------------------------------------
 பழைய திரைப்படமான சம்பூர்ண ராமாயணத்திலிருந்து ஒரு அருமையான பாடல் கீழே காணொளியாக உள்ளது. நமக்கு இதை அனுப்பியவர் வேப்பிலை சுவாமி. அனைவரும் கேட்டு மகிழுங்கள். பாடலைப் பாடியவர்.சிதம்பரம்
திரு.C.S.ஜெயராமன் அவர்கள்:


http://youtu.be/s9S_rgnGdTU
Our sincere thanks to person who uploaded this song in the net
-------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

15.8.13

இது மகிழ்ச்சியான செய்திதானே?

 

வகுப்பறைக் கண்மணிகள் அனைவருக்கும்,
வாத்தியாரின் சுதந்திர தின வாழ்த்துக்கள்!
ஒரு மகிழ்ச்சியான செய்தி:
சுதந்திரதினத்தை முன்னிட்டு வகுப்பறைக்கு இன்று விடுமுறை!
இது மகிழ்ச்சியான செய்திதானே?
நாளை சந்திப்போம்

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
------------------------------------------------------------------------------

14.8.13

Astrology: அஷ்டகவர்க்கமும் கோள்ச்சாரமும்!

 
Astrology: அஷ்டகவர்க்கமும் கோள்ச்சாரமும்!

கோள்சாரத்திற்கு (transit planets) அஷ்டகவர்க்கப் பரல்களை எப்படிப் பயன் படுத்துவது?

அதை இப்போது பார்ப்போம்
--------------------------------------------------------
முதலில் சூரியனுக்கான கோள்சாரப்பலன்

சூரியனின் சுயவர்கக அட்டவணையை வைத்து அதைப் பார்க்க வேண்டும்! சூரியன் தன்னுடைய சுற்றை முடிக்க ஒரு ஆண்டு காலத்தை எடுத்துக்கொள்ளும். அதாவது

ஒவ்வொரு ராசியிலும் ஒரு மாத காலம் இருக்கும். சித்திரை மாதம் மேஷத்தில் இருந்து தனது கோள்சாரப் பயணத்தை சூரியன் துவங்கும். அதை நினைவில் கொள்க!

1. கோள்சாரச் சூரியன் தன்னுடைய சுயவர்க்கத்தில் 5 முதல் 8 பரல்கள் உள்ள ராசிகளில் சஞ்சாரம் செய்யும் காலங்களில் ஜாத்கனுக்கு சாதகமான பலன்களைக் கொடுக்கும் அக்காலத்தில் நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளலாம். திருமணம் போன்ற சுபகாரியங்களை வீட்டில் செய்யலாம். முக்கியமான செயல்களை அக்காலகட்டத்தில் துவங்கலாம்.

2. மாறாக சூரியன் 1 முதல் 3 பரல்கள்வரை தன் சுயவர்க்கத்தில் உள்ள இடங்களில் இருக்கும் (சஞ்சாரம் செய்யும்) காலங்களில் செய்யும் செயல்கள் நிறைவடையாமல் பாதியிலேயே நின்று போய் விடும் அபாயம் உள்ளது. ஆகவே அக்காலங்களைத் தவிர்ப்பது நல்லது. அதுபோல அந்தக் காலகட்டத்தில் சுபகாரியங்களைத் தள்ளிப் போடுவதும் நல்லது.

3. 4 பரல்கள் உள்ள இடத்தில் சூரியன் சஞ்சாரம் செய்யும் காலங்களில் நல்லதும் கெட்டதும் கலந்த கலவையான பலன்கள் இருக்கும் That is mixed results

4. சூரியனின் சுயவர்க்க அட்டவணையில், சூரியன் இருக்கும் இடத்தில் இருந்து 4 ராசிகளில் உள்ள பரல்களைக் கூட்டுங்கள். (சூரியன் இருக்கும் ராசியையும் சேர்த்துக் கூட்ட வேண்டும்) அது போல அடுத்து உள்ள 4 ராசிகளின் பரல்களையும் கூட்டுங்கள். அதாவது சூரியனுக்கு 5 முதல் 8ஆம் இடம்வரை உள்ள ராசிகள். பிறகு அதற்கு அடுத்துள்ள 4 ராசிகளையும் கூட்டுங்கள். அதாவது சூரியனுக்கு 9ஆம் இடம் முதல் 12ஆம் இடம் வரை உள்ள இடங்கள், அந்த 1, 2 & 3 பகுதிகளில் எந்தப் பகுதியில் கூட்டல் அதிகமாக உள்ளதோ அதை மனதில் வைத்துக்கொண்டு ஒரு நாளின் துவக்கப் பகுதி, நடுப்பகுதி, கடைசிப் பகுதி என்று முக்கிய காரியங்களைச் செய்ய வேண்டும். காரியம் வெற்றியடையும். அதாவது முதல் பகுதியில் கூட்டல் அதிகமாக இருந்தால் பகல் முன் வேளையிலும். நடுப்பதியில் பரல்கள் அதிகமாக இருந்தால், அதற்கு அடுத்து வரும் பகல் வேளையிலும் (அதாவது மதியமும்), கடைசிப் பகுதியில் அதிகமாக இருந்தால் பிற்பகலிலும் காரியங்களைச் செய்ய வேண்டும்

எந்தப் பகுதியில் கூட்டல் மிகவும் குறைவாக உள்ளதோ அந்தப் பகுதிக்கு உரிய பகல் நேரத்தைத் தவிர்த்துவிட வேண்டும்.

இதெல்லாம் நடக்கிற காரியமா என்று சலிக்காமல், ஜோதிடத்தின் மீதும் அஷ்டகவர்க்கத்தின் மீதும் நம்பிக்கை வைத்து செய்து பாருங்கள்
-----------------------
சந்திரனுக்கான கோள்சாரப் பலன்கள்

சந்திரன் தன்னுடைய சுயவர்க்கத்தில் எந்தெந்த வீடுகளில் அதிகமான பரல்களைக் கொண்டுள்ளதோ,  அந்த வீடுகளில் பயணிக்கும் காலத்தில் சாதகமான பல்ன்களைத் தரும்

என்ன ஒரு கஷ்டம் என்றால், சந்திரன் தன்னுடைய ஒரு சுற்றை முடிக்க எடுத்துக் கொள்ளும் காலம் 27 நாட்கள் மட்டும்தான்! ஒவ்வொரு ராசியிலும் அது இரண்டே கால் நாட்கள் மட்டும்தான் இருக்கும்.

1. தன்னுடைய சுயவர்க்கத்தில்  6 முதல் 8 பரல்கள் வரை இருக்கும் இடங்களில் பயணிக்கும் போது அந்த நாட்கள் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். எடுத்துச் செய்யும் காரியங்கள் வெற்றியடையும். அதனால் முக்கியமான பணிகளை அந்த நாட்களில் செய்ய வேண்டும். ஒரு வேலையில் சேர்வதற்கு, அல்லது ஒரு தொழிலைத் துவங்குவத்ற்கு, அல்லது திருமணம் செய்துகொள்வதற்கு அல்லது ஒரு பாடத்தைப் படிக்கத் துவங்குவதற்கு, ஒரு நட்பை உண்டாக்குவதற்கு போன்ற செயல்களுக்கு அந்த நாட்கள் உரியனவாகும்.

2. மாறாக  சந்திரன் தனது சுயவர்க்கத்தில் 4 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் உள்ல இடங்களில் பயணிக்கும் காலத்திற்கு உரிய நாட்களில், மேற்சொன்ன செயல்களைச் செய்யாமல் ஒத்திப் போடுவது நல்லது.

3. ஒரு நேர்காணல், அல்லது ஒரு வேலையில் சேர்வதற்கான இன்டர்வியூவிற்குச் செல்வதற்கு இந்தப் பரல்கள் அதிகம் உள்ள நாட்கள் உகந்ததாக இருக்கும். சில சமயங்களில், அது நமக்கு சரிப்பட்டு வராது. நமக்கு வரும் உத்தரவுப்படி செய்ய முடியுமே தவிர, நாள் நட்சத்திரங்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அது போன்ற சந்தர்ப்பங்களில், இறைவனைப் பிரார்த்திவிட்டு நீங்கள் அதைச் செய்ய வேண்டியது முக்கியம். இறைவன் பிரார்த்தனைகளுக்கு நிச்சயம் உதவுவார். கை கொடுப்பார்!

4. திருமணப் பொருத்தம் பார்க்கும்போது, பெண்ணின் ஜாதக ராசி என்னவோ (அதாவது சந்திரன் இருக்கும் ராசி) அந்த ராசியில் பையனின் சுயவர்க்கத்தில் (பையனின் ஜாதகத்தில்) அதிகமான பாரல்கள் (அதாவது 6ற்கு மேற்பட்ட ) இருந்தால், திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். இது இருபாலருக்கும் பொதுவானது
-------------------------
செவ்வாய் கிரகத்திற்கான கோள்சாரப் பலன்:

செவ்வாய் இடம், பூமி, வீடு வாசல் முதலியவற்றிற்கான அதிபதி.  He is the lord for immovable properties. செவ்வாய் தனது சுயவர்க்கத்தில் எந்த ராசியில்  அதிகமான பரல்களுடன் உள்ளாரோ, அந்த் ராசியில் அவர் பயணிக்கும் காலத்தில், இடம் அல்லது வீடு அல்லது அசையாத சொத்துக்கள் வாங்குவதற்கு உகந்ததாகும்.

அப்படிப் பார்த்து வாங்கும் சொத்து தங்கி விடும். நம்மை விட்டுப் போகாது!
--------------------------------------------------------------------
”சரி, மூன்று கிரகங்களுக்கு மட்டும்தானே கொடுத்திருக்கிறீர்கள். அஷ்டகவர்க்கத்தை வைத்து மற்ற கிரகங்களுக்கான கோள்சாரப் பலன்களை எப்படிப் பார்ப்பது? முக்கியமாக குரு மற்றும் சனீஷ்வரனின் கோள்சாரப் பலன்களை எப்படிப் பார்ப்பது?”

”பொறுத்திருங்கள். இன்னொரு நாள் அதை விரிவாகத் தருகிறேன். இது திறந்தவெளி இணைய வகுப்பு.இங்கே எழுதுவது என்பது ஒரு இளம் பெண் திறந்தவெளியில் குளிப்பதற்குச் சமமானது. இங்கே முழுமையாகக் குளித்தால் பல ஆசாமிகள் வீடியோ காமெராவுடன் தயாராக உள்ளார்கள், படமாக்கிக் கொண்டு போவதற்கு! ஆகவே எப்படித் தரலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கு ஏதாவது யோசனை தோன்றினால் சொல்லுங்கள்!”

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

13.8.13

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ தொடர் நிறைவுப் பகுதி!

 
Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ தொடர் நிறைவுப் பகுதி!

ஜோதிடத் தொடர் பாடம். பகுதி 36 (இத்துடன் இந்தத் தொடர் நிறைவுறுகிறது)

இந்தத் தொடரில் இதற்கு முன் உள்ள பாடங்களைப் படித்திராதவர்கள், அவற்றைப் படிக்கவும்!
-------------------------------------------------------
பெண்ணின் நட்சத்திரத்தை வைத்து, பொருத்தமான நட்சத்திரத்தைத் தெரிவு செய்வது நல்லது! ஆனால் அதே பொருத்தம் இரு பாலருக்குமே
பொதுவானதுதான். அதை மனதில் வையுங்கள்.

நட்சத்திரப் பொருத்தம் மட்டும் போதுமா?

மற்ற பொருத்தங்கள் முக்கியமில்லையா?

தசா சந்திப்பு இன்றி இருப்பது. தோஷங்கள் இல்லாமல் இருப்பது, தோஷங்கள் இருந்தால் ஆணைவிட பெண்ணிற்குக் சற்றுக் குறைவாக இருப்பது
பொன்ற மற்ற விஷயங்களும் உள்ளன. ஆகவே முதலில் நட்சத்திரப் பொருத்தத்தை மட்டும் தொடர்ந்து பார்ப்போம். பிறகு மற்றவற்றைப் பார்ப்போம்!! 
-----------------------------------------------------
ரேவதி நட்சத்திரம். இது மீன ராசிக்கு உரிய நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரம் புதன் கிரகத்தின் நட்சத்திரமாகும்.

இந்த நட்சத்திரத்திற்கு

1. கார்த்திகை
2. புனர்பூசம்
3. பூசம்
4. பூரம்
5. உத்திரம்
6. ஹஸ்தம்
7. சுவாதி
8. அனுஷம்
9. பூராடம்
10.உத்திராடம்
11. திருவோணம்
12. சதயம்
13. உத்திரட்டாதி.

ஆகிய 13 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய நட்சத்திரங்களாகும்.

அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi) பார்த்தால் மீனத்திற்கு சிம்மம் 6/8 நிலைப்பாட்டில் வரும். பூர நட்சத்திரம் பொருந்தாது. மீன
ராசிக்கு  கும்பம் 12ம் வீடு. ( 2/12 & 12/2 position to each rasi)  ஆகவே கும்ப  ராசிக்கு உரிய நட்சத்திரமான சதயம் பொருந்தாது. கூட்டிக் கழித்தால்
ஆக மொத்தத்தில் 11 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.

அஸ்விணி, ஆயில்யம், மகம், கேட்டை, மூலம் ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றையும் விலக்கி
விடுவது  நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் ரேவதி ஒரே நட்சத்திரமாக இருந்தால் பொருந்தும். அதாவது ஏக நட்சத்திரம் பொருந்தும்.

சித்திரை, விசாகம்  ஆகிய 2 நட்சத்திரங்களும் பொருந்தாது. (அதமக் கணக்கில் வரும்)

பரணி, ரோஹிணி, மிருகசீர்ஷம், திருவாதிரை, அவிட்டம், பூரட்டாதி ஆகிய 6 நட்சத்திரங்களும் மத்திம பொருத்தம் (average) உடையதாகும். தேவைப் பட்டால் அவற்றில் கிடைக்கும் வரன் ஒன்றைத் தெரிவு செய்து கொள்ளலாம்!
----------------------------------------------------------------------------
காதல் திருமணங்களுக்கு இந்தப் பொருத்தம் பார்க்க வேண்டுமா?

வேண்டாம். பார்த்து என்ன ஆகப்போகிறது? காதலைக் கைவிட முடியுமா? ஆகவே பார்க்காமல் வருவது வரட்டும், நடப்பது நடக்கட்டும் என்று வாளா விருப்பது நல்லது!
-----------------------------------------------
இந்தத் தொடர் நிறைவுறுகிறது. இதுவரை பொறுமையாகப் படித்த அன்புள்ளங்கள் அனைத்திற்கும் வாத்தியாரின் நன்றி உரித்தாகுக!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

12.8.13

Astrology.Popcorn Post: வர்கோத்தமம் என்றால் என்ன சாமி அர்த்தம்?

 
Astrology.Popcorn Post: வர்கோத்தமம் என்றால் என்ன சாமி அர்த்தம்?

Popcorn Post No.46


பாப்கர்ன் சாப்பிட்டு ரெம்ப நாள் அகிவிட்டது. அதனால் இன்று பாப்கர்ன்  பதிவு.
-----------------------------------------------------------------------------------
வர்கோத்தமம் என்பதும் ஒரு யோகம்தான் ராசா!

வர்கோத்தமம் என்பது ஒரு கிரகம் ராசிச் சக்கரத்திலும், நவாம்ச சக்கரத்திலும் ஒரே இடத்தில் இருப்பதைக் குறிக்கும்!

ராசி, மற்றும் நவாம்சத்தில் ஒரே இடத்தில் லக்கினம் இருந்தால் இருந்தால் அது வர்கோத்தம லக்கினம் எனப்படும்!

ராசி கட்டத்தில் சிம்மத்தில் செவ்வாய் இருந்து, அம்சத்திலும் சிம்மத்தில் செவ்வாய் இருந்தால் அதற்கு வர்கோத்தம செவ்வாய் என்று பெயர்!

சிம்மத்திற்கு செவ்வாய் யோககாரகன். அவன் வர்கோத்தமமும் பெற்றால் ஜாதகனுக்கு இரட்டிப்பு யோகங்களைக் கொடுப்பார். நல்ல பலன்களைக் கொடுப்பார்.

இதுபோன்று ஒவ்வொரு கிரகத்திற்கும், ஒவ்வொரு லக்கினத்தின் யோககாரனுக்கும் ஸ்பெஷல் வர்கோத்தமப் பலன்கள் உண்டு. கேட்டால், ஒரு வேளை உங்கள் ஜாதகத்தில் அப்படி யிருந்தால் அசந்துபோய் விடுவீர்கள். காற்றில் மிதப்பீர்கள். அப்படி ஒரு சந்தோஷமான மனநிலை ஏற்படும்!

உங்கள் மொழியில் சொன்னால், சாதாரணக் காருக்குப் பதிலாக உங்களுக்கு குளிரூட்டப்பெற்ற சொகுசுக்கார் கிடைக்கும். உங்களுக்குக் கிடைக்கும் பெண் (மனைவி) அனுஷ்கா சர்மாவைப் போன்ற அழகி என்பதோடு, நன்கு படித்தவளாக, நல்ல வேலையில் (மாதம் இரண்டு லட்ச ரூபாய் சம்பளம் சாமி) இருப்பவளாகவும் அமைந்துவிடுவாள். சந்தோஷப் படுவீர்களா - இல்லையா?

அப்படி வர்கோத்தமம் பெறும் கிரகம் வலிமை உடையதாக ஆகிவிடும். அந்த அமைப்பு ஜாதகனுக்கு அதிகமான அளவு நன்மையான பலனைக் கொடுக்கும்! இயற்கையில் தீய கிரகமாக இருந்தாலும், வர்கோத்தமம் பெறும்போது நன்மைகளைக் கொடுக்கும்.

உதாரணத்திற்கு லக்கினம் வர்கோத்தமம் பெற்றால், ஜாதகன் நீண்ட ஆயுளூடன் இருப்பான்!

அதுபோல ஒன்பது கிரகங்களுக்கும் தனித்தனியான விசேட பலன் உண்டு

என்னென்ன கிரகத்தால் என்னென்ன நன்மைகள் என்பதை இன்னொரு நாள் விரிவாக எழுதுகிறேன். பொறுத்திருங்கள்

பாப்கர்ன் பொட்டலத்தில் இவ்வளவுதான் தரமுடியும் சாமிகளா?

அன்புடன்
வாத்தியார்

 
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

9.8.13

Devotional: முருகனின் மறுபெயர் என்ன?

----------------------------------------------------------------------------------------
 Devotional: முருகனின் மறுபெயர் என்ன?

பக்தி மலர்

‘முருகனின் மறுபெயர் அழகு’ என்ற பல்லவியுடன் துவங்கும் பாடலை திருமதி சுதா ரகுநாதன் அவர்கள் தன்னுடைய அழகான குரலால் பாடிய பாடல் ஒன்று இன்றைய பக்தி மலரை அலங்கரிக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்

----------------------------------------
பாடலின் காணொளி வடிவம்
http://youtu.be/PqZjWWHtzyQ
Our sincere thanks to the person who uploaded this song in the net

 திருமதி.சுதாரகுநாதன்

 
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

8.8.13

கவிதைச்சோலை: Balance Sheet: ஐந்தொகை

 

கவிதைச்சோலை: Balance Sheet: ஐந்தொகை

கவிநயம்

வியாபாரத்திற்கு மட்டும் ஐந்தொகை என்பது கிடையாது. வருமான வரி செலுத்துவதற்கு மட்டும் ஐந்தொகை என்பது கிடையாது.வாழ்க்கைக்கு,
அதாவது வாழ்ந்த வாழ்க்கைக்கும் ஐந்தொகை உண்டு.

ஒருவர் தான் பிறந்த நாட்டை விட்டு வெளிநாட்டிற்குச் சென்று 30 ஆண்டுகள் பாடுபட்டு உழைத்துப் பணத்தைச் சேர்த்தார். தன்னுடைய 65ஆவது
வயதில் கணக்கைக் கூட்டிக் கழித்துப் பார்த்தார். என்ன மிஞ்சியது? அதாவது ஐந்தொகை என்ன?

அமெரிக்காவில் ஒரு பெரிய வீடு மிஞ்சியது. அதாவது தனது மனைவி மக்களுக்கு நன்றாகச் செலவழித்து, அவர்கள் விரும்பியபடி செலவழித்தது
போக மிஞ்சியது ஒரு வீடு மட்டும்தான். இந்திய மண்ணில் சேமிப்பாக போட்டு வைத்த பணத்தில் அடையாறில் 4 வீட்டு மனையில் வாங்கிய வீடு
ஒன்றும் மிஞ்சியது. மொத்தம் இரண்டு வீடுகள் மட்டுமே!

ஆனால் அதற்காக இந்திய மண்ணை விட்டுச் சென்றதால் இழந்த சின்னச் சின்ன சந்தோஷங்கள், உறவுகள் என்று பல விஷயங்களை அவர்
இழந்துள்ளார். அந்த இழப்புக்களுக்கு மிஞ்சிய இரண்டு வீடுகளும் ஈடாகாது. அதுதான் அவருடைய அவலமான ஐந்தொகை.

இப்படி ஒவ்வொரு மனிதனும் தான் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு கால கட்டத்தில் ஐந்தொகை ஒன்றைப் போட்டுப் பார்க்க வேண்டும். அப்போதுதான்
தான் கற்றதும், பெற்றதும், அடைந்ததும், இழந்ததும் தெரியவரும்.

கவியரசர் கண்ணதாசன் இந்த ஐந்தொகையைப் பற்றித் தன்னுடைய கவிதை ஒன்றில் அழுத்தமாகச் சொல்லியுள்ளார். அதைக் கீழே கொடுத்துள்ளேன்

வாசித்துப் பாருங்கள்

அன்புடன்
வாத்தியார்

---------------------------------------------------------------------------
கவிதைச் சோலை: காலவிளையாட்டில் களித்தவர் கொடுக்கும் கணக்கு!
ஐந்தொகை

நீலமணி விழியிலே நீந்தினேன் அப்போதென்
    நிழலையான் காண வில்லை;
    நிகரில்லாச் செல்வத்தில் ஆடினேன் அப்போதென்
    நெஞ்சைநான் காண வில்லை;
காலவிளை யாட்டிலே களித்தநான் முடிவினைக்
    கருத்திலே கண்ட தில்லை;
    கைகால் விழுந்துபோய்க் கண்பஞ் சடைந்ததும்
    கணக்கினைப் புரட்டு கின்றேன்;
சால்வோர் சக்திஇச் சகத்திலே உண்டென்று
    சத்தியம் செய்கின் றேனே;
    தமிழிலொரு கவிமகனைச் சிறுகூடற் பட்டியில்
    தந்தமலை யரசி தாயே!

         -கவியரர் கண்ணதாசன்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++

7.8.13

Astrology: Second short cut - இரண்டாவது குறுக்கு வழி

 
Astrology: Second short cut - இரண்டாவது குறுக்கு வழி

குறுக்கு வழி என்றால் நமக்கு எப்பவும் (எப்பொழுதும்) பிடிக்கும்.

ஒன்பது கிரகங்கள், பன்னிரெண்டு ராசிகள், ராசிச் சக்கரம், நவாம்சச் சக்கரம், தசா புத்திகள், கோள்சாரம் என்று பல மேட்டர்களை வைத்து ஒரு ஜாதகத்தை அலசுவதைவிட, அஷ்டக வர்க்கத்தை வைத்து ஒரு ஜாதகத்தை சுலபமாக அலசிவிடலாம். அஷ்டகவர்க்கமே ஒரு குறுக்கு வழிதான்.

அஷ்டகவர்க்கத்திலும் ஒரு குறுக்கு வழி இருக்கிறது!

என்ன அஷ்டகவர்க்கமே குறுக்கு வழி அதில் ஜாதகத்தை அலச ஒரு குறுக்கு வழி உள்ளதா என்று யாரும் ஆச்சரியப்பட வேண்டாம்.

ஒரு குறுக்கு வழி உள்ளது அதை இன்று பார்ப்போம்!
------------------------------------------------------------
ஒரு ஜாதகத்தில், ஜாதகனுக்கும், அவனுடைய நெருங்கிய உறவுகளுக்கும் உள்ள நெருக்கத்தை அல்லது விரிசல்களை சுலபமாகவும், விரைவாகவும், கீழ்க்கண்டவாறு கணக்கிடலாம்.

ஜாதகத்தில் உள்ள 12 ராசிகளில், மிக அதிகமான பரல் உள்ள ராசியையும், மிகக்குறைவான பரல் உள்ள ராசியையும் குறித்துக்கொள்ளுங்கள். பிறகு கீழே குறிப்பிட்டுள்ள காரகர்களில் யார், யார் அந்த வீடுகளில் உள்ளார்கள் என்று பாருங்கள். மிக அதிகமான பரல் உள்ள வீட்டில் இருப்பவர்களால் உங்களுக்கு நன்மைதான். அவர்கள் உங்களுடன் நெருக்கமாக இருப்பார்கள். அவர்களால் உங்களுக்கு உதவியாக இருக்குமே தவிர உபத்திரவம் இருக்காது. அவர்கள் உங்களின் மேல் அன்பாகவும், பாசமாகவும் பிரியமாகவும் இருப்பார்கள்.

மிக அதிகமான பரல்கள் உள்ள வீட்டில் உங்கள் லக்கினம் அமைந்தால், அனைத்தும் உங்களுக்கு தன்னிச்சையாகவே அமையும்.

1. ஜாதகனின் மேன்மையைப் பார்ப்பதற்கு உரிய இடம் (காரகத்துவம்) லக்கினம்
2. ஜாதகனின் தந்தையின் மேன்மையைப் பார்ப்பதற்கு உரிய கிரகம் (காரகன்) சூரியன்
3. ஜாதகனின் தாயைப் பற்றிப் பார்ப்பதற்கு உரிய கிரகம் (காரகன்) சந்திரன்
4. ஜாதகனின் சகோதரர்களைப் பற்றிப் பார்ப்பதற்கு உரிய கிரகம் (காரகன்) செவ்வாய்
5. ஜாதகனின் மனைவியைப் பற்றிப் பார்ப்பதற்கு உரிய கிரகம் (காரகன்) சுக்கிரன்

மாறாக மிகவும் குறைந்த பரல்கள் உள்ள வீட்டில், உங்கள் லக்கினம் அமைந்திருந்தால், ஜாதகனின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்காது. உறவுகளிடமும் அவனுக்கு ஒரு பிடிப்பு இல்லாமல் போய்விடும்.

அதுபோல மிகவும் குறைந்த பரல்கள் உள்ள வீட்டில், மேற்கூறிய காரகர்கள் அமர்ந்திருந்தால, சம்பந்தப்பட்ட கிரகத்திற்கு உரிய உறவு, உங்களுடன் ஒட்டுதல் இல்லாமல் இருக்கும். அவர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படாது.

ஒரு ஜாதகத்தில் மிக அதிகமான பரல் உள்ள வீட்டிற்கும், மிகக் குறைவான பரல்கள் உள்ள வீட்டிற்கும் கிடைத்துள்ள பரல்களின் வித்தியாசம் குறைவான அளவிலேயே இருந்தால், அதாவது எல்லா வீடுகளிலும் பரல்களின் அளவு 26 முதல் 30ற்குள் இருந்தால், ஜாதகனின் வாழ்க்கை சீரான ஓட்டத்துடன் இருக்கும். பெரிய, திடீரென்ற உயர்வையோ அல்லது தாழ்வையோ ஜாதகன் சந்திக்க மாட்டான். His life will be with no great upheavals or downfalls!

இது அஷ்டகவர்க்கப் புத்தகத்தில் வரவுள்ள பாடம். அத்துடன் மேல்நிலைப் பாடம். அனைவருக்கும் பயன்படட்டும் என்று அதை இன்று இங்கே பதிவிட்டுள்ளேன்

அன்புடன்
வாத்தியார்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

6.8.13

Astrology: Short Cuts - குறுக்கு வழிகள்

 
Astrology: Short Cuts - குறுக்கு வழிகள்

short cut என்றால் a route that is shorter than the usual one மற்றும் a means of saving time or effort என்று பொருள்படும்

மனிதர்களுக்குப் பொதுவாக, பொதுவாக என்ன 90/100 பேர்களுக்கு குறுக்கு வழி என்றால் மிகவும் பிடிக்கும். அதற்கு நானும் விதிவிலக்கல்ல!

ஜோதிடம் கற்றுக்கொள்ளும் போது ஏராளமான விதிமுறைகள், பாடல்கள் என்று அனைத்தையும் கற்றுக்கொள்ளும்போது, உள்ள முக்கியமான சிரமம் என்னவென்றால் அனைத்தையும் மண்டையில் ஏற்றி நினைவில் வைத்துக் கொள்வது ஆகும். பலருக்கும் அது சாத்தியப் படுவதில்லை. பத்துப் பாடங்களை மனதில் ஏற்றி வைத்துக்கொண்டு விட்டு, அடுத்து உள்ள பத்துப் பாடங்களைப் படித்து முடிக்கும்போது, முதலில் ஏற்றிய பத்துப் பாடங்களில் பாதி மறந்து போயிருக்கும். நினைவில் தங்காது. நினைவில் தங்குவது என்பது நமது முளையில் உள்ள Hard Disc Capacityயைப் பொறுத்ததாகும். ஒரு Terra Bite அளவுள்ள மூளை என்றால் பல விஷயங்கள் நினைவில் நிற்கும். ஆனால் 1995ஆம் ஆண்டில் இருந்தது போல, 486Dx கணினிகளில் இருந்ததுபோல 1 GB க்கும் குறைவான அளவுள்ள மூளை என்னும் போது என்ன செய்ய முடியும்? ஒன்றும் செய்ய முடியாது.

அதற்குக் கை கொடுப்பதுதான் அஷ்டகவர்க்கம். அது தெரிந்திருந்தால் போதும். அதை வைத்து உங்கள் ஜாதகத்தையும், மற்றவர்களுடைய ஜாதகத்தையும் நீங்கள் அலசலாம். அஷ்டவர்கத்தை வைத்து தனி வகுப்பாக சுமார் 50 பாடங்களை நடத்தினேன். அந்தப் பாடங்கள் எல்லாம் புத்தகமாகத் தயாராகிக்கொண்டிருக்கின்றன. அந்தப் புத்தகம் சுமார் ஆறு மாதங்கள் கழித்து வெளிவரும். அதற்கு முன் தயாராகிக்கொண்டிருக்கும் அடிப்படைப் பாடங்களைப் பற்றிய இரண்டு புத்தகங்கள் வெளியான பிறகுதான் அது வெளிவரும். ஆகவே பொறுத்திருங்கள்.

அதுபோல யோகங்களும் முக்கியமானதாகும். ஒரு 100 யோகங்களையாவது, ஜாதகத்திற்கான யோக அமைப்புக்களையாவது நினைவில் வைத்துக் கொள்வது அவசியம். அது சாத்தியமானதே.

வாரம் 2/3 யோகங்கள் வீதம், முக்கியமான 150 யோகங்களை எழுதலாம் என்று உள்ளேன். இங்கே அல்ல! இங்கே எழுதினால் எழுதியவைகள் களவுபோகும் அபாயம் உண்டு. இது திறந்த வெளி வகுப்பு. இங்கே எழுதுவது என்பது திறந்த வெளியில் ஒரு பெண் குளிப்பதற்குச் சமமானது. ஆகவே classroom337 என்ற என்னுடைய தளம் (வகுப்பு) காலியாகத்தான் உள்ளது. அங்கே எழுதலாம் என்றுள்ளேன். அதில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அனுமதி அளிக்க வுள்ளேன். ஆகவே அதில் சேர்ந்து படிக்க விருப்பம் உள்ளவர்கள் அதன் விதிமுறைகளைத் தெரிந்துகொள்ள மெயில் அனுப்புங்கள். மறக்காமல் சப்ஜெக்ட் பாக்ஸில் யோகா கிளாஸ் (That is please mention as Yoga Class in the Subject Box) என்று குறிப்பிடுங்கள்.

யோகா பாடங்கள் பிறகு புத்தகமாக வரும். அப்போது அனைவரும் படிக்கலாம்

உதாரணத்திற்கு ஒரு யோகத்தைக் கீழே கொடுத்துள்ளேன்
-------------------------------------------------------
வேட்டு வைக்கும் யோகங்கள்!

மனிதன் சக மனிதனுக்கு வேட்டுவைப்பதை அறிவோம். சில அவயோகங்களும் வேட்டு வைக்கும் தன்மைகளை உடையவை. இன்று, வேட்டு வைக்கும் அவயோகங்களில் இரண்டைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளேன்.

”சார், எனக்கு இந்த யோகம் இல்லையே!” என்று யாரும் கவலைப் பட வேண்டாம்.

1. பந்துபிஸ்த்தயக்த யோகா: (உறவைக் கெடுக்கும் அவயோகம்)

4ஆம் வீட்டு அதிபதி தீய கிரகங்களுடன் சேர்ந்து இருந்தாலும், அல்லது 6, 8, 12ஆம் இடங்களில் சென்று அமர்ந்தாலும், அல்லது பகை வீடுகளில் அமர்ந்திருந்தாலும், அல்லது நீசம் பெற்றிருந்தாலும் இந்த அவயோகம் உண்டு!

பலன்: ஜாதகனுக்கு தனது நெருங்கிய சொந்தங்களுடன் நல்ல உறவு இருக்காது. உறவுகளுடன் பிரச்சினைகள் இருக்கும்.அது தவறான புரிதல்கள் அல்லது வேறு காரணங்களால் இருக்கலாம்.

எப்படியிருந்தாலும் அல்லது என்ன காரணமாக இருந்தாலும் ஜாதகன் தனிப்பட்டுப் போவான்.
++++++++++
2
மாத்ருநாச யோகா: (தாய்ப் பாசத்திற்கு வேட்டு வைக்கும் யோகம்)

சந்திரன் இரண்டு தீய கிரகங்களுக்கு இடையில் (Moon is hemmed between malefic) மாட்டிக்கொண்டு விட்டாலும் அல்லது தீய கிரகத்துடன் கூட்டணி போட்டிருந்தாலும் அல்லது தீய கிரகத்தின் பார்வையைப் பெற்றிருந்தாலும் இந்த அவயோகம் உண்டு!

பலன்: ஜாதகனின் தாய், ஜாதகன் சிறுவனாக அல்லது இளைஞனாக இருக்கும்போதே இறந்து போய்விடுவார். தவறி நல்ல ஆயுள் பாவத்தோடு, அவர் உயிர் வாழ்ந்தாலும், ஜாதகனுடன் சுமூகமான உறவு இருக்காது.
+++++++++++
இன்று ஆடி அமாவாசை. உகந்த நாள். ஆகவே இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளேன். அத்துடன் அந்த வகுப்பை இன்று துவங்குகிறேன்

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

5.8.13

Short Story: சிறுகதை: நகரங்களுக்கு நுழைவாயில் மட்டுமே உண்டு!

 

Short Story: சிறுகதை: நகரங்களுக்கு நுழைவாயில் மட்டுமே உண்டு!

ஆமாம்! நகரங்களுக்கு நுழைவாயில் மட்டுமே உண்டு! உள்ளே நுழைந்து வீட்டை வாங்கிக் குடியேறியவர்களுக்கு வெளிவாயில் கிடையாது. அதாவது
அந்த ஊரை விட்டு அவர்களால் வெளியே வரமுடியாது! இதை ஒரு கதை மூலம் விளக்குகிறார் நமது வேப்பிலை சுவாமி! அனைவரும் படித்துப்
பாருங்கள். அவர் சொல்வது சரிதானா என்று உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்

அன்புடன்
வாத்தியார்

--------------------------------------------------------------------------
அடுக்கு மாடிகளாகும் மனைகள்

சரவணன் .. சென்னையில் வேலை பார்க்கும்  இளைஞன். தன் கிராமத்திற்குச் சென்று  ”நான் சென்னையில் ஒரு வீடு வாங்கப்போகிறேன். 5 லட்சம் பணம் வேண்டும்” என்று” தன் தந்தையிடம் கேட்டான்.

அதற்கு அவர்,”இன்னும் உனக்குத் திருமணமே ஆகவில்லை அதற்குள் என்ன அவசரம்?” என்றார்.

இப்பொழுது வாங்கினால் 30 லட்சத்தில் வாங்கிவிடலாம் பிறகு வாங்கினால் குறைந்தது 60 லட்சம் தேவைப்படும். தினம் தினம் விலை ஏறி கொண்டே போகிறது என்றான்.

யோசித்த அப்பா,” சரியான முடிவு தான். ஆனால் நான் ஒரு விவசாயி உன்னை படிக்க வைக்க வாங்கிய கடனை உன் சம்பளத்தில்தான் அடைக்க ஆரம்பித்து இருகின்றோம்.திடிரென்று 5 லட்சம் கேட்டால் எப்படி? என்றார்.

நமது விவாசய நிலத்தில் ஒரு பகுதியை விற்றுவிட்டு இங்கு வாங்கிய கடனை அடைத்துவிட்டு மீதம் உள்ள பணத்தில் சென்னையில் வீடு வாங்கலாம்
என்றான் அவன்

”5 லட்சம் கொடுத்துவிட்டு மீதம் உள்ள தொகைக்கு என்ன பண்ணுவாய்?” என்று கேட்க, மகன், அதற்கு வங்கிகள் கடன் தரும். அந்தக் கடனை
மாதத் தவனை முறையில் 20 வருடத்திற்குள் செலுத்தி விடலாம்” என்றான்.

வீடு எப்படி இருக்கும் என்று அவர் கேட்க, 300 வீடுகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு.சகல வசிதிகளும் இருக்கும். அடுக்குமாடி என்றான்

அவன். அவர் முகம் மாறியது. ஆனால் மகன் ஆசைக்கேற்ப ஒரு பகுதி விவசாய நிலத்தை விற்று, வீடு வாங்கப் பணம் கொடுத்தார்.

வீடு வாங்கிய பின்பு அப்பாவைச் சென்னைக்கு வாருங்கள் என்றான். அவரும் புதிய வீட்டைப் பார்க்க மிகுந்த ஆசையோடு வந்து சேந்தார்.

ஒவ்வொரு வீட்டிற்கும் நல்ல இடைவெளி விட்டே பார்த்துப் பழகிய மனிதர், இப்படி ஒரு வீட்டைப் பார்த்து அசந்து நின்றார்.

உள்ளே சென்று, 900 சதுர அடி அளவுள்ள வீட்டைப் பார்த்து, ”இதை வாங்கவா நமக்குச் சோறு போட்ட நிலத்தை விற்கச் சொன்னாய்?” என்றார்
”இது எல்லாம் உங்களுக்கு புரியாது இங்கே அப்படித்தான். என்னோட லைப் சென்னையில்தான். இனிமேல் நம்ம ஊருக்கு விசேசத்துக்கு மட்டும்
தான் வர போறேன். இங்கே தனி வீடு எல்லாம் வாங்க முடியாது. அதுக்கு கோடிக் கணக்கில் பணம் வேண்டும். பேசாம தூங்குங்க! வந்தது அசதியா
இருக்கும்” என்றான். மனம் கேட்காமல், மனதில் வருத்தத்துடன் அவரும் அன்று உறங்கிவிட்டார்.
]
                                  &&&&&&&&&&&&&&&&&&&&&&

மாலை வேளை வீட்டை விட்டு வெளியே வந்தார். மற்ற வீடுகள் அனைத்தும் பூட்டப்பட்டு இருந்தன. கீழ இறங்கி வந்தவர், சில பெற்றோர்கள் தங்கள்
சிறு குழந்தைகளைப் பூங்காவில் விளயாட வைத்து கொண்டு இருந்ததைப் பார்த்தார்.

அவருக்கு மனதில் ஒரு சந்தோஷம். அதைப் பார்த்தபடி நின்று கொண்டு இருந்தார். பக்கத்தில் வந்த செக்யூரிட்டி,” அய்யா நீங்க சரவணன் சார்
அப்பாவா?” என்றான்.

ஆமாம் என்றார்.

”சார் சொல்லிட்டுத்தான் போனாரு. வாங்க சார் டி சாப்பிடலாம்” என்றான்.

சரி என்று நகரும் போது, “ஏனப்பா இங்கே யாரும் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்கொள்ள மாட்டார்களா? எல்லாம் வீடும் பூட்டியிருக்கு? சில
வீடுகளின் கதவு அடைத்திருக்கு?”

அது எல்லாம் அப்படிதான் அய்யா. எல்லோருக்கும் நிறைய வேலை. காலையில ஆரம்பிச்சு நைட் வரைக்கும். பல வீட்ல கணவன் மனைவி ரெண்டு பேரும் வேலைக்கு போறாங்க. அவுங்க சின்னப் பசங்களை பக்கதுல இருக்க ஹோம்ல விட்ருவாங்க. நைட்ல யாரு முதல வராங்களோ அவுங்க
கூட்டிட்டு வருவாங்க. பெத்த புள்ளையை யாருகிட்டயோ விட்டு விட்டுப் போவார்கள்!”

”ஏன் அவுங்க அப்பா அம்மா எல்லாம் இங்க வந்து உடன் தங்கியிருக்க மாட்டார்களா?”

”அதுவா இவங்க இருக்கிற பிஸியில, பெத்தவுங்களப் பார்த்துக் கொள்ள முடியுமா? அதனால ஒன்னு அவங்க சொந்த ஊர்லயே இருப்பாங்க! அல்லது இவங்க அவங்களை முதியோர் இல்லத்தில சேர்த்து விட்டுருவாங்க!”

இதைக் கேட்ட ஆச்சிரியத்தில் பெரியவர் நின்று கொண்டு இருக்க அவன் தொடர்ந்து சொன்னான், “ இதோ போறாரே சேகர்சார், அவர் உங்க
வீட்டுக்கு எதிர்த்த வீடுதான். இப்போ கூட இவர் தன் பையனை சைல்ட் கேர் ஹோமிலிருந்துதான் கூட்டிகிட்டு வர்றாரு!.

திகைத்துப் போனார் பெரியவர்.

தான் மகனிடம் எதுவும் கேட்காமல் ஒரு வாரம் பல்லை கடித்து கொண்டு இருந்தவர், ஒரு நாள் மாலை, கீழே நின்று கொண்டு இருக்கும் போது ..
பக்கத்தில் வந்த சேகரைப் பார்த்தார்.

”என்ன தம்பி ஆச்சரியமா இருக்கே? இன்னக்கி வேலை இல்லையா?”

“இல்லை அய்யா. லீவ் போட்டுட்டேன்.. எதுவுமே பிடிக்கலே. கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாம்னு!”

”ஓஹோ, சரி சரி! எங்கே உங்கள் மனைவி?”

”அவளுக்கு செகன்ட் ஷிபிட். வர நைட் 12 மணி ஆகும். அதுவரைக்கும் நான் பையனைப் பார்த்துக்குவேன். அப்புறம் காலையில நான் வேலைக்கு
போயிருவேன். அவ வீட்டு வேலையையெல்லாம் முடிச்சுட்டு பையனைப் பக்கத்துக்கு ஹோம்ல விட்டுட்டு வேலைக்கு போய்விடுவா”

”அப்போ நீங்க ரெண்டு பேரும் பேசிக்கவே மாட்டிங்களா?”

”சண்டே மட்டும்தான் பேச முடியும் அதுவம் அவளுக்கு முன்றாவது ஷிபிட் நைட் 10 மணிக்கு போய் கலையில் 6 மணிக்கு வருவா. அப்போ ஒரே
தூக்கம் தான். அன்று சாய்ந்திரம் எதாவது ஹோட்டலுக்குப் போய் சாப்பிட்டு விட்டு வருவோம்”

”எதற்குத் தம்பி இப்படிக் கஷ்டப்படனும்?”

”அப்படி இருந்தாத்தான் இங்கே வாழமுடியும்” அவன் முத்தாய்ப்பாய் இதைச் சொன்னான்

அதற்கு அந்த பெரியவர், “நீங்க சொல்றது தப்பு. இப்படி இருந்தாத்தான் வசதியா வாழ முடியும் அப்படீன்னு சொல்லுங்க!” என்றார்.

அதை கேட்டவுடன் அவனுக்கு செவிட்டில் அறைந்தது போல இருந்தது.

                                     &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

அடுத்த நாள் தான் மகனிடம் நான் ஊருக்கு போறேன் என்றார் பெரியவர். ”என்ன அப்பா இவ்வளவு அவசரம்? என்று கேட்டவனுக்கு அவர் பதில்
உரைத்தார்:

”ஒன்னும் இல்லை. படிச்சா நல்லா இருக்கலாம்  என்ற எண்ணத்தில்தான் கடன் வாங்கி உன்னை நான் படிக்க வச்சேன். ஆனா நீ இன்னும் உன்
வாழ்கையையே ஆரம்பிக்கவில்லை அதுக்குள்ள அடுத்த 20 வருஷத்துக்கு கடன்காரன் ஆயிட்டியே!. இனிமே உனக்கு கல்யாணம் பண்ண,
அவளுக்கும் அப்புறம் உன் குழந்தைக்கும் சேர்த்து உன் மனைவியும் வேலைக்கு போகணும். கடைசியா படிப்பு உன்னை ஒரு கடன் காரனாகத்தான்
ஆக்கும். இது தெருந்திருந்தால் உன்னை நான் படிக்க வைத்திருக்க மாட்டேன். விவசாயம் செஞ்சாலும் நான் யார்கிட்டயும் உன் படிப்பைத் தவிர
வேறு எதற்கும் கடன் வாங்கவில்லை. இனிமே உன் வாழ்கைக்கையில் நிம்மதியே இருக்காது என்பதை நினைக்கும்போது கஷ்டமா இருக்கு! மீண்டும்
திரும்பி வருவாய் என்று நம்பிகையுடன் கிளம்புகிறேன்”  என்று தனது கிராமத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்  அவர்.

அவருக்கு எப்படித் தெரியும் இந்த சென்னை வாழ்விற்கு என்ட்ரி மட்டும்தான் உள்ளது. எக்ஸிட் கிடையாது என்று!!!!!!!!!!!!
-----------------------------------------------------------------------------------------------------------------
இந்தக் கதையை அறியத்தந்தவர் விசு அய்யர், சென்னை.

சில இடங்களில் திருத்தங்களை மட்டும் நான் செய்துள்ளேன்.

”சென்னை வாழ்விற்கு என்ட்ரி மட்டும்தான் உள்ளது. எக்ஸிட் கிடையாது என்று!!!!!!!!!!!!” என்ற அருமையான வரியுடன் கதை முடிந்ததால், அழுத்தமாக
மனதில் வந்து அமர்ந்து கொண்டு விட்டது. தனிச் சிறப்பையும் அது பெற்று விட்டது. அதன் மேன்மை கருதி, இன்று ஏற்றவிருந்த ஜோதிடப் பாடத்தை
சற்று நிறுத்தி வைத்துள்ளேன். எங்கே போய்விடப் போகிறது அது? நாளை அது வெளியாகும். பொறுத்திருங்கள்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++==

2.8.13

Devotional: பாடுக நாவே! பாடுக நீ!

 

Devotional: பாடுக நாவே! பாடுக நீ!

பக்தி பலர்

'கலியுகம் வாழும் வேல்முருகன்
கரிமுக சோதரன் ஆறுமுகன்’

என்னும் பல்லவியுடன் காந்தர்வக் குரல் மன்னன் யேசுதாஸ் அவர்கள் பாடிய முருகன் பாடல் இன்றையப் பக்தி மலரை அலங்கரிக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்

----------------------
பாடலின் காணொளி வடிவம்
http://youtu.be/Nx89Gc3b45s
Our sincere thanks to the person who uploaded the clipping in the net


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++

1.8.13

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 35

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 35

ஜோதிடத் தொடர் பாடம். பகுதி 35

இந்தத் தொடரில் இதற்கு முன் உள்ள பாடங்களைப் படித்திராதவர்கள், அவற்றைப் படிக்கவும்!
-------------------------------------------------------
பெண்ணின் நட்சத்திரத்தை வைத்து, பொருத்தமான நட்சத்திரத்தைத் தெரிவு செய்வது நல்லது! ஆனால் அதே பொருத்தம் இரு பாலருக்குமே பொதுவானதுதான். அதை மனதில் வையுங்கள்.

நட்சத்திரப் பொருத்தம் மட்டும் போதுமா?

மற்ற பொருத்தங்கள் முக்கியமில்லையா?

தசா சந்திப்பு இன்றி இருப்பது. தோஷங்கள் இல்லாமல் இருப்பது, தோஷங்கள் இருந்தால் ஆணைவிட பெண்ணிற்குக் சற்றுக் குறைவாக இருப்பது பொன்ற மற்ற விஷயங்களும் உள்ளன. ஆகவே முதலில் நட்சத்திரப் பொருத்தத்தை மட்டும் தொடர்ந்து பார்ப்போம். பிறகு மற்றவற்றைப் பார்ப்போம்!! 
-----------------------------------------------------
உத்திரட்டாதி நட்சத்திரம். இது மீன ராசிக்கு உரிய நட்சத்திரமாகும். அத்துடன் இந்த நட்சத்திரம் சனீஷ்வரனின் ஆதிக்கத்தில் உள்ள நட்சத்திரமாகும்.

இந்த நட்சத்திரத்திற்கு

1. திருவாதிரை
2. புனர்பூசம்
3. ஆயில்யம்
4. மகம்
5. உத்திரம்
6. ஹஸ்தம்
7. சுவாதி
8. கேட்டை
9. மூலம்
10. உத்திராடம்
11. திருவோணம்
12. சதயம்
13. ரேவதி

ஆகிய 13 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய நட்சத்திரங்களாகும்.

அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi) பார்த்தால் மீனத்திற்கு சிம்மம் 6/8 நிலைப்பாட்டில் வரும். மக  நட்சத்திரம் பொருந்தாது. மீன ராசிக்கு  கும்பம் 12ம் வீடு. ( 2/12 & 12/2 position to each rasi)  ஆகவே கும்ப  ராசிக்கு உரிய நட்சத்திரமான சதயம் பொருந்தாது. கூட்டிக் கழித்தால் ஆக மொத்தத்தில் 11 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.

பரணி, பூசம், பூரம், அனுஷம், பூராடம் ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றையும் விலக்கி விடுவது  நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் உத்திரட்டாதி நட்சத்திரமாக இருந்தால்  பொருந்தும். அதாவது ஏக நட்சத்திரம் பொருந்தும்!

கார்த்திகை, விசாகம் ஆகிய 2 நட்சத்திரங்களும் பொருந்தாது. (அதமக் கணக்கில் வரும்)

அஸ்விணி, ரோகிணி, மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம், பூரட்டாதி ஆகிய 6 நட்சத்திரங்களும் மத்திம பொருத்தம் (average) உடையதாகும். தேவைப்பட்டால் அவற்றில் கிடைக்கும் வரன் ஒன்றைத் தெரிவு செய்து கொள்ளலாம்!
----------------------------------------------------------------------------
காதல் திருமணங்களுக்கு இந்தப் பொருத்தம் பார்க்க வேண்டுமா?

வேண்டாம். பார்த்து என்ன ஆகப்போகிறது? காதலைக் கைவிட முடியுமா? ஆகவே பார்க்காமல் வருவது வரட்டும், நடப்பது நடக்கட்டும் என்று வாளாவிருப்பது நல்லது!
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++