மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

28.6.13

தாரிதேவியின் கோபத்திற்கு ஆளானதால்தான், உத்தரகாண்டில் இத்தனை பேரழிவா?

 

தாரிதேவியின் கோபத்திற்கு ஆளானதால்தான், உத்தரகாண்டில் இத்தனை பேரழிவா?

தாரி தேவி கோவில் , காளி மடம் (ஆதிசங்கரர் ஸ்தாபித்த மடம்), கேதார்நாத் - இவை மூன்றும் ஒன்றோடு ஒன்று பிணைந்தது. 1884 - 1885 ஆண்டுகளில் தாரி தேவி கோவிலை வேறு இடம் செல்ல அன்றய ஆங்கிலேயர்கள் முயன்றனர். அப்பொழுதும் இதே உக்கிரம் கேதார்நாத் மலைப் பகுதிகளில் நிகழ்ந்தது. தற்போதும் அதே போன்ற ஒரு முயற்ச்சியில் பேரழிவு நிகழ்ந்துள்ளது என்பதை எடுத்துச் சொல்லி, அதற்கான செய்திகளுக்குரிய சுட்டிகளையும் கொடுத்து, நமது வகுப்பறைக்கு வந்து செல்லும் அன்பர் (எம்.ரவி, சென்னை) எழுதியுள்ளார்.

அதை அப்படியே கீழே கொடுத்துள்ளேன். அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகக் கொடுத்துள்ளேன். அந்த அன்பருக்கு நம்
நன்றியைத் தெரிவித்துக்கொள்வோம்.

எதற்காக கோவிலை அகற்றினார்கள்? அணை கட்டுவதற்காகவாம்!

படித்துப் பாருங்கள்.

நம்புவதும் நம்பதாதும் உங்கள் விருப்பத்தைப் பொறுத்தது!

http://post.jagran.com/goddess-dhari-devis-wrath-ravaged-ukhand-1372155557
http://ibnlive.in.com/news/ukhand-locals-believe-moving-dhari-devi-idol-caused-the-cloudburst/402106-3-243.html

அன்புடன்
வாத்தியார்


தேவியின் கோவிலைப் பற்றிய மேலதிகத் தகவல்கள்:

(மொழியாக்கம் செய்வதற்கு நேரமில்லை. அதனால் அப்படியே கொடுத்துள்ளேன். தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்கவும்)

Elevation:     560 m (1,837 ft)
Architecture and culture
Primary deity:     Maa Kali(Dhari Devi)
Important festivals:     Navratras
Architectural styles:     North Indian architecture
History
Date built:
(Current structure)     Unknown
Creator:     Unknown
Website:     http://www.maadharidevi.org

Dhari Devi is a temple on the banks of the Alaknanda River in the Garhwal Region of Uttarakhand state, India. It houses the upper half of an idol of the goddess Dhari that,[1] according to local lore, changes in appearance during the day from a girl, to a woman, and then to an old lady.

[citation needed] The idol's lower half is located in Kalimath,[1] where mata is prayed in Kali roop.[2] This shrine is one of 108 in India, as numbered by Srimad Devi Bhagwat.[3]
Location

The temple is located in Kalyasaur along the Srinagar -Badrinath Highway. It is about 15 km from Srinagar, Uttarakhand, 20 km from Rudraprayag and 360 km from Delhi.[1]

Controversies

 
The government has tried to build up dams to overcome the power shortage. This has been opposed by locals and some prominent politicians like Uma Bharti and B. C. Khanduri since it would lead to the submergence of the Shrine, and efforts to construct dams have been delayed indefinitely.

[4] Twice, in 1882 & in 2013, attempts to shift the shrine were immediately followed by havoc in Kedar Valley. On June 16th, 2013; the idol was removed to be shifted to another location to facilitate the construction of the same dam, which locals were opposing since beginning. This was followed by a massive cloudburst and flash floods with in hours.

Source: http://en.wikipedia.org/wiki/Dhari_Devi_%28Uttarakhand%29


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++=


அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சேல்என வேல் தோன்றும்
ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்
முருகா என்று ஓதுவார் முன்!
- நீக்கிரரின் திருமுருகாற்றுப்படைப் பாடல்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

27.6.13

கவிதைச் சோலை: இரைபோடும் மனிதருக்கு இரையாகும் வெள்ளாடுகள்!

 
கவிதைச் சோலை: இரைபோடும் மனிதருக்கு இரையாகும் வெள்ளாடுகள்!

இன்றைய கவிதைச் சோலையை பட்டுக்கோட்டையார் எழுதிய கவிதை ஒன்று அலங்கரிக்கின்றது. அனைவரும் படித்து மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்

------------------------------------------------------------------------------------
இரைபோடும் மனிதருக்கு இரையாகும் வெள்ளாடே
இதுதான் உலகம் வீண் அனுதாபம் கொண்டுநீ
ஒருநாளும் நம்பிடாதே!

டேயன்னா...டேயன்னா ....டேயன்னா...ட்ரியோ டேயன்னா!

முறையோடு உழைத்துண்ண முடியாத சோம்பேறி
நரிபோலே திரிவார் புவிமேலே - நல்ல
வழியோடு போகிற வாய்பேசா உயிர்களை
வதச்சு வதச்சு தின்பார் வெறியாலே

(இரை)

காலொடிந்த ஆட்டுக்காக கண்ணீர்விட்ட புத்தரும்
கடல்போல உள்ளங்கொண்ட காந்தி ஏசுநாதரும்
கழுத்தறுக்கும் கொடுமை கண்டு
திருந்தவழி சொன்னதும் உண்டு
காதில்மட்டும் கேட்டுஅதை ரசித்தாங்க - ஆனா
கறிக்கடையின் கணக்கை பெருக்கி வந்தாங்க!

(இரை)


- கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
திரைப்படம்: பதிபக்தி (1958ஆம் ஆண்டு)

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இடைச்சேர்க்கை

Kedar Tragedy

காட்டாற்று வெள்ளத்தில் கண்முன் நடக்கும் சோகத்தைப் பாருங்கள்
நமக்கு இந்த வீடியோ க்ளிப்பிங்கை அனுப்பி, அறியத்தந்தவர் நமது வேப்பிலை சுவாமிகள்

அன்புடன்
வாத்தியார்

http://youtu.be/XmNi4OZn0xk

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

26.6.13

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 30

 

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 30

ஜோதிடத் தொடர் பாடம். பகுதி 30

இந்தத் தொடரில் இதற்கு முன் உள்ள பாடங்களைப் படித்திராதவர்கள், அவற்றைப் படிக்கவும்!
-------------------------------------------------------
பெண்ணின் நட்சத்திரத்தை வைத்து, பொருத்தமான நட்சத்திரத்தைத் தெரிவு செய்வது நல்லது! ஆனால் அதே பொருத்தம் இரு பாலருக்குமே பொதுவானதுதான். அதை மனதில் வையுங்கள்.

நட்சத்திரப் பொருத்தம் மட்டும் போதுமா?

மற்ற பொருத்தங்கள் முக்கியமில்லையா?

தசா சந்திப்பு இன்றி இருப்பது. தோஷ்ங்கள் இல்லாமல் இருப்பது, தோஷங்கள் இருந்தால் ஆணைவிட பெண்ணிற்குக் சற்றுக் குறைவாக இருப்பது பொன்ற மற்ற விஷயங்களும் உள்ளன. ஆகவே முதலில் நட்சத்திரப் பொருத்தத்தை மட்டும் தொடர்ந்து பார்ப்போம். பிறகு மற்றவற்றைப் பார்ப்போம்!! 
-----------------------------------------------------
அவிட்ட நட்சத்திரம் 1 & 2ஆம் பாதங்கள் (மட்டும்) மகர ராசி.
இந்த நட்சத்திரம் செவ்வாய் கிரகத்திற்கு உரிய நட்சத்திரமாகும்.

இந்த நட்சத்திரத்திற்கு

1. புனர்பூசம்
2. ஆயில்யம்
3. மகம்
4. விசாகம்
5. மூலம்
6. திருவோணம்

ஆகிய 6 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய நட்சத்திரங்களாகும்.

அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (8/6 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். மகர ராசிக்கு சிம்மம் எட்டாம் வீடு. சிம்மத்திற்கு மகரம் ஆறாம் வீடு.. மக நட்சத்திரம் சிம்மத்திற்கு உரியது. ஆகவே அதை விலக்கி விடுவது நல்லது.

மகர ராசிக்கு தனுசு 12ம் வீடு. தனுசுவிற்கு மகரம் இரண்டாம் வீடு. ( 2/12 & 12/2 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே தனுசு ராசிக்கு உரிய மூலம், நட்சத்திரத்தை விலக்கிவிடுவது நல்லது.

கூட்டிக் கழித்தால் ஆக மொத்தத்தில் 4 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.

மிருகசீர்ஷம், சித்திரை ஆகிய 2 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றையும் விலக்கி விடுவது  நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் அவிட்டம் ஒரே நட்சத்திரமாக இருந்தால்  பொருந்தாது!.அதாவது ஏக நட்சத்திரம் பொருந்தாது!

அஸ்விணி, பரணி, கார்த்திகை, பூரம், சித்திரை,உத்திரம், கேட்டை, உத்திராடம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய 12 நட்சத்திரங்களும் பொருந்தாது (கஷ்டம்டா சாமி)

ரோகிணி, திருவாதிரை, பூசம், ஹஸ்தம், சுவாதி, அனுஷம் ஆகிய 6 நட்சத்திரங்களும் மத்திம பொருத்தம் (average) உடையதாகும். தேவைப்பட்டால் அவற்றில் கிடைக்கும் வரன் ஒன்றைத் தெரிவு செய்து கொள்ளலாம்!
----------------------------------------------------------------------------
காதல் திருமணங்களுக்கு இந்தப் பொருத்தம் பார்க்க வேண்டுமா?

வேண்டாம். பார்த்து என்ன ஆகப்போகிறது? காதலைக் கைவிட முடியுமா? ஆகவே பார்க்காமல் வருவது வரட்டும், நடப்பது நடக்கட்டும் என்று வாளாவிருப்பது நல்லது!

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++======

25.6.13

Numerology: நீங்கள் வசிக்கும் ஊரும் நீங்களும்!


Numerology: நீங்கள் வசிக்கும் ஊரும் நீங்களும்!

எதுவுமே நமக்கு உறுதுணையாக இருந்தால்தான், வாழ்க்கை சுவைக்கும், மகிழ்ச்சியாக இருக்கும்!

பெற்றோர்கள் உறுதுணையாக இருந்தால்தான் இளம் வயது வாழ்க்கை பயனுள்ளதாக இருக்கும்!
வாத்தியார் உறுதுணையாக இருந்து சொல்லிக்கொடுத்தால்தான் பாடங்கள் மண்டையில் ஏறும்!
மனைவி உறுதுணையாக இருந்தால்தான் மணவாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்!
வேலைபார்க்கும் இடத்தில், மேலதிரிகாரி உறுதுணையாக இருந்தால்தான் வேலை செய்வது உற்சாகத்தைக் கொடுக்கும்!!
நண்பன் உறுதுணையாக இருந்தால்தான் நட்பு நன்மையைக் கொடுக்கும். அல்லது மேன்மையைக் கொடுக்கும்

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்!

அதுபோல நீங்கள் இருக்கும் அதாவது வசிக்கும் ஊர் உங்களுக்கு உறுதுணையாக இருந்தால்தான் வாழ்க்கை வளம் உடையதாக இருக்கும்,
மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும் என்று எண்கணிதம் சொல்கிறது.

வேலை வாய்ப்பின் காரணமாக நீங்கள் எந்த ஊரில் வேண்டுமென்றாலும் வசிக்க நேரலாம். அல்லது தொழில் காரணமாக அந்தத் தொழில் நடக்கக் கூடிய ஊரில் வசிக்க நேரலாம். ஊரை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்தால் வயிற்றுப் பாட்டிற்கு என்ன செய்வது? அல்லது வாழ்க்கையில் வளம்  பெறுவதற்கு என்ன செய்வது? வெளிநாட்டில் பணி செய்ய நேர்ந்தால் என்ன செய்வது?

பருத்தி வியாபாரம் செய்பவன் தேனி, ராஜபாளையம், மதுரை அல்லது கோயமுத்தூரில் இருந்தால்தான் அந்த வியாபாரத்தைச் சிறப்பாகச் செய்ய
முடியும். அதை விட்டுவிட்டு அறந்தாங்கி, புதுக்கோட்டை, பேராவூரணி, அல்லது தஞ்சாவூரில் இருந்து கொண்டு அந்தத் தொழிலை எப்படிச்
சிறப்பாகச் செய்ய முடியும்?

கணினி தொழில்நுட்பத்தில் பட்டம் வாங்கியவன், சென்னை, பெங்களூர் அல்லது ஹைதராபாத்தில் வேலை கிடைத்தால் வேண்டாம் என்று சொல்லி,
வேலூர், அரக்கோணம், காஞ்சிபுரத்தில் வேலை தாருங்கள் என்று அந்த நிறுவனங்களில் கேட்க முடியுமா?

Microsoft,IBM, Oracle. HP, Symantec போன்ற மிகப் பெரிய நிறுவனங்களில் வேலை கிடைத்தால், இந்த ஊரில் வேலை போட்டுத் தாருங்கள் என்று  கேட்க முடியுமா? ஒரு தட்டுத் தட்டி அனுப்பிவிடமாட்டார்களா? அது  Delhi, Singapore, Washington, New Jersy அல்லது Bostan  என்று எந்த ஊராக இருந்தாலும், எந்த நாடாக இருந்தாலும் சென்று, அந்த வேலையில் சேர வேண்டுமல்லவா? நம் விருப்பத்தை எல்லாம் கேட்க அங்கே யார் இருக்கிறார்கள்? நம் மாமா  இருக்கிறாரா அல்லது மாமனார் இருக்கிறாரா?

அதற்கு எண் கணிதம் ஒரு நல்ல பதிலைச் சொல்கிறது. அதைப் பின்னால் பார்ப்போம். முதலில் எந்த ஊர் உங்களுக்குச் சரிப்படும் என்பதை மட்டும்
இப்போது பார்ப்போம்.

முதலில் நீங்கள் பிறந்த ஊர் எப்படி என்று பார்ப்போம்! பிறந்த ஊரே சரிப்பட்டதுதானா என்று பார்ப்போம்.

“பார்த்து என்ன ஆகப் போகிறது?இப்போது அதை மாற்ற முடியுமா?” என்று கேட்பவர்கள் எல்லாம் பதிவை விட்டு விலகவும்!
--------------------------------------------------------------------------------------------
நாம் பிறந்த எண்தான் நமக்கு அதிர்ஷ்ட எண். முதலில் உங்கள் பிறந்த தேதியைக் குறித்துக்கொள்ளுங்கள். 1 முதல் 9 வரை அதைச் சுருக்கி
ஒற்றைப் படை எண்ணாக மாற்றிக்கொள்ளுங்கள். உதாரணத்திற்கு:

1, 10, 19, 28ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 1.
2, 11, 20, 29ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 2
3, 12, 21, 30ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 3
4, 13, 22. 31ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 4.
5, 14, 23ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 5.
6, 15, 24ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 6
7, 16, 25ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 7.
8, 17, 26ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 8
9, 18, 27ஆம் தேதி பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்: 9.


நீங்கள் பிறந்த ஊர் சேலம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதன் எண்: SALEM = 3+1+3+5+4 = 16 = 7 அந்த ஊருக்கான எண் 7. அந்த ஊரில் பிறந்த ஒருவருடைய தேதியும் 7 என்று வைத்துக்கொள்ளுங்கள் (ஒரு பேச்சிற்குத்தான் சாமிகளா) அவருக்கு மதுரையும், கோயமுத்தூரும் சரிப்பட்டு வராது.

ஏன்? ஒன்றும், ஒன்பதும் ஏழாம் எண்ணிற்கு உடன்படாத எண்கள்

Madurai = 4+1+4+6+2+1+1= 19 = 1
Coimbatore = 3+7+1+4+2+1+4+7+2+5 = 36 = 9


நமது மாநிலத்தின் தலைநகரம் ஆரம்ப காலத்தில் சென்னப்ப நாயக்கர் என்ற தனிமனிதருக்குச் சொந்தமானதாக இருந்தது. ஆமாம் மொத்த இடமும்
அவருக்குச் சொந்தமானதாக இருந்தது.

The name Chennai is a shortened form of Chennaipattanam, the name of the town that grew around Fort St. George, which was built by the English in 1639. Chennapattanam was named after the Telugu ruler Damarla Chennappa Nayakudu, Nayaka of Kalahasthi and Vandavasi, father ofDamarla Venkatadri Nayakudu, from whom the English acquired the town in 1639. The first official use of the name Chennai is said to be in a sale deed, dated 8 August 1639, to Francis Day of the East India Company.

The city's colonial name, Madras, is believed to have been derived from Madraspattinam, a fishing village north of Fort St. George. However, it is uncertain whether the name 'Madraspattinam' was in use before European influence.

After the British gained possession of the area in the 17th century, the two towns, Madraspattinam and Chennapattinam, were merged, and the British referred to the united town as Madrasapattinam. The state government officially changed the name to Chennai in 1996, at a time when many Indian cities were being renamed. However, the name Madras continues to be occasionally used for the city as well as for places named after the city, such as the University of Madras and The Indian Institute of Technology, Madras.(தகவல்: விக்கி மஹாராஜா)

1996ஆம் ஆண்டு வரை மெட்ராஸ் என்ற பெயர்தான் நிலவியது.

MADRAS = 4+1+4+2+1+3 = 15 = 6
CHENNAI = 3+5+5+5+5+1+1 = 25 = 7


ஆறு என்ன எண் சுக்கிரனின் எண். அந்த ஆறு எண்ணில் பெயர் இருந்தவரை சென்னை கலைத்துறையில் கொடி கட்டிப் பறந்தது. 7 என்று மாறிய பிறகு அதே கொடி பறந்து கொண்டிருக்கிறதா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

இரண்டு பெயர்கள் உள்ளதே? எதை எடுத்துக்கொள்வது? இரண்டு பெண்டாட்டிக்காரன்கதைதான். 1996ஆம் அண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் மூத்த தாரத்தின் பிள்ளைகள். அவர்கள் MADRAS என்பதையே எடுத்துக்கொள்ளலாம்!:-)))
----------------------------------------------------------------------------------------------
எண்ணிற்கு உரிய ஆங்கில எழுத்துக்கள்:

1 = A, I, J, Y, Q
2 = B, K, R
3 =  C, G, L, S
4 = D, M, T
5 = E, H, N, X
6 = U, V, W
7 = O, Z
8 = F, P

----------------------
ஆங்கில எழுத்துக்கு உரிய எண்கள்

A = 1, B = 2, C = 3, D = 4, E = 5
F = 8 G = 3, H = 5, I = 1, J = 1
K = 2, L = 3, M = 4, N = 5,  O = 7
P = 8, Q = 1, R = 2, S = 3 T = 4
U = 6. V = 6, W = 6, X = 5, Y = 1, Z = 7

------------------------------------------------



-----------------------------------------------------------------------------------------------
1. நீங்கள் முதலில் உங்கள் பிறந்த ஊருக்கும் உங்களுக்கும் உள்ள பொருத்தத்தைப் பாருங்கள்.
2. அடுத்து வசிக்கும் ஊருக்குப் பாருங்கள்.
3. அது பொருந்தவில்லை என்றால், எண் கணிதம் மாற்று வழியைச் சொல்லியிருக்கிறது. அதைச் சொல்லித் தருகிறேன்.
4. அடுத்து ஜோதிடம் இதைப் பற்றி என்ன சொல்கிறது? அதையும் எழுதுகிறேன்.
.
பொறுத்திருங்கள்

இது மேல்நிலை வகுப்பிற்காக எழுதப்பெற்ற பாடம். அனைவருக்கும் பயன் படட்டும் என்று அதை இன்று இங்கே பதிவிட்டிருக்கிறேன்.

(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

24.6.13

பழநி ஆண்டியின் கதைக்குப் பாட்டெழுதியவருக்கு இன்று பிறந்தநாள்!



பழநி ஆண்டியின் கதைக்குப் பாட்டெழுதியவருக்கு இன்று பிறந்தநாள்!

தமிழர்களுக்கு, தமிழ் மொழிக்கு,  பெருமை சேர்த்த கவியரசர் கண்ணதாசன் அவர்களுக்கு இன்று (ஜுன் 24) பிறந்த தினம்!

எண்ணற்ற தமிழர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் அவர்!

அறிமுகம் தேவையில்லாத தமிழர்களில் அவரும் ஒருவர்! அவரைத் தெரியாது என்று சொல்பவன் தமிழனே அல்ல!

தான் படித்ததையெல்லாம் பாட்டாக்கியவர் அவர்! தன் அனுபவத்தை யெல்லாம் எழுத்தாக்கியவர் அவர்!

   “ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு, ஒரு கோலமயில் என் துணையிருப்பு”  என்று தன்னைப் பற்றிய உண்மைகளை வெளிப்படையாகச் சொன்னவர் அவர். என்னைப்போல் வாழாதீர்கள். என் எழுத்துக்களைப்போல் வாழுங்கள் என்று தன்மையாகச் சொல்லிவிட்டுப் போனவர் அவர்!

   “உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக” என்று சொல்லி  அனைவரையும் உற்சாகப் படுத்திவிட்டுப்போனவர் அவர்!

   “சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு, தென்றலே உனக்கேது சொந்தவீடு” என்று சுதந்திர உணர்வை உண்டாக்கியவர் அவர்!

   “ஆலயமணியின் ஓசையைக்” கேட்க வைத்தவர் அவர்!

   “வண்ண வண்ணப் பூவில் காயை வைத்தவனைக்” காட்டியவர் அவர்!

   “ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ” என்று பழநி ஆண்டியின் கதைக்குப் பாட்டெழுதி அசரவைத்தவர் அவர்.

   “ஆறு மனமே ஆறு, அந்த ஆண்டவன் கட்டளை ஆறு” என்று ஆண்டவனின் கட்டளையைச் சொன்னவர் அவர்!

   “உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது, வல்லவன் வகுத்ததடா” என்று நல்ல உள்ளங்களைப் பற்றி நறுக்கென்று சொல்லி விட்டுச் சென்றவர் அவர்.

   “நீ வளர்ந்து மரமாகி நிழல்தரும் காலம்வரை, தாய் மனதைக் காத்திருப்பேன் தங்க மகனே” என்று பிள்ளைகளுக்கெல்லாம் அறிவுரை சொன்னவர் அவர்

   “அவனைக் கண்டால் வரச் சொல்லடி, அன்றைக்குத் தந்ததைத் தரச் சொல்லடி” என்று கண்ணனை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியவர் அவர்!

   “பூஜைக்கு வந்த மலரே வா; பூமிக்கு வந்த நிலவே வா” என்று பெண்ணை உயர்வாகச் சொன்னவர் அவர்

   “ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்”  என்று காதலுக்குப் பொருள் சொல்லி விட்டுப் போனவர் அவர்!

   “மண்பார்த்து விளைவதில்லை, மரம் பார்த்துப் படர்வதில்லை கன்னியரும் பூங்கோடியும் கன்னைய்யா, அவர் கண்ணிலே களங்கமுண்டோ சொல்லைய்யா?” என்று கன்னியரைப் பூங்கொடிகளுக்கு உவமையாகச் சொன்னவர் அவர்.

   “சொல்லலெல்லாம் தூய தமிழ்ச் சொல்லாகுமா? சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா?” என்று மங்கையரின் மேன்மையைச் சொன்னவர் அவர்!

   “பெண்ணாகப் பிறந்து விட்டால் கண்ணுறக்கம் இரண்டு முறை” என்று பெண்களின் துயரத்தை விளங்க வைத்தவர் அவர்

   “மனிதன் மாறிவிட்டான், மதத்தில் ஏறிவிட்டான்”  என்று இன்றைய மனிதனின் நிலைப்பாட்டைச் சொல்லி விட்டுப் போனவர் அவர்!

   “சின்ன மனிதன், பெரிய மனிதனின் செயலைப் பார்த்து சிரித்துவிட்டுப்” போனவர் அவர்!

   ”ஒன்று எங்கள் ஜாதியே, ஒன்று எங்கள் நீதியே, உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களேயென்று”  உழைப்பை மேன்மைப் படுத்தியவர் அவர்!

   “மாபெரும் சபையினில் நீ நடந்தால் மாலைகள் விழ வேண்டும், ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று பலர் போற்றிப் புகழ வேண்டும் என்று தனிமனித உயர்விற்கும் நேர்மையான வாழ்விற்கும் வழி சொல்லிவிட்டுப்போனவர் அவர்.

  ”வீடுவரை உறவு, வீதிவரை மனைவி, காடுவரை பிள்ளை, கடைசிவரை யாரோ?” என்று நிலையாமைத் தத்துவத்தை எளிமையாக மனதில் பதியும்படி சொன்னவர் அவர்.

  “போனால் போகட்டும் போடா, இந்தப் பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா”  என்று மரணத்தையும் நேசிக்கச் சொன்னவர் அவர்!

"இது நமக்காக எழுதிய பாடல்" என்று பலரையும் மகிழ்வு கொள்ளும்படி அல்லது உருகிப்போகும்படி எண்ணற்ற அற்புதமான பாடல்களை எழுதியவர் அவர்!

பாமரனுக்கும் புரியும் வண்ணம், எளிமையான சொற்களால், தெளிவான கருத்துக்களால் சுருங்கச் சொல்லி படித்தவுடன் அல்லது கேட்டவுடன் மனதில் பதியும் வண்ணம் இருக்கும் அவருடைய எழுத்துக்கள். அதனால்தான் அவர் வெற்றி கண்டார்!

வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் அனுபவித்து எழுதினார் அவர். உள்ளதை உள்ளபடியே எழுதினார். அதனால்தான் அவர் இன்றளவும் எராளமான தமிழ் மக்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கின்றார்.

இன்று அவருடைய பிறந்த நாள்.

அவருடைய புகழ் வாழ்க! அவரைப்பற்றிய நினைவுகள் வளர்க!

என்னைக் கவலையில்லாத மனிதனாக்கியது அவருடைய எழுத்துக்கள்தான்! என்னுடைய மானசீகமான ஆசானும் அவர்தான்! அவரை இருமுறை நேரில் சந்தித்திருக்கிறேன். பேசியிருக்கிறேன். இறைவன் எனக்களித்த பெரும் பேறும் அதுதான்!

                                         *****************************

பிறந்த நாளிற்கு வந்தவர்களைச் சும்மா அனுப்பலாமா?

இனிப்பைப் பாட்டாகக் கொடுத்திருக்கிறேன். ஆமாம், அவர் எழுதிய பாடல்தான். கீழே உள்ளது!

பாடல் வரிகள்

ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது
(ஒளிமயமான)

நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் - அந்த
நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார்
மாலை சூடி எங்கள் செல்வி ஊர்வலம் வருகின்றாள்
வாழ்க வாழ்க கலைமகள் வாழ்க என்றவர் பாடுகின்றார்
(ஒளிமயமான)

குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக - எங்கள்
கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக
மங்கலச் செல்வி அங்கயர்க்கண்ணி திருமகளே வருக
வாழும் நாடும் வளரும் வீடும் மணம்பெறவே வருக
(ஒளிமயமான)

--------------------------------

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

21.6.13

சின்னப்பழம் பிழிந்து கொடுத்த ஞானப்பழம்!

 
சின்னப்பழம் பிழிந்து கொடுத்த ஞானப்பழம்!

பக்தி மலர்

சின்னப்பழம் ஒன்று பிழிந்து கொடுத்த ஞானப்பழம் இன்றைய பக்தி மலரை நிறைக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்

--------------------------------------------------------------------------
பாடலின் காணொளி வடிவம்
http://youtu.be/akaZDp7AsJY
Our sincere thanks to the person who uploaded this song in the net




வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

20.6.13

கவிதைச் சோலை: சதியால் எதை மறைக்க முடியாது?

 

கவிதைச் சோலை: சதியால் எதை மறைக்க முடியாது?

இன்றைய கவிதைச் சோலையை பட்டுக்கோட்டையார் எழுதிய கவிதை ஒன்று அலங்கரிக்கின்றது. அனைவரும் படித்து மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்

------------------------------------------------------------------------------------
உண்மை ஒருநாள் வெளியாகும் - அதில்
உள்ளங்க ளெல்லாம் தெளிவாகும்
பொறுமை ஒருநாள் புலியாகும் - அதற்குப்
பொய்யும் புரட்டும் பலியாகும்

காலம் தெரிந்து கூவும் சேவலைக்
கவிழ்த்துப் போட்டாலும் நிறுத்தாது;
கல்லைத் தூக்கிப் பாரம்வைத்தாலும்
கணக்காய் கூவும் தவறாது

தாழம்பூவைத் தலையில் மறைத்தாலும்
வாசம் மறைவது கிடையாது;
சத்தியத்தையும் உலகில் எவனும்
சதியால் மறைக்க முடியாது

அன்புநெஞ்சிலே ஆத்திரம் வந்தால்
ஆண்டவன் கூட அஞ்சிடுவான்;
அறிவுக்கதவைச் சரியாய்த் திறந்தால்
பிறவிக்குருடனும் கண் பெறுவான்

வம்பும் கலகமும் சிக்கலும் தீர்ந்தால்
மனிதனை மனிதன் நம்பிடுவான்;
வாராதசமயம் வந்தே தீரும்
மடையனும் அதிலே திருந்திடுவான்!
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்


(இதே கவிதையைக் கவிஞர் திரைப்படம் ஒன்றிற்குப் பாட்டாக எழுதியும் கொடுத்தார். படம்: பாதை தெரியுது பார்)

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

19.6.13

Astrology: யாரை எங்கே வைப்பது என்று கர்மகாரகனுக்குத் தெரியாதா?

 

Astrology: யாரை எங்கே வைப்பது என்று கர்மகாரனுக்குத் தெரியாதா?

எட்டாம் எண் பலரையும் பயம் கொள்ள வைக்கும் எண்ணாகும். ஆனால் எட்டில் ஏராளமான நன்மைகளும் உண்டு.

இன்று உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் Facebookகை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் முதன் எழுத்து எண் கணிதத்தின்படி எட்டிற்கு
உரிய எண்ணாகும். Facebook என்ற சொல்லில் உள்ள எழுத்துக்களும் எட்டு ஆகும். அதன், அதாவது அந்தச் சொல்லின் கூட்டு எண்ணும் எட்டு
ஆகும்

Facebook = F (8) + A (1) + C (3) + E (5) + B (2) + O (7) + O (7) + K (2) = 35
இந்த 35ன் தனி எண் = 35 = 3 +5 + 8

எட்டு எண்பது வலிமை மிக்க எண்ணாகும் (Powerful Number)

Bombay = B (2) + O (7) + M (4) + B (2) + A (1) + Y (1) = 17 = 8

1995ஆம் ஆண்டு அதன் பெயர் மாற்றப்பெற்ற பிறகு அதன் அதிஷ்டங்களும் எட்டிலிருந்து வேறு ஒரு எண்ணுக்குப் போனது!

Mumbai = M (4) + U (6^) + M (4) + B (2) +A (1) + I (1) = 18

எழுதும்போது எல்லா எண்களும் மேலே துவங்கி கீழே முடியும். எட்டு மட்டும் மேலே துவங்கி மீண்டும் மேலேயே முடியும். நாம் பயணத்தை எங்கே
துவங்கினோமோ அங்கேயே அந்தப் பயணம் முடியும் என்பதை அது குறிக்கும்!

முகம் பார்க்கும் கண்ணாடியில் மற்ற எண்களெல்லாம் மாற்றத்துடன் தெரியும். எட்டு மட்டும் எந்த மாற்றமும் இல்லாமல் தெரியும்!

எட்டைக் குறுக்கு வசத்தில் இரண்டாக உடைத்தால் இரண்டு ஜீரோக்கள் (சைபர்கள்) கிடைக்கும். வாழ்க்கை இறுதியில் ஜீரோ என்பதை அது
உணர்த்தும். எண் எட்டு சனியினுடைய எண். அவன் ஆயுள்காரகன் அதை மனதில் வையுங்கள்.

எட்டாம் எண் பல தத்துவஞானிகள், சிந்தனையாளர்கள், மகான்களுடன் தொடர்புள்ள எண்ணாகும்

அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா அமெரிக்காவின் 44ஆவது ஜனாதிபதியாவர். 4 +4 = 8 அவருடைய பெயருக்கான எழுத்துக்களின் மதிப்பும்
எட்டுதான். Barack Obama = 212132 72141 = 26 = 8

நட்சத்திர வரிசையில் பார்த்தீர்கள் என்றால், சனி பகவானுடைய நட்சத்திரங்களான பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகியவைகளின் வரிசை எண் 8, 17, 26 ஆகும் அவைகளின் தனி எண்ணும் எட்டுதான்

மனித உடம்பில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை 206 = 8

மனித மூளையின் ஆற்றலுக்கு வேலை கொடுக்கும் செஸ் ஆட்டத்தில் உள்ள காய்களின் எண்ணிக்கை எட்டு. பெரிய காய்கள் +  சிப்பாய்கள் எட்டு
ஆட்டத்தின் தளத்திலும் எட்டு கட்டங்கள், எட்டு வரிசைகள்

ஒரு காகிதத்தை எட்டு தடவைக்கு மேல் உங்களால் மடிக்க முடியாது. வேண்டுமென்றால் முயன்று பாருங்கள்

உலக அளவில் ஆங்கில மொழி ஏன் இத்தனை பிரபலம்?

அந்த மொழியில் உள்ள எழுத்துக்கள் 26 = 8

ஆங்கில மொழியில் உள்ள  F & P ஆகிய இரண்டு எழுத்துக்களுக்கும் உரிய எண் 8. அந்த எழுத்துக்களுடன் துவங்கும் பல சொற்கள் நம் வாழ்க்கையோடு சம்பந்தப் பட்டதாக இருக்கும். நம்மைக் கலக்குவதாக இருக்கும்!

Fail, Fate, False, Fire, Fatal, Fear, Fever, Fight, Foreign, Frustration, Fracture, Future (worry of future), Freedom, Fall,Fast,Famine,Fibroid, etc.

Pass, Pacemaker(for heart),  Poverty,Pathetic, Pain,Panic, Proud, Perversion, Philosophy, Police, Poor, Prison,Poison,Phishing, Prohibition,Patient (in hospital) and Punishment etc.


இந்திய சுதந்திரம் அடைந்த தினம்

15-8-1947 = 35 = 8
அன்றைய நட்சத்திரம் பூசம் = வரிசையில் எட்டாவது நட்சத்திரம் = அத்துடன் அது சனி பகவானின் நட்சத்திரம்.

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பிறந்தது அஷ்டமி திதியன்று. அது திதிகளின் வரிசையில் எட்டாவது திதியாகும். அத்துடன் அவர் தனது பேற்றோர்களுக்கு
எட்டாவது குழந்தையாவார்.

கவியரசர் கண்ணதாசனும் தன்னுடைய பேற்றோர்களுக்கு எட்டாவது குழந்தையாவார்

இந்த ஆக்கம், இணையத்தில் முன்பு படித்த கட்டுரை ஒன்றுடன் என் சொந்த சரக்கையும் கலந்து கொடுத்துள்ளதாகும்
----------------------------------------
சரி, தலைப்பிற்கு வருகிறேன்

யாரை எங்கே வைப்பது என்று கர்மகாரகனுக்குத் தெரியாதா?

தெரியும். எண் கணிதத்தில் அது விவரமாகத் தெரியாது. ஆனால் ஜோதிடத்தில் அது பளிச்’சென்று தெரியும்

அதைப் பற்றி இன்னொரு நாள் விரிவாக எழுதுகிறேன். பொறுத்திருங்கள்

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
”வாத்தி (யார்) பாடத்திற்கும் முகப்பில் உள்ள படத்திற்கு என்ன சம்பந்தம்?”

”கண்ணா, அவர் திருநீறு பூசியிருக்கும் அழகைப் பார்த்தாயா? அதை உனக்குச் சுட்டிக்காட்டுவதற்காகத்தான் அந்தப் படம். திருநீற்றை அப்படித்தான் பூசிக்கொள்ள வேண்டும்!”
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

18.6.13

Astrology: எத்தனை வில்லன்களப்பா சாமி?

 

Astrology: எத்தனை வில்லன்களப்பா சாமி?

கல்கி அவர்கள் எழுதிய அற்புதமான பொன்னியின் செல்வன் தொடர்கதையில், அவருடைய மொழியாற்றல், கதை சொல்லும் உத்தி, கதாபாத்திரங்களைச் சுட்டிக் காட்டும் நேர்த்தி என்று படிப்பவர்களை வியக்கவைக்கும் பல விஷயங்கள் உள்ளன.

கதையில் வந்தியத்தேவன், அருள்மொழிவர்மன், கரிகாலன், சேந்தன்அமுதன், என்று பல நாயகர்கள். குந்தவை, வானதி, பூங்குழலி, நந்தினி என்று பல நாயகிகள். பழு வேட்டரையர்கள், ரவிதாசன் போன்ற வில்லர்கள். அத்தனை பேர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்துக் கதையை அனாசயமாகக் கொண்டு செல்வார்.

அதுபோல ஜோதிடத்தில் பல நாயகர்களும் உண்டு. வில்லர்களும் உண்டு.

சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன், புதன், செவ்வாய் போன்ற நாயகர்கள் உள்ளார்கள். சனி, ராகு,கேது, மாந்தி, குளிகன் போன்ற வில்லர்களும் உள்ளார்கள்.

வில்லர்களில் முதல் மூவரை அனைவருக்கும் தெரியும். ஆனால் திரை மறைவிற்குப் பின் நின்று போட்டுத் தள்ளும் வில்லன்களான மாந்தி, மற்றும் குளிகனைப் பற்றிப் பலருக்கும் தெரியாது.

இருவருமே கொடியவர்கள்.

சிலர், மாந்தியும் குளிகனும் வெவ்வேறானவர்கள் என்பது தெரியாமல் இருவரும் ஒருவரே என்பார்கள்.

அது உண்மையல்ல!

இருவரும் தனித்தனியானவர்கள். ஜாதகனைப் போட்டுத்தள்ளுவதிலும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை!

அவர்கள் இருவரும் வெவ்வேறானவர்கள் என்பதற்கான ஆதாரத்தைக் கீழே கொடுத்துள்ளேன்.

8.6.2013 அன்றைய கிரக நிலைப் படம் கிழே உள்ளது.


மாந்தியும் , குளிகனும் வெவ்வேறு பாகைகளில் இருப்பதைப் பாருங்கள். ஜகன்னாத ஹோரா மென்பொருளைத் தட்டினால், எந்தத் தேதிக்கு வேண்டுமென்றாலும், அவர்களின் நிலைப்பாடு தெரியவரும் (ஆன்லைனில் அது இலவச மென்பொருள்)

பண்டைய ஜோதிட நூல்கள் குளிகனை சனியினுடைய புத்திரன் என்றும், மாந்தியை எமனுடைய புத்திரன் என்று கூறுகின்றன. இருவரில் மாந்தி மிகவும் மோசமானவன்.பயம் கொள்ளவைப்பவன். இருக்கும் இடத்தின் பலன்களை ஜாதகனுக்குக் கிடைக்கவிடாமல் தட்டிப் பறிப்பவன். அழித்துவிடக்கூடியவன்

ஆகவே மாந்தி அமர்ந்திருக்கும் இடத்தின் பாவபலன் ஜாதகனுக்குக் கிடைக்காமல் போய்விடும். அத்துடன் மாந்தி அமர்ந்திருக்கும் இடத்தின் அதிபதியின் திசைப் பலனும் ஜாதகனுக்குக் கேடுகளையே செய்யும்.

முற்காலத்தில் அதாவது 20 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த தமிழர்கள் பலரின் ஜாதகத்தில் மாந்தியைப் பற்றியை ஜாதக அமைப்பே குறிப்பிடப் பெற்றிருக்காது. காரணம் தமிழ் நாட்டில் வாழ்ந்த பல ஜோதிடர்கள் அக்காலத்தில், மாந்தியையும், அஹ்டகவர்க்கத்தையும் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளாததே காரணம்.

உங்கள் ஜாதகத்தை எடுத்துப்பாருங்கள். அதில் மாந்தி, குளிகன், அஷ்டகவர்க்கம் ஆகிய மூன்றும் இல்லை என்றால் புதிதாக ஒன்றைக் கணித்து வைத்துக்கொள்ளுங்கள். அதுதான் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்!

சரி, மாந்தி & குளிகனால் ஏற்படும் கேடுகள் என்னென்ன? அது பெரிய பாடம். பின் ஒரு நாள் அதை எழுதுகிறேன்.தற்சமயம் நேரம் இல்லை. இங்கே அல்ல! இங்கே எழுதினால் கஷ்டப்பட்டு என் மொழியில் என் நடையில் உதாரணங்களுடன் எழுதுவதை லவட்டிக்கொண்டு போய் தங்கள் வலைத்தளங்களில் தாங்கள் எழுதியதைப்போல போட்டுக்கொண்டு விடுகிறார்கள். அநியாயத்திற்குத் திருட்டுப்போகின்றன! ஜோதிடம் எல்லோருக்கும் பொதுவானதுதான். ஆனால் அதை எழுத ஆசைப் படுகிறவர்கள், தங்கள் நடையில் எழுதட்டும். கட் & பேஸ்ட் கலாச்சாரம் எதற்கு?

ஆகவே அதை மேல்நிலை வகுப்பில் எழுதுவதாக உள்ளேன். பின்னால் அது புத்தக வடிவில் வரும்போது அனைவரும் படித்துப் பயனுறலாம். மகிழலாம். பொறுத்திருங்கள்

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

17.6.13

Astrology: பணம் எதை எதைக் கொடுக்கும்?

 

Astrology: பணம் எதை எதைக் கொடுக்கும்?

’பணம் எதை எதைக் கொடுக்கும்?’ என்று கேட்டால் சாமானியனின் பதில், அதாவது சராசரி மனிதனின் பதில் ஒன்றாகத்தான் இருக்கும். ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.

”அம்மாவைத்தவிர, பெற்ற தாயைத் தவிர, விலைமதிப்பில்லாத தாயன்பைத் தவிர எல்லாவற்றையும் கொடுக்கும்” என்பான்

உண்மையான பதில் அதுவல்ல!

’பணம் எதை எதைக் கொடுக்காது?’ என்று கேட்டால் பலவிதமான பதில்கள் கிடைக்கும்.

பணம் நல்ல, அன்பான மனைவியைக் கொடுக்குமா? அல்லது நல்ல, புரிந்து நடக்கக்கூடிய கணவனைக் கொடுக்குமா? கொடுக்காது. தவறிக் கிடைத்தால் அது பணத்தால் வந்ததாக இருக்காது. ஜாதகப் பலனால் வந்ததாக மட்டுமே இருக்கும்!

இரண்டாம் வீடும், ஏழாம் வீடும், அதன் அதிபதிகளும், காரகர்களும் நன்றாக இருந்தால் மட்டுமே அது கிடைக்கும்!

பணம் நல்ல பிள்ளைகளைக் கொடுக்குமா? நல்ல பெயரை வாங்கிக்கொடுக்ககூடிய, பெற்றோர் சொன்னால் கேட்கக்கூடிய, பெற்றோரை மதித்து நடக்கக்கூடிய பிள்ளைகளைக் கொடுக்குமா? கொடுக்காது. ஒருவனின் ஜாதகத்தில் ஐந்தாம் வீடு அம்சமாக இருந்தால் மட்டுமே அது நடக்கும்.
பணத்தால் மட்டுமே அது நடக்காது.

பணம் கல்வியைக் கொடுக்குமா? ப்ளஸ் டூவில் 98% கட் ஆஃப் மதிப்பெண்களைப் பெறும் வாய்ப்பைக் கொடுக்குமா?
பணம் அறிவைக்கொடுக்குமா?
பணம் புத்திசாலித்தனத்தைக் கொடுக்குமா?
பணம் நகைச்சுவை உணர்வை, எப்போதும் கலகலப்பாக இருக்கும் உணர்வைக் கொடுக்குமா?
பணம் நம் மீது பாசத்தோடு, பரிவோடு இருக்கும் உறவினர்களைக்கொடுக்குமா?
பணம் நல்ல தொழிலை, நமக்கு வசப்படும் தொழிலைக் கொடுக்குமா?
பணம் விசுவாசமுள்ள நல்ல வேலைக்காரர்களைக் கொடுக்குமா?
பணம் அடுத்தவரை சரிபண்ணிக்கொண்டு செல்லும் நல்ல குணத்தைக் கொடுக்குமா?
பணம் முழு மகிழ்ச்சியைக் கொடுக்குமா?
பணம் எப்போதும் நிம்மதியாக இருக்கும் நிலையைக் கொடுக்குமா?
இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்

மேலே குறிபிட்டுள்ள எதையும் பணம் கொடுக்காது!
---------------------------------------------------------------------
இன்றைய பொருள் சார்ந்த உலகில் அநேக மக்கள், பொருள் இருந்தால், அதாவது பணம் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நம்பிக்கொண்டிருக்கிறார்கள். எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.

ஆனால் உலக அனுபவம் அதை வேறு விதமாகச் சொல்கிறது. மாற்றிச் சொல்கிறது.

மகான்கள் மற்றும் வாழ்வியல் நிபுணர்கள், பணத்தைத் தேடி ஓடாதே என்று சொல்கிறார்கள். உனது சக்தி, முயற்சி, செயல், மற்றும் நேரம் முழுவதையும் பணத்தைத் தேடுவதில் செலவழிக்காதே என்று சொல்கிறார்கள்.

மற்ற எல்லா செயல்களையும்விட பணத்தேடல், பணத்தைச் சம்பாதிப்பதற்கான அல்லது பணத்தைக் கைப்பற்றுவதற்கான  வழிமுறைகள் உங்களை அதிகமான அதர்மங்களை, பாவங்களைச் செய்யத் தூண்டுகிறது, செய்ய வைக்கிறது என்கிறார்கள்.

உங்களுடைய மென்மையான/மேன்மையான குணங்களையும், நல்ல கொள்கைகளையும் அது அழித்துவிடக்கூடும்.

எத்தனை சொத்துச் சண்டைகள்? குவித்து வைத்த அல்லது இம்மி இம்மியாகச் சேர்த்துவைத்த சொத்துக்களுக்காக எத்தனை விதமான சண்டை சச்சரவுகள். எத்தனை விரோதங்கள்? எத்தனை மனப் போராட்டங்கள்?

அப்பன் மகனுக்குள், அண்ணன் தம்பிகளுக்குள், அல்லது உடன் பிறந்த சகோதரிகளுடன், சுருக்கமாகச் சொன்னால் குடும்பத்திற்குள் எத்தனை சண்டைகள்? எத்தனை சதிகள்? வெட்டு, குத்துக்கள்?

கட்டித்தழுவ வேண்டிய உறவுகள் எல்லாம் வெட்டி வீசப்படும் நிலைமை. கொட்டி கவிழ்க்கப்படும் நிலைமை!

அனுதினமும் செய்திதாள்களில் எத்தனை செய்திகள் வருகின்றன!

வயல் வரப்பை ஒரு அடி அகலப்படுத்தியதற்காக அண்ணனின் கையை வெட்டிய தம்பியை நாம் பார்க்கவில்லையா?

சொத்துத் தகறாரில் அப்பனைப் போட்டுத் தள்ளிய மகனைப் பற்றி நாம் கேள்விப்படவில்லையா?

பணத்திற்காக உயிர் நண்பனுக்குத் துரோகம் செய்யும் ஆசாமிகளை நாம் பார்க்கவில்லையா?

பணத்தால் சந்தோஷம் என்ற குழந்தை மட்டும் உருவாகாது. துன்பம் என்ற தீராத கஷ்டம் என்ற பிணியுள்ள, முடமான குழந்தையும் பிறக்கும். அதை மனதில் வையுங்கள்.

மற்ற செயல்களால், மற்ற விஷயங்களால் கிடைக்கும் மகிழ்ச்சியைவிட பணத்தால் கிடைக்கும் மகிழ்ச்சி குறைவானதே என்று ஒரு ஆய்வு சொல்கின்றது.

நமது அத்தியாவசியத் தேவைகளுக்குப் போதுமான அளவில் கிடைக்கின்ற பணமே நமக்குப் போதுமானதாகும். அதுவே நமக்கு மகிழ்ச்சியையும் கொடுக்கும். அந்த அளவைத் தாண்டிக் கிடைக்கின்ற பணம் மகிழ்ச்சியைக் கொடுக்காது!

ஓரளவு பணம் இருந்தால் அது உன்னைக் காப்பாற்றும். அதிகமான பணம் இருந்தால் அதை நீ காப்பாற்ற வேண்டும்!
அதீதமான பணம் கிடைக்கும்போது, அதைப் பாதுகாப்பது, தகுந்த இடத்தில் அதை முதலீடு செய்வது போன்ற பிரச்சினைகள் தலை தூக்கும்.

சாதாரண மக்கள் தங்கள் தேவைக்கு உரிய பணம் கிடைக்காததால் மகிழ்ச்சியாக இல்லை.

பணம் இருப்பவனும் மகிழ்ச்சியாக இல்லை. இல்லாதவனும் மகிழ்ச்சியாக இல்லை!

மொத்தத்தில் இரண்டுவிதமான மனிதர்கள்தான் உலகில் உள்ளார்கள். பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாதவர்கள் ஒருவகை. பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாதவர்கள் இன்னொருவகை!

தர்ம சிந்தனையும், நியாய உணர்வும், இறையுணர்வும்தான் உண்மையான மகிழ்ச்சியைக் கொடுக்கும். அதுதான் நிதர்சனமான உண்மை!

அதைத்தான் நமது வேதங்களும், புராணங்களும் சொல்கின்றன!

அதை உணருங்கள். அது மட்டும் போதும், நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கலாம்!
-----------------------------------------
A successful person is one who can lay a firm foundation with the bricks that others throw at him or her. - David Brinkley

பிருஹத் பாரசாரா ஹோரா என்னும் பழமையான ஜோதிட நூல் என்ன சொல்கிறது?

1. பதினொன்றாம் வீடு மிகவும் நன்றாக இருந்தால் நீ எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கலாம்.(an auspicious 11th house makes a person happy at all times)
2. அதேபோல 11ஆம் வீட்டுடன் 9ஆம் வீடும் நன்றாக இருந்தால் எல்லாமே மகிழ்ச்சியுடையதாக அமையும். மனைவி, மக்கள், வாழ்க்கை என்று எதை வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள். எல்லாமுமே சூப்பராக இருக்கும். 9ஆம் வீடு என்பது 11ஆம் வீட்டிற்குப் பதினொன்றாம் வீடாகும். அதையும் மனதில் வையுங்கள்!  9th house (11th from 11th house).

இது மேலநிலை வகுப்புப் பாடம் (http://classroom2013.com) அனைவருக்கும் பயன்படட்டும் என்று அதை இன்று இங்கே பதிவிட்டுள்ளேன்

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

14.6.13

நீ இருக்கையிலே எனக்கேன் பெரும் சோதனை!

 
நீ இருக்கையிலே எனக்கேன் பெரும் சோதனை!


பக்தி மலர்!

    "இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை! நீ இருக்கையிலே எனக்கேன் பெரும் சோதனை!” என்னும் பாடல் இன்றைய பக்தி மலரை அலங்கரிக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்

-------------------------------------------------------
பாடலின் காணொளி வடிவம்
பாடியவர்: மாஸ்டர் சாய் சரண்
http://youtu.be/pRNtFd0IsSk
Our sincere thanks to the person who uploaded this song in the net




வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

13.6.13

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 29

 

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 29

ஜோதிடத் தொடர் பாடம். பகுதி 29

இந்தத் தொடரில் இதற்கு முன் உள்ள பாடங்களைப் படித்திராதவர்கள், அவற்றைப் படிக்கவும்!
-------------------------------------------------------
பெண்ணின் நட்சத்திரத்தை வைத்து, பொருத்தமான நட்சத்திரத்தைத் தெரிவு செய்வது நல்லது! ஆனால் அதே பொருத்தம் இரு பாலருக்குமே பொதுவானதுதான். அதை மனதில் வையுங்கள்.

நட்சத்திரப் பொருத்தம் மட்டும் போதுமா?

மற்ற பொருத்தங்கள் முக்கியமில்லையா?

தசா சந்திப்பு இன்றி இருப்பது. தோஷ்ங்கள் இல்லாமல் இருப்பது, தோஷங்கள் இருந்தால் ஆணைவிட பெண்ணிற்குக் சற்றுக் குறைவாக இருப்பது பொன்ற மற்ற விஷயங்களும் உள்ளன. ஆகவே முதலில் நட்சத்திரப் பொருத்தத்தை மட்டும் தொடர்ந்து பார்ப்போம். பிறகு மற்றவற்றைப் பார்ப்போம்!! 
-----------------------------------------------------
திருவோண நட்சத்திரம்.

நட்சத்திரங்களில் இரண்டு நட்சத்திரங்கள் மட்டுமே திரு’ என்ற அடைமொழியுடன் கூடியதாமும். ஒன்று திருவாதிரை (இது சிவபெருமானின் நட்சத்திரம்) இரண்டு திருவோணம் (இது பெருமாளீன் நட்சத்திரம்)

இது மகர ராசிக்கு உரிய நட்சத்திரம். அத்துடன் சந்திரனுக்கு உரிய நட்சத்திரம்!

இந்த நட்சத்திரத்திற்கு

1. அஸ்விணி
2. பரணி
3. மிருகசீர்ஷம்
4. புனர்பூசம்
5. ஆயில்யம்
6. மகம்
7. பூரம்
8. உத்திரம்
9. சித்திரை
10. விசாகம்
11. அனுஷம்
12. கேட்டை
13. மூலம்
14. பூராடம்
15. உத்திராடம்
16. அவிட்டம்
17. பூரட்டாதி
18. உத்திரட்டாதி
19. ரேவதி

ஆகிய 19 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய நட்சத்திரங்களாகும்.

அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (8/6 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். மகர ராசிக்கு சிம்மம் எட்டாம் வீடு. சிம்மத்திற்கு மகரம் ஆறாம் வீடு.. மக நட்சத்திரமும், பூரநட்சத்திரமும் உத்திரம் முதல் பாதமும் சிம்மத்திற்கு உரியது. ஆகவே அவற்றை விலக்கி விடுவது நல்லது.

மகர ராசிக்கு தனுசு 12ம் வீடு. தனுசுவிற்கு மகரம் இரண்டாம் வீடு. ( 1/12 & 12/1 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே தனுசு ராசிக்கு உரிய மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் ஆகிய நட்சத்திரங்களையும் விலக்கிவிடுவது நல்லது.

கூட்டிக் கழித்தால் ஆக மொத்தத்தில் 13 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.

ரோகிணி, திருவாதிரை, ஹஸ்தம், சுவாதி, சதயம் ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது  நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் திருவோணம் ஒரே நட்சத்திரமாக இருந்தால்  பொருத்தம் உண்டு!.

பூசம்  பொருந்தாது.

கார்த்திகை நட்சத்திரம் மத்திம பொருத்தம் (average) உடையதாகும். தேவைப்பட்டால் அதையும் தெரிவு செய்து கொள்ளலாம்!
----------------------------------------------------------------------------
காதல் திருமணங்களுக்கு இந்தப் பொருத்தம் பார்க்க வேண்டுமா?

வேண்டாம். பார்த்து என்ன ஆகப்போகிறது? காதலைக் கைவிட முடியுமா? ஆகவே பார்க்காமல் வருவது வரட்டும், நடப்பது நடக்கட்டும் என்று வாளாவிருப்பது நல்லது!

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

10.6.13

Astrology: மனம்போல் மாங்கல்யம்

 
Astrology: மனம்போல் மாங்கல்யம்

அலசல் பாடம்
--------------------------
காதல் உணர்வு என்பது எல்லோருக்கும் பொதுவானது. அந்த உணர்வு, இளம் வயதில், சிறிதளவாவது எலோருக்கும் இருக்கும். சிலருக்கு மட்டும் அதீதமாக இருக்கும். அவர்கள் ஒருவரையோ அல்லது ஒருத்தியையோ காதலிக்கத் துவங்கிவிடுவார்கள்.

எந்தக் காதலிலும் துவக்கம் முக்கியமில்லை. முடிவுதான் முக்கியம். காதல் நிறைவேறித் திருமணத்தில் முடிவதுதான் முக்கியம். காதலிக்கும் எல்லோருக்கும் அப்படி அமையாது. பலருக்கும் தத்தம் பெற்றோர்களிடமிருந்து எதிர்ப்பு இருக்கும். அந்த எதிர்ப்பைச் சமாளித்துத் திருமணம் செய்து கொள்வது என்பது கடினமான செயலாகும். மன உளைச்சளைத் தரக்கூடியதாகும்.

அதை விடுங்கள். ஜாதகத்தில் காதல் திருமணத்திற்கான அமைப்பு இருந்தால்தான் முடிவு மகிழ்ச்சியாக இருக்கும். அதாவது காதலர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். இல்லை என்றால் ஊற்றிக்கொண்டு விடும்! தீராத துன்பத்தில் முடிந்துவிடும். மறக்கமுடியாத நிகழ்வுகளில் முடிந்துவிடும்

சுக்கிரன்தான் காதலுக்கான காரகன். Authority for Love

சுக்கிரன்தான் மெல்லிய உணர்வுகளுக்கும், மோகத்திற்கும், காதல் மயக்கங்களுக்கும் அதிபதி. ஜாதகத்தில் அவன் நன்றாக இருக்க வேண்டும். அவன் நன்றாக இல்லை என்றால்,  காதல் காட்சிகளைத் திரைப்படங்களில் பார்த்து ரசிப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். காதலுக்கோ அல்லது காதல் திருமணத்திற்கோ ஆசைப்படக்கூடாது.

ஜாதகத்தில் சுக்கிரனின் பார்வை லக்கினம், அல்லது ஐந்தாம் வீடு அல்லது ஏழாம் வீட்டின் மீது அழுத்தமாகப் பதியும் போது, ஜாதகனுக்கு அல்லது ஜாதகிக்குக் காதல் உணர்வுகள் (மெல்லிய உணர்வுகள்) மிகுந்திருக்கும். ஆனால் காதல் நிறைவேறுவது ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களைப் பொறுத்ததாகும்

1. சுக்கிரன் ஐந்தாம் வீட்டின் அதிபதியாக இருப்பதுடன், அவன் ஏழாம் வீட்டில் அமர்ந்திருக்கும் அமைப்புள்ள பெண்ணிற்கு அல்லது இளைஞனுக்குக் காதல், திருமணத்தில் முடிவதுடன் மகிழ்ச்சியான இல்லற வாழ்வையும் கொடுக்கும்

2. சந்திரனுடன் சேர்ந்திருக்கும் சுக்கிரனும், சந்திரன் இருக்கும் ராசியில் இருந்து அதற்கு ஐந்தாம் வீட்டில் இருக்கும் சுக்கிரனும் அதே பலனைத் தருவார்

3. ஐந்தாம் வீடு, ஏழாம் வீடு, மற்றும் ஒன்பதாம் வீடு ஆகிய மூன்று வீடுகளுமே மனம்போல் மாங்கல்யத்தை தரும் வீடுகளாகும்

4. ஏழாம் வீட்டுக்காரன் ஐந்தாம் வீட்டில் அமர்ந்திருந்தால் அந்த அமைப்பு மனம்போல் மாங்கல்யத்தை தரும்.

5. ராசிச் சக்கரத்தில் மேற்கண்ட அமைப்பு இல்லாவிட்டாலும், நவாம்சத்தில் ஏழாம் அதிபதியும், ஒன்பதாம் அதிபதியும் சேர்ந்திருந்தாலும், அல்லது ஐந்தாம் அதிபதியும் ஏழாம் அதிபதியும் சேர்ந்திருந்தாலும் அந்த அமைப்பு மனம்போல் மாங்கல்யத்தை தரும்.

6. லக்கின அதிபதியுடன் சுக்கிரன் சேர்ந்து, இருவரும் லக்கினத்திலேயே குடியிருந்தால், அந்த ஜாதகன் தன்னுடைய இளம்வயதிலேயே காதலில் புரண்டு எழுந்து விடுவான். கண்ணில் தெரிந்த வண்ணப் பறவை, அவன் கையில் கிடைத்துவிடும். அதை வைத்துக்கொண்டு மகிழ்ச்சியான இல்லறத்தில் ஈடுபடுவான்!

7. உனக்கென நான், எனக்கென நீ என்னும் தூய காதலுக்கு, உங்கள் மொழியில் சொன்னால், Made for each other என்னும் காதலுக்கு ஜாதகத்தில் சந்திரன் நன்றாக இருக்க வேண்டும். சந்திரன் மனகாரகன் அதை நினைவில் வையுங்கள். உறுதியான காதலுக்கு மன உறுதி வேண்டும். மன உறுதிக்கு ஜாதகத்தில் சந்திரன் உறுதியாக இருக்க வேண்டாமா?
-----------------------------------------------------------------------
8. சுக்கிரன் நீசமானதுடன் லக்கினத்தில் அமர்ந்திருக்கும் அமைப்பு, திருமண வாழ்வில் திருப்தியின்மையை உண்டாக்கும். அதே ஜாதகத்தில் நவாம்சத்தில் சுக்கிரன் உச்சமாக இருந்தால், அந்த பாதிப்பு இருக்காது

9. ஏழாம் அதிபதியும் கெட்டுப்போய், சுக்கிரனும் நீசம் பெற்றிருந்தால் சொல்லவே வேண்டாம். ஜாதகனுக்குத் திருமணமாகாது. திருமணமானாலும் மனைவியுடன் அல்லது கணவனுடன் மகிழ்ச்சியான உறவு இருக்காது. சிலர் சகித்துக்கொண்டு திருமண வாழ்வைத் தொடர்வார்கள். சிலரின் திருமண வாழ்வு குடும்ப நல நீதி மன்றத்தில் முடிவிற்கு வந்து விடும். அதாவது விவாகரத்தில் முடிந்துவிடும்!

10. செவ்வாயும் சுக்கிரனும் சேர்ந்திருக்கும் அமைப்பு காதலுக்கு எதிரானது. காதல் தோல்வியில் முடிந்துவிடும். ஆகவே அந்த மாதிரி அமைப்பு உள்ளவர்கள் காதலைத் தவிர்த்துவிடுங்கள். காதலியை அல்லது காதலனைப் பிரிந்த துக்கம் இல்லாமல், அவஸ்தை இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம்.

11. ஏழாம் வீட்டுக்காரன் தீய வீடுகளில் அமர்ந்திருக்கும் அமைப்பு காதலுக்கு எதிரானது. அதாவது ஏழாம் வீட்டுக்காரன், 6ஆம் வீடு அல்லது 8ஆம் வீடு அல்லது 12ஆம் வீடு ஆகிய ஒன்றில் அமர்ந்திருக்கும் அமைப்பு காதலுக்கு எதிரானது, அந்த அமைப்பில் உங்கள் காதல் நிறைவேறாது. அதையும் மனதில் வையுங்கள்

இது மேல்நிலை வகுப்பிற்காக எழுதப்பெற்ற பாடம். வகுப்பறைக்கு நிறைய இளைஞர்கள், இளைஞிகள் வந்து செல்வதால் அனைவருக்கும் பயன்படட்டும் என்று இங்கே பதிவிட்டுள்ளேன்

அன்புடன்
வாத்தியார்


அடிக்குறிப்பு: வாத்தியார் வெளியூர்ப் பயணம். வகுப்பறைக்கு இரண்டு நாட்கள் விடுமுறை. அடுத்த வகுப்பு 13.6.2013 வியாழனன்று நடைபெறும். அன்றும் ஜோதிடப்பாடம்தான். விடுமுறையில் பழைய பாடங்களை எல்லாம் ஒருமுறை புரட்டிப் படியுங்கள். மறந்து போனவை எல்லாம் திரும்பவும் நினைவில் வந்து நிற்கும்!
---------------------------------------------------------------------
இந்தமுறை காரைக்குடி பயணம். காரைக்குடி பயணங்களில், அங்கே நடக்கும் விஷேசங்களில் வழங்கப்பெறும் உணவுகள் மிகவும் சுவையாக இருக்கும். சில செல்வந்தர்களின் வீடுகளின் மெனு இப்படியிருக்கும்:

மாம்பழ சாம்பார்
ஆப்பிள் மோர்க்குழம்பு
பைனாப்பிள் ரசம்
மாதுளம் பழம் + தயிர் பச்சடி
கெட்டித் தயிர்
புடலங்காய் கூட்டு
பச்சை பட்டாணி + பால் கட்டி பொரியல்
மிளகாய் பச்சடி
உருளைக்கிழங்கு காரகறி
சேப்பங்கிழங்கு வருவல்
வெஜிடபிள் கட்லெட்
பாதம்கீர் பாயாசம்
அப்பளம்
மினி ஜிலேபி
மினி புலவு சாதம் (ஒரு கையளவு)
மினி கறிவேப்பிலை சாதம் (ஒரு கையளவு)
துவக்கத்தில் ஒரு கப் பேபி கார்ன் சூப்
முடிவில் பட்டர் ஸ்காட்ச் ஐஸ்க்ரீம்
---------------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

7.6.13

சிறுவர்கள் சேர்ந்து பாடிய பாடல்!


சிறுவர்கள் சேர்ந்து பாடிய பாடல்!

பக்தி மலர்

சிறுவர்கள் சேர்ந்து பாடிய பக்திப் பாடல் ஒன்றை இன்று பதிவிட்டிருக்கிறேன். அனைவரும் கேட்டு மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்

+++++++++++++++++++++++++++++++++++
அறுபடை வீடு கொண்ட திருமுருகா
சிறுவர்கள் பாடிய பாடல்
காணொளி:
http://youtu.be/9BpA9wBBtAw
Our sincere thanks to the person who uploaded this song in the net!



வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
=====================================

6.6.13

Astrology: கைக்கு எட்டியது ஏன் வாய்க்கு எட்டவில்லை?

 

Astrology: கைக்கு எட்டியது ஏன் வாய்க்கு எட்டவில்லை?

பயிற்சிப்பாடம்

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்றால் வருத்தம் அதிகமாகும். இரண்டு மடங்காகும். கைக்கு எட்டவில்லை என்றால் சும்மா இருப்போம். கைக்கு எட்டிவிட்டு, கையில் கிடைத்துவிட்டு, அது வாய்க்குள் சேரவில்லை என்றால் வருத்தம் அதிகமாகுமா இல்லையா?

சிலருக்கு ஜாதகப்படி அப்படியாகிவிடும்.

பதினொன்றாம் இடத்தில் அமர்ந்திருக்கும் கிரகத்தின் மகாதிசை மிகவும் நன்மையானதாக இருக்கும் என்பது முக்கியவிதி. ஆனால் ஒரு ஜாதகனுக்கு, பதினொன்றாம் இடத்தில் அமர்ந்திருக்கும் கிர்கத்தின் மகாதிசை நடந்தும் அது பயனளிக்கவில்லை.

கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.




1. சிம்ம லக்கின ஜாதகம். லக்கினாதிபதி சூரியன் 4ல். கேந்திரத்தில். நல்லபடியாக உள்ளார்
2. சிம்ம லக்கினத்திற்கு யோககாரகனாகிய செவ்வாய் திரிகோணத்தில் (9ல்) ஆட்சி பலத்துடன் உள்ளார்.
3. அத்துடன் அவருடைய பார்வை கல்விகாரகன் புதனின் மேல் விழுகிறது.

ஜாதகன் பூரட்டாதி நட்சத்திரக்காரர். ஆரம்பதிசையான குரு திசையில் இருப்பு 9 ஆண்டுகள். அதற்குப் பிறகு 19ஆண்டுகாலம் சனி மகாதிசை. அது 28 வயதுவரை நீடித்தது. சனி திசை ஜாதகனுக்குச் சரியான பலனைக் கொடுக்கவில்லை. இளம் வயதில் தொடங்கிய சனி திசை ஜாதகனை அலைக்கழித்து, ஜாதகனின் படிப்பைக் கெடுத்துவிட்டது.

காரணம் என்ன?

1. சனி கேதுவின் கூட்டணியால் கெட்டிருக்கிறது.
2. அத்துடன் சனியின் மேல் எந்த சுபக்கிரகத்தின் பார்வையும் விழவில்லை.
3. தசாநாதனாகிய சனி 4ஆம் வீட்டையோ அல்லது அதன் அதிபதியையோ பார்க்காமல் விலகி/ஒதுங்கி இருக்கிறது.
4. கல்வி ஸ்தானமாகிய 4ஆம் வீட்டின் அதிபதி செவ்வாய், அந்த வீட்டிற்கு ஆறில் அமர்ந்துள்ளார்

இந்த 4 காரணங்களால் ஜாதகனால் படிக்க முடியாமல் போய்விட்டது.

ஆகவே நல்ல தசாபுத்தி நடந்து பயன் இல்லை. பயன் அளிக்கும்  வகையில் தசாநாதன் இருக்க வேண்டும் அதுதான் முக்கியம்

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++

4.6.13

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 31

 
Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 31

ஜோதிடத் தொடர் பாடம். பகுதி 31

இந்தத் தொடரில் இதற்கு முன் உள்ள பாடங்களைப் படித்திராதவர்கள், அவற்றைப் படிக்கவும்!
-------------------------------------------------------
பெண்ணின் நட்சத்திரத்தை வைத்து, பொருத்தமான நட்சத்திரத்தைத் தெரிவு செய்வது நல்லது! ஆனால் அதே பொருத்தம் இரு பாலருக்குமே
பொதுவானதுதான். அதை மனதில் வையுங்கள்.

நட்சத்திரப் பொருத்தம் மட்டும் போதுமா?

மற்ற பொருத்தங்கள் முக்கியமில்லையா?

தசா சந்திப்பு இன்றி இருப்பது. தோஷங்கள் இல்லாமல் இருப்பது, தோஷங்கள் இருந்தால் ஆணைவிட பெண்ணிற்குக் சற்றுக் குறைவாக இருப்பது
பொன்ற மற்ற விஷயங்களும் உள்ளன. ஆகவே முதலில் நட்சத்திரப் பொருத்தத்தை மட்டும் தொடர்ந்து பார்ப்போம். பிறகு மற்றவற்றைப் பார்ப்போம்!! 
-----------------------------------------------------
அவிட்ட நட்சத்திரம் 3 & 4ஆம் பாதங்கள் (மட்டும்) கும்ப ராசி.
இந்த நட்சத்திரம் செவ்வாய் கிரகத்திற்கு உரிய நட்சத்திரமாகும்.

இந்த நட்சத்திரத்திற்கு

1. மகம்
2. விசாகம்
3. மூலம்
4. திருவோணம்

ஆகிய 4 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய நட்சத்திரங்களாகும்.

அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (8/6 position to each rasi) பொருந்துபவற்றில்  எதுவும் இல்லை. கும்ப ராசிக்கு  மகரம் 12ம் வீடு. ( 2/12 & 12/2 position to each rasi)  ஆகவே மகர  ராசிக்கு திருவோண நட்சத்திரத்தை விலக்கிவிடுவது நல்லது.

கூட்டிக் கழித்தால் ஆக மொத்தத்தில் 3 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.

மிருகசீர்ஷம், சித்திரை ஆகிய 2 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றையும் விலக்கி விடுவது  நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் அவிட்டம் ஒரே நட்சத்திரமாக இருந்தால்  பொருந்தாது!.அதாவது ஏக நட்சத்திரம் பொருந்தாது!

அஸ்விணி, பரணி, சித்திரை,உத்திரம், உத்திராடம்,  பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய 8 நட்சத்திரங்களும் பொருந்தாது.

கார்த்திகை, ரோகிணி, திருவாதிரை, பூசம், ஆயில்யம், பூரம், ஹஸ்தம், சுவாதி, அனுஷம் கேட்டை, பூராடம், சதயம் ஆகிய 12 நட்சத்திரங்களும்
மத்திம பொருத்தம் (average) உடையதாகும். தேவைப்பட்டால் அவற்றில் கிடைக்கும் வரன் ஒன்றைத் தெரிவு செய்து கொள்ளலாம்!
----------------------------------------------------------------------------
காதல் திருமணங்களுக்கு இந்தப் பொருத்தம் பார்க்க வேண்டுமா?

வேண்டாம். பார்த்து என்ன ஆகப்போகிறது? காதலைக் கைவிட முடியுமா? ஆகவே பார்க்காமல் வருவது வரட்டும், நடப்பது நடக்கட்டும் என்று
வாளாவிருப்பது நல்லது!

(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

2.6.13

முருகனுக்கு ஒரு விழா! முத்தான திருவிழா!


முருகனுக்கு ஒரு விழா! முத்தான திருவிழா!

எங்கள் ஊரில் உள்ள, எங்கள் (பங்காளிகளுக்குச் சொந்தமான) முருகன் கோவிலில் 3 நாட்கள் திருவிழா நடைபெறவுள்ளது. 3.6.2013
திங்கட் கிழமை முதல் 5.6.2013 புதன்கிழமைவரை அத்திருவிழா நடைபெறும். முருகப்பெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம் அர்ச்சனைகள் என்று மூன்று நாட்களும் அமர்க்களமாக இருக்கும்.

முதல் நாளன்று சுமார் 3,000 பேர்கள் கலந்து கொள்வார்கள்

மூன்று நாட்களுக்கும் அன்னதானம் (3.6.2013), நகரவிருந்து (4.6.2013, பங்காளிகளுக்கு விருந்து (5.6.2013) என்று சுவையான உணவும் உண்டு.

விழாவிற்கு எங்கள் தந்தைவழி உறவினர்கள் (மொத்தம் 413 பேர்கள்) பெரும்பாலவனர்கள் வந்து ஒன்று சேர்ந்து கலந்து கொள்வார்கள்.

அத்துடன் நகர மக்களும் நகரத்தார், நாட்டார் என்ற இனபேதமின்றிக் கலந்து கொண்டு முருகனைத் தரிசித்து மகிழ்வார்கள். முருகப் பெருமானும் விதம் விதமான அலங்காரத்தில் அருள் பாலிப்பார்

இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை இவ்விழா நடைபெறுகிறது

அந்த விழாவில் 3 புத்தகங்கள் வெளியிடப்பெற்று அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படவுள்ளது. அதில் வாத்தியார் தொகுப்பாளராக
இருந்து பணியாற்றிவரும் முகவரிப்புத்தகம் ஒன்றும், வாத்தியார் எழுதிப் பதிப்பித்த ‘சனீஷ்வரன் படித்த பள்ளிக்கூடம்’ என்ற புத்தகமும்
(சனீஷ்வரனைப் பற்றிய இரண்டு கதைகள் அடங்கிய புத்தகம் - பக்கங்கள் 48) வாத்தியாரின் நண்பரும் பங்காளியுமான திரு.இராம.கிருஷ்ணன அவர்கள் எழுதிய ‘ஆன்மீகத் திரட்டு என்ற புத்தகமும் வெளியிடப்பெற்று அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படவுள்ளது.
------------------------------------------------
சரி, சொல்லவந்த செய்திக்கு வருகிறேன்

அந்த மூன்று தினங்களிலும் நடைபெறும் நிகழ்வுகளுக்கு வாத்தியார் தனது சொந்த ஊருக்குச் செல்ல இருப்பதால், வகுப்பறைக்கு மூன்று நாட்கள் விடுமுறை.

அடுத்த வகுப்பு 6.6.2013 வியாழனன்று நடைபெறும்
அனைவரும் பொறுத்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறார்கள்

அன்புடன்
வாத்தியார்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!