மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.8.11

Astrology பெண்ணைச் சொல்லிக் குற்றமில்லை!


----------------------------------------------------------------------------------------------------
Astrology பெண்ணைச் சொல்லிக் குற்றமில்லை!

ஒரு அம்மணியின் ஜாதகம் இது

-------------------------------------------------------------------------------------------------
மகர லக்கினம். லக்கினாதிபதி ஏழில். லக்கினத்தைத் தன் பார்வையில் வைத்திருக்கிறான். இது நல்ல அமைப்பு.

ஜாதகிக்கு அவன் சுயமாக நிற்கும் தன்மையை (standing Power) அளிப்பான். நவாம்சத்தில் சனி உச்சம்  பெற்றுள்ளான். (சில காரணங்களுக்காக முழு ஜாதகத்தையும் கொடுக்கவில்லை. அதை மனதில் கொள்ளவும்)

ஆனால் எட்டாம் அதிபதி சூரியன் நைசாக உள்ளே வந்து உறவாடிக் கொண்டிருக்கிறான். அது கேடானது. சனிக்கு கடும் பகைவன் அவன். அத்துடன் ஆறாம் அதிபதி (வில்லன்) புதனும் வந்து ஒட்டிக் கொண்டிருக்கிறான்.

அவர்கள் ஜாதகியின் வீரியத்தைக் குறைப்பார்கள்.

சுக ஸ்தானத்தில் கேது. அந்த வீட்டதிபதி எட்டில். சுகக் கேடு. நவாம்சத்தில் செவ்வாய் நீசம் பெற்றுள்ளான்.

சனியுடன் சுக்கிரனுடன் சேர்ந்தால் என்ன ஆகும்?

அதீதமான காம உணர்வுகள் இருக்கும்.

ஜாதகிக்கும் இருந்தது.

தன்னைவிட இரண்டு வயது குறைவான இளைஞனைக் காதலித்ததோடு, திருமணமாகும் முன்பாகவே அவனுக்குத் தன்னைப் பலமுறை விருந்தாக்கி மகிழ்வித்தாள். தானும் மகிழந்தாள். அவன் கிரங்கிப் போனான்.
இவள் மீதுபைத்தியமாகி விட்டான்.

அவனது பெற்றோர்களுக்கு, இந்தக் காதல் விவகாரம் தெரிந்தபோது,
வயதில் மூத்த பெண் என்பதால் அவர்கள் முதலில் ஒப்புக்
கொள்ளவில்லை.

அவன் போராடி அவர்களை ஒப்புக்கொள்ள வைத்தபோது, இவள் சண்டித்தனம் செய்து மறுத்து விட்டாள்.

அதற்குக் காரணம், திருமணப் பேச்சின்போது, பையனின் தந்தை, இவளைத் தனியே சந்தித்துப் பேசிய தகாத வார்த்தைகள். இவள் ஒரேயடியாக மறுத்து விட்டாள். அவனுக்கு வேறு இடத்தில் திருமணமாகியது.

இவள் கடைசிவரை தனி மரமாகவே வாழ்ந்தாள்.

காரணம் கிரகக் கோளாறுதான்!

லக்கினத்தின் மீது நான்கு கிரகங்களின் பார்வை. இவளுக்கு முரட்டுக் குணத்தைக் கொடுத்தன. adamant ( impervious to pleas, appeals, or reason; stubbornly unyielding) .unrelenting  பிடிவாதக் குணம், வளைந்து கொடுத்துப் போகாத தன்மை!

ஏழில் சுக்கிரனுடன் சனியின் சேர்க்கை. இருவரும் சேர்ந்தால் அதீத காம உணர்வு. பிஞ்சிலேயே பழுத்துவிட்டாள்.

சின்ன வயதில் முடிந்தபோதெல்லாம் இன்பம் துய்த்தாள்

அந்தப் பெண்ணைச் சொல்லிக் குற்றமில்லை. எல்லாம் கிரகக்கோளாறு!

7ஆம் வீட்டில் நான்கு கிரகங்கள். கடுமையான கிரகயுத்தம் (Planetary war) களத்திரகாரகன்  சுக்கிரன் சூரியனோடு  ஜோதியில் கலந்து விட்டான் (அஸ்தமனமாகி விட்டான்) ஏழில் எல்லாக் கருமங்களும் அரங்கேறியுள்ளன.

அதனால் அவளுக்குத் திருமண வாழ்வு இல்லாமல் போய்விட்டது

இந்த விவகாரங்கள் எல்லாம் சனிதிசையில் நடந்தன. சனி லக்கின அதிபதி என்றாலும் கடுமையான கிரக யுத்ததில்  இருக்கிறான். அத்துடன் கர்ம வினைப்பயன்களை அவன் யாராக இருந்தாலும் அளிக்கத்தவறுவதில்லை. அத்துடன்  லக்கினத்தின் மேல் 6 மற்றும் 8 ஆம் அதிபதிகளின் பார்வை விழுகிறது. அதுவும் முக்கிய காரணமாகும். அதை  மனதில் கொள்க!

படத்தில் உள்ள காதலர்களுக்கும் இந்தப் பதிவிற்கும் சம்பந்தமில்லை:-))))))

அன்புடன்
வாத்தியார்
31.8.2011
--------------------------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!

30.8.11

Astrology அழகான பெண்ணும் அடங்காத தாதாவும் - பகுதி 2

--------------------------------------------------------------------------------------------
Astrology  அழகான பெண்ணும் அடங்காத தாதாவும் - பகுதி 2

முன் பதிவைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சந்திரனும் ராகுவும் ஒருவரின் தோள் மீது ஒருவர் கை போட்டுக்கொண்டு கூட்டாக இருந்தால் என்ன நடக்கும் என்பதை ஒரு உதாரண ஜாதகத்துடன் விரிவாக விளக்குவதாக நேற்றையப் பாடத்தில் சொல்லியிருந்தேன்.

அதை இன்று பார்ப்போம்.

அந்த அமைப்பு இருந்து மற்ற கிரகங்கள் எல்லாம் ஜாதகத்தில் நல்ல நிலைமையில் இருந்தால் கவலைப்படத் தேவையில்லை. நன்றாக இல்லாவிட்டால் மட்டுமே பிரச்சினைகள் தலை தூக்கும்.

கீழே கொடுத்துள்ளது ஒரு அம்மணியின் ஜாதகம்.


அம்மணி படித்தவர். உரிய வயதில் திருமணமாகிவிட்டது. கணவர் ஒரு அரசியல்வாதி. வீடு தங்கமாட்டார். எப்போதும் கட்சி, காட்சி என்று சுற்றிக் கொண்டிருப்பார். ஓரளவு செல்வாக்குடனும் இருந்தார். கட்சி மற்றும் கட்சியைவைத்துச் செய்யும் பணிகளின் மூலம் குறைவில்லாத பணவரவும் இருந்தது. அவர் மகிழ்ச்சியுடன்தான் இருந்தார்.

ஆனால் அவரைக் கைபிடித்த மனைவிக்கு திருமண வாழ்வில் மகிழ்ச்சி இல்லை. கணவரின் நடத்தை மீது சந்தேகம் வேறு ஏற்பட்டு, அவரை வாட்டிக்கொண்டிருந்தது. நாட்கள் செல்லச் செல்ல வெறுப்படைந்து
விட்டார். அத்துடன் தனது 27ஆவது வயதில் கணவரை விட்டுப் பிரிந்து விவாகரத்தும் பெற்றுவிட்டார். தனிப்பட்டுப் போய்விட்டார்.

என்ன காரணம்?

லக்கினத்தில் சந்திரன் இருந்தால், ஜாதகி அழகான தோற்றத்துடன் இருப்பாள். உடன் ராகுவும் இருந்தால் ஜாதகி சுய கட்டுப்பாடுகள் மிகுந்தவளாக இருந்தாள். தன்முனைப்பு (ego) உள்ளவளாக இருந்தாள். யாருடனும் அனுசரித்துப் போகும் மனநிலை இல்லாதவளாக இருந்தாள். மனகாரகன் சந்திரனுடன் ராகு கூட்டாக இருந்தால் அந்த நிலை ஏற்பட்டது. அத்துடன் ஜாதகிக்கு சந்தேக மனப்பான்மை யும் மிகுந்திருந்தது.

அந்த சந்தேகங்கள்தான் வலுத்து கடைசில் விவாகரத்தில் முடிந்தது.

விவாகரத்துவரை சென்றதற்கு அது மட்டும்தான் காரணமா?

இல்லை!

லக்கினத்தில் இருந்து ஏழாம் வீடு மிகவும் பலவீனமடைந்திருப்பதைப் பாருங்கள். ஏழில் மூன்று கிரகங்களின் ஆதிக்கம். அவர்களில் ஒருவன் வில்லன். ஆறாம் வீட்டு அதிபதியான புதன். பூர்வபுண்ணியாதிபதியான சூரியனும் நீசம்பெற்று அங்கே ஆதிக்கம் செலுத்துகிறான். அவர்கள் இருவருடன் கேதுவும் உள்ளார். ஏழாம் அதிபதி சுக்கிரன் பகைவீட்டில். பகை வீட்டில் இருந்தாலும் பரிவர்த்தனை யோகத்துடன் உள்ளார். அதனால்தான் திருமணமே நடந்தது.

12ல் சனி. அது அயன, சயன போக பாகியத்திற்கான வீடு. அங்கே சனி இருப்பது நல்லதல்ல. போக பாக்கியத்தைக் குறைத்தான். அவளுடைய தூக்கத்தைக் கெடுத்தான். அவன் தன்னுடைய வேலையைக் கச்சிதமாகச் செய்தான். ஜாதகியின் புணர்ச்சி இன்பத்தில் கையை வைத்தான். ஜாதகிக்கு அது தொடர்ந்து கிடைக்காமல் இருக்கும் வழியைச் செய்தான். திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது.

ஜாதகிக்குக் கேது திசை நடக்கும்போது அது இரண்டும் நடந்தது. அதாவது விவாகம் மற்றும் விவாகரத்து ஆகிய இரண்டுமே கேது திசையில் அரங்கேறியது. கேது ஏழில் இருப்பதைக் கவனியுங்கள். அத்துடன் அவர் வேறு இரு முக்கியமான கிரகங்களுடன் கிரகயுத்தத்தில் இருப்பதையும் கவனியுங்கள்

விளக்கம் போதுமா?

ஒரு ஜாதகத்தை சர்ப் எக்செல் போட்டு அலசுவது இப்படித்தான்.

அன்புடன்
வாத்தியார்
30.8.2011
வாழ்க வளமுடன்!

29.8.11

Astrology அழகான பெண்ணும் அடங்காத தாதாவும்

------------------------------------------------------------------------------------------------
Astrology   அழகான பெண்ணும் அடங்காத தாதாவும்

அழகான பெண்ணும் அடங்காத தாதாவும் ஒன்று சேர்ந்தால் என்ன ஆகும்?

என்ன ஆகும் சொல்லுங்கள்?

நானே சொல்லவா?

சரி, சொல்கிறேன்.

“கூடாத உறவு கேடில் முடியும்” என்று மூத்த தலைவர் சொன்னதைப்போல, அந்த உறவு கேடில் முடிவதோடு, விடமுடியாமல் தொடரும். பாவம் அந்தப் பெண்.

தாதா அந்தப் பெண்ணை நிச்சயம் வசப்படுத்திவிடுவான். உங்கள் மொழியில் சொன்னால் சாய்த்து விடுவான். வீழ்த்திவிடுவான். தன் கட்டுக்குள் வைத்துக்கொள்வான். அவள் மீண்டு வரமுடியாது. அதுதான் நடக்கும்.

“வாத்தி (யாரே), அதற்கும் ஜோதிடத்திற்கும் என்ன சம்பந்தம்?”

“இருக்கிறது ராசா! சந்திரனும் ராகுவும் ஒன்று சேர்ந்தால் அப்படித்தான் இருக்கும். அதை விளக்கத்தான் மேலே உள்ளதைச் சொன்னேன்”

“ஓஹோ..!”

“ஓஹோ அல்ல! ஆஹா என்று சொல்ல வேண்டும்!”
-------------------------------------------------------------------------------------
சந்திரன் மனகாரகன். Authority for mind

ஜாதகத்தில் சந்திரன் வலிமையுடன் இருந்தால், ஜாதகன் எப்பொதும் மன மகிழ்ச்சியுடன் இருப்பான். ஜாதகியாக இருந்தால், “லல லல்லல்லா...லல லல்லல்லா...” என்று பிண்ணனி இசை ஒலிக்க எப்பொதும் குஷியாக இருப்பாள்.

சந்திரன் வலிமை இழந்திருந்தால் மட்டும்தான் பிரச்சினை. அதைவிடப் பெரிய பிரச்சினை ராகுவுடன் சேர்ந்திருப்பது. சில (நன்றாகக் கவனிக்கவும்) சில ஜாதகர்களை அந்தக் கூட்டணி மன நோயாளியாக்கக்கூடும்.

லக்கினத்தில் சந்திரன் இருந்தால், ஜாதகி அழகான தோற்றத்துடன் இருப்பாள். உடன் ராகுவும் இருந்தால் ஜாதகி சுய கட்டுப்பாடுகள் மிகுந்தவளாக இருப்பாள். தன்முனைப்பு (ego) உள்ளவளாக இருப்பாள். யாருடனும் அனுசரித்துப் போகும் மனநிலை இல்லாதவளாக இருப்பாள். மனகாரகன் சந்திரனுடன் ராகு கூட்டாக இருந்தால் அந்த நிலை தவிர்க்கமுடியாததாக இருக்கும்.

சந்திரனுடன் ராகு சேரும்போது ஜாதகனுக்கு அல்லது ஜாதகிக்கு சந்தேக மனப்பான்மை மிகுந்திருக்கும். யாரையும், எதையும் எளிதில் நம்ப மாட்டார்கள்.

சில சந்தேகப் பிறவிகளின் சந்தேகங்கள் வினோதமாக இருக்கும். வீட்டைப் பூட்டிவிட்டு ஊருக்குப் போகும்போது, பேருந்து நிலையத்திற்குச் சென்று, பேருந்தில் ஏறி அமர்ந்து, பயணச் சீட்டை வாங்கிய பிறகுதான் வீட்டை நன்றாகப் பூட்டினோமா? என்ற சந்தேகம் கிளம்பும். தன் மனைவி யாருடன் பேசினாலும் சந்தேகம் கொள்வான்.

அதுபோன்ற அமைப்புடைய பெண்னும் குழப்பமானவள்தான். தன்னுடைய கணவன் யதேட்சையாக வேறு ஒரு பெண்ணை உற்றுப் பார்த்தால், அவன் நாம் இருக்கும்போதே, இப்படி சைட் அடிக்கிறானே, இல்லாத போது என்னென்ன செய்வான் என்கின்ற சந்தேகம் எழும். கணவனின் நடவடிக்கை களைக் கவனிக்க வேண்டும் என்ற முனைப்பில், அவன் இல்லாத நேரங்களில் அவனுடைய சட்டைப் பையில் உள்ள காகிதங்களை படித்துப் பார்ப்பாள். அவனுக்கு வந்துள்ள அலைபேசி எண்களை நோண்டிப் பார்ப்பாள்.

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். எல்லாம் சந்திரனுடன் சேரும் ராகுவின் திருவிளையாடல்

வாழ்க்கையைப் பற்றி ஒற்றை வரியில் சொல்லும்போது இப்படிச் சொல்வார்கள்:

Life is nothing but adjusting with the people around us.

நம்மைச் சுற்றியுள்ளவர்களை அனுசரித்துக்கொண்டு போவதுதான் வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவம்.

அது இல்லாவிட்டால் என்ன ஆகும்?

ஒரு உதாரண ஜாதகத்துடன் அதை விரிவாக விளக்குகிறேன்

விளக்கம் நாளை. பொறுத்திருந்து படியுங்கள்

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
29.8.2011

வாழ்க வளமுடன்!

28.8.11

லண்டன் மாநகரைப் பற்றிச் சுவையான செய்திகள் - பகுதி 2

சமீபத்தில் லண்டனில் நடந்த கலவரத்தில் எடுக்கப்பெற்ற படம்
---------------------------------------------------------------------------------------------
லண்டன் மாநகரைப் பற்றிச் சுவையான செய்திகள் - பகுதி 2

ஞாயிறு மலர்

1
நான் இலண்டன் வந்த நேரமோ என்னமோ இங்கே கலவர‌ம் வெடித்து விட்டது.

இதற்கு நான் எந்த வகையிலும் காரணம் இல்லை என்பதை மட்டும் உங்களுக்கு உறுதியாகச் சொல்லிக் கொள்கிறேன்.

'அப்படியானால் எது அல்லது யார் காரணம் என்பதைச் சொல்லுமேன்!' என்கிறீர்களா?அதுதான் இங்கு யாருக்குமே புரியவில்லை.

நம் ஊர் மாதிரியே ஒரு தாதா(?)வைக் காவல்துறை 'என்கவுன்டர்' செய்து போட்டுத்தள்ளிவிட்டது. இறந்தவர் கறுப்பு இனத்தவர். அவருடைய உறவினர்களும்,நண்பர்களும் காவல்துறையைக் கண்டித்து ஓர் ஊர்வலம் நடத்தினர். அது எல்லாம் முடிந்தவுடன் சிறிய அளவில் கலவரம் துவங்கியது.

ஆசியர்களுடைய கடைகள் குறி வைத்துத் தாக்கப்பட்டன. முக்கியமாக மின் சாதனங்கள், செல்போன், கம்ப்யூட்டெர் விற்கும் நிறுவனங்கள் தாக்கப்பட்டன. காவல் துறை இதை சற்றும் எதிர்பார்காதாதால் சற்றே மெத்தனமாக இருந்துவிட்டது. கேட்க ஆளில்லை என்றவுடன் புற்றீசல் மாதிரிக் கிளம்பிப் பலரும் கடைத்தெருவுக்கு வந்து கைக்கு அகப்பட்டதை எடுத்துக்கொண்டு பிடித்தனர் ஓட்டம். பகற் கொள்ளை மாதிரி நடந்தது. காவல் துறை சுதாரிப்பதற்குள் 400 கடைகள் சூறையாடப்பட்டன.

விக்கிபீடியாவில் 'இலண்டன் ரியட்ஸ் 2011' என்று கேட்டுப்பாருங்கள். ‌  இணைப்புக்களுடன் பல தகவல்களும் கிடைக்கும்.

'டயம்ஸ்' இதழ் கொடுத்த செய்திகள் அபாரமாக‌ இருந்தன. கலவரத்தின் போது மனதாபிமான‌த்துடன் நடந்து கொண்ட 10 பேரைப் பற்றி தனிச் செய்தி கொடுத்தது டயம்ஸ்.அதில் முதல் இடம்  ஆப்கானிஸ்தான் பெரியவர் ஒருவருக்கு!அவருடைய மகனை கலவரத்தைத் தூண்டியவர்கள் 80 மைல் வேகத்தில் காரில் வேகமாக வந்து மோதித் தள்ளிக் கொன்று விட்டனர். அவர் உறவினர்களும் நண்பர்களும் பழி வாங்கத் துடித்துக் கொண்டு கிளம்பிய போது அந்தப் பெரியவர் அவர்களைத் தடுத்து "ஓர் உயிர் போனதற்கு 100 உயிரைக் கொல்ல நினைக்காதீர்கள். இந்தத் துக்கம் என் ஒருவனோடு போகட்டும். இன்னும் 100 முதியவர்களை துக்கப்படச் செய்ய வேண்டாம்"என்று சாந்தப் படுத்தினாராம்.

ஒரு பெண்  தொலைக் காட்சிப் பெட்டி ஒன்றைக் கவர்ந்து சென்றுவிட்டாள். ஆனால் இரவு தூக்கம் வராமல் மனசாட்சி உறுத்தி உள்ளது.மறுநாள் காலையில் காவல் நிலையத்திற்கு வந்து பெட்டியை ஒப்படைத்து வருத்தம் தெரிவித்து உள்ளாள்."நான் சமூகசேவகியாக நினைத்து அதற்கான படிப்பைப் படித்து வருகிறேன். ஆனால் நானே சபலத்துக்கு ஆளாகி இப்படி செய்து விட்டேனே என்று என் மனசாட்சி குத்துகிறது. எனவே தவறுக்குப் பிராயச்சித்தமாக தண்டனை கிடைத்தாலும் பரவாயில்லை என்று உண்மையை ஒப்புக்கொண்டு விட்டேன்." என்றாளாம் அப்பெண்!

கலவர‌த்திற்கான காரணங்கள் பல சொல்ல படுகின்றன.அதில் என் மனதைத் துளைப்பது 'பல இனத்தவர் கொண்ட சமூக அமைப்பு'!இந்தக் கருத்து என்ன சொல்ல நினைக்கிறது? ஆங்கிலேயர் என்ற வெள்ளையினம் மட்டுமே இங்கே வாழ வேண்டும் என்கிறதா? அப்படியானால் இங்கிலாந்து காலனியாக்கிப் பிடித்து வைத்து இருந்த நாடுகளில் இருந்து கடந்து 100 ஆண்டுகளுக்கு மேலாக இலண்டனில் குடியேறி இதையே தன் தாய் நாடாக நினைத்து வாழும் மக்கள் எல்லாம் என்ன செய்ய வேண்டும்? இங்கேயே பிறந்து வளர்ந்த வெள்ளயர் அல்லாத மக்களெல்லாம் வெளியேற வேண்டுமா?

இது பற்றிப் பல சொல்லலாம்.பலரும் ஊடகங்கள் மூலம் அறிந்து இருப்பீர்கள் என்பதால் இத்தோடு இதை முடித்துக் கொள்கிறேன்.

2
இங்கிலாந்தில் 6 இளைஞர்களுக்கு ஒருவர் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் விழித்துக்கொண்டு நிற்கிறார்களாம்.அவர்கள் எல்லாம் 16 வயது முதல் 24 வயதுக்குள் இருப்பவர்கள். அரசாங்கத்திடமிருந்து  வேலை யற்றோருக்கான மானியத்தைப் பெறுபவர்கள். No Employment Education or Training (NEET)  என்ற வகையில் வருகிறார்கள். இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் கலவர‌த்திற்கு, அல்லவா? சோம்பலுற் றவனின்  மனம் சைத்தான் குடிகொள்ளும் இடமல்லவா?
==============================================================
--------------------------------------------------------------------------------------------
3.
ரெடிங் என்ற இடத்தில் தமிழர்களுக்கான ஒரு சந்திப்பு நடந்தது.பெரும்பாலும் இந்த சந்திப்புக்களில் நமது உணவு வகைக்கான கையேந்திபவன் கடைகள் நிறைய வருகின்றன.'சென்னை தோசா' மிகவும் ஒரு பிரபலமான ஒரு தோசைக் கடை. இந்த சந்திப்பில் தமிழ்க் குடும்பத்தினர் வீட்டுச் சமையல் செய்து அசத்தினர். வீட்டில் செய்த இனிப்புக்கள் போளி, அதிரசம் என்று பலவும் கிடைத்தன‌.விற்பனையில் கிடைக்கும் லாபம் நற்செயல்களுக்குப் பயன்படுத்தப்படும்.

அதிகமாக யாழ் தமிழ‌ர்களே வந்திருந்தனர். அவர்களிடம் நிறையப் பேசினேன். இன்னமும் அவர்களுடைய ஈழக்கனவு கலையவில்லை.இந்திய அரசும், முந்தைய கலைஞர் ஆட்சியும் யாழ் தமிழர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று நான் தான் வேகமாகச் சொன்னேன்.

"நாங்கள் இப்போது உள்ள நிலைமையில் யாரையும் விமர்சிக்கக் கூடாது.இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுடைய ஆதரவையும் கட்சி பேதமின்றி எப்படிப் பெறுவது என்பதே இனி நாங்கள் சிந்திக்க வேண்டியது” என்றார்கள். இந்திய மக்களின் ஆதரவு குறைந்ததற்கு ராஜீவ் காந்தியைக் கொன்றது தான் காரணம்; அது ஒரு வரலாற்றுப் பிழை என்பதை ஒப்புக்கொண்டார்கள்.

நாங்கள் பேசிக்கொண்டு இருந்தபோது சூடான் நாடு பிரிந்து தெற்கு சூடான் உருவாகிவிட்ட செய்தி கிடைத்தது. சூடானிலும் இலங்கையைப்போல இன வேறுபாட்டால் ஏற்பட்ட குழப்பங்களில் தெற்கு சூடானியர் பலரும் கொல்லப்பட்டனர்.அவர்களுக்குச் சுதந்திரம் கிடைத்தது போலத் தங்களுக்கும் கிடைக்கக் கூடாதா? என்ற ஏக்கம் ஈழத்தமிழர்கள் குரலில் ஒலித்தது. "தெற்கு சூடானைப் போல ஈழமும் ஒரு நாள் எங்களுக்குக் கிடைக்கும்! ஓம்(ஆம்) தானே?!"என்றனர். நானும் 'ஓம் ஓம்' என்று ஆமோதித்தேன்!

அடுத்து என்னை சந்தித்து உரையாடியவர்  கம்போடியாவில் பிறந்து வளர்ந்து அமெரிக்கப் பிரஜை ஆகிய ஒருவர். அவர் பெயரை என்னால் மனதில் இருத்திக்கொள்ள முடியவில்லை.கம்போடியர் என்று ஆவர் கூறியவுடன் எனக்குத் தெரிந்த வரலாற்றுத் தகவல்களை அவிழ்த்து விட்டேன். இந்தியப் புராணங்களில் காம்போஜம் என்று குறிப்பிடப்படுவது கம்போடியாதான் என்று கூறினேன். அந்த நண்பருக்கு 'ஜ' சொல்ல வரவில்லை. அதுவும் வாயில் மசால் தோசையினை வைத்துச் சுவைத்துக் கொண்டு காம்போஜத்தை பலவகையாக உச்சரித்தார்.

"எங்கள் சூரிய வர்மன் 12ம் நூற்றாண்டிலேயே காம்போஜத்தை ஆண்டிருக்கிறார். உலகிலேயே மிகப்பெரிய கோவில் வளாகம் உள்ள அன்க்கோர்வாட் கோவில் இந்திய நாகரீகம், கலாச்சாரம் எவ்வாறு உலகளாவி இருந்தது என்பதற்கு எடுத்துக்காட்டு" என்று கூறினேன். பொறுமையுடன் கேட்டுக்கொண்டார் என் (கம்போடிய) அமெரிக்க‌ நண்பர்.

கரோக்கி எனப்படும் ஓர் இசை அமைப்பில் பின்னணி இசை மட்டும் ஒலிக்கிறது. பாடலை நாம் பாட வேண்டும். பாடப்படும் ஒவ்வொரு பாடலுக்கும் தங்களுடைய‌ அறக்கட்டளைக்கு இரண்டு பவுண்டு கிடைக்கும் என்றும் எனவே பாட வாருங்கள் என்று ஒலிபெருக்கியில் அழைத்துக்கொண்டே இருந்தனர்.பலரும் பாடி மகிழ்வித்தனர். எல்லாம் சினிமாப்பாட்டுக்கள் தான். 'வாடா மாப்பிளே வாழப்பழத் தோப்பிலே...','டாடி மம்மி வீட்டில் இல்லை தடைபோட யாரும் இல்லை...'போன்ற பாடல்களுக்கு பாடலுடன் ஆடலும் சேர்ந்து ஒரே அமர்களம்தான் போங்கள்.

பெரியவர்களுக்கான கிரிக்கெட் போட்டி, சிறியவர்களுக்கான் கிரிக்கெட் போட்டி, ஓட்டபந்தயம், டென்னிகாய்ட், குட்டீசுக்கு உருளைக்கிழங்கு ஓட்டப் போட்டி என்று அமர்களப்பட்டது.ஒருபக்கம் பெண்கள் மருதாணி இடுவது,கோலம் போடுவது என்று அசத்தினர். சோளக்கதிரை தணலில் வாட்டி அளித்தனர். அதற்கு நல்ல வரவேற்பு.

என்னதான் சொன்னாலும் மசால் தோசை, பஜ்ஜி போண்டா ஸ்டால்களில்தான் அதிகக்கூட்டம் அலைமோதியது.

அங்குள்ள மருத்துவமனைக்கு குழந்தைகள் வார்டு வளர்ச்சிக்கு 500 பவுண்டு தானமாகக் கொடுக்கப்ப‌ட்டது.அந்த நகர மேயர் ஒரு பெண்மணி தன் கணவரோடு வந்து இருந்து காசோலையைப் பெற்றுக்கொண்டு தவறாமல் மசால் தோசையைச் சாப்பிட்டுவிட்டுப் போனார்.

(இன்னும் வரும்)

வாழ்க வள்முடன்!
ஆக்கியோன்:கே. முத்துராமகிருஷ்ணன்,(லால்குடி)
முகாம்: இலண்டன் மாநகரம்
=============================================================
கம்போடியாவில் பிறந்து வளர்ந்து அமெரிக்கப் பிரஜை ஆன 
மனிதருடன் உரையாடியபோது எடுத்த படம்!
------------------------------------------------------------------------------------------

வாழ்க வளமுடன்!

26.8.11

தூய அன்பால் திருந்திய திருடர்கள்!

-----------------------------------------------------------------------------------------------
தூய அன்பால் திருந்திய திருடர்கள்!

பக்தி மலர்

தூய அன்னை ஸ்ரீசாரதாமணிதேவியார் அவர்கள், 
ஸ்ரீ ராமகிருஷ்ணருக்குத் தாயாக, துணவியாக,தோழியாக,
சிஷ்யையாக இன்னும் பல வடிவங்களில் அவருடன் இணைந்து
ஆன்மீகத் தொண்டு ஆற்றினார்.

ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடம்,மிஷன் ஆகியவற்றைத் துவங்கவில்லை. ஆனால் தன் ஆன்ம ஒளி இன்னும் ஓர் ஆயிரம் வருடங்களுக்காவது உலகெங்கும் பரவி  இருக்கும் என்பதை  உணர்ந்து கூறினார். அதை வளர்த்தெடுக்கும் பணியினைத் தூய அன்னையிடமே ஒப்படைத்துச் சென்றார். தனக்கு ஸ்ரீகுருதேவரால் அளிக்க‌ப்பட்ட புனிதக் கடமையை செவ்வனே ஆற்றி, மடம் மிஷன் ஆகியவை நன்கு வேர் ஊன்றிய பின்னரே தூய அன்னை இவ்வுலக வாழ்வினை விட்டு அகன்றார்.

ஸ்ரீதூய அன்னையார் அன்பே உருவானவர். மிகவும் சிக்கலான சூழலிலும் அன்பு வெல்லும் என்பதை அன்னை நடைமுறைப்படுத்திக் காட்டியுள்ளார்.

ஸ்ரீ ராமகிருஷ்ணர் தங்கியிருந்த தட்சிணேஸ்வரக்கோயிலுக்கும் அன்னையின் தாய்வீடான ஜெயராம்பாடிக்கும் சுமார் 35 மைல்கள் இருக்கும். அந்த தூரத்தை ஓர், இருநாட்கள் நடந்தே அன்னை பலமுறை  அடைந்துள்ளார் தன் கிராமத்தைப் பலமுறை நடைப்பயணத்திலேயே அடைந்துள்ளார். இந்த இரு இடங்களுக்கும் இடையில் பல பகுதிகள் காடுகள் நிறைந்தது. கொடிய மிருகங்கள், விஷ ஜந்துக்கள் நிறைந்த அக்காட்டுப் பகுதியில் வழிப்பறிக் கொள்ளைக்காரர்களும் உண்டு.

ஒரு முறை தூய அன்னையார் இந்தக் காட்டுப்பகுதியில் அந்தி சாய்ந்துவிட்ட நேரத்தில் தனியாக நடந்துவர நேர்ந்துவிட்டது. தூய அன்னையார் ஜகன் மாதாவின் மந்திரத்தை மனதுக்குள் ஜெபித்துக் கொண்டே விரைவாக நடந்து வந்து கொண்டிருக்கிறார். அப்போது ஓர் இடிக்குரல் கேட்டது.

"யாரது? மேலே நகராமல் அங்கேயே நில்!"

மரக்கிளையில் இருந்து ஓர் நெடிய உருவம் பயங்கரத் தோற்றத்துடன் தூய அன்னையாரின் முன் குதித்தது.முகம் முழுதும் நிரம்பிய மீசை. சிவந்த உருட்டுக் கண்கள். வலிமையான தோள்கள்.கையில் ஆளை ஒரே வீச்சில் காலி செய்யக்கூடிய கூர்மையான ஆயுதம்.

திடீரென இப்படி பய‌ங்கரமாக ஓர் ஆள் வந்து தன் முன் குதித்ததால் அன்னை அதிர்ச்சி அடைந்தார்கள். ஆனால் அச்சம் கொள்ளவில்லை. தன்னுடன் காளி அன்னையே இருப்பதால் தன‌க்கு எந்த ஆபத்தும் இல்லை என்ற திட நம்பிக் கையுடன் அசையாமல் நின்றார்கள்.

அப்போது  மறைவிலிருந்து ஒரு பெண்ணும் வெளியில் வந்து இருவருமாக‌ அன்னையைச் சோதனை இடத் துவங்கினார்கள்.

"எவ்வளவு பணம் வைத்து இருக்கிறாய்? என்ன நகை போட்டு இருக்கிறாய்? எல்லாவற்றையும் எடுத்துக் கொடு. உயிருடன் விட்டு விடுகிறோம். கொடுக்க மறுத்தால் பிண‌மாவாய். ஜாக்கிரதை!" என்று மிரட்டியது ஆண்குரல்.கூட இருந்த பெண் அந்த கொள்ளயனின் மனைவியாக இருக்க வேண்டும். அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்தார் தூய அன்னையார். அந்த கொள்ளைக் காரியின் முகத்தில் ஒரு நல்ல தன்மை இருப்பதைத் தன் உள்ளுணர்வால் அறிந்து கொண்டார்.

அந்த இரு கொடூரர்களையும் பார்த்து "அம்மா!அப்பா!"  என்று உண்மையான பாசத்துடன் அழைத்தார் தூய அன்னையார்.

இதனை சற்றும் எதிர்பார்காத அந்த கொள்ளை தம்பதிகள் மெழுகாக உருகிவிட்டனர். இதுவரை அவர்களை யாரும் 'அம்மா அப்பா' என்று அழைத்ததில்லை. ஏனெனில் அவர்களுக்கு மழலைச் செல்வம் இல்லை. இப்படி அன்னை தங்களை பாசத்துடன் அழைத்ததால் தங்கள் கொடூரச் செயலை மறந்து உணர்ச்சி வயப்பட்டுவிட்டனர்.

குழைந்த குரலில்,"நீ யார் மகளே?எங்கே போகிறாய்? ஏன் இந்த இருட்டு நேரத்தில் தனியாக வந்தாய்? ஆப‌த்து இருக்கும் என்று தெரியாதா?" என்று கனிந்து கேட்டனர்.

"என் பிரியமான அன்னையே, தந்தையே! நான் உங்கள் அன்பு மகள். என் கணவர், உங்கள் மாப்பிள்ளை தட்சிணேஸ்வரக் கோயிலில் பூஜாரியாக இருக்கிறார்.அவரைச் சென்று அடைய போய்க் கொண்டிருக்கிறேன். கால் வலியால் வழியில் சிறிது அமர்ந்து விட்டேன் அதனா‌ல் நான் திட்டமிட்டபடி இருட்டு வருமுன் இந்தக் காட்டை கடக்க முடியவில்லை. என்னிடம் உங்களுக்கு அளிக்கப் பணம் ஒன்றும் இல்லை. வழியில் சாப்பிடக் கொண்டு வந்த தின்பண்டங்கள் கூடத் தீர்ந்துவிட்டன‌. ஒருமுறை தட்சிணேஸ் வரத்திற்கு வந்தால் உங்களுக்குப் பிடித்த உணவு செய்து போடுகிறேன். உங்கள் மாப்பிள்ளையை நீங்கள் பார்க்க வேண்டாமா? அவசியம் ஒரு முறை எங்கள் இல்லத்திற்கு வாருங்கள் என் அப்பா, அம்மாவே1" என்றார் தூய அன்னையார்.

இதைக் கேட்ட அந்த காட்டுவாசி தம்பதியார் கண்ணீர் உகுக்க ஆரம்பித்து விட்டனர். "எங்க‌ளுக்கு அம்மா, அப்பா என்று அழைக்கக் குழந்தைகள் இல்லை. முதல் முறையாக எஙளை அம்மா, அப்பா என்று அழைத்த உன்னையே எங்கள் அன்பு மகளாக ஏற்றுக் கொண்டு விட்டோம். எங்க‌ள் குடிசைக்கு வா மகளே!"

அன்னையை வற்புறுத்தி அழைத்துச்சென்று இரவு உணவு அளித்து, இரவு தங்க வைத்து, மறுநாள் காலையில் வழிக்கு உணவு கட்டிக் கொடுத்து காடு தாண்டி கொண்டு வந்துவிட்டனர் அந்த 'பொல்லாத' கொள்ளைத் தம்பதியினர்.

"என்னுடன் நீங்களும் வாருங்கள் உங்கள் மருமகனைக் காண !" தூய அன்னை தன் காட்டுவாசிப் பெற்றோரை அழைத்தார்.

"அவசியம் பின்னர் வருகிறோம்.இப்போது வந்தால் எங்களைக் காவல்காரர்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள். நீ  இனி என்றுமே எங்க‌ள் மகள்தான். கூடிய சீக்கிரம் சீருடன் வருகிறோம் . இப்போது போய் வா மகளே" என்று பிரியாவிடை கொடுத்தனர் தூய அன்னையின் புதிய பெற்றோர்கள்.

அதன் பின்னர் விரைவிலேயே ஒருநாள் பல பலகாரங்களையும் செய்து எடுத்துக் கொண்டு, புதிய ஆடைகளையும் கொண்டு கொடுத்து தூய‌ அன்னையையும், ஸ்ரீ பரமஹம்சரையும் கண்டனர் அந்தப் படிக்காத பாமரப் பெற்றோர். அங்கே இருந்த சூழலால், ஆன்மீகத்தால், தங்கள் புதிய உறவால், தூய அன்னையின் அன்பால் தங்களுடைய கொடூரத் தன்மைகளை விட்டு விட்டு நல் வாழ்வு வாழ்ந்தனர் அந்த காட்டுவாசிப் பெற்றோர்.

அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாள்?

ஆக்கம்: வகுப்பறையின் மூத்த மாணாவர்களில் ஒருவரான 
திருவாளர். கே.முத்துராமகிருஷ்ணன்(லால்குடி)
முகாம் இலண்டன்



வாழ்க வளமுடன்!

25.8.11

Astrology என்ன (டா) செய்யும் விதி?

-------------------------------------------------------------------------------------------
Astrology என்ன (டா) செய்யும் விதி?

"Everything is 'Prewritten' and nothing can be rewritten in our life. So live the best and leave the rest to The Almighty"  என்று நான் அடிக்கடி சொல்வேன்.

“எல்லாமே விதிக்கப்பட்டது. விதிக்கப்பட்டபடிதான் எதுவுமே நடக்கும் எனும்போது, நீ கவலைப் பட்டு என்ன ஆகபோகிறது. ஆகவே கவலையை விட்டொழி” என்பார் கவியரர் கண்ணதாசன்

விதியைப் பற்றி அதிரடியாக, விளக்கமாக, எளிமையாக, இரத்தினச் சுருக்கமாக இரண்டு இரண்டு வரிகளில் எழுதிவைத்து விட்டுப்போனவர் திருவள்ளுவர். திருக்குறளின் 38ஆவது அதிகாரத்தில் பத்துக் குறள்கள் உள்ளன. படித்துப் பாருங்கள். மனம் தெளிவடையும்

“என்ன(டா) செய்யும் விதி?”
“விதி என்று ஒன்று உண்டா?”

என்று கேட்பவர்களுக்கெல்லாம், நான் வள்லுவரின் இந்தக் குறளைத்தான் அடையாளம் காட்டுவேன்:

  “ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
     சூழினுந் தான்முந் நுறும்”


இந்தக் குறளுக்கு திரு மு.வரதராசனார் அவர்கள் எழுதிய விளக்க உரை

ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றொரு வழியை ஆராய்ந்தாலும் அங்கும் அது தானே முன் வந்து நிற்கும்.

பாதிரியார் ஜி.யு.போப் அவர்கள், இந்தக் குறளை மொழிமாற்றம் செய்யும்போது இப்படி எழுதினார்:

Nothing is stronger than destiny.If you try to forfeit destiny, It won't allow and it will come in your way again and again
-----------------------------------------------------------------------------
“சரி, வாத்தி (யாரே) அப்போது மனித முயற்சி என்று ஒன்றும் கிடையாதா? முயற்சிகளுக்குப் பலனே இருக்காதா?”

  “நீ மாட்டை வைத்துத்தான் பிழைப்பு நடத்த வேண்டும் என்று 
விதிக்கப் பட்டிருந்தால், மாட்டை வைத்துத்தான் பிழைப்பு 
நடத்துவாய். ஆனால்  மாட்டின் எண்ணிக்கையை இறைவன் 
நிர்ணயிப்பது இல்லை. அது நான்கு மாடுகளா அல்லது நாற்பது 
மாடுகளா அல்லது நானூறு மாடுகளா என்பது உன் கையில்தான் இருக்கிறது.  அங்கேதான் நீ சொல்லும் அந்த முயற்சி வேலை செய்யும்!!!!!”
-----------------------------------------------------------------------------
இன்றையப் பாடம் பாடல் வடிவில் உள்ளது. இரவல் வாங்கியது. எழுதியவர் ஒரு மாபெரும் கவிஞர். பாடலின்  எழுத்தாக்கத்தைப் பார்த்தாலே எழுதிய வரைக் கண்டு பிடித்து விடலாம். முயண்ரு பாருங்கள். முடியாதவர்கள்

ஸ்க்ரோல் டவுன் செய்து பாருங்கள். எழுதியவரின் படத்தைக் கொடுத்துள்ளேன்.

அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------------------------------
ஆறிலே பிள்ளைகள் ஆடலும் பாடலும்
    ஆனந்தக் கூத்துமாய் வாழும்
ஆறிரண் டானபின் பள்ளியும் பாடமும்
    ஆரவா ரங்களும் சூழும்
ஏறுமோர் வயதுதான் இருபதை எட்டினால்
    எண்ணிலாக் காதலில் ஆழும்
தாறுமா றானதோர் வாழ்க்கை வாழ்ந்தபின்
    தன்நினை வெண்ணியே வாடும்!

காலமாற் றங்களால் கணிதமாற் றங்களும்
    கவனமாற் றங்களும் நேரும்
கோலமாற் றம்வரும் குணத்தில்மாற் றம்வரும்
    கொள்கைமாற் றம்வந்து சேரும்
ஞாலமே பெரிதாய் சிறியதாய் மோசமாய்
    நல்லதாய்க் கெட்டதாய்த் தோன்றும்
வாலிலாக் குரங்குபோல் வாழ்ந்தநாள் வாழ்ந்தபின்
    வாழ்ந்ததை எண்ணியே வாடும்!

விதையிலே சிறியதாய் வளர்ந்ததும் பெரியதாய்
    விண்ணுயர் மரங்களைக் கண்டோம்
கதையிலே மரங்களின் வாழ்விலும் பல்வகை
    கவலைகள் உண்டெனக் கண்டோம்
முதலிலே பசுமையாய் முடிவிலே பட்டதாய்
    முழுமோர் விறகுமாய் மாறி
சிதையிலே அமர்ந்திடும் மரங்களும் மனிதனும்
    தேவனின் லீலைகள் அலவோ!

எண்ணுவோம் தேடுவோம் எண்ணுதல் தேடுதல்
    என்றும்நம் உரிமைகள் எனவே
நண்ணுமோர் நன்மைகள் தீமைகள் யாவையும்
    நாயகன் செய்கைவே றில்லையே
உண்ணுதல் ஈஸ்வரன் உறங்குதல் ஈஸ்வரன்
    உயர்வதும் தாழ்வதும் அவனே
விண்ணுயர் மாளிகைச் செல்வனும் வாழ்க்கையில்
    வேறென்ன செய்வதோ இதிலே!

தோன்றுவான் மானிடன் தோற்றிலான் நாயகன்
    தொடர்புண்டாம் இவைஇவை இடையே
ஊன்றுகோல் மானிடம் உள்விழும் பள்ளமே
    உயர்ந்ததோர் நாயகன் கதையே

சான்றுகேட் பார்க்கெலாம் ஒன்றைநான் காட்டுவேன்
    சாவினை வென்றவர் இலையே

ஈன்றவள் ஒருத்திபோல் எடுப்பவன் ஒருவனாம்
    இதன்பெயர் ஆண்டவன் விதியே!


பாடலை எழுதியவரின் புகைப்படம் கீழே உள்ளது
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

24.8.11

Astrology எந்தப்பிள்ளை நல்லபிள்ளை?

--------------------------------------------------------------
Astrology எந்தப்பிள்ளை நல்லபிள்ளை?

ஒரு தாயிடம் சென்று நேர்காணல் செய்து, உங்கள் பிள்ளைகளில் எந்தப் பிள்ளை நல்லபிள்ளை என்றால், அவள் தன்னுடைய எந்தப் பிள்ளையையும் விட்டுக் கொடுக்க மாட்டாள். “எல்லாப் பிள்ளைகளுமே நல்லபிள்ளைகள்” என்றுதான் சொல்லுவாள். அதுதான் தாய் உள்ளம்.

தாயன்பிற்கு நிகரானது உலகில் எதுவும் இல்லை!

ஆனால், அதே தாயின் பிள்ளைகளை நேர்காணல் செய்து, “உங்கள் தாய்க்கு எந்தப் பிள்ளையின் மீது அதிகப் பாசம்” என்று கேட்டால், ஒவ்வொருவரும் ஒரு கதை சொல்வார்கள்

அதைக் கவியரசர் கண்ணதாசன் ஒரு பாட்டில் அற்புதமாக விளக்கினார்

  “படிச்சிருந்தும் தந்தை தாயை மதிக்க மறந்தான் - ஒருவன்
      படுக்கையிலே முள்ளை வச்சி பார்த்து மகிழ்ந்தான்
   பிடிச்ச முயல் அத்தனைக்கும் மூன்று காலென்றான் - ஒருவன்
      பெண்டாட்டியின் கால்களுக்கு காவல் இருந்தான்....... காவல் இருந்தான்!


சொன்னதை ‘நச்’ சென்று சொன்னார் அதுதான் சிறப்பு

தாயை முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டு, மனைவியின் கண் வீச்சில் கிறங்கி, அவளுடைய காலடியில் கிடக்கும் ஆசாமிகள்தான் இன்று அதிகம்!

அதைப் பற்றி இன்னொரு நாள் விரிவாக எழுதுகிறேன். பொறுத்திருங்கள். இப்போது பாடத்தைப் பார்ப்போம்
------------------------------------------------------------------------------
ஜோதிடத்தை நன்கு அறிந்தவனை, எந்தக் கிரகம் நல்ல கிரகம் (எந்தக் கிரகம் மிகவும் அத்தியாவசியமானது - எந்தக் கிரகம் நமக்கு நன்மை செய்யத் தேவையானது) என்று கேட்டால்...... நன்றாகக் கவனிக்கவும்...... நன்கு அறிந்தவனைக் கேட்டால், என்ன சொல்வான்?

“எல்லாக் கிரகங்களுமே நல்ல கிரகங்கள்” என்றுதான் சொல்வான்

உண்மையும் அதுதான்.

கர்மவினைப்படி ஜாதகனுக்கு என்ன கொடுக்க வேண்டுமோ, அதைக் கிரகங்கள் உரிய நேரத்தில் தவறாமல் கொடுத்துவிடும்.

நன்மை, தீமை இரண்டும் கிரகங்களுக்கு ஒன்றுதான். அதில் அவைகளுக்குப் பேதம் இல்லை.

நன்மை, தீமை இரண்டையும் ஒன்றாக நினைத்தால், எதிர்கொண்டால் நமக்கும் எந்த வாதமும் இல்லை! வழக்கும் இல்லை!
------------------------------------------------------------------------------
சராசரி மனிதன் கேட்பான்:

“நன்மையை எப்போது வேண்டுமென்றாலும் கொடுக்கட்டும். தீமைகளை எப்போது கொடுப்பார்கள்? அதை மட்டும் சொல்லுங்கள்!”

“தங்களுடைய தசாபுத்திகளில் கொடுப்பார்கள். கோச்சாரத்தில் (கோள் சாரத்தில் That is in their transit) கொடுப்பார்கள். அதுவும் குறிப்பிட்ட நிலைப்பாடுகளில் அதிகமாகக் கொடுப்பார்கள். உங்கள் மொழியில் சொன்னால் தட்டிவிட்டுப் போவார்கள்.கவிழ்த்துவிட்டுப் போவார்கள். சிலரை உள்ளே பிடித்து வைத்துவிட்டும் போவார்கள்”

“அதை எப்படித் தெரிந்து கொள்வது?”

“அதற்கான பாடல் கீழே உள்ளது. படித்துப்பாருங்கள்”
-------------------------------------------------------------------------------
   “கேளப்பா குருமூன்றில் கலைதானெட்டு
       கேடு செய்யும் சனி ஜென்மம் புந்திநாலில்
    சீளப்பா சேயேழு செங்கதிரோன் ஐந்தும்
       சீறிவரும் கரும்பாம்பு நிதியில்தோன்ற
    ஆளப்பா அசுரகுரு ஆறிலேற
       அப்பனே திசையினுடை வலுவைப்பாரு
    மாளப்பா குற்றம்வரும் கோச்சாரத்தாலே
       குழவிக்கு திரியாணங் கூர்ந்து சொல்லே!”


சந்திரன் உங்கள் ஜாதகத்தில் நிற்கும் ராசியை வைத்துக் கோள்சாரத்தைக் கணக்கிட வேண்டும். அதை மனதில் கொள்க!

குரு தனது சுற்றில் மூன்றாம் வீட்டிலும்
கலை (சந்திரன்) எட்டாம் வீட்டிலும்
சனி ஒன்றாம் வீட்டிலும்
புந்தி (புதன்) நான்காம் வீட்டிலும்
சேய் (செவ்வாய்) ஏழாம் வீட்டிலும்
செங்கதிரோன் (சூரியன்) ஐந்தாம் வீட்டிலும்
கரும்பாம்பு (ராகு) இரண்டாம் வீட்டிலும்
அசுரகுரு (சுக்கிரன்) ஆறாம் வீட்டிலும்

அதிகமான கேடுகளை (துன்பங்களைக்) கொடுப்பார்கள்
-----------------------------------------------------------------------------------
“சரி, அவர்களை எப்படி follow செய்வது? எந்தந்த வீட்டில் இன்று இருக்கிறார்கள். எப்போது இடம் மாறுவார்கள் என்று எப்படித் தெரிந்து கொள்வது?”

அது வெரி சிம்ப்பிள். அதற்கு ஒரு வழி இருக்கிறது. இங்கே அதைச் சொன்னால், அதுவும் சேர்ந்து திருட்டுப் போகும். வகுப்பறையின் சுவர்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ஆசாமிகள் திருடிக் கொண்டுபோய்விடுவார்கள். ஆகவே மின்னஞ்சல் அனுப்புங்கள். பதில் கிடைக்கும்

அன்புடன்
வாத்தியார்
________________________________________
வாழ்க வளமுடன்!

23.8.11

Astrology: சோகத்தில் முடியும் ஜாதகங்கள்!

--------------------------------------------------------------------------------------
Astrology: சோகத்தில் முடியும் ஜாதகங்கள்!

காலசர்ப்ப தோஷம் என்பது என்னவென்று உங்கள் அனைவருக்கும் தெரியும். பாடம் நடத்தியுள்ளேன். ராகு & கேதுவிற்குள் அத்தனை கிரகங்களும் அடங்கிவிடும் நிலைமை அது. அதன் கால அளவு பற்றி  இருவேறான கருத்துக்கள் உள்ளன.

சிலர் 30 அல்லது 33 வயதுவரை காலசர்ப்ப தோஷம் இருக்கும். அதற்குப்பிறகு அந்த தோஷமே யோகமாக மாறிவிடும் என்பார்கள்.

வேறு சிலர் கால சர்ப்ப தோஷம் லக்கினத்தில் எத்தனை பரல்கள் உள்ளனவோ அத்தனை ஆண்டுகள் நீடிக்கும்  என்பார்கள்.

ஆனால் கால சர்ப்ப தோஷத்தில் இரண்டு வகைகள் உள்ளன.

1. காலமிரித யோகம்: ராகு முன்னால் நின்று கொடி பிடிக்க மற்ற கிரகங்கள் அதன் பின்புறம் நின்று வரவும், கேது  கடைசியாக வரும் அமைப்பு. இது கடிகாரச் சுற்றில் ஜாதகத்தில் இருக்கும். இது நன்மை பயக்கக்கூடிய அமைப்பு.

2. விலோமா யோகம்: கேது முன்னால் நின்று கொடி பிடிக்க மற்ற கிரகங்கள் அதன் பின்புறம் நின்று வரவும், ராகு  கடைசியாக வரும் அமைப்பு. இதுவும் கடிகாரச் சுற்றில் ஜாதகத்தில் இருக்கும். இது தீமை பயக்கக்கூடிய அமைப்பு.

There are two types of Kala Sarpa Yogas. One is when all of the seven grahas that are caught in the axis are moving toward the mouth of the serpent, Rahu. This is called kalamrita yoga and is considered the main formation. The other is when all of the planets are moving towards the tail Ketu and is known as viloma.

அது சம்பந்தமாக இப்போது ஒரு ஜாதகத்தை அலசுவோம்.




-----------------------------------------------------------------------------------
மேலே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.

இது ஒரு பெண்மணியின் ஜாதகம். திருமணவாழ்வு, அதிருப்தியுடன் துவங்கிக் கடைசியில் சோகத்தில் முடிந்தது. ஆமாம். திருமணமான சில மாதங்களிலேயே கணவர் இறந்துவிட்டார். கணவர் உடல் நலமில்லாதவர் என்பது திருமணத்திற்குப் பிறகுதான் அம்மணிக்குத் தெரியவந்தது.

அதற்குப் பிறகு என்ன செய்வது?

மனதைத் தேற்றிக்கொண்டு அம்மணி வாழ்ந்தார். சமூக சேவைகளைச் செய்து தன் வாழ் நாட்களைப் பயன் உள்ளதாக்கிக் கொண்டார்.

என்ன காரணம்?

ஜாதகத்தைப் பாருங்கள். கேது கொடிபிடித்துக் கொண்டு செல்கிறது. மற்ற கிரகங்கள் அனைத்தும் அதன் பின்புறம் உள்ளன. ஏழுக்குரிய சுக்கிரன் ஏழாம் இடத்திற்குப் பன்னிரெண்டில் விரையத்தில் அமர்ந்தார். உடன் ஜோடி சேர்ந்த எட்டாம் அதிபதி புதன் கணவரைக் காலி செய்து விரையத்தைப் பூர்த்தி யாக்கினார். 2ஆம் அதிபதி குரு நீசமானதால் குடும்ப வாழ்க்கையைக் கொடுக்கவில்லை.

பத்தாம் அதிபதி சூரியன் அந்த வீட்டிற்குப் பத்தில். அத்துடன் பாக்கியாதிபதி சந்திரன் அந்த வீட்டிற்கு எட்டில் அமர்ந்து ஜாதகியின் பாக்கியங்களைக் கெடுத்தாலும், பத்தாம் இடத்தைத் தன் பார்வையில் வைத்து, ஜாதகியைச் சமூக சேவைகளில் ஈடுபட வைத்தார்.

ஆகவே காலசர்ப்ப தோஷ ஜாதகர்கள், தங்கள் ஜாதகத்தில் கொடி பிடித்துச் செல்வது யார் - ராகுவா அல்லது கேதுவா என்று பார்ப்பது அவசியம்.

விளக்கம் போதுமா?

அன்புடன்
வாத்தியார்
23.8.2011
வாழ்க வளமுடன்!

22.8.11

Astrology கண்ணதாசனின் ஜாதகம்!

--------------------------------------------------------------------------------------------
Astrology கண்ணதாசனின் ஜாதகம்!

இவருக்கு அறிமுகம் தேவையில்லை.

நான் அடிக்கடி இப்படிச் சொல்வேன்: கண்ணதாசனை ஒருவன் அறிந்திருக்க வில்லை என்றால் அவன் தமிழனே அல்ல!

Gifted Poet கடவுளின் அருளைப்பெற்ற கவிஞர் அவர். சரஸ்வதி அவருடைய நாக்கில் குடியிருந்தாள். ஒரு  பாடலுக்கு சர்வசாதாரணமாக பத்து பல்லவி களை அடுத்தடுத்துச் சொல்லி,  கேட்கும் இசையமைப்பாளரையும், இயக்குனரையும் திணற அடிக்கும் வல்லமை பெற்றவர் அவர்.

அவர் ஒரு திறந்த புத்தகம். 8ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். பின்னர் பல நூல்களை சுயமாகக் கற்றுத்  தேறியவர். தன்னுடைய இளம் வயதில் பல இன்னல்களையும், துயரங்களையும், துரோகங்களையும் சந்தித்து பல  அனுபவங்களைப் பெற்றவர். அவருடைய அனுபவங்கள்தான் அவருடைய பாட்டில் எதிரொலிக்கும்.

தன்னைப் பற்றி, தான் உயிருடன் இருக்கும் போதே, நல்லது கெட்டது என்று எதையும் மறைக்காமல் உள்ளதை  உள்ளபடியே - உண்மைகளை இரண்டு பெரிய புத்தகங்களாக எழுதிவைத்துவிட்டுப் போனார்.

வனவாசம், மனவாசம் என்னும் அந்த 2 நூல்களை அவசியம் வாங்கிப் படியுங்கள். அசத்தலாக இருக்கும் அவருடைய சுய சரிதங்கள் அவை!

ஆன்மீகத்துக்கு ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ என்னும் 10 பகுதிகள் கொண்ட நூலை எழுதிவைத்தார். மத நல்லினக்கத்திற்கு, ஏசு காவியம் என்னும் நூலையும் எழுதினார்.

நூற்றுக்கணக்கான தத்துவப் பாடல்களையும், மனதிற்கு நம்பிக்கையூட்டும் பாடல்களையும் எழுதியவர் அவர்

பெருந்தன்மைகள், தர்ம சிந்தனைகள் கொண்ட கவிஞனை, கால தேவன் விட்டு வைக்கவில்லை. 54 வயதிலேயே  கூட்டிச் சென்று விட்டான். இருந்திருந்தால் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு மேலும் ஒரு ஐயாயிரம் பாடல்களை  எழுதிக்கொடுத்திருப்பார்

அவர் எழுதிய பாடல்களில் எனக்குப் பிடித்த சிறந்த வரிகள் சிலவற்றை உங்களுக்காகக் கொடுத்துள்ளேன்
--------------------------------------
1
கல்லிருக்கும் தேரைக்கெல்லாம் கருணை தந்த தெய்வம்
   கனியிருக்கும் வண்டுக்கெல்லாம் துணையிருந்த தெய்வம்

நெல்லுக்குள்ளே மணியை நெருப்பினிலே ஒளியை
   உள்ளுக்குள்ளே வைத்த தெய்வம்
   உனக்கு இல்லையா - தம்பி
   நமக்கு இல்லையா - தம்பி
   நமக்கு இல்லையா

2
பணத்தின்மீதுதான் பக்தி என்றபின் பந்த பாசங்கள் ஏனடா
   பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும்
   அண்ணன் தம்பிகள் தானடா!
   அண்ணன் தம்பிகள் தானடா!

3
ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை
   இதில் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம்  - அதில்
   பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்

நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க
   அதை நடத்த ஒருவனுண்டு கோயிலில் காண்க
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க
   எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல

4
அங்கும் இங்கும் அலைபோலே - தினம்
   ஆடிடும் மானிட வாழ்விலே
எங்கே நடக்கும் எது நடக்கும் - அது
   எங்கே முடியும் யாரறிவார்

5
வாழநினைத்தால் வாழலாம்
   வழியாயில்லை பூமியில்
ஆழக்கடலும் சோலையாகும்
   ஆசையிருந்தால் நீந்திவா!

6
அது இருந்தா இது இல்லை
   இது இருந்தா அது இல்லை
அதுவும் இதுவும் சேர்ந்திருந்தா
   அவனுக்கு இங்கே இடமில்லை!

(அதாவது மேலே போய்விடுவான்!)

7.
பார்த்தா பசுமரம்
   படுத்துவிட்டா நெடுமரம்
சேர்த்தா விறகுக்காகுமா - ஞானத்தங்கமே
   தீயிலிட்டால் கரியும் மிஞ்சுமா?

8
பருவம்வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
   காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை
மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
   சேர்ந்துவாழ்ந்த அனைவருமே சேர்ந்து போவதில்லை!

9
கால மகள் கண் திறப்பாள் சின்னையா
   நாம் கண் கலங்கி கவலைப் பட்டு என்னையா
நாலு பக்கம் வாசலுண்டு சின்னையா
   அதில் நமக்கும் ஒரு வழியில்லையா என்னையா

10
அதோ அந்த பறவை போல வாழவேண்டும்
   இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
   ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே
   கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
   காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே

இன்னும் நூற்றுக் கணக்கான வரிகள் உள்ளன. இடம் கருதி சிலவற்றை மட்டுமே கொடுத்துள்ளேன்
-----------------------------------------------------------------------
இன்று அவருடைய ஜாதகத்தை அலசுவோம்!



1. சிம்ம லக்கினக்காரர். சிம்ம லக்கினமே நாயகர்களுக்கு உரிய லக்கினம். காட்டில் சிங்கம் எப்படி நாயகனோ,  அப்படி நாட்டில் சிம்ம லக்கினக்காரர்கள் எல்லாம் நாயகர்களே! (They are the heroes)

2. லக்கினாதிபதி சூரியன் பதினொன்றில். அதாவது லாபஸ்தானத்தில். லக்கினாதிபதி லாபத்தில் அமர்ந்தால்  ஜாதகன் அதிர்ஷ்டமானவன். குறைந்த முயற்சி, அதிக பலன் அதன் பயன். ( Minimum efforts: Maximum benefits)

3. கற்பனை, கவிதைகள், எழுத்தாற்றலுக்கு உரிய இடமான இரண்டாம் வீடு, குரு பகவானின் நேரடிப்பார்வையில். அத்துடன் அந்த வீட்டு அதிபதி புதன் அந்த வீட்டிற்குப் பதினொன்றில். அதனால்தான் அவர் நாடறிந்த  கவிஞரானார்.

4. நான்கில் சனி. சிம்ம லக்கினத்திற்குக் கடும்பகைவன். படிப்பைக் கெடுத்தான். பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே விட நேர்ந்தது.

5. புதனும் சுக்கிரனும் கூட்டாகச் சேர்ந்ததால் அவர் கலைத் துறைக்குச் சென்றார். சிம்ம லக்கினத்திற்கு யோககாரகனாகிய செவ்வாயும், அவர்களுடன் சேர்ந்ததால், அந்தத்துறையில் அவருக்குப் பெரும் புகழை  அவர்கள் மூவரும் சேர்ந்து கொடுத்தார்கள்.

6. பாக்கிய ஸ்தானத்தில் (9ல்) சுபக்கிரகம் சந்திரன். ஆனால் அந்த வீட்டிற்குரிய செவ்வாய், நீசமாகி 12ல் அமர்ந்தான். அவருக்கு சில பாக்கியங்கள் கிடைத்தன. சில பாக்கியங்கள் கிடைக்கவில்லை. Mixed Results  கலவையான பலன்கள். பூரண ஆயுள் இல்லாமல் போய்விட்டதே - அது முக்கியமான பாக்கியம் இல்லையா?

7. கேது 5ஆம் வீட்டில் இருப்பதைப் பாருங்கள். கேது 5ல் இருந்தால், ஜாதகன் அரசனாக வாழ்வான். அல்லது  ஆண்டியாகி மடத்தில் சேர்ந்து விடுவான். இவர் அரசனாகவே வாழ்ந்தார். கவியரசர் என்றால் அவர் ஒருவர்தான்!

8. பதினொன்றாம் வீட்டில் ராகு இருப்பதால், சகலகலா வல்லவனாக ஜாதகன் இருப்பான். சகல அனுபவமும்  கிடைக்கும் அதீதமான பெண் சுகம் உட்பட. அவர் அப்படித்தான் வாழ்ந்து மறைந்து போனார்.

9 சூரியனும், ராகுவும் ஒன்று சேர்ந்தால், ஜாதகன் அபாரமான சுய சிந்தனைகளை உடையவனாக இருப்பான்.  சுயமாக இயங்கக்கூடியவன். சுதந்திரப் பறவையாக இருக்கக்கூடியவன். அவர் அப்படித்தான் இருந்தார்.

10. 11ல் இருக்கும் ராகு, தன் திசையில் அவரைப் புகழின் உச்சத்திற்குக் கொண்டு போனான். அவரை அரசவை  கவிஞராகவும் ஆக்கி அழகு பார்த்தான்.

11. ஐந்தில் அமர்ந்த கேது அவருக்குப் பலவிதமான மனக் கஷ்டங்களைக் கொடுத்தாலும், அவனே அவரை  ஞானம் மிகுந்தவராகவும் ஆக்கினான். அனுபவங்களால் மட்டும்தான் ஒருவர் ஞானம் பெறமுடியும். அவர்  விஷயத்தில் அது சரியாக இருந்தது. (5th House is the house of mind) கேதுதான் அவருக்கு ஞானத்தைக்  கொடுத்து, எளிமையாகவும், ஆழ்ந்த கருத்துக்களை உடையதாகவும் உடைய பல பாடல்களை எழுத வைத்தான்.

12. சூரியன் - ராகு கூட்டணி 11ல் இருந்து அரசின் சலுகைகளையும் பெற்றுத் தந்தன. அதே நேரத்தில் ஆட்சியாளர்களின் தவறுகளையும் விமர்சனம் செய்ய வைத்தன. அந்தக் கூட்டணி இரண்டையும் செய்யும்  என்பதற்கு, அவருடைய ஜாதகமே உதாரணமாகத் திகழ்கிறது.

விளக்கங்கள் போதுமா? அனைவரும் ஒரு வரி எழுதுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
22.8.2011
+++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

21.8.11

லண்டன் மாநகரத்தைப் பற்றிச் சுவையான செய்திகள்

----------------------------------------------------------------------------------------
லண்டன் மாநகரத்தைப் பற்றிச் சுவையான செய்திகள்

வாரமலர்

1

"மண்ணின் மைந்தர்கள்" கொள்கை சிறிது சிறிதாக இங்கிலாந்தில் எதிர்காலத்தில் பர‌‌வி வலுப் பெறக்கூடிய சாத்தியக் கூறுகள் இப்போதே தென் படுகின்றன. ஜான்புல் என்ற ஒருவர்  இங்கிலாந்துக் கொடியினை ஆடையாக அணிந்து, வித்தியாசமான தோற்றத்துடன் தெரு முனைகளில் தனி நபராகப் போராட்டம் நடத்துகிறார். அவர் கையில் வைத்திருக்கும் பிரச்சார அட்டையில் 'பிரித்தானியர்களின் வேலைகளைப் பாதுகாப்போம்' என்று எழுதியுள்ளது.லியோ மெகின்ஸ்ட்ரி என்ற பிரபல பத்திரிகையாளர் 'ஆங்கிலேய முதலாளிகளுக்கு நாட்டுப்பற்று வெகுவாகக் குறைந்துவிட்டது. ஏனெனில் குறைந்த சம்பளத்திற்கு வெளிநாட்டவர் கிடைக்கிறார்கள் என்று அவர்களுக்கே வேலை அனைத்தையும் கொடுக்கிறார்கள்.புதிதாக உருவாக்கப்பட்ட பணிகளில் 80சதவீதம் வந்தேரிகளுக்குக் (இம்மிகரன்ட்ஸ்)கொடுக்கப்பட்டுள்ளது' என்று  புள்ளி விவரம் கொடுத்து எழுதியுள்ளார்.இதையெல்லாம் பார்க்கும் போது இங்குள்ள‌ நம்மவர்கள் இந்திய‌ வேர்க‌ளை முழுதும் இழ‌ந்துவிடாம‌ல் எத‌ற்கும் த‌யார் நிலையில் இருத்த‌ல் வேண்டும் என்று சொல்லத் தோன்றுகிற‌து.
‍‍‍‍‍‍‍‍‍*********************************************************
2

விசித்திர‌மான‌ போட்டிக‌ள் ந‌ம்மூரில் ம‌ட்டும்தான் ந‌ட‌க்கிற‌து என்று எண்ணிவிட வேண்டாம்.இங்கேயும் உண்டு.ஆட்டுக்கிடா ச‌ண்டை, கோழிச்ச‌ண்டை எல்லாம் ந‌ம்மூரில் ந‌ட‌க்கிற‌து என்றால், இங்கே க‌ழுதைப் ப‌ந்த‌ய‌ம் ந‌ட‌க்கிற‌து. குதிரைப்ப‌ந்த‌ய‌ம் ப‌ண‌க்கார‌ர்க‌ளுக்கான‌து. க‌ழுதைப்ப‌ந்த‌ய‌ம் ஏழைக‌ளுக்கான‌து. க‌ழுதைப் ப‌ந்த‌ய‌த்திற்கு 'பெட்' க‌ட்டுவ‌து உண்டு.ஸேன்ட்ர்ஸ்ட் என்ற‌ இட‌த்தில் 40 க‌ழுதைக‌ள் க‌ல‌ந்து கொண்ட‌ ப‌ந்த‌ய‌ம் ந‌ட‌ந்துள்ள‌து.
*************************************************************
3

இந்து நாளித‌ழில் ஞாயிறு அன்று திரும‌ண‌ விள‌ம்ப‌ர‌ம்(ம‌ண‌ம‌க‌ன், ம‌ண‌ம‌க‌ள் தேவை) அதிக‌ எண்ணிக்கையில் வ‌ரும்.அது போல‌வே ந‌ம் த‌மிழ் நாள் இத‌ழ்க‌ளிலும் அந்த‌ வ‌கை விள‌ம்ப‌ர‌ங்க‌ள் வ‌ரும். த‌மிழ்நாட்டில் எத்த‌னை வ‌கையான‌ சாதிக‌ள் உள்ள‌ன‌ என்ப‌தை அந்த‌ விள‌ம்ப‌ர‌ங்க‌‌ளை ஆராய்ந்தாலே அறிந்து கொள்ள‌லாம். க‌ல்யாண‌மாலை போன்ற‌ தொலைக்காட்சி ஊட‌க‌ங்க‌ளில் கூட‌ ம‌ற‌க்காம‌ல், ம‌றைக்காம‌ல் சாதிப்பெய‌ர் சொல்லி பெண் ,ஆண் தேடுவார்க‌ள்.

இங்கேயும் வ‌குப்பு (கிளாஸ்)வேற்றுமை உண்டு. அது ப‌த்திரிகைக‌ளில் வெளிப்ப‌டையாக‌ வ‌ருவ‌தில்லை. ஆனால் ப‌ழ‌க‌த் துவ‌ங்கும் முன்ன‌ர் இருபால‌ரும்  எந்த‌ப்பிரிவு ‌என்ப‌தை எவ்வாறோ அறிந்து கொள்வ‌தாக‌வே தெரிய‌வ‌ருகிற‌து.இர‌க‌சிய‌ விசார‌ணை செய்துத‌ர‌ 'டிடெக்டிவ்' நிறுவ‌ன‌ங்க‌ளின் உத‌வி நாட‌ப்ப‌டுகிற‌து என்கிறார்‌க‌ள்.

இங்கு ம‌ண‌ம‌க‌ன், ம‌ண‌ம‌கள் தேவை விள‌ம்ப‌ர‌ங்க‌ள் நான்கு  வ‌கையாக‌ப் பிரிக்க‌ப்ப‌டுகின்ற‌ன.

1.ஆண்க‌ளுக்குப் பெண்க‌ள்.2. பெண்க‌ளுக்கு ஆண்க‌ள்.3. ஆண்க‌ளுக்கு ஆண்க‌ள்4. பெண்க‌ளுக்குப் பெண்க‌ள்.

நான் வாசித்த‌ 60 விள‌ம்ப‌ர‌ங்க‌ளில் சுமார் 20 விள‌ம்ப‌ர‌ங்க‌‌ள் 60 வ‌ய‌தைக் க‌ட‌ந்த‌வ‌ர்க‌ள் கொடுத்துள்ள‌ன‌ர்.அதிக‌ப‌ட்ச‌ வ‌ய‌து 72! ஒரு 72 வ‌ய‌து மூதாட்டி த‌ன‌க்கு ஒரு பேச்சுத் துணையாக‌, வீட்டு ஆண்பிள்ளை என்று சொல்லிக் கொள்ள‌ ஒரு ஆண் துணை தேவை என்கிறார்.

பெரும்பாலான‌வ‌ர்க‌ள்  த‌ங்க‌ளைப் ப‌ற்றி விவ‌ரிப்ப‌து அவ‌ர்க‌ளுடைய‌ த‌ன்ன‌ம்பிக்கையைக் காட்டுவ‌தாக‌ உள்ள‌து.ஒரு 64 வ‌ய‌துப் பெண் த‌ன்னை இவ்வாறு கூறிக் கொள்கிறார்:  "very attractive, slim, fit, curtly, female 64...." companionship+ , friendship+ , romance+ , for fun(may be more)

இது போன்ற‌‌ சொற்க‌ள் திரும‌ண‌ விள‌ம்ப‌ர‌ங்க‌ளில் காண‌க் கிடை‌க்கிற‌து. அந்த‌ + க்கு என்ன‌ பொருள் என்ப‌தை உங்க‌ளுடைய‌ க‌ற்ப‌னைக்கே விட்டு விடுகிறேன்.
****************************************************************
4.

ந‌ம‌து நாட்டைப்ப‌ற்றி சொல்வ‌து 'இந்தியா ஒரு குப்பை மேடான‌ நாடு' ம‌க்க‌ள் எல்லா இட‌ங்க‌ளிலும் குப்பை போடுவ‌து இந்தியாவில் ம‌ட்டுமே உள்ள‌து என்று ஒரு தோற்ற‌ம் உல‌க‌ நாடுக‌ளில் உருவாக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. நான் ஹீத்ரூ விமான‌ நிலைய‌த்தில் இற‌ங்கிய‌வுட‌னேயே சாக்லேட் காகித‌ங்க‌ளும், ஐஸ்கிறீம் கோன்க‌ளும்  கிடப்பதைப் பார்த்தேன்.அருகாமையில் குப்பைத்தொட்டி இருந்தும்  கண்ட இடத்தில் குப்பைகளை வீசுவது இங்கேயும் உள்ளது. ஆனால் ஒரு சில நிமிடங்களில் அந்தக் குப்பைகளை அகற்ற வேண்டிய பணியாளர்கள் அங்கே வந்து அகற்றி விடுகிறார்கள்.  குப்பை போடும் மனோபாவம் இங்கேயும் உள்ளது என்பதைக் கூறவே இதைச் சொன்னேன். இதைச் சொல்வதால் நாமும் வழக்கம் போல் குப்பை போடுவதைத் தொடரலாம் என்பது என் கருத்தாக யாரும் எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

தினசரி பிரதான சாலைகளில் உள்ள குப்பைத் தொட்டிகள் அகற்றப்படுகின்றன. வாரம் ஒருமுறை வீட்டுக் குப்பைகள் அகற்றப்படுகின்றன.வீட்டு வாசலில்மறுசுழற்சிக்கான தொட்டி,மறு சுழற்சி செய்ய முடியாத குப்பைகளுக்கான தொட்டி என்று இரண்டு உள்ளன.ஒவ்வொரு வாரம் ஒவ்வொரு தொட்டி அகற்றப்படுகிறது.மறு சுழற்சி செய்வதாக அரசாங்கம் கூறினாலும் அப்படி நடப்பதில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன. நமது தூத்துக்குடி துறைமுகத்தில் கூட இலண்டன் குப்பைகள்  வந்து இறங்கியுள்ளதையும், சில தமிழ் வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதையும் செய்தியாக வாசித்து இருக்கலாம்!

குப்பை லாரிகளில் எழுதியுள்ள வாசகம் சிந்திக்க வைக்கிறது."நாம் பிரிட்டனில் மூன்றில் ஒரு பாகம் உணவினை குப்பைகளில் கொட்டுகிறோம்"

முந்தைய அமெரிக்க அதிபர் கூறிய சொற்கள் ஏனோ என் மனதில் தோன்றியது."இந்தியா போன்ற‌ வளரும் நாடுகளில் உள்ள மக்கள் அதிகமாக உணவைச் சாப்பிடுவதால் தான் உணவு விலைகள் ஏறிவிட்டன;பஞ்ச நிலை உணாடாகிறது"!வளர்ந்த நாடுகளில் குப்பைகளாகும் உணவைக் கணக்கில் ஏனோ எடுத்துக்கொள்வதில்லையே அவர்கள்!

நம்மூர் டாஸ்மாக் கடைகளில் நடப்பதுபோலவே குடிமகன்கள் இங்கேயும் பாட்டிலை சாலைகளிலும் நடைபாதைகளிலும் சுக்கு நூறாக உடைப்பது நடக்கிறது. கால் முழுவதும் மூடும் காலணி அணியவில்லை என்றால் கண்ணடிச் சில்லு காலில் குத்துவதைத் தவிர்க்க முடியாது.

************************************************************
5.

இங்கே செல்லப் பிராணிகள் வளர்ப்பது என்பது ஒரு புனித சடங்கு போலவே நடக்கிறது.பெரும்பாலும் வித விதமான நாய்கள்தான் 'பெட்' ஆக உள்ளன.குறைந்த அளவில் பூனைகள் வளர்க்கப்படுகின்றன.தவறாமல் எல்லா செல்லப்பிராணிகளுமே கொழு கொழு என்று குண்டாகவே உள்ளன. நடைப்பயணம் போகும் போது தன் உடல் எடையையே தாங்க முடியாமல் திணறித் திணறி நடந்துவரும் நாய்களை தவறாமல் தரிசிக்கலாம்.

"உங்கள் நாய் என்றோ, உங்கள் பூனை என்றோ" செல்லப்பிராணி வளர்ப்பவர்களிடம் தவறியும் கூறி விட முடியாது.அந்தச் செல்லத்தின் பெயரைக் கேட்டுத் தெரிந்து கொண்டு பெயர் சொல்லித்தான் குறிப்பிட வேண்டும்.அவர்களுடைய செல்லத்தின் அருமை பெருமைகளைப் புகழ்ந்துவிட்டால் ,ஒரு பிரித்தானியரை நம் வசப்படுத்திவிட முடியும்.

நம்மூர் நாய்களைப் போலவே விளக்குக் கம்பங்களைப் பார்த்தால் காலைத் தூக்கிக் கொள்வது இங்கே உள்ள நாய்களும் செய்கின்றன.

அருகில் உள்ள ஒரு பஸ் நிறுத்தத்தில் கையால் எழுதிய ஒரு அறிவிப்பைப் பார்த்தேன்."என் அருமைச் செல்லம் புஸ்ஸி(கேட்) காணாமல் போய்விட்டது. ஷூ வுக்குள் போய் ஒண்டிக் கொள்ளும் பழக்கம் உடையவன். உங்கள் இல்லத்தில் அணியாமல் கிடக்கும் ஷூக்களை சோதிக்க வேண்டுகிறேன்.கண்டு பிடித்துத் தகவல் கூறுபவர்களுக்குச் சன்மானம் உண்டு"

இங்கேயுள்ள 4 ஆம் வகுப்பு மாணவன் ஒருவனுடைய கார்ட்டூன் படத்தை பூங்காவில் உள்ள குப்பைத் தொட்டியின் வெளியே ஒட்டி உள்ளதை ரசித்தேன்.நாய் ஒன்றினைப் பிடித்துச் செல்லும் மங்கையின் படத்தை வரைந்து அதன் கீழே எழுதியுள்ள வாசகம் நகைப்பாக உள்ளது.

"The dog may be your loving pet; but his poos are not our pet.
Please pick up the poo and drop in the dust bin"

poo    என்பதற்கு நீங்களே பொருள் கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்.
(மேலும் வரும்)

வாழ்க வளமுடன்!
கே.முத்துராமகிருஷ்ணன்,லால்குடி
முகாம்: இலண்டன் மாநகர்

வாழ்க வளமுடன்!

19.8.11

அண்ணனும் தங்கையும் ஆட்சி செய்யும் இடங்கள்!

-------------------------------------------------------------------------------------------
அண்ணனும் தங்கையும் ஆட்சி செய்யும் இடங்கள்!

பக்தி மலர்


தென்மதுரையை ஒரு 'கன்னி' (கண்ணி) அருள் ஆட்சி செய்கிறாள். வடமதுரையை அவளுடைய சகோதரன் கண்ணன் அருள்  ஆட்சி செய்கிறான்.

தென்மதுரைக் 'கன்னி’' யார்?‌

மீனாட்சிதான் தென்மதுரைக் 'கன்னி!.மீன் போன்ற கண்களை
உடையவள் அல்லவா மீனாட்சி!அதனால் தான்  கூறினேன் 'கன்னி'
என்று! கன்னியின் சகோதரன் கண்ணன்.அவன் அருளாட்சி செய்யும்
இடமான மதுரா அவனைப்போலவே இனிமையான இடம்.அங்கே
எல்லாமுமே இனிமையாக இருக்குமாம் பக்தர்களுக்கு. அவன்  பெயரை உச்சரித்தாலே நாக்கில் தேனின் சுவைதெரியும்.அவன் குழலின் ஒலியோ இனிமையிலும் இனிமைகாதுகளுக்கு!.அவன் அலங்காரமோ கண்க‌ளுக்கு இனிமை!அவனைச் சுற்றியுள்ள சுகந்தமோ நாசிக்கு  இனிமை!அவ‌ன் மேனி எழிலோ இத‌ய‌ம் க‌வ‌ரும் இனிமை!

அங்கே எதுதான் இனிமையில்லை,இது இனிமை அது இனிமை என்று த‌னித்த‌னியாக‌க் கூறுவ‌த‌ற்கு?ச‌க‌ல‌மும்  இனிமைதான் அங்கே!

இந்த‌க் க‌ருத்தை அழ‌காக‌க் கூறினார் ஸ்ரீவ‌ல்ல‌பாச்சாரியார் என்ற‌ 13ம் நூற்றாண்டுக் க‌விஞ‌ர்.அவ‌ர் க‌விஞ‌ர்  ம‌ட்டும்தானா?ப‌க்தி மார்க‌த்தைப் ப‌ர‌ப்பிய‌ ம‌கானும் ஆவார்.  அவ‌ர் எழுதிய‌ ம‌துராஷ்ட‌க‌ம் ஓர் அழ‌கும்,  எளிமையும் இனிமையும் இய‌ல்பா‌க‌ அமைந்த‌ அற்புத‌ ஸ்தோத்திர‌ம்.

அத‌ன் வ‌ட‌மொழி வ‌டிவ‌த்தையும்,நான் அறிந்த‌வ‌ரை த‌மிழ் ஆக்க‌த்தையும் கொடுத்துள்ளேன்.
=======================================================
ம‌துராஷ்ட‌க‌ம்(ஸ்ரீ வ‌ல்ல‌பாச்சாரியார்(1478 கி பி) இய‌ற்றிய‌து
=======================================================
1.அத‌ர‌‌ம் ம‌துர‌ம் வ‌த‌ன‌ம் ம‌துர‌ம்    
    ந‌ய‌ன‌ம் ம‌துர‌ம் ஹ‌ஸித‌ம் ம‌துர‌ம்
 ஹ்ருத‌ய‌ம் ம‌துர‌ம் க‌ம‌ன‌ம் ம‌துர‌ம்
    ம‌துராதிப‌தேர் அகில‌ம் ம‌துர‌ம்


(அவ‌ன் உத‌டுக‌ள் இனிமை;அவ‌ன் முக‌ம் இனிமை;அவ‌ன் க‌ண்க‌ள் இனிமை;அவ‌ன் புன்ன‌கை இனிமை;அவ‌ன்இத‌ய‌ம் இனிமை;அவ‌ன்
க‌ம்பீர‌ந‌டை இனிமை;ம‌துராநாய‌‌க‌னின் அனைத்துமே இனிமை )

2.வசனம் மதுரம் சரிதம் மதுரம்
    வஸ‌னம் மதுரம் வலிதம் மதுரம்
 சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம்
    மதுராதிபதேரகிலம் மதுரம்


(அவன் பேச்சு இனிமை;அவன் சரித்திரம் இனிமை;
அவன் ஆடை/ஆபரணங்கள் இனிமை;அவன் நடை இனிமை‌
அவன் அசைவு இனிமை;அவன் பரந்த தன்மை இனிமை ‌
ம‌துராநாய‌‌க‌னின் அனைத்துமே இனிமை )

3வேணுர்மதுரோ ரேணுர்மதுர:
    பாணிற்மதுர: பாதௌ மதுரௌ
 ந்ருத்யம் மதுரம் ஸ‌க்யம் மதுரம்
    மதுராதிபதேரகிலம் மதுரம்


(அவன் புல்லாங்குழல்(ஓசை) இனிமை; அவன் பாததூளி இனிமை;அவன் கரங்கள் இனிமை;அவன் பாதம்  இனிமை;அவன் ஆடும் நடனம் இனிமை;அவன் நட்பு இனிமை;ம‌துராநாய‌‌க‌னின் அனைத்துமே இனிமை )

4கீதம் மதுரம் பீதம் மதுரம்
    புக்தம் மதுரம் சுப்தம் மதுரம்
 ரூபம் மதுரம் திலகம் மதுரம்
    மதுராதிபதேரகிலம் மதுரம்


(அவன் இசைப்பாடல் இனிமை;அவன் அருந்தும் பானம் இனிமை;அவன் உண்ணும் உணவு இனிமை;அவன் உறங்குவதும் இனிமை;அவன் உருவ அழகு இனிமை;அவன் நெற்றிப் பொட்டு இனிமை;ம‌துராநாய‌‌க‌னின் அனைத்துமே  இனிமை )

5.கரணம் மதுரம் தரணம் மதுரம்
     ஹரணம் மதுரம் ரம‌ணம் மதுரம்
  வமிதம் மதுரம் ஷமிதம் மதுரம்
     மதுராதிபதேரகிலம் மதுரம்


(அவன் செயல்கள் இனிமை;அவன் வெற்றி இனிமை;அவன் கவ‌ர்தல்   இனிமை;அவன் காதல் லீலைகள்  இனிமை;அவன் அன்பளிப்புக்கள் இனிமை;அவன் முகவெட்டு இனிமை;மதுராநாயகனின் அனைத்துமே இனிமை!)

6.குஞ்சா மதுரா மாலா மதுரா
     யமுனா மதுரா வீசீ மதுரா
 சலிலம் மதுரம் கமலம் மதுரம்
     மதுராதிபதேரகிலம் மதுரம்


(அவன் குஞ்சலம் இனிமை;அவன் மலர் மாலை இனிமை;யமுனாநதி இனிமை;நதியின் அலைகள் இனிமை;நதியின் நன்னீர் இனிமை;தாமரைமலர் இனிமை;மதுராநாயகனின் அனைத்துமே இனிமை,இனிமை!)

7.கோபி மதுரா லீலா மதுரா
      யுக்தம் மதுரம் புக்தம் மதுரம்
 த்ருஷ்டம் மதுரம் சிஷ்டம் மதுரம்
     மதுராதிபதேரகிலம் மதுரம்


(அவன் கோபியர் இனிமை;அவன் விளையாட்டுக்கள் இனிமை;அவன் சந்திப்பு இனிமை;அவன் மீட்பு  இனிமை;அவன் ஓரக்கண் பார்வை இனிமை;அவன் நாசூக்கு இனிமை;மதுராநாயகனின் அனைத்துமே இனிமை!)

8.கோபா மதுரா காவோ மதுரா
      யஷ்டிர் மதுரா ஸ்ருஷ்டிர்மதுரா
தலிதம் மதுரம் பலிதம் மதுரம்
      மதுராதிபதேரகிலம் மதுரம்

(அவ‌ன் கோப‌ ந‌ண்ப‌ர்க‌ள் இனிமை;அவ‌ன் ப‌சுக்க‌ள் இனிமை; அவ‌ன் தார்க்கோல் இனிமை;அவ‌ன்  உருவாக்கிய‌வை இனிமை;அவ‌ன் அழிப்ப‌தும் இனிமை;அவ‌ன் அடைந்த‌வை அனைத்தும் இனிமை; மதுராநாயகனின் அனைத்துமே இனிமை!)
--------------------------------------------------------------------
அஷ்டகம் என்பது எட்டு பத்தியுள்ள கவிதை அமைப்பு. எல்லா தெய்வங்கள் மீதும் பல அஷ்டகங்கள் உள்ளன. எம் எஸ் அம்மா அவர்கள் மிக இனிமையாக மேற்படி மதுராஷ்டகத்தைப் பாடியுள்ளார்கள். யூ ட்யூப், இன்னும் பல தளங்களில் இலவசமாகக் கேட்கலாம்.யூ ட்யூப் செர்ச்சில் மதுராஸ்டகம் எம் எஸ் என்று கொடுங்கள்.

பி கு: இந்த‌க் க‌விதையை மொழி பெய‌ர்ப்ப‌து மிகக்க‌‌டின‌ம்.என் மொழி பெயர்ப்பில் த‌வ‌றுக‌ள் இருக்க‌லாம்.

பெரியவர்கள் மன்னிக்க வேண்டும். இளைஞர்களுக்கு அறிமுகம் செய்ய எடுத்த முயற்சியே. இது

வாழ்க‌ வ‌ள‌முட‌ன்!
கே முத்துராம‌கிருஷ்ண‌ன்,லால்குடி
முகாம்:இலண்டன் மாநகரம்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2
மதுரை அரசாளும் மீனாட்சி

மதுரை அரசாளும் மீனாட்சி
    மாநகர் காஞ்சியிலே காமாட்சி


தில்லையில் அவள் பெயர் சிவகாமி
    திருக்கடவூரினிலே அபிராமி
நெல்லையில் அருள் தருவாள் காந்திமதி
     அன்னை அவள் அல்லால் ஏது கதி?


(மதுரை அரசாளும் மீனாட்சி)

திரிபுரசுந்தரி சீர்காழியிலே
    சிவசக்தி பார்வதி கயிலையிலே
வரம் தரும் கற்பகமாய் மயிலையிலே
    வஞ்சமில்லா நெஞ்சில் வாழ்பவளே

(மதுரை அரசாளும் மீனாட்சி)

திருவேற்காட்டினிலே கருமாரி
    தென்பொதிகை நகரினிலே முத்துமாரி
சமயபுரம் தன்னில் மகமாயி
    சௌபாக்கியம் தந்திடுவாள் மாகாளி
    சகல சௌபாக்கியம் தந்திடுவாள் மாகாளி

(மதுரை அரசாளும் மீனாட்சி)


 திருமலை தென்குமரி என்னும் திரைப்படத்தில் ஒலிக்கும் பாடல் இது.
இசையமைத்தவர்: குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள்
பாடலின் வரிகளை எழுதியவர்: உளுந்தூர்பேட்டை சண்முகம்
பாடி மகிழ்விப்பவர்கள்: சீர்காழி கோவிந்தராஜன், LR.ஈஸ்வரி, விஜயா

அன்னையின் 12 திருப்பெயர்களையும், அவள் அந்தப் பெயரில் உறையும் இடங்களையும் பாடலாசிரியர் ஒரே பாடலில் கொண்டுவந்தார் அல்லவா - அதுதான் இந்தப்பாடலின் சிறப்பு

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

18.8.11

எங்கேயடா போனாய் நீ?

----------------------------------------------------------------------------------------
எங்கேயடா போனாய் நீ?

“இரு விழிப்பு நிலைகளுக்கு இடையே நிலவுவது தூக்கம். அவ்வாறே, இரு பிறவிகளுக்கிடையே நிகழ்வது இறப்பு. இரண்டும் தற்காலிகமே!”
------ரமண மகரிஷி

“உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு”
------திருவள்ளுவர்
-----------------------------------------------------------------------------
எதற்காகக் கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா?

குருஷேத்திர யுத்தம் கடுமையாக நடந்துகொண்டிருந்த காலம்.

14ஆம் நாள் அதிகாலை

பகவான் கிருஷ்ணர் தன் மனதிற்கு இனிய அர்ஜுனனை அமரவைத்து மரணத்தின் தன்மையை, மேன்மையை எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்தார்.

“என் இனிய அர்ஜுனா, மரணம் அனைவருக்கும் பொதுவானது. ஒருவன் பிறந்த அன்றே அவனுடைய இறக்கும் நாளும் நிச்சயிக்கப்பட்டு விடுகிறது. ஒவ்வொருவருவனும், ஒவ்வொரு நாளும் மரணத்தை நோக்கித்தான் அடியெடுத்து வைத்துக்கொண்டிருக்கிறான் (நடந்து கொண்டிருக்கிறான்) மரணத்தை யாராலும் தவிர்க்க முடியாது. மரணத்தை யாராலும் வெல்ல முடியாது. உடம்பிற்குத்தான் மரணம். ஆன்மாவிற்கு அல்ல! மரணத்திற்காக வருத்தம் கொள்வதில் பயனில்லை.”

என்று சொல்லிப் பல உதாரணங்களுடன் விளக்கியவர், இறுதியில் கேட்டார், “இன்றையப் பாடத்தில் என்ன தெரிந்துகொண்டாய்?”

அர்ஜுனன் சொன்னான். “மரணத்தைக் கண்டு பயப்படக்கூடாது, வருத்தப்படக்கூடாது என்று தெரிந்து கொண்டேன்!”

“சரி, வா, யுத்தகளத்திற்குப் புறப்படலாம்” என்று சொன்ன கிருஷ்ணர், சங்கை எடுத்து ஊதினார்.

அர்ஜுனன் ஏறிக்கொள்ள சாரதியாகச் செயல்பட்ட கிருஷ்ணர் தேரைச் செலுத்தினார்.

பொழுது புலர்ந்தும் புலராத அதிகாலை நேரம். ஓடு பாதை மங்கலான வெளிச்சத்தில் கீற்றாகத் தெரிந்தது.

சற்று தூரம் சென்றவுடன், ஓடு பாதையில் கிடக்கும் சடலம் ஒன்றைப் பார்த்தவுடன், கிருஷ்ணர் தேரை நிறுத்தினார்.

அர்ஜுனனும் அதைக் கண்ணுற்றான். தேரைவிட்டுக் கீழே குதித்தவன், இறந்து கிடப்பவன் யாரென்று தெரிந்து கொள்ளும் நோக்குடன், அருகே சென்று பார்த்தான்.

அவனுடைய இதயம் சுக்கு நூறாக உடைந்தது. துக்கத்தை அவனால் கட்டுப் படுத்த முடியவில்லை!

ஆமாம், இறந்து கிடந்தது அவனுடைய தவப்புதல்வன் அபிமன்யு.

மகனின் பூத உடலைத்தூக்கித் தன் மடிமீது கிடத்திக்கொண்டவன், துக்கத்தை அடக்க முடியாமல் கண்ணீர்விட்டு அழுதான்.

ஐந்து நிமிடங்கள் கழிந்திருக்கும்.

அப்போதுதான் அது நிகழ்ந்தது.

பரந்து விரிந்த அவன் தோள்களின் மீது இரண்டு சொட்டுக் கண்ணீர் விழுந்தது.

திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தான்.

கிருஷ்ண பகவான் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர்தான் தன் தோள்களின் மீது விழுந்ததை அவன் உணர்ந்தான்.

தன் மகனின் சடலத்தைக் கிடத்தியவன், எழுந்து நின்று கேட்டான்:

“நான் என் மகன் என்பதற்காக அழுதேன். உங்கள் கண்களில் கண்ணீர் எதற்கு? எதற்காகக் கலங்குகிறீர்கள்?”

பகவான் சலனமற்றுப் பொறுமையாகச் சொன்னார்:

“உன் மகனுக்காக நான் கலங்கவில்லை! இப்படி நடக்கும் என்று தெரிந்துதான், இன்று அதிகாலை உனக்கு நான் மரணத்தைப் பற்றிப் போதித்தேன். என் போதனைகள் வீணாகி விட்டது பார்த்தாயா? அதற்காகக்தான் வருந்துகிறேன்!
------------------------------------------------------------------------------------------------------
பிறப்பு என்றொரு கதையிருந்தால் இறப்பு என்றொரு முடிவிருக்கும்

  “உறவு என்றொரு சொல்லிருந்தால்
   பிரிவு என்றொரு பொருளிருக்கும்”
   என்றார் கவியரசர் கண்ணதாசன்

   அதுபோல

   “பிறப்பு என்றொரு கதையிருந்தால்
    இறப்பு என்றொரு முடிவிருக்கும்”

முடிவில்லாத கதையே இல்லை. முடிவில்லாத மனித வாழ்க்கையும் இல்லை! எல்லோருடைய வாழ்க்கையும் முடிவை நோக்கித்தான் நகர்ந்து கொண்டிருக் கிறது. படம் எத்தனை ரீல்கள்? எப்போது முடியும் என்பது மட்டும் தெரியாது. அது தெரிந்தால் வாழ்க்கையில் சுவாரசியம் இருக்காது. ஆகவே அதைத் தெரிந்து கொள்ளாமல் இருப்பதே நல்லது.

  “ஆறிலும் சாவுண்டு.
   நூறிலும் சாவுண்டு”

ஆறு ரீல்களில் முடிகிற படமும் உண்டு. நூறு ரீல்கள்வரை இழுத்தடித்துக்கொண்டு ஓடுகிற படமும் உண்டு.

பயத்திலேயே பெரிய பயம் மரண பயம்தான். அந்த பயம் இல்லாதவர்கள் ஞானிகள் மட்டுமே. அல்லது ஞானம் உள்ளவர்கள் மட்டுமே!
---------------------------------------------------------
எல்லாம் இருக்கிறவரைதான். அதாவது உன்னுடையது, என்னுடையது என்னும் உடைமைப் போராட்டம் எல்லாம்  உயிர் உள்ளவரைதான்!

பட்டம், பதவி, சொத்து, சுகம், செல்வம் எதுவும் கூட வராது.

அதைத்தான் பட்டினத்தார் நெத்தியடியாக ஒற்றைவரியில் சொல்லிவிட்டுப் போனார். “ அடேய் நீ செத்துப்போனால் உன்னுடன் நீ போற்றிப் பாதுகாத்து வைத்திருக்கும் எதுவும் வராது!” என்னும் பொருள்பட இப்படிச் சொன்னார்:

  “காதறுந்த ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே”

காதறுந்து ஒடிந்துபோய் எதற்கும் பயன்படாத ஊசிகூட உன்னுடன் வராது என்றார். அதையும் அவர் சொல்லவில்லை. அவருக்கு மகனாக வந்துதித்த சிவபெருமான்,  எழுதிக்கொடுத்த  சிற்றோலை மூலம் உணர்ந்து கொண்டார். அது உங்களுக்கும் பொருந்தும். எனக்கும் பொருந்தும்.
------------------------------------------------------------
ஆனால் நாம் கேட்டுக்கொள்வோமா?  மாட்டோம்!

அதையெல்லாம் சாகிற அன்றைக்குப் பார்த்துக்கொள்வோம். இப்போது போய் இரண்டு  ‘பெக்’ அடித்துக் கவலையை மறப்போம் என்று கிளம்பிவிடுகிறவர்கள் பலர் உண்டு.

 “ஒன்றாம் தேதியானால், செல்போன் பில் கட்ட வேண்டும். பணம் வேண்டாமா? ஹவுஸிங் லோன் கட்ட வேண்டும் அல்லது வீட்டு வாடகையைக் கொடுக்க வேண்டும் பணம் வேண்டாமா? அரிசி கிலோ 42 ரூபாய் விற்கிறது, பெட்ரோல் லிட்டர் 65 ரூபாய் விற்கிறது - பணம் வேண்டாமா? சில்லறைக் கவலைகள் இல்லாமல் இருக்க வேண்டுமென்றால் செல்வந்தனாக இருக்க வேண்டும். செல்வம் வேண்டாம் என்று சொல்ல முடியுமா?  அல்லது செல்வத்தைத் தேடி அலையாமல் அல்லது உழைக்காமல் இருக்க முடியுமா? பட்டினத்தார் சொன்னதெல்லாம் பரதேசம் போகிற காலத்திற்கு; இன்றைய பொருளாதார சூழ்நிலைக்கு அதெல்லாம் ஒத்துவராது.
சும்மா வாயை மூடிக்கொண்டிருங்கள்!” என்று வியாக்கியானம் பேசுபவர்களே அதிகம். அவர்களிடம் வாயைக் கொடுத்தால் மாட்டிக்கொண்டு விடுவோம்.

அடியவன் சொல்வது இதுதான்: ஒருபக்கம் வாழ்வதற்குப் பொருளைத் தேடு. இன்னொரு பக்கம் போகிற  காலத்திற்கு அருளைத் தேடு. இருளைப் போக்கு!
----------------------------------------------------------------
மரணத்தின் நிலைப்பாட்டைப் பட்டினத்தடிகள் ஒரு பாட்டில் - அதுவும் நான்கே வரிகளில் மிகவும் அழகாகச் சொன்னார். பாடலைப் பாருங்கள்.

“வீடிருக்க தாயிருக்க வேண்டுமனை யாளிருக்க
பீடிருக்க வூணிருக்கப் பிள்ளைகளும் தாமிருக்க
மாடிருக்கக் கன்றிருக்க வைத்த பொருளிருக்கக்
கூடிருக்க நீபோன கோலமென்ன கோலமே!”


  “உன்னுடைய வீடு இங்கே இருக்கிறது. உன்னைப்பெற்ற தாயும், உனக்குக் கழுத்தை நீட்டிய மனைவியும் இங்கே இருக்கிறார்கள். நீ பெற்ற பட்டம், பதவி, பெருமைகள் எல்லாம் இருக்கிறது. உனக்கான அடுத்த வேளை  அறுசுவை உணவு தயாராக இருக்கிறது. உன்னுடைய அருமைப் பிள்ளைகள் இங்கே இருக்கிறார்கள். உன் வீட்டுக் கொள்ளையில் மாடுகளும், அவை ஈன்ற கன்றுக்குட்டிகளும் இருக்கின்றன.  நீ தேடி  வைத்த  பொன், பொருள் எல்லாம் இருக்கிறன்றன. உன் உடல் இருக்கிறது. உன்னை மட்டும் காணவில்லையே - எங்கேயடா போனாய் நீ?” என்று கேட்டு உடம்பை விட்டு ஆன்மா பிரிந்துபோன நிலையை மிகவும் அற்புதமாகச் சொல்லியிருக்கிறார் அவர்.  உடம்பை விட்டு ஆன்மா நீங்கும் நிலைதான் மரணம்.
----------------------------------------------------------------
வாழ்க்கையை எட்டு எட்டாகப் பிரித்தவன் சொன்னான்:

ஓரெட்டில் ஆடாத ஆட்டமும்
ஈரெட்டில் பெறதா கல்வியும்
மூவெட்டில் பண்ணாத திருமணமும்
நாலெட்டில் பெறாத குழந்தையும்
ஐயெட்டில் தேடாத செல்வமும்
ஆறெட்டில் பெறாத புகழும்
ஏழெட்டில் சுற்றாத ஸ்தலமும்
எட்டெட்டில் கிடைக்காத மரணமும் வீணே!


ஆக எட்டெட்டில் - அதாவது 64 வயது வரைதான் - வாழ்க்கை அங்கீகாரம் உடையதாக, அதிகாரம் உடையதாக இருக்கும். அதற்குப் பிறகு உயிருடன் இருக்கும் வருடங்கள் எல்லாம் போனசாக வருவது. அங்கீகரிக்கப்பட்ட காலத்தில்  எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு  விடுங்கள். ஆட்டம் பாட்டத்தை எல்லாம் முடித்துக்கொண்டு விடுங்கள்.

உயில் எழுதி வைக்க வேண்டுமென்றால் வைத்துவிடுங்கள்.

அதற்குப் பிறகு, எந்தக் கவலையும் இன்றி சிறுவர்களைப் போல, சிறுமிகளைப் போல அந்தக் கணங்களில் வாழ்ப் பழகிக்கொள்ளுங்கள். அந்தந்த நேரங்களில் வாழப் பழ்கிக்கொள்ளுங்கள்.

Try to live in a momentary world and enjoy momentary life (Momentary means lasting for only a moment. Occurring  or present at every moment)

வாரியார் சுவாமிகள் சொல்வார்::

“ஒரு ஊருக்குப் போகிறோம் என்றால்,  அங்கே பயணிப்பதற்கான இரயில் அல்லது பேருந்து சீட்டிற்கு முன் பதிவு செய்து வைக்கிறோம். வேண்டிய பணத்தை எடுத்து வைத்துக்கொள்கிறோம். அங்கே தங்குவதற்கு

விடுதிகளில் முன் பதிவு செய்து வைக்கிறோம். எத்தனை நாட்கள்  தங்க உள்ளோமோ அத்தனை நாட்களுக்குத் தேவையான உடைகளை எடுத்து வைத்துக்கொள்கிறோம்.  நம்மை  அழகு  படுத்துவதற்கு வேண்டிய பொருட்களை எடுத்து வைத்துக் கொள்கிறோம். சூட்கேசைத் தயார் செய்து  வைக்கிறோம். ஆனால், போனால் திரும்ப முடியாத இறுதிப் பயணம் ஒன்று இருக்கிறது. அதற்கு எதை எடுத்து  வைத்திருக்கிறீர்கள்?”
என்று கேட்பார்.

எதையும் எடுத்துக்கொண்டு போகமுடியாது என்று அவருக்குத் தெரியும். எதை என்று அவர் கேட்பது புண்ணியக்  கணக்கில் எதை எடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பதாகும்!

புண்ணியக் கணக்கில் நீங்களும் உங்களுக்கு வேண்டியதை எடுத்து வையுங்கள்.
---------------------------------------------------------------------
மனிதனின் ஆயுள் காலம் நான்கு வகைப்படும்

1. குழந்தைப் பருவத்தில் மரணம். இது எட்டு வயதிற்குள் நடப்பது.

2. அற்ப ஆயுளில் மரணம் - இது எட்டில் இருந்து 32 வயதிற்குள் நடப்பது.

3. மத்திம வயதில் மரணம் - இது 32ல் இருந்து 64 வயதிற்குள் நடப்பது.

4. தீர்க்கமான ஆயுள் அல்லது பூரண ஆயுள் - 64ற்கு மேல் 100 அல்லது 120 வயது வரை வாழ்ந்து மரணிப்பது.
---------------------------------------------------------------------
நாம் எத்தனை காலம் வாழ்ந்தோம் என்பது முக்கியமல்ல! எத்தனை பேர்களுக்கு நம் வாழ்க்கை பயன்பட்டது என்பதுதான் முக்கியம்
அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------
வாழ்க வளமுடன்!


6.8.11

எளியவன் மனதில் எஞ்சி நிற்பவை!

எனது அன்னை உமையாள் ஆச்சி அவர்களின் படம். 
அவரது ஐம்பதாவது வயதில் எடுக்கப்பெற்றது.

---------------------------------------------------------------------------------------
எளியவன் மனதில் எஞ்சி நிற்பவை!

என்னுடைய பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய எனது அன்னை திருமதி உமையாள் ஆச்சி அவர்கள் முன் இரவு 9:30 மணீயளவில்  இயற்கை எய்திவிட்டார்கள்  என்னும் துக்கச்செய்தியை, வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறேன்.

அவருக்கு வயது 94. நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தவர். ஒருமுறைகூட மருத்துவமனைக்கு சென்று சிறு  சிகிச்சைக்கூட ஆளாகாதவர். சென்ற
10 தினங்களாக வயிற்று உபாதையால், இங்கே உள்ள பெரிய  மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளித்தும் பயனளிக்கவில்லை. இறைவனடி சேர்ந்துவிட்டார்

  "காலையிளங் காற்று பாடிவரும் பாட்டு
   எதிலும் அவர் குரலே!"


என்னும் கவியரசர் எழுதிய அற்புதவரிகள்தான் இந்த எளியவன் மனதில் எஞ்சி நிற்கின்றன!

தவிர்க்கமுடியாத சூழ்நிலையால் அடுத்த 10 நாட்களுக்கு வகுப்பறைக்கு விடுமுறை

மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்
வாத்தியார்
===============================================================
வாழ்க வளமுடன்!

5.8.11

அறிவுத்தாகம் உள்ளவர்கள் என்ன செய்தனர்?

---------------------------------------------------------------------------------------
அறிவுத்தாகம் உள்ளவர்கள் என்ன செய்தனர்?

வெள்ளி மலர்

ஒஷோ பற்றிப் பேசுவதே ஒரு அறிவுஜீவி உணர்வை கொடுத்த
காலம் ஒன்று உண்டு. அந்தக் காலகட்டத்திற்கு முந்தைய கால
கட்டத்தில் ஞானத் தேடல் உள்ளவர்கள் அனைவருடைய
உரையாடல்களிலும் தவறாமல் இடம் பிடித்தவர் ஜே கே!
ஜேகே என்றால் ஜெயகாந்தன் என்றும் பொருள்படும். ஆனால்
நாம் இங்கே பேசுவது  ஜெயகாந்தன் பற்றி அல்ல.

நமது ஜேகே ஜிட்டு (JIDDU) கிருஷ்ணமூர்த்தி ஆவார்.

ஜேகே பிறந்தது ஆந்திராவில் உள்ள மதனப்பள்ளியில்! பிறந்த
தேதி 11 மே 1895.அவர் பிறந்த சமயத்தில்  அன்னிபெசன்ட்
அம்மையார் தியாசாபிகல் சொசைட்டி மூலம் மேற்கையும்
கிழக்கையும் ஆன்மீகத்தில் இணைக்கமுற்பட்டிருந்தார்.

மேலும் 'ஹோம் ரூல்' இயக்கம் என்று ஆரம்பித்து ஆங்கில
அரசாங்க‌த்துக்கு அரசியல்  சங்கடங்களையும் கொடுத்து வந்தார்.
பெசன்ட் அம்மையார் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்.அயர்லாந்தும்  நம்மைப் போலவே இங்கிலாந்துக்கு அடிமைப்பட்டுக் கிடந்தது.
எனவே இந்திய விடுதலைப் போராட்டம்   இயல்பாகவே ஒரு மேடை
ஆயிற்று பெசன்ட் அம்மைக்கு.

ஒருநாள் அவர் நடைப்பயணம் செல்லும் போது தெருவில்
விளையாடிக் கொண்டு இருந்த கிருஷ்ணமூர்த்தியைக்  கண்டார். அந்தச்சிறுவனின் முகப்பொலிவு அவருக்கு 'இதோ நான் எதிர்
பார்த்துக் காத்திருந்த'மெஸ்ஸையா'(கடவுள் தூதர்) இவர்தான்'
என்று தோன்றிவிட்டது.பையனைத் தன்னுடன் அழைத்துச் சென்று  விட்டார்.'அம்மையார் என் பையனைக் கடத்திச்சென்று விட்டார்'
என்று ஜேகேயின் தந்தையார் வழக்குத்தொடர்ந்தார்.பெசன்ட்
ஜேகேயை சட்டப்படி தத்து எடுத்துக் கொண்டு வளர்த்தார்.

ஜேகேவுக்கு ஒரு தேவ‌தூதனுக்கு உண்டானஎல்லா மரியாதைகளும்
சிறு வயதிலிருந்தே காண்பிக்கப்பட்டன.ஒரு  தத்துவ மேதையை
ஒரு சிற்பியின் நுணுக்கத்துடன் பெசன்ட் வடித்து எடுத்தார்.

ஜேகேவுக்காக ஒரு அகில உலக இயக்கம் துவக்கப்பட்டது. "Order 
of the Star in the East"   என்று  பெயரிடப்பட்டது. உலகின் எல்லா நாடுகளிலும் கிளைகள் துவங்கப்பட்டன.அவருடைய உபதேசங்
களுக்காக உலகத்தின் எல்லா நாடுகளிலும் சீடர்கள் காத்திருந்தனர்.

அப்போதுதான் அந்த எதிர்பாராத திருப்பம் நடந்தது.

ஜேகே "என்ன இதெல்லாம்?எதற்கு இந்த ஆர்பாட்டம் எல்லாம்?
மீண்டும் ஒரு புதிய மதமா? மதங்கள்  சடங்குகள்,மதக்கொள்கைகள்
( dogmas)   எல்லாம் எதற்காக? யாருக்காக?எனக்கு  உங்கள்  பதவி,
அமைப்பு  எதுவும் வேண்டாம். நான் ஒரு பொதுமனிதன். எனக்கு
நாடு, மதம், வீடு, மொழி என்ற எந்தக் கூடும் கிடையாது.

நான் சுதந்திரமானவன்.என் தலைமைப் பதவியைத் துறக்கிறேன்.
என் பெயரில் உள்ள சொத்துக்கள் அனைத்தையும்  திருப்பிக்
கொடுக்கிறேன். என்னை ஒரு சிறையில் அடைக்க வேண்டாம்."
என்று கூறி அமைப்பை விட்டு வெளியேறினார்.ஒரு அரசரைப்
போன்ற வாழ்வு வேண்டாம் என்று துறந்தார்.நவீன கால புத்தர் என்று  சொல்லலாம் ஜேகேயை.

உலகம் ஜேகேயைத் தழுவிக்கொண்டது. அறிவுத்தாகம் உள்ளவர்கள்
எல்லாம் ஜேகேயிடம் வந்தனர்.மனச்சோர்வு  உற்றவர்களும்,
மகிழ்ச்சியை இழந்தவர் களும்,வெறுமை உணர்வு கொண்டவர்களும் ஜேகேயின் சொற்களில் ஆறுதல் கண்டனர்.அவர் கூட்டத்தில் பேசும்
போது கேட்பவர் ஒவ்வொருவருக்கும் தனக்காத்தான் தனிப்பட்ட
அறிவுரை  கூறுகிறார் என்று தோன்றுமாம்.

தன் 91 வயதில் அவர் இறந்த போது (17 பிப்ரவரி 1986) அவருக்கு
உலகின் எல்லா நாடுகளிலும் அவ்ர் மேல்  அன்பும் மதிப்பும்
உள்ளவர்கள் ஏராளம்.

ஜேகே த‌ன்னை குரு என்று கூறிக் கொள்ள‌வில்லை.எல்லோரும்
ஆடை அணிவ‌து போல‌வே அணிந்து  கொண்டார்.எந்த‌ சாமியார்த்
த‌ன‌மும் அவ‌ரிட‌ம் இல்லை.அவ‌ருக்காக‌ உல‌கின் எந்த‌ மூலையிலும்
க‌த‌வுக‌ள் திற‌ந்துஇருந்த‌ன. எல்லோரும் அவ‌ருக்காக‌க் காத்து இருந்த‌ன‌ர். ஆனால் அவ‌ர் யாருக்காக‌வும் காத்திருக்க‌வில்லை.

த‌ன்னுடைய‌ பேச்சுக்க‌ள் எதுவும் ஒரு பிடிவாத‌மான‌ ம‌தக் கொள்கை ஆகிவிட‌க்கூடாது என்ப‌தில் ஜேகே மிகுந்த‌ க‌வ‌ன‌மாக‌ இருந்தார்.
எந்த‌ ஒரு ஒற்றைப்ப‌டையான‌ ம‌த‌, த‌த்துவ‌க்கொள்கையுட‌னும்
த‌ன்னை அவ‌ர் இணைத்துக்  கொள்ள‌ ம‌றுத்தார்.

ஜேகேயின் சில கருத்துக்களைக்கொடுத்துள்ளேன். மொழி
பெயர்த்தால் அவற்றின் அழகு கெட்டுவிடும். அவர் சொன்ன ஆங்கிலத்திலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். தமிழ்
ஆர்வலர்கள் மன்னிப்பார்களாக.

A consistent thinker is a thoughtless person, because he conforms to a pattern; he repeats phrases and thinks in a groove.

All ideologies are idiotic, whether religious or political, for it is conceptual thinking, the conceptual word, which has so unfortunately divided man.

I maintain that Truth is a pathless land, and you cannot approach it by any path whatsoever, by any religion, by any sect.

The end is the beginning of all things, Suppressed and hidden, Awaiting to be released through the rhythm Of pain and pleasure.

We all want to be famous people, and the moment we want to be something we are no longer free.

You must understand the whole of life, not just one little part of it. That is why you must read, that is why you must look at the skies, that is why you must sing and dance, and write poems and suffer and understand, for  all that is life.

The flowering of love is meditation.

Religion is the frozen thought of man out of which they build temples.

When one loses the deep intimate relationship with nature, then temples, mosques and churches become  important.

Hitler and Mussolini were only the primary spokesmen for the attitude of domination and craving for power that  are in the heart of almost everyone. Until the source is cleared, there will always be confusion and hate, wars  and class antagonisms.

இன்னொரு கிருஷ்ண‌மூர்த்தி இருக்கிறார். அவ‌ரும் ஜேகேயைப் போல‌வே உல‌க‌ம் முழுவ‌தும் சுற்றி அலைந்தார்.

ஜேகேவைப்போல‌ அன்னிபெச‌ன்ட்டின் ப‌யிற்சி கிடைக்காத‌வ‌ர் அந்த‌க் கிருஷ்ண‌மூர்த்தி. ஜேகேயைவிட‌ ந‌ம‌க்கு மிக‌ அணுக்க‌மான‌வ‌ர்.மிக‌ச் சாதார‌ண‌மான‌வ‌ர். அவ‌ரைப் ப‌ற்றியும் பின்ன‌ர் ஒருமுறை எழுதுகிறேன்.

வாழ்க‌ வ‌ள‌முட‌ன்!

கே.முத்துராம‌கிருஷ்ண‌ன், லால்குடி
முகாம்:இல‌ண்ட‌ன் மாந‌க‌ர்