மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.6.09

உயர்ந்த கோவிலில் ஒப்பற்ற விழா!


உயர்ந்த கோவிலில் ஒப்பற்ற விழா!

இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோவிலின் திருக்குட
நன்னீராட்டுப் பெருவிழா நாளை 1.7.2009 புதன் கிழமை காலை
9:30 முதல் 10:30 மணிக்குள் நடைபெறவுள்ளது.

திருக்கோவில் நிர்வாகத்தினரிடமிருந்து அடியவனுக்கு வந்த
அழைப்பிதழை உங்களுக்கும் உரிய அழைப்பிதழாகக் கீழே
கொடுத்துள்ளேன்.

“கோடி மாதவங்கள் செய்து குன்றினார் தம்மையெல்லாம்
வீடவே சக்கரத்தால் எறிந்து பின் அன்பு கொண்டு
தேடிமால் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தை
நாடி வாழ் நெஞ்சமே நீ நன்னெறியாகுமன்றே”

என்று அப்பர் சுவாமி அவர்களால் பாடப்பெற்ற அற்புதமான
திருத்தலம் அது!

ஸ்ரீ ராமபிரான் ஈஸ்வரனை சிவலிங்க வடிவில் பிரதிஷ்டை செய்தார்
என்பதாலும், சைவம், வைணவ மதத்தினர்களும் வந்துகூடி வழிபடுவதாலும்
இந்தியாவில் உள்ள இந்து ஆலயங்களில் இராமேசுவரம் முக்கியமான
தலமாகத் திகழ்கிறது. இந்தக் கோவிலில் அமைந்துள்ள 22 புண்ணிய
தீர்த்தங்களில் நீராடுவதால் உடலும் உள்ளமும் தூய்மை அடையும்

அதோடு தோஷங்களுக்குச் அது சிறந்த பரிகார ஸ்தலமாகும்.
ஆகவே விருப்பமுள்ளவர்கள் சென்று வாருங்கள்.
நாளைக்கே செல்ல வேண்டும் என்பதில்லை. ஒரு மண்டலத்திற்குள்
அதாவது 48 நாட்களுக்குள் நேரம் கிடைக்கும்போது எப்போது வேண்டு
மென்றாலும் சென்று வரலாம்.

தோஷம் என்றால் என்னவென்று கேட்பவர்களும், தோஷத்தின் மீது
நம்பிக்கை இல்லாதவர்களும், வழக்கம்போல மாநகராட்சி
அல்லது நகராட்சி குழாய்த் தண்ணீரிலேயே நீராடி மகிழலாம்.
என்னிடம் வந்து இது சம்பந்தமாகக் கேள்வி கேட்டுப் பிறாண்ட வேண்டாம்

இது இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கான பதிவு.
அதை மனதில் வையுங்கள்!


படத்தின் மீது கர்சரை வைத்து அமுக்கினால் படம் பெரிதாகத் தெரியும்!
+++++++++++++++++++++++++++++++++++++
48 நாட்கள் சுவாமியை வணங்குவது ஏன்?

எந்த தெய்வத்தின் பூஜிப்பதாக இருந்தாலும் அதனைத் தொடர்ந்து
ஒரு மண்டலம் (48 நாட்கள்) பூஜிக்க வேண்டும்.
இதற்கான காரணம் தெரியுமா? சூரியன் முதல் கேது வரை நவக்கிரகங்கள்
ஒன்பதாகும். மேஷம் முதல் மீனம் வரை ராசி மண்டலம் பன்னிரண்டாகும்.
அசுவதி முதல் ரேவதி வரை நட்சத்திர மண்டலம் 27 ஆகும்.
இந்த மூன்று மண்டலங்களின் கூட்டுத்தொகையான 48ஐ வழிபாட்டில்
ஒரு மண்டலம் என்று வகுத்துள்ளனர்.

9 planets + 12 rasis + 27 stars = 48

ஒருவருக்கு ஒரு செயல் நடைபெற கிரகங்களும், ராசிநாதர்களும்,
நட்சத்திர தேவதைகளும் துணை செய்ய வேண்டும் என்று கருதியே
மண்டல வழிபாடு ஏற்படுத்தப் பட்டுள்ளது.

குறிப்பிட்ட நோக்கத்தை மனதில் கொண்டு அந்நோக்கம் நிறைவேறுவதற்காக
ஒரு மண்டலம் தொடர்ந்து பூஜிப்பது மரபு. இந்நாட்களில், எந்த தெய்வத்தை
வழிபடுகிறோமோ அந்த தெய்வத்தின் கோயிலுக்குச் செல்லுதல்,
அந்த தெய்வத்திற்குரிய மூலமந்திரங்களை உச்சாடனம் செய்தல்,
மந்திரம் சொல்ல முடியாதவர்கள் அந்த தெய்வத்திற்குரிய எளிய
துதிப்பாடல்கள், கவசங்களைப் பாராயணம் செய்தல், சகஸ்ர நாமங்களை
ஜபித்தல், புஷ்பத்தால் அர்ச்சித்தல், தீபமிடுதல் போன்ற எளிய விதங்களில்,
நம் சக்திக்கு எவ்வழிபாட்டுமுறைகள் இயன்றதோ அம்முறையில் வழிபாடு
செய்தல் போதுமானது. ஒருமுகப்பட்ட மனதுடன் ஒருமண்டலம் செய்து
வரும் பிரார்த்தனைகள் நிச்சயம் நிறைவேறி வருவதை அனுபவத்தில்
உணரலாம். மண்டல வழிபாடு செய்வது என்பது மிகவும் மகத்தானது.
ஆனால், மண்டலவழிபாடு இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து செய்யப்பட
வேண்டும். ஒரு செயலில் முழுமையான வெற்றியை வேண்டுவோர் தமக்கு
விருப்பமான இஷ்டதேவதையை முன்னிறுத்தி தொடர்ந்து 48 நாட்கள்
பூஜித்து வர நிச்சயம் வெற்றி பெறுவது உறுதி.

(48 நாட்களைப் பற்றிய விளக்கக் கட்டுரை: நன்றி’ தினமலர்’)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++

நன்றி, வணக்கத்துடன்
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!

ஓம்கார் ஸ்வாமிஜி அவர்களுக்காக ஒரு பதிவு!


ஓம்கார் ஸ்வாமிஜி அவர்களுக்காக ஒரு பதிவு!

இதற்கு முந்தைய பதிவில் மதிப்பிற்குரிய நமது ஸ்வாமிஜி அவர்கள்
இட்ட பின்னூட்டத்தைக் கீழே கொடுத்துள்ளேன்.
அந்த பின்னூட்டத்திற்குப் பதில் சொல்லும் முகமாக இந்தப் பதிவு

////////Blogger ஸ்வாமி ஓம்கார் said...
திரு சுப்பையா வாத்தியார் அவர்களுக்கு,
ஓரை - ஹோரா எனும் இந்த தகவல் பயனுள்ளது என்றாலும்,
அட்டவணையை கொடுத்து அதை பயன்படுத்து என சொல்லுவது
சரியான வழிகாட்டுதலா?
கேள்விகள்
---------
1)ஏன் ஞாயிறு 6 முதல் 7 வரை சூரியன் ஹோரையாக இருக்கிறது?
7 முதல் 8 வரை ஏன் சுக்கிரன் ஹோரையாக வருகிறது? சுக்கிரனுக்கு
பதில் வேறு கிரகம் வரக்கூடாதா?
2)ஏன் 7 கிரகங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது?
ராகு கேது ஏன் இல்லை? நவக்கிரங்கள் தானே?
சப்த கிரகங்கள் பயன்படுத்தியதன் நோக்கம் என்ன?
3)நேரங்கள் சூரிய உதயத்திற்கு தக்க மாறுமா?
போன்ற கேள்விகளுக்கு விளக்கத்துடன் இத்தகவல்களை
வெளியிட்டால் நல்லது. இல்லை என்றால் இதை விட மூட நம்பிக்கை
வேறு எதுவும் இல்லை என்ற நிலை எதிர்காலத்தில் வரும்.
உங்கள் பாணியில் விளக்குவீர்கள் என காத்திருக்கிறோம்...///////
===================================================

நன்றி ஸ்வாமிஜி; இந்த எளியவனின் பதில்:
(விளக்கங்கள் சரிதானா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்)
++++++++++++++++++++++++++++++++
நல்ல காரியங்கள் வெற்றிபெற வேண்டும்.
அதுதான் அதைச் செய்பவர்களுக்கு நல்லது
ஆகவே அவற்றைக் காலமறிந்து செய்யுங்கள் என்றார்கள்
நம் முன்னோர்கள்
சொன்னதோடு நிற்காமல் அதற்கான வழியையும்
சொல்லிவிட்டுச் சென்றார்கள்.
அதுதான் ஓரை அல்லது ஓரை நேரம்.

சுப ஓரைகளில் செய்யப்படும் செயல்கள் வெற்றிபெறும்
என்பது அவர்களின் வாக்கு!
ஆகவே செய்யும் நல்ல செயல்களை ஓரை பார்த்துச் செய்யுங்கள்.
வெற்றி நிச்சயம்!

ஓரை என்பது சூரிய உதயத்தில் இருந்து கணக்கிடப்படுகிறது.
ஒரு நாளின் கிழமை அதன் அதிபதியின் முதல் ஓரையாக
கொள்ளப்படுகிறது. உதாரணமாக ஞாயிறு காலை முதல் ஒரு மணி
நேரம் (6-7 மணி) சூரியனின் ஓரை.

இதையடுத்து 7-8 மணி வரை சுக்கிரன் ஓரை,
8-9 மணி வரை புதன் ஓரை,
9-10 வரை சந்திரன் ஓரை,
10-11 வரை சனி ஓரை,
11-12 மணி வரை குரு ஓரை,
12-1 மணி வரை செவ்வாய் ஓரை.
இதையடுத்து மீண்டும் சூரியன் ஓரை துவங்கும்.

இதேபோல் செவ்வாய்க்கிழமை என்றால்
அன்று காலை 6 முதல் 7 மணி வரை செவ்வாய் ஒரை,
புதன் கிழமை என்றால் காலை 6-7 மணி வரை புதன் ஓரை,
அதன் பின் ஒவ்வொரு மணி நேரமும் மேலே கூறப்பட்டுள்ள
வரிசைப்படி ஓரை கணக்கிடப்படுகிறது.

பொதுவாக காலை 6 மணி என்பதனை சராசரி சூரிய உதய
நேரமாகக் கொண்டுதான் ஓரைகள் கணக்கிடப்படுகின்றன.

சரியான சூரிய உதயத்தை வைத்துக் கணக்கிட்டால் பலன்கள்
இன்னும் சூப்பராக இருக்கும்.

அதற்கு சூரிய உதயம் பற்றிய விவரம் தேவை; உங்களுக்காக
சூரிய உதய அட்டவணையையும் கீழே கொடுத்துள்ளேன்.

+++++++++++++++++++++++++++++++++++++


+++++++++++++++++++++++++++++++++++++++++++
ஏழு கிரகங்களுக்கு மட்டுமே ஓரை உண்டு.
ராகு, கேது சாயா கிரகங்கள் என்பதாலும்,
அவற்றிற்கு சுற்றுப்பாதை இல்லாத காரணத்தாலும்
அவற்றிற்கு ஓரை கிடையாது

ஓரைகளை யார் உருவாக்கினார்கள் என்று கேள்வி கேட்காதீர்கள்.
அவைகள் ரிஷிகளால் உருவாக்கப்பட்டவை
அதோடு கேள்விகளுக்கு அப்பாற்பட்டவை.
பிடித்திருந்தால், ஒப்புதல் இருந்தால் கடைப்பிடியுங்கள்
இல்லாவிட்டால் கடாசி விட்டு நடையைக் கட்டுங்கள்.
அதனால் வேறு யாருக்கும் நஷ்டமில்லை!

பூமத்திய ரேகை, தீர்க்க ரேகை ஆகியவற்றை நமது முன்னோர்கள்
எப்படி உருவாக்கினார்களோ அதேபோல்தான் ஓரைகளும்
உருவாக்கப்பட்டன.

சூரியனின் சுற்றுப்பாதை, சூரியனுக்கு அருகில் இருக்கக் கூடிய கிரகங்கள்,
தொலைவில் இருக்கக் கூடிய கிரகங்கள், அதனுடைய ஈர்ப்பு சக்தி,
அதன் ஒளிக்கற்றைகள் பூமியை அடைவதற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கான
கால நேரம் இதை எல்லாம் அடிப்படையாக வைத்துதான் நமது முன்னோர்கள்
ஓரைகளை கணக்கிட்டுள்ளனர்.

சூரியன் மற்றும் அதன் அருகே அல்லது தொலைவில் உள்ள கிரகங்களின்
அமைப்பைக் கொண்டு வானவியல் அறிஞர்கள் ஓரைகளை உருவாக்கினர்.
இதன்படி வாரத்தின் முதல் நாளான ஞாயிறன்று முதல் ஓரையை சூரியனுக்கு
அளித்தனர்.

சூரியனுக்கு அருகிலேயே சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள் உள்ளன.
இவற்றில் சூரியனுக்கு மிக அருகில் புதன் இருப்பதாலும்,
அது காற்று (வாயு) கிரகம் என்பதாலும் (ஓரை வரிசையில்)
அதற்கு 2வது இடம் வழங்கினர்.

இதையடுத்து 3வது இடம் சுக்கிரனுக்கு,
4வது இடம் சந்திரனுக்கும்,
5வது இடம் சனிக்கும்,
6வது இடம் குருவுக்கும்,
7வது இடம் செவ்வாய்க்கும் வழங்கினர்.
இதற்கு சுற்றுப்பாதை, கிரகங்களின் கதிர் வீச்சுதான் காரணம்.

இவற்றில் சுக்கிரன் ஓரை, புதன் ஓரை, குரு ஓரை ஆகிய மூன்றும்
நல்ல ஓரைகள் எனப்படுகிறது.

வளர்பிறை காலத்தில் சந்திரன் ஓரையும் நல்ல ஓரையாகவே
கருதப்படுகிறது. இந்த ஓரைகளில் திருமணம், சீமந்தம்,
குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்துதல், பெண் பார்ப்பது,
பதவியேற்பது, வேலைக்கு விண்ணப்பிப்பது, வங்கி கணக்கு துவங்குதல்
ஆகியற்றைச் செய்யலாம்.

இதில் சனி ஓரை ஒரு சில விடயங்களுக்கு நன்றான பலனைத் தரும்.
கடனை அடைப்பதற்கு ஏற்ற ஓரையாக சனி ஓரை கருதப்படுகிறது.
உதாரணமாக சனி ஓரையில் ஒருவர் தனது கடனை அடைத்தால்,
அவர் மீண்டும் கடன் வாங்குவதற்கான சூழல் ஏற்படாது
என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

இதேபோல் பழைய பாக்கி/கணக்குகளை தீர்ப்பது,
ஊழ்வினை (பூர்வ ஜென்மப் பாவம்) தீர்ப்பது,
நடைபயணம் துவங்குவது, மரக்கன்று நடுதல்,
விருட்சங்கள் அமைத்தல், அணைக்கட்டு நிர்மாணிக்கும்
பணிகளை துவக்குவது போன்றவற்றிற்கு சனி ஓரை சிறப்பானது.

சூரியன் ஓரையில் அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள்,
வழக்கு தொடர்பான விடயங்கள் மேற்கொள்ள சிறப்பானதாக இருக்கும்.

நிலம் வாங்குவது, விற்பது, அக்ரிமென்ட் போடுவது,
சகோதர/பங்காளி பிரச்சனைகள், சொத்து பிரித்தல்,
உயில் எழுதுவது, ரத்த தானம், உறுப்பு தானம்,
மருத்துவ உதவிகள் செய்வது இவற்றையெல்லாம்
செவ்வாய் ஓரை மேற்கொள்ளலாம்.
இந்த ஓரையில் ஆயுதப் பிரயோகத்தை துவங்கினால்
சக்தி வாய்ந்ததாக இருக்கும். (Starting a war)

வளைகுடா போர் கூட செவ்வாய் ஓரையில்தான் துவங்கப்பட்டது.
செவ்வாய் அழிவுக்கு உரிய கிரகம் என்பதாலும்,
அதிகாரத்தை பிரயோகம் செய்து ஒன்றை கட்டுக்குள்
கொண்டு வரக் கூடியது செவ்வாய் என்பதாலும்,
வளைகுடாப் போர் நீண்ட காலம் நீடித்தது.
இதன் காரணமாக பெரிய அழிவு ஏற்பட்டதற்கும் செவ்வாய்தான் காரணம்.

மனித வாழ்வில் ஓரைகளின் பங்களிப்பு முக்கியமானது.
நம்மை அறியாமலேயே ஓரைகளின் கதிர்வீச்சை உணர முடியும்.
அதை உணர்ந்து நடந்தால் நலம் பெறுவீர்கள்.
அதோடு அடியேன் மாய்ந்து மாய்ந்து பாடம் நடத்துவதின் நோக்கமும்
நிறைவேறும்:-)))

நன்றி, வணக்கத்துடன்
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!

29.6.09

உங்களில் யார் அடுத்த யுவகிருஷ்ணா ?



உங்களில் யார் அடுத்த யுவகிருஷ்ணா ?

தொலைக்காட்சி பார்ப்பவர்கள் அடுத்த பிரபு தேவாவிற்காக அல்லது
அடுத்த உதித் நாராயணனுக்காக மண்டையைப் பிய்த்துக்
கொண்டிருக்கிறார்கள்

நமக்கு, பின்னூட்டங்களில் நமது மண்டையைப் பிய்ப்பவர்கள் இங்கேயே
இருப்பதால், தொலைக்காட்சியை மறந்து விட்டு வலைப் பதிவுகளிலேயே
கவனத்தைச் செலுத்துவோம். இருக்கிற முடியாவது மிஞ்சட்டும்

உங்களில் யார் அடுத்த மன்மோகன்சிங் ? என்று கேட்டுப் பதிவு போட
ஆசை. அதெல்லாம் கொஞ்சம் ஓவராகப் பட்டதால், நமது லெவலுக்கே
சிந்திப்போம் என்று முடிவு செய்து இந்தப் பதிவைப் பதிந்துள்ளேன்!

உங்களில் யார் அடுத்த யுவகிருஷ்ணா?

யுவகிருஷ்ணா யார் என்று கேட்பவர்கள் பதிவை விட்டு விலகவும்!

அய்யா, சாமி, நான் நேற்றுத்தான் பிறந்தேன் என்று சொல்பவர்கள்
இந்த வலைப்பூவைப் படித்துவிட்டுப் பின் இங்கே வரவும்

அந்த வலைப்பூவின் சைடு பார் மேட்டர்களும் முக்கியமானது
அவற்றையும் படித்துவிட்டு வரவும். அப்போதுதான் இந்தப் பதிவின்
தலைப்பு உங்களுக்குப் பிடிபடும்.

சரி, விஷயத்திற்கு வருகிறேன்.

யுவகிருஷ்ணாவின் வெற்றி ஃபார்முலா என்ன?

எதை எழுதினாலும் நன்றாக ரசிக்கும்படி எழுதுகிறார்.

நமீதாவைப் பற்றி எழுதினாலும் சரி, நயந்தாராவைப் பற்றி
எழுதினாலும் சரி, ஓல்ட் மாங்கைப் பற்றி எழுதினாலும் சரி
அல்லது ஓமந்தூர் ரெட்டியாரைப் பற்றி எழுதினாலும் சரி
சுண்டக்கஞ்சி அல்லது சுண்டல் வகையறாவைப் பற்றி
எழுதினாலும் சரி நன்றாக விலாவரியாக எழுதுகிறார்.

எல்லோராலும் அப்படி எழுத முடியுமா? முடியாது!
அதற்குக் கொடுப்பினை வேண்டும். பண்ருட்டியில் இருந்து கொண்டு
பரங்கிமலை ஜோதியைப் பற்றி எப்படி எழுத முடியும்?

வேறு வழியில்லையா?

இருக்கிறது!

சுப ஒரைகளில் எந்தக் காரியத்தைச் செய்தாலும் வெற்றி உண்டு என்று
பழைய ஜோதிட நூல்கள் சொல்கின்றன.

ஆகவே சுப ஓரைகளில் பதிவை எழுதுங்கள். சுப ஒரைகளிலேயே
பதிவை உள்ளடுங்கள். வெற்றி நிச்சயம். நீங்கள்தான் அடுத்த
யுவகிருஷ்ணா!
------------------------------------------------------------------
ஒரை என்பது என்ன?
Hora is a 24-hour period cycle ruled by the 7 planets
sun, moon, mars, mercury, jupiter, venus and sun all ruling planet.

அட்டவணை கீழே உள்ளது!
படத்தின் மீது கர்சரை வைத்து அமுக்கினால் படம் பெரிதாகத் தெரியும்!

வாழ்க வளமுடன்!

27.6.09

கீழே நீ தோண்டு; மேலே நான் தோண்டுகிறேன்!

கீழே நீ தோண்டு; மேலே நான் தோண்டுகிறேன்!


மனிதன் ஆசைகள் மிக்கவன். மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை
என்று ஏதாவது ஒரு ஆசையில் முழுகிக் கிடக்கின்றான். அவ்வாறில்லாத
மனிதனைப் பார்ப்பது அபூர்வம்.

ஆசைப்படாதே; ஆசைதான் உன்னுடைய துன்பத்திற்கு எல்லாம் காரணம்
என்கிறது மெய்ஞானம்,

ஆசைப்படுவதை நிறுத்தாதே!; ஆசைப்படுவதை நிறுத்தினால் நீ முடங்கிப்
போய்விடுவாய். உன் வளர்ச்சி நின்று போய்விடும் (your prosperiy ends there!)
என்கிறது விஞ்ஞானம்.

எது உண்மை? எதைக் கடைப்பிடிப்பது என்பது தெரியாமல் பாமர மனிதன் அல்லாடுகிறான்!

விஞ்ஞானம் எல்லாவற்றையும் தோண்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. சக
மனிதனையும் தோண்டிப்பார்க்கச் சொல்கிறது. மெய்ஞானத்தை எல்லாம்
குப்பையில் போட்டு விட்டு என்னுடன் வா என்கிறது.

மந்திரமாவது, மண்ணாங்கட்டியாவது என்கிறது?

அச்சேறிய குப்பைகள் எல்லாம் உண்மையானவை போன்று தோற்றமளிக்கும்,
நம்பாதே என்கிறது!

திருஞானசம்பந்தரும், அருணகிரியாரும் உணர்ந்து எழுதியவற்றை எல்லாம்
குப்பை என்கிறது

வராஹிமிஹிரரும், பராசுரரும் எழுதி வைத்த ஜோதிடக்கலைக்கு நிருபணம்
கேட்கிறது.

இறைவனை அடையாளம் காட்டு என்கிறது?

அணுகுண்டைத் தயாரிக்கும் தொழில் நுட்பத்தை பல நாடுகளுக்குக் கொடுத்திருக்கிறது.

ஆர்.டி.எக்ஸ் வெண்டிகுண்டு தயாரிக்கும் தொழில்நுட்பத்தை இளைஞர்களுக்குக்
கற்றுக் கொடுத்திருக்கிறது

லட்சக்கணக்கான பாட்டில்கள் மது தயாரிக்கும் தொழில் நுட்பத்தைச் சில தொழில் அதிபர்களுக்குக் சொல்லிக்கொடுத்திருக்கிறது

இன்றையத் தேதியில் லட்சக்கணக்கான இளைஞர்கள் சரக்கடித்துவிட்டு சந்தோஷத்தைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

எல்லாம் மாயை (illusion) என்பதை மனிதன் எப்போது உணர்வான்?

உணர்வான் என்பதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை!

சிலர் உணரலாம். சிலர் உணராமல் போகலாம்.

அதனால் யாருக்கு நஷ்டம்?

யாருக்கும் நஷ்டமில்லை!

மனிதன் கடவுளின் துகழ்களைத் தேடிக்கொண்டிருக்கிறான்.

ஆனால் காலதேவனோ மனிதனின் சாம்பலை வேண்டிய மட்டும் பார்த்து விட்டான். இன்னும் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

மனிதன் கீழே தோண்டிக்கொண்டிருக்கிறான். காலதேவன் மேலே தோண்டிக் கொண்டிருக்கிறான்.

காலதேவன் சமீபத்தில் போட்டபோடுதான். உலகப் பொருளாதாரச் சீரழிவு.
(Global economical & financial crisis.) அது சரியாக இன்னும் சில ஆண்டுகள்
ஆகும்.

அடுத்ததாக காலதேவன் எதைத் தோண்டப்போகிறான் என்பதைப்
பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

வாழ்க வளமுடன்!

இறைவன் எதைக் கூட்டிற்கு வந்து கொடுப்பதில்லை?

இறைவன் எதைக் கூட்டிற்கு வந்து கொடுப்பதில்லை?

1
மக்களால் இன்றிருப்பதைப் போல என்றும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்
மனதையும் அப்படியே வைத்திருந்தால்!

2
எல்லோருக்கும் பிரச்சினைகள் உள்ளன; சிலர் மற்றுமே அவற்றை
மறைப்பதில் கெட்டிக்காரர்கள்.

3
வாழ்க்கையில் பத்து சதவிகிதம் நமக்கு நடப்பதை வைத்து அல்லது
கிடைப்பதை வைத்து; மீதம் 90% அதை நாம் எப்படி எதிர்கொள்கிறோம்
என்பதை வைத்துத்தான்!

4
சிலசமயம் மகிழ்ச்சி புன்னகையை வரவழைக்கும்; பல சமயங்களில்
புன்னகைதான் மகிழ்ச்சியைக் கொண்டு வந்து நிறுத்தும்!

5
தோல்விகளைக் கண்டு துவளாதீர்கள்; தோல்விகள்தான் உங்களுக்கு
வெற்றிக்கான பாதையை அடையாளம் காட்டும்!

6
நமக்குக் கிடைத்துள்ளவைகள் அவற்றை இழக்கும்போது மட்டுமே
நம் கண்ணில் படும்; நமக்குக் கிடைக்காதவைகளின் மதிப்பு அவைகள்
கிடைத்த பிறகே நம் கண்ணில் படும்!

7
மற்றவர்களின் தவறுகளில் இருந்து நீ கற்றுக்கொள்;
உன் தவறுகளில் இருந்து ஒவ்வொன்றையும் நீ கற்றுக் கொள்ளலாம்
என்றால் உன் ஆயுள் பற்றாது!

8
ஒருவரை உதாசீனப் படுத்த ஒரு விநாடி போதும்
ஒருவரை விரும்பி ஏற்றுக் கொள்ள சில மணி நேரம் ஆகும்
ஒருவரை நேசிக்கச் சில நாட்கள் ஆகும்;
ஒருவரை மறக்க வாழ்நாள் முழுமையும் ஆகும்!

9
உன்னைச் சமாளிக்க மூளையைப் பயன்படுத்து;
மற்றவர்களைச் சமாளிக்க இதயத்தைப் பயன் படுத்து!

10
பணத்தை இழந்தால் அது குறைவான இழப்பே!
நண்பனை இழந்தால் அது குறையுள்ள இழப்பே!
விசுவாசத்தை இழந்தால் மீண்டும் பெறமுடியாத இழப்பு!

11
ஒருவன் ஒருமுறை உங்களுக்கு துரோகம் இழைத்தால் அது
அவனுடைய தவறு!; அவனே உங்களுக்கு இரண்டாவதுமுறை
துரோகம் இழைத்தால் அது உங்களுடைய தவறு!

12
கடவுள் எல்லா பறவைகளுக்கும் உணவைக் கொடுக்கிறார்.
ஆனால் அதை, அவர் பறவைகளின் கூட்டிற்கு வந்து கொடுப்பதில்லை!

---------------------------------------------------------------------
எது மிகவும் நன்றாக உள்ளது?

வாழ்க வளமுடன்!

20.6.09

என்னடா ஆயிற்று பாகற்காய்க்கு?


என்னடா ஆயிற்று பாகற்காய்க்கு?

ஆசிரமம் ஒன்றில் முற்றும் துறந்த சந்நியாசி ஒருவர் இருந்தார்.
அவருக்கு நான்கு இளம் சீடர்கள் இருந்தார்கள்.

முற்றும் துறந்தவருக்கு எதற்கு ஆசிரமம்? எதற்கு சீடர்கள்?
என்கிறீர்களா. அதுவும் சரிதான். அதை எல்லாம் நானும் கேட்டுக்
கொண்டிருந்தால் கதையை எப்படி நகர்த்துவது?

சில விஷயங்களைக் கேட்காமல் கருத்தை மட்டும் பார்ப்பதுதான்
நமக்கு நல்லது. ஆகவே கதைக்கு வருகிறேன்.

அசிரமத்தின் அன்றாடத் தேவைகளை, அந்த ஆசிரமத்தின் மேல்
மதிப்பு வைத்திருந்த - உங்கள் மொழியில் சொன்னால் அந்த
ஆசிரமத்தின்மேல் பிடிப்பு அல்லது காதல் கொண்டிருந்த உள்ளூர்
மக்கள் பார்த்துக் கொண்டார்கள்.

ஆசிரமம் செழிப்பாக இருந்தது. காலையிலும், மாலையிலும் சாமியார்,
மக்களை நல்வழிப்படுத்தும் முகமாக உரை நிகழ்த்துவார். கூட்டு
வழிபாடு செய்வார்.

ஒரு நாள், அந்த நான்கு சீடர்களில் மூன்று பேர்கள் சாமியாரிடம்
வந்து,” ஐயா நாங்கள் அருகிலிருக்கும் புண்ணிய நதிகளிலும், நீர்
நிலைகளிலும் தீர்த்தமாடிவிட்டுவர ஆசைப் படுகிறோம். அனுமதி
கொடுங்கள்” என்றார்கள்

”ஏன் நம்மூர் ஆற்றிற்கு என்னாயிற்று?” என்று கேட்டார்.

”அதில்தான் தினமும் நீராடிக்கொண்டிருக்கிறோமே! ஒரு மாறுதலுக்காக
மற்ற புண்ணிய நதிகளிலும் நீராடிவிட்டுவர விரும்புகிறோம்” என்றார்கள்.

“சென்று வாருங்கள்” என்றார்.

அவர்களில் ஒருவன்,”ஐயா நீங்களும் வர வேண்டும்!” என்றான்.

“இல்லை, நீங்கள் மட்டும் சென்று வாருங்கள்!” என்றார்

மற்ற இருவரும் இப்போது அவனுடன் சேர்ந்து வலியுறுத்தவே, சாமியார்
சுற்று முற்றும் பார்த்தார்.

அருகில் இருந்த பாகற்காய் கொடியில் நிறையக் காய்கள் காய்த்துத்
தொங்கிக் கொண்டிருந்தன.

அவற்றில் ஒன்றைப் பறித்து அவர்களிடம் கொடுத்தவர், இப்படிச் சொன்னார்:

“இந்தக்காயை நான் என்று நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நீராடும்
இடங்களில் எல்லாம் இதையும் மூன்று முறைகள் நமச்சிவாயா என்று
சொல்லி நீரில் முக்கி எடுத்துக் கொண்டு வாருங்கள்”

அவர்கள் புறப்பட்டுச் சென்றார்கள். உள்ளூர் ஆசாமி ஒருவன் அவர்களுக்கு
வாகனம் ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்திருந்தான். இரண்டு நாட்கள்
பயணம் மேற்கொண்டு நான்கு நதிகளில் நீராடிவிட்டுத் திரும்பினார்கள்.

திரும்பி வந்தவுடன், சாமியாரை நெடுஞ்சான் கிடையாக விழுந்து
வணங்கினார்கள்.

சாமியார் கேட்டார்,”பாகற்காய் என்ன ஆயிற்று?”

“நீங்கள் சொன்னபடியே பாகற்காயையும் நீராட்டிக் கொண்டு வந்திருக்கிறோம்”

“இன்று அதைச் சமையலில் சேர்த்து விடுங்கள்” என்றார் அவர்.

அப்படியே செய்தார்கள்.

மதியம் சாப்பிடும்போது, சாமியார் கேட்டார்,” பாகற்காயில் ஏதாவது
மாறுதல் தெரிகிறதா?”

சீடர்கள் மூவரும் ஒருமித்த குரலில் சொன்னார்கள்,” இல்லை ஐயா,
எப்போதும் போல அது கசப்பாகத்தான் இருக்கிறது!”

இப்போது சாமியார், அவர்களுக்குப் புரியும்படியாக அழுத்தமான குரலில்
சொன்னார்.

“எத்தனை புண்ணிய நிதிகளில் முக்கி எடுத்தாலும் பாகற்காயின் குணம்
போகவில்லை அல்லவா? அதுபோலத்தான் எத்தனை புண்ணிய நதிகளில்
நீராடினாலும் அல்லது எத்தனை ஆலயங்களில் வழிபட்டாலும் மனிதனின்
இயற்கைக் குணம் மாறாது!”

+++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆமாம் மனிதனின் இயற்கைக் குணம் என்றுமே மாறாது.

அதைப் பிறவிக் குணம் என்பார்கள்

அதை வலியுறுத்திச் சொல்லவே இந்தக் கதை.

மிளகாய் என்றுமே மிளகாய்தான்
மாங்காய் என்றுமே மாங்காய்தான்
புளியங்காய் என்றுமே புளியங்காய்தான்

எத்தனை இனிப்புப் போட்டுச் சமைத்தாலும் அவற்றின் இயற்கைத் தன்மை மாறாது!

அதுபோல கஞ்சன் என்றுமே கஞ்சன்தான். எத்தனை செல்வம் வந்தாலும்,
அந்தக் கஞ்சத்தன்மை மாறாது. அதுபோல காமுகன் என்றும் காமுகன்தான்.
எத்தனை பெண்களை அவனுக்குக் கட்டிவைத்தாலும் அவன் திருந்த
மாட்டான். உலகில் உள்ள அத்தனை அழகான பெண்களையும்
அவனுக்குக் கட்டி வைப்பதாகச் சொன்னாலும், தேவமங்கைகள் என்று
சொல்கிறார்களே, அவர்கள் கிடைப்பார்களா? என்றுதான் கேட்பான்.

அதுபோல கோபம், சோம்பேறித்தனம், பொறாமை, படபடப்பு, பிடிவாதம்
என்றுள்ள பல மனித குணங்கள் பிறவியிலேயே வருவது. அது என்றுமே
மாறாதது. மனிதன் செத்துச் சாம்பலாகும் வரை அவனுடனேயே இருப்பது.

எந்தக் கொம்பனாலும் அவற்றை மாற்ற முடியாது. அல்லது மாற்றிக் கொள்ள
முடியாது.

ஏன் அப்படி?

அதுதான் வாங்கி வந்த வரம்!

உங்கள் மொழியில் சொன்னால், பிறந்த லக்கினத்தாலும், மற்றும் பிறந்த
நேரத்தில் உள்ள கிரக அமைப்புக்களாலும் ஏற்படுவது அது!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Benefic planets such as Jupiter, Venus, Mercury and the luminous
Moon do very well in first house. However, the presence of the
malefics such as Rahu, Ketu, Saturn and Mars can create very
difficult situations in life. Strongly afflicted, it produces difficult
birth or even infant mortality. It can also cause psychological,
emotional and physical disorders.

லக்கினத்துடன் சந்திரன், குரு, சுக்கிரன், புதன் போன்ற நன்மையளிக்கும்
கிரகங்கள் சம்பந்தப் படும்போது மனிதன் பல நல்ல குணங்களைப்
பெற்றவனாக இருப்பான். சனி, ராகு, கேது, செவ்வாய் போன்ற தீய
கிரகங்கள் சேரும்போது மன வக்கிரங்கள், உணர்வுச் சீரழிவுகள்
கொண்டவனாக ஜாதகன் இருப்பான்.

(லக்கினத்தைப் பற்றிய அலசல் தொடரும்)






வாழ்க வளமுடன்!

18.6.09

கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்?


கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்?

தலைப்பு - விடுபட்டவை
கோள்சாரத்தைப் (Transit of planets) பற்றிய புலிப்பாணி முனிவரின் பாடல்:

"கேளப்பா குருமூன்றில் கலை தானெட்டு
.......கேடு செய்யும் சனி ஜென்மம் புந்தி நாலில்
சீளப்பா சேயேழு செங்கதிரோன் ஐந்தும்
......சீறிவரும் பாம்பு நிதியில் தோன்ற
ஆரப்பா அசுரகுரு ஆறிலேற
......அப்பனே திசையுயினுடைய வலுவைப்பாரு
மாளப்பா குற்றம்வரும் கோச்சாரத்தாலே
......குழவிக்கு நிரியாணங் கூர்ந்து சொல்லே!"
-------------------------------------
குரு = 3ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும்
கலை = சந்திரன் = 8ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும்
சனி = ஜென்மம் = 1ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும்
புந்தி = புதன் = 4ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும்
சேய் = செவ்வாய் = 7ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும்
செங்கதிரோன் = சூரியன் = 5ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும்
சீறிவரும் பாம்பு = ராகு & கேது = 2ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும்
அசுரகுரு = சுக்கிரன் = 6ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும்

ஜாதகனுக்குத் துன்பம் மிகுந்திருக்கும். அல்லது காரிய சித்தி,
காரிய ஜெயம் இருக்காது.அந்தக் காலகட்டத்தில் நல்ல திசை
அல்லது நல்ல திசையின் புத்தி (Sub period of a benefic planet)
நடந்து கொண்டிருந்தால் இந்தக் கோச்சாரப்பலன் செல்லுபடியாகாமல்
போய்விடும். இல்லையென்றால் படுத்தி எடுக்கும்.

கோச்சாரத்தைவிட தசா புத்திதான் முக்கியமானது!
தசாபுத்தியும் சரியில்லை என்றால் அதுவும் சேர்ந்து கொண்டு சாத்தும்
சாத்தும் என்றால் என்னவென்று தெரியுமல்லவா?

சரி, இந்தப் பாடலின் முக்கியத்துவம் என்ன?
ஒவ்வொரு கிரகத்திற்கும் கோச்சாரத்தில் 12 ராசிகளிலும் வலம் வரும்
அமைப்பு இருந்தாலும், இந்தக் குறிப்பிட்டுள்ள இடங்கள் மட்டுமே
ஒவ்வொரு கிரகத்திற்கும் அதிகக் கேடானது. கிரகத்திற்கல்ல -
அதை அமைப்பாகக் கொண்டுள்ள ஜாதகனுக்குக் கேடானது என்று
வைத்துக் கொள்ளுங்கள். அதைச் சொல்லவே இந்தப் பாடல்

அர்த்தம் ஆகியதா கண்மணிகளா?

வாழ்க வளமுடன்!

15.6.09

நேர்மைக்கு ஏற்பட்ட சோதனை!

நேர்மைக்கு ஏற்பட்ட சோதனை!

ஒரு விவசாயி தன் வீட்டின் அருகில் இருந்த பேக்கரிக்குத்
(ரொட்டிக் கடைக்காரனுக்கு) தினமும் இரண்டு கிலோ வெண்ணெயை விலைக்குக் கொடுத்துக் கொண்டிருந்தான்.

ஒரு நாள் கடைக்காரன் வெண்ணெயை எடை போட்டுப் பார்க்க,
வந்தது பிரச்சினை.

வெண்ணெய் 100 கிராம் அளவு எடை குறைவாக இருந்தது.

கோபமடைந்த பேக்கரிக்காரன், அன்றே பிரச்சினையை நீதி மன்றத்திற்குக் கொண்டு சென்று விட்டான்.

விசாரனை நடந்தது.

விவசாயி, தன் பதிலை நீதிபதியிடம் இப்படிச் சொன்னான்.

“சாமி, என்னிடம் முறையான படிக்கற்கள் இல்லை. தராசு மட்டுமே உண்டு. ஆரம்பகாலம் முதல் நான் கடைப் பிடிக்கும் வழக்கம் இதுதான். பேக்கரிடம் இருந்து இரண்டு கிலோ ப்ரெட் வாங்கிக் கொண்டுவருவேன். அதைப் பயன்படுத்தி, அதற்குச் சமமான அளவு வெண்ணேயை, அவருக்குக்
கொடுத்து வருகிறேன். இதில் தில்லிமுல்லுவிற்கெல்லாம் எந்த இடமும் இல்லை”

அதிரடியாக, பேக்கரிடமிருந்து இரண்டு கிலோ ப்ரெட் பாக்கெட் எடுத்துக்
கொண்டு வரப்பட்டு நீதி மன்றத்தில் எடை போட்டுப் பார்க்கப் பெற்றது.

அதன் அளவில் 100 கிராம் எடை குறைவாக இருந்தது.

நீதிபதி வழக்கைத் தள்ளுபடி செய்ததோடு, பேக்கருக்கு ஆயிரம் டாலர்
அபராதம் விதித்து அனுப்பினார்
--------------------------------------------------
ஆகவே யாரையும், குறைகூறும் முன்பு நம் பக்கம் எல்லாம் ஒழுங்காக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்வது அவசியம்.

வாழ்க வளமுடன்!

13.6.09

நீயா? நானா?

நீயா? நானா?

பழைய திரைப்படம். நாயகி அழகாக இருப்பார். பிடரியை மறைக்கும்
நீண்ட முடி. அதற்குத் துணை நிற்கும் மல்லிகைச் சரம்.

எவரையும் ஈர்க்கும் புன்னகை சிந்தும் முகம்.

அங்கே வரும் பெரியவர் ஒருவர், அந்தப் பெண்ணின் அழகில் மகிழ்ந்து
அவள்தான் தன் மகனுக்கு ஏற்ற பெண் என்ற முடிவிற்கு வந்து,
அவளுடன் பேசத்துவங்குவார். அவர் அவளுடைய உறவினர்.ஆகவே
அந்த மங்கை நல்லாளும் தயக்கமின்றி அவர் கேள்விகளுக்குப் பதில்
சொல்வாள்.

தன் சட்டைப் பையில் இருந்து ஒரு ஒற்றை ரூபாய் நாணயத்தைத் தன்
விரல்களால் சுண்டி விட்டுப் பிடித்து உள்ளங் கைகளிக்கிடையே
மறைத்து வைத்துக் கொண்டு கேட்பார்:

“பூவா? தலையா? சொல்லம்மா பார்க்கலாம்?”

பெண் முகம் மலர்ந்து சொல்வாள்:

“பூ!”

அவர் தனது கைகளைத் திறந்து காட்டுவார். என்ன ஆச்சரியம்?

வந்தது பூ தான்.

உடனே பெரியவர் சொல்வார்.” வந்தது பூ; நீ தான் என்னுடைய மருமகள்!”

அந்தப் பெண் அவரை மடக்கும் விதமாகக் கேள்வி கேட்பாள்

“தலை விழுந்திருந்தால் என்ன சொல்வீர்கள்?”

“நான்தான் உனக்கு மாமனார்!”

அவருடைய சாமர்த்தியத்தைப் பாருங்கள்.

பூ விழுந்ததால் அவள்தான் மருமகள் என்றவர், தலை விழுந்திருந்தால்
நான்தான் உன்னுடைய மாமனார் என்றிருப்பாராம். எது விழுந்தாலும்
தான் தான் ஜெயிக்க வேண்டும் என்னும் தன்முனைப்பின் வெளிப்பாடு அது!
====================================================
இப்படித்தான் எல்லா மனித மனமும் வெற்றி கொள்ள விழையும்

அதை இயற்கை என்று சொல்லிவிட முடியாது.

அது சுயநலம்!

மனிதனுடைய முதல் விரோதியே இந்தச் சுயநல மனப்பானைதான்

இரண்டாவது விரோதி சோம்பல்; மூன்றாவது விரோதி பய உணர்வு!

இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

சரி, ஒவ்வொன்றாக வருவோம்!
++++++++++++++++++++++++++++
சுயநலத்தை மூன்றாகப் பிரிக்கலாம்.

1. ஏதாவது வேலை என்றால், அதில் தன் பங்கு என்ன என்று தெரிந்து
கொண்டு, (what is stored in it for me?) அதைச் செய்ய ஒப்புக்
கொள்வது முதல் வகைச் சுயநலம்!

2. இரண்டாவது வகை சற்றுக் கிறுத்துருவமானது. கிறுக்குத்தனமானது!
நீ அவல் கொண்டு வா. நான் உமி கொண்டு வருகிறேன். இரண்டையும்
கலந்து வைத்துக் கொண்டு ஊதி ஊதித் தின்போம். என்னுடைய ஈடுபாடு
குறைவாக இருக்கும். உன்னுடைய ஈடுபாடு அதிகமாக இருக்க வேண்டும்
என்னும் அழிச்சாட்டியம்

3. மூன்றாவது வகை இருப்பதிலேயே மோசமானது. தலை விழுந்தால்
நான் ஜெயிப்பேன். பூ விழுந்தால் நீ தோற்பாய். அதாவது எப்படியும்
நான்தான் ஜெயிக்க வேண்டும்

இந்த மூன்று வகை ஆசாமிகளையும் நான் பார்த்திருக்கிறேன். நீங்கள்
பார்த்திருக்கிறீர்களா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நீங்கள் யாருடன் வேண்டுமானாலும் இணைந்து செயல்படலாம்.
ஆனால் இந்தச் சுயநலம் அதிகம் உடையவர்களுடன் இணைந்து
சில காலத்திற்கு மேற் செயல்பட முடியாது.”சீ” என்றாகி விடும்.
அவர்களைக் கண்டாலே வெறுத்து ஒதுங்கும் நிலை ஏற்பட்டுவிடும்

ஜாதகத்தைவைத்து ஒருவன் சுயநலம் மிக்கவனா அல்லது சுயநலம்
இல்லாதவனா என்று சொல்ல முடியுமா?

முடியாது!

மனித குணங்களான அன்பு, பாசம், நேசம், கோபம், தாபம், விரக்தி
காதல், மென்மை, சீற்றம், நட்பு, துரோகம், சுறுசுறுப்பு, சோம்பல்,
வீரம், பய உணர்வு, சுய நலம், சேவை மனப்பான்மை, பெருந்தன்மை
கருமித்தனம், பொறுமை, பொறாமை என்னும் பல நிலைப் பாடுகளுக்கு,
பல விதமான கிரகங்களும், லக்கினமும் காரணமாகும். லக்கினம்,
லக்கினநாதன், ஐந்தாம் வீடு, மனகாரகன், மற்றும் உள்ள ஏழு
கிரகங்களின் கூட்டு அமைப்பு காரணமாகும் Permutation combination;
Four to the power of seven. கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆனால் லக்கினத்திற்கென்று சில பொதுவான குணங்கள் உண்டு
குறிப்பிட்ட லக்கினத்தின் அதிபதியை வைத்து அந்தக் குணம்
மேம்பட்டு நிற்கும்

1. மகரம் மற்றும் கும்ப லக்கினக்காரர்கள் கடும் உழைப்பாளிகள்
சனி அதிபதி அதனால் கடும் உழைப்பு அவர்களிடம் இருக்கும்.
அதில் மகர லக்கினக்காரர்கள் கிடைத்தை மட்டும் கடுமையாக
உழைத்து செயல் படுத்துவார்கள். ஆனால் கும்ப லக்கினக்காரர்கள்
ஒருபடி மேலே சென்று, தேடிப் பிடித்தும் செய்வார்கள்.

2.ரிஷப லக்கினக்காரர்களை ஈஸியாக வளைத்துவிட முடியும்.
மென்மையானவர்கள். மெல்லிய உணர்வு படைத்தவர்கள். எதையும்
அனுபவிக்கத் தயாராக இருப்பவர்கள்.(சுக்கிரன் அதிபதி)
“டேய் மாப்ளே, வாடா ரெண்டு பெக் அடித்துவிட்டு வரலாம்” என்றால்
வந்து விடுவார்கள். அதிலும் சிலர்,”டேய் நீ கூப்பிட்டதற்காக
வந்தேன்.ஜஸ்ட் ஃபார் கிவிங் யூ கம்பெனி. நீ என்ன கருமத்தை
வேண்டுமென்றாலும் குடி. எனக்கு பெப்ஸி மட்டும் போதும்” என்று
சொன்னாலும் சொல்வர்களேயன்றி மறுக்காமல் வந்து விடுவார்கள்
அதிலும் ஒரு வித்தியாசம். துலா லக்கினத்திற்கும் அதே சுக்கிரன்
அதிபதி என்றாலும், அவர்கள் இடம், கெளரவம் என்று யோசித்து
விட்டுத்தான் வருவார்கள்.

3. கன்னி & மிதுன லக்கினக்காரர்கள் இயற்கையிலே புத்திசாலிகள்
எல்லோருடனும் நெருங்கிப் பழகக்கூடியவர்கள். எவருடனும் ஜோடி
சேரக்கூடியவர்கள். சீட்டாட்டத்தில் ஜோக்கரைப் போல! இந்த
இரண்டில் கன்னி தராதரம் பார்க்காது. மிதுனம் பார்க்கும்

4.மேஷ லக்கினம் & விருச்சிக லக்கினம்
பொதுவாக குடும்பத்தில் மூத்தவராக இருப்பார் அல்லது குடும்பத்தில்
தலைமை தங்கும் வல்லமை பெற்றிருப்பார். சுறுசுறுப்பானவர்.
தற்பெருமை உடையவர். நாயகனுக்குள்ள தன்மைகளைப் பெற்றிருப்பார்.
நியாயமான காரணங்களுக்குச் சண்டைபோடும் மனப்பான்மை உடையவர்.
ஒரு இடத்தில் இருக்கும் தன்மை இல்லாதவர். பெண்களின் மேல்
தனி விருப்பம் உடையவர். இந்த லக்கினக்காரகளின் வளர்ச்சி சீராக
இருக்காது. உணர்ச்சிகளுக்கு வயப்பட்டவர்கள். முன் கோபக்காரர்கள்.
அதேபோல எளிதில் சமாதானமாகிவிடக் கூடியவர்கள்.
வேலை பார்க்கும் இடங்களில் நல்ல பெயரை எடுக்ககூடியவர்கள்

5. கடகம்:
intelligent, fond of astrology ; has many family friends and
is attached to them; owns houses; his fortunes wax and wane
ike the Moon; he can be brought round by persuasion.
He is under the considerable influence of his wife or of women.

6. சிம்மம்:
The native has a sacrificing spirit, is of fixed determination,
but gets unjustifiably into a temper at the slightest provocation
and the anger is not quickly pacified; does not get on well
with women; is fond of forests and mountains; is a favourite
of his mother. The native is courageous, heroic and capable
of prevailing upon others. Suffers from mental and dental ailments.

7, தனுசு & மீனம்:
active and engaged in work; eloquent in speech; religious and
prepared to sacrifice for others; inimical to relations; overpowers
enemies; cannot be brought round by force, but can be prevailed
upon by persuasion only.

நீயா? நானா? என்னும் மனிதனின் குணம் ஆளுக்கு ஆள், இடத்துக்கு
இடம் மாறுபடும். ஜாதகத்தை வைத்து ஒரளவிற்கே அது தெரியும்.
உதாரணம். கருமியா என்று! முழுமையாக எந்தப் புத்தகத்திலும்,
யாரும் எழுதி வைத்து விட்டுப் போகவில்லை. நெருங்கிப் பழகினால்
மட்டுமே நன்கு தெரியும் அல்லது தெரிந்து கொள்ள முடியும்!

(அலசல் தொடரும்)

வாழ்க வளமுடன்!

2.6.09

வெற்றி மீது வெற்றி வந்து நம்மைச் சேரும்!

வெற்றி மீது வெற்றி வந்து நம்மைச் சேரும்!

வெற்றி என்ற சொல்லிற்கு ஒரு வசீகரம் உண்டு.
வெற்றியை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.
எல்லோராலும் விரும்பப்படுவதால் மட்டுமல்ல, வெற்றிக்கு ஒரு
உள்ளடங்கிய பயன் இருப்பதால் அதற்கு ஒரு வசீகரிக்கும்
தன்மை வந்துவிடுகிறது.

அது என்ன உள்ளடங்கிய பயன்?

எடுத்து செய்யும் செயல்களுக்குக் கிடைக்கும் சாதகமான
முடிவுதான் உள்ளடங்கிய பயன்!

எடுத்த செயல் எல்லாமே 'வெற்றி பெறுமா?' என்றால் அது
யோசிக்க வேண்டிய விஷயம்!

ஆனால் யோசிப்பதற்கே இடமில்லாமல் எடுத்த செயலைத்
தன்முனைப்போடு செய்து வெற்றி பெற்றால், ஒரு உத்வேகம்
ஏற்பட்டு அடுத்தடுத்து நாம் பல வெற்றிகளைக் காண முடியும்.
ஆகவே ஒரு வெற்றி, அடுத்த வெற்றிக்கு வழி வகுக்கும்

சிலர் தொடர்ந்து வெற்றி பெறுகிறார்கள்.
சிலர் பெறுவதில்லை! என்ன காரணம்?

முன் பத்தியில் சொன்ன அந்த உத்வேகம்தான் காரணம்.
ஆங்கிலத்தில் அதைக் killing instinct என்பார்கள்.

வெற்றி பல வடிவங்களைக் கொண்டது.
பல அர்த்தங்களைக் கொண்டது. வாழ்க்கையில் தேடுவது
ஒருவகை வெற்றி. வியாபாரத்தில் தேடுவது ஒருவகை வெற்றி.
விளையாட்டு வீரனின் வெற்றி ஒரு வகை என்றால்,
இசைக்கலைஞன் தேடுவது ஒருவகை வெற்றி.

ஒரு அறுவை சிகிச்சை மருத்துவர் தேடுவது தினசரி வெற்றி.
ஆமாம் அவர் தினசரி செய்யும் அறுவை சிகிச்சை வெற்றி
பெற்றால் தானே சிகிச்சைக்கு வந்தவன் மீண்டும் நடமாட முடியும்?

ஆகவே எப்படிப்பட்ட வெற்றி என்பது அவரவர் தேடலைப் பொறுத்தது!

அதுபோல வெற்றியின் தன்மையும் வித்தியாசப்படும்.

பள்ளி இறுதியாண்டு படிக்கும் மாணவன் தேர்வு பெற்றால்
அது செயல்.

அவனே நல்ல மதிப்பெண்கள் பெற்றுத் தேறினால்
அது வெற்றி (success)

மாநில அளவில் முதல்மாணவனாக அவன் தேறினால்
அது உண்மையான வெற்றி! (True Success)

'கரையை விட்டுப் பயணிக்காமல் நீங்கள் சமுத்திரங்களைப்
பார்த்து வரமுடியாது' என்ற சொல்லடை உண்டு.
அதுபோல இருக்கும் இடத்தைவிட்டு எழுந்து சிரமம் பார்க்காமல்
செயல் பட்டால்தான் வெற்றியை அடைய முடியும்.
எதுவும் நம்மைத் தேடி வராது. நாம் தான் தேடிப்போகவேண்டும்

நம்மைத் தேடி எதுவுமே வராதா? சோம்பி இருந்தால் நம்மைத்
தேடி ஒன்றல்ல இரண்டு வரும்.

அவற்றின் பெயர்: நோய் மற்றும் கடன்

வெற்றியைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்ல முடியுமா?
வெகு இயல்பாகச் சொன்னால், சரியான நேரத்தில், சரியான வழியில்,
சரியான செயலைச் செய்வதுதான் வெற்றி!

Success is simple. Do what's right, the right way,
at the right time.- Arnold H. Glasow

உட்கார்ந்து யோசித்தோமென்றால், சரியான நேரத்தில்
சரியான செயலைச் செய்யாததால் வாழ்க்கையில் எத்தனை வெற்றி
வாய்ப்பை இழந்திருக்கிறோம் என்ற எண்ணிக்கை தெரியவரும்.

வெற்றி என்பது போய்ச் சேர வேண்டிய இடமல்ல:
வெற்றி என்பது பயணம் ஆகும்.
(Success is not a destination it is a journey)

இன்றைய மனிதர்களின் தேவைகளும், ஆசைகளும் நாளுக்கு
நாள் விரிவடைந்து கொண்டே இருக்கிறது.

ஆசைப்படுவதை விட்டு விட்டு, தேவைப்படும் அளவிற்கு
வாழ்க்கையில் வளமாக இருக்க வேண்டும் என்றால் எடுத்துச்
செய்யும் செயல்களின் வெற்றி முக்கியம்.

தொடர் வெற்றியைப் பெறுவதற்கு நமக்கு என்னென்ன
தகுதிகள் வேண்டும்.

1. எதையும் விடாது செய்து முடிக்கும் ஆர்வமுள்ள மனது
2. ஆரோக்கியமான உடல் நிலை
3. அலையக்கூடிய தெம்பு
4. எவரிடமும் அன்பு பாராட்டக்கூடிய மனப்பான்மை
5. தட்டுப்பாடு இன்றி தேவைக்குச் செலவழிக்கும்
அளவிற்குக் கையில் காசு
6. அவன் செய்கிறான், நம்மால் ஏன் செய்யமுடியாது,
என்று நம்மையே நாம் ஊக்குவிக்கக்கூடிய உணர்வு
அல்லது தன்னம்பிக்கை.

இந்த ஆறு தகுதிகளையும் ஏற்படுத்திக் கொண்டு நீங்கள்
செயல் பட்டால். நிச்சயம் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும்
வெற்றிதான்.

பிறகு வெற்றி மீது வெற்றி வந்து உங்களை மட்டுமல்ல,
நம் எல்லோரையும் வந்து சேரும்
==========================================================
”வாத்தியார்...?”

“என்ன ராசா?”

”என்ன இது...?”

“இதுவும் பாடம்தான் ராசா!”

“ஜோதிடப் பாடம் என்ன ஆயிற்று?”

“தொடர்ந்து பணிச்சுமை. அதோடு ஒரு புத்தகம் தயாரிக்கும்
பணியில் ஈடுபட்டிருக்கிறேன். ஜோதிடப் பாடத்தின் அடுத்த பகுதியை
எழுதித் தட்டச்ச வேண்டும். அதற்கு நேரமில்லை. வரும் ஞாயிறன்று
தட்டச்சி திங்கட்கிழமையன்று வலையேற்ற உள்ளேன்.
பொறுத்துக் கொள்ளவும். இந்த ‘வெற்றி’ கட்டுரை ஒரு மாத
இதழுக்காக எழுதியது.அதை அப்படியே cut & pasteல் உங்களுக்குக்
கொடுத்துள்ளேன்”

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!