மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

29.4.09

கழுதையும், குதிரையும்!

கழுதையும், குதிரையும்!

இது சென்ற பதிவின் தொடர்ச்சி. அதைப் படித்திராதவர்கள் படித்துவிட்டு
இதைப்படிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்
========================================
ஜாதகத்தில் மனைவியின் நிலை என்ன? அதாவது மனைவியின் ஸ்தானமான
7ஆம் வீட்டிற்கும் குடும்ப ஸ்தானமான 2ஆம் வீட்டிற்கும், ஜாதகத்தில்
உள்ள அமைப்பும், தொடர்பும் என்ன?

அதை இப்போது பார்ப்போம்.

ஜாதகத்தில் லக்கினம்தான் மிகவும் முக்கியமான இடம். அதைவைத்துத்தான்
எல்லாப் பலா பலன்களும்.

ஆதிகாலத்தில் அனைவரும் வாக்கியப் பஞ்சாங்கத்தைத்தான் பயன்
படுத்தினார்கள். பிற்காலத்தில் தான் கணிதத்தைப் பிரதானமாக வைத்து
அனைவரும் திருக்கணிதப் பஞ்சாங்கத்தைப் பயன் படுத்துகிறார்கள்

சில கணினி மென்பொருட்கள் திருக்கணிதத்தை மட்டுமே அடிப்படையாகக்
கொண்டு இயங்கும். சில மென்பொருட்களில் இரண்டில் ஒன்றைத் தேர்வு
செய்யும் வசதி கொடுக்கப்பட்டிருக்கும்.

அவை இரண்டிற்கும் உள்ள வேறுபாடு:

வாக்கியத்தில் வருடத்திற்கு 360 நாட்கள் மட்டுமே.
திருக்கணிதத்தில் வருடத்திற்கு 365.25 நாட்கள்

தசா புத்திகளும் 360 நாட்களை அடிப்படையாகக் கொண்டுள்ளதால்.
வாக்கியமும் சரியாக இருக்கும்.

நமது வகுப்பறை மாணவர் கரூர்.திரு. தியாகராஜன் அவர்கள் உபயமாகக்
கொடுத்துள்ள மென்பொருளில், இரண்டு முறைகளிலும் ஜாதகத்தைக் கணித்துக்
கொள்ளும் வசதி உள்ளது.

அந்த மென்பொருளில், File மெனுவில் 7ஆவதாக Preference எனும் Option
உள்ளது. அதைக் கிளிக்கினால் ஒரு புது விண்டோவில் அது கிடைக்கும்

உங்கள் பார்வைக்காக அதைப் படமாகக் கொடுத்துள்ளேன்.



1. அதில் லகிரி + சவுத் இந்தியன் + 365.25 என்பது திருக்கணிதம்
2. ராமன் + சவுத் இந்தியன் + 360 நாட்கள் என்பது வாக்கியம்

சரி, இன்று காலை 6:30 மணிக்கு ஒரு குழந்தை பிறக்கிறது என்று வைத்துக்
கொண்டு அதன் ஜாதகத்தை, அந்த இரண்டு வழிமுறைகளிலுமே கணித்துப்
பார்ப்போம்.

கணித்தவற்றைக் கீழே கொடுத்துள்ளேன்.

படம் எண் ஒன்று

படம் எண் இரண்டு

படம் எண் ஒன்று வாக்கியப்படி கணிக்கப்பெற்றது
படம் எண் இரண்டு திருக்கணிதப்படி கணிக்கப்பெற்றதாகும்

இரண்டிலும் கிரக நிலைகள் எல்லாம் சரியாக இருப்பதைப் பாருங்கள்.
ஆனால் தசா இருப்பு மட்டும் மாறுபடுகிறது.

ராகு 14 வருடம் 9 மாதம் 18 தேதி
ராகு 16 வருடம் 11 மாதம் 16 தேதி

இரண்டிற்கும் ஏன் இந்த வித்தியாசம் என்று யாரையும் கேட்க முடியாது.
இந்த வாக்கியப் பஞ்சாங்கத்தை Formulate செய்த மேதைகள் எல்லாம்
இப்போது உயிரோடு இல்லை. யாரைப் போய்க் கேட்பது?

யாருக்கு எது ஒத்து வருகிறதோ அதை வைத்துக் கொள்ள வேண்டியதுதான்
குழப்பமில்லாமல் இருப்பதற்கு, உங்கள் வீட்டுப் பெரிசுகள், உங்கள் ஜாதகத்தை
அந்தக் காலத்து ஜோதிடரிடம் எழுதி வாங்கி வைத்திருப்பார்கள். அதோடு
ஒத்து வருவதை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்

No system is perfect அதை மனதில் வையுங்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இதில் Border Birth என்னும் கால சந்திப்பில், அதாவது இரு லக்கினங்களுக்கு
இடைப்பட்ட காலத்தில் பிறந்த குழந்தைக்கு லக்கினமே மாறிவரும்.

வாக்கியப்படி எனக்கு சிம்ம லக்கினம்
திருக்கணிதப்படி எனக்கு கடக லக்கினம் வரும்.

எங்கள் வீட்டுப் பெரியவர்கள் குறித்துவைத்துள்ளது சிம்ம லக்கினம். அதோடு
என் குணத்திற்கு ஒத்து வருவதும் அதுதான். ஆகவே நான் வாக்கியப்படி
உள்ளதையே எடுத்துக்கொண்டுள்ளேன்.
=======================================================
இதில் குழப்பத்திற்கு இடம் இல்லை.

இன்று சித்திரை மாதம் 16ஆம் தேதி
இன்றைய உதய லக்கினம் மேஷம்.
சூரிய உதயம் காலை 6:00 மணி
இன்றுவரை கழிவான லக்கின காலம் 15 நாட்கள் x 4 நிமிடங்கள்
= 60 நிமிடங்கள்
அதாவது இன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலுமே
மேஷ லக்கினம். அதற்கு பிறகு 7 to 9 மணி வரை ரிஷப லக்கினம்
அடுத்தடுத்து வரும் ஒவ்வொரு 2 மணி நேற்றத்திற்கும் லக்கினம்
மாறிக் கொண்டே இருக்கும்.
இதில் Border Birth என்பது 6:55 முதல் 7:05 வரை பிறக்கும்
குழந்தைகளின் பிறப்பு

இதையெல்லாம் நீங்கள் கழித்துப் பார்த்து மண்டையை உடைத்துக் கொள்ள
வேண்டாம். கணினியில் இரண்டு option களிலுமேயே உங்கள் ஜாதகத்தைக்
கணித்துப் பாருங்கள். லக்கினம் இரண்டிலும் மாறாமல் இருந்தால் சரிதான்

மாறினால் வாக்கியத்தை எடுத்துக் கொள்ளூங்கள்
======================================================
இப்போது பாடத்திற்கு வருவோம்.

ஆணில்லாமல் பெண் இல்லை. பெண் இல்லாமல் ஆண் இல்லை.
அப்படியொரு ஈர்ப்பு இருபாலருக்கும் இடையே உண்டு.

அப்படியொரு பெண்ணின் தொடர்பு, சமூக மற்றும் சட்ட அமைப்பின்படி
உங்களுக்குக் கிடைக்கும்போது அதற்கு ஈடு இணையே கிடையாது.

எல்லோருக்கும் அப்படிக் கிடைத்துவிடுகிறதா என்ன?

பாதிப்பேர்களுக்கு அப்படிக்கிடைப்பதில்லை. கிடைத்ததை வைத்து
வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருப்பவர்களே அதிகம்.

சிலருக்குத் தேவதைகள் துணையாக வந்து சேர்வார்கள்.
சிலருக்குப் பிசாசுகள் துணையாக வந்து சேரும்.
பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல!
சிலருக்கு ஹீரோக்கள் துணையாக வந்து சேர்வார்கள்
சிலருக்கு வில்லன்கள் கணவனாக வந்து சேர்வார்கள்

அதற்குக் காரணம் என்ன?

அதுதான் ஜாதக அமைப்பு; வாங்கி வந்த வரம்!
==================================================
லக்கினமே பிரதானமானது. லக்கினத்திற்கு ஏழாம் இடம் அதற்கு
அடுத்தபடியாகப் பிரதானமானது ஆகும்.

லக்கினாதிபதி லக்கினத்தில் இருப்பதைவிட ஏழில் இருந்து லக்கினத்தைப்
பார்க்கும் அமைப்பு உன்னதமானதாகும். சிறப்புடையதாகும்.

உச்சமாகும் கிரகம், தனது உச்ச ஸ்தானத்தில் இருந்து அதன் ஏழாம்
இடத்தில் நீசமாகும். நீசத்திலிருந்து ஏழில் உச்சமாகும்.

பார்வையில் ஏழாம் பார்வை சிறப்புடையதாகும்.

இந்த அடிப்படையில்தான் லக்கினத்தின் ஏழாம் வீடு மனைவிக்கு உரிய,
பெண்ணாக இருந்தால் கணவனுக்கு உரிய இடமாக வழங்கப்பெற்றிருக்கிறது

லக்கினம் நன்றாக இருந்து, ஏழாம் வீடும் நன்றாக இருந்தால் தாம்பத்ய
வாழ்க்கை அற்புதமாக இருக்கும். ஜோடிப்பொருத்தம் அருமையாக
இருக்கும். மனைவி உங்களுக்காக உயிரையும் கொடுப்பவளாக இருப்பாள்
இல்லையென்றால் உயிரை எடுப்பவளாக இருப்பாள். அதாவது உங்களுடைய
எதிர்பார்ப்பிற்குச் சற்றும் ஏற்றவளாக இருக்க மாட்டாள்.

நல்ல மனைவியாக அமைந்து விட்டால், பார்ப்பவர்கள் Made for each other
என்பார்கள்.

எப்படிபட்ட மனைவி அமைவாள் என்பதைப் பற்றிய பாடத்தை முன்பே
நடத்திவிட்டேன். ஆகவே அதைப் பற்றி மீண்டும் எழுதவில்லை
====================================================
இப்போது ஏழாம் வீட்டிற்கும், குடும்ப ஸ்தானமான 2ஆம் வீட்டிற்கும்
உள்ள தொடர்பைப் பார்ப்போம்.

குடும்ப வாழ்க்கை என்பது பிறப்பிலிருந்து இறப்பு வரை வருவது.
25 வருட காலம் பெற்றோர்களை வைத்துக் குடும்ப வாழ்க்கை.
ஐம்பது வயதிற்கு மேல் குழந்தைகளை வைத்துக் குடும்ப வாழ்க்கை.
அதைப் பற்றி முன் பதிவில் விவரமாக எழுதியுள்ளேன்.

மனைவியால் கிடைக்கும் குடும்ப வாழ்க்கை என்பது இடைச்செருகல்
அவள் நன்றாக அமைந்தால் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி கூடும்.
இல்லையென்றால் மகிழ்ச்சி குறையும்.
++++++++++++ஆனால் குடும்ப வாழ்க்கை இல்லாமல் போகாது.

2ஆம் வீட்டிலிருந்து 7ஆம் வீடு அதன் ஆறாம் இடமாகும்
7ஆம் வீட்டிலிருந்து 2ஆம் வீடு அதன் எட்டாம் இடமாகும்
அதாவது 6/8 Position and 8/6 Position
ஒன்றிற்கொன்று அஷ்ட சஷ்டம வீடுகள்.
என்னவொரு மோசமான அமைப்புப் பாருங்கள்

நல்ல அழகான, அனுஷ்கா சர்மா போன்ற அல்லது ஐஷ்வர்யா பச்சன்
போன்ற மனைவியே ஒருவனுக்கு அமைகிறாள் என்ற வைத்துக்
கொள்ளுங்கள். அவனுடைய 2ஆம் வீடு நன்றாக இல்லையென்றால்
என்ன ஆகும்?

ஜாதகன் குடும்பம் நடத்தமாட்டான். அவளை இங்கே விட்டு விட்டு,
அவன் பொருள் தேடி துபாய்க்குச் சென்று விடுவான். பொருள்
ஓரளவிற்குச் சேர்ந்தாலும் மனத்திருப்தியுடன் திரும்ப மாட்டான்.
நாடி தளர்ந்தபின்தான் திரும்புவான்.

திருப்தியை மட்டும் கடவுள் மனிதனுக்குக் கொடுக்கவில்லை.
அதைப் பற்றி விவரமாகப் பின்னால் எழுதுகிறேன்.

அவனை நம்பி வந்த தேவதை நிலவையும் வானத்தையும் பார்த்துக்
கொண்டு, கண்களில் நீரோடு, இங்கேயே கிடக்க வேண்டியதுதான்.
அல்லது டாலரில் விருப்பமுள்ளவளாக இருந்தால் கலர்க் கலர்க்
கனவுகளில் மிதந்தவாறு, இளமை வீணாவதை மறந்து, மல்லாக்கப்
படுத்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

சரி, இரண்டாம் வீடு நன்றாக இருந்து 7ஆம் வீடு நன்றாக இல்லை
யென்றால் என்ன ஆகும்?

கழுதை போன்ற மனைவி வந்து சேர்வாள். அவளைக் குதிரையாகப்
போற்றிக் கணவன் குடும்பம் நடத்திக் கொண்டிருப்பான்.

சரி, இரண்டு வீடுகளுமே மோசமாக இருந்தால் என்ன ஆகும்?
வாழ்க்கைப்பட்ட கருமத்திற்காக இருவரும் ஒருவித சோகத்துடன்
குடும்பம் நடத்திக்கொண்டிருப்பார்கள். அல்லது ரத்தில் முடிந்துவிடும்

கழுதையோ அல்லது குதிரையோ அமைவது 7ஆம் வீட்டைப் பொறுத்தது
அது எதுவானலும் அதை வைத்துக் குடும்பம் நடத்துவது 2ஆம் வீட்டைப்
பொறுத்தது.

இப்படி எழுதிக் கொண்டே போகலாம்.

முடிவு என்ன?

இரண்டாம் வீடும், ஏழாம் வீடும் தனிதனித் தன்மைகள் வாய்ந்தவை.
ஒன்றினால் மற்றொன்றிற்குப் பெரிய பாதிப்பு ஏற்படும் வாய்ப்பில்லை!

பதிவின் நீளம் கருதியும், உங்கள் பொறுமை கருதியும் இன்று
இத்துடன் நிறைவு செய்கிறேன்

நன்றி, வணக்கத்துடன்
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!

27.4.09

சிதம்பரமும் பழநிமலையும்!

சிதம்பரமும் பழநிமலையும்!

தலைப்பைப் பார்த்து, சிதம்பரம் என்றவுடன், நமது மதிப்பிற்குரிய
உள்துறை அமைச்சரைப் பற்றி எழுதியதாக இருக்குமோ என்று
நினைத்து உள்ளே நுழைபவர்கள் பதிவை விட்டு விலகவும்.

இது உலகநாயகன் குடிகொண்டிருக்கும் சிதம்பரத்தைப் பற்றியது
====================================================

"நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்" என்று சொன்னான் கவிஞன்.
பாடலை எழுதிய கவிஞரின் பெயர் நினைவில் இல்லை. அதனால்
குறிப்பிடவில்லை. கவியரசர் கண்ணதாசன் எழுதியதா அல்லது கவிஞர்
வாலி அவர்கள் எழுதியதா என்பது தெரியவில்லை. தெரிந்தவர்கள்
சொல்லுங்கள்.

நல்ல குடும்பம் எப்படி இருக்க வேண்டும்?

பாடலைப் பாருங்கள்!

"நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்
நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்
அன்பு மணி வழங்கும் சுரங்கம் வாழ்க வாழ்க" என்று பல்லவியில்
எழுதிய கவிஞர் சரணத்தில் இப்படிச் சொல்கிறார்.

படத்தில் நாயகி துவங்கிப் பாடுவதாக வரும் பாடல்:

"எங்கள் வீடு கோகுலம்
என் மகன் தான் கண்ணனாம்
தந்தை வாசுதேவனோ தங்கமான மன்னனாம்
எங்கள் வீடு கோகுலம்
என் மகன் தான் கண்ணனாம்
தந்தை வாசுதேவனோ தங்கமான மன்னனாம்"

நாயகன் விட்டானா? அவனும் தொடர்ந்து பாடுகிறான்:

அன்னை என்னும் கடல் தந்தது
தந்தை என்னும் நிழல் கொண்டது
அன்னை என்னும் கடல் தந்தது
தந்தை என்னும் நிழல் கொண்டது
பிள்ளைச் செல்வம் என்னும் வண்ணம் கண்ணன் பிறந்தான்
நன்றி என்னும் குணம் கொண்டது
நன்மை செய்யும் மனம் கோண்டது
எங்கள் இல்லம் என்னும் பேரைக் கண்ணன் வளர்ப்பான்

நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்
அன்பு மணி வழங்கும் சுரங்கம் வாழ்க வாழ்க

நாயகி:
வெள்ளம் போல ஓடுவான்
வெண்மணல் மேல் ஆடுவான்
கானம் கோடி பாடுவான்
கண்ணன் என்னைத் தேடுவான்
கானம் கோடி பாடுவான்
கண்ணன் என்னைத் தேடுவான்

நாயகன்:
மாயம் செய்யும் மகன் வந்தது
ஆயர்பாடி பயம் கொண்டது
அந்தப் பிள்ளை செய்யும் லீலை நானறிவேன்
இந்தப் பிள்ளை நலம் கொள்ளவும்
என்னைப் பார்த்து எனை வெல்லவும்
கண்ணில் வைத்து நெஞ்சில் வைத்து நான் வளர்த்தேன்

நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்
அன்பு மணி வழங்கும் சுரங்கம் வாழ்க வாழ்க

நாயகி:
கோலம் கொண்ட பாலனே
கோவில் கொண்ட தெய்வமாம்
தாயில் பிள்ளை பாசமே தட்டில் வைத்த தீபமாம்

நாயகன்:
பாசம் என்று எதைச் சொல்வது
பக்தி என்று எதைச் சொல்வது
அன்னை தந்தை காட்டும் நல்ல சொந்தம் அல்லவா
பிள்ளை என்னும் துணை வந்தது
உள்ளம் என்றும் இடம் கொண்டது
இல்லம் கண்டு தெய்வம் தந்த செல்வம் அல்லவா

நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்
அன்பு மணி வழங்கும் சுரங்கம் வாழ்க வாழ்க

பாடல்: நல்லதொரு குடும்பம்
திரைப் படம்: தங்கப் பதக்கம்
பாடியவர்கள்: டி.எம்.எஸ், பி.சுசீலா
இசை: எம்.எஸ்.வி
நடிப்பு: சிவாஜி, கே.ஆர்.விஜயா

"கண்ணில் வைத்து நெஞ்சில் வைத்து நான் வளர்த்தேன்"
என்பது படலின் முத்தாய்ப்பான வரி!
=====================================================
அன்பு, பாசம், பக்தி, நன்றியுணர்வு, நன்மைகள் என்று எல்லாவற்றையும்
கொண்டதுதான் குடும்ப வாழ்க்கை.

பிறப்பில் இருந்து இறப்புவரை வருவது குடும்ப வாழ்க்கை!

குளிர்காலம், வெயில்காலம், வசந்தகாலம், இலையுதிர்காலம் என்று பருவங்கள்
நான்கு இருப்பதைப் போல குடும்பவாழ்க்கையும் பல பருவங்களை உடையது.

பிறந்தது முதல் 12 வயது வரை அன்னையின் அரவணைப்புத்தேவை.
12 வயது முதல் 24 வயது வரை தந்தையின் கவனிப்புத் தேவை
அதற்குப் பிறகு வளர்ந்துவிட்ட நிலையில் அவனுக்கே மனைவி, மக்கள்
என்று பொறுப்புடன் பராமரிக்கும் நிலையில் ஒரு குடும்பம் அமையும்.
அது ஒரு 30 ஆண்டு காலம் என்று கொள்ளலாம்.
அதற்குப் பிறகு அவனுடைய பிள்ளைகளின் அரவணைப்பில் அவன்
வாழ வேண்டும். அது ஒரு 20 ஆண்டுகாலம் என்று கொள்ளலாம்.

அதற்குப் பிறகு முதுமையான காலம். அது எப்படி இருக்கும் என்று யாராலும்
சொல்ல முடியாது. உடம்பும் மனதும் ஒத்துழைத்தால், அந்தக் காலம் நன்றாக
இருக்கும். இல்லையென்றால் நன்றாக இருக்காது..

அதோடு பிள்ளைகளும் அவனை வைத்துக் கொள்ள வேண்டும்
இல்லையென்றால் முதியோர் இல்லம்தான்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தாய், தந்தையின் அரவணைப்பில் வாழும் காலத்தில் பிரச்சினைகள்
அதிகமாக இருக்க வாய்பில்லை.

திருமணத்திற்குப் பிறகு ஏற்படும் குடும்ப வாழ்க்கையில்தான்
பிரச்சினைகள் அதிகமாக இருக்கும்.

அதைப் பற்றிச் செட்டிநாட்டுக் கவிஞர் திரு.அரு நாகப்பன் அவர்கள்
ஒரு முறை, சொல்லரங்கம் ஒன்றில் வேடிக்கையாக இப்படிக் குறிப்பிட்டார்:

திருமணமாகி முதல் ஐந்து ஆண்டுகளுக்கு சிதம்பரத்தின் ஆட்சி
அதாவது சிதம்பரத்தில் நடராஜர் ஆட்சி செய்வதைப் போல கணவனின்
ஆட்சி

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு திருச்செங்கோடு ஆட்சி. அதாவது
திருச்செங்கோட்டில் உமா மகேஷ்வரர் உமைக்கு சரிபங்கு கொடுத்து
அர்த்தனாரீஷ்வரராக ஆட்சி செய்வதைப்போல, கணவன் மனைவி இருவரும்
கலந்து யோசித்து ஆட்சி செய்வது. அதாவது குடும்பம் நடத்துவது.

அடுத்து இருபதாண்டுகளுக்கு மீனாட்சியின் ஆட்சி. அதாவது மனைவியின்
ஆட்சி. அவள் சொல்படி கணவனும் கேட்பான். குழந்தைகளும் கேட்கும்

அதற்குப் பிறகு சுவாமிமலை.

சுமார் பத்தாண்டுகளுக்கு சுவாமிமலை. அதாவது பிள்ளைகளின் ஆட்சி.
குழந்தைகளின் சொற்படி கேட்டு இருக்கும் நிலைமைக்கு இருவரும்
தள்ளப்படுவார்கள்.

அதற்குப் பிறகு என்ன ஆகும்?

குடும்பம் பெரியதாகி, பிள்ளைகள், பேரன் பேத்திகள் என்று வந்தவுடன்,
பெண்ணானவள் அவர்களை அனுசரித்து இருந்து விடுவாள்.
ஆணால் அப்படி இருக்க முடியாது.

அதனால் ஆணிற்கு மட்டும் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைக் கவிஞர்
இப்படிச் சொன்னார்,

சுவாமிமலைக்குப் பிறகு, செட்டியார் பழநிமலைக்குப் போகவேண்டியதுதான்
அதாவது ஆண்டியாகி நிற்க வேண்டியதுதான்!
=====================================================
மலையையெல்லாம் மறந்து விட்டு, குடும்ப வாழ்க்கையை மட்டும் பாருங்கள்
அதில்தான் எத்தனை திருப்பங்கள்?

ஒரு ஜாதகத்தில் இரண்டாம் வீடு நன்றாக அமைந்திருக்க வேண்டும்.
அப்போதுதான் நல்ல குடும்பத்தில் பிறக்க முடியும். சிறு வயது வாழ்க்கை
நன்றாக இருக்கும்.

அத்தனை பேர்களுக்குமா சிறுவயது வாழ்க்கை நன்றாக அமைகிறது?

இறைவன் கருணை மிக்கவன். அதனால்தான் தாய், தந்தை, குடும்பம்
ஆகிய மூன்றையும் ஒரே இடத்தில் கொடுத்தனுப்பாமல் தனித்தனியாக
பிரித்துக் கொடுத்திருக்கிறான்.

இரண்டாம் வீடு குடும்பம் என்றால், நான்காம் வீடு தாய்க்கு உரியது
ஒன்பதாம் வீடு தந்தைக்கு உரியது. நிச்சயம் ஒவ்வொரு ஜாதகத்திலும்
இந்த மூன்றில் ஒன்று நன்றாக இருக்கும்.

ஜாதகனின் இரண்டாம் வீட்டில் தீய கிரகங்கள் இருந்து, பிறக்கும்போது
வறுமையான சூழ்நிலையில் பிறந்திருந்தாலும், அவனைக் கட்டியணைத்து
வளர்க்க ஒரு நல்ல தாய் அமைந்திருப்பாள். அல்லது தந்தை
அமைந்திருப்பார்

4காம் வீட்டிற்கு, அதிலிருந்து பதினொன்றாம் வீடு, குடும்ப ஸ்தானம்.
அதைக் கவனத்தில் கொள்ளுங்கள். நல்ல தாய் கிடைப்பதுதான் ஒரு
மனிதனின் முதல் பாக்கியம். நல்ல தாய் கிடைத்துவிட்டால் சிறு வயது
வாழ்க்கை எந்தவிதமான பொருளாதாரச் சூழ்நிலையிலும் நன்றாக
இருக்கும். 4ஆம் வீட்டிற்கும் இரண்டாம் வீட்டிற்கும் ஒரு சிறப்பான
தொடர்பு உண்டு. நான்கிற்கு 11 என்பது அதன் லாபஸ்தானம்.

2ற்கு ஒன்பதாம் வீடு, அந்த வீட்டிலிருந்து எட்டாம் வீடு. அதுபோல
9ற்கு 2ஆம் வீடு அந்த வீட்டிலிருந்து ஆறாம் வீடு. ஆகவேதான்
தந்தையைவிட ஒரு குழந்தைக்குத் தாயின் வீடு (4th house) முக்கியமாகிறது
======================================================
சரி ஜாதகத்தில் மனைவியின் நிலை என்ன?
அதாவது மனைவியின் ஸ்தானமான 7ஆம் வீட்டிற்கும்
குடும்ப ஸ்தானமான 2ஆம் வீட்டிற்கும்,
ஜாதகத்தில் உள்ள அமைப்பும், தொடர்பும் என்ன?

அதை அடுத்து அலசுவோம்.

பதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும்,
இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்.

(தொடரும்)

வாழ்க வளமுடன்!

25.4.09

நயன்தாராவும் மல்லிகைப்பூவும்!

நயன்தாராவும் மல்லிகைப்பூவும்!

சார், தலைப்பு சூப்பராக இருக்கிறது என்று சொல்ல நினைப்பவர்கள்
பதிவை முழுதாகப் படித்த பிறகு சொல்லும்படி கேட்டுக்கொள்ளப்
படுகிறார்கள்
====================================================
மனம் ஒரு குரங்கு. அதைக் கட்டுப்படுத்தி வேலை செய்யும் சாமர்த்தியம்
சிலருக்கு மட்டுமே கைவந்த கலை.

அதை மன ஒருமுனைப்பாடு எனலாம்.

ஆங்கிலத்தில் அதை Concentration என்பார்கள்
Concentration is the act or process of concentrating, especially
the fixing of close, undivided attention.

அதாவது சிதறாத கவனத்துடன் வேலை செய்தல்.

குடும்பத்துடன் பேருந்து நிலையத்திற்குச் சென்று பஸ் ஏறும் சமயத்தில்
வீட்டைச் சரியாகப் பூட்டிவிட்டு வந்தோமா என்ற சந்தேகம் சிலருக்கு
வரும். அல்லது கேஸ் சிலிண்டரை அணைத்துவிட்டு வந்தோமா என்ற
சந்தேகம் வரும்.

பெட்டிக்கடைக்குச் சென்று ஒரு பாக்கெட் வில்ஸ் ஃபில்டர் சிகரெட்டை
வாங்கிவிட்டு, அதற்குப் பணம் கொடுக்கும்போது, ஐநூறு ரூபாய் நோட்டை
எடுத்து நீட்டியிருப்பான். கடைக்காரனும் கவனக்குறைவாக அதை நூறு
ரூபாய் நோட்டாக எண்ணி, சிகரெட் பெட்டியின் விலை ரூபாய் 34:00
போக மீதிச் சில்லரையாக ரூபாய் 66:00ஐக் கொடுத்திருப்பான். நம்ம
ஆளும் அதை வாங்கிக் கொண்டு வந்திருப்பான். இரவு செலவு கணக்கு
எழுதும்போதுதான் அது உறைக்கும்.

அலுவலகத்தில் வேலை செய்யும்போது மேலதிகாரி, பத்து வருடத்திற்கான
Purchase & sales விவரங்களைக் குறித்த பட்டியலைக் கேட்டிருப்பார்.
இவன் கவனச் சிதறலில், ஐந்து வருடங்களுக்கு மட்டுமே குறித்துக்
கொண்டு போய்க் கொடுத்து, அவரிடம் மாத்து வாங்கிக்கொண்டிருப்பான்.

இதுபோல சொல்லிக்கொண்டே போகலாம்.

இது எதனால் ஏற்படுகிறது?

எதிலும் ஒருமுனைப்பாடு இல்லாததால்தான்.
=============================================
ஒரு ஆசாமி இருந்தான்.

பெயர்?

பெயரெல்லாம் முக்கியமில்லை!

வயது மட்டும் முக்கியம். அவனுடைய வயது ஐம்பது. பல பிரச்சினைகள்
மனதில் வந்து ஏறிக்கொண்டு படுத்தும் வயது.

அதோடு அவனுடைய செயல்பாடுகளிலும் பல கோளாறுகள். பல
சங்கடங்கள்.எல்லாம் மனதைக் கட்டுப்படுத்தித் தன்முனைப்புடன்
வேலை செய்ய முடியாததால் ஏற்படுவது.

ஞானி ஒருவரைச் சந்தித்துத் தன்னுடைய பிரச்சினையைச் சொல்லி
வருந்தினான். மனதைக் கட்டுப்படுத்தி ஒருமுனைப்புடன் வேலை
செய்யும் வழியைக் கேட்டான்.

அவர் சொல்லிக் கொடுத்தார். மனதை அடக்க வேண்டும். அதன் மூலம்
ஐம்புன்களையும் அடக்க வேண்டும். தியானம் செய் என்றார். அதோடு
மனம் வசப்படும்வரை தொடர்ந்து தியானத்தில் ஈடுபடு என்றார்.

ஐம்புலன்கள் எவை?
பார்த்தல், கேட்டல், சுவைத்தல், மணத்தல், உணர்தல்

ஐம்பொறிகள் எவை?
கண், காது, வாய், மூக்கு, மெய்

நம்ம ஆளும் அதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கிப் பயிற்சி
செய்து ஐம்புலன்களையும் அடக்கியே தீருவது என்று முடிவு செய்தான்.

நடந்ததா?

வாருங்கள் பார்ப்போம்
===========================================
அடுத்த நாள் அதிகாலையே பயிற்சியை ஆரம்பித்தான். அதற்கு அவன்
தேர்ந்தெடுத்த இடம் ஆற்றங்கரையருகே இருந்த அரசமர மேடை.

அதன் மீது அமர்ந்து முதலில் பார்வையைத் தன் வசப்படுத்தும் பயிற்சியை
மேற்கொண்டான்.

சுற்றுமுற்றும் எதையும் பார்க்காமல் எதிரில் இருந்த சுமைதாங்கிக்
கல்லையே பார்த்தவாறு, இறைவனின் திருநாமத்தைச் சொல்ல
ஆரம்பித்தான்.

'நமச்சிவாய..நமச்சிவாய..நமச்சிவாய..நமச்சிவாய..நமச்சிவாய..
நமச்சிவாய.. நமச்சிவாய........'

மின்னல் வெட்டியது. அவனிருந்த மேடைக்கும், பார்த்துக்கொண்டிருந்த
சுமைதாங்கிக் கல்லிற்கும் இடையிலிருந்த பாதையில் 'நயன்தாரா
போன்ற அல்லது அன்ஷ்கா சர்மா போன்ற தோற்றத்தில் இருந்த இளம்
மங்கை ஒருத்தி கையில் குடத்துடன் நடந்து போய்க்கொண்டிருந்தாள்.
வேறு ஒன்றுமில்லை ஆற்றில் தண்ணீர் முகர்ந்துவரப் போய்க் கொண்டிருக்கிறாள்.

அவளைப் பார்த்த அந்தக் கணமே 'நமச்சிவாய' நின்று விட்டது.

ஆசாமி யோசிக்க ஆரம்பித்தான்.

"இவள் நமது பக்கத்து வீட்டுப் பெண்ணாயிற்றே! இவ்வளவு அதிகாலையில்
இவள் எதற்காக இங்கே வருகிறாள்? அதுவும் துணைக்கு ஒருவரும் இன்றி
வருகிறாளே. காலம் கெட்டுக் கிடக்கிறது. எவனாவது காமுகன் இவளை
மடக்கினால் என்ன ஆவது? வீட்டில் சொல்லி அவளை எச்சரிக்க வேண்டும்"

இப்படி நினைத்துக் கொண்டிருக்கும்போது,ஞானி சொன்னது நினைவிற்கு
வந்தது. பயிற்சியில் தன்முனைப்போடு நமச்சிவாய சொல்வது தடைப்பட்டால்,
எழுந்து விட வேண்டும். அன்றைய பயிற்சி தோல்வி என்று கொள்ள வேண்டும்

அவனும் எழுந்து விட்டான். இன்றையப் பயிற்சி இந்தப் பெண்ணைப்
பார்த்ததால் கெட்டுவிட்டது என்று தனக்குள் சொல்லிக்கொண்டே வீட்டிற்குத்
திரும்பிவிட்டான்
====================================================
அடுத்த நாள் காலை. அதே மேடை.

வந்து அமர்ந்த நம்ம ஆள், இன்று எச்சரிக்கையோடு வந்திருந்தான்.
முதல் நாள் பயிற்சியைக் கண்கள் கெடுத்ததால், கண்களை ஒரு சிறு
துணியால் கட்டிக் கொண்டு அமர்ந்தான்.

நமச்சிவாய சொல்ல ஆரம்பித்தான். ஐந்து நிமிடங்கள் கூட ஆகியிருக்காது.

மனதை மயக்கும் விதமாகக் கொலுசின் ஓசை கேட்டது. சீராக இருந்தது.

அவன் மனம் பரபரப்படைந்து நினைக்க ஆரம்பித்தது. நேற்று வந்த
அதே பெண்தான். அதே கொலுசின் ஓசைதான். "நேற்று மாலை என்
மனைவி மூலமாக எச்சரிக்கச் சொன்னேனே. சொல்லியும் வந்திருக்கிறாளே
ஒருவேளை என் மனைவி அவர்கள் வீட்டில் சொல்லவில்லையோ என்னவோ..?"

நமச்சிவாய நின்று விட்டது.

சற்று நேரம் கழித்துத்தான் தன் தவறை உணர்ந்தான்.

எழுந்து விட்டான்.

இரண்டாம் நாள் பயிற்சியைக் காது கெடுத்தது
============================================
மூன்றாம் நாள் அதிகாலை. அதே மேடை.

வந்து அமர்ந்த நம்ம ஆள், இன்று இரண்டு மடங்கு எச்சரிக்கையோடு
வந்திருந்தான். முதல் இரண்டு நாள் பயிற்சிகளைக் கண்ணும், காதும்
கெடுத்ததால், கண்களை ஒரு சிறு துணியால் கட்டிக் கொண்டும்
காதில் பஞ்சை வைத்து நன்றாக அடைத்துக் கொண்டும் அமர்ந்தான்.

நமச்சிவாய சொல்ல ஆரம்பித்தான். பத்து நிமிடங்கள் கூட ஆகியிருக்காது.

கும்மென்ற மல்லிகைப்பூ வாசம், ஆளைப் புரட்டிப்போட்டது.

இவன் நிணைக்க ஆரம்பித்தான். இவ்வளவு வாசத்துடன் மல்லிகைப்பூ
என்றால், யாரோ இளம் பெண்தான் சென்று கொண்டிருக்கிறாள். அவளாகவும்
இருக்கலாம் அல்லது வேறு ஒருத்தியாகவும் இருக்கலாம். யாராக இருந்தாலும்
இவ்வளவு அதிகாலையில் தனியாக வரலாமா?

அன்றையப் பயிற்சியும் கெட்டது. எழுந்துவிட்டான்.
============================================
அடுத்த நாள் கோபத்துடன் வந்தான்.

முதல் மூன்று நாள் பயிற்சிகளை முறையே கண், காது, மூக்கு ஆகிய
மூன்றும் கெடுத்துவிட்டன. ஆகவே அந்த மூன்றின் உபத்திரவமும்
இன்று இருக்கக்கூடாது என்று தலை முதல் காலவரை போர்த்திக்
கொண்டு அமரும்படியான அங்கி ஒன்றுடன் இன்று வந்திருந்தான்.

பயிற்சியை ஆரம்பித்தான்.

'நமச்சிவாய..நமச்சிவாய..நமச்சிவாய..நமச்சிவாய..நமச்சிவாய..
நமச்சிவாய.. நமச்சிவாய........'

பதினைந்து நிமிடம் ஆகியிருக்கும். மனம் நினைத்தது. இன்று அங்கியை
அணிந்திருப்பதால், நமக்கு ஒன்றும் தெரியவில்லை. இருந்தாலும் ஆற்றுக்கு
தனியாகப் பெண்கள் வந்து போவது நிறுத்தப்பட வேண்டும். பஞ்சாயத்து
ஒன்றியத்தில் சொல்லி, ஊருக்குள்ளேயே தண்ணீர் படித்துக் கொள்வதற்கான
ஏற்பாட்டைச் செய்ய வேண்டும்.

நமச்சிவாய நின்று விட்டது. பதைபதைத்து எழுந்துவிட்டான்.

பாடம் சொல்லிக் கொடுத்த ஞானியைத் தேடி ஓடினான். நடந்ததைச் சொல்லி
அழுதான். ஒருமுனைப் படுத்துவது சிரமமாக இருக்கிறது என்றான்.

ஞானி சொன்னார். "முதலில் மனதைத்தான் கட்டுப்படுத்த வேண்டும்.
அதன் மூலம்தான் ஐம்புன்களையும் அடக்க வேண்டும். கட்டுப்பட்ட
மனதிற்குத்தான் அவைகள் கட்டுப்படும். ஐம்புலன்களையும் அடக்கினால்
மட்டுமே மனம் தொடர்ந்து கட்டுப்படும். அவைகள் ஒன்றிற்கொன்று
தொடர்புடையவை. all are inter linked. வேட்டைக்குச் செல்கிறவன்
வேட்டைக்கான மிருகத்தையும் தேட வேண்டும். அதோடு தன்னை
எந்த மிருகமும் வேட்டையாடிவிடாமல் பாதுகாத்துக் கொள்ளவும்
வேண்டும். அந்த நிலைப்பாடுதான் இதற்கும். அங்கே முழு உணர்வு
எப்படித்தேவையோ, அப்படியொரு உணர்வு இருந்தால் மட்டுமே
மனம் உனக்குக் கட்டுப்படும். ஆகவே ஒரு வேலை செய்யும்போது
அதில் முழு ஈடுபாட்டுடன் இறங்கு. தன்முனைப்பு தானாக வரும்!"

+++++++++++++++++++++++++++++++++++++++




வாழ்க வளமுடன்!

22.4.09

Bucket with a hole - ஓட்டை வாளி

Bucket with a hole - ஓட்டை வாளி

வகுப்பறையைப் பொறுத்தவரையில் எனக்கு மூன்று வேலைகள்.

1. பதிவதற்கான கட்டுரைகளை எழுதித் தட்டச்சி வலையில் ஏற்றுவது.
2. வரும் பின்னூட்டங்களுக்குப் பதில் எழுதுவது.
3. பின்னூட்டங்களுக்கு சம எண்ணிக்கையில் வரும் தனி மின்னஞ்சல்
களுக்குப் பதில் எழுதுவது.

நேரமின்மையால், மின்னஞ்சல்களுக்கு பதில் எழுதுவதை ஒத்தி
வைத்தால், அதை நினைவுறுத்தி மீண்டும் மின்னஞ்சல்கள் வரும்.
தப்பிக்க முடியாது.

வரும் மின்னஞ்சல்களைப் பொதுவாக இரண்டு விதமாகப் பிரிக்கலாம்.

1.சார், எனது திருமணம் காதல் திருமணமா அல்லது பெற்றோர்களால்
நிச்சயிக்கப்பெறும் திருமணமா?

2.சார், நான் மிகுந்த பணக் கஷ்டத்தில் இருக்கிறேன்.
எனது கஷ்டங்கள் எப்போது தீரும்?
--------------------------------------------------------------
இங்கே பணக் கஷ்டத்தை எடுத்துக்கொள்வோம்.

பணக்கஷ்டத்திற்குப் பல காரணங்கள் உள்ளன. அதை விவாதித்தால்
பதிவு 100 பக்கங்களுக்குப் போய்விடும். ஆகவே விவாதிக்காமல்
பணக்கஷ்டத்திற்கான அல்லது பணப் பற்றக் குறைக்கான காரணத்தை
ஜாதக ரீதியாக மட்டும் இப்போது பார்ப்போம்
--------------------------------------------------------------
இன்றைய சூழ்நிலையில் பணம் இல்லாமல் யாராலும் மகிழ்ச்சியாக
வாழ முடியாது. நாளுக்கு நாள் பணத் தேவை அதிகரித்துக் கொண்டே
போகிறது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கிலோ 20 ரூபாய் விற்ற பொன்னி
அரிசியின் இன்றைய விலை 40 ரூபாய். துவரம் பருப்பு கிலோ
32 ரூபாயிலிருந்து இன்று 60 ரூபாய்க்கு விற்கிறது. இப்படி எல்லாமே
அநியாயத்திற்கு ஏறியிருக்கிறது.

அதே போல நமது வருமானமும் இரண்டு மடங்கு ஏறியிருக்கிறதா
என்றால் இல்லை!

தேவைக்குச் சம்பாதிப்பது வேறு; ஆசைக்குச் சம்பாதிப்பது வேறு.

ஆசைக்குச் சம்பாதிப்பதாகட்டும் அல்லது தேவைக்குச் சம்பாதிப்பதாகட்டும்
பணம் வரவேண்டுமல்லவா?

பணம் நினைத்தபடி வருமா? அல்லது வராதா?

நினைத்தபடி வந்தால் கஷ்டம் ஏது?

நினைத்தபடி ஏன் வரமாட்டேன் என்கிறது?

அதுதான் ஜாதகப் பலன்!

நீ இவ்வளவு உயரம்தான் பறக்கலாம் என்று ஜாதகத்தில் எழுதப்பட்டுள்ளது.
அந்த உயரத்திற்குத்தான் நீ பறக்க முடியும். குருவி பறக்கும் உயரம் வேறு.
புறா பறக்கும் உயரம் வேறு. கழுகு பறக்கும் உயரம் வேறு.

நீ சைக்கிளில்தான் போகவேண்டும் என்றால் சைக்கிள் மட்டுமே கிடைக்கும்
நீ பல்சர் மோட்டார் சைக்கிளில் அதுவும் வேலைக்குச் சேர்ந்த இரண்டாவது
மாதமே போகலாம் என்றால் அது கிடைக்கும். நீ காரில். அதுவும்
ஹோண்டா சிட்டி காரில் போக வேண்டும் என்றால், அது தானாக வந்து
சேரும்.

முயற்சி செய்தால் முடியாதா என்று கேட்காதீர்கள்!
ஜாதகத்தில் வழியில்லை என்றால் முடியாது!

சரி, ஜாதகத்தில் அதைத் தீர்மானிக்கும் வீடுகள் எவை?
இரண்டாம் வீடு மட்டுமா? அல்ல!
இரண்டு, ஐந்து, பதினொன்று ஆகிய மூன்று வீடுகளும் சேர்ந்துதான் ஒரு
ஜாதகனின் பணபலத்தை நிர்ணயம் செய்யும். இம்மூன்று வீடுகளும் பலமாக
இருந்தால் ஜாதகனுக்கு நிறையப் பணம் வரும் செல்வந்தனாக உருவெடுப்பான்.
இல்லையென்றால் இல்லை

அந்த மூன்று வீடுகளும் கெட்டிருந்தால் ஜாதகன் அன்றாடம் காய்ச்சி!
==========================================
வெற்றிகரமான வருமானத்திற்கான பாதையை மூன்று விதமாகப்
பிரிக்கலாம்.

1. ஜாதகன் பார்க்கும் வேலை அல்லது செய்யும் தொழில்
2. அதன் மூலம் ஜாதகனுக்குக் கிடைக்கவிருக்கும் பணம்
3. அப்படி வரும் பணத்தில் செலவு போக மீதியைச் சேர்த்து
வைப்பானா? சேர்த்துவைத்தைப் பெருக்குவானா?

முதல் கேள்விக்கான பதிலைப் பத்தாம் வீட்டை வைத்துச்
சொல்வார்கள். ஆனால் அதைத் தொடர்ந்துள்ள கேள்விகளுக்கு
பதில்களுக்கு வேறு வீடுகளை அலச வேண்டும்.

ஜோதிடத்தில் உள்ள சிக்கல் இதுதான். அத்தனை பலன்களும்
ஒன்றிற்கொன்று தொடர்புள்ளவை.

பத்தாம் வீட்டையும், செவ்வாயையும் வைத்து ஒருவன் கிரிக்கெட்
ஆட்டத்தில் சிறப்படைவான் என்று சொல்லலாம். ஆனால் அவனுடைய
ஆட்டம் ரஞ்சி ட்ராப்பியுடன் முடிந்துவிடுமா? அல்லது உலகளவில்
தோனிபோல கலக்கல் ஆட்டமாடி பெரும்பொருள் குவிப்பானா
என்பதை மற்ற வீடுகள் நிர்ணயம் செய்யும்.

ஜோதிடத்தில் ஒரு மனிதனின் பணபலத்தை நிர்ணயம் செய்பவை
மூன்று வீடுகள். அவைகள் முறையே ஐந்தாம் வீடு, பதினொன்றாம் வீடு
மற்றும் இரண்டாம் வீடுகள் ஆகும்.

இரண்டாம் வீடுதான் House of finance என்றாலும், அங்கே பணத்தைக்
கொண்டுவந்து கொட்டுபவை மற்ற இரண்டு வீடுகள். அதை மனதில்
கொள்க!

அது எப்படி?

வெறும் வேலை. அதன் மூலம் வரும் சம்பளம் என்றால் பத்தாம் வீடும்
இரண்டாம் வீடும் போதும்.

நமக்குச் சம்பளம் மட்டும் பற்றாதே! மற்ற வருமானங்களும் வேண்டுமே!

The three main houses that govern wealth in a chart are the 2nd house,
11th house and the 5th house.
=============================================
ஐந்தாம் வீட்டை லெட்சுமிகரமான வீடு என்று சொல்லலாம்.
எதிர்பாராத பண வரவுக்கெல்லாம் இந்த வீட்டின் அமைப்புத்தான் காரணம்.
பங்கு வணிகத்தில் சிலர் லட்சம் லட்சமாக அல்லது கோடி கோடியாகச்
சம்பாதிப்பதற்கெல்லாம் இந்த வீடுதான் காரணம்.

The house which governs the money coming from speculation
- shares, stock market and related instruments.

வலிமையான ஐந்தாம் வீடும், வலிமையான ஒன்பதாம் வீடும் இருக்கும்
ஜாதகனுக்குப் பணம் மழையாகக் கொட்டும்.

அண்டாக்களில் பிடித்துவைத்துக்கொள்ள வேண்டியது மட்டுமே அவனுடைய
வேலை. ஒன்பதாம் வீட்டிற்கு அதிலிருந்து ஒன்பதாம் இடம் ஐந்தாம் வீடு
அதை மனதில் கொள்க

A powerful 5th house along with 9th house will bring luck to an individual.
9th house is called as bhagyasthana. 5th being 9th from 9th also represents
luck in the horoscope.
=================================================
பதினொன்றாம் வீடு லாபஸ்தானம். House of profit
ஒரு ஜாதகனின் வாழ்க்கை முறைக்கு, உங்கள் மொழியில் சொன்னால்
Life Styleற்கு இந்த வீட்டின் அமைப்புத்தான் காரணம்.

உங்களுக்குப் பல ஆசைகள் இருக்கலாம்.
அந்த அசைகளை நிறைவேற்றிவைப்பது இந்த வீடுதான்.
பதினொன்றாம் வீடும், அதன் அதிபதியும்தான் உங்களுக்குக் கொட்டும்
பணமழையின் அளவை நிர்ணயிப்பவர்கள்.

11th house alone will determine what a person will earn from.
The strength of the house and ruler would determine the size of source
of income.
This house represents gains of all kinds.
================================================
2ஆம் வீடு. இதற்குத் தனஸ்தானம் என்று பெயர்
ஒரு ஜாதகனுக்கு என்ன தேறும் என்பதை அது சொல்லும்.
அதே போல ஜாதகனுக்கு என்ன தங்கும் என்பதையும் அது சொல்லும்

2nd House: Financially, house number 2 (dhanasthana)
This house represents the net worth of an individual.
It also denotes the extent to which the individual will be able to retain
the money earned through sources represented by 5th and 11th house.

அந்த இரண்டு வீடுகள் மட்டும் நன்றாக இருந்து அதாவது
5ம் 11ம் நன்றாக இருந்து, இந்த வீடு கெட்டிருந்தால் பணம் வரும்,
ஆனால் வரும் பணம் கையில் தங்காது. பல வழிகளில்
செலவாகிவிடும்.

அதை ஓட்டைக் கை ஜாதகன் என்பார்கள்.
ஓட்டைக் கையில் என்ன தங்கும்?
ஓட்டை வாளியில் என்ன தங்குமோ அதுதான் தங்கும்!
=================================================
பதினொன்றாம் வீட்டைத் தண்ணீர்க் குழாய்க்கும் இரண்டாம் வீட்டை
வாளி அல்லது அண்டாவிற்கும் உதாரணமாகச் சொல்லலாம்.

11th house can be thought of as a tap and 2nd house as a bucket.
The bucket is filled with water flowing from the tap.
How much water will accumulate depends on the rate water flows
from the tap and size of the bucket.

நான்காம் வீடு சுகஸ்தானம். பணம் இன்றி சுகமேது? ஆகவே ஒரு
ஜாதகன் சுகமாக வாழ்வதற்கு இரண்டாம் வீடு நன்றாக இருக்க
வேண்டும். இங்கே ஒரு அதிசய ஒற்றுமையைப் பாருங்கள் இரண்டாம்
வீடு, பதினொன்றாம் வீட்டிலிருந்து நான்காம் வீடு.

Second house represents the accumulated wealth of the individual.


ஜாதகனின் கையில் தங்கும் செல்வத்திற்கான வீடு இரண்டாம் வீடு!
அதை மனதில் கொள்க!
===================================================
பணவரவு எப்படி வேறுபடுகிறது?

இந்த மூன்று வீட்டு அதிபதிகளின் வலிமை முக்கியம்.
அதோடு அவர்கள் ஒருவருக்கொருவர் ஜாதகத்தில் இணைந்து கூட்டாக
அல்லது பரிவர்த்தனையாக அல்லது பரஸ்பர பார்வையோடு இருப்பதும்
முக்கியம்.

அந்தக் கூட்டணி எந்த அளவிற்கு உள்ளதோ அந்த அளவிற்கு ஸீட்
கிடைக்கும்:-))))))

Planetary combinations of wealth, are formed when rulers of these
houses are associated with each other and with rulers of 1st, 5th and
9th house.

This association could be through conjunction in good houses, exchange
and through mutual aspect. Involvement of Jupiter as benefic planet
in these combinations is considered extremely auspicious.

இது தவிர, ஜாதகத்தில் இருக்கும் ராஜ யோகங்களும் பெரும் செல்வத்தைப்
பெற்றுத் தரும். அதைப் பற்றி விரிவாக யோகங்களுக்கான பாடவகுப்பில்
பார்ப்போம்

===========================================
பணமின்றி வறுமையில் வாடுவதேன்?
அல்லது பணக்கஷ்டத்தில் உழல்வதேன்?

இந்த மூன்று வீட்டு அதிபதிகளும், 6ஆம் வீடு, 8ஆம் வீடு அல்லது
12ஆம் வீட்டதிபதிகளுடன் சகவாசம் வைத்திருந்தால் எப்போதும்
பணக் கஷ்டம்தான்

சகவாசம் என்பதற்குப் பல அர்த்தங்கள் உண்டு.
நீங்களே புரிந்துகொள்ளுங்கள்.

அந்த தீய வீட்டதிபர்கள் பைப்பில் தண்ணீர் வருவதை நிறுத்தி விடுவார்கள்
அல்லது உங்கள் வீட்டு வாளி அல்லது அண்டாக்களை ஓட்டையாக்கி
விடுவார்கள். அல்லது தண்ணீர் பிடிக்கும் நிலையில் உங்களை விட்டு
வைக்காமல் படுக்க வைத்துவிடுவார்கள்.

படுக்கவைப்பது என்றால் என்னவென்று தெரியுமல்லவா?
====================================================
2ஆம் வீட்டதிபர், பதினொன்றாம் வீட்டதிபர் ஆகிய இருவரும்
வலிமை இல்லாமல் இருந்தால் (அதாவது சுயவக்கத்தில் குறைந்த
பரல்களுடன் இருந்தால்) ஜாதகனுக்கு வறுமை என்பது நிரந்தர
நண்பனாகிவிடும். பணக்கஷ்டம் என்பது பகல் பொழுதாகிவிடும்.
------------------------------------------------------------------------------------------------
அந்தந்த வீட்டதிபர்களின் தசா புத்திகளில் பலன்கள் கைகூடிவரும்!

நன்றி வணக்கத்துடன்
வகுப்பறை வாத்தியார்



வாழ்க வளமுடன்!

18.4.09

லேகியப் பதிவுகள்


லேகியப் பதிவுகள்

லேகியத்தில் இரண்டு வகைகள் உண்டு.

குறிப்பிட்ட மருந்து அல்லது மூலிகைகளுடன் நெய் கலந்து பாகுபோலக்
காய்ச்சித் தயாரிக்கப்படும் மருந்து ஒருவகை. போதை தருவதற்காகத்
தயாரிக்கப்படும் லேகியம் மற்றொருவகை.

போதைதரும் லேகியங்களைப் பற்றி விரிவாக எழுத முடியாது.
இது வகுப்பறை அதனால் எழுத முடியாது.

தமிழகத்தில் சில பிரபல வார இதழ்கள் இப்போது போதைதரும்
லேகியங்களாகத்தான் செயல் பட்டுக்கொண்டிருக்கின்றன. இளம்
நடிகைகள் அரைகுறை ஆடைகளுடன் இருக்கும் படங்களைப் போட்டுப்
பல கட்டுரைகளை அல்லது செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன

அவற்றை நாங்கள் லேகியப் பத்திரிக்கைகள் என்போம்.

அதுபோல சில லேகியப் பதிவுகளும் உள்ளன.

லேகியப் பதிவுகளுக்குக் கூட்டம் சேர்வதைப் பற்றி ஆராயத் தேவையில்லை.
ஒரே வரியில் சொன்னால் கலிமுற்றிக் கொண்டிருக்கிறது. அவ்வளவுதான்.

நான் கடும் மருந்தான ஜோதிடத்தைப் பாடமாக்கிப் பதிவுகளை எழுதிக்
கொண்டிருக்கிறேன். பலரும் ஆர்வமுடன் வந்து படிப்பது வியப்பாக
உள்ளது.

ஒவ்வொரு பதிவிற்கும் சராசரியாக இரண்டாயிரம் பார்வையாளர்கள்
வந்து செல்கிறார்கள் Hit counter மூலம் அது தெரிகிறது

அதோடு மாணவர்களின் எண்ணிக்கை 200ஐத் தாண்டியுள்ளது.

வருகைப் பதிவு செய்துள்ள அத்தனை மாணவர்களுக்கும் என் நன்றியைத்
தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் வருகைப் பதிவு எண்ணிக்கைதான்
என்னை மென்மேலும் உற்சாகமாக எழுத வைக்கிறது.

அந்த எண்ணிக்கைதான் எனக்கு லேகியம்:-)))))
-------------------------------------------------------------------------------------
சரி, இன்றையப் பாடத்தைப் பார்ப்போம் வாருங்கள்

தலைப்பு: விடுபட்டவை:

லக்கினத்தில் சூரியன் இருந்தால் ஜாதகர் சுறுசுறுப்பானவர்.
செந்நிற மேனி உடையவர்.
தேகம் எப்போதும் உஷ்ணமாக இருக்கும்.

இரண்டில் சூரியன் இருந்தால் கல்வி சுமாராக இருக்கும்
நல்ல உழைப்பாளி.
ஜாதகருக்குப் பொருள் சேரும்.

மூன்றில் சூரியன் இருந்தால், ஜாதகர் Take it easy type
அல்லது Don't care type.
பகைவர்களை என்ன சேதி என்று கேட்கும் திறமை உடையவர்

நான்கில் சூரியன் இருந்தால், ஜாதகரின் தாய்க்கு நன்மையல்ல
ஜாதகருக்கு உறவினர்களுடன் பகை உண்டாகும்.
அரசியல் செல்வாக்கு இருக்கும்

ஐந்தில் சூரியன் இருந்தால், குடும்பம் அளவாக இருக்கும்;
வாழ்க்கை வளமாக இருக்கும்.
தந்தைவழிச் சொத்துக்கள் இருக்காது
ஜாதகர் தன் முயற்சியால் உயர்வடைவார்

ஆறில் சூரியன் இருந்தால் பகைவர்கள் பக்கத்தில் வரமாட்டார்கள்
ஜாதகரின் குடும்பம் பெரியதாக இருக்கும்.

ஏழில் சூரியன் இருந்தால்
ஜாதகர் கடன், நோய்கள், பிணிகள், வழக்குகள், விவகாரங்கள் இல்லாதவர்.
பலரது பராட்டுக்க்களைப் பெறுபவர்
மனைவிக்கு அடங்கிப்போகக்கூடியவர்.
எதையும் சரிவரச் செய்யாதவர்.

எட்டில் சூரியன் இருந்தால், ஜாதகர் நீண்ட ஆயுளை உடையவர்.
எவருக்கும் பணிந்து போகாதவர்
இரக்கமற்ற குணத்தை உடையவர்
சிலருக்குக் கண்களில் குறைபாடுகள் இருக்கும்

ஒன்பதில் இருக்கும் சூரியனால் தந்தைக்கு இடையூறுகள் ஏற்படும்
ஜாதகருக்குத் தீயவழிகளில் பொருள் சேரும்
உறவினர்களுடன் விரோதம் ஏற்படும்
சுய முற்சியால் செல்வம் சேரும்

பத்தில் சூரியன் இருந்தால் அது ஜாதகருக்கு நன்மைகளைச் செய்யும்
ஜாதகருக்கு நிரந்தத் தொழில் அல்லது வேலை இருக்கும்
அரசு தொடர்பு அல்லது அரசியல் தொடர்பு இருக்கும்
உடல் நலம் சீராக இருக்கும்
தன் அறிவினால் சுயமுன்னேற்றம் அடையக்கூடியவர்

பதினொன்றில் சூரியன் இருந்தால், ஜாதகர் நீண்ட ஆயுளை உடையவர்.
பலரைவைத்து வேலைவாங்கும் திறமை உடையவர்.
நண்பர்களால் பல உதவிகள் கிடைக்கும்

பன்னிரெண்டில் சூரியன் இருந்தால்
ஜாதகருக்குத் தன் தந்தையுடன் சுமூக உறவு இருக்காது.
அதிகமான செலவுகள் ஏற்படும்
ஜாதகர் ஊர் சுற்றி. அதிகமான பயணங்களை மேற்கொள்வார்.
சந்ததிக் குறைபாடுகள் இருக்கும்.
உழைத்து முன்னேற்றம் காண்பவர்.
==========================================
சூரியனுடன், சந்திரன் இணைந்திருந்தால் ஜாதகர் எழுத்து,
அல்லது ஓவியம், அல்லது பேச்சு ஆகியவற்றில் அதீதத் திறமை உடையவர்.
பெயர் புகழ் அவரைத் தேடிவரும்.
இந்த மைப்பு அமாவாசை யோகம் எனப்படும்.

சூரியனுடன் செவ்வாய் சேர்ந்திருந்தால், ஜாதகருக்கு அவருடைய
தந்தையுடன் கருத்து வேறுபாடுகள், உரசல்கள் இருக்கும்.
தொழிலில் பல இன்னல்கள் ஏற்படும்.
இந்த அமைப்புள்ள சிலர் காவல்துறை, ராணுவம் ஆகியவற்றில்
பணிபுரிந்து சிறப்படைவார்கள்

சூரியனும் புதனும் இணைந்திருந்தால், ஜாதகருக்கு நல்ல கல்வியும்
அறிவாற்றலும் இருக்கும்.
சிலர் ஞானமாகவும் இருப்பார்கள்
திட்டமிட்டபடி வாழக்கூடியவர்கள்.
இந்த அமைப்பிற்குப் புதஆதித்ய யோகம் என்று பெயர்
ஜாதகர் பலதுறைகளிலும் நிபுணனாக இருப்பார்.

சூரியனுடன் குரு சேர்ந்திருந்தால், ஜாதகர் தானகவே எதையும்
கற்றுக்கொண்டு செயலாற்றும் திறமை மிக்கவர்.
பதவியும்,. பாராட்டுக்களும் அவரைத் தேடிவரும்.
இரக்க சுபாவம் உடையவர்.
அதோடு முன்போபத்தையும் உடையவர்,

சூரியனுடன் சுக்கிரன் இருந்தால், ஜாதகருக்குக் கடத்தல் தொழிலில்
ஈடுபாடு உண்டாகும். ரேஸ், சூதாட்டம் போன்றவற்றில் ஈடுபடுவார்.
ஆடம்பரத்தில் விருப்பம் உடையவர்.
சிலருக்குத் திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படும்.

சூரியனுடன் சனி இருந்தால் ஜாதகருக்குத் தன் தந்தையுடன் இணக்கம்
இருக்காது. ஜாதகருக்கு இரும்பு, எந்திரம், வாகனம் போன்றவற்றில்
நல்ல அறிவு இருக்கும். அவை சம்பந்தப்பட்ட துறைகளில் பணியாற்றும்
ஜாதகர் சிறப்படைவார்.

சூரியனுடன் ராகு இணைந்தால் நல்லதல்ல.
தீயவழிகளில் பணம் வரும் அல்லது ஜாதகர் தீயவழிகளில் பணத்தைச்
சேர்ப்பார். சிலர் பாபகரமான தொழிலைச் செய்து பணம் சம்பாதிப்பார்கள்.

சூரியனுடன் கேது சேர்ந்தால், ஜாதகருக்கு ஜோதிடம், மாந்திரீகம்,
வைத்தியம் ஆகியவை கைவந்த கலையாக இருக்கும். அதில்
ஈடுபடுபவர்கள் பெரும்பொருள் சேர்ப்பார்கள்
===================================================
வாத்தியார் சொந்த வேலையாக 3 நாட்கள் வெளியூர் பயணம் மேற்கொள்ள
இருப்பதால், திங்கள் மற்றும் செவ்வாய் வகுப்பறைக்கு விடுமுறை.
அடுத்த வகுப்பு 22.4.2009 புதன்கிழமையன்று நடைபெறும்.

அந்த இரண்டு நாட்களில் அனைவரும் முன்பாடங்களைப் புரட்டிப்
படிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!

15.4.09

குட்டிக்கதை: உண்மையில் யார் எப்போதும் ஏழை?

குட்டிக்கதை: உண்மையில் யார் எப்போதும் ஏழை?

பல்லாண்டுகளுக்கு முற்பட்ட காலம்

குறுநில மன்னன் ஒருவன் தன் படைவீரர்களுடன் அண்டை நாட்டின்மீது
போர் துவக்கப் புறப்பட்டுச் சென்றான்.

செல்லும் வழியில் அடர்ந்த காடு. அந்தக்காட்டில் ஒரு துறவி தவத்தில்
இருந்தார் - உடலில் எந்த ஆடையும் இல்லாத நிலையில்.

இந்தக் குளிரில் இப்படி ஆடைகள் எதுவுமின்றி இவர் இருக்கிறாரே என்று
பரிதாபப்பட்ட மன்னன், தன்னிடம் இருந்த விலையுயர்ந்த போர்வை
ஒன்றை எடுத்துத் தவநிலையில் உட்கார்ந்திருந்த துறவியின் மீது
போர்த்தினான்.

போர்வை தன் உடம்பை மூடியவுடன் கண்விழித்த அந்தத் துறவி,
மன்னனைப் பார்த்தார். கூட இருந்த வீரர்களையும் பார்த்தார்.
பார்த்தவுடன் சொன்னார்:

"அன்பரே, எனக்குப் போர்வை எதுவும் வேண்டாம். ஏதாவது ஒரு ஏழைக்கு
இந்தப் போர்வையைக்கொடு!"

மன்னன் கேட்டான், " சுவாமி, ஆடைகள் எதுவுமின்றி இருக்கிறீர்கள்.
தங்களைவிட ஏழ்மையானவர் இந்தக் காட்டில் வேறு யார் இருக்கிறார்கள்?"

முனிவர் பதிலுக்கு மன்னனைக் கேட்டார்:" எங்கே நீ சென்று கொண்டிருக்கிறாய்?"

"அண்டை நாட்டின் மீது போர் தொடுக்கப்போய்க் கொண்டிருக்கிறேன்,"
என்று மன்னன் பதில் உரைத்தான்.

உடனே துறவி சொன்னார். "மன்னா! உன் படைவீரர்கள் பலரின் உயிரைப்
பணயம் வைத்துப் போர் செய்யப்போகின்றாய். இருப்பது போதுமென்று
இல்லாது, ஏதோ ஆதாயத்திற்காகப் பலபேரின் உயிரைப் பணயம்
வைக்கிறாய். உண்மையில் நீதான் ஏழை! போதுமென்ற மனமில்லாத
நீதான் ஏழை! ஆகவே உன் போர்வையை நீயே வைத்துக்கொள்!"

மன்னனின் அறிவுக் கண்கள் திறந்தன! தவறை உணர்ந்த மன்னன்
துறவியை வனங்கிவிட்டு, தான் வந்தவழியே திரும்பினான்.

ஒரு பெரும் போர் தவிர்க்கப்பட்டது. பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன!
ஒரு துறவியின் போதனையால்.

போதுமென்ற மனமில்லாதவன்தான் எப்போதும் ஏழை!

வாழ்க வளமுடன்!

10.4.09

இருட்டான இடங்கள் - நிறைவுப்பகுதி


இருட்டான இடங்கள் - நிறைவுப்பகுதி

இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்களை, அதைப் படித்து
விட்டு வந்து இதைப் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

முன் பதிவிற்கான சுட்டி (URL link) இங்கே உள்ளது.

மூன்றாம் வீட்டில் வந்தமரும் கிரகங்களுக்கான பலன்கள்.

1.
மூன்றில் சூரியன் இருந்தால்.

இங்கே வந்தமரும் சூரியனால் ஜாதகத்திற்கு அதீத வலிமை கிடைக்கும்.
Sun's placement in the third is a strong point to any horoscope!
If the Sun is in the third, the native will be courageous and authoritative
ஜாதகன் அதீத துணிச்சல் மிக்கவன்.
ஜாதகன் சமயோசித புத்தியுள்ளவன்
எந்தக் கஷ்டத்தையும் சமாளிக்கும் ஆற்றல் மிக்கவன்.
எதிலும் வெற்றி பெறக்கூடியவன்.

இங்கே வந்தமரும் சூரியனின் மேல் சனி அல்லது ராகு அல்லது
கேது போன்ற தீய கிரகங்களின் பார்வை பட்டால் அது ஜாதகனின்
உடன்பிறப்புக்களுக்கு நல்லதல்ல!
======================================================
2.
மூன்றில் சந்திரன் இருந்தால்.

இந்த இடம் பத்தாம் வீட்டிற்கு, அங்கிருந்து ஆறாம் வீடு. ஆகையால்
இங்கே அமரும் சந்திரனால், ஜாதகனின் வேலைகளுக்கு உபத்திரவம்.
மனமாற்றம் உடையவன். ஒரே வேலையில் ஒழுங்காக இருக்கமாட்டான்.
Jumping from one job to another job. அடிக்கடி வேலையை மாற்றுவான்
அல்லது ஊரை மாற்றுவான். சுறுசுறுப்பான மனதை உடையவன்.
துறுதுறுவென்று இருப்பான்.

ஜாதகனின் மனைவி மிகவும் அழகாக இருப்பாள். இந்த இடம் ஏழாம்
இடத்தில் இருந்து ஒன்பதாம் வீடு. அதை மனதில் கொள்க!

ஜாதகனுக்கு எல்லா விஷயங்களிலும் அறிவு இருக்கும்.

If the Moon is in the third, the younger siblings of the native
will be happy and prosperous

இங்கே வந்தமரும் சந்திரனின் மேல் சனி அல்லது ராகு அல்லது
கேது போன்ற தீய கிரகங்களின் பார்வை பட்டால் அது ஜாதகனுக்கு
நல்லதல்ல! மன அமைதி என்பது இல்லாமல் போய்விடும்.

அதேபோல இங்கே வந்தமரும் சந்திரன், தேய்பிறைச் சந்திரனாகவோ
அல்லது தனது சுயவர்க்கத்தில் பரல்கள் குறைந்த சந்திரனாகவோ
இருந்தாலும் நல்லதல்ல! கொடூர சிந்தனைகள் அவ்வப்போது வந்து
எட்டிப் பார்க்கும். பல பிரச்சினைகளைக் கொடுக்கும்!
====================================================
3.
மூன்றில் செவ்வாய் இருந்தால்.

காரகன் பாவ நாசம் என்பார்கள். செவ்வாய் உடன்பிறப்புக்களுக்குக்
காரகன். அவன் இங்கே வந்து அமர்ந்தால் அது ஜாதகனின் உடன்
பிறப்புக்களுக்கு நல்லதல்ல!
This position of Mars is bad for brothers and sisters of the native!
If Mars is exalted, it is bad for younger brothers.
If afflicted by Saturn the native may suffer with ear trouble

பொதுவாக ஜாதகன் துணிச்சல் மிக்கவனாகவும், நல்ல திறமைகள்
மிக்கவனாகவும் இருப்பான். சிலருக்குக் குடும்பக் கவலைகள்
சூழ்ந்திருக்கும். குடும்பத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டிய கடமை
இருக்கும்.

சிலருக்குப் பயணங்களில் விபத்துக்கள் ஏற்படலாம்.
(இது பொதுப்பலன் சாமிகளா)

இந்த அமைப்பின் மேல் தீய கிரகங்களின் பார்வை விழுந்தால்,
ஜாதகனுக்குத் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் வந்து
போகும் அல்லது உக்கிரமான அல்லது தீவிரமான மனப்பான்மை
மிகுந்திருக்கும்.

மூன்றாம் வீடு செவ்வாயின் சொந்த வீடாக இருந்து அதாவது
மேஷம் அல்லது விருச்சிகம் மூன்றாம் வீடாக இருந்து, அங்கே
செவ்வாய் ஆட்சி பலனுடன் இருந்தால் மேற் சொன்னவைகள்
எதுவும் இருக்காது. ஜாதகன் மகிச்சியுடன், பிரச்சினைகள்
எதுவுமின்றி இருப்பான். மகரத்திற்கும் இதே பலன். ஏனென்றால்
அங்கே செவ்வாய் உச்ச பலனுடன் இருப்பார்
=====================================================
4.
மூன்றில் புதன் இருந்தால்.

ஜாதகன் நல்ல செயல்கள் பலவற்றைச் செய்து, மற்றவர்களுக்கு
மகிழ்ச்சியைக் கொடுப்பவனாக இருப்பான். ஆனால் அவன்
சொந்த வாழ்க்கையில் மகிழ்ச்சி குறைவாக இருக்கும்.

ஜாதகன் படு கெட்டிக்காரனாக இருப்பான்.
படிப்பிலும் வாசிப்பிலும் அதிக ஆர்வமுள்ளவனாக இருப்பான்.
எடுத்த வேலையைச் சிரத்தையோடு முடிப்பான். அதில் என்ன
இடர் வந்தாலும் பாதியில் விடாமல் செய்து முடிப்பான். அதற்கு
உரிய ஆற்றலும் துணிவும் மேலோங்கி இருக்கும்.

எதையும் புத்தியால் சமாளிக்கும் ஆற்றல் பெற்றிருப்பான்.

இந்த அமைப்பு உள்ளவர்கள் தொழில் அல்லது வியாபாரத்தில்
ஈடுபட்டு பெரும் வெற்றி பெறுவார்கள் என்பது பொதுப்பலன்.
சிலர் பொருள் வணிகத்தில் அல்லது பங்குச் சந்தை வணிகத்தில்
ஈடுபட்டு அதீத செல்வத்தைச் சேர்ப்பார்கள். இந்த இடம் 11ஆம்
இடத்திற்கு ஐந்தாம் இடம் அதை மனதில் கொள்க!

இந்த அமைப்பினருக்குச் சராசரியைவிட அதிகமான உடன்பிறப்புக்கள்
இருக்கும். உடன்பிறப்புக்களும், நண்பர்களும் ஜாதகனின் மேல் உயிரை
வைத்திருப்பார்கள். அதாவது அந்த அளவிற்கு அவனை விரும்புவார்கள்.

இந்த அமைப்பில் குறையே இல்லையா? உண்டு!
இந்த அமைப்பின் மேல் சனி அல்லது ராகு அல்லது கேதுவின் பார்வை
பட்டால், ஜாதகனுக்கு நரம்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படும் அபாயம்
உண்டு.
========================================================
5
மூன்றில் குரு இருந்தால்:
இது ஒரு நன்மைதரும் அமைப்பு. ஜாதகன் 'நடப்பது எல்லாம் நன்மைக்கே'
என்று நினைக்கும் பெருநோக்கோடு இருப்பான்.
நல்ல உடன்பிறப்புக்கள் கிடைப்பார்கள்.

Jupiter: The native will be victorious and endowed with high mental strength

இங்கே குரு பலவீனமாக இருந்தால், அதாவது தீய பார்வைகளுடன்
அல்லது சுயவர்க்கத்தில் குறைவான பரல்களுடன் இருந்தாலும் அல்லது
குரு வந்தமரும் வீடு, அவருக்குப் பகை அல்லது நீச வீடாக இருந்தாலும்
நன்மைகள் இருக்காது. ஜாதகனின் உடன்பிறப்புக்கள் நன்றிகெட்டவர்களாக
இருப்பார்கள். குறைவான நண்பர்களே இருப்பார்கள். நல்ல வாய்ப்புக்கள்
கை நழுவிப்போகும்.
=========================================================
6.
மூன்றில் சுக்கிரன் இருந்தால்:

ஜாதகனின் மனப்பாங்கு நல்ல விதமாக இருக்கும். ஆனால் உடல்
அரோக்கியம் மட்டும் சுமாராக இருக்கும். ஜாதகன் எப்போதும்
உற்சாகம் குன்றி இருப்பான்.

இசை, நடனம், நுண்கலைகள் போன்றவற்றில் ஜாதகன் ஆர்வமுடையவனாக
அல்லது ஈடுபாடு உடையவனாக இருப்பான்.

கொடுக்கல் வாங்கல் போன்ற பணவிவகாரங்கள் சுமூகமாக இருக்காது.
சிக்கல்கள் நிறைந்ததாக இருக்கும்.

Venus Is not good in this place.
The native could get annoyed very easily.

இந்த இடத்துச் சுக்கிரன் பாதிக்கப்பெற்றிருந்தால், ஜாதகன் கருமியாக
இருப்பான். ஏழ்மை வாட்டும். அதிகமாக உணர்ச்சி வசப்படுவான்.
தொட்டாற்சிணுங்கி. சிலர் ஊழல் விவகாரங்களில் மாட்டிக் கொண்டு
அவதிப்பட நேரிடும்.

பொதுவாக இந்த அமைப்புக்காரர்களுக்குச் சகோதரர்கள் நல்லவர்களாக
இருப்பார்கள். தன் குழந்தைகளால் ஜாதகனுக்கு மகிழ்ச்சி இராது.
=========================================================
7
மூன்றில் சனி இருந்தால்:

ஜாதகன் தையமும், துணிச்சலான செயல்பாடுகளையும் உடையவன்.
செல்வந்தனாக இருப்பான். சிலர் உடன் பிறப்புக்களை இழக்க நேரிடும்.

சிலர் கடுமையான ஆசாமிகளாக இருப்பார்கள்.
விபரீதமான சிந்தனைகளுக்கு ஆட்படுபவர்களாக இருப்பார்கள்.
உடன் பிறப்புக்க்களால் துன்பம் ஏற்படும்.

அரசு மரியாதை, கெளரவம் கிடைக்கும்.
சிலருக்கு அவர்களுடைய ஊரில் உள்ள பொது அமைப்புக்களில்
தலைமை ஏற்கும் வாய்ப்புக் கிடைக்கும்.

ஆயுள்காரகன் சனி இங்கே இருப்பது நன்மை பயக்கும். ஜாதகனுக்கு
நீண்ட ஆயுள் இருக்கும். இந்த இடம் எட்டாம் இடத்திற்கு எட்டாம் இடம்
அதோடு சனியும் எட்டாம் பார்வையாக இங்கிருந்து ஆயுள் ஸ்தானத்தைப்
பார்ப்பார். அதை மனதில் கொள்க!

Saturn is good for longevity if he is placed in this house. Since 3rd house
is the eighth house from the eighth

பல ஏமாற்றங்களையும், சரிவுகளையும், சங்கடங்களையும் சந்தித்த பிறகே
ஜாதகன் வெற்றிகளை அடைவான். அது இந்த அமைப்பிற்குரிய விஷேசத்
தன்மையாகும்.

அவசரம், பரபரப்பு, தவறான அணுகுமுறை எனும் மனப்போக்கு
ஏற்படும். வயதாக வயதாக அதெல்லாம் மறைந்து ஒரு சீரான நிலைமை
ஏற்படும்.

இங்கே அமரும் சனி, பலவீனமாக இருந்தால். ஜாதகனுக்கு எப்போதும்
மனக்கஷ்டங்கள் இருந்துகொண்டே இருக்கும்
===============================================
8
மூன்றில் ராகு இருந்தால்:

ராகு சனியைப்போலவே பலனைத் தரக்கூடியவன்.
இங்கே ராகு இருப்பது இதற்கு முதல் பத்தியில் சனிக்குச்
சொன்னதுபோலவே சில பலன்கள் இருக்கும்
அதில் முக்கியமானது ராகு இங்கே அமையப்பெற்ற ஜாதகன்
நீண்ட நாட்கள் உயிர் வாழ்வான். தீர்க்காயுள்.

இந்த அமைப்பு சகோதர உறவுகளுக்கு நல்லதல்ல.
ஜாதகன் தோற்றத்தில் மட்டுமே தைரியசாலியாக இருப்பான்.
=================================================
9.
மூன்றில் கேது இருந்தால்:
இங்கே இருக்கும் கேது செவ்வாயைப் போல பலன்களைத்
தரக்கூடியவர்.
ஜாதகன் வலிமையானவனாகவும், துணிச்சலான சாதனைகளைச்
செய்யக்கூடியவனாகவும் இருப்பான்.

If ketu is placed in this house, the native will be courageous,
religious and wealthy
================================================
The 3rd house signifies courage, hence hands, shoulders and
chest The Ear, Nose and throat problems are also signified by
this house. Younger siblings of a person come under his house.
This house is also connected with printing, publishing,
short journeys and transport business.

இந்த மூன்றாம் வீட்டிற்கான பலன்கள் அதன் அதிபதியின்
தசா புத்திகளிலும், அதோடு அதில் அமர்ந்திருக்கும் கிரகங்களின்
தசா புத்திகளிலும் கிடைக்கும்

மூன்றாம் வீட்டைப் பற்றிய பாடம் நிறைவுறுகிறது

நன்றி, வணக்கத்துடன்
வகுப்பறை வாத்தியார்

---------------------------------------------------------------------------------------------
இரண்டு நாட்கள் வெளியூர்ப் பயணம். சமர்த்தாகப் பாடங்களைப்
படியுங்கள். மீண்டும் செவ்வாய்க்கிழமை காலையில் (14.4.2009)
சந்திப்போம்







வாழ்க வளமுடன்!

9.4.09

குட்டி சஸ்பென்ஸ் கதை


குட்டி சஸ்பென்ஸ் கதை

நமக்குத்தான் சஸ்பென்ஸ் கதைகள் என்றால் பிடிக்குமே!
உங்களுக்காக ஒரு குட்டி சஸ்பென்ஸ் கதை

படித்துப் பாருங்கள்
-------------------------------------------------------------------------------
"வாத்தியார் எதற்குக் கதை? பாடம் என்ன ஆயிற்று?"

"சும்மா ஜோதிடத்தையே படித்துக் கொண்டிருந்தால் அலுத்துவிடாதா?
அதனால் மாறுதலுக்காக நடுவில் ஒரு கதை.
அதோடு இது வகுப்பறையின் 300வது பதிவு
பாடம் தொடர்ந்து வரும்"
------------------------------------------------------------------------------
கதையின் தலைப்பு: பள்ளிக்குப்போக எனக்கு விருப்பமில்லை!

I don't want to go to school

One Early morning a mother went to her sleeping son and woke him up.

MOM: "Wake up, son. It's time to go to school."

SON: "But why, Mom? I don't want to go to school."

MOM: "Give me two reasons why you don't want to go to school.."

SON: "One, all the children hate me. Two, all the teachers hate me."

MOM: "Oh! that's not a reason. Come on, you have to go to school."

SON: "Give me two good reasons WHY I *should* go to school?"

அம்மா என்ன சொல்லியிருப்பார்? Scroll down and see!

V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V


அதை நானே சொல்லிவிட்டால் எப்படி? யோசித்துச் சொல்லுங்கள்!
அந்த விடையில்தான் சஸ்பென்ஸ் இருக்கிறது!

யார் கரெக்டாகச் சொல்கிறீர்கள் பார்க்கலாம்!

வாழ்க வளமுடன்!

8.4.09

இருட்டான இடங்கள் - பகுதி 2

இருட்டான இடங்கள் - பகுதி 2

முன் பகுதியைப் படித்திராத கண்மணிகளை, அதைப் படித்துவிட்டு வந்து
இதைப் படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

முன் பதிவிற்கான சுட்டி!

=====================================================
மூன்றாம் வீட்டு அதிபதி ஏழாம் வீட்டில் இருந்தால்:

ஜாதகன் பெண் பித்தனாக இருப்பான்.
யாருக்குத்தான் பெண் பித்து இல்லையென்கிறீர்களா?
சரி, வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த அமைப்பு உள்ளவன் அதிகமான அளவு பெண் பித்து உள்ளவனாக
இருப்பான். தேவையான சுகங்களைத் தேடிப்பிடித்து அனுபவிப்பவனாக
இருப்பான். அதற்கான துணிச்சல் இருக்கும்.

சிலருக்கு ஜொள்ளுப் பார்ட்டி எனும் விருது கிடைக்கும்.
பெண்களிடமிருந்து சொத்துக்களும் கிடைக்கும்.
இலை விருந்து, பெண் விருந்து என்று ஆசாமி எப்போதும் சாப்பாட்டு
ராமனாக இருப்பான்.

சிலர் சட்டச் சிக்கல்களுக்கு ஆளாக நேரிடும்.

சிலர் எந்தவிதமான வேலையும் இன்றி சுகஜீவனத்துடன் இருப்பார்கள்.

If the 3rd lord is in the 7th, the native will be an employee than a businessman.
He will excel as subordinate than as a commanding officer.
He will forget a duty or debt when it falls due.
===========================================================
மூன்றாம் வீட்டு அதிபதி எட்டாம் வீட்டில் இருந்தால்:

சகோதர உறவுகள் சிலாக்கியமாக இருக்காது. தேக ஆரோக்கியம் முழுமையாக
இருக்காது. சிலர் உடற் குறைபாடுகள் உள்ளவர்களாக இருப்பார்கள். வாக்கு
வன்மை இருக்காது. குடும்ப நிர்வாகத்திற்கு வேண்டிய பணவரவு இன்றி,
குடும்ப வாழ்க்கை தள்ளாடும்.

சிலர் கடன், அவமானம் என்று அவதிப்பட நேரிடும்.

இந்த அமைப்பு சுப பலத்துடன் இருந்தால், கஷ்டங்கள் ஏற்பட்டாலும்
கஷ்ட நிவாரணமும் கிடைக்கும்

சிலருக்குத் திருமண வாழ்வு மகிழ்ச்சியாக இருக்காது. அதுபோல சிலருக்குச்
செய்யும் தொழிலும் சிலாக்கியமாக இருக்காது. அதாவது பிடிதமாக இருக்காது

துரதிர்ஷ்டம் அவ்வப்போது ஓடிவந்து ஜாதகனின் தோள்கள் மீது ஏறிக்கொள்ளும்.

If the 3rd lord is in the 8th, the native will be driven by the desire
to take possession of things and take charge of situations without any
authority whatsoever.
The native will have the tendency to die for his/her love.
He will miss the company of his brother or sister.
===========================================
மூன்றாம் வீட்டு அதிபதி ஒன்பதாம் வீட்டில் இருந்தால்:

ஜாதகன் துணிவும், வீரப் பிரதாபங்களையும் உடையவன். வசதி
படைத்தவனாக இருப்பான். தெய்வ பக்தி மிகுந்து இருக்கும். மற்றவர்களிடம்
விசுவாசமாக இருப்பான்.

இந்த அமைப்பு தீய கிரகங்களின் பார்வையைப் பெற்றால் மேற்சொன்ன
பலன்கள் இருக்காது

பெற்றோர்வழிச் சொத்துக்கள் கிடைப்பதில் சிக்கல்கள் இருக்கும்.
போராடிப் பெறவேண்டியதிருக்கும். உணர்ச்சி மிகுந்தவர்கள்.
அந்த உணர்ச்சியால் அடிக்கடி சிரமங்களுக்கு ஆளாக நேரிடும்.
சிலருக்குப் புரிதல் இன்மையால் தந்தையுடன் கூடிய உறவு பாதிக்கப்படும்

சிலருக்குத் திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

திடீர் மாற்றங்களும் திடீர் திருப்பங்களும் நிறைந்ததாக வாழ்க்கை இருக்கும்.
==========================================
மூன்றாம் வீட்டு அதிபதி பத்தாம் வீட்டில் இருந்தால்:

இந்த அமைப்பு சுபக்கிரகங்களின் பார்வையின்றி இருந்தால்,
உடன்பிறப்புக்களால் ஜாதகனுக்குப் பயன் இருக்காது.
அவர்களும் அந்தஸ்து இல்லாமல் இருப்பார்கள்.
ஆதரவான சூழ்நிலை இருக்காது.

சுபக்கிரகங்களின் பார்வை இருந்தால் மேற்சொன்ன பலன்களுக்கு
எதிர்மாறான பலன்கள் இருக்கும். அதாவது நன்மையான பலன்கள் இருக்கும்

ஜாதகன் நற்பெயரோடும், ஓரளவு செல்வாக்கோடும் இருப்பான்.
பெருந்தன்மை உடையவனாக இருப்பான்.
உத்தியோக வளர்ச்சியினல் மட்டுமே அவனுடைய வாழ்க்கை மகிழ்ச்சி
உடையதாக இருக்கும்

If the 3rd lord is in the 10th, the native will be selfsufficient!
He will have pleasing personality and sincere approach
His profession may be connected by travelling
He will attain to a professional reputation
==========================================
மூன்றாம் வீட்டு அதிபதி பதினொன்றாம் வீட்டில் இருந்தால்:

நன்மைதரும் அமைப்பு அல்ல! ஜாதகன் தன் முயற்சியால் மட்டுமே
வளர்ச்சியைக் காண முடியும்.

இங்கே வந்தமரும் மூன்றாம் வீட்டதிபன் சுபக்கிரகமாக இருந்தால்
உடன் பிறப்புக்களால் ஜாதகனுக்கு நன்மைகள், லாபங்கள் கிடைக்கும்.
உடன்பிறப்புக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று மகிழ்வுடன்
இருப்பான்

The native will get help from their sisters and brothers
He will have gains of a high order.
His desires will be fulfilled in time by his own efforts
===========================================
மூன்றாம் வீட்டு அதிபதி பன்னிரெண்டாம் வீட்டில் இருந்தால்:

ஜாதகனுக்கு உடன் பிறப்புக்களால் தொல்லைகள் ஏற்படும்.
சண்டை சச்சரவுகள் மிகுந்து இருக்கும். சொத்துக்கள்
கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும்.

வாழ்க்கை அலைச்சலாகவும், மன அமைதியின்றியும் இருக்கும்.
கஷ்டங்கள் அதிகமாக இருக்கும்.
சிலர் சயன சுகமற்றவர்களாக இருப்பார்கள்.

வாழ்க்கை ஏற்றங்களும், இறக்கங்களும் நிறைந்ததாக இருக்கும்
===================================================
1
மூன்றாம் அதிபதி சூரியனுடன் சேர்ந்திருந்தால்:
ஜாதகன் மன உறுதி படைத்தவன். பிடிவாதக்காரன்.
தன் வழியில் துணிச்சலாகச் செல்லக்கூடியவன்
கோபக்காரன்.

2
மூன்றாம் அதிபதி சந்திரனுடன் சேர்ந்திருந்தால்:
ஜாதகன் தைரியம் மிக்கவன்.
மனதில் எந்தவிதமான பயமும் இல்லாதவன்
வாங்கடா ஒருகை பார்க்கிறேன் என்று துடிப்போடு இருப்பவன்

3.
மூன்றாம் அதிபதி செவ்வாயுடன் சேர்ந்திருந்தால்:
ஜாதகன் வலிமை மிக்கவன்.
துணிச்சலானவன்

4.
மூன்றாம் அதிபதி புதனுடன் சேர்ந்திருந்தால்:
எச்சரிக்கை உணர்வு மிக்கவன்
தைரிய உணர்வு மிக்கவன்
விவேகம் உள்ளவன்.
எதை எங்கு செய்ய வேண்டுமோ அதை அங்கு செய்வான்

5
மூன்றாம் அதிபதி குருவுடன் சேர்ந்திருந்தால்:
Characterized by keen awareness, sharp intelligence,
and often a sense of the practical.
துணிவு விவேகம் மிக்கதாக இருக்கும்
சமமான நபர்களிடம் மட்டுமே தன்னுடைய துணிவைக் காட்டுவான்.

6.
மூன்றாம் அதிபதி சுக்கிரனுடன் சேர்ந்திருந்தால்:
ஜாதகன் உணர்ச்சிவசப்பட்டவன்.
அந்த உணர்ச்சி அவனுக்குப் பெண்கள் மேல் அதிகமாக இருக்கும்
பெண்களிடம் தன்னுடைய உணர்வை இழக்கக்கூடியவன்

7
மூன்றாம் அதிபதி சனியுடன் சேர்ந்திருந்தால்:
மந்தமானவன். முட்டாள்தனம் நிறைந்தவன்

8
மூன்றாம் அதிபதி ராகு அல்லது கேதுவுடன் சேர்ந்திருந்தால்:

ஜாதகன் பார்ப்பதற்குத் தைரியசாலி போல தோற்றமளிப்பான்.
ஆனால் உண்மையில் பயந்தவன். கோழை.
தன்னம்பிக்கையில்லாதவன். மனதைரியம் இல்லாதவன்
timid heart & weak mind
Lacking self-confidence; shy. Fearful and hesitant:
நகைச்சுவை நடிகர் வடிவேலு படத்தில் வீராப்பாகப் பேசிவிட்டுக்
கடைசியில் அடி வாங்குவாரே, அதுபோல இந்த அமைப்புள்ள
ஜாதகனும் நடந்து கொள்வான்
===============================================
(தொடரும்)



வாழ்க வளமுடன்!

6.4.09

இருட்டான இடங்கள்!

இருட்டான இடங்கள்!

இருட்டாக இருந்தால் நாம் செயல் இழந்துவிடுவோம்.
நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.

அறை அல்லது வீடு இருட்டாக இருந்தாலும் அதே நிலைதான்.
நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.
வெளிச்சம் வரும்வரை பொறுமையாக இருக்க வேண்டும்.

ஜாதகத்தில் மூன்று வீடுகள் இருட்டான வீடுகள்.
ஆறாம் வீடு, எட்டாம் வீடு, பன்னிரெண்டாம் வீடு ஆகிய வீடுகளைப்
பற்றித்தான் அப்படிச் சொல்கிறேன்.

ஜோதிட வல்லுனர்கள் அவற்றை மறைவிடம் என்பார்கள்
(They are called as hidden Houses)

மறைவிடம் என்றால் ஒளிந்து நின்று பார்க்கும் வசதி இல்லாத மறைவிடங்கள்.
எதையும் சரிவரத் தெரிந்து கொள்ள முடியாத இடங்கள் அவைகள்.

6ஆம் வீடு கடன் நோய் எதிரி ஸ்தானம் (House of Debt, Diseases and enemies)
8ஆம் வீடு சிரம ஸ்தானம் (House of difficulties and life span)
சிரம ஸ்தானம் என்பது சிரமங்களைக் கொடுக்கும் இடம். இன்றைய நிலையில் உயிர்
வாழ்வதே சிரமமான காரியம். அதானால்தானோ என்னவோ அந்த இடம்தான்
ஆயுளுக்கும் உரிய இடம். (Place for span of life)
12ஆம் வீடு - விரைய ஸ்தானம் (House of losses)

இந்த மூன்று வீடுகளும் படுத்தாமல் இருந்தாலே போதும் மனிதன் நிம்மதியாக வாழலாம்

இந்த மூன்றோடு இன்னொரு வீடும் இருக்கிறது. அதுதான் 3ஆம் வீடு.
அந்த வீடும் நன்றாக இருக்க வேண்டும்.
இல்லையென்றால் அதுவும் படுத்தி எடுக்கும்.

அந்த் மூன்றாம் வீட்டின் முக்கியத்துவம் என்னவென்றால் அது எட்டாம்
வீட்டிற்கு எட்டாம் வீடாகும் (The third house is the eighth from the eighth)
இருட்டிற்குப் பழகியவனே துணிச்சலாக இருப்பான்.
அதானால்தனோ என்னவோ இந்த வீடுதான் மனிதனின் துணிவிற்கும் உரிய வீடாகும்.

The third house is the eighth from the eighth.
Since the Eighth house represents death, the eighth from the eighth.
The third House is considered dangerous.
On the positive side, younger co-borns & Help are indicated by the Third House.
If the third house is aspected by malefic, help from others will be found wanting.
==================================================
மூன்றாம் வீட்டதிபதி இருக்கும் இடங்களை வைத்துப் பலா பலன்கள்

1
மூன்றாம் வீட்டு அதிபதி (Lord of the 3rd House) லக்கினத்தில் இருந்தால்:

இந்த அமைப்பு 3ஆம் வீட்டிற்கு அதன் இடத்தில் இருந்து 11ஆம் இடமாகும்.
ஆகவே 3ஆம் அதிபதி இங்கே வந்து அமரும் போது பல நன்மைகளைச்
செய்வார். ஜாதகன் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பான். யோகங்கள் நிறைந்து
இருப்பான். சகோதரன், சகோதரிகளின் அதரவைப் பெற்றவனாக இருப்பான்.
செல்வம் செல்வாக்கு ஆகியவைகளைப் பெற்றவனாகவும் இருப்பான்.

ஜாதகன் தன் முனைப்பும், தன் நிறைவும் பெற்றவனாக இருப்பான்.
ஜாதகனின் அறிவும், புத்திசாலித்தனமும் பாராட்டும் வகையில் இருக்கும்.
அவனுடைய அறிவு கல்வித் தகுதியைச் சார்ந்ததாக இல்லாமல் சிறப்பாக
இருக்கும். சட்டென்று கோபம் வரக்கூடியவனாக இருப்பான்.
அதை அடக்கும் திறமையை ஜாதகன் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இல்லையென்றால் அந்தக் கோப உணர்வே அவனுடைய முதல் எதிரியாக
மாறிவிடும்.

சிலர் தோற்றத்தில் கெச்சலாக இருப்பார்கள். ஆனால் தேவைப்படும்
சந்தர்ப்பங்களில் தங்களுடைய சக்தியையும், வீரத்தையும் பயன்படுத்தி
வெற்றி பெறுவார்கள்.
இந்த அமைப்புடையவர்கள், நடிப்பு, இசை, நடனம் என்று எல்லாவற்றிலும்
ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள். சிலர் நாடகம், திரைப்படம் என்று
நடிக்கச் சென்று அதில் புகழ்பெறுவார்கள். இந்த அமைப்பிற்குச் ஜாதகத்தில்
சுக்கிரனும் வலுவாக இருக்க வேண்டும்.
===================================================
2
மூன்றாம் வீட்டு அதிபதி (Lord of the 3rd House) இரண்டாம் வீட்டில் இருந்தால்:

இந்த இடம் மூன்றாம் வீட்டிற்குப் பன்னிரெண்டாம் வீடாகும். அதாவது மூன்றாம்
இடத்திற்கு அதனிடத்திலிருந்து மறைவிடம். ஜாதகன் தைரியம் இல்லாதவனாக
இருப்பான். லொக்' லொக்குப் பார்ட்டி. அதாவது ஆரோக்கியம் குறைந்தவன்.
சிலர் வயதான காலத்தில் மருந்து மாத்திரைகளிலேயே உயிர்வாழ நேரிடும்.
சகோதரன், சகோதரிகளின் ஆதரவினால் காலம் தள்ள நேறிடும்.

இந்த வீட்டு அதிபதி சுபக்கிரகமாக இருந்தாலும், தீய கிரகங்களின் பார்வை
இல்லாமலும் இருந்தால், சகோதரன் அல்லது சகோதரியின் சொத்துக்கள்
ஜாதகனுக்குக் கிடைக்கும் அல்லது வந்து சேரும்.

சொத்துக்களை யார் வேண்டாம் என்று சொல்வார்கள்? கடன் வந்து சேர்ந்தால்
மட்டுமே மனிதன் வேண்டாம் என்று சொல்வான்

இந்த வீட்டு அதிபதி 2ல் இருக்கும் நிலைமையோடு, இந்த வீட்டின் மேல்
தீய கிரகங்களின் பார்வை விழுந்தால், ஜாதகன் மிகவும் சிரமமான தாழ்மையான
வாழ்க்கை வாழ்வான். அப்படி இல்லையென்றால், செல்வமான, மகிழ்ச்சியான
வாழ்க்கை வாழ்வான்.

சிலர் தங்கள் இள்வல்களை இழக்க நேரிடும். இழப்பது என்பது என்னவென்று
சொல்லவும் வேண்டுமா?

If the 3rd lord is in the 2nd, The native may be lazy or lethargic
He/she do not take his/her undertakings seriously.
Their image may be spoiled by their headstrong behavior
They may not keep punctuality and they may not also keep up the decencies of debate.
They may not have good relations with the younger co-borns.
They may have hostile neighbors.
=========================================================
3.
மூன்றாம் வீட்டு அதிபதி (Lord of the 3rd House) மூன்றாம் வீட்டிலேயே
(in his own house) இருந்தால்:

அப்படி இருக்கும் கிரகம், ஆட்சி அல்லது உட்ச பலத்துடன் இருந்தால்,
ஜாதகனுக்கு நல்ல சகோதரன் சகோதரிகள் இருப்பார்கள். அவர்கள் பெயர்
சொல்லும்படி செல்வத்துடனும், புகழுடனும் இருப்பார்கள். அவர்களால்
ஜாதகனுக்கு சகலவிதமான ஆதரவுகளும் கிடைக்கும். இந்த சகலவிதம் எனும்
சொல்லில் எல்லாம் அடங்கி விட்டது.

ஜாதகனும் அவனளவிற்கு அந்தஸ்து அதிகாரம் என்று கெளரவமாக இருப்பான்.
பலசாலியாகவும், போக பாக்கியங்களைப் பெற்றவனாகவும் இருப்பான்.
போக பாக்கியங்கள் என்றால் என்னவென்று தெரியுமல்லவா?
தெரியாதவர்கள் தனி மின்னஞ்சலில் கேளுங்கள்.

சிலர் ஆன்மிகம், தெய்வ வழிபாடு, பக்தி என்று ஒரு மார்க்கமாக இருப்பார்கள்.

பொதுவாக ஜாதகன் தைரியம் உடையவனாக இருப்பான்.

மூன்றாம் அதிபதி 3ஆம் வீடு 6ஆம் வீடு அல்லது 11ஆம் வீட்டில் இருந்தால்
ஜாதகனுக்கு நிறைய சகோதரன், சகோதரிகள் இருப்பார்கள். மூன்றாம் அதிபதி
செவ்வாயாக இருந்து 3ஆம் வீட்டிலேயே இருந்தால் ஜாதகன் தன் சகோதரர்களைப்
பறி கொடுக்க நேரிடும். சனியாலும் அதே பலன்தான் கிடைக்கும்

If the 3rd lord is in the 3rd, the native will have the company of brothers & sisters.
They view everything philosophically.
They are confident that everything happens for the good.
They are not the type who cry over the things lost.
They do not bother about the past which is gone
==========================================================
4
மூன்றாம் வீட்டு அதிபதி (Lord of the 3rd House) நான்காம் வீட்டில் இருந்தால்:

ஜாதகனுடைய குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.
ஜாதகனுடைய உடன்பிறப்புக்கள் நீண்ட ஆயுளையும், நிறைய குழந்தைகளைப்
பெற்று கூட்டுக் குடும்ப வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக விளங்குவார்கள்.

இந்த இடம் மூன்றாம் வீட்டிற்கு இரண்டாம் இடம் அதை மனதில் கொள்க!

குடும்பத்தில் செல்வமும், மகிழ்ச்சியும் நிறைந்து விளங்கும்.

The life of the native will be happy on the whole

மூன்றாம் அதிபதி பலமின்றி இருந்தால் மேற்சொன்ன பலன்கள் குறைவாக
இருக்கும் அல்லது இல்லாமல் போய்விடும்
===========================================================
5.
மூன்றாம் வீட்டு அதிபதி (Lord of the 3rd House) ஐந்தாம் வீட்டில் இருந்தால்:

ஜாதகன் நிறையக் குழந்தைகள் உடையவனாக இருப்பான்.

ஜாதகனுக்குப் பணப் பிரச்சினை இல்லாத அளவிற்குச் செல்வம் இருக்கும்.
ஆனால் அவனுடைய குழந்தைகளால் அவனுக்கு மகிழ்ச்சி இருக்காது.
அதோடு குடும்ப வாழ்வில் உரசல்களும் விரிசல்களும் இருக்கும்.

ஐந்தில் வந்தமரும் மூன்றாம் அதிபதி வலுவாக இருந்தால், ஜாதகனுக்கு
அவனுடைய உடன் பிறப்புக்களால் பல நன்மைகள் ஏற்படும்.

சிலருக்கு ஏராளமான விளைநிலங்கள் இருக்கும் அல்லது கிடைக்கும்.
சிலருக்கு சுவீகாரம் செல்லும் பாக்கியமும் அதனால் பெரும் சொத்துக்களூம்
கிடைக்கும். சிலருக்குப் பெரும் பதவிகள் கிடைக்கும்.

Since the 3rd lord is in the 5th, the native will be virtuous
Their brothers will definitely help them in their hour of need.
They are best suited to agriculture as they know when to sow and when to reap.
They may not have much happiness from their children.
===============================================================
6.
மூன்றாம் வீட்டு அதிபதி (Lord of the 3rd House) ஆறாம் வீட்டில் இருந்தால்:

ஜாதகனுக்கு உடன் பிறப்புக்களே எதிரிகளாக இருப்பார்கள் அல்லது எதிரிகளாக
மாறிவிடுவார்கள். ஜாதகனின் ஆரோக்கியம் அடிக்கடி பாதிப்பிற்குள்ளாகும்.
வியாதிகள் வந்து கேள்விகள் கேட்டுவிட்டுப் போகும். வைத்தியச் செலவில்
பணம் கரையும்.

சிலருக்கு எதிரிகள் அதிகம் இருப்பார்கள். அவர்களால் வேண்டிய அளவிற்குத்
தொல்லைகள் இருக்கும். மனதில் நிம்மதி இருக்காது.

ஆறில் வந்தமரும் மூன்றாம் அதிபதி வலுவாக இருந்தால், ஜாதகனுக்கு நன்மையான
பலன்கள் உண்டு. எதிரிகளை ஒரு கை பார்துவிடுவான். மேற்சொன்ன தீய பலன்கள்
குறைந்துவிடும்.

மொத்தத்தில் ஜாதகன் உடன் பிறப்புக்களை வெறுப்பவனாக இருப்பான்.
அவர்களால் இவனுக்குத் தொல்லைகள் மட்டுமே பரிசாகக் கிடைக்கும்

Since the 3rd lord is in the 6th, it will be difficult for the native to
maintain good relationships with brothers and sisters
Their honesty and sincerity in financial dealings have got drawbacks.
Their mind will be troubled by enemies.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)

இதன் அடுத்த பகுதி (for the next six houses) நாளை வெளிவரும்.
இன்று இவ்வளவுதான் எழுதித் தட்டச்சமுடிந்தது சாமிகளா!

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்



வாழ்க வளமுடன்!

4.4.09

Quiz - எங்கே காட்டுங்கள் பார்க்கலாம் உங்கள் புத்திசாலித்தனத்தை!

Quiz - எங்கே காட்டுங்கள் பார்க்கலாம் உங்கள் புத்திசாலித்தனத்தை!

மூன்று கேள்விகள் உள்ளன. விடைகளும் அவற்றின் கீழேயே உள்ளன.
கேள்விக்கான விடையை மனதில் நினைத்துக் கொண்டு, சரியான
விடையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.

மூன்றிற்குமே சரியான பதில் உங்களுக்குத் தோன்றியிருந்தால், நீங்கள்
அதி புத்திசாலி!

ஜாதகத்தைப் பார்க்கவே வேண்டாம். உங்கள் ஜாதகத்தில் புதனும், குருவும்
அம்சமாக இருக்கிறார்கள்!

எத்தனை கேள்விகளுக்குச் சரியான பதிலை நினைத்தீர்கள் என்பதைப்
பின்னூட்டத்தில் சொல்லுங்கள்!

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்.

புதிரை நமது கண்மணி ஒருவர் மின்னஞ்சலில் அனுப்பி வைத்திருந்தார்!
அவருக்கு நன்றிகள் உரித்தாகுக!
===================================================


V
V
V
V
V
V
V
V
V
V

V
V
V
V
V
V
V
V
V
V


V
V
V
V
V
V
V
V
V
V



V
V
V
V
V
V
V
V
V
V


V
V
V
V
V
V
V
V
V
V


V
V
V
V
V
V
V
V
V
V



V
V
V
V
V
V
V
V
V
V

V
V
V
V
V
V
V
V
V
V


V
V
V
V
V
V
V
V
V
V


V
V
V
V
V
V
V
V
V
V


++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

3.4.09

வெய்யிலில் பறவைகள் படும்பாடு!

வெய்யிலில் பறவைகள் படும்பாடு!

நமக்கு வெய்யில் பழகிவிட்டது. அதற்குத் தகுந்தாற்போல நடந்துகொள்வோம்.

பறவைகள் என்ன செய்யும்?

இங்கே படத்தில் ஒரு பறவை தண்ணீரை எப்படிக் குடிக்கிறது பாருங்கள்.

வீட்டு மொட்டை மாடியில் வாய் அகன்ற பானையில் தண்ணீர் வைத்தால் என்ன?

போகின்ற வழிக்கு அல்லது இருக்கும் வழிக்கு அது புண்ணியம் ஆகாதா?

=================================================

வாழ்க வளமுடன்!

வேகமும், வேகத்தடையும்!

வேகமும், வேகத்தடையும்!

CONFIDENCE
கிராமம் ஒன்றில் மழை வேண்டி பெரிய அளவில் யாகம் ஒன்றை
நடத்தினார்கள். யாகத்திற்கு கிராமத்தில் உள்ள மொத்த ஜனங்களும்
(சுமார் ஆயிரம் பேர்கள்) வந்திருந்தார்கள்.

வந்திருந்தவர்களில் ஒரே ஒரு சிறுவன் மட்டும் குடையோடு வந்திருந்தான்.
யாகம் முடிந்தவுடன் மழை பெய்யும் என்று அவன் நம்பினான்.

Confidence என்பது அதுதான்.
---------------------------------------------------------------------
TRUST

ஒரு வயதுக் குழந்தை ஒன்றைக் கைகளால் மேலே துக்கிப் போட்டுப்
பிடிக்கிறீர்கள். அந்தக் குழந்தை தன்னை மறந்து கலகலவென்று சிரிக்கும்.
நீங்கள் தவறாமல் பிடித்துவிடுவீர்கள் என்ற அசாத்திய நம்பிக்கை
அதற்கு இருக்கும்.

அதற்குப் பெயர்தான் Trust
---------------------------------------------------------------------
HOPE

ஒவ்வொரு இரவும் படுக்கச் செல்கிறீர்கள்.
காலையில் உயிரோடு மீண்டும் எழுவோம் என்பதற்கு எந்தவிதமான
உத்திரவாதமும் கிடையாது.

இருந்தாலும் அடுத்தநாள் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றி மனது
அசைபோடும்.

அதற்குப் பெயர்தான் Hope
---------------------------------------------------------------------------
ஆகவே எப்போதும், எதிலும் நம்பிக்கையோடு இருங்கள்!

HAVE CONFIDENCE, TRUST & NEVER LOSE HOPE
--------------------------------------------------------------------------
If money is lost; nothing is lost!
If health is lost; something is lost!
If courage is lost; everything is lost!

ஆகவே உங்கள் தைரியத்தை எப்போதும் இழக்காதீர்கள்!
-------------------------------------------------------------------------
அடுத்த பாடம் தைரியத்தைப் பற்றிச் சொல்லும் 3ஆம் வீட்டைப் பற்றிய பாடம்

Confidence = a trust
Trust = firm belief
Hope = expectation and desire, anticipate
தமிழில் இம்மூன்றிற்கும் ஒரு பொதுவான சொல்: நம்பிக்கை!
---------------------------------------------------------------------------
மூன்றாம் பாடத்தின் முதல் பகுதி 6.4.2009 திங்களன்று வெளியாகும்
என் சொந்த மற்றும் வியாபார அலுவல்கள் காரணமாக தட்டச்ச
நேரமில்லை. அதனால் அப்பாடம் வெளியாவதில் இரண்டு நாட்கள்
தாமதம். மன்னிக்கவும்.

யாரையும் காக்க வைப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. இருந்தாலும்
சில நிகழ்வுகள் தவிர்க்க முடியாமல் போய்விடுகிறது. தாமதம் குறுக்கே
வந்து நின்று விடுகிறது.

எனக்குத் திருவோண நட்சத்திரம். அஷ்டமத்துச்சனி நடக்கிறது.
அதனால் என்னையும் மீறி இப்படி நடக்கிறது:-((((((

இல்லையென்றால் Honda City கார் போல என்னுடைய வேகமே தனி!:-))))

சனி எப்போதுமே நமது வேகத்திற்குத் தடையான கிரகம்தான்!

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!