மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.12.09

Doubt: காதல் மட்டுமே உண்டு; மோதல் இல்லை!

----------------------------------------------------------------
Doubt: மோதல் இல்லை; காதல் மட்டுமே உண்டு!

Doubts: கேள்வி பதில் பகுதி ஏழு

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் ஏழு!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
----------------------------------------------------
email No.28
செல்லபிரசாத் ராமசாமி

அன்புள்ள அய்யா,
என்னுடைய சந்தேகங்கள்

1.கிரகங்கள் ஆதிபத்தியத்தியத்தை கொண்டுதானே நன்மையோ தீமையோ செய்வார்கள்? பின் ஏன் சுபர், பாபர் என்று பிரிக்கப்பட்டுள்ளது?

வாத்தியார்கள் எல்லோருமே பாடம்தானே நடத்துவார்கள். அவர்களை ஏன் வகுப்பு ஆசிரியர், தமிழாசிரியர், கணக்கு வாத்தியார், உடற்கல்வி வாத்தியார், பேராசிரியர், தலைமை ஆசிரியர் என்று பிரித்துள்ளார்கள்? மனிதர்கள் எல்லாம் ஒன்றுதானே? படித்த அறிவாளி, படிக்காத முட்டாள், செல்வந்தன், ஏழை, அப்பாவி, கேடி (பேட்டை தாதா) என்று ஏன் பிரித்துச் சொல்கிறார்கள்? அப்படித்தான் இதுவும்!

2.நவாம்சத்தில் லக்னம் ஆணுக்கு ஆண் ராசியிலும் பெண்ணுக்கு பெண் ராசியிலும்தான் அமையும் என்பது உண்மையா?

இருக்கிற குழப்பம் போதும். நீங்கள் வேறு புதிதாக எதையாவது கேட்டு வைக்காதீர்கள்.

3.துல்லியமான கணிப்புகளுக்கு வாக்ய பஞ்சாங்கம் சிறந்ததா? திருக்கணித பஞ்சாங்கம் சிறந்ததா? திருகணித பஞ்சாங்கம் சிறந்தது எனில் பண்டைய காலங்களில் எப்படி கணித்தார்கள்?

பண்டைய காலங்களில் கணிதமே இல்லையா? என்ன ஸ்வாமி சொல்கிறீர்கள்?

1. இந்தியக் கணிதவியலின் வரலாற்றைப் பற்றிய பல செய்திகள் இந்தத் தளத்தில் உள்ளன. படித்துப் பாருங்கள் 2. 1500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கணித மேதை ஆர்யபட்டரைப் பற்றிய செய்திகளுக்கான சுட்டி இங்கே! Aryabhata (IAST: Āryabhaṭa; Sanskrit: आर्यभट) (476–550 CE) was the first in the line of great mathematician-astronomers from the classical age of Indian mathematics and Indian astronomy. His most famous works are the Aryabhatiya (499 CE, when he was 23 years old) and the Arya-siddhanta.

சரியான கணக்குகளுக்கு என்றால் திருக்கணிதம் சிறந்தது. சரியான ஜாதகத்திற்கு என்றால் வாக்கியம் சிறந்தது. (நமது பெற்றோர்கள் கணித்துவைத்துள்ள ஜாதகம் இதன் அடைப்படையில்தான்) ஆகவே கணினியில் திருக்கணிதத்தில் கணித்துவிட்டு, எங்கப்பா எழுதி வைத்ததுபோல இல்லையே என்று சொல்லாதீர்கள்

4.பாக்ய ஸ்தானத்தில் அதிக பரல்களையும், தொழில் மற்றும் லாப ஸ்தானத்தில் குறைந்த பரல்களையும் பெற்ற ஜாதகன் அனைத்து பாக்யங்களையும் அனுபவிக்க முடியுமா?

உழைக்காமல் அனுபவிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ள விரும்புகிறீர்கள் இல்லையா? உழைக்காமல் அனுபவிக்க , 3, 7, 11ஆம் வீடுகள் நன்றாக இருக்க வேண்டும்.அந்த அமைப்பிற்குப் பெயர் காம ஜாதகம். அதைப் பற்றி முன்பே எழுதியுள்ளேன். பழைய பாடங்களில் தேடிப்படியுங்கள்

5.சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு சரியாக ஜாதகம் கணிக்க முடியுமா? முடியும் எனில் மனிதனே குழந்தையின் லக்னத்தை மாற்ற முடியுமே?

அதைத்தானே ஜோதிடத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களும் கேட்கிறார்கள். தாயின் வயிற்றைக் கிழித்துக்கொண்டு வரவேண்டுமா/ அல்லது கிழிக்காமல் வரவேண்டுமா? என்பதையும் கால தேவனே நிர்ணயிக்கிறான். ஆகவே கிழித்துக் கொண்டு வந்து தரையில் விழும் நேரம் அல்லது மருத்துவர் கையில் தவழத்து வங்கும் நேரமே அக்குழந்தையின் பிறந்த நேரம்.

6. கேந்திரத்தில் ஆட்சி, உச்சம் பெற்ற சுப கிரகங்களுக்கு கேந்திராதிபத்திய தோஷம் ஏற்படுமா?

கனமழை என்றால் அனைவருக்கும் அது மழைதான். குடை, ரெயின் கோட் போட்டிருப்பவன் சற்றுப் பாதுகாப்பாக இருப்பான். ஆனால் மழையின் பாதிப்பில் இருந்து அவன் தப்பிக்க முடியாது. நனைய வேண்டிய இடங்கள் நனையும்!

7. ஓரு வீட்டில் அதிக பரல்களை உடைய கிரகத்திற்குதான் (அது நீசமாகியிருந்தாலும்) அதிக வலிமை உள்ளதா?

ஆமாம். இல்லாவிட்டால் அதிக மதிப்பெண் வாங்குவதற்கு என்ன அர்த்தம்?

அன்புடன்
செல்லபிரசாத் ராமசாமி
----------------------------------------------------
email No.29
பிரியா பிரதீப்

கேள்வி பதில்களுக்கு நன்றி ஐயா,

1. நீசம் நீசம் என்று சொல்கிறார்களே ! இந்த நீசம் ஆன கிரகத்திற்கு tonic ஏதாவது குடுத்து strong ஆக்க முடியுமா?

அப்படி ஆக்க முடிந்தால்? ஆகா, நினைக்கவே குஷியாக இருக்கிறது!

வாருங்கள், கற்பனை செய்து பார்ப்போம். கற்பனைக்கென்ன காசா - பண்மா?
ஆகவே செய்து பார்ப்போம்!

337 டானிக்கைப்போல 999 டானிக் ஒன்றை உருவாக்கி அத்தனை கிரகங்களுக்கும் கொடுத்து விடலாம்.
அத்தனை கிரகங்களையுமே உச்சமாக்கி விடலாம். எந்த கிரகத்திற்கும் சொந்த வீடு கிடையாது. அனைத்து ராசிகளுமே பொதுவானது என்று சொல்லி விடலாம்.அவர்களுக்குள் நிலவும் பகையைப் போக்கி அனைவருக்கும் நட்பு உறவை உண்டாக்கி விடலாம். அத்தனை கிரகங்களையும் ஒரே சுற்றுப்பாதையில் ஓட விட்டுக் கோள்சாரத்தை இல்லாமல் செய்து விடலாம். கிரகங்களுக்குள் சமத்துவத்தை உண்டாக்கி விடலாம்.

அதனால் மனிதனின் வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்காது. இந்தியாவில் இருக்கும் அத்தனை பெண்களுமே அனுஷ்கா சர்மாவைப் போல அழகாக இருப்பார்கள். ஆண்கள் அத்தனை பேர்களும் அஜீத்தை போல அழகாக இருப்பார்கள். பெண் பார்க்கும் வேலை, ஜாதகம் பார்த்துத் திருமணம் செய்யும் வேலை எல்லாம் மிச்சம்.பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இருக்காது.ஜாதி எல்லாம் ஒழிந்து விடும் யாரும் வயல்களில் வேலை செய்ய வேண்டாம். பயிர்கள் தானாகவே விளையும். வீட்டில் கிணறு தோண்டினால், தண்ணீருக்குப் பதிலாக தங்கம் கிடைக்கும் அல்லது பெட்ரோல் கிடைக்கும். யாரும் பள்ளிக்கூடம் போக வேண்டாம். பிறக்கும்போதே 4 மொழிகள், 25 தொழில் நுட்பக்கல்விகளுடன் குழந்தைகள் பிறக்கும். 25 வயதிற்கு மேல் யாருக்கும் வயது ஏறாது. அனைவரும் இளமையுடன் இருப்பார்கள். யாரும் வேலைக்குச் செல்ல வேண்டாம். வீட்டில் உட்கார்ந்திருக்கலாம். நாட்டில் மோதல் இருக்காது. காதல் மட்டுமே இருக்கும். நோய்களே இருக்காது. பிரசவத்திற்கு மட்டுமே மருத்துவமனைகள் இருக்கும். பிரசவங்கள் அனைத்தும் 100% சுகப் பிரசவமாகவே இருக்கும். அரசியலில் ஒருவர் கூட இருக்கமாட்டார்கள். கட்சிகளே இருக்காது. பிரதமர் பதவிக்குக்கூட கெஞ்சி ஆள் பிடிக்க வேண்டியதாயிருக்கும். மொத்ததில், கதை, மற்றும் சஸ்பென்ஸ், திருப்பமுள்ள சம்பவங்கள் இல்லாத படம் (டாக்குமென்ட்டரி படம்) போல வாழ்க்கை இருக்கும். பரவாயில்லையா சொல்லுங்கள் - முயற்சி செய்வோம்!


2. தசாபுத்தி பத்தி கொஞ்சம் விளக்கமாக சொன்னால் நன்றாக இருக்கும் . எனக்கு ஜாதகம் வைத்து சொன்னது புரியவில்லை ...(bhuthan is not helping me to understand). எத்தனை பரல் இருந்தால் தசா காலத்தில் எவ்வளவு நல்லது ? எந்த வீட்டில் இருந்தால் எப்படி என்று ...(கேள்வி சின்னப் பிள்ளைத் தனமாகக் இருந்தால் மனிக்கவும்) விடிய விடிய ராமாயணம் கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பன் கதை போல் இருக்கிறது அன்டு சொல்லிவிடாதீர்கள் (ஹி ஹி ஹி)

ஜாதகத்தை வைத்துச் சொன்னபோதே புரியவில்லை என்றால், இப்போது சொன்னால் மட்டும் புரியவா போகிறது? புரிந்து என்ன ஆகப்போகிறது. ஆகவே விட்டு விடுங்கள்! (ஹி ஹி ஹி)

3. 23ல் வேலை கிடைக்கும் 25ல் வெளிநாடு போவா, 50ல் வீடு வாங்குவான். கடன் எந்த வயதில் தீரும் etc... என்று சொல்றாங்களே ? அது தசாவச்சு எப்படி பார்க்கிறது ஐயா ? கேள்விகள் பல மனதில் எழுந்தாலும் , அசிரியர் நேரமும் , என்னும் இரண்டு தடவை படித்தால் புரியும் என்பதால் போதும் ஐயா...

இரண்டு முறை படித்தால் புரியும் என்று நீங்களே சொல்கிறீர்கள். பேசாமல் இரண்டுமுறை அல்லது நான்கு முறைகள் பாடங்களைப் படியுங்கள். அப்போதும் புரியாவிட்டால், அடுத்த கேள்வி பதில் செஷனுக்கு வந்து கேள்விகளைக் கேளுங்கள். கண்டிப்பாகச் சொல்லித் தருகிறேன். இப்பொது என்னை விட்டு விடுங்கள் சகோதரி! (என் நேரம் சரியாக இல்லை!)

thanks a lot
Priya

நல்ல கேள்விகளாகக் கேட்டு என்னை சிந்திக்க வைத்ததற்கு நானும் உங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்!:-)))
-----------------------------------------
email No.30
சுரேந்திரன் சங்கர்

அன்புள்ள ஆசானே,

1. கோசார ரீதியில் கிரக பலாபலன்- ராசியிலிருந்து கணகிட்டு பார்க்கணுமா (Numbering from chandran) or லக்னத்திலிருந்து கணக்கிட்டுப் பார்க்கணுமா ?
உதாரணத்திற்கு தற்பொது குரு கும்பத்தில், சந்திரனுக்கு 11ல் இருக்க நல்ல பலனை தருவார், அதே, ரிஷப லக்னத்திலிருந்து குரு 10ல் இருக்கிறார் நல்லதொரு பலனை தரமாட்டார், SO in this scenario how do we conclude கிரக பலாபலன் (குரு/சனி transit) ? ராசியை வைத்து பலன் சொல்வது சரியா ? லக்னத்திலிருந்து குரு/கிரக postion- பலன் சரியானது ?

விடிய விடிய ராமாயணம் கேட்டவன், விடிந்தவுடன் சொன்னானாம்: சீதைக்கு ராமர் சித்தப்பா!. அந்தக் கதையாக இருக்கிறது உங்கள் கேள்வி. 300 பாடங்கள் நடத்தி இருக்கிறேன். அதைப் படித்து விட்டு அல்லது படிக்காமல் இந்தக் கேள்வியைக் கேட்கும் உங்களை நினைத்தால், பாடம் நடத்திய எனக்கு வருத்தமாக உள்ளது.

கோள்சாரப் பலனை சந்திரன் இருக்கும் ராசியில் இருந்துதான் பார்க்க வேண்டும் சாமி! இது மறக்காமல் இருக்க 100 முறை imposition எழுதுங்கள்

2. மறைவு ஸ்தான கிரக பரிவர்த்தனை - EXAMPLE 3ல் சனி - 6ல்செவ்வாய், ரிஷப லக்னம் தைன்ய பரிவர்த்தனை ” பரிவர்த்தனையாகும் கிரகங்களில் ஒருவர் 6 அல்லது 8 அல்லது 12ஆம் இடத்தின் அதிபதியாக இருப்பது. அப்படி இருந்தால், பரிவர்த்தனைக்கு உள்ளாகும் அடுத்த கிரகம் அடிபட்டுப்போகும்! உங்கள் மொழியில் சொன்னால், காயப்பட்டு, படுத்துக் கொண்டு விடும்” என்று எழதியிருந்திர்கள்
so above example who is hurted ? and which house is got hurted ? இப்படி பட்ட மறைவு ஸ்தான கிரக பரிவர்த்தனையில் ஒரு கிரகம் யோககாரகனாக இருந்தால் பலாபலன் எப்படி ? what is over all effect of above exchange?

பாடத்தை எழுதிய நான்தான் முதலில் அடிபட்டுப்போனேன். பரிவர்த்தனைக்கு உள்ளாகும் அடுத்த கிரகம் என்றால், 6, 8, 12ஆம் வீடுகளுக்கு அதிபதிகளாக இல்லாத கிரகம் என்னும் பொருள் அதில் உள்ளது உங்களுக்கு ஏன் தெரியவில்லை? பரிவர்த்தனைப் பாடத்தை மீண்டும் படியுங்கள்
---------------------------------
email No.31
அருள் பிரகாஷ் முத்து

ஆசிரியர் அவர்களுக்கு,

1.மாந்தி ஒருவரின் ஜாதகத்தில் எந்த அளவிற்கு முக்கியமானது ?

மாந்தியைப் பற்றி மின்னஞ்சல் எண் 17ற்குப் பதில் அளித்துள்ளேன். அதைப்படித்துப் பாருங்கள்

2.மாந்தி லாபஸ்தானத்தில் மற்ற கிரகங்களுடன் கூட்டு சேர்ந்து இருந்தால் என்ன ஆகும்?

மாந்தி தீய கிரகம். அதனுடன் மற்ற கிரகங்கள் சேராமல் இருப்பது உத்தமம். சேர்ந்து இருந்தால், தீயவனுடன் சேர்ந்த பலனை அனுபவிக்க வேண்டியதுதான்!

மு அருள்
-----------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

30.12.09

Doubt: ஜாதகன் அரைக் கிழவன் ஆகிவிடுவானா?

++++++++++++++++++++++++++++++++++++++++
Doubt: ஜாதகன் அரைக் கிழவன் ஆகிவிடுவானா?

Doubts: கேள்வி பதில் பகுதி ஆறு

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் ஆறு!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
-------------------------------------------------------
email No.23
சுனிதா நர்த்தகி

அன்புள்ள ஐயா,
உங்கள் கேள்வி பதில் பகுதி அருமை. இதோ என்னுடைய கேள்விகள்.........

கேள்வி 1 : மாந்தியின் சொந்த வீடு எது? மாந்தி சொந்த வீட்டில் இருந்தால் கெடுபலனா அல்லது நற்பலனா?

மாந்திக்கு சொந்த வீடு கிடையாது! மாந்தி தாதாக்களைப் போல இருக்கும் இடத்தை சொந்தமாக்கிக் கொள்வார் (அதாவது ராகு & கேதுவைப்போல)

கேள்வி 2 : அஸ்தமனம் ஆகி இருக்கும் கிரகம் பரிவர்த்தனை அடைந்தால் என்ன பலன் கிடைக்கும்?

பரிவர்த்தனை ஆன நிலையில்தானே அஸ்தமனமும் ஆகியிருக்க முடியும்? அஸ்தமனம் என்பது வீட்டிலேயே சிறைப்படுவதற்குச் (House arrest) சமம். சிறைப்பட்டுக் கிடப்பவர், நமக்கு சிறப்பாக என்ன செய்துவிடுவார் சொல்லுங்கள்? ஆனாலும் அவருடைய ஸ்டேட்டஸை வைத்து (உதாரணம் குரு) குறைவான காரகத்துவப் பலன்கள் குறையில்லாமல் கிடைக்கும்

கேள்வி 3 : லக்னத்திலும், அம்சத்திலும் லக்னாதிபதி லக்னத்தை பார்த்தால் நல்லதா?

ராசிச் சக்கரத்தில் ( In Rasi Chart) லக்னாதிபதி லக்னத்தை பார்த்தால் நல்லது. நவாம்சச் சக்கரத்திலும் (In Navamsa Chart) அதே அமைப்பு இருந்தால் மிகவும் நல்லது. Double century அடிக்கலாம்!

கேள்வி 4 : ஆறாம் வீட்டில் பரல்கள் குறைவாக இருந்தால் நோய்கள் உண்டாக வாய்ப்பு அதிகமா?

ஆறாம் வீடு, நோய், கடன், எதிரி என்று மூன்று அமைப்புக்களுக்கு உரியது. அதைப் பற்றி விரிவாகப் பத்துப் பக்கங்களுக்கு மேல் எழுதிய பாடம் உள்ளது. அதற்கான சுட்டி இங்கே உள்ளது: படித்துப் பாருங்கள்

பதில் அளிப்பீர்கள் என்று நம்பிக்கையுடன் காத்திருப்பேன் ..............
இப்படிக்கு
உங்கள் மாணவி

அளித்துவிட்டேன் சகோதரி!
-------------------------------------------
email No.24
கோபி கார்த்திகேயன், எஸ்ஸார்

Please clarify my doubt:

Sun & Venus sitting in Thulam house which is own house for Venus. Venus is very near to Sun (Less than 10°). Sun gets Neecham in Thulam.Please clarify whether Venus will loose its power, even The Sun is in neecham condition?

சூரியன் நீசமானதால் அஸ்தமனம் உண்டா அல்லது இல்லையா? என்ற சந்தேகத்திற்கெல்லாம் இடமில்லை. சூரியன் துலாமில் நீசம் பெறுவான். ஆனால் அவனுக்குள்ள எரிக்கும் தன்மை இல்லாமல் போகுமா என்ன? சுக்கிரனை யார் 10 டிகிரிக்குள் போகச் சொன்னது? போனதால் அஸ்தமன விதிகளுக்கு உட்பட்டாக வேண்டியதுதான்! அஸ்தமனம் பெற்ற சுக்கிரன் வலிமை இழந்து விடும். சுக்கிரன் அஸ்தமனம் ஆனாதால் கவலைப்பட்டுப் படுத்து விடாமல் இருக்க, ஜாதகனுக்கு 337 டானிக்கைப் பரிந்துரையுங்கள்
---------------------------------------------
email No.25
லெட்சுமணன் தியாகராஜன்

ஐயா வணக்கம்,

எனக்குச் சில சந்தேகங்கள்

1) ஒரு கிரகம் நீசமடைந்துவிட்டால் பலன் எதுவுமில்லை (கோமா நிலை) என்று சொன்னீர்கள். அதே நீசமடைந்த கிரகத்திற்கு சுய வர்க்கத்தில் 5 அல்லது மேற்பட்ட பரல்கள் இருந்தால் பலன் எப்படி?

சுய பரல்கள் அதிகமாக இருப்பதால் கோமாவில் இருந்து எழுந்து நடை உடையோடு இருப்பார். நீசமடைந்ததால் மெதுவாகவே தன் வேலைகளைச் செய்வார்!.பலன்கள் கொஞ்சம் குறையவே செய்யும்

2) சனி மூன்றாம் இடத்தில் இருந்து மூன்றாம் பார்வையால் ஐந்தாம் இடத்தைப் பார்த்தால் ஞாபக மறதி அதிகம் இருக்கும் என்று ஒரு நூலில் படித்தேன். அது உண்மையா?

புத்தி, மற்றும் நினைவாற்றலுக்கு உரிய கிரகம் புதன். ஜாதகத்தில் அவர் பாதிக்கப்பட்டிருந்தால், அதாவது தீய கிரகங்களின், சேர்க்கை அல்லது பார்வை பெற்றிருந்தால் அல்லது அவரே 6, 8 & 12ல் போய் உட்கார்ந்து சீட்டு ஆடிக்கொண்டிருந்தால், நினைவாற்றல் குறையும். அதாவது ஞாபக மறதி இருக்கும்.

இப்படிக்கு
தி. லெட்சுமணன்
----------------------------------------------------------
email No.26
ஆதிராஜ் (ஆஷ்ட்ரோஆதி)

அய்யா வணக்கம்,

சந்தேகங்களை கேட்க வாய்ப்பு அளித்தமைக்கு முதற்கண் நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்..

என் சந்தேகம் உள்ளூர் நேரம் கணிப்பது தொடர்பானது ......சென்னை இல் இருந்து நான் இருக்கும் ஊர்(ஆரணி ,திருவண்ணாமலை மாவட்டம்) 130 கி.மீ இருக்கும் சென்னை நேரத்துக்கும் எங்கள் ஊர் நேரத்துக்கும் உள்ள வித்தியாசத்தை எப்படி கண்டுபிடிப்பது ,,,,,,நீங்கள் பழைய பாடத்திள் உள்ளூர் நேரத்தை பற்றி கவலை பட வேண்டாம் அதை ஜாதகம் கணிப்பவர் பார்த்து கொள்வார் என்று குறிப்பிட்டு உள்ளீர்கள் .....அய்யா நான் கேட்பது என் ஊர் நேரத்தை அல்ல ....நீங்கள் பெருநகரங்களுக்கு இடைப்ட்ட நேரத்தை கணிப்பதை ஏற்கனவே தெளிவாக விளக்கி உள்ளீர்கள் என் சந்தேகம் 100 கீ.மீ அல்லது 150 கி.மி உட்பட்ட இடங்களில் நேரம் வித்தியாசம் இருக்குமா?அப்படி இருக்கும் பட்சத்தில் அதை எப்படி கண்டுபிடிப்பது ..?
நன்றி வணக்கம்...

எந்த இடமாக இருந்தாலும், 30 கிலோ மீட்டர் தூரத்திற்குள் உள்ள சிறு நகரத்தின் இடத்தின் அட்ச ரேகை, தீர்க்க ரேகையைக் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள். தமிழ் நாட்டிலுள்ள எல்லாச் சிறு நகரங்களின் அட்ச ரேகையும், தீர்க்க ரேகையும் இணையத்தில் கிடைக்கும். அங்கே இருந்து எடுத்துக்கொள்ளுங்கள் அதற்கான சுட்டி (link)

சென்னை: 80.17 கிழக்கு
ஆரணி 79.19 கிழக்கு

திருவண்ணாமலை 79.07 கிழக்கு


ஒரு டிகிரி குறைந்தால் 4 நிமிடங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும். ஆரணிக்கு 4 நிமிடங்களைக் குறைத்துக்கொள்ளுங்கள். IST காலை 6:00 மணி என்றால் ஆரணியின் நேரம் 5:56 ஒரு டிகிரி அதிகமானால் 4 நிமிடங்களைக் கூட்டிக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு கல்கத்தா (88.22 பாகைகள்) IST காலை 6:00 மணி என்றால் கல்கத்தாவின் நேரம் 6:34

கணினி மென்பொருட்களில் நீங்கள் ஊர்ப் பெயரை அல்லது அட்ச ரேகை தீர்க்க ரேகைகளை மட்டும் கொடுத்துவிட்டு ஐ.எஸ்.டி நேரத்தை மட்டும் கொடுத்தால் போதும். உள்ளூர் நேரத்தை அது பார்த்துக் கொள்ளும்

------------------------------------------------------------
email No.27
அருள் பிரகாஷ் முத்து

ஆசிரியர் அவர்களுக்கு,

தசா, புத்தி மாற்றங்களை மாற்றங்கள் மூலம் தெரிந்து கொள்வது போல அந்தரங்களின் மாற்றங்களை அன்றாட வாழ்கையில் நாம் உணர முடியுமா ? அவற்றின் பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கும் ?
மு அருள்

ஒருவனின் திருமணத்தை சுக்கிரன் அல்லது ஏழாம் இடத்து அதிபதி நடத்திவைப்பான் என்பது பொது விதி. ஒருவனுக்கு ஏழாம் அதிபனும் சுக்கிரன் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஆவனுடைய நட்சத்திரம் கார்த்திகை என்றும் தற்சமயம் வயது 22 என்றும் வைத்துக்கொள்ளுங்கள். ராகு திசையும் அவனுக்குத் துவங்கி விட்டது. அவனுடைய திருமணம் எப்போது நடக்கும்? ராகு திசை முடிந்த பிறகா? அதற்கு 18 ஆண்டுகள் ஆகுமே? அது முடியும்போது ஜாதகன் அரைக் கிழவன் ஆகிவிடுவானே? அதற்குக் கை கொடுக்கத்தான் மகா திசையில் உள்ள புத்திகள் உள்ளன. சரி அப்படியும் பார்த்தால், ராகு திசையில் சுக்கிர புத்தி வருவதற்கு சுமார் 12 ஆண்டு காலம் காத்திருக்க வேண்டுமே? அந்த நிலையில் கை கொடுக்க இருப்பதுதான் கிரகங்களின் அந்தரங்கள். ஒவ்வொரு புத்தியிலும், வேறு கிரகத்தின் அந்தரங்கள் வரும். ராகு திசையில், ராகு புத்தி (சுய புத்தி), குரு புத்தி, சனி புத்தி, புதன் புத்தி , கேது புத்தி என்று வரிசையாக ஒவ்வொரு புத்தியிலும் சுக்கிரனின் அந்தரம் ஒன்று முதல் ஐந்து மாத காலம் வரை வந்து போகும்! ஆகவே 23 வயது முதல் 34 வயதிற்குள் ஜாதகனின் மற்ற அமைப்பை வைத்து இடைப்பட்ட காலத்தில் திருமணத்தை சுக்கிரன் முடித்துவிடுவான். இடைப்பட்ட காலம் என்பது கோள்சாரத்தையும் உள்ளடக்கியது. அதை நினைவில் கொள்க!

புத்திகளில் ஒரு கிரகத்திற்கு என்ன சக்தி (Power) உள்ளதோ அதே சக்தி (Power) அந்தரங்களிலும் இருக்கும்

-----------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

29.12.09

Doubt: எவையெல்லாம் மாயமாகப் போகும்?

......................................................................................................
Doubt: எவையெல்லாம் மாயமாகப் போகும்?
Doubts: கேள்வி பதில் பகுதி ஐந்து!

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் ஐந்து!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
-------------------------------------------------------
email No.19
சஞ்சனா

Ayya,
Nantri intha kelvi pathil sessionku.Ithu varai nadantha padangal
thavira matravatril irunthu doubts ketkalama?

வந்துள்ள நோய்களுக்கு (சந்தேகங்களுக்கு) மட்டும் இப்போது மருந்து கேளுங்கள். வரப்போகும் நோய்களைப் பின்னால் (அவைகள் வரும்போது) பார்த்துக் கொள்வோம்!

En Kelvikal

1. Lagna Suya Paral -in artham enna?

லக்கினம், மற்றும் ஏழு கிரகங்களுக்கு உரிய சுயபரல் அட்டவணைகளைத் (மொத்தம் 56) தயார் செய்து, கூட்டினால்தான் மொத்த அஷ்டகவர்க்கப்பரல்கள் கிடைக்கும். அதற்காகத் தயாரிக்கப்படும் அட்டவணைகளில் லக்கின சுய வர்க்கப்பரல் அட்டவணையும் ஒன்று. அதற்குத் தனியாகப் (லக்கின சுய வர்க்கப்பரல்களுக்கு) பலன் எதுவும் கிடையாது!

2.Sani(saturn) suya Paral kammiyaga irunthal enna palan?
Thangal athai padathil kura villai.Athu "0" aga irunthal ayul balam kuraiva?
En ketkiren enral Gandhiyin sani suya paral "0".Obama vin Jathagathilum
athu "0"...Neengal athu patri elai marai kaiyaga kuriyathu pol ennaku
patathu...

சனி தன்னுடைய சுயவர்க்கத்தில் 0 பரல்களுடன் இருந்தால், ஜாதகன் வேலைக்குச் செல்லமாட்டான்.அல்லது அவன் விரும்பும் வேலை கிடைக்காது. அத்துடன் கோள்சாரச் சனி சுற்றிவரும்போது, அதன் பலனைத் துல்லியமாகப் பார்க்க இந்தச் சனியின் சுயவர்க்க அட்டவணை உதவும். அத்துடன் சனி ஆயுள் காரகன் என்பதால் எட்டாம் வீட்டிற்கு இந்தச் சனியின் சுயவர்க்க அட்டவணை பெரிதும் உதவியாக இருக்கும். அது பற்றி எட்டாம் வீட்டைப் பற்றிய பாடம் நடத்தும்போது தெரிந்துகொள்ளுங்கள்.

3.Suriyanal Asthamanam(combust) ana grahamgal weak agi vidum endru
padithen..Avai "Ucham" , Moola Trikonam" allathu Varkotham adainthu
irunthalum weaka thaan consider seiya venduma?

நீங்கள் நினைக்கும் கிரகம் அம்சத்தில் அஸ்தமனம் ஆகாமல் இருந்தால் பலன் உண்டு. அங்கேயும் ஆகியிருந்தால், பலன் இல்லை. அல்லது வேறு அமைப்புக்களை வைத்து, அடி வாங்கியும் (அதாவது அஸ்தமனம் ஆகியும்) எழுந்து உட்கார்ந்திருந்தால், (குறைவான) பலன்கள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.
-----------------------------------------------------
email No.20
பாலகுமாரன்.ஏ.ஜி

Dear Sir,

Can you clarify my doubt please. If a padagathipathi or a normal planet is conjuncted with lagnathipathi or Yogakaraka then the particular planet will also act as yogakaraka or not?
Thanks in advance.
Regards,
Balakumaran A G

பெருங்காய டப்பாவிற்குள் போட்டு வைக்கும் பொருள் எப்படிப் பெருங்காயமாகும்? பெருங்காயத்தின் வாசம் மட்டும்தானே அதனுடன் சேரும். அது பெருங்காயம் ஆகாதல்லவா? அதுபோல யோககாரனுடன் சேர்ந்ததற்காக, சேரும் கிரகம் யோககாரகனுடைய வேலைகளைச் செய்யாது.
----------------------------------------------------
email No.21
எஸ்பி.கருப்பையா
அய்யா வணக்கம்

இராசிக்கு 12ல் அல்லது லக்கினத்திற்கு 12ல் கேது இருந்தால் மோட்சம் என்கிறார்களே இதைபற்றி கூறவும்
இப்படிக்கு
SPK KKDI

எல்லாம் மாயை (illusion). சொத்து, சுகம், மனைவி, மக்கள், ஐ.டி கார்டு, ரேசன் கார்டு, வோட்டர்ஸ் கார்டு, பான் கார்டு, பாஸ்போர்ட், வங்கி வைப்பு நிதிகள், சொத்துப் பத்திரங்கள், வாங்கிய விருதுகள் என்று அனைத்தும் ஒரு நாள் மாயமாகப் போகிறது. அவற்றையெல்லாம் விட்டுவிட்டு (including pending civil/property cases in the court) மனிதன் ஒரு நாள் மாயமாகப் போகிறான்.

அதைத்தான் கவியரசர் இப்படிச் சொன்னார்:

”ஆடிய ஆட்டமென்ன?
பேசிய வார்த்தை என்ன?

தேடிய செல்வமென்ன?

திரண்டதோர் சுற்றமென்ன?

கூடுவிட்டு ஆவிபோனால்
கூடவே வருவதென்ன…?


வீடுவரை உறவு

வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை

கடைசி வரை யாரோ?”


சிலர் இந்த உலக அவலங்கள் வேண்டாம். அடுத்த பிறவி வேண்டாம் என்பார்கள். அடுத்த பிறவி வேண்டாம் என்றால், இறைவன் திருவடிகளைச் சென்றடைய வேண்டும். அந்த நிலையைத்தான் மோட்சமடைவது என்பார்கள். சுருக்கமாகச் சொன்னால் பிறவியில் இருந்து விடுதலை அடைவதுதான் மோட்ச நிலை

Liberation from the cycle of reincarnation and from the illusion of maya

ஜாதகத்தில் ஐந்தாம் வீடு முற்பிறவியைக் குறிக்கும். பன்னிரெண்டாம் வீடு அடுத்த பிறவியைக் குறிக்கும். அந்த வீட்டில் (அதாவது 12ல்) கேது இருந்தால் அடுத்த பிறவி இல்லையென்பார்கள். படித்திருக்கிறேன்.


ஆனால் அனுபவம் இல்லை; அனுபவித்ததில்லை.உறுதியாகச் சொல்ல முடியவில்லை:-))))
----------------------------------
email No.22
அரியப்பன் சாத்தப்பன்
வணக்கம் அய்யா,

1. வக்கிரக கிரகம் பலன் மாறுவதற்குக் காரணம் என்ன?

பாகற்காய் ஏன் கசக்கிறது? என்பதைப்போல் இருக்கிறது உங்கள் கேள்வி! ஒரு மனிதன் வக்கிரபுத்தி வந்தால் என்ன செய்கிறான். அண்ணன் தம்பி சொத்துக்களைத் தனதாக்க முயற்சிக்கிறான். அடுத்தவன் மனைவிக்கு ஆசைப்படுகிறான். அதிக வக்கிரம் பிடித்தால் பொது இடத்தில் குண்டு வைக்கிறான். அதைப்போய் ஏனென்று கேட்க முடியுமா? வக்கிரத்தின் தன்மையே அதுதான்.

அதுபோல வக்கிரம் பெற்ற கிரகங்கள், அதிகமாகத் தீமைகளைச் செய்யா
விட்டாலும், நன்மை செய்வதை நிறுத்திவிடும். தீய கிரகங்கள் வக்கிரம் பெற்றால், அதிகத் தீமைகளைச் செய்யும். சும்மா சுமப்பதை, ஜாதகன் நனைத்துச் சுமக்க வேண்டும். அறுந்த செருப்பைக் கையில் தூக்கிக் கொண்டு கொதிக்கும் வெய்யிலில் நடக்க நேரிடும்!


2. இரண்டு வீட்டிற்குச் சொந்தமான கிரகம் இரண்டும் பரிவர்த்தனை பெறும்போது,தான் இல்லாத வீட்டு பலனைத் தருமா?(இதில் நல்ல வீடும், கெட்ட வீடும் இருக்கின்றபோது)

அவர் இல்லாத வீட்டின் பலனை, அங்கே வந்து அமர்கிறவன் தருவான். கெட்டது எதுவும் மிஸ்ஸாகாது. கவலைப் படாதீர்கள்

3, இரு நீச்ச கிரகம் பரிவர்த்தனை பெற்றால் நல்ல பலன் உண்டா? அருள்கூர்ந்து எடுத்துக்காட்டுடன் விளக்கவும்.

இரண்டு நீச கிரகங்கள் எப்படி பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும்? ஒரு நீச கிரகத்தின் எதிர்வீடு அதன் உச்ச வீடு. நீச சந்திரனுக்கு மட்டும்தான் மற்றொரு நீசனுடன் பரிவர்த்தனை செய்துகொள்ளும் வாய்ப்பு உண்டு. அப்படியே பரிவர்த்தனை செய்து கொண்டால் இருவரின் நீசத்தன்மையும் காணாமல் போய்விடாதா?



எடுத்துக்காட்டுடன் நீங்கள் விளக்குங்கள். முடியாவிட்டால், இந்தக் கேள்வி பதில் வகுப்பு முடியும்வரை பெஞ்சு மேல் ஏறி நில்லுங்கள்

நல்ல வாய்ப்புத் தந்தற்கு நன்றி,
அரிபாய்.
வாழ்க வளமுடன்.

இன்னும் வாய்ப்பு முடியவில்லை. பெஞ்சு மேல் ஏறி நிற்கும் வாய்ப்பு பாக்கி உள்ளது!:-)))
----------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

28.12.09

Doubt: தேவதையா? பிசாசா? எது கிடைக்கும்?

-----------------------------------------------------------------
Doubt: தேவதையா? பிசாசா? எது கிடைக்கும்?

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் நான்கு!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
-------------------------------------------------------
email No.15
சுபஸ்ரீ கண்ணன்

Sir,
My doubt is,
Will our natalchart/horoscope reflect out previous jenma karma? i mean based on our previous jenma karma only our natal birth chart will appear?
Thanking you sir,
Sincerely yours,
K.Subhashree

எல்லாக் குழந்தைகளுமே தாயின் வயிற்றில் 280 நாட்கள்தான் இருக்கின்றன. அதில் வித்தியாசமில்லை. ஆனால் பிறப்பில் ஏன் இத்தனை வேறுபாடுகள். ஒரு குழந்தை செல்வந்தர் வீட்டில் பிறக்கிறது. ஒரு குழந்தை குடிசைவாசியின் வீட்டில் பிறக்கிறது. ஒரு குழந்தை ரஜினி வீட்டில் அல்லது அம்பானி வீட்டில் பிறக்கிறது. ஒரு குழந்தை கூலிவேலை செய்யும் தொழிலாளி வீட்டில் பிறக்கிறது.ஒரு குழந்தைக்குப் பிறந்த அன்றே எல்லாம் இருக்கிறது. ஒரு குழந்தைக்குப் பிறந்த அன்றே எதுவும் இல்லை.(பெற்றவள் குப்பைத் தொட்டியில்
வீசிவிட்டுப் போய் விடுகிறாள்) ஒரு குழந்தை அழகோடு பிறக்கிறது. ஒரு குழந்தை அழகில்லாமல் பிறக்கிறது. ஒரு குழந்தை புஷ்டியான தோற்றத்துடன், பார்ப்பவர்களை மயக்கும் விதமாகப் பிறக்கிறது. ஒரு குழந்தை சற்று
ஊனத்துடன் பிறந்து பெற்றவர்களைத் துயரப்பட வைக்கிறது. இப்படிப் பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டே போகலாம்.

இதற்கெல்லாம் காரணம் என்ன? முன் வினைப்பயன்தான் காரணம்!

முன் வினைப்பயனைத்தான் பூர்வ புண்ணியம் என்று ஜாதகத்தில் உள்ள ஐந்தாம் வீட்டைக் காட்டுவார்கள். அதில் ஒன் லைன் ஸ்டோரிதான் தெரியும். முழுப்படமும் தெரியாது. அதாவது ஜாதகனின் சென்ற பிறவி வரலாறு
22 ரீல்களில் படமாகத் தெரியாது.

ஏன் தெரியாது? தெரிந்தால் ஜாதகன் தன் போன ஜென்மத்து உறவுகளைத் தேடிப்போய்விடுவான். பழைய சேட்டைகளை மீண்டும் தொடர்வான்:-))))

ஒரு பிறவித் தொடர்புகளே தாங்க முடியவைல்லை. இரண்டு பிறவித் தொடர்புகளும் மனிதனுக்கு இருந்தால் என்ன ஆகும்? கடவுள் கருணை மிக்கவர். அதனால் தான் அதைக் காட்டாமல் மனிதனுக்கு ஒருவித நிம்மதியைக் கொடுத்துள்ளார்.

இப்போது சொல்லுங்கள். பிறவியே முன் வினைப் பயனை வைத்துத்தான் எனும்போது, ஜாதகமும் அதைவைத்துத்தானே அமையும்?
--------------------------------------------------------
email No.16
பாலசுப்பிரமணியன் புள்ளிகாட், ரியாத்

1. Can you please let me know what is Vargothama Yogam? Am I right in this question. Is there any such yog. If so , what are the effects of the same please. Is it something related to moon in seventh house from lagna or viceversa. I have already studied your lesson on Vargotham which has something to do with Navamsam..

குழப்புகிறீர்களே? வர்கோத்தமம் என்ன என்பதைப் பற்றிச் சொல்லச் சொல்கிறீர்கள். அதே நேரத்தில் கடைசிவரியில் வர்கோத்தமம் பாடத்தைப் படித்தேன் என்கிறீர்கள்? ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு? ஏன் இந்தக் குழப்பம்? பாடத்தை மீண்டும் படியுங்கள்.

2. I note the lessons on House 10 etc are reproduction from Lessons in 111 to 120. Is that right?

அதில் புதிதாக எழுதப்பட்ட பகுதிகளும் உண்டு. இரண்டையும் பிரின்ட் அவுட் எடுத்து ஒத்துப் பாருங்கள். தெளிவாகும்!

3. My wife is just house wife, but has 35 parals in tenth house (Rishaba). and her 10th house lord (venus) has 7 parals. But she is just housewife and of average I Q. Saturn has 5 parals. Does that mean will she shine in profession, if she goes for job or if she does any business or if she does share trade by herself. (DOB 14.08.1973 at 7.15 am chennai.)

உங்கள் மனைவி சிம்ம லக்கினம். பத்தாம் வீட்டின் இருபுறமும் செவ்வாய், சனி, கேது ஆகிய கிரகங்கள் அமர்ந்து பாப கர்த்தாரி யோகத்தைக் கொடுத்துள்ளன. அதனால்தான் 36 வயதாகியும், ஜாதகத்தில் பத்தாம் வீடு வேறு மேட்டர்களில் நன்றாக இருந்தும் அவரால் வேலைக்குச் செல்ல முடியவில்லை! அதோடு பத்தாம் அதிபதி சுக்கிரன் நீசமடைந்துள்ளார். அதிபதியும் முக்கியம்.

இது பொதுக்கேள்விக் கணக்கில் வராது. இருந்தாலும் பதில் அளித்துள்ளேன்

4. I have written this query in my earlier email also, but not received any reply and is reproduced below.You had described benefits or results of Sun being in various houses. You have also described benefits of lord of each house from lagna, placed in various houses.

To quote an example, when sun in 5th house, you have listed some items.

For a person with Midhuna Lagna, Sun being Lord of 3rd house, positionined in 5th house(alone), you have described certain items.

They go in contradiction. In former, it says the person will have small family. In the latter, it is mentioned that the person will have big family. I find the former one was matching in all items with the sample jathakam(It is mine with Guru in Lagna and also in Navamsa) I have chosen. If I adopt the former, can I reject it latter completely or will the latter also become true at some other point of time. Please explain which narration is predominant.

நீங்கள் படித்த அந்த இரண்டு நிலைப்பாடுகளுக்கான பாட எண் அல்லது சுட்டியைக் (Link) கொடுங்கள். படித்துப்பார்த்துவிட்டுப் பதில் சொல்கிறேன்

I find this may be the case with other planets also. I will be glad if you can teach me how to interpret, when we find or come across contradictions. Kindly excuse me if it is primitive or if I have missed your explanations if any in other parts of the lessons.

ஜாதகத்தை அலசுவது எப்படி (how to interpret) என்பது மேல் நிலைப் பாடம். பின்னால் அது வரும். பொறுத்திருந்து படியுங்கள்

5. I am going through the lessons only and do not read the comments posted for each lesson. Is there any way to give summary of important points given by you in the comment of portion of each lesson. Otherwise I have to go through comments portion separately.

பின்னூட்டங்களைப் படிப்பதில்லை என்கிறீர்கள். அதை (முக்கியமான பகுதிகளாக) தொகுத்துத்தர வழி உண்டா என்று கேட்கிறீர்கள். உங்களைப் போல எனக்கும் நாள் ஒன்றிற்கு 24 மணி நேரம்தான் கொடுக்கப்பட்டுள்ளது. அதை மனதில் வையுங்கள்!

6. Would also appreciate if you can give the date on which your books will be released.

புத்தகத் தொகுப்பு தயாரிப்பில் உள்ளது. பாடங்களை ஒழுங்கு படுத்தும் வேலை நடந்து கொண்டு உள்ளது. அது முடிந்தவுடன், அச்சாகி வரும். அச்சான பிறகு முறையான அறிவிப்பு வரும். பொறுத்திருங்கள்

Hope I will have answers to the above questions. I am still going through the lessons on second round. It may require few more rounds to understand.

தெளிவதற்கு எத்தனை முறை வேண்டுமென்றாலும் படியுங்கள். ஒன்றும் குறையாது!

With best regards.
BALASUBRAMANIAN PULICAT
RIYADH.
---------------------------------------
email No.17
மா. திருவேல் முருகன், புது தில்லி.
ஐயா வணக்கம்!

1. ஒரு ஜாதகத்தில் 5ஆமிடத்தில், மாந்தியும் 6ஆமிடத்து அதிபதியும் சேர்ந்திருந்தால் மன நோய் வரும் என்று நமது வகுப்பறை பதிவில் படித்தேன். அதேபோல், ஒரு ஜாதகனுக்கு வலிப்பு நோய் (Epilepsy) வருவதற்கு என்ன காரணம்? அது எந்த கிரகத்தின் தசாபுத்தியில் தீரும்? அல்லது தீரவே தீரதா? (தயவு செய்து இந்த கேள்விக்கும் பதில் தரவேண்டுகிறேன், குருதேவா...Please...)

Epilepsy can be cured. Since Epilepsy is a disoreder related with head & according to Vedic Astrology Moon governs head.A chronic functonal disease of the nervous system or impairment of consciousness with foaming in the mouth.This problem generally happens to many people in India. According to medical astrology this can be judged when moon, venus, rahu is badly placed conjuncted or delibilated or saturn & ketu aspected.(one of the reasons). நல்ல வைத்தியரிடம் காட்டச்சொல்லுங்கள். அதோடு முழுமனதுடன், நம்பிக்கையுடன் வைத்தீஸ்வரன் கோவிலில் உறையும் வைத்தியநாதனைப் பிரார்த்திக்கச் சொல்லுங்கள். குணமாகும்!

2. மாந்திக்கும் பார்வைகள் உண்டா? உண்டென்றால், எந்தெந்த இடங்கள்?

மாந்திக்குப் பார்வை கிடையாது. வேறு கிரகங்களின் பார்வைகளையும் அது ஏற்றுக்கொள்ளாது. தமிழகத்தில் உள்ள சில ஜோதிடர்கள் மாந்தியைக் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அது ஏன் என்று தெரியவில்லை! கேரள ஜொதிடர்கள் மாந்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். மாந்தி தான் இருக்கும் வீட்டின் பலன்களைக் கெடுத்துவிடும். Mandhi is supposed to cause flop results in the house it is residing in

3. ஒரு ஜாதகத்தின் நவாம்சத்தில், 7ஆமிடம், சுக்கிரன் இரண்டுமே கெட்டிருந்தால் எந்த மாதிரியான மனைவி அமைவாள்?

உங்களின் மனமும், குணமும் நன்றாக இருந்தால், எந்த மனைவி வந்தாலும் அது ஒன்றுதான். வருகிறவள் தேவதையாக (angel) இருந்தாலும் சரி, அல்லது பிசாசாக (devil) இருந்தாலும் சரி நீங்கள் அவளை வித்தியாசமில்லாமல் ஏற்றுக் கொள்வீர்கள்.

ஏழாம் இடமும், சுக்கிரனும் கெட்டிருந்தால், திருமணம் தாமதமாகும் அல்லது திருமணமே ஆகாமல் போகலாம்.

ஏழாம் இடத்து அதிபதி, அவருடன் சேர்ந்திருப்பவர்கள், அவர் பெறும் பார்வையை வைத்துத்தான் மனைவி அமைவாள். ஆகவே அவற்றைப் பாருங்கள்.

ஒரு ஞானி சொன்னான்:

எப்படியும் திருமணம் செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு நல்ல மனைவி கிடைப்பாள். அல்லது நாட்டிற்கு ஒரு நல்ல தத்துவஞானி கிடைப்பான்.

4. லக்கினத்திலிருந்து 7ஆமிடத்தில் செவ்வாய் ஆட்சி பெரும்போது "ருச்சக யோகம்" உண்டாகிறது. இந்த ஜாதகன்/ஜாதகிக்கு செவ்வாய் தோஷத்தில் இருந்து விலக்கு உண்டா? இல்லையா?

ஆட்சி, உச்சம் பெற்ற செவ்வாய்க்கு, செவ்வாய் தோஷம் கிடையாது. சில ஜோதிடர்கள் 7 & 8ல் செவ்வாய் இருந்தால், அது எவ்வளவு உயர்வான அமைப்பில் இருந்தாலும் தோஷம் உண்டு என்பார்கள். அவர்கள் அனுபவத்தை வைத்துச் சொல்வார்கள். ஆகவே ரிஸ்க் எடுக்காமல் இருக்க நினைப்பவர்கள், அதற்குத்
தகுந்தாற்போல செவ்வாயைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்!

தங்களின் மேலான பதில்கள் மற்றும் விளக்கங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும் தங்கள் அன்பு மாணவன்
மா. திருவேல் முருகன், புது தில்லி.

விளக்கங்கள் போதுமா திருவேல் முருகன்?
---------------------------------------------------------
email No.18
மதி

இது என் கேள்விகள்,

1. லக்கினத்தில் குரு இருந்தால் மிக நன்மை என்று கூறி உள்ளீர்கள் ஆனால் அதே
குரு(சுயபரல் 5 )வக்கிரமாக இருந்தால் குரு (4,7க்கு உடையவன்) ,உடன்
வக்கிர பெற்ற சனி( சுயபரல் 2), வீட்டின் பரல் 29, சனி (5,6க்கு உடையவன்).
குருவால் நன்மை அதிகமா அல்லது சனியால் தீமைதான் மிஞ்சுமா...?

பாதாம் அல்வாவையும், மிளகாய் பஜ்ஜியையும் கையில் வைத்துக்கொண்டு, இரண்டையும் சாப்பிட்டால் எதன் சுவை மிஞ்சும் என்று கேட்பதுபோல் உள்ளது உங்கள் கேள்வி. குருவின் தசா/புத்தியில் அதன் காரகத்துவம் என்னவோ அதன்படி பலன் நடக்கும். சனிக்கும் அப்படித்தான். ஒரு சமயத்தில் ஒரு சானல்தான் ஓடும். ஆகவே பொறுமையாக உட்கார்ந்து படத்தைப் பாருங்கள். படம் பிடித்தாலும் சரி, பிடிக்காவிட்டாலும் சரி எழுந்து போக முடியாது. ஆகவே பொறுமையாகப் பாருங்கள் (எதிர்கொள்ளுங்கள்). மிளகாய் பஜ்ஜி சாப்பிடும்
போது விக்கல் வந்தால், மினரல் வாட்டர் 337ல் ஒரு தம்ளர் குடியுங்கள்! எல்லாம் சரியாகிவிடும்!

2 திருமண நடக்கும் பொழுது உள்ள ஜாதகம் திருமணத்திற்கு பிறகு தம்பதிகளின்
வாழ்கையில் தாக்கத்தை எற்படுத்துமா? (உதாரணம் 5 ராகு: புத்திரபாக்கிய தடை)
காரணம் மணப்பத்திரிக்கையில் லக்கினம் (முக்கியத்துவம் கொடுக்கபட்டு)
உள்ளதே.

தாக்கத்தை ஏற்படுத்தக்கூடாது என்றுதானே நல்ல நேரம், நல்ல முகூர்த்தம் பார்த்துத் திருமணத்தை நடத்துகிறார்கள். பிறகு அதையும் சந்தேகப்பட்டுக் கேள்வி கேட்டால் என்ன செய்வது? அப்புறம் உங்களுடைய பிறப்பு ஜாதகத்திற்கு என்ன மதிப்பு?

திருமண நடக்கும் பொழுது உள்ள ஜாதகம்
பள்ளியில் அடி எடுத்து வைத்த ஜாதகம்
மாமியார் வீட்டில் அடி எடுத்து வைத்த ஜாதகம்
மனைவியைத் தொட்ட நேரத்து ஜாதகம்
வேலையில் சேர்ந்த நேரத்து ஜாதகம்.
டிரைவிங் லைசென்ஸ் எடுத்து வண்டி ஓட்டப் பழகிய நேரத்து ஜாதகம்
என்று 100 கணக்கான ஜாதகங்களைத் தயார் செய்யலாம். கடைசியில் முடியைப் பிய்த்துக் கொண்டு படுக்கையில் கிடக்க வேண்டியதாகிவிடும்.

ஆகவே குழம்பாதீர்கள். உங்கள் Birth Chart ஒன்று போதும். மற்றதை எல்லாம் நினைத்துக்கூடப் பார்க்காதீர்கள்.

Okayயா?
-------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

26.12.09

Doubt: அம்மணியின் இளமை எதில் கழிந்தது?

....................................................................................................................
Doubt: அம்மணியின் இளமை எதில் கழிந்தது?
Doubts: கேள்வி பதில் பகுதி மூன்று!

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் மூன்று!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
-------------------------------------------------------
email No.9
வித்யா

Dear Sir,
Here are my doubts.

1) ஒரு கிரகம் ராசியில் மறைவிடத்தில் அல்லது நீச்ச வீட்டில் அமர்ந்து, தன்னுடைய சுயவர்க்கதிலும், தான் இருக்கும் வீட்டிலும், தன்னுடைய சொந்த வீட்டிலும் குறைந்த பரல்களுடன் இருந்து, அம்சத்தில் உச்ச வீட்டில் கேந்திரத்தில் அமர்ந்தால், எந்த விதமான பலன்கள் கிடைக்கும்?

Nvamsam is the magnified version of the rasi chart. இதைப் பலமுறை சொல்லியுள்ளேன். அம்சத்தில் உச்சம் பெற்று இருப்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள். நல்ல பலன்கள் கிடைக்கும்

2) நற்பலன்கள் கிடைக்கும் என்றால், மத்திமவயதில் தான் கிடைக்குமா? அல்லது எப்போது கிடைக்கும்?

அந்தக் குறிப்பிட்ட கிரகத்தின் தசா/புத்திகளில் (Major period/sub period of that planet) கிடைக்கும். அது எந்தெந்த வயதில் வரும் என்பதை நீங்கள் கணக்கிட்டுக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்

3) சூரியன் பாவகிரகமா? சூரியனின் பார்வை பெறும் இடம் கெட்டுப் போகுமா?

சூரியன் பிரதான கிரகம். தந்தைக்கு உரிய கிரகம். உடல் காரகன். இரண்டு அமைச்சகங்கள் அவர் கையில் உள்ளது. சிம்ம லக்கினக்காரர்களுக்கு அவர் லக்கின அதிபதி. அவர்களுக்கு அவர் பாவ கிரகம் அல்ல! மகர லக்கினக்
காரர்களுக்கு அவர் எட்டாம் இடத்து அதிபதி. அவர் பாபக் கிரகம். அப்படி அவருடைய செயல்கள் இடத்திற்கு இடம் மாறுபடும். அதனால் அவருக்குத் தனி முத்திரை கிடையாது/குத்தக்கூடாது!


வரும் ஆனால் வராது. அவர் பாவி ஆனால் பாவி இல்லை:-))))

Regards,
Vidhya.
------------------------------------------------------------
email No.10
தனுஜா

இனிய காலை வணக்கம் சார்,

1. எனக்கு ஒரு பொது கேள்வி இருக்கு, என்னுடய ஜாதகத்தில் வாக்கிய முறையில் துலாமில் சனி இருக்கிறார், ஆனால் திருக்கணிதப்படி அவர் விருச்சிக ராசியில் இருக்கிறார், இதில் எது சரி? சார் இதை ஜகானந்தா ஹோரவில் எப்படி வாக்கியபடி பாப்பது எண்டு எனக்கு தெரியாது, Can u please tell, if u know sir becoz I tried many times and nothing worked.

ராசி சந்திப்புக்களில் பிறந்தவர்களுக்கு (That is border births) அப்படித்தான் இருக்கும். தமிழ்நாடு, கேரள எல்லையில் இருக்கும் தோட்டக்காரர்களுக்கு, இரண்டு மாநிலங்களிலும் வாசல் இருக்கும். அப்படி வைத்துக்கொள்ளுங்கள்.

வாக்கியப்படி கணித்தால் அது சரியான ஜாதகத்தைக் கொடுக்கும்.
கணினி ஜாதகங்களில் வாக்கியத்தில் கணிப்பதற்கு உரிய வசதி இருக்கும். அதில் அயனாம்சம் = ராமன், சார்ட் ஸ்டைல் = சவுத் இந்தியன், தசா ஸிஸ்டம் = 360 நாட்கள் என்பதைத் தேர்வு செய்யுங்கள் படம் கீழே உள்ளது


+++++++++++++++++++++

2. சார், அடுத்த கேள்வி ஐந்தாம் வீட்டை பற்றிய கேள்வி, for meena lagna, katakam is fifth house, and ruler is moon, நீங்க சொன்னிங்க சந்திரன் தான் மனோகாரகர், அவர் எனக்கு ஐந்தாம் வீடுக்கு உரியவர், எனக்கு கவலையா இருக்கு சார், becoz he is in 4th house, (12th to 5th house), சில நேரங்களில் நான் சந்தோசமா ஒரு வேலை செய்ய ஆசையா போவேன், ஆனால் போன அடுத்த நிமிஷம் ஏதும் ஒரு கவலை வரும் சார், உற்சாகம் போய்விடும் சார்.

Key informations:
The moon is wanning
4th house (gemini) 24 parals only sir
5th house (katakam) 27 parals
moon suya paral 6
mercury suya paral 5
jupiter suya paral 7
mercury, jupiter, sun giving direct aspect on moon
In navamsa moon is alone in taurus( ucham)

Having some good points sir, chandiran enaku nallathu seivaaraa? chandiranuku eppoluthum maarikondu irukum manasu, I don't like him. Enaku mukiyaamana kelvi sir, fifth house deals with children, will I get good children sir after marriage since fifth lord in fourth house? Only if u get good children, life would he peaceful sir!!!

சந்திரன் தன்னுடைய வீட்டிற்குப் பன்னிரெண்டில் மறைந்தாலும், சுயவர்க்கத்தில் 6 பரல்களுடன் இருப்பதால் நன்மைகளைச் செய்வார். கவலையை விடுங்கள்.

எதையும் Take it easy என்று எடுத்துக்கொள்ளுங்கள். பிரச்சினைகளை மனதில் இருந்து அடித்து விரட்டுங்கள்.

கீழ்க்கண்ட பாடலைத் தினமும் பாராயணம் செய்யுங்கள்:


"ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி
ஊசி போல உடம்பிருந்தா தேவையில்ல பார்மஸி
வாழ்க்கையில் வெல்லவே டேக் இட் ஈசி பாலிஸி

வானவில் வாழ்க்கையில் வாலிபம் ஒரு ஃபாண்டஸி
ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி


ஒலியும் ஒளியும் கரண்டு போனா டேக் இட் ஈசி பாலிசி

ஒழுங்கா படிச்சும் பெயிலா போனா டேக் இட் ஈசி பாலிசி

தண்ட சோறுன்னு அப்பன் சொன்னா டேக் இட் ஈசி பாலிசி

வழுக்கைத் தலையன் திருப்பதி போனா டேக் இட் ஈசி பாலிசி

(ஊர்வசி..)
"

In fourth house only 24 parals, but budhan (lord of 4th house) suya paral is 5, naan mel padipu padipena? (becoz enaku budhan disai is starting in 4 years)

அதே பதில்தான் இதற்கும். புதன் சுயவர்க்கத்தில் 5 பரல்களுடன் இருப்பதால், உங்களுக்கு மேற்படிப்பு உண்டு.

3. சார், இது ஆறாம் வீடை பற்றிய கேள்வி, If sixth house has 31 parals, what are positive things about it having more parals, and what are the negative things? But in my case suryan (6th house lord) is neecham in navamsa? Konjam payama iruku sir?

எதற்குப் பயம்? ஆறாம் வீட்டில்தான் 31 பரல்கள் இருக்கின்றனவே. அது கைகொடுக்கும். கவலையை விடுங்கள்

4. Last question sir, if rahu is with mandi wat is effect sir? I have mandi in 3rd house taurus,(rahu neecham) with 30 parals?

மூன்றாம் வீடு தைரிய ஸ்தானம். அங்கே 30 பரல்கள் இருப்பது தேவையான துணிவைக் கொடுக்கும். நீங்கள்தான் அதைக் கை நீட்டி (முழு மனதுடன்) எடுத்துக்கொள்வதில்லை என்று தெரிகிறது!:-)))))

5.சுறு சுறுப்பாக உள்ள மனிதர், what key planets or combinations of planet provide this?

செவ்வாய் வலுவாக உள்ளவர்கள் சுறு சுறுப்பாக இருப்பார்கள். அவர்தான் ஆற்றலுக்கு உள்ள கிரகம். ஆற்றலுக்கு சுறுசுறுப்பு வேண்டுமல்லவா?

I will be thankful if you can answer all of it sir!!!

Thanks,
Thanuja
----------------------------------------------------------
email No.11
வினோத தனஞ்செயன்

ஐயா,
ராகு,கேது உச்சம் பெற்றால் இருக்கும் வீட்டை பொறுத்து அவர்களது திசைகளில் ஓரளவு நன்மைகள் செய்வார்களா? சனி இராசி, நவாம்சத்தில் ஆட்சி,உச்சம் ஆனால் இருக்கும் வீட்டை பொறுத்து சனி திசையில் நன்மைகளை அதிகமாக செய்வாரா?

உச்சம் பெற்றதற்கு அர்த்தம் வேண்டாமா? உச்சம் பெற்ற கிரகங்கள் தங்களுடைய தசா/ புத்திகளில் ஜாதகனுக்கு நன்மைகளை வாரி வழங்குவார்கள்

------------------------------------------------------------------
email No.12
விஜய் ஆனந்த்

Respected sir,
you have given 2 examples for parals(lesson 11), one is relating to marriage and the other profession.
A doubt arises here i.e;
when it comes to profession if the 10th house has less parals(<28),>30)the result is, even with less effort he/she can earn more and be successful in his/her profession( this is practically possible).But when it comes to marriage,

if the 7th house has less parals(<25)>30) it means; as per 7th house= will not get a good pair;
2nd house= will get a good family; but practically, only if a person gets a good pair, he/she can lead a good family.

I am confused......how do you explain the above case, please clarify me sir.

Thanking you,
N.Vijaianand

நல்ல மனைவி அமைந்தால்தான், நல்ல குடும்பம் அமையும் என்றால், இன்று நாட்டில் 75% குடும்பங்கள் கேள்விக்குறியதாகிவிடும்.

சரி பண்ணிக் கொண்டுபோகும்/ சகித்துக்கொண்டு போகும் மனப்பான்மை யால்தான் இன்று பல குடும்பங்களில் சந்தோஷம் நிலவிக்கொண்டிருக்கிறது.

ஒன்று ரயில், ஒன்று தண்டவாளம். அப்படித்தான் பல ஜோடிகள் அமையும். இரண்டுமே ரயில்களாக இருந்தால் என்ன ஆகும்? காலதேவன் அப்படித்தான் ஜோடிகளை உண்டாக்குவான்.

கணவன் ரயில் என்றால்,
மனைவி தண்டவாளம். மனைவி ரயில் என்றால், கணவன் தண்டவாளமாக இருப்பான்.

கணவன் சோம்பேறியாக இருந்தால், மனைவி படு சுறுசுறுப்பானவளாக இருப்பாள்.
கணவன் ஸ்மார்ட்டாக இருந்தால், மனைவி மந்தமாக இருப்பாள். மனைவி புத்திசாலியாக இருந்தால், கணவன் அவள் அளவிற்கு அறிவில்லாத
வனாக இருப்பான்.
இப்படித்தான் ஜோடிகள் அமைந்திருக்கும்.நீங்கள் சோதித்துப் பார்த்துக் கொள்ளலாம்

திரைப்படங்களில் மட்டும்தான் ஜோடிகள் சரியாக இருக்கும்!
வாழ்க்கையில் அபூர்வமாக அப்படி ஜோடிகள் இருக்கும். 1% அல்லது 2% சதவிகிதம் மட்டுமே அப்படி இருக்கும். அதைத்தான் நாம் Made for each other என்போம்!

Face Valueவை வைத்து ஒரு பெண்ணை/ஒரு ஆடவனை நீங்கள் முடிவு செய்ய முடியாது.
திருமணத்திற்குப் பிறகுதான் உண்மையான முகங்கள் தெரியும்.

7ஆம் வீடு தனி.கணவன்/மனைவி உறவுகளுக்கு மட்டும் உரியது.
2ஆம் வீடு தனி. குடும்பம் என்பதில் கணவன் மனைவி இருவரும் அங்கத்தினர்கள். shelter, Children, social status, உறவுகள், சொந்த பந்தங்கள், போன்று பல் விஷயங்களை உள்ளடக்கியது குடும்பம்.


இரண்டிற்கும் முடிச்சுப்போட்டுப் பார்க்காதீர்கள்

ஒருவருக்கு 7ஆம் வீடு நன்றாக இருந்தது. அவர் பொறியியல் படித்தவர். நல்ல மனைவி கிடைத்தாள், அம்மணி தோற்றத்தில் நடிகை தேவயானி மாதிரி அழகாக இருப்பார். 5ஆம் வீடும் நன்றாக இருந்தது. திருமணமான ஒருவருடத்திலேயே அவர்களுக்குக் குழந்தையும் பிறந்தது. எல்லாம் இரண்டுவருடம்தான் நிலைத்தது.

அவருடைய ஜாதகத்தில் இரண்டில் மாந்தி. மாந்தி அவரை அள்ளிக் கொண்டுபோய் துபாயில் விட்டு விட்டுவந்துவிட்டான். 25 வருடங்கள் ஆகிவிட்டது. அவர் அங்கே இன்னும் பொருள் ஈட்டிக் கொண்டிருக்கிறார். முடிந்தபாடில்லை. ஈட்டிக் கொண்டேடேடே இருக்கிறார்ர்ர்ர்.

இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை இங்கே வந்து ஒரு பத்து தினங்கள் மட்டும் இருந்துவிட்டுப்போவார்.
மனைவியின் இளமை, கோவையில் இடம் வாங்கி, இரண்டு வீடுகள் கட்டி, அதைப் பார்த்து மகிழ்வதில் கழிந்தது. கணவனுடைய இளமை வங்கி இருப்பைப் பார்த்து மகிழ்வதில் கழிந்தது.

அதை எப்படிக் குடும்ப வாழ்க்கை என்று சொல்வது?


அதைத்தான் ஒரு அற்புதக் கவிஞன் இப்படிச் சொன்னான்:


“மடி நிறையப் பொருள் இருக்கும்
மனம் நிறைய இருள் இருக்கும்”

தோற்றம் (appearance) , அறிவு (skill) , கல்வி (education) , திறமை (Talent) , குணம் (character), அதிர்ஷ்டம் (Luck) ஆகிய ஆறும் ஒருவருக்கு அல்லது ஒருத்திக்கு வேண்டும். அப்படி ஆறும் அமைந்த ஒருவரை அல்லது ஒருத்தியைக் காட்டுங்கள் பார்க்கலாம்.

அதில் இரண்டு அல்லது மூன்று மட்டுமே, ஒருவருக்கு அல்லது ஒருத்திக்கு இருக்கும். இருப்பதைக் கொண்டு, வந்தவரை அல்லது வந்தவளை வைத்துக் குடும்பம் நடத்துவதுதான் வாழ்க்கை!

அந்த ஆறில் மிகவும் முக்கியமானது குணம். அதை மனதில் வையுங்கள்!

உங்களுக்குப் புரிந்தால் சரி!!!!!!
=====================================================================

email No.13
வெங்கட். என். மஸ்கட்

Respected Vaathiyaar avargalukku,
For Vrishaba Lagna subject, if lagna lord is in 12th along with Uchham Sun will it form a raja yoga - can we apply 6th in 12th rule (kettavan kedugiran endru arthama)? Will it help during the lagna maha dasa?
Nandrigal pala.
Anbudan
Venkat, Muscat

என்ன குழப்பம்? 4ஆம் அதிபதி(Lord of the house of comforts) உச்சம் பெற்று மேஷத்தில் இருக்கிறார். அது 4ஆம் வீட்டில் இருந்து ஒன்பதாம் இடம். ஆகவே அவர் உங்களுக்கு சகல செளகரியங்களையும் பெற்றுத் தருவார். அதனால்தான் அவர் உங்களை மஸ்கட்வரை கொண்டுபோய் விட்டிருக்கிறார். லக்கினாதிபதி சுக்கிரன் லக்கினத்திற்குப் பன்னிரெண்டில் மறைந்ததற்கு அது ஈடாகக் கொடுக்கப்பெற்றுள்ளது. மற்றதை எல்லாம் மறந்து விட்டு சந்தோஷமாக இருங்கள்!
---------------------------------------
email No.14
செல்வா ரமேஷ்

////I have few doubt on Parivarthana yoga. The below cases are from my Jataga, I'm asking as it was missing in your lessons.
What if parivartana between Venus(4) and Jupiter(11)? (This is not specified in earlier lesson)
Assuming there is parivartana yoga between Venus and Jupiter, and during Venus dasa will it actually be Venus dasa or Jupiter dasa?
Thanks and regards
Selvaramesh//////

பரிவர்த்தனையில் இடம் மாறி அமரும் கிரகங்கள், தாங்கள் அமர்ந்த வீட்டிற்கான பலனைத் தங்களது தசா புத்திகளில் அள்ளித் தருவார்கள். ஆகவே இங்கே, அது சுக்கிரனா அல்லது குருவா என்று பார்ப்பதைவிட, அவர்கள் அமர்ந்த வீடு, 2ஆ, 10ஆ, அல்லது 11ஆ எனும் கணக்கில் பாருங்கள்

Out of all the Parivarthana yoga, the Parivarthana between the lord of Kendra and Trikona is very powerful அதையும் மனதில் வையுங்கள்

-------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

25.12.09

Doubts: கேள்வி பதில் பகுதி இரண்டு!

கண்மணிகளுக்கு வாத்தியாரின் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்!
------------------------------------------------------

..................................................................................................................
Doubts: கேள்வி பதில் பகுதி இரண்டு!

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் இரண்டு!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
-------------------------------------------------------
email no.4
இளங்கோசீனிவாசன்

அன்புள்ள வாத்தியார் ஐயா,

அடியேனின் சந்தேகம்.

Chhatra யோகம்: இந்த யோகம் பற்றி Google ஆண்டவரிடம் கேட்ட பொழுது மிஞ்சியது குழப்பம் தான்.
இது குறித்த விளக்கம் http://www.indiadivine.org/audarya/vedic-astrology-jyotisha/311012-good-article-gmy-dr-g-k-goel.html என்கிற இணைய தளத்தில் உள்ளதாவது, லக்கினத்தில் இருந்து ஏழாம் வீடு வரை கிரகங்கள் வரிசையாக இருந்தால் அது Nauka yoga என்று உள்ளது. மேலும் ஏழாம் வீடு முதல் லக்கினம் வரை அனைத்து கிரகங்களும் வரிசையாக இருந்தால் அது Chhatra யோகா என குறிப்பிட்டுள்ளது. இது குறித்து தாங்கள் மேலும் விளக்க வேண்டுகிறேன்.
நன்றி,
இளங்கோ

Chhatra Yoga - குடை யோகம் யோகத்தின் அமைப்பு: லக்கினத்தில் இருந்து முதல் ஏழு கட்டங்களுக்குள் அத்தனை கிரகங்களும் குடி கொண்டிருப்பது இந்த அமைப்பைத் தரும். யோகத்தைத் தரும்.

Nauka Yoga - படகு யோகம்
யோகத்தின் அமைப்பு: லக்கினத்தில் இருந்து முதல் ஏழு கட்டங்களுக்குள் அத்தனை கிரகங்களும் குடி கொண்டிருப்பது இந்த அமைப்பைத் தரும். ஆனால் 7ஆம் இடத்தில் நிச்சயம் ஒரு கிரகம் வேண்டும் இருக்க வேண்டும் என்பது இந்த யோகத்தின் விதி.

அதனால் இது Chhatra Yoga யோகத்தில் இருந்து வேறுபடும்.
விளக்கம் போதுமா
?
---------------------------------------------
email no.5
Mrs. உஷா சுரேஷ்
அன்புள்ள ஆசிரியர்க்கு,
வணக்கம்.
தாங்களின் வகுப்பில் சேர்ந்தப் பிறகு, ஜோதிட வல்லுனர்களான ராமன்,ராவ் ஆகியோரின் புத்தங்களை வாங்கி உள்ளேன். அதை படித்தபின் எனது ஜோதிட சந்தேங்கள் மேலும் குழப்பமாகிவிட்டது.
எனது சந்தேங்கள் அஷ்டவர்க்கம், சட பலம் ( Sad bala ), பாவ பலம் சம்பந்தப்பட்டது.

When the Sarva Astavarga paral of a house is very less ( 19 paral ) , that house is having 500 Bhava balam. Further when a planet is having four paral in astavarga, while it is having more than 10 paral/rupa in Sad bala. On this circumstance how to arrive a conclusinon about a planet or a Bhava. Will you please differentiate the above balas for better understanding.


அஷ்டவர்க்கம், சட் பலம், பாவ பலம் என்பது நடிகர்கள் சிவாஜி கணேசன், எம்,ஜி, ராமச்சந்திரன், ஜெமினி கணேசன் ஆகியவர்களின் நடிப்பைப் போன்று தனித்தன்மைகள் உடையவை. யாருடைய படங்களைப் பார்ப்பது என்றால், உங்களுக்கு யாரைப் பிடித்திருக்கிறதோ, அவருடைய படங்களைப் பாருங்கள். அதைபோல உங்களுக்குக் கிரகங்களின் வலிமையைத் தெரிந்து கொள்ள எந்த வழி சுலபமாக இருக்கிறதோ, அதில் செல்லுங்கள். மூன்றையும் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.

அஷ்டவர்க்கம்தான் சுலபமானது. அதானால்தான் அதையே நானும் கடைப்பிடிக்கிறேன். மற்றவர்களுக்கும் சிபாரிசு செய்கிறேன்.
நீங்கள் சொல்லும் சட்பலத்தின் அமைப்பைக் கீழே கொடுத்துள்ளேன்.

அதைக் கணித்துப் பலனை அறிந்து கொள்ள உங்களுக்கு நேரமும், மனத்தெம்பும் இருந்தால், அதை நீங்கள் கடைப் பிடிக்கலாம்.
ஆனால் அதையும், அஷ்டகவர்க்கத்தையும், ஒத்துப் பார்த்துக் குழம்பாதீர்கள். ஒன்று அலோபதி மருத்துவம். ஒன்று ஹோமியோபதி மருத்துவம். அர்த்தமாகியதா சகோதரி?

SHADBALA- சட் என்றால் ஆறு என்று பொருள்.
சட்பலம் என்பது கீழே உள்ள ஆறின் கூட்டல் தொகை!


1. STHANA BALA

This is the positional strength of a planet.


2. DIG BALA
Each planet is powerful when it is located in a certain direction. Dig Bala means directional strength. Example: The Sun and Mars are powerful in the South.


3. KALA BALA

This has to do with the strength which a planet has because of the time of the day. It is strength of time. example: Moon, Saturn and Mars are powerful during midnight


4. CHESTA BALA
Planets which are relatively slow (among them retrograde planets) get a high Chesta Bala value. Planets which are relatively fast get a low chesta bala value.


5. NAISARGIKA BALA

Each planet gets a certain amount of Shashtiamsas according to the luminosity it has. Because the Sun is the brightest planet it is given 60 Shashtiamsas. Saturn is the faintest and gets 8.57 Shashtiamsas. This means that the amount of Shashtiamsas a planet receives according to Naisargika Bala is in every chart the same.

6. DRIK BALA
Drik Bala is called aspect strength. If a planet is aspected by benefics the planet receives a positive Shashtiamsa value. If a planet is aspected by malefics than it gets negative Drik Bala points.


உங்களுக்குக் காய்ச்சல் என்று வைத்துக்கொள்ளுங்கள். இரண்டு மருத்துவரிடம் காட்டினால் இரண்டு விதமான மருந்துகளைப் பரிந்துரைப்பார்கள். ஒருவர் Dolobar 650 சாப்பிடச்சொல்வார். இன்னொருவர் calpol சாப்பிடச்சொல்வார். ஆகவே ஒருவரிடம் காண்பித்து மருந்து சாப்பிடுவதுதான் நல்லது. இல்லை இரண்டு மூன்று பேர்களிடம் காட்டுவேன் என்றால், அது உங்கள் விருப்பம்.
------------------------------------------------
email No.6
P.Prakshkumar, Pollachi

What is the meaning for VAKRAM?
which planet VAKRAM position is good?

செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஐந்து கிரகங்களும் வக்கிரகதியில் இயங்கைக்கூடியவை. அதாவது பின்புறச்சுற்றில் இயங்குவதைப் போன்ற தோற்றத்தைக் கொடுத்து, பூமியின் சுழற்சியால், இருக்கும் இடத்தைவிட்டுப் பின்புறப்பாகைகளில் சுழலக் கூடியவை. அது வக்கிரகதி எனப்படும்

ராகுவும், கேதுவும் எப்போதுமே பின்புறமாகத்தான் சுழலக்கூடியவை

வக்கிரகதியில் இருக்கும் கிரகங்கள் பொதுவாக நன்மையைச் செய்யாது. சுப கிரகங்கள் வக்கிரகதியில் நின்றால், அவைகள் உரிய பலனைத் தராது.

தீய கிரகங்கள் வக்கிரகதியில் நின்றால், அவைகள் ஜாதகனுக்குத்
தேவையில்லாத அலைச்சலையும், ஊர் ஊராக பெட்டி தூக்கும் வாழ்க்கையையும் கொடுத்து விடும். சனி அல்லது செவ்வாய் வக்கிரகதியில் நின்றால் அவைகள் ஜாதகனுக்குத் தேவையில்லாத துன்பங்களையும், தொல்லைகளையும், கஷ்டங்களையும் கொடுக்கும். ஜாதகன் பல வழிகளிலும் அவதிப்பட நேரிடும். தப்பித்து ஓட முடியாது. அவதிப்பட்டே ஆக வேண்டும்.
---------------------------------------------

email No.7
சேகர் வெங்கடேசன்

மிக நல்ல வாய்ப்பை தந்ததற்கு நன்றி. என்னோடைய சந்தேகங்கள்

30க்கும் அதிக பரல்கள் இருக்கும் இடங்களில் யாரும் அமரவில்லை என்றால் ( அதன் அதிபதி எப்படி இருந்தாலும்) குறைந்த பட்சம் அந்த வீட்டின் பலம் எப்படி எடுத்துக் கொள்வது?

அந்த வீட்டின் பலன் நன்மைகள் உடையதாகவே இருக்கும்

உச்சமான கிரகம் சுயவர்கத்தில் குறைவான பரல் கொண்டிருந்தால் அதன் பலன் குறையுமா?

ஆமாம்! குறையும்! பின் எதற்காக சுயவர்க்கம்?

என் மகனுக்கு இரண்டாம் வீடான தனுசு ராசியில் புதன், சூரியன்மற்றும் சனி கூட்டாக உள்ளனர். கிரக யுத்தம் இல்லை. இரண்டாம் வீட்டில் சூரியன்மற்றும் சனி என்றால் பொருள் நாசம் என்று சொல்லி இருந்தீர்கள். இங்கே பரல் 30க்கும் மேலே. புதன் 7ம் சூரியன் 4ம் மற்றும் ராசி அதிபதியான சனி 3ம் பரல். அம்சத்தில் சூரியன் உச்சம். குரு 7ஆம் வீட்டில் லக்னத்தை பார்த்து. விலக்கு உண்டா?

30, 7, 4 என்று நீங்களே நல்ல எண்ணிக்கைகளையும், குருவின் பார்வை லக்கினத்தில் விழுவதையும் சொல்லிவிட்டு, சந்தேகம் கொண்டால் எப்படி? அமைப்புக்கள் நன்மைதருவதாகவே உள்ளன! கவலையை விடுங்கள்.

குழந்தைகளின் ஜாதகம் 12 வயதுவரை வேலை செய்யாது. பெற்றொர்களின் ஜாதகப்படிதான் குழந்தைகளுக்குப் பலன்கள் இருக்கும். அதனால்தான் குழந்தைகள் மகிழ்ச்சியாக உள்ளன.

ஏழாம் பார்வையை தவிர மற்ற பார்வை உண்டா?

செவ்வாய், குரு,சனி ஆகிய கோள்களுக்கு (7ஆம் பார்வையுடன்) விஷேச பார்வைகள் உண்டு.பழைய பாடங்களைப் படியுங்கள்

மறைவிடங்களில் நன்மையை தரும் கிரகங்கள் மறையக்கூடாது எனும்போது தீய கிரகங்கள் மறைந்து போவது நல்லதில்லையா?லக்னாதிபதி கெடுதலை செய்ய மாட்டாரா?

சனி தீய கிரகம்தான். அதே நேரத்தில் அவர் ஆயுள்காரகன். கர்மகாரன். இரண்டு அமைச்சகங்கள் அவர் வசம் உள்ளன! இப்போது சொல்லுங்கள் அவர் மறைவது நல்லதா?

சந்தேகங்களை உங்களிடம் கேட்காமல் யாரிடம் உரிமையாக கேட்க முடியும்? நன்றி.

ஆகா, கேளுங்கள். ஆனால் சொந்த ஜாதகத்தை வைத்து யாரும் கேள்விகள் கேட்க வேண்டாம்!
----------------------------
email No.8
சங்கர் நாராயணன்

ஐயா!

1 . வக்கிரம் ஆன கிரகங்கள் பற்றி ........2 . ஆட்சி கிரகம் வக்கிரம் ஆனால்.......

email No.6ல் இதே கேள்வி. பதில் அளித்துள்ளேன். அதைப் படியுங்கள்

3 . சனி பாதிப்பை தவிர்க்க கருப்பு ஆடை அணிவதும், குருவிற்கு மஞ்சள் ஆடை அணிவதும் எந்த அளவிற்கு சரி ?

பாதிப்பைத் தவிர்க்க என்று ஏன் எதிர்மறையான சிந்தனை? அக்கிரகங்களால் நன்மை அடைய என்று சொல்லுங்கள். கிடைக்கலாம். எனக்கு அனுபவம் இல்லை!

4 . சத்தத்தில் சதாசிவமும் சித்தத்தில் சிவமயமும் என சாதாரண மனிதனால் இருக்க (ஜாதகம் பூர்வபுண்ணியம் தவிர்த்து) வழி?

ஏன் வழி இல்லை? எல்லாவற்றிற்கும் மனதுதான் காரணம். மனதைக் கட்டுப்படுத்தினால், சதாசிவம் வசப்படும். சிவமயம் தேடி வந்து குடி கொள்ளும்.

5 . கிறுக்குத்தனமாக வாழ்வது, கேட்பது அறியாமைதானே! அவர்கள் ஞானிகளா?

அவரவர் வழி அவரவருக்கு உயர்வானது. அதைக் கேட்பதற்கு நமக்கு உரிமை இல்லை. கேட்டால் சச்சரவுதான் மிஞ்சும்.
------------------------------------
அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

24.12.09

Doubts: தொகுதி அமைச்சரை எப்போது பார்க்க வேண்டும்?

........................................................................................................
Doubts: தொகுதி அமைச்சரை எப்போது பார்க்க வேண்டும்?

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் ஒன்று!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
-----------------------------------------------------------------------
email no.1
திருமதி.நாகேஸ்வரி வெங்கடேசன்

ஐயா
பரல்கள் படிக்கும் போது சுய வர்க்கம் (Example சூரியன் சுயவர்க்கம் etc) இன்று கூறி உள்ளீர்கள் . சுய வர்க்கத்திற்கு அர்த்தம் கூறினால் நன்றாக இருக்கும். தொல்லைக்கு மன்னிக்கவும்

சுயவர்க்கம் என்பது ஒரு கிரகத்தின் தனிப்பட்ட வலிமை (Strength of an individual planet) அதை எப்படித் தெரிந்து கொள்வது என்பதை ஒரு உதாரண ஜாதகத்துடன் விளக்கியுள்ளேன். கணினியில் ஜாதகத்தைக் கணித்தீர்கள் என்றால் அத்தனை விவரங்களும் உங்களுக்குக் கிடைக்கும்
-------------------------------------------------------------------------
ஜாதகத்தின் பிறப்பு விவரம்!
படங்களின் மீது கர்சரை வைத்து அழுத்தினால்
படங்கள் பெரிதாகத் தெரியும்
அட்டவணை 1

அட்டவணை 2


அட்டவணை 3

அட்டவணை 4


அட்டவணை 5


அட்டவணை 6
-------------------------------------------------------------------------
email no.2
கண்ணன் சீதாராமன்

குருவே!
வணக்கம்
1. எம்பெருமான் மாயகண்ணன்!!! ஏன் தனது தாய், தந்தையரை விட்டு விட்டுச் சென்றார்? (எத்தனையோ நபர்கள் இருக்க ) யசோதை @ நந்தகோபரிடம் ஒப்படைக்க காரணம் என்ன ? பெற்றோரை பகவானே தவிக்க விட்டது தவறு இல்லையா ?

என்ன குழப்புகிறீர்கள்? பிறந்த குழந்தையை அதன் தாய் தேவகியும், தந்தை வாசுதேவரும் அல்லவா யசோதை & நந்தகோபர் தம்பதியிடம் ஒப்படைத்தார்கள். அதற்கு ஒரு வலுவான காரணம் இருந்தது. கிருஷ்ண புராணத்தை மீண்டும் நன்றாகப் படியுங்கள்.

2. இன்றைய சூழலில் யசோதை @ நந்தகோபர் போல், ஒரு சாதரணமான குழந்தையை, தனது குழந்தையாக ஏற்றுக்கொள்ள முடியுமா?

ஏன் முடியாது! மனதிருந்தால் முடியும். குழந்தை இல்லாத எத்தனையோ பெற்றோர்கள் அதைச் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்

3. ஐயா தவறான கேள்வி என தாங்கள் நினைத்தால் விட்டு விடவும் . இங்கு இணைத்துள்ள கண்ணனின் படம்
ஓர் வணிக வகுப்பில் உள்ள குடும்பத்தில் உள்ளது. அடியனும் அதே வகுப்புத் தான், அவர்களை அடையாளம் காண குருநாதர் தான் வழி சொல்ல வேண்டும். ஏன்னெனில் அவர்களிடம் உள்ள கண்ணனின் படத்திற்கும் அடியேனுக்கும் சம்பந்தம் உண்டு என்று ஒரு மகான் சொல்லி உள்ளார் . அது எந்த அளவில் உண்மை என்பது எனக்கு தெரியாது ஐயா!!

இனம், வகுப்பு, பணம், பொருள் எனும் மாயைகளை எல்லாம் உதறிவிட்டு, இறைவனை வணங்குங்கள். எல்லா அடையாளங்களையும் உரிய நேரத்தில் அவன் காட்டுவான்!
------------------------------------------------------------
email no.3
சரவணகுமார்

Dear Sir,
The below are my doubts, Those are really important sir. Please answer them,

1. கால சர்ப தோசம் உள்ளவர்கள் ஆண் , அதே தோசம் உள்ள பெண்ணை மட்டுமே திருமணம் செய்யவேண்டுமா?

தோஷம் உள்ளவர்கள், தோஷம் உள்ள பெண்ணை மணப்பது நல்லதுதான். மைனஸ் பெருக்கல் மைனஸ் ப்ளஸ் ஆகிவிடும். முதலில் நல்ல வரன் கிடைப்பது கஷ்டம். ஆகவே உங்களை மணந்து கொள்ள ஒரு பெண் சம்மதித்தால் அதுவே பெரிய பாக்கியம். இந்தக் காலத்துப் பெண்கள் மிகவும் உஷாரானவர்கள். அதனால் இதைச் சொல்கிறேன்., இறைவன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு மணந்து கொள்ளுங்கள். மற்றதை இறைவன் பார்த்துக்கொள்வான். இப்போதே திருமண வயதைக் கடந்து விட்டீர்கள். ஜாதகத்தைப் பார்த்துப், பார்த்து,
வயதையும், பெண்ணையும் கோட்டைவிட்டு விடாதீர்கள்.

2. பாதகதிபதியின் திசையில் மரணம் நிகழுமா? eg. மேஷ லக்னம், 8 இல் செவ்வாய் & சனி, சனி திசையில் மரணமா?

உங்கள் வயதிற்கு மரணத்தைப் பற்றி ஏன் கவலைப் படுகிறீர்கள்? ஓடுகிற பாம்பை மிதிக்கிற வயது.மரணம் வரும்போது வரட்டும். அதற்காகக் கவலைப் பட்டு, இருக்கிற பொழுதை எதற்காக வீணாக்க வேண்டும்?

3. எனக்கு துலாலக்னம், சனி திசை. (யோகா திசை) அனால் சனி 11 இல் சிம்மம் - பகை. 44 பரல்கள், சுயவர்க்க பரல் 6. சனி திசை எனக்கு நல்லதா அய்யா?

11, 44, 6 என்ற எண்ணிக்கைகளைப் போட்டு நீங்களே பதிலைச் சொல்லிவிட்டீர்கள். பிறகென்ன? மகிழ்ச்சியாக இருங்கள்.

4. 7 இல் சந்திரன் & கேது இருந்தால், கேட்ட பெண்கள் சாகவசம் ஏற்படும். (பாடத்தில் படித்தேன்). குருவின் 9 ஆம் பார்வை இருந்தால் இந்த தோசம் நிவர்த்தியா?

அதே பாடத்தை மீண்டும் படியுங்கள். குரு பார்த்தால் தீமைகள் விலகிவிடும்/குறையும் என்று எழுதியிருப்பேன்

5. ஒரு ஜாதகத்தில் சுக்ரன் நீசம் அனால், வேறு என்ன கவனிக்க வேண்டும் அய்யா? திருமண சமாச்சாரத்திற்கு சுக்ரன் முக்கியம் அல்லவா? அவரே 5 ஆம் அதிபதியாகவும் வருகிறார். மிதுன லக்னம், 4 இல் சுக்ரன் நீசம்?

சுக்கிரனை மட்டும் பார்த்து ஓட்டுப்போட்டால் போதுமா? உங்கள் தொகுதியையும் அதன் அமைச்சரையும் பாருங்கள். அதாவது உங்கள் ஜாதகத்தின் ஏழாம் வீட்டையும், அதன் அதிபதி குரு பகவானின் வலிமையையும் பாருங்கள்
------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்





வாழ்க வளமுடன்!

23.12.09

ஏமாற்றம் எதற்குக் கண்மணிகளே?

=========================================
ஏமாற்றம் எதற்குக் கண்மணிகளே?

வகுப்பறைக் கண்மணிகளுக்கு,

அவசர வேலை காரணமாக, வெளியூர் செல்ல இருப்பதால், இன்று பதிவை ஏற்ற முடியவில்லை. எழுதியதைச் செதுக்கும் வேலை பாக்கி உள்ளது. நாளை வெளியாகும். இன்று விடுபட்ட பாடத்திற்கு ஈடாக ஒரு பாடம் கூடுதலாகச் சனிக்கிழைமைக்குள் வலை ஏற்றப்படும். பலரும் வந்து ஏமாற்றத்துடன் திருபுவதைத் தவிர்க்கவே இந்த அறிவிப்பு!

நன்றி, வணக்கத்துடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

22.12.09

Doubts: நீங்களும், உங்கள் சந்தேகங்களும்!

..............................................................................................................
Doubts: நீங்களும், உங்கள் சந்தேகங்களும்!

வகுப்பறையில் இன்றையத் தேதியில் 1,131 மாணவர்கள் இருக்கிறார்கள். 5 மாதங்களுக்கு முன்பு, அதாவது 15.7.2009 அன்று இருந்தவர்களின் எண்ணிக்கை 300 மட்டுமே. அதற்கு ஒரு ஆண்டு முன்பு இருந்தவர்களின் எண்ணிக்கை 60 மட்டுமே!

புது முகங்களுக்கு, பழைய பாடங்களில் நிறைய சந்தேகங்கள் உள்ளன. சிலருக்கு அத்தனை பாடங்களையும் சரியாகப் படிக்காததால் சந்தேகங்கள். சிலருக்குப் படித்தும் சந்தேகங்கள். உங்கள் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கலாம் என்று உள்ளேன். ஆகவே உங்களது சந்தேகங்களை எழுதுங்கள். எழுத வேண்டிய மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com

மின்னஞ்சலின் Subject பெட்டியில் Doubts in Lessons என்று மறக்காமல் குறிப்பிடவும்.

ஒரு மின்னஞ்சலில் அதிகபட்சமாக ஐந்து கேள்விகள் கேட்கலாம். அதற்கும் மேலாகக் கேள்விகளை வைத்திருப்பவர்கள் மற்றொரு மின்னஞ்சல் மூலமாகக் கேளுங்கள்.
-------------------------------------------------
இரண்டு இளைஞர்கள் தேவாலத்திற்குச் சென்றார்கள். இருவரில் ஒருவன் ஈடுபாட்டுடன் சென்றவன்.

அடுத்தவன், நண்பனின் வற்புறுத்தலுக்காகச் சென்றவன்.

பாதிரியார் அருமையாக உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். துவங்கி 2 மணி நேரமாகியும், உற்சாகமாக உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்.

வற்புறுத்தலுக்காகச் சென்றவன் புகை வண்டி ஆசாமி (அதாவது chain smoker) அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை.தன் நண்பனிடம் கிசுகிசுத்தான்:

“டேய் மெல்ல எழுந்து போய், ஒரு தம் அடித்து விட்டு வருகிறேன்”

”அதெல்லாம் கூடாது. சும்மா உட்கார், எழுந்து சென்றால், பாதிரியாரின் கண்ணில் படும்.”

”அப்படியென்றால், இங்கேயே சிகரெட்டைப் பற்றவைத்து இரண்டு இழுப்பு இழுத்துவிடவா?”

”அதெல்லாம், கூடாது. கொன்று விடுவேன். பாதியார் பார்த்தால் கோபம் கொள்வார்!”

”கோபம் கொண்டால் அவர் எப்படிப் பாதிரியாராக இருக்க முடியும்? நீ எழுந்து அவரையே கேள். இல்லையென்றால் நான் எழுந்து கேட்கிறேன்”

அவனுடைய நச்சரிப்புத் தாங்காமல், கூட்டிக்கொண்டு போன நண்பன், எழுந்து நின்று கேட்டான்” Father, பிரார்த்தனையின் போது, புகை பிடிக்கலாமா?”

பாதிரியார் பதில் சொன்னார்,” இல்லை, கூடாது!”

நம்ம ஆள் சொன்னான், உனக்குக் கேட்கத் தெரியவில்லை. நான் கேட்கிறேன் பார் என்று கிசுகிசுத்தவன், எழுந்து நின்று, கணீரென்ற குரலில் கேட்டான். “Father, புகைபிடிக்கும் போது பிரார்த்தனை செய்யலாமா?”

“செய்யலாம். இறைவனைப் பிரார்த்திப்பதற்கு எதுவும் தடையில்லை!”
---------------------------------------------------------------------
”வாத்தி (யார்) எதற்காக இந்தக் கதை?

”அகடவிகட சாமர்த்தியம் எப்படி இருக்கும் என்பதற்காக இதைச் சொன்னேன்”

”அது சரி, வகுப்பறையில், எதற்காகச் சொன்னீர்கள்?

”சந்தேகத்தைக் கேட்கச் சொல்லிவிட்டாரே, வாத்தியார் என்று தங்கள் சொந்த ஜாதகத்தில் உள்ள சந்தேகங்களை, பொதுச் சந்தேகம் போல தோற்றமளிக்கும்படி யாரும் கேட்க வேண்டாம் என்பதற்காகத்தான் இதைச் சொன்னேன்”
---------------------------------------------------------------------
அடுத்துவரும் 21 நாட்களும் சந்தேகங்கள் தீர்க்கப்படும் நாட்கள். அரசில் குறை கேட்கும் வாரம் என்று நடத்துவார்களே. அப்படி நினைத்துக் கொள்ளுங்கள்.

தினமும், இரண்டு அல்லது மூன்று சந்தேகங்களுக்கு (பதில்களின் அளவைப் பொறுத்து) பதில் அளிக்கப்படும்.ஆகவே எழுதிவிட்டு, அதற்கு அடுத்த நாளே பதில் வரும் என்று எதிர்பார்க்காதீர்கள். வரிசைப்படி வரும்

முதல் சந்தேகத்தை மாணவி ஒருவர் கேட்டு இந்தத் தொடர் பதிவைத் துவக்கி வைத்துள்ளார். அவர் கேட்டுள்ள கேள்வி: “சுயவர்க்கம் என்றால் என்ன? அதை எப்படித் தெரிந்துகொள்வது?” அதற்கான விரிவான பதில் நாளையப் பதிவில்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

21.12.09

You Are So Blessed!!! ஆசீர்வதிக்கப்பட்டவரா நீங்கள்?

..............................................................................................
You Are So Blessed!!! ஆசீர்வதிக்கப்பட்டவரா நீங்கள்?

ஆசிகளுடன் பிறப்பது என்பது எவ்வளவு பெரிய பாக்கியம். ஆசீகளுடன் பிறந்தவரா நீங்கள்? மேல் விவரம் அறிய தொடர்ந்து படியுங்கள்

If you woke up this morning
with more health than illness,
you are more blessed than the
million who won't survive the week.
..................................................
If you have never experienced
the danger of battle,
the loneliness of imprisonment,
the agony of torture or
the pangs of starvation,
you are ahead of 20 million people
around the world.
.....................................................
If you attend a church meeting
without fear of harassment,
arrest, torture, or death,
you are more blessed than almost
three billion people in the world.
.....................................................
If you have food in your refrigerator,
clothes on your back,a roof over
your head and a place to sleep,
you are richer than 75% of this world.
.....................................................
If you have money in the bank,
in your wallet, and spare change
in a dish someplace, you are among
the top 8% of the world's wealthy.
......................................................
If your parents are still married and alive,
you are very rare,
especially in the United States.
If you hold up your head with a smile
on your faceand are truly thankful,
you are blessed because the majority can
but most do not.
.....................................................
If you can hold someone's hand, hug them
or even touch them on the shoulder,
you are blessed because you can
offer God's healing touch.
......................................................
If you can read this message,
you are more blessed than over
two billion people in the world
that cannot read anything at all.
You are so blessed in ways
you may never even know.
.........................................................
If you are feeling blessed,
repay the blessings bestowed unto you and
do something for others.
A blessing cannot be kept.
If it stops with you, then the blessing will disappear.
The blessing will only keep working if it is continuously passed around.

If you are a recipient of a blessing, keep the blessing working
by being the source of blessing to other people.
-----------------------------------------
மின்னஞ்சலில் வந்தது. தமிழாக்கம் செய்ய நேரமில்லை. எளிமையான ஆங்கிலத்தில் உள்ளது.ஆகவே அப்படியே பதிவில் ஏற்றியுள்ளேன். தனித்தமிழ் ஆர்வலர்கள் பொறுத்துக்கொள்ளவும்!

மின்னஞ்சல் பாடம் எண்.13 : தலைப்பு - பத்தாம் வீடு!
ஸ்கீரின் ஷாட்டில் மொத்தம் 41 பக்கங்கள் உள்ள பாடம். இன்று காலை அனைவருக்கும் அனுப்பபெற்றுள்ளது. வராதவர்கள் மட்டும் தகவல் தெரிவிக்கவும்வந்தவர்களுக்கு ஒரு வேண்டுகோள்: உங்களுக்கு உரிய pointsகளை மட்டும் 10 நிமிடங்களில் படித்துவிட்டு வந்து, ”சார், அடுத்த பாடம் எப்போது?” என்று யாரும் கேட்காதீர்கள். அடுத்து வரும் 10 நாட்களுக்கு இந்தப்
பாடத்தைத் திரும்பத் திரும்ப மனதில்பதியும் வரை படியுங்கள்.அப்போதுதான் நான் எழுதிய நோக்கம் நிறைவேறும்!
------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்




வாழ்க வளமுடன்!

19.12.09

நகைச்சுவை: சிரிக்க மட்டுமே! வேறு கேள்விக்கு இடமில்லை!

நகைச்சுவை: சிரிக்க மட்டுமே! வேறு கேள்விக்கு இடமில்லை!

வாரக்கடைசி பதிவு!

சும்மா, ஜோதிடத்தையும், ஆன்மீகத்தையும் படித்துப் படித்து மாய்ந்து போகாமல், வாரக் கடைசியை மகிழ்வுடன் வரவேற்போம். உங்களுக்காக 8 படங்களைக் கொடுத்துள்ளேன். பார்த்து (முடிந்தால், சிரித்து விட்டுப்) போங்கள்!
-----------------------------------------------
படங்கள் பெரிதாகத் தெரிய, படங்களின் மீது கர்சரை வைத்து அழுத்துங்கள்!
..............................................................................................

1. என்னிடம் காரிருந்து என்ன பயன்? ஓட்டிச் செல்லத் தெரு இல்லையே?


2. திறப்புவிழாவிற்கு அணை இன்னும் தயாராக இல்லை. ஏற்பட்டுள்ள விரிசலைப் பார்க்க எங்கள் துறை அமைச்சர் வரவேண்டும்!

3. சும்மா, நாற்காலியை இழுத்துப் போட்டு (Draw) உட்காரப்பான்னுதான் சொன்னேன்! பையன் தப்பாகப் புரிந்து கொண்டு
வரைய (Draw) ஆரம்பித்துவிட்டான்

4. இடம் பார்த்து நிறுத்தும் பிரச்சினை இனி இல்லை:
வண்டியை விற்று விட்டேன்!

5. ஏப்ரல் ஒன்னு 2020ல் நான் சீனியர் எக்சிகூட்டிவ் ஆகிவிடுவேன் மம்மி.பள்ளியில் நடந்த
வேலை வாய்ப்பு விழாவில் என்னைத் தேர்வு செய்துள்ளார்கள்

6. என்னைப் பற்றிய விவரங்களை நாசா’ விற்குத் தள்ளி விட்டிருக்கிறேன். சந்தைப் படுத்துவதில் பல இடங்களுக்குப் பயணம் செய்து பழக்கப்பட்டவன் நான் விண்வெளிப் பயணத்திற்கு என்னைப் போன்றவர்கள்
அவர்களுக்குத் தேவைப்படலாம்.

7. லஞ்ச் அலவன்ஸ் மட்டும் போதும் சார். டீ அலவன்ஸ் வேண்டாம். அந்த இடைவெளியில் வேறு நல்ல வேலை தேடும் பணியில் நான் இருப்பேன்!

8.உங்கள் குழந்தைகள் அமெரிக்காவில் இருக்கிறார்களாமே? இந்த வேலையில், வெளி நாட்டு அசைன்மென்ட் இருக்குமா?
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எட்டில் எது மிகவும் நன்றாக உள்ளது?
அன்புடன்
(வாத்தி) யார்


வாழ்க வளமுடன்!