மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

29.9.08

ஜோதிடமும் உருளைக்கிழங்கும்!

ஊட்டியில் விளையும் உருளைக்கிழங்கை சென்னையில் பயிராக்கிப் பயன்பெற
முடியாது. காஷ்மீரில் விளையும் ஆப்பிள் சேலத்தில் விளையாது. அதற்கு
அடிப்படையான காரணம் அதனதன் மண் வளமும், சீதோஷண நிலையும்

அதுபோல ஒரு ஜாதகம் சிறப்பாக இருந்து ஜாதகருக்கு நல்ல பலன்களைத்
தர, முக்கியமான மூன்று அடிப்படை விஷயங்கள் உள்ளன.

1
முதலில் ஜாதகரின் லக்கினாதிபதி நன்றாக இருக்க வேண்டு. அவர் தனது
சுய வர்க்கத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களைக் கொண்டிருந்தால்
மட்டுமே நன்றாக இருக்கிறார் என்று பொருள். That position will give the
native a good standing power in any situation.

2.
பெர்சனலிட்டி எனப்படும் ஜாதகரின் தோற்றம் மற்றும் உடல் வலிமை,
அத்துடன் மனவலிமை ஆகியவைகள் முக்கியமாகும். அவற்றைத்தருபவை
முறையே சூரியனும், சந்திரனும் ஆகும். அவைகளும் ஜாதகத்தில் வலுவாக
இருக்க வேண்டும். அதாவது சூரியனும், சந்திரனும் ஜாதகத்தில் தங்களது
சுய வர்க்கத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களைக் கொண்டிருந்தால்
மட்டுமே நன்றாக இருக்கிறார்கள் என்று பொருள்

இம்மூன்றும் இல்லாவிட்டால், பத்தாம் வீடும், பத்தாம் வீட்டின் அதிபதியும்
எவ்வளவு வலிமையாக இருந்தாலும் ஜாதகர் அதன் பலனை முழுமையாகப்
பெற முடியாது. அதை அனைவரும் மனதில் கொள்ளவும். அதை வலியுறுத்திக்
கூறத்தான் மேலே உருளைக்கிழங்கை உதாரணப் படுத்திக் கூறியுள்ளேன்

ஒருவர் தான் செய்யும் தொழிலில் அல்லது வேலையில் சிறக்க அம்மூன்றும்
தான் அடிப்படை அம்சங்கள்.

புரிகின்றதா கண்மணிகளே?
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Careers by sign
ராசிகளை வைத்து அமையும் வேலைகள் (பொதுப் பலன்)
அதாவது கீழ்க்கண்ட ராசிகள் உங்கள் பத்தாம் இடமாக இருக்குமென்றால்
அதற்குரிய பொதுப்பலன்கள்

1. மேஷம் (Aries)
ராணுவம், காவல்துறை, அறுவை சிகிச்சை நிபுனர், மெக்கானிக்,
உருக்கு மற்றும் இரும்புத் தொழில், தீயணைக்கும்படை அல்லது
தீயனைப்புக் கருவிகள் சம்பந்தமான தொழில், தொழிற்சாலை
அதிபர்கள், விளைளயாட்டுத்துறை
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2.ரிஷபம்:
ஏர்கண்டிஷனர் போன்ற சொகுசு சாதனங்கள் (luxury goods)
நகைகள், சோப்பு, முகப்பவுடர், சென்ட் போன்ற 'காஸ்மெடிக்'
பொருட்கள். நடிப்பு, இசை, தையற்கலைஞர்கள். ஆயத்த ஆடைகள்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3.மிதுனம்:
ஊடகங்கள் (செய்தி நிறுவனங்கள், பத்திரிக்கைகள், தொலைக்காட்சி,
வானொலி) நிறுவனப் பிரதிநிதிகள். எழுத்தாளர்கள். கணக்கர்கள்,
மொழிபெயர்ப்பாளர்கள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4.கடகம்:
கடல் வணிகம். மீன் வியாபாரம், செவிலியர்கள், உணவு. உள் அலங்கார
வேலைகள். பெட்ரோலியம் சார்ந்த துறைகள். சரித்திர ஆய்வாளர்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
5.சிம்மம்:
அரசுப் பணிகள். அரசியல், மத அமைப்புக்கள். தூதரங்கள்,
முதலீட்டு வேலைகள் (investing)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
6.கன்னி:
மருத்துவர்கள், கணக்காளர்கள், கணக்கு ஆய்வாளர்கள்,
ஜோதிடம், கணினி சம்பந்தப்பட்ட துறைகள், ஊடகங்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
7.துலாம்:
நீதிபதிகள்,வழக்கறிஞர்கள், கலைஞர்கள்,விளம்பரத்துறை,
அலங்காரப்பொருட்கள்,ஆடை, அணிகலன்கள், வரவேற்பாளர்கள்
உள் அலங்கார வேலைகள் (interior decorators)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
8.விருச்சிகம்:
இரசாயனப் பொருட்கள், மருந்துகள், திரவப் பொருட்கள்,
காப்பீட்டுத் தொழில் (insurance) மருத்துவர்கள், செவிலியர்கள்
காவலர்கள்,
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
9.தனுசு:
சட்டம், நீதி, மதங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், சுய தொழில்கள்
துணிமணிகள், காலணிகள், விளையாட்டுத்துறை, விளையாட்டு வீரர்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
10.மகரம்:
சுரங்கம், கனிமங்கள் உற்பத்தி, பதனிடுதல் போன்றவைகள்
மூலப் பொருட்கள் உற்பத்தி, மூலப் பொருட்கள் விற்பனை!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
11.கும்பம்:
தத்துவஞானிகள், ஆலோசகர்கள், பயிற்சியாளர்கள், ஜோதிடர்கள்,
பொறியாளர்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
12.மீனம்
மருத்துவர்கள், கடல் சார்ந்த தொழில்கள் அல்லது வேலைகள்,
இரசாயனங்கள், எண்ணெய், ஓவியர்கள், மருத்துவமனைகள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
வீடுகளை வைத்து வேலைகள்:
Careers by house (if the 10th lord is placed in the following houses)
1
First:
self-employment, politics or the public at large, work concered with the body (example. health club)

2.
Second:
banking, investments, accountants, restaurants, teaching, consultants, psychologists,

3
Third:
communication, arts, sales, advertising, computing, writing, publishing

4.
Fourth:
agriculture, building trades, real estate, vehicles, water, geology and mining

5.
Fifth:
politics, stockbrokers, religious rituals, entertainment, authorship

6
Sixth:
lawyers, military, police, labour, health related professions, food, waiters.

7.
Seventh:
business, trade, merchant, foreign business.

8.
Eighth:
insurance, research, death-related, metaphysics (e.g. astrology), sex industry.

9.
Ninth:
law, university teaching, travel, religious professions, work in foreign countries.

10
Tenth:
government jobs, dealing with public and the masses, managers, politics.

11
Eleventh:
trade and business, accountants, financial institutions, group work. sports

12
Twelfth:
foreign, jobs requiring secrecy, travels, hospitals, prisons, charities, advocacy.
+++++++++++++++++++++++++++++++++++++++++++
Careers by planet (10th Lord)
1. Sun:
authority, politicians, scientists, leaders, directors, government employees, doctors, jewelers

2. Moon
nursing, the public, traveling, marine, cooks, restaurants, import/export.

3. Mars
fire, energy, metals, initiative, weapons, construction, soldiers, police, surgeons, engineers.

4. Mercury
intellect, writing, teaching, merchandise, clerks, accountants, editors, transport, astrologers.

5. Jupiter
finance, law, treasury, scholars, priests, politicians, advertising, psychologist, humanitarian.

6. Venus
pleasures, luxuries, beauty, art, music, entertainment industry, sex industry, hotels.

7. Saturn t
real estate, labour, agriculture, building trades, mining, monk.

8. Rahu
researchers, engineers, physicians, medicine/drugs, speculators, aviation, electricity, waste.

9. Ketu
idealism, enlightenment, religion, secret affairs, poisons, metaphysics.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எல்லாம் பொதுப்பலன்கள். அவரவர்கள் ஜாதகத்தில் உள்ள கிரக நிலைமைகளை
வைத்துப் பலன்கள் மாறுபடும்.

இப்போது, பொரியல் கூட்டு, அவியல், வறுவல் ஆகியவற்றைப் பறிமாறியுள்ளேன்.
இனிமேல் சாம்பார், வற்றக்குழம்பு, மோர்க்குழம்பு, தயிர், பாயாசம் எல்லாம் வர
உள்ளது, அவைகள் அடுத்தடுத்து வரும். வந்த பிறகு, நன்றாகச் சாப்பிட்டுவிட்டு
ஒரு முடிவிற்கு வாருங்கள்.

அதாவது பத்தாம் வீட்டைப் பற்றி இன்னும் சில பாடங்கள் (பகுதிகள்) உள்ளன.
அவைகள் தொடர்ந்து வரும்! பொறுமை காத்துப் படித்து இன்புற வேண்டுகிறேன்!

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்!

வாழ்க வளமுடன்!

28.9.08

ஒடுக்குபவர்களும், ஒடுக்கப்பட்டவர்களும் இல்லாத உலகம் எது?

பத்தாம் வீடு - பகுதி 2

மனித வாழ்க்கையில் பல அவலங்கள். ஒரு குழந்தை தன் தாய் வயிற்றில்
280 நாட்கள் இருந்துவிட்டு வெளியே வருகிறது. பிறக்கும் முறையில்
வித்தியாசம் இல்லை. பிறந்த உடனேயே - அந்தக் கணமே வித்தியாசம்
உருவாக ஆரம்பித்து விடுகிறது. அது செல்வந்தர் வீட்டில் பிறந்திருந்தால்
எல்லாச் சீராட்டுக்களையும் பெறுகிறது. அன்றாடம் சோற்றுக்கு அல்லாடும்
ஒரு ஏழை வீட்டில் பிறந்திருந்தால், தாய் அதை வெய்யிலில் தூக்கிக்
கொண்டு தான் வேலை செய்யும் இடங்களுக்குப் போகின்றாள்.
ஒரு மரத்தில் கட்டப்பட்டிருக்கும் தொட்டிலோ அல்லது ஒரு வீட்டின்
உத்திரத்தில் கட்டப்பட்டிருக்கும் தொட்டிலிலோ அதைக் கிடத்திவிட்டுத்
தன் வேலையைக் கவனிக்கிறாள். அவள் தன் வயிற்றுப்பாட்டையும் பார்க்க
வேண்டும் தன்னுடைய குழந்தையின் பசியையும் போக்க வேண்டும்.

குழந்தைகள் வளரும் சூழ்நிலையிலும் பல அவதிகளைச் சந்திக்கின்றன.
சில கிராமங்களில் ஆரம்பப் பள்ளிக்கூடம், ஆரம்ப சுகாதார நிலையங்கள்
கிடையாது. தினமும் மூன்று அல்லது ஐந்து கிலோ மீட்டர் தூரம் அந்தப்
பிஞ்சுக்கால்கள் நடந்து சென்று படிக்க வேண்டும்.

"ஜாதிகள் இல்லையடி பாப்பா" என்று முண்டாசுக் கவிஞன் சொல்லி
விட்டுப்போய் விட்டான். நாட்டில் ஜாதிகள் எல்லா நிலைகளிலும்
பேயாட்டம் போடுகிறது. எந்தப் பள்ளிக்கூடத்திலாவது ஜாதியைக்
கேட்காமல் இடம் கொடுக்கிறார்களா சொல்லுங்கள்? அங்கேயே ஜாதி
அக்குழந்தையின் தோளின் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு விடுகிறது.

வெள்ளைக்காரன் செய்த சதியால் மதத்தின் பெயரால் நாட்டைத் துண்டு
போட்டுக் கொடுக்க நேர்ந்தது. துண்டு போட்டுக்கொண்டு சென்ற நாட்டை
விட, துண்டு போடக்காரணமாக இருந்த அந்த மதத்தினரின் எண்ணிக்கை,
இப்போது அந்த நாட்டில் இருப்பவர்களைவிட இங்கே அதிகம். பிறகு
ஒரு பெரியவர், மொழியின் பெயரால் நாட்டைப் பல மாநிலங்களாகப் பிரித்துக்
கொடுக்கும் வேண்டுகோளுக்குச் செவிசாய்த்துப் பிரித்துக் கொடுத்தார்.
பூகோள அடிப்படையில் பிரித்திருந்தால் பல அவதிகள் இன்று இருக்காது.
உதாரணம் காவிரி கன்னடர்களுக்கு மட்டும் என்ற நிலைப்பாடு. பிறகு
பல பெரியவர்கள் சேர்ந்து பொருளாதார அடிப்படையில், கல்வி வேலை
வாய்ப்புக்களை உருவாக்காமல் ஜாதிகளின்/ இனங்களின் அடிப்படையில்
கல்வி வேலை வாய்ப்புக்களில் சீர் திருத்தங்களைக் கொண்டு வந்தார்கள்.
பிறகு 1970ற்குப் பிறகு அரசியல் கட்சிகள் ஜாதி அடிப்படையில் ஒவ்வொரு
தொகுதியிலும் அதிகமாக உள்ள ஜாதிக்காரகளின் பிரதிநிதிகளை நிற்க
வைத்து வெற்றி காணும் யுக்தியைக் கண்டு பிடித்தன. அரசியலில் ஜாதி
வேரூன்றி நிற்க ஆரம்பித்தது. பிறகு பத்தாண்டுகள் கழிந்து ஜாதிக்
கட்சிகள் இனக் கட்சிகள் உருவாகின. இப்போது எல்லா மட்டத்திலும்,
ஜாதிகள், இனங்கள் அதிகாரம் செலுத்த ஆரம்பித்துள்ளன.

நான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல வில்லை.
அது என் வேலையும் அல்ல.
பொதுவாக உள்ள அவலங்களைத்தான் குறிப்பிடுகிறேன்.

இன்று சமுதாயத்தில், முற்பட்டவர்கள், பிற்பட்டவர்கள், அதிகம் பிற்பட்ட
வர்கள், பழங்குடியினர், ஒடுக்கப்பட்டவர்கள், ஒடுக்குபவர்கள் என்று பல
பிரிவுகள் உள்ளன. ஒவ்வொருவரும் ஒதுக்கீடுகள் போதாது என்கிறார்கள்.
எல்லா நிலையிலும் ஒதுக்கீடுகள் வேண்டும் என்கிறார்கள். எவ்வளவு
வேண்டும் என்று தெரியவில்லை? எத்தனை காலத்திற்கு என்று தெரிய
வில்லை? எப்படிக் கொடுப்பது என்று தெரியவில்லை? எப்படிக்
கொடுத்தால் அனைவரும் திருப்தியடைவார்கள், மகிழ்ச்சி கொள்வார்கள்
என்பதும் தெரியவில்லை!

கல்வியில் ஒதுக்கீடு, மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற்கல்விகளில்
ஒதுக்கீடு, வேலைகளில் ஒதுக்கீடு, வேலை உயர்வுகளில் ஒதுக்கீடு என்று
எங்கே பார்த்தாலும் கூச்சல் குழப்பம்.

தினமும் இதை வைத்து பத்திரிக்கைகளில் எழுதுபவர்களும், மேடைகளில்
பேசுபவர்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றார்கள்.
பிரச்சினைகளும் தீர்ந்த பாடாக இல்லை. வேண்டுகோள்களும் குறைந்த
பாடாக இல்லை.

ஏன் இதை வைத்துத் தினமும் இரண்டு பதிவுகள் போடும் பதிவர்களும்
இருக்கிறார்கள்.

எல்லோரும் நன்றாக இருக்கட்டும். எல்லோருடைய கோரிக்கைகளும்,
எண்ணங்களும் நிறைவேறட்டும். என்னுடைய விருப்பமும் அதுதான்.

நான் சொல்லவந்தது அதுவல்ல!

ஜோதிடத்தில் அந்தப் பிரச்சினையே கிடையாது. இங்கே எந்தப் பிரிவினை
களும், உயர்வு தாழ்வும் இல்லை. 100/100 அனைவரும் சமம். எப்படி
யென்றால் எல்லோருக்கும் மொத்த மதிப்பெண்கள் 337 தான். யாராக
இருந்தாலும் இங்கே சமம்.

ஒடுக்கப்பட்டவர்களும், ஒடுக்குபவர்களும் இல்லாத உலகம் ஜோதிட உலகம்தான்!

இந்த ஒரு காரணத்திற்காகத்தான் எனக்கு ஜோதிடத்தை மிகவும்
பிடித்துப்போய் ஜோதிடத்தைக் கற்க ஆரம்பித்தேன்.

இந்த மதிப்பெண் எப்படி உண்டாகிறது என்பதை முன் பதிவுகளில் எழுதியுள்ளேன்.

டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்கும் 337 பரல்கள்தான். அவருடைய
வாகன ஓட்டுனருக்கும் 337 பரல்கள்தான்
முகேஷ் அம்பாணிக்கும் 337 பரல்கள்தான். அவருடைய மெய்க்காப்பாளருக்கும்
337 பரல்கள்தான்
இயக்குனர் மணி ரத்தினத்திற்கும் 337 பரல்கள்தான். அவருடைய உதவி
யாளருக்கும் 337 பரல்கள்தான்
இசைஞானி இளையராஜாவிற்கும் 337 பரல்கள்தான். அவருடைய குழுவில்
தபேலா
வாசிப்பவருக்கும் 337 பரல்கள்தான்

இப்படி யாரை வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள் எவருக்கும் அதிக
மாகவோ அல்லது குறைவாகவோ இருக்காது.துல்லியமாக 337 மட்டுமே இருக்கும்.

ஒருவருக்கு ஒன்று இருந்தால், ஒன்று இருக்காது. மொத்த பாக்கியங்கள் 36ல்
18தான் ஒருவருக்கு இருக்கும், 18 இருக்காது. எந்த பதினெட்டு என்பதில்
எல்லாம் அடங்கி விடுகிறது. (உ.ம்:Those who are having wealth will not
have health.)

பிறகு உலகில் உள்ள 700 கோடி மக்களுக்கும் ஜாதகம் எப்படி வேறு படுகிறது?
ஜோதிடத்தின் பிரம்மாண்டம் என்று அதையும் முன் பதிவுகளில் எழுதியுள்ளேன்.

இதையெல்லாம் கடவுளா போட்டு அனுப்புகிறார்? இல்லை!

கருணை மிக்கவர் கடவுள். அவருக்கு எல்லா ஜீவராசிகளும் ஒன்றுதான்
அவருடைய வேலையல்ல இது !

நாம் முற்பிறவிகளில் செய்த நல் வினைகள் தீவினைகளுக்கேற்பத் தானியங்கி
முறையில் நமது அடுத்த பிறவி தீர்மானிக்கப்பட்டு நாம் பிறக்கிறோம்.

முன் ஜென்மத்தில் அடுதவன் பணத்தில் உண்டு கொழுத்துத் தூங்கி வாழ்க்கையைக்
கழித்தவன் அடுத்த பிறவியில் தினமும் 12மணி நேரம் உடலால் உழைத்து
வாழ்க்கையை நடத்தும்படி ஆகி விடுகிறது.

முன் ஜென்மத்தில் பொதுப் பணத்திலும் கோவில் சொத்துக்களிலும் குடும்பம்
நடத்தியவன், அடுத்த பிறவியில் கோவில் வாசலில் தட்டோடு உட்காரும்படி ஆகி
விடுகிறது.

முன் பிறவியில் வயதான பெற்றோர்களைத் தவிக்க விட்டவன், இந்தப் பிறவியில்
பெற்றோர்கள் இன்றி அனாதையாகத் திரிய நேரிடுகிறது.

இப்படி பட்டியல் இட்டுக்கொண்டே போகலாம்.

ஒவ்வொரு பிறவிக்கும், அவன் ஜீவனம் செய்வதற்காகப் பிழைப்பதற்கும் ஒரு பலமான
அர்த்தம் இருக்கும். அதை உணர்பவர்களுக்கு மட்டுமே அது புரியும்.

புரிந்தவர்களுக்குப் புரியட்டும், பரியாமல் விதண்டாவாதம் செய்பவர்களுக்குப்
புரியாமலேயே போகட்டும்.

இந்தக் கர்ம தர்ம நியதிகளைத் தீவிரமாக படிக்க விரும்புபவர்கள். கவியரசர்
கண்ணதாசன் அவர்கள் எழுதியுள்ள 'அர்த்தமுள்ள இந்து மதம்' நூலின் பத்துப்
பாகங்களையும் படிக்குமாறு வேண்டுகிறேன்.

இதுவரை இந்தப் பதிவில் எழுதியுள்ளவற்றைப் பற்றி எதிர்க் கேள்வி கேட்க
நினைப்பவர்களும் அதைப் படித்துவிட்டு வந்து இங்கே கேள்வி கேட்கவும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இதே விதிமுறைகள்தான் பத்தாம் வீட்டிற்கும். பத்தாம் வீடு மிகவும் நன்றாக
அமைந்திருந்தால் நல்ல வேலையில் சேர்ந்து அபரிதமாகப் பொருள் ஈட்டுவீர்கள்
அதே நேரத்தில் ஜாதகத்தில் வேறு ஏதாவது வீட்டில் குறை இருக்கும்.

ஜாதகத்தில் பத்தாம் வீடு நன்றாக இல்லாமல் இருந்து ஜீவனத்திற்குப்
போராட்டமாக இருந்தால் வேறு ஒரு வீட்டில் அது நிறை செய்யப்பட்டிருக்கும்

எல்லாம் அந்த 18/36 அளவில், 337 பரல்களின் எண்ணிக்கைக் கணக்கில்
அடங்கிவிடும்.

ஆகவே யாரும் எதற்காகவும் கவலைப்பட வேண்டாம். எல்லோர் ஜாதகமும்
ஒருவிதத்தில் நன்றாகவே இருக்கும். உட்கார்ந்து அலசிப்பார்த்தால் அது
தெரியும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பத்தாம் வீட்டைப் பற்றிய பாடம் நாளையும் தொடரும்!


வாழ்க வளமுடன்!

27.9.08

பத்துமா, பத்தாதா, இல்லை படுத்துமா இந்த வீடு?

பத்தாம் வீடு!

ஜோதிடத்தின் முக்கியமான பகுதி இதுதான். அதுபோல கடினமான பகுதியும் இதுதான்.

பத்தாம் வீடு ஒருவரின் ஜாதகத்தில், ஜாதகர் தன் வாழ்க்கையில் செய்ய இருக்கும்
தொழிலை அல்லது வேலையைக் குறிப்பிடுவதாகும். அந்த இடத்தை, அதன் இயற்கைத்
தன்மையை, அதன் அதிபதியை, அவர் சென்று அமர்ந்திருக்கும் இடத்தை, அந்த
இடம் பெருகின்ற பார்வைகளை, அந்த அதிபர் பெறும் பார்வைகளை, அந்த இடத்தில்
வந்தமரும் கிரகங்களை, அதிபருடன் சேர்கின்ற அல்லது கூட்டணி போடுகின்ற
கிரகங்களை, அதேபோல கர்மகாரன் சனீஷ்வரனின் நிலைமை ஆகியவற்றைப்
பொறுமையாக அலசுவதன் மூலம் ஒருவரின் ஜீவனத்திற்கான வழியை அறியலாம்.
இதில் அஷ்டகவர்க்கம் பெரும் உதவியாக இருக்கும்.

முதலில் ஒருவனுக்கு வேலை உண்டா இல்லையா அல்லது தொழில் செய்வானா
என்று பார்ப்பதற்கும், அல்லது தொழில் ஸ்தானம் முழுமையாகக் கெட்டிருந்தால்
வேலை வெட்டிக்குப் போகாமல் ஊரைச் சுறிவிட்டு வந்து வீட்டில் நன்றாகச்
சாப்பிட்டுவிட்டு உறங்கும் சுகவாசியாக இருப்பானா என்று பார்ப்பதற்கு இந்த
வீடு உதவி செய்யும். உத்தியோகத்தில் அல்லது வேலையில் எந்த அளவிற்கு
ஒருவன் உயர்வான் என்று பார்ப்பதற்கும், எந்த வயதில் உயர்வான் என்று
பார்ப்பதற்கும் இது உதவும். எந்த தசா புத்தி காலத்தில் மேன்மை அடைவான்
அல்லது கீழே விழுவான் என்று பார்ப்பதற்கும் உதவும்.

இந்த ஜோதிடக் கலையை நிர்மானித்த முனிவர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்த
வேலை வாய்ப்புக்களும், தொழில்களும் மிகச் சிலவே. பின்னாட்களில் வந்த
ஜோதிட மேதைகள் தங்கள் அனுபவத்தால் எழுதிவைத்துவிட்டுப்போன
ஏராளமான குறிப்புக்களும் உள்ளன. அவை அனைத்தையும் ஒருவன் கற்றுத்
தேர்ந்திருந்தாலும், இன்றைய காலகட்டத்தில் உள்ள வேலை வாய்ப்புக்களை
வைத்து ஒரு குறிப்பிட்ட வேலையை, ஜாதகனுக்காகச் சொல்வது இயலாது.

ரயில்வேயில் வேலை கிடைக்கும் என்று ஒருவனுக்கு எப்படிச் சொல்ல முடியும்.
அல்லது நீ கனரக வாகனம் ஓட்டும் வேலைக்குச் செல்வாய் என்று எப்படிச்
சொல்ல முடியும்? அரசு வேலை என்று சொல்லலாம்.அவ்வளவுதான் அரசுத்
துறையில் வேலையில் ஆயிரம் வேலைகள் உள்ளன!. உடல் உழைப்பு வேலை
என்று சொல்லலாம். உடல் உழைப்பிலும் ஆயிரக்கணக்கான வேலைகள் உள்ளன.

நீ வியாபாரம் செய்து பொருள் ஈட்டுவாய் என்று சொல்லலாம். எந்த வியாபாரம்
என்று எப்படிச் சொல்ல முடியும்?

மருத்துவத் துறையில் வெற்றி பெறுவாய் என்று சொல்லாம். மருத்துவத்
துறையில்தான் எத்தனை பிரிவுகள் உள்ளன? டாக்டரும் மருத்துவத் துறைதான்,
மருந்து உற்பத்தி செய்பவரும் மருத்துவத் துறைதான், மருத்துவமனை வைத்திருப்
பவரும் மருந்துக் கம்பெனி விற்ப்பனைப் பிரநிதியும் மருத்துவத் துறைதான்.

கலைத்துறையில் எத்தனை பிரிவுகள் உள்ளன? சுக்கிரனும் ராகுவும், அல்லது
சுக்கிரனும், புதனும் அல்லது ராகுவும், புதனும் எந்த ஜோடி சம்பந்தப்பாட்டலும்
கலைத் துறையில் சிறப்படைய முடியும். ஆனால் கதை வசனம், இயக்கம்,
இசை, நடிப்பு என்று அதில் எத்தனையோ பிரிவுகள் இருக்கின்றன இல்லையா?

ஆகவே உயர்வைச் சொல்ல முடியுமே தவிர உயர்வு அடையும் காலத்தைச்
சொல்ல முடியுமே தவிர, வேலையை மிகத்துல்லியமாகக் குறிப்பிட முடியாது.
அதை நினைவில் வையுங்கள்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++

பத்தாம் வீட்டு அதிபதி மற்ற இடங்களில் சென்று அமர்வதால் ஏற்படும்
பொதுப் பலன்கள்

பத்தாம் வீட்டு அதிபதி வலுவாக இருந்தால் ஜாதகன் தான் ஈடுபடும் தொலில்
வெற்றிமேல் வெற்றியைக் காண்பான். பத்தாம் வீட்டு அதிபதி நீசம் பெற்றிருந்தாலோ
அல்லது தீய வீடுகளில் (6,8,12ஆம் வீடுகளில்) அமர்ந்திருந்தாலோ சிரமப்படுவான்.
போராட்டங்கள் நிறைந்ததாக இருக்கும். மூன்றடி ஏறினால் நான்கடி சறுக்கும்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1.
Tenth lord placed in the lagna or 1st house
லக்கினத்தில் அமர்ந்திருந்தால்:
தீவிரமாக தொழில் செய்வான். கடின உழைப்பாளி. தன் முயற்சியால் மேன்மை
அடைவான். சுய தொழில் செய்வான். தன்னிச்சையாகச் செய்யக்கூடிய வேலையில்
இருப்பான்.தன்னுடைய திறமைகளை வளர்த்துக் கொள்வான். மற்றவர்களால்
போற்றப்படுவான். மெதுவாக, நிதானமாக, தன்முனைப்புடன் முன்னேற்றம் காண்பான்.
இது அரசியலுக்கு ஏற்ற அமைப்பு. அரசியலில் நுழைந்தால், சக்தி வாய்ந்த பலரின்
தொடர்பு அவனுக்குக் கிடைக்கும். அவனும் அதில் வெற்றி பெற்றுச் சிறப்பான்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2.
Tenth lord placed in the 2nd house
இரண்டாம் வீட்டில் அமர்ந்திருந்தால்:
ஜாதகன் அவனுடைய வேலையைப் பொறுத்தவரை மிகவும் அதிர்ஷ்டமானவன்.
இரண்டாம் வீடு என்பது 10ஆம் வீட்டிற்கு ஐந்தாம் வீடு. தொட்டதெல்லாம் துலங்கும்
கை நிறையப் பொருள் ஈட்டுவான்.
தன்னுடைய குடும்பத் தொழிலையே பெரிய அளவில் செய்யும் வாய்ப்புக் கிடைக்கும்.
குறுக்கிடும் தடைகளைத் தாண்டி வெற்றிப் படிக்கட்டில் ஏறி ஒரு உச்ச நிலையை
ஜாதகன் அடைவான். உணவு விடுதி, பெரிய ரெஸ்டாரண்ட் போன்றவற்றை நடத்தும்
தொழிலும் சிலர் ஈடுபடுவார்கள்.
பத்தாம் வீடு கெட்டிருந்து, பத்தாம் அதிபதி மட்டும் இங்கே வந்து அமர்ந்திருந்தால்
ஜாதகன் பெரும் நஷடங்களைச் சந்திப்பதோடு, தனது குடும்பத் தொழிலையும்
தொடர்ந்து செய்ய முடியாத நிலைக்கு ஆளாகித் தவிப்பான்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3.
Tenth lord placed in the 3rd house
மூன்றாம் வீட்டில் அமர்ந்திருந்தால்:
ஜாதகனின் பகுதி நேர வாழ்க்கை பயணங்களில் கழியும்.அப்படிப்பட்ட வேலை
அமையும். பேச்சாளனாகவோ, எழுத்தாளனாகவோ இருந்தால் அந்தத்துறையில்
பிரகாசிப்பார்கள். புகழடைவார்கள். தொழிலில் உடன்பிறப்புக்களின் பங்கும்
இருக்கும் அதாவது அவர்களின் உதவிகள் தாராளமாகக் கிடைக்கும். எல்லோராலும்
விரும்பப்படும் நிலை கிடைக்கும். அதனால் வேலைபார்க்கும் இடங்களில் கூடுதல்
மதிப்பு இருக்கும். 3ஆம் வீடு பத்தாம் வீட்டிலிருந்து ஆறாவது வீடாக அமைவதால்
இந்த அமைப்பினருக்கு இயற்கையிலேயே எந்தப் பிரச்சினையையும் சமாளிக்கும்
அல்லது தீர்க்கும் திறமை இருக்கும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4.
Tenth lord placed in the 4th house
நான்காம் வீட்டில் அமர்ந்திருந்தால்:
ஜாதகர் ஒரு உதாரண மனிதராக இருப்பார். எல்லா விஷயங்களிலும் அறிவுடை
யவராக இருப்பார்.(person with knowledge in various subjects) இந்த அறிவாற்றலால்
பலராலும் மதிக்கப்படுபவராக இருப்பார். இடம் வாங்கி விற்கும் அல்லது கட்டடங்
களைக் கட்டிவிற்கும் தொழிலை மேற்கொண்டால் அதில் முதன்மை நிலைக்கு
உயர்வார். அரசியல் அதிகாரமுடையவர்களுடன் தொடர்புடையவராக இருப்பார்.
தூதுவராக இருப்பதற்கும் வாய்ப்பு உண்டாகும். வசதியான வீட்டையும், வாகனங்
களையும் உடையவராக இருப்பார். தலைமை ஏற்கும் சிறப்புடையவர்களாக இந்த
அமைப்புக்காரர்கள் விளங்குவதால் இவர்களுக்குப் பல சீடர்களும், உதவியாளர்
களும் கிடைப்பார்கள். பொது வாழ்க்கைக்கு இந்த அமைப்பு சக்தி வாய்ந்ததாகவும்,
பயனுள்ளதாகவும் இருக்கும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
5
Tenth lord in the 5th House
ஐந்தாம் வீட்டில் இருந்தால்
வாழ்க்கையின் எல்லா செளகரியங்களும் உடையவர்களாக இருப்பார்கள். இந்த
அமைப்பை ஆசீர்வதிக்கப்பெற்ற அமைப்பு எனச் சொல்லலாம். தொட்டதெல்லாம்
துலங்கும். மண்ணும் பொன்னாகும். பங்கு வணிகத்தில் ஈடுபட்டால் பணம் கொழிக்கும்.
இறைவழிபாடு, தியானம் என்று எளிமையாகவும் இருப்பார்கள். அதிகாரத்தில் உள்ள
பலர் இவர்களுக்கு நண்பர்களாகக் கிடைப்பார்கள்.அதோடு ஐந்தாம் வீடு, பத்தாம்
வீட்டிற்கு எட்டாம் வீடாக இருப்பதனால், இவர்களுக்கு மறைமுக எதிரிகளும்
இருப்பார்கள். இவர்களுடைய முன்னேற்றத்திற்கு அவர்கள் தடைகள் ஏற்படுத்த
முயல்வார்கள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
6
Tenth lord in the 6th House
ஆறாம் வீட்டில் இருந்தால்:
நீதித்துறை, மருத்துவத்துறை, சிறைத்துறை ஆகிய துறைகள் சார்ந்த வேலையில்
இருந்தால், அதில் பிரகாசிப்பார்கள். அடுத்தடுத்துப் பதவி உயர்வு பெற்று மேன்மை
அடைவர்கள். பொறுப்பான பதவிகள் வந்து சேரும். நடுநிலையாளர் என்று பெயர்
பெறுவதுடன், பலரின் மதிப்பையும் பெறுவார்கள்.
அடிக்கடி இடம் மாற்றம், ஊர் மாற்றங்கள் ஏற்படும். எதிரிகள் இருப்பார்கள்.
ஆறாம்வீடு பத்தாம் வீட்டிற்கு ஒன்பதாம் வீடு ஆகையால், அதிர்ஷ்டம் இவர்கள்
செல்லும் இடங்களில் எல்லாம் கூடவே வரும்.இவர்கள் வேலையில் உயர்வதற்கு
அதுவும் ஒரு காரணமாக இருக்கும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
7
Tenth lord in the 7th House
ஏழாம் வீட்டில் இருந்தால்:
பாத்தாம் அதிபதி இந்த இடத்தில் இருந்தால் ஜாதகரின் தொழில் அல்லது வேலை
மிகவும் சக்தி வாய்ந்ததாக அமையும். அவர்களுடைய அறிவு சராசரிக்கும்
அதிகமானதாக இருக்கும். பலவற்றைத் தெரிந்து கொள்ளவும், தெரிந்து
கொண்டதை அற்புதமாக வெளிப்படுத்தும் திறமையுடன் இருப்பார்கள். தொழிலில்
சிறந்த பங்குதாரர் அல்லது கூட்டாளி கிடைப்பார்.அதுவே அவருடைய
வளர்ச்சிக்குப் பெரும் உதவியாக அமையும். தொழில் நிமித்தமாக அடிக்கடி
தூர தேசங்களுக்குச் சென்றுவரும் வாய்ப்புக் கிடைக்கும். நிர்வாகத்திறமைகள்
உடையவராக இருப்பார். தங்களுடன் வேலைப்பார்ப்பவர்களை நம்புவார்கள்,
அதோடு நம்பிக்கைக்கு உரியவர்களாக இருப்பார்கள். அதனால் அவர்கள்
கையில் எடுத்துச் செய்யும் எல்லாச் செயல்களுமே வெற்றி பெறும். பலனைத்தரும்.
இந்த இடம் 10ஆம் வீட்டிற்குப் பத்தாம் இடமாகும். அதனால் அவர்களுடைய
வெற்றி எல்லைகளைக் கடந்து நிற்கும். கடந்து செல்லும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
8
Tenth lord in the 8th House
எட்டாம் வீட்டில் இருந்தால்:
இந்த வீட்டில் இருந்தால் ஜாதகருக்கு அவருடைய தொழிலில் அல்லது
வேலையில் பல இடைஞ்சல்களும், இடமாற்றங்களும் உண்டாகும். திறமைசாலி
களாக இருந்தாலும் பலரால் புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருப்பார்கள்.
தங்கள் வழியில்தான் செல்வார்கள். நீண்ட ஆயுளை உடையவராக இருப்பார்கள்.
பெருந்தன்மை உடையவர்களாகவும், உயர்ந்த கொள்கைகளை உடையவர்களாகவும்
இருப்பார்கள். தங்களுடன் வேலை செய்பவர்களால் பாராட்டப் படுபவர்களாகவும்,
விரும்பப்படுபவர்களாகவும் இருப்பார்கள். இந்த 8ஆம் இடம் பத்தாம் வீட்டிற்குப்
11ஆம் இடம் ஆதலால், நல்ல லாபம் கிடைக்கும் தொழில் அல்லது நல்ல சம்பளம்
கிடைக்கும் வேலைகள் அமையும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
9
Tenth lord in the 9th House
ஒன்பதாம் வீட்டில் இருந்தால்:
துறவு மனப்பான்மை, ஏகாந்த உணர்வு கொண்டவராக ஜாதகர் இருப்பார்.
பரம்பரைத் தொழிலில் நாட்டம் உடையவராக இருப்பார். போதகர். ஆசிரியர்
என்பதுபோன்றவேலைகளை விரும்பிச் செய்வார்.ஆன்மீக வாழ்வில் ஈடுபடுபவர்
களுக்கு வழிகாட்டியாக இருப்பார். அதிர்ஷ்டமுடையவராகவும். வசதி உடைய
வராகவும் இருப்பார். இவர்களுக்கு இவர்களது தந்தையின் உதவியும் வழிகாட்டு
தலும் நிறைந்திருக்கும். தர்மசிந்தனை உடையவர்களாக இருப்பார்கள். மனவள
மேம்பாட்டுத்துறையில் (psychological counseling) நுழைந்தால் சிறப்பானதொரு
இடத்தைப் பிடித்து மேன்மை பெறுவார்கள். தங்களுடைய திறமையால் பலரது
போற்றுதலுக்கும் உரியவர்களாகத் திகழ்வார்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
10
Tenth lord in the Tenth House
பத்தம் வீட்டு அதிபதி 10ல் இருந்தால்
தங்கள் தொழிலில் அல்லது வேலையில் பிரகாசிப்பார்கள். இந்த அமைப்பு
கெட்டிக்காரத்தனத்தை, புத்திசாலித்தனத்தை வெளிபடுத்தும் அமைப்பாகும்.
தங்களுக்கு மேலாளர்களை மதிக்கும் மனப்பக்குவம் உடையவர்களாக
இருப்பார்கள். அதனால் மதிப்பும் பெறுவார்கள்.மற்றவர்களின் நம்பிக்கைக்கு
உரியவர்களாக இருப்பார்கள். அரசியல் தொடர்பும், அரசுத் தொடர்பும்
உடையவர்களாக இருப்பார்கள். இந்த வீடு நல்ல கிரகங்களின் சேர்க்கை,
பார்வைகளளப் பெற்றிருந்தால் செய்யும் தொழிலில் அதீத மேன்மை பெறுவார்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
11
Tenth lord in the 11th House
பத்தாம் அதிபதி 11ல் இருந்தால், ஜாதகருக்குப் பணத்துடன், மதிப்பும்,
மரியாதையும் சேரும். மகிழ்வுடன் இருப்பார்கள். பெரு நோக்குடையவர்களாக
இருப்பார்கள். பொதுத்தொடர்புகள் உடையவராக இருப்பார்கள். மற்றவர்களுக்கு
வேலை கொடுக்கும் வாய்ப்பு உடையவர்களாக இருப்பார்கள். இதன் மூலமும்
இவர்களுக்குப் பல தொடர்புகள் உண்டாகும். பலரலும் விரும்பப்படுவார்கள்.
இந்த வீடு பத்தாம் வீட்டிற்கு இரண்டாம் இடமாகும். இதனால், இவர்களுக்கு
செல்வத்துடன், புகழும், மரியாதையும் சேர்ந்து கிடைக்கும். தொழில் மேன்மை
உடையவர்களாக இருப்பார்கள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
12.
Tenth lord in the 12th House
பத்தாம் அதிபதி 12ல் இருந்தால்.
வேலையில் அல்லது தொழிலில் பல பிரச்சினைகளையும், தடைகளையும் சந்திக்க
நேரிடும். சிலர் வெளி நாட்டிற்குச் சென்று அங்கு பல சிரமங்களைச் சந்திக்க
நேரிடும். வருமானவரி, விற்பனை வரி போன்ற செயல்பாடுகளில் முரையற்று நடந்தால்
பல சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். ஆகவே அந்த விஷயங்களில் இந்த
அமைப்பினர் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். அரசியலிலோ
அல்லது அரசியல்வாதிகளுடன் கூட்டணி சேர்ந்தால் பெரும் நஷ்டத்தை
மட்டுமே சந்திக்க நேரிடும். எதிரிகள் பலர் ஏற்படக்கூடும்
அவ்ற்றிற்கெல்லாம் அப்போதப்போதைக்கு தீர்வுகளை இவர்கள் ஏற்படுத்திக்
கொள்ள வேண்டும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்த வீட்டைப்பற்றி இன்னும் மூன்று பகுதிகள் வர உள்ளன. அவற்றையும்
படித்துவிட்டு
ஒரு முடிவிற்கு வாருங்கள்.

இப்போது சாதம் போட்டுப் பருப்பு, நெய் மட்டும்தான் ஊற்றி உள்ளேன். சாம்பார்,
வற்றக்குழம்பு, மோர்க்குழம்பு, தயிர், பாயாசம், வடை, அப்பளம் எல்லாம் இனி வரும்.
முழுச்சாப்பாடையும் சாப்பிடாமல், உங்களுக்குச் சொந்த ஜாதகத்திற்குத் தாவி
குழம்பிக்கொள்ளாதீர்கள்.

அன்புடன்,
வகுப்பறை வாத்தியார்


வாழ்க வளமுடன்!

25.9.08

மன்னனிடம் என்ன சொல்லித் தப்பித்தார் ஜோதிடர்?

ஜாதகம், கைரேகை போன்று எந்தக் குறிப்பும் இல்லாமல், கேட்கும்
கேள்விகளுக்கு தன் ஞான திருஷ்டியால் சரியாக, துல்லியமாகப் பதில்
சொல்லும் ஜோதிடர் ஒருவர் இருந்தார். Nostradamus போல என்று
வைத்துக்கொள்ளுங்களேன்

அவரைப் பற்றிக் கேள்விப்பட்ட மன்னன், அவரை அரண்மனைக்கு
அழைத்து, "என் அன்பு மனைவியோடு நான் எத்தனை காலம் வாழ்வேன்?
நான் முதலில் போவேனா? அல்லது அவள் முதலில் இறந்து போவாளா?
உன்னால் சொல்ல முடியுமா?" என்று கேட்டான்.

தன் அகக்கண்களால் நடக்க இருப்பதை உணர்ந்த ஜோதிடர்,
மன்னனிடம் சொன்னார்,"மன்னா! சற்றுப் பொறு! மூன்று தினங்கள்
கழித்து இதற்குப் பதில் சொல்கிறேன்" என்றார். மன்னன் விடவில்லை!

வேறு வழியில்லாமல் ஜோதிடர் நடக்க இருப்பதை சொல்லித் தொலைத்தார்.

"மன்னா, இன்னும் மூன்று தினங்களில் உன் மனைவி இறந்து விடுவாள்!"
என்று அதிர்ச்சியான தகவலைச் சொன்னார்.

சற்று நிலை குலைந்து போய்விட்ட மன்னன், "எப்படி இறப்பாள்?" என்று
வருத்தம் தொனிக்கக் கேட்டான்.

"அதைச் சொல்ல முடியாது. முடிந்தால் அருகிருந்து அவளைக் காப்பாற்ற
முயற்சி செய்" என்று சொல்லிவிட்டு, விடு விடுவென்று போய் விட்டார்.

அவர் சொன்னபடியே நடந்துவிட்டது. அரசரின் அன்பு மனைவி
மூன்றாவது நாள் காலையில் இறந்து போய் விட்டாள்.

அதிகாலையில் தன் தோழியுடன் அரண்மனைத் தோட்டத்தில் நடைப் பயிற்சி
மேற்கொண்டிருந்த அரிசியாரை, மதம் பிடித்து ஓடி வந்த யானை கீழே தள்ளி
மிதித்துக் கொன்று விட்டது.

அரசன் மிகுந்த துக்கத்திற்கு ஆளானான். ராணியின் அந்திமக் கிரியைகள்
நடந்து முடிந்தன.

அனால் மன்னனின் கோபம் மட்டும் தீரவில்லை. 3 தினங்களில் அவள்
இறந்துவிடுவாள் என்று துல்லியமாகச் சொன்ன ஜோதிடன், அவள்
யானையால் இறப்பாள் என்று சொல்லியிருந்தால், காப்பாற்றியிருக்கலாமே
என்ற வருத்தம் மேலிட்டு, அதுவும் கோபத்துடன் சேர்ந்துகொண்டது.

கோபத்தின் உச்சிக்குச் சென்ற மன்னன், தன் ஆட்களை அனுப்பி ஜோதிடரைப்
பிடித்துக் கொண்டு வரச்சொன்னான். வந்தவரிடம். கோபமாகக் கேட்டான்.

"உமது ஆயுள் இன்னும் எத்தனை வருடம்? சொல்ல முடியுமா?"

என்ன பதில் சொன்னாலும், அதாவது அயுளைப் பற்றிக் கூட்டிக் குறைத்து
என்ன சொன்னாலும், மன்னன், அந்தக் கனமே அதைப் பொய்யாக்கத் தன்னைக்
கொன்றுவிடத் தயங்க மாட்டான் என்பதை உணர்ந்த ஜோதிடர் ஒரு விநாடி
அரண்டு போய்விட்டார்.

இருந்தாலும் ஒரு வினாடியில் சுதாகரித்துக் கொண்டு, அதை வெளிக்காட்டாமல்
புத்திசாலித்தனமாக, துணிச்சலாக ஒரு பதிலை வேண்டுமென்றே, சொன்னார்.

இப்போது மன்னன் அரண்டு போய், அவரை உயிரோடு விட்டு விட்டான்!

என்ன சொல்லியிருப்பார் அவர்?

ஊகம் செய்து உங்கள் விடைகளைப் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்!

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!

எல்லாம் அவன் செயலென்று ஏன்டா உயிரை எடுக்கிறீர்கள்?

"எல்லாம் அவன் செயலென்று ஏன்டா உயிரை எடுக்கிறீர்கள்?"

"கோபத்தை விடு! என்ன வேண்டும் அதைச் சொல்?"

"எல்லாம் அவன் செயல் என்றால் மனித முயற்சியே கிடையாதா?
வீட்டில் கவுந்தடித்துப் படுத்துக் கொள்ளலாமா? படுத்துக்கிடந்தால்
என்ன கிடைக்கும்? யார் விரும்புவார்கள்? பெற்ற தாயும் விரும்ப
மாட்டாள். கழுத்தை நீட்டிய மனைவியும் விரும்ப மாட்டாள்!"

"உன்னை முயற்சி செய்ய வேண்டாம், எந்த வேலையையும் செய்ய
வேண்டாம் என்று யார் சொன்னது? பொறுமையாகப் பேசு. நீ
சொல்வதை விளங்கச் சொல்.இறைவனை - இறைவனைப் பற்றி
இறைநம்பிக்கையாளர்கள் சொல்வதையெல்லாம் சற்றுத் தள்ளி
வைத்துவிட்டு, உனக்கு என்ன தெரிய வேண்டும்? அதை மட்டும் கேள்!"

"வாழ்க்கையில் உய்வுபெற என்ன வேண்டும்?"

"உய்வு என்றால்....?"

"நல்ல வேலை, அல்லது நல்ல தொழில் என்று முன்னேறி, கை
நிறையச் சம்பளம் அல்லது கைநிறையப் பணம், சொந்த வீடு,
நான்கு சக்கர வாகனம், வங்கி இருப்பு, என்று செளகரியமாக வாழ
என்று வைத்துக் கொள்!"

"உனக்குத் தெரிந்ததை நீ சொல்! பிறகு எனக்குத் தெரிந்ததை
நான் சொல்கிறேன்"

"பணம் வேண்டும். காசு.... காசு.... வேண்டும்! மனித முயற்சி
இல்லாமல் பணம் எப்படி வரும்?"

"காசு இருந்தால் வாழ்க்கை கசப்பே இல்லாமல் இருக்கும் இல்லையா?"

"நிச்சயமாக! அப்படியே கசப்பு தலை காட்டினால், காசை வைத்து
அதை விரட்டி விடலாம்"

"பணத்திற்கு என்ன செய்ய வேண்டும்?"

"நல்ல வேலையைத் தேடிப்பிடிக்க வேண்டும். அல்லது நல்ல தொழிலைச்
செய்ய வேண்டும். அல்லது படிந்து வருகிற வியாபாரத்தைச் செய்ய
வேண்டும். மொத்ததில் முயற்சி செய்து பொருளை ஈட்ட வேண்டும்.
That is the main task of a man!"

"மற்றதை விடு. முதலில் வேலையைப் பற்றிப் பேசுவோம். நல்ல
வேலைக்கு என்ன செய்ய வேண்டும்?"

"தகுதி இருந்தால் வேலை தேடி வரும்?"

"தகுதிக்கு என்ன செய்ய வேண்டும்?"

"நம்மை நாமே மேம்படுத்திக் கொள்ள வேண்டும்!"

"மேம் படுத்திக் கொள்வதென்றால் என்ன?"

"அது கூடத் தெரியாதா? நம்முடைய தகுதியை, திறமையை, அறிவை
அதிகப் படுத்திக் கொள்ள வேண்டும்.(one should upgrade his
qualification, talent and knowledge!). கல்வி,ஆர்வம், பயிற்சி,
துறைசார்ந்த அறிவு, தன்முனைப்பு, தியாக உணர்வுடன் வேலை
செய்தல் (education,ambition, knowledge, involvement, dedicated
working)இவற்றை வசப் படுத்த வேண்டும். தகுதி தானாக உயரும்!"

"அவற்றிற்கெல்லாம் சரியான வாய்ப்புக் கிடைக்க வேண்டாமா?
அதற்குரிய வீட்டுச் சூழ்நிலை இருக்க வேண்டாமா? நீ சொல்வது
இரண்டாவது நிலை! முதல் நிலைக்கு என்ன செய்வது? அதாவது
அடிப்படைக் கல்விக்கு (Basic education) என்ன செய்வது?
நல்ல பெற்றோர்கள் அமைந்து, அவர்கள் நம்மை அக்கறையுடன்
படிக்க வைத்து ஆளாக்க வேண்டாமா? இருபத்தியோரு வயதுவரை
நீ நல்லபடியாக வளர்ந்து ஆளாகும் சூழ்நிலை! குறைந்த அளவு
ஒரு இளங்கலைப்பட்டப் படிப்பாவது படித்துப் பாஸாகும் சூழ்நிலை!
மொத்தத்தில் நம்மைக் கைத்துக்கி விட ஆள் வேண்டாமா?
கை துக்கி விட்ட பிறகல்லவா நாம் கொடி பிடிக்க முடியும்?"

".........................."

"வறுமை காரணமாக பத்து வயதிலேயே தங்கள் பிள்ளைகளைத் தீப்பெட்டி
செய்யும் தொழிலுக்கு அனுப்பும் குடும்பங்களைத் தெரியமா உனக்கு?
எத்தனை பிள்ளைகள் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மெக்கானிக்கு
களிடம் வேலை பார்க்கின்றன தெரியுமா? கிராமங்களுக்குச் சென்று
பார்த்திருக்கிறாயா? எத்தனை சிறுமிகள் வயல்களில் வேலை பார்க்கிறார்கள்
என்று தெரியுமா? அப்படியொரு வறுமையான சூழ்நிலை அல்லது அப்படிப்பட்ட
பெற்றோர்கள் உனக்கும் அமைந்திருந்தால் உன் நிலைமை என்ன?
என்றைக்காவது யோசித்துப் பார்த்திருக்கிறாயா?"

"சரி, நல்ல பெற்றோர்கள் அமைவதற்கும் ஈசனுக்கும் என்ன சம்பந்தம்?"

"பிறவி என்ன உன் கையிலா இருக்கிறது? நீ விரும்பியா இப்போது உள்ள
பெற்றோர்களுக்குப் பிறந்தாய்? அல்லது எவனாது அவன் சாய்ஸிற்குத் தேடிப்
பிறக்க முடியுமா?"

"முடியாது!"

"அங்கேதான் இறைவன் இருக்கிறார். எல்லாம் உனது முன்வினைப் பயன்!
நீ வாங்கி வந்த வரம். தர்ம - கர்மா தியரியைப் பற்றிச் சொன்னால் உன்
மண்டையில் ஏறாது! ஆகவே உனக்குப் புரியும்படி சொல்கிறேன். மிட்டா
மிராசுகளின் வீட்டில் பிறப்பதோ அல்லது ஒரு அன்றாடம் காய்ச்சியின்
வீட்டில் பிறப்பதோ உன் சாய்ஸிற்குக் கிடைக்காது. அதுபோல ஒரு
பல்கலைக் கழகத் துணை வேந்தரின் குடும்பத்தில் பிறப்பதோ அல்லது
ஒரு பெரிய அரசியல் தலைவரின் வீட்டில் பிறப்பதோ உன் கையில் இல்லை.
பிறந்த அன்றே நீ எதையும் தூக்கிப் பிடிக்க முடியாது. குறைந்தபட்சம்
பன்னிரெண்டு வயது வரையிலாவது கடுமையான வாழ்க்கைச் சுழலில் நீ
சிக்கிவிடாமல், சிக்கி மூழ்கி விடாமல் உன்னனக் காப்பதற்குத் தகுதியுள்ள
பெற்றோர்கள் உனக்கு அமைய வேண்டும். அதை அளிப்பது இறைவன்தான்.
அதேபோல வாழ்க்கையில் கிடைக்கும் மிகப் பெரிய வெற்றிகளுக்கும் ஏன்
தோல்விகளுக்கும், உன் தலை எழுத்துத்தான் காரணம். அதை உன் முன்
வினைப்படி எழுதியனுப்புவதும் இறைச் செயல்தான். அதைத்தான் ஒரு
கவிஞன் இப்படி எழுதினான்:
"முதல் எழுத்து தாய் மொழியில்
தலை எழுத்து யார் மொழியில்?"
முதலில் இதை நீ உணர வேண்டும். தலை எழுத்து ஒன்று உள்ளது என்பதை
உணர்ந்த எவனுமே 'எல்லாம் அவன் செயலென்று ஏன்டா உயிரை எடுக்கிறீர்கள்?'
என்று கேட்க மாட்டான். அதை உணராதவர்களும், அல்லது ஒப்புக் கொள்ளாதவர்களும்
அப்படித்தான் கேட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்களைப் போல நீயும் பேசாதே!
யாரும் யாரையும் மாற்ற முடியாது. இறைவனை உணராத எவனுக்குமே சனீஷ்வரன்
போர்டிங் பாஸ் கொடுக்க மாட்டான். உணரவைத்துத்தான் கொடுப்பான்.
அதுவரை அவன் ஏதாவது ஒரு விதத்தில் அல்லல் படுவான். பட்ட பிறகே
தன் கர்ம வினையை உணர்வான். உணர்ந்த பிறகுதான் இந்த உலக
அவலங்களில் அல்லது துன்பங்களில் இருந்து அவனுக்கு விடுதலை கிடைக்கும்
அதாவது மேலே போவதற்குப் போர்டிங் பாஸ் கிடைக்கும்!

(முற்றும்)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
"யோவ் வாத்தியார், இன்றையப் பாடத்திற்கும், இந்தக் கட்டுரைக்கும்
ஏதாவது சம்பந்தம் உண்டா?"

"உண்டு!"

"என்ன அது?"

" அடுத்து வரும் பாடத்தைப்படிக்கவும். மூன்று பகுதிகளாக அது வர உள்ளது.
மூன்று பகுதிகளையும் மனதின் உள் வாங்கிப் படிக்கவும். அப்படிப் படிப்பவர்
களுக்கு அது தெரியவரும்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)

வாழ்க வளமுடன்!

23.9.08

எது உங்களை விட்டுப் போகாது?

நச்'சென்று ஆறு நன்மொழிகள் உள்ளன.படித்து இன்புறுங்கள்

1. வெற்றியில் எல்லாம் இல்லை. வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில்
தான் எல்லாம் உள்ளது!

2. உங்களால் நிறைய சாதிக்க முடியும். அந்த சாதனையின் பெயர் யாருக்குச் செல்கிறது என்ற கவலையில்லை என்றால்!

3. உங்களை விட்டு எல்லாமே போய்விட்டாலும் - ஒன்று மட்டும் நிச்சயமாக
உங்களைவிட்டுப் போகாது - அதுதான் உங்கள் எதிர்காலம்!

4. அளவிற்கு மீறிச் சண்டையிடாதே - எதிரிக்கு உன்னுடைய யுக்தி
முழுவதும் தெரிந்து விடும்!

5. கீழே இருந்துதான் எல்லா வேலைகலையும் துவங்க வேண்டும்.
மேலே இருந்து துவங்ககூடிய ஒரே வேலை சவக்குழி தோண்டுவது மட்டுமே~!

6. உங்கள் முயற்சி இல்லாமல் வருவது ஒன்றே ஒன்றுதான். அதுதான் முதுமை!

வாழ்க வளமுடன்!

குட்டிக் கதை: நாவிதரும் கடவுளும்

நச்' சென்று சொன்னார்கள் - கதை 2

ஒரு ஆசாமி தன்னுடைய தலை முடியையும், தாடியையும் சீர் படுத்த (trimming)
நாவிதரின் கடைக்குச் சென்றான். நாவிதர் வேலையை ஆரம்பித்தார்.

நாவிதருக்கும் ஆசாமிக்கும் நீண்ட நாள் பழக்கம். நாவிதர் அவனுடன் பேசிக்
கொண்டே முடிய வெட்ட ஆரம்பித்தார். அரசியலில் இருந்து சினிமாவரை
பல விஷயங்களை இருவரும் அலசினார்கள்.

இறுதியில் பேச்சு கடவுளைப் பற்றித் திரும்பியதும், நாவிதர் அதிரடியாகச்
சொன்னார்," எனக்கு சுத்தமாக கடவுள் நம்பிக்கை இல்லை."

ஆசாமி குறுகுறுப்புடன் கேட்டான்," ஏன்?"

"அப்படி ஒருவர் இருந்தால் அல்லவா நம்பிக்கை கொள்ள முடியும்?"

"எப்படிச் சொல்கிறாய்?"

"வேண்டுமென்றால் நான்கு தெருக்களைச் சுற்றிப் பார்த்து விட்டு வாருங்கள்.
பார்த்துவிட்டு வந்து சொல்லுங்கள். அவர் இருந்தால் ஏன் இத்தனை நோயாளிகள்
ஏன் அனாதைக் குழந்தைகள். ஏன் இத்தனை சோற்றுக்கில்லாதவர்கள்?"
கடவுள் இருந்தால் வாழ்க்கையில் இத்தனை அவலங்கள் இருக்காது.
இத்தனை சோதனைகள், வலிகள், துன்பங்கள் இருக்காது. இதையெல்லாம்
பார்த்துக் கொண்டு சும்மா இருப்பவரைக் கடவுள் என்று எப்படிச் சொல்ல முடியும்?
அதனால்தான் சொல்கிறேன் - கடவுள் இல்லை!"

வந்திருந்த கஸ்டமர் (அதுதான் அந்த ஆசாமி) ஒரு முறை சிந்தித்தார்.
வெட்டியாக ஏன் வாதம் செய்ய வேண்டும்? என்று எண்ணியவர் ஒன்றும்
சொல்லவில்லை.

வந்த வேலை முடிந்தவுடன் பணத்தைக் கொடுத்துவிட்டு நடையைக் கட்டினார்

வெளியே வந்தவர், சற்றுத் தள்ளி ஒரு மனிதன் நீண்ட, அழுக்கான, வாரிவிடப்படாத
தலை முடியுடனும், நெஞ்சுவரை நீண்டிருக்கும் சீராக இல்லாத தாடியுடனும்
நிற்பதைப் பார்த்தார்.

சட்டென்று பார்பரின் கடைக்குள் மீண்டும் நுழைந்தவர், புன்னகையுடன்
சொன்னார்.

"இப்போதுதான் உணர்ந்தேன். என்ன என்று தெரியுமா? உலகில்
நாவிதர்களே இல்லை!"

"அதை நீங்கள் எப்படிச் சொல்ல முடியும்," என்று வியப்பு மேலிடக்
கேட்ட நாவிதர், "நான் ஒரு பார்பர்.உங்கள் கண் எதிரே நிற்கிறேன்.
அதோடு சற்று முன்புதான் உங்களுக்கு முடி வெட்டி விட்டேன் தாடியை
டிரிம் செய்துவிட்டேன்"

"நோ, இல்லவே இல்லை. பார்பர்கள் இருந்தால், வெட்டப்படாத அழுக்கான
தலை முடியுடனும், டிரிம் செய்யப்படாத நீண்ட தாடியுடனும் உலகில் ஒருவரும்
இருக்க மாட்ட்டார்கள். உன் கடை வாசலிலேயே அப்படி ஒருவன் நிற்கிறான்
வெளியே வந்து பார்த்து விட்டுச் சொல்"

"இல்லை அதற்கு பார்பர்கள் என்ன செய்ய முடியும்? அந்த ஏழை மனிதனுக்கு நான்
சென்று எப்படி உதவி செய்ய முடியும்? அவனல்லவா என்னைத் தேடி வரவேண்டும்.
அப்போதுதானே நான் அவனுக்கு உதவ முடியும்?"

"கரெக்ட். தட் ஈஸ் த பாயிண்ட். அதுதான் உண்மை! கடவுளின் நிலைப்பாடும்
அதுதான். இப்போது சொல்வாயா கடவுள் இல்லையென்று?"

நாவிதர் திகைத்துப் போனார்!



வாழ்க வளமுடன்!

21.9.08

அதிரடியாக அரசனுக்குப் பதில் சொன்ன மூதாட்டி!

நச்' சென்று சொன்னார்கள் - பகுதி 1

அரசனின் கனவில் அடிக்கடி மூன்று எலிகள் தோன்றி தொல்லை கொடுத்துக்
கொண்டிருந்தன. அதில் ஒன்று கொழுத்த எலி. ஒன்று மெலிந்த எலி.
இன்னொன்று எந்நேரமும் தூங்கிக் கொண்டிருக்கும் எலி!!

தன் கனவிற்கு விளக்கம் கேட்டு, மன்னன் அவையினரைத் தொல்லைப் படுத்தினான்.
யாராலும் பதில் சொல்ல முடியவில்லை.

மக்களில் யாராவது அதற்கு விளக்கம் சொல்கிறார்களா பார்க்கலாம் என்று
தண்டோரா போட்டு பொது இடங்களில் அறிவித்தான்.

அதற்கு கணிசமான பரிசுத் தொகை ஒன்றையும் அறிவித்திருந்தான்.

ஆனால் யாரும் முன் வரவில்லை. பதில் தவறாகி, அரசனின் கோபத்திற்கு
ஆளானால் என்ன செய்வது?

இரண்டு தினங்கள் கழித்து செய்தியை அறிந்த மூதாட்டி ஒருத்தி பதில்
சொல்லும் நோக்கோடு அரசவைக்கு வந்தாள்.

வந்தவள் மன்னனிடம் அதிரடியாக இப்படிச் சொன்னாள்:

"மன்னா, நீ கனவில் கண்ட அந்தக் கொழுத்த எலி, உன்னுடைய
அரண்மனையில் இருக்கும் மந்திரிகளையும், பணியாளர்களையும்
குறிக்கும். மெலிந்த எலி இந்த நாட்டு மக்களைக் குறிக்கும்."

மூதாட்டியின் பதிலில் ஓரளவு திருப்தியடைந்த மன்னன், உற்சாகமாகக் கேட்டான்:

"சரி, தாயே! எந்நேரமும் தூங்கிக் கொண்டிருக்கும் எலி யாரைக் குறிக்கிறது?"

மூதாட்டி சலனமின்றிப் பதில் சொன்னாள்:

"அது வேறு யாருமில்லை! நீதான் அது! உன்னைத்தான் குறிக்கிறது அது!"

வாழ்க வளமுடன்!

19.9.08

ஜோதிடம்: துணைக் காவடி!

காவடி தனியாகப் போகாது! அதாவது காவடி தூக்கிக் கொண்டு மலைமேல்
இருக்கும் குமரனைக் காண பிரார்த்தனையாகச் செல்பவர்கள் துணைக்கு
ஒருவரைக் கூட்டிக் கொள்வதோடு, மேலும் ஒரு காவடியை உறவினர்கள்
அல்லது நண்பர்களைக் கொண்டு தூக்கச் செய்து அழைத்துப் போவது
வழக்கம்! அதற்குத் துணைக் காவடி என்று பெயர்.

நேற்றைய பதிவிற்கு, இப்போது துணைக்காவடி அதாவது supplementary
பதிவு போடும்படியாகிவிட்டது.

நமது வகுப்பறை மாணவர், யு.எஸ்.ஏ சங்கர் பின்னூட்டத்தில் இப்படி எழுதியிருந்தார்

//////hotcat said...Dear Sir,
How to calculate or how to see the latitude on Jagnath horoscope, for example,
if meena is ascendent with mercury on it...and 7th house is kanni. where as
Jupiter in 9th house....how to calculate these? should Jupiter and mercury
longitude should be counted or what?
Moreover, lagna longitude is not in jaganath hora...or I am lost!!! Please explain
-Shankar//////

அவருக்கு விளக்கம் சொல்லும் முகமாக இந்தப் பதிவு!

சைடு பாரில், http://planetarypositions.com தளத்தின் முகவரி உள்ளது. அதில்
உங்கள் பிறப்பு விவரங்களை உள்ளிட்டு, கீழ் கண்டதுபோல விவரங்களை
எடுத்துக் கொண்டீர்கள் என்றால் கணக்கிடுவதற்கு உபயோகமாக இருக்கும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உதாரண ஜாதகம்
பெயர்: திரு. உமாசங்கர்
பிறந்த தேதி: 1.1.1980
பிறந்த நேரம்: காலை 6.30 மணி
பிறந்த ஊர்: சென்னை
சென்னையின் அட்சரேகை, தீர்க்கரேகைகள்: 13.04 N & 80.17 E
Time Zone: 5.30 E
Chart Type: South Indian
Input details are in the appended picture:
படத்தின் மீது கர்சரை வைத்து அமுக்கினால் படம் பெரிதாகத் தெரியும்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Calculate' என்ற பட்டனை அமுக்கினால் உங்களுக்கு முழு விவரம்
கிடைக்கும். அதில் planets மற்றும் அவைகள் இருக்கும் degrees கிடைக்கும்!
அதையும் கீழே கொடுத்துள்ளேன்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஜாதகர் தனுசு லக்கினம்
லக்கினாதிபதி குரு ஒன்பதில் (strong)
சுக்கிரன் 2ல் (In a friend's house - Strong) ; ஆனால் லக்கினதிபதி குருவிற்கு ஆறில்
Both are not in mutual positions.
Leave them
++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஏழாம் வீட்டுக்காரர் புதன் லக்கினத்தில் - ஏழாம் வீட்டை நேரடியாகப் பார்த்த
வண்ணம். அதோடு சுபக்கிரகமான சந்திரன் 7ல் இருந்து அவரைப் பார்க்கின்றார்.
லக்கினாதிபதி குரு 9ல் அமர்ந்து லக்கினத்தையும், அதில் அமர்ந்திருக்கும்
புதனையும் பார்க்கின்றார்.
Both are in mutual positions.
Take them
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

குருவின் பாகைகள் 136.44
புதனின் பாகைகள் 244.28
-----------------------------
கூட்டல் ---------381.12
கழித்தல் ----360.00 (ஒரு முழுச் சுற்று)
----------------------------
மீதி -------------21.12

13.33 வரை அஸ்விணி நட்சத்திரம்
13.33 முதல் 26.66 வரை பரணி நட்சத்திரம்

ஆகவே ஜாதகருடைய மனைவியின் நட்சத்திரம் பரணி!
----------------------------------------------------------------
பரணி தரணி ஆளும் என்பார்கள். ஜாதகரின் லக்கினாதிபதி குரு 9ல் இருப்பதால்
அவருக்குத் தரணி ஆளும் யோகமுடைய பெண்தான் மனைவியாகக் கிடைத்திருக்கிறாள்:-)))
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Is it okay now, Mr.Shankar?

வாழ்க வளமுடன்!

18.9.08

எப்போது திருமணம் - தெரிந்து கொள்ள ஒரு சூத்திரம்!

"சார், ரெம்ப நாளா, வீட்டில் வரன் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள், ஒன்றும்
முடிந்த பாடாக இல்லை! எப்போது திருமணம் நடைபெறும்? அதைத் தெரிந்து
கொள்ள வழி இருக்கிறதா?"

இப்படி எனக்கு மின்னஞ்சல்கள் வரும்.

குரு பகவான் ஆசி இருந்தால் திருமணம் நடந்து விடும். அதை வியாழ நோக்கம்
என்பார்கள். குரு பகவான் லக்கினத்தையோ அல்லது லக்கினத்திற்கு அடுத்துள்ள
இரண்டாம் வீட்டையோ அல்லது சந்திர ராசியையோ அல்லது சந்திர ராசிக்கு
அடுத்துள்ள இரண்டாம் வீட்டையோ கோச்சாரத்தில் சுற்றிவரும் போது, 5, 7, 9
ஆம் பார்வையாகப் பார்க்கும் நிலையை வியாழ நோக்கம் என்பார்கள்.

சுக்கிரனின் தசா புத்தி நடைபெறும் பொழுதும் திருமண யோகம் உண்டு. அதுபோல
தனிப்பட்ட சில ஜாதகங்களில் ஏழாம் வீட்டதிபரின் தசா புத்தி நடைபெறும்போதும்
திருமண யோகம் உண்டு.

அம்மாடியோவ், இத்தனை விஷயங்களைப் பார்க்க வேண்டுமா? குறுக்குவழி கிடையாதா?

ஏன் இல்லை? நமக்கு எப்போதும் குறுக்கு வழிதானே (short route) பிடிக்கும்!

ஒரு குறுக்கு வழியைச் சொல்லிக் கொடுக்கவுள்ளேன்.

திருமணமாகாதவர்களுக்கு அது பயன்படும். அதோடு திருமணமாகியவர்களுக்கு,
அவர்களுடைய வீட்டிலுள்ள மற்றவர்களுக்குப் பார்க்கப் பயன்படும்.

ஆகவே அதைக் கீழே கொடுத்துள்ளேன்.

விவரமாகவே கொடுத்துள்ளேன். தேவையானவர்கள், அவரவர்களாகவே பார்த்துக்
கொள்ள வேண்டுகிறேன்.பார்த்துச் சொல்லுங்கள் என்று யாரும் தங்களுடைய
ஜாதகத்தை அனுப்ப வேண்டாம். எனக்கு நேரமில்லை. நேரம்தான் என்னுடைய
முதல் பிரச்சினை. நாளொன்றுக்கு 48 மணி நேரமாக இருந்தால் நன்றாக இருக்கும்:-))))
---------------------------------------------------------------------------------
லக்கினத்தின் பாகைகள் கூட்டல் ஏழாம் வீட்டு அதிபதியின் பாகைகள் வகுத்தல்
30 பாகைகள் = என்ன ராசி வருகிறதோ, அந்த ராசியில் கோச்சார குரு வரும்போது
திருமணம் நடைபெறும் (இது பொது விதி!)
---------------------------------------------------------------------------------
லக்கினாதிபதி, ஏழாம் அதிபதி, சுக்கிரன் ஆகியோர்கள் தங்கள் சுயவர்க்கத்தில்
ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களைக் கொண்டிருந்தால் உரிய காலத்தில்
திருமணம். அதாவது 21 வயது முதல் 25 வயதிற்குள் திருமணம்.

அவர்களில் இருவர் 3 அல்லது 4 பரல்களைக் கொண்டிருந்தால் சற்று வயதான
காலத்தில் திருமணம். அதாவது 30 அல்லது 32 வயதில் திருமணம்.

மூவருமே, 1 அல்லது 2 பரல்களை மட்டும் கொண்டிருந்தால் திருமண வாழ்க்கை
அமையாமலே போகலாம்!
--------------------------------------------------------------------------------
மனைவியின் நட்சத்திரம்:

லக்கினாதிபதியின் அட்ச ரேகை கூட்டல் சுக்கிரனின் அட்சரேகை வகுத்தல்
13.33 பாகைகள் = மனைவியின் நட்சத்திரம்.

சுக்கிரனை விட ஏழாம் வீட்டதிபன் வலுவாக இருந்தால்:

லக்கினாதிபதியின் அட்ச ரேகை கூட்டல் ஏழாம் வீட்டதிபனின் அட்சரேகை
வகுத்தல் 13.33 பாகைகள் = மனைவியின் நட்சத்திரம்.

எதற்காக வகுத்தல் 13.33 ?

360 பாகைகள் வகுத்தல் 27 நட்சத்திரங்கள் = 13.33 பாகைகள் (ஒரு நட்சத்திரத்தின் அளவு)

Example:
ஒருவருடைய ஜாதகத்தில் லக்கினதிபதி நிற்கும் அட்சரேகை: 298.01 கூட்டல்
ஏழாம் வீட்டதிபதி நிற்கும் அட்சரேகை 117.27 = 415.28
கழித்தல் ஒரு முழுச்சுற்று 360.00 = மீதி 55.28
இந்த 55.28 என்பது 5வது நட்சத்திரம் அஸ்வினி, பரணி, கார்த்திகை, ரோகிணி
என்று எண்ணிக் கொண்டு வரும் போது ஐந்தாவது நட்சத்திரம். அதுதான் அந்த
ஜாதகரின் மனைவியின் நட்சத்திரம்.
---------------------------------------------------------------------------
திருமணம் ஆனவர்கள் வகுத்துப் பாருங்கள். சரியாக வந்தால் சந்தோஷப் படுங்கள்
வராவிட்டால் ஏன் வரவில்லை என்று மண்டையை உடைத்துக் கொள்ளாதீர்கள்.
அல்லது எனக்கு மின்னஞ்சல் அனுப்பி என் மின்னஞ்சல் பெட்டியை நிரப்பி விடாதீர்கள்

பின்னூட்டத்தில் பொதுவான கேள்விகளள மட்டும் கேளுங்கள்.

இது ஒரு பொது சூத்திரம்தான். லக்கினாதிபன், அல்லது ஏழாம் வீட்டுக்காரன் அல்லது
சுக்கிரன் ஆகியோர்கள், ஜாதகத்தில் மறைந்திருந்தாலும் அல்லது வேறு கிரகத்தோடு
மோதி அஸ்தனமாகியிருந்தாலும், அல்லது வேறு அவயோகத்தில் அல்லது தோஷத்தில்
சிக்கியிருந்தாலும் அல்லது லக்கினத்திலோ அல்லது ஏழாம் வீட்டிலோ ஒன்றிற்கு
மேற்பட்ட கிரகம் இருந்தாலும் (That is more than one wife yoga), இந்த Formula
வின்படி சரியான நட்சத்திரம் கிடைக்காது. அதனால்தான் அதை வலியுறுத்திச் சொல்கிறேன்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இங்கே நான் எழுதிவருவது அனைத்தும் பொது விதிகள். ஒருவருடைய
ஜாதகத்தில் உள்ள பலவிதமான அமைப்புக்களை வைத்துப் பலன்கள் மாறுபடும்.

ஆகவே இங்கே எழுதுவதைப் படித்து விட்டு மகிழவும் வேண்டாம்.
கவலைப் பட்டுக் கலங்குவதும் வேண்டாம்.
Just like that - ஜோதிடத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். அவ்வளவுதான்.

அன்புடன்'
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!

14.9.08

காதல் திருமணமா? கட்டுப்பட்ட திருமணமா?

காதல் திருமணம் தெரியும்! அதென்ன கட்டுப்பட்ட திருமணம்?

Arranged Marriageஐ எப்படி மொழி பெயர்ப்பீர்கள்? ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம்
என்றோ அல்லது பெற்றோர்கள் பார்த்துச் செய்துவைக்கும் திருமணம் என்றோ
சொல்லலாம்.

பெற்றோர்களுக்குக் கட்டுப்பட்டு ஒரு இளைஞனோ அல்லது ஒரு யுவதியோ செய்து
கொள்ளும் திருமணத்தை பெற்றொர்களுக்குக் கட்டுப்பட்ட திருமணம் என்று
சொல்லலாம் இல்லையா?

அதுதான் கட்டுப்பட்ட திருமணம்!

எது நல்லது?

இரண்டுமே நல்லதுதான். தம்பதிகள் நல்லவிதமாக இணைந்து மன ஒற்றுமை,
மகிழ்ச்சியுடன் வாழ்ந்தால் சரி!

இப்படிப் பொதுவாகச் சொல்லித் தப்பிக்காதீர்கள் - குறிப்பிட்டுச் சொல்லுங்கள்
எது நல்லது? உங்கள் கருத்துப்படி எது நல்லது?

என் அனுபவப்படி எது நல்லது என்பதில் ஒரு கருத்து உள்ளது. என் ஆசானும்
அதைத்தான் சொல்லியிருக்கிறார். அதைப் பதிவின் நடுவில் சொல்லியிருக்கிறேன்.

அதற்கு முன் கொஞ்சம் வறுத்தல் அல்லது பொரித்தல், காரம், உப்பு, மசாலா
பொடிகள் சேர்க்கும் வேலைகள் உள்ளது. அது முதலில். அப்போதுதானே சுவாமி
பதிவு சுவையாக இருக்கும்?

இந்த ஜோதிடத் தொடரை ஆரம்பித்து 20 மாதங்கள் ஆகின்றன. இந்தக் காலக்
கட்டத்தில் எனக்கு வந்த, வந்துகொண்டிருக்கின்ற மின்னஞ்சல்களில் 25 சதவிகிதம்
தங்களுடைய திருமணத்தைப் பற்றிக் கேள்வி கேட்டு வந்தவைதான் அல்லது வருபவை.
ஆண் வாசகர்களிடம் இருந்தும் வந்துள்ளன! கணிசமான அளவு பெண் வாசகிகளிடம்
இருந்தும் வந்துள்ளன.

உதாரணத்திற்கு சென்றவாரம் ஒரு அன்பரிடம் இருந்து வந்ததைக் கொடுத்துள்ளேன்
பாருங்கள்:

"சார், நான் ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன். என் காதல் நிறைவேறுமா? என்னுடைய
ஜாதகப்படி அதற்கு வாய்ப்புண்டா? உங்களுக்கு நேரமில்லை என்று சொல்லாமல்,
எனக்காக - உங்கள் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் ஒரு ஜீவனுக்காக, தயவு
செய்து என் ஜாதகத்தைப் பரிசீலனை செய்து பதில் எழுத வேண்டுகிறேன்."

நான் உடனே பதில் எழுதிக் கேட்டேன்: "அந்தப் பெண்ணும் உங்களைக் காதலிக்கிறாரா?"

இதற்கு மின்னல் வேகத்தில் பதில் வந்தது." ஆமாம் ஐயா! அவளும் என்னைக் காதலிக்கிறாள்!"

இதற்கு என்ன எழுதுவது?

நான் எழுதிய பதிலைக் கீழே கொடுத்துள்ளேன்:

"அவளும் உங்களைக் காதலிக்கும்போது எதற்காக ஜாதகத்தைப் பார்க்கிறீர்கள்?
ஒரு பெண் தன்னுடைய இதயத்தை உங்களிடம் தந்து விட்டாள் அல்லது தன்னுடைய
இதயத்தில் உங்களுக்கு இடம் தந்து விட்டாள் என்னும் நிலை எவ்வளவு
உன்னதமானது? எவ்வளவு உயர்ந்தது? அதைவிட ஜாதகம் ஒன்றும் பெரிதல்ல.
அவளைத் திருமணம் செய்துகொள்ளுங்கள்.அதற்கான முயற்சியைச் செய்யுங்கள்"

விழிகள் படபடக்க, ஒரு இளம் பெண், ஒரு ஆடவனுடன் பேசுவதே பெரிய காரியம்.
அதற்கு அடுத்து அவனுடன் பழகுவது. அதற்கு அடுத்து நெருங்கிப் பழகுவது.
மனம் விட்டுப்பேசுவது. விரும்புவது. இப்படிப் பலநிலைகளைத்தாண்டித்தான்
காதல் உண்டாகும். முதல் நிலையிலேயே பல இளைஞர்களின் தாவு தீர்ந்து விடும்.
இதில் அந்தப் பெண்ணிடம், ஜாதகம் மற்றும் இதர புண்ணாக்குகளைக் கேட்டு வாங்கிப்
பார்த்துக் காதலிப்பது என்பது நடக்கிற காரியமா?

சரி வாங்கிப் பார்த்து, ஒத்து வராத ஜாதகம் என்றால் அல்லது உங்கள் ஜாதகப்படி
கட்டுப்பட்ட திருமணம்தான் என்றால் என்ன செய்வீர்கள்? காதலைப் பாதியில்
முறித்துக் கொண்டு விடுவீர்களா? நடக்குமா அது?

"எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு" என்றார் வள்ளுவர்.

ஆகவே காதலிக்கத் துவங்கிவிட்டால் மற்றதை எல்லாம் கடாசி விடுங்கள்!

"காதலி கடைக்கண் கட்டிவிட்டால், கள்வனுக்கு மாமலையும் ஓர் கடுகாம்'
என்பதுதான் காதலின் இலக்கணம்!

மாமலையே கடுகாகி விடும் போது ஜாதகம் எதற்கு?

இரு மனங்கள் இணைவது மட்டுமே காதல்!

அவளோடு ஒரு நாள் வாழ்ந்தாலும் வாழ்க்கைதான். அல்லது அவளுக்காக ஒரு தாஜ்
மகாலைக் கட்டும் அளவிற்கு வாழ்ந்தாலும் அது வாழ்க்கைதான்.

காதலில் கட்டுண்ட பிறகு எதற்கு அவநம்பிக்கை? ஏன் ஜாதகம் பார்க்க நினைக்கிறீர்கள்?

காதலில் அகப்பட்டுக் கொண்டால், ஜாதகத்தை மறந்து விடுங்கள்l!
ஜாதகத்தில் நம்பிக்கை இருக்கிறது என்றால், காதலில் ஈடு படாதீர்கள்!

தலை எழுத்துப்படிதான் - விதித்தபடிதான் எல்லாம் நடக்கும். ஒவ்வொருவருக்கும்
அவர்களின் தலை எழுத்துப்படிதான் திருமண வாழ்வு!

காதல் திருமணம் என்றால் காதல் திருமணம்தான். கட்டுப்பட்ட திருமணம் என்றால்
அதுதான் நடக்கும். வருவதை ஏற்றுக்கொள்ள வேண்டும்!.

யாரும் எதையும் மாற்ற முடியாது. அதை உணர வேண்டும்.

எதையும் மாற்ற முடியாது என்றால் எதற்காக ஜாதகம்? எதற்காக ஜோதிடம்?

தனிப்பட்ட ஒருவனுக்காக ஏற்பட்டதல்ல ஜோதிடக்கலை! உன்னைக் காதல் தேடி
வந்து விட்டதா? காதல் செய்! அவ்வளவுதான்!

மெல்லியலாள் சாய்ந்தாள் தாங்கிக் கொள்: மீறி நெஞ்சில் அடி விழுந்தால் வாங்கிக் கொள்!

துன்பம், பிரச்சினை என்பது, காதல் திருமணத்திலும் உண்டு! கட்டுப்பட்ட
திருமணத்திலும் உண்டு. ஏமாற்றம் இரண்டிலும் உண்டு.எது நல்லது? எது
கெட்டது? என்று விவாதம் செய்து, பிரித்து அலசவெல்லாம் முடியாது.

வம்பு, வாதம், பிரதிவாதம், சண்டை இவைகள் தான் மிஞ்சும். அவரவர்க்கு அவரவர்
செய்வதுதான் நியாயம். அந்த நியாயத்தில் உண்மையெல்லாம் ஓரங்கட்டப் பட்டுவிடும்.

அதனால் என் கருத்திற்கு இங்கே இடமில்லை. என் ஆசான் கவியரசர் கண்ணதாசன்
அவர்களின் கருத்துத்தான் என் கருத்து. அதை அடுத்து வரும் வரிகளில் கொடுத்திருக்கிறேன்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கவியரசர் கண்ணதாசன் அவர்கள் "காதலைக் காவியத்திற்கு விட்டு விடுங்கள்.
கல்யாணத்தைப் பெற்றோர்களிடம் விட்டுவிடுங்கள் என்றார்.

அவர் எழுதிய 4 வரிக் கவிதை:

"காதலை காவியத்திற்கு விட்டு விடுங்கள் - உங்கள்
கல்யாணத்தை பெற்றோரிடம் விட்டுவிடுங்கள்"
பெற்றவர்கள் பார்ப்பதானால் பெருமையென்னவோ - அவர்கள்
மற்றதையும் பார்ப்பதனால் நன்மையல்லவோ"

நூற்றுக் கணக்கான காதல் படங்களுக்குப் பாடல்களை எழுதிய அவருக்குத் தெரியாத
காதலா, நமக்குத் தெரிந்துவிடப் போகிறது?"

ஒரு ஆணிற்கு இரண்டு முகங்கள் உண்டு. காதலிக்கும்போது ஒரு முகம்தான்
பெண்ணின் கண்ணில்படும். இரண்டாவது முகம் திருமணத்திற்குப் பிறகுதான்
தெரியும். அதுபோல அவனுடைய குடும்பப் பின்னணியைப் பற்றிப் பெண்
நினைப்பது ஒன்றாக இருக்கும், திருமணத்திற்குப் பிறகு வேறொன்றாக
இருக்கும். இதே விதிமுறைகள் பெண்ணிற்கும் சேர்த்துத்தான்.

பெற்றோர்கள் அக்கு வேறாக ஆணி வேறாக எல்லாவற்றையும் தீர விசாரித்துவிட்டுத்
தங்கள் பெண்ணிற்கோ அல்லது பையனுக்கோ மணம் முடிப்பதால். காதல் திருமணங்
களைவிட கட்டுப்பட்ட திருமணங்கள் பாதுகாப்பானது. அதனால்தான் கவியரசர்
சொன்னார். பெற்றோர்கள் பார்ப்பதால் என்ன பெருமையோ; அவர்கள் மற்றதையும்
பார்ப்பதால் வரும் நன்மையே என்றார்

வீடாகட்டும், வேலையாகட்டும், திருமண வாழ்க்கையாகட்டும், பாதுகாப்பும், சுதந்திரத்
தன்மையும் முக்கியமில்லையா?
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எப்படிப்பட்ட திருமண வாழ்க்கை கிடைக்கும் என்பதை முன் பதிவில் எழுதியிருக்கிறேன்.
அதை மீண்டும் இங்கே எடுத்து எழுதினால், பதிவு, அனுமார் வால் போல நீண்டு விடும்.
ஆகவே எழுத வில்லை. விருப்பமுள்ளவர்கள் மீண்டும் ஒருமுறை படிக்கலாம் சுட்டியை
கொடுத்துள்ளேன். சுட்டி இங்கே உள்ளது!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சரி, இன்றையப் பாடத்திற்கு வருகிறேன்.

1.
காதலுக்கு மென்மையான உணர்வும், நல்ல உள்ளமும் வேண்டும்.
அதற்குரிய கிரகங்கள் சுக்கிரனும், சந்திரனும் ஆகும். இந்த இரண்டு
கிரகங்களும் வலுவாக இருந்தால் காதல் உண்டாகும். இந்த வலு என்னும்
வார்த்தைக்குப் பலமுறை விளக்கம் கொடுத்துள்ளேன்.
அது உங்களுக்குத் தெரிந்ததுதான்.
2.
சுக்கிரனும், சந்திரனும் சமபலத்தோடு இருப்பவர்களுக்குக் காதலில்
வெற்றி உண்டாகும்! சுக்கிரனும், சந்திரனும் கேந்திரத்தில் இருந்தாலோ
அல்லது திரிகோணத்தில் இருந்தாலோ காதல் அரும்பும்.
அது வெற்றியில் முடியும். இல்லை என்றால் இல்லை!
3.
ஜாதகத்தில் சுப யோகங்கள் இருந்தால், அது எந்த வழிக்கல்யாணம்
என்றாலும் தம்பதிகள் மனம் ஒத்து மகிழ்வோடு வாழ்வார்கள்.
4.
அதே சுக்கிரனும், சந்திரனும், சொந்த வீட்டில் இருந்தாலும் அல்லது
நட்பு வீட்டில் இருந்தாலும், குருவின் பார்வை பெற்றால் அல்லது சேர்க்கை
பெற்றால் பலமுடையவர்கள் ஆவார்கள். அவர்களின் இந்த நிலைப்பாட்டைக்
கொண்ட ஜாதகன் அல்லது ஜாதகியின் மண வாழ்வும் சிறக்கும்.
மகிழ்வுடையதாக இருக்கும்!
5.
ஏழாம் வீட்டின் அதிபதியும், லக்கின அதிபதியும் பலமாக இருந்தால்
திருமண வாழ்வு மகிழ்ச்சிக்கு உரியதாக இருக்கும்.
6.
குரு, சந்திரன்,சுக்கிரன் ஆகிய மூன்றும் சுபக்கிரகங்கள். அவைகள்
ஜாதகத்தில் கெட்டுப்போயிருக்கக்கூடாது. கெட்டுப் போவது என்பது
- ஆம்பல் பூத்துத் தின்பண்டங்கள் கெட்டுப்போகுமே அது போலக்
கெட்டுப் போவது என்று பொருள் இல்லை. அவைகள் ஜாதகத்தில்
நீசம் அடையாமல் இருக்க வேண்டும்
7.
அதே போல லக்கினாதிபதியும், ஏழாம் வீட்டு அதிபதியும் நீசம்
அடையாமல் இருக்க வேண்டும். அவர்கள் இருவரும் நீசம் அடைந்
திருந்தால் மண வாழ்க்கை சிறக்காது.
8.
அதுபோல அந்த மூன்று சுபக்கிரகங்கள் ப்ளஸ் லக்கின அதிபதி,
ப்ளஸ் ஏழாம் அதிபதி ஆகியவர்கள், மறைவிடங்களில் (Hidden Houses)
- அதாவது 6,8,12ஆம் வீடுகளில் போய் அமர்ந்திருக்கக்கூடாது.
9.
இரண்டாம் வீடு பலமுள்ளதாக இருக்க வேண்டும். அதாவது அஷ்டக
வர்கத்தில் 28 அல்லது மேற்பட்ட பரல்களைக் கொண்டிருக்க வேண்டும்.
திருமணத்திற்குப் பிறகு சேர்ந்து குடும்பம் நடத்த வேண்டாமா?
அதற்கு இந்த வீடு முக்கியம். திருமணத்திற்குப் பிறகு மனனவியை
இங்கே விட்டு விட்டு வேலையின் பொருட்டு துபாய் போன்ற தேசங்களில்
போய் உட்கார்ந்து கொள்வது எப்படி நல்ல குடும்ப வாழ்க்கையாகும்?
கைபிடித்த மனனவியைவிட பொருள் ஈட்டல் முக்கியமா?
10
செவ்வாய், ராகு, கேது, சனி போன்ற கிரகங்களின் தோஷம் அல்லது
சேர்க்கை அல்லது பார்வை இல்லாமல் இருக்க வேண்டும்.
11.
ராஜ யோகம் உள்ள பெண்ணின் ஜாதகத்தில், லக்கினத்தில் குருவும்,
ஏழில் சந்திரனும், பத்தில் சுக்கிரனும் இருக்கும். அவளை மணந்து
கொள்கிறவன் பாக்கியசாலி!.
12.
1,4,7,10ஆம் வீடுகளில் சுபக்கிரகங்கள் அமையப் பெற்ற பெண்
அதிர்ஷ்டம் உடையவளாகவும் நற்குணம் உடையவளாகவும் இருப்பாள்.
13.
7ல் புதனும், சுக்கிரனும் இருந்து, 11ல் சந்திரனும் இருந்து, குருவினுடைய
பார்வை பெறுவதும் ஒருவகையில் ராஜ யோகமே. அந்தப் பெண்ணை
மணந்து கொள்பவன் மகிழ்ச்சியில் திளைப்பான்.
14.
கன்னி லக்கினத்தில் பிறந்த பெண்ணின் ஜாதகத்தில் லக்கினத்தில்
புதன் இருந்து, 11ல் (கடகத்தில்) குரு இருந்தால் அவளுக்கு ராஜ யோகம்தான்.
15.
மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்,கும்பம் ஆகிய ஒன்று
பெண்ணின் லக்கினமாகி, அதில் சந்திரன் இருந்து, அவளுடைய நான்கு
கேந்திர வீடுகளிலும் பாவ கிரகங்கள் இல்லாமல் இருந்ததாலும் அவள்
யோகமான பெண்தான்.
16.
கும்ப லக்கினத்தில் பிறந்து, 4ஆம் வீட்டில் உச்ச சந்திரனும் இருந்து,
அந்தச் சந்திரன் குருவின் பார்வை பெற்றால், அந்தப் பெண் நாடாள்வோனின்
மனைவியாவாள். அதாவது அரசனின் மனைவியாவாள்.
இப்போது சொல்வதென்றால் நாடறிந்த பெரிய தலவரின் மனைவியாவாள்.
அந்த நிலைக்கு அவளை மணந்து கொண்டவன் உயர்வான்.
17.
எந்த யோகத்திற்கும் லக்கினாதிபதி பலமாக இருக்கவேண்டும்.
லக்கினதிபதி 6, 8 12ஆம் வீடுகளில் அமையப் பெற்ற ஜாதகர்கள்
யோகங்கள் எதையும் அவர்கள் அடைய முடியாது. அவர்களால்,
அவர்களைச் சுற்றியுள்ள மற்றவர்கள் பயன் அடைவார்கள்.
18.
திருமண யோகத்திற்கு, அதாவது மகிழ்ச்சியான திருமணத்திற்கு,
லக்கினாதிபதி, 2ஆம் வீட்டுக்காரன், 7ஆம் வீட்டுக்காரன் ஆகிய
மூவரும் பலமாக இருக்க வேண்டும்.
19.
பெண்களுக்குப் பாகியஸ்தானமும், ஆண்களுக்கு லக்கினமும்
சிறப்பாக இருப்பது முக்கியம்
20.
இங்கே கூறப்படும் விதிகள் அனைத்தும் ஆண்களுக்கும்,
பெண்களுக்கும் பொதுவானதுதான்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
திருமண யோகத்திற்கு எதிரான சில அமைப்புக்கள்:
1.
லக்கினாதிபதியும், இரண்டாம் வீட்டுக்குரியவனும் பலம் குறைந்து
இருப்பதும், பாபக் கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை பெற்று
இருப்பதும் கூடாது.
2.
ஏழாம் வீட்டிற்கு இரு பக்கத்திலும், அல்லது லக்கினத்திர்கு இருபக்கத்
திலும் தீயகிரகங்கள் அமர்ந்திருப்பது கூடாது.அதற்குத் தனிப் பெயர்
உண்டு. அது பாபகர்த்தாரி யோகம் எனப்படும்
3.
சுக்கிரன் நீசமடைந்து ஏழாம் வீட்டில் இருப்பதும், அல்லது தீய
கிரகங்களுடன் சேர்ந்து ஏழாம் வீட்டில் இருப்பதும் கூடாது.
4.
சுபக்கிரங்கள் மூன்றுமே, 3,6.8,12 ஆகிய மறைவிடங்களில் இருப்பது கூடாது.
5.
குரு பலவீனமாகி ஆறாம் வீட்டில் குடியிருப்பது கூடாது. உடன்
பாபக் கிரகங்கள் அந்த இடத்தில் அவருடன் சேர்ந்து இருப்பதும் கூடாது.
6.
சுபக்கிரகங்கள் மூன்றும் நீசம் பெற்றிருத்தல் கூடாது
7.
ஏழாம் வீட்டு அதிபதி அம்சத்தில் நீசம் பெற்றிருப்பதும் நல்லதல்ல!
8
ஏழாம் வீட்டு அதிபதி லக்கினத்திற்குப் பன்னிரெண்டில் அமர்வது நல்லதல்ல!
9.
எட்டாம் வீட்டுக்காரன் ஏழில் குடியிருப்பது நல்லதல்ல!
10.
ஏழில் சந்திரனுடன் சனி கூட்டணி போட்டு அமர்ந்திருப்பது நல்லதல்ல!
11.
ஜாதகத்தில் சுக்கிரனுக்கு எதிர் வீட்டில் செவ்வாயும், சந்திரனுக்கு எதிர் வீட்டில்
செவ்வாயும் இருப்பது நல்லதல்ல!
12
எழில் சந்திரன், புதன், குரு, சுக்கிரன் ஆகியோர்கள் நல்ல நிலைமையில்
அமர்ந்திருப்பது நல்லது. செவ்வாயும், சனியும் எந்த நிலையில்
அமர்ந்திருந்தாலும் நல்லதல்ல!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இங்கே நான் எழுதிவருவது அனைத்தும் பொது விதிகள். ஒருவருடைய
ஜாதகத்தில் உள்ள பலவிதமான அமைப்புக்களை வைத்துப் பலன்கள் மாறுபடும்.

ஆகவே இங்கே எழுதுவதைப் படித்து விட்டு மகிழவும் வேண்டாம்.
கவலைப் பட்டுக் கலங்குவதும் வேண்டாம்.
Just like that - ஜோதிடத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். அவ்வளவுதான்.

அன்புடன்'
வகுப்பறை வாத்தியார்
+++++++++++++++++++++++

நமது வகுப்புக் கண்மணி கனடா சங்கர் போன்றவர்களுக்காக கீழே உள்ளதைக்
கொடுத்துள்ளேன். மற்றவர்களும் படிக்கலாம். மொழி மாற்றம் செய்ய நேரமில்லை.
அதனால் அப்படியே ஆங்கிலத்தில் கொடுத்துள்ளேன். தனித் தமிழ் ஆர்வலர்கள்
பொறுத்தருளவும்!

Marriage the most important event in any body's life. It combines the heart
and soul of two people in to one. The two families come together to join hand
with each other. The processing in Indian tradition is performed with great
pomp and show. The event is blessed by nears, dears and relatives from both
the families. The couple is blessed with long and happy married life.

Though in Indian tradition it is widely believed that "marriages are made in
heaven". But it is only through human intervention that the two families are
introduced to each other. The boy and girl, and their families meet each other
to know about tradition, culture and principles so as to develop more under
standing. This understanding helps to create firm foundation in their relations,
so that they don't have any misunderstanding in the future. This helps them
to lead a successful, happy married life.

In spite of all this, the married life's are sometimes broken, due to various
reasons. Or the happy married life ends due to sudden demise of husband
or wife. Or there may not be any issue to the couple thus disturbing their
peace of life. And there are many other complexities that may arise in one's
married life.

Why ?

The answer to this question lies in our old age Astrological concepts based
on the planetary positions of various planets at the time of birth. There are
various factors that affect the compatibility between the two.
--------------
Holy relation of marriage, there is some important yoga in astrology, which
describes about spouse, age of marriage, relation with spouse. I have found
some major yoga, which strongly indicates more than two marriages in chart.
Since the Moon sign starts with Aries (Mesha). the natural seventh is Libra
(Tula). The main indicators of marriage are Venus, as far as men are concerned.

The seventh from Libra being Aries, the chief indicators of marriage for a
woman are Aries and Mars.

In a woman's chart, the Moon too must be taken into consideration since the
menstrual period is regulated by Moon and Mars; and in a man's nativity
Sun too must be examined carefully.

In a male’s chart, we have to consider Libra and the 7th from the ascendant,
Sun and Venus; and in a female’s we must note Aries and the seventh from
the ascendant, Moon and Mars. The eighth houses from these govern the
sex life; and therefore Scorpio for the men and Taurus for women have to be
added to the list. Then the extra marital life is determined by the twelfth
house from the ascendant; and in a man's chart, Pisces too need scrutiny
while in a woman's Virgo too deserves a study. This might terrify one since
all the houses and planets appear to get into the picture. But what is needed
is to find out the strongest among the ascendant, Sun and Venus in a man's
chart, and among the ascendant Moon and Mars in a woman's. The major
scrutiny should be from this point only. The others are needed as
corroborating or strengthening aids only.

An affliction to a planet or house arises from a conjunction with or an aspect
by a planet who is a malefic by nature or by ownership or by both. If a
conjunction with or an aspect by a benefic also operates, then we get mixed
character of the house or planet.

A strong, well-placed and unafflicted Venus gives a harmonious and balanced
marital life of man. A similar Mars governs the balanced sex life of a woman.
These are the two basic planets. Venus is to be examined with the Sun, and
Mars with the Moon. The position of Venus in a male chart is to be compared
with that of Mars in the wife's chart; and a similar comparison between
the Sun in the Husband's chart and the Moon in the wife's is necessary.
Whether they aspect one another, they are in square or trine to one another,
or they are inimical to one another must be carefully noted. The next step is
to see whether the Navamsa chart of the wife agrees with the Rasi chart of
the husband, and whether the Rasi chart of the wife agrees with the Navamsa
chart of the husband. These preliminary observations will be taken up for
a scrutiny and a later stage. Now we have to consider the possible effects
resulting from certain positions of the planets. In the following , he means
and includes she also.

The Venus in the seventh indicates a successful marriage; and in the eighth
a successful interest in the affairs where the strongest feelings are involved
and in matters of sex. The moon in the seventh makes one change his
attitude frequently towards those intimately related to him; and he hopes
the marriage partner to be motherly. The eighth house position stimulates these
interests. Mercury in the seventh can either advance or related reciprocity of
feelings and emotions; and in the eighth he affects the emotions roused by
others. Venus in the seventh is a very good indication of happy marriage
and of the ability to live with others in peace and happiness. If this Venus
is afflicted, there may be disappointment in this direction. In the eighth Venus
secures a balanced sex life if it is not afflicted. Mars in the seventh makes one
forceful in intimate relationships. If afflicted, it might bring about irritation
and quarrels. In the eighth it makes sex life very important for the native.
The seventh house Jupiter is very good for marriage life. In the eight it brings
prosperity through marriage. Saturn in the seventh brings about frustration
and disappointment in marriage, if it is afflicted. In the eighth, it makes one
serious in matters concerning sex.

There are some other important yoga in astrology, which never brings smooth
marital life i.e. combination of Rahu/Mars or Rahu/Sun or Sun/Mars in the
7th house. Same if 7th house lord goes in 6th house, 8th house or in 12th house.
This also shows marriages. Also mangal in the lagna, 4th house, 7th house,
8th house and 12th house delays the marriage. Malefic planets in the 7th house
also shows two marriages.

வாழ்க வளமுடன்!

11.9.08

சிட்டுக்குருவியின் முத்தமும் கிணற்றுத் தவளையின் சத்தமும்!

தொண்டி கடற்கரை அருகே ஒரு சின்ன கிராமம். அங்கே ஒரு கிணறு இருந்தது.
அதிக பராமரிப்பின்றி இருக்கும் தெருவோரக் கிணறு.

அதில் தவளை ஒன்று பிறந்ததில் இருந்து வசித்து வந்தது. மேலே ஏறி தப்பிச்
சென்று, வெளியுலகைக் காண முடியாத தவளை அது.

அது எட்டடி விட்டமுள்ள கிணறு. முப்பதடி ஆழம். மழைகாலத்தில் பத்தடி
உயரத்திற்கு தண்ணீர் இருக்கும் மற்ற காலங்களில் வற்றி மூன்று அல்லது நான்கடி
ஆழத்திற்கு மட்டுமே தண்ணீர் இருக்கும். கிணற்றின் உள் வட்டத்தில் ஆங்காங்கே
அரை அடி அகலத்திற்குப் புல் முளத்த திட்டுக்கள் இருக்கும். அங்கே கிடைக்கும்,
பூச்சி புழுக்களைச் சாப்பிட்டு விட்டு, தேமே என்று கிணற்றிலேயே வாழ்ந்து
கொண்டிருந்தது அந்தத் தவளை.

அது பெண் தவளை (இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்)

ஒரு நாள் கடற்கரைப் பகுதியில் இருந்து வழி தவறி வந்து விட்ட புதிய தவளை
ஒன்று, அந்தக் கிணற்றுக்குள் ஆர்வத்துடன் எட்டிப் பார்க்க, தவறிக் கிணற்றின்
உள்ளே விழுந்து விட்டது!.அது ஆண் தவளை!

அதுவும் உள்ளே மாட்டிக் கொண்டு விட்டது.

ஆனால் உள்ளே இருந்த பழைய தவளையைக் கண்டதும், பேச்சுத் துணைக்கு
ஒரு நண்பி கிடைத்துவிட்டாளே என்று இதுக்கு ஒரு மகிழ்ச்சி.

பழைய தவளை புதிய தவளையிடம் பேச்சுக் கொடுத்தது:

"எங்கே இருந்தே இதுவரைக்கும்?"

"பக்கத்துக் கிராமத்துல!அது கடல் ஓரம் இருக்கிற கிராமம்"

"கிராமம்னா?"

"அதெல்லாம் உனக்குச் சொன்னா விளங்காது!"

"நீ சொன்னா சரிதான். ஆனா, ஒன்னை மட்டும் நீ எனக்குச் சொல்லணும்.
தினமும் காலையிலேயும், மாலையிலேயும், கீச், கீச்சுன்னு பயங்கரமா
சத்தம் கேக்குதே. அது என்ன?"

"அதுவா, பக்கத்தில நிறைய ஆலமரங்கள் இருக்கு, அங்க இருக்கிற
குருவிங்கதான் அப்படி சவுண்ட் விடுதுங்க!"

"ஆமா, கிணத்துக்கு மேல தினமும் இங்கேயும் அங்கேயும் அதுக பறந்து
போறபோது பார்த்திருக்கேன். அதுங்க பேரை, நீ சொல்லித்தான் இப்ப
தெரிஞ்சுகிட்டேன்"

".................................."

"அதுங்க ஏன் சிலசமயம் அதிகமா சவுண்ட் விடுதுங்க?"

"அதுங்களுக்கு லவ்ஸ் வந்துட்டா, அப்படித்தான் சவுண்ட் விடும்.
அப்பாலிக்கா ஒன்னுக்கு ஒன்னு முத்தம் கொடுத்து, லவ்ஸ் மேட்டர்
முடிஞ்சுதுன்னா சத்தம் போடுறதை நிறுத்திடுங்க!"

"முத்தம்னா என்ன?"

குஷியான ஆண் தவளை, முத்தத்தின் இலக்கணத்தைச் செயல் முறையில்
சொல்லிக் கொடுத்தது.

பெண் தவளை மிகவும் மகிழ்ந்துபோய்க் கடைசியில் சொன்னது:

"நீ கில்லாடியான ஆளுதான்! பேசாம நீ இங்கே என்னோடயே தங்கிடு!"

"வேற வழி? அதைத்தான் செய்யனும் நான்"

"இன்னொரு சந்தேகம். வெளியே இது போன்ற நீர்நிலைகள் (கிணறுகள்) இருக்கின்றனவா?"

"அதெல்லாம், படா படா சைசில இருக்கு. பெரிய பெரிய பெரிய ஏரிகளெல்லாம்
இருக்கு. நான் ஓரளவு சுற்றிப் பார்த்திருக்கிறேன். ஏன் பக்கத்தில பெரிய கடல்
இருக்கு. அதைப் பார்த்தீன்னா நீ அசந்து போயிடுவே?"

"கடல்னா?"

"அதெல்லம் விளக்கிச் சொல்ல முடியாது.பார்த்தாக்கத்தான் புரியும்!"

"அங்கே தண்ணி நிறைய இருக்குமா?"

"ஆகா, பயங்கரமா இருக்கும், காலை வைச்சீன்னாக்கா - அவ்வளவுதான்
- உன்னை உள்ள இழுத்துப் போட்டு முழுங்கிடும்!"

"எவ்ளோவ் தண்ணி இருக்கும்? இவ்வளவு தண்ணி இருக்குமா?" என்று கேட்டு
தன் கைகள் இரண்டையும் முடிந்த மட்டும் நீட்டிக் காட்டியது.

பதிலுக்கு நம்ம ஆளு வெறுமனே சிரித்தது. வேறு என்ன செய்ய முடியும்?

உடனே கிணற்றுத்தவளைக்குக் கோபம் வந்து, ஆத்திரத்துடன் கிணற்றின்
ஒரு பக்கக் கரையில் இருந்து தாவி மறுகரையில் குதித்துவிட்டு, மீண்டும்
அங்கிருந்து தம் பிடித்துத் தாவி இந்தக் காரைக்கு வந்து, கேட்டது.

"இப்போ நான் தாவிய தூரத்திற்குத் தண்ணீர் இருக்குமா?"

அதாவது இதைப்போல இரண்டு மடங்கு தண்ணீர் இருக்குமா என்று கேட்டது.

அதற்கு நம்ம ஆளு புன்னகைத்துவிட்டுச் சொன்னது." இதைப் போல பல கோடி
மடங்கு தண்ணீர் இருக்கும்"

உடனே அது கேட்டது." கோடீன்னா என்ன?"

"உனக்கு அதை வேறு விளக்க வேண்டுமா? தாவு தீர்ந்து விடும். நீ பேசாமல்
உன் அறிவு ஞானம் ஆகியவற்றை இந்தக் கிணற்றோடு நிறுத்திக் கொள்.
என்னால் அவ்வளவுதான் சொல்ல முடியும்"

(முற்றும்)
-------------------------------------------------------------------------------------
"யோவ் வாத்தியார், எதற்காக இந்தக் கதை?"

"புரிந்தவர்களுக்குப் புரியட்டும். புரியாதவர்களுக்குப் புரியாமலேயே போகட்டும்.
எல்லாம் ஈசன் படைப்பு. எதற்கு என்று என்னால் பிரித்துச் சொல்ல முடியாது.
எதற்கு வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளுங்கள்!"

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்
வாழ்க வளமுடன்!

8.9.08

பாடம் எண் 110. கால சர்ப்ப தோஷம் cum யோகம்!

"காலம் எங்கே வந்தது? அதில் சர்ப்பம் எங்கே வந்தது?" போன்ற உபரிக்
கேள்விகள் கேட்பவர்கள் எல்லாம் பதிவை விட்டு விலகவும்.

ஆயிரத்தெட்டு உபரிக் கேள்விகள் மனதில் வந்தாலும், அதை எல்லாம்
கடாசி விட்டுப் படித்ததனால் ஜோதிடம் எனக்கு ஓரளவிற்குப் பிடிபட்டது.

கண்ணும், கையும் தவிர வேறு உபகரணங்கள் இல்லாத காலத்தில் நமது
முனிவர்கள் தங்களது ஞானதிருஷ்டியால் கணித்து எழுதியதுதான் கடல்
போன்ற வானவியல் கலையும், ஜோதிடக்கலையும் ஆகும்.

ராகு & கேது ஆகிய கிரகங்களை அவர்கள் கொடிய சர்ப்பத்திற்கு நிகராக
ஒப்பிட்டு எழுதியும், அந்த இரு கிரகங்களுக்கு நடுவில் மற்ற ஏழு கோள்
களும் வானத்தில் இருக்கும் நிலையைச் சர்ப்பகாலம் என்றும், அந்தக்
காலகட்டத்தில் பிறக்கும் குழந்தைகளை காலசர்ப்பத்தில் பிறந்த சிசுக்கள்
அல்லது ஜாதகர்கள் என்றும் எழுதி வைத்துள்ளார்கள்

ஒரு ஜாதகத்தில் ராகு & கேது இருக்கும் இடங்களுக்குள் உள்ள ஏழு
ராசிகளுக்குள் மற்ற ஏழு கிரகங்களும் இருந்து மீதி ஐந்து ராசிகள் காலியாக
இருக்கும் நிலைதான் கால சர்ப்ப தோஷம் ஆகும்!

Kala Sarpa Dosha cum Yoga is formed when all the planets are hemmed
between Rahu & Ketu.( that is sandwiched between Rahu and Ketu)

இதில் லக்கினம் உள்ளே இருந்தாலும் அல்லது அந்த ஏழு கட்டங்களைத்
தாண்டி வெளியே இருந்தாலும் அது அந்த தோஷத்தில் அடக்கம்!

ராகுவில் ஆரம்பித்துக் கேதுவில் முடியும் நிலைக்கு சவ்ய காலசர்ப்ப தோஷம்
என்றும், கேதுவில் ஆரம்பித்து ராகுவில் முடியும் நிலைக்கு அபசவ்ய
காலசர்ப்ப தோஷம் என்றும் பெயர்கள் உண்டு. பலன்களும் மாறுபடும்.

சாயா கிரகங்களான ராகுவைத் தலைப் பகுதியாகவும், கேதுவை வால்
பகுதியாகவும் ஜோதிடம் சிறப்பித்துக் கூறுகிறது.

அந்த அமைப்புள்ள ஜாதகர்களின் வாழ்க்கையின் ஒரு பகுதி - அந்த
தோசத்திற்கு உரிய பலன்களை அவர்கள் அனுபவிக்கும் காலம் துன்பமான
தாகும். சோகமானதாகும்.

அனுபவித்தவர்களுக்கு, அல்லது அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு
மட்டுமே அது தெரியும்.

லக்கினத்தில் துவங்கி முதல் ஏழு வீடுகளுக்குள் இந்த தோஷம் உள்ளவர்
களுக்கு அவர்கள் வாழ்க்கையின் முதல் பகுதியும், ஏழாம் வீட்டில் துவங்கி
லக்கினத்தில் முடிபர்வகளுக்கு அவர்கள் வாழ்க்கையின் இரண்டாவது
பகுதியும் மோசமானதாக இருக்கும். இந்த மோசமான என்ற சொல்லுக்குள்
எல்லாவிதத் துன்பங்களும் அடக்கம்!

இந்த தோஷம் உள்ளவனின் ஜாதகத்தில், வேறு நல்ல யோகங்கள் எதுவும்
இல்லை என்றால், அவன் வேலையின்றித்திரிவான், திருமணவாழ்க்கை
இருக்காது.பல தீய பழக்கங்களுக்கு ஆளாகி, பலராலும் ஒதுக்கப்படும்
நிலையில் வாழ்வான்.

ஆகவே இந்த தோஷம் உள்ளவர்கள், பயந்துவிடாமல், ஜாதகத்தில் வேறு
என்னென்ன யோகம் இருக்கிறது என்று பார்த்து ஆறுதல் கொள்ளவும்.

இறைவன் கருணை மிக்கவன். தன் மீது நம்பிக்கையும், பற்றும் கொண்ட
வனை அவர் ஒரு போதும் கை விடுவதில்லை!

He will give you withstanding power in any miserable situation!

அதை மனதில் கொள்க!

உண்மைத்தமிழர் போன்று இறையன்பர்கள் - இறைவன் மேல் அதீதப் பற்று
உள்ளவர்கள் - ஜாதகத்தைப் பார்க்கத் தேவையில்லை! கடாசி விடலாம்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சரி, இந்தத் தோஷம் எத்தனை ஆண்டுகளுக்கு?

இதில் இரண்டுவிதக் கருத்துக்கள் உண்டு. 33 ஆண்டுகள் வரை இந்தத்
தோஷம் உண்டு என்பார்கள். சிலர் அஷ்டகவர்க்கத்தில் லக்கினத்தில்
எத்தனை பரல்கள் இருக்கிறதோ அத்தனை ஆண்டுகள்வரை உண்டு
என்பார்கள். உதாரணத்திற்கு ஒருவர் ஜாதகத்தில் லக்கினத்தில் 28 பரல்
கள் என்றால், அவருக்கு 28 ஆண்டுகள் வரை இந்தத் தோஷம். உண்டு
பிறகு தோஷம் விலகியவுடன் அதுவே யோகமாக மாறி ஜாதகரை உயர்
விற்குக் கொண்டு போகும்.

இந்தியாவின் ஜாதகத்தில் லக்கினத்தில் 44 பரல்கள். நாம் சுதந்திரம்
அடைந்த 1947ஆம் ஆண்டு கூட்டல் அந்த 44 = 1991ஆம் ஆண்டுவரை
நம் நாட்டை தோஷம் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தது. அதற்குப் பிறகு
தான் நாம் அசுர வேகத்தில் பல துறைகளிலும் முன்னேறிக் கொண்டிருக்
கின்றோம்.

எனது அனுபவத்தில் இந்த அஷ்டகவர்க்கக் கணக்கு பலருக்கும் சரியாக
இருந்திருக்கிறது. நீங்களும் அதையே பின்பற்றலாம்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பொதுப் பலன்கள்
1
இந்த தோஷம் லக்கினத்திலிருந்து (அதாவது லக்கினத்தில் ராகு அல்லது
கேது அமர்ந்திருக்க அடுத்துள்ள ஆறு கட்டங்களுக்குள் மற்ற அத்தனை
கிரகங்களும் இருக்கின்ற அமைப்பு) துவங்கினால், குடும்பத்தில் பல
சிக்கல்கள் இருக்கும்.ஏற்படும். தீராத பிணிகள் (chronic health problems)
ஏற்படும்!
2
இந்த தோஷம் இரண்டாம் வீட்டிலிருந்து (அதாவது லக்கினத்திற்கு அடுத்துள்ள
இரண்டாம் வீட்டில் ராகு அல்லது கேது அமர்ந்திருக்க அடுத்துள்ள ஆறு
கட்டங்களுக்குள் மற்ற அத்தனை கிரகங்களும் இருக்கின்ற அமைப்பு)
துவங்கினால், குடும்பத்தில் பல சிக்கல்கள் இருக்கும்.ஏற்படும். அதோடு பணப்
பிரச்சினைகள் ஏற்படும்!
3
இந்த தோஷம் மூன்றாம் வீட்டிலிருந்து துவங்கினால், உடன்பிறப்புக்களுடன்
சிக்கல்கள் இருக்கும்.விரோத மனப்பான்மை ஏற்படுத்தும்.
4
இந்த தோஷம் நான்காம் வீட்டிலிருந்து துவங்கினால், தாயாருடன் கருத்து
வேற்றுமையை உண்டாக்கும். தாயாரின் அன்பு கிடைக்காமல் போய்விடும்.
வீடு, வாகனங்களை வைத்துப் பலவிதமான பிரச்சினைகள் உண்டாகும்.
5
இந்த தோஷம் ஐந்தாம் வீட்டிலிருந்து துவங்கினால், பெற்ற குழந்தைகளை
வைத்துப் பிரச்சினைகள் ஏற்படும்.
6.
இந்த தோஷம் ஆறாம் வீட்டிலிருந்து துவங்கினால், நோய்கள், கடன்கள்
விரோதிகள் என்று பிரச்சினைகள் வந்து குடி கொண்டுவிடும்
7.
இந்த தோஷம் ஏழாம் வீட்டிலிருந்து துவங்கினால், செய்யும் தொழிலில்,
வியாபாரத்தில் பிரச்சினைகள் உண்டாகும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி
இருக்காது. பதிலுக்குப் பிரச்சினைகள் மட்டும் இருக்கும்.
8.
இந்த தோஷம் எட்டாம் வீட்டிலிருந்து துவங்கினால், மனைவியுடன்
சரளமான வாழ்க்கை இருக்காது. சிக்கல்கள் இருக்கும்.அடிக்கடி
விபத்துக்கள் ஏற்பட்டுப் பல பிரச்சினைகள் உண்டாகும்.
9
இந்த தோஷம் ஒன்பதாம் வீட்டிலிருந்து துவங்கினால், தந்தையுடன்
பிரச்சினைகள் ஏற்படும். மிகவும் துரதிர்ஷ்டமான பலன்கள் ஏற்படும்
(இது பாக்கிய ஸ்தானமல்லவா? அதனால் துரதிர்ஷ்டம் ஏற்பட்டால்
என்ன பாக்கியம் கிடைக்கும்? சொல்லுங்கள்)
10.
இந்த தோஷம் பத்தாம் வீட்டில் துவங்கினால், செய்யும் தொழிலில்,
வியாபாரத்தில் அல்லது வேலையில் நிலையான போக்கு இருக்காது.
அவஸ்தையாக இருக்கும்.நிம்மதி இருக்காது.
11.
இந்த தோஷம் பதினொன்றில் துவங்கினால், நிதி நிர்வாகம், முதலீடுகள்
பங்கு வணிகம் என்று எந்த நிதி நிலைப்பாட்டிலும் நாம் நினைத்தது
நடக்காது. மாறாக நடந்து நம்மைப் புரட்டிப்போடும்.
12
இந்த தோஷம் பன்னிரெண்டாம் வீட்டில் இருந்து துவங்கினால், திகைக்க
வைக்கும் செலவுகள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கும். பணத்
தட்டுப்பாடு உண்டாகும். மொத்தத்தில் செலவும், விரையங்களும் சேர்ந்து
மனிதனை (ஜாதகனை) ஒரு வழி பண்ணிவிடும்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மேலும் சில விவரங்கள்:
1
கால சர்ப்ப தோஷ ஜாதகனுக்கு, அவனுடைய ஜாதகத்தில் இரண்டு
அல்லது மூன்று கிரகங்கள் உச்சம் பெற்று இருந்தாலும், அந்த தோஷம்
முடியும் காலம்வரை அந்த உச்ச கிரகங்களின் பலனை அவன் அடைய
முடியாது.
2
லக்கினத்தில் ராகு இருக்க, வேறு நல்ல கிரகங்களின் பார்வையின்றி
லக்கினத்திலிருந்து (அதாவது அடுத்துள்ள ஆறு கட்டங்களுக்குள் மற்ற
அத்தனை கிரகங்களும் இருக்கின்ற அமைப்பு) கால சர்ப்ப தோஷம்
துவங்கினால், ஜாதகருக்குத் திருமண வாழ்வில் கடுமையான ஏமாற்றங்களும்,
சோதனைகளும் உண்டாகும்.
3
நான்காம் வீடு அசுபர் வீடாக இருந்து, அங்கிருந்து இந்த தோஷம்
துவங்கினால், ஜாதகருக்குக் கல்வியில் தடை ஏற்படும். அதுவே சுபர்
வீடாக இருந்தால் உயர் கல்வி கிடைக்கும்.
4
ஐந்தாம் வீட்டை வைத்து இந்த தோஷம் துவங்கினால், ஜாதகருக்கு
புத்திர தோஷம் ஏற்படும். குழந்தைகள் பிறப்பது தாமதப்படும். அல்லது
வேறு தீய அமைப்புக்களை வைத்துக் குழந்தைகள் இல்லாது போய்விடும்.
5
ஆறாம் வீட்டை வைத்து இந்த தோஷம் துவங்கினால், அங்கே ராகு இருந்து
நல்ல கிரகங்கலின் பார்வை இல்லையென்றால், சிறைவாசம், உடல்நிலை
பாதிப்பு போன்றவைகள் உண்டாகும்.

6.
ராகு அல்லது கேது தாங்கள் இருக்கும் வீட்டில் அமரும் கிரகத்துடன்
கூட்டணி போட்டுப் பலன்களைக் கொடுப்பார்கள். அதனால் அவர்களுடன்
சேரும் கிரகம் தீயதாக இருந்தால் தீயபலன்கள் இரட்டிப்பாகும்.
நல்ல கிரகமாக இருந்தால் - உதாரணத்திரற்குக் குருவாக இருந்தால்
ராகுவும் அவருடன் சேர்ந்து நல்ல பலன்களை வழங்க ஆரம்பித்து
விடுவார். அதற்கு ஒரு ஸ்டைலான பெயரும் உண்டு. அதாவது ராகுவும்
குருவும் சேர்ந்தால் அதற்குச் "சண்டாளயோகம்" என்று பெயர்!
7.
ராகு-சனி' அல்லது ராகு - செவ்வாய்' அல்லது ராகு - சூரியன் என்று
இரண்டு கிரகக் கூட்டணி ஏழாம் வீட்டில் இருந்தால் கடுமையான
களத்திர தோஷம். எத்தனை தாரம் என்றாலும் ஒன்று கூட நிலைப்பதில்லை!
8.
கால சார்ப்ப தோஷம் cum யோகம், ஒரு ஏழையைக் கோடீஸ்வரனாகவும்
செய்யும், அதெ போல பெரிய கோடீஸ்வரனை ஒன்றும் இல்லாதவனாக
தெருவில் கொண்டு வந்து நிறுத்தவும் செய்யும். அது அவரவர்கள் ஜாதகப்
பலன். அல்லது எப்பொதும் நான் சொல்வதைப்பொல வாங்கி வந்த வரம்!:-)))

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அந்த ராகு கேதுவின் ஏழு கட்ட பிடிப்பிற்குள் லக்கினம் மாட்டாமல்
வெளியே இருந்தாலும் அல்லது லக்கினம் மாட்டிக் கொண்டு சந்திர
ராசி (சந்திரன்) மாட்டாமல் வெளியே இருந்தாலும் தோஷம் உண்டு.
ஆனால் 80% சதவிகிதப் பலன்கள் மட்டுமே இருக்கும். அதாவது
ஏற்படும் துன்பங்களில் 20% கன்செஷன் உண்டு:-))))

சிலர் கால சர்ப்ப தோஷம் இல்லாவிட்டாலும், இருப்பதைப் போன்ற
அளவிற்குத் துன்பப்படுவார்கள். அதற்குக் காரணம், அந்த ஏழுகட்ட
அமைப்பு இல்லாவிடினும், அவர்களுடைய ஜாதகத்தில் முக்கியமான
கிரகங்கள் எல்லாம், ராகு அல்லது கேதுவின் நட்சத்திர சாரத்தில்
(திருவாதிரை, சுவாதி, சதயம் - அஸ்வினி, மகம், மூலம் )இருக்கும்.
அதை ஆராய்ந்து பார்த்தால் உண்மை புலப்படும்.

கால சர்ப்ப தோஷம் உள்ள சிலருக்கு, அந்த தோஷ காலம் முடிந்த
பிறகே திருமணம் நடைபெறும்.

அதுபோல கால சர்ப்ப தோஷத்துடன் பிறக்கும் குழந்தைகள் உள்ள
பெற்றோர்களும், கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும்.

பெரிய தலைவர்கள், தொழிலதிபர்கள், கோடீஸ்வரர்கள் என்று
இந்த தோஷத்தில் பிடிபட்ட பலரும் சிறுவயதில் பல தொல்லைகளுக்கு
ஆளாகியிருக்கிறார்கள். அந்த தோஷம் நிவர்த்தியான பிறகு
உன்னத நிலையை அடைந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே
தங்கள் சொந்த முயற்சியால்தான் அந்த நிலையை எட்டியிருப்பார்கள்.

இந்த தோஷத்தில் மாட்டிக் கொண்டு அவஸ்தைப் பட்டு மீண்டு,
பிறகு ஒரு உன்னத நிலையை எட்டி, பிறகு சிறிது காலத்திற்குப்
பிறகு, படு பாதாளத்தில் விழுந்து விடும் நிலையும் சிலருக்கு
ஏற்படுவது உண்டு. அது அவர்களின் தனிப்பட்ட ஜாதகத்தில்
உள்ள வில்லங்கமான கிரக அமைப்புக்களால் ஏற்படுவதாகும்.

கால சர்ப்ப தோஷம் உள்ளவர்களுக்கு, ராகு அல்லது கேதுவின்
திசைகள் வந்தால், நற்பலன்கள் உண்டாகும். அதே நேரத்தில் அந்த
திசை முடியும் போது போர்டிங் பாஸ் கொடுத்து அவர்கள் ஜாதகனை
மேலே அனுப்பியும் வைத்து விடுவார்கள்.

ஆனால் அவ்வாறு வரும் திசைகளில் துன்பமான பலன்களையே
ஒருவர் அனுபவித்தால், அவரை அவர்கள் உயிரோடு விட்டு விட்டு
அடுத்து வரும் திசைகளில் நற்பலன்களை அனுபவி என்று சொல்லிக்
கைகுலுக்கி விட்டுப் போய்விடுவார்கள்.

கால சர்ப்ப தோஷம் உள்ள ஆண், அதேபோல கால சர்ப்ப தோஷம்
உள்ள பெண்ணை மணம் செய்து கொள்வது நல்லது.பல பிரச்சினைகளை
இருவரும் தவிர்க்கலாம்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பரிகாரங்கள்:

ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை, சுவாதி, சதயம், போன்ற
நட்சத்திரங்கள், வரும் நாட்களில் அல்லது உங்களின் ஜென்ம நட்சத்திரம்
வரும் நாட்களில், கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருநாகஷ்வரம்
என்னும் ராகு பகவான் குடிகொண்டிருக்கும் திருக்கோவிலுக்குச் சென்று
ராகு பகவானுக்குப் பால் அபிஷேகம் செய்து வணங்கி வழிபட்டு வருவது
முதல் பரிகாரம் ஆகும். அதனால் தடைகள் அகலும். துன்பங்கள்
குறையும்.

கேதுவை வழிபடக் காஞ்சிபுரத்தில் உள்ள சித்திரகுப்தசுவாமி திருக்கோவி
லுக்குச் சென்று வழிபட வேண்டும். அன்று அவருடைய (கேதுவினுடைய)
நட்சத்திரங்களான அஸ்வினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்கள் வரும்
நாட்களில் ஒன்றாக இருந்தால் நல்லது.

திருப்பதியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் காளஹஸ்தி
என்கின்ற திருத்தலமும், இதற்கு உகந்ததாகும். அதுபோல ராமேஸ்வரமும்
தோஷ பரிகாரத்திற்கு மிகவும் உகந்த ஸ்தலமாகும்.

சும்மா பெயருக்காக (நாம் கே வாஸ்தே என்று) சென்று வழிபடுவதைவிட
வழிபட்டால தோஷம் குறையும் என்ற முழு நம்பிக்கையோடு சென்று
வழிபடுவது அதி முக்கியம். அதையும் மனதில் கொள்க!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உதாரணத்திற்கு கால சர்ப்ப தோஷ ஜாதகம் ஒன்றைக் கொடுத்திருக்கிறேன்:

இசையில் ஞானி அவர். அவருடைய ஜாதகம்தான் இது. 1943 ல் பிறந்த
அவர். 1976ஆம் ஆண்டு வரை சுமார் 33 ஆண்டுகள் எவ்வளவு சிரமப்
பட்டார் என்பதும், அதற்குப் பிறகு அந்த தோஷமே அவருக்கு யோகமாக
மாற, தமிழகத்தையே ஒரு கலக்குக் கலக்கி, லட்சக்கணக்கான அபிமானி
களைப் பெற்று ஒரு உன்னத நிலையை அடைந்தார் என்பதையும்
தமிழ்கூறும் நல்லுலகம் என்றும் தன் நினைவில் வைத்திருக்கும்படியான
அற்புதமான மனிதர் அவர்!



+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கால சர்ப்ப தோஷத்துடன் பிறந்த சில பிரபலங்கள்:

மகாத்மா காந்தி - 2.10.1869
பண்டிட் ஜவஹர்லால் நேரு - 14.11.1889
நெப்போலியன் - 15.8.1769
ஹிட்லர் - 20.4.1889
முசோலினி - 29.7.1883
ராஜிவ் காந்தி - 20.8.1944
ஹர்ஷத் மேத்தா - 29.7.1954
-----------------------------------------------------------------
இங்கே நான் எழுதிவருவது அனைத்தும் பொது விதிகள். ஒருவருடைய
ஜாதகத்தில் உள்ள லக்கினாதிபதி (அவர்தான் சாமி முக்கியம்) மற்றும்
கிரகங்கள் சுயவர்க்கத்தில் பெற்றுள்ள பரல்கள், வீடுகளுக்குக் கிடைத்துள்ள
பரல்கள் ஆகியவற்றை வைத்துப் பலன்கள் மாறுபடும்.

ஆகவே இங்கே எழுதுவதைப் படித்து விட்டு மகிழவும் வேண்டாம்.
கவலைப் பட்டுக் கலங்குவதும் வேண்டாம்.
Just like that - ஜோதிடத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். அவ்வளவுதான்.

நன்றி, வணக்கத்துடன்,
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!