மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.7.08

இந்த மாதத்தின் சிறந்த ஊழியர் என்று எப்படிப் பெயர் எடுத்தார் இவர்?

இந்த மாதத்தின் சிறந்த ஊழியர் என்று எப்படிப் பெயர் எடுத்தார் இவர்?
V

V

V

V

V

V

V

V

V

V

V

இப்படிதான்!
என்னே பக்தி வேலையின் மீது? என்னே விசுவாசம் தன் அலுவலகத்தின் மீது!
============================================================================
வாழ்க வளமுடன்!

28.7.08

என்ன (டா) ஆச்சு பெருமாளுக்கு?

பெருமாளுக்கு என்ன ஆச்சா? கீழே உள்ளது; படித்துப் பாருங்கள்!

செட்டியார் ஒருவர் தீவிர சிவபக்தர். தசாவதாரம் படத்தில் வரும் நெப்போலியனைப்
போல (குலோத்துங்க மன்னனைப் போல) என்று வைத்துக்கொள்ளுங்களேன்.

பெரும் செல்வந்தர். தன் வேலைகளுக்கு வீட்டோடு ஒரு தனிப்பட்ட உதவியாளரை
வைத்துக் கொள்ள விரும்பினார்.

நண்பர்களின் பரிந்துரைகளின் பேரில் பலரையும் நேர்கானல் செய்தார்.

கடைசியில் பொள்ளாச்சி சூலக்கல் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவனைப்
பிடித்ததிருந்தது.

தாமிரபரணி விஷாலைப் போன்ற அவனுடைய தோற்றம் அவருக்குப் பிடித்து விட்டது.
படிப்பு வணிகம் இளங்கலை. அடிப்படைக் கணினி தெரியும். கையெழுத்து சூப்பராக
இருந்தது. கனரக வாகனம் ஓட்டுவதற்குக்கூட லைசென்ஸ் வைத்திருந்தான்.

பரிசோதனையாக தன்னுடைய மேஜை மீதிருந்த கடிதங்களையெல்லாம் ஒழுங்கு
படுத்து என்றார். தேதி வாரியாக அனைத்தையும் பிரித்துத் தனித்தனி ஃபோல்டரில்
வைத்ததோடு மேஜையில் இருந்த இன்னபிற சாமான்களையும் பிரித்து ஒழுங்கு
படுத்திச் சுத்தமாக்கினான்

தங்கும் இடம், உணவு இலவசம், சம்பளம் மாதம் ரூபாய் பத்தாயிரம் என்றார்.

மகிழ்ச்சியோடு சரி என்றான்.

கடைசியாகக் கேட்டார்,"உன் முழுப்பெயர் என்ன?"

அவன் சொன்னான்;

"ஆளவந்த பெருமாள்"

செட்டியாருக்குத் 'திக்' கென்றது!

அவனை வீட்டோடு வைத்துக் கொண்டு நாளொன்றுக்குப் பத்து அல்லது இருபது
முறைகள் ஆளவந்தான் என்றும் கூப்பிட முடியாது; பெருமாள் என்றும் (தீவிர சிவ
பக்தியால்) கூப்பிட முடியாது.

"எல்லாம் சரி. பெயரை மட்டும் நீ மாற்றிக் கொள்ள வேண்டும்"

"நானாக மாற்ற முடியாது ஐயா! ஊருக்குச் சென்று என் பெற்றோர்களிடம் சொல்லி
மாற்ற வேண்டும். அதுவும் எங்கள் குலதெய்வக் கோவிலுக்குப் போய்தான் மாற்ற
முடியும்"

செட்டியார் விடவில்லை!

இரண்டு ஆயிரம் ரூபாய்த் தாள்களை எடுத்து நீட்டினார்,"பரவாயில்லை: மாற்றிக்
கொண்டு வா. இதைச் செலவிற்கு வைத்துக் கொள்"

உடனே புறப்பட்டுப் போனவன் இரண்டு நாட்களில் திரும்பி வந்தான்

செட்டியார் ஆர்வத்துடன் கேட்டார்:

"போன காரியம் என்ன ஆயிற்று?"

"பெயரை மாற்றிக் கொண்டு வந்து விட்டேன் ஐயா!"

"என்ன பெயர்?"

அவன் மெல்லிய குரலில் சொன்னான்:

"பெத்த பெருமாள்!"

இதுதான் பெருமாள் பெத்தபெருமாள் ஆன கதை!

எங்கள் ஊர்ப் பகுதிகளில் சொல்வார்கள்

அதாவது ஒரு செயல் இரட்டிப்பாவதற்கு இதைத்தான் உதாரணமாகச் சொல்வார்கள்
-----------------------------------------------------------------------------------------
"அதுசரி, என்ன (டா) ஆச்சு பெருமாளுக்கு? வேலை கிடைத்ததா இல்லையா?"

"கிடைத்து!"

"எப்படி?"

"செட்டியார், உன்னை நான் சிவ பெருமாள் என்று அழைப்பேன்' என்று சொல்லி
வேலைக்குச் சேர்த்துக் கொண்டார். நீங்கள் எப்படி வேண்டு மென்றாலும்
அழையுங்கள் வேலை கொடுத்தால் போதும் என்று சொல்லிவிட்டான்"

"இதை செட்டியார் முதலிலேயே செய்திருக்கலாமே! ஏன் செய்யவில்லை?"

"அதுதான் விதி! சும்மா சுமக்க வேண்டிய துணி மூட்டையைச் சிலர் நனைத்துச்
சுமப்பார்கள்"

"இன்றைய ஜோதிடப் பாடத்திற்கும் இந்தக் கதைக்கும் சம்பந்தம் இருக்கிறதா?"

"அதையும் நானே சொல்ல வேண்டுமா? படித்துப் பாருங்கள் தெரியும்!
-----------------------------------------------------------------------------------------------------------------


முன் பதிவின் தொடர்ச்சி இது. அந்தப் பதிவைப் படித்திராதவர்கள் படித்து விட்டு
இங்கே வரவேண்டுகிறேன்!


ஆறாம் வீட்டிற்குச் சில வினோதமான செயல்பாடுகள் உண்டு! தீயவன் அங்கே
நன்மைகள் செய்வான். நல்லவன் அங்கே தீயவனாக மாறிவிடுவான். தீயவர்கள்
என்பது சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களைக் குறிக்கும்.

ஆறாம் வீடு தீமைகள் நிறைந்த வீடு. அதை மறைவிடம் என்போம். தீமைகளை
மறைந்து செய்வதால் அந்தப் பெயர் வந்தது போலும்!

Sixth house is called as eveil house!

அந்த வீட்டில் ஒரு தீய கிரகம் அமர்ந்தாலும் சரி அல்லது அந்தவீட்டை ஒரு தீய
கிரகம் பார்த்தாலும் சரி (by aspect), ஜாதகனுக்குத் தீமைகள் குறையும். எதிரிகளும்
குறைவாகவே இருப்பார்கள். அப்படி இருக்கும் இரண்டொருவரும் அவனுக்குப்
பயப்படுவார்கள்.

அதே நேரத்தில் நல்ல கிரகம் அமர்ந்தாலும் சரி அல்லது அந்தவீட்டை ஒரு நல்ல
கிரகம் பார்த்தாலும் சரி (by aspect), ஜாதகனுக்குத் தீமைகள் அதிகரிக்கும்.
எதிரிகளும் எதிர்ப்புகளும் அதிகமாகவே இருக்கும்.

ஆறாம் வீட்டு அதிபனுடன் சனி அல்லது ராகு கூட்டாக இருந்தால் (by association)
ஜாதகனுக்கு எப்போதுமே தொல்லைகள்தான். தொல்லைகள் க்யூவில் நின்று
அவனைப் படுத்தி எடுக்கும். நிம்மதியே இல்லாத வாழ்க்கை வாழ நேரிடும்!
----------------------------------------------------------------------------------------------------
ஆறாம் வீட்டில் சென்று அமரும் கிரகங்களுக்கான பலன்கள்!

1
சூரியன்.
ஜாதகன் சிறந்த அரசியல்வாதியாக இருப்பான். வெற்றியாளனாக இருப்பான். எதையும்
சாதிக்கும் வல்லமை பெற்றிருப்பான். ஆனால் அடிக்கடி உடல்நலக் குறைவுகள்
ஏற்படும்.

சூரியனுடன் தீய கிரகங்கள் சேர்ந்து கூட்டாக இருந்தால் நீண்ட, தீர்க்க முடியாத
வியாதிகள் உண்டாகும்.

சூரியனுடன் நல்ல கிரகங்கள் சேர்ந்திருந்தால் அல்லது பார்த்தால், ஜாதகன் நிர்வாகத்
திறமை உள்ளவனாக இருப்பான். செல்வந்தனாக இருப்பான். எடுத்த காரியங்களை
வெற்றிகரமாக முடிக்கக்கூடியவனாக இருப்பான்.

இதே இடத்துச் சூரியன் சனியின் பார்வை பெற்றால், இதய நோய்கள் உடையவனாக
இருப்பான். அல்லது பின்னாட்களில் இதய நோய்கள் உண்டாகும்!
---------------------------------------------------------------------------------------------------
2.
சந்திரன்
குழந்தைப் பருவத்தில் அடிக்கடி நோயுற்ற சேயாக இருந்திருப்பான்.

அதே இடத்தில் சந்திரன், செவ்வாய் அல்லது சனியின் சேர்க்கை/பார்வை
பெற்றிருந்தால் தீராத நோய்கள் இருக்கும். மாறாத எதிரிகள் இருப்பார்கள்.

அதே இடத்துச் சந்திரன் நல்ல கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை
பெற்றிருந்தால், ஜாதகன் திறமைசாலியாக இருப்பான். எடுத்த காரியங்களை
வெற்றிகரமாக முடிக்கக் கூடியவனாக இருப்பான்.
----------------------------------------------------------------------------------------------------
3.
செவ்வாய்
மிகுந்த பந்த பாச உணர்வுகள் உள்ளவராக ஜாதகர் இருப்பார். வெற்றியாளர்.
அரசுக் கட்டிலில் அமர்ந்தால் சிறந்த நிர்வாகி அல்லது ஆட்சியாளராக இருப்பார்.

அதே செவ்வாய், சேர்க்கை அல்லது பார்வையால் தீய கிரகங்களின் கூட்டணியில்
விழ நேர்ந்தால், விபத்துக்கள், விரையங்கள் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களால்
தொல்லைகள் ஏற்படும்.

செவ்வாயுடன் சனி அல்லது ராகு அல்லது கேதுவின் சேர்க்கை அல்லது பார்வை
இருந்தால் ஜாதகன் அசாதரணமான மரணத்தைச் சந்திக்க நேரிடும்.
---------------------------------------------------------------------------------------------------
4.
புதன்

எதற்கெடுத்தாலும் தர்க்கம் செய்பவர். கல்வியில் தடைகள் ஏற்படும்.

புதன் தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வையால் பாதிக்கப் பட்டிருந்தால்
மன நோய்கள், நரம்புத் தளர்ச்சி நோய்கள் உண்டாகும்.

சோம்பல் உண்டாகும். பேச்சில் கடுமை உண்டாகும். எதிரிகளுக்குப் பயப்பட
மாட்டார். எதிரிகள் இவரைக் கண்டால் பயந்து ஓடுவார்கள்
-------------------------------------------------------------------------------------------------
5.
குரு.

சுறுசுறுப்பு இல்லாமை ஏற்படும். மெத்தனமாக இருப்பார். அவமானம், அவமரியாதை
களைச் சந்திக்க நேரிடும். துரதிர்ஷ்டமானவர்.

அதே குருவிற்கு ஏற்படும் தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வையால் உடல்
உபாதைகள் உண்டாகும்.
----------------------------------------------------------------------------------------------------
6.
சுக்கிரன்
விரோதிகளே இருக்கமாட்டார்கள். பெண்களால் ஏமாற்றப்படுவார்கள். பெண்
ஜாதகராக இருந்தால் ஆண்களால் ஏமாற்றப்படுவார்கள்.

அதே சுக்கிரனுக்கு ஏற்படும் தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வையால்,
ஜாதகர் அதீதமான பாலியல் உறவுகளில் ஈடுபாடு உடையவராக இருப்பார்.
அதனால், உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல பிரச்சினைகளுக்கு ஆளாகு
பவராகவும் இருப்பார்.
----------------------------------------------------------------------------------------------------
7.
சனி.
வாதம் செய்பவர். பெருந்தீனிக்காரர். துணிச்சல்மிக்கவர். எதிரிகள் இல்லாதவர்.

அங்கிருக்கும் சனி, பார்வை அல்லது சேர்க்கையால் கெட்டிருந்தால், நோய்கள்
உண்டாகும், நண்பர்களால் சீரழிவு உண்டாகும்.

சனியுடன் செவ்வாய் சேர்ந்திருந்தால் அல்லது சனி செவ்வாயின் பார்வை பெற்றால்,
அபாயகரமான நோய்கள் உண்டாகும். அடிக்கடி அறுவை சிகிச்சைகளுக்கு உட்பட
நேரிடும்.

ராகு சேர்ந்தால் அல்லது பார்த்தால் (அதாவது ஆறில் இருக்கும் சனியை)
ஜாதகருக்குக் ஹிஸ்டீரியா நோய் உண்டாகும்.

சனி நல்ல நிலமையில் அங்கிருந்தால் ஜாதகர் பெரிய காண்ட்ராக்டராகப் பணி
செய்வார். பெரும் பொருள் ஈட்டுவார்.
-----------------------------------------------------------------------------------------------------
8.
ராகு.
நீண்ட ஆயுள் உடையவர்.ஆரோக்கியமானவர். ஆனால் அவ்வப்போது எதிரிகளின்
தொல்லைகளும் இருக்கும்.

ராகு கெட்டிருந்தால் புதிரான நோய்கள் உண்டாகும்.

இங்கே ராகு சந்திரனுடன் இருந்தால் அல்லது சந்திரனின் பார்வை பெற்றால் மனப்
பிறழ்வு உண்டாகும்.(mental retartation)

இதே இடத்தில் ராகுவுடன் சந்திரனும், சனியும் சேர்ந்திருந்தால், ஆசாமி ஊழல்
பேர்வழியாக இருப்பார்.
------------------------------------------------------------------------------------------------------
9.
கேது.
கேதுவிற்கு மிகவும் உகந்த இடம் இதுதான். ஜாதகனுக்குப் புகழும், அதிகாரமும்,
செல்வாக்கும் இருக்கும் அல்லது தேடிவரும்! ஆனால் ஜாதகனின் நடத்தை சரியாக
இருக்காது. சாமர்த்தியமாக அதை வெளியே தெரியாமல் பார்த்துக்கொள்வார்.

புதன், சனி போன்ற நட்புக்கிரகங்களின் கூட்டணி அமைந்தால், ஜாதகன், மந்திர,
தந்திர ஜால வேலைகளில் கெட்டிக்காரராக இருப்பார்.
-------------------------------------------------------------------------------------------------------
பொதுவாக ஆறாம் வீட்டு அதிபதியால் பெரும்பாலும் தீமையான பலன்களே
கிடைக்கும் அல்லது நடைபெறும். நம் ஜாதகத்தின் வில்லன் அவன்தான். அவன்
தன்னுடைய தசா, புக்திகளில் அதை நடத்திக் காட்டித் தன் இருப்பை வெளிப்
படுத்துவான். வேண்டா வெறுப்பாக அவற்றை நாம் ஏற்றுக் கொள்ளத்தான்
வேண்டும். வேறு என்ன செய்ய முடியும் நம்மால்?

அதில் இருந்து மீள வழியில்லையா?

ஏன் இல்லை? இருக்கிறது!

இறைவழிபாடு ஒன்றுதான் அதற்கு வழி!

இறைவன் அவற்றைத் தாங்கும் சக்தியை - தாக்குப்பிடிக்கும் சக்தியைத்
உங்களுக்குத் தருவான்.

வழி படாவிட்டால்?

வழிபடாவிட்டாலும் தருவான். அவன் கருணை மிக்கவன்.

உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும் அவன் கருணைக்கு உட்பட்டவைதான்.

வழிபடாமல் இருந்து பார்க்கலாமா?

அது உங்கள் விருப்பம்!

சும்மா சுமப்பதை, நனைத்துச் சுமப்பீர்கள் அவ்வளவுதான்!

என் ஆசான் கவியரசரின் மொழியில் சொன்னால், புரிகிறவர்கள் புரிந்து
கொள்ளட்டும், புரியாதவர்களுக்குப் புரியாமலேயே போகட்டும்!

----------------------------------------------------------------------------------------------------------
மிகப் பெரிய தலைவர்களும், தொழிலதிபர்களும், தோல்விகளைச் சந்திக்கிறார்கள்
என்றால் அது ஆறாம் வீட்டுக்காரனின் பங்களிப்பாகவே இருக்கும்!

உதாரணமாக நீங்கள் சிம்ம லக்கினக்காரராக இருந்தால், உங்கள் ஆறாம் வீட்டு
அதிபதியான சனிதான் உங்களுடைய வில்லன். சனியின் தசா, புக்திகளில்
உங்களுக்குத் தீய பலன்களே நடைபெறும். உங்களை உண்டு இல்லை என்று
ஆக்கிவிடுவான்.

இதை நான் ஆணித்தரமாகச் சொல்வேன். ஏனென்றால் நான் சிம்ம லக்கினக்காரன்
என் ஆறாம் இடத்து அதிபதியான சனியுடன், கடந்த 18 வருடங்களாகக் கத்திச்
சண்டை போட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். இன்னும் ஒரு வருடம் பாக்கியுள்ளது
சண்டை முடிய! (அதாவது சனி திசை முடிய)

பழநி ஆண்டவர் கொடுத்த மன உறுதி என்ற பெரிய பட்டாக் கத்தியும், அவர்
அருள் என்னும் கேடயமும் இருப்பதால் பலத்த பொருளாதாராக் காயங்களையும்,
வியாபாரத் துரோகங்கள் என்னும் சிராய்ப்புக்களையும், புன்முறுவலோடு
சந்தித்துத் தாண்டி வந்திருக்கிறேன்.

அதே சனிதான் என் ராசிநாதன் (மகர ராசி) என்பதால், அவனும் தன் கர்மத்தைச்
செய்வதற்காக என்னோடு யுத்ததில் இறங்கினாலும், தன் ராசிக்குரியவன் ஆயிற்றே
இவன் என்பதால், எனக்கு அவ்வப்போது ஓய்வு கொடுத்துத்தான், ஆசுவாசப்
படுத்தித்தான் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறான். இல்லையென்றால் வீழ்த்துவ
தென்பது அவனால் முடியாத காரியமா என்ன?

அதனால்தான் எனக்கு அவன் மீது ஒரு பரிவு உண்டு!

நான் சிம்ம லக்கினம் - மகர ராசிக்காரன். என் லக்கினநாதன் சூரியன், ராசிநாதன்
சனி. இருவருமே பரம எதிரிகள். ஆனால் என் ஜாதகப்படி இருவருமே எனக்கு
மிகவும் வேண்டியவர்கள். என்னவொரு சுவையான விஷயம் பார்த்தீர்களா?

ஜோதிட விநோதங்களில் இதுவும் ஒன்று!

ஆறாம் வீட்டைப்பற்றிய பாடம் நிறைவுறுகிறது!

அன்புடன்,
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!

26.7.08

இந்த மாதிரி விபத்து எப்படி ஏற்படுகிறது? ஜாதகத்தாலா?

இந்த மாதிரி விபத்து எப்படி ஏற்படுகிறது? ஜாதகத்தாலா?

படங்களைப் பாருங்கள்; பிறகு சொல்லுங்கள்!

இந்த மாதிரி விபத்து எப்படி ஏற்படுகிறது? ஜாதகத்தாலா?
யாருக்குத் தெரியும்? ஜோதிடப் பாடங்களை எழுதிய ரிஷிகள் இதுபற்றிக்
கூறாமல் போய்விட்டார்கள்!

ஆனால் சென்னைக் காரோட்டுனர்கள், பேருந்து ஓட்டுனர்கள் சிலர்
காரணத்தைச் சரியாகச் சொல்வார்கள் என்பது என் அனுபவம்

முதலில் படங்களைப் பாருங்கள். அவற்றிற்குக் கீழே காரணத்தைச்
சொல்லியிருக்கிறேன்





தெருவில் பார்வையை எங்கேயோ அலையவிட்டு விட்டுத் தன் வண்டியில்
அடிபட்டுச் சாக இருந்தவனைப் பார்த்து, ஓட்டுனர், கோபமாகச் சொல்வார்:

"ஏண்டா பேமானி, வூட்டாண்ட சொல்லிட்டு வந்திட்டியா? ஒயுங்கா ரோட்டுல
போடா ராகு காலத்தில பொறந்தவனே! கஸ்மாலம்!"

எனக்கு என்னவோ அது சரி என்று படுகிறது!:-))))
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அது சரி, எமகண்டத்தில் பிறந்தவர்கள் யார்?
அவனுடைய கவனத்தைத் திசை திருப்புபவர்கள்தான்! வேறு யார்? :-)))))

ராகு, கேது இரண்டுமே 180 டிகிரியில்தான் வலம் வரும்!
இவர்களும் அப்படி 180 டிகிரி நேர் பார்வையில்தான்! என்ன பொருத்தம் பாருங்கள்!:-))))

வாழ்க வளமுடன்!

24.7.08

ஜோதிடப் பாடத்தின் 100வது பதிவு!: யார் செல்வந்தன்?

என்னுடைய நண்பர் ஒருவர் கேட்டார்,"யார் செல்வந்தன்?"

நான் சொன்னேன் "செல்வம் இருப்பவன் எல்லாம் செல்வந்தன் இல்லை!"

அவர் விடவில்லை,"அது தெரியும் ; அதனால்தான் கேட்கிறேன்!"

"யாருக்குக் கடனும், நோயும் இல்லையோ அவன்தான் செல்வந்தன்!"
என்று நான் சொன்னேன்

"அதுதான் உண்மை! Health is welath!" என்று சொன்ன அவர், அதற்குப்
பிறகு ஒரு மணி நேரம் அது பற்றிப் பேசிவிட்டுத்தான் என்னை விட்டார்.

இன்று கோவையிலும், திருப்பூரிலும் பெரிய அளவில் தொழில் செய்பவர்
களுக்கு, சொத்துக்களைப் போலவே கோடிக்கணக்கில் வங்கிக் கடன்கள்
உள்ளன. 24 மணி நேரமும் பணத்தை ஈட்டும் சிந்தனையிலேயே இருப்பதால்
சரியான நேரத்தில் உணவு உண்ணும் பழக்கமோ அல்லது தேவையான
அளவு தூக்கமோ இல்லாமல் தவிப்பவர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன்
பலருக்கு சர்க்கரை நோய், இரத்த அழுத்த நோய்கள் உண்டு!

பணத்தைத் துரத்தும்போது, நோய்களையும் சேர்த்துதான் துரத்துகிறோம்
என்பதைப் பலர் உணர்வதில்லை!
--------------------------------------------------------------
இப்போது பாடம்!

தலைப்பு: ஆறாம் வீடு (The sixth house in a birth chart)

ஆறாம் வீடு என்பது லக்கினத்திலிருந்து, லக்கினத்தை முதலாகக் கொண்டு
எண்ணப்படும்போது ஆறாவதாக வருவது.

ஆறாம் வீடு என்பது ஒரு ஜாதகனுக்கு ஏற்படக்கூடிய நோய், கடன், எதிரி
மற்றும் துரதிர்ஷ்டங்களைப் (Diseases, Debts, Enemies and Misfortunes)
பற்றிச் சொல்லும் வீடு.

நோய்கள் இரண்டு வகைப்படும். தீர்க்கக்கூடிய நோய். தீர்க்க முடியாத நோய்!
தீராத நோய்களைப் பிணி என்பார்கள். உதாரணம்; ஆஸ்த்மா!

ஆனால் கடன் ஒரு வகைக்குள் அடங்கிவிடும். கடன் தீர்க்கக்கூடியதுதான்.
ஆசைகளையும், தேவைகளையும் அடக்கிக் கொண்டால், கடனே ஏற்படாமல்
பார்த்துக்கொள்ளலாம். அல்லது ஏற்பட்ட கடனைத் தீர்த்துவிடலாம்.
கடன் இல்லாமல் இருப்பது சிரமம். ஆனால் கடன் இல்லாமல் இருந்து
விட்டால் அது சுகம்!

அதுபோல எதிரிகளும் அப்படித்தான். நாம் நட்பு பாராட்டும் தன்மையை
ஏற்படுத்திக் கொண்டால் எதிரிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்.

சரி, இந்த மூன்றுமே - அதாவது நோய், கடன், எதிரி ஆகிய மூன்றுமே
உங்களைக் கேட்டுத்தான் ஏற்படுமா? இல்லை! ஜாதகத்தில் கோளாறு
என்றால், எந்தக் கொம்பனாலும் அவற்றைத் தவிர்க்க முடியாது.
கதவைத் தட்டிக் கொண்டு அல்ல, கதவை உடைத்துக் கொண்டு
அவைகள் உள்ளே நுழைந்து விடும். என் அனுபவத்தில் பலரை நான்
பார்த்திருக்கிறேன்.

வந்துவிட்டுப் போகட்டும், அவற்றிலிருந்து விடுபடுவதற்கோ அல்லது
அவற்றைத் தாங்கிக்கொள்வதற்கோ வழி இருக்கிறதா?

ஏன் இல்லை? இருக்கிறது! அதுதான் இறைவழிபாடு.
இறைவன் கருணை மிக்கவன். உங்கள் கர்ம வினைகளால் ஏற்படும்
இவற்றை எல்லாம் கடக்க அவன் உதவுவான்.

அதனால்தான் நான் அடிக்கடி சொல்லுவேன். ஜோதிடமும், இறை வழிபாடும்
ஒன்றிற்கொன்று பின்னிப் பிணைந்தது.

வள்ளுவப் பெருந்தகை அசத்தலாக இப்படிச் சொன்னார்:

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார்!"

அவர் மொத்தமாக மனிதப் பிறப்பையே பிணி என்று சொல்லிவிட்டார்
-------------------------------------------------------------------------------------
ஒருவருக்கு நோய்கள் இருக்கும் ; ஆனால் கடன் இருக்காது. கையில்
நிறையப் பணம் வைத்திருப்பார். இன்னொருவர் மிகுந்த உடல் நலத்துடன்
இருப்பார். ஆனால் கடன் தொல்லைகள் அவருக்கு இருக்கும்.

அவதிப்படுவதில் கணக்கிட்டால் இருவர் நிலையும் ஒன்றுதான். வில்லன்கள்
வேறுபடலாம். ஆனால் கதாநாயகி அல்லது நாயகனின் துயரம் ஒன்றுதான்

அதுபோல ஒருவர் நல்லவராக, திறமைசாலியாக இருக்கலாம். அவர்மேல்
பொறாமையும், எரிச்சலும் கொண்ட எதிரிகள் அவருக்குத் தெரியாமலேயே
இருக்கலாம்.

இந்த நிலைகளை உள்ளடக்கியதுதான் ஆறாம் வீடு. அதனால்தான் ஆறாம்
வீட்டை வைத்துப் பலன் சொல்வது மிகவும் சிரமமான காரியம். பலத்த
ஆராய்ச்சி செய்துதான் பலன் சொல்ல வேண்டும். மேலோட்டமாகச் சொன்னால்
ஜோதிடர் பொய்யாகிப் போய்விடுவார்.(ஜோதிடம் பொய்யில்லை)

ஆறாம் வீட்டை வைத்து ஏற்படும் துன்பங்கள், துயரங்கள், வலிகள்(pains)
ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படும்.

உதாரணத்திற்கு ஆறாம் வீட்டு அதிபன் இரண்டாம் வீட்டில் அமர்ந்துவிட்டான்
என்று வைத்துக் கொள்வோம். அதனால் மட்டுமே அவ்வாறு அமைப்புள்ள
அனைவருக்குமே ஒரே மாதிரித் துன்பம் வரும் என்று நினைக்க வேண்டாம்.

அந்தக் கிரகம், அமர்வினால் பெறும் உச்ச நீசம், நட்பு, பகை, அதோடு
மற்ற கிரகங்களின் சேர்க்கை, பார்வை என்று ஏற்படும் வெவ்வேறு நிலைகளால்
பலன்களும் மாறுபடும்.

அவதிப்படுவது என்றாகிவிட்ட பிறகு எப்படி அவதிப்பட்டாலும் அது ஒன்றுதான்
அவதி அவதிதான். ஒருவர் நோயால் அவதிப்படலாம், ஒருவர் கடன்களால்
அவதிப்படலாம், ஒருவர் எதிரிகளால் அவதிப்படலாம். ஒருவர் துரதிர்ஷ்டங்
களினால் அவதிப்படலாம். ஆனால் அவதி அவதிதான்.

இங்கே துரதிர்ஷ்டம் என்பது சூழ்நிலைகளால் (unfortunate situations) ஏற்படுவதைக்
குறிக்கும்.

வங்கி வேலைதான் என்றாலும், ஒரு கிராம வங்கி அல்லது ஒரு கூட்டுறவு வங்கி
அல்லது ஒரு தனியார் வங்கி அல்லது ஒரு தேசிய வங்கி அல்லது ஒரு பன்னாட்டு
வங்கி என்று வங்கிகளில் வேலை பார்க்கும் சூழ்நிலைகளிலும், வருமானத்திலும்
(சம்பளத்திலும்) எத்தனை வேறுபாடுகள் உள்ளன என்பது நீங்கள் அறிந்ததே!

You can call it as circumstance, or chance or unluck, but it is unfortunate!

பாடத்தைப் படித்துத் தேறுவதால் மட்டுமே ஒருவர் சரியான பலனைச் சொல்லிவிட
முடியாது. இதிலேயே ஊறி அனுபவம் பெற்றவரால்தான் நெத்தியடியாகப் பதிலைச்
சொல்ல முடியும்.

பாடம் 50% + அனுபவம் 50%

அனுபவம் என்பது பல ஜாதகங்களைப் பார்ப்பதாலும், அதுபற்றி ஜாதகர்களுடன்
பேசித் தெளிவதாலும், ஜோதிட அறிவுடையவர்களுடன் உரையாடுவதாலும்
மட்டுமே கிடைக்கும்.
-------------------------------------------------------------------------------------------------
ஆறாம் வீட்டைப்பற்றித் தெரிந்து கொள்ள, ஆறாம் வீட்டில் உள்ள பரல்கள்,
ஆறாம்வீட்டின் அதிபதி (owner), அவர் சென்று அமர்ந்த இடம் (placement),
அவரோடு கூட்டுச் சேர்ந்தவர்கள் (associates), ஆறாம் வீட்டில் வந்து அமர்ந்தவர்கள்,
ஆறாம் வீடு பெறும் பார்வைகள் (aspects) போன்றவற்றை அலச வேண்டும்!

மெலும் ஜாதகத்தில் உள்ள அவயோகங்களையும் பார்க்க வேண்டும்.

யோகத்தில் அவயோகம்கூட உண்டா என்று கேட்காதீர்கள்!

அவயோகமும் உண்டு! அவற்றைப் பற்றி யோகங்கள் என்னும் தலைப்பில் பாடம்
நடத்தும்போது விரிவாகச் சொல்கிறேன்.

இன்று ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் எடுத்துக் காட்டுகிறேன்.

ஜாதகத்தில் சந்திரன் தனித்து நின்றால் அது அவயோகம்!

அதாவது சந்திரன் இருக்கும் கட்டத்தின் இருபக்கக் கட்டங்களிலும் கிரகம்
எதுவும் இல்லாமல் இருந்து, சந்திரனும் தன்னுடைய கட்டத்தில் தனியாக இருந்தால்
அது அவயோகம். அதற்குப் பெயர் தரித்திர யோகம்.

வயதான காலத்தில் ஜாதகனை அது தனிமைப் படுத்திவிடும்! ஆதரவு அற்ற
நிலையில் நிறுத்திவிடும்!

உடனே உங்கள் ஜாதகத்தை எடுத்துப் பார்த்து சந்திரன் அப்படி இருந்தால்
பயந்து விடாதீர்கள்.

அதற்கு விதிவிலக்கு உண்டு! சந்திரன் குருவின் பார்வை பெற்றிருந்தாலோ
அல்லது சந்திரன் தன்னுடைய சுயவர்க்கத்தில் 5 அல்லது அதற்கு மேல் பரல்கள்
பெற்றிருந்தாலோ அந்த நிலைமை ஜாதகனுக்கு ஏற்படாது அல்லது வராது!
-------------------------------------------------------------------------------------------------------
ஆறாம் வீட்டு அதிபதி வெவ்வேறு வீடுகளில் அமர்ந்திருப்பதால் ஏற்படும்
பொதுப் பலன்கள் (The results of Sixth Lord occupying different houses)

1.
முதல் வீட்டில் அமர்ந்திருந்தால்
(That is sixth lord occupying lagna in a horoscope)

நல்ல கிரகத்தின் பார்வை பெற்று அமர்ந்திருந்தால் நாட்டின் பாதுகாப்புத்
துறையில் பணிபுரியும் வாய்ப்புக் கிடைக்கும். சாதாரண ராணுவ வீரராகவோ
அல்லது காமாண்டராகவோ பணிபுரிவார். அல்லது காவல் துறையிலோ அல்லது
சிறைத்துறையிலோ பணிபுரிவார். ஜாதகத்தின் மேன்மை அளவை வைத்து
அதில் பெரிய பதவி வரைக்கும் சென்று அமரக்கூடியவராகவும் இருப்பார்.

இதே அமைப்பு நல்ல பார்வை பெறாமல், தீய பார்வைகள் பெற்றிருந்தால்,
ஜாதகன் திருட்டுத்தொழிலோ அல்லது ஒரு பெரிய மோசடிக் கூட்டத்திலோ
பணியாற்ற நேரிடும்!
----------------------------------------------------------------------------------------------------
2
இரண்டாம் வீட்டில் அமர்ந்திருந்தால்
(That is sixth lord occupying second house in a horoscope)

இது நல்ல அமைப்பு அல்ல! இது குடும்ப வாழ்க்கைக்கும், நிதிநிலைக்கும்,
கண் பார்வைக்கும், பேச்சுத்திறமைக்கும் உரிய வீடாகும். இந்த வீட்டில்
ஆறாம் அதிபதி வந்து அமர்ந்தால், ஜாதகனுக்குப் பார்வைக்கோளாறுகள்,
பற்சிதைவுகள் ஏற்படும். திக்குகின்ற பேச்சு நிலை ஏற்படும். குடும்ப வாழ்க்கை
தொல்லைகளும் அல்லது துக்கங்களும் நிறைந்ததாக இருக்கும். எதிரிகளால்
பண இழப்புக்கள் ஏற்படும்.

இதே அமைப்பு நல்ல பார்வை பெறாமல், தீய பார்வைகள் பெற்றிருந்தால்,
ஜாதகன் மனைவியைப் பறிகொடுக்க நேரிடும். அது அந்த தீய கிரகத்தின்
தசா புத்தியில் ஏற்படும். அதே அமைப்போடு சுக்கிரனும் நீசமாகியிருந்தால்
ஜாதகன் வறுமையில் உழல்வான். பசிக்கு உணவின்றி பட்டினி கிடக்க
நேரிடும்.
-----------------------------------------------------------------------------------------------------
3
மூன்றாம் வீட்டில் அமர்ந்திருந்தால்
(That is sixth lord occupying third house in a horoscope)
சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுடன் பகை ஏற்படும். அல்லது உடன்
பிறப்புக்களுக்கு அடிக்கடி நோய் நொடிகளை ஏற்படுத்தும். அதன் பொருட்டு
ஜாதகனுக்கு பண இழப்புக்கள் ஏற்படும்.

இதே அமைப்பு நல்ல பார்வை பெறாமல், தீய பார்வைகள் பெற்றிருந்தால்,
அல்லது இங்கே வந்து அமரும் ஆறாம் அதிபதி நீசமாகியிருந்தால் ஜாதகன்
வீட்டின் கடைசி ஆண் குழந்தையாக இருப்பான். ஜாதகியாக இருந்தால்
அவளுக்கு அடுத்து அவள் பெற்றோர்களுக்கு ஆண் குழந்தைகள் இருக்காது.
--------------------------------------------------------------------------------------------------
4
நான்காம் வீட்டில் அமர்ந்திருந்தால்
(That is sixth lord occupying fourth house in a horoscope)
ஜாதகன் ஒரு மோசமான வீட்டில் குடியிருப்பான் அல்லது மோசமான சூழலில்
அவன் வீடு இருக்கும். கல்வி தடைப்பட்டுவிடும். ஜாதகன் தன் அன்னையைக்
கைவிட்டுவிடுவான். தாய் மாமாக்கள் பெரும்பாலும் விவசாயிகளாக இருப்பார்கள்

இதே அமைப்பு நல்ல பார்வை பெறாமல், தீய பார்வைகள் பெற்றிருந்தால்,
பெற்ற தாயுடனான உறவு தர்க்கங்களால், சண்டைகளால் சீர்கெட்டு இருக்கும்.
முன்னோர் சொத்துக்கள் கடனில் மூழ்கியிருக்கும். துக்கமான வாழ்க்கை நடத்திக்
கொண்டிருப்பான். குடும்ப வாழ்க்கையில் சுகம் இருக்காது.
-----------------------------------------------------------------------------------------------------
5
ஐந்தாம் வீட்டில் அமர்ந்திருந்தால்
(That is sixth lord occupying fifth house in a horoscope)

நோயுற்ற சேய்களை உடையவனாக இருப்பான். தாயார் மூலம் மாமா வழிச்
சொத்துக்கள் கிடைக்கும்.
இதே அமைப்பு நல்ல பார்வை பெறாமல், தீய பார்வைகள் பெற்றிருந்தால்,
மனப் போராட்டம் உடையவனாக இருப்பான்.
-----------------------------------------------------------------------------------------------------
6
ஆறாம் வீட்டிலேயே அமர்ந்திருந்தால்
(That is sixth lord occupying his own house in a horoscope)
தாய் வழியில் அல்லது தாய் உறவில் அதிகமான சகோதர பந்தங்களை
உடையவனாக இருப்பான். தாய் மாமா புகழ் பெற்றவராக இருப்பார்.

இந்த வீட்டில் ஆறாம் அதிபதியுடன் லக்கின நாதனும் வந்து அமர்ந்திருந்தால்
ஜாதகன் தீராத நோயொன்று ஏற்பட்டு அவதிப்பட நேரிடும். நெருங்கிய
உறவுகளுடன் பகை ஏற்படும்.
-----------------------------------------------------------------------------------------------------
7
ஏழாம் வீட்டில் அமர்ந்திருந்தால்
(That is sixth lord occupying seventh house in a horoscope)
இந்த அமைப்புள்ள ஜாதகன் தாய்வழி மாமா மகளையோ அல்லது தந்தை
வழி அத்தை மகளையோ திருமணம் செய்துகொள்வான்.
இதே அமைப்பு நல்ல பார்வை பெறாமல், தீய பார்வைகள் பெற்றிருந்தால்,
ஜாதகன் விவாகரத்துப் பெற்றவனாக இருப்பான்.அல்லது மனைவி இளம்
வயதிலேயே இறந்து போயிருப்பாள். பெண்ணாக இருந்தாலும் இதே பலன்தான்

நவாம்சமும் கெட்டிருந்தால் (ஏழாம் வீடு)ஜாதகனின் மனைவி நோயுற்றவளாக
அழகிழந்தவளாக இருப்பாள். இதே வீட்டில் ஆறாம் அதிபதியுடன் லக்கின
அதிபதியும் கூட்டணி சேர்ந்தால், ஜாதகன் ஆண்மைக் குறைபாடுகள்
உடையவனாக இருப்பான். தீயபெண்களின் சகவாசத்தால் அடிக்கடி
தொல்லைகளுக்கு ஆளாகுபவனாக இருப்பான்.
-------------------------------------------------------------------------------------------------------------
8
எட்டாம் வீட்டில் அமர்ந்திருந்தால்
(That is sixth lord occupying eigth house in a horoscope)

ஜாதகன் மத்திம ஆயுள் உடையவனாக இருப்பான்.
(He will die in the middle age). இது பொது விதி!
ஜாதகத்தின் வேறு அமைப்புக்களால் இதற்கு விதிவிலக்கும் உண்டு!

இதே அமைப்பு நல்ல பார்வை பெறாமல், தீய பார்வைகள் பெற்றிருந்தால்,
அளவற்ற கடன்களால் அல்லது தீராத மர்ம நோய்களால் அவதிப் படுபவனாக
இருப்பான். பெண் வேட்டையில் ஈடுபடுபவனாக இருப்பான். மற்றவர்களை
இம்சைப் படுத்தி மகிழ்பவனாக இருப்பான்.
------------------------------------------------------------------------------------------------------------------
9
ஒன்பதாம் வீட்டில் அமர்ந்திருந்தால்
(That is sixth lord occupying ninth house in a horoscope)

நல்ல கிரகத்தின் பார்வை பெற்று அமர்ந்திருந்தால், ஜாதகனின் தந்தை நீதித்துறை
யில் பணியாற்றுபவராக இருப்பார். தாய் வழி உறவுகள் நல்ல நிலைமையில்
இருப்பார்கள்.

இதே அமைப்பு நல்ல பார்வை பெறாமல், தீய பார்வைகள் பெற்றிருந்தால்,
தந்தையுடன் சச்சரவுகள் ஏற்பட்டு சுமூகமான உறவு இருக்காது.
வாழ்க்கை வறுமை மற்றும் பாவச் செயல்கள் நிறைந்ததாக இருக்கும்.
உறவினர்களால் தீமைகள் ஏற்படும். நன்றி கெட்ட செயல்களைச் செய்ய
நேரிடும். அறவழிகளுக்கு எதிரான செயல்களைச் செய்ய நேரிடும்
--------------------------------------------------------------------------------------------------
10
பத்தாம் வீட்டில் அமர்ந்திருந்தால்
(That is sixth lord occupying tenth house in a horoscope)

பாவச் செயல்கள், தீய செயல்களைச் செய்ய நேரிடும் அல்லது தொழிலாகக்
கொள்ள நேரிடும். இறையுணர்வாளர்கள் போல இருப்பார்கள். ஆனால்
கேவலமான வேலைகளில் மறைமுகமாக ஈடுபடுவார்கள். சிலர் போலிச்
சாமியார்களாக இருப்பார்கள்.

இதே அமைப்பு நல்ல பார்வை பெறாமல், தீய பார்வைகள் பெற்றிருந்தால்,
மற்றவர்களைப் பயப்படுத்தக்கூடிய வேலைகளைச் செய்வார்கள். தானும்
பயப்படக்கூடிய விரோதிகளைப் பெற்றிருப்பார்கள்.கீழ்த்தரமான வேலைகளைச்
செய்வார்கள். கீழான வாழ்க்கை வாழ நேரிடும்.
---------------------------------------------------------------------------------------------------
11
பதினொன்றாம் வீட்டில் அமர்ந்திருந்தால்
(That is sixth lord occupying eleventh house in a horoscope)

மூத்த சகோதரன் நீதித்துறையில் பணிபுரிவார். அல்லது அதற்கு ஈடான
புகழுடன் வாழ்வார். அவரால் ஜாதகன் பல ஆதாயங்களைப் பெறுவார்.

இதே அமைப்பு நல்ல பார்வை பெறாமல், தீய பார்வைகள் பெற்றிருந்தால்,
ஏழ்மை தாண்டவம் ஆடும். மோசமான சூழலில் வாழ நேரிடும். அடிக்கடி
சட்டச் சிக்கலில் மாட்டிக் கொண்டு தண்டனை பெறவும் நேரிடும்
------------------------------------------------------------------------------------------------------
12
பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்திருந்தால்
(That is sixth lord occupying twelth house in a horoscope)

வாழ்க்கை தொல்லைகளும் துயரங்களும் நிறைந்ததாக இருக்கும். ஜாதகனால்
மற்றவர்களுக்கு இடைஞ்சல்கள் ஏற்படும்.

இதே அமைப்பு நல்ல பார்வை பெறாமல், தீய பார்வைகள் பெற்றிருந்தால்,
வாழ்க்கை அவலமாகவும், கடினமாகவும் இருக்கும்
---------------------------------------------------------------------------------------------------------
இவை அனைத்துமே பொதுவிதிகள். தனிப்பட்ட ஜாதகத்திற்கு ஜாதகத்தின்
மற்ற அமைப்புக்களை வைத்து இவை கூடலாம், குறையலாம் அல்லது
இல்லாமல் போகலாம்.
----------------------------------------------------------------------------------------------------------
பதிவின் நீளம், உங்களுடைய பொறுமை எனது தட்டச்சும் நேரம் ஆகியவை
கருதி இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்.

இந்தப் பாடத்தின் அடுத்த பகுதி அடுத்த பதிவில். அதுவரை பொறுமை காக்கவும்

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்

(தொடரும்)

BSNL அகண்ட வரிசை இணைய இணைப்பு இரண்டு நாட்களாக கோவைப் பகுதியில்
வேலை செய்யவில்லை. அதனால் அதிகமாகத் தவிப்புற்றது அடியேனாகத்தான்
இருக்கும். இன்று காலை முதல் வேலை செய்கின்றது. உடனே இடுகையை
வலையேற்றியுள்ளேன்!

வாழ்க வளமுடன்!

19.7.08

விபத்தைத் தடுக்க ஒரு சூப்பர் பெல்ட்!

விபத்தைத் தடுக்க ஒரு சூப்பர் பெல்ட்!

ஸ்க்ரோல் டவுன் செய்து பாருங்கள்

V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V

படத்தின் மீது க்ளிக்கிப் பாருங்கள்!




வாழ்க வளமுடன்!

சோதனைப் பதிவு!

கருவிபட்டை இரண்டாகத் தெரிந்தது. அதை அடித்துத் துவைத்துக் காயவைத்து மீண்டும் ப்ளாக்கரில் மாட்டிவிட்டிருக்கிறேன். ஒழுங்காக அழுக்கின்றித் தெரிகிறதா என்று அறிந்து கொள்ள இது ஒரு சோதனைப் பதிவு!

வாழ்க வளமுடன்!

அங்கேயுமா படுத்தி எடுக்குறாங்க?

நம்ம ஊர்லதான் படுத்துறாங்க என்றால், அங்கேயும் படுத்துறாங்களே சாமி?

தெய்வம், தெய்வக்குத்தம், குலதெய்வம், திருவிழா, அபிஷேகம், படையல்,
மொட்டை, காதுகுத்து, அழகர் ஆத்தில இறங்குகிறாரு, மீனாட்சிக்குக் கல்யாணம்
என்று வருஷம் முச்சூட்டும் நம்மளைத்தான் படுத்தி எடுக்குறங்கன்னா,
அங்கேயும் இதேதானா?

அறிவியல் கண்டு பிடிப்புக்கள்ள நம்மர் ஒன்னா இருக்கிற நாட்டுக்கா இந்தக்கதி?
நீங்களே பாருங்க!
இந்தக் கூத்து ஜப்பான்லதான்!

தங்கள் குலதெய்வத்தைப் பல்லக்கில் தூக்கிச் சென்று கடலில் புனித நீராட்டுகிறார்களாமே?
அவர்களை எந்த லிஸ்ட்டில் சேர்ப்பது?
அவங்களுக்குமா பகுத்து அறியத் தெரியலை?

படத்தின் மீது கர்சரை வைத்து அமுக்கினால் படம் பெரிதாகத் தெரியும்!

படம்: நன்றி - தினமலர்!



வாழ்க வளமுடன்!

18.7.08

பார்த்தீங்களா? பார்த்தீங்களா?

முதலில் கமர்ஷியல் ப்ரேக்! இரண்டு விளம்பரங்கள்! அதை சகித்துக் கொண்டு
மேலே சென்றீர்கள் என்றால் உபயோகமான செய்தி உள்ளது.

1
சம அறிவுத் திட்டம்!

அறிவியல் சிறுகதைப் போட்டிக்காக வாத்தியார் எழுதிய சிறுகதையைப்
படித்தீர்களா? படிக்காதவர்கள் படிக்கலாம்! சுட்டி கதைத் தலைப்பிலேயே உள்ளது!

2.
13.7.2008 ஞாயிறன்று கோவையில் நடைபெற்ற வலைப்பதிவர்கள் சந்திப்பின்
முழு விவரங்களை நிறையப் புகைப்படங்களுடன் நண்பர் சஞ்சை காந்தி அவர்கள்
பதிவிட்டுள்ளார். சென்று படிக்கக் கோருகிறேன்.சுட்டி இங்கே!

என்னுடைய முதல் பதிவில் (25.12.2005) முதல் பின்னூட்டம் இட்ட அன்பரும் சக பதிவருமான திரு ஞானவெட்டியான் அவர்களுடன் (13.7.2008 அன்று நடைபெற்ற பதிவர்கள் சந்திப்பில்) அடியவன் எடுத்துக்கொண்ட புகைப்படம்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உபயோகமான அட்டவணை!

வாத்தியார் ஜோதிடப்பாடம் படிக்கத்துவங்கிய காலத்தில் முதன் முதலில்
மனனம் செய்த அட்டவணை! அதில் அடிப்படை விவரங்கள் எல்லாம் இருக்கும்.
மனப்பாடம் செய்தால் ஜோதிடப் பெண் உங்களை வந்து கட்டி அணைத்துக்
கொண்டு விடுவாள்! மனப்பாடம் செய்யாதவரை அவள் உங்கள் அருகிலேயே
வர மாட்டாள்.அதை நினைவில் கொள்க!


---------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!

17.7.08

உண்மையில் என்ன நடந்தது?

மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.
பாடம் யூரின் என்ற தலைப்பில் நடந்து கொண்டிருந்தது.

பாடம் முடியும் தருவாயில், அரை லிட்டர் கொள்ளளவு உள்ள
ஒரு பாட்டிலை எடுத்துத் தன் மேஜையின் மீது வைத்துவிட்டுச்
சொன்னார். "இப்போது மிகுந்த கவனத்துடன் பாருங்கள். பாடத்தின்
இந்தப் பகுதி முக்கியமானது."

"மருத்துவராகப் போகும் நீங்கள் எதையுமே கவனத்துடன் பார்க்க
வேண்டும். இது மனித மூத்திரம் அடங்கிய பாட்டில். இதன் நிறம்,
வாசம்,தோற்றம், ருசி அனைத்துமே முக்கியம்."

இந்த இடத்தில் அதாவது ருசி என்ற சொல்லைக் கேட்டு, சிலர்
முகத்தைச் சுழித்தனர்.

ஆனால் பேராசியர் விடவில்லை. யாரும் எதிர்பார்க்காத விதமாக
பட்டிலின் மூடியைத் திறந்தவர், தன்னுடைய விரலை உள்ளே விட்டு,
அந்தத் திரவத்தைத் தொட்டு எடுத்துச் சட்டென்று தன் வாயில்
விரலை வைத்து அசூசையின்றிச் சப்பினார்.

பலரும் அசந்து போயினர்!

ஆசிரியர், பாட்டிலை உள்ளே ஒரு சுற்று அனுப்பி அனைவரையும்
அதைப் பரிசோதனை செய்யச் சொன்னர்.

அனைவரும் பேராசிரியர் சொன்னபடியே, முகர்ந்து பார்த்துவிட்டு,
விரலை உள்ளே விட்டுத் திரவத்தைத் தொட்டு டேஸ்ட் செய்து
பார்த்தனர். சிலர் முகம் அஷ்டகோணலாகிவிட்டது.

கடைசி மாணவனும் அதைச் செய்த பிறகு ஆசிரியர் மெல்லிய
குரலில் சொன்னார்:

"உங்கள் அனைவரையும் கவனத்துடன் பார்த்துச் செய்யச் சொன்னேன்.
நீங்கள் யாரும் அதைச் செய்யவில்லை. நான் பாட்டிலின் உள்ளே விட்டது
என்னுடைய இரண்டாவது விரல். வாயில் வைத்துச் சப்பியது அந்த விரல்
இல்லை. அதற்கு அடுத்தவிரல்!''

--------------------------------
வாழ்க வளமுடன்!

கெட்டவன் கெட்டுப்போனால் என்ன ஆகும்?

கெட்டவன் கெட்டுப்போனால் என்ன ஆகும்? காவல்துறை ஒரு தீயவனைப் பிடித்து
உள்ளே போட்டால் என்ன ஆகுமோ அல்லது என்கவுன்டரில் போட்டுத் தள்ளினால்
என்ன ஆகுமோ அது ஆகும்!

நல்லவன் மேன்மை பெற்றால் என்ன ஆகும்? மேலும் பல நன்மைகளைச் செய்வான்!

அது இரண்டையும் பற்றியதுதான் இன்றைய பாடம்!
---------------------------------------------------------------------------
ஒவ்வொரு லக்கினத்திற்கும் அதிமுக்கியமான கிரகம் எது?

லக்கினத்திற்கு யோகங்களைக் கொடுக்கக்கூடியவர் எவரோ, அவரே அதி முக்கியமான கிரகம்!

அவர் என்ன செய்வார்?

1. அவர்தான் உங்களுடைய God Father.
2. உங்களுக்கு யோகத்தைத்தருவதில் முதல் இடத்தில் இருப்பவர்.
3. ராஜயோகங்களைத்தருபவர் அவர்தான்.
4. அவருடைய திசைகளிலும் அல்லது புத்திகளிலும் உங்களுக்கு அவற்றை
(நன்மைகளை) நிறைவேற்றி வைப்பார்.
5. அவர் இருக்கும் இடமும் நன்றாக இருக்கும்,
6. அவருடைய பார்வை பெறும் அவருடைய நட்புக் கிரகங்கள் மேலும் வலுப்பெறும்
7. அவருடைய பார்வையைப் பெறும் தீயகிரகங்கள் வலிமை இழக்கும்
8. மொத்தத்தில் - in short - அவரைக் key planet to your lagna என்று சொல்லலாம்

இந்த கீ பிளானெட்டைக் கவனிக்காமல், மற்றபடி வீட்டு அதிபதி, அவர் இருக்கும்
இடம், அந்த வீட்டிலிருக்கும் பரல்கள் இவற்றை மட்டும் வைத்துப் பலன்
சொல்லும்போது, அது தவறாகிப் போய்விடும். ஆகவே ஒரு ஜாதகத்திற்கான
நல்லது கெட்டதுகளை நிர்ணயம் செய்யும் போது முதலில் கணக்கில் எடுத்துக்
கொள்ளப்பட வேண்டியவர் இவரே!

சரி, அவர் முழு யோகங்களையும் தருவாரா?

அவர் ஜாதகத்தில் கேந்திர ஸ்தானங்களில் அல்லது திரிகோண ஸ்தானங்களில்
அமர்ந்திருந்தால் தருவார். உச்சம், நட்பு நிலைகளில் இருந்தால் தருவார்.
பாதக ஸ்தானங்களான 6ஆம் வீடு, 8ஆம் வீடு, 12ஆம் வீடு ஆகிய இடங்களில்
அவர் இருந்தால் தரமாட்டார். கைக்கு எட்டியது. வாய்க்கு எட்டவில்லை என்ற
கதையாகிவிடும்.

இப்போது எந்தெந்த லக்கினத்திற்கு யார் யார் யோககாரகன் என்று பார்ப்போம்!

Key planets for each lagna is appended!

விளக்கம் போதுமா?
-------------------------------------------------------------------------------------------------
1. மேஷம் = குரு, சூரியன்
2. ரிஷபம் = சனி
3. மிதுனம் = சுக்கிரன்
4. கடகம் = குரு, செவ்வாய்
5. சிம்மம் = செவ்வாய்
6. கன்னி = சுக்கிரன்
7. துலாம் = சனி
8. விருச்சிகம் = குரு
9. தனுசு = செவ்வாய், சூரியன், குரு
10. மகரம் = சுக்கிரன்
11. கும்பம் = சுக்கிரன்
12. மீனம் = செவ்வாய், சந்திரன், குரு

என்ன சார் என் லக்கினத்திற்கு ஒரு கிரகம் மட்டுமே உள்ளது
இன்னொன்றிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட கிரகம் உள்ளதே என்று
கேட்காதீர்கள். யோசித்துப் பாருங்கள் காரணம் புரியும்!

Special Tips:
1.For Mithuna lagna natives, if Venus joins with Saturn will give
career of much fame!
2. For Cancer lagna natives, if Jupiter joins with mars, will confer
name & fame!
3. For Virgo lagna natives, if Mercury associated with Venus will
give good yogas
4. For Virucchika Lagna natives, Sun & Moon association will
give good yogas
5. For Thanusu lagna natives, the association of Sun & Mars
will give good yogas
6. For Makara lagna natives, the association of Venus & Mercury
will give good yogas
7. For Kumba lagna natives, the association of Venus & Mars
will give good yogas
8. For Meena lagna natives, the association of Moon, Mars, jupiter
will give good yogas
---------------------------------------------------------------------------------
Evil planets for each lagna is appaended!

கட்டுரையின் முதல் பகுதியில் கூறியுள்ள அனைத்திற்கும்
நேர் எதிரரன பலன்களை இவைகள் செய்யும்.
ஆனால் பாதக ஸ்தானங்களான 6ஆம் வீடு, 8ஆம் வீடு, 12ஆம் வீடு
ஆகிய இடங்களில் இவர்கள் இருந்தால் தீமை செய்ய முடியாது.
கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் மேன்மை என்றாகிவிடும்.
தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விட்டது என்று மகிழ்ச்சி
அடையலாம்!

1. மேஷம் = சனி, புதன், சுக்கிரன்
2. ரிஷபம் = குரு, சந்திரன்,
3. மிதுனம் = செவ்வாய், குரு, சூரியன்
4. கடகம் = சுக்கிரன், புதன்
5. சிம்மம் = சனி, சுக்கிரன், புதன்
6. கன்னி = செவ்வாய், சந்திரன்
7. துலாம் = குரு, சூரியன், செவ்வாய்
8. விருச்சிகம் = புதன், சுக்கிரன்
9. தனுசு = சுக்கிரன்
10. மகரம் = செவ்வாய், சந்திரன், குரு
11. கும்பம் = சந்திரன், குரு
12. மீனம் = சூரியன், சனி, சுக்கிரன், புதன்

--------------------------------------------------------------------
என்ன, இன்றைய பாடம் நன்றாக இருந்ததா?
பயனுள்ளதாக இருந்ததா?
அதைவிட முக்கியமாக புரியும்படி இருந்ததா?
பின்னூட்டத்தில் ஒருவரி சொல்லுங்கள்!

மேலே உள்ள படத்தில் சனீஸ்வரனும், சூரியபகவானும் சேர்ந்து
இறைவனுக்குக் காலை வணக்கம் செய்கிறார்களே - பார்த்தீர்களா?

அன்புடன்,
வாத்தியார்!

வாழ்க வளமுடன்!

15.7.08

ஜோ + இடம்: என்னதான் இதயத்திலே - பகுதி இரண்டு!


முதல் பகுதியைப் படித்திராதவர்கள், படித்துவிட்டு வாருங்கள்!
சுட்டி ஸைடுபாரில்!

1.மேஷம், சிம்மம், தனுசு! (அதிபதிகள் முறையே: செவ்வாய், சூரியன், குரு)
2.ரிஷபம், கன்னி, மகரம்! (அதிபதிகள் முறையே: சுக்கிரன், புதன், சனி)
3.மிதுனம், துலாம், கும்பம்! (அதிபதிகள் முறையே: புதன், சுக்கிரன், சனி)
4.கடகம், விருச்சிகம், மீனம்!(அதிபதிகள் முறையே: சந்திரன், செவ்வாய், குரு)

இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
இதைச் சற்று அலசிப் பார்த்தீர்கள் என்றால் அசத்தலாக ஒரு விபரம் தெரிய வரும்!

சூரியன், சந்திரன், செவ்வாய், குரு இந்நான்கும் ஒரு கட்சி / கூட்டணி!

புதன், சுக்கிரன், சனி இம்மூன்றும் ஒரு கட்சி / கூட்டணி!
(நகைச்சுவைக்காக எதிர்க் கட்சி என்று வைத்துக்கொள்வோம்)

கூட்டணிகள் ஒன்றாக இருந்தாலும், அந்தக் கூட்டணிக்குள் உள்ள ராசி ஒன்றை
ஐந்தாம் இடமாகப் பெற்றவர்களின் குணங்கள் (Characters) ஒரே மாதிரி இருக்காது
1, 2, 3 & 4 என்ற அணிகளுக்கிடையே உள்ள ராசி அதிபதிகளையும் பாருங்கள்

உதாரணத்திற்கு முதல் எண்ணை எடுத்துக்கொள்ளுங்கள் 1.மேஷம், சிம்மம், தனுசு!
(அதிபதிகள் முறையே: செவ்வாய், சூரியன், குரு)
மேஷத்தை ஐந்தாம் இடமாகப் பெற்றவர்களின் குணம் செவ்வாயை வைத்துப் பிரதான
மாகவும், சிம்மத்தை ஐந்தாம் இடமாகப் பெற்றவர்களின் குணம் சூரியனை வைத்துப்
பிரதானமாகவும், தனுசுவை ஐந்தாம் இடமாகப் பெற்றவர்களின் குணம் குருவைவைத்துப்
பிரதானமாகவும் இருக்கும். இப்படி 12 ராசிகளை ஐந்தாம் இடமாகப் பெற்றவர்களின்
அறிவு, குணம் எல்லாம் முற்றிலும் வேறுபடும்

ஒரே வீட்டில் பிறந்த அண்ணன் தம்பிகள் மூவர் என்றாலும் மூவரும் ஒரே போலவா
இருக்கிறார்கள்?

இத்துடன், ஐந்தாம் அதிபதி சென்று அமரும் இடம், ஐந்தாம் இடத்தில் வந்து அமரும்
கிரகத்தின் தன்மை, ஒன்றிற்கு மேற்பட்ட கிரகம் அமர்ந்தால் அவர்களின் சேர்க்கை,
அதோடு அந்த ஐந்தாம் இடம் பார்வை பெறும் கிரகங்களின் தன்மை என்று
கணக்கிட்டுக் கொண்டே போனால் எங்கேயோ போய் நிற்கும். தலை சுற்றும்!

ஆகவே பொறுமையாக சொல்வதை உள்வாங்கிக் கொள்ளுங்கள். பிறகு அலசி
ஆராய்ந்து ஒரு முடிவிற்கு வாருங்கள்.

இப்போது முதல் மேடைக்குப் போவோம்:

ஐந்தாம் இடத்தின் அதிபதி சென்று அமரும் இடத்தின் பலன்:

அதாவது உங்களுக்கு சிம்ம லக்கினம் என்று வைத்துக் கொண்டால் - தனுசு
உங்களுடைய ஐந்தாம் வீடு - அதற்கு அதிபதி குரு எங்கே இருக்கிறார்
என்று பார்த்தால் அவர் லக்கினத்தில் இருந்து உள்ள 12 கட்டங்களில் எங்கே
வேண்டுமென்றாலும் ஜாதகத்தில் இருக்கலாம். அப்படி அவர் (That is 5th lord)
இருக்கும் இடம், அதன் பலன் பற்றித்தான் இப்போது பார்க்கப் போகிறோம்!

ஐந்தாம் இடத்தின் அதிபதி சென்று அமரும் இடத்தின் பலன்:

5th lord 1ல் இருந்தால்:

மிகவும் நல்லது. அதோடு நல்ல சேர்க்கையும், பார்வையும் பெற்றிருந்தால்
தலைமைப் பதவி தேடிவரும். நிறைய வேலை ஆட்கள் இருப்பார்கள். அமைச்சராகக்
கூட ஆகலாம், நீதிபதியாகவும் ஆகலாம். (அது பத்தாம் இடத்துடனும் சம்பந்தப்பட்ட
தாகையால், நான் ஆணிபிடுங்கும் கம்பெனியில் டீம் லீடராக இருக்கிறேன். எனக்கு
எப்படி நீதிபதி பதவி தேடி வரும் என்று யாரும் பின்னூட்டத்தில் கேட்க வேண்டாம்.
அந்த டீம் லீடர் பதவி கூட தலைமைப் பதவிதானே!)

அதே நேரத்தில் 5th lord ஒன்றில் அமர்ந்தும், தீய கிரகங்களின் பார்வை, அல்லது
சேர்க்கை பெற்றிருந்தால் மேலே கூறியவற்றிற்கு எதிரான பலன்களே நடைபெறும்

சராசரி சேர்க்கை என்றால் மிக்சட் ரிசல்ட்!
-------------------------------------------------------------------------------

5th lord 2ல் இருந்தால்:

If favourably disposed as said in the earlier paragraph:
அழகான மனனவியும், அன்பான குழந்தைகளும் கிடைப்பார்கள்.படித்தவராக
இருப்பார். அரச மரியாதை கிடைக்கும்.

If not favourably disposed:
தரித்திரம் தாண்டவமாடும், தன் குடும்பத்தை வழி நடத்தவே சிரமப் படுவார்.
மற்றவர்களின் எரிச்சலுக்கும், அவமரியாதைகளுக்கும் ஆளாக நேரிடும்.
-------------------------------------------------------------------------------
5th lord 3ல் இருந்தால்:

If favourably disposed: நல்ல குழந்தைகளும், நல்ல சகோதரன்,நல்ல சகோதரிகள்
கிடைப்பார்கள். இங்கே நல்ல என்ற வார்த்தையில் எல்லாம் அடக்கம்!

If not favourably disposed: Loss of chidren, misunderstanding with brothers and
sisters, troubles in work or in business.

-------------------------------------------------------------------------------------------------
5th lord 4ல் இருந்தால்:

If favourably disposed: நல்ல, நீண்ட நாட்கள் உயிர் வாழும் தாய் கிடைப்பார்.
அரசுக்கு (வருமானவரி) ஆலோசகராக இருப்பவர். அல்லது அது சம்பந்தப்பட்ட
தொழில் செய்பவர்.

If not favourably disposed: பெண் குழந்தைகள் மட்டும் உடையவராக இருப்பார்.
---------------------------------------------------------------------------------------------------
5th lord 5ல் இருந்தால்:

If favourably disposed: அதிகமாக ஆண் குழந்தைகளை உடையவர். அவருடைய
செயல்களில் தொழிலில் மேன்மை அடைபவராக இருப்பார்.பல சாஸ்திரங்களில்
ஈடுபாடு உடையவர்.எல்லோரிடமும் நட்பாக இருப்பவர். கணக்கில் கெட்டிக்காரர்.

If not favourably disposed: எதிர்பார்த்தது எதுவும் நடக்காமல் அவதியுறுவார்.
குழந்தைகள் இறக்கும் அபாயம் உண்டு. வார்த்தைகள் தவறுபவர். சலன மனம்
உடையவர்.
----------------------------------------------------------------------------------------------------
5th lord 6ல் இருந்தால்:

பெற்ற பிள்ளைகளுடனேயே விரோதம் உண்டாகும். குழந்தை பாக்கியம் குறைவு.
தத்துப் பிள்ளை எடுத்து வளர்க்க வேண்டியவர்.
------------------------------------------------------------------------------------------------------
5th lord 7ல் இருந்தால்:

If favourably disposed: நல்ல குழந்தைகளை உடையவர்.அதிகமான குழந்தைகளை
உடையவர். அவர்களால் பொன்னும், பொருளும் , செல்வமும் பெறக்கூடியவர்.
செழிப்பான வாழ்க்கை அமையும். குருபக்தி மிக்கவர்.வசீகரத்தோற்றமுடையவர்.

If not favourably disposed: குழந்தைகளைப் பறிகொடுக்க நேரிடும். பெயரும், புகழும்
பெற்ருத்திகழும் குழந்தைகளைக்கூட பறி கொடுக்க நேரிடும்

-------------------------------------------------------------------------
5th lord 8ல் இருந்தால்:

மூதாதையர் சொத்துக்கள் கிடைக்காது.அப்படியே கிடைத்தாலும் அவற்ரைக்
கடனுக்காக இழக்க நேரிடும். Lungs Problem உண்டாகும். மகிழ்ச்சி இல்லாதவர்
Unhappy man but not poor!
------------------------------------------------------------------------------------------------------
5th lord 9ல் இருந்தால்:

If favourably disposed: கோவில், குளம் என்று திருப்பணிகள் செயக்கூடியவர்.
சொற்பொழிவாளர், பெரிய கவிஞர் அல்லது எழுத்தாளர், பேராசான்.

If not favourably disposed: அதிர்ஷ்டமில்லாதவர். முயற்சிகள் எல்லாம்
தட்டிக்கொண்டு போய்விடும். நடக்காது போய்விடும்
---------------------------------------------------------------------------------------
5th lord 10ல் இருந்தால்:

If favourably disposed: ராஜயோகம்.ஏராளமான சொத்துக்கள் (Landed properties)
சேரும். அரச மரியாதை கிடைக்கும். அவருடைய குடும்ப உறவுகளில் அவருக்குத்தான்
முதல் மரியாதை கிடைக்கும்.

If not favourably disposed: மேலே கூறியவற்றிற்கு எதிர்மறையான பலன்கள்.
--------------------------------------------------------------------------------------
5th lord 11ல் இருந்தால்:

எடுக்கும் காரியம் எல்லாவற்றிலும் வெற்றியும், நன்மையும் கிடைக்கும். செல்வந்தராகி
விடுவார். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வார். அதிகமான குழந்தைகள் இருக்கும்!
-------------------------------------------------------------------------------------
5th lord 12ல் இருந்தால்:
எதிலும் பற்றின்மை உண்டாகும், வேதாந்தியாகிவிடுவார். பல இடங்களிலும்
அலைந்து திரிபவர். பிடிப்பு இல்லாதவர்

------------------------------------------------------------------------------------
இப்போது ஐந்தாம் இடத்தில் வந்து அமரும் கிரகங்களுக்கான பலன்கள்.
Planets in the 5th house!

சூரியன்:
குழந்தைப் பேறைக்குறைக்கும். மகிழ்ச்சியைக் குறைக்கும். இதய நோய்களை
உண்டாக்கும். குழந்தைகள் பிறந்தாலும் அவர்களிடமிருந்து பிரிவை உண்டாக்கும்
காடுகளிலும், மலைகளிலும் சுற்றித்திரிய வைக்கும். மொத்தத்தில் பார்வை, ஐந்தாம்
வீட்டு அதிபதி சென்று அமர்ந்த இடம் போன்ற வேறு நல்ல அமைப்புக்கள்
இந்த வீட்டிற்கு இல்லாதபோது, சூரியனின் அமர்வு நல்லதல்ல!

சந்திரன்:
தெளிவான மனதை உடையவர். அறிவு ஜீவி,(highly intelligent) குழந்தைகளால்
இன்பம், இடம் சொத்துக்களின் சேர்க்கை, படித்தவர், உண்மையானவர் என்ற
நிலைப்பாட்டை உண்டாக்கும். மிகுந்த இறை நம்பிக்கை உள்ளவர். இவருடைய
குழந்தைகளின் ஒன்று மிகவும் புகழ் பெற்று, வயதானகாலத்தில் இவருக்கு
மகிழ்ச்சியை உண்டாக்கும்

செவ்வாய்:
மனைவிக்கு துயரங்கள் ஏற்படும். மனைவிக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும்
அது ஏற்படும்.தொல்லை தரும் சிந்தனைகளை உடையவர், மகிழ்ச்சி இல்லாதவர்,
அதிரடியானவர், பலகீனமான மனதுடையவர். தன்னுடைய குழந்தைகளால்
துரதிர்ஷ்டங்களைச் சந்திக்க உள்ளவர். 'அந்த' விஷயத்தில் மிகவும் ஆர்வமுடையவர்
'அந்த' விஷயத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர். இது பெண்ணின் ஜாதகம் என்றால்
குழந்தை பிறப்பில் சிக்கல்களைச் சந்திக்க வேண்டியதிருக்கும்.

புதன்:
மிகவும் படித்தவர், கல்வியாளர், மகிழ்ச்சி நிரம்பியவர். அதிகக் குழந்தை
களை உடையவர். அரசு ஆலோசகராக அல்லது நிறுவனங்களில் ஆலோசகராக
இருக்கக் கூடியவர். அதீத புத்திசாலியாகவும், சாஸ்திரங்களில் ஈடுபாடு
கொண்டவராகவும் இருப்பார். 'அந்த' விஷயங்களில் ஆதீத ஆர்வம் உடையவராக
இருப்பவர். அதே நேரத்தில் அதற்குத் தேவையான் சக்தி (vitality) குறைபாடு
களும் உடையவர்.

குரு.
படித்தவர், சட்டத்துறையில் வேலை என்றால் (it is concerned with 10th house)
அதில் சிகரம் வரைக்கும் சென்றுவிட்டு வரக்கூடியவர். அதீத புத்திசாலி.
விவாதத்தில் இவருடன் ஜெயிப்ப்பது சிரமம். சாஸ்திரங்கள், சம்பிரதாயங்களில்
ஈடுபாடு கொண்டவர். அரசு ஆலோசகர் அல்லது நிறுவன ஆலோசகராக வரக்
கூடியவர் (advisor). அதிகமான நண்பர்கள், குழந்தைகளை உடையவர். உடையவர்
என்பதுமட்டுமல்ல, அவர்களோடு நன்கு வாழவும் தெரிந்தவர்.

சுக்கிரன்;
கவிஞர். உள்ளத்தில், சிலர் எழுத்தில். செல்வம் சேரக்கூடியவர். அழகான
குழந்தைகளை உடையவர். எப்போதும் மகிழ்ச்சியை உடையவர். அரசமரியாதை
கிடைக்கக்கூடியவர் அதிகமாகப் பெண் குழந்தைகளை உடையவர். பங்குவணிகம்,
ஊகவணிகங்களில் வெற்றி பெறக்கூடியவர்.

சனி:
குழந்தைகளால் மகிழ்ச்சியை இழக்கக்கூடியவர். அதிர்ஷ்டமும், துரதிர்ஷ்டமும்
மாறி மாறி ஏற்படும். நண்பர்களிடமும், உறவினர்களிடமும் வாதிட்டு சண்டையிடக்
கூடியவர் குடும்ப வாழக்கையில் துயரங்கள் நிறைந்தவர். பாவ சிந்தனைகள் உடையவர்.
மூடர், வறியவர், மற்றவர்களால் வெறுக்கப்படக்கூடியவர் (Evil minded and Stupid.
sickly and week, poor and hated by others) இந்த குணங்களில் எல்லாக் குணமும்
இருக்கலாம். அல்லது ஜாதகத்தின் வேறு அமைப்பை வைத்து சிலது மட்டும்
இருக்கலாம்.

ராகு:
கல்மனது உடையவர். நட்பிற்கு லாயக்கில்லாதவர். மற்றவர்களால் எப்பொதுமே
தவறாகக் காட்சியளிப்பவர். சமூக நடப்பிற்கு ஒத்துவராதவர். இதயநோய்
உண்டாகலாம் குழந்தைகளைப் பறிகொடுத்துத் துயரங்களை அனுபவிக்கவும்
நேரலாம். மொத்ததில் வேறு நல்ல அமைப்பு ஜாதகத்தில் இல்லை என்றால்
இந்த ராகுவின் அமர்வு ஆளைப் படுத்தி எடுத்துவிடும்!

கேது:
குழந்தைகள் இழப்பு.(வயதில் எந்த வயதில் வேண்டுமென்றாலும்) வயிற்று உபாதைகள்
உடையவர். வித்தியாசமான உணர்வு (உணர்ச்சி) அனுபவங்கள் ஏற்படக்கூடியவர்.
வயதான காலத்தில் ஆன்மீகம், வேதங்களில் ஈடுபாடு உண்டாகும். வயதான காலத்தில்
துறவுச் சிந்தனை மேலோங்கி வரும். சிலர் ஆசிரமங்களில் போய்ச் சேர்ந்துவிடுவார்கள்

சொன்னவை அத்தனையுமே பொதுவிதிகள். தனிப்பட்ட ஜாதகங்களில் உள்ள கிரக
அமைப்புக்களை வைத்து இந்தப் பலன்கள் கூடலாம் அல்லது குறையலாம்

In short, the above results will change or gets modified by association or aspects
of other lords!

இதெல்லாம் பொது விதிகள் மட்டுமே! கிரக சேர்க்கைகள், மற்றும் கிரக
பார்வைகளை வைத்துப் பலன்கள் மாறுபடும். அதை மனதில் கொள்க!

இந்த ஐந்தாம் பாவத்தைப் பொறுத்தவரை தேவையான அளவு பாடத்தை
நடத்திவிட்டேன். மற்றபடி உங்கள் அனுபவம் மூலம் மேலும் சிலவற்றை
நீங்கள் கற்றுக்கொள்ள வாழ்த்துக்கள்!

அனுபவம் (by speaking or by seeing or by assessing different horoscopes)
உங்களுக்கு வித்தியாசமான அறிவையும், ஆற்றலையும் தரும்.

தட்டச்ச மிகவும் சிரமப்பட்டேன். ஈகலப்பை படுத்தி எடுக்கிறது. இருந்தும்
இரண்டு நாள் பாடங்களை ஒரே பகுதியாகக் கொடுத்துள்ளேன். இதை
ஆழ்ந்து படியுங்கள். உங்களுக்கு உள்ள பகுதியை மட்டும் படித்துவிட்டு
சார், அடுத்த பாடம் எப்போது என்று கேட்காதீர்கள்:-)))

இங்கே படிப்பவர்களில் இரண்டு வகை இருக்கிறது. உண்மையில் ஜோதிடத்தைக்
கற்றுத் தெளிய ஆர்வமுள்ளவர்கள் முதல்வகை!. இரண்டாவது பிரிவினர்
ஜாதக நோட்ஸ்களுடன் அவர்கள் ஜாதகத்தை மட்டும் ஒத்துப்பார்த்துவிட்டு
மற்றதைக் கடாசி விடுபவர்கள். அப்படிச் செய்யாதீர்கள். அப்படிச் செய்தால்
சத்தியமாக ஜோதிடம் உங்களைத் திரும்பிப் பார்க்காது! அதாவது உங்களுக்கு
வசப்படாது!!!!!!

Without dedication, you can't learn anything!

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

14.7.08

நமீதாவின் பிரம்மாண்டமும் ஜோதிடத்தின் பிரம்மாண்டமும்!

நமிதாவின் புதுப்படத்தைப் போட்டுக்காட்டியபோது, என் இனிய தமிழ் மக்களே
என்று படத்திற்குப் படம் அன்பொழுக அழைக்கும் இயக்குனர் சொன்னாராம்:

"படத்தில் நமீதா மட்டுமே பிரம்மாண்டமாக இருக்கிறார்"

அப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொன்று பிரம்மாண்டமாகத்
தோன்றும்.

ஆனால் இறைவனின் படைப்பில் பிரபஞ்சம் மட்டுமே என்றைக்கும் பிரமாண்டமானது

அதன் ஒவ்வொரு பகுதியும் பிரம்மாண்டமானது!

இங்கே கோவையிலிருந்து யானைக்கட்டி செல்லும் சாலையில் 18 கிலோமீட்டர் தூரம்
சென்று, தடாகம் முருகன் கோவிலுக்கு அந்த சாலை பிரியும் இடத்தில் நின்று
கொண்டு சுற்றிலும் உள்ள மலைகளையும், அதற்குப் பின்புறம் சில்லவுட்டில் தெரியும்
மேற்குத் தொடர்ச்சி மலைகளையும் பார்த்தால்தான், இறைவனின் படைப்பு எவ்வளவு
பிரம்மாண்டம் என்று தெரியும்.

அதுபோல ஜோதிடத்தின் அடிப்படை விதிகளைப் படித்துவிட்டு, அதன் அடுத்த
பகுதிக்குச் செல்பவனுக்கு அதன் பிரம்மாண்டம் தெரியும்.

கட்டுரையின் நீளம் கருதி, சுருக்கமாக ஜோதிடத்தின் இரண்டு நிலைகளை இன்று
உங்களுக்குச் சொல்கிறேன். அப்போதாவது உணருங்கள் அது எத்தனை பிரம்மாண்ட
மானது என்று!

முடியாதவர்களும், விரும்பாதவர்களும் நமீதாவின் படத்தோடு கழன்று கொள்வது
நல்லது!:-)))
----------------------------------------------------------------------------------------------
ஒருவரிடம் கேட்டுப் பாருங்கள். உங்கள் ஜாதகம் போலவே இன்னொருவருக்கு
அமைய வேண்டும் என்றால் எத்தனை நாட்களாகும்?

ஒவ்வொருவரும் ஒரு பதிலைச் சொல்வார்கள்.

என் நண்பர் ஒருவரிடம் கேட்டபோது சொன்னார்:"அறுபது வருடங்களில் அதே
போன்ற ஜாதகம் கிடைக்கும். அதனால் அறுபதாவது பிறந்த நாளைக் கொண்டாடு
கிறோம்!

எவ்வளவு அறியாமை ?

அப்போ அறுபது வயதில் அவரைப்போலவே இன்னொருவர் பிறப்பாரா?
அறுபது ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு இந்திரா காந்தி பிறப்பரா?
அறுபது ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு கலைஞர் மு.க. பிறப்பரா?

இல்லை! அது அறிவின்மை!
----------------------------------------------------------------------------------------
இப்பொது சொல்லுங்கள் உங்கள்:

ஜாதகம் போலவே 100% ஜாதகம் அமைந்த இன்னொருவர் பிறக்க எத்தனை
ஆண்டுகள் ஆகும்?

யோசித்து விட்டு ஸ்க்ரோல் டவுன் செய்து பாருங்கள்
V
V
V
V
V
V
V
V
V
V

குரு ஒரு சுற்றை முடிக்க எடுத்துக்கொள்ளும் காலம் 12 ஆண்டுகள்
சனி ஒரு சுற்றை முடிக்க எடுத்துக்கொள்ளும் காலம் 30 ஆண்டுகள்
ராகு ஒரு சுற்றை முடிக்க எடுத்துக்கொள்ளும் காலம் 18 ஆண்டுகள்

இந்த மூன்று கிரகங்களும் நீங்கள் பிறந்த தினத்தில் வானத்தில் இருந்த
இடத்தில் இருந்து மீண்டும் அதே இடத்திற்கு வந்து சேர ஆகும்
ஆண்டுகள் = 12 x 30 x 18 = 6,480 ஆண்டுகள் ஆகும்.

அதோடு, சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன் சுழற்சியையும்
அவைகளும் அதே நிலைக்குத் துல்லியமாக வந்து சேர அவற்றையும்
பெருக்கி அத்துடன் கூட்டிக் கொண்டு பாருங்கள் தலை சுற்றும்

இது நீங்கள் பிறந்த நாள் கணக்கு மட்டும்தான். இன்னும் லக்கினமும்
வேண்டுமென்றால், மறுபடியும் to be multiplied by 12

விடை ஒரு யுகம் ஆகும். ஒரு யுகத்திற்கு ஒரு உங்களுடையதைப் போன்ற
ஜாதகம் ஒரு ஜாதகம்தான்.

நமக்கு யுவனைத் தெரியும் (இளையராஜாவின் மகன்) யுகத்தைத் தெரியாது!

தெரியாதவர்கள் சொல்லுங்கள் அறியத் தருகிறேன்!
------------------------------------------------------

12 ராசிக் கட்டங்களை வைத்து ஜாதகங்களை எழுதுகிறோம், அதில் லக்கினமும்
ஒன்பது கோள்களும் இருக்கும் இடங்கள் (டிகிரியுடன்) குறிப்பிடப்பட்டிருக்கும்

அதை மாதிரியாக வைத்துக் கொண்டு விதம் விதமான ஜாதகங்களை உருவாக்கிக்
கொடுங்கள் என்று உங்களிடம் சொன்னால், உங்களால் எத்தனை ஜாதகங்களை
உருவாக்கிக் கொடுக்க முடியும்?

சட்டென்று உங்களால் விடை சொல்ல முடியாது!

இப்போது சொல்லித் தருகிறென். நினைவில் வைத்துக் கொண்டு யாரும் கேட்டால்
பொட்டென்று அடியுங்கள் (வாயால்)

ஒரு லக்கினம் + ஒன்பது கோள்கள் = 10 X 12 ராசிகள் = Ten to the power
of Twelve = One followed by Twelve zeros = 100,000,00,00,000

permutation combination

பாதிப்பேர்கள் பொறியாளர்கள்தானே? கணக்கிட்டுப் பாருங்கள்

ஒரு லட்சம் கோடி ஜாதகங்களை எழுதலாம்!
இன்றைய உலக ஜனத்தொகை வெறும் 700 கோடிகள்தான்!-)))

எல்லாம் கணக்கு அய்யா, கணக்கு!

கிளியைவைத்து அறுபது அட்டைகள் என்ற கணக்கில்லை

முழுவதும் தெரிந்தால் உங்களைப் பிரம்மிக்க வைக்கும் கணக்கு!

(தொடரும்)



வாழ்க வளமுடன்!

11.7.08

நேரம் நல்ல நேரம்; தேர்வு எழுதும் நேரம்!

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தேர்வு இன்று நடைபெறுகிறது. விடைகளை
இப்போதே எழுத வேண்டும் என்ற அவசியம் இல்லை! வீட்டிற்குக்கொண்டு போய்
சாவகாசமாக யோசித்து எழுதலாம்.

இல்லை பழைய பாடங்களைப் புரட்டிப் பார்த்து நிதானமாகப் பதில் எழுதலாம்.

அல்லது கல்கிதாசன், அறிவன், தமாம்பாலா போன்ற மூத்த மாணவர்களைக்
கேட்டு எழுதலாம். நான் கண்டு கொள்ள மாட்டேன்.

ஆனால் காப்பி மட்டும் அடிக்க முடியாது! ஏனென்றால் பின்னூட்டப் பெட்டியைப்
பூட்டிவிட்டேன். திறந்து வைத்தால் ஒருவர் எழுதியுள்ள பதிலைப் பார்த்து அடுத்தவர்
எழுதி விடும் அபாயம் உள்ளது!

உங்களுக்கு எழுதக் கொடுத்துள்ள அவகாசம் 60 மணி நேரம். உலகத்தில் எந்த
வகுப்பறையிலும் இந்த வசதி உங்களுக்குக் கிடைக்காது!

Deadline for submitting your answer is on or before10.00 AM on 14.07.2008
அதுவரை பின்னூட்டப் பெட்டி திறக்கப்படமாட்டாது!
--------------------------------------------------------------------------------------------------------------------------------
நம் தேசத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரின் பிறப்பைக் குறித்த விவரங்களைக்
கீழே கொடுத்துள்ளேன். நீங்கள் அந்தக் குறிப்பைவைத்து அவருடைய ஜாதகத்தைக்
கணித்துக் கொள்ளுங்கள்.
(சைடு பாரில் உள்ள மென்பொருள் அதற்கு உதவும் என்பது நீங்கள் அறிந்ததே!)

கேட்கப்பட்டுள்ள கேள்விகள் பத்தும் அந்த ஜாதகம் சம்பந்தப்பட்டதுதான். தெரிந்த
வரை, முடிந்தவரை பதில் எழுதுங்கள். தேர்வு என்று எடுத்துக் கொள்ளாமல் பயிற்சி
என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

ஒவ்வொரு சரியான பதிலுக்கும் பத்து மதிப்பெண்கள்.

பெயர்: தேதியைப் பார்த்தாலே தெரியும்!
தேதி: அக்டோபர் 2 வருடம் 1869
நேரம்: காலை 7.20
ஊர்: போர்பந்தர் (Porbander)
அட்சரேகை Longitude 69.49.E
தீர்க்கரேகை (Longitude) 21.37 N
Time Zone: 4.39.16 East of GMT
நட்சத்திரம்: அனுஷம்
லக்கினம்: துலாம்

க்ளூ வேண்டுமா? அவருடைய படம் கீழே உள்ளது:-))))))


++++++++++++++++++++++++++++++++++++++++++++
கேள்விகள்:

1. பதினைந்து வயதிலேயே தன் தந்தையைப் பறி கொடுத்தவர் அவர். அதற்கு
ஜாதகப்படியான காரணம் என்ன?

2. அவர் பார்-அட்-லா என்னும் உயரிய பட்டப் படிப்பை லண்டனுக்குச் சென்று
படித்தவர் அதற்கு ஜாதகப்படியான காரணம் என்ன?

3. படித்த படிப்பிற்கான வேலையைப் பாதி வயதிலே விட்டு விட்டவர்.அதற்கு
ஜாதகப்படியான காரணம் என்ன?

4. பிறகு தான் பிறந்த தேசத்திற்காக முழுக் கவனத்தையும், உழைப்பையும்
ஈந்தார் அல்லது கொடுத்தார்.அதற்கு ஜாதகப்படியான காரணம் என்ன?

5. அப்படிக் கொடுத்தாலும், தேசம் சுதந்திரம் அடைந்தபிறகு ஒருநாள் கூட
அவர் அரியனையில் அமரவில்லை! பதவியில் உட்காரவில்லை! அதற்கு
ஜாதகப்படியான காரணம் என்ன?

6. ஒரு வல்லரசையே எதிர்த்துப் போராடினார். அதற்கு ஜாதகப்படியான
காரணம் என்ன?

7. வாழ்க்கையில் அவர் அனுபவித்தது கஷ்டங்களை மட்டுமே! சுகமான,
ஆடம்பரமான வாழ்வு வாழ்வில்லை! அதற்கு ஜாதகப்படியான காரணம் என்ன?

8. மனப்போராட்டம் இல்லாத நாளே இல்லை என்னும்படியான வாழ்க்கை
அவருடைய வாழ்க்கை அந்த நிலை ஏற்பட்டதற்கு ஜாதகப்படியான
காரணம் என்ன?

9. உலகப் புகழ் பெற்றார். அதில் மாற்றுக்கருத்து இல்லை! அதற்கு
ஜாதகப்படியான காரணம் என்ன?

10. இறுதியில் அகால மரணம் அடைந்தார்!அதற்கு ஜாதகப்படியான
காரணம் என்ன?

--------------------------------
எங்கே முடிந்தவரை பதில் எழுதுங்கள்.

40 மார்க்குகள் வாங்கினால் பாஸ்!
20 மார்க்குகள் வாங்கியவர்கள் அரைக்கிணறு தாண்டியவர்கள்:-))))
10ற்குக் கீழே வாங்குபவர்கள் மீண்டும் இதுவரை நடத்தப்பட்டுள்ள
அனைத்துப் பாடங்களையும் பெஞ்ச் மேல் நின்று மறுபடியும் ஒருமுறை
படிக்க வேண்டியதுதான். வேறு வழியில்லை!;-)))))

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!
--------------------------------

10.7.08

ஜோதிடமும் மருத்துவர்களும்!

Astrology and Doctors interested in Astrology!

நம்மைச் சுற்றி எத்தனையோ ஒளி, ஒலிக் கதிர்கள் இங்கும் அங்கும் வட்டமடித்துக்
கொண்டிருக்கின்றன.வானொலி, பண்பலை, அலைபேசி அலைகள், காவல் துறையின்
வாக்கி டாக்கி அலைகள், தொலைக்காட்சிகளின் செயற்கைகோள் அலைகள் என்று
எண்ணிக்கையற்ற ஒலி மற்றும் ஒளிக் கற்றைகள் சூழ்ந்திருக்கின்றன.

அவற்றை நம்மால் அறிய முடியாது. அததற்குத் தகுந்த கருவிகள் இருக்கும் போது
அவைகள் நமக்கு வசப்படும்.

நம் கண்களுக்குத் தெரிவதில்லை என்பதனாலேயே அவற்றை இல்லை என்று
சொல்லி விட முடியாது.

அதேபோல வானில் உள்ள கோள்களில் இருந்தும் கதிர் அலைகள் வந்து கொண்டி
ருக்கின்றன. அவைகள் நம்மை எப்படிக் கட்டுப் படுத்துகின்றன என்பதை மட்டும்
இதுவரை யாரும் அறிய முடியவில்லை!ஆனால் கட்டுப்படுத்துகின்றன!

விஞ்ஞானிகள் அதை அறிய முயற்சி செய்யவும் இல்லை! அதுதான் சோகமானது!

ஆனால் மருத்துவர்கள் பலர் அதைப் பற்றி ஆராய்ந்து வருகிறார்கள்.

நம் சகபதிவர் டாக்டர் ப்ரூனோ அவர்களைப் போல ஜோதிடத்தில் ஆர்வமுள்ள
பல மருத்துவர்கள் தங்கள் தொழிலுக்கிடையேயும் அதற்கு நேரம் ஒதுக்கி
ஆராய்ந்து வருகிறார்கள்.

பெளர்ணமியன்று கடலிலும், ஆறுகளிலும், ஏன் எல்லா நீர் நிலைகளிலுமே நீரின்
ஓட்டம் ஆதிகமாக இருக்கும். அதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்தபோது
சந்திரன் அந்த நாட்களில் சூரியனுக்கு நேர் கோட்டில் எதிரில் இருப்பதால்
அன்று மட்டும் சந்திரனில் இருந்து வரும் கதிர் வீச்சு அதிகமாக இருக்கும் என்று
கண்டுபிடித்தார்கள்.

The magnetic rays from moon is more on that day and it affects all the watery bodies
என்று கண்டு பிடித்தார்கள். அதே காரணம்தான் மன நோயாளிகளுக்கு அன்றைய
தினம் மன அழுத்தம் அதிகமாக இருக்கும் என்றும் கண்டு பிடித்தார்கள்.

அதனால் அறுவை சிகிச்சையை அன்று செய்யாதே, நோயாளிக்கு ரத்தப் பெருக்கு
அதிகமாக இருக்கும் என்றும் சொல்லிவைத்தார்கள். இந்த உண்மையை இன்று
எத்தனை மருத்துவர்கள் அறிவார்களோ தெரியவில்லை!

உங்களுக்காவது தெரியட்டும் என்று அவற்றைத் தொகுத்துக் கொடுத்துள்ளேன்.
பொறுமையாகப் படித்து அவற்றைத் தெரிந்து கொள்ளுங்கள்!

என்னிடம் நான் முப்பது ஆண்டுகளாகச் சேகரித்த புத்தகங்கள், கட்டுரைகள்,
பேப்பர் க்ளிப்பிங்ஸ் என்று ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. தொடர்ந்து
இன்னும் பத்து வருடங்களுக்குப் பதிவுகள் எழுதலாம். அப்படியெல்லாம்
எழுதி உங்கள் பொறுமையைச் சோதிக்கப்போவதில்லை. எனக்கும்
அதற்கெல்லாம் நேரமும் இல்லை! அடிப்படைப் பாடங்களை நடத்திவிட்டு
விட்டு விடலாம் என்று உள்ளேன்

அந்த மாதிரிக்கட்டுரைகளை எழுதிவர்கள் பலத்த ஆராய்ச்சிகளுக்கிடையே
பல மாதிரி ஜாதகங்களுடன் விரிவாகவும், சுவாரசியமாகவும் எழுதியுள்ளார்கள்
அவற்றை எல்லாம் எடுத்து எழுதினால் A4 Sizeல் பத்தாயிரம் பக்கங்கள்
எழுதலாம். அவற்றையெல்லாம் மொழிபெயர்த்து எப்படி வலையில் ஏற்றுவது?

அத்துடன் காப்பி ரைட் பிரச்சினைகள் வந்து சேரும்.

கேன்சர் என்றால் கேன்சர் பேஷண்ட்டுகளாக நூறுபேரின் ஜாதகங்களை வாங்கி
அலசி ஆராய்ந்து எழுதியுள்ளார்கள். அதே போல இஞ்சினியர்கள், ஆடிட்டர்கள்
வங்கியாளர்கள் என்று ஒரு துறையைக் கூட விட்டுவைக்கவில்லை. காலசர்ப்ப
தோஷம், விதவை தோஷம், தரித்திர யோகம் என்று ஒன்றையும் விட்டு வைக்க
வில்லை!

ஒரு வரியில் சொன்னால் சூப்பராக இருக்கும்!

முடிந்தால் சிறு குறிப்புக்களை மட்டும் பின்னால் அதனதன் தலைப்பில் தருகிறேன்
------------------------------------------------------------------------------------------
இதய அறுவை சிகிச்சை நிபுனர் டாக்டர் மந்த்கே பெளர்ணமியன்று அறுவை
சிகிச்சை செய்தால் ரத்தப் பெருக்கு அதிகரிக்கும் என்று சொல்லியுள்ளதைக்
கீழே கொடுத்துள்ளேன்.

படங்களின் மீது கர்சரை வைத்து அழுத்தினால படங்கள் பெரிதாகத் தெரியும்!

-------------------------------------------------------------
கீழே உள்ள படம் ரஷ்ய டாக்டரின் படம். அவர் அறுவை சிகிச்சை நிபுணர்.
அதோடு ஜோதிடத்தையும் முறையாகக் கல்லூரியில் கற்றவர். அறுவை
சிகிச்சையையும் ஜோதிடத்தின் தொடர்பையும் பற்றி சொல்லியிருக்கிறார்.
முழுதாகப் படித்துப் பாருங்கள்

ரஷ்ய டாக்டருக்கு, பகுத்தறிவைச் சொல்லிக் கொடுக்க ஆள் இல்லாமல்
போய்விட்டது போலிருக்கிறது. அதனால்தான் அந்த மனிதர் ஜோதிடத்தைப்
படித்ததோடு இல்லாமல் ஆராய்ச்சிகள் வேறு செய்திருக்கிறார். ரஷ்யாவில்
உள்ள கம்யூனிஷ்ட்டுக்கள் ஜோதிடத்தை எப்படி விட்டு வைத்தார்கள் என்பது
தெரியவில்லை!








--------------------------------------------------------------------------------------------
The Article written by Dr.R Chandrasekaran in The Hindu in the year 1991


--------------------------------------------------------------------------------
டாக்டர் எஸ்.என் ராவ் என்பவர் ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார் மாதிரிக்கு ஒன்று

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
டாக்டர் ராஜேஷ் கோயல்M.B.BS. M.D (கவனிக்கவும் அறுவை சிகிச்சை நிபுணர்) அவர்கள்
எழுதியுள்ள பல கட்டுரைகளில் மாதிரிக்கு ஒன்று!



-----------------------------------------------------------------------
டாக்டர் எஸ்.என் ராவ் என்பவர் ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார் மாதிரிக்கு மேலும் ஒன்று

_____________________________________________________
தேவைப்பாட்டால் சொல்லுங்கள் மருத்துவர்களை வைத்தே மேலும் பல ஆதாரங்களைத் தருகிறேன்!

அன்புடன்,
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!

9.7.08

வகுப்பறை: டிஸ்கி பதிவு எண் ஒன்று!


சிகரெட் பாக்கெட்டில் எல்லாம் Injurious to Health என்று போட்டிருக்கும்!

அதுபோல என்பதிவுகளுக்கும் டிஸ்கி போட்டால் நல்லது என்று தோன்றியது
ஆகவே போட்டுள்ளேன். என் பதிவில் போடுவதற்கு யாரை நான் கேட்க
வேண்டும்?. ஆகவே போட்டிருக்கிறேன்.
---------------------------------------------------------------------------
அத்தியாயம் 1

இறைவன் இருக்கிறான்றாரா? இல்லையா?

இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டால் ஒரே ஒரு பதில்தான்:

இருக்கின்றார்! சர்வ நிச்சயமாக இருக்கின்றார்?

எப்படிச் சொல்கின்றாய்? ஆதாரம் இருக்கிறதா?

இறைவன் என்பவர் நம்பிக்கை' சம்பந்தப்பட்டவர் அல்ல! அவர் உணரப்பட வேண்டியவர்!

Yes, God is not a matter for belief ; He is to be understood

நம்பிக்கைக்குக்கு உரியது என்றால் ஆதாரம் காட்டலாம். உணர்வில் இருப்பதற்கு
எப்படி ஆதாரம் காட்ட முடியும்?

சரி, நம்பிக்கை என்பது எது? உணர்வில் கொள்வது என்பது எது?

நெருப்பு சுடும் என்பது தெரியும். ஆனால் ஒரு சிறு குழந்தைக்கு அது எப்போது
தெரிகிறது? ஒரு முறை தன் கையால் தொட்டு, சூடுபட்டவுடன்தான் அதற்குத்
தெரியும்.

எதையுமே பட்டு உணர்வதுதால் ஏற்படும் அந்த உணர்வுதான், ஒன்றைப் பற்றி
நமக்கு ஒரு புரிதலைத்தருவது. அந்தப் புரிதல்தான் அறிவு - அந்த அறிவுதான்
நம்பிக்கை - அந்த நம்பிக்கைதான் வாழ்க்கை!

இப்படிச் சுருக்கமாகச் சொல்லலாம்

உணர்வதுதான் அறிவு - அறிவு கொடுப்பதுதான் அனுபவம் - அனுபவம் ஏற்படுத்துவது
தான் நம்பிக்கை - நம்பிக்கைதான் வாழ்க்கை!

All are interlinked!
(எல்லாம் ஒன்றிற்கொன்று தொடர்புடையவை)

ஒருவன் எனக்கு இறை நம்பிக்கை இல்லை என்று சொல்லும்போது என்ன செய்வது?

நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம். உங்களால் ஒன்றும் செய்ய முடியாது!
யாரையும் திருத்துவதற்காக நீங்கள் பிறவி எடுக்கவில்லை!

உணர்கிறவர்கள் உணரட்டும்; உணராதவர்கள் உணராமலேயே போகட்டும்!

குடியின் தாக்கம் பற்றி - அது ஏற்படுத்தும் அல்லது கொடுக்கும் கிறக்கமான உணர்வு
அல்லது கிளர்ச்சி பற்றி, ஒரு சொட்டு மதுவைக் கூட அருந்திப் பார்க்காதவனுக்கு
எப்படித் தெரியும்?

ஒரு நல்ல ஃபில்டர் காப்பி சாப்பிட்டுவிட்டு, ஒரு வில்ஸ் ஃபில்டர் சிகரெட்டை
ஆர அமர உட்கார்ந்து குடித்துப் பாருங்கள். அப்போதுதான் தெரியும் சிகரெட்டின்
மகிமை!

அதோடு மட்டுமா? காப்பிக்கும் சிகரெட்டிற்கும் உள்ள ஜோடிப் பொருத்தமும்
அப்போதுதான் தெரியவரும்!

சிகரெட்டையே தொட்டிருக்காதவனுக்கு அந்தப் பொருத்தத்தை/ மகிமையை என்ன
சொல்லி விளக்க முடியும்? சொன்னாலும் விளங்குமா?

நெய்யில் வறுத்து, லேசாக உப்பும், மிளகாய்த் தூளும் தூவப்பட்ட முந்திரிப் பருப்பு
மிகவும் ருசியாக இருக்கும் என்பது, அதைச் சாப்பிட்டு அனுபவித்தவனுகுத்தானே
தெரியும்? சாப்பிடாதவனுக்கு எப்படித் தெரியும்?

புலவு சாதமும், சிக்கன் குருமாவும் அல்லது தயிர் சாதமும் மாங்காய் ஊறுகாயும்
அற்புதமான உணவு என்பது சாப்பிட்ட நமக்குத் தெரியும்! சாப்பிட்டிருக்காத
நைஜீரியாக்காரனுக்கு அது எப்படித் தெரியும்?

அவன், அவன் உணவை உயர்த்தியாகச் சொல்லுவான். நாம் நம் உணவை
உயர்த்தியாகச் சொல்லுவோம்.

ஆகவே இறைவன் என்பவர் உணர்ந்தவனுக்கு இருக்கிறார்; உணராதவனுக்கு
இல்லை!

அதைத்தான் கவியரசர் கண்ணதாசன் இப்படிச் சொன்னார்:

"உண்டு என்றால் அது உண்டு!
இல்லை என்றால் அது இல்லை!"

எல்லாம் அனுபவித்து வருவது. அனுபவித்து வரும்போதுதான் மனிதன் ஒப்புக்
கொள்வான். அனுபவத்திற்கு முதல் நிலைதான் உணர்தல்

கணணதாசன் வாழ்க்கையை அதன் போக்கிலேயே நன்றாக அனுபவித்து வாழந்தவர்.
அவர் சந்திக்காத துன்பமா? துரோகமா? வறுமையா?செழுமையா? நட்பா? பகையா?
சிறுமையா? பெருமையா?.

எல்லாவற்றையும் அவர் சந்தித்தார் - நல்லது, கெட்டதை உணர்ந்தார், உணர்ந்ததனால்
அனுபவம் பெற்றார் - பெற்ற அனுபவங்களைத்தான் தன் எழுத்தில் வைத்தார்.

என்னைப்போல் வாழாதீர்கள் - நான் எழுதியதைப்போல வாழுங்கள் என்று சொல்லி
விட்டும் போனார்

ஒரு தோட்டம். அதில் மல்லிகை, முல்லை, ரோஜா, கனகாம்பரம், சம்பங்கி,
செவ்வரளி, பிச்சிப்பூ, சாமந்தி என்று விதவிதமான மலர்கள் நிறைந்திருக்கின்றன.
அந்த மலர்கள் ஒவ்வொன்றின் வடிவமும், நிறமும் மணமும் ஏன் வேற்படுகின்றன?

நிலம் ஒன்றுதான், ஊற்றும் தண்ணீரும் ஒன்றுதான் அப்படியிருக்கையில் அவை எப்படி
வேறுபடலாம்? விதையிலோ அல்லது நாற்றாக நடும் தண்டிலோ நிறமோ அல்லது
மணமோ கிடையாது. பயிராகிப்பூக்கின்ற போது அவற்றிற்கு அந்த மணமும்,
நிறமும் எங்கிருந்து கிடைத்தது? பூவிற்கு வாசம் எங்கிறுந்து கிடைக்கிறது?

அதெல்லாம் இறைவனின் படைப்பு. அந்த மாதிரிக் கேள்விகளுக் கெல்லாம் எந்தக்
கொம்பனாலும் பதில் சொல்லமுடியாது!

ஒரு தாவரவியல் விஞ்ஞானியிடம் கேட்டுப் பாருங்கள். நாங்கள் ஆராய்ச்சி செய்து
கொண்டிருக்கின்றோம் என்பார். We are exploring it என்பார்.

அந்தச் செடிகளின் மூலப் பொருள் இல்லாமல் ஒரு மலரை உண்டாக்கிக் காட்டச்
சொல்லுங்கள். எவனாலும் முடியாது!

செய்து காட்டட்டும் - அப்போது சொல்வோம் இறைவன் இல்லையென்று!

இறைவனுக்குத் தன்னை உணர்ந்தவன அல்லது உணராதவன் என்ற பேதம் கிடையாது.
இருவரும் அவனுக்கு வேண்டியவர்களே. இருவருமே அவனால் படைக்கப்பட்டவர்கள்
அல்லவா? அதனால் இருவருமே அவனுக்குச் சமமானவர்கள் தான்.

அதனால் தான் இறைவனை - Almighty என்கிறோம். இல்லையென்றால் அவர் வெறும்
mighty ஆகிப்போயிருப்பார்.

இறைவனைப் பல வடிவங்களில் வணங்குகிறோம் பல பெயர்களில் அழைக்கின்றோம்.

ஆறுகள் பல உள்ளன. பல் பெயர்களில் உள்ளன அவை கலக்குமிடம் கடல்தான்.

மதங்கள் பல இருக்கலாம், வழிபாடுகள் பல இருக்கலாம். ஆனால் இறைவன்
ஒருவன்தான்

இறைவனை நீங்கள் உணரும்போது மேற்கூரிய அத்தனை பேதங்களும் காணாமல்
போய்விடும்

அப்புறம் ஈஷ்வரன், ஸ்ரீராமன், இயேசுநாதர், அல்லா புத்தபகவான் என்று
மற்றவர்களின் பேச்சுக்கள் எல்லாம் உங்களிடம் எடுபடாமல் போய்விடும்

நீங்கள் எப்படி வேண்டுமென்றாலும் வழிபடுங்கள். அது உங்கள் விருப்பம். அது உங்கள்
பழக்கப்பட்ட விஷயம். அதையும் குறை சொல்ல எந்தக் கொம்பனுக்கும் அதிகாரமில்லை

அதையும் மீறி ஒருவன் குறை சொன்னால் அவனை விட்டு விடுங்கள்.

It is his problem - not our problem, because we do not even have one god.
We have
only God and he is the ultimate authority for us!

சர்வ அதிகாரமும் படைத்தவர் அவர் ஒருவர்தான்!

உலகில் இன்றுள்ள எவனுமே 'சர்வ' என்ற வார்த்தையை தன்னுடைய அதிகாரத்துடன்
சேர்த்துப் பயன் படுத்தமுடியாது!

ஹிட்லரையும், முசோலினியையும் நினைத்துக் கொள்ளுங்கள். அவர்களுடைய
சர்வாதிகார மெல்லாம் மண்ணோடு மண்ணாகப் போய்விட்டது

ஒரு நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன் சொன்னார்:

"இன்றைக்கு செத்தால்
நாளைக்குப் பால்
ஆனால்
ஆவின் வண்டியில்
அடிபட்டால்
அன்றைக்கே பால்!"

இன்றைக்கு அதிகாரத்தில் உள்ள அததனை பேர்களின் வாய்களிலும், ஒரு நாள் பால்
ஊற்றப்படவுள்ளது அல்லது வாய்க்கரிசி காத்துக் கொண்டிருக்கிறது.

அந்த அரிசியும், பாலுமே அவன் கொடுத்த கொடைதான்!
---------------------------------------------------
இது மீள்பதிவுதான். புதிதாக நிறையப் பேர்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள்
படிக்கட்டும் என்று போட்டேன்.

வாழ்க வளமுடன்!

8.7.08

இனிய நண்பர் செந்தழலலாரின் கேள்விக்கு எனது பதில்!

கோவை வாத்தியார் சுப்பைய்யாவுக்கு ஒரு கேள்வி! சோதிடம் - கிரகங்கள் என்றெல்லாம்
சொல்கிறீர்கள் அல்லவா...அது சம்பந்தமான ஒரு கேள்வி..
கேட்டவர் எனது அன்பிற்கு உரிய நண்பர் செந்தழல் ரவி: சுட்டி இங்கே!

இப்போது எனது பதில். நீல நீறத்தில் உள்ள எழுத்துக்கள் அவருடையது.
சிவப்பு வண்ணத்தில் உள்ள எழுத்துக்கள் எனது பதில்
-----------------------------------------------------------------------
///////சோதிடம் ஒன்பது கிரகங்களால் ஆனதுங்கறீங்க...பழைய காலக்கணக்கு அது...
ஆனா இப்போ நூற்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள், ஆண்ட்ரமீடா,
பால்வெளி மண்டலம், ஹப்பிள், கரும் புள்ளி என்று வான் வெளி
ஆராய்ச்சியில் உச்சத்துக்கு சென்றுவிட்டோம்...
(ஒரு தமிழ் வலைப்பதிவர் நாசாவுல பணியாற்றுகிறார், டவுட் இருந்தால்
அவரை கேட்டுக்கொள்ளலாம்...)/////

நீங்கள் சொல்கின்ற கோள்களையெல்லாம் L & T மாதிரிக் கம்பெனிக்காரர்கள்
செய்து
கொண்டு போய் வானத்தில் வைத்ததல்ல - இப்போது கண்டுபிடிப்பதற்கு!
வானத்தில்
உள்ள அத்தனை கோள்களுமே காலம் காலமாக இருப்பதுதான்.
புதிய விஷயமில்லை!

அவற்றில் எதை எடுத்துக்கொள்ள வேண்டுமோ, அவற்றை மட்டுமே கணிக்கிட்டு
நமது
ரிஷிகள் 1,400 ஆண்டுகளுக்கு முன்பு எழுதி வைத்துவிட்டுப் போனதுதான்
ஜோதிடக்
கலை! (ரிஷிகள் என்றால் தெரியுமல்லவா?)

/////இன்னும் கிரகம், ராசி, லக்கினம் என்று உப்புப்பெறாத விடயங்களை வைத்து வகுப்பறை
நடத்துக்கிறீர்களே ? இவற்றில் எல்லாம் மருந்துக்கு கூட பகுத்தறிவு என்பதே இல்லையே?
யோசிக்கமாட்டீங்களா வாத்யாரே?////

சாப்பிட்டுப் பார்த்திருந்தால் அல்லவா உப்பிருக்கிறதா, உரைப்பிருக்கிறதா?
அல்லது
இனிப்பிருக்கிறதா? என்று தெரியும்? ஜோதிடத்தில் இதுவரை 93 பதிவுகள்
எழுதியிருக்கிறேன்!
விக்கிபீடியாவில் இருந்து பல விஞ்ஞான சான்றுகளைக்
கொடுத்துள்ளேன். நீங்கள்
எத்தனை பதிவுகளைப் படித்திருக்கிறீர்கள்?

வகுப்பறை மட்டும் நடத்தவில்லை. பல்சுவை அரங்கமும் நடத்துகிறேன். அதில்
இதுவரை
293 பதிவுகளை எழுதியிருக்கிறேன். நட்சத்திர வாரத்தில் 33 பதிவுகள்
எழுதியிருக்கிறேன்
அது தெரியுமல்லவா உங்களுக்கு?

////////பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிவைக்க முடியாத பிக்காரிங்க, செவ்வாய் தோஷம்னு
கல்யாணத்தை தள்ளிப்போட்டு, பெண்களை முதிர்கண்ணியாக்கும் கொடுமை இன்னும்
வேண்டுமா?///////

இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள்? அதுபோல இருக்கும் முதிர்
கன்னிகளின்
லிஸ்ட்டைக் கொடுங்கள். பெண்கள் நல வாரியத்திற்கு அனுப்பி
நடவடிக்கை எடுக்கச்
சொல்வோம்!

//////வாஸ்து என்ற பெயரில் ஒழுங்கா இருக்க வீட்டை சனிமூலை, சூரிய மூலைன்னு பணக்காரனுங்க
மாத்தினா பரவாயில்லை...நடுத்தரவர்க்கத்துக்காரனும் கையில் இருக்கும் காசை வாஸ்து
மேஸ்திரியிடம் கொடுத்து வீணாகிறார்களே ? அந்த பணத்தை பிள்ளைங்க படிப்பு
செலவுக்கு பயன்படுத்தலாம் என்று பகுத்தறிவோடு ஆலோசனை சொல்வீரா,/////

நான் ஆலோசனை சொன்னால் யார் கேட்பார்கள்? நீங்களே கேட்க மாட்டீர்கள்.
பிறகு
நூற்றுக் கணக்கான தந்தைமார்கள் அல்லது நீங்கள் சொல்வதுபோல
ஆயிரக்கணக்கான
நடுத்தரவர்க்கத்துக்காரர்கள் எப்படிக்கேட்பார்கள்?

//////////கிளிசோசியம் பார்த்தால் வாழ்க்கை மாறிவிடும் என்றால், அந்த கிளி சோசியக்காரன்
ஏன் ஐந்து ரூபாய்க்கு லோ - low என்று வெய்யிலில் அலைகிறான் - கிராக்கி பிடிக்க?////

கிளி ஜோதிடம் பார்த்தால், வாழ்க்கை மாறிவிடும் என்று யார் சொன்னது? உங்க
கிராமத்துக்
கிளி ஜோதிடன் சொன்னானா? ஐந்து ரூபாய்க்கு ஏனடா அலைகிறாய்
என்று நீங்கள்
அவனை அல்லவா கேட்டிருக்க வேண்டும்? நாய் கடித்தவனுக்கு ஊசி
போடாமல், கூட
வந்தவனுக்கு ஊசி போட்டால் எப்படி? அதாவது சொன்னவனை
அல்லவா நீங்கள்
கேட்டிருக்க வேண்டும்? என்னைக் கேட்பது என்ன நியாயம்?

////////ராசியான திசை தெற்கு என்றால், இண்டர்வீயூ நடக்கும் அலுவலகம் அதற்கு ஆப்போசிட்
திசையில் இருந்தால் - எப்படி - பூமியை சுற்றி அந்த அலுவலகத்துக்கு போவனுமா?///////

கிளி ஜோதிடத்திற்கு சொன்ன பதில்தான் இதற்கும்!

//////சாமியை நம்புறீங்க, அதனால பேயையும் நம்புறீங்க, ராவுல பிஸ்ஸடிக்க போகும்போது
கூட "அய்யோ அங்கன பேய் இருக்கும்" என்று அலறும் சிறுவன் - பிரச்சினை எங்கே
இருக்கிறது ? சாமியிலா, பேயிலா?/////

சாமி,, பேய்,, பிஸ்சடிக்கும்போது வரும் நினைவுகள் என்பது பற்றி எனக்கெப்படித்
தெரியும்?
இந்தக் கேள்வியை நீங்கள் ஒரு மனோதத்துவ மருத்துவரிடம் கேட்டால்
சரியான பதில் கிடைக்கும்.


///////பகுத்தறிவு, பகுத்தறிவு என்று கரடியாக கத்திக்கினு இருந்தாரே - ஒருத்தர் - மிஸ்டர் பெரியார்...
அவரை பற்றி உங்கள் கருத்து என்ன ? /////

பெரியார் பற்றிச் சொல்ல எனக்கு என்ன தகுதி இருக்கிறது? என் ஆசான் கவியரசர்
கண்ணதாசன்
பெரியாரைப் பற்றி நிறையச் சொல்லியிருக்கிறார். தேவைப்பட்டால்
அவருடைய புத்தகங்களைப்
படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்

Now it is my turn!

உங்களுக்கான ஒரே கேள்வி!

இது நீங்களே எழுதிய பதிவா? அல்லது மண்டபத்தில் யாராவது எழுதிக் கொடுத்ததைப்
பதிவிட்டிருக்கிறீர்களா? (உங்களைப் பற்றி நன்றாகத் தெரியும். அதனால்தான்
இந்தக் கேள்வி)

மண்டபத்தில் எழுதிக்கொடுத்தது என்றால் இத்தோடு விட்டு விடுகிறேன்!

இல்லையென்றால் சொல்லுங்கள். பகுத்து அறியும் அறிவை வைத்து என் மனதில்
நிறையச் சந்தேகங்கள் உள்ளன. அவற்றைப் பத்துப் பத்தாகப் பிரித்து, பதிவுகளில்
எழுதி உங்களிடம் கேட்டு , அறிந்து கொள்ள விரும்புகிறேன். என் சந்தேகங்களைப்
போக்கிய புண்ணியம் உங்களுக்குக் கிடைக்கட்டும்!

அன்புடன்
சுப்பையா வாத்தி (யார்)

வாழ்க வளமுடன்!