மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

29.2.08

எல்லாக் கண்டுபிடிப்புக்களையும் ஒழிக்க மனிதன் கண்டுபிடித்தது எது?

எல்லாக் கண்டுபிடிப்புக்களையும் ஒழிக்க மனிதன் கண்டுபிடித்தது எது?

தெரிந்த சொற்கள்தான். எல்லாவற்றிற்கும் புது விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது,
கொடுத்த புண்ணியவான் யாரென்று தெரியவில்லை. மின்னஞ்சலில் வந்தது.
அப்படியே கொடுத்துள்ளேன். அப்படியே சாப்பிடுங்கள். வேகவைக்க
அல்லது வறுக்க நேரமில்லை. தமிழ் ஆர்வலர்களையும் அப்படியே
சாப்பிடப் பணிக்கின்றேன்

தமிழ்மணத்தில் உள்ள இளைய திலகங்களை (அவர்கள்தான் சாமி இங்கே
மெஜாரிட்டி - மொத்தம் 80 சதவிகிதம் - ஆகவே அவர்களை மட்டும்)
பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

இளைய திலகங்கள் என்ன கணக்கா? 20 வயது முதல் 40 வயது வரை
உள்ளவர்கள் எல்லாம் இளைய திலகங்கள்தான் சாமிகளா!

பில்கேட்ஸின் வகுப்புத் தோழர்கள் எவரேனும் உள்ளே வந்து இதை
நாங்கள் முன்பே படித்ததுதான் என்று சொல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்
கொள்கிறேன். அவர்கள் அறியாதது எதையும் இங்கே பதிவிட முடியாது
என்பதையும் ஒப்புக்கொள்கிறேன்!
-------------------------------------------------------

School: A place where Papa pays and Son plays.

Life Insurance: A contract that keeps you poor all your life so that you can die Rich.

Nurse: A person who wakes u up to give you sleeping pills.

Marriage: It's an agreement in which a man loses his bachelor degree and a woman gains her masters.

Tears: The hydraulic force by which masculine willpower is defeated by feminine water power.

Lecture: An art of transferring information from the notes of the Lecturer
to the notes of the students without passing through 'the minds of either'

Conference: The confusion of one man multiplied by the number present.

Compromise: The art of dividing a cake in such a way that everybody
believes he got the biggest piece.

Dictionary: A place where success comes before work.

Conference Room: A place where everybody talks, nobody listens and
everybody disagrees later on.

Criminal: A guy no different from the rest....except that he got caught.

Boss: Someone who is early when you are late and late when you are early.

Politician: One who shakes your hand before elections and your Confidence after.

Doctor: A person who kills your ills by pills, and kills you by bills.

Classic: Books, which people praise, but do not read.

Smile: A curve that can set a lot of things straight.

Office: A place where you can relax after your strenuous home life.

Yawn: The only time some married men ever get to open their mouth.

Etc.: A sign to make others believe that you know more than you actually do.

Committee: Individuals who can do nothing individually and sit to decide
that nothing can be done together.

Experience: The name men give to their mistakes.

Atom Bomb: An invention to end all inventions.

Philosopher: A fool who torments himself during life, to be wise after death.
=================================================

25.2.08

நீ பார்த்த பார்வைகள் எங்கே போகும்?

நீ பார்த்த பார்வைகள் எங்கே போகும்?

மீண்டும் ஜோதிடம் - பகுதி 8

மனித வாழ்க்கை சுவையானது. சின்னச் சின்ன சந்தோஷங்கள் நிறைந்தது.
அதோடு துன்பங்களும் அவலங்களும் நிறைந்ததுதான் - அதில் சந்தேகமில்லை.

எத்தனை பேர் சந்தோஷமாக இருக்கிறீர்கள்? போதும் என்ற மனம் எத்தனை
பேர்களுக்கு இருக்கிறது?

மரத்தில் உள்ள பழங்களைத் தின்பதைவிட்டு விட்டு, ஒருவன் இலைகளை மட்டுமே
தின்று கொண்டிருந்தால் அவனை என்னெவென்று சொல்வோம்?

ஆகவே வாழ்க்கையில் கிடைக்கும் அந்த சந்தோஷங்களுக்காக இறைவனுக்கு
நன்றி சொல்லுங்கள். இலைகளைக் காலதேவனுக்கு விட்டுவிடுங்கள்!

ஒரு நாள், நீடாமங்கலத்தில் (தஞ்சை மாவட்டம்) இருந்து திருவாரூருக்குப் போய்க்
கொண்டிருந்தேன். வழியில் உள்ள சிறுசிறு கிராமங்களிலெல்லாம் நான் பயணித்த
பேருந்து நின்று நின்று சென்று கொண்டிருந்தது. அதிகாலை நேரம். குளர்ந்த காற்று.

அந்த அதிகாலை நேரத்திலும் ஒவ்வொரு கிராமத்தின் முகப்பிலும் ஆண்களும்,
பெண்களுமாக குறைந்தது 50 முதல் 100 பேர்களாவது நின்று கொண்டிருந்தார்கள்
ஒவ்வொருவர் கையிலும் ஒரு தூக்குப் பாத்திரம். மதிய உணவிற்கான உணவு அது.
அனால் பேருந்தில் ஒருவரும் ஏறவில்லை.

அருகில் இருந்த சக பயணியிடம் கேட்டேன், “இடம்தான் இருக்கிறதே, ஏன்
ஒருவரும் ஏறவில்லை?”

நான் அந்தப் பகுதிக்குப் புதியவன் என்பதை உணர்ந்து கொண்ட அவர்
காரணத்தைக் கதையாகச் சொன்னார்.

அந்த மக்கள் எல்லாம் கூலித் தொழிலாளர்கள். அந்தப் பகுதிகளில் உள்ள
தோட்டங்களில் கூலி வேலை பார்ப்பவர்கள். தோட்டத்துக்காரர்கள் வயலில்
வேலை இருக்கும் நாட்களில் ஆட்களைத் தேடி வாடகை வாகனங்களில் வந்து
அவர்களில் சிலரை (அதாவது தங்களுக்குத் தேவையான அளவு எண்ணிக்கையில்)
நபர்களை அழைத்துச் செல்வார்களாம். மாலை ஆறு மணிக்குப் பணி முடிந்ததும்
கொண்டு வந்து இறக்கி விட்டு விடுவார்களாம். ஆண்களுக்கு ஒரு நாள் கூலி
நூறு ரூபாய். பெண்களுக்கு எண்பது ரூபாய் (இது முந்தைய கணக்கு - இன்றைய
நிலவரம் தெரியவில்லை)

அந்தந்தக் கிராமத்து ஜனங்கள் ஒற்றுமையாக வரிசையில் நின்று first cum first என்ற
அடிப்படையில் வேலைக்குப் போவார்கள். சமயத்தில் நிற்கும் அனைவருக்குமே
வேலை (தினக்கூலிதான் சாமி) கிடைக்கும் அல்லது பாதிப்பேருக்கு மட்டுமே கிடைக்கும்
கிடைக்காதவர்கள் திரும்பவும் தங்கள் குடிலுக்கே அல்லது குடிசைக்கே திரும்ப
வேண்டியதுதான். மாதத்தில் எல்லா நாட்களிலும் வேலை கிடைக்காது. பாதி நாட்கள்
மட்டுமே அல்லது அதிகம் போனால் இருபது நாட்கள் மட்டுமே வேலை கிடைக்கும்

வருமானத்தைக் கணக்குப் பண்ணிக் கொள்ளூங்கள்.

அவர்கள் வாழ்வில் ஒரு நாளைக்கு ஒருமுறைதான் சுடு சோறு. அதாவது மாலை
ஏழு மணிக்கு அடுப்பை மூட்டி, ஒரு பானையில் சோறு - இன்னொறு பாத்திரத்தில்
கிடைக்கின்ற காய்கறிகள் பருப்பைப்போட்டுக் குழம்பு. அதிகமாகப் புளிக்கும்
தன்மையுடைய மோர் காரமாக ஊறுகாய். இதுதான் சாப்பாடு. பாதி சாதம் மிஞ்சும்.
அதில் நீரை ஊற்றி வைத்திருந்து அடுத்தநாள் காலையில் வேலைக்குப் போகும்
போது மோரையும் சேர்த்து ஊற்றி எடுத்துக் கொண்டு போவார்கள் - அது
அன்றைய மதிய உணவு.

சரி, what about break-fast? பன்னும் டீயும்தான் சாமி!

அவர்கள் யாருடைய முகத்திலும் கவலை தென்படவில்லை!

ஏன்?

அந்த வாழ்க்கையை அவர்கள் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு விட்டார்கள்.

வாய்க்காலில் சலசலத்து ஓடும் தண்ணீர், பரந்த வயல் வெளிகள், இயற்கையான
ஏசி வீடுகள் (கூரை வேய்ந்த வீடுகள்) கயிற்றுக் கட்டில், வருடிக்கொடுக்கும் வேப்பமரத்துக்
காற்று, அவ்வப்போது ஒலிக்கும் இளையராஜாவிற்குப் பாடம் சொல்லிக் கொடுத்த குயில்
களாரின் கானமழை என்று இறைவன் அவர்களுக்கு எண்ணற்ற நஷ்ட ஈட்டைக் (compensation)
கொடுத்திருக்கிறான்.

நமது நகரங்களின் பரபரப்பும், அசுத்தமும், எரிச்சலும் அங்கே இல்லை.

அந்த வாழ்க்கையை நாம் ஒப்புக்கொள்வோமா? மாட்டோம்.

அதைவிட அவதியாக வாழந்த கவிஞன் ஒருவன் தன் வாழ்வைப் பற்றி, இப்படிக்
கவிதையாகச் சொன்னான்:

“அணைக்க
ஒரு அன்பில்லாத மனைவி,
பிழைக்க
ஒரு பிடிப்பில்லாத தொழில்
வளர்க்க
இரு நோயுற்ற சேய்கள்
ஆனாலும்
வாழ்க்கை - இன்னும்
கசக்கவில்லை!”

ஆக சந்தோஷம் என்பது நம் மனதிலும், ரசனை உணர்விலும்தான் இருக்கிறது!

என்ன, நான் சொல்வது சரிதானே?

சரி இப்போது பாடத்திற்கு வருகிறேன். அந்த மனமும், ரசனை உணர்வும் யாருக்கு
இருக்கும்? ஜாதகப்படி இருக்க வேண்டிய அமைப்பு என்ன?

வாருங்கள், பார்த்து விடுவோம்!

மனதிற்கு உரிய கிரகம் சந்திரன். ரசனைக்கு உரிய கிரகம் சுக்கிரன்

அந்த இரண்டு கிரகங்களும் வலுவுடன் இருக்க வேண்டும். வலு என்றால் என்ன?

அந்த கிரகங்கள் ஒருவருடைய ஜாதகத்தில் ஆட்சி வீடு, உச்ச வீடு அல்லது நட்பு வீடு
அல்லது கேந்திர வீடு அல்லது மூலத்திரிகோண வீடுகளில் இருக்க வேண்டும்.

என்ன கண்டு பிடிக்க அலுப்பாக இருக்கிறதா? ஈசியான வழியிருக்கிறது.
தங்கள் சுய அஷ்டகவர்க்கத்தில் அவைகள் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடன்
இருக்க வேண்டும். அவ்வளவுதான்.
---------------------------------------------------
சரி பழைய பாடத்தில் உள்ள மீதிப் பகுதியைக் கீழே கொடுத்துள்ளேன்

அதாவது முன் பாடத்தில் திருமணப் பொருத்தம் பகுதியில் 1 முதல் 5 வரை உள்ள
விதிகளைக் (Rules) கூறியிருந்தேன். இன்று 6 முதல் 10 வரை உள்ள விதிகள்:

6. ராசிப்பொருத்தம் (Matching of Chandra Rasi) - இது வம்ச விருத்திக் கணக்கில் வரும்

பெண்ணின் ராசியையும் (சந்திரன் இருக்கும் ராசி) பையனின் ராசியையும் குறித்துக்
கொள்ளுங்கள்.

பெண்ணின் ராசியிலிருந்து எண்ணிக் கொண்டு வரும்போது பையனின் ராசி ஆறு
அல்லது எட்டு அல்லது பன்னிரெண்டாக இருந்தால் சரியான பொருத்தமாகாது.
அதே ரூல்தான் பையனுக்கும்.

ஒரே ராசியாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் ஏழாம் ராசியாக இருந்தாலும்
சூப்பராகப் பொருந்தும்!

7. ராசி அதிபதிப் பொருத்தம் (Matching of the owners of the Rasi)
(கிரகங்கள் ஒருவருக்கொருவர் யார் யாருக்கு நட்பு, யார் யாருக்கு சமம்
யார் யாருக்குப் பகை என்பதை முன் பதிவு ஒன்றில் கொடுத்துள்ளேன், அங்கே
சென்று குறித்துக் கொள்ளவும்)

இருவரின் ராசி அதிபதிகளும் ஒருவருக்கொருவர் நட்புக்கிரகங்கள் என்றால் பொருந்தும்
இருவரின் ராசி அதிபதிகளும் ஒருவருக்கொருவர் பகைவர்கள் என்றால் பொருந்தாது
மற்றபடி சமம் x நட்பு பொருந்தும்
சமம் x பகை பொருந்தாது

8. வசியப் பொருத்தம் (Intimacy between couples)
தம்பதிகளிடையே ஒற்றுமை அல்லது ஒருமித்த மனதிற்கு இந்தப் பொருத்தம் அவசியம்
See the Chart for details:




============================================
9. ரஜ்ஜீப் பொருத்தம் (பெண் தீர்க்க சுமங்கலியாக இருப்பதற்குரிய பொருத்தம்)
Duration of married life!
அட்டவனையில் உள்ள ஆறு பிரிவுகளும் தனித் தன்மை வாய்ந்தது. ஒரு பிரிவிற்
குள்ளாகவே பெண்ணின் நட்சத்திரமும், பையனின் நட்சத்திரமும் இருந்தால் அது
பொருத்தமல்ல! இருவரும் வெவ்வேறு பிரிவிலுள்ள நட்சத்திரத்தை உடையவர்களாக
இருத்தல் வேண்டும்



=================================================
10. வேதைப் பொருத்தம் (To avoid miseries in married life) வேதை என்றால்
ஒன்றுக்கு ஒன்று எதிரானது என்று பொருள். ஒன்றுக்கு ஒன்று வேதை என்றால்
அதாவது எதிரானது என்றால் அவை பொருந்தாது.

அஸ்வினி x கேட்டை
பரணி x அனுஷம்
கார்த்திகை x விசாகம்
ரோகிணி x சுவாதி
திருவாதிரை x திருவோணம்
புனர்பூசம் x உத்திராடம்
பூசம் x பூராடம்
ஆயில்யம் x மூலம்
மகம் x ரேவதி
பூரம் x உத்திரட்டாதி
உத்திரம் x பூரட்டாதி
ஹஸ்தம் x சதயம்

மிருகசீர்ஷம் x சித்திரை x அவிட்டம்
(இம்மூன்றும் ஒன்றுக்கொன்று எதிரானது - நம்து அரசியல்
கட்சிகளில் ஒரே கட்சிக்குள் எதிர் எதிர் அணிகள் இருப்பதைப்போல)

ஆக மொத்தம் இந்தப் பொருத்தப் பாடத்தைப் படித்துக் குழம்பிப்போயிருப்பீர்கள்.
பத்தில் ஆறு பொருந்தினால் போதும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அதில் ரஜ்ஜீப்
பொருத்தம் மட்டுமே அதி முக்கியமானது.

நீங்கள் விவரம் தெரிந்து கொள்வதற்கு மட்டுமே இதைப் படித்ததாக வைத்துக்
கொள்ளுங்கள். மேலும் உங்களுடையதோ அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்களின்
ஜாதகத்தையோ எடுத்துவைத்துக் கொண்டு இதன்படி பொருத்தம் பர்த்து மண்டையை
உடைத்துக் கொள்ளாதீர்கள். நான் முன் பதிவில் சொன்ன இணைய தளத்திற்குச்
சென்று பார்த்துக் கொள்ளுங்கள். அது மிகச் சரியாக இருக்கும். அதோடு உங்கள்
பொன்னான நேரமும் மிச்சமாகும்.

கவிஞர் வாலி அவர்கள் எழுதிய பாடல் வரிகளில் மறக்க முடியாத வரிகள் சில உண்டு

“நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்”

அதோடு மட்டுமா? என் பங்கிற்கு மேலும் இரண்டு வரிகளை சேர்த்துப்
பார்ப்பது என் வழக்கம். அந்த வரிகள் இதோ:

“நீ போட்ட தேட்டைகள் வீட்டோடு போகும்
நீ பிடித்த கோட்டைகள் காட்டோடு போகும்”

தேட்டைகள் = சேர்த்த பணம்
கோட்டைகள் = வாங்கிய சொத்துக்கள்
காட்டோடு = சுடுகாட்டோடு (அதாவது அங்கே ஒருவன் போய்ச் சேரும் வரைதான் அது)

அதுதான் வாழ்க்கை. ஆகவே வருவது வரட்டும் என்று துணிந்து நில்லுங்கள். சும்மா, சும்மா
ஜாதகத்தைப் பார்த்துக் குழம்பிப்போகாதீர்கள். மருந்து எப்போது உட்கொள்கிறோம்?
நோய் வரும்போது மட்டுமே. அதுபோல துன்பம் வாட்டும்போது, அதிலிருந்து எப்போது
விடுபடுவோம் என்பதை தெரிந்து கொண்டு ஆறுதல் அடைய மட்டுமே, ஜாதகத்தைத்
துணை கொள்ளுங்கள்! மற்றபடி வேண்டாம்.

வாழ்க வளமுடன்,
வகுப்பறை வாத்தியார்

பி.கு: அடுத்த பதிவில் வேறு ஒரு தலைப்பில் ஜோதிடத்தை ஆராய்வோம்

வகுப்பறையில் இது என்னுடைய 100 வது பதிவு!
மற்றொரு பதிவான பல்சுவையில் நேற்றுத்தான் என்னுடைய 200 வது
பதிவைப் பதிந்தேன்! ஆக மொத்தம் 300 பதிவுகள்

(தொடரும்)

20.2.08

நாம் வல்லரசாகும் வாய்ப்பு - ஒரு பார்வை!

நாம் வல்லரசாகும் வாய்ப்பு - ஒரு பார்வை!

நாம் வல்லரசாகும் வாய்ப்பு உள்ளதா?
இந்தியாவின் ஜாதகம் என்ன சொல்கிறது?

வாருங்கள் ஒரு பார்வை பார்ப்போம்!

"இரவிலே வாங்கினோம்
இன்னும் விடியவில்லை! "

என்று இந்திய சுதந்திரதத்தைப் பற்றி ஒரு கவிஞன் பாடிய புதுக்கவிதை ஒன்று
அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமானது

ஆனால் இன்று நிலைமை வேறு! அசுர வேகத்தில் எல்லா மாற்றங்களும் நடந்து
கொண்டிருக்கின்றன!

சர்வதேசத் தரத்தில் தொலைத் தொடர்புத்துறையில், தகவல் தொழில் நுட்பத்
துறையில், மருத்துவத் துறையில், கல்வித்துறையில் எல்லாம் அடிப்படைக்
கட்டமைப்புக்கள் மாறிக் கொண்டிருக்கின்றன. மற்ற துறைக்காரர்களும் விழித்துக்
கொண்டு வேலை செய்யத் துவங்கியிருகின்றார்கள்.

நமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய, நமது நாட்டின் முந்நாள் முதல் குடிமகன்
டாக்டர்.திரு அப்துல் கலாம் அவர்கள் சொன்னதுபோல 2020ம் ஆண்டிற்குள்
நமது நாடு நிச்சயம் வல்லரசாக மாறும்!. அதில் ஒன்றும் சந்தேகமில்லை!

சரி, நமது நாட்டின் ஜாதகமும் அதைச் சொல்கிறதா என்று பார்ப்போம்.

இந்தியாவின் ஜாதகம்

பிறந்த தேதி: 15.08.1947
பிறந்த நேரம் நடு இரவு நேரம் - 00.01 நிமிடம்
பிறந்த இடம்: டெல்லி
ஜென்ம நட்சத்திரம்: பூசம்
லக்கினம் ரிஷபம்
பிறந்த மகா திசை இருப்பு: சனி மகா திசையில் - 18 வருடங்கள்- 0 மாதங்கள்-14 நாட்கள்

இந்தியாவிற்கு காலசர்ப்ப தோஷம்/ யோக ஜாதகம். ஒரு பாதியில் ராகு மற்றும் கேதுவின்
பிடிக்குள் மற்ற எல்லா கிரகங்களூம் மாட்டிக் கொண்டிருப்பதைப்பாருங்கள்( All ths major
planets are hemmed between Rahu and Ketu). அதனால்தான்நமக்கு ஆரம்ப காலத்தில்
எல்லையில் நடந்த சீனயுத்தம் உட்பட பல சோதனைகள்!

காலசர்ப்ப தோஷம் எப்போது நீங்கியது?

பொதுவாக 33 வருடங்கள் என்பார்கள். ஆனால் லக்கினத்தில் எத்தனை பரல்கள் உள்ளனவோ
அத்தனை வருடங்கள் கழித்துத்தான் அது நீங்கும் என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன

நமக்கு லக்கினத்தில் 44 பரல்கள் உள்ளன. 1947+44 வருடங்கள் =1991.
ஆகவே 1991லிலேயே அது (தோஷம்) நீங்கி விட்டது

நடப்பு திசையைக் கவனிப்போம்:
பிறந்த தேதி 1947-08-15
சனி திசை இருப்பு 18-00-14
புதன் திசை 17-00-00
கேது திசை 7-00-00
சுக்கிர திசை/சுய புக்தி 4-00-00
---------------------------------------------------
ஆக மொத்தம் 1993-08-29

இந்த தேதியில் இருந்து நம் நாட்டிற்கு நல்ல நேரம்தான்! சுக்கிர திசை நடப்பதைக் கவனியுங்கள்!

அமெரிக்க எண் கணித மேதை சீரோவின் காலச் சக்கர சுழற்சி முறையில் (Wheel of Fortune)
இன்னொரு பார்வையும் பார்ப்போம்

Birth year of India 1947
Add the numbers in the year 21
--------------------------------------------------
Sum up 1968
Again add the numbers 24
-------------------------------------------------
Sum up 1992

1968ஆம் ஆண்டுதான் அப்போதைய பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்கள்
ஏராளமான பொருளாதாரச் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்து இந்திய வளர்ச்சிக்குப்
பலமான அடிக்கல் நாட்டினார்! (உதாரணத்திற்கு இரண்டு செய்திகள் - வங்கிகளைத்
தேசிய உடமையாக்கியது, மற்றும் ராஜ குடும்பங்களுக்கு அளித்து வந்த மானியங்
களை ஒழித்தது)

1992ல் பொருளாதார மேதையும் அப்போதைய மத்திய நிதியமைச்சருமான
திரு.மன்மோகன் சிங் அவரகள் கொண்டுவந்த பல பொருளாதாரச் சீர்திருத்தங்கள்
எல்லாம் நமக்குத் தெரிந்தவையே!

நம் நாடு வல்லரசாக மாறப்போவதைப் பற்றி நாஸ்டர்டாமஸ் வேறு பிரமாதமாக
எழுதிவைத்துவிட்டு போயிருக்கிறார்

சரி சொல்ல வந்ததைச் சொல்லுங்கள் - எப்போது வல்லரசாவோம் என்கிறீர்களா?

1992ல் உள்ள எண்களைக்கூட்டுங்கள் 21 வரும். 1992 + 21= 2013
2013ல் வல்லரசிற்கான கட்டமைப்பில் காலடி எடுத்துவைப்போம்.
அந்த கட்டமைப்பு பிரம்மாண்டமான கட்டிடமாகமாறி 2019ம் ஆண்டின்
முடிவில் நம்மை அதில் வல்லரசாக உட்காரவைத்துவிடும். எப்படி
என்கிறீர்களா?


2013 உள்ள எண்களைக்கூட்டுங்கள் 6 வரும். 2013 + 6= 2019

என்ன கணக்கு சரியாக உள்ளதா?

ஆம் 2019ல் நாம் வல்லரசாக மறுவோம்! அது திண்ணம்!

இன்னொரு பார்வையும் உள்ளது. அஷ்டவர்க்கத்தில் மொத்தப்பரல்கள் 337 தான்.
அதை (12 வீடுகளுக்காக - for 12 astrological signகளுக்காக)
12ஆல் வகுத்தால் 28 வரும். லக்கினம் என்பது நாட்டின் தலைமை வகிக்கும்
தன்மையைக் குறிக்கும். சாதாரணமாக 28க்கு மேல் இருந்தால் தான் ஒரு நாட்டிற்கு
நிற்கும் தன்மை கிடைக்கும் (Standing Power) ஆனால் நமது லக்கினத்தைப் பாருங்கள்.
40 பரல்கள் உள்ளன.ஆகவே பல நாடுகளுக்கும் வழி காட்டும் தலைமைப் பொறுப்பு
நமக்கு வந்து சேரப்போகிறது. ஜனரஞ்சகப் பொது மொழியில் சொன்னால்
நாம் வல்லரசாகப் போகிறோம்! அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை!

(இது ஒரு மீள் பதிவுதான். நான் பதிவுலகத்திற்கு வந்த புதிதில் எழுதியது.
இப்போது வகுப்பறையில் பல புதிய மாணவர்கள் வந்துள்ளதால் அவர்களுக்குப்
பயன்படட்டும் என்ற நோக்கில் மீண்டும் பதிவிட்டுள்ளேன்)

அன்புடன்,
வகுப்பறை வாத்தியார்.

எனது அலுவலக வேலைப் பளுவின் காரணமாக எழுத நேரமில்லை.
மீண்டும் ஜோதிடத்தின் அடுத்த பதிவு 25.2.2008 திங்களன்று வரும்!

படத்தின் மீது கர்சரை வைத்துக் கிளிக்கினால் பெரிதாகத்தெரியும்
======================================

















========================================

15.2.08

நீங்கள் கேட்ட மென்பொருள்!

நீங்கள் கேட்ட மென்பொருள்!

மீண்டும் ஜோதிடம் - பகுதி 7

திருமணப் பொருத்தம் பார்ப்பதற்கு உரிய மென்பொருள் எங்கே
கிடைக்கும் என்று பல அன்பர்கள் மின்னஞ்சல் கொடுத்துள்ளார்கள்
அவர்களூக்கான பதிவு இது.

மென்பொருள் இலவசமாகக் கிடைக்கும் தளங்களைப் பற்றிய
விவரம் அறிய இங்கே சொடுக்கவும்
ஒரு லிட்டர் பாலிற்காக ஏன் ஒரு பசு மாட்டைப் போய் வாங்கிக்
கட்டிவைக்க வேண்டும்?

கீழே ஒரு இணையதளத்தின் முகவரியைக் கொடுத்துள்ளேன்.
அதை உங்கள் இணையக்குறிப்பில் (Book Mark) பதிவு செய்து
வைத்து, வேண்டும் போது சென்று விவரங்களைக் கொடுத்துப்
பார்த்துக் கொள்ளலாம். அது சுலபமும் கூட!

அந்த தளத்தின் முகவரி


படத்தின் மேல் கிளிக்கினால் பெரிதாகத் தெரியும்

என்னென்ன விவரம் வேண்டும்?

பெண் மற்றும் ஆண் இருவரின் பெயர்கள், பிறந்த தேதி, பிறந்த
நேரம், பிறந்த ஊர் ஆகியவை வேண்டும். அதோடு பிறந்த
நாட்டின் Standard Time Difference with Greenwich Mean Time
தெரிய வேண்டும் இந்தியா என்றால் +5.30 Hours

அதேபோல பிறந்த ஊரின் அட்சரேகை, தீர்க்க ரேகை தெரிய
வேண்டும். இணையத்தில் கேட்டால் அது கிடைக்கும். உதாரணத்திற்கு
சென்னையின் அட்சரேகை & தீர்க்க ரேகை தெரிய வேண்டுமென்றால்
Google Searchல் "What is the latitude and longitude of Chennai?"
என்று கேட்டால் கிடைக்கும்

மேலும், அதைத் தருவதற்கென்றே ஒரு தனித் தளம் இருக்கிறது.
உலகில் உள்ள 20 லட்சம் இடங்களுக்கு உரிய அட்சரேகை &
தீர்க்க ரேகை அதில் கிடைக்கும். அதன் பெயர் heavensabove.com

அதற்கான சுட்டி இங்கே உள்ளது

முக்கியமாக Chart Type என்னும் சின்னப் பெட்டியில்
North Indian or South Indian என்று இரண்டு option இருக்கும்
அதில் சவுத் இந்தியன் என்பதைத் தெரிவு செய்ய வேண்டும்.

பயன் படுத்துங்கள். குதூகலமாக இருங்கள்!

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்

பெண்ணிற்குப் பெண் எப்போது விரோதி?

பெண்ணிற்குப் பெண் எப்போது விரோதி?

மீண்டும் ஜோதிடம் - பகுதி 6

(இதற்கு முன் பதிவைப் படித்தீர்களா? இல்லையென்றால்
படித்துவிட்டு இங்கே வாருங்கள். அப்போதுதான் இந்தப்
பதிவிலுள்ள சில விஷயங்கள் புரியும்)

பெண் பல அவதாரம் எடுக்கின்றாள். குழந்தை, சிறுமி, கன்னி, முதிர்
கன்னி, மனைவி, தாய், நாத்தனார், அண்ணி, மாமியார், என்று ஒரே
பெண் பல அவதாரங்களை எடுத்தாலும் அவள் மிகவும் சோபிப்பது
அல்லது பிரகாசிப்பது (அதாவது நூறு சதவிகிதம் பிரகாசிப்பது) தாய்
ரோலில் (அவதாரத்தில்) மட்டும்தான்.

ஆனால் பெரும்பான்மையான பெண்கள் மாமியார் ரோலில் சொதப்பி
விடுவார்கள்.நல்ல மாமியாராக இருப்பதில்லை. 80% வீடுகளில் மாமியார்
மருமகள் உரசல் நிச்சயமாக இருக்கும். அங்கே பெண்ணிற்குப் பெண்ணே
விரோதி ஆகி விடுவாள்.

அதற்கு என்ன காரணம்? Possessiveness தான் காரணம். தான் வளர்த்து
இத்தனை நாள் தன் கட்டுப்பாட்டில் இருந்த மகனை முழுதாக ஒரு
பெண்ணிடம் (அது மருமகள்தான் என்றாலும்) இழப்பதற்கு ஒரு பெண்
மனம் ஒப்புக்கொள்வதில்லை. தானும் தன் திருமணத்திற்குப் பிறகு
அப்படித்தானே வேறு ஒருத்தி வளர்த்த பிள்ளையைக் கொத்திக்
கொண்டு வந்தோம் என்று நினைப்பதில்லை. அந்த சிந்தனை பெரும்
பான்மையான பெண்களுக்கு வராது!

அதுவும் பெண் தேடும் படலத்தின் ஆரம்ப நிலையில் செய்யும்
அலம்பல் இருக்கிறதே அது சொல்லி மாளாது.

என் நண்பர் ஒருவரின் மனைவி தன் மகனுக்குப் பெண் தேடும்
விஷயமாக என்னிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, கீழ்க்கண்ட
கண்டிஷன்களைச் சொன்னார்.

பெண் Fair looking girl ஆக இருக்க வேண்டும் என்றார். நான்
சொன்னேன் Fair looking girl என்று தேடாதீர்கள் Good looking
Girl ஆகத் தேடுங்கள் என்று சொன்னேன்.

Fair looking girl என்றால் சிவந்த நிறமுள்ள திருத்தமான பெண்
என்று அர்த்தம். Good looking Girl என்றால் கருப்போ அல்லது
மாநிறமோ - திருத்தமான பெண் என்று அர்த்தம்.

அதற்கு அவர் பதில் சொல்லவில்லை. அவருடைய அடுத்த
கண்டிஷனைச் சொன்னார். பெண் Technically Qualified ஆக
இருக்க வேண்டும் என்றார். அதாவது பெண். B.E அல்லது
M.C.A அல்லது M.Sc(IT) படித்த பெண்ணாக இருக்க வேண்டும்
என்றார். அவருடைய பையன் அமெரிக்காவில் இருப்பதால்,
பெண்ணும் அங்கே வீட்டில் சும்மா இருக்கமுடியாது ஆகவே
அங்கே வேலைக்குச் சேரும் தகுதியுடைய பெண்ணாக இருக்க
வேண்டும் என்றார்

"இது பரவாயில்லை, அடுத்த கண்டிஷன் என்ன?" என்றேன்.

"ஜாதகம் பொருந்த வேண்டும். அதோடு மூலம், ஆயில்யம் ஆகிய
இரண்டு நட்சத்திரங்களில் பிறந்த பெண் வேண்டாம்" என்றார்.

இதை எதிர்பார்த்த நான் அவரைப் பிடித்துக் கொண்டு விட்டேன்
(பேச்சில்தான்)

மூலம் மாமனாருக்கு ஆகாது (மாமியாரை மூலையிலே உட்கார
வைத்துவிடும்) ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது என்ற
சொல்லடைகள் உள்ளதால், அதை நம்புபவர்கள் அதிகம்.
அதே போல பூராடம் பெண்ணிற்கு ஆகாது (பூராடம் நூலாடாது,
அதாவது மாங்கல்யம் தங்காது). கேட்டை குடும்பத்திற்கு ஆகாது
என்ற சொல்லடைகளும் உண்டு. அதை நம்புபவர்களும் உண்டு.

அதெல்லாம் உண்மையல்ல! எல்லா நட்சத்திரங்களும் ஒன்றுதான்.

சில பகுதிகளில் உள்ள ஜோதிடர்கள், மூலம் முதல் பாதத்தில்
பிறந்த பெண்ணையும், ஆயில்யம் கடைசி பாதத்தில் பிறந்த
பெண்ணையும் தோஷ நட்சத்திரங்கள் என்று கூறி அப்பா இல்லாத
பையனாகப் பார்த்துச் செய்யப் பரிந்துரைப்பார்கள். ஆனால் நமது
பெண்கள் ஒட்டு மொத்தமாகவே அந்த இரண்டு நட்சத்திரங்களையும்
ஒதுக்கி விடுவார்கள். அந்த நட்சத்திரப் பெண்கள் உள்ள
வீட்டினருக்கு இந்த அவஸ்தை பழக்கமான ஒன்று!

அந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்களையெல்லாம் என்ன செய்வது?
வீட்டிலேயே வைத்துக் கொள்ள வேண்டியதுதானா?

"சரி திரு என்று துவங்கும் நட்சத்திரமான திருவோணத்திலோ
அல்லது திருவாதிரையிலோ அல்லது தரணி ஆளும் பரணி
நட்சத்திரமாகவோ அல்லது தவத்துப்பிள்ளை மகத்தில் பிறக்கும்
என்பார்களே அந்த மகத்திலோ ஒரு பெண்ணைப்
பார்த்து விடலாம் suppose அந்த நட்சத்திரப்பெண்ணிற்கு
அது நல்ல நட்சத்திரம்தான் என்றாலும் ஏழில் சனி இருந்தால்
என்ன செய்வீர்கள்?" என்று கேட்டேன்

அந்தப் பெண்மணி திடுக்கிட்டுக் கேட்டார்கள், "ஏழில் சனி
இருந்தால் என்ன செய்யும்?"

ஏழில் சனி இருந்தால் விதவை தோஷம் உள்ள ஜாதகம் ஆகும்.
இந்திரா காந்தி அம்மையாருக்கு ஏழில் சனி (சில ஜாதகர்களுக்கு
அதற்குப் பரிகாரம் இயற்கையாகவே உடன் இருக்கும் ஆகவே
தங்கள் ஜாதகத்தில் ஏழில் சனி இருக்கும் பெண் வாசகர்கள்
குழம்ப வேண்டாம்)

நான் அதைச் சொல்லாமல், "ஏற்கனவே நீங்கள் குழம்பிப்போய்
இருக்கிறீர்கள் சனி என்ன செய்யும், ராகு என்ன செய்யும்
என்பதையெல்லாம் சொல்லி நான் உங்களை மேலும் குழப்ப
விரும்பவில்லை. நீங்கள் நட்சத்திரங்களை மட்டும் ஒதுக்காதீர்கள்"
என்றேன்

அந்த அம்மையார் விடவில்லை, "இருந்தாலும் மூலம் மட்டும்
வேண்டாம் சாமி!" என்றார்கள்

மாமனாரின் ஆயுள் அவர் பிறந்த அன்றே நிர்ணயிக்கப்
பட்டிருக்கிறது. மூல நட்சத்திர மருமகள் வந்தால் அவர் எப்படி
மாண்டு போவார்? மருமகள் வந்தவுடன் அவர் மாண்டு போவார்
என்றால் எந்த நட்சத்திர மருமகள் வந்தாலும் அவர் மாண்டு
போவார் இல்லையா?

இந்த லாஜிக்கெல்லாம் நமது மக்களுக்கு ஏன் பிடிபட மாட்டேன்
என்கிறது என்று நினைத்துப் பல தடவைகள் நொந்து போயிருக்கிறேன்.

எனக்குத் தெரிந்து பல மூல நட்சத்திர மருமகள் கையால்
சாப்பிட்டுக் கொண்டு இன்றும் பல கிழங்கள் ( மாமனார்கள்)
உயிரோடுதான் இருக்கின்றன!

அனாலும் திருமணச் சந்தையில் பல பேர்களுக்கு, இவற்றை
எப்படி எடுத்துச் சொன்னாலும் ஏறுவதில்லை!
-----------------------------------------------------
சரி, அரட்டை போதும்; பாடத்திற்கு வருகிறேன்.

(இந்தப் பாடத்தை சும்மா தெரிந்து கொள்வதற்காகப் படித்தால்
போதும். மனப் பாடம் செய்து மண்டையை உடைத்துக் கொள்ள
வேண்டாம். இதைக் கணித்துத் தருவதற்கு மென்பொருள்கள்
உள்ளன. ஒரே நிமிடத்தில் இரு ஜாதகங்களையும் ஆராய்ந்து
பொருந்துகின்றன அல்லது பொருந்தவில்லை என்று நெத்தியடி
யாகக் கணினி கணித்துக் கொடுத்துவிடும்)

1. பெண்ணுடைய நட்சத்திரத்தில் இருந்து பையனுடைய நட்சத்திரம்
2,4,6,8,9,11,13,15,18,20,24,26 வது நட்சத்திரமாக இருந்தால் நல்லது
பொதுவாக ஏழு நட்சத்திரங்கள் தள்ளியிருந்தால் நல்லது.
பெண் ராசிக்கு எட்டாவது ராசியைச் சேர்ந்த நட்சத்திரங்கள்
வேண்டாம்

1-A, ஏக நட்சத்திரம். அதாவது பெண், மாப்பிள்ளை இருவருடைய
நட்சத்திரங்களும் ஒரே நட்சத்திரமாக இருந்தால் என்ன செய்வது?
ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், ஹஸ்தம், திருவோணம் ஆகிய
ஆறு நட்சத்திரங்களில் ஒன்றில் இருவரும் பிறந்திருந்தால் தவறில்லை
திருமணத்தை நடத்தலாம். பொருந்தும் மற்ற நட்சத்திரங்கள் பொருந்தாது.
அஸ்விணி, கார்த்திகை, மிருகசீர்ஷம், புனர்பூசம், உத்திரம், சித்திரை,
அனுஷம் உத்திராடம் ஆகியவை மத்திமம் (பரவாயில்லை) செய்யலாம்
என்பவர்களும் உண்டு. பெரும்பாலும் ஏக நட்சத்திரத்தில் செய்வதில்லை.
காரணம் ஏழரைச் சனி போன்ற கோச்சாரக் கேடுகளில் இருவரையும்
அந்தக் கிரகங்கள் ஒரு சேரப் படுத்தி எடுத்திவிடும். தனித் தனி
நட்சத்திரங்கள் என்றால் ஒரு வசதி உண்டு ஒருவர் அடிவாங்கும் போது
மற்றவர் ஒத்தடம் கொடுக்கலாம் ஆகவே என்னைப் பொறுத்தவரை
ஏக நட்சத்திரம் எல்லாம் வேண்டாம் சாமி!

2,கணப் பொருத்தம். கணம் என்றால்
அட்டவணை கீழே உள்ளது.


பெண்ணிற்கும் பையனுக்கும் ஒரே கணம் என்றால் நல்லது
பெண்ணிற்கு மனிதகணமும், பையனுக்குத் தேவகணமும்
என்றாலும் நல்லது
-------------------------------------------------

பெண்ணிற்குத் தேவகணமும் பையனுக்கு மனிதகணமும்
என்றால் மத்திமம் (average)
பெண்ணிற்கு தேவகணமும், பையனுக்கு ராட்சசகணமும்
என்றால் மத்திமம் (average)
--------------------------------------------------
மற்றவை பொருந்தாது.

3. மகேந்திரப் பொருத்தம் (இருவருக்கும் குழந்தை பாக்கியம்
இருக்கிறதா என்பதைப் பார்க்கும் வழி. இதைத் தவிர்த்துவிடலாம்.
சமயங்களில் இந்தப் பொருத்தம் இல்லாதவர்களுக்கெல்லாம்
குழந்தை பிறந்திருக்கிறது. இருவரில் ஒருவருக்கு பாக்கியம்
இருந்தாலும் குழந்தை பிறக்கும். அதை அஷ்டகவர்க்கத்தில்
தெரிந்து கொள்ளலாம். அந்தப் பாடம்வரும் வரை பொறுமையைக்
கடைப் பிடிக்கவும்)

பெண் நட்சத்திரம் முதல் ஆணின் நட்சத்திரம்வரும்வரை
எண்ணும்போது 1-4-7-10-13-16-19-22-25 வந்தால் நல்லது.
இல்லையென்றால் பொருந்தாது.

4. பெண் தீர்க்கப் பொருத்தம்:
பெண் நாள் முதலாக எண்ணும்போது 13ற்கு மேல் வந்தால் நல்லது.
7ற்கு மேல் வந்தாலும் நல்லதாக எடுத்துக் கொள்ளலாம்
(அது 50 ரன் கணக்கில் வரும். 13ற்கு மேல் என்றால் செஞ்சுரி
அடித்த கணக்கில் வரும் என்று வைத்துக் கொள்ளூங்கள்)

5. யோனிப் பொருத்தம் (இது சிக்கலானது. எனக்கு இதில்
உடன்பாடு இல்லை. அந்தக்காலத்து ரிஷிகள் இதை எந்தக்
கணக்கில் வடிவமைத்தார்கள் என்று தெரியவில்லை. அவர்கள்
அர்த்தம் இல்லாமல் செய்து இருக்கமாட்டார்கள். ஜோதிடத்தை
நம்புவதைப் போல அவர்கள் எழுதி வைத்துள்ள இதையும்
நம்பத்தான் வேண்டும். பதிவில் எழுதினால் பலர் குறுக்கு
கேள்வி கேட்டு என்னை நைத்து விடுவார்கள் ஆகவே
எழுதவில்லை. இல்லை அய்யா - நாங்கள் கட்டாயம் தெரிந்து
கொள்ள விரும்புகிறோம் என்பவர்கள் மின்னஞ்சலில் தெரிவியுங்கள்.
அதை மின்னஞ்சல் மூலம் அறியத் தருகிறேன்.

இந்தப் பகுதியின் மீதிப்பாடங்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.
இந்தப் பதிவின் நீளம் கருதி இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்

(தொடரும்)

13.2.08

பெண்ணிற்கு என்ன வேண்டும்?



===================================================
பெண்ணிற்கு என்ன வேண்டும்?

மீண்டும் ஜோதிடம் - பகுதி 5

ஆணிற்கு என்ன வேண்டும்? இவன் எதையும் சாதிக்கக்கூடியவன்
என்ற நிலைப்பாடு கொண்டவனாக அல்லது திறமையுடையவனாக
அவன் இருக்க வேண்டும்.

சரி, ஒரு பெண்ணிற்கு என்ன வேண்டும்? இவன் எதையும் எனக்காகச்
செய்யக்கூடியவன் என்று சொல்லும்படியான ஆடவன் ஒருவனின் துணை
கிடைத்தால் போதும். அதாவது அத்தகைய இளைஞன் அவளுக்குக்
கணவனாகக் கிடைக்க வேண்டும்!

"நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்...
நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும் .
நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் ..
உலகங்கள் நமையன்றி வேறேதும் இல்லை ...
வேறேதும் இல்லை"

என்று இருவரும் மனதாரப் பாடும் விதமாக ஜோடிப்பொருத்தம் அமைய
வேண்டும்!

அப்படியெல்லாம் அமையுமா?

ஆயிரத்தில் ஒன்று அமையலாம்! மற்றபடி நோ சான்ஸ்!

கல்யாணமானவர்களைக் கேட்டுப் பாருங்கள். மீண்டும் ஒரு வாய்ப்புக்
கொடுத்தால் இதே பெண்ணைத் திருமணம் செய்துகொள்வீர்களா?
அல்லது பெண்ணாக இருந்தால் இதே ஆடவனைத் திருமணம்
செய்து கொள்வீர்களா? என்று கேட்டுப் பாருங்கள்

தொண்ணுறு சதவிகிதம் பதில் அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கும்.

ஆனாலும் இந்திய மண்ணில், பெண்களும் சரி, ஆண்களும் சரி ஒரு
சமுதாயக் கட்டுப்பாட்டிற்காக அல்லது தங்கள் பெற்றோர்கள், குடும்பச்
சூழ்நிலைக்காக விட்டுக் கொடுத்து அல்லது சகித்துக் கொண்டு குடும்பம்
நடத்திக் கொண்டிருப்பார்கள்.

அந்த சகிப்புத் தன்மைதான், பொறுமைதான் நமது பலம்.
ஏன், நமது கலாச்சாரம்!

என் உறவினர் வீடுகளில் பெண் தேடும் படலம் நடக்கும்போது கேள்வி
கேட்பேன். "எந்த விதமான பெண் உங்களுக்கு மருமகளாக வரவேண்டும்
என்று விரும்புகிறீர்கள்?"

பலருக்குக் கோர்வையாகப் பதில் சொல்லத்தெரியாது."என் பையனுக்குப்
பிடிக்கிற மாதிரி பெண் இருந்தால் போதும். எங்களுக்கு ஒரே ஒரு
ஆசைதான் அந்தப்பெண் நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவளாக இருந்தால்
போதும்!"

நல்ல குடும்பத்திற்கு ஏது அளவுகோல்?

நான் என் பாணியில் கேட்பேன், "ஒரு பெண்ணிற்கு என்னென்ன தகுதிகள்
வேண்டும் தெரியமா?"

சொல்லுங்கள் என்பார்கள், உடனே சொல்வேன்

தோற்றம் (Appearance), கல்வி (education), அறிவு (skill),
திறமை (talent),
குணம் (character) அதிர்ஷ்டம் (luck) ஆகிய ஆறும்
ஒரு பெண்ணிற்கு வேண்டும். அப்படிப்பட்ட பெண் ஒருத்தி இருக்கிறாள்..."
என்றூ சொல்லி நிறுத்திவிடுவேன்.

உடனே படாரென்று கேட்பார்கள்,"எங்கே இருக்கிறாள்?"

"அவள் பெயர் அலமேலு மங்கை. திருச்சானூரில் இருக்கிறாள்.
ஆனால்
அவளுக்குத் திருமணம் ஆகிவிட்டது. அவளைத் திருப்பதி
பாலாஜி
திருமணம் செய்துகொண்டு விட்டார்" என்பேன்.

அப்போதுதான் அவர்களுக்கு உறைக்கும் நான் என்ன சொன்னேன் என்பது!

ஆகவே அந்த ஆறும் ஒருசேரக் கொண்ட பெண்னோ அல்லது ஆணோ
உலகத்தில் கிடையாது.

அதிக பட்சம் அந்த ஆறில் மூன்று இருக்கலாம்.

அந்த ஆறும் இருக்க வேண்டுமென்றால், கீழ்க்கண்டவைகள் எல்லாம்
ஜாதகத்தில் வலுவாக இருக்க வேண்டும் - ஒன்று கூடத் தவறாமல்!

அதாவது ஒவ்வொரு வீட்டிலும் 30 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள்
இருக்க வேண்டும். அதேபோல குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு கிரகத்திற்
கும் அதனதன் சுய வர்க்கத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள்
இருக்க வேண்டும்.

1. தோற்றம் (Appearance) - 1st House and the Sun
2. கல்வி (education) - 4th House and Mercury
3. அறிவு (skill), - 5th House and Jupiter
4. திறமை (talent) - Mars and Saturn
5. குணம் (character) - 1st House and the Moon
6. அதிர்ஷ்டம் (luck) - 9th house and 11th House

உங்களுக்கு அல்லது உங்கள் மனைவிக்கு அல்லது உங்கள் would be க்கு
எத்தனை இருக்கிறது என்று பார்த்துக் கொள்ளுங்கள்.
-------------------------------------------------------------
திருமணப் பொருத்தம்

பிள்ளைகளைப் பெற்றோர்களுக்கு மிகவும் சிரமமான வேலை ஒன்று
இருக்கிறது என்றால் அது தங்களுடைய பிள்ளைகளுக்குத் தகுந்த வரனைத்
தேடிப் பிடிப்பதுதான். அதைத் தேடியவர்களுக்குத்தான் தெரியும் Pain of
searching என்றால் என்னவென்று!

முன்பெல்லாம் மனப் பொருத்தம் இருந்தால் போதும் திருமணத்தை நடத்தி
விடுவார்கள். இபோது அப்படி இல்லை. நாளிதழ்களும், வார, மாத
இதழ்களும் விற்பனைக்காக விடாமல் ஜோதிடத்தைப் பிராதனப்படுத்தி
எழுதிக் கொண்டிருப்பதால் அனைத்து தரப்பினருக்கும் ஜோதிடத்தின்
மேல் ஒரு நம்பிக்கை வந்து விட்டது.

சரி ஜோதிடப்படி ஆராய்ந்துதான் திருமணத்தை நிச்சயம் செய்ய வேண்டும்
என்று நினைத்தால் என்ன ஆகும்? பெண்ணைப் பிடித்தால் ஜாதகம்
பொருந்தாது. ஜாதகம் பொருந்தினால் பெண் பிடித்தாற்போல இருக்க
மாட்டாள். ஒன்றிற்கொன்று இடக்காக இருக்கும்.

என்ன ஆகும்? வேறு என்ன ஆகும் வயது ஏறிக்கொண்டே போகும்.
கடைசியில் 21 வயதில் திருமணம் ஆக வேண்டிய பெண்ணிற்கு
32 வயதிலும், 24 வயதில் திருமணம் ஆகவேண்டிய ஆணிற்கு
35 வயதிலும் ஆகும்படி நேரிடலாம்.

அதற்கு ஏதாவது ஜாதகத்தில் குறிப்புத் தென்படுமா என்றால் படும்.
7ல் ராகு அல்லது கேது, அல்லது சனி இருந்தாலோ அல்லது சுக்கிரன்
6ல் அல்லது 8ல் அல்லது 12ல் மறைந்து. வலுவிழந்து விட்டாலோ
தாமதமான திருமணம்தான். இதுபோன்று இன்னும் சில காரணங்கள்
உள்ளன

என்னைப் பொறுத்தவரை ஒரே ஒரு கருத்துத்தான் - மனப்பொருத்தம்
மட்டும் பார்த்துத் பெண்னைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்.
மற்றவற்றை இறைவனிடம் விட்டு விடுங்கள்.

அதேபோல காதல் திருமணங்களிலும் எனக்கு ஒரு பிடிப்புக் கிடையாது
அதில் கவியரசர் கண்ணதாசன் சொல்லியதுதான் என் கருத்து.

அவர் என்ன சொன்னார்?

"காதலை இலக்கியத்திற்கு விட்டு விடுங்கள்
கல்யாணத்தைப் பெற்றோர்களிடம் விட்டு விடுங்கள்"

திருமணத்திற்குப் பிறகுதான் காதலனின் அல்லது காதலியின் முழுக்
குணமும் அல்லது செயல்பாடுகளும் அறிய வருவதால் பாதிக் காதல்
திருமணங்கள் பரிதாபத்தில் முடிந்து விடுகிறது. பெற்றோர் நடத்தி
வைத்த திருமணம் என்றால் - அவலம் நேர வேண்டாம் - ஒரு வேளை
நேர்ந்தால் அவலத்தில் கை கொடுக்க உற்றார்கள், உறவினர்கள்
என்று ஆட்கள் இருக்கும். காதல் திருமணத்தில் யார் இருப்பார்கள்
- உடன் வந்து சார்பதிவாளர் அலுவலகத்தில் சாட்சிக்
கையெழுத்துப் போட்ட நண்பர்களைத் தவிர?

இரு மனங்களைத் திருமணத்தால் கட்டிப்போட ஜோதிடர் எதைப் பார்ப்பார்?

1. இரு ஜாதகங்களும் ஒன்றுக் கொன்று பொருந்துகிறதா என்று பார்ப்பார்
அதாவது அடிப்படையான பத்து (நட்சத்திரம், கணம், மகேந்திரம்,
பெண்தீர்க்கம், யோனி, ராசி, ராசி அதிபதி, வசியம், ரச்சு,வேதை ஆகிய
பத்து) பொருந்தி இருக்கிறதா என்று பார்ப்பார்! இந்தப் பத்தில் ரச்சுப்
பொருத்தம் (Duration of Married Life) அதி முக்கியம். மற்ற ஒன்பதில்
ஐந்து பொருந்தினால் போதும்.

2. செவ்வாய் தோஷம் குறுக்கிடாமல் இருக்கிறதா என்று பார்ப்பார்

3. 7ம் வீடு, சந்திர லக்கினம் ஆகியவற்றில் தீய கிரகங்களின் ஆதிக்கம்
இருக்கிறதா? பாபகர்த்தாரி அமைப்பு இருக்கிறதா என்று பார்ப்பார்

4. அஷ்டம சஷ்டமம் (6ம் வீடு - 8ம் வீடு) இருவருக்கும் ஒத்துப் போகிறதா
என்று பார்ப்பார்.

இவ்வளவையும் யார் பார்ப்பார்? நல்ல ஜோதிடர் மட்டுமே பார்ப்பார்.
அரைகுறை ஆசாமி என்றால் இங்கே குறிப்பிட்டுள்ள 4ல் இரண்டை
மட்டும் பார்த்து அனுப்பி விடுவார். அதற்குப் பெரும்பான்மையான
தவறு நம் மேலும் இருக்கும். வருகிற ஆசாமி தன் பையனின் ஜாதகத்தைக்
கொடுத்துக் கூடவே பத்துப் பெண்களின் ஜாதகத்தையும் கொடுத்து
இதில் பொருந்துகிற்றவற்றை மட்டும் எடுத்துக் கொடுங்கள் என்று
கட்டளை இடும்போது, அவர் எப்படி ஒவ்வொன்றாகத் தோண்டிக்
கொண்டிருக்க முடியும்? அதுவும் நாம் கொடுக்கிற 50க்கும் 100க்கும்
அவர் எப்படி பத்து ஜாதகத்தையும் வைத்துக் கொண்டு மணிக்கணக்கில்
ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க முடியும்? அவருக்கு சம்பளம் என்ன
நாஸா விஞ்ஞானிகள் ரேஞ்சுக்கா கிடைக்கிறது? ஆகவேதான் இந்தக்
குளறுபடிகள். அதனால் ஏற்படும் அவப்பெயர்கள்.

அவருக்கு மட்டுமா அவப்பெயர்? அரிய கலையான ஜோதிடத்திற்கும்
அல்லவா அவப்பெயர்!

அந்த நான்கையும் விரிவாக அடுத்த பதிவில் பார்ப்போம். பதிவின்
நீளம் கருதி இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்


(தொடரும்)



11.2.08

யாருடைய ஆட்சி உங்கள் வீட்டில்?

யாருடைய ஆட்சி உங்கள் வீட்டில்?

மீண்டும் ஜோதிடம் - பகுதி 4

"காலையிளங் காற்று, பாடிவரும் பாட்டு எதிலும் அவன் குரலே"
என்று கவியரசர் கண்ணதாசன் எல்லாவற்றிலும் கண்ணனைக் கண்டார்.

இப்போதெல்லாம் யாருக்கும் அதற்கு நேரமில்லை. கண்ணனைவிட
முக்கியமான ஒன்று பலருகும் இருக்கிறது.

அதுதான் பணம்!

இன்றைய நவ நாகரீக உலகில், சொகுசான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு
எல்லா மனிதனுமே பணம், பணம் என்று அலைந்து கொண்டிருக்கிறான்.

மனிதனில் இரண்டுவகைதான் உண்டு. பணத்திற்கு என்ன செய்வது என்று
தெரியாமல் அல்லும் பகலுமாக அதைத் தேடி, டவுன்பஸ் போல ஓடிக்
கொண்டிருப்பவன் ஒரு வகை. பணத்தை வைத்துக் கொண்டு அதை என்ன
செய்வது, எப்படிக் காப்பாற்றுவது, எதில் முதலீடு செய்வது என்று
அலைந்து கொண்டிருப்பவன் மற்றொறு வகை

இந்தப் பணத்தால் யாருக்குமே, எதற்குமே நேரமில்லை என்பதுதான்
நிதர்சனமான உண்மை!

பணம் என்பது ஒரு மாயமான். அதை வேட்டையாடப் புறப்பட்டவன்
எவனுமே திருப்தியோடு திரும்பியதில்லை. அம்பானி, பில் கேட்ஸ்
உட்பட அனைவருக்கும் இது பொருந்தும்!

என்னைப் போல வலையில் எழுதுபவர்களும் குறைவு, உங்களைப் போல
வந்து படிப்பவர்களும் குறைவு. சில ஆயிரம் பேர்களுக்குள் அடங்கிவிடும்.

நான் ஒரு மனத்திருப்திக்காக எழுதுகிறேன். நீங்களும் ஒரு மனத்திருப்திக்
காகத்தான் மீண்டும் மீண்டும் வந்து படிக்கின்றீர்கள்.

இந்த மனத்திருப்தி (Mental Satisfaction) யைத் தருவது சந்திரன் தான்.
ஒரு ஜாதகத்தில் சந்திரனும், ஐந்தாம் வீட்டிற்குரிய கிரகமும் (Lord of
the 5th house, House of Mind) நன்றாக இருந்தால்தான் மனம் தெளிவு
உடையதாக இருக்கும், குழப்பம் இல்லாத ஆசாமியாக இருப்பான்.

சரி, அந்த இரண்டு கிரகங்களும் வலிமை உடையதாக இருப்பதை
எப்படித் தெரிந்து கொள்வது? அதற்கு எதாவது Testing Meter
இருக்கிறதா என்றால் - இல்லை!

ஆனால் சுலபமான வழி இருக்கிறது. சந்திரன் தன் சுய வர்க்கத்தில்
ஐந்து, அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களைக் கொண்டிருக்க வேண்டும்.
அதே போல் ஐந்தாம் வீட்டு அதிபதியும் தன் சுய வர்க்கத்தில் ஐந்து,
அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களைக் கொண்டிருக்க வேண்டும்.

(புதியவர்களுக்கு: ஐந்தாம் வீட்டின் அதிபதி என்பது லக்கினத்திலிருந்து
ஐந்தாம் வீடு - லக்கினத்தையும் சேர்த்து எண்ண வேண்டும் - அந்த வீட்டின்
அதிபதி. உதாரணத்திற்கு நீங்கள் சிம்மலக்கினம் என்றால் ஐந்தாம் வீடு, தனுசு,
தனுசு வீட்டின் அதிபதி. குரு, நீங்கள் மகர லக்கினம் என்றால் ஐந்தாம் வீடு
ரிஷபம் - அந்த வீட்டின் அதிபதி சுக்கிரன். இன்னும் விவரம் வேண்டுபவர்
கள் என் பழைய பதிவுகளைப் படிக்கவும்)

அப்படியிருந்தும், ஒருவர் அடிக்கடி குழப்பங்கள், அல்லது கவலைகளைக்
கொண்டிருக்கக்கூடும். "எனக்கு ஏன் சார் அப்படி?" என்று அவர் கேட்கக்
கூடும். அதற்குத் தவிர்க்க முடியாத வேறு ஒரு காரணம் இருக்கும்.

ஐந்தாம் வீட்டில் சனி அல்லது ராகு அல்லது கேது போன்ற கிரகங்கள்
அமர்ந்திருந்தால் அவை மனதைக் குழப்பிக் கொண்டே இருக்கும், சாதாரண
விஷயத்திற்குக் கூடக் கவலைப் பட வைத்துக் கொண்டிருக்கும்.

அதற்கு என்ன செய்வது?

ஒன்றும் செய்ய முடியாது! நமக்கு நாமேதான் தட்டிக் கொடுத்துக்
கொள்ள வேண்டும் அல்லது ஆறுதல் சொல்லிக் கொள்ள வேண்டும்.

"போனால் போகட்டும் போடா" என்று எவ்வளவு பெரிய பிரச்சினை
யையும் உள் வாங்கிக் கொள்ளாமல், அதன் போக்கிலேயே விட்டு விட
வேண்டும்.

அதற்குத்தான் ஜாதகம் பார்ப்பது! பார்த்துத் தெரிந்து கொண்டபின்,
சரி நாம் இவ்வளவு உயரம்தான் - குருவியைப் போல பறக்க முடியும்
புறாவையும், கழுகையும் பார்த்து நாம் ஆசைப் படக்கூடாது என்று
தெளிந்து தேற வேண்டும்.

நம் ஜாதகம் கவலைப் படுகிற ஜாதகம், ஆகவே இன்று எது நடந்தாலும்
கவலைப் படக்கூடாது, என்று காலையில் எழுந்தவுடன் ஒன்றிற்கு மூன்று
முறை சொல்லி மனதைக் காலையிலேயே கடிவாளம் போட்டுப் பிடித்து
கொள்ள வேண்டும்!

"என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே - ஒரு
தலைவன் இருக்கிறான் மயங்காதே"

என்று தலைவனின் மேல் நம்பிக்கை வைக்க வேண்டும். இங்கே
தலைவன் என்பது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஓட்டு வாங்க
மட்டுமே நம்மிடம் வரும் தலைவர்களில் ஒருவர் அல்ல!

அவர் நமக்கெல்லாம் ஒரே தலைவர் என்றாகிவிட்ட இறைவன்.

அதைத்தான் வேறொரு கவிஞன் இப்படி எழுதினான்.

"ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி"

அய்யா, சொல்கிறது சுலபம், கடைப்பிடிப்பது கடினம் அல்லவா
என்பவர்களுக்கு ஒரு செய்தி.

ஆரம்பத்தில் எல்லாம் கஷ்டம்தான். ஆனால் ஒரு யானையைக்கூட
பாகன் ஒருவன் பயிற்சியினால் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு
வந்து விடுவதில்லையா? அதுபோல நாமும் முயன்றால் நம்
மனதைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடலாம்.

பயிற்சினால் எல்லாம் சாத்தியப்படும், ஒன்றே ஒன்றைத் தவிர!

அது என்ன?

பாடலைப் பாருங்கள்.

"சித்திரமும் கைப்பழக்கம்,
செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்,
நடையும் நடைப்பழக்கம்
தயை, ஈகை, கொடை
இம்மூன்றும் குடிப்பழக்கம்"

நீங்கள் எதை வேண்டுமென்றாலும் பயிற்சியின் மூலம் பெற்று
விடலாம். ஆனால் தயவு தாட்சண்யம், ஈவு இரக்கம், தான
தர்மம் செய்யும் பழக்கத்தைப் பயிற்சியின் மூலம் பெற முடியாது.
அது உங்களுக்கு வாய்த்த நல்ல பெற்றோர்களால், குடும்பத்தாரால்
மட்டுமே கிடைக்கும். என்று விவேக சிந்தாமணி என்ற நூல் கூறுகிறது.

அதே போல நமக்கு வாய்க்கபோகும் பெண் எப்படி இருப்பாள்
என்பதைத் தெரிந்து கொள்ளவும் அஷ்டகவர்க்கம் துணை செய்யும்.

திருமனத்திற்கு முன்பாக எல்லோருமே தெனாவெட்டாக இருப்பார்கள்
நமக்கு ஒரு தேவயானி அல்லது சிநேகா காத்துக் கொண்டிருப்பதாகப்
பலரும் பலவிதமான கனவோடு இருப்பார்கள். அதுவும் பெண்கள்
இன்னும் ஒருபடி அதிகமாகக் கனவு கண்டு தங்களைக் கொத்திக்
கொண்டுபோக ஒரு பிரித்திவிராஜன் பென்ஸ்காரில் வருவான் அல்லது
ஒரு அஜீத் குமாரோ அல்லது ஒரு சூர்யாவோ அல்லது அரவிந்தசாமியோ
வந்து சேருவான் என்று கனவு கண்டு கொண்டிருப்பார்கள்.

கடைசியில் அந்தக் கனவு கண்டவனுக்கு ஒரு காந்திமதியோ அல்லது
சுந்தரிபாயோ வந்து சேருவாள்.அதுபோல கனவு கண்ட அம்மணிகளுக்கு
ஒரு பி.எஸ்.வீரப்பவோ அல்லது ஒரு பிரகாஷ் ராஜோ வந்து சேருவான்.
அதுதான் வாழ்க்கை.

கடைசியில் "நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம்
ஏதுமில்லை,
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றும்
இல்லை"
என்ற பாட்டை ஒலிக்கவிட்டு மன நிம்மதி அடைய வேண்டியதுதான்

கடவுள் அப்படியெல்லாம் ஜோடி சேர்க்கவில்லை. சினிமாவில் மட்டும்
தான் ஜோடிப் பொருத்தமாக நாயகன் - நாயகியைப் போடுவார்கள்.
வாழ்க்கையில் ஒருவர் ரயிலாகவும், ஒருவர் தண்டவாளமுமாகத்தான்
கணவன் மனைவி அமைந்திருப்பார்கள். இருவருமே ரயிலாக எந்த
ஜோடியும் இதுவரை படைக்கப் படவில்லை!

இருவருமே ரயிலாக இருந்தால் வாழ்க்கை என்ற வண்டி எப்படி ஓடும்?

வாழ்க்கை என்ற பூமாலையில் ஒருவர் பூக்களாகவும் மற்றொருவர்
அதைகட்டும் வாழை நாராகவும்தான் இருப்பார்கள். மனைவி பூவாக
இருந்தால் கணவன் நாராக இருப்பான். கணவன் பண்ணீர்ப்பூப்போல
மணம் பரப்புபவனாக இருந்தால் மனைவி அதைக் கட்டி மாலையாக்கும்
நாராக இருப்பாள். அதுதான் படைப்பின் தத்துவம். அதனால்தான்
உலகம் இயங்கி கொண்டிருக்கிறது.

நம் ஜாதகத்திற்கு ஒரு வடிவுக்கரசியைப்போன்ற பெண்தான் கிடைப்பாள்
அதுவே பெரியது. நாம் வெட்டியாக நயன்தாராவிற்கும் அல்லது திரிஷா
விற்கெல்லாம் ஆசைப்படாமல் இருப்போம் என்று மனதைத் தேற்றிக்
கொள்ள வேண்டும். அதுவும் ஜாதகத்தில் தெரியும்

நம் லக்கினத்திற்கு 7ஆம் வீட்டில் சந்திரன் அல்லது சுக்கிரன் இருந்தால்
அழகான தோற்றத்தை உடைய பெண் மனைவியாக அமைவாள். குரு
இருந்தால் நல்ல குணமும், தோற்றமும் உடைய பெண் மனைவியாக
வந்து கரம் பிடிப்பாள். 7க்குரிய கிரகமும், சுக்கிரனும் தங்கள் சுய
வர்க்கத்தில் ஐந்து, அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களைக்
கொண்டிருந்தாலும் மனம் விரும்பியது போல மனைவி கிடைப்பாள்

உரிய காலத்தில் திருமணம் நடைபெற வேண்டும், நல்ல அழகும்
நல்ல குணமும் (சொன்ன பேச்சை - அட்லீஸ்ட் ஆரம்ப காலத்திலாவது
கேட்கக்கூடிய) மனைவி வேண்டும் - அதாவது த்ரீ இன் ஒன் வேண்டும்
என்பவர்களுக்கு - அது போல கிட்டுமா? கிடைக்குமா? என்பதைக்
கண்டு பிடிக்க ஒரு வழியிருக்கிறது.

எழாம் வீடு, ஏழுக்குரியவன் அமர்ந்த வீடு, திருமணகாரகன் (authority
for marriage) சுக்கிரன் அமர்ந்த வீடு ஆகிய மூன்று இடங்களுமே
முப்பது பரல்களையோ அல்லது அதற்கு அதிகமான பரல்களையோ
கொண்டிருந்தால் அதுபோல நடக்கும்.

லக்கினத்தின் பரல்களை விட ஏழாம் வீட்டின் பரல்கள் அதிகமாக
இருந்தால் வீட்டில் உங்கள் மனைவிதான் பிரதம மந்திரி. நீங்கள்
வெறும் ஜனாதிபதி மட்டுமே. அதே நேரத்தில் ஏழாம் வீட்டில் உள்ள
பரல்களைவிட லக்கினத்தில் பரல்கள் அதிகமாக இருந்தால் நீங்கள்
தான் எல்லாம் - அதாவது பர்வேஷ் முஷ்ர·ப் போல சர்வ
அதிகாரமும் உங்கள் கையில்தான்.

மனைவி உங்களிடம் மயங்கிக் கிடப்பாள் அல்லது கட்டுண்டு கிடப்பாள்
அல்லது அடங்கிக் கிடப்பாள். இல்லையென்றால் நீங்கள் அடங்கிக்
கிடப்பீர்கள்.

சரி விடுங்கள் யாராவது ஒருவர் மற்றொவருக்கு அடங்கிப்போவதுதானே
வாழ்க்கை. "Life is nothing but adjusting with the better half"
என்பதுதானே வாழ்க்கையின் (Married Life) முதல் நியதி!

ஆண், பெண் இருவரின் ஜாதகங்களுக்குமே இது பொருந்தும்!

பதிவின் நீளம் கருதி இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்.
மற்றவை அடுத்த பாடத்தில்.
படிப்பவர்கள் ஒரு வரி பின்னூட்டம் இடுங்கள்
Feedback இல்லையென்றால் எப்படித் தொடர்ந்து சுவையாக
எழுத முடியும்?

அன்புடன்,
வகுப்பறை வாத்தியார்,

(தொடரும்)





8.2.08

வாழ்க்கையும் சீட்டாட்டமும்

வாழ்க்கையும் சீட்டாட்டமும்

மீண்டும்
ஜோதிடம் - பகுதி 3

இளைஞனாக இருந்த காலத்தில் எனக்கு ஜோதிடத்தின்
மீதெல்லாம் நம்பிக்கை கிடையாது. உயர் நிலைப் பள்ளி
மற்றும் கல்லூரியில் படித்த காலத்தில் எல்லாம் அதாவது
1964ஆம் ஆண்டு முதல் 1970ஆம் ஆண்டு வரை -
திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனுதாபியாக இருந்த
வன் நான். அந்தக் கால கட்டத்தில், அரசியல் கூட்டங்க
ளுக்கு எல்லாம் தவறாமல் நண்பர்களுடன் சென்று வந்தி
ருக்கிறேன். அப்போதெல்லாம் ஜோதிடத்திலும், ஆன்மீகத்
திலும் நாட்டம் இல்லாமல் இருந்தது.

நாவலர் நெடுஞ்செழியன், மதியழகன், கஞைர்.மு.க, சத்தியவாணி
முத்து அம்மையார், அறிஞர் அண்ணா ஆகியோர்கள் பேசும்
கூட்டம் என்றால் தவறாமல் போய் வருவேன். கலைஞரையெல்லாம்
அப்போதே மேடையிலேயே சந்தித்துப் பேசியிருக்கிறேன்
ஆட்டோகிரா·பெல்லாம் வாங்கிவைத்தது இன்றளவும் பத்திரமாக
இருக்கிறது.

எங்கள் வீட்டின் அருகில் ஒரு மன்ற அலுவலகம் இருந்தது. இருபது
சென்ட் காலி இடத்தில் பெரிய கூரை வேய்ந்த கொட்டகையில்
இருந்தது அது. ஆற்று மணல் தரை. நீளமான பெஞ்சுகள், சுற்றிலும்
பெரிய மரங்கள் என்று ரம்மியமான சூழ்நிலையோடு இருக்கும்.
நாளேடுகள், வார, மாத ஏடுகள் என்று படிப்பதற்கு இலவசமாக,
நிறையவே கிடைக்கும் பாதி நேரம் அங்கேதான் இருப்பேன்.

நான் சென்றால் அங்கே இருக்கும் பெரிசுகள் எல்லாம்
உற்சாகமாகி விடுவார்கள் பல கட்டுரைகளை, செய்திகளை
என்னைக் குரல் கொடுத்துப் படிக்கச் சொல்லி அனைவரும்
சுற்றி அமர்ந்து கேட்பார்கள். சுண்டல், வடை, காபி,
டீயென்று மன்றச் செலவிலேயே தின்பதற்கும் நிறையக்
கிடைக்கும். அதோடு வாரம் ஒரு ஆங்கிலப் படத்திற்கு
என்னைப் போன்ற இளைஞர்களை, அதுவும் மன்றச்
செலவிலேயே கூட்டிக் கொண்டு செல்வார்கள். நடைபெறும்
படத்தின் கதைச் சுருக்கம் பெரிய கரும்பலகையில் தமிழில்
எழுதி வைத்திருப்பார்கள். அதையும் என்னைப் படிக்கச்
சொல்லிக்கேட்டு விட்டுத்தான் அரங்கிற்குள் வருவார்கள்.
இம்பீரியல் திரை அரங்கிலும், விக்டோரியா திரையரங்கிலும்
கண்டு களித்த திரைப்படங்கள் ஏராளம்

அதெல்லாம் ஒரு கலக்கலான காலம். அது நடந்ததெல்லாம்
சேலத்தில். அப்போது எங்கள் தந்தையார் சேலத்தில்
இருந்ததால் நாங்களும் அங்கேதான் இருந்தோம்.

பிறகு கோவைக்கு எங்கள் தந்தையார் மாறி வந்தபோது,
அந்தத் தொடர்பெல்லாம் போய் விட்டது. இங்கே வேறு
மாதிரியான ஒரு நட்பு வட்டம் கிடைத்தது. அரசியல்
மாயை எல்லாம் நீங்கி ஒரு புத்தொளி கிடைத்தது.

எங்கள் அப்பாவின் ஜோதிட நண்பர்கள், எங்கள் உறவி
னர்கள் மூலமாக பல கவிஞர்கள், இலக்கியவாதிகளின்
நட்பெல்லாம் கிடைத்தவுடன், பாதை மாறியது.

ஒரு பத்தாண்டுகாலம், நிறைய ஜோதிடர்களைச் சந்திக்கும்
வாய்ப்பும் கிடைத்தது. அதில் எங்கள் தந்தையாரின் நண்பர்
பாலக்காடு கிருஷ்ண மூர்த்தி பணிக்கர் என்பவர் மிகவும்
அற்புதமான ஜோதிடர். அசத்தலாகப் பலன்களைச் சொல்
வார்.

என் சகோதரனுக்கு, "வேலை எப்போது கிடைக்கும்?" என்று
ஒருமுறை கேட்டபோது ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்து விட்டு,
வேலை கிடைக்கும் தேதியையே எழுதிக் கொடுத்தவர்
அவர். அதோடு மட்டுமல்ல, "உனக்கு யோகமான ஜாதகம்,
நீ விரும்பும் வேலையே கிடைக்கும், ஒரு இடத்தில் அல்ல,
ஒன்றிற்கு மேற்பட்ட இடங்களில் இருந்து உனக்கு வேலை
கிடைக்கும். எதில் சேர்வதென்று திகைத்து, கடைசியில்
சீட்டுக் குலுக்கிப் போட்டுப் பார்த்து வேலைக்குச் சேர்வாய்"
என்றும் சொன்னார்.

அதேபோல்தான் நடந்தது. மூன்று தேசிய வங்கிகளில்
இருந்து பணி உத்தரவு ஒரே நேரத்தில் வர, கடைசியில்
அவர் சொன்னபடியே சீட்டில்தான் முடிவு செய்து எனது
சகோதரன் வேலைக்குச் சேர்ந்தான். அடுத்த சகோதரனுக்
கும் அவர் சொன்ன தேதியில் தான் வேலை கிடைத்தது.

இதுபோன்று பல அசத்தலான பலன்களைச் சொல்லி எங்கள்
பெரு மதிப்பிற்கு ஆளான அவர் இன்று இல்லை. அவரால்
தான் எனக்கு ஜோதிடத்தில் ஒரு பற்றுதல் ஏற்பட்டது.

அதைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன்.
பிறகு (ஓரளவு) கற்றுக் கொண்டேன். முழுதாகக் கற்றுக்
கொள்ளவில்லை. முழுதாகக் கற்றுக் கொள்ள யாராலும்
முடியாது! ஏன் என்பதைப் பின் ஒரு பதிவில் தெளிவு
படுத்துகிறேன்

எப்படிக் கற்றுக் கொண்டேன் என்பதையும், அதற்கு உதவி
யவர் யார் என்பதையும் முன் பதிவில் எழுதியிருக்கிறேன்.

மருத்துவத்தில், ஒரு உடம்பிற்கு முப்பது வகையான டாக்டர்கள்
இருப்பதைப்போல ஜோதிடத்திலும் பல பிரிவுகள் உள்ளன.
திருமணப் பொருத்தம் பார்ப்பதில் கெட்டிக்காரராக
இருப்பவருக்கு அது மட்டும்தான் சூப்பராகச் சொல்லவரும்.
நோய் நொடிகள் ஆயுளைக் கணித்துச் சொல்லும் சோதிட
ருக்கு அது மட்டும்தான் வசப்படும். இப்படிச் சில குழப்பங்
கள் ஜோதிடத்திலும் உண்டு.

ஜோதிடத்தில், புத்தகப் பாடத்துடன், அனுபவப் பாடமும்
உள்ளவர்தான் சிறந்த ஜோதிடராகப் பரிணமிக்க முடியும்.
ஆயிரம் ஜாதகங்களுக்காவது பார்த்துப் பலன் சொல்லிய
வருக்குத்தான், அடுத்தடுத்து வரும் ஜாதகங்களுக்கு அசத்த
லாகப் பலன் சொல்ல முடியும்.

எனக்குத் தொழில் வேறு. ஆனால் அனுபவத்திற்கு எங்கே
போவது என்ற பிரச்சினை இல்லை. தொடர்ந்து,
1980 முதல் 2005ம் ஆண்டு வரை(சுமார் 25 ண்டு காலம்)
நான் வாங்கிச் சேர்த்த பல ஆங்கில ஜோதிட மாத இதழ்கள்
என்னிடம் சேமிப்பாக உள்ளன. அதில் பல ஜோதிடர்களின்
அபூர்வமான கட்டுரைகள் உள்ளன. How I predicted? என்று
வந்த பல தொடர் கட்டுரைகள் உள்ளன. இந்தியாவின் பிரபலங்
களின் ஜாதகங்கள் ஒன்று விடாமல் அவற்றில் உள்ளன.
Referenceற்குத் தேவைப்பட்டால் எடுத்துப் பார்த்துக் கொள்ளலாம்.
அந்த மாத இதழ்கள்தான் எனக்கு அனுபவத்தைக் கொடுத்தன.

அதோடு அந்தக் காலத்தில் எல்லாம் கூட்டுக் குடும்ப வாழ்க்கை.
என் தாய் வழிப்பாட்டனார், எனது பெரியப்பா போன்ற அற்புதமான
மனிதர்கள் எழுதி வைத்திருந்தஅல்லது சேகரித்து வைத்திருந்த
பல நூற்றுக் கணக்கான ஜாதகக் குறிப்பு ஏடுகளும்
எனக்குக் கிடைத்தன. அவற்றையெல்லாம் Practical - பரிசோதனை
களுக்கு உட்படுத்தி நிறைய ஆராய்ச்சிகளும் செய்திருக்கிறேன்.

உதாரணத்திற்கு 'குட்டிச் சுக்கிரன் கூடிக் கெடுக்கும்.
ஆகவே இளம் வயதில் சுக்கிர திசை வந்தால்
படிப்பு பாழாகி விடும்' என்ற செய்தியைப்
படித்தால் என் கைவசம் உள்ள அந்த ஜாதகங்களில்
(அத்தனையும் உறவினர்களுடையது என்பதோடு,
நிலைமை தெரியும் என்பதால்) படிப்பைத் தவற விட்டவர்
கள் எத்தனை பேர், அவர்களுக் கெல்லாம் குட்டிச்
சுக்கிர திசைதான் காரணமா? அல்லது படிக்கிற காலத்தில்
ஏழரைச் சனி வந்தால் படிப்பு பாழாகும் என்று மற்றொரு
விதியும் இருக்கிறதே அதுதான்காரணமா என்று அறிந்து தெளிவதற்கெல்லாம் அந்த ஜாதகசேகரிப்புப் பழக்கம் கை கொடுத்தது.

சரி, விஷயத்திற்கு வருகிறேன். ஜோதிடத்தின் முதல் பாடம் என்ன தெரியுமா?

A person who know Astrology can only indicate what will take place in future and he should not certainly say what will definitely happen. That is in the hands of the Creator none other than the Almighty.

ஆமாம் ஜோதிடன் என்பவன் என்ன நடக்கலாம் என்று
கோடிட்டுக்காட்டலாமே தவிர, என்ன நடக்கும் என்று அறுதியிட்டுக் கூறக்கூடாது.அதைச் சொல்லும் சக்தி இறைவன் ஒருவருக்கே உண்டு!

ஜாதகத்தின் ஐந்தாம் வீடு - பூர்வ புண்ணிய ஸ்தானம். அதில் பல
விஷயங்கள் உள்ளடங்கியுள்ளது. அதைத் தெளிவு படுத்திச் சொல்லும் திறமை. எந்தச் சோதிடனுக்கும்கிடையாது. மனித வாழ்க்கையில் சில நிகழ்வுகள் அதைவைத்து நடக்கும். அங்கே ஜோதிடன் தோற்று விடுவான். ஆகவே எவ்வளவு பெரிய ஜோதிடனுக்கும் 90% பலன் களைத்தான் சொல்ல இயலும்.அதையும் சொல்ல வல்ல மகான்கள் இருந்திருக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் சொன்னதெல்லாம் ஜோதிடத்தை வைத்தல்ல,
தெய்வ அனுக்கிரகம் என்று வைத்துக் கொள்ளலாம்.

It is called as intuition power. 

ஆகவே ஜோதிடத்தை ஓரளவே கைக் கொள்ளுங்கள்.
தெய்வத்தை முழுதாக நம்புங்கள். உங்களை அவர் பார்த்துக் கொள்வார். அதைச் சொல்வதற்காகத்தான் இவ்வளவு பில்ட் அப் கொடுத்து
எழுதியிருக்கிறேன்.

இறைவனை மீறிய சக்தி எதுவும் கிடையாது. இறைவன்
ஒருவன்தான் கடலைப் போல! அத்தனை மதங்களுமே ஆறுகளைப்போல - வெவ்வேறுபெயர்களைக் கொண்டிருந்தாலும் இறுதியில் கலப்பது
என்னவோ கடலில்தான்.

இப்போது உள்ள பிரச்சினைகள் எப்போது தீரும் என்பதைத்
தெரிந்து கொள்ள ஜோதிடரிடம் போகலாம்.ஆனால் பிரச்சினைகள் முழுதாகத் தீராது. தொடந்து வேறு ஒன்று வரும். பிரச்சினைகள் மூற்றிலும் தீர்ந்தவனை சனி இங்கே விட்டு வைக்க மாட்டான். கூட்டிக் கொண்டு போய்
விடுவான். ஆமாம் சாகும் வரை ஏதாவதுபிரச்சினை ஒன்று மாற்றி ஒன்று வந்து கொண்டேதான் இருக்கும்

வாழ்க்கை என்பது சீட்டாட்டத்தைப் போல! உங்கள் கையில்
எப்போதுமே 13 சீட்டுக்கள் இருந்து கொண்டேதான் இருக்கும்.
ஒரு சீட்டை இறக்கிவிட்டால், கீழே இருந்துவேறு ஒரு சீட்டை
எடுத்தே ஆகவேண்டும். சீட்டை மடக்கி வைத்து விட்டு ஆட்டத்தை
முடித்துவிடலாமா என்று நினைத்தால் அது முடியாது. அதையும்
சனிதான் அல்லது உங்கள் ஜாதகப்படி அதற்குரியவன் யாரோ
அவன்தான் முடிவு செய்ய வேண்டும்.

ஆகவே ஜோதிடத்தை ஊறுகாய்போல பயன் படுத்துங்கள். முழுச்
சாப்பாடாக ஆக்கிவிடாதீர்கள்.
-----------------------------------
அஷ்டகவர்க்கத்தில் பரல்கள் எப்படிக் கணக்கிடப்படுகிறது என்று
நிறையப் பேர்கள்கேட்டுள்ளார்கள். அதைக் கீழே கொடுத்துள்ளேன்.
இப்போது மென்பொருள் உள்ளதால் அது கணித்துக் கொடுத்துவிடும்.
ஆகவே அந்தப் பாடத்தைக்கற்றுக் கொள்வது தேவையற்றது -
நேரத்திற்குக் கேடு என்பது என் எண்ணம். ஒரு மணி நேரம் ஆகும்

நான் கற்றுக்கொண்ட காலத்தில் கணினி எல்லாம் கிடையாது.
வேறு வழியில்லாமல் மண்டையைக் குடைந்து அதையெல்லாம்
மனதில் ஏற்றினேன்.

இல்லை நாங்களும் அதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்
என்பவர்களுக்காக அவற்றைக் கஷ்டப்பட்டு Excel Formatல்
தட்டச்சு செய்து கொடுத்திருக்கிறேன்.

ஆகவே விருப்பம் உள்ளவர்கள் அதைப் படித்து இன்புறலாம்
அல்லது கஷ்டப்படலாம்:-)))
=----------------------------------
சூரியன் இருக்கும் இடம், அவருடைய சொந்தவீடு, உச்ச
வீடு, ஆட்சி வீடு,அவருக்கும், மற்ற கிரகங்கள் அமைந்திருக்கும்
இடங்களுக்கும் உள்ள தொடர்பு பார்வைகள் போன்றவற்றை வைத்து
ஒவ்வொன்றிற்கும் ஒரு மதிப்பெண் வீதம்கொடுத்துக் கொண்டே
வந்தால் சூரியனின் சுய வர்க்கம் கிடைக்கும்.

அதேபோல மற்ற கிரகங்களுக்கும், லக்கினத்திற்கும் மதிப்
பெண் கொடுத்துக் கொண்டே வந்தால் மற்ற கிரகங்களின்
சுய வர்க்கம் கிடைக்கும்

சுயவர்க்கம் (7 கிரகங்கள் + லக்கினம்) எட்டு அட்டவனைகள் கிடைக்கும்
ராகு கேதுவிற்கு சொந்த வீடுகள் கிடையாது.ஆகவே சுய வர்க்கமும் கிடையாது.

அந்த எட்டு அட்டவனைகளையும் கூட்டினால் மொத்த மதிப்பெண் கிடைக்கும் அதுதான் மொத்த வர்க்கம் அல்லது அஷ்டகவர்க்கம்.

சூரியன் -------48
சந்திரன் ------ 49
செவ்வாய் --- --39
புதன் ---------- 54
வியாழன் ---- --56
சுக்கிரன் ----- 52
சனி ----------- 39
-----------------------
மொத்தம் -- -- 337
-------------------------
உங்கள் ஜாதகத்தை வைத்துக் கொண்டு ஒவ்வொரு அட்டவணையாக
எழுதுங்கள். 8 x 7 = மொத்தம் 56 அட்டவனைகள் எழுத
வேண்டியதிருக்கும். எல்லாவற்றையும் சேர்த்துப் பிடித்தீர்கள்
என்றால் இறுதியில் ஒவ்வொரு கிரகத்தின் தனி வர்க்கமும்,
மொத்த வர்க்கமும் 8 அட்டவனைகளாக உங்களுக்குக் கிடைக்கும்.

அந்த 8 அட்டவனைகளுக்கு உரிய பாடங்கள், பலன்கள் எல்லாம்
இனிமேல் தொடர்ந்து வரும். பொறுமையாகப் படிக்க வேண்டுகிறேன்.
உங்கள் ஜாதகப் பலனை யாருடைய உதவியும் இன்றி நீங்களே அறியும்
வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும் 

Wishing you all the best

கட்டுரையின் நீளம் கருதி இன்று இத்துடன் நிறைவு செய்கி
றேன். அடுத்த வகுப்பில் மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்,
வாத்தியார்

(தொடரும்)

========================================

4.2.08

JL.53 எவனுக்கு இங்கே இடமில்லை?

எவனுக்கு இங்கே இடமில்லை?

மீண்டும் ஜோதிடம் - பகுதி 2

இறைவன் கருணை வடிவானவர். உலகில் உள்ள ஜீவராசிகள்
அனைத்தும் - மனிதன் உட்பட - அனைத்துமே அவருக்குச்
சமமானவை தான்.

அவருக்கு வேண்டியது - வேண்டாதவை என்று எதுவும்
கிடையாது.

தன்னை நம்புகிறவனும் அல்லது நம்பாதவனும், மேலும்
தன்னை நம்புகிறவனை முட்டாள் என்று சொல்கிறவனும்
அவருக்கு ஒன்றுதான்.

தன்னை மறுத்துப் பேசுகிறவனையும் அவர் முகம் மலர்ந்து
ஏற்றுக் கொள்கிறார். அவனுக்கும் கருணை காட்டுகிறார்.
அவனுக்கும் நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கிறார்.
.
இல்லையென்றால் அவர் எப்படி இறைவனாக இருக்க முடியும்?

நம்பினாலும் அல்லது நம்பாவிட்டாலும் பாதிப்பு ஒன்றும்
அவருக்கில்லை.

சரி, அப்படியென்றால் இருவருக்கும் (நம்புகிறவன், நம்பாதவன்)
என்ன வித்தியாசம்?

நம்புகிறவன், ஒரு பிரச்சினை வரும்போது - அதை இறைவன்
பார்த்துக் கொள்வார் என்று கவலைப் படுவதை விட்டுவிட்டு
நிம்மதியாக இருப்பான். நம்பாதவன் பிரச்சினையோடு, கவலையையும்
கை பிடித்துக்கொண்டு அல்லல் படுவான்

"வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல"

(விருப்பும், வெறுப்பும் இல்லாத இறைவனின் அடிகளை
இடைவிடாமல் நினைப்பவர்க்கு, எவ்விடத்திலும், எக்காலத்திலும்
துன்பம் இல்லை)

என்று வள்ளுவப் பெருந்தகை எழுதிவைத்தார்.

வள்ளுவர் எழுதியதில் விருப்பு வெறுப்பு இல்லதவர் இறைவன்
என்ற முதல்வரி முக்கியம்

இறைவன் விருப்பு, வெறுப்பின்றி எல்லா மனிதர்ளையும்
சமமாகப் படைத்தார்.

நீங்கள் கேட்கலாம் - அப்படியென்றால் வாழ்க்கையில் ஏன்
பலவிதமான ஏற்றத்தாழ்வுகள்?

ஒரு குழந்தை ஏன் செல்வந்தர் வீட்டில் பிறக்கிறது?
ஒரு குழந்தை ஏன் அன்றாடம் வயிற்றுப்பசிக்கு அல்லல் படும்
ஏழைவீட்டில் பிறக்கிறது?

ஒரு குழந்தை பார்ப்பவர்கள் மகிழும் விதமாக அழாகாக
பிறக்கையில், ஒரு குழந்தை ஏன் உடல் ஊத்துடன் பிறக்கிறது?

அதைத்தான் நம் முன்னோர்கள் வாங்கி வந்த வரம் என்று
ஒரே வரியில் சொல்லியுள்ளார்கள். நாம் முன் ஜென்மத்தில்
செய்த நல் வினைகள், தீவினைகளுக்குத் தகுந்த மாதிரி
இந்தப் பிறவி அமைகிறது.

முன் பிறவியில் தான தர்மங்கள், சேவைகள் செய்தவனுக்கு
இந்தப்பிறவி அற்புதமாக அமைகிறது. அல்லாதவனுக்கு
வாழ்க்கை அல்லல்படும் விதமாக அமைகிறது.

பிறந்த மூன்றாவது நாளே, ஒரு குழந்தை தன் பெற்ற தாயாரால்
குப்பைத் தொட்டியில் போடப்படும் நிலைக்கு ஆளாகிறது என்றால்,
முன் பிறவியில் அந்தக்குழந்தை தன் தாய் தந்தையரை உதாசீனப்
படுத்திய பாவத்தைச் செய்திருக்கும். இந்தப் பிறவியில் அந்தப்
பாவத்தைக் கழிக்க அதனுடைய பிறப்பு அப்படி அமையும்.

எல்லாமே முன் ஜென்மப் பாவ, புண்ணியங்களின்படிதான்
என்றால், இங்கே, அதாவது இந்தப் பிறவியில் இறைவனின்
பங்காற்றல் என்ன?

He will give you standing power to face any situation

இறைவனின் பங்காற்றல் இல்லையென்றால் ஒருவன்
மனிதனாகவே பிறந்திருக்க முடியாது. ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும்
அதைத்தாங்கும் விதமாக நஷ்ட ஈட்டைக் கொடுத்துத்தான்
அவர் நம்மைப் படைத்திருக்கிறார்

அந்த நஷ்ட ஈடும் சேரும் போதுதான் அனைவருக்கும்
337 பரல்கள் என்ற சம நிலைப்பாடு கிடைத்திருக்கிறது.

ஒருவனுக்குப் பத்தாம் வீட்டில், அதாவது ஜீவன ஸ்தானத்தில்
தேவையான பரல்கள் இன்றி அந்தவீடு அடிபட்டுபோய்
இருந்தால், நல்ல உத்தி யோகம் கிடைக்காமல் அவதிப்பட்டுக்
கொண்டிருப்பான். அதே நேரத்தில் அவனுக்கு நான்காம் வீடு
நன்றாக அமைந்திருக்கும் (சுக ஸ்தானம்)
அவனுக்கு ஒரு ஊறவினனோ அல்லது நண்பனோ உதவி
செய்து அடிப்படைத் தேவைகளுக்கு கேடு இல்லாமல் பார்த்துக்
கொள்வான்.

ஆகவே அஷ்டகவர்க்கம் கற்றுக்கொண்டபின் உங்களுக்குத்
தெரியவரும் - யாருக்கும் நீங்கள் தாழ்ந்தவரில்லை. அதேபோல
யாருக்கும் நீங்கள் உயர்ந்தவருமில்லை

உங்களுக்கு எதெது மறுக்கப்பட்டிருக்கிறதோ அதற்கு ஈடாக
வேறொன்றும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஜாதகத்தின் 12 வீடுகளும், 36 பாக்கியங்களும் மிக நன்றாக
அமைவதற்கு வாய்ப்பே கிடையாது. சரி பாதி நன்றாக அமையும்.
இருப்பதை வைத்துத் திருப்திப் பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

Health இருக்கும் இடத்தி;ல் Wealth இருக்காது. Wealth இருக்கும்
இடத்தில் Health இருக்காது. இரண்டும் நன்றாக இருக்க வேண்டு
மென்றால் 1, 2, 6, 8, 9, 11, 12 ஆகிய வீடுகளில் 30 பரல்களுக்கு
மேல் அமைந்திருக்க வேண்டும். அப்படியெல்லாம் கோடியில்
ஒருவருக்குக்கூட அமையாது!

கைவண்டி இழுப்பவன், இரண்டாள் சாப்பாட்டைக் கொடுத்தால்
ஒரு வெட்டு வெட்டிவிட்டு கட்டாந்தரையில் படுத்து நன்றாகத்
தூங்குவான்.அதே சாப்பாட்டில் கால் பகுதியைக் கூட ஒரு
செல்வந்தனால் ரசித்துச் சாப்பிடமுடியாது. கேட்டால்
Blood Pressure, Sugar, என்று தனக்கிருக்கும் வியாதிகளின் பெயர்
களையும், விழுங்கும் மாத்திரைகளின் பெயர்களையும் அடுக்கிச்
சொல்வான்.

அதைத்தான் கவியரசர் கண்ணதாசன் இரண்டே வரிகளில் சுருக்கிச்
சொன்னார்.

"அது இருந்தால் இது இல்லை,இது இருந்தால் அது இல்லை
அதுவும் இதுவும் சேர்ந்திருந்தால்,அவனுக்கு இங்கே இடமில்லை!"

ஆமாம் எல்லாம் சேர்ந்து கிடைக்கப் பெற்றவனுக்கு ஆயுள் அதிகம்
இருக்காது.மேலே போய்விடுவான்.

இதையெல்லாம் உணர்ந்து நம்மை நாமே சமாதானப் படுத்திக்
கொண்டு சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழ்வதுதான்
உண்மையான வாழ்க்கை


கிராமத்தில் பெரியவர்கள் சொல்வார்கள், " டேய் சோற்றைக்
கீழே சிந்தாதே - சிந்தினால் அடுத்த ஜென்மத்தில் நீ ஈயாகப்
பிறப்பாய்"

ஈயாகப் பிறந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்யும்
சிறுவன் நிச்சயாமாக அடுத்து சோற்றைச் சிந்தாமல் உண்ணப்
பழகிவிடுவான்.

"டேய் சாமி இல்லேன்னு சொல்லாதே! சொன்னால், இப்போ
வெள்ளி, சனிக்கிழமைகளிலே கோவில் வாசல்ல தட்டோட
உக்காந்திருக்கானுங்கள்ல அவனுங்க மாதிரி அடுத்த பிறவியில்
நீயும் தட்டோட உக்கார வேண்டியதிருக்கும்" இப்படியும்
சொல்லிக் கிராமத்துப் பெரியவர்கள் தங்கள் குழந்தைகளை
நெறிப்படுத்துவார்கள்.

அந்த நெறிப்படும் மனது தான் முக்கியம். அது எத்தனை
வயதில் உங்களுக்கு நெறிப்படுகிறது என்பது அதை விட முக்கியம்.

முப்பது அல்லது நாற்பது வயதிற்குள் மனது நெறிப்பட வேண்டும்.
எழுபதுவயதில் நெறிப்படுவதால் ஒன்றும் பயனில்லை!

இருபது வயதில் நண்பன் சொல்கிறான் என்பதற்காக இரண்டு
பெக் சீவாஸ் ரீகல் விஸ்கி அடித்துப் பார்ப்பது இயற்கை.
அதையே எழுபது வயது வரை செய்வதை எப்படி ஒப்புக்கொள்ள
முடியும்? நல்லது என்று எடுத்துக் கொள்ளமுடியும்? எல்லாவற்றிற்கும்
ஒரு காலகட்டம், வரைமுறை உண்டல்லவா?

சரி, மனது எதற்காக நெறிப்பட வேண்டும்?

நல்லது, கெட்டது, இன்பம், துன்பம், ஏற்றம், இறக்கம், வறுமை, செழுமை,
பெறுமை, சிறுமை என்று வாழ்க்கையின் ஒவ்வொரு பக்கத்தையும்
சமமாக எடுத்துக் கொள்ளும் பக்குவம் இருந்தால் அல்லவா வாழ்க்கை
சீராக இருக்கும். மனது எந்தச் சூழ்நிலையிலும் சந்தோஷமாக இருக்கும்.
அதைவிட முக்கியமாக நிம்மதியாக இருக்கும். அதற்குத்தான் நெறிப்படுத்தப்
பெற்ற மனது வேண்டும் Like a seasoned wood!

அதைச் சொல்லித் தருவதுதான் இந்தத் தொடரின் முக்கிய நோக்கமாகும்
--------------------------------------------------------------.
சரி, சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்.

அஷ்டகவர்க்கம் என்பது உங்களுடைய பிறப்பின் மதிப்பெண் சான்றிதழ்
என்று நீங்கள் வைத்துக் கொள்ளலாம். அந்தச் சான்றிதழ் பிறந்த
ஷணத்திலேயே உங்களுக்குக் கொடுக்கப்பட்டு விடுகிறது. அதை மாற்றி
எழுத யாரலும் முடியாது. எந்தக் கொம்பனுக்கும் அதிகாரமில்லை.

உங்களுடைய ஜாதகத்தின் 12 பாவங்களுக்கும் அல்லது வீடுகளுக்கும்
அந்த வீடுகளுக்கு அதிபதிகளான 7 கிரகங்களுக்கும், அவை அமைந்
துள்ள அமைப்பின்படி கணக்கிட்டு வருவதாகும். அதன் முக்கியமான
சிறப்பு யாராயிருந்தாலும் மொத்த மதிப்பெண் 337 மட்டுமே.

அதாவது எல்லோருக்குமே 337/337 தான். கூடுதல் குறைச்சலுக்கெல்லாம்
இடமில்லை.

337 வகுத்தல் 12 என்னும்போது ஒரு வீட்டின் சராசரி மதிப்பெண் 28
அந்த சராசரி மதிப்பெண்ணிற்கு மேல் இருக்கும் வீடு நல்ல நிலைமையில்
உள்ளது என்றாகிவிடும். அதேபோல ஒரு கிரகத்தின் தனி மதிப்பெண்
எட்டு. சராசரி மதிப்பெண் நான்கு. நான்கிற்கு மேல் மதிப்பெண்களுடன்
நிற்கும் கிரகம் வலுவானதாக இருக்கும். அது தன்னுடைய கோச்சாரத்
திலும் (Transit) தசா புக்தியிலும் நல்ல பலன்களைத் தரும். இல்லை
யென்றால் தீமையான பலன்களே நடைபெறும்.

Timing of events ஐக் கணக்கிடுவதற்கு இந்த அஷ்டவர்க்கம் பயன்படும்
தமிழில் இந்த மதிப்பெண்களைப் பரல்கள் என்பார்கள்.

1. 25 பரல்களுக்குக் கீழே உள்ள வீடுகள் நல்லதல்ல. அவற்றிற்குரிய
பலன்கள் சாதகமாக இருக்காது.

2. 30 பரல்கள் உள்ள வீடுகள் நல்ல பலன்களைத் தரும்.

3. 30 பரல்களுக்கு மெலே இருந்தால் மிகச் சிறந்த பலன்களைத் தரும்

4. ஆட்சி, உச்ச பலன்களோடும் அல்லது கேந்திர, திரிகோண அமைப்
போடும் ஜாதகத்தில் உள்ள கிரகங்கள்கூட தங்கள் சுய வர்க்கத்தில்
குறைந்த பரல்களோடு இருந்தால் அவைகள் நல்ல பலன்களைத் தராது

உதாரணத்திற்கு ஒரு ஜாதகனுடைய நான்காம் வீட்டில் 30 அல்லது
அதற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால் ஜாதகன் நன்றாகப் படிப்பான்.

அதேபோல ஒருவனுடைய ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் 30ற்கும்
மேற்பட்ட பரல்கள் இருந்தால் அவனுக்கு நல்ல மனைவி கிடைப்பாள்.
உரிய காலத்தில் திருமணமாகும். பெண்ணாக இருந்தால் நல்ல, அன்பான,
அவளைப் போற்றி வைத்துக்கொள்ளக்கூடிய கணவன் கிடைப்பான்.

இப்படி ஒவ்வொரு வீட்டின் பலனையும் அதிகமான பரல்களை
வைத்துச் சிறப்பாகச் சொல்லிக் கொண்டே போகலாம்.

அதுபோல ஒருவனுடைய லக்கினத்தில் நாற்பது அல்லது அதற்கு
மேற்பட்ட பரல்கள் இருந்தால், தலைவனாகி விடுவான். அவனுக்குத்
தலைமை தாங்கும் யோகம் தேடி வரும்.

சரி ஒரு இடத்தில் 40 என்னும்போது - அங்கே 12 பரல்கள் கூடிப்
போய் விடுவதால் வேறு இடங்களில் அது குறைந்து விடுமல்லவா?
மொத்தம் 337தானே? எங்கே குறைந்து உள்ளது என்று பார்க்க
வேண்டும்!

பொதுவாகப் பார்த்தீர்கள் என்றால் தலைமை ஸ்தானத்தில் அதிகம்
பரல்கள் உள்ள தலைவர்களுக்குக் குடும்பஸ்தானத்தில் பரல்கள்
குறைவாக இருக்கும், அதனால் அவர்கள் தங்கள் குடும்பத்தை
மறந்து விட்டு தேசம், தேசம் என்று நாட்டுக்காகப் பாடு பட்டிருப்பார்கள்.


செய்யும் தொழிலுக்கு (10ஆம் வீட்டிற்கு) 30 பரல்களுக்கு மேல்
இருந்தால் சிறப்பு. நல்ல வேலை கிடைக்கும் அல்லது நல்ல தொழில்
அமையும். ஆனால் 36 ம் அதற்கு மேலும் இருந்தால் செய்யும்
வேலையில் ஒரு சபீர் பாட்டியாகவோ, அல்லது நாராயண மூர்த்தி
யாகவோ அல்லது பில் கேட்ஸாகவோ உச்சத்தைத் தொட முடியும்!

ஒவ்வொரு வீட்டிற்கும் என்னென்ன பணிகள் என்பதை முன்பே
பதிவிட்டிருக்கிறேன். தெரியாதவர்கள் சொல்லுங்கள் அடுத்த
பதிவில் அதை உள்ளிடுகிறேன்

பதிவின் நீளம் கருதி (4 பக்கங்களுக்கு மேல் வந்து விட்டது) இன்று
இத்துடன் நிறைவு செய்கிறேன். மீண்டும் அடுத்த வகுப்பில் சந்திப்போம்

படித்தவர்கள், ஒரு வரி பின்னூட்டமிடுங்கள். அடுத்த பதிவிற்கான
டானிக் அதுதான்

(தொடரும்)