மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

8.9.08

பாடம் எண் 110. கால சர்ப்ப தோஷம் cum யோகம்!

"காலம் எங்கே வந்தது? அதில் சர்ப்பம் எங்கே வந்தது?" போன்ற உபரிக்
கேள்விகள் கேட்பவர்கள் எல்லாம் பதிவை விட்டு விலகவும்.

ஆயிரத்தெட்டு உபரிக் கேள்விகள் மனதில் வந்தாலும், அதை எல்லாம்
கடாசி விட்டுப் படித்ததனால் ஜோதிடம் எனக்கு ஓரளவிற்குப் பிடிபட்டது.

கண்ணும், கையும் தவிர வேறு உபகரணங்கள் இல்லாத காலத்தில் நமது
முனிவர்கள் தங்களது ஞானதிருஷ்டியால் கணித்து எழுதியதுதான் கடல்
போன்ற வானவியல் கலையும், ஜோதிடக்கலையும் ஆகும்.

ராகு & கேது ஆகிய கிரகங்களை அவர்கள் கொடிய சர்ப்பத்திற்கு நிகராக
ஒப்பிட்டு எழுதியும், அந்த இரு கிரகங்களுக்கு நடுவில் மற்ற ஏழு கோள்
களும் வானத்தில் இருக்கும் நிலையைச் சர்ப்பகாலம் என்றும், அந்தக்
காலகட்டத்தில் பிறக்கும் குழந்தைகளை காலசர்ப்பத்தில் பிறந்த சிசுக்கள்
அல்லது ஜாதகர்கள் என்றும் எழுதி வைத்துள்ளார்கள்

ஒரு ஜாதகத்தில் ராகு & கேது இருக்கும் இடங்களுக்குள் உள்ள ஏழு
ராசிகளுக்குள் மற்ற ஏழு கிரகங்களும் இருந்து மீதி ஐந்து ராசிகள் காலியாக
இருக்கும் நிலைதான் கால சர்ப்ப தோஷம் ஆகும்!

Kala Sarpa Dosha cum Yoga is formed when all the planets are hemmed
between Rahu & Ketu.( that is sandwiched between Rahu and Ketu)

இதில் லக்கினம் உள்ளே இருந்தாலும் அல்லது அந்த ஏழு கட்டங்களைத்
தாண்டி வெளியே இருந்தாலும் அது அந்த தோஷத்தில் அடக்கம்!

ராகுவில் ஆரம்பித்துக் கேதுவில் முடியும் நிலைக்கு சவ்ய காலசர்ப்ப தோஷம்
என்றும், கேதுவில் ஆரம்பித்து ராகுவில் முடியும் நிலைக்கு அபசவ்ய
காலசர்ப்ப தோஷம் என்றும் பெயர்கள் உண்டு. பலன்களும் மாறுபடும்.

சாயா கிரகங்களான ராகுவைத் தலைப் பகுதியாகவும், கேதுவை வால்
பகுதியாகவும் ஜோதிடம் சிறப்பித்துக் கூறுகிறது.

அந்த அமைப்புள்ள ஜாதகர்களின் வாழ்க்கையின் ஒரு பகுதி - அந்த
தோசத்திற்கு உரிய பலன்களை அவர்கள் அனுபவிக்கும் காலம் துன்பமான
தாகும். சோகமானதாகும்.

அனுபவித்தவர்களுக்கு, அல்லது அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு
மட்டுமே அது தெரியும்.

லக்கினத்தில் துவங்கி முதல் ஏழு வீடுகளுக்குள் இந்த தோஷம் உள்ளவர்
களுக்கு அவர்கள் வாழ்க்கையின் முதல் பகுதியும், ஏழாம் வீட்டில் துவங்கி
லக்கினத்தில் முடிபர்வகளுக்கு அவர்கள் வாழ்க்கையின் இரண்டாவது
பகுதியும் மோசமானதாக இருக்கும். இந்த மோசமான என்ற சொல்லுக்குள்
எல்லாவிதத் துன்பங்களும் அடக்கம்!

இந்த தோஷம் உள்ளவனின் ஜாதகத்தில், வேறு நல்ல யோகங்கள் எதுவும்
இல்லை என்றால், அவன் வேலையின்றித்திரிவான், திருமணவாழ்க்கை
இருக்காது.பல தீய பழக்கங்களுக்கு ஆளாகி, பலராலும் ஒதுக்கப்படும்
நிலையில் வாழ்வான்.

ஆகவே இந்த தோஷம் உள்ளவர்கள், பயந்துவிடாமல், ஜாதகத்தில் வேறு
என்னென்ன யோகம் இருக்கிறது என்று பார்த்து ஆறுதல் கொள்ளவும்.

இறைவன் கருணை மிக்கவன். தன் மீது நம்பிக்கையும், பற்றும் கொண்ட
வனை அவர் ஒரு போதும் கை விடுவதில்லை!

He will give you withstanding power in any miserable situation!

அதை மனதில் கொள்க!

உண்மைத்தமிழர் போன்று இறையன்பர்கள் - இறைவன் மேல் அதீதப் பற்று
உள்ளவர்கள் - ஜாதகத்தைப் பார்க்கத் தேவையில்லை! கடாசி விடலாம்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சரி, இந்தத் தோஷம் எத்தனை ஆண்டுகளுக்கு?

இதில் இரண்டுவிதக் கருத்துக்கள் உண்டு. 33 ஆண்டுகள் வரை இந்தத்
தோஷம் உண்டு என்பார்கள். சிலர் அஷ்டகவர்க்கத்தில் லக்கினத்தில்
எத்தனை பரல்கள் இருக்கிறதோ அத்தனை ஆண்டுகள்வரை உண்டு
என்பார்கள். உதாரணத்திற்கு ஒருவர் ஜாதகத்தில் லக்கினத்தில் 28 பரல்
கள் என்றால், அவருக்கு 28 ஆண்டுகள் வரை இந்தத் தோஷம். உண்டு
பிறகு தோஷம் விலகியவுடன் அதுவே யோகமாக மாறி ஜாதகரை உயர்
விற்குக் கொண்டு போகும்.

இந்தியாவின் ஜாதகத்தில் லக்கினத்தில் 44 பரல்கள். நாம் சுதந்திரம்
அடைந்த 1947ஆம் ஆண்டு கூட்டல் அந்த 44 = 1991ஆம் ஆண்டுவரை
நம் நாட்டை தோஷம் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தது. அதற்குப் பிறகு
தான் நாம் அசுர வேகத்தில் பல துறைகளிலும் முன்னேறிக் கொண்டிருக்
கின்றோம்.

எனது அனுபவத்தில் இந்த அஷ்டகவர்க்கக் கணக்கு பலருக்கும் சரியாக
இருந்திருக்கிறது. நீங்களும் அதையே பின்பற்றலாம்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பொதுப் பலன்கள்
1
இந்த தோஷம் லக்கினத்திலிருந்து (அதாவது லக்கினத்தில் ராகு அல்லது
கேது அமர்ந்திருக்க அடுத்துள்ள ஆறு கட்டங்களுக்குள் மற்ற அத்தனை
கிரகங்களும் இருக்கின்ற அமைப்பு) துவங்கினால், குடும்பத்தில் பல
சிக்கல்கள் இருக்கும்.ஏற்படும். தீராத பிணிகள் (chronic health problems)
ஏற்படும்!
2
இந்த தோஷம் இரண்டாம் வீட்டிலிருந்து (அதாவது லக்கினத்திற்கு அடுத்துள்ள
இரண்டாம் வீட்டில் ராகு அல்லது கேது அமர்ந்திருக்க அடுத்துள்ள ஆறு
கட்டங்களுக்குள் மற்ற அத்தனை கிரகங்களும் இருக்கின்ற அமைப்பு)
துவங்கினால், குடும்பத்தில் பல சிக்கல்கள் இருக்கும்.ஏற்படும். அதோடு பணப்
பிரச்சினைகள் ஏற்படும்!
3
இந்த தோஷம் மூன்றாம் வீட்டிலிருந்து துவங்கினால், உடன்பிறப்புக்களுடன்
சிக்கல்கள் இருக்கும்.விரோத மனப்பான்மை ஏற்படுத்தும்.
4
இந்த தோஷம் நான்காம் வீட்டிலிருந்து துவங்கினால், தாயாருடன் கருத்து
வேற்றுமையை உண்டாக்கும். தாயாரின் அன்பு கிடைக்காமல் போய்விடும்.
வீடு, வாகனங்களை வைத்துப் பலவிதமான பிரச்சினைகள் உண்டாகும்.
5
இந்த தோஷம் ஐந்தாம் வீட்டிலிருந்து துவங்கினால், பெற்ற குழந்தைகளை
வைத்துப் பிரச்சினைகள் ஏற்படும்.
6.
இந்த தோஷம் ஆறாம் வீட்டிலிருந்து துவங்கினால், நோய்கள், கடன்கள்
விரோதிகள் என்று பிரச்சினைகள் வந்து குடி கொண்டுவிடும்
7.
இந்த தோஷம் ஏழாம் வீட்டிலிருந்து துவங்கினால், செய்யும் தொழிலில்,
வியாபாரத்தில் பிரச்சினைகள் உண்டாகும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி
இருக்காது. பதிலுக்குப் பிரச்சினைகள் மட்டும் இருக்கும்.
8.
இந்த தோஷம் எட்டாம் வீட்டிலிருந்து துவங்கினால், மனைவியுடன்
சரளமான வாழ்க்கை இருக்காது. சிக்கல்கள் இருக்கும்.அடிக்கடி
விபத்துக்கள் ஏற்பட்டுப் பல பிரச்சினைகள் உண்டாகும்.
9
இந்த தோஷம் ஒன்பதாம் வீட்டிலிருந்து துவங்கினால், தந்தையுடன்
பிரச்சினைகள் ஏற்படும். மிகவும் துரதிர்ஷ்டமான பலன்கள் ஏற்படும்
(இது பாக்கிய ஸ்தானமல்லவா? அதனால் துரதிர்ஷ்டம் ஏற்பட்டால்
என்ன பாக்கியம் கிடைக்கும்? சொல்லுங்கள்)
10.
இந்த தோஷம் பத்தாம் வீட்டில் துவங்கினால், செய்யும் தொழிலில்,
வியாபாரத்தில் அல்லது வேலையில் நிலையான போக்கு இருக்காது.
அவஸ்தையாக இருக்கும்.நிம்மதி இருக்காது.
11.
இந்த தோஷம் பதினொன்றில் துவங்கினால், நிதி நிர்வாகம், முதலீடுகள்
பங்கு வணிகம் என்று எந்த நிதி நிலைப்பாட்டிலும் நாம் நினைத்தது
நடக்காது. மாறாக நடந்து நம்மைப் புரட்டிப்போடும்.
12
இந்த தோஷம் பன்னிரெண்டாம் வீட்டில் இருந்து துவங்கினால், திகைக்க
வைக்கும் செலவுகள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கும். பணத்
தட்டுப்பாடு உண்டாகும். மொத்தத்தில் செலவும், விரையங்களும் சேர்ந்து
மனிதனை (ஜாதகனை) ஒரு வழி பண்ணிவிடும்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மேலும் சில விவரங்கள்:
1
கால சர்ப்ப தோஷ ஜாதகனுக்கு, அவனுடைய ஜாதகத்தில் இரண்டு
அல்லது மூன்று கிரகங்கள் உச்சம் பெற்று இருந்தாலும், அந்த தோஷம்
முடியும் காலம்வரை அந்த உச்ச கிரகங்களின் பலனை அவன் அடைய
முடியாது.
2
லக்கினத்தில் ராகு இருக்க, வேறு நல்ல கிரகங்களின் பார்வையின்றி
லக்கினத்திலிருந்து (அதாவது அடுத்துள்ள ஆறு கட்டங்களுக்குள் மற்ற
அத்தனை கிரகங்களும் இருக்கின்ற அமைப்பு) கால சர்ப்ப தோஷம்
துவங்கினால், ஜாதகருக்குத் திருமண வாழ்வில் கடுமையான ஏமாற்றங்களும்,
சோதனைகளும் உண்டாகும்.
3
நான்காம் வீடு அசுபர் வீடாக இருந்து, அங்கிருந்து இந்த தோஷம்
துவங்கினால், ஜாதகருக்குக் கல்வியில் தடை ஏற்படும். அதுவே சுபர்
வீடாக இருந்தால் உயர் கல்வி கிடைக்கும்.
4
ஐந்தாம் வீட்டை வைத்து இந்த தோஷம் துவங்கினால், ஜாதகருக்கு
புத்திர தோஷம் ஏற்படும். குழந்தைகள் பிறப்பது தாமதப்படும். அல்லது
வேறு தீய அமைப்புக்களை வைத்துக் குழந்தைகள் இல்லாது போய்விடும்.
5
ஆறாம் வீட்டை வைத்து இந்த தோஷம் துவங்கினால், அங்கே ராகு இருந்து
நல்ல கிரகங்கலின் பார்வை இல்லையென்றால், சிறைவாசம், உடல்நிலை
பாதிப்பு போன்றவைகள் உண்டாகும்.

6.
ராகு அல்லது கேது தாங்கள் இருக்கும் வீட்டில் அமரும் கிரகத்துடன்
கூட்டணி போட்டுப் பலன்களைக் கொடுப்பார்கள். அதனால் அவர்களுடன்
சேரும் கிரகம் தீயதாக இருந்தால் தீயபலன்கள் இரட்டிப்பாகும்.
நல்ல கிரகமாக இருந்தால் - உதாரணத்திரற்குக் குருவாக இருந்தால்
ராகுவும் அவருடன் சேர்ந்து நல்ல பலன்களை வழங்க ஆரம்பித்து
விடுவார். அதற்கு ஒரு ஸ்டைலான பெயரும் உண்டு. அதாவது ராகுவும்
குருவும் சேர்ந்தால் அதற்குச் "சண்டாளயோகம்" என்று பெயர்!
7.
ராகு-சனி' அல்லது ராகு - செவ்வாய்' அல்லது ராகு - சூரியன் என்று
இரண்டு கிரகக் கூட்டணி ஏழாம் வீட்டில் இருந்தால் கடுமையான
களத்திர தோஷம். எத்தனை தாரம் என்றாலும் ஒன்று கூட நிலைப்பதில்லை!
8.
கால சார்ப்ப தோஷம் cum யோகம், ஒரு ஏழையைக் கோடீஸ்வரனாகவும்
செய்யும், அதெ போல பெரிய கோடீஸ்வரனை ஒன்றும் இல்லாதவனாக
தெருவில் கொண்டு வந்து நிறுத்தவும் செய்யும். அது அவரவர்கள் ஜாதகப்
பலன். அல்லது எப்பொதும் நான் சொல்வதைப்பொல வாங்கி வந்த வரம்!:-)))

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அந்த ராகு கேதுவின் ஏழு கட்ட பிடிப்பிற்குள் லக்கினம் மாட்டாமல்
வெளியே இருந்தாலும் அல்லது லக்கினம் மாட்டிக் கொண்டு சந்திர
ராசி (சந்திரன்) மாட்டாமல் வெளியே இருந்தாலும் தோஷம் உண்டு.
ஆனால் 80% சதவிகிதப் பலன்கள் மட்டுமே இருக்கும். அதாவது
ஏற்படும் துன்பங்களில் 20% கன்செஷன் உண்டு:-))))

சிலர் கால சர்ப்ப தோஷம் இல்லாவிட்டாலும், இருப்பதைப் போன்ற
அளவிற்குத் துன்பப்படுவார்கள். அதற்குக் காரணம், அந்த ஏழுகட்ட
அமைப்பு இல்லாவிடினும், அவர்களுடைய ஜாதகத்தில் முக்கியமான
கிரகங்கள் எல்லாம், ராகு அல்லது கேதுவின் நட்சத்திர சாரத்தில்
(திருவாதிரை, சுவாதி, சதயம் - அஸ்வினி, மகம், மூலம் )இருக்கும்.
அதை ஆராய்ந்து பார்த்தால் உண்மை புலப்படும்.

கால சர்ப்ப தோஷம் உள்ள சிலருக்கு, அந்த தோஷ காலம் முடிந்த
பிறகே திருமணம் நடைபெறும்.

அதுபோல கால சர்ப்ப தோஷத்துடன் பிறக்கும் குழந்தைகள் உள்ள
பெற்றோர்களும், கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும்.

பெரிய தலைவர்கள், தொழிலதிபர்கள், கோடீஸ்வரர்கள் என்று
இந்த தோஷத்தில் பிடிபட்ட பலரும் சிறுவயதில் பல தொல்லைகளுக்கு
ஆளாகியிருக்கிறார்கள். அந்த தோஷம் நிவர்த்தியான பிறகு
உன்னத நிலையை அடைந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே
தங்கள் சொந்த முயற்சியால்தான் அந்த நிலையை எட்டியிருப்பார்கள்.

இந்த தோஷத்தில் மாட்டிக் கொண்டு அவஸ்தைப் பட்டு மீண்டு,
பிறகு ஒரு உன்னத நிலையை எட்டி, பிறகு சிறிது காலத்திற்குப்
பிறகு, படு பாதாளத்தில் விழுந்து விடும் நிலையும் சிலருக்கு
ஏற்படுவது உண்டு. அது அவர்களின் தனிப்பட்ட ஜாதகத்தில்
உள்ள வில்லங்கமான கிரக அமைப்புக்களால் ஏற்படுவதாகும்.

கால சர்ப்ப தோஷம் உள்ளவர்களுக்கு, ராகு அல்லது கேதுவின்
திசைகள் வந்தால், நற்பலன்கள் உண்டாகும். அதே நேரத்தில் அந்த
திசை முடியும் போது போர்டிங் பாஸ் கொடுத்து அவர்கள் ஜாதகனை
மேலே அனுப்பியும் வைத்து விடுவார்கள்.

ஆனால் அவ்வாறு வரும் திசைகளில் துன்பமான பலன்களையே
ஒருவர் அனுபவித்தால், அவரை அவர்கள் உயிரோடு விட்டு விட்டு
அடுத்து வரும் திசைகளில் நற்பலன்களை அனுபவி என்று சொல்லிக்
கைகுலுக்கி விட்டுப் போய்விடுவார்கள்.

கால சர்ப்ப தோஷம் உள்ள ஆண், அதேபோல கால சர்ப்ப தோஷம்
உள்ள பெண்ணை மணம் செய்து கொள்வது நல்லது.பல பிரச்சினைகளை
இருவரும் தவிர்க்கலாம்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பரிகாரங்கள்:

ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை, சுவாதி, சதயம், போன்ற
நட்சத்திரங்கள், வரும் நாட்களில் அல்லது உங்களின் ஜென்ம நட்சத்திரம்
வரும் நாட்களில், கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருநாகஷ்வரம்
என்னும் ராகு பகவான் குடிகொண்டிருக்கும் திருக்கோவிலுக்குச் சென்று
ராகு பகவானுக்குப் பால் அபிஷேகம் செய்து வணங்கி வழிபட்டு வருவது
முதல் பரிகாரம் ஆகும். அதனால் தடைகள் அகலும். துன்பங்கள்
குறையும்.

கேதுவை வழிபடக் காஞ்சிபுரத்தில் உள்ள சித்திரகுப்தசுவாமி திருக்கோவி
லுக்குச் சென்று வழிபட வேண்டும். அன்று அவருடைய (கேதுவினுடைய)
நட்சத்திரங்களான அஸ்வினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்கள் வரும்
நாட்களில் ஒன்றாக இருந்தால் நல்லது.

திருப்பதியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் காளஹஸ்தி
என்கின்ற திருத்தலமும், இதற்கு உகந்ததாகும். அதுபோல ராமேஸ்வரமும்
தோஷ பரிகாரத்திற்கு மிகவும் உகந்த ஸ்தலமாகும்.

சும்மா பெயருக்காக (நாம் கே வாஸ்தே என்று) சென்று வழிபடுவதைவிட
வழிபட்டால தோஷம் குறையும் என்ற முழு நம்பிக்கையோடு சென்று
வழிபடுவது அதி முக்கியம். அதையும் மனதில் கொள்க!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உதாரணத்திற்கு கால சர்ப்ப தோஷ ஜாதகம் ஒன்றைக் கொடுத்திருக்கிறேன்:

இசையில் ஞானி அவர். அவருடைய ஜாதகம்தான் இது. 1943 ல் பிறந்த
அவர். 1976ஆம் ஆண்டு வரை சுமார் 33 ஆண்டுகள் எவ்வளவு சிரமப்
பட்டார் என்பதும், அதற்குப் பிறகு அந்த தோஷமே அவருக்கு யோகமாக
மாற, தமிழகத்தையே ஒரு கலக்குக் கலக்கி, லட்சக்கணக்கான அபிமானி
களைப் பெற்று ஒரு உன்னத நிலையை அடைந்தார் என்பதையும்
தமிழ்கூறும் நல்லுலகம் என்றும் தன் நினைவில் வைத்திருக்கும்படியான
அற்புதமான மனிதர் அவர்!



+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கால சர்ப்ப தோஷத்துடன் பிறந்த சில பிரபலங்கள்:

மகாத்மா காந்தி - 2.10.1869
பண்டிட் ஜவஹர்லால் நேரு - 14.11.1889
நெப்போலியன் - 15.8.1769
ஹிட்லர் - 20.4.1889
முசோலினி - 29.7.1883
ராஜிவ் காந்தி - 20.8.1944
ஹர்ஷத் மேத்தா - 29.7.1954
-----------------------------------------------------------------
இங்கே நான் எழுதிவருவது அனைத்தும் பொது விதிகள். ஒருவருடைய
ஜாதகத்தில் உள்ள லக்கினாதிபதி (அவர்தான் சாமி முக்கியம்) மற்றும்
கிரகங்கள் சுயவர்க்கத்தில் பெற்றுள்ள பரல்கள், வீடுகளுக்குக் கிடைத்துள்ள
பரல்கள் ஆகியவற்றை வைத்துப் பலன்கள் மாறுபடும்.

ஆகவே இங்கே எழுதுவதைப் படித்து விட்டு மகிழவும் வேண்டாம்.
கவலைப் பட்டுக் கலங்குவதும் வேண்டாம்.
Just like that - ஜோதிடத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். அவ்வளவுதான்.

நன்றி, வணக்கத்துடன்,
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!

118 comments:

  1. ஐயா... நான் தான் முதல்வருகை

    ReplyDelete
  2. ஆசானே..

    நான் உங்களோட ஒரே ஒரு விசிட்டிங் ஸ்டூடண்ட்..(ஹி..ஹி..அதாவது எப்பவாச்சும் மழைக்கு இங்கின ஒதுங்கறவனாக்கும்).

    எனக்கு ஒரு டவுட்டு, என் ஜாதகத்த பாக்கறவங்க எல்லாரும் உனக்கு 'நீச பங்க ராஜயோகம்'னு சொல்றாங்க...

    அப்படீன்னா என்ன ஆசானே !

    ReplyDelete
  3. //////நாமக்கல் சிபி said...
    உள்ளேன் ஐயா!////

    அடடே வாங்க சிபியாரே! ரெம்ப நாளா விடுப்பிலேயே இருந்திட்டீங்களே?
    முதல் பெஞ்சில் உங்க சீட் காலியாகத்தான் இருக்கிறது!

    ReplyDelete
  4. /////கூடுதுறை said...
    ஐயா... நான் தான் முதல்வருகை//////

    இந்தப் பதிவை உங்களுக்காத்தான் வலை ஏற்றினேன். நீங்கள்தான் கா.ச.யோ' வைப்பற்றி அடிக்கடி கேட்டீர்கள். பதிவைப் படித்தீர்களா?

    ReplyDelete
  5. ////யட்சன்... said...
    ஆசானே..
    நான் உங்களோட ஒரே ஒரு விசிட்டிங் ஸ்டூடண்ட்..(ஹி..ஹி..அதாவது எப்பவாச்சும் மழைக்கு இங்கின ஒதுங்கறவனாக்கும்).
    எனக்கு ஒரு டவுட்டு, என் ஜாதகத்த பாக்கறவங்க எல்லாரும் உனக்கு 'நீச பங்க ராஜயோகம்'னு சொல்றாங்க...
    அப்படீன்னா என்ன ஆசானே !////

    ஒரு நீசமான கிரகம் இருக்கும் இடத்தில் ஒரு உச்சமான கிரகமும் சேர்ந்து இருக்கும் அமைப்புத்தான்
    'நீச பங்க ராஜயோகம்' அந்த உச்சனின் சேர்க்கையால் நீசம் விலகிவிடும். இருவரும் சேர்ந்து நன்மைகளைச் செய்வார்கள். அவர்கள் எந்த இடத்திற்கு அதிபதியோ அந்த வீட்டிற்குரிய பலன்களை வஞ்சனையில்லாமல் வழங்குவார்கள்.

    ReplyDelete
  6. விடுமுறையில்(சென்னையில்)இருந்தாலும் உங்கள் வகுப்பில் உள்ளேன் ஐயா! பாடத்துக்கு நன்றி, லக்னத்தின் பரல்களுக்கு சமமான காலத்துக்கு மேல் முன்னேற்றம் என்பது அனுபவத்தில் உண்மையாக தெரிகிறது.

    ReplyDelete
  7. கால சர்ப்ப தோஷத்துடன் பிறந்த சில பிரபலங்கள்:

    ரஜினி காந்த
    பில் கேட்ஸ் - மைக்ரோசாப்ட் எத்தனை வருடம் ஆண்டது, எத்தனை வருடம் கழித்து ஆட்டம் கண்டது என்று ஆராய்ந்தால் தெரியும் உண்மை வியப்பானது (பில் கேட்ஸின் ராகு திசை 1989 - 2007) விஸ்டா வெளிவந்த வருடம் எது :) :)
    --
    கால சர்ப்ப தோஷம் உள்ள மற்றொரு பிரபலம் - சச்சின் டெண்டுல்கர்.

    என் கணிப்பின் படி சச்சின் 2009 கடைசியில் ஓய்வு பெறுவார் :) :)

    ReplyDelete
  8. ஆசானே !

    என் போன்ற அரைவேக்காட்டு மாணவனுக்கும் விளக்கமளித்ததற்கு மிக்க நன்றி...

    ReplyDelete
  9. ///ஒரு ஜாதகத்தில் ராகு & கேது இருக்கும் இடங்களுக்குள் உள்ள ஏழு
    ராசிகளுக்குள் மற்ற ஏழு கிரகங்களும் இருந்து மீதி ஐந்து ராசிகள் காலியாக
    இருக்கும் நிலைதான் கால சர்ப்ப தோஷம் ஆகும்!

    அந்த ராகு கேதுவின் ஏழு கட்ட பிடிப்பிற்குள் லக்கினம் மாட்டாமல்
    வெளியே இருந்தாலும் அல்லது லக்கினம் மாட்டிக் கொண்டு சந்திர
    ராசி (சந்திரன்) மாட்டாமல் வெளியே இருந்தாலும் தோஷம் உண்டு.
    ///


    மிக்க நன்றி ஐயா. நல்ல தெளிவான விளக்கம் தந்துள்ளீர்.


    ஒரு ஜாதகத்தில் ராகு & கேது இருக்கும் இடங்களுக்குள் உள்ள ஏழு
    ராசிகளுக்குள் மற்ற ஏழு கிரகங்களும் இருந்து மீதி ஐந்து ராசிகள் காலியாக
    இல்லாவிடில் கால சர்ப்ப தோஷம் இல்லை தானே!

    ReplyDelete
  10. களத்திரதோஷம் மற்றும் நாகதோஷம் பற்றியும் எழுதவும். நன்றி

    ReplyDelete
  11. எல்லா தோஷத்தயும் இறைவனின் காலடில் போட்டாச்சு.

    பதிவை படித்தவர் அனைவருக்கும் மிஞ்சும் தோஷம் சந்தோஷம் மட்டுமே :-).

    ReplyDelete
  12. Dear sir,

    Good lesson. I was waiting for this topic for long time. Thanks.

    My questions are:
    1. Rahu and ketu rotate indirect? Is it true? while all other planets rotate directly these are not.

    2. If so, how would you take their placement consideration?

    3. I have rahu in second house and ketu is in 8th house. but no planets in between 2nd and 8th houses....So what kind of dosham/yogam? (you have mentioned 2types) Based on this dosha will be in my first half of my life or second half?

    ////இந்த தோஷம் இரண்டாம் வீட்டிலிருந்து (அதாவது லக்கினத்திற்கு அடுத்துள்ள
    இரண்டாம் வீட்டில் ராகு அல்லது கேது அமர்ந்திருக்க அடுத்துள்ள ஆறு
    கட்டங்களுக்குள் மற்ற அத்தனை கிரகங்களும் இருக்கின்ற அமைப்பு)
    துவங்கினால், குடும்பத்தில் பல சிக்கல்கள் இருக்கும்.ஏற்படும். அதோடு பணப்
    பிரச்சினைகள் ஏற்படும்!/////

    will this rule apply to me? I dont have planets from 2nd house to 8th house. I have it from 8th house to 2nd house?

    Thank You sir.

    Anbudan
    Shankar

    ReplyDelete
    Replies
    1. ராகு to கேது clock wise ல் கிரகங்கள் மாட்டாமல் இருக்கும் பட்சத்தில் யோகம். ராகு பாம்பு தலை மனித உடல், கேது மனித தலை பாம்பு உடல். விசத்தை காக்கும் பாம்பிடம் கிரகங்கள் மாட்டக்கூடாது. அப்படி மாட்டினால் இப்படி பரிகாரம் தேடி யாக வேண்டும். நன்றி

      Delete
  13. ////எனது அனுபவத்தில் இந்த அஷ்டகவர்க்கக் கணக்கு பலருக்கும் சரியாக
    இருந்திருக்கிறது. நீங்களும் அதையே பின்பற்றலாம்////

    If Ashtavarka paral count is good. so everybody who is having kalasarpa dosha/yoga will have only first half (or whatever the paral) miserable...not the later one. Is it?

    General rules also applies even after the dosham changed to yoga????

    OK, will any blogs will follow up regarding the yogam of KSY.

    Thanks
    Shankar

    ReplyDelete
  14. விரிவாக ஆனால் எளிமையாக புரியும் வண்ணம் விளக்கி இருக்கிறீர்கள் ஐயா.

    கால சர்ப்ப தோஷம் நவாம்சத்திற்கும் பொருந்துமா ? நவாம்சத்தில் கால சர்ப்ப தோஷத்தின் விளைவுகள் என்ன? தயவுசெய்து விளக்குவீர்களா?

    ReplyDelete
  15. கால சர்ப்ப யோகம்(தோஷம்) பற்றிய விளக்கம் அருமை... மிக்க நன்றி

    டாக்டரின் தகவலுக்கும் நன்றி

    ReplyDelete
  16. //////தமாம் பாலா (dammam bala) said...
    விடுமுறையில்(சென்னையில்)இருந்தாலும் உங்கள் வகுப்பில் உள்ளேன் ஐயா! பாடத்துக்கு நன்றி, லக்னத்தின் பரல்களுக்கு சமமான காலத்துக்கு மேல் முன்னேற்றம் என்பது அனுபவத்தில் உண்மையாக தெரிகிறது./////

    அடடே நீங்கள் காசயோ ஜாதகக்காரரா? அசுர முன்னேற்றம் பெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  17. //////புருனோ Bruno said..
    கால சர்ப்ப தோஷத்துடன் பிறந்த சில பிரபலங்கள்:
    ரஜினி காந்த்
    பில் கேட்ஸ் - மைக்ரோசாப்ட் எத்தனை வருடம் ஆண்டது, எத்தனை வருடம் கழித்து ஆட்டம் கண்டது என்று ஆராய்ந்தால் தெரியும் உண்மை வியப்பானது (பில் கேட்ஸின் ராகு திசை 1989 - 2007) விஸ்டா வெளிவந்த வருடம் எது :) :) --
    கால சர்ப்ப தோஷம் உள்ள மற்றொரு பிரபலம் - சச்சின் டெண்டுல்கர்.
    என் கணிப்பின் படி சச்சின் 2009 கடைசியில் ஓய்வு பெறுவார் :) :)/////

    தகவல் பகிர்விற்கு நன்றி டாக்டர்!

    ReplyDelete
  18. /////யட்சன்... said...
    ஆசானே !
    என் போன்ற அரைவேக்காட்டு மாணவனுக்கும் விளக்கமளித்ததற்கு மிக்க நன்றி...////

    வகுப்பறைக்கு வருபவர்கள் அனைவருமே எனது மாணவர்கள்தான்!
    கால், அரை என்று வருபவர்களை, முழுதாக வேகவைத்து அனுப்புவதுதான் என்னுடைய வேலை:-))))

    ReplyDelete
  19. ////நவநீத்(அ)கிருஷ்ணன் said...
    ///ஒரு ஜாதகத்தில் ராகு & கேது இருக்கும் இடங்களுக்குள் உள்ள ஏழு
    ராசிகளுக்குள் மற்ற ஏழு கிரகங்களும் இருந்து மீதி ஐந்து ராசிகள் காலியாக
    இருக்கும் நிலைதான் கால சர்ப்ப தோஷம் ஆகும்!
    அந்த ராகு கேதுவின் ஏழு கட்ட பிடிப்பிற்குள் லக்கினம் மாட்டாமல்
    வெளியே இருந்தாலும் அல்லது லக்கினம் மாட்டிக் கொண்டு சந்திர
    ராசி (சந்திரன்) மாட்டாமல் வெளியே இருந்தாலும் தோஷம் உண்டு.
    ///
    மிக்க நன்றி ஐயா. நல்ல தெளிவான விளக்கம் தந்துள்ளீர்.
    ஒரு ஜாதகத்தில் ராகு & கேது இருக்கும் இடங்களுக்குள் உள்ள ஏழு
    ராசிகளுக்குள் மற்ற ஏழு கிரகங்களும் இருந்து மீதி ஐந்து ராசிகள் காலியாக
    இல்லாவிடில் கால சர்ப்ப தோஷம் இல்லை தானே!/////

    உள்ளே மாட்டிக் கொண்ட அந்த ஐந்து கிரகங்களைப் பொறுத்தது அது.
    அவைகள், சூரியன், சந்திரன், சுக்கிரன், குரு, சனி போன்ற முக்கியமான
    கிரகங்களாக இருந்தால் 80% தோஷம் உண்டு!

    ReplyDelete
  20. //////நவநீத்(அ)கிருஷ்ணன் said...
    களத்திரதோஷம் மற்றும் நாகதோஷம் பற்றியும் எழுதவும். நன்றி/////

    பின்னால் நேரம் இருக்கும்போது எழுதுகிறேன்

    ReplyDelete
  21. //////நவநீத்(அ)கிருஷ்ணன் said...
    எல்லா தோஷத்தயும் இறைவனின் காலடில் போட்டாச்சு.
    பதிவை படித்தவர் அனைவருக்கும் மிஞ்சும் தோஷம் சந்தோஷம் மட்டுமே :-).////

    மகிழ்ச்சியில் கூட தோஷம் இருக்கிறது, பாருங்கள் நவநீதன்!:-))))

    ReplyDelete
  22. ///////hotcat said...
    Dear sir,
    Good lesson. I was waiting for this topic for long time. Thanks.
    My questions are:
    1. Rahu and ketu rotate indirect? Is it true? while all other planets rotate directly these are not.

    மற்ற கிரகங்கள் கடிகாரச்சுற்றில் சுற்றும்போது, ராகுவும், கேதுவும் anti clock சுற்றில் தானே சுற்றுகிறது சாமி!

    2. If so, how would you take their placement consideration?

    18 மாதங்களில் 30 பாகைகளைக் கடக்கின்றன. ஒரு நாளில் பெரிய வித்தியாசம் ஒன்றும் வராது

    3. I have rahu in second house and ketu is in 8th house. but no planets in between 2nd and 8th houses....So what kind of dosham/yogam? (you have mentioned 2types) Based on this dosha will be in my first half of my life or second half?

    இரண்டாவது பகுதியில்

    ////இந்த தோஷம் இரண்டாம் வீட்டிலிருந்து (அதாவது லக்கினத்திற்கு அடுத்துள்ள
    இரண்டாம் வீட்டில் ராகு அல்லது கேது அமர்ந்திருக்க அடுத்துள்ள ஆறு
    கட்டங்களுக்குள் மற்ற அத்தனை கிரகங்களும் இருக்கின்ற அமைப்பு)
    துவங்கினால், குடும்பத்தில் பல சிக்கல்கள் இருக்கும்.ஏற்படும். அதோடு பணப்
    பிரச்சினைகள் ஏற்படும்!/////
    will this rule apply to me? I dont have planets from 2nd house to 8th house. I have it from 8th house to 2nd house?

    ///ராகு அல்லது கேது அமர்ந்திருக்க அடுத்துள்ள ஆறு கட்டங்களுக்குள் மற்ற அத்தனை கிரகங்களும் இருக்கின்ற அமைப்பு//// அந்த அமைப்பில் இல்லையே! பிறகு என்ன? வேறு விதமான தொல்லைகள் வரலாம்.

    ReplyDelete
  23. //////hotcat said...
    ////எனது அனுபவத்தில் இந்த அஷ்டகவர்க்கக் கணக்கு பலருக்கும் சரியாக
    இருந்திருக்கிறது. நீங்களும் அதையே பின்பற்றலாம்////

    If Ashtavarka paral count is good. so everybody who is having kalasarpa dosha/yoga will have only first half (or whatever the paral) miserable...not the later one. Is it?///

    பெரும்பாலும் முதல் பகுதியில் அனைவருக்கும் தோஷம் கடந்துவிடும்

    General rules also applies even after the dosham changed to yoga????
    யோகமாக மாறிய பிறகு, தோஷ விதிகள் எதற்கு மீண்டும் வரப்போகிறது?

    OK, will any blogs will follow up regarding the yogam of KSY.
    நோ ஐடியா ஸ்வாமி!

    ReplyDelete
  24. /////Anandhi said...
    விரிவாக ஆனால் எளிமையாக புரியும் வண்ணம் விளக்கி இருக்கிறீர்கள் ஐயா.
    கால சர்ப்ப தோஷம் நவாம்சத்திற்கும் பொருந்துமா ? நவாம்சத்தில் கால சர்ப்ப தோஷத்தின் விளைவுகள் என்ன? தயவுசெய்து விளக்குவீர்களா?////

    நவாம்சம் என்பது ராசியின் விரிவாக்கம்தானே.Navamsam is the magnified version of a rasi chart
    ஆகவே ராசியில் இல்லாமல், நவாம்சத்தில் கா.ச.தோ இருந்தால் அதுவும் பரிசீலனைக்கு உரியதே!

    ReplyDelete
  25. /////Blogger மதி said...
    கால சர்ப்ப யோகம்(தோஷம்) பற்றிய விளக்கம் அருமை... மிக்க நன்றி
    டாக்டரின் தகவலுக்கும் நன்றி////

    பாராட்டிற்கு நன்றி மதிவாணரே!

    ReplyDelete
  26. கால சர்ப்ப தோஷம் பற்றிய விரிவான விளக்கம் அருமை.

    ஒரு சந்தேகம் விளக்கவும்.

    1.ராகு கேது சாயா கிரகங்களுக்கு இடையே மற்ற கிரகங்களை பார்க்கும் போது கடிகாரச் சுற்றா அல்லது மாற்று சுற்றா ?

    2. ராகு கேதுக்குள் 7 கிரகங்கள் அடைபடும் போது லக்ணம் வெளியே எப்படி?
    விளக்கவும்.

    ReplyDelete
  27. /////திருநெல்வேலி கார்த்திக் said...
    கால சர்ப்ப தோஷம் பற்றிய விரிவான விளக்கம் அருமை.
    ஒரு சந்தேகம் விளக்கவும்.
    1.ராகு கேது சாயா கிரகங்களுக்கு இடையே மற்ற கிரகங்களை பார்க்கும் போது கடிகாரச் சுற்றா அல்லது மாற்று சுற்றா ?////

    பார்வை பார்வைதான்! அதில் சுற்றெல்லாம் கிடையாது!

    ///// 2. ராகு கேதுக்குள் 7 கிரகங்கள் அடைபடும் போது லக்ணம் வெளியே எப்படி?
    விளக்கவும்./////

    லக்கினம் என்பது ஒரு சிசு வெளியே வந்தவுடன், அந்த ஷணத்தில் வானத்தில் உள்ள ராசிதான் அதன் லக்கினம். சுழற்சியில் நாள் ஒன்றிற்கு 12 விதமான லக்கினங்கள் (24 மணி நேரம் வகுத்தல் 12 = 2 மணி நேரத்திற்கு ஒரு லக்கினம். கா.ச.தோஷம் உள்ள நாளில் பிறக்கும் குழந்தையில் லக்கினம் இந்தப் பன்னிரெண்டில் எது வேண்டுமென்றாலும் இருக்கலாமே சுவாமி? புரிகிறதா? இல்லையா?

    ReplyDelete
  28. உள்ளேன் ஐயா! மகர குரு(நீச குரு)வுடன் ராகு சேர்ந்தால் பலன் எப்படி இருக்கும்?

    ReplyDelete
  29. ஐயா,

    ராகு, கேதுவுடன் சுபர்கள் (சந்திரன், குரு, சுக்கிரன் ) இருந்தால் தோஷத்தின் கடுமை குறையும் என்பது சரியா? உதாரணத்துக்கு லக்னத்தில் ராகுவும் சந்திரனும், ஏழில் கேதுவும் குருவும். இவற்றிற்கிடையில் மற்ற கிரகங்கள்.

    ReplyDelete
  30. This comment has been removed by the author.

    ReplyDelete
  31. Thank you very much Sir for your detail oriented replies.

    Dr. Bruno,you are awesome...you always come with example. special thanks to you.

    -Shankar

    ReplyDelete
  32. /////தங்ஸ் said...
    உள்ளேன் ஐயா! மகர குரு(நீச குரு)வுடன் ராகு சேர்ந்தால் பலன் எப்படி இருக்கும்?////

    குரு நீசமானால் என்ன? கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே; சங்கு சுட்டாலும் வெண்மை தரும் - கேள்விப்பட்டதில்லையா? குரு நீசமானாலும் கெடுதல் செய்ய மாட்டார் இல்லையா? அதோடு உடன் சேர்ந்த ராகுவும், குருவோடு இருப்பதால் தீமை செய்ய மாட்டாரே சுவாமி!

    இருவரும் சேர்ந்ததால் சண்டாளயோகம் உள்ளது.குரு நீசம் பெற்றதால், அது வேலை செய்யும் வாய்ப்பில்லை!

    ReplyDelete
  33. /////Anandhi said...
    ஐயா,
    ராகு, கேதுவுடன் சுபர்கள் (சந்திரன், குரு, சுக்கிரன் ) இருந்தால் தோஷத்தின் கடுமை குறையும் என்பது சரியா? உதாரணத்துக்கு லக்னத்தில் ராகுவும் சந்திரனும், ஏழில் கேதுவும் குருவும். இவற்றிற்கிடையில் மற்ற கிரகங்கள்./////

    உண்மைதான் சகோதரி! தோஷத்தின் அளவு குறையும்!

    ReplyDelete
  34. இந்த பாடம் நன்கு புரிந்தது ஐயா !

    ReplyDelete
  35. கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் யோகம் என்று சொல்கிறார் ஒருவர்.

    எட்டில் இருக்கும் சுக்கிரனை ஆறில் இருக்கும் சனி பார்ப்பதால் சுக்கிரன் நன்மை செயவான் என்பது சரியா?

    தயவு செய்து விளக்கவும்.

    ReplyDelete
  36. //////ARUVAI BASKAR said...
    இந்த பாடம் நன்கு புரிந்தது ஐயா !///

    உங்களைப் போன்ற அன்பர்களுக்குப் புரியும் படியாக இடுமை இருந்தால் எனக்கும் மகிழ்ச்சிதான்!

    ReplyDelete
  37. /////இளைய பல்லவன் said...
    கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் யோகம் என்று சொல்கிறார் ஒருவர்.
    எட்டில் இருக்கும் சுக்கிரனை ஆறில் இருக்கும் சனி பார்ப்பதால் சுக்கிரன் நன்மை செயவான் என்பது சரியா? தயவு செய்து விளக்கவும்./////

    சுக்கிரன் சுகங்களுக்கு அதிபதி. சனி கர்மகாரகன். ஜீவனத்திற்கு வழி செய்பவன். அவர்களில் யாரை நீங்கள் கெட்டவன் என்கிறீர்கள்?
    ஒருவரை ஒருவர் பார்ப்பது இருக்கட்டும். ஆறாம் இடம், எட்டாம் இடமெல்லாம் மறைவிடங்கள் ஆயிற்றே சாமி! அவர்கள் எந்த வீட்டிற்கு உரியவர்கள். உங்கள் லக்கினம் என்ன? லக்கினாதிபதி எங்கே இருக்கிறார்
    அதெல்லாம் தெரியாமல் எப்படிப் பதில் சொல்வது? தொலைபேசியிலேயே வைத்தியம் செய்வதைப் போன்றது இது!:-)))

    ReplyDelete
  38. ஹலோ வாத்தியாரய்யா,

    இன்றைய பாடமும் நன்றாக இருந்தது, புரியவும் புரிந்தது. மேலும் என்னுடைய டவுட்டு இதோ: எனக்கு ராகுவுக்க்ம் கேதுவுக்கும் இடையில் வெறும் லக்னம் மட்டுமே உள்ளது, ஆக எனக்கும் இந்த தோஷம் உண்டா? அல்லது லக்னம் மட்டும் இருந்தால் தோஷம் இல்லாமல் ஆகுமா?

    ReplyDelete
  39. ஆறாம் இடம், எட்டாம் இடமெல்லாம் மறைவிடங்கள் ஆயிற்றே சாமி! அவர்கள் எந்த வீட்டிற்கு உரியவர்கள். உங்கள் லக்கினம் என்ன? லக்கினாதிபதி எங்கே இருக்கிறார்
    அதெல்லாம் தெரியாமல் எப்படிப் பதில் சொல்வது? தொலைபேசியிலேயே வைத்தியம் செய்வதைப் போன்றது இது!:-)))
    ///
    ஹி ஹி.. ஆர்வக்கோளாறு. மன்னிக்கவும்.

    தனுர் லக்னம். குருவும் ராகுவும் லக்னத்தில். ஆறில் சனி. ஏழில் கேது. எட்டில் சந்திரன், சுக்கிரன், ஒன்பதில் சூரியன், செவ்வாய், புதன்.

    நக்ஷத்திரம் - ஆயில்யம் முதல் பாதம்.

    தற்போது சுக்ர தசை.

    ReplyDelete
  40. /////Sumathi. said...
    ஹலோ வாத்தியாரய்யா,
    இன்றைய பாடமும் நன்றாக இருந்தது, புரியவும் புரிந்தது. மேலும் என்னுடைய டவுட்டு இதோ: எனக்கு ராகுவிற்கும் கேதுவிற்கும் இடையில் வெறும் லக்னம் மட்டுமே உள்ளது, ஆக எனக்கும் இந்த தோஷம் உண்டா? அல்லது லக்னம் மட்டும் இருந்தால் தோஷம் இல்லாமல் ஆகுமா?/////

    ராகுவிற்கும் கேதுவிற்கும் இடையில் வெறும் லக்னம் மட்டுமே இருந்தால், அந்தப்பக்கம் கேதுவிற்கும், ராகுவிற்கும் இடையில் எல்லா கிரகங்களும் மாட்டிக்கொண்டிருக்குமே - அதைக் கவனிக்கவில்லையா நீங்கள்? கால சர்ப்ப தோஷ ஜாதகம்தான்.

    ReplyDelete
  41. /////இளைய பல்லவன் said...
    ஆறாம் இடம், எட்டாம் இடமெல்லாம் மறைவிடங்கள் ஆயிற்றே சாமி! அவர்கள் எந்த வீட்டிற்கு உரியவர்கள். உங்கள் லக்கினம் என்ன? லக்கினாதிபதி எங்கே இருக்கிறார்
    அதெல்லாம் தெரியாமல் எப்படிப் பதில் சொல்வது? தொலைபேசியிலேயே வைத்தியம் செய்வதைப் போன்றது இது!:-))) ///
    ஹி ஹி.. ஆர்வக்கோளாறு. மன்னிக்கவும்.
    தனுர் லக்னம். குருவும் ராகுவும் லக்னத்தில். ஆறில் சனி. ஏழில் கேது. எட்டில் சந்திரன், சுக்கிரன், ஒன்பதில் சூரியன், செவ்வாய், புதன்.
    நக்ஷத்திரம் - ஆயில்யம் முதல் பாதம்.
    தற்போது சுக்ர தசை.//////

    சுக்கிர தசை, தசாநாதன் எட்டில் இருப்பதால் மிக்ஸட் ரிசல்ட்!
    அடுத்தஆண்டு கோச்சாரம் நன்றாக இருக்கும் குரு சந்திர ராசிக்கு ஏழில் வருகிறார். அவருக்கு அதுதான் உன்னதமான இடம்.

    அனேகமாக இளைய பல்லவியையும் கூட்டிக் கொண்டு வருவார். இதுவரை திருமணமாகவில்லை என்றால், அவள்தான் உங்கள் மனைவி. பத்திரிக்கை அனுப்புங்கள். வகுப்பறை மாணவர்களுடன் நானும் வருகிறேன்

    ReplyDelete
  42. //ண்ணும், கையும் தவிர வேறு உபகரணங்கள் இல்லாத காலத்தில் நமது
    முனிவர்கள் தங்களது ஞானதிருஷ்டியால் கணித்து எழுதியதுதான் கடல்
    போன்ற வானவியல் கலையும், ஜோதிடக்கலையும் ஆகும்.//
    அய்யா ..நான் உங்கள் புதிய மாணவன் .காலசர்ப்ப தோஷம் விளக்கம் ,பல சந்தேகங்களை தீர்க்கும் விதமாக உள்ளது.பரல் புதிய விளக்கம்.

    ReplyDelete
  43. //அனேகமாக இளைய பல்லவியையும் கூட்டிக் கொண்டு வருவார். இதுவரை திருமணமாகவில்லை என்றால்,//

    அவர் கடந்த முறை 9ல் இருக்கும் போதே அனுப்பி விட்டார் !.

    தற்போது மண வாழ்க்கையின் பத்தாவது வருடம்!.


    சோதிடத்தை மிக அழகாக சொல்லி வருகின்றீர்கள்.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  44. சில நாட்களாக பதிவுகள் பக்கம் வர முடியாமல் இருந்தது.
    தமிழ்மணம் புண்ணியத்தில் நட்சத்திரம் ஆக்கி அடித்து ஆட வைத்து விட்டார்கள்.. :)
    தெளிவான விளக்கங்களுடன் உங்களுடைய இந்த பதிவு அருமை..

    ஒரு தகவல் உதவி வேண்டும்.
    பி.வி.ராமனின் How to Judge a Horoscope-volume 1 & Volume 2 இரண்டும் தேவைப்படுகிறது.
    உங்களிடன் இருக்கிறதா?

    இருந்தால் படநகல் எடுத்துக் கொண்டு தந்து விடலாம்;என் கோவை நண்பர்கள் மூலம் ஏற்பாடு செய்கிறேன்.

    இருப்பின் மின்மடலிட வேண்டுகிறேன்,நன்றி.

    ReplyDelete
  45. ஐயா வணக்கம்
    என்னுடைய ஜாதகத்தில் ராகு கேதுவின் பிடிக்குள் 5 கிரகங்கள் , மீதமுள்ள இரண்டும் கேதுவின் நட்சத்திரத்தில் ,இதையும் காலசர்ப்ப தோசம் என்று ஒரு ஜோதிடர் சொன்னார், இந்தக்கூற்று சரியானதா ?

    ReplyDelete
  46. நல்லா நீறுத்தி நிதானமா படித்தேன்.
    1. பி.வி.ராமன் அவர்களுடைய கருத்துன்னுட்டு ஒரு தளத்தில், லக்னம் மாட்டிக் கொண்டு இருந்தால், அது தோஷம் இல்லைன்னுட்டாங்க. நீங்க இப்படி சொல்லிட்டீங்களே!! (the evil gets almost neutralized if the Lagna is between Rahu and Kethu; the yoga can be considered as defunct even if a single planet is with Rahu or Kethu or out­side the axis
    2. ரங்கமணியும் தோஷ கேஸு - லக்னம் வெளியில‌. //கால சர்ப்ப தோஷம் உள்ள சிலருக்கு, அந்த தோஷ காலம் முடிந்த பிறகே திருமணம் நடைபெறும்// அவரளவில் ஆமாம். அதுக்கப்புறம் வேற தோஷம் அவரை பிடிச்சிடுச்சி:-) ஆனால், எனக்கு அஷ்டகவர்க்க பரல் கணக்குப்படி அத்தனை வருடங்கள் (கா.ச.யோ.)ஆவதற்குள்ளேயே திருமணம் ஆகிவிட்டது.
    3. ராகு தசை நடந்த‌ போது, வேலை சிறப்பாக அமைந்தது (ஒன்று விட்டால் அடுத்தது தானே வரும்). எனக்கு பத்தாம் வீட்டிலிருந்து ராகு சார் சனி சாரொடு (எல்லாமொரு மரியாதை தான்) ஆட்சி செய்வதால், கா.ச."யோகம்" முடிந்ததிலிருந்து நிலையான வேலை இல்லை. சரியா?

    நல்லா விளங்கினதுன்னு நினைத்தேன், இப்ப இன்னும் குழப்பம். அதாவது எனக்கு இருப்பது "யோகம்" (யோக காலம் முடிந்தது!) சரியா?

    ReplyDelete
  47. /////''ஓம் சதீஷ் '' said...
    //கண்ணும், கையும் தவிர வேறு உபகரணங்கள் இல்லாத காலத்தில் நமது
    முனிவர்கள் தங்களது ஞானதிருஷ்டியால் கணித்து எழுதியதுதான் கடல்
    போன்ற வானவியல் கலையும், ஜோதிடக்கலையும் ஆகும்.//
    அய்யா ..நான் உங்கள் புதிய மாணவன் .காலசர்ப்ப தோஷம் விளக்கம் ,பல சந்தேகங்களை தீர்க்கும் விதமாக உள்ளது.பரல் புதிய விளக்கம்./////

    வாருங்கள் சித்தோட்டுக்காரரே! உங்கள் வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  48. ////இளைய பல்லவன் said...
    //அனேகமாக இளைய பல்லவியையும் கூட்டிக் கொண்டு வருவார். இதுவரை திருமணமாகவில்லை என்றால்,//
    அவர் கடந்த முறை 9ல் இருக்கும் போதே அனுப்பி விட்டார் !.
    தற்போது மண வாழ்க்கையின் பத்தாவது வருடம்!.
    சோதிடத்தை மிக அழகாக சொல்லி வருகின்றீர்கள்.
    மிக்க நன்றி.////

    இந்த முறை இடம் அல்லது வீடு வாங்கும் யோகத்தைத் தருவார். இறைவனை வணங்கிவிட்டு முயன்று பாருங்கள். தங்கள் நாடு (அதுதான் பல்லவ நாடு) எங்கே இருக்கிறது?

    ReplyDelete
  49. //////அறிவன்#11802717200764379909 said...
    சில நாட்களாக பதிவுகள் பக்கம் வர முடியாமல் இருந்தது.
    தமிழ்மணம் புண்ணியத்தில் நட்சத்திரம் ஆக்கி அடித்து ஆட வைத்து விட்டார்கள்.. :)
    தெளிவான விளக்கங்களுடன் உங்களுடைய இந்த பதிவு அருமை..///
    ------------------
    நன்றி நண்பரே!

    ////ஒரு தகவல் உதவி வேண்டும்.
    பி.வி.ராமனின் How to Judge a Horoscope-volume 1 & Volume 2 இரண்டும் தேவைப்படுகிறது.
    உங்களிடன் இருக்கிறதா?
    இருந்தால் படநகல் எடுத்துக் கொண்டு தந்து விடலாம்;என் கோவை நண்பர்கள் மூலம் ஏற்பாடு செய்கிறேன்.
    இருப்பின் மின்மடலிட வேண்டுகிறேன்,நன்றி.////
    -----------------------------------
    இருந்தது. மொத்தம் 10 நூல்கள். படித்துவிட்டுத் தருகிறேன் என்று வாங்கிக் கொண்டு போன உயிரான நண்பர்
    உயிரை மட்டும் வைத்திருக்கிறார். புத்தகங்கள் மட்டும் வந்த பாடில்லை!அவர் எங்கோ சர்குலேசனில் விட்டுவிட்டார்.

    "புத்தகத்தையும், பெண்ணையும் இரவல் கொடுக்காதே! போனால் திரும்ப வராது" என்று அனுபவம் மிக்க ஒருவன் சொன்னது இப்போதுதான் புரிகிறது!:-(((((

    ReplyDelete
  50. /////தமிழன் said...
    ஐயா வணக்கம்
    என்னுடைய ஜாதகத்தில் ராகு கேதுவின் பிடிக்குள் 5 கிரகங்கள் , மீதமுள்ள இரண்டும் கேதுவின் நட்சத்திரத்தில் ,இதையும் காலசர்ப்ப தோசம் என்று ஒரு ஜோதிடர் சொன்னார், இந்தக்கூற்று சரியானதா ?////

    சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்!

    ReplyDelete
  51. /////கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
    நல்லா நீறுத்தி நிதானமா படித்தேன்.
    1. பி.வி.ராமன் அவர்களுடைய கருத்துன்னுட்டு ஒரு தளத்தில், லக்னம் மாட்டிக் கொண்டு இருந்தால், அது தோஷம் இல்லைன்னுட்டாங்க. நீங்க இப்படி சொல்லிட்டீங்களே!! (the evil gets almost neutralized if the Lagna is between Rahu and Kethu; the yoga can be considered as defunct even if a single planet is with Rahu or Kethu or out­side the axis////

    இல்லை தவறானது. மேலே ராஜாவின் ஜாதகத்தை உதாரணமாகக் கொடுத்துள்ளேன். பாருங்கள் சகோதரி!
    --------------------------------------------------
    2. ரங்கமணியும் தோஷ கேஸு - லக்னம் வெளியில‌. //கால சர்ப்ப தோஷம் உள்ள சிலருக்கு, அந்த தோஷ காலம் முடிந்த பிறகே திருமணம் நடைபெறும்// அவரளவில் ஆமாம். அதுக்கப்புறம் வேற தோஷம் அவரை பிடிச்சிடுச்சி:-) ஆனால், எனக்கு அஷ்டகவர்க்க பரல் கணக்குப்படி அத்தனை வருடங்கள் (கா.ச.யோ.)ஆவதற்குள்ளேயே திருமணம் ஆகிவிட்டது.////

    திருமணத்தை சுக்கிரன் அவருடைய புத்திக் காலத்தில், மற்றவற்றை ஒதுக்கிவிட்டு நடத்திக் கொடுத்துவிடுவார்.
    ===============================================
    3. ராகு தசை நடந்த‌ போது, வேலை சிறப்பாக அமைந்தது (ஒன்று விட்டால் அடுத்தது தானே வரும்). எனக்கு பத்தாம் வீட்டிலிருந்து ராகு சார் சனி சாரொடு (எல்லாமொரு மரியாதை தான்) ஆட்சி செய்வதால், கா.ச."யோகம்" முடிந்ததிலிருந்து நிலையான வேலை இல்லை. சரியா?/////

    ராகு பத்தில் இருந்தாலோ அல்லது சனி பத்தில் இருந்தாலோ அடைக்கடி மாற்றமுள்ள வேலைதான் கிடைக்கும். அதுவும் மனத்திருப்தி கொள்ளும் வேலையாக இருக்காது!
    ============================================================
    ///நல்லா விளங்கினதுன்னு நினைத்தேன், இப்ப இன்னும் குழப்பம். அதாவது எனக்கு இருப்பது "யோகம்" (யோக காலம் முடிந்தது!) சரியா?////

    ஜாதகத்தில் வேறு எத்தனனயோ யோகங்கள் இருக்கும் (மொத்த யோகங்கள் 300)
    அதையெல்லாம் கணக்கில் கொள்ள வேண்டாமா?

    ReplyDelete
  52. Ayya,

    Even if Chandran is out of the rahu and kethu ( It means all other planets are between rahu and kethu and chandran is ou of it)still it has 80% kala sarpa dosha?
    Thank you

    Sundar Canada

    ReplyDelete
  53. உங்கள் பதிவுக்கும் பதில்களுக்கும் மிக்க நன்றி அய்யா.

    இன்னும் ஒரே ஒரு கேள்வி (இப்போதைக்கு:-) //லக்கினத்தில் துவங்கி முதல் ஏழு வீடுகளுக்குள் இந்த தோஷம் உள்ளவர்
    களுக்கு அவர்கள் வாழ்க்கையின் முதல் பகுதியும், ஏழாம் வீட்டில் துவங்கி
    லக்கினத்தில் முடிபர்வகளுக்கு அவர்கள் வாழ்க்கையின் இரண்டாவது
    பகுதியும் மோசமானதாக இருக்கும்// எனக்கு ராகு பத்தாம் இடத்திலும் கேது நான்காம் இடத்திலும் (அதான் நிலையில்லாத வேலை பத்தி சொல்லியாச்சே:-), லக்னம், எல்லாரும் இதுக்குள்ள மாட்டிகிட்டுருக்காங்க. அப்ப, தோஷம் பத்தாம் வீட்டிலிருந்து தொடங்குகிறதா? (இரண்டாம் பகுதியா?)

    மீண்டும் உங்கள் சோதிடப் பாடங்களுக்காக நன்றி ஐயா.

    ReplyDelete
  54. வகுப்பறைக்கு தாமதமாக வந்துள்ளேன். மன்னிக்கவும். படம் வழக்கம் போல அருமை!


    அன்புடன்
    இராசகோபால்

    ReplyDelete
  55. ////sundar said...
    Ayya,
    Even if Chandran is out of the rahu and kethu ( It means all other planets are between rahu and kethu and chandran is ou of it)still it has 80% kala sarpa dosha? Thank you
    Sundar Canada/////

    Yes, my dear friend!

    ReplyDelete
  56. ////கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
    உங்கள் பதிவுக்கும் பதில்களுக்கும் மிக்க நன்றி அய்யா.
    இன்னும் ஒரே ஒரு கேள்வி (இப்போதைக்கு:-) //லக்கினத்தில் துவங்கி முதல் ஏழு வீடுகளுக்குள் இந்த தோஷம் உள்ளவர்
    களுக்கு அவர்கள் வாழ்க்கையின் முதல் பகுதியும், ஏழாம் வீட்டில் துவங்கி
    லக்கினத்தில் முடிபர்வகளுக்கு அவர்கள் வாழ்க்கையின் இரண்டாவது
    பகுதியும் மோசமானதாக இருக்கும்// எனக்கு ராகு பத்தாம் இடத்திலும் கேது நான்காம் இடத்திலும் (அதான் நிலையில்லாத வேலை பத்தி சொல்லியாச்சே:-), லக்னம், எல்லாரும் இதுக்குள்ள மாட்டிகிட்டுருக்காங்க. அப்ப, தோஷம் பத்தாம் வீட்டிலிருந்து தொடங்குகிறதா? (இரண்டாம் பகுதியா?)///

    ஆமாம் சகோதரி!

    ReplyDelete
  57. /////Rajagopal said...
    வகுப்பறைக்கு தாமதமாக வந்துள்ளேன். மன்னிக்கவும். படம் வழக்கம் போல அருமை!
    அன்புடன்
    இராசகோபால்////

    இணைய வகுப்பிற்கு நேரம் காலம் ஏது சுவாமி? எப்போது வேண்டுமென்றாலும் வரலாம். போகலாம்
    மன்னிப்பெல்லாம் எதற்கு?

    ReplyDelete
  58. விடுப்பு விண்ணப்பம்

    அனுப்புனர்,
    அணுயோகி,
    வகுப்பறை மாணவன்,
    வகுப்பறை.

    பெறுனர்,
    வகுப்பறை ஆசான்,
    வகுப்பறை.

    ஐயா,
    வணக்கம். இந்திய பாதுகாப்பு துறை தேர்வு தொடர்பாக சென்னை செல்ல வேண்டி இருந்ததால் கடந்த ஐந்து நாட்களாக வகுப்புக்கு வர இயலவில்லை. ஆகவே எனது வருகையின்மையை விடுப்பாக ஏற்றுக் கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
    நன்றி,

    தங்கள் உண்மையுள்ள,
    அணுயோகி.
    குறிப்பு:
    1.ஆறு வருடங்களுக்கு பிறகு எனக்கு விடுப்பு விண்ணப்பம் எழுத வாய்ப்பு தந்த ஆசானுக்கு நன்றி. :‍)

    2. ஆசானே (Alexander to Ziah-ul-huh) higgim boatham, moore market எங்கும் கிடைக்கவில்லை. பதிப்பகத்துக்கு தான் எழுத வேண்டும் போல.
    3. வராகர் ஓரா சாஸ்திரம்(சரசுவதி மகால் நூலக வெளீயீடு), மற்றும் மயிலை பூபதி ராஜன், முனுசாமி செட்டியார் எழுதிய சில நூல்களை சென்னையில் இருந்து அள்ளி வந்து இருக்கிறேன். (சந்தேகத்தை நீங்கள் தீர்த்து வைப்பீர்கள் என்ற நம்பிக்கை தான்)
    4. வீட்டுக்கு வந்து நுழைவியை திறந்ததும் நம் வகுப்பறைக்குள் தான் முதலில் நுழைந்தேன் பல நாளாய் எதிர் பார்த்துக் கொண்டு இருந்த கால சர்ப்பம் திடீரென்று வெளிவந்தது மகிழ்ச்சி.ப‌டித்துக் கொண்டு இருக்கிறேன். முழுதாக‌ தெளிவாக‌ ப‌டித்த‌தும் ச‌ந்தேக‌ங்க‌ளை பின்னூட்ட‌ம் இடுகிறேன்.
    ந‌ன்றி

    ReplyDelete
  59. ஐயா,
    எனக்கு துலாமில் லக்னமும், 4லில் சந்திரன், சனியோடு கேதுவும், அப்பறம் 10ல் சுக்கிரனோடு ராகுவும் ஜோரா உக்காந்து இருக்காங்க.மிச்சவர்கள்லாம் நடுவில்... அப்ப எனக்கும் கா.ச.தோ (இரண்டாம் பகுதியா?) அப்படின்னா இது எவ்வளவு வருஷம் நீடிக்கும்?

    ReplyDelete
  60. அணுயோகி said...
    1.ஆறு வருடங்களுக்கு பிறகு எனக்கு விடுப்பு விண்ணப்பம் எழுத வாய்ப்பு தந்த ஆசானுக்கு நன்றி. :‍)

    இணைய வகுப்பிற்கு இல்லை விதி முறைகள்
    விடுப்பும் இல்லை; விண்ணப்பமும் இல்லை!
    எப்போது வேண்டுமென்றாலும் வரலாம். எப்போது வேண்டுமென்றாலும் செல்லலாம்!

    ReplyDelete
  61. Sumathi. said...
    ஐயா,
    எனக்கு துலாமில் லக்னமும், 4லில் சந்திரன், சனியோடு கேதுவும், அப்பறம் 10ல் சுக்கிரனோடு ராகுவும் ஜோரா உக்காந்து இருக்காங்க.மிச்சவர்கள்லாம் நடுவில்... அப்ப எனக்கும் கா.ச.தோ (இரண்டாம் பகுதியா?) அப்படின்னா இது எவ்வளவு வருஷம் நீடிக்கும்?///

    ஏழாம் வீட்டில் துவங்கினால்தான் இரண்டாம் பகுதி! உங்களுக்குத்தான் 4ம் இடத்தில் துவங்குகிறதே?
    எதற்கு வீண் குழப்பம்? உங்களுக்கு அந்த தோஷமெல்லாம் முடிந்திருக்கும்.காலாவதியாயிருக்கும்.
    கவலை வேண்டாம்!

    ReplyDelete
  62. sundara kannan said...
    Ayya,
    In my horoscope,all planets r include between ragu(5 th place with guru,sevvaai,saturn) and ketu(11 th place) except lagnam and chandran(4 th place)[[(apart from this sukran-8th place,suriyan and puthan - 7 th place]]
    i have kaalasharpa dosam r not??
    pls tell me the details ayya,
    SundaraKannan///

    The planetary position is not clear.Pl.furnish all the planetary position from the lagna in order

    ReplyDelete
  63. /////sundara kannan said...
    ayya,
    I am kadaka rasi.measa laknam.
    4-chandran
    5-guru,ragu,sevvaai,saturn
    7-suriyan,puthan
    8-sukran
    11-ketu
    Can u say now.I have kaalasharpa dosam r not?
    pls send me,
    SundaraKannan/////

    ராகு & கேதுவின் வலையில் சந்திரனைத் தவிர மற்ற ஆறு கிரகங்கள் உள்ளன!
    80% காலசர்ப்ப தோஷம் உண்டு. 5ஆம் இடத்தில் இருந்து, கா.ச.தோ ஆரம்பிப்பதால்
    முதல் பாதிதான் அந்த தோஷம்! உங்கள் வயது என்ன? லக்கினத்தில் உள்ள பரல்
    என்ன என்று பாருங்கள். லக்கினத்தில் 25 பரல்கள் அல்லது 28 பரல்கள்தான் என்றால்
    அந்த வயதோடு அது முடிந்திருக்கும்! After that age you are free from that dosham!

    ReplyDelete
  64. /////Blogger sundara kannan said... Ayya,
    Thanks for ur reply.
    But you told either chandran or laknam which are placing between ragu and ketu,then only affected by the kaalasharpa dosham./////

    Read the article carefully once again!

    ReplyDelete
  65. தோஷம் இரண்டாம் பகுதி என்றால், எந்த வயதில் தொடங்கும்? அஷ்டகவர்க்க பரல்கள் கணக்குப்படி தான் அத்தனை வருடங்கள் இருக்குமா?
    நன்றி!

    ReplyDelete
  66. How come the Burger picture suits for this lesson? juz curious...

    -Shankar

    ReplyDelete
  67. /////கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
    தோஷம் இரண்டாம் பகுதி என்றால், எந்த வயதில் தொடங்கும்? அஷ்டகவர்க்க பரல்கள் கணக்குப்படி தான் அத்தனை வருடங்கள் இருக்குமா?/////

    ஸிம்ப்பிள். லக்கினத்தில் எத்தனை பரல்கள் இருக்கிறதோ அத்தனை வயதுவரை முதல்பகுதி என்னும் போது, அந்த எண்ணிக்கைப்படி உள்ள வயதைத் தாண்டியவுடன் அடுத்தபகுதியல்லவா? அப்பொது துவங்கும் என்று வைத்துக்கொள்ளுங்கள்

    வருடங்கள் எத்தனை? ஏழாம்வீட்டில் எத்தனை பரல்களோ (வருடங்களோ) அத்தனை வருடங்கள்!

    ReplyDelete
  68. /////hotcat said...
    How come the Burger picture suits for this lesson? juz curious...
    -Shankar////

    இரண்டு ரொட்டித்துண்டுகளுக்கு நடுவில் காய்கறிகள், வெண்ணை, மசாலா எல்லாவற்றையும் அடைத்துக் கொடுப்பதற்கு என்ன பெயர் சுவாமி? ஸாண்ட்விச்' என்றுதானே பெயர்?
    பதிவில் படத்திற்கு உரிய விளக்கம் இருக்கிறதே!
    பதிவில் உள்ள வரிகளை உங்களுக்காக இங்கே பிடித்து வந்திருக்கிறேன்:
    Kala Sarpa Dosha cum Yoga is formed when all the planets are hemmed
    between Rahu & Ketu.( that is sandwiched between Rahu and Ketu)
    இப்போது Okay யா?

    ReplyDelete
  69. ////இரண்டு ரொட்டித்துண்டுகளுக்கு நடுவில் காய்கறிகள், வெண்ணை, மசாலா எல்லாவற்றையும் அடைத்துக் கொடுப்பதற்கு என்ன பெயர் சுவாமி? ஸாண்ட்விச்' என்றுதானே பெயர்?
    பதிவில் படத்திற்கு உரிய விளக்கம் இருக்கிறதே!
    பதிவில் உள்ள வரிகளை உங்களுக்காக இங்கே பிடித்து வந்திருக்கிறேன்:
    Kala Sarpa Dosha cum Yoga is formed when all the planets are hemmed
    between Rahu & Ketu.( that is sandwiched between Rahu and Ketu)
    இப்போது Okay யா?////

    Sir, you are really funny!!!

    -shankar

    ReplyDelete
  70. /////hotcat said...
    ////இரண்டு ரொட்டித்துண்டுகளுக்கு நடுவில் காய்கறிகள், வெண்ணை, மசாலா எல்லாவற்றையும் அடைத்துக் கொடுப்பதற்கு என்ன பெயர் சுவாமி? ஸாண்ட்விச்' என்றுதானே பெயர்?
    பதிவில் படத்திற்கு உரிய விளக்கம் இருக்கிறதே!
    பதிவில் உள்ள வரிகளை உங்களுக்காக இங்கே பிடித்து வந்திருக்கிறேன்:
    Kala Sarpa Dosha cum Yoga is formed when all the planets are hemmed
    between Rahu & Ketu.( that is sandwiched between Rahu and Ketu)
    இப்போது Okay யா?////
    Sir, you are really funny!!!
    -shankar////

    சந்தோஷம்! படத்திற்கு என்னிடம் விளக்கம் கேட்காமல் நீங்களே தெரிந்துகொண்டிருந்தால், இன்னும் அதிகமாக சந்தோஷப் பட்டிருப்பேன்!:-))))

    ReplyDelete
  71. வணக்கம் ஐயா
    நான் உங்க புதிய மாணவி.நீங்க கொடுக்கும் ஜோ‌திட‌ பாடங்கள் எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு, அதான் சேர்ந்த்துட்டேன்.

    என்னுடைய ஜாதகத்தில் கேது இரண்டாம் வீட்டில், சனி நாலில், ராகு எட்டில். மீதி கிரகங்கள் வெளியே. இப்போது ராகு திசை.

    80% தோஷம், இல்லையா!?

    //கால சர்ப்ப தோஷம் உள்ளவர்களுக்கு, ராகு அல்லது கேதுவின் திசைகள் வந்தால், நற்பலன்கள் உண்டாகும். அதே நேரத்தில் அந்த திசை முடியும் போது போர்டிங் பாஸ் கொடுத்து அவர்கள் ஜாதகனை மேலே அனுப்பியும் வைத்து விடுவார்கள்.//

    ராகு அல்லது கேதுவின்
    திசைகள் வந்தால், நற்பலன், ok.
    ஆனால் ராகு எட்டில் இருக்கின்ராரே.
    இதனா‌ல் மாரகம் அல்லவா?
    அது எ‌ன்ன ஐயா போர்டிங் பாஸ்?
    அவுல சீக்கிரம் மேல போய்டுவேனா? :)

    ReplyDelete
  72. //"புத்தகத்தையும், பெண்ணையும் இரவல் கொடுக்காதே! போனால் திரும்ப வராது" என்று அனுபவம் மிக்க ஒருவன் சொன்னது இப்போதுதான் புரிகிறது!:-(((((
    //

    :))))))))

    இரண்டாவதாக சொல்வதெல்லாம் இரவலாக கிடைக்கிறதா என்ன????
    ஜாலியான விஷயமாக இருக்கிறது !!!!
    (சும்மா,தமாஷ்,கோபப்படாதீர்கள்)

    மற்றபடு நீங்கள் சொல்வது உண்மை-என்னிடம் சுமார் 1000 புத்தகங்கள் இருக்கின்றன,எவருக்காவது கொடுத்து உரிய நேரத்தில் வரவில்லை எனி,,வீட்டுக்குப் போய் கையோடு வாங்கி வந்து விடுவதுதான் என் வழக்கம் !

    அந்த திரும்பக் கொடுகாத நண்பர் பெயரைச் சொல்லுங்கள்,கோவையில் 'ஆட்டோ' அனுப்புவோம் !

    ReplyDelete
  73. அய்யா,

    //3. ராகு தசை நடந்த‌ போது, வேலை சிறப்பாக அமைந்தது (ஒன்று விட்டால் அடுத்தது தானே வரும்). எனக்கு பத்தாம் வீட்டிலிருந்து ராகு சார் சனி சாரொடு (எல்லாமொரு மரியாதை தான்) ஆட்சி செய்வதால், கா.ச."யோகம்" முடிந்ததிலிருந்து நிலையான வேலை இல்லை. சரியா?/////

    ராகு பத்தில் இருந்தாலோ அல்லது சனி பத்தில் இருந்தாலோ அடைக்கடி மாற்றமுள்ள வேலைதான் கிடைக்கும். அதுவும் மனத்திருப்தி கொள்ளும் வேலையாக இருக்காது!//

    ராகுவும் சனியும் செர்ந்து நவாம்சத்தில் பத்தில் இருந்தாலும் இதே பலந்தான் இல்லையா? இதற்குப் பரிகாரம் என்ன?

    ReplyDelete
  74. அய்யா,

    //3. ராகு தசை நடந்த‌ போது, வேலை சிறப்பாக அமைந்தது (ஒன்று விட்டால் அடுத்தது தானே வரும்). எனக்கு பத்தாம் வீட்டிலிருந்து ராகு சார் சனி சாரொடு (எல்லாமொரு மரியாதை தான்) ஆட்சி செய்வதால், கா.ச."யோகம்" முடிந்ததிலிருந்து நிலையான வேலை இல்லை. சரியா?/////

    ராகு பத்தில் இருந்தாலோ அல்லது சனி பத்தில் இருந்தாலோ அடைக்கடி மாற்றமுள்ள வேலைதான் கிடைக்கும். அதுவும் மனத்திருப்தி கொள்ளும் வேலையாக இருக்காது!//

    ராகுவும் சனியும் சேர்ந்து நவாம்சத்தில் பத்தில் இருந்தாலும் இதே பலன் தான் இல்லையா? இதற்குப் பரிகாரம் என்ன? ஏனென்றால் மனத் திருப்தி இல்லாத வேலயை வாழ்னாள் முழுவதும் செய்ய முடியாது இல்லையா வாத்யாரையா?

    ReplyDelete
  75. //////sundara kannan said... Ayya,
    Thanks lot for ur commands.Now I read clearly.
    In my jaathagam,kaalasharpa dosham starts with 5Th place,so first half is very difficult to survive.But now I am 27 years old.I got very good education(M.Tech(Computer science)).
    After resignation of Lecturer job before 3 years ago,still now I am searching for Software job.So last 3 years of my life only is going on very difficult.
    Any special reasons,pls give me.
    Thanks ayya,
    SundaraKannan///

    இதற்கெல்லாம் (last 3 years of my life only is going on very difficult.) பல காரணங்கள் உண்டு. கா.ச.தோ.வை மட்டும் குறையாகச் சொல்ல முடியாது. நடப்பு தசா புத்தி, கோச்சாரம் என்று பல அரிய விஷயங்கள் உள்ளன ராஜா!

    ReplyDelete
  76. ////Aachi said...
    வணக்கம் ஐயா
    நான் உங்க புதிய மாணவி.நீங்க கொடுக்கும் ஜோ‌திட‌ பாடங்கள் எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு, அதான் சேர்ந்த்துட்டேன்.///

    உங்கள் வரவு நல்வரவாகுக.
    --------------------------
    என்னுடைய ஜாதகத்தில் கேது இரண்டாம் வீட்டில், சனி நாலில், ராகு எட்டில். மீதி கிரகங்கள் வெளியே. இப்போது ராகு திசை.
    80% தோஷம், இல்லையா!?////

    சனி ஒருபக்கம் இருக்கிறது மற்றகிரகங்கள் ஒரு பக்கம் இருக்கின்றன. சனி கர்மகாரகன். அவனே வெளியே இருக்கிறான். அவன் யாருடைய நட்சத்திரத்தில் இருக்கிறான் என்று தெரியவில்லையே?
    ---------------------------------------
    //கால சர்ப்ப தோஷம் உள்ளவர்களுக்கு, ராகு அல்லது கேதுவின் திசைகள் வந்தால், நற்பலன்கள் உண்டாகும். அதே நேரத்தில் அந்த திசை முடியும் போது போர்டிங் பாஸ் கொடுத்து அவர்கள் ஜாதகனை மேலே அனுப்பியும் வைத்து விடுவார்கள்.//

    ராகு அல்லது கேதுவின்
    திசைகள் வந்தால், நற்பலன், ok.
    ஆனால் ராகு எட்டில் இருக்கின்றாரே.
    இதனா‌ல் மாரகம் அல்லவா?
    அது எ‌ன்ன ஐயா போர்டிங் பாஸ்?
    அவுள் சீக்கிரம் மேல போய்டுவேனா? :)/////

    அதெல்லாம் ஒரு விதியை (Rule) மட்டும் வைத்து மரணம் வராது. அதற்குப் பத்திற்கும் மேற்பட்ட நிலைகள் உள்ளன
    எதற்காகக் கவலை?

    இப்போதுதான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். கனவுகள், காட்சிகள், கல்யாணம், மாமியார், நாத்தினார் என்று எவ்வளவோ அற்புதமான விஷ்யங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. அவர்கள் எல்லாம் போர்டிங் பாஸ் வாங்கிய பிறகு
    பார்த்துக் கொள்வோம். இப்போது நிம்மதியாக இருங்கள்:-)))))

    ReplyDelete
  77. அறிவன்#11802717200764379909 said...
    //"புத்தகத்தையும், பெண்ணையும் இரவல் கொடுக்காதே! போனால் திரும்ப வராது" என்று அனுபவம் மிக்க ஒருவன் சொன்னது இப்போதுதான் புரிகிறது!:-(((((
    // :))))))))
    இரண்டாவதாக சொல்வதெல்லாம் இரவலாக கிடைக்கிறதா என்ன????
    ஜாலியான விஷயமாக இருக்கிறது !!!!
    (சும்மா,தமாஷ்,கோபப்படாதீர்கள்)////
    -------------------------
    இங்கே இரவல் என்பது நம்பி அனுப்பாதே என்று பொருள் கொள்ளுங்கள்

    ///// மற்றபடி நீங்கள் சொல்வது உண்மை-என்னிடம் சுமார் 1000 புத்தகங்கள் இருக்கின்றன,எவருக்காவது கொடுத்து உரிய நேரத்தில் வரவில்லை எனில்,,வீட்டுக்குப் போய் கையோடு வாங்கி வந்து விடுவதுதான் என் வழக்கம் !////

    நானும் பிரத்தியேகமாக ஒரு புத்தகத்தில் குறித்து வைத்துக் கொண்டுதான் கொடுக்கிறேன். தேடிப்போய் வாங்குவதற்கெல்லாம் நேரம் ஏது?
    --------------------------

    /////அந்த திரும்பக் கொடுகாத நண்பர் பெயரைச் சொல்லுங்கள்,கோவையில் 'ஆட்டோ' அனுப்புவோம் !////

    அந்த ஆட்டோ, மற்றும் சவுக்கட்டையுடன் ஆட்கள் எல்லாம் சினிமாவிற்குத்தான் சரிப்பட்டு வரும்.
    வாழ்க்கையில் அதையெல்லாம் நினைக்கக்கூட முடியது. நினைத்தாலே அது பாவச் செயல்!

    ReplyDelete
  78. //////அமர பாரதி said...
    அய்யா,
    //3. ராகு தசை நடந்த‌ போது, வேலை சிறப்பாக அமைந்தது (ஒன்று விட்டால் அடுத்தது தானே வரும்). எனக்கு பத்தாம் வீட்டிலிருந்து ராகு சார் சனி சாரொடு (எல்லாமொரு மரியாதை தான்) ஆட்சி செய்வதால், கா.ச."யோகம்" முடிந்ததிலிருந்து நிலையான வேலை இல்லை. சரியா?/////
    ராகு பத்தில் இருந்தாலோ அல்லது சனி பத்தில் இருந்தாலோ அடைக்கடி மாற்றமுள்ள வேலைதான் கிடைக்கும். அதுவும் மனத்திருப்தி கொள்ளும் வேலையாக இருக்காது!//
    ராகுவும் சனியும் செர்ந்து நவாம்சத்தில் பத்தில் இருந்தாலும் இதே பலந்தான் இல்லையா? இதற்குப் பரிகாரம் என்ன?////

    பரிகாரத்தைக் கடவுள் ஜாதகத்திலேயே கொடுத்திருப்பார். எல்லோருக்கும் 337 பரல்கள்தானே சாமி. இறைவன் படைப்பில் அனைவரும் சமம். முகேஷ் அம்பாணியும், அவருடைய கார் டிரைவரும் ஒன்றுதான். எப்படியென்று யோசித்துப் பாருங்கள்

    ReplyDelete
  79. /////அமர பாரதி said...
    அய்யா,
    //3. ராகு தசை நடந்த‌ போது, வேலை சிறப்பாக அமைந்தது (ஒன்று விட்டால் அடுத்தது தானே வரும்). எனக்கு பத்தாம் வீட்டிலிருந்து ராகு சார் சனி சாரொடு (எல்லாமொரு மரியாதை தான்) ஆட்சி செய்வதால், கா.ச."யோகம்" முடிந்ததிலிருந்து நிலையான வேலை இல்லை. சரியா?/////
    ராகு பத்தில் இருந்தாலோ அல்லது சனி பத்தில் இருந்தாலோ அடைக்கடி மாற்றமுள்ள வேலைதான் கிடைக்கும். அதுவும் மனத்திருப்தி கொள்ளும் வேலையாக இருக்காது!//
    ராகுவும் சனியும் சேர்ந்து நவாம்சத்தில் பத்தில் இருந்தாலும் இதே பலன் தான் இல்லையா? இதற்குப் பரிகாரம் என்ன? ஏனென்றால் மனத் திருப்தி இல்லாத வேலயை வாழ்னாள் முழுவதும் செய்ய முடியாது இல்லையா வாத்யாரையா?///

    ஏன் முடியாது? கட்டிய கணவனைப் பிடிக்கவில்லை என்றாலும் ஒரு பெண் சகித்துக் கொண்டு குடும்பம் நடத்தவில்லையா?
    அந்தச் சகிப்புத்தன்மை தானாக வரும். அதுதான் காலதேவனின் விளையாட்டு. அவருடைய விளையாட்டில் செகண்ட் இன்னிங்ஸ் எல்லாம் கிடையாது:-))))

    ReplyDelete
  80. /////அமர பாரதி said...
    அய்யா,
    //3. ராகு தசை நடந்த‌ போது, வேலை சிறப்பாக அமைந்தது (ஒன்று விட்டால் அடுத்தது தானே வரும்). எனக்கு பத்தாம் வீட்டிலிருந்து ராகு சார் சனி சாரொடு (எல்லாமொரு மரியாதை தான்) ஆட்சி செய்வதால், கா.ச."யோகம்" முடிந்ததிலிருந்து நிலையான வேலை இல்லை. சரியா?/////
    ராகு பத்தில் இருந்தாலோ அல்லது சனி பத்தில் இருந்தாலோ அடைக்கடி மாற்றமுள்ள வேலைதான் கிடைக்கும். அதுவும் மனத்திருப்தி கொள்ளும் வேலையாக இருக்காது!//
    ராகுவும் சனியும் சேர்ந்து நவாம்சத்தில் பத்தில் இருந்தாலும் இதே பலன் தான் இல்லையா? இதற்குப் பரிகாரம் என்ன? ஏனென்றால் மனத் திருப்தி இல்லாத வேலயை வாழ்னாள் முழுவதும் செய்ய முடியாது இல்லையா வாத்யாரையா?///

    ஏன் முடியாது? கட்டிய கணவனைப் பிடிக்கவில்லை என்றாலும் ஒரு பெண் சகித்துக் கொண்டு குடும்பம் நடத்தவில்லையா?
    அந்தச் சகிப்புத்தன்மை தானாக வரும். அதுதான் காலதேவனின் விளையாட்டு. அவருடைய விளையாட்டில் செகண்ட் இன்னிங்ஸ் எல்லாம் கிடையாது:-))))

    ReplyDelete
  81. This comment has been removed by the author.

    ReplyDelete
  82. // //என்னுடைய ஜாதகத்தில் கேது இரண்டாம் வீட்டில், சனி நாலில், ராகு எட்டில். மீதி கிரகங்கள் வெளியே. இப்போது ராகு திசை.
    80% தோஷம், இல்லையா!?//

    சனி ஒருபக்கம் இருக்கிறது மற்றகிரகங்கள் ஒரு பக்கம் இருக்கின்றன. சனி கர்மகாரகன். அவனே வெளியே இருக்கிறான். அவன் யாருடைய நட்சத்திரத்தில் இருக்கிறான் என்று தெரியவில்லையே?//


    கேது = அஸ்தம்
    சனி = அனுஷம்
    ராகு = உத்திரட்டாதி

    போதுமா ஐயா?

    // இப்போதுதான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். கனவுகள், காட்சிகள், கல்யாணம், மாமியார், நாத்தினார் என்று எவ்வளவோ அற்புதமான விஷ்யங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. அவர்கள் எல்லாம் போர்டிங் பாஸ் வாங்கிய பிறகு
    பார்த்துக் கொள்வோம். இப்போது நிம்மதியாக இருங்கள்:-))))) //

    சரி ஐயா. அவங்க போகும் வரைக்கும் wait பண்னுரேன் :)

    ReplyDelete
  83. அய்யா,

    //ஏன் முடியாது? கட்டிய கணவனைப் பிடிக்கவில்லை என்றாலும் ஒரு பெண் சகித்துக் கொண்டு குடும்பம் நடத்தவில்லையா?
    அந்தச் சகிப்புத்தன்மை தானாக வரும். அதுதான் காலதேவனின் விளையாட்டு. அவருடைய விளையாட்டில் செகண்ட் இன்னிங்ஸ் எல்லாம் கிடையாது:-))))
    // குடும்ப பாரம் மற்றும் சூழ்நிலை கட்டாயத்தினால் சகிப்புத்தன்மை வரலாம். ஆனால் பரிகாரம் என்று ஒன்று இருக்க வேண்டுமே அய்யா? அல்லது பரிகாரமே இல்லை என்கிறீர்களா?

    ReplyDelete
  84. Aachi said...
    // //என்னுடைய ஜாதகத்தில் கேது இரண்டாம் வீட்டில், சனி நாலில், ராகு எட்டில். மீதி கிரகங்கள் வெளியே. இப்போது ராகு திசை.
    80% தோஷம், இல்லையா!?//
    சனி ஒருபக்கம் இருக்கிறது மற்றகிரகங்கள் ஒரு பக்கம் இருக்கின்றன. சனி கர்மகாரகன். அவனே வெளியே இருக்கிறான். அவன் யாருடைய நட்சத்திரத்தில் இருக்கிறான் என்று தெரியவில்லையே?//
    கேது = அஸ்தம்
    சனி = அனுஷம்
    ராகு = உத்திரட்டாதி
    போதுமா ஐயா?////

    முக்கியஸ்தர்களில் ஒருவர் வெளியே வந்துவிட்டார். உங்களுக்கு தோஷம் இல்லை!

    ReplyDelete
  85. /////அமர பாரதி said...
    அய்யா,
    //ஏன் முடியாது? கட்டிய கணவனைப் பிடிக்கவில்லை என்றாலும் ஒரு பெண் சகித்துக் கொண்டு குடும்பம் நடத்தவில்லையா?
    அந்தச் சகிப்புத்தன்மை தானாக வரும். அதுதான் காலதேவனின் விளையாட்டு. அவருடைய விளையாட்டில் செகண்ட் இன்னிங்ஸ் எல்லாம் கிடையாது:-))))
    குடும்ப பாரம் மற்றும் சூழ்நிலை கட்டாயத்தினால் சகிப்புத்தன்மை வரலாம். ஆனால் பரிகாரம் என்று ஒன்று இருக்க வேண்டுமே அய்யா? அல்லது பரிகாரமே இல்லை என்கிறீர்களா?/////

    பரிகாரம் என்று எதைச் சொல்கிறீர்கள்?
    கைக்காசைச் செலவு பண்ணிச் செய்வதைச் சொல்கிறீர்களா?
    அதெல்லாம் செல்லாது! எனக்குத் தெரிந்த பரிகாரம். இறைவழிபாடு ஒன்றுதான்.மனம் உருக வழிபடுங்கள். இறைவன் கருணை மிக்கவன். தன்னை நம்பியவர்களை அவன் ஒருபோதும் கை விடுவதில்லை!

    ReplyDelete
  86. //பரிகாரம் என்று எதைச் சொல்கிறீர்கள்?
    கைக்காசைச் செலவு பண்ணிச் செய்வதைச் சொல்கிறீர்களா?//

    இல்லை அய்யா. குறிப்பிட்ட அதி தேவதை வழிபாடு அல்லது குறிப்பிட்ட ரத்தினம் அணிவது அல்லது குறிப்பிட்ட மந்திரங்களைப் படிப்பது (உ.ம். அனுமன் சாலீசா - சனியின் கெடு பலன்களைக் குறைக்க) போன்றவைகளைக் கேட்டேன். நீங்கள் சொன்ன "செலவு செய்து செய்யும் பரிகாரங்களால் எந்த பயனுமில்லை" என்ற பாடம் நன்றாக மனதில் உள்ளது.

    ReplyDelete
  87. ////அமர பாரதி said...
    //பரிகாரம் என்று எதைச் சொல்கிறீர்கள்?
    கைக்காசைச் செலவு பண்ணிச் செய்வதைச் சொல்கிறீர்களா?//
    இல்லை அய்யா. குறிப்பிட்ட அதி தேவதை வழிபாடு அல்லது குறிப்பிட்ட ரத்தினம் அணிவது அல்லது குறிப்பிட்ட மந்திரங்களைப் படிப்பது (உ.ம். அனுமன் சாலீசா - சனியின் கெடு பலன்களைக் குறைக்க) போன்றவைகளைக் கேட்டேன். நீங்கள் சொன்ன "செலவு செய்து செய்யும் பரிகாரங்களால் எந்த பயனுமில்லை" என்ற பாடம் நன்றாக மனதில் உள்ளது.////

    இறைவன் ஒருவனே! அவனை எந்த வடிவத்தில் வேண்டுமென்றாலும் வழிபடுங்கள் (உங்களுக்குப் பிடித்த வடிவத்தில்)
    துதிப் பாடல்கள் வேண்டுமா?
    கோளறு திருப்பதிகம்
    விநாயகர் அகவல்
    கந்த சஷ்டிக் கவசம்
    இவையும் உங்கள் சாய்ஸிற்கே!

    ReplyDelete
  88. //முக்கியஸ்தர்களில் ஒருவர் வெளியே வந்துவிட்டார். உங்களுக்கு தோஷம் இல்லை!//


    //உள்ளே மாட்டிக் கொண்ட அந்த ஐந்து கிரகங்களைப் பொறுத்தது அது.
    அவைகள், சூரியன், சந்திரன், சுக்கிரன், குரு, சனி போன்ற முக்கியமான
    கிரகங்களாக இருந்தால் 80% தோஷம் உண்டு!//

    உள்ளே தானே சனி இருகாரு, அப்போ எப்டி ஐயா தோஷம் இல்லைனு சொல்றீங்க?

    யாருடைய நட்சத்திரத்தில் சனி இருக்கின்றார் என பார்த்தா?

    Next question:
    ராகு கேதுக்குள் ஒரு கிரகம் அகப்பட்டால் அதன் பார்வை மற்ற கிரகங்கள் மேலே படாதுனு ஒரு ஜோதிடர் கூ‌றினார், இது சரியா?

    ReplyDelete
  89. ////Aachi said...
    //முக்கியஸ்தர்களில் ஒருவர் வெளியே வந்துவிட்டார். உங்களுக்கு தோஷம் இல்லை!//
    //உள்ளே மாட்டிக் கொண்ட அந்த ஐந்து கிரகங்களைப் பொறுத்தது அது.
    அவைகள், சூரியன், சந்திரன், சுக்கிரன், குரு, சனி போன்ற முக்கியமான
    கிரகங்களாக இருந்தால் 80% தோஷம் உண்டு!//
    உள்ளே தானே சனி இருகாரு, அப்போ எப்டி ஐயா தோஷம் இல்லைனு சொல்றீங்க?
    யாருடைய நட்சத்திரத்தில் சனி இருக்கின்றார் என பார்த்தா?/////

    சரி உங்கள் வழிக்கே வருகிறேன். சனி ஒருவர் உள்ளே இருக்கிறார். மற்ற ஆறு பேர்கள் வெளியே இருக்கிறார்கள்.
    அதனால் இல்லை! Okay யா?
    ------------------------------------------------

    Next question:
    ராகு கேதுக்குள் ஒரு கிரகம் அகப்பட்டால் அதன் பார்வை மற்ற கிரகங்கள் மேலே படாதுனு ஒரு ஜோதிடர் கூ‌றினார், இது சரியா?////

    எப்படிப் படாது? சனிக்கு 3ஆம் பார்வை உண்டு, செவ்வாய்க்கு நான்காம் பார்வை உண்டு. அந்த ஏழு கட்டங்களில் முதல் இரண்டு கட்டங்களில் அவைகள் இருந்து, அடுத்துள்ள கட்டங்களில் (5,6.7ல்) உள்ள கிரகங்களை அவைகள் பார்க்கும் அல்லவா?
    நீங்கள் புதிதாக வந்துள்ளீர்கள். முதலில் இதுவரை வந்துள்ள 110 பாடங்களையும் ஒவ்வொன்றாகப் படியுங்கள் (அம்மாடியோவ் 110 பாடங்களா என்று கேட்காதீர்கள்)

    ReplyDelete
  90. This comment has been removed by the author.

    ReplyDelete
  91. இப்போ புரிந்துடுச்சு :)
    நீங்கள் சனி இருக்கும் நட்சத்திரத்தை கேட்டவுடன் குழம்பிட்டேன்..

    ReplyDelete
  92. //////Aachi said...
    இப்போ புரிந்துடுச்சு :)
    நீங்கள் சனி இருக்கும் நட்சத்திரத்தை கேட்டவுடன் குழம்பிட்டேன்..////

    எனக்குப் பதிவு எழுதி வலையில் பதியும் நேரத்தைவிட, பின்னூட்டத்திற்குப் பதில் சொல்வதற்கு அதிக நேரம் பிடிக்கிறது.
    ஆனாலும் அதை மகிழ்ச்சியுடன் செய்கிறேன். காரணம் பதிவில் எழுதியது அனைத்துத் தரப்பினரையும் சென்றடைய வேண்டும்
    இப்போது புதிய மாணவியான நீங்கள் புரிந்துவிட்டது என்று சொன்னவுடன் என் மனதில் ஒரு நிம்மதி ஏற்படும் பாருங்கள்
    அது அதி முக்கியமானது. அடுத்த பதிவை எழுதவைப்பது அந்த மனநிலைதான்!

    ReplyDelete
  93. ////சந்தோஷம்! படத்திற்கு என்னிடம் விளக்கம் கேட்காமல் நீங்களே தெரிந்துகொண்டிருந்தால், இன்னும் அதிகமாக சந்தோஷப் பட்டிருப்பேன்!:-))))////

    Sir, I really thought the same but being food technologist, juz curious to know what exactly you mean....Sorry to bother u by asking silly questions in comments, I totally understand ur precious time.

    -Shankar

    ReplyDelete
  94. ஐயா அஷ்டவர்க்கப் பரல்களை எப்படி கணக்கிடுவது ?

    ReplyDelete
  95. /////hotcat said...
    ////சந்தோஷம்! படத்திற்கு என்னிடம் விளக்கம் கேட்காமல் நீங்களே தெரிந்துகொண்டிருந்தால், இன்னும் அதிகமாக சந்தோஷப் பட்டிருப்பேன்!:-))))////

    Sir, I really thought the same but being food technologist, juz curious to know what exactly you mean....Sorry to bother u by asking silly questions in comments, I totally understand ur precious time.
    -Shankar//////

    It is not like that! I am not bothered about the time.That is one of the reason for writing in blogs:-)))

    ReplyDelete
  96. ////Arasu said...
    ஐயா அஷ்டவர்க்கப் பரல்களை எப்படி கணக்கிடுவது ?/////

    எதற்காக கையால் எழுதிக் கணக்கிட வேண்டும்? இரண்டு மணி நேரம் ஆகும்! பரவாயில்லையா?
    சுலபமான வழி இருக்கிறது. சைடு பாரில் ஜகந்நாத ஹோரா' என்னும் மென்பொருள் இருக்கிறது. உங்கள் பிறப்பு விபரத்தை
    அதில் உள்ளிடுங்கள். ஒரு நொடியில் அது கணக்கிட்டுக் கொடுத்துவிடும்!

    ReplyDelete
  97. ////Arasu said...
    ஐயா அஷ்டவர்க்கப் பரல்களை எப்படி கணக்கிடுவது ?/////

    எதற்காக கையால் எழுதிக் கணக்கிட வேண்டும்? இரண்டு மணி நேரம் ஆகும்! பரவாயில்லையா?
    சுலபமான வழி இருக்கிறது. சைடு பாரில் ஜகந்நாத ஹோரா' என்னும் மென்பொருள் இருக்கிறது. உங்கள் பிறப்பு விபரத்தை
    அதில் உள்ளிடுங்கள். ஒரு நொடியில் அது கணக்கிட்டுக் கொடுத்துவிடும்!/////

    தங்கள் விளக்கத்திற்கு மிகவும் நன்றி ஐயா.

    ReplyDelete
  98. //ராகு அல்லது கேது தாங்கள் இருக்கும் வீட்டில் அமரும் கிரகத்துடன்
    கூட்டணி போட்டுப் பலன்களைக் கொடுப்பார்கள். அதனால் அவர்களுடன்
    சேரும் கிரகம் தீயதாக இருந்தால் தீயபலன்கள் இரட்டிப்பாகும்.
    நல்ல கிரகமாக இருந்தால் - உதாரணத்திரற்குக் குருவாக இருந்தால்
    ராகுவும் அவருடன் சேர்ந்து நல்ல பலன்களை வழங்க ஆரம்பித்து
    விடுவார். அதற்கு ஒரு ஸ்டைலான பெயரும் உண்டு. அதாவது ராகுவும்
    குருவும் சேர்ந்தால் அதற்குச் "சண்டாளயோகம்" என்று பெயர்!// Dear Sir,
    I'm a new student to your class room and i have doubt on this subject. My lagna is kanni and the second house is raagu. The next 5 houses are empty and at the 8th house kethu and Guru are there.Does it come under "sandala yogam"? Ketu is placed at 18 40 deg and Jupiter is at 22 27 in the 8th house. That means Guru's position is not so effective as both are within 5degrees?
    //ராகுவில் ஆரம்பித்துக் கேதுவில் முடியும் நிலைக்கு சவ்ய காலசர்ப்ப தோஷம்
    என்றும், கேதுவில் ஆரம்பித்து ராகுவில் முடியும் நிலைக்கு அபசவ்ய
    காலசர்ப்ப தோஷம் என்றும் பெயர்கள் உண்டு. பலன்களும் மாறுபடும்.// Mine starts from ketu at 8th house and finishes with Raagu at the second house.So which half will be the testing period? The example u have given (Thiru.Ilaya raja)also shows the dosham starts with ketu and finishes with ragu but he suffered during the first half. Kindly help me to clear my doubts. Sorry for typing in english and for taking your valuable time also

    ReplyDelete
  99. /////அட்சயா said...
    //ராகு அல்லது கேது தாங்கள் இருக்கும் வீட்டில் அமரும் கிரகத்துடன்
    கூட்டணி போட்டுப் பலன்களைக் கொடுப்பார்கள். அதனால் அவர்களுடன்
    சேரும் கிரகம் தீயதாக இருந்தால் தீயபலன்கள் இரட்டிப்பாகும்.
    நல்ல கிரகமாக இருந்தால் - உதாரணத்திரற்குக் குருவாக இருந்தால்
    ராகுவும் அவருடன் சேர்ந்து நல்ல பலன்களை வழங்க ஆரம்பித்து
    விடுவார். அதற்கு ஒரு ஸ்டைலான பெயரும் உண்டு. அதாவது ராகுவும்
    குருவும் சேர்ந்தால் அதற்குச் "சண்டாளயோகம்" என்று பெயர்!// Dear Sir,
    I'm a new student to your class room and i have doubt on this subject. My lagna is kanni and the second house is raagu. The next 5 houses are empty and at the 8th house kethu and Guru are there.Does it come under "sandala yogam"? Ketu is placed at 18 40 deg and Jupiter is at 22 27 in the 8th house. That means Guru's position is not so effective as both are within 5degrees?/////

    ஆமாம் குரு அஸ்தமனமாகிவிட்டார் (combust). வலுவாக இல்லை!


    //ராகுவில் ஆரம்பித்துக் கேதுவில் முடியும் நிலைக்கு சவ்ய காலசர்ப்ப தோஷம்
    என்றும், கேதுவில் ஆரம்பித்து ராகுவில் முடியும் நிலைக்கு அபசவ்ய
    காலசர்ப்ப தோஷம் என்றும் பெயர்கள் உண்டு. பலன்களும் மாறுபடும்.// Mine starts from ketu at 8th house and finishes with Raagu at the second house.So which half will be the testing period? The example u have given (Thiru.Ilaya raja)also shows the dosham starts with ketu and finishes with ragu but he suffered during the first half. Kindly help me to clear my doubts. Sorry for typing in english and for taking your valuable time also////

    கடிகாரச்சுற்றுதான் கணக்கு! உங்களுக்கு கேதுவில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. 90% அனைவருக்கும் 30 வயதிற்குள்ளாகவே கா.ச.தோ. நடைபெற்றுவிடும்

    ReplyDelete
  100. Thanks a lot for clearing my doubts. I have published my comments 11.00 pm singapore time and this morning when i open, i can see the answers!!. Once again thanks a lot and i'll come back again and again to clear my doubts.

    Arun

    ReplyDelete
  101. Hello Sir

    Very good explanation..Actually I have 28 parals in my Astagavarga lagna chart...My marriage has happened exactly at the age of 28.I have kala sarpa dosha in my horo..Before marriage ,I was finding difficult to find a good job and all kinds of troubles in my life..But once the kala sarpa dosha is over at the age of 28, I got a chance to do my MBA at Europe and I am doing well in my career now..So you astagavarga calculaion is accurate in my case.Thanks a lot...

    ReplyDelete
  102. /////அட்சயா said...
    Thanks a lot for clearing my doubts. I have published my comments 11.00 pm singapore time and this morning when i open, i can see the answers!!. Once again thanks a lot and i'll come back again and again to clear my doubts.
    Arun/////

    You can come any number of times to clear your doubts Mr.Arun!

    ReplyDelete
  103. /////Ragu Sivanmalai said...Hello Sir
    Very good explanation..Actually I have 28 parals in my Astagavarga lagna chart...My marriage has happened exactly at the age of 28.I have kala sarpa dosha in my horo..Before marriage ,I was finding difficult to find a good job and all kinds of troubles in my life..But once the kala sarpa dosha is over at the age of 28, I got a chance to do my MBA at Europe and I am doing well in my career now..So you astagavarga calculaion is accurate in my case.Thanks a lot...////

    Thanks for sharing your experience Mr.Ragu Sivanmalai! (Are you hailing from Kangeyam ?)

    ReplyDelete
  104. //Thanks for sharing your experience Mr.Ragu Sivanmalai! (Are you hailing from Kangeyam ?)///

    You guessed it closer...I am from Karur which is near to Kangayam...

    ReplyDelete
  105. ////Ragu Sivanmalai said...
    //Thanks for sharing your experience Mr.Ragu Sivanmalai! (Are you hailing from Kangeyam ?)///
    You guessed it closer...I am from Karur which is near to Kangayam...///

    சிவன்மலை காங்கேயத்திற்கு அருகில் உள்ளது. நான் ஒரு உத்தேசமாகக் கேட்டேன்

    ReplyDelete
  106. This comment has been removed by the author.

    ReplyDelete
  107. i'm lucky from paris

    ella kiragamum ketu to ragu irukku but, guru maddum out la irukku ithu k.s.d ?


    guru in 7th position, natchathiram (ardr)
    ketu in 8th
    ragu in 2nd

    ReplyDelete
  108. Ayya,
    i am ur student
    for me
    Lagnam in simmam
    sukra in simmam
    2nd place - guru, suriyan, sani
    3rd place - pudhan
    4th place - chevvai
    6th place - kethu
    12th place - rahu, mandhi, chandran
    at present - pudhan thisai - guru puthi is running
    DOB : 02.10.1980

    kindly pls tell, when the Kala sarp yoga will finish

    Thanks

    Senthil

    ReplyDelete
  109. வாத்தியார் ஐயா!

    தாங்கள் இங்கு கூறி உள்ளீர்கள்.
    பரல்களின் கணக்கு அல்லது 33 வயது வரைதான் என்று,

    சென்னையில் உள்ள "பிரலங்கா தேவி", கோவிலில் மிகப்பெரிய அளவில் சுவரில் எழுதியும் போட்டு உள்ளார்கள் .

    கால சர்ப்ப தோஷத்தில் பிறந்தவர்கள் முப்பத்தி மூன்று வயது வரை கஷ்ட நஷ்டத்தை அனுபவித்து தான் ஆக வேண்டும் என்று.

    தங்களுடைய வகுப்பிற்கு வருவதற்கு முன்னர் நிறைய ஜோதிட வித்வான்கள்
    நேரில் கூறியதை கேட்டும் மற்றும் புஸ்தகத்தில் படித்தும் உள்ளேன்.

    எது எப்படியோ முட்டி மோதி , கண்ணிற் விட்டு கதறி , போகாத இடர்திர்க்கு எல்லாம் போகி, வணங்காத தெய்வத்தை எல்லாம் வணங்கி கால சர்ப்பம் என்னும்
    " நீச பங்க ராஜ யோக காலத்தை ", எம்பெருமான் திரு செந்தூர் முருகனின் அருளால் ", வரும் சித்திரையுடன் கடக்கவும் உள்ளேன்.

    பின்னர் வரும் வாழ்க்கை எப்படி என்பதனை பார்க்கவும் உள்ளேன் ஐயா.

    --

    ReplyDelete
  110. Sir,

    I am new to your website. wonderfull articals.. i have one doubt. i saw one horoscope ragu and ketu are in same box is it possible?

    ReplyDelete
  111. Sir, VANAKKAM.
    in my horoscope in Lagnam chandran is there, 2nd place ketu, 3/4/5/6/7 are empty 8th house rahu and sukran are there 9th house guru 10th house sun, mercury and saturn, 11th house mars and 12th house maandhi. Can u please tell i have kala sarpa dosha d.o.b. 18/9/1980. Iam 36 years old, struggling everytime to get a job, no peace. Kala sarpa yoga will come for me. Pl. Suggest me a way. Thanks.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com