மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

3.8.07

34. கால சர்ப்ப தோஷத்தின் பலன்கள்

34. கால சர்ப்ப தோஷத்தின் பலன்கள்

சென்ற வகுப்பில் நடத்திய பாடத்தின் தொடர்ச்சி

ஒருவருடைய ஜாதகத்தில் ராகு மற்றும் கேது அமர்ந்
திருக்கும் இடத்தை வைத்துத்தான் கால சர்ப்ப தோஷத்தின்

பலன்கள் உண்டாகும். சுப கிரகங்களின் வீடுகளில் ராகு
அல்லது கேது அமர்ந்திருந்தால் சுபமான பலன்களே

உண்டாகும்.

உதாரணத்திற்குக் குருவினுடைய வீடுகளான தனுசு
மற்றும் மீனம், அதேபோல சுக்கிரனின் வீடுகளான ரிஷபம்

மற்றும் துலாம், சந்திரனுடைய வீடான கடகம் ஆகிய
இடங்களில் அந்த இரண்டு கிரகங்களில் ஒன்று அமையப்

பெற்றிருந்தால் அந்தக் கிரகம் நன்மையைச் செய்யும்

அசுபர்கள் (Melific Planets) வீடுகளில் அமரும் போது தீய
பலன்களே உண்டாகும்.


பல அரசியல் தலைவர்களின் ஜாதகங்களில் கால சர்ப்ப
தோஷம் அமையப்பெற்றிருந்ததினால் அவர்களுடைய

இளம் வயதில் பசி, பட்டினி, அடி, உதை, சிறைச்சாலை
என்று அந்த வயது வாழ்க்கை அவதி நிறைந்ததாக

இருந்திருக்கிறது. உதாரணத்திற்கு ஜவஹர்லால் நேரு
அவர்களின் வாழ்க்கையைச் சொல்லலாம்.


அதுபோல கால சர்ப்ப தோஷ காலம் முடிந்து நல்ல
காலம் ஆரம்பித்த பிறகு மாபெரும் தொழில்

அதிபர்களாகவும், கோடீஸ்வரர்களாகவும் மாறியவர்கள்
பலர் உண்டு.


ராகு மற்றும் கேதுவின் பிடிக்குள் சிக்கிக் கொண்ட கிரகம்
ஆட்சி மற்றும் உச்சம் பெற்றிருந்தாலும்

பலவீனமாகத்தான் இருக்கும்.

கால சர்ப்ப தோஷம் உள்ள ஜாதகனுக்கு, ராகு அல்லது
கேது திசை வந்தால், அந்தத் திசையில் நற்பலன்கள்

உண்டாகும். அதேபோல அத்திசை நிறைவுறும்போது
மரணத்தையும் கொடுத்துவிடும். ஆனால் துன்பத்தையும்,
பல
சோதனைகளையும் கொடுக்கும் ராகு அல்லது கேது
திசை மரணத்தைக் கொடுப்பதில்லை


இத்தோஷம் உள்ளவர்கள் தங்கள் சொந்த முயற்சியால்
தான் சாதனைகள் செய்வார்கள்.பெற்றோர் உதவியால்

பெரிதாக பலன்கள் எதுவும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை.

1. லக்கினத்தில் ராகு, ஏழில் கேது இருக்கக் காலசர்ப்ப
தோஷமும் உள்ள ஜாதகனுக்குத் தாமதமாகத் திருமணம்


நடைபெறும். திருமணம் ஆனாலும் இல்வாழ்வு சிறக்க
ஒருமித்த கருத்துடைய மனைவி கிடைக்க மட்டாள்.

போராட்டமான இல்வாழ்வுதான்.

2. 2ல் ராகு, 8ல் கேது இருக்கக் காலசர்ப்ப தோஷமும்
உள்ள ஜாதகன், அந்நிய தேசங்களில்தான் வாசம்

செய்வான்.

3. 3ல் ராகு, 9ல் கேது இருக்கக் காலசர்ப்ப தோஷமும்
உள்ள ஜாதகனனுக்குச் சகோதரர்களுடன் நல்ல

உறவு ஏற்படாது. அவனுடைய தந்தைக்கும் அவனால் கெடுதி.

4. 4ல் ராகு, 10ல் கேது இருக்கக் காலசர்ப்ப தோஷமும்
உள்ள ஜாதகர்களுக்குக் கல்வி பெறுவதில் பல தடைகள்

ஏற்படும். ஆனால் தத்தித் தத்திப் படித்துப் பின்னாளில் உயர்
கல்வி பெற்றுவிடுவார்கள். ஆனால் ராகு இருக்கும்

இடம் சுப கிரகத்தின் வீடாக இருந்தால் பெரிய மருத்துவ
நிபுணராக, அறுவை சிகிச்சை நிபுணராக திகழும்படி

ஏற்றம் கிடைத்துவிடும்.

5. 5ல் ராகு, 11ல் கேது இருக்கக் காலசர்ப்ப தோஷமும்
உள்ள ஜாதகனுக்குக் கடுமையான புத்திர தோஷம்

உண்டாகும். பெற்ற பிள்ளைகளால் பெரிய சோதனைகளும்
இழப்புக்களும் ஏற்படும்.


6. 6ல் ராகு, 12ல் கேது இருக்கக் காலசர்ப்ப தோஷமும்
உள்ள ஜாதகனுக்கு, சிறைவாசம், உடல் நலமின்மை

யாவும் ஏற்படும். (ஜவஹர்லால் நேரு அவர்களின் ஜாதகத்
தில் இந்த அமைப்பு இருந்தது - அவருடைய இளவயது

வாழ்க்கை அனைவருக்கும் தெரிந்ததுதானே!)

காலசர்ப்ப தோஷத்திற்குப் பரிகாரம் உண்டா?

உண்டு!

சிவனை வழிபடுதல் ஒன்றுதான் பரிகாரமாகும்.

ஸ்ரீஹாளஹஸ்தி, இராமேஸ்வரம் போன்ற ஸ்தலங்கள்
அதற்குரியனவாகும். அங்கே அடிக்கடி செல்ல

முடியாதவர்கள் உள்ளூரில் உள்ள சிவாலங்களுக்குச்
சென்று சிவனை வழிபட்டு வரலாம். வாரம் ஒருமுறை

சென்று வழிபடலாம். அல்லது 27 நாட்களுக்கு ஒருமுறை
தனது ஜென்ம நட்சத்திர தினத்தன்று வழிபட்டு வரலாம்.


சரி, வெளி மாநிலங்களில் அல்லது வெளி நாடுகளில்
வசிக்கும் அன்பர்கள் என்ன செய்யலாம்?


"நமச்சிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க!"
என்று துவங்கும் திருவாசகப் பதிகத்தை மனமுருகப்
படித்துப் பயன் பெறலாம்.


(தொடரும்)

பின் குறிப்பு: எனது சொந்த அலுவல்கள் காரணமாக
நீண்ட இடைவெளி ஏற்பட்டுவிட்டது. அன்பர்கள்

மன்னிக்கவும்!


---------------------------------------------------------------------