மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.3.07

எம்.ஜி.ஆரின் ஜாதகம்!

=================================================
ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21
தசா புக்திகள்

(இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு
முன் பதிவையும் படிக்க வேண்டும்!)

தசாபுத்தி என்றால் என்ன?

ஒவ்வொரு கிரகத்திற்கும் தசாபுக்திகள் (Own Periods)
உண்டு. ஒவ்வொரு கிரகமும் அதனுடைய தசாபுக்தி
நடக்கும்போதுதான் பலனைக் கொடுக்கும்.
(Awarding the benefits to the native of the horoscope)
என்று முன் பதிவில் எழுதியிருந்தேன்.

தசா புக்திகளைபபற்றி ம்ட்டும் இப்போது
பார்ப்போம். ஒவ்வொரு த்சாவிற்கும் (Major Periods)
புக்திக்கும் (Sub-periods) உள்ள பலன்களை அடுத்த
பதிவில் பார்ப்போம்.

எல்லோரும் 27 நட்சத்திரங்களுக்குள் ஒன்றில்தான்
பிறந்திருப்போம்.

ஒவ்வொருவருக்கும் தான் பிறந்த நட்சத்திரம் எது?
அதன் அதிபதி(Owner) யார்? என்பது தெரிந்திருக்க
வேண்டும். .

(கற்றுக் கொள்வதற்கும், நினைவில் வைத்துக்
கொள்வதற்கும் ஒரு குறுக்கு வழி இருக்கிறது
அதைத்தான் இப்போது சொல்லித்தரப் போகிறேன்)
27 நட்சத்திரங்களில் முதலில் உள்ள ஒன்பது
நட்சத்திரங்களை மட்டும் வரிசையாக எழுதுங்கள்.
எழுதிய பிறகு அடுத்துள்ள 18ல் 9 நட்சத்திரத்தில்
முதலில் எழுதிய ஒன்பது நட்சத்திரங்களுக்கு
பக்கத்திலேயே எழுதிக் கொண்டு வந்து அதற்கு
அடுதத ஒன்பதையும் அதே வரிசையில் தொடர்ந்து
கீழ்க் கணட மாதிரி எழுதிக் கொள்ளூங்கள்.
என்ன எழுதிக் கொண்டீர்களா?
எழுதியது இப்படித்தான் இருக்கும்

அதோடு முதல் வரிசையில் உள்ள நட்சத்திரங்களுக்கு
அதிபதி கேது என்று துவங்கி, ஒவ்வொரு வரிசையிலும்
உள்ள நட்சத்திரங்களுக்கும் அதிபதி யார் யாரென்று
அதே அட்டவணையில் குறிப்பிட்டுள்ளேன்.
=============================================
Table showing the 27 Stars and their owners
=======================================================
Tables showing the Major Periods (தசா) and Sub-Periods (புக்தி)






===================================================
இது மிக மிக முக்கியமான பாடம். ஆக்வே சோமபலை
விடுத்து இதை மனனம் செய்து மனதில் ஏற்றிவைப்பது
அவசியம்! (உங்களுக்கு சோம்பல் இருக்காது

என்று தெரியும். இருந்தாலும் அந்த டில்லிவாலாவிற்காக
இதை எழுதுகிறேன்:-))
இந்த அட்டவனையின் உபயோகம் என்னவென்றால்
ஒருவர் தன்னுடைய பிறந்த நட்சத்திரத்தைச் சொல்லி
யவுடன், அவருடைய நட்சத்திரத்திற்கு அதிபதி யாரோ
அந்த அதிபதியின் தசாதான் அந்த ஜாதகரின் துவக்கதசா.
அதைத் தொடர்ந்து இந்த அட்டவணையில்
குறிப்பிட்டுள்ள படியே அடுத்தடுத்த தசாக்களும்
அவருக்கு வரும்.

அனைவருக்கும் இது அறுதியானது. நிச்சய்மானது!
இதில் மாற்றம் ஏதும் 100% இருக்காது. இதன்படியேதான்
தசாக்கள் வரும். அந்தந்த தசாக்களின் படியேதான் பலன்களும்
(நல்லதோ அல்லது தீயதோ) கிடைக்கும் அல்லது நடக்கும்!
---------------------------------------------------------------------------------
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு துவக்க தசா
சந்திரனுடைய தசாதான். அதுபோல மகம் நட்சத்திரத்தில்
பிறந்தவர்களுக்குக் கேது தசாதான் துவக்க தசா!
----------------------------------------------------------------------------------------
த்சா சரி, புக்தி என்றால் என்ன?

ஒரு கிரகத்தின் தசாவின் உட்பிரிவுதான் புக்தி!

உதாரணத்திற்கு ராகு தசாவின் காலம் 18 வருடங்கள்
அந்த 18 வருடங்களுமே ராகுவின் முழுக்கட்டுப்பாட்டில்
இருந்தால் என்னா ஆகும்? மனிதனை வாட்டிப் பிழிந்து
விடாதா?

அத்னால் அந்த ராகுவின் தசாவே 9 பிரிவுகளாகப் பிரிக்கப்
பெற்று ஒரு ஒழுங்கு முறையில் மற்ற கிரகங்களூக்கும்
உட்பிரிவாக வழங்கப் பெற்றிருக்கிறது

உட்பிரிவையும் அதற்குரிய மாதங்கள், நாட்களையும்
அட்டவனையில் கொடுத்துள்ளேன்.பார்க்க வேண்டுகிறேன்

சனி தசா 19 வருடம், ராகு தசா 18 வருடம், கேது த்சா
7 வருடம் மனிதனகப் பிறந்தவன் இந்த் தீய கிரகங்களின்
தசைகளில் ஒன்றிலாவது நுழைந்து, அடிபட்டு வெளியே
வந்துதான் ஆகவேண்டும்.

ராகு தசை உள்ளவனுக்கு கேது தசை வாரது. ஆனால்
அவனுடைய ஒவ்வொரு தசையிலுமே கேது புக்தி
நிச்சயம் வரும்

அதுபோல சூரிய தசையில் பிறந்தவனுக்கு சுக்கிர தசை
வராது. ஆனால் அவனுடைய ஒவ்வொரு தசையிலும்
சுக்கிர புக்தி கண்டிப்பாக வரும்.

எல்லாருக்குமே நன்மைகளும் தீமைகளும், தசைகளும்
புக்திகளும் பாகுபாடின்றி சம்மாகவே வழ்ங்கப்பட்டுள்ளன
என்பதற்கு இந்த தசா பலன்களே ஒரு ந்ல்ல உதாரணம்

ஒரேயடியாக அடிபடாமல், நடுவில் அடிபட்ட இடங்களுக்கு
ஒத்தடம் கொடுத்துக் கொள்ளவும், உடம்பைத்தேற்றிக் கொண்டு
மீண்டும் அடிவாங்கவும் வசதியாக வருபவைதான் மற்ற
புக்திகள். ராகு தசை கேது புக்தியில் அடிவாங்கியவன்
ராகுதசை சுக்கிரபுக்தியில் உடம்பைத் தேற்றிக் கொள்வான்
அதற்கடுத்துவரும் ராகு தசை சூரிய புக்தி மறுபடியும்
சுழற்றி அடிக்க ஆரம்பித்துவிடும். ராகுவுடன் சூரியனும்
சேர்ந்து கொண்டு சாத்தும்! :-))).

பிறகு அடுத்து வரும் ராகு சந்திர தசையில் அப்பாடா என்று
மூச்சு விடுவான். நிம்மதியாக் இரண்டு வேளை உணவாவது
வீட்டில் உட்கார்ந்து சாப்பிடுவான். மறுபடியும் ராகு தசை
செவ்வாய் புக்தி அவனை ஓட் ஓட் விரட்டும்

அவனுடைய துன்பங்களுக்கு ஒரு முடிவு ஏற்பட்டு ,அதற்கு
அடுத்த தசையான் குரு த்சையில் அவன் காலெடி எடுத்து
வைப்பான் . அன்றிலிருந்து விடிவுகாலம் ஆரம்பிக்கும்


இதுபோல நல்ல தசையிலும் நல்லது இரண்டு மடங்காக
நடக்கும். குரு தசையில் புதன் புக்தி, குரு தசையில் சுக்கிர
புக்தி, குரு தசையில் சந்திர புக்தியெல்லாம் நன்மைகளை
வாரி வழ்ங்கிவிட்டுப் போய்விடும்

ஹீரோ ஹோண்டா மோட்டார் சைக்கிளில் போய்க்
கொண்டிருந்த்வன் ஹோண்டா சிட்டி ஏ.ஸி காரில்
போக ஆரம்பித்து விடுவான். கும்பகோணத்தில்

ஓட்டு வீட்டில் குடியிருந்தவன், மும்பை நாரிமன்
பாயிண்ட் பகுதியில் சொந்த பிளாட்டிற்கு குடி
போய்விடுவான்.
காயல் பட்டிணத்தில் பட்கோட்டிக் கொண்டிருந்தவன்
கோயம்புத்தூரில் ஐம்பது லாரிகளுக்குச் சொந்தக்
காரனாகிவிடுவான்.

இது போன்று பள்ளத்தில் விழுந்து கிடப்பதும்

அல்லது மேட்டில் (ஊட்டியில்) தோட்டம் துறவுகள்
வாங்குவது போன்ற மாற்றங்களேல்லாம் தசா
புக்திகளின் மாற்றங்களால்தான்
சனியை விட ராகு கடுமையான் கிரகம்
(Merciless Planet) என்பார்கள். ஆனாலும் ஜாதகத்தில்
ராகு உச்சமாகவோ அல்லது லக்கின அதிபதியுடன்
அதுவும் அது அதனுடைய நட்புக்கிரகமாக இருந்து
நல்ல நிலையில் இருந்தாலோ எதிர்மாறாக
மிகவும் அற்புதமான நல்ல பலன்களைக் கொடுக்கும்.
இது போன்ற விதிவிலக்குகளும் உண்டு

சிவாஜி கணேசன் அவர்களுக்கு அந்த மாதியான்
அற்புதமான பலனை ராகுதான் தந்தது.

அவருடைய முதல் படமான பராசக்தியில் துவங்கி

தொடர்ந்து வீயட்நாம் வீடு என்னும் படம் வரை
சுமார் 18 ஆண்டுகள் அவர் நடித்த படங்கள்
அனைத்தும் சிறப்பாக அமைந்து சக்கைபோடு
போட்டு அவருக்கு அழியாப் புகழ் சேரக் காரணமாக

இருந்தது அவருடைய ஜாதகப்ப்டி இந்த ராகுதான்.
அதனுடைய தசை நடந்த காலகட்டத்தில் அவ்வாறு
நடந்தது.

பராசக்தி - 1952ம் வருடம்
வீயட்நாம் வீடு - 1970ம் வருடம்

இந்த இடைப்பட்ட 18 வருட காலத்தில் வெளிவந்த
அவருடைய படங்கள் அனனத்துமே அவருக்குப்
பெரும் புகழையும், செல்வத்தையும் வாரிக் கொடுத்தன!ஒரு தசா நாதன் ஜாதகத்தில் வலுவாக இருக்கும்போது
அவனுடைய தசையில் எல்லாமே வெற்றியாக இருக்கும்
புத்தி நாதர்களின் குறுக்கீட்டையும் முறியடுத்து அந்த
வெற்றியை அவன் கொடுப்பான். அதற்கு திரு.சிவாஜி
அவர்களின் ஜாதக்மே உதாரணம். ஆனால் அதற்குப் பிற்கு
வந்த த்சைகளில் அவர் பெரும் வெற்றி எதையும்
பெற்வில்லை. அரசியலில் நுழைந்தும் அவரால் சோபிக்க
முடியவில்லை

அதேபோல் ஒரு தீய கிரகத்தின் தசை நடக்கும்போது
ஜாதகனுடைய ஜாதகத்தில் புக்தி நாதருடைய கிரகங்கள்
வலுவாக இல்லாவிட்டால், அந்த தசை மொத்தமும்
ஜாதகனை அடித்துத் துவைத்துப் பிழிந்து காயப்போட்டு
விட்டுப் போய்விடும்.

ஒரு பெரிய மல்ட்டி மில்லியனர், ஒரு தசையில்
அவருடைய செல்வம் பத்து மடங்காகப் பெருகியது.
ஆனால் அடுத்த தசையின் துவக்கத்திலேயே அந்த
தசைக்குரிய கிரகம் அவருக்கு வாத நோயை
உண்டாக்கி படுத்த படுக்கையாக வீட்டில் உட்கார
வைத்துவிட்டது! (யாரென்று சொல்லவில்லை.
முடிந்த்வர்கள் ஊகம் செய்து கொள்ளுங்கள்)

எந்த தசையாக அல்லது புத்தியாக இருந்தாலும் சரி
நல்லது கெட்டது மாறி மாறி வரும் அமைப்புத்தான்
நல்லது. அதுதான் நம்க்கு வேண்டும்!

கர்ப்பச்செல் இருப்பு என்றால் என்ன?

ஒரு குழந்தை திருவோண நட்சத்திரம் நான்காம்
பாதத்தில் பிறக்கிறது என்று வைத்துக் கொள்வோம்

முதல் மூன்று பாதம் அந்தக் குழந்தைக்கு, அதன் தாயின்
கர்ப்பப்பையிலே கழித்துவிட்டபடியால் அந்தக் கழிவிற்குரிய
தசாபலன் கணக்கில் வராது. பிறந்தவுடன் மீதமுள்ள
நட்சத்திர தசா பலன்களதான் அந்தக் குழந்தையின்
பிறப்புக் கணக்கில் வரும்

திருவோண நட்சத்திரத்தின் அதிபதியான் சந்திரனுக்குரிய
பத்து வருட சந்திரதசைதான் அந்தக் குழந்தையின் துவக்க
தசை.

அதில் கர்ப்பதில் இருந்த பகுதிக்கான் பகுதியைக் கழித்து
விட்டால் ( 10 வருடம் கழித்தல் 4ல் 3 பங்கு = 10.00 - 7.5 = 2.5 வருடம்)
அதாவது 2 வருடம் 6 மாதம் தான் அந்த்க் குழந்தையின் இருப்பு
தசை . அதுதான் கர்ப்பச்செல் இருப்பு எனப்படும்

இது போன்று ஒவ்வொரு பிறப்பிற்கும் கணக்கிடப் ப்ட்டு
ஜாதகத்தில் குறிக்கப்பட்டிருக்கும்
-------------------------------------------------------------------------------------

சரி, பிறப்பிலிருந்து நம்து நடப்பு திசையை எப்படிக் கணக்கிடுவது?

சுலபமான வழி கண்ணியில் கணித்து விடலாம்

சூப்பராக இருக்கும்!

அதற்கான் விவரங்களை என் முன் பதிவில் கொடுத்துள்ளேன்

இருந்தாலும் இன்னுமொருமுறை தருகிறேன்

அந்த இணையதள முகவரி இதுதான்
அதில் உங்களூடைய Birth Details ஐக் கொடுத்து விட்டால் போதும்
உங்களூடைய ஜாதகம், கெர்ப்பச்செல் இருப்பு, Major Period & Sub - Periods
எல்லாம் ஒரே வினாடியில் கிடைத்துவிடும். பிரிண்ட் எடுத்து
சட்டைப் பையில் வைத்துக் கொள்ளுங்கள். இனி அடிக்கடி
அது உங்களுக்குத் தேவைப்படும்
------------------------------------------------------------------------------
கணினியை விட்டுத் தள்ளுங்கள். நமக்கு அது
தெரிந்திருக்க வேண்டாமா?

உதாரணத்தைற்க்காக ஒன்றை எழுதிக் காட்டியுள்ளேன்

ஒருவர் 10.02.1975 அன்று மாலை 4 மணிக்குப் பிறந்திருக்கிறார்
அவருடைய நட்சத்திரம் திருவோணம். கர்ப்பசசெல் இருப்பு
3 வருடம் 8 மாத்ங்கள் 2 நாட்கள்

அவருடைய நடப்பு தசைக் கணக்கு

1975 - 02 - 10 பிறந்ததேதி
0003- 08 - 02 கெர்ப்பச்செல் இருப்பு
-------------------
1978- 10. 12 சந்திர தசை முடிந்த நாள்
000 7 - 00 - 00 செவ்வாய் தசை
------------------------
1985 -10. 12 செவ்வாய் தசை முடிந்த நாள்
0018 - 00- 00 ராகு தசை
--------------------
2003 - 10 -12 ராகு தசை முடிந்த நாள்
0002- 01 -18 நாட்கள் குரு தசை குரு புக்தியில்
------------------------
2005 -12 - 00 குரு தசை குரு புக்தி முடிந்த நாள்
0002- 06 -12 நாட்கள் கு தசையில் சனி புக்தி
-------------------------------
2008 - 06 -12 குரு தசையில் சனி புக்தி முடியும் நாள்
0002 - 03- 06 குரு தசை புதன் புக்தி காலம்

இந்தக் கால் கட்டத்தில் வேலையில் மாற்றம்
ஏற்படும், முன்னேறறம் ஏற்படும்
குருவும், புதனும் சேரும்போது உயர்வான
மாற்றங்களை ஏற்படுத்துவார்கள்

12.10.2003 ல் இருந்தே அதாவது ராகு தசை முடிந்த
நாளில் இருந்தே அவருக்கு நல்ல காலம் என்றாலும்
உயர்வான காலம் என்பது 12.06.2008ல் இருந்துதான்
இதைக் கண்டு பிடிப்பதற்குத்தான் இத்தனை பாடு
அதற்கு உதவுவதுதான் புக்திகள் (Sub Periods)

என்ன புரியும்படியாக உங்களுக்கு விளக்கிச்
சொல்லியிருக்கிறேனா?

பின்னூட்டத்தில் ஒருவரி எழுதுங்கள்!----------------------------------------------------------------------------

பதிவின் நீளம் கருதி இன்று இத்துடன் முடித்துக் கொள்கிறேன்
இந்தப்பாடத்தின் தொடர்ச்சி அடுத்த பதிவிலும் உண்டு!
=================================================
Practical Test
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் ஜாதகத்தைக்
கீழே கொடுத்துள்ளேன்

பிறந்த நாள்: 28 .01.1917
காலை மணி 6.30
இடம் கண்டி
இருப்பு : புதன் தசையில் 12 வருடம் 2 மாதம் 7 நாட்கள்

30.06.1977 ல் அவர் தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் ஆனார்!
-----------------------------------------------------------------------
கேள்வி: எந்த தசை/புக்தியில் அவர் முதல் அமைச்சர் ஆனார்?



=========================================================
(தொடரும்)

30.3.07

நேரம் நல்ல நேரம்


===========================================================
ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 20
முப்பது வருடங்களுக்கு முன்னால் ஒரு ஞாயிற்றுக்
கிழமை காலைப் பொழுது.

நண்பர் ஒருவர் துணைக்குக் கூப்பிட்டார் என்பதற்காக
அவருடன் கோவை இடையர் வீதியிலிருந்த ஜோதிடர்
வீட்டிற்கு, அவருடன் நானும் சென்றிருந்தேன்.

ஜோதிடரின் பெயர் பரமேஷ்வர பணிக்கர். அந்தக்
காலத்தில் மிகவும் பிரபலமான ஜோதிடர்.கூட்டம்
அலைமோதும் காத்திருந்துதான் அவரைப் பார்க்க
முடியும். வயதானவர். அனுபவம் மிக்கவர்

என் நண்பனின் சகோதரி மகளுக்கு எப்போது திருமணம்
நடக்கும் என்று கேட்டு வருவதற்காகப் போயிருந்தோம

ஜோதிடரின் வீடு கீழ்த்தளத்தில். முதல் மாடியில்தான்
அவரது அலுவலகம்.

11' x 15' அளவில் ஒரு பெரிய அறை அவ்வளவுதான்
உட்காருவதற்குப் பாய் போட்டு வைத்திருப்பார்கள்
ஏற்கனவே பத்துப் பேர்கள் உட்கார்ந்திருந்தார்கள்.
நாங்களும் போய் உட்கார்ந்து கொண்டோம்.

நான் இதுபோன்ற இடங்களுக்கெல்லாம் போகும்போது
என்ன நடக்கிறது என்று முழுக்கவனத்துடன் பார்ப்பது
வழக்கம்.

எங்களுக்கு முன்னால் ஒரு வயதான தம்பதியர்
தங்கள் மகனுடைய ஜாதகத்தை அவரிடம் கொடுத்துப்
பார்க்கச் சொல்லிவிட்டு அவர் எதிரில் அமர்ந்திருந்தார்கள்

ஜோதிடர் நடப்பு தசாபுத்தியை ஒரு காகிதத்தில் அசுர
வேகத்தில் கணக்கெடுத்துக் குறித்துக் கொண்டவர்,
ஜாதகத்தையும் ஒரு கண்ணோட்டம் பார்த்தவாறு கேட்டார்

"உங்களுக்கு என்ன தெரிய வேண்டும்?"

அந்தப் பெரியவர் சொன்னார்." சாமி, பையனுக்கு
22 வயசாச்சுங்க! வியாபாரம் எதாவது வச்சுக் கொடுக்கலாமா? அல்லது திருமணத்த நடத்திப் போடலாமா? கொஞ்சம் விவரனையா பாத்துச் சொல்லுங்க! வியாபாரம் வச்சுக் கொடுத்தா அஞ்சு வருசம் கழிச்சுத் தான் திருமணம் பண்ணோனும். இல்ல திருமணம் செஞ்சுவச்சோமின்னா வியாபாரம் பின்னாடித்தான் வைக்கோணும். சாதகப்படி எது நல்லதுன்னு சொல்லுங்க"

உடனே சட்டென்று ஜோதிடர் அவரைப் பார்த்துக் கேட்டார்.

"பையன் வீட்டிற்கு அடங்க மாட்டானே?"

"ஆமாம் சாமி!"

"ஒழுங்கா படிச்சு பட்டம் வாங்கியிருக்க மாட்டானே?"

"ஆமாம் சாமி!"

" அதுக்கெல்லாம் காரணம் பையன் மூல நட்சத்திரம்.
சின்ன வயசிலேயே சுக்கிர தசை வந்திருச்சு. சின்ன
வயசில சுக்கிர தசை வரக்கூடாது. குட்டிச் சுக்கிரன்
கூடிக் கெடுக்கும்.
அதோட பையனை சுகவாசியா
வச்சு - அவனைக் கெடுத்துவிட்டுப்போய் விடும்!
அவன் பிறந்ததிலிருந்து உங்களுக்குப் பணம் நிறைய
வந்திருக்கும். அதனால அவனைச் செல்லம் கொடுத்தும்
வளர்த்திருப்பீங்க! ஜாதகப்படி கர்ப்பச்செல் இருப்பு
கேதுல 3 வருஷம், சுக்கிரன் ஒரு 20 வருஷம், அதுக்க
ப்புறம் வரப்போகிற சூரிய தசை ஒரு ஆறு வருஷம்
ஆக மொத்தம் 29 வருஷம். பையனுக்கு 30 வயசுக்கு
மேலதான் நல்ல காலம். அதுக்கப்புறம் வியாபாரம்
வச்சுக்கொடுங்க. இப்ப கல்யாணத்தைப் பண்ணுங்க!
முடியப் போற சுக்கிரதசையும் கல்யாணத்தை
நடித்தி வச்சுட்டுத்தான் போகும். அதோட அவனுக்கு
வியாழ நோக்கமும் இருக்கு! ஜாதகப்படி இன்னும்
தொண்ணூறு நாள்ல கல்யாணம் ஜாம் ஜாம்னு
நடந்திரும்!"

என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்து விட்டார்

அதற்குப் பிறகு நடந்ததெல்லாம் முக்கியமில்லை

அவர் சொன்ன அந்த வாக்கியம் நெடு நாட்கள்
என் காதிலும் மனதிலும் ஒலித்துக் கொண்டே இருந்தது.

"குட்டிச் சுக்கிரன் கூடிக் கெடுக்கும்."
"குட்டிச் சுக்கிரன் கூடிக் கெடுக்கும்."



அது உண்மை என்பதைப் பின்னால் தெரிந்து
கொண்டேன்


அதாவது எனக்குக் கிடைதத என் உறவினர்கள்
மற்றும் என் நண்பர்களின் ஜாதகங்களை (சுமார் 200)
வைத்து நான் ஆராய்ச்சி செய்தபோது அது
உண்மைதான் என்று தெரிந்து கொண்டேன்


-----------------------------------------------------------------------
அதுபோல பத்து வருடங்களுக்கு முன்பு, வேறு
ஒரு நண்பர் கூப்பிட்டார் என்பதற்காக அவருடன்
வேறு ஒரு பிரபல ஜோதிடரைப் பார்க்கப் போயி
ருந்தேன்.

அந்தக் கால கட்டத்தில் நான் ஜோதிட நூல்களை
யெல்லாம் ஓரளவிற்குக் கற்றுத் தெளிந்திருந்தேன்
ஆனாலும் இதுபோன்ற இடங்களுக்குப் போகும்
போது என்னுடைய திருவாயை மூடிக் கொண்டு
என்ன நடக்கிறது என்று கவனிப்பேனேயன்றி
ஒன்றும் பேச மாட்டேன். என் மேதாவித்தனத்தை
எல்லாம் ஸ்லைடு போட்டுக் காட்டமாட்டேன்

என் நண்பர் கொடுத்த அவருடைய ஜாதகத்தை
வாங்கி ஒரு காகிதத்தில் தேவையான விவரங்களைக்
குறிபெடுத்த ஜோதிடர் என் நண்பர் ஒன்றும் சொல்
லாமலேயே கேட்டார்.

"உங்களுக்கு கடந்த இரண்டு வருடங்களாக மிகுந்த
பணக்கஷ்டம். சரியா?"

என் நண்பர் சற்றுத் திகைத்துப்போய், அரைப்
புன்னகையுடன் பதில் சொன்னார்

"ஆமாம்!"

" வியாபாரத்தில் சரக்குக் கொடுத்த இடத்திலெல்லாம்
சிக்கல். நம்பியவர்கள் எல்லாம ஏமாற்றுவார்கள்.
உங்கள் பாக்கியெல்லாம் ஒன்றும் வசூலாகாது. ஆனால்
உங்களுக்குப் பணம் கொடுத்தவன் நெருக்கடி கொடுப்பான்
இதெல்லாம் நடந்து கொண்டிருக்கிறதா?"

" ஆமாம்!"

"அதற்குக் காரணம் உங்களுக்கு 2ம் வீட்டில் மாந்தி
மாந்தி அமர்ந்த வீட்டிற்குரியவனான புதனுடைய
புக்தி உங்களுக்கு இப்போது நடந்து கொண்டிருக்கின்றது.
மாந்தி அமர்ந்தவனுடைய புக்தி வாட்டி எடுத்துவிடும்.
மேலும் உங்களுக்கு சனிமகாதிசையில் புதன் புக்தி
சனியும் புதனும் வேறு அஷ்டம சஷ்டமத்தில்
(6th and 8th position to each other) இருக்கிறார்கள். அதுவும்
அனுகூலமாக இல்லை. இந்த தசாபுக்திக் காலம்
மொத்தம் 32 மாதத்தில் 24 மாதங்கள் கழிந்துவிட்டன
இன்னும் 8 மாத காலம் பாக்கி இருக்கிறது. அதற்குப்
பிறகு எல்லாம் சரியாகிவிடும். கவலையை விடுங்கள்
உங்கள் அடிப்படை ஜாதகம் நன்றாக இருக்கிறது
பழைய நிலைமை திரும்பி விடும்" என்று சொல்லி
அனுப்பி வைததார்.

அதன்படியே நடந்தது!

சரி, இதையெல்லாம் எப்படி சொல்கிறார்கள்?

தசாபுக்திகளை வைத்துத்தான் சொல்வார்கள்!

தசாபுத்தி என்றால் என்ன?

ஒவ்வொரு கிரகத்திற்கும் தசாபுக்திகள் (Own Periods)
உண்டு. ஒவ்வொரு கிரகமும் அதனுடைய தசாபுக்தி
நடக்கும்போதுதான் பலனைக் கொடுக்கும்.
(Awarding the benefits to the native of the horoscope)

அதுதான் அடுத்த பாடம்!

பதிவின் நீளம், மற்றும் உங்களுடைய பொறுமை
கருதி இன்று இத்துடன் முடித்துக் கொள்கிறேன்

நாளை சந்திப்போம்!

(தொடரும்)
-----------------------------------------------------------------

ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 19

===========================================================
ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 19
கிரகங்களின் சேர்க்கை (Association of Planets)

ஜாதகத்தில் கிரகங்கள் வீடுகளில் தனித்திருந்தால்
நல்லது. அல்லது ஒரு வீட்டில் (30 பாகைக்குள்)
இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட கிரகங்கள்
சேர்ந்திருக்கும்போது அவை நன்மை செய்யக்கூடிய
கிரகங்களாகவோ அல்லது ஒன்றிற்கு ஒன்று நட்புடைய
கிரகங்களாகவோ இருந்தால் நல்லது.

இல்லையென்றால் தீயது!

அந்தத் தீமையும் வேறு ஒரு பிரதான நன்மை
பயக்கும் கிரகத்தின் பார்வை அந்த
வீட்டிற்குக் கிடைக்குமென்றால் தீமையின் அளவு
பெரும் அளவு குறைக்கப்பட்டுவிடும்
-----------------------------------------------------------------------
ஒரு அறையில் ஒருவர் மட்டும் அமர்ந்து வேலை
பார்க்கும் போது அவரது வேலை முழுக்கவனத்துடனும்
தனித்த்தன்மையுடனும் சிறப்பாக இருக்கும்.

அதே அறையில் இருவரை அமர்த்தி வேலை செய்யச்
சொல்லும்போது, ஒருவரால் மற்றவருடைய வேலை
அதிக சிறப்படையவும் வாய்ப்பு இருக்கிறது. அதே
நேரத்தில் கெட்டுச் சிதறிக் குறையவும் வாய்ப்பு
இருக்கிறது.

அது, அந்த இருவருடைய திறமை, குணம், ஒத்துப்
போகும் தன்மை இவற்றைப் பொருத்தது

அதே நேரத்தில் ஒரு புத்திசாலியையும், ஒரு மடைய
னையும், அல்லது ஒரு சோம்பேறியையும் அல்லது
ஒரு குஜால் பேர்வழியையும் அல்லது ஒரு கிரிமினலையும்
ஜோடி சேர்த்து அமரவைத்து வேலை செய்யச்
சொன்னால் வேலை எப்படி நடக்கும் ?
அல்லது எப்படி இருக்கும் ? என்று நீங்களே யோசித்துப்
பாருங்கள்!

அதானால்தான் பல நிறுவனங்களில் Cabin அமைத்து
அல்லது Partition பலகைகள் அமைத்துத் தங்கள்
ஊழியர்களை (staff) அமர்த்தி வேலை வாங்குவார்கள்
---------------------------------------------------------------
இரண்டு கிரகங்களின் சேர்க்கைக்கே இப்படியென்றால்
மூன்று அல்லது நான்கு கிரகங்கள் சேர்ந்து ஒரே
வீட்டில் இருந்தால் என்ன ஆகும்?

அதற்குப் பெயர் கிரக யுத்தம் (Planetary War)
அதைப் பற்றி விரிவாகப் பின் வரும் பகுதியில்
பார்ப்போம். இப்போது கிரக சேர்க்கையை
மட்டும் தெரிந்து கொள்வோம்.

(பாடம் திசை மாறக் கூடாது என்பதில் நான்
கவனமாக இருக்கிறேன், அதே போல ஒரே
அத்தியாயத்தில் ஓவர் டோஸாக எதையும்
கொடுக்க விரும்பவில்லை. 250mg Capsule மருந்து
என்றால் அதை மருத்துவர் சொல்லியதுபோல
ஒரு வேளைக்கு ஒன்று என்று சாப்பிடுவோம்
இல்லையா அதுபோல!)

இரண்டு கிரகங்கள் அப்படியே ஒரே வீட்டில்
இருந்தாலும் அவை ஒன்றை விட்டு ஒன்று தள்ளி
(at least 5 degree) இருக்கவேண்டும். அப்படி இல்லாமல்
5 பாகைக்குள் இரண்டும் இருந்தால் அது நல்லதல்ல!

அதைக் கிரக அஸ்தமணம் (Combust) என்பார்கள்

அப்படி அஸ்தமணமானால் முதலில் நிற்கும்
கிரகம்தான் வலிமையுடம் இருக்கும். அதற்கு
5 பாகைக்குள் பின்னால் வந்து நிற்கும் கிரகம்
வலிமை இழந்து விடும்

இதுவே சூரியனுக்கும் மட்டும் 10 பாகைகள் என்று
கணக்கு. ஜாதகத்தில் சூரியனுக்குப் பக்கத்தில் அமரும்
எந்தக் கிரகமும் 10 டிகிரி தள்ளியே இருந்தால்
நல்லது. இல்லையென்றால் வலிமை இழந்து விடும்

வலிமை இழந்தால் என்ன ஆகும்?

ஜாதகனுக்கு நன்மையைச் செய்யும் சக்தியை அது
இழந்து விடும்.

உதாரணத்திற்கு களத்திரகாரகன் சுக்கிரன் ஒருவன்
ஜாதகத்தில் வேறு ஒரு கிரகத்துடன் சேர்ந்து
அஸ்தமண்ம் ஆகியிருந்தால் ஜாதகனுக்கு உரிய
பருவத்தில் திருமணம் ஆகாது! 21 முதல் 25 வயதிகுள்
ஆகவேண்டிய திருமணம் 35 முதல் 40 வயதில் நடக்கும்

மேலும் ஒரு உதாரணம்: ஏழில்(ஏழாம் வீட்டில்) இரண்டு
தீய கிரகங்கள் சேர்ந்திருந்தால் ஜாதகனுக்கு அலலது
பெண்ணாக இருந்தால் ஜாதகிக்குத் தீமை.

அது களத்திர ஸ்தானம். திருமண வாழ்க்கைக்கான
இடம் அங்கே பெண் ஜாதகத்தில் இரண்டு தீய
கிரகங்கள் இருந்தால் அவளுடைய மண வாழ்க்கை
போராட்டம் மிகுந்ததாக இருக்கும். நிம்மதியில்லாத
மண வாழ்க்கை அமைந்து விடும.

அந்த இடம் குருவின் பார்வை பெற்றிருந்தால் அந்தத்
தீமை குறைந்து விடும் அல்லது முற்றிலும் விலகி
விடும். குரு பார்ககக் கோடி தோஷம் நீங்கும் என்
கிறார்களே அதுதான் இது!

ஆண் ஜாதகமாக இருந்தால் இதே அமைப்பிற்கு
அவனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட பெண்களுடன் தொடர்பு
ஏற்பட்டு விடும் ( தொடர்பு ஏற்பட்டால் சந்தோஷமா?
அல்ல!) ஆரம்பத்தில் அவனுக்கு அது சந்தோஷமாகத்தான்
இருக்கும். பின்னால் அவஸ்தையாக மாறிவிடும்

மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்ற மூன்று
ஆசைகளில் மனிதன் அதிகமாக சிக்கித் தவிப்பது
இந்தப் பெண்ணாசையில்தான். அவர்களுடைய
ஜாதகங்களில் இந்த ஏழாம் வீடு கெட்டுப் போயிருக்கும்
அல்லது 7ம் வீட்டிற்குரியவன் கெட்டுப்போயிருப்பான்

ஏழாம் வீட்டிற்குரியவன் என்பது - உதாரணத்திற்கு
சிம்ம லக்கினம் என்றால் 7ம் வீடு கும்பம். அதன் அதிபதி
(Owner) சனி. அவர் லக்கினத்திற்கு 5, 9லோ அல்லது உச்சம்பெற்று
துலாம் வீட்டில் இருந்தாலோ நல்ல மனைவி அமைவாள்

அதில்லாமல் அந்த் வீட்டிற்குரிய சனி லக்கினத்திற்கு 8
அல்லது 12ம் வீட்டிலோ அமர்ந்தால் திருமண வாழ்க்கை
சந்தோஷம் தருவதாக இருக்காது!

அதே ஜாதகனுக்கு, கிரக சேர்க்கையில் அந்த ஏழாம்
வீட்டிற்குரிய சனி சந்திரனுடன் (He is the 12 th lord for that
horoscope) சேர்ந்து எங்கே இருந்தாலும் மண வாழ்க்கை
நிம்மதியில்லாமல் இருக்கும்

இந்த 7ம் வீட்டைப் ப்ற்றிப் பின் வரும் அத்தியாயங்
களில் விரிவாகப் பார்ப்போம். இப்போது சேர்க்கையைப்
பற்றி சொல்கிறேன்
-----------------------------------------------------------------------
1. சூரியனுக்கு: சந்திரன், செவ்வாய், குரு இம்
மூன்றும் நட்புக் கிரகங்கள்.
சுக்கிரன், சனி, ராகு, கேது இந்த நான்கும்
பகைக் கிரகங்கள்
புதன் மட்டும் சமக் கிரகம் (Neutral Planet)

2.சந்திரனுக்கு: சூரியனும் புதனும் நட்புக்
கிரகங்கள்
ராகுவும், கேதுவும் பகைக் கிரகங்கள்
செவ்வாய், குரு, சுக்கிரன், சனி இந்நான்கும் சமக்
கிரகங்கள்

3. செவ்வாய்க்கு: சூரியன், சந்திரன், குரு இம்
மூன்றும் நட்புக் கிரகங்கள்.
புதன், ராகு, கேது இம்மூன்றும் பகைக்
கிரகங்கள்
சுக்கிரனும், சனியும் சம்க் கிரகங்கள்

4. புதனுக்கு: சூரியனும் சுக்கிரனும் நட்புக்
கிரகங்கள்
சந்திரன் மட்டுமே பகைக் கிரகம்
செவ்வாய், குரு, சனி, ராகு, கேது இவ்வைந்தும்
சமக் கிரகங்கள்

5. குருவுக்கு: சூரியன், சந்திரன், செவ்வாய் இம்
மூன்றும் நட்புக் கிரகங்கள்.
புதனும், சுக்கிரனும் பகைக் கிரகங்கள்
சனி, ராகு, கேது இம்மூன்றும் சமக் கிரகங்கள்

6. சுக்கிரனுக்கு: புதன், சனி, ராகு, கேது இந்
நான்கும் நட்புக் கிரகங்கள்
சூரியனும், சந்திரனும் பகைக்கிரகங்கள்
செவ்வாயும், குருவும் சமக் கிரகங்கள்

7. சனிக்கு: புதன், சுக்கிரன், ராகு, கேது
இந்நான்கும் நட்புக் கிரகங்கள்
சூரியன், சந்திரன், செவ்வாய் இம்மூன்றும்
பகைக் கிரகங்கள்
குரு மட்டும் சமக் கிரகம்

8. இராகுவுக்கும், கேதுவுக்கும்:
சுக்கிரனும், சனியும் நட்புக் கிரகங்கள்
சூரியன், சந்திரன், செவ்வாய் இம்மூன்றும்
பகைக் கிரகங்கள்
புதனும், குருவும் சமக் கிரகங்கள்

கிரகங்கள் சேர்க்கையில் ஒரு கிரகம்
தன்னுடைய நட்பு அல்லது சமக்
கிரகத்துடன் சேர்வது நன்மை பயக்கும்

அதுவே பகைக் கிரகத்துடன் சேரும்
பொழுது நன்மை பயக்காது

பெரிய அதிகாரத்தில் இருப்பவருடன்
சேரும் பொழுது கிடைக்கும் நன்மை
ஒரு பேட்டை தாதாவுடன் சேரும்போது
கிடைக்குமா?

ஒரு மிகப் பெரிய போலீஸ் அதிகாரியின்
நட்பில் கிடைக்கும் சந்தோஷம், ஒரு
கிரிமினல் ஆசாமியுடன் சேரும்போது
கிடைக்குமா?

சேர்க்கையின் பலனும் அப்படித்தான்
-----------------------------------------------------------
இயற்கையாகவே நன்மை பயக்கக்கூடிய
சில கிரக சேர்க்கைகள்:

பல கிரக சேர்க்கைகள் உள்ளன. நான்
மாதிரிக்கு ஐந்தை மட்டும் கொடுத்துள்ளேன்

1. குருவும் சந்திரனும் சேர்ந்திருந்தால்
அதைக் குருச்சந்திர யோகம் என்பார்கள்

2. சந்திரனும், செவ்வாயும் சேர்ந்திருந்தால்
சசிமங்கள யோகம் என்பார்கள்

3. புதனும், சூரியனும் சேர்ந்திருந்தால்
புத-ஆதித்ய யோகம் என்பார்கள்

4. புதனும் சுக்கிரனும் சேர்ந்திருந்தால்
நிபுனத்துவ யோகம் என்பார்கள்

5. ஒரு நீசம் பெற்ற கிரகத்துடன் ஒரு
உச்சம் பெற்ற கிரகம் சேர்ந்திருந்தால்
அது நீசபங்க ராஜயோகம் எனப்படும்

நீசபங்க ராஜயோகம் - அமைப்பு:

மேஷத்தில் சனியும், சூரியனும்
சேர்ந்திருப்பது

ரிஷபத்தில் ராகுவும், சந்திரனும்
சேர்ந்திருப்பது

கடகத்தில் செவ்வாயும், குருவும்
சேர்ந்திருப்பது

கன்னியில் சுக்கிரனும், புதனும்
சேர்ந்திருப்பது

துலாத்தில் சூரியனும், சனியும்
சேர்ந்திருப்பது

மகரத்தில் குருவும், செவ்வாயும்
சேர்ந்திருப்பது

மீனத்தில் புதனும், சுக்கிரனும்
சேர்ந்திருப்பது

நீசபங்க ராஜயோக கிரகங்கள் - தாங்கள்
சம்பந்தப் பட்ட வீடுகளை வைத்து
மிகப் பெரிய - அளவிடமுடியாத
நன்மைகளைச் செய்துவிடும்

அது ஒவ்வொரு லக்கினத்துக்காரர்களுக்கும்
தனித்தனியாக மாறுபடும்.
அவரவர் லக்கினத்தை வைத்து - அந்த
நீசபங்க ராஜயோக கிரகங்கள் சம்பந்தப்
பட்டுள்ள இடத்தை வைத்து அதற்குண்டான
பலன்களை அள்ளித்தந்துவிடும்!

ஒரு சிம்ம லக்கின ஜாதகம். அந்த ஜாகத்தின்
பத்தாம் வீட்டிற்குரிய சுக்கிரன் நீசனாகி கன்னி
ராசியில் அம்ர்ந்துவிடும் போது அங்கே புதன்
இருந்தால் - அது புதனுக்கு சொந்த வீடும்
உச்ச வீடும் ஆனதால் புதனுடன் சுக்கிரன்
சேர்ந்து நீசபங்க ராஜயோகம் ஏற்பட்டு அந்த
ஜாதகன் பெரிய தொழில் அதிபர் ஆகிவிடுவான்

10க்குரிய சுக்கிரன் நீசமானதால் வேலையின்றி
ரோட்டில் திரிய வேண்டிய ஆசாமி, உச்ச புதன்
உடன் சேர்ந்ததால் பெரிய Business Magnet ஆகி
பணத்தில் புரளுவான். இதுதான் நீசபங்க ராஜ
யோகத்தின் பலன்

இதுவே 10ம் வீடாக இல்லாமல் 4ம் வீடான கல்வி
ஸ்தானமாக இருந்தால் ஜாதகன் பெரிய Scholar
ஆகி விடுவான். சாதாரண விரிவுரையாளராக
இருந்த அவனை இந்த ராஜயோகம் பல்கலைக்கழக
துணை வேந்தர் பதவிவரை கொண்டுபோய்ச்
சேர்த்துவிடும்!

இதுபோன்று வாழ்க்கையின் பலதுறைகளிலும்
பல நிலைப்பாடுகளிலும் இந்த நீசபங்க கிரக
சேர்க்கையின் தன்மை, அது அமையப்பெற்ற
ஜாதகனுக்கு அற்புதமான நன்மையைச் செய்யும்

அந்த நன்மை எது சம்பந்தப்பட்டதாய் வேண்டு
மானலும் இருக்கலாம். அது அந்த ஜாதகனின்
ஜாதகம் சம்பந்தப் பட்டதாகவும், அந்தக் கிரகங்களின்
தசா புக்திக் காலங்களிலும் நிச்சயாமாக நிறைவேறும்!

இந்த யோகங்களுக்குரிய பலன்களை
பின் வரும் அத்தியாயத்தில் பார்ப்போம்
100ற்கும் மேற்ப்ட்ட முக்கியமான யோகங்கள்
உள்ளன!

பதிவின் நீளம் கருதி - இன்று இத்துடன்
நிறைவு செய்கிறேன். மற்றவை நாளை!

(தொடரும்)
-------------------------------------------------

Article about combust

Article about conjunction


29.3.07

ஏழுக்கு நான்கைச் சொல்லுங்கள் போதும்!

ஏழுக்கு நான்கைச் சொல்லுங்கள் போதும்!

அப்பாடா! ஒரு வழியாக வகுப்பிற்குத் திரும்பி வந்தாயிற்று!
ஒருவாரமாக வகுப்பு இல்லாததால் என் வகுப்புக்
கண்மணிகள் சோர்ந்து போய் விட்டார்கள்!

முதலில் அவர்களின் சோர்வை நீக்க வேண்டும்!

அவர்கள் அனைவரும் வித்தியாசமானவர்கள். பரீட்சை
வைத்தால் சுறுசுறுப்பாகி விடுவார்கள்

அவர்கள் சுறுசுறுப்பான பிறகுதான் பாடத்தைத் துவங்க வேண்டும்

ஆக்வே இன்று பரீட்சை!

ஏழு கேள்விகள் உள்ளன 4 கேள்விகளுக்குப் பதில்
அளித்தால் போதும். சாய்ஸில் 3 கேள்விகளை விட்டுவிடலாம்!

( யார் இப்படி சலுகை தருவார்கள்?)

கேள்விகள் கீழே உள்ளன. பதிலை எழுதுங்கள்
சரியான விடை நாளை காலையில்தான் தெரிவிக்கப்படும்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

போட்டோவில் உள்ளவர்கள் யார், யார்?

(க்ளூ: அனைவருமே உலகப் பிரபலங்கள்)
==========================================
-----------------------படம் எண் 1 ---------------------



=================================================
---------------------------படம் எண் 2 --------------------------



=================================================

------------------ படம் எண் 3 - -------------------------


==================================================

------------------------------படம் எண் 4 ------------


===================================================


-------------------படம் எண் 5 ------------------




=====================================================


------------------படம் எண் 6 ---------------------


====================================================


------------------------படம் எண் 7 -------------------------


=======================================================

23.3.07

வாத்தியாரின் தொல்லை!


=================================================
வாத்தியாரின் தொல்லை!

வாத்தியாரின் தொல்லை - ஒரு
வாரத்திற்கு இல்லை!

அட்டா, என்ன மகிழ்ச்சியான செய்தி!

ஆமாம் என் வகுப்பறைக் கண்மணிகளே!
வகுப்பறைக்கு ஒரு வாரம் விடுமுறை!

இந்தவார ஆசிரியராக இருக்கச் சொல்லி
‘வலைச்சரம்’ பத்திரிக்கைக்காரர்கள்
(வகை தெரியாமல்)
கேட்டுக் கொண்டுள்ளதால்
அங்கே பணியாற்றச் சென்று விட்டேன்!

அதனால்,
விட்டது தொல்லை என்று
நீங்கள் யாரும் ஓடி விடாமல்
அங்கே வலைசரத்திற்கு வந்து விடுங்கள்
வருகைப் பதிவேடு இந்த ஒருவாரத்திற்கு
அங்கே இருக்கும்!

அங்கே வந்து சேரும் வழி எப்படி என்பது
இங்கே சுட்டியில் உள்ளது

அன்புடன்,
வாத்தியார்

21.3.07

சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்



சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்

ஆகாயத்துக்கு அடுத்த வீடு

'ஆகாயத்துக்கு அடுத்த வீடு' என்னும் அசத்தலான
தலைப்பில் கவிஞர்.மு.மேத்தா அவர்கள் எழுதிய
கவிதை நூலிற்கு 2006ம் ஆண்டிற்கான சாகித்ய
அகாதமியின் விருது கிடைத்ததும், அதைக்கவிஞர்
பெற்றுக் கொண்டு தமிழுக்குப் பெருமை சேர்த்ததையும்
அனைவரும் அறிவோம்.

அந்த நூலைப் படிக்கவும், கவிஞருக்குக் கோவையில்
நட்ந்த பாராட்டு விழாவில் பங்கு கொள்ளவும்
ஒரு சேரப்பேறு சென்ற ஞாயிற்றுக்கிழமையன்று
(17.03.2007) அடியவனுக்குக் கிடைத்தது.

கவிஞர் மு.மேத்தா அவர்களின் அந்தக் கவிதைத்
தொகுப்பு நூல் படிப்பவர்களின் மனதில் படிக்கும்
போது ஏற்படுத்தும் இன்பத்தாக்கத்தை அடியவனின்
பார்வையில் கீழே கொடுத்துள்ளேன்.

நூல்நயம் அல்லது புத்தக விமர்சனம் என்று நீங்கள்
எடுத்துக் கொள்ளலாம்

புத்தகத்தைப் பிரித்தவுடன் 'இந்தியா என் காதலி''
என்னும் தலைப்பில் உள்ள கவிதையின் முதல் ஒன்பது
வரிகளைப் படித்தவுடனேயே நாம் நிமிர்ந்து உட்கார்ந்து
விடுவோம்!

அதில் கவிஞர் மேத்தா அவர்கள் இப்படித்
துவங்கியுள்ளார்

"உண்மையை நான்
ஒப்புக் கொள்கிறேன்
காதலித்து உன்னைக்
கட்டிக் கொள்ளவில்லை...
கட்டிக்
கொண்டதால்தான்
காதலித்துக்
கொண்டிருக்கிறேன்!"

தொடர்ந்து வரும் வரிகளில்,

"உன்
தர்பார் மண்டபங்களில்
நியாயங்கள்
தற்கொலை
செய்துகொள்ளும்
முன்பே
கொலை
செய்யப்படுகின்றன

சட்டங்கள் விசிலடிக்க
ஜனநாயகம்
கை தட்டுகிறது!"
என்று நாட்டு நடப்பை ஆதங்கத்தோடு
சிறப்பாகச் சொல்கின்றார்

அந்தத் தலைப்பின் கீழ் மேலும்
ஒன்பது பத்திகளில் நாட்டின்
அவலத்தை ஆணி அடிப்பதுபோல் சிறப்பாகச்
சொல்லிவிட்டுக் கடைசியில்
"கட்டிக்
கொண்டதால்தான்
காதலித்துக்
கொண்டிருக்கிறேன்!"
என்று முத்தாய்ப்பாய் முடிக்கின்றார்.

குற்றப் பத்திரிக்கை, வழுவமைதி, ஞானம்,
வாழ்க்கையென்பது, உயிர்பாடும் ஒப்பாரி, வரலாறு,
குடியரசு தினம், நதி, நீயும் நானும், பாடம், இன்னொரு
கடத்தல், எழுத்தெனப் படுவது, அகமே புறம், புறமே அகம்,
விளக்குகளின் விழா, ஒரே குரல், சிறு குறிப்பு வரைக,
கவிதையின் கதை, விழாக்காலம், நேரம், ஆகாயத்துக்கு
அடுத்த வீடு,தீண்டாமை, அன்பழைப்பு, கடலுடன் ஒரு
கலந்துரையாடல், மனக் கதவு, இதயத்தின் தொலைபேசி,
புன்னகைக்கும் புயல், தாய் மண்ணே வணக்கம்,
அவளுக்கு ஒரு ஆடை(சில்க் ஸ்மிதாவிற்கு
அஞ்சலியாக எழுதப்பெற்றது), நியாயங்கள், பொங்கும்
கனவுகள், ஓர் உரையாடல், வாழ்க்கை, கன்னி மாடம்,
தாய், கும்பகோணத்தில் ஒரு மகாவதம் (பள்ளித்
தீவிபத்தில் பலியான சிறார்களுக்கு அஞ்சலியாக
எழுதியது) கல்விக் கடைகள், சொற்பொழிவு, வெற்றித்
தூண், வெற்றியின் மறுபக்கம், கி.பி. 2000, இன்று முதல்,
சுவரொட்டித் தலைவர்கள், பிறவிக்கடன், நினைவு நாள்,
மதிப்பீடு, விடைபெறும் வேளை
என்று 48 ற்கும் மேற்பட்ட தலைப்புக்களில் அருமையான
கவிதைகள் இந்த நூலிற்குச் சிறப்பைச் சேர்க்கின்றன!

எளிமையான் சொற்களில் ஆழமான கருத்துக்களை
அசத்தலான வெளிப்பாட்டில் சொல்வதுதான் கவிஞரின்
தனிச் சிறப்பு

உதாரணம் கொடுத்துள்ளேன்:

1. தலைப்பு: குடியரசு தினம்
ஆளுநர் மாளிகையில்
விருந்து
அனைத்துக் கட்சிகத்
தலைவர்களுக்கும்!

பணியாற்றிக் கொண்டிருந்த
பணியாளர்கள் தமக்குள்
பேசிக் கொண்டனர்:

"யார்
யாரைச்
சாப்பிடப் போகிறார்களோ?"

2. தலைப்பு - மதிப்பீடு

எழுதிக் கொண்டிருந்தான்
விமர்சனங்கள் வந்தன....
எழுதாமல் இருந்தான்
விருதுகள் வந்தன!

எப்படி நச்' சென்று இருக்கிறது பார்த்தீர்களா?
அதுதான் திரு.மு.மேத்தா!

படித்து முடித்தவுடன் உவகை மேலிட, தமிழ்கூறும்
நல்லுலகத்தோர் அனைவரும் இதைப் படித்து மகிழ
வேண்டும் என்ற ஆதங்கத்தில் இதற்கு ஒரு விமர்சனம்
எழுதத் துணிந்தேன்.

அற்புதமாக எழுதப்பெற்றுள்ள இந்த நூல் 96 பக்கங்களைக்
கொண்டது. நூலில் உள்ள அத்தனை கவிதைகளுமே
முத்துக்கள்.

எல்லாவற்றையும் எடுத்து நான் எழுத விரும்பினாலும்
பதிப்பாளர்கள் தங்கள் காப்புரிமையை மீறி அனுமதிப்பார்களா
என்பது தெரியாது! அதேபோல மிகவும் அதிகமாக நெஞ்சைத்
தொட்ட வரிகளைக்குறிப்பிட்டு எழுதுவதென்றால் எதை
எழுதுவது எதை விடுவது என்ற திகைப்புத்தான் மேலிடும்.
ஒரு விருதுபெற்ற நூலில் அதைச் செய்வதும் சரியல்ல!

புத்தகத்தின் வடிவமைப்பும் வழவழ்ப்பான உயர்ந்த
காகிதத்தில் அச்சிட்டுக் கொடுத்துள்ள நேர்த்தியையும்,
ஒவ்வொரு பக்கத்திற்கும் அந்தப் பக்கத்திலுள்ள
கவிதைக்குத் தோதாகக் கொடுக்கப்பட்டுள்ள
படங்களையும் பாராட்ட வார்த்தைகள் இல்லை
என்பதுதான் நிதர்சனமான உண்மை!

ஆகவே ஒரே ஒருவழிதான் உண்டு. நூலை விலை கொடுத்து
வாங்கிப் படியுங்கள்.அதுதான் நெஞ்சைத் தொடும்படி எழுதிய
கவிஞர்.மு.மேத்தா அவர்களுக்கும், சிறப்பாக வெளியிட்ட
குமரன் பதிப்பகத்தார்க்கும் நாம் செய்யும் மரியாதையும்,
நன்றிக் கடனுமாகும்.

பக்கங்கள் 96 - விலை ரூ.60:00

பதிப்பாளர்களின் முகவரி:
குமரன் பதிப்பகம்
3, முத்துக்கிருஷ்ணன் தெரு,
பாண்டி பஜார்,
சென்னை - 600 017
தொலைபேசி எண்: 2815 3742, 2815 2559

நன்றி, வணக்கத்துடன்,
SP.VR.சுப்பையா
-------------------------------------------------------------------


கலைஞரின் ஜாதகம்

கலைஞரின் ஜாதகம்

ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 17
By SP.VR.SUBBIAH

லக்கினத்தைப் பற்றி எழுதிய முதல் கட்டுரை
அனைவருக்கும் புரிந்துள்ளது என்பதைப் பின்னூட்டம்
மூலம் அறிந்தேன். மகிழ்வும் கொண்டேன்

அதைவிட வாத்தியாருக்கு என்ன வேண்டும்?

இன்று லக்கினத்தின் அடுத்த பகுதி!

1. லக்கினத்தில் மிகவும் முக்கியம் லக்கினநாதன்
என்னும் அந்த வீட்டு அதிபதி (Owner of the lagna
or lagna lord) உதாரணம் சிம்ம லக்கினத்தின்
அதிபதி சூரியன்.அவர் எங்கே போய் உட்கார்ந்திருக்
கிறார் என்பது முக்கியம்.
அவருடைய சிறப்பான அமர்விடம் லக்கினத்திலிருந்து
5ம் வீடு அல்லது 9ம் வீடு (திரிகோண வீடுகள்
எனப்படும்) அதுபோல 4ம் வீடும் 7ம் வீடும் அல்லது
11ம் வீடும் சிறப்பான வீடுகளே (கேந்திரம் எனப்படும்
வீடுகள்)

2. ஏழாம் வீட்டிலிருந்து லக்கினாதிபதி லக்கினத்தைப்
பார்த்தால் மிகவும் சிறப்பு. 180 பாகையிலிருந்து
எல்லாகிரகஙகளும் எதிர்வீட்டைப் பார்க்கும்.
The lagna lord aspecting the lagna from the
7th place will confer standing power to the native!

3.லக்கினாதிபதி லக்கினத்திலிருந்து 6ம் வீடு, 8ம் வீடு
12ம் வீடு ஆகிய வீடுகளில் மறைந்து விடக்கூடாது!
These places are inimical places
(தீய இடங்கள்)
அப்படி அமர்ந்தால் வாழ்க்கை போராட்டமாக அமையும்.
(உடனே ஜாதகத்தை எடுத்துப் பார்த்துவிட்டுக்
கன்னத்தில் கை வைத்துக் கொண்டு அமர்ந்து
விடாதீர்கள் - பல விதிவிலக்குகள் உள்ளன
- வரிசையாக அவைகளும் சொல்லித்தரப்படும்)
You should not jump to any conclusion
by seeing a single rule. The houses are to be
judged by various factors which will be taught
one by one

4. லக்கினாதிபதி 12ல் அமர்ந்தால் (அதாவ்து
விரைய ஸ்தானம் எனப்படும் - house of lossesல்
அமர்ந்தால், ஜாதகன் வாழ்க்கை அவனுக்குப்
பயன் படாது. அவனைச் சுற்றியுள்ள மற்றவர்களுக்கு
மட்டுமே பயன் படும்.

5. அதுபோல விரையாதிபதி that is the owner of
the 12th house லக்கினத்தில் வந்து அமர்ந்தால்
-உதாரணம் சிம்ம லக்கினத்தில் - அதற்குப் 12ம்
வீடான கடகத்தின் அதிபதி சந்திரன் வந்து
அமர்ந்தால் - ஜாதகன் வாழக்கை விரயமாகி விடும்
அவனுடைய வாழக்கை யாருக்கும் பயன் படாது
You should not jump to any conclusion
by seeing a single rule. The houses are to be
judged by various factors which will be taught
one by one

6. லக்கினாதிபதியும், விரையாதிபதியும் - ஒன்று
சேர்ந்து ஜாதகத்தில் எங்கு அமர்ந்தாலும் அது
ஜாதகனுக்குப் பயன் அளிக்காது.
Both the owner of the first house and owner of
the 12th associated together in any place in the
horoscope will not confer any auspicious things to
the native

7. லக்கினாதிபதி உச்சம் பெறுவது மிகவும் ந்ல்லது
example - சிம்மலக்கின ஜாதகத்தில் சூரியன் மேஷத்தில்
இருப்பது.

8. லக்கினத்தில் குரு இருப்பது மிகவும் நல்லது.
It is blessed horoscope

9. அதற்கு நேர் எதிர் லக்கினத்தில் சனி இருப்பது
நல்லதல்ல!
இதற்கு மகர லக்கினமும், குமப லக்கினமும்
விதிவிலக்கு ஏனென்றால் அந்த இரண்டு லக்கினங்
களுக்கும் சனி அதிபதி.

10. லக்கினத்தைச் சந்திரன் பார்த்தாலோ (7ம் பார்வை)
அல்லது லக்கினத்தில் சந்திரன் இருந்தாலோ, ஜாதகன்
அழகாக இருப்பான் - பெண் என்றால் ஜாதகி அழகாக
இருப்பாள்.

11. அதே போல சுக்கிரன் லக்கினத்தில் இருந்தாலும்,
அல்லது பார்த்தாலும் அழகான் தோற்றத்தை கொடுப்பான்

(சினிமா நடிகைகளின் ஜாதகத்தில் இந்தக் combination
இருக்கும். அதனால்தான் அவர்கள் அழ்கான் தோற்றத்தைப்
பெற்றுள்ளார்கள்)
(சரி பரிசோதனை செய்து பார்க்கலாம் என்றால்
நடிகர்களின் ஜாதகங்கள் தாராளமாகக் கிடைக்
கின்றன். நடிகைகளின் ஜாதகங்கள் கிடைப்பதில்லை!
வெளியே வராது. வயது தெரிந்துபோய் விடுமே
சாமி:-))))


நடிகைகள் என்றில்லை, பெண்களின் வயதையும்
ஆண்களின் வருமானத்தையும் கண்டுபிடிக்க
முடியுமா? அல்லது கேட்பதுதான் நியாயமா?
12. அதே இடத்தில் செவ்வாய் அமர்ந்தால் அல்லது
பார்த்தால் அபரிதமான திறமையைக் கொடுப்பான்

13. எல்லா லக்கினங்களும் சமம். ஆனால் ஒவ்வொன்
றிற்கும் ஒரு அதிகப்படியான சிறப்பு உண்டு. சிம்ம
லக்கினம் Heroக்களின் லக்கினம். அந்த லக்கினக்
காரர்கள் எல்லாம் நாயகர்கள்தான்
(உதாரணம் - கமல்ஹாசன், ரஜினிகாந்த ஆகிய
இருவரின் ஜாதகங்களைக் கொடுத்துள்ளேன்
பாருங்கள்)

=============================================




===========================================================
சிம்ம லக்கினம் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்
ஏனென்றால் நானும் சிம்ம லக்கினம்தான்..ஹி.ஹி:-))
திரைத்துறைக்குச் சென்றால்தான் ஹீரோவா?
மனதளவில் நானும் ஹீரோதான்..ஹி.ஹி:-))

14. மகர, குமப லக்கினக்காரர்கள் கடின
உழைப்பாளிகள். சனீஸ்வரன் அந்த ல்க்கினங்களின்
அதிபதி என்பதால் அவர்கள் இயற்கையிலே கடும்
உழைப்பளிகள். எடுத்த காரியத்தை முடிக்காமல்
விட மாட்டார்கள்

15. கும்ப லக்கினக்காரர்கள் இயற்கையாகவே மிகவும்
நல்லவர்கள். அவர்களை நம்பி எந்தக் காரியத்திலும்
இறங்கலாம். அவர்கள் நிறைகுடம் போன்றவர்கள்
அதனால்தான் கும்ப ராசியின் சின்னமாக் குடம் வழங்கப்
பெற்றுள்ளது.

பெண்களுக்கு கும்ப லக்கினம்தான் சிறந்த லக்கினம்
கும்ப லக்கினப் பெண்களை மணந்தவர்கள்
அதிர்ஷ்டசாலிகள்.

16.கன்னி லக்கினக்காரர்கள் ம்ற்ற எல்லா லக்கினக்
காரகளையும் சுலபமாக ஈர்த்து விடக்கூடியவர்கள்
They will attract or mix with any people or any
Society easily

17.மிதுன லக்கினக்காரர்கள் மிகவும் அழகாக
இருப்பார்கள் (உதாரணம் - திரு.ஜெமினி கணேசன்
செல்வி ஜெயலலிதா. திரு. ப். சிதம்பரம் போன்றவர்கள்)

18. கடக லக்கினக்காரர்கள் பெரும்பாலும் அரசியல்
வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள். உதாரணம் -கலைஞர்
மு.க, திருமதி இந்திரா காந்தி, ஜவஹர்லால் நேரு
போன்றவர்கள்) அரசியல் இல்லையென்றாலும்
தலைமை தாங்கும் திறமையுடையவர்கள்
நாட்டமையாக இருப்பவர்கள்

19. ரிஷபம், துலாம் லக்கினக்காரர்கள் கலைத்துறையில்
பிரகாசிப்பார்கள் (அதிபதி சுக்கிரன்). அதுபோல வாழ்க்கையை
இயற்கையாகவே அனுபவிக்கக் கூடியவர்கள். ரசனை
உணர்வு மிக்கவர்கள். மெல்லிய உணர்வு மிக்கவர்கள்

20. மேஷம், விருச்சிக லக்கினக்காரர்க்ள் - செவ்வாய்
அதிபதி அதனால் போரர்டிப் பார்க்கும் மனப்பான்மை
உள்ளவர்கள். யாருக்கும், எதற்கும் பயப்பட மாட்டர்கள்
ராணுவம், போலீஸ் போன்ற துறைகளில் பரிண்மிப்ப
வர்கள் இவர்கள்தான்.

21. தனுசு, மீன் லக்கினக்காரர்கள் - குரு அதிபதி
யானதால், இயற்கையாகவே சிற்ந்த அறிவுடையவர்களாக்
இருப்பார்கள் (Keen Intelligence) Finance, stock market,
Banking, auditing, teaching, coaching போன்ற துறைகளில்
இவர்கள் பரிணமிக்கும் வாய்ப்பு இயற்கையாகவே இவர்களுக்கு இருக்கும்!

22.லக்கினாதிபதி சிறுவயது வாழ்க்கைக்கும், உடல்
நல்த்திற்கும் உரியவர், அவர் பலமாக இருந்தால்
சிறுவயது வாழ்க்கை சிற்ப்பாக இருக்கும். உடல்
நலமும் ந்ன்றாக இருக்கும்

23. அவர் வலுவிழந்து இருந்தால் (உதாரணம்
லக்கினாதிபதி சனி அல்லது ராகு அல்லது கேது
போன்ற தீய கிரகங்களுடன் சேர்ந்திருந்தால்
உடல் நலம் பாதிக்கப்படும்.

24.தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை
ஒன்றுக்கு மேற்பட்ட தீய கிரகமானால் வாழ்க்கை
துன்பம் மிகுந்ததாகிவிடும்

25. கடவுள் கருணை மிக்கவர். ஜாதகத்தில்
லக்கினத்தின் மூலம் உள்ள குறைகளுக்கு
அவர் நிவர்த்தியையும் கொடுத்துதான் அத்தனை
ஜீவ ராசிகளையும் பிறக்க வைக்கிறார்.
அதற்கு அதிரடியான சான்று - ஜாதகத்தின்
மொத்த மதிப்பெண் 337தான்.
அது என்ன 337 என்கிறீர்களா? அதுதான்
சுவாரசியம் மிக்க, மனதை வருடக்கூடிய
கடைசிப் பாடம். அப்போது விவரமாகச் சொல்கிறேன்
36ல் 18 என்று முன் பதிவில் சொன்னேன் இல்லையா
அந்தக் கணக்கு இதில்தான் (அந்த 337ல்) அடங்கும்

ஆட்டிற்கும், மாட்டிற்கும், மான்களுக்கும், கொம்பைக்
கொடுத்த இறைவன் ஏன் குதிரைக்குக் கொம்பைக்
கொடுக்க வில்லை?

இதைச் சொன்னவுடன் என் நண்பர் ஒருவர் சொன்னார்,
"கழுதைக்கும் கொம்பைக் கொடுக்கவில்லயே?"

நான் உடனே அவரிடம் சொன்னேன், "இல்லை
இறைவன் Strengthஐ கழுதைக்குக் கால்களில்
கொடுத்துள்ளார் உதை வாங்கியவர்களுக்குத் தெரியும்
கேட்டுப்பார்"

அதற்குப் பெயர் சம்ப்படுத்தும் முறை!(Balancing Theory)
Wealth இருக்கிறவனுக்கு Health இருக்காது.
Health இருக்கிறவனுக்கு Wealth இருக்காது
பயில்வானாக இருக்கிறவனுக்கு மூளை Sharpஆக
இருக்காது. Smart ஆக இருக்கிறவனுக்கு உடல்
பலம் மறுக்கப்பட்டிருக்கும்.

பிரதமருக்கும் 337தான், அம்பானிக்கும் 337தான்
அவர்களுடைய கார் டிரைவருக்கும் 337தான்
கார் டிரைவர் Duty Time முடிந்தவுடன் த்ன்னுடைய
இரண்டு சக்கர வாகனத்தில் ஜாலியாக எங்கு வேண்டு
மானலும் போவான். ஆனால் அவர்க்ள் Security

இல்லாமல் எங்கும் செல்ல முடியாது
இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
பதிவின் நீளம் கருதி இன்று இத்துடன்
முடித்துக் கொள்கிறேன்!
-----------------------------------
Practical Class: (Test)
கலைஞர் திரு.மு.கருணாநிதி அவர்களின் ஜாதகத்தைக்
கீழே கொடுத்துள்ளேன்

1.அவருடைய ஜாதகத்தில் எத்தனை கிரகங்கள் உச்சம்?
2.அவருடைய ஜாதகத்தில் எத்தனை கிரகங்கள் ஆட்சி பலத்துடன் உள்ளன?
==============================================

=================================================
முன்பாடத்தில் சொல்லிக் கொடுத்துள்ளேன்.
கண்டு பிடித்து எழுதுங்கள்
(கடைசி பெஞ்சகாரர்களுக்கு மட்டும் விதிவிலக்கு:-)))

(தொடரும்)
=============================

20.3.07

திமுக' வின் ஜாதகம்

தி.மு.க.வின் ஜாதகம்!

ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 16
By SP.VR.SUBBIAH

முதலில் பாடம்: அப்புறம் அரட்டை!

லக்னம் என்றால் என்ன?

வானம் 12 பகுதிகளாகப் பிரிக்கப்பெற்று, ஒவ்வொரு
பகுதிக்கும் ஒரு பெயர் தரப்பட்டுள்ளது என்று முன்பே
சொல்லியிருக்கிறேன. மேஷம் முதல் மீனம் வரை
அதற்குப் பெயர்களும் உண்டு

வானவட்டம் 360 வகுத்தல் 12 = 30 பாகைகள் = ஒரு ராசி
என்பது கணக்கு. ஆரம்ப ராசி மேஷம்தான்.

சித்திரை மாதம் மேஷம்தான் சூரியனின் உதய ராசி.
சூரியன் அந்த ராசியில்தான் உதிக்கும். வைகாசி மாதம்
ரிஷப ராசியில்தான் உதிக்கும், ஆனி மாதம் மிதுனம்
ஆடி மாதம் கடகம், ஆவணி மாதம் சிம்மம், புரட்டாசி மாதம்
கன்னி, ஐப்பசிமாதம் துலாம், கார்த்திகை மாதம் விருச்சிகம்,
மார்கழி மாதம் தனுசு, தை மாதம் மகரம், மாசி மாதம் கும்பம்
பங்குனி மாதம் மீனம் என்று ஒரு சுற்று முடிந்து விடும்
ஒரு வருடமும் முடிந்து விடும். மீண்டும் அடுத்த சுற்று
மறுபடியும் மேஷத்தில் தான் ஆர்ம்பமாகும்.

ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் இருக்கும் ராசியை
வைத்து அவர் எந்த மாதம் பிறந்தவர் என்று சொல்லிவிடலாம்
உதாரணத்திற்குச் சூரியன் சிம்ம வீட்டில் இருந்தால் அந்த
ஜாதகர் ஆவணி மாதம்தான் பிறந்தவர்.

ஆனால் லக்கினம் என்பது வேறு!.

ஒரு குழந்தை பிறந்த் நேரத்தில், அந்தக் குழந்தை பிறந்த
இடம், வானத்தை எதிர் நோக்கி இருக்கும் பகுதிதான்
அந்தக் குழந்தையின் லக்கினம் ஆகும்!

லக்(கி)னம் . பெயர்ச்சொல்: சூரிய உதயத்தைப் பொறுத்து
ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்தைக் கட்டுப்படுத்தும் ராசி
Zodiacal sign influencing events at any given
time of the day with reference to the time of sunrise

ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில், அந்தக் குழந்தை பிறந்த
இடத்தைக்கட்டுப் படுத்தும் ராசிதான் லக்கினம்

லக்கினம் என்ப்து ஒரு ஜாதகத்தின் தலைப்பகுதி. அதுதான்
முதல் வீடு. அதிலிருந்து கடிகாரச் சுற்று வரிசையில்தான் மற்ற
வீடுகளைக் கணக்கில் கொள்வார்கள்

சித்திரை மாதம் முதல் தேதி சூரிய உதயம் முதல் அடுத்து
வரும் 2 மணி நேரம் வரை உள்ள காலத்தில் பிறந்த
குழந்தையின் லக்கினம் மேஷம்தான். அதற்குப் பிறகு
ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் அடுத்தடுதத ராசி
வரிசையில் லக்கினங்கள் அமையும்

ஆனால் சித்திரை மாதம் 16 ம் தேதி காலை சூரிய உதயத்தி
லிருந்து ஒரு மணி நேரம் வரை தான் மேஷ லக்கினம்
அதற்குப் பிறகு பிறக்கும் குழந்தை ரிஷப லக்கினக் குழந்தை
யாகும்.

இந்த வித்தியாசம் ஏன்?

ஒரு ராசி என்பது 30 பாகைகள் - ஒரு ராசியின் கால அளவு
24 மணிகள் வகுத்தல் 12 ராசி = 2 மணி நேரம் = 120 நிமிடங்கள்

ஆக்வே ஒவ்வொரு நாள் சுழற்சியிலும் சூரியன் ஒரு பாகை
யைத் தாண்டி வந்துவிடும் (4 நிமிடங்கள்) 15 நாட்களில்
15 பாகைகளைக் கடந்து விடும் ஆகவே 15 x 4 = 60 நிமிடங்கள்
அந்தத் தேதிக்குள் கழிந்துவிடும்

இப்படியே ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு
பாகை வீதம் 360 நாட்களில் 360 பாகைகள் வித்தியாசத்துடன்
பிறக்கும் குழந்தைகளுக்கு அது எந்தப் பாகையில் பிறந்ததோ
அந்தப் பாகையின் பகுதிதான் லக்கினம் ஆகும்.

உங்கள் மொழியில் சொன்னால் லக்கினம்தான் தலைமைச்
செயலகம்!
----------------------------------------------------------
லக்கினத்தை வைத்துதான் ஒரு மனிதனின் குணத்தை,
தோற்றத்தை, அவனுடைய ஆளூமையைச் சொல்ல
முடியும்.

அழகான் தோற்றம், உடற்கட்டு, நல்ல குணம் குறிப்பாக
Heroவா? அல்லது Villainனா? என்பது போன்ற
கணிப்புக்களை, பெண்ணாக இருந்தால் நாயகியா அல்லது
வில்லியா என்று தெரிந்து கொள்வதற்கு லக்கினம்தான்
ஆதாரம்!

அறிவாளியா- முட்டாளா, திறமைசாலியா- சோம்பேறியா
ந்ல்லவனா- வக்கிரம் பிடித்தவனா, அப்பாவியா - கல்லுளி
மங்கனா, சமூகத்தோடு ஒத்துப் போகக்கூடியவனா அல்லது
விதண்டாவாதம் பேசி வீணாய்ப் போகிறவனா என்று
சொவதற்கும், தோற்றத்தில் அரவிந்தசாமியா அல்லது
பி.எஸ் வீரப்பாவா ஓமக்குச்சி நரசிம்மனா அல்லது
பயில்வான் ரங்கநாதனா பெண்ணாக இருந்தால் நயன்தாராவா
அல்லது காந்திமதியா (அவரேதான் 16 வயதினில் படத்தில்
மயிலின் அம்மாவாக வருவரே அதே காந்திமதிதான்)
என்று சொல்வதெல்லாம லக்கினத்தை வைத்துததான்

எல்லாவ்ற்றையும் ஒரே நாளில் லோட் செய்தால் வண்டி
கவிழ்ந்து விடும். ஆகவே இன்று லக்கினம் என்பது என்ன்
என்பதை மட்டும் மனதில் வையுங்கள். அதன் பலா
பலன்கள் 6 பகுதிகளாகப் பின் வரும் பதிவுகளில்
சொல்லிக்கொடுக்கப்படும்!
-----------------------------------------------------

பயிற்சி வகுப்பு (Practical Class)
தி.மு.க வின் ஜாதகததைக் கீழே கொடுத்துள்ளேன்
இதுவரை சொல்லிக் கொடுத்த பாடத்தைவைத்து
1. தி.மு.கவின் லக்கினம் என்ன?
2. லக்கின நாதன் யர்ர்?
3. அவர் அம்ர்ந்திருக்கும் ராசியின் பெயர் என்ன?

(ராசிகளின் பெயர்களும், ராசி நாதனின் பெயர்களையும்
முன் பாடத்தில் சொல்லிக் கொடுத்திருக்கிறேன்)

யோசித்துச் சரியான விடையைத் தெரிந்த
வர்கள் (atleast இரண்டு மூன்று பேர்களாவது)
எழுதுங்கள்.

தெரியாதவர்கள் அந்தப் பின்னூட்டஙகளை

வெளியிடுகிறேன். தெரிந்து கொள்ளுங்கள்.-----------------------------------------------------------
நாட்டிற்கு ஜாதகம் கொடுத்தீர்கள். இப்போது கட்சிக்கும்
ஜாதகமா? என்று வியப்பவர்களுக்கு:

உண்டு. தொழிற்சாலைகளுக்கும், நிறுவனங்களுக்கும் கூட
ஜாதகம் உண்டு. குத்து விளக்கேற்றித் துவக்கி வைக்கிறார்களே
அதுதான் அவ்ற்றின் துவ்க்க நேரம் அதைவைத்துத்தான்
அவற்றிற்கு ஜாதகங்கள் - பலன்கள்.

தி.மு.க வின் ஜாதகம்:

பிறந்த நாள்: 17.09.1949
நேரம் மாலை: மணி 7.20 PM (19.20 IST)
இடம்: ராபின்சன் பூங்கா, ராயபுரம் சென்னை
நட்சத்திரம்: புனர்பூசம்
(ஸ்ரீ ராமபிரானுடைய நட்சத்திரம்)
---------------------------------------
நீ அப்போது பிறந்திருக்ககூட மாட்டாயே உன்க்கு
எப்படித் தெரியும் என்கிறீர்களா?
எல்லாம் என்னுடைய சேகரிப்புக் கோப்பில் உண்டு!
அதன் Scanned Copy கீழே உள்ளது.

30 வருடங்களுக்கு முன்பு ஒரு பெரிய ஜோதிடர்
கணித்தது. அரசியல் வாதிகளுக்குத் தெரியாத
ஜோதிடர்களும் இல்லை ஜோதிடர்களுக்குத்
தெரியாத அரசியல்வாதிகளும் இல்லை!

நம் அம்மா கட்சியின் ஜோதிடர் கேரளாவில்
இருக்கிறார் ( உன்னிகிருஷ்ண பணிக்கர்)

இன்றைய கர்நாடக முதல்வரின் ஜோதிடர்
எங்கே இருக்கிறார் தெரியுமா? நம்து வலைப் பதிவர்
சிபியின் ஊரில்தான் இருக்கிறார்!

(அவரிடம் கேட்டால் முகவரி கிடைக்கும்:-)))) )

நம்து கணினிக் கணிப்பில் வரும் ஜாதகங்களுக்கும்
(அதெல்லாம் இப்போது 10 வருடஙகளாகத்தானே)
அன்று மனித முயற்சியால் கணிக்கப்ப்பெற்ற
ஜாதகங்களுக்கும் வேறுபாடு துளிக்கூட இருக்காது
அதை உங்களுக்குச் சுட்டிக் காட்டும் முகமாக
தி.மு.கவின் ஜாதகத்தைக் கணினியில் கணித்தும்
கொடுத்துள்ளேன்

இன்று கேட்டுள்ள மூன்று கேள்விகளுக்கும் சரியான
பதிலை எழுதுபவர்கள் நாளை முதல் முதல் பெஞ்ச்சில்
அமரலாம்:-))))

(தொடரும்)
---------------------------------------
லக்னம் (Ascendant) என்பதைப் பற்றி அறிவியல்
பூர்வமாக நமது வணக்கத்திற்குரிய கூகுள் ஆண்டவர்
சொன்னால் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள் என்பதற்காக
லக்கினத்தைப்ப்ற்றி அவர் சொல்வதையும் நீங்கள்
தெரிந்துகொள்வதற்கான சுட்டியைக் கொடுத்துள்ளேன்!
---------------------------------------------------------------------
================================================





=========================================================

19.3.07

ஜாதிகள் இருக்குதடி பாப்பா!



ஜாதிகள் இருக்குதடி பாப்பா!

ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 16
By SP.VR.சுப்பையா

என் இனிய வலையுலக நண்பரும், இதயநோய்
மருத்துவருமான திரு.எஸ்.கே அவர்கள் இதே
தலைப்பில் பதிவு ஒன்றைப் பதிந்திருந்தார்.

வியப்புடன் அவருடைய பதிவுற்குள் நுழைந்து
படித்தேன். அருமையான பதிவு. மனிதனின்
இரத்தம் நான்கு வகைப்படும். அது பிற்ப்பு முதல்
இறப்புவரை மாறாது என்று எழுதியிருந்தார்

ஜோதிடத்திலும் மனிதன் நான்கு வகையில்
ஏதாவ்து ஒன்றில்தான் பிறப்பான். அது அவன்
காலம் முழுவதும் தொடர்ந்து அவன் காலமாவது
வரை மாறாமல் இருக்கும்

ஆமாம் ஜாதகங்கள் நான்கு வகைப்படும். நான்கு
வகையிற்குள் மட்டுமே ஏதாவ்து ஒன்றில் அடங்கி
விடும். எந்தக் கொம்பனாக இருந்தாலும் அந்த
வகையை விட்டு வெளியே வந்து வேறு வகைக்குக்
கட்சி மாறமுடியாது.

அவை என்ன என்கிறீர்களா?

சொல்கிறேன் கேளுங்கள்!

1. தர்ம ஜாதகம்
2. தன ஜாதகம்
3. காம ஜாதகம்
4. ஞான ஜாதகம்
என்பதுதான் அந்த நான்கு ஜாதிகள்!
-----------------------------------------------------
தர்ம ஜாதகம் என்பது Birth Chartல் 1ம் வீடு,
5ம் வீடு, 9 ம் வீடு ஆகிய வீடுகளைச் சிறப்பாகக்
கொண்ட ஜாதகம்.
(First House - Lagna - it is the house of physical strength
Character, Influence and self control over the life
Fifth House- House of Poorva Punya - Keen Intelligence
Ninth House - House of Bhagya (Gains), Father, Ancestral
Properties & Charitable Deeds)
இந்த அமைப்பில் பிறந்த ஜாதகன்தான் பெயரும் புகழோடும்
இருப்பான்,நிறைய தர்ம காரியங்களைச் செய்வான்,
கோவில் குள்ங்களைக் கட்டுவான், பள்ளிக்கூடங்களைக்
கட்டுவான் பல சமூக சேவைகளைச் செய்வான்.
இறந்த பிறகும் அவன் பெயர் பூமியில் நிலைத்து நிற்கும்.
--------------------------------------------------------
தன ஜாதகம் என்பது Birth Chartல் 2ம் வீடு,
6ம் வீடு, 10ம் வீடு ஆகிய வீடுகளைச் சிறப்பாகக்
கொண்ட ஜாதகம்.
(Second house is the house of finance,
Sixth house is the house of servants
10th House is the house of profession / Business
இந்த அமைப்பில் பிறந்த ஜாதகன்தான் நிறைய
சம்பாதிப்பான், பணம் சேர்ப்பான், அபரிதமான
செல்வம் சேரும் - ஆனால் அவன் அதை
enjoy பண்ண மாட்டான்.He will earn money,
accumulate the money and leave the wealth to
someone, either it may be his children, relatives
or friends who will enjoy it
--------------------------------------------------------
காம ஜாதகம் என்பது Birth Chartல் 3ம் வீடு,
7ம் வீடு, 11ம் வீடு ஆகிய வீடுகளைச் சிறப்பாகக்
கொண்ட ஜாதகம்.
(Third House is the house of courage,
Seventh house is the house of women
Eleventh house is the house of fortune)
இந்த ஜாதகன்தான் உலகில் எல்லாவற்ரையும்
அனுபவிக்கப் பிறந்தவன். அவனுடைய பண்மோ,
அல்லது அவன் தந்தை வைத்துவிட்டுப்போன
பணமோ, அல்லது மாமனாரிடம் கொள்ளையாகக்
கிடைதத் பணமோ அல்லது நண்பர்களின் பண்மோ
அல்லது கடன் வாங்கி ஏமாற்றிய பணமோ அது
எதுவாக இருந்தாலும் அலட்சியமாக செலவுசெய்து
வாழ்க்கையின் எல்லா சிற்றின்பங்கள், பேரின்பங்கள்
என்று இன்பமாக அனுபவித்துவிட்டுப் போகக்
கூடியவன் இவன்தான்
---------------------------------------------------
ஞான ஜாதகம் என்பது Birth Chartல் 4ம் வீடு,
8ம் வீடு, 12ம் வீடு ஆகிய வீடுகள் பலமாக
உள்ள ஜாதகம்
(4th House is the house of Comforts-சுக ஸ்தானம்
8th House is the house of difficulties and 12th house
is the house of Losses -
விரைய ஸ்தானம்
வாழ்க்கையில் எல்லா சுகங்களையும் இழ்ந்து,
எல்லா கஷ்டங்களையும் பட்டுப் பரிதவித்து
சொத்துக்கள், கையிலிருந்த் காசு பணத்தையெல்லாம்
பரிகொடுத்து, அல்லது ஏமாந்துவிட்டுக் கடைசியில்
ஞானியாகி அல்லது நடு வயசிலேயே ஞானியாகி
"உலகே மாயம் - வாழ்வே மாயம்" என்று தத்துவம்
பேசும் நிலைக்கு வந்துவிடக்கூடிய ஞானி இந்த ஜாதகன்
இதே ஒன்று முதல் பன்னிரெண்டு வீடுகளுக்கும்
வேறு பணிகளும் உண்டு. மொத்தம் 12 x 3 = 36
பணிகள் உள்ளன. இவ்ற்றில் ஒரு ஜாதகனுக்கு
18 மட்டுமே இருக்கும் மீதி 18 இருக்காது. அதுதான்
அமைப்பு.

எதெது உள்ளது எதெது மறுக்கப்பட்டுள்ள்து
என்று தெரிந்து கொண்டு கிடைத்தைதைக் கொண்டு
சந்தோஷ்மாக வாழ்வதுதான் வாழ்க்கை!

கவிஞர மேத்தா அவர்கள் சொன்னதுபோல உழைப்ப
வனுக்கு ஒழுங்காகக் கூலி கிடைக்காது. ஆனால்
உழைப்பதுபோல நடிப்பவனுக்கு (நடிகனுக்கு)
கோடிக்கணக்கில் பண்ம் கிடைக்கிறது.

பாண்டிச்சேரியின் முன்னாள் முதல்வர் ஃபரூக்
மரைக்காயர் ஒருமுறை சொன்னார். கடவுளால்
உனக்குக் கொடுக்கப்பட்டதை யாராலும் பறிக்க
முடியாது. அதுபோல கடவுளாம் மறுக்கப்பட்டதை
யாராலும் உனக்குத் தரமுடியாது.

விவரமாக ஜாதகங்களிலிருந்து அதைத்
தெரிந்து கொள்ளலாம்.

அது பற்றி விவரமாகப் பின்வரும் பதிவு ஒன்றில்
பார்ப்போம். அடிப்படைப் பாடங்கள் தெரியாமல்
அதைப் புரிந்து கொள்வது சிரமம்.

ஆகவே முதலில் அடிப்படைப் பாடங்கள்!

அடிப்படைப் பாடங்கள் மொத்தம் 18 உள்ளன
நாளையிலிருந்து ஒவ்வொரு பாடமாகப் பார்ப்போம்
/ படிப்போம்

பதிவின் நீளம் கருதி இன்று இத்துடன் முடித்துக்
கொள்கிறேன்
==========================

நேற்று இரண்டு பின்னூட்டங்கள் இந்த்ப் பதிவுகளுக்கு
எதிராக வந்தன. அவற்றை நான் வெளியிடவில்ல!

அந்த நண்பர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்
இது உங்களுக்கான் வகுப்பு அல்ல!

இது ஜோதிடத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கு
மட்டுமே என்று நடத்தப்படும் வகுப்பு!

நீங்கள் உங்கள் அவநம்பிக்கைகளை உங்களோடு

மட்டும் வைத்துக் கொள்ளூங்கள்.

எங்கள் நம்பிக்கைகளைச் சிதைப்பதற்கு உங்களுக்கு
எந்த உரிமையும் கிடையாது!

(தொடரும்)
---------------------------------

நேற்றுப் பதிந்த பதிவைப் படிக்காதவர்களை
அதைப் படிக்க வேண்டுகிறேன் அதில் முக்கியமான
இரண்டு செய்திகள் உள்ளன!

17.3.07

ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 15

Pandit Jawaharlal Nehru being sworn in as India's
first Prime Minister by
Lord Mountbatten on
August 15, 1947 At 00.01 Hours at New Delhi

===========================================
அடியவன் ஜோதிடப் பாடங்களைப் படிக்கும்
காலங்களில் ஒன்றைக் கவனித்திருக்கிறேன்.
ஜோதிடத்தில் ஒரு புது விதியைப் படிக்கும்
போது அல்லது ஒரு புதுச்செய்தியைத் தெரிந்து
கொள்ளும்போது, முதலில் அது என்னுடைய
ஜாதத்திற்குப் பொருந்தி வருகிறதா என்றுதான்
என் மனம் நினைத்துப் பார்க்கும்.

இது அனைவருக்கும் பொருந்தும்

உதாரணத்திற்கு சனி இரண்டாம் வீட்டில் இருந்தால்
காசு த்ங்காது (Expense oriented horoscope) என்று
படித்தால் என் ஜாதகத்தில் சனி எங்கே உள்ளது
என்றுதான் மனம் ச்டாரென்று யோசிக்கும்

அதுபோல லக்கினாதிபதி (Owner of the first house
or Lagna) 11ம் வீடாகிய லாப ஸ்தானத்தில்
(That is in the 11th house) என்று படித்தால் என்னுடைய
சிம்ம லக்கின அதிபதியான சூரியன் 11ம் வீட்டில்
இருக்கின்றாரா? என்றுதான் மனம் அலை பாய்ந்து தேடும்

(If the lagna lord is in the 11th house, the native will
have less efforts and maximum benefits)

எனக்கு மட்டுமல்ல அனைவருக்கும் இது பொருந்தும்

இனி வரும் பாடங்களில் பல விதிகளை
உதாரணத்துடன் சொல்ல உள்ளேன்

ஆகவே நீங்கள் உங்கள் ஜாதகத்தை மனனம் செய்து
விடுங்கள்.அல்லது ஒரு காகிதத்தில் குறித்து வைத்துக்
கொள்ளுங்கள். அல்லது கணினியில் சேமித்து வையுங்கள்
அவ்வப்போது ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்!
-------------------------------------------------
இன்றைய பாடம்: ஜாதகம் கணிப்பது எப்படி?

பத்து வருடங்களுக்கு முன் என்றால் யாராவது
ஜோதிடர் கணித்துக் கொடுத்தது இருக்க வேண்டும்
நாமே கணிப்பது என்றால் பஞ்சாங்கத்தை வைத்துக்
கொண்டு கணிப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும்

இப்போது கணினியில் பல மென்பொருள்கள் உள்ளதால்
அதெல்லாம் 'just like that' என்று படு சுலபமாகி
விட்டது. நாம் புத்தகத்தை வைத்துக் கணிக்கும் போது
தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

கணினி முறையில் அந்தக் கஷ்டமெல்லாம் இல்லை
--------------------------------------------------------
தேவையானவை:
1. பெயர்
2. பிறந்த் ஊர்
3. பிறந்த நேரம் (அந்த நாட்டின் Standard Time)
4. அந்த நாட்டின் Standard Timeற்கும் GMTக்கும்
உள்ள நேர வித்தியாசம்
(இந்தியா என்றால் 5.Hours 30 Minutes East)
5. பிற்ந்த அட்ச ரேகை, மற்றும் தீர்க்க ரேகை
(Longitude and Lattitude)
Heavens above என்னும் இணைய தளத்தில்
20 லட்சம் ஊர்களுக்கு அட்ச ரேகை, மற்றும் தீர்க்க
ரேகைகள் கொடுக்கப்பட்டுள்ளன
--------------------------------------------
ஜாதகம் கணித்துத் தரும் தளத்தின் முகவரி
=================================

ப்திய வேண்டிய முறை:
கீழே உள்ள Screen Shot படத்தில் உள்ளது
(அதில் உள்ள Window வில் இந்தத் தகவல்களை
நிரப்பி - உடன் Chart Type - என்றுள்ளதை
South Indian என்று டிக் செய்யவேண்டும்!)

===================================
==============================================
என்ன புரியும்படியாக சொல்லியிருக்கின்றேனா?
இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது
பின்னூட்டம் - வாருங்கள்
------------------------------------------------------

இன்று உதாரண ஜாதகமாக ந்மது தாய் நாட்டின்
ஜாதகத்தைக் கணித்துக் காட்டியுள்ளேன்
என்ன நாட்டிற்குச் ஜாதகமா என்கிறீர்களா?
ஆமாம் கண்மணிகளே நம் நாட்டிற்கும் ஜாதகம்
உண்டு! அதைப் பத்திரப்ப்டுத்தி வைத்துக் கொள்ளுங்கள்
அதை வைத்துப் பல சுவாரசியமான செய்திகள் உண்டு!
அவைகள் பின் பதிவுகளில் வரும்
--------------------------------------
பெயர்: India
பிறந்த தேதி: 15.08.1947 Friday
பிறந்த நேரம்: 00.01 Hours
அட்சரேகை: 28.39 North
தீர்க்க ரேகை: 77.13 East
Indian Standard Time (IST) ற்கும் GMTக்கும்
உள்ள நேர வித்தியாசம் 5.30 East
----------------------------------------

===================================================
தமிழ்மண்ம் முகப்பில் பதிவு இரண்டு அல்லது
மூன்று மணி நேரத்திற்குப் பிறகு கண்ணில்
படாமல் போய்விடும். அதை அங்கேயே நிறுத்தும்
ஜகஜால வித்தைகள் எனக்குத் தெரியாது.
அப்படியே ஒருநாள் தாக்காட்டினாலும், அடுத்தநாள்
காணாம்ற் போய்விடும்

ஆகவே பதிவைப் போட்டவுடன் எனது மாணவ
மணிகளூக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்த
உள்ளேன். ஆகவே முதல் பெஞ்சாக இருந்தாலும்
சரி, கடைசி பெஞ்சாக இருந்தாலும் சரி அல்லது
வாரத்திற்கு ஒருமுறைதான் வகுப்பிற்கு வருவேன்
என்று அடம் பிடிப்பவர்களாக இருந்தாலும் சரி
உங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தெரியப் படுத்த
வேண்டுகிறேன்.

ரகசியம் காக்கப்படும். Mass Mail முறையில்
வராமல் தனித்தனி மின்னஞ்சல் உங்களுக்கு வரும்
(அதற்குரிய நுடபம் அடியவனுக்குப் பழக்கமான
ஒன்று. நான் எனது வியாபார சம்பந்தமான செய்திகளை
அப்படி அனுப்புவதுதான் வழக்கம். 100 மின்னஞ்சல்கள்
என்றாலும் ஒன்றில் கூட அடுத்தவருடைய முகவரியைப்
பார்க்க முடியாது!)
--------------------------------------------------------
அன்புடன்,
SP.VR. சுப்பையா, கோயமுத்தூர்
Email ID: classroom2007@gmail.com

15.3.07

பின்னூட்ட மன்னருக்காக ஒரு பதிவு!

பின்னூட்ட மன்னருக்காக ஒரு பதிவு!

ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 14

பின்னூட்ட மன்னர், சிங்கை இளவல், நாகைச் சூறாவளி
கோவி.கண்ணன் அவர்கள் இந்த ஜோதிடம் ஒரு பார்வை
பகுதி எண் 9ல் ஒரு பின்னூட்டம் இட்டிருந்தார்.

அதைப் பார்க்க விரும்புபவர்கள் இங்கே சொடுக்கவும்!

அவருக்குப் பதில் கொஞ்சம் விரிவாகவே சொல்ல
விரும்பியதால் இந்தப் பதிவு. அவருடைய நியாமான
கேள்விக்கு உரிய பதிலை வகுப்புக் கண்மணிகளும்
தெரிந்து கொள்ளட்டும் எனத் தனிப் பதிவாகவே
இட்டுவிட்டேன்.

இதில் எதாவது அவருக்குச் சந்தேகம் இருந்தால
பதிவுக்குப் பதிவு என்று போகாமல் பின்னூட்டத்தி
லேயே கேட்கலாம்:-)))

///கோவியார் சொல்லியது:சுப்பைய்யா ஐயா,
மேலே குறி(ப்பிட்ட) சம்பவம் உண்மையா
இல்லை என்ற ஆராய்ச்சிக்கு நான் போகவில்லை.
பல சோதிடர்கள் நம்பவைக்க ஆட்களை தலை
ஆட்டுவதற்கும் கேள்விகளுக்காக தயார்
கதைகளையும் வைத்திருப்பார்கள் என்று
கேள்விப்பட்டு இருக்கிறேன்.
நேற்று தொலைக் காட்சி செய்தியில்
வைத்தீஸ்வரன் கோவில் நாடி சோதிடர்
செத்தவர் கைரேகையை பார்த்து ஆயுள்
கெட்டி என்று சொன்னதாக கூட செய்திகள்
வந்திருக்கின்றன.

சோதிடர் சொல்வது
எல்லாமே சரி என்றால் காணமல்
போனவர்கள் பற்றி தெரிந்து கொள்ள
காவல் துறை தேவை இல்லை.//

"உண்டு என்றால் அது உண்டு
இல்லையென்றால் அது இல்லை"
என்று கவியரசர் முன்பே எழுதிவைத்து
விட்டுப்போனார்.

இறைவனுக்கு மட்டுமல்ல - ஜோதிடத்திற்கும்
அதுதான் பதில். என் முதல் மூன்று பதிவுகளைப்
படித்துவிட்டு வாருங்கள்.

அரைகுறை ஜோதிடர்களால் ஜோதிடத்திற்கு
கெட்ட பெயர் ஏற்படுவது உண்மை. ஆனால்
ஜோதிடம் அறிவியல் பூர்வமானது
என்பதற்கு கடந்த எட்டுப் பதிவுகளிலும்
நிறைய ஆதாரங்களைக் கொடுத்துள்ளேன்.
அவற்றை எல்லாம் படியுங்கள்

இன்னும் கொடுக்க உள்ளேன் தொடர்ந்து
படியுங்கள்

யாரையும் பிடித்து இழுத்து வந்து ஜோதிடத்தை
நம்ப வைக்க வேண்டுமென்பது என்னுடைய
நோக்கமல்ல! எனக்குத் தெரிந்தவற்றை
எழுதுகிறேன் அவ்வளவுதான்.
ந்ம்புவதும், நம்பாததும் படிப்பவர்களின்
மனதில் உள்ளது!

நம்புவதால் எனக்கு எந்த ஆதாயமும் இல்லை
நம்பாவிட்டால் எனக்கு எந்தவிதமான
நஷ்டமும் இல்லை!

//சோதிடர் சொல்வது எல்லாமே சரி என்றால்
காணமல் போனவர்கள் பற்றி தெரிந்து கொள்ள
காவல் துறை தேவை இல்லை.//

"பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக்
கொண்டதடா மீதி மனதில் மிருகம் இருந்து
ஆட்டிவைத்ததடா"
என்று எழுதினார் கவியரசர்.

இன்றைய நாகரீக உலகில் மிருக குணமுடைய
மனிதர்கள்தான் அதிகம். அத்னால்தான் போலீஸ்
நிலையங்கள் (உங்களைப் போன்ற நல்லவர்
களைக் காக்க)

திருவண்ணாமலையில் அருணகிரிநாதருக்கு
முருகப் பெருமான் காட்சி கொடுத்து, அவருடைய
நோயைக் குணப்படுத்தியதுடன், முத்து என்று
அடியெடுத்துக் கொடுத்து திருப்புகழைப் பாட
வைத்தார் என்பது வரலாறு.

அதைச் சொன்னால், நான் ந்ம்ப மாட்டேன்,
ஒன்று அன்று நடந்ததற்கு ஏதாவது
'Strong Evidence' காட்டு அல்லது முருக்ப்
பெருமானை வரவழைத்து எனக்குக் காட்டு
என்றால் என்ன செய்வது?

எனது நெருந்கிய உறவினர் ஒருவர். தீவிர
நாத்திகவாதி. எனக்கு இனிய ந்ண்பரும்கூட.
அவருடைய தாத்தா தந்தைபெரியார்
அவர்களின் நெருங்கிய நண்பர். அந்தக்
காலத்தில், பெரியார் அவர்கள் எங்கள்
பகுதிக்கு வந்தால் அவர்கள் வீட்டில்தான்
தங்குவார். பெரியார் மட்டுமல்ல அந்தக்
காலத்தில் அறிஞர் அண்ணா
உட்பட பல தி.மு.க தலைவர்கள் காரைக்குடிக்கு
வந்தால் அவர்கள் வீட்டில்தான் தங்குவார்கள்.
இன்று சென்னையில் உள்ள ஒரு பெரிய
திரைப்பட இயக்குனருக்கும், மற்றும்
திராவிடர் கழகத்தில் உள்ள புகழ் பெற்ற பேச்சாளர்
ஒருவருக்கும் அவர் சகோதரியின் மகனாவார்.
அந்த உறவினருக்கும் எனக்கும் அடிக்கடி
தர்க்கவாதம் நடக்கும்.

அவர் கேட்பார், " கோவிலை ஏன் பூட்டுகிறீர்கள்?
தன் உடைமைகளைக் காப்பாற்றிக்கொள்ள
உங்களுடைய இறைவனுக்குத் தெரியாதா?"

நான் சொல்வேன்," இறைவன் ஒன்றும் கோவில்
கட்டிக் கும்பிடு என்று சொல்ல்வில்லை. மேலும்
விலை உயந்த பஞ்சலோக சிலைகளையும்,
தங்க, வைர நகைகளையும் எனக்கு அணிவியுங்கள்
என்று சொல்லவில்லை. பகதர்கள் காலம் காலமாக
தங்கள் ப்கதி மிகுதியினால் அப்படிச் செய்கின்றார்கள்.
அதையே ஒருவன் உள்ளே வந்து
திருட முயன்றால், கருணை மிகுந்த கடவுள், பிழைத்துப்
போகட்டும், வயிற்றுப் பசிக்காகத் திருடுகிறான் என்று
கண்டு கொள்ளாமல் விட்டு விடுவார். அந்தத் திருட்டு
நடந்தால் செய்து வைத்த மக்களின் மனது எவ்வளவு
கஷ்டப்படும்? அதைத்தடுக்கவே கோவிலுக்குப்
பூட்டும், காவலும் உள்ளன!"

இதில் ஒரு சுவாரசியம் என்னவென்றால், இறைவன
இல்லை என்று வாதம் செய்யும் அவர், ஜோதிடத்தில்
மிகுந்த ந்ம்பிக்கை உள்ளவர்.அவர்தான் எனக்கு இந்த
ஜனவெளி ஜோதிடரைப் பற்றி முதன் முதலில்
தகவல் தந்தவர்.

பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.
விளக்கம் போதுமென்று நினைக்கிறேன்!

அன்புடன்
SP.VR.சுப்பையா

14.3.07

ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 13

ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 13

நாஸ்டர்டாமஸைப் பற்றி பலருக்கும் பல சந்தேகங்கள்,மனதில் பல கேள்விகள் உள்ளன

அவற்றிற்கு விடையளிக்கும் முகமாக இந்தப் பதிவு.

இதை இணையத்திலிருந்து எடுத்தேன்.
மொழிமாற்றம் செய்ய நேரமில்லை.
தனித்தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்கவும்

எடுக்கப் பெற்ற மூலத்தைப் படிக்க விரும்புபவர்கள்
இங்கேசொடுக்கிப் பார்க்கலாம்.

இந்தப் பதிவைப் போடுவதற்குக் காரணம்
சகோதரிபொன்ஸ் அவர்களின் பின்னூட்டம்.
அவர்களுக்கும் என்நன்றியைத் தெரிவித்துக்
கொள்கிறேன்
----------------------------------------------
Nostradamus FAQs

Author/Editor: Jeffrey Koenke (email: j-koenke@eurysis.com)
Original Author: James Flanagan
Significant Contributions from:
James Flanagan
Goro Adachi
Marc Nijweide
Doug Taylor
Zoltan
---------------------------
Question.
What was Nostradamus' day job?
Answer.
Nostradamus was educated as a physician and was
noted for his work during the plagues of the 16th
century. In later years, he worked as an astrologer
to clients who included the Queen of France.

Question.
What did Nostradamus write?
Answer.
Apart from his professional works (in which no one
is really interested) he produced a number of
prophetic works.We discern between the Centuries and
the Prognostications.
The Prognostications are like an Almanac.
They contain a series of Predictions about the next year.
Because these predictions were fulfilled (or not)
more than 440 years ago few are interested in them.
The really interesting stuff is the Centuries.
This name comes from the fact that each Centurie
contains 100 prophetic verses of 4 lines.
These verses are called quatrains. Nostradamus wrote
10 Centuries, which are commonly numbered by
roman numerals I to X.

Question.
In what kind of verse did Nostradamus write?
Do the verse numbers have anything to do with
the dates when the events are to occur?
Answer.
Nostradamus left his predictions in the form of
several letters, almost 1000 4-line verses called quatrains
(the Centuries), and a collection of 6-line verses called
sixains. The prophesies are not sequential by date.
Some interesting coincidences have been observed
between the quatrain number (in the Centuries) and
the last two digits of the year of the corresponding
event, but this is not uniformly true.

Question.
It seems like there are more earthquakes, volcanoes,
blizzards, cancer deaths, etc. today than ever before.
Didn't Nostradamus predict that these things would
happen at the end of the world?
Answer.
No. There are various prophesies that can
be interpreted as earthquakes, bad weather,
even global climate change. It seems that occurances
of these events are to increase around the
"time of troubles" and rise of the Anti-Christ.
Nostradamus specifically said in one of his letters
that he does not predict the end of the world.
He also stated that his prophesies extend out
several thousand years, which is far beyond the
present age. The perception that there are more
bad events than ever before may also be an artifact
of observation. There have always been fires,
earthquakes, genocide, wars, etc. It's just that
CNN has not been around until recently.

Question.
Didn't Nostradamus say the world would
end in (pick one) 1984, 1999, 2000, 2012?
Answer.
Nostradamus clearly stated, in plain French that his
prophecies would extend to the year 3797 ( See preface ).
It is not clear whether this (or is not) the end or the
world E.Leoni states: '.... this will be the year
when the roll is called up yonder.' Keep in mind that this
is Leoni's interpretation.

Question.
Did Nostradamus predict any specific names, dates, or events?
Answer.
The names of [Louis] Pasteur, [Gen. Francisco]
Franco, and others are clearly given by Nostradamus.
The exact date of the London Fire (1666) is also plainly
given. Many interpreters think that Hitler's name is also
given, slightly modified, as "Hister." There are still many
unsolved names and dates. In other quatrains, several
dates are given in terms of fairly specific and unique
astronomical data (e.g., planet positions in the zodiac).

Question.
I'm missing quatrains 43-100 in Centurie VII.
Answer.
You're not missing them, for unknown reasons
Centurie VII contains only 42 quatrains. The reason
behind this is unknown. However, there are
publications with more than 42 verses.
Although these are written in the style of Nostradamus
we can not be sure about their origin.
( However, note that the date signed under the
Epistle is 1558, 58+42 = 100, a complete century.
Does C-VII contain predictions for the 16th century ???)

Question.
Nostradamus refers to 3 Anti-Christs. Who are (were) they?
Answer.
It is commonly believed that the first two Anti-Christs
were Napoleon and Hitler. The identity of the third
Anti-Christ is not yet known. Some people believe that
Saddam Hussien will be the 3AC. Many believe that the
3AC will come from the Mid-East. Others have argued
that the 3AC will come from East Asia (China, Mongolia
or Korea.) This is a common topic of discussion in the
Nostradamus newsgroup.

Question.
Who is Mabus?
Answer.
Nostradamus makes one reference to a person (?)
named "Mabus". In Century 2,62 Nostradamus states
"Mabus then will soon die" ... many bad things will
happen. Some people say that Mabus is the AntiChrist
(or 3rd AC); however, this does not seem to be
supported by C 2,62, which is the ONLY quatrain in
which the name appears.
There is a lot of discussion as to who Mabus is.
Currently the best three guesses are Saddam, Rabin,
or the current (early 1996) U.S. Ambassador to
Saudi Arabia, Raymond Mabus. Only time will tell
if any of the aforementioned people are
THE Mabus that Nostradamus refers to.

Question.
What did Nostradamus say about China?
Answer.
Very little or nothing. He does refer to the
King of the Mongols, and to a King from beyond the
Black Sea. Most of the discussion about China relates
to a verse from the Bible that mentions an army of 200 Million.

Question.
I just read in the National Enquirer (World News,
Globe, etc.) that Nostradamus predicted the outcome
of the O.J.Simpson Trial (the end of the world; winning
lotto number, etc.). Can you tell me if this is really
a prediction from Nostradamus?
Answer.
Most of these are complete fabrications.
Here are some giveaways:
If the prediction is very specific, it is probably bogus.
Nostradamus almost always concealed his meaning in
anagrams, symbolism, and mythological allusions.
(There are exceptions, however, see below.)
If the event is minor in the "grand scheme of things,"
the prediction is probably bogus.
Who will care about the OJ Trial or the blizzard
of '96 in 100 years?
These articles almost never give a citation to the
original verse. Often all they give is an English
"translation" that reads like it was composed by Bart
Simpson. Not providing a reference makes it very
difficult to find the original (if it exists at all),
because translations vary tremendously.
Consider the source. Is the article wedged between
ads for nose hair clippers, trusses, and bust enhancers?
Enough said.
If you are interested in finding out about a particular
verse or topic, post a notice to the USENET group, alt.
prophesies.nostradamus. There, several hundred
readers can help you find whether Nostradamus
wrote it or not. It's OK if the article is complete tripe
the posting will provide a good laugh. Most of us are too
embarrassed to buy those tabloids in the supermarket.
To search for a particular verse yourself when all you
have is a "translation," do the following:
find several "key" words in the supposed translation
(e.g., "bloody" and "glove" for the OJ prediction)
find the french equivalent(s) for each key word
using the on-line English-to-French glossary. Don't forget
to include synonyms or related words (glove -> hand,
fingers, etc.). use one of the on-line indexes of the
Centuries to find quatrains that contain the key words.
goto to the on-line verses (french w/ literal english
translation) & see if there is a resemblance to what
you're trying to find.

Question.
Why is this FAQ necessary?
There is already a Nostradamus FAQ.
Answer.
The existing Nostradamus FAQs in various USENET
archives have a good biography and offer some
provocative interpretations. However, they are
based heavily on the works of D.Cannon (DC), who
claims to have contacted Nostradamus in the Other
World by "hypnosis." While hypnosis may or may
not have validity, people should be encouraged to
read, translate and interpret Nostradamus for themselves.

Question.
If we know in advance that something bad is going
to happen, can't we avoid it?
Answer.
Most of Nostradamus' prophesies are only understood
in retrospect, that is, after the event has occurred.
Few have been understood prior to the event.
Some specific events have been predicted for the
period 1996-1998 by astrological dating and by the
sequence of Popes of the Catholic Church -- see the
essay "At 45 Degrees the Sky will Burn" by Goro Adachi
available on the internet (see below). Stay tuned
to see if the future unfolds as Goro predicts. (This FAQ was written in early 1996).
Question. Why are the quatrains so obscure ? Answer. Nostradamus explains that this was done to avoid persecution from the Inquisition. He also gives this as the reasong why the quatrains are not in chronological order.
Another possible explanation for the obscurity of the quatrains has to do with the breadth of Nostradamus' visions. His visions seem to span thousands of years. It was proabably difficult for him to describe 20th and 21st century technology using 16th century French. Also, it is possible that a single quatrain could refer to several events. The incorporation of 'links' to several different events would further increase the obscurity of a quatrain.
Some more reasons that Nostradamus' writings are difficult to understand and interpret include:
use of language that was, even when written, archaic.
use of anagrams and unknown names.
use of astrological or mythological references.
inconsistent spelling.
nonstandard word order.

Question.
What language did Nostradamus use? Can people
today understand what he meant? Answer.
Nostradamus wrote primarily in "early Modern
French," with an admixture of archaic words
mostly derived from Latin and Greek. Early
Modern French is approximately contemporaneous
with Shakespearian English. He also incorporates
words from the "Languedoc" or Provencal dialect
of southern France. Readers who are familiar
with Latin and modern French can often understand
the original language, even if they have not
studied early French or Provencal.
Question. Where can I get a dictionary of
16-th century French? Answer. French dictionary
of the period is provided by the University of
Chicago's ARTFL Project. A link to it is available on: www.alumni.caltech.edu/~jamesf/nostradamus.html
However, this is useful only if you already know
French and Latin.

Question.
Do native speakers of French have an advantage
in understanding Nostradamus' French compared
with someone who has learned French out of a book?
Answer.
Yes, particularly in recognizing subtle nuances
of meaning and in unscrambling the nonstandard
word order. A good background in classical Latin,
or one of the modern romance languages, is helpful
in understanding the many words that differ from
modern French.

Question.
I think that Nostradamus is balderdash.
Most of his verses are so vague that
it's no surprize that a few of them "hit" at
random. There are over 1000 verses (Centuries
+ Sixains) plus the letters. By chance alone
there are likely to be similarities with real
events.
Answer.
Undoubtedly this sort of random similarity
accounts for many of the "hits" that have
been found by various interpreters. Verses
that are extremely vague and ambiguous can
be interpreted in many different ways.
Unfortunately, most of Nostradamus' verses
are of the vague and ambiguous persuasion.
Thus, it is possible to find at least one
verse that can be interpreted as almost any
given event, provided that the interpretation
is done after the event has already happened.
Several verses appear to be so exact and accurate
that it is difficult to believe that this is due
to chance alone. See, for example,
"Franco & Riviera" at jamesf's web site.

Question.
Why are intelligent people wasting their time
on this stuff? Shouldn't they be out doing
meaningful activites such as saving the whales,
or something?
Answer. Study of Nostradamus is an interesting
intellectual exercise, even for skeptics.
Some people with adequate grounding in French,
Latin, and other languages find Nostradamus
to be an interesting diversion. Many people
enjoy reading the original words that Caesar,
Dante and Chaucer wrote for the same reason.
Some intelligent non-skeptics believe that
the quatrains have some prophetic value. If
it can be determined that Nostradamus has
accurately predicted some events of the past
440 (appox.) years, then it makes sense that
some people would use the quatrains as a tool
for gaining insight on the future.

Question.
Where can I find a good biography of Nostradamus?
Answer.
The books of Erika Cheetham have good biographical
material. These are readily available in university
libraries and even in many bookstores. See also
the other Nostradamus pages on the WWW and the
USENET Nostradamus FAQ. (See below.)

Question.
Are there any other recommended books?
Answer.
E. Leoni, "Nostradamus and his Prophecies".
Wings Books, New York. ISBN 0-517-38809X.

Question.
Who is DC?
What is CWN?
Answer. DC is Dolores Cannon.
CWN is Conversations With Nostradamus.
A three volume book written by DC.
For more information see the question 12 above.

Question.
Who is GMS?
Answer.
GMS is Gordon-Michael Scallion.
He has been on radio and TV. He produces
a monthly newsletter called the Earth Changes
Report. His prophecies are occasionally
discussed/reviewed in this news group.
The following are URLs where you can
find out more about GMS.
A Summary Of Scallion's Most Import
Predictions -- http://www.sedona.net/nen/nhne/
scallionsummary.html (Score 67, Size 27K)
Biographies -- http://205.162.178.61/bio.html
(Score 80, Size 2K)
http://nexusweb.com/~max/art_bell/guests.html

Question.
Where can I find the Quatrains on the Internet?
Answer.
Marc Nijweide's page: http://morra.et.tudelft.nl/~nijweide/ncents/
nostradamus.htmlGoro Adachi's Prophecy Page:http://www.concentric.net/~adachi/
prophecy/prophecy.htm

Question:
Are there any Nostradamus Web sites?
Answer: Yes. Here are a few.
http://www.concentric.net/~adachi/prophecy/prophecy.htmlGoro's home page: See T.J.Germine's essays on the AC on Goro's home page.
http://www.alumni.caltech.edu/~jamesf/nostradamus.htmlA Nostradamus resource page, complete with an FAQ.
http://morra.et.tudelft.nl/~nijweide/ncents/nostradamus.htmlMarc Nijweide's page (lots of good Nost. info).
http://www.cs.uregina.ca/~hebert/Mike Hebert's home page (complete with word search capability):
http://www.infobahnos.com/~ledash/nostradamus.htmlSome interesting web pages about Nostradamus.
http://www.newciv.org/~albert/nosty/nosty-index.htmlAlso don't forget to check out Albert Nanomius' eight part FAQ regularly posted on apn. Excellent stuff as a sidebar to the quatrains, and goes to some lengths in theorizing about the "subject" of N's writings.
http://humanities.uchicago.edu/forms_unrest/TLF.htmlA real honest-a-goodness original 1606 french dictionary with word search capabilities. Not complete, but neither was the french language in 1606.
http://www.wordsmith.org/awad-cgibin/anagramThe Anagram page. Enter a word up to 10 characters long and generate all possible anagrams (The page is very amusing. I [Zoltan] entered the word "mabus" and the most intelligent answer I got back was "as bum").
http://newciv.org/millennium_matters/index.htmlThe Millennium Matters Homepage.
http://newciv.org/millennium_matters/spiritm.htmlMalachy's Prophecy of the Popes: A collaborative effort by Mike Hebert and Zoltan.
http://www.ionet.net/~wes/A short course on understanding biblical prophecies.

-------------------------
(தொடரும்)