மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.4.07

காதலிக்க நேரமில்லை!

===============================================

காதலிக்க நேரமில்லை! காதலிப்பார் யாருமில்லை!
ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 31

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம்'
என்ற கவியரசரின் பாடல் மிகவும் பிரசித்தமானது.

என்னதான் காதல் என்றாலும் , கத்திரிக்காய என்றாலும்,
Love Marriage அல்லது Arranged Marriage என்றாலும்
அது ஜாதகப்படிதான் நடக்கும். ஜாதகத்தில் குறிப்பிட்டுள்ள
காலத்தில்தான் நடக்கும்.

காதல் திருமணம் உயர்ந்ததா? அல்லது பெற்றோர்
பார்த்து நடத்தி வைக்கும் திருமணம் உயர்ந்ததா?
என்று விவாதித்தால் அதற்கு உடன்பட்ட கருத்து
ஏற்படுவது கடினம்.

இரண்டிலுமே நன்மை, தீமைகள் உள்ளன. ஆனால்
இரண்டின் நோக்கமும் ஒன்றுதான்

காதலிப்பது எதற்காக....? திருமணம் செய்துகொண்டு
இன்பமாக வாழ்வதற்குத்தானே!

ஆகவே திருமண வாழ்வு இன்பமானதாக இருக்குமா
என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?

மேலை நாட்டுக்காரர்களுக்கு அதைப் பற்றி எல்லாம்
கவலையில்லை. மணவாழக்கை பிடிக்கவில்லையென்றால்
ஜஸ்ட் லைக் தட்' என்று செய்த விவாகத்தை ரத்து
செய்வதற்கோ அல்லது மீண்டும் திருமணம் செய்து
கொளவதற்கோ அங்கே எந்தவித சமூக / கலாச்சார
இடையூறுகளும் இல்லை!

ஒரு ஆணோ அல்லது பெண்ணோ எத்தனை முறைகள்
வேண்டுமென்றாலும் திருமணம் செய்துகொள்ளலாம்
அங்கே! திருமணம் செய்து கொள்ளாமலேயே தாம்பத்திய
வாழக்கையையும் மேற்கொள்ளலாம்.

கேள்வி கேட்க ஆளில்லை அங்கே!

அவர்களுடைய குடும்ப உறவுமுறைகளைப் பற்றி ஒரு
வேடிக்கையான தகவலும் உண்டு. ஒருமுறை ஒரு
கணவன் தன் மனைவியைக் கேட்டானாம், " எங்கே
நம் குழந்தைகள்? (Where are our children?)

உடனே அவள் பதில் சொன்னாளாம்," உங்கள் குழந்தை
களும், என் குழந்தைகளும், நமது குழந்தைகளுடன்
விளையாடிக்கொண்டிருக்கின்றன! (Your children
and my children are playing with our children!)

அதாவது உன்னைத் திருமணம் செய்துகொள்ளும்
முன்பாக நான் பெற்றெடுத்த பிள்ளைகளும், என்னைத்
திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாக உனக்குப்
பிறந்த குழந்தைகளும், நாம் இருவரும் மணம் செய்து
கொண்டபிறகு நம் இருவருக்கும் பிறந்த குழந்தை
களும் ஒன்றாக விளையாடிக்கொண்டிருக்கின்றன
என்றாளாம்!
இதுதான் அவர்களுடைய கலாச்சாரம் மற்றும் ந்டை
முறை வாழ்க்கை. நம் நாட்டில் இதுவரை
அதற்கெல்லாம வழியில்லை!

சென்னை போன்ற பெரு நகரங்களில், இலை மறைவு
காய் மறைவாக இரண்டொன்று நடக்கத்தான் செய்கிறது.
நகரவாசிகள் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவார்கள்.
ஆனால் மற்ற இடங்களில், குறிப்பாகக் கிராமப்
புறங்களில் அனுமதிக்க மாட்டார்கள்.

நமக்கென்று ஒரு பாரம்பரியம் உண்டு. நம் மண
வாழ்க்கை அதற்குத் தகுந்த மாதிரி இருப்பது அவசியம்!

அப்படியொரு வாழ்க்கை - மண வாழ்க்கை அமைவ
தற்கு ஜாதகம் எப்படி இருக்க வேண்டுமென்று பார்ப்போம்!

ந்ல்ல திருமண வாழ்க்கைக்கு லக்கினாதிபதி, இரண்டாம்
வீட்டிற்குரியவன், 7ம் வீட்டிற்குரியவன் ஆக மூவரும்
பலமாக இருக்க வேண்டும். பெண்களென்றால் அவர்க
ளுடன் குருவும், சூரியனும் கூட பலமாக இருக்க வேண்டும்.

பலம் என்பது என்ன என்பதை இந்தத் தொடரில் பல
முறை சொல்லியிருக்கிறேன். அதாவது ஒரு கிரகம்
தன்னுடைய உச்சவீடு அல்லது, சொந்தவீடு அல்லது
நட்புவீடு அல்லது திரிகோண் வீடுகள், கேந்திர
வீடுகளில் இருப்ப்து முக்கியம். அதுவே அதற்கு
இயற்கையான பலத்தைத் தரும்!

இளம் வயதில் அனைவரின் மனதிலுமே கலர்க் கலராக
கனவுகள் உண்டாகும். திருமண வயதில் பலவிதமான
எதிர்பார்ப்புக்கள், ஏக்கங்கள், தவிப்புக்கள் உண்டாகும்.
அதற்கு ஆண் என்ற பெண் என்ற பேதங்கள் எதுவும்
இல்லை.

எல்லா இளைஞர்களுமே, ஒரு சிம்ரனோ, அல்லது ஒரு
நயன்தாராவோ, அல்லது ஒரு திரிஷாவோ தனக்காகக்
காத்துக் கொண்டிருப்பதாகக் கனவு கண்டு கொண்டிருப்பான்.
ஆனால் கடைசியில் ஒரு காந்திமதியோ அல்லது சுந்தரி
பாயோ வந்து அவன் கரம் பிடிப்பாள்.

அதுபோல பல இளம் பெண்கள், ஒரு விஷாலோ அல்லது
ஒரு அஜீத்தோ அல்லது ஒரு விஜய்யோ வந்து தன்னை
ஆட்கொள்ளப்போவதாகக் கனவு கண்டு கொண்டிருப்பாள்.
கடைசியில் ஒரு பிரகாஷ் ராஜோ அல்லது ஓமக்குச்சி
நரசிம்மனோ வந்து அவளைத் திருமணம் செய்து கொள்வான்.

அதுதான் வாழ்க்கை!

கொஞ்ச நாள் கழித்து அவர்களே தங்கள் மனதைச்
சமாதானப் படுத்திக் கொண்டு, முழு மனதோடு அல்லது
அரை மனதோடு குடும்பம் நடத்தத் துவங்கி விடுவார்கள்.

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை'
என்று தத்துவார்த்தம் வேறு அவர்களைப் பிடித்துக்
கொண்டுவிடும்.

அவனே தன் நண்பனிடம் சொல்வான்." அழகாடா முக்கியம்?
குணம்தானடா முக்கியம்! என் மனைவி குணத்தில் தங்கம்டா,
ரியலி ஐ'யாம் லக்கி!" என்பான்

"கோடி ஒரு வெள்ளை: குமரி ஒரு பிள்ளை "
(அதாவது புதுத் துணி ஒரு சலவை வரைக்கும் தான்.
அதுபோல ஒரு பெண்ணின் அழகும் - அவளுக்கு ஒரு
குழந்தை பிறக்கும்வரைதான்) என்று சகட்டுமேனிக்குப்
பல பொன் மொழிகளைச் சொல்லி நண்பனுக்கும் புத்தி
சொல்ல ஆரம்பித்து விடுவான்.

இதையெல்லாம் மீறி சிலருக்கு மட்டும் பொருத்தமான
ஜோடி கிடைத்துவிடும். பெண் என்றால் அவள் அழகிற்கு
ஏற்பக் கண் நிறைந்த கணவனாக இருப்பான் அல்லது
ஆணாக இருந்தால் அவன் மனதை மயக்கும் அல்லது
மனதை நிறைக்கும் மனைவியாக ஒரு பெண் கிடைப்பாள்

That pair is made for each other ( வில்ஸ் ஃபில்டர்
சிகரெட் விளம்பரத்தில் ஒரு அழகான் ஜோடியைப் படமாகப்
போட்டு இந்த வாசகத்தையும் போட்டிருப்பார்கள்.
Made for each other - அதை நினைத்துக் கொள்ளுங்கள்)
என்று சொல்லும்படியான தம்பதியர் அபூர்வமாக இருப்பார்கள்.

அப்படிப்பட்ட அமைப்பு ஒரு ஐந்து அல்லது பத்து
சதவிகிதம் தான் இருக்கும்!

எல்லாம் ஜாதக பலன்.

ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் என்று சொல்லப்படு
கின்ற ஏழாம் வீடு. அதன் அதிபதி (Owner) 7ல் வந்து
அமர்ந்த கிரகங்கள், சுக்கிரன் ஆகியவற்றைப் பற்றி
விரிவாக அலசுவோம்!
-----------------------------------------------------------------------------------
முதலில் மண் வாழ்க்கை அமைவதற்குப் பல விதிகள்
இருக்கின்றன. அவற்றைக் கீழே கொடுத்துள்ளேன்.

அவற்றில் ஏதாவது ஒன்று இருந்தாலும் மண வாழ்க்கை
அமையும் என்பதில் சந்தேகமில்லை!

இந்த விதிகள் ஆண்கள், பெண்கள் என்று இரு
பிரிவினருக்கும் பொதுவானது!

2ம் வீடு (House of Family affairs) குடும்ப ஸதானம்
7ம் வீடு (House of Marriage) களத்திர ஸ்தானம்

சுப கிரகங்கள் : குரு, சுக்கிரன், சந்திரன்
பாப கிரகங்கள்: சனி, ராகு கேது, செவ்வாய்

மகரராசி, கும்பராசிக்காரர்களுக்கு சனியிடம் இருந்தும்,
மேஷராசி, விருச்சிக ராசிக்காரகளுக்குச் செவ்வாயிட
மிருந்தும் விதிவிலக்குகள் உண்டு. ஏனென்றால்
அவைகள் அந்த வீட்டின் அதிபதிகள்

1. சந்திரன், சுக்கிரன் ஆகிய இரண்டு கிரகங்களும்
ஜாதகத்தில் வலுவாக இருக்க வேண்டும்.வலு என்பது
அவைகள் தங்களுடைய சொந்த, உச்ச, நட்பு, திரிகோணம்,
கேந்திரம் ஆகிய இடங்களில் இருப்பது!

2. ஏழாம் வீட்டு அதிபதி அம்சத்தில் உச்சம் பெற்றிருப்பது

3. 5, 9ற்கு அதிபதிகள் லக்கினாதிபதியோடு சேர்ந்தோ
அல்லது லக்கினாதிபதியின் பார்வை பெற்றோ இருப்பது

4.1,4,7,10ம் வீடுகளில் சுபக் கிரகங்கள் இருப்பது ந்ல்லது

5.லக்கினாதிபதி அம்சத்தில் உச்சம் பெற்று ஏழாம் வீட்டு
அதிபதியைப் பார்ப்பது

6.5ம் வீட்டு அதிபதியும், 5ற்கு 5ந்தான 9ம் வீட்டு
அதிபதியும் சுபக்கிரகங்களாக இருந்து வலுவான இடத்தில்
அமர்வது

7. சுக்கிரன் தன்னுடைய நட்புக் கிரகங்களுடன் சேர்க்கை
அத்துடன் லக்கினாதிபதியின் பார்வையையும் பெறுவது.

8. 5, 7, 9 ஆம் வீடுகளுக்கு அதிபதிகள் லக்கினத்தில் வந்து
அமர்வது அல்லது லக்கினத்தைப் பார்ப்பது

9. 9, 10ற்கு அதிபதிகள் (அவர்களுக்கு தர்ம,கர்ம அதிபதிகள்
என்று பெயர்) ஏழாம் வீட்டில் சேர்ந்திருப்பது . அல்லது
சேர்ந்திருந்தி ஏழாம் வீட்டைப் பார்ப்பது..

10.சுக்கிரனுக்கு மற்றொரு சுபக் கிரகத்தின் கூட்டணி,
அல்லது பார்வை! அல்லது கோண வீடுகளக்கு ஆதிபத்யம்

11.சுபக்கிரகங்கள் கேந்திர, திரிகோண் ஸ்தானங்களில்
சேர்ந்திருப்பது - அத்துடன் பாவக் கிரகங்களின் பார்வை
பெறாமல் இருப்பது

12. 2, வீடு, 7ம் வீடு ஆகிய இடங்களில் சுபக்கிரகங்கள்
இருத்தல் அல்லது அந்த வீடுகளின் மேல் அவற்றின் பார்வை

13.பொதுவாக சபக்கிரகங்கள் உச்ச வீடுகளில் இருப்பது

14. கிரகங்கள் ஒன்றிற்கொன்று கேந்திரத்திலோ அல்லது
திரிகோணத்திலோ இருப்பது

15. ராசிச் சக்கரத்தில் (In Rasi Chart) சுக்கிரன், குரு
இருவரும் பலம் குறைந்திருந்தாலும், நவாம்சத்தில் உச்சம்,
ஆட்சி போன்ற அமைப்பைப் பெற்றிருத்தல்

16. 2,4,5,7,9,11 ஆகிய வீடுகளில் ஒரு வீடாவது குருவின்
பார்வையைப் பெறுவது!

17. குரு திரிகோண வீடுகளுக்கு அதிபதியாகி, கேந்திரத்தில்
இருந்து ஏழாம் இடத்தைப் பார்ப்பது.

இந்த விதிகள் எல்லாம் திரும்ணம் சிறப்பாக நடப்பதற்கு
மட்டும்தான். திருமண வாழக்கை எப்படி இருக்கும் என்பதற்கு
மேலும் பல் விதிகள் உள்ளன. அவற்றை அடுத்து வரும்
பதிவுகளில் பார்ப்போம்
---------------------------------------------------------------------------------
கோச்சாரப் பலன்களின் ஒரு பகுதி பாக்கியுள்ளது. அதை
அட்டவணையாகக் கொடுக்கலாம் என்றுள்ளேன்
அட்டவணை தயாரிப்பில் உள்ளது. அதை நாளையப்
பதிவில் சேர்த்துக் கொடுக்கிறேன்

பதிவின் நீளம் கருதியும், கடைசி பெஞ்ச் கண்மணிகளின்
பொறுமை கருதியும் இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்

(தொடரும்)

25.4.07

அம்மாவின் ஜாதகம் – தொடர்ச்சி!

=============================================
ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 30
அம்மாவின் ஜாதகம் – தொடர்ச்சி!

நேற்று என் பதிவில் வந்து ஒரு அன்பர் கேட்டிருந்தர்ர்
செல்வி ஜெயலலிதா என்ன உங்கள் அம்மாவா ?
அம்மாவின் ஜாதகம் என்று எப்படிப் போடலாம்
என்று கேட்டிருந்தார்.

மகாத்மா காந்தியை Father of the nation என்கிறோம்.
அதுபோல தமிழகத்தில் இரண்டுமுறை முதல் அமைச்சராக
இருந்த மதிப்பிற்குரிய பெண்மணியை அம்மா என்று
விளிப்பதில் தவறில்லை. ஐம்பது வயது தாண்டிய
பெண்கள் அனைவரையுமே (ofcourse - except wife)
அம்மா என்று அழைப்பதுதான் தமிழ்ப்ப்ண்பாடு.

மேலும் நான் அரசியல் ஈடுபாடு இல்லாத நடுநிலைவாதி!
பெரியார் தந்தைபெரியார்தான், காமராஜர் கர்மவீரர்
காமராஜ்தான். கலைஞர்கருணாநிதி அய்யாகருணாநிதிதான்
ஜெயலலிதா அம்மாஜெயலலிதாதான். இதை எங்கே
வேண்டுமென்றாலும் நான் சொல்லுவேன்
எழுதுவேன். யாராயிருந்தாலும் கொடுக்க வேண்டிய
மரியாதையைக் கொடுப்பேன்.

அப்படி இடக்கான சிந்தனை உள்ளவர்கள் - அவர்கள்
மொழியில் சொன்னால் கோக்குமாக்கான சிந்தனை
உள்ள் ஆசாமிகள் எல்லாம் என் பதிவிற்குள் வர
வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்--------------------------------------------------------
அம்மாவின் ஜாதகத்தில் உள்ள சிறப்புக்கள்.


=======================================
1. அவர் மிதுன லக்கினக்காரர். மிதுன லக்கினக்காரர்கள்
அனைவருமே அழகிய தோற்றமுடையவர்களாக
இருப்பார்கள். (உதாரணம், - மறைந்த நடிகர்
திரு.ஜெமினி கணேசன் மற்றும் மத்திய நிதியமைச்சர்
திரு. ப. சிதம்பரம் போன்றவர்கள்)

2. லக்கினாதிபதி புதன் 9ம் வீட்டில் அமர்ந்துள்ளார்.
அது மிதுன லக்கினக்காரர்களுக்குத் திரிகோண வீடு.
பாக்கிய ஸ்தானம் (House of Gains)
புதனுக்கு முதல்தர நண்பனான் சனியின் வீடு.
ஆக்வே அங்கே சிறப்பாக அமர்ந்த புதன் அவருக்குச்
சிறிய வயதிலேயே பணம் புகழ், செல்வாக்கு
அனைத்தையும் பெற்றுத்தந்தார்.

3. ஐந்தாம் வீடான் பூர்வபுண்ணிய ஸ்தானத்திற்கு
அதிபதியான சுக்கிரன் உச்சம் பெற்றுள்ளார். பத்தாம்
வீட்டில் அமர்ந்துள்ளார். அது மிதுன லக்கினக்காரர்
களுக்குக் கேந்திர ஸ்தானம். சுக்கிரன் வாழக்கை
வசதிகளுக்கெல்லாம் அதிபதி அவர் உச்சம் பெற்றதால்
எல்லா வசதிகளையும் கொடுத்திருக்கிறார்.

4. பூர்வபுண்ணிய ஸ்தானத்திற்கு அதிபதியான சுக்கிரன்
உச்சம் பெற்று அமர்ந்த பத்தாம் வீட்டிற்கு அதிபதியான்
குரு பகவான் 7ம் வீட்டில் சிறப்பாக அமர்ந்து லக்கினத்
தைப் பார்வையில் வைத்திருப்பதோடு, தன்னுடைய
10ம் வீடான தொழில் ஸ்தானத்திற்குரிய பணியைச்
சிற்ப்பாகச் செய்து அம்மையாரை முதலமைச்சர் பத்விவரை
கொண்டுபோய் உட்காரவைத்தார்.

5. ஐந்தாம் வீட்டில் அமர்ந்த ஞானகாரகனான் கேது
அம்மையாருக்குப் பன்மொழித் திறமையையும், ஆழ்ந்த்
நுண்ணறிவையும் கொடுத்தார்.

6. பதினொன்றில் அமர்ந்த ராகு அவருக்குப் பெரும்
புகழையும், செல்வாக்கையும், ஏராளமான தொண்டர்களையும், விசுவாசிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தார்.

7. சூரியனும், புதனும் சேர்க்கை பெற்று (Association) 9ல்
அமர்ந்துள்ளதைக் கவனியுங்கள். அரசியலிலும், அரசிலும்
அம்மையாருக்கு அரும்பணிகளை ஏற்படுத்திக் கொடுத்தது
அவர்களின் சேர்க்கைதான்

8. செவ்வாயும், சந்திரனும் சிம்மத்தில் சேர்ந்து சசி மங்கள
யோகத்தை ஏற்படுத்தினார்கள். பெண்ணாகப் பிறந்தாலும்
பெண்களுக்குள் பிரபலமாகி நாட்டின் மிகப் பிரபல்மான பத்துப் பெண்மணிகளில் ஒருவராக அம்மையாரை
முன்னிறுத்தியது அந்த சேர்க்கைதான்

9. குறையில்லாத் ஜாதகமே இருக்காது என்ற நியதிக்கு
ஏற்ப அம்மையாரின் ஜாதகத்தில் லக்கினத்தில் மாந்தி
அமர்ந்தது குறைதான். அவருடைய அதீத
கோப உணர்வும், பிடிவாதமும் பிரசித்தமானது அல்லவா
அத்ற்குக் காரணம் லக்கினத்தில் அமர்ந்த மாந்திதான்.

10. அதுபோல இரண்டாம் வீடான் குடும்பஸ்தானத்தில்
(House of Family Affairs) வந்து அமர்ந்த சனியால் அவருக்குக்
குடும்ப வாழவு அமையாமல் போய்விட்டது.

11. தொழில் ஸ்தானமான் மீனத்தில் கலைகளுக்கு
அதிபதியான் சுக்கிரன் இருப்பதால்தான் அவர் திரைத்
துறையில் நுழைந்து பெரும் புகழையும் பணத்தையும் ஈட்டினார்.

12. பதினொன்றில் அமர்ந்த ராகு ராஜயோகத்தைக்
கொடுத்தார். அவர் அமர்ந்த இடத்திற்கு நாயகனான
செவ்வாயின் திசையில்தான் அவர் முதலமைச்சர் ஆனார்.
திசை புக்திகள் விவரம்

1948. 02.24 ...பிறந்த தேதி
0002.09.00 .. கேது திசை இருப்பு
0020.00.00.. சுக்கிர திசை
0006.00.00 .. சூரிய திசை
0010.00.00.. சந்திர திசை
---------------------
1986.11.24 .... செவ்வாய் திசை ஆரம்பம்
0007.00.00... செவ்வாய் திசை
---------------------
1993.11.24 ....ராகு திசை ஆரம்பம்
0018.00.00... ராகு திசை
------------------
2011.11.24 .....ராகு திசை முடிந்து குரு திசை ஆரம்பம்

ராகு திசை முடிய இன்னும் நான்கு வருடங்கள் ஏழு
மாதங்கள் பாக்கியுள்ளது. அதற்கு அடுத்துவரும்
குரு திசை அவருக்குச் சிறப்பாக இருக்கும்!
------------------------------------------------------------------------------------
கோச்சார பலன்கள் ( தொடர்ச்சி)

சந்திரனின் கோச்சாரபலன்கள்
1ல் நல்ல பலன்கள் நடைபெறும்
2ல் தீய பலன்கள்
3ல் நல்ல பலன்கள் நடைபெறும்
4ல் சுமாரான் பலன்கள்
5ல் தீய பலன்கள்
6ல் நல்ல பலன்கள் நடைபெறும்
7ல் நல்ல பலன்கள் நடைபெறும்
8ல் மோசமான பலன்கள்
9ல் தீய பலன்கள்
10ல் நல்ல பலன்கள் நடைபெறும்
11ல் நல்ல பலன்கள் நடைபெறும்
12ல் தீய பலன்கள்

குறுக்கு வழியில் கணக்கிட்டால் சந்திரன் ஒரு சுற்றில்
அதாவது 27 நாட்களில் பாதி நாட்கள் நல்ல பலன்களையும்,
மீதி நாட்கள் தீய ப்லன்களையும் கொடுக்கும்.

அஷ்டவர்க்கத்தில் சந்திரன் சுற்றிவரும் வீடுகளில்
அதனுடைய சுயவர்க்க எண் 4ற்கு மேற்பட்டால்
மேற்கூறிய விதிகளை மீறி நல்ல பலன்களே நடைபெறும்!

அது அஷ்ட வர்க்கப் பாடம் நடத்தப்படும்போது உங்களுக்குப்
ப்டிபடும் (புரியும்)
-------------------------------------------------------------------------------
பதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும்
இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன். கோச்சாரப் பாடம்
நாளையும் தொடரும்!

அம்மாவின் ஜாதகம்!

=================================================
ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 29
ராசி பலன்கள்
தினசரிப் பத்திரிக்கைகள் எல்லாம் போட்டி போட்டுக்
கொண்டு அன்றைய ராசிபலன்களை எழுதிப் பிரசுரிப்
பதைப் பார்த்திருப்பீர்கள். பலர் தலைப்புச் செய்தி
என்ன என்று பார்த்தவுடன் அடுத்து விரைந்து
பார்ப்பது அந்த ராசிபலன் பகுதியைத்தான்.

இளைஞர்கள் எல்லாம் விளையாட்டுச் செய்திகளுக்கு
அல்லது சினிமாச் செய்திகளுக்கு முக்கியத்துவம்
கொடுத்துப் பார்ப்பார்கள். ஆனால் நடுத்தரவயதுக்
காரர்களும், வயதான பெரிசுகளும் ராசிபலன்
பகுதியைத்தான் முதலில் விரும்பிப் பார்ப்பார்கள்
அதற்குப் பிறகுதான் மற்ற பகுதிகள்

சரி, தினமும் ஒரு பத்திரிக்கைக்கு ராசிபலன்களை
எழுதிக் கொடுக்கும் ஜோதிடர் எந்த அடிப்படையில்
அதை எழுதுகின்றார்?

சந்திர, சூரிய சுழற்சியை வைத்து அதை அவர் எழுதுவார்!

சூரியன் மாதம் ஒரு ராசி, சந்திரன் இரண்டேகால்
நாளைக்கு ஒரு ராசி (தினமும் ஒரு நட்சத்திரம்) ஆகவே
ஒவ்வொரு ராசிக்கும் உரிய தினசரிப் பலனை இந்த
இரண்டு கோள்களின் நிலைமையை வைத்து எழுதிக்
கொடுத்து விடுவார்.

அது 100% சரியாக இருக்குமா?

அது பொதுப்பலன்தான். ஆகவே பொதுவில் சரியாக
இருக்கும். உதாரணத்திற்குப் பணச் சிக்கல் என்று ஒரு
ராசிக்குச் சொல்லப்பட்டிருந்தால், பணத்தை வைத்து
எத்தனை விதமான சிக்கல்கள் இருக்கின்றனவோ
அததனை விதமான சிக்கல்களில் ஏதாவது ஒன்று
அவரவர் சொந்த ஜாதகம், நடப்பு திசை, நடப்பு
புக்திகளை வைத்து அன்றைக்கு வரும்!

பணத்தைத் தேடுவதிலும் (சம்பாதிப்பதிலும்) சிக்கல்
இருக்கிறது. கடனாகக் கொடுத்த பணத்தைத் திருப்பி
வாங்குவதிலும் சிக்கல் இருக்கிறது. பணப் பற்றாக்
குறையும் சிக்கல்தான். பணம் அதிகமாக இருந்தால்
அதைப் பாதுகாப்பதில் - முதலீடு செய்வதில்- சிக்கல்
உள்ளது!

செலவிற்குப் பணம் இல்லாமல் இருப்பதும் சிக்கல்
தான், கொடுத்த இடத்தில் வாங்கிக் கொண்டு போனவர்
சொன்னபடி பணத்தைத் திருப்பித்தராமல்
இழுத்தடிப்பதும் சிக்கல்தான்.

காரிய தாமதம் என்றால், Routine Workஐத் தவிர்த்து
நாம் செய்வதற்கு முனைப்படுகின்ற காரியம்
அன்றைக்கு நிறைவேறாமல் போய்விடும்.

சூரியன் 11-3-10-6 ம் இடங்களில் இருக்கும் மாதங்களும்,
சந்திரன் 7-1-6-11-10-3 ம் இடங்களிலும் இருக்கும்

நாட்களும் பொதுவில் மகிழ்ச்சிக்குரியதாக இருக்கும்.
சந்திரன் உங்களுடைய ராசிக்கு எட்டாம் இடத்திலும்,
12ம் இடத்திலும் சஞ்சாரம் செய்யும் நாட்கள் மகிழ்ச்சி

யைத் தராது.
சரி அதை எப்படித் தெரிந்து கொள்வது?

வெரி சிம்ப்பிள். நீங்கள் திருவோண நட்சத்திரம்
என்றால், உங்களுடைய ராசி மகரம். அதிலிருந்து
எட்டாவது ராசி சிம்மம். சிம்மத்திற்குரிய நட்சத்
திரங்கள் -மகம் - பூரம் - உத்திரம் முதல் பாதம்
(First Six Hours of Uththiram Star). அந்த நட்சத்திரம்
உடைய நாட்கள் சிறப்பாக இராது.

அதுபோல அதே திருவோண நட்சத்திரத்திற்குப்
பன்னிரெண்டாம் இடம் என்னும்போது அது தனுசு
ராசி -அதற்குரிய நட்சத்திரங்கள் மூலம் - பூராடம்
- உத்தராடம் முதல் பாதம் (First Six Hours of
Uththiradam Star). அந்த நட்சத்திரம் உடைய நாட்களும்
சிறப்பாக இராது.

இதுபோல ஒவ்வொரு ராசிக்காரரும் தனக்குச்
சாதகமாக அல்லது பாதகமாக உள்ள நட்சத்திரங்களைக்
குறித்து வைத்துக் கொள்ளலாம்.

அந்த நாட்களில் என்ன செய்யலாம்?

கவுந்தடித்து வீட்டில் படுத்துக் கொண்டு விடலாமா?
கூடாது. அன்றாட வேலைகளைச் செய்யுங்கள்.
That is your routine work. அதற்கெல்லாம் ஆபிஸில்
லீவு கிடைக்குமா என்ன?

அன்றாட வேலைகளைச் (routine work) செய்வதற்கு
நாள், நட்சத்திரங்களைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை!

விஷேசமாக அல்லது புதிதாகச் செய்யவுள்ள
வேலைகளை அன்று செய்யாமல் தவிர்க்கலாம்.
திருமணத்திற்குப் பெண் பார்க்கப் போகிறீர்கள்
என்றால அந்த நாட்களைத் தவிர்க்கலாம். புதிதாகக்
கார் வாங்கப் போகிறீர்கள் என்றால அந்த நாட்களைத்
தவிர்க்கலாம். என்ன, நீங்கள் தேடிப்போகும் மாடல்
அல்லது கலர் கிடைக்காது!
(இரண்டிற்கும் தான்:-))))

ஆண்டுப் பலன்களைச் சனி, மற்றும் குருவை வைத்தும்,
மாத பலன்களைச் சூரியனை வைத்தும், நாள் பலன்களைச்
சந்திரனை வைத்தும் பார்க்க வேண்டும்

சரி, அரட்டைபோதும்! ஓரளவிற்கு தினசரிப் பலன்களைப்
பற்றி உங்களுக்குப் புரியும்படியாகச் சொல்லியிருக்கிறேன்
என்று நினைக்கிறேன். இன்னும் கொஞ்சம் விளக்கம்
வேண்டும் என்பவர்கள் பின்னூட்டத்தில் கேளுங்கள்
-------------------------------------------------------------------------------

கடைசி பெஞ்ச் கண்மணிகளுக்காகக் கட்டம்கட்டி (அட்டவணை)
சூரியனின் கோச்சாரப் பலன்களைக் கொடுத்துள்ளேன்.

இதுபோல மற்ற கிரகங்களுக்குரிய கோச்சாரப் பலன்களும்
தொடர்ந்து வரும்.

பதிவின் நீளம், மற்றும் உங்களின் பொறுமை கருதி இன்று
இத்துடன் நிறைவு செய்கிறேன்

மற்றவை நாளை!
கர்சரை வைத்துக் கிளிக்கினால் படம் பெரிதாகத் தெரியும்!


==========================================
Practical Test:

அம்மாவின் ஜாதகம்

அம்மாவின் ஜாதகத்தைக் கீழே கொடுத்துள்ளேன்
அதைப் பார்த்துக் கீழ்க்கணட கேள்விகளுக்குரிய
பதில்களை எழுதவும்.

மல்யுத்தப் பார்ட்டிகள் சாக்குபோக்குச் சொல்லாமல்
சரியான அல்லது தவறான (?) பதில்களை
எழுதும்படி பணிக்கப் படுகின்றார்கள்!

அம்மாவின் ஜாதகத்திலுள்ள சிறப்பு அம்சங்கள்
அடுத்த பதிவில் விரிவாக எழுதப்படும்!
================================


1. லக்கினாதிபதி அமர்ந்துள்ள இடம் எது?
அதன் பலனால அவருக்கு கிடைததது என்ன?
2. எந்த கிரகம் அவரை முதன் மந்திரிப் பதவிவரை
கொண்டு சென்றது?
3. எந்தக் கிரகத்தின் திசையில் அவர்
முதல் மந்திரியானார்? அதற்குரிய காரணம் என்ன?

(She had become the Chief Minister of Tamil Nadu on 24.06.1991)

(தொடரும்)
==================================================

23.4.07

மங்குசனியும் பொங்குசனியும்!

==============================================
ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 28

கோச்சாரம் (கோள்களின் சாரம்)

ஒரு குடும்பப் பெண்ணிற்குப் பல பணிகள் உள்ளன.
தாயாக, தாதியாக, தாரமாக, தோழியாக அவள்
அவ்வப் போது தன் கடமைகளைச் செய்யவேண்டும்.
பகல் முழுவதும் அவள் தாதியாகத் தன்வீட்டு வேலை
களைச் செய்ய வேண்டும், தன் குழந்தைகளுக்கு
நல்ல தாயாக இருந்து பணிவிடைகளைச் செய்ய
வேண்டும். தன் கணவனிற்குத் தோழியாக இருந்து
அரவணைப்பையும், தாரமாக இருந்து அவனுடைய
அபிலாஷைகளையும் நிறைவேற்ற வேண்டும்.

ஒவ்வொரு நாளும் அவள் பன்முகம் காட்டிப் பணி
களைச் செய்ய வேண்டும். பெண்ணிற்கு என்றில்லை.
ஆணிற்கும் அதேபோல பல பணிகள் உண்டு.
தந்தையாக, பொருளீட்டிக் குடும்பத்தைக் காக்கும்
காவலனாக, தன் மனைவிமீது அன்பைப் பொழியும்
கணவனாக அவனுக்கும் பன்முகப் பணிகள் உள்ளன.

இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால் கோள்
களுக்கும் அவ்வாறு பல பணிகள் உள்ளன!

Natal Chart எனப்படும் பிறந்த ஜாதக அமைப்பில்
உள்ள பலன்களை அவ்வப்போது அவைகள் கொடுத்துக்
கொண்டே இருக்கவேண்டும். அதேபோல தங்களுக்குரிய
திசைகள் (Main periods) அல்லது புக்திகள் (Sub
Periods) வரும்போது அதற்குரிய பலன்களையும்
ஜாதகனுக்குக் கொடுக்க வேண்டும். அதோடு சுழற்சியில்,
வான வெளியில் சுழன்று வரும்போது (That is in
transit) சுழற்சியில் ஒவ்வொரு ராசிக்கும் மாறும்போது
அதற்கென்று விதிக்கப்பெற்றுள்ள பலன்களையும்
வழங்கவேண்டும்.

சுழற்சியில் என்ன பலன் என்கிறீர்களா?

சனீஷ்வரனையே எடுத்துக்கொள்வோம் - அவர் ஒரு
சுற்றை முடிக்க சுமார் முப்பது ஆண்டுகள் ஆகும்.
ஒவ்வொரு ராசியிலும் அவர் இரண்டரை ஆண்டுகள்
சஞ்சரிப்பார். அப்படிச் சஞ்சரிக்கும் காலங்களில்,

1. 12ம் இடம், 1ம் இடம், 2ம் இடம் ஆகிய
இடங்களில் ஏழரை ஆண்டுச் சனியாகவும்
2. 8ம் இடத்தில் அஷ்டமச் சனியாகவும், நான்கு
ராசிகளிலும் சேர்த்து மொத்தம் 10 ஆண்டுகள்
பெரும் அளவு தீயபலன்களையே கொடுப்பார்
ஏழரை ஆண்டுச் சனி (எழரை நாட்டுச் சனி அல்லது
சாடே சனி என்றும் சொல்வார்கள்) ஜாதகனின் சந்திரன்
அமர்ந்த ராசிக்குப் பன்னிரெண்டாம் இடத்தில் சனி
வந்த நாள் முதலே துவங்கி ஏழரை ஆண்டுகள் வரை
நீடிக்கும். அந்தக் காலக் கட்டத்தில் ஜாதகருக்குப்
பொதுவாக தீய பலன்களே நடைபெறும்.

அனைவருடனும் கருத்து வேறுபாடுகள்,சச்சரவுகள்,
வம்பு, வழக்குகள், தொழிலில் நஷ்டம் அல்லது பார்க்கும்
வேலையில் தொல்லைகள், இடமாற்றங்கள், குடும்பத்
தினருக்கு உடல் நலக் குறைவு, மனவேதனை, அமைதி
யின்மை போன்றவைகள் ஏற்பட்டு ஆட்டிப்படைக்கும்.
’சோதனைமேல் சோதனை போதுமடா சாமி' என்று
பாடும் அளவிற்குப் பாதகங்களை ஏற்படுத்தி விடுவார்.

சந்திர ராசியிலிருந்து 3ம்வீடு, 6ம்வீடு, 11ம் வீடு ஆகிய
மூன்று ராசிகளைத்தவிர மற்ற இடங்களில் அவர் நன்மை
களைச் செய்வதில்லை. இதற்கு ஒரு விதிவிலக்கு உண்டு.
அவர் சஞ்சரிக்கும் ராசி அஷ்டவர்க்கத்தில் 30 பரல்களுக்கு
மேல் பெற்ற ராசியாக இருந்தால் அந்த இரண்டரை
ஆண்டுகள் ஜாதகனுக்குத் தீமையான பலன்கள் இருக்காது.
அதைப் பற்றிய விவரம் அஷ்டவர்க்கப் பாடம் நடத்தப்படும்
போது விளக்கமாகச் சொல்லிக் கொடுக்கப்படும்.

ஒருவர் 90 ஆண்டுகள் வரை வாழ்கின்றார் என்று வைத்துக்
கொண்டால், அவர் வாழ்க்கையில் மூன்று முறைகள் இந்த
ஏழரை நாட்டுச் சனி வந்து போய் விடும்.

அவற்றை முறையே மங்குசனி, பொங்குசனி, மரணச்சனி
என்பார்கள்.

முதலில் வரும் ஏழரை நாட்டுச் சனி மங்குசனி எனப்படும்.
அது அறிவு,கல்வி, வேலை வாய்ப்பு அனைத்தையும் மங்க
வைத்து விடும். மொத்தத்தில் வெறுத்து விடும்.(Defame
and detachment Period என்றும் சொல்லலாம்)

அடுத்த சுற்றில் வரும் சனி கஷ்டத்தைக்
கொடுக்கும், ஆனால் அதே நேரத்தில் பல
அனுபவங்களையும், வாய்ப்புக்களையும்
கொடுத்து உயர்த்தி விடும் (Elevation Period
எனச் சொல்லலாம்) அதனால்தான் அந்தக்
காலகட்டத்தைப் பொங்குசனி' என்பார்கள்.
மூன்றாவது சுற்றில் வரும் ஏழரை நாட்டுச் சனி
பொதுவாக ஜாதகனுக்கு, எட்டாம் வீட்டில் நிர்ணயிக்கப்
பெற்ற ஆயுள் அளவு (Span of Life) நிறைவு பெறும்
காலமென்றால், அவனுடைய கதையை முடித்துக்
கையோடு கூட்டிக் கொண்டுபோய் விடும்.

சிலர் விதிவிலக்காக மூன்றாவது சுற்றையும் தாக்குப்
பிடித்துக் கொண்டு உயிரோடு இருப்பார்கள். அவர்கள்
தீர்க்க ஆயுள் பெற்ற ஆசாமிகள். அவர்கள்,
அவர்களின் ஜாதகத்தின்படி (In the period of Second
Lord or Seventh Lord) அதற்குரிய நேரத்தில் இறைவனடி
சேர்வார்கள் அல்லது இயற்கை எய்துவார்கள்

இதுபோல குரு பகவானும் தனது சுழற்சியில் ஒவ்வொரு
ராசியிலும் தான் சஞ்சரிக்கும் காலத்தில் அததற்குரிய
பலன்களை வாரி வழங்குவார்.அவர் ஒரு சுற்றை முடிக்க
சுமார் பன்னிரெண்டு ஆண்டுகள் ஆகும். ஒவ்வொரு
ராசியிலும் அவர் ஒரு ஆண்டு காலம் சஞ்சரிப்பார்.
அப்படிச் சஞ்சரிக்கும் காலங்களில்,

7ம் வீடு, 11ம் வீடு, 5ம் வீடு, 9ம் வீடு ஆகிய
இடங்களில் சஞ்சரிக்கும் போது மிகவும்
நன்மையான பலன்களைக் கொடுப்பார்

வீட்டில் சுப காரியங்களை நடத்தி வைப்பார்,
திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம்
நடைபெறும். நல்ல வேலைக்காக ஏங்கிக்
கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வேலை
கிடைக்கும். செல்வம் சேரும், வீடு, நில
புலன்கள் வாங்கும் வாய்ப்புக்களை
உண்டாக்குவார். வழக்குகள் வெற்றி பெரும்.
மழலைச் செல்வம் கிடைக்கும். வீட்டில்
சந்தோஷமான சூழ்நிலை இருக்கும்.
மொத்தத்தில் 'உலகம் பிறந்தது எனக்காக,
ஓடும் நதிகளும் எனக்காக’ என்று பாட
வைத்து விடுவார்
மற்ற கோள்களுக்கு உரிய பலன்களை அடுத்த
பதிவில் பார்ப்போம்.

பதிவின் நீளம் கருதி இன்று இத்துடன் முடித்துக் கொள்கிறேன்

(தொடரும்)
--------------------------------------------------------------------------
சென்ற வாரம் முழுவதும் வெளியூர்ப் பயணம் காரணமாக
வகுப்பிற்கு வந்து பாடம் நடத்த முடியாத சூழ்நிலை.
அதில் மாணவர்களாகிய உங்களைவிட எனக்குத்தான்
வருத்தம் அதிகம். ஆதங்கம்வேறு!
அந்த இழப்பை வரும் நாட்களில் சரி பண்ணி விடுவோம்!

13.4.07

Super Star's Horoscope - தொடர்ச்சி


=================================================
Super Star's Horoscope - தொடர்ச்சி
ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 27
இதற்கு முன் உள்ள பதிவிற்கான சுட்டி இங்கே!இது ஒரு தொடர் பதிவு. ஒன்றிற்கொன்று தொடர்
புள்ளவை. ஆகவே முன்பதிவைப் படித்து விட்டு
வரவேண்டுகிறேன்

சூப்பர் ஸ்டாரின் ஜாதகத்தில் பல சிறப்புக்கள்
உள்ளன

1. லக்கின அதிபதி சூரியன் 4ல் - அது கேந்திரம் + நட்பு வீடு

2. பூர்வ புண்ணியாதிபதி குரு 7ல் - அது கேந்திரம்
+ லக்கினத்தின் மீதுவிழும் அவருடைய நேரடிப் பார்வை

3. பாக்கிய ஸ்தான அதிபதி (House of gains) செவ்வாய்
உச்சம் அடைந்துள்ளார் + சந்திரனுடன் சேர்ந்து
சசி மங்கள யோகம்

4. லாபாதிபதி (House of Profit) புதன் 5ல் -
அது திரிகோண வீடு + 11ற்கு அவருடைய
நேரடிப்பார்வை

5. தொழில் ஸ்தான அதிபதி (House of Profession)
சுக்கிரன் 5ல் + லாபாதிபதியுடன் சேர்க்கை

6. புதனும் சுக்கிரனும் சேர்ந்து (By association)
நிபுண யோகத்தை வழங்கினார்கள்

7 இரண்டாம் வீட்டில் - அதாவது குடும்ப, தன
ஸ்தானத்தில் சனி - அது ஒன்றுதான் குறை
போன்று தோற்றளிக்கும் - ஆனால் குறை
நிவர்த்தியாகி விட்டிருக்கிறது.

எப்படி என்பதை அடுத்த பத்தியில் சொல்லியிருக்கிறேன்

சூப்பர் ஸ்டார் என்று சொல்லாமல் - 2ல் சனி
இருக்கிறதே அதற்கு என்ன பலன் என்று
அவருடைய ஜாதகத்தைக் காட்டிக் கேட்டால்,
சாதாரண ஜோதிடர் அவசரத்தில் இந்த ஜாதகன்
கையில் காசே தங்காது என்று சொல்லி விடுவார்.

சனி 2ல் இருந்தால் காசு கையில் தங்காதுதான்
(Expense oriented horoscope) ஆனால் அவரிடம்
தங்காத பணமா? சேராத சொத்துக்களா? அது எப்படி?

அதற்குக் காரணம் 2ம் வீட்டு அதிபதி புதன்
அம்சத்தில் உச்சமாகி இருப்பதைப் பாருங்கள்

எந்தக் கிரகம் என்றாலும் அது அம்சத்தில் உச்சம்
பெற்றால், உச்சமான பலனைக் கொடுத்து
விடுவார். அதுபோல அவருடைய ஜாதகத்தில்
பாக்கியாதிபதி செவ்வாய் ராசியில் உச்சம் குரு 7ல்
ஆக இந்த இரண்டு கிரகங்களும் சேர்ந்து அவருக்குப்
புகழையும், செல்வாக்கையும் வாரி வழங்கியுள்ளன.
அதனால் தான் அவருக்கு லெட்சக்காணக்கான
ரசிகர்கள். ஏன் ஜப்பான் வரைகூட அவருக்குப்
பரந்து விரிந்த ரசிகர்கள்.

தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்திற்குரிய
சுக்கிரன் லாபாதிபதி புதனுடன் சேர்ந்து திரிகோண
வீட்டில் அமர்ந்ததால் அவர் நுழைந்த திரைத்
துறையில், அவருக்கு அவைகள் நம்பர் ஒன்
இடத்தைப் பிடித்துக் கொடுத்தன!

அம்சத்தில் மூன்று சுப கிரகங்கள் அருமையான
இடத்தில் அமர்ந்துள்ளன. குருவிற்கும், சுக்கிரனுக்கும்
ஆட்சி பலன் (Own House) சந்திரனுக்கோ உச்சமாகிய
பலன்(Exalted House)

அவர் 12.12.1950ஆம் ஆண்டு பிறந்தவர்.
திருவோணம் நட்சத்திரம் - பெருமாளின் நட்சத்திரம்
பிறந்த திசையில் 7 வருடம் - 18 நாட்கள் இருப்பு

அவருக்குக் கால சர்ப்பதோஷம். ராகு - கேது விற்குள்
மற்ற 7 கிரகங்களும் மாட்டிக்கொண்டுள்ளன பாருங்கள்.
(All the 7 planets are hemmed between Rahu and Ketu)
(காலசர்ப்ப தோசத்தைப் பற்றிய விரிவான் பதிவு
பின்னால் வரும்)

அதனால்தான் சிறிய வயதில் அவர் கஷ்டப்
பட்டிருக்கிறார். பேருந்தில் நடத்துனர் வேலையைச்
சிறிது காலம் பார்த்தவர். அவருடைய 25 வயதில்
தான் திரைக்குள் பிரவேசித்தார்.

15.8.1975ஆம் ஆண்டு வந்த 'அபூர்வ ராகங்கள்' என்ற
திரைப் படத்தில் சிறிய பாத்திரம். மூன்று நான்கு
காட்சிகளில் மட்டுமே வந்து போவார். அவரை
மக்களுக்கு நன்கு அறிமுகப் படுத்திய படம்
பாரதிராஜா அவர்களின் இயக்கத்தில் வந்த
'16 வயதினிலே' என்னும் படம்.

12ம் வீட்டிற்குரிய சந்திரன் 6ல் அமர்ந்து விபரீத
ராஜயோகத்தைத் தந்துள்ளது!

தன, குடும்ப ஸ்தானத்தில் (Second House) சனியும்,
கேதுவும் அமர்ந்ததோடு, அந்த ஸ்தானத்தின்மேல்
ராகுவின் பார்வையும் விழுவதால் அவருக்கு,
ஆன்மிகச் சிந்தனைகள், துறவறம் மீது அதிக
நாட்டம் ஏற்பட்டுள்ளது.

சிம்ம லக்கினம்தான் ஹீரோக்களின் லக்கினம்.
அதனால்தான் அந்த லக்கினத்திற்கு சிங்கம்
குறியீடாக ஒதுக்கப்பட்டுள்ளது.

சிங்கத்தைவிட பெரிய ஹீரோ உண்டா?
அதேபோல சிங்கம் யாருடனும் கூட்டு வைக்காது.
தனித்துத்தான் செயல்படும்.
அதனால்தான் அவரால் அரசியலிற்கு வரமுடிய
வில்லை. அரசியல்வாதிகளின் லக்கினம் கடக
லக்கினம்.

அரசியல் என்றாலும், கட்சிகள் என்றாலும் கூட்டு
இல்லாமலா? அதனால்தான் சிம்ம லக்கினத்துக்
காரகள் 95% அரசியலில் ஈடுபடமாட்டார்கள்.
மீதமுள்ள அந்த 5% ஜாதகத்தில் உள்ள வேறு
அமைப்பினால வரலாம். அது விதி விலக்கு.

விதி விலக்குகளை உதாரண்மாக எடுத்துக்
கொள்ளக்கூடாது!
(Exemptions should not be taken as examples)

தற்சமயம் அவருக்கு சனிதிசையில் சுக்கிரபுக்தி
நடை பெறுகிற்து. அது 11.12.2008 வரை உள்ளது!

கடந்த 30 ஆண்டுகளாக அவருக்கு நடைபெற்ற
மகா தசைகளும் சரி புக்திகளும் சரி ஜாதக
அமைப்பினால் ,ஜாதகத்தில் அவைகள் நல்ல
இடங்களில் அமர்ந்துள்ள காரணங்களினால்
அவருக்குப் பெரிய பாதிப்பு ஒன்றையும் ஏற்படுத்தவில்லை!
--------------------------------------------------------------------------
தசாபுக்தி பலன்களின் மூன்றாவது பகுதியைக்
கீழே கொடுத்துள்ளேன்.

இத்துடன் தசாபுக்திப் பலன்கள் பகுதி நிறைவுறுகிறது!
கடைசி பெஞ்ச் கண்மணிகளுக்காக வழக்கம்போல
அட்டவணையையும் கொடுத்திருக்கிறேன்.
-------------------------------------------------------------------------
1. கிரகங்கள் ஆட்சி மற்றும் உச்சம் பெற்றிருக்கும்
ஜாதகர்களுக்கு திசைகளும், புத்திகளும் நல்ல
திசைகளில் அதிக நல்ல பலன்களையும்,
மோசமான திசைகளில் குறைவான தீய
பலன்களையும் மட்டுமே கொடுக்கும்

2. அதே கிரகங்கள் ஜாதகத்தில் பகை வீடுகளிலும்
அல்லது நீசம் பெற்றும் இருக்குமானால் நல்ல
திசைகளில் குறைவான நல்ல பலன்களையும்,
மோசமான திசைகளில் அதிகமான் தீய பலன்களையும்
கொடுக்கும்
3. கேந்திரம், திரிகோணங்களில் அமர்ந்திருக்கும்
கிரகங்கள் தங்களுடைய தசாபுக்திகளில் நன்மையான
பலன்களையும், ஆறாம் இடம், எட்டாம் இடம்,
பன்னிரெண்டாம் இடம் ஆகிய இடங்களில்
அமர்ந்திருக்கும் கிரகங்கள் தங்களுடைய
தசாபுக்திகளில் அதிகமான தீமைகளைத்தான்
கொடுக்கும்
வாசகர்கள் மேற்கூறியவற்றையும் கவனத்தில் கொள்ளவேண்டும்---------------------------------------------------------------------------

===================================================











=================================================
அவரவர் தங்கள் ஜாதகத்திற்கு உரிய மகா
திசைகளையும், புக்திகளையும் யாருடைய உதவியும்
இன்றித் தாங்களே கணித்துப் பார்பதற்கும்,
உத்தேசமாக பலன்களை அறிந்து கொள்வதற்கும்
வகை செய்யும் விதமாக பாடங்களை நடத்தியிருக்கிறேன்.

அடுத்தது கோச்சாரம் - கோள் சாரம் பற்றிய பாடம்.

(The present day planetary positions and its effects on one's natal chart)

அதுவும் சற்றுப் பெரிய பாடம்தான்
ஆனால் உங்களுக்குப் புரியும் விதமாக அதை
நடத்தவுள்ளேன். இரண்டு அல்லது மூன்று பகுதிகளாக
அவைகள் பதிவிடப்படும்
-----------------------------------------------------------------------

கடைசி பெஞ்ச் கண்மணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான
செய்தி. கீழே கொடுத்துள்ளேன்!
14.04.2007 மாலை 6 மணி முதல் 18.4.2007 மாலை 6 மணி
வரை நான்கு தினங்கள் வாத்தியாரின் வெளியூர்
பயணத்தால் வகுப்பறைக்கு விடுமுறை-----------------------------------------------------------------------

இதுவரை தொடர்ந்து 27 பதிவுகள் வந்துள்ளன.
இந்த நான்கு நாட்களில் அவைகளையெல்லாம்
ஒருமுறை மீண்டும் படித்து வையுங்கள். திரும்பி
வந்தவுடன் Revision Test உண்டு. குறிப்பாக அந்த
மல்யுத்தப் பார்ட்டிகளுக்கு கண்டிப்பாகப் பரிட்சை உண்டு!

(தொடரும்)

11.4.07

சூப்பர் ஸ்டாரின் ஜாதகம்!

ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 26
சூப்பர் ஸ்டாரின் ஜாதகம்!


முன் பதிவைப் படிக்காதவர்கள் படித்துவிட்டு
வர வேண்டுகிறேன். இது தொடர் - ஒன்றுக்
கொன்று பதிவுகள் தொடர்புடையவை
----------------------------------------------------------

ஒரு குழந்தையின் ஜாதகம் அதனுடைய
12 வயது நிறையும் வரை எந்தவித தனிப்பட்ட
பலனையும் கொடுக்காது.

அந்தக் குழந்தைக்கு பன்னிரெண்டு வயது
நிறைந்தவுடன்தான் அதன் ஜாதகம் வேலை
செய்ய ஆரம்பிக்கும்.

அதுவரை அந்தக் குழந்தைக்கு அதனுடைய
பெற்றோர்கள் ஜாதகத்தை வைத்துத்தான் பலன்கள்.
அந்தக் குழந்தையின் பெற்றோர்கள் அவதிப்பட
வேண்டிய நேரம் என்றால் அந்தக் குழந்தையை
வைத்து அவர்கள் மேலும் அவதிப்பட நேரும்.

குழந்தை அடிக்கடி நோயவாய்ப்பட்டு அவர்களை
வீட்டிற்கும் மருத்து வமனைக்கும் அடிக்கடி
ஓடவைக்கும் அல்லது பயங்கர குறும்பு செய்து
அடிக்கடி கை,கால்களில் அடிபட்டுக் கொண்டு
வந்து அவர்களைக் கலங்க வைக்கும். துஷ்டனாக
இருக்கும்.எந்நேரமும் அவர்கள் குழந்தையை
நினைத்துக் கவலைப்படும்படி ஆகிவிடும்
இதெல்லாம் ஜாதகப் பலன்தான்.

இதற்கு மாறாக அவர்களுக்கு நல்லநேரம் என்றால்
குழந்தை பல அரிய காரியங்களைச் செய்து பத்திரிக்கை,
தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் தலைகாட்டி
அவர்களை மகிழவைக்கும்!

பன்னிரெண்டு வயது ஆரம்பித்தவுடன் அந்தக் குழந்தைக்கு
சனி, ராகு, கேது போன்ற தீய கிரகங்களின் மகா
திசை வரக்கூடாது. அதுபோல அந்த வயதிலிருந்து
ஏழரை ஆண்டுச் சனியும் வரக்கூடாது. அப்படி வந்தால்
அந்தக் குழந்தையின் படிப்பு கெட்டுப் போகும்
ஜாதகத்தில் கல்விக்கு உரிய 4ம் வீட்டு அதிபதியும்,
வித்யாகாரகனான (அதாவது விததைகளுக்கு அதிபதியான)
புதனும் வலுவாக இல்லாவிட்டால், படிப்பு பாதியிலேயே
நின்று விடும். School Dropout என்பார்களே அப்படி
ஆகிவிடும்! மிகவும் வலுவிழந்து இருந்தால் பையன்
வீட்டைவிட்டு ஓடிவிடுவான். கெட்ட சகவாசங்கள்
ஏற்பட்டு விடும்

ஆகவே 12 முதல் 24 வயது வரை உள்ள காலகட்டத்தில்
நடக்கும் தசாபுத்திகளும், கோள்சாரமும் நன்றாக இருக்க
வேண்டும் அல்லது ஜாதகமாவது நன்றாக இருக்க வேண்டும்.
இல்லையென்றால் சிரமம்தான். இன்னும் ஒரு சரியான
சொல் இருக்கிறது அவதிதான்!

24 வயதுவரை ஜாதகப்படி எல்லா அமைப்புக்களுமே
சிறப்பாக இருந்தால், அந்த ஜாதகனுக்கு கல்வி, வேலை,
வாழ்க்கைத்துணைவி என்று எல்லாமே ஒரே ஸ்ட்ரோக்கில்
கிடைத்துவிடும். இல்லையென்றால் துறைமுகங்களில்
கூட்ஸ் ரயில் ஷன்ட்டிங் அடிப்பதைப் போல அடித்துக்
கொண்டிருக்கவேண்டியதுதான்.

முப்பது பந்துகளில் சென்ச்சுரி அடிப்பது எப்படி?
நூறு பந்துகளில் முப்பது ரன்களுக்குத் தடவிக்

கொண்டிருப்பது எப்படி? நீங்களே யோசனை செய்து பாருங்கள்!
ஆனால் கடவுள் கருணை மிக்கவர். அவர் எல்லோரையும்
சமமாகத்தான் படைத்துள்ளார் என்று அடிக்கடி சொல்
வேனில்லையா? அது உண்மை.

ஜாதகத்தில் முன்யோகம், பின்யோகம் என்று உண்டு.
அதாவது 30 முதல் 35 வயதுவரை மிகவும்
கஷ்டப்படுபவர்கள் அதற்குப் பிறகு வரும்

வாழ்க்கையின் பின் பாதியில் வளத்தோடும்,
மகிழ்ச்சியோடும் இருப்பார்கள்.
அதேபோல 30 முதல் 35 வயதுவரை எல்லாவற்

றையுமே அடைந்து மகிழ்ந்தவர்களை வாழ்க்கையின்
பின்பாதி புரட்டிப்போட்டுச் சாத்தி விடும்
அதை உங்கள் மொழியில் விளக்குவதென்றால்
First Innings, Second Innings என்று வைத்துக் கொள்ளுங்கள்.
முதல் இன்னிங்ஸில் சென்ச்சுரி அடித்தவன், இரண்டாவது
இன்னிங்ஸில் டக் அவுட் ஆகி பெவிலியனுக்குத் திரும்பி
விடுவான். அதேபோல முதல் இன்னிங்ஸில் டக் அடித்து
அவுட் ஆகி முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு
திரும்பியவன், அடுத்த இன்னிங்ஸில் டபுள் சென்ச்சுரி
அடிப்பான. அதுதான் வாழ்க்கையில் கிரகங்கள் நம்முடன்
விளையாடும் விளையாட்டு!

இதற்கு விதிவிலக்காக ராகுல் டிராவிட் மாதிரி இரண்டு
இன்னிங்ஸ்களிலுமே நிதானமாக ஆடி 50 அல்லது
60 ரன்களை எடுப்பவர்களும் உண்டு. சராசரியாக எல்லா
அமைப்புக்களுமே ந்ன்றாக இருக்ககூடிய ஜாதகக்காரர்களுக்கு
அவ்வாறு நடக்கும். அவர்கள் எண்ணிக்கையில் மிகவும்
குறைவாக இருப்பார்கள்.

அவர்களுடைய ஜாதகங்களில் லக்கினம், பூர்வபுண்ணியம்,
பாக்கியம், லாபஸ்தானம் ஆகிய நான்கு இடங்கள் வலுவாக இருக்கும்.

கிராமங்களில் உள்ள பெரியவர்கள் முப்பது வருடம்
வாழ்ந்தவனும் இல்லை, அதேபோல முப்பது வருடம்
கெட்டவனும் இல்லை என்பார்கள்!
அது சனியை வைத்துச் சொல்லப்படுவது! சனி ஒரு
சுற்று சுற்றி வருவதற்கு முப்பது ஆண்டுகாலம் அகும்.
முன்பே சொல்லியிருக்கிறேன். முதல் சுற்றில்
தீமைகளையே அதிகமாகக் கொடுத்த சனீஸ்வரன்
அடுத்த சுற்றில் நன்மைகளைக் கொடுப்பார்.
சனிதான் கர்மகாரகன் (Authority for work)

அதானால்தான் சனி மாதிரிக் கொடுப்பரும் இல்லை;
சனி மாதிரிக் கெடுப்பாரும் இல்லை என்பார்கள்.

பத்தாம் வீட்டிற்கு உரியவன்தானே வேலைக்கு அதிகாரி,
சனி இங்கே எங்கு வருகிறார் என்ற சந்தேகம் உங்களுக்கு
வரலாம்.

மாவட்ட ஆட்சியாளருக்கும், உள்துறை செயலாளருக்கும்
உள்ள வேறுபாடு போலதான் இதுவும். இரண்டு பேர்களுமே
ஒரே துறையச் சேர்ந்தவர்கள்தான் என்றாலும் மாவட்ட
ஆட்சியாளரை விடப் பலமடங்கு அதிகாரம் படைத்தவர்
உள்துறை செயலாளர். பல சமயங்களில் அவர் சொல்படி
தான் மாவட்ட ஆட்சியாளர் நடக்க வேண்டியதிருக்கும்.

அதனால் நமது பணிகளூக்கெல்லாம் ultimate authority
சனீஸ்வரன்தான்!

அதன் முழு விபரத்தைப் பின்னால் வரும் அதிகாரங்களில்
பார்ப்போம்
================================================
Practical Test

சூப்ப்ர ஸ்டார் ரஜினிகாந்த அவர்களின் ஜாதகத்தைக்
கீழே கொடுத்துள்ளேன்.இன்றைய பயிற்சிக் கேள்விகள்
அதிலிருந்துதான்!

அவருடைய ஜாதகத்தில்:
1. லக்கினாதிபதி யார் ? அவர் எங்கே இருக்கிறார்?
2. பூர்வ புண்ணியாதிபதி யார்? அவர் எங்கே இருக்கிறார்?
3. பாக்கியாதிபதி யார்? அவர் எங்கே இருக்கிறார்?
4. லாபதிபதி யார்? அவர் எங்கே இருக்கிறார்?
சொல்லிக் கொடுத்த பாடங்க்ளில் இருந்துதான் கேள்விகள்.
யோசித்துப் பதில் சொல்லுங்கள்!

(இந்த நான்கு கேள்விகளுக்குரிய பதில்களைச்
சேர்த்துப் பார்த்தால் அவருடைய ஜாதகத்தின்
சிறப்பு தெரிய வரும்!)
+++++++++++++++++++++++++++++++++++++++++++




===========================================

பதிவின் நீளம் கருதி இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்.

தசாபுக்திப் பலன்களின் மூன்றாவது பகுதி நாளை வெளிவரும்!

(தொடரும்)

10.4.07

நிமித்தக்காரன் (Soothsayer) ஜோதிடம் பகுதி 25



================================================
நிமித்தக்காரன் (Soothsayer) ஜோதிடம் பகுதி 25

எதிர்காலத்தைக் கணித்துச் சொல்பவர்களை
நிமித்தக்காரர்கள் (Fortune Teller) என்பார்கள்

சில சரித்திரக்கதைகளில் படித்திருக்கிறேன்

இந்த நிமித்தக்காரர்கள் தங்களுடைய ESP
சக்தியால் நடக்க இருப்பதை உணர்ந்து
சம்பந்தப்பட்டவர்களை வரப்போகும் கேடு
குறித்துக் குறிப்பால் எசசரிப்பார்கள்.

அவர்கள் எச்சரிப்பதால் நடக்க இருப்பது
நடக்காமல் இருக்காது. அதுதான் விதி என்பது

கவியரசர் கண்ணதாசன் அவர்கள்கூடச்
சொல்வார்," எது உன்னைக் கேட்டு நடப்ப
தில்லையோ அதன் பெயர்தான் விதி.
ஆகவே விதிக்கப்பட்டது நடந்தே தீரும்.
அது உன் கையை மீறிய செயல் என்னும்
போது அதைப் பற்றி நீ கவலைப்பட்டு என்ன
பயன்? ஆகவே கவலையை விட்டொழி."

ஆனால் நம் பாழாய்ப்போன மனசு சும்மா
இருக்கிறதா?

தேவையில்லாத விஷயத்திற்குகூட
கவலைப் பட்டுக்கொண்டே இருக்கும்

அதுபோல நிமித்தக்காரன் ஒருவன்
BC 44ம் ஆண்டில் இருந்தான்.

அந்த நிமித்தக்காரனுக்கு தன் நாட்டு
மன்னர் ஜூலியஸ் சீசரின் வாழ்வில்
ஒரு மாதத்திற்குள் நடக்க இருக்கும்
அசம்பாவிதம் மனத்திரையில் தெரிந்தது.

ஜூலியஸ் சீசரைப் பற்றித் தெரியாதவர்கள்
இருக்கமுடியுமா என்ன?

சீசர் தான் வாழந்த காலத்தில் ரோமாபுரியைப்
பேரரசாக மாற்றியவர் அதாவது வல்லரசு
நாடாக மாற்றியவர். அவரின் புகழ் நாளுக்கு
நாள் பெருகியது.

எப்பொழுதுமே கால வித்தியாசங்கள் இன்றி,
பொறாமை, போட்டி ,நயவஞ்சகம், துரோகம்
என்று பல கீழ்த்தரமான வேலைகளைச்
செய்வதற்கு என்று ஒரு கூட்டம் காத்துக்
கொண்டு இருக்குமே - அப்படியொரு கூட்டம்,
சீசருக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டியது.

சீசரைப் போட்டுதள்ளுவது என்று முடிவு
செய்து அதற்குரிய இடத்தையும், நாளையும்
முடிவு செய்தது அந்தக் கூட்டம்.

அவர்கள் தேர்வு செய்தது நாட்டின்
பாராளுமன்ற வளாகம் (Senate) தேதி 15.3.44 BC

(44 years before the birth of Jujus Christ)

இதுவும் அந்த நிமித்தக்காரனின் மனத்திரையில்
அந்த பாதகச்செயல் நடக்குமுன்பே தெரிந்தது.

அது குறித்து சீசரிடம் எச்சரிக்கை செய்வது
என்று முடிவு செய்தான்.

அவனோ செருப்புத்தைக்கும் கூலித் தொழிலாளி.
சீசரின் மாளிகைக்கோ அல்லது செனேட்
வளாகத்திற்கோ சென்று அவன் எப்படி
அவரைப் பார்க்க முடியும்?

அதனால் சீசர் தினமும் செனேட்டிற்குக்
குதிரையில் செல்லும் வழியில் தன்னுடைய
சிறு கடையை விரித்து உட்கார்ந்து கொண்டான்

அன்று சீசர் எதிர்பட்டவுடன், ஓங்கிய குரலில்
அவரைப் பார்த்துக் கத்தினான்,
" மை டியர் சீசர்...!"

சீசர் குதிரையைச் சட்டென்று நிறுத்தி அவனைப்
பார்த்து என்ன என்று வினவுவதைப்போல பார்த்தார்.

அவன் சொன்னான்." சீசர் உங்களுக்கு ஒரு
பேராபத்துக் காத்திருக்கிறது. மார்ச் பதினைந்தாம்
தேதி அன்று ஜாக்கிரதையாக இருங்கள்!"
(Caesar, Beware the Ides of March - என்று அவன்
சொன்னான். ஐடெஸ் ஆஃப் மார்ச் என்பது மார்ச்
பதினைந்தாம் தேதி என்று பொருள்படும்)

ஆனால் சீசர் அதை ஸீரியஸாக எடுத்துக்
கொள்ளவில்லை. அந்த மாவீரன் சந்திக்காத
ஆபத்துக்களா? ஒரு புன்னகையை உதிர்த்து
விட்டு அவர் சென்று விட்டார்.

அவன் அடுத்த நாளும் அவரைத் தடுத்தி
நிறுத்திச் சொன்னான், அதோடு மட்டுமல்லாமல்
மார்ச் பதினாம்காம் தேதி வரை தொடர்ந்தும்
சொன்னான். அவனுக்குத் தினமும் ஒரு
புன்னகைதான் சீசரிடமிருந்து பதிலாகக்
கிடைத்ததேயன்றி, வேறு எந்த பதிலும்
கிடைக்கவில்லை.

மார்ச் பதினைந்தாம் தேதியும் வந்தது!

அன்றைய தேதியின் காலைப்பொழுது.

வழக்கம்போல குதிரைமீது அமர்ந்து வந்த
சீசர் பழக்கம் காரணமாக அவன் இருக்கும்
இடம் வந்ததும், தன் குதிரையை நிறுத்தினார்

ஆனால் அந்த நிமித்தக்காரன் வழக்கத்திற்கு
மாறாக ஒன்றும் பேசாததோடு, தலை
குனனிந்தவாறு அம்ர்ந்து கொண்டிருந்தான்.

சீசர்தான் அவனிடம் பேச்சுக்குக் கொடுத்தார்.

"Hey Soothsayer, to-day is March 15th. It has come!
"Yes Sir, It has come!" என்று அவன் பதில் சொன்னான்!"

"What you say now?" சீசர் கேட்டார்

அவன் சொன்னான்." Yes Sir!, It has come : But not gone!"
("ஆமாம் அது வந்து விட்டது. ஆனால்
இன்னும் போகவில்லை!)
அவன் சொன்னபடியேதான் நடந்தது.
மார்ச் பதினைந்தாம் தேதி பகல் பொழுதிலேயே
சீசரை அந்தச் சதிகாரர்கள் அநியாயமாகக்
கொன்று விட்டார்கள்.

மொத்தம் அறுபது பேர்கள் சதிகாரர்கள்.
அந்த மாவீரனின் உடலில் விழுந்த கத்திக்
குத்துக்கள் மொத்தம் 23 என்று வரலாறு
சொல்கிறது!

இது பற்றி ஆங்கிலக் கவிஞர் ஷேக்ஸ்பியர்
தனது 'ஜூலியஸ் சீசர்' என்னும் கவிதை
நாடகத்தில் சிறப்பாக எழுதியுள்ளதாக ஆங்கில
இலக்கியம் படித்த என் நண்பர் ஒருவர்
விவரமாகச் சொல்வார்.

கூகுள் ஆண்டவர் சொல்வதுதான் நமக்கு
முக்கியம். அவர் சொவதையும் நீங்கள் கேட்க
சுட்டியை இங்கே கொடுத்துள்ளேன்

1. Soothsayer (Fortune Teller)
2. Story of Julius Caesar
========================================
அதுபோல நம் நாட்டிலும் ஒரு மகான் இருந்தார்.
அவர் தனது சக்தியால் நடக்கப்போவது ஒன்றைச்
சொல்லியதாகவும் அது அப்படியே நடந்ததாகவும்
படித்துள்ளேன்.

அவர் யார்?
அவர் யாரைப் பற்றி என்ன சொன்னார்?
அவர் அதை யாரிடம் சொன்னார்?
அதன்படி நடந்ததா?

எல்லா விவரமும் கீழே உள்ள Scanned Pageல்

உள்ளது!


அதை உங்கள் பார்வைக்காக மட்டுமே - நன்றாகக்

கவனிக்கவும் பார்வைக்காக மட்டுமே கொடுத்துள்ளேன்.

விவாதம் செய்வதற்கு அல்ல!


அந்தச் செய்தியில் சம்பந்தப்பட்டுள்ள விஷ்யம்

நாட்டின் முதல் தரக்குடிமகனாக இருந்தவர்
பற்றியது என்பதாலும், அது சம்பந்தப்பட்ட
வழக்கு இன்னும் நீதி மன்றத்தில்
நிலுவையில் இருப்பதாலும், அது குறித்து
விவாதிப்பது நல்லதல்ல!
ஆகவே நிமித்தக்காரனைப் பற்றிய உங்கள்
கருத்துக்களள மட்டும் பின்னூட்டத்தில்
இட வேண்டுகிறேன்

பதிவின் நீளம் கருதி இன்று இத்துடன்

முடித்துக் கொள்கிறேன்.

மற்றவை நாளை!

(தொடரும்)
------------------------------------------------------------------------------------
கதவைத் திறங்கள் - காற்று வரட்டும் என்றார்

ஒரு நண்பர்! ஆகவே கதவைத் திற்ந்து விட்டுள்ளேன்.

பதிவின் பின்னூட்டக் கதவைத் திறந்து விட்டுள்ளேன்

ஆகவே Blogger கணக்கு இல்லாதவர்கள் கூட பின்னூட்டம் இடலாம்

(Anyone can post his comments in the comment box)
பல வாசக அன்பர்கள் எனக்கு மின்னஞ்சல்

அனுப்பி சந்தேகங்களைக் கேட்கிறார்கள்.
தினமும் பத்திற்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள்
வருகின்றன. எனக்குத் தனிதனியாக அவைகள்
அனைத்திற்கும் பதில் எழுத இயலவில்லை.
நேரமின்மைதான் என்னுடைய முதல் பிரச்சினை.
ஆகவே அனைவரையும் வேண்டிக் கேட்டுக்
கொள்கிறேன். பதிவு பற்றிய உங்கள் சந்தேகங்களை
இன்று முதல் இங்கேயே கேளுங்கள்.
நன்றி, வணக்கத்துடன்
SP.VR.சுப்பையா

=============================================
படத்தின் மீது கர்சரை வைத்து வலது பக்கம்
சுட்டியை அழுத்தினால் படம் பெரிதாகத் தெரியும்!

===============================================


6.4.07

வாங்கி வந்த வரம் - ஜோதிடம் 24















=======================================

ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 24
வாழ்க்கை என்பது ஒரு நெடும் பயணம்!

அந்தப் பயணத்திற்குப் பயன்படும் வாகனம்தான்
ஜாதகம். என்று வைத்துக் கொள்ளுங்களேன்

பயணிக்கும் சாலைதான் தசாபுக்தி.

நம்து வாகன ஓட்டுனர்தான் கோச்சாரம்
(கோள் சாரம் - கோள்களின் நிலமை -
Present Day Planetary Positions)

ந்ல்ல குளிசாதன வசதியுடைய பென்ஸ் கார்,
சென்னை - கன்னியாகுமரி நான்கு வழித் தேசிய
நெடுஞ்சாலை, அனுபவமும், பொறுமையும் மிக்க
வாகன் ஓட்டுனர் இம்மூன்றும் அமைந்தால்
பயணம் எப்படி இருக்கும்?

சுகமாகவும், சூப்பராகவும் இருக்காதா?

சரி, அதே பயணத்தை கொஞ்சம் மாற்றி
யோசித்துப் பாருங்கள்.

பழைய இரும்புக் கடைக்காரன்கூட வாங்க
யோசிக்கும் நிலையிலுள்ள ஒரு ஓட்டைக் கார்
ஹாரனைத் தவிர வண்டியின் அத்தனை
ப்குதிகளிலும் சத்தம் வரக்கூடிய கண்டிஷனிலுள்ள
வண்டி!

சாலையும் குண்டும் குழியும் நிறைந்த - திண்டுக்கல்
நத்தம் - சிங்கம்புணரிச் சாலை போன்ற மோசமான
சாலை.

ஓட்டுனரும் புதிதாக வண்டி ஓட்டக் கற்றுக்
கோண்டு வந்து வேலைக்குச் சேர்ந்த ஓட்டுனர்
இப்படி இருந்தால் பயணம் எப்படி இருக்கும்?

யோசித்துப் பாருங்கள்!

ஒரு சமயம் சாலை நன்றாக இருக்கும் ஓட்டுனர்
சுமாரான ஆசாமியாக இருப்பார். ஓட்டுனர் கில்லாடியாக
இருப்பார்ர்.சாலை மோசமாக இருக்கும்!

சில பேருக்கு மட்டும்தான் எல்லாமே அருமையாக
அமைந்து விடும். அவர்களுடைய காரும் (ஜாதகம்)
V- 8 Cylinder Engine உடன் கூடிய Cadillac காராக இருக்கும்.
தசா புத்தி கொஞ்சம் சுமாராக இருக்கும் போது
கோள்சாரம் கைக் கொடுக்கும். கோள்சாரம் அடிக்கும் போது
தசாபுத்தி வந்து குறுக்கே நின்று காக்கும்

அதெல்லாம் கொடுப்பினை!
ஜாதகத்தில் 1ம் வீடு, 9ம் வீடு, 10ஆம் வீடு, 11ம் வீடு
நன்றாக அமைந்திருந்தால் அதுதான் சிறப்பான ஜாதகம்.
மேலே சொன்ன் உவமைக்குரிய ஜாதகம்!

அதுதான் வாங்கி வந்த வரம். பிறக்கும் போது
வாங்கி வந்த வரம்.

அதற்கு இன்னொரு பெயரும் உண்டு. அதுதான்
கர்ம வினை! பற்றித் தொடரும் இரு வினைப்
பாவமும் புண்ணியமும் என்று பட்டினத்தார்
பாடினாரே அந்தப்பாவ புண்ணீயம்தான்.

அது ஜாதகத்திலும் தெரியும். அதற்குரிய வீடு
ஐந்தாம் வீடு. பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று
பெயர். அதற்குரிய பகுதி வரும் போது அதைப்
பற்றிப் பேசுவோம்!

சாதாரண மனிதனுக்கு பாவ புண்ணியம் எல்லாம்
தெரியாது. சொன்னாலும் ஒப்புக் கொள்ள மாட்டான்.
ரேசன் கார்டிற்கும், கட்சி உறுப்பினர் அட்டைக்கும்,
ஐநூறு ரூபாய் காந்தி படம் போட்ட ரூபாய்த்
தாளிற்கும் கொடுக்கும் மதிப்பில் நூற்றில்
ஒரு பங்கு மதிப்பைக்கூட அவன் பாவ புண்ணீய
த்திற்குக் கொடுக்கமட்டான்.

அவனுக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியாது. சொல்லித்
தரவும் ஆளில்லை. அவனுக்குக் கிடைக்கும் ஒரு சில
மணி ஓய்வு நேரத்தையும் டாஸ்மார்க் பாரில்
நண்பர்களுடன் கழிப்பதற்குச் சரியாக இருக்கும்.
மேலும் இதில் எல்லாம அவனுக்கு நம்பிக்கை இல்லை!

அவர்களில் பாதிப்பேர் சாமியாவது பூதமாவது என்பார்கள்
மீதிப் பேர் மனைவியின் வற்புறுத்தலுக்காக குலதெய்வக்
கோவிலுக்கு மட்டும் போய் வருவார்கள். அதுவும் ஒரு
உல்லாசப் பயணமாகத்தான் போய் வருவார்கள்.

ஐம்பது வயதிற்கு மேல்தான், சிலருக்கு அறுபது
வயதிற்குமேல் தான் சற்றுப் புரிய ஆரம்பிக்கும்.

அப்போது புரிந்து என்ன பயன்?
சரி சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்.

கடவுள் கருணை மிக்கவர். அவர்தான் Match Maker
(ஜோடி சேர்ப்பவர்)

வீட்டில் பார்த்து செய்து வைத்த திருமணம்
என்றாலும் (Arranged Marriage) அல்லது காதல்
திருமணம் (Love Marriage) என்றாலும் அதுவும்
ஜாதகத்திலேயே தெரிந்துவிடும்.

அவர் எந்தவிதமான திருமணமானாலும் சரி
ஜோடியை சரியாகத்தான் கொடுத்திருப்பார்.

கணவன் ரயில் என்றால் மனைவி
தண்டவாளமாக இருப்பாள்
மனைவி ரயில் என்றால் கணவன்

தண்டவாளமாக இருப்பான்

அவர் ஒரு போதும் ரயிலையும், ரயிலையும்
ஜோடி சேர்த்ததில்லை!

அது படு சுவாரசியமான விஷயம்.
அதற்குள்ள பகுதி வரும்போது
அதை சற்று விவரமாக அலசுவோம்

பதிவின் நீளம் கருதி இன்று இத்துடன்
முடித்துக் கொள்கிறேன்

(தொடரும்)
----------------------------------------------
தசா புத்திப் பலன் இரண்டாம் பகுதி
கீழே உள்ளது.

குறுக்குவழி மன்னர்களூக்கான
அட்டவணையும் உடன் உள்ளது
இதன் மூன்றாவது பகுதி நாளை வரும்!



==================================================




==================================================

==================================================

==================================================

==================================================

==================================================

==================================================

==================================================

==================================================

5.4.07

ஜோதிடம் பகுதி 23

ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 23
தசா புக்திப் பலன்கள்

மொத்தம் 9 கிரகங்கள். ஒவ்வொரு கிரகத்திற்கும்
9 புக்திகள். ஆக மொத்தம் 81 புக்திகள். அவற்றின்
மொத்தகாலம் 120 ஆண்டுகள்

நாம் ஆசைப்பட்டாலும் 120 ஆண்டுகள் வாழ்வோமா
என்றால் இல்லை!

முன்பெல்லாம், அதாவது 60 ஆண்டுகளுக்கு முற்பட்ட
காலத்தில் போதிய மருத்துவ வசதி இன்மையால்
ஒருவர் 60 வயதைத் தாண்டுவதே அதிசயம்.
ஆனால் இன்று 80 வயது வரை உள்ள மனிதர்களைச்
சர்வ சாதாரணமாகக் காண முடிகிறது

ஆகவே வாழும் வரை உள்ள காலத்திற்கு ஜாதகப்படி
நடக்கும் பொதுப் பலன்களைப் பழைய நூல் ஒன்றி
லிருந்து எடுத்துக் கொடுத்திருக்கிறேன்

அந்த நூலின் நம்பகத்தன்மை பற்றிக் கவலை
வேண்டாம். ஜோதிடம் நன்கு அறிந்த ஒரு பெரிய
முனிவரால் எழுதப் பெற்ற நூல் அது!

அவருடைய பெயர் 'புலிப்பாணி'.

ஆமாம் பழநி மலையிலுள்ள விக்கிரகத்தை
ஸ்தாபிதம் செய்த போகர் என்ற முனிவரின்
சீடர்தான் இந்த புலிப்பாணி

அது Scan செய்ய முடியாத அளவிற்கு மோசமாக
இருந்தது. ஆகவே புதிதாக தட்டச்சு செய்து, வரிகளின்
அழகு மாறாமல் இருப்பதற்காக Jet Printerல் பிரிண்ட்
எடுத்து, Scan செய்து பதிவிட்டிருக்கிறேன்

எல்லாம் உங்கள் வசதிக்காகத்தான்.

மேலும் "செய்வன திருந்தச் செய்" என்பதை வாத்தியார்
கடைப்பிடிக்க வேண்டாமா? அதற்காகவும்தான்

பதிவின் நீளம் கருதி அதை 3 பகுதிகளாகப் பிரித்து
ள்ளேன். இன்று, முதல் பகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதைப் படித்து நீங்கள் புரிந்து கொண்டால் போதும்.
யாரையும் கேட்க வேண்டாம். உங்களுக்கு நீங்களே
நல்லது கெட்டது எப்போது நடக்கும் என்று
தெரிந்து அதற்குத தகுந்த மாதிரி வாழ்க்கையின்
இன்பங்களையும், துன்பங்களையும் எதிர் கொள்ளலாம்

சுமார் 75% சதவிகிதம் பேர்களுக்கு தசா பலன்கள்
அதில் உள்ள மாதிரிதான் இருக்கும். மீதமுள்ள
25% பேர்களுக்கு அவர்களுடைய ஜாதகத்திலுள்ள
கிரக நிலைகளின் மேம்பாட்டைப் பொறுத்து
பலன் மாறுபடும். உதாரணம் முன் பதிவில்
நான் சிவாஜி கணேசன் அவர்களின் ராகு திசைக்குக்
கொடுத்திருந்த விளக்கத்தைப் படிக்க வேண்டுகிறேன்

ஒரு மூன்று வருடத்திற்கு நேரம் சரியில்லை
என்று தெரிந்தால், அன்றாடம் நடக்கும் சம்பவங்களை
வைத்து உணர்ந்தால், அதற்குப் பிறகு நல்ல காலம்
உள்ளது என்று தசா புத்தி சொல்லும் போது
எவ்வளவு மகிழ்வாக இருக்கும்?

வரப்போகிற அந்த நல்ல காலத்தை நினைத்து இந்த
மூன்று வருடத் துன்பங்களைத் தெம்புடன் ஏற்றுக்
கொள்வோமா - மாட்டோமா?

அதற்கு உதவுவதுதான் தசாபுத்திப் பலன்கள்.

ஒரு முக்கியமான விஷ்யம். " மனைவி தன்னை
நாசம் பண்ணும்" என்று போட்டிருந்தால் Don't jump to
any harsh conclusion. மனைவியுடன் கருத்து வேறுபாடு
ஏற்படலாம் என்று பொருள் கொள்ளவும். அதுபோல
களவு போகும் என்று போட்டிருந்தால் பயப்பட
வேண்டாம். இளைஞராக இருந்ததால் உங்கள்
உள்ளத்தைப் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்
உடன் வேலை பார்க்கும் மெல்லியலாள் எடுத்துக்
கொண்டு போய் விடும் வாய்ப்பு உண்டு!:-))))
Over to Dasa puththi Results:-

(படங்களின் மீது கர்சரை வைத்துக் கிளிக்கினால்
அவைகள் பெரிதாகத் தெரியும்)============================================








==================================================
மற்ற கிரகங்களுக்குரிய திசைப் பலன்கள்
அடுத்தடுத்து வரும்
--------------------------------------------------------
கடைசி பெஞ்ச் கண்மணிகளூக்காக வழக்கம்போல
குறுக்கு வழியையும் கொடுத்துள்ளேன்

அவர்களால் - அவர்கள் கெட்டிக்காரர்கள்தான்
எங்கள் பகுதி சொல் வழக்கில் சொன்னால்
சமர்த்தர்கள்தான் - இருந்தாலும் பாடலைப்
படிக்கும் பொறுமை அவர்களுக்கு இருக்காது
என்பதனால் ரத்தினச் சுருக்கமாகப் பலன்கள்
அட்டவணையில் கொடுத்துள்ளேன்!

குறிப்பாக அந்த டில்லிப் பையனுக்கும், மற்றும்

பொன்முட்டை அவர்களூக்குமாகத்தான் அந்த

அட்டவணையைத் தயார செய்தேன்!

மற்றவர்களும் அதைப் படிக்கலாம். இரண்டில்
எது பிடித்துள்ளது அல்லது சுலபமாக உள்ளது
என்று பின்னூட்டத்தில் சொல்ல வேண்டுகிறேன்
I want your feed back!
=========================================

(தொடரும்)
==========================================

2.4.07

ஆகா இதுதான் ஜாதக பலன் என்பதா?


======================================================
ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 22
எம்.ஜி.ஆரின் ஜாதகம் (தொடர்ச்சி)

முன் பதிவைப் படிக்காதவர்களைப் படிக்க வேண்டுகிறேன்
அப்பொழுதுதான் இந்தப் பதிவு புரியும்

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் ஜாதகத்தைக்
நேற்றுக் கொடுத்திருந்தேன். உடன் ஒரு கேள்வியும் கேட்டு,
நடத்திய பாடத்தில் கொடுத்திருந்த தசாபுத்திகளின்படி
தலைவர் என்ன தசை/என்னபுக்தியில் முதலமைச்சர்
ஆனார் என்று கேட்டிருந்தேன்.

ஒருவர் மட்டும் சரியாக விடை அளித்திருந்தார்
அவருக்குப் பாராட்டுக்கள்.

மற்றவர்களும் தெரிந்து கொள்வதற்காக அந்த
ஜாதகத்தை வைத்துச் சில விளக்கங்களைக் கீழே
கொடுத்துள்ளேன்
-----------------------------------------------------------
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் ஜாதகம்

பிறந்த நாள்: 28 .01.1917
காலை மணி 6.30
இடம் கண்டி
இருப்பு : புதன் தசையில் 12 வருடம் 2 மாதம் 7 நாட்கள்

30.06.1977 ல் அவர் தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் ஆனார்!
-----------------------------------------------------------------------
அவருடைய ஜாதகத்தின் சிறப்புக்கள்

1. Eleventh lord Mars is exalted and placed in the
first house - That is in his lagna
லாபாதிபதி செவ்வாய் உச்சமடைந்து லக்கினத்தில்
அமர்ந்தது பெரும் சிறப்பு. பணம், பதவி, புகழ்
மக்கள் செல்வாக்கு என்று எல்லாமே அவரைத்
தேடி வந்தன

2. Number one benefic planet Jupiter is in a
Kendra - 4th House (it is also his friendly house)
gave him all the comforts required in life
4ல் – சுக ஸதானத்தில் சுப கிரகமான் குரு
அமர்ந்தது அவருக்கு வீடு, வாசல், வாகனம் என்று
எல்லா வசதிகளையும் கொடுத்தது!

3. Lagna lord Saturn is in a kendra (7th House)
and also aspecting the lagna directly - gave him
an amazing standing power
லக்கினாதிபதி 7ல் அமர்ந்து தன்னுடைய சொந்த
வீட்டைப்பார்ப்பது அவருக்கு நின்று சாதிக்கும்
தன்மையைக் கொடுத்தது

4. Benefic Planet Moon (7th lord in his horoscope)
is aspecting the Bhagya House (House of Gains)
from the third house
பதவி, புகழ், எல்லாவற்றையும் பாக்கிய ஸ்தானத்தைப்
பார்க்கும் சந்திரன் வழங்கியது.

5. The planet for Arts - Venus is in his own
house in the Navamsa along with Rahu. It is
a good combination for Drama & Cinema
They are also associated in the rasi
அவருடைய ஜாதகத்தில் ராசியிலும் சரி, அம்சத்திலும்
சரி, சுக்கிரனும், ராகுவும் சேர்ந்திருப்பது அவருக்கு
திரை உலகில் பெரும் புகழை ஏற்படுத்திக் கொடுத்தன

6. Venus & Mercury association gave him
expertise in all the fields which he under took

7. The placement of Ketu in the 6th house
gave him courage to face any situation


1917.01.28 பிறந்த தேதி
0012.02.07 புதன் தசா இருப்பு (குழந்தைப் பருவம்)
0007.00.00 கேது தசா (Period One - 7 Years)
---------------
1936.04.05 கேது தசா முடிவுற்ற நாள்
0020.00.00 சுக்கிர தசா (Period Two - 20 years)
------------------
1956.04.05 சுக்கிர தசா முடிவுற்ற நாள்
0006.00.00 சூரிய தசா (Period Three 6 yeras)
------------------
1962.04.00
0010.00.00 சந்திர தசா (Period Four - 10 years)
--------------------
1972.04.05
0007.00.00 செவ்வாய் தசா (Period Five - 7 Years)
--------------
1979.04.05
0002.08.12 ராகு தசா / ராகு புக்தி (Period 6 Part One)
0002.04.24 ராகு தசா / குரு புக்தி (Period 6 Part Two)
-------------------
1984.05.11
0002.10.06 ராகு தசா / சனி புக்தி (Period 6 Part Three)
---------------
1987,03,17 ராகு தசா புதன் புக்தி ஆரம்பம்
1987.12.24 காலமான நாள்

---------------------Period 1
அவர் தன்னுடைய பன்னிரெண்டு வயது முதல்,
19 வயது வரை அந்தக் காலத்தில் சிறுவர்களை
வைத்து நடத்தப் பெற்ற நாடகக் கம்பெனியில் சேர்ந்து
(Boys Drama Groups) பல ஊரகளில் சுற்றித் திரிந்து
நாடகங்கள் நடக்கும் கீற்றுக் கொட்டகைகளிலே உண்டு,
உறங்கி வாழந்ததோடு பல சிரமங்களை அனுபவித்த
காலம் இது. - அதற்குக் காரணம் கேது தசை
--------------------------------------------------
M.N. நம்பியார் & M.R.ராதா எல்லாம் அவருடைய
நாடகக் காலத்து நண்பர்கள்தான்
---------------------------------------------------
Period 2
சுக்கிர தசைக் காலம்
சுக்கிர தசை ஆரம்பம் ஆனவுடனேயே அவருடைய
நல்ல காலமும் ஆரம்பம் ஆயிற்று.
கலைத்துறைக்கு (Cinema Industry) வந்து கால்
ஊன்றினார்.
1936 ல் அவருடைய முதல் படமான "சதிலீலாவதி'
வெளிவந்தது.அதிலிருந்து 1955 ல் குலேபகாவலி
என்னும் படம் வெளிவந்தவரை அந்த 20 வருட
காலத்தில் அவர் நடித்தது மொத்தம்
33 படங்கள்தான்.(அந்தக் காலத்தின் சினிமாவின்
வளர்ச்சியும், நிலைமையும் மந்தமாகத்தான் இருந்தது)
அவர் ஜாதகத்தில் ராசியிலும்
அம்சத்திலும் சுக்கிரன் ராகுவுடன் சேர்ந்து
இருப்பதைக் கவனிக்கவும். அதனால்தான்
கலைத்துறையில் பிரகாசித்தார்.. ஆனாலும் ராசியில்
சுக்கிரன் 12ல் (விரைய ஸ்தானத்தில்) மறைந்து
விட்டதால் அதிகமான ஏற்றம் இல்லை.
1953ம் ஆண்டுவரை காங்கிரஸ் கட்சியில் இருந்த
அவர் அதற்குப் பிறகுதான் தி.மு.கவில் சேர்ந்தார்.
----------------------------------------
Part Three & Part Four
லக்கினத்தில் அமர்ந்த சூரியனின் தசை
(Sun is the eight lord - but placed in the first house and
also asapected by the lagna lord Saturn from the
seventh house gave him sudden popularity in
his career and also in his life)
1956 ஏப்ரல் முதல் ஆறு வருட காலம் சினிமா
உலகில் அவருக்கு மிகவும் ஏற்றமான காலம்
லெட்சக்கணக்கான ரசிகர்கள் அவருக்குக் கிடைத்ததும்
இந்தக் காலகட்டத்தில்தான்
1956ல் வெளிவந்த அலிபாபாவும் 40 திருடர்களும் என்ற படம்,
அதே வருடம் வந்த மதுரை வீரன், தாய்க்குப்பின் தாரம்
ஆகிய படங்கள் பெரும் வெற்றியைக் கொடுத்தன!
அதற்குப் பிறகு இறக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல்
வெற்றியைக் குவித்தார். அவருடைய படப் பாடல்கள்
அனைத்தும் தமிழகமெங்கும் ஒலித்தன

1958ல் நாடோடி மன்னன்
1961ல் தாய் சொல்லைத் தட்டாதே
1965ல் எங்க வீட்டுப் பிள்ளை
1966ல் அன்பே வா
1973ல் உலகம் சுற்றும் வாலிபன்
ஆகிய ஐந்து படங்களும் வசூலில் சாதனை
படைத்த படங்கள். மொத்தம் 133 படங்களில்
அவர் நடித்தார்.
சூரியனுடைய தசையைத் தொடர்ந்து வந்த சந்திர
தசையும் (10 வருடங்கள்) அவருக்குச் சாதகமாக
இருந்ததுதான் அவருடைய தொடர் வெற்றிக்குக்
காரணம் 7க்குரிய சந்திரன் 3ல் அமர்ந்து
9ம் இடமான பாக்கிய ஸதானத்தைப் பார்த்தது
(The seventh lord Moon who is placed in the
third house aspected the 9th house, house of
Bhagya - House of Gains and conferred him
continued success in his life)
--------------------------------------------------------------------------
அதற்குப் பிறகு வந்த செவ்வாய் தசை - சொல்லவே
வேண்டாம் - செவ்வாய் அவருடைய ஜாதகத்தில்
4 & 11ம் வீட்டிற்குரியன்.
(House of comforts & House of Profit - சுகாதிபதி & லாபாதிபதி)

இரண்டு முக்கியமான வீடுகளுக்கு உரியவன்.
அவன் உச்சம் பெற்றதோடு லக்கனத்திலும் அமர்ந்தது
அபரிதமான யோகத்தைக் கொடுத்தது.

அவரைத் தமிழ் நாட்டின் முதன்மந்திரிப் பதவிவரை
கொண்டுபோய் உட்கார வைத்தது!
அடுத்து வந்த பத்து ஆண்டுகளுக்கும்
ஏன் அவர் இறக்கும் வரையில் யாராலும் அசைக்க
முடியாத நிலையில் அந்தப் பதவியில் அவரை அது
உட்கார வைத்தது!
-----------------------------------------------------------
எல்லா தசைகளிலுமே ஆரம்ப புக்தி (அதைச் சுய புக்தி
என்பார்கள்) பெரிதாக ஒன்றும் செய்யாது. அதனால்
செவ்வாயை அடுத்து வந்த ராகு தசை ராகு புக்தியிலும்
அதற்கு அடுத்து வந்த ராகு தசை குரு புக்தியிலும்
அவருக்குத் தீங்கு ஏதும் நேரவில்லை.(குரு அவருடைய
ஜாதகத்தில் 4ல் - கேந்திரத்தில்)

ஆனால் 11.01.1984 ல் ஆரம்பித்த ராகு தசை சனி
புக்தி முதல் அவருக்கு கெட்ட நேரம் ஆரம்பித்தது

இரண்டு தீய கிரகங்கள் ஒன்று சேர்ந்தால் என்ன ஆகும்?
பி.எஸ். வீரப்பாவும், எம்.என்.நம்பியாரும் அவர் நடித்த
படங்களில் செய்த வில்லத்தனங்களைப் போல அவைகள்
இரண்டும் சேர்ந்து கெடுதல்களைச் செய்ய ஆரம்பித்தன.

அவருக்குப் பல விதமான நோய்கள் (Multiple Diseases)
ஏற்பட்டு படுத்த படுக்கையாகிவிட்டார். அமெரிக்கா
விற்குச் சென்றும் சிகிச்சைகள் மேற்கொண்டார்.
எதுவும் பலனிக்கவில்லை. சற்றுத்தேறி வந்தவர்.
24.12.1987 அன்று காலமாகிவிட்டார்.

அவருடைய இறுதி ஊர்வலத்தில் பத்து லெட்சம் மக்கள்
கலந்து கொண்டார்கள் என்பது வியக்கத்தக்க செய்தி!
அவர் புரட்சித் தலைவர் என்று பெயர் பெற்றதும்
ஏழை எளிய மக்களின் அன்பைப் பெற்றதும்

அவருடைய ஜாதக அமைப்பினால்தான்.
அவர் கொல்லூர் மூகாம்பிகை அம்மனின் தீவிர பக்தர்
அடிக்கடி அங்கு சென்று தேவியை வணங்கியும் வந்தார்.

இரண்டாம் இடத்திற்குரியவன் அல்லது ஏழாம் இடத்திற்
குரியவன் இவர்களில் எவன் வலுவாக இருக்கிறானோ
அவன்தான் மரணத்தைக் கொடுப்பான் என்பது விதி (Rule)
அவருடைய ஜாதகத்தில் 2ற்குரியவன் சனி ( The second
lord in his horoscope is Saturn who is the owner of
Kumba Rasi, that is the second house from his lagna)
அவன் 7லிலும் அமர்ந்து வலுவாக இருந்து, அவருடைய
மரணத்திற்குக் காரணமானான்.

அவருடைய ஆறாம் வீடான நோய் ஸதானத்திற்கு
(House of Diseases) அதிபதியான புதன் துணை வர
ராகுவும் புதனும் சேர்ந்து மரணத்தை நிறைவேற்றினார்கள்
இருவரும் ஒன்று சேர்ந்து அவருடைய ஜாதகத்தில்
12ம் வீட்டில் ஒன்றாக இருப்பதைப் பார்க்கவும்
அவர் மறைந்தது அவர்களுடைய தசா புக்தியில்தான்!
-------------------------------------------------------------------------------
உங்களுக்குப் புரியும்படியாக விளக்கங்கள் கொடுத்துள்ளேன்
என்று நம்புகிறேன்.

ஒரு ஜாதகத்தை ஆராய்ந்து அலசிப்பார்க்கும் விதம்
இதுதான். அதற்காகத்தான் இத்தனை விவரமாக எழுதினேன்
------------------------------------------------------------------------------
சரி, என்னுடைய அரட்டைக் கச்சேரியை இத்துடன்
முடித்துக் கொண்டு மீண்டும் பாடத்திற்கு வருகிறேன்

நேற்று தசா புக்தியை விளக்கி நிறைய அட்டவணை
களுடன் பாடங்களைக் கொடுத்திருந்தேன்

நான் படிக்கிற காலத்தில் எனக்கு ஜோதிட வாத்தியாரும்
இல்லை. பாடங்களையும் பிரித்துப் புரியும்படியாகத்
தருவதற்கு ஆட்களுமில்லை. ஆளில்லாவிட்டால் என்ன
நாமே பிரித்துப் படிப்போம் என்று எனக்கு நானே பல
அட்டவணைகளைத் தயார் செய்து வைத்துக் கொண்டு
தான் படித்தேன். ஆறே மாதங்களுக்குள் முழுப்
பாடத்தையும் என் தலைக்குள் இருக்கும் Hard Discல்
ஏற்றிவைத்து விட்டேன்.

அப்படி 30 வருடங்களுக்கு முன்பு ஏறி வைத்தது.
தொடர்ந்து பலரிடம் ஜோதிடத்தைப் பற்றி அரட்டை
அடிப்பதாலும், கையில் கிடைக்கும் பல ஜோதிட
நூல்களைத் தொடர்ந்து படிப்பதாலும், இன்னும்
மறக்காமல் நினைவில் உள்ளது!

இதை ஒரு Build Upற் காகச் சொல்லவில்லை!
ஜோதிடத்தில் ஆர்வமுள்ளவர்கள், தொடர்ந்து படிக்க
வேண்டும். வாரம் ஒரு நான்கு மணி நேரமாவது
அதற்குச் செலவழிக்க வேண்டும்.

Astrological Magazine or Star Teller போன்ற
மாத இதழ்களுக்குச் சந்தாவை கட்டி மாதா மாதம்
வரும் இதழ்களைப் படிக்க வேண்டும்!
---------------------------------------------------------------------
தசா புக்திகளின் கால அளவைத் தெரிந்து கொள்ள
உதவும் சூத்திரம் (Formula for assessing the
Sub-periods in Major Periods of Planets)

மகாதசை ஆண்டுகள் x புத்திநாதனின் ஆண்டுகள்
= புக்தியின் காலம்.

அப்படி வரும் விடையின் முதல் இரண்டு எண்கள்
மாதங்களையும், அடுத்த எண்ணை 3 ஆல் பெருக்க
வரும் விடை நாட்களையும் குறிக்கும்

Major Period x Sub Period = Number of Months
& Days of the Sub- Period (In the three digit
answer, first 2 digits are months and the last
digit multiplied by three is the days)

உதாரணம்: ராகு தசை குரு புக்தி
18 x 16 = 288
முதல் 2 டிஜிட் மாதங்கள் - ஆகவே
28 மாதங்கள்
அடுத்த டிஜிட்டான 8 x 3 நாட்கள் = 24 நாட்கள்
அதாவது 2 வருடம் 4 மாதம் 24 நாட்கள்

இதைப் போன்று எந்தக் கிரகத்திற்கு வேண்டுமென்றாலும்
போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.
வரும் விடையை முன் பதிவிலுள்ள அட்டவணையுடன்
ஒத்துப் பார்த்துக்கொள்ளுன்கள். 100% சரியாக இருக்கும்

இதைப் பல பெரிய ஜோதிடர்கள் ரகசியமாக
வைத்திருப்பார்கள். பஞ்சாங்கம் இன்றி மனதிற்
குள்ளேயே கணக்குப் போட்டு காகிதத்தில் நடப்பு
தசையைக் குறித்துத் தந்து நம்மை அசத்துவார்கள்.

பெரிய வித்தை ஒன்றுமில்லை! உங்கள் அனைவருக்கும்
அது தெரியட்டும் என்றுதான் இன்று அதை நான்
உங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறேன்.

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!

இந்த சூத்திரம் தெரிந்து விட்டால் பஞ்சாங்கம்
தேவையில்லை. நான் நேற்றுக்கொடுத்திருந்த
3 அட்டவணைகளும் தேவையில்லை!.

யாருடைய ஜாதகத்தையும் பார்த்து கண நேரத்தில்
நடப்பு தசையை கணக்கிட்டுச் சொல்லலாம்

நமது கணினியில் Calculator இருக்கிறது. கீழ்க்கண்ட
தாச புக்திகள் இந்த சூத்திரத்தின்படி சரியாக வருகிறதா
என்று பாருங்கள்

அதுதான் இன்றைய Practical Test:==================================================
==================================================
சூரிய தசையில் சந்திர புக்தி, சந்திர தசையில்
செவ்வாய் புக்தி, செவ்வயில் ராகு புக்தி, ராகுவில்
குரு புக்தி, குருவில் சனி புக்தி, சனியில் புதன்
புக்தி, புதனில் சுக்கிரன் புக்தி அல்லது உங்கள்
விருப்பப்படி எதற்கு வேண்டுமென்றாலும்
கணக்கிட்டுப் பார்த்து இந்த FORMULA வை
மனதில் ஏற்றி அங்கேயே அது காலத்திற்கும்
நிற்கும்படி செய்யுங்கள்

இது போன்று இன்னும் சில சூத்திரங்கள்
உள்ளன! அவைகள் அததற்குரிய பாடங்களில்
சொல்லிக் கொடுக்கப்படும்!

பதிவின் நீளம் கருதி, இன்று இத்துடன் நிறைவு
செய்கிறேன்

(தொடரும்)
--------------------------------------------